சனி, 28 ஜனவரி, 2012

MGR Sivaji டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?


டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது கஷ்டப்பட்டு, அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்கிறார்களே?
-என். முகமது, சேலம்.
“அப்படியெல்லாம் கெடையாது. நாங்க என்ன கொடுக்குறமோ அததான் பாடினார்.” என்று எம்.எஸ்.வியே சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். பாடல்களில் கமகம், சங்கதி, ஹை பிச் இந்த வகைகளில் பாடல்கள் அமையாது. பாடல்கள் அப்படி அமைந்தால், நுணுக்கமான பாவங்கள்காட்டி நடிக்க வேண்டிவரும். அது எம்.ஜி.ஆருக்கு அறவே பிடிக்காத விசயம்.
துள்ளல் இசையோடு, வேகமான டெம்போக்களில். FLAT NOTES களில்தான் அவர் பாடல்கள் அமையும். அதை பாடுவது பாடகர்களுக்கு சுலபம். (‘அழகிய தமிழ் மகள் இவள்..’ நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு..’ ஒரு பெண்ணைப் பார்த்து..’ பாரப்பா பழனியப்பா..’ நான் ஆணையிட்டால்..’).
அதனால்தான் எம்.ஜி.ஆர், பாடல் காட்சிகளில் முகபாவனைகளைவிட, அதிகம் கைகளை பயன்படுத்தினார். கைகளை சுழட்டி, சுழட்டி நடிக்கும் பாணியே இதுபோன்ற பாடல்களால்தான் அவருக்கு உருவானது.
அதற்கு நேர் மாறாக, சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் சங்கதி, கமகம், ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்களை சொல்லியும், தா, தை என்று ஜதிகளோடும். ஹை பிச், லோயர் பிச், நார்மல் பிச் என்று எல்லா வகையிலும் பல இசை நுணுக்கங்கள் அமைந்ததாக இருக்கும்.

பாரதிராஜா - அமீர் : மோதல்!

பாரதிராஜா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “அன்னக்கொடியும் கொடிவீரனும்”. பாரதிராஜாவின் கிராமிய பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்கிறார். ஹீரோயின்களாக இனியா மற்றும் கார்த்திகா நடிக்கின்றனர்.
படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்த நேரத்தில், கேரளாவுடன் ஏற்பட்ட முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கேரள நடிகைகளான கார்த்திகாவும், இனியாவும் பாரதிராஜாவால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். “கேரளாவுடனான பிரச்சினை தீர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டார் பாரதிராஜா.

வேதிகாவுக்கு பாலா ட்ரீட்மெண்ட் - வெயிலில் காயும் ஹீரோயின்

பாலா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் நடந்து வருகிறது. படத்தின் ஹீரோயினாக வேதிகா நடிக்கிறார். படத்திற்கு “எரியும் தனல்” என்று பெயர் வைக்கப் போவதாகவும் பேச்சசுட்டெரிக்கும் வெயில் கடலோரத்தில் மட்டும் என்ன குலு குலுவெனவா இருக்கப் போகிறது. இந்த கடும் வெயிலில்தான் நாலு மணி நேரத்திற்கும் மேலாக காய்ந்து கொண்டிருக்கிறாராம் வேதிகா. பாலா தத்ரூபமாக படமெடுப்பவர். அவர் படத்தில் மேக்கப் போடுவது என்றால் நடக்காத காரியம்.ஹீரோயின் கொஞ்சம் கருப்பாக வேண்டும் என்பதற்காக வெள்ளைத் தோலுடைய பெண்ணான வேதிகாவை பிடித்து தினமும் வெயிலில் நிற்க வைத்து தன் கதைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கிறாராம் பாலா.

Chennai ஐ.டி., பூங்கா, வளாகங்கள் காலி..பயன்படுத்துவோர் இல்லை

சென்னையில் ஐ.டி., பூங்கா, அலுவலக வளாகங்களை பிற வர்த்தகப் பயன்பாட்டுக்கு மாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, அவற்றை இடித்து குடியிருப்புகள் கட்ட, கட்டுமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. முதல்கட்டமாக சென்னை அடையாறில், 19 மாடி ஐ.டி., பூங்காவை இடிக்கும் பணி, அண்மையில் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஐ.டி., பூங்கா மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க, நிலம் ஒதுக்குவது, கட்டடம் கட்டுவது ஆகியவற்றில், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால், ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த நிலையில், புதிய ஐ.டி., நிறுவனங்களின் வருகையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, ஏரா ளமான ஐ.டி., பூங்கா, வளாகங்கள் பயன்படுத்துவோர் இன்றி, காலியாகக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Carnatic Whistle concert விசில் இசைக்கலாம் வாங்க


விசில் இசைக்கலாம் வாங்க!' விசில் அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் அருண்குமார்: மகிழ்ச்சியை வெளிப் படுத்தவும், பெண்களைக் கிண்டல் செய்யவும், வயசுப் பசங்க அடிப்பது விசில்; அதனால் தான், பலருக்கு விசில் என்றாலே அலர்ஜியாகிவிட்டது. ஆனால், எங்கள் பாணியில் சொல்வதானால், விசில் இசைப்பது, அது இதழ்களிலிருந்து வரும் இதழ் ஒலி இசை. விசில் இசைப்பது பெரிய கலை; இதில் மூன்று வகைகள் உள்ளன. காற்றை உள்ளிழுத்து இசைப்பது, வெளிவிட்டு விசில் செய்வது, பற்களுக்கிடையில் விசில் செய்வது. முறையான தனிப் பயிற்சி மூலம் தான், விசில் இசைக் கலைஞராக முடியும். கர்நாடக, பஜன், மெல்லிசை என்று, எல்லா வகை பாடல்களையும் விசிலில் இசைக்க முடியும்.

