ஆர்.மணிஇந்த கட்டுரையை படிக்க வாசகர்கள் கால இயத்திரத்தில் (டைம் மெஷின்) ஏறி முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
ஆம். கி.பி. 3016 ம் ஆண்டில் இந்த கட்டுரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு படிக்க கிடைக்கிறது. அப்போது (ம்) தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு தலை காய்ந்த பத்திரிகையாளன் இந்த கட்டுரையை எழுதுகிறான்.
அவனுடைய வேலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய சுவாரஸ்யமான உலக செய்திகளை ஆராய்ச்சி செய்து வெளியில் கொண்டு வருவதுதான். அப்படி ஒரு நாள் அவன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கையில்தான் இந்தியாவின் கடலோர மாநிலம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்வு அவனுடைய பார்வையில் படுகிறது. அதனுடைய பல பரிமாணங்கள் அவனை ஆச்சரியத்தில் உறைய வைக்கின்றன. ஏனெனில் அந்த சம்பவம் நிகழ்ந்த குறிப்பிட்ட காலகட்டம் தனி மனித கருத்துச் சுதந்திரமும், நாகரீக அரசு நிருவாகமும், அனைத்து விதமான அரசியல் கருத்துக்களுக்கும் இடங் கொடுத்த ஒரு காலகட்டம் என்று கருதப்பட்டதோர் காலகட்டம்.. அந்தக் காலகட்டத்திலா இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது என்பது, அதாவது குறிப்பிட்ட அந்த சம்பவத்திற்கு எதிரான அன்றைய, ஊடகங்களின் எதிர்வினை அவனை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. இனி அந்தக் கட்டுரையை பார்க்கலாம் ....
முன்போர் காலத்தில் ஒரு முதலமைச்சர் இருந்தார்.






















சண்டிகர்: இந்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள
கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
யூரி
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம்
ஊடுருவி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து முப்படையினர்
உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப், காஷ்மீரில் பாகிஸ்தான்
எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை
நோக்கி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 10
கி.மீ., தூரத்தில் உள்ள கிராமத்தை வசிக்கும் மக்கள் அங்கிருந்து
பாதுகாப்பான இடத்தை நோக்கி அகற்றப்பட்டு வருகின்றனர். அங்கு எல்லை
பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். வாகா
எல்லையில், வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியும் ரத்து
செய்யப்பட்டுள்ளது.தினமலர்.காம் 


















