எனது அரசியல் வாழ்வை முடக்க நினைக்கும் ஜெயக்குமார் மீது இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்t;
தினகர:ன் தண்டையார் பேட்டை: எனது அரசியல் வாழ்க்கையை முடக்க
நினைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் மீது இபிஎஸ், ஓபிஎஸ்சும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று மதுசூதனன் கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு, விநாயகபுரம்,
தண்டையார் நகர், பவர் குப்பம், சிங்காரவேலர் நகர், எம்ஜிஆர் நகர், திடீர்
நகர், பல்லவா நகர், ஒய்எம்சிஏ குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக
சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பால்பாக்கெட் ஆகியவற்றை
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம்
கூறியதாவது: மூத்த தலைவர்கள் இருந்தால் தன்னால் எதுவும் ெசய்ய முடியாது
என்ற பயத்தில் தலைமையின் அனுமதி இல்லாமல் அமைச்சர் ஜெயக்குமார், தான்தோன்றி
தனமாக செயல்படுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீனவ சமுதாய மக்களை
நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார். மீனவ சமுதாய மக்களுக்கு இவர் என்ன
செய்துள்ளார்? கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விசைபடகில் சீனா இன்ஜினை
பயன்படுத்த கூடாது என்று மீனவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் சீனா
இன்ஜினை பயன்படுத்துவோர்களுக்கு ஆதரவாக ஜெயக்குமார் செயல்பட்டு வருகிறார்.













