ராவணன் ‘நெசமாலுமே’ கைது!ஜெயாவின் கூட்டுக்கொள்ளையர்கள் குத்து வெட்டு

விறுவிறுப்பு
அப்பாடா! ஒரு வழியாக ஒப்புக்கொண்டு, அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கோவை போலிஸ் – “ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், அவரது உதவியாளர் மோகனையும் கைது செய்துள்ளோம்”
இன்று காலையில் இருந்து இந்தச் செய்தி ஊர்ஜிதமாகாத தகவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இன்று காலை 10 மணிக்கு கோவை போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தியை தொடர்பு கொண்டு, “ராவணன் கோவையில் கைது செய்யப்பட்டாரா?” என்று கேட்டபோது, “அப்படியா கேள்விப்பட்டீர்கள்? அப்படியொரு பைல் எனக்கு இன்னமும் வரவில்லை. விசாரித்துவிட்டு சொல்கிறேன்” என்றார்.

மறுபடியும் மொதல்ல இருந்தா...?-ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை

ஜெ. சொத்துக் குவிப்பு: மறுபடியும் மொதல்ல இருந்தா...?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.
இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்குக் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் நோக்கம்தான் இதில் தெரிகிறது.

கலைஞர் டி.வி&’யை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், டி.வி. நிர்வாகத்தில் கனிமொழி தரப்புக்கு எந்த பங்கும் இல்லை


ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கி ஒருவழியாக ஓய்ந்திருக்கும் நிலையில் ‘கலைஞர் டி.வியை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், டி.வி. நிர்வாகத்தில் கனிமொழி தரப்புக்கு எந்த பங்கும் இல்லை என வரும் தகவல்கள் கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபமெடுக்க, அதன் விளைவாக ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, சி.பி.ஐ.யின் பார்வை கருணாநிதி குடும்பத்தின் மீது வி ழுந்தது. ‘‘200 கோடி ரூபாயை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஷாஹித் பல்வா கொடுத்திருக்கிறார். அந்தப் பணம் 2ஜி விவகாரத்துக்காக கலைஞர் டி.வி.க்குக் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணமே’’ என சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநர் சரத்குமார் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயாரிப்பாளர்கள்!

தமிழ் சினிமா எத்தனையோ சாதனையாளர்களை தடவிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறது... தீராத தலைவலியாய் திகழ்ந்தவர்களை சுளுக்கெடுத்தும் அனுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் இப்போதைய பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளவர் அமலா பால். அம்மணி அலட்டும் அலட்டல் இருக்கிறதே.... இவரை நம்பி ஒப்பந்தம் செய்து படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களை அதிர வைத்திருக்கிறது.
வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தவர் அமலா பால். இப்போது கேட்டால் 'ஆங்... அப்டி ஒரு படம் வந்ததா' என்பார். இந்தப் படத்துக்குப் பிறகு அம்மணி நடித்த படம் மாமனாரின் இன்பவெறி..சாரி.. சிந்து சமவெளி!

கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -1

சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு? 25 இலட்சம் கோடி ரூபாய் முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,38,365. எழுபது இலட்சம் கோடி ரூபாயை கிராமங்களின் எண்ணிக்கையால் வகுத்தால், ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 கோடி ரூபாய் கிடைக்குமென்றும், அதை வைத்துப் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து விடலாம் என்றும் முழங்கினார், பாபா ராம்தேவ். ‘இந்த ஐடியா நமக்குத் தோன்றவில்லையே’ என்று எண்ணிய அத்வானி, உடனே கறுப்புப் பண எதிர்ப்பு ரத யாத்திரை கிளம்பி, “எழுபதை ஏழால் வகுத்தால் பத்து” என்று திக்கெட்டும் முழங்கினார். வகுத்தல் கணக்கின் விடையென்னவோ சரிதான். 70 இலட்சம் கோடி எப்படி வந்தது, எங்கே இருக்கிறது, அதுயார் யாருக்குச் சொந்தமானது, அதை எப்படிப் பறிமுதல் செய்வது என்பவையல்லவா விடை காண வேண்டிய உண்மையான கேள்விகள்.

குறுகிய காலத்திலேயே கொழுத்து செழித்த வேலு'மணி'!


Velumani
சென்னை: அதிமுகவினர் மத்தியில் தங்கச் சுரங்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் எஸ்.பி.வேலுமணி. அதை விட அவரது பெயரிலேயே 'மணி' இருப்பதற்கேற்ப காசு பார்ப்பதில் படு கில்லாடியாம் இவர்.
இவரும் சசிகலா குரூப்பின் மிக முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர்தான். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இவருக்கு மிக முக்கிய துறையான தொழில்துறை ஒதுக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர் அமைச்சரான உடனேயே பண வசூலில் இறங்கி விட்டதாக பகீர் தகவலை வெளியிடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். பரம்பரை ஊழல்வாதி கூட இப்படி பணம் கறக்க மாட்டார், ஆனால் அதை விட படு பயங்கரமாக இருந்ததாம் வேலுமணியின் கரன்சி வேட்டை.

கொலை வழக்கில் ராவணன்- பல மணி நேரமாக விசாரணை- பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்!

Ravananan
கோவை: சசிகலாவின் நெருங்கிய உறவினரான ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவர் சாதாரண வழக்கில் சிக்கவில்லையாம், மாறாக கொலை வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து கோவை போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மன்னார்குடியைச் சேர்ந்த ராவணன், சசிகலாவின் சித்தப்பா மகளைத் திருமணம் செய்தவர். அந்த வகையில், சசிகலாவுக்கு இவர் தங்கை கணவர் ஆவார். கோவையில் வசித்து வரும் ராவணன், இங்கிருந்தபடி கொங்கு மண்டல அதிமுகவை ஆட்டிப் படைத்து வந்தார்.

கொதிக்கும் தமன்னா இரண்டாவதா? முடியாது!

“இரண்டாவது நடிகையாக நடிக்கும் அளவிற்கு என் மார்கெட் ஒன்றும் சரிந்துவிடவில்லை( தமன்னா இப்போது தெலுங்கில் பிஸியாம்!). எனக்கு அந்த நிலை வராது என்று உங்கள் இயக்குனரிடம் மறக்காமல் சொல்லுங்கள்” 

வாமனன் பட இயக்குனர் அகமது இயக்கத்தில் நடிகர் ஜீவாவும், த்ரிஷாவும் முதல் முறையாக இணைகிறார்கள். பெயர் சூட்டப்படாத இந்தப்படத்தில் ஜீவாவுக்கு இரண்டு ஜோடியாம்.
 முதல் நடிகையாக த்ரிஷா நடிப்பதால் இரண்டாவது நடிகையாகவும் ஒரு முன்னணி நடிகையை பேசிவிட்டால் படத்தின் விளம்பரம் சூடுபிடிக்குமே என எண்ணி, உஷாராக தன் மேனேஜரை நடிகை தமன்னாவிடம் அனுப்பியுள்ளார் இயக்குனர்.
 கதையை பற்றி கேட பின் தமன்னா குழப்பத்துடன் ”முதல் நடிகையாக த்ரிஷாவை புக் செய்துவிட்டதாக சொன்னீர்கள். த்ரிஷாவிற்கு பதில் நான் நடிக்க வேண்டுமா? அல்லது த்ரிஷாவுடன் இணைந்து நான் நடிக்க வேண்டுமா?” என்று சூடான குரலில் கேட்டிருக்கிறார்.

எம்.ஓ.எச். பாரூக் மரக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.எச். பாரூக் மரக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்.
 இவர் புதுச்சேரியில் மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். மறைந்த இந்திர காந்தியினதும் அமரர் ராஜீவ் காந்தியினதும் உற்ற நண்பானாவார்.ஒரு காலத்தில் இவர்தான் பாண்டிச்சேரி என்ற அளவில் மிகவும் பிரபலமாக இருந்தவர். இவரது ஆரம்ப அரசியல் திமுகவிலிருந்து தான் தொடங்கியது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்/

M. O. Hasan Farook Maricar 26 January 2012)[2]) is a three time Chief Minister of the Union Territory of Pondicherry, then Pondicherry. He served from April 9, 1967 to March 6, 1968 and March 17, 1969 to January 3, 1974 and from 1985 to 1990[3] He was thrice elected to the Lok Sabha from Pondicherry in 1991, 1996 and 1999 and served as a Union Minister of State for Civil Aviation and Tourism during June 1991- December 1992. He participated in the struggle for liberation of Pondicherry as a student, during 1953-54 when Pondicherry was a French colony and served as a Member of the Central Haj Committee in Mumbai from 1975 to 2000.[4] He was appointed as the Indian Ambassador to Saudi Arabia in September 2004.[5]
In 2010, Farook was appointed as Governor of Jharkhand.[6] He was appointed as Governor of Kerala on 25 August 2011.[7][8] and took office on 8 September 2011. Died on 26 January 2012 at 9:10pm at Apollo Hospital in Chennai due to kidney and other ailments.

குடியரசு தின விழாவில் போலீஸ்காரர் பரிதாப சாவு

ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீர சாகசம் புரிந்த போலீஸ் கான்ஸ்டபிள், திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில், குடியரசு தின நிகழ்ச்சிகள் நேற்று காலை நடந்தன. போலீசார் சார்பில் பைக் சாகச நிகழ்ச்சி நடந்தது. ஆயுதப்படை கான்ஸ்டபிள் பாண்டியன், பைக்கில் பறந்து சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர், ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். கராத்தேயில், "பிளாக் பெல்ட்' பெற்ற இவர்,

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி பறிப்பு பின்னணி மிரட்டல் பாணி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தைச்சேர்ந்தவர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி.   தீவிர அதிமுககாரனான இவர்,  சென்ற ஜெயலலிதா ஆட்சியின் போது கலசபாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவராக இருந்தார்.
அப்போதைய அமைச்சர் ராமச்சந்திரனை அவருடைய கலசபாக்கம் தொகுதிக்குள்ளேயே விடாமல்,  அடித்து விரட்டியவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.   மிரட்டல் பாணி அரசியல் செய்து வந்த இவரை கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த ஒரே அதிமுக எம்.எல்.ஏ என்பதால்,  கட்சியில் அடுத்தடுத்து பதவிகள் தேடி வந்தன.

சசிகலா வீட்டில் போலீசார் சோதனை

வீடு இடிப்பு, கொலை மிரட்டல் தொடர்பாக, சசிகலா தம்பி திவாகரனை கைது செய்வதற்காக, போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இன்று சென்னையில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் 4 முதல் 5 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ளவரசியின் மருமகன் ராவணன் கைது

பதிப்பாளர் பொறுப்பிலிருந்தும் சசிகலா நீக்கம்

Why di kolaiveri?
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியராக கவிஞர் மருது அழகுராஜும், பதிப்பாளராக பூங்குன்றனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பதிப்பாளராக சசிகலா இருந்து வந்தார். அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய செய்தி நமது எம்ஜிஆரில் வெளியானபோதும் சசிகலாதான் பதிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ. அதிரடி : அமைச்சர் இலாகாக்கள் மாற்றம் - 2 அமைச்சர்கள் நீக்கம்

தமிழக அமைச்சரவையை மீண்டும் மாற்றி அமைத்தார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சர் இலாகாக்களையும் மாற்றி அமைத்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள் அகிரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோரை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வியாழன், 26 ஜனவரி, 2012

சர்மிளாவை மமதா சந்தித்தார்!11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து

Mamata and Sharmila
இம்பால்: மணிப்பூரில் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் வகையில், அங்கு சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கடந்த 11 ஆண்டுகளாக ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல். 2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதிக்காத மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் இப்போது போட்டியிடுகிறது.

நண்பன் வேட்டை கொள்ளைக்காரன் மூன்றுமே வெற்றி இல்லை


இந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ் சினிமா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து கோடம்பாக்கத்தில் உலாவரும் லேட்டஸ்ட் பஞ்ச் இதுதான்!
இந்தப் படங்கள் மூன்றுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் (கொள்ளைக்காரனை முன்னணி பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை என்ற குறை உண்டு!), வசூல் என்று பார்த்தால், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் புலம்பலில் உள்ளது தெரிய வந்துள்ளது.
இனி வரும் நாட்களில் இந்தப் படங்களுக்கான பஞ்சாயத்து ஒன்று பெருமளவு வெடிக்கும், அல்லது கமுக்கமாக முடிக்கப்படும் என்கிறார்கள்.
முதலில் நண்பன் பட வசூல் குறித்து தியேட்டர் நிலவரங்களைப் பார்க்கலாம்.

தமிழ் பட வேட்டையில் வித்யாபாலன்

பிரபல கவர்ச்சி நடிகை நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த நடிகை வித்யாபாலன் தமிழ்ப்பட வேட்டையில் இறங்கியிருக்கிறாராம். சில்க் வாழ்க்கை வரலாறு, தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக உருவானது. இப்படத்தில் நடிகை சில்க் கேரக்டரில் வித்யாபாலன் நடித்திருந்தார். வித்யா பாலனின் நடிப்பு பாலிவுட் ரசிகர்களை விட, கோலிவுட் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டதாம்.

இதனால் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார் வித்யாபாலன். தனது ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ் இயக்குனர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் சிலருக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் வித்யா.

2003 முதல் 06 வரை குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர்கள்- விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு



டெல்லி: 2003 முதல் 2006ம் ஆண்டு வரை குஜராத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டுள்ள பெருத்த பின்னடைவாக இது கருதப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ளது.

எம்.எல்.ஏ.,விடம் விசாரணை அதிகாரி பவ்யம் குற்றம்சாட்டப்பட்ட MLA

திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீது இரண்டாவது திருமணம் செய்து பணம், நகை மோசடி செய்ததாக பெண் டாக்டர் கொடுத்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் உதவி கமிஷனரின், "பவ்யமான' செயல்பாடுகளால், விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீது, தேர்தலுக்கு முன் அரசு பெண் டாக்டர் ராணி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்."பரஞ்ஜோதி தன்னை இரண்டாவது திருமணம் செய்து, தன்னிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகையை வாங்கி ஏமாற்றி விட்டார்' என்று அவர் புகார் கூறினார். ஆனால், அந்த புகார் எடுபடவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதி, இந்து அறநிலைத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

தமிழக காங். விஜூ:கேரளா தான் முக்கியம்

""தமிழக காங்கிரஸ் நடத்தும், முல்லைப் பெரியாறு அணை போராட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாது. கலந்து கொண்டால், கேரள அரசியலில் எனக்கு சிக்கல் ஏற்படும். அதனால், என்னை விட்டு விடுங்கள்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், மேலிடப் பொறுப்பாளர் விஜூ பேசினார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மேலிட பொறுப்பாளர் விஜூ, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உட்பட, 22 பேர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள்

Shabana Azmi and Meera Nair
2012ம் ஆண்டிற்காக பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பத்மவிபூஷன், 27 பத்மபூஷன், 77 பத்ம ஸ்ரீ உள்ளிட்ட மொத்தம் 109 பேருக்கு விருதுகள் வழங்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் 19 பேர் பெண்கள் ஆவர்.
இந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகை ஷபானா ஆஸ்மி, சினிமா இயங்குனர் மீரா நாயர், இசை கலைஞர்கள் டி.வி. கோபாலகிருஷ்ணன், எம்.எஸ். கோபால கிருஷ்ணன், மற்றும் பிரபல இதய சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி உள்ளிட்ட 27 பேர் பத்ம பூசன் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

புதன், 25 ஜனவரி, 2012

நிர்வாண போஸ் - பயந்த நடிகைகள்


தீபன் இயக்கத்தில் மழைக்காலம் என்ற படம் தயாராகி வருகிறது. ஸ்ரீராம் மற்றும் பேராண்மை படத்தில் நடித்த சரண்யா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். 
படத்தில் நடிக்க அழைத்தபோது எந்த நடிகையும் முன்வராத நிலையில் தான் சரண்யா ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்ற நடிகைகள் ஓடி ஒளிந்ததன் காரணம் படத்தில் வரும் ஒரு காட்சி தான்.
படத்தின் கதை ஓவியக் கல்லூரியை சார்ந்திருப்பது தான் நடிகைகளின் பிரச்சினையாம். ஓவியக் கல்லூரியில் நிர்வாணமாக போஸ் கொடுப்பதற்கென்றே சில பெண்கள் இருப்பார்கள். அந்த நிர்வாணப் பெண் கேரக்டரில் நடிக்கத்தான் இந்த நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்க்ஸ்!

பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப் போகும் சினிமா ஜோடிகள். இவர்களின் திருமணம் பற்றிய செய்திகள் அதிகம் வந்தாலும் திருமணம் என்ற செய்தி மட்டும் வெளிவருவதாக தெரியவில்லை.
 எப்படியும் இந்த வருடம் நடந்துவிடும் என்று பேசிக் கொண்டிருந்த ரசிகர்களின் பேச்சை பொய்யாக்கும் வகையில் திடீரென தெலுங்கு படமொன்றில் நயன்தாரா ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிகிறது.
“இது தான் என் கடைசி படம் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை” என தான் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் அழுது கொண்டே போன நயன்தாரா இனி நடிப்போம் என எதிர்பார்க்கவில்லையாம்.

பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

முன்னுரை:
தமிழ் சினிமாவில் கோடிகளில் வாங்கும் நட்சத்திரங்களின் சம்பளமும், சம்பள உயர்வும் உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால் அன்றாடக் கூலியாக வேலை செய்யும் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு மட்டும் மறுக்கப்படும் அல்லது தள்ளிப் போடப்படும். தற்போது ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி திரைப்படத் தொழிலாளர்கள் போராடி வருவதையும், அதை மறுத்து தயாரிப்பாளர் சங்கம் வேலை செய்வதையும் நீங்கள் படித்திருக்கலாம். இது இன்றைய தினத்தில் மட்டுமுள்ள பிரச்சினை அல்ல.
1997ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடினர். அப்போது பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களாகவும் முதலாளிகளாகவும் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.

Hindu ராம் - ரமேஷ் ரங்கராஜன் மீது 400 ஏக்கர் நில மோசடி புகார்..அப்படி போடு


இந்து என்.ராம் - ரமேஷ் ரங்கராஜன் மீது நில அபகரிப்பு புகார் - அஇஅதிமுக முன்னாள் எம்பி போலீசில் மனு ரூ.300 கோடி சொத்தை ரூ.30 கோடிக்கு பெற முயற்சி ஆவணங்கள் திருடியதாகவும் ராம் மீது குற்றச்சாட்டு

சென்னை: பிரபல ஆங்கில இதழ் இந்து நிர்வாகி ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன் மீது 400 ஏக்கர் நில மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது . புகார் விவரம் வருமாறு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதாக, இந்து நாளிதழ் நிர்வாகி என்.ராம் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் மீது, அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி, புகார் தெரிவித்துள்ளார். அப்படி போடு

போலீஸ் உடையில் வந்தவர்கள் வெட்டி படுகொலை செய்தனர்

மாங்காடு:மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதிகாலையில் போலீஸ் உடையில் வந்தவர்கள் வெட்டி படுகொலை செய்தனர். கொலையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் ரவி. பிரபல ஓட்டல் மேலாளர். இவரது மனைவி அம்பிகா, 35. போரூர் ஜான்சிராணி மகளிர் சுய உதவிக்குழுவில் துணை தலைவி. இவர்களுக்கு பாக்கியன், 17, அரவிந்தன், 14 ஆகிய மகன்கள் உள்ளனர்.மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு போரூரில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் அம்பிகா கடன் பெற்று தந்துள்ளார்.

இந்த வங்கியில் கடன் மோசடிகள் நடந்தது தொடர்பாக, வங்கியில் பணியாளர்கள் ஐந்து பேரை, சமீபத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ம.க Dr,ராமதாஸின் சகோதரர் கைது ,,கொலை வழக்கு

திண்டிவனம்: தமிழக அமைச்சர் சண்முகத்தின் உறவினர் கொலை வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சகோதரர் சீனிவாசன் மற்றும் முன்னாள் பா.ம.க., தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சண்முகம் வீட்டில் கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத்தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று பா.ம.க.,வினர் புகுந்து  ஸின் அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில் அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது திண்டிவனம் போலீசில் சண்முகம் புகார் செய்தார். போலீசார் ராமதாஸ், அண்புமனி பெயரை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அண்புமனி ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், சி.பி.ஐ., விசாரணைக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஒப்பனை கலைந்த வாழ்க்கை – பாலாமணியம்மாள்


19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி. ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில் செல்வி. பாலாமணி அம்மாள் குறிப்பிடத்தக்கவர்.
அந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த மொத்த நாடக சபைகள் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறுசபைகளைப் பெண்களே ஏற்று நடத்தி வந்தனர். அவற்றுள் ஒன்று செல்வி. பாலாமணி அம்மாளும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் இணைந்து நடத்திய ‘பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி’ ஆகும். இதில் முழுவதும் பெண்களே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 70 பெண்கள்.

உம்மன்சாண்டி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் ஆளும் காங்கிரஸுக்கு தலைவலி

தமிழக - கேரள எல்லையில் பதற்றம் குறைந்ததும், முல்லைப் பெரியாறு விவகாரம் முடிந்து விட்டதாக ஒரு தோற்றம் நிலவுகிறது.
ஆனால் அணையை உடைத்தே ஆகவேண்டும் என்கிற தன் நிலையில் இருந்து கேரளா ஒரு அடிகூட பின்வாங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. இதற்கு அங்குள்ள மீடியாக்களும், அரசியல் கட் சிகளுமே சாட்சி! இது ஒருபுறமிருக்க, அணை பிரச்னை தொடர்பாக, கேரள முதல்வர் உம்மன்சாண்டி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் ஆளும் காங்கிரஸுக்கு தலைவலியையும், எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

கேட்கும் சம்பளத்தைத் தர முடியாது: திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்


பெப்ஸி தொழிலாளர்கள் தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்ட சம்பளத்தைத் தர முடியாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரம்: மூன்று நாள்களுக்கு முன்பு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்ஸி) சார்ந்த சங்கங்கள் தன்னிச்சையாக சம்பள உயர்வை நிர்ணயம் செய்துள்ளனர். வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்கமும், தொழிலாளர்கள் சங்கமும் கலந்து பேசி முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் சம்பள உயர்வு வழங்கப்படும்.

சல்மான் ருஷ்டி விவகாரம் ஸ்ரேயா ஆவேசம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்க எதிர்ப்பு கிளம்பின. கொலை மிரட்டல் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் சல்மான் ருஷ்டி இந்தியாவுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
சல்மான் ருஷ்டி எழுதிய நாவல் `மிட்நைட் சில்ரன்' என்ற பெயரில் படமாகிறது. தீபா மேத்தா இயக்குகிறார். இதில் முக்கிய கேரக்டரில் நடிகை ஸ்ரேயா நடிக்கிறார். சல்மான் ருஷ்டி இந்தியா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை ஸ்ரேயா கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர்,சல்மான் ருஷ்டியை இலக்கிய விழாவில் பங்கேற்க விடாமல் விலக்கி வைத்தது முறையற்ற செயல்.
`இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் சல்மான் ருஷ்டி போன்ற ஆட்கள் வர முடியாமல் போவது துரதிர்ஷ்ட வசமானது.
ஒருவர் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் அதற்கு பதில் கருத்துக்கள் சொல்லலாம்’’ என்று தெரிவித்துள்ளார்

கட்சியை ஆயிரம் கோடிக்கு விற்று விட்டார் சிரஞ்சீவி-என்டிஆர் பாலகிருஷ்ணா!

ஹைதராபாத்: நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவி தனது கட்சியை ரூ.1000 கோடிக்கு காங்கிரஸிடம் விற்றுவிட்டார் என்று நடிகர் பாலகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.
இந்நிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது,
நடிகர் சிரஞ்சீவி தன்னை என்.டி.ஆர். என்று நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். எனது தந்தை மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தார். அவருடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

IIT Saarang ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!

ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!

நடுத்தர​, மேட்டுக்குடி வர்க்கங்களது கலாசாரமும் – சமூகப் பொருளாதார​ விழுமியங்களை ஒட்டுமொத்த​ சமூகத்தினதுமாக​ சித்தரிப்பதில் சாரங் போன்ற கலாச்சார​ நிகழ்ச்சிகள் வகிக்கும் பங்கு மிக​ முக்கியமானது.










    ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் இணைந்து வழங்கும் ஐ ஐ டி  சாரங்க் விழா!ஐஐடியின் கலாச்சாரப் பெருவிழாவான ’சாரங்க்’ (SAARANG) – கின் காதைச் செவிடாக்கும் ஓசைகளுக்கிடையே இந்த கட்டுரையை எழுதுகிறேன். பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்து பத்தாயிரக்கணக்கில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெருத்த ஆராவாரமும் சீழ்க்கை ஒலிகளும், மின்னணுக் கருவிகளிலிருந்து செயற்கையான முறையில் கிளம்பும் இசை வன்முறையாய் காதையும், மனதையும் கிழித்துக் கொண்டிருக்கிறது. நெஞ்சில் இடிபோல் இறங்கும் ட்ரம்ஸ் பீட்டின் இசைக்கேற்ப தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்களும் இளைஞர்களும். ‘தன்னிலை மறத்தல்’ – இதுதான் சாரங்கின் இலக்கு.

    2000 பேர் கைது!நர்சிங் பணி நியமன தேர்வை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் போராட்டம்

    சென்னை: அரசு நர்சிங் பணி நியமனத்துக்கு தேர்வு முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 2000 மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.  தமிழகத்தில் 22 அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பட்டம் பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வந்தனர்.

    கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த உதயநிதி.!


    Viruvirupu,
    உதயநிதியை எப்படி அழைப்பது? ‘இளைய தளபதி’, ‘சின்னத் தளபதி’ என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள். வேறு பெயர் தேட வேண்டும் என்பதே உதயநிதிக்கு உள்ள ஒரேயொரு சிக்கல்.
    ‘மினி தளபதி’ அல்லது ‘மைக்ரோ தளபதி’ என்று பட்டம் கொடுக்க முடியாதபடி, தாத்தாவின் தமிழ் உணர்வு உள்ளது. ‘பேராண்டி தளபதி’ என்று கிராமிய டச்சுடன் பட்டம் கொடுக்கலாமா?
    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றொரு சுவாரசியமான வாரிசுப் போட்டியைக் காணப் போகின்றது. கட்சிக்காக பலரும் கடுமையாக உழைத்தாலும், பதவி என்று வரும்போது தலைவர் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு, விரலைச் சப்பிக்கொண்டு வீடுதிரும்பும் வழக்கம் உடையவர்கள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள்.

    கொலையாளிகள் போலீஸ் வேடத்தில் வந்தார்களா?இளம் பெண் கொலை! கணவரிடம் விசாரணை!


    சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம் ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் பாரிமுனை சரவணபவன் ஓட்டலில் மானேஜராக உள்ளார். இவரது மனைவி அம்பிகா (38). இவர்களுக்கு பாக்கியன் (16), அரவிந்தன் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரவி முதலில் போரூரில் குடியிருந்து வந்தார்.
    பின்னர் கெருகம்பாக்கத்தில் புதிய வீடு கட்டி கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். போரூரில் குடியிருக்கும் போது மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக அம்பிகா இருந்தார். மகளிர் குழு மூலம் அந்த பகுதி பெண்களுக்கு கடன் உதவிகளை பெற்று கொடுத்தார்.

    சென்னை வங்கியில் கொள்ளையடித்தது பீகார் கட்டுமானத் தொழிலாளர்கள்?

    சென்னை பெருங்குடியில் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் துப்பாக்கி முனையில் துணிகரமாக கொள்ளையடித்தது பீகாரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து சுற்றுப் பகுதிகளில் தங்கி கட்டட வேலை பார்த்து வரும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் தொழிலாளர்களை தீவிரக் கண்காணிப்பின் கீழ் போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.
    சென்னை பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை உள்ளது.

    இந்திராவுக்கு உருவான நெருக்கடி, இந்தியாவுக்கான நெருக்கடியாக மாறிப்போனது!



    ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தைத் தொடரவேண்டும்! அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான தென்னகம் இதழில் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
    இன்னொரு பக்கம் தமிழகத்துக்கு வரும் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதற்கு ஒத்தாசையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துகொண்டது.
    முதல் விஷயம், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் காரியம். இரண்டாவது விஷயம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை. இரண்டையும் சமாளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முதலமைச்சர் கருணாநிதி. ஆம், தமிழகம் வரும் ஜெ.பிக்கு திமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு தரப்படும். அதேசமயம், நாடு தழுவிய அளவில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நடத்திவரும் ஜெ.பி. தமிழகத்தில் ஏதேனும் சுட்டிக்காட்டுவாரானால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தார்.

    உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்!இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து



    கீவ்: இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    நக்கீரன் கோபால், இந்து ராமைத் தண்டியுங்கள்-ஜெ. வழக்கு


    Nakkeeran Gopal
    சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்தும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர், இணை ஆசிரியர், நிருபர் மற்றும் இதே செய்தியை எடுத்துப் பிரசுரித்த இந்து நாளிதழின் ஆசிரியர் ராம், செய்தியாளர் கோலப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீர் ரெய்டு

    Mahadevan
    தஞ்சாவூர்:சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகனான மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். எதற்காக இந்த ரெய்டு என்பது தெரியவில்லை.
    சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மூத்த மகன்தான் மகாதேவன். ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது அத்தை சசிகலாவின் துணையுடன் வலம் வந்தவர் மகாதேவன். ஜெ. பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு சமீபத்தில் ஒரேயடியாக விரட்டப்பட்டவர்.

    கேரளா-தமிழகத்திலிருந்து போன கோழியை திருப்பி அனுப்பியது!

    தேனியிலிருந்து அனுப்பப்பட்ட 10 டன் இறைச்சிக் கோழியை திருப்பி அனுப்பியுள்ளது கேரளா. கோழிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அனுப்பப்பட்டிருந்தாலும், வேண்டும் என்றேதான் இவ்வாறு கோழியை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறு.
    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துடன் மோதிக் கொண்டுள்ளது. தமிழர்களைத் தாக்குவது, தமிழர்களின் கடைகளைத் தாக்குவது, தமிழர்களின் வாகனங்களைத் தாக்குவது என அட்டகாசம் செய்து வருகின்றனர். இன்று வரை தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.

    1,075 கோடி செலவில் சென்னை வெளிவட்ட சாலை இரண்டாம் கட்ட பணிகள்

    : சென்னை நகரின், வெளிவட்டச் சாலை இரண்டாம் கட்ட பணிகளை, 1,075 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
    முதல் கட்ட பணி: சென்னை நகருக்குள் நெரிசலை குறைப்பதற்காக, வண்டலூரில் துவங்கி, நசரேத்பேட்டை, நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை வெளிவட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை, 29.65 கி.மீ., சாலை பணி, தனியார் பங்களிப்போடு நடந்து வருகிறது. வரும் நவம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இரண்டாம் கட்ட பணி : இதன் தொடர்ச்சியாக, நெமிலிச்சேரியில் இருந்து, திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்சட்டி வழியாக மீஞ்சூர் வரையிலான, 32 கி.மீ., சாலை 1,075 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

    திங்கள், 23 ஜனவரி, 2012

    கையில ரிமோட் வேற கிடையாது...நண்பனாக இல்லாத நண்பன்


    இன்றைய கல்வி அமைப்பு வெற்றுக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்கிறது. புரிந்து படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; உயர் கல்வி மையங்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்க ஊக்குவிப்பதில்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிப்பதையே திறமை என்று சொல்கிறார்கள்; பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதில்லை. இவையெல்லாம் மிகவும் தவறு என்ற செய்தியை மிகவும் வேடிக்கையான முறையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.
    த்ரீ இடியட்ஸ் என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளையும் ஆம்ப்ளிஃபையர்களையும் தகர்த்த படத்தின் அப்பட்டமான நகல்தான் நண்பன். சொந்தமாக எடுக்கப்படும் சமூக அக்கறை இல்லாத படங்களுக்கு மத்தியில் நகல் என்றாலும் நல்ல செய்தியைச் சொல்கிறது என்பதால் இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.

    சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!


    மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் (கேகேஐஏ-KKIA)” சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வெளியே 40 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் தான் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். இங்கு வெகுசில நிர்வாக வேலைகளைத் தவிர ஏனைய அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துப்புறவு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ‘சௌதி ஓஜர்’ எனும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

    திருமணத்துக்குப் பின் நடிப்பாரா சினேகா...? என்ன சொல்கிறார் பி்ரசன்னா?


    காதலை நேர்மையாக ஒப்புக் கொண்ட சினிமா ஜோடி என்ற பெருமை (அவர்களின் பிஆர்ஓ புண்ணியத்தில்!) யைப் பெற்ற சினேகாவும், பிரசன்னாவும், தங்களின் திருமணம் மற்றும் திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை திட்டம் குறித்து பத்திரிகை - தொலைக்காட்சிகளில் பேட்டிகள் அளித்து வருகிறார்கள்.
    அடுத்தமாதம் தங்களின் திருமணத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக பிரசன்னா தெரிவித்துள்ளார்.
    திருமணம் முடிந்த பிறகு, சினேகா நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

    Tamilnadu: 892 நர்ஸ்கள் திடீர் கைது

    தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் செவிலியர் பட்டய படிப்பு முடித்த 1861 மாணவ, மாணவியருக்கு அரசு பணியில் சேர்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2010ம் ஆண்டு நடைபெற்றது.
    இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் 969 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கப்பட்டது. மீதமுள்ள 892 பேர் அரசு பணிக்காக காத்திருந்தனர்.

    நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி புகார்!!


    Radhika and Vishal
    சென்னை: வெடி பட விவகாரத்தில் ரூ 9 கோடி செக் மோசடி செய்து விட்டதாக நடிகர் விஷால் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதிகா.
    விஷால் - சமீராரெட்டி ஜோடியாக நடித்த படம் வெடி. ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். பிரபுதேவா இயக்கினார்.
    இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந் நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும். அதில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.