சனி, 7 ஜூன், 2014

Trafic ராமசாமி மனு : சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும்போது முதல்வராக பதவி வகிக்கலாமா? ஜெ.,வுக்கு எதிராக மனு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வரும் போது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் வகிப்பது சரியல்ல, உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் ராசாராம் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.  ஜெயலலிதா முதல்வராக இருந்து சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது வரை பல வழிகளில் வாய்தா வாங்கி வழக்கிற்கு ஒத்துழைக்காமல் இருந்து வந்தார் ஜெயலலிதா. மேலும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஜூன் 16-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

பிரேம்ராஜ் ! தாயிடம் இருந்து குழந்தைகளை பறித்து விற்பனை செய்துவரும் ஒரு அயோக்கிய கணவன் !

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்க முயன்று போலீஸிடம் பிடிபட்டவர் பிரேம்ராஜ். அவரின் மனைவி மஞ்சு தனது கணவர் குழந்தைகளைப் பெற்றுத் தரும் இயந்திரமாகத்தான் தன்னைப் பயன்படுத்தினார் என்று கூறினார்.
கடந்த சனிக்கிழமை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு பிரேம்ராஜ் தனது 4-வது பெண் குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கு அங்கு வந்து செல்பவர்களிடம் விற்க முயற்சி செய்தபோது காவல் துறையிடம் பிடிபட்டார். எழும்பூர் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரேம்ராஜ் இதற்கு முன்பே தன்னுடைய 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையை மொத்தம் ரூ. 1.30 லட்சத்துக்கு விற்றிருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது பிரேம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த பெண் குழந்தை அவரது மனைவி மஞ்சுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. தற்போது தாயும், குழந்தையும் பெரம்பூரில் பாது காப்பு இல்லம் ஒன்றில் அரசு கண்காணிப்பில் இருந்து வருகின் றனர்.

ரெஜினா : தாத்தா ஐயங்கார் பிறகு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார்.

என் காதல் வித்தியாசமாக இருக்கும் என்று மனம் திறந்து கூறினார் எனக்கு அசைவம் என்றால் பிரியம். அதிலும் சிக்கன் விரும்பி சாப்பிடுவேன். ஒருநாள் விலங்கு பாதுகாப்பு அமைப்பினரின் (பீட்டா) கட்டுரை ஒன்றை படித்தேன். அன்றுமுதல் என் மனம் மாறிவிட்டது. என் அம்மாவிடம் சென்று இனிமேல் அசைவ உணவு செய்ய வேண்டாம். நான் சைவத்துக்கு மாறிவிட்டேன் என்றேன். இப்போதைக்கு நடிப்பில்தான் முழுகவனம் செலுத்துகிறேன். ஆனால், நான் காதலில் விழுந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். யாரோ சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள். கண்ணால் பார்த்தபிறகு நம்புங்கள். என்னைப் பொறுத்த வரை நிச்சயமாக சொல்கிறேன் எனது காதல் வழக்கமான ஒரு காதலாக இருக்காது. வித்தியாசமாக இருக்கும். ரெஜினா.‘கேடி பில்லா கில்லாடி ரங்கா‘, ‘அழகிய அசுரா, ‘பஞ்சாமிர்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. அவர் கூறியதாவது:நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் என்று கேட்கிறார்கள்? என்னுடைய அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர். தந்தை வட இந்தியர். பாட்டி கோவாவை சேர்ந்த ஆங்கிலோ இண்டியன். தாத்தா ஐயங்கார் பிறகு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். நான் சென்னையில் பிறந்தேன். இதில் நான் எந்த ஊரை சேர்ந்தவள் என்று சொல்வதில் எனக்கு குழப்பம் எழுவதுண்டு. tamilmurasu.org/

இளையராஜா: அடையாளம் இல்லாதவர்களுக்கு இசையால் முகவரி தந்திருக்கிறேன் !

என்னிடம் இசை கேட்டுவாங்கும் அளவுக்கு எந்த இயக்குனரும் உயரவில்லை என்றார் இளையராஜா.:‘ஒரு சிலரிடம் மட்டும் நீங்கள் அக்கறையும் அன்பும் காட்டுகிறீர்களே என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் எனக்கு அன்பும் அக்கறையும் உள்ளது. தனக்கென அடையாளம் எதுவும் இல்லாமல் என்னை சந்தித்து இசை அமைக்க கேட்டவர்களுக்கு அதை ஏற்று பணியாற்றி அவர்களுக்கு முகவரி தந்திருக்கிறேன். ‘பெரிய இயக்குனர்கள் சிலர் உங்களிடம் பயம்காட்டுவதும், உங்களை அணுக தயங்குவதும் ஏன்? என்கிறார்கள். அதற்கு காரணம் அவரவர்களுக்கு தன்னைத்தானே பற்றியுள்ள நம்பிக்கைதான். தன் படத்துக்கான இசையை தான்தான் முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதை நான் செய்துதர மாட்டேன் என்று எண்ணுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் என்னை அணுகுவதில்லை. ஒவ்வொரு படத்துக்கும் அந்தந்த இயக்குனர்களின் எண்ணத்தோடு பயணித்து அதற்கு தகுந்தபடி காட்சிகளுக்கு இசை அமைக்கிறேன். என்னிடமிருந்து இசையை வாங்குமளவுக்கு எந்த இயக்குனரும் உயரவில்லை.  இந்த அளவுக்கு ஆணவமாக படிக்காத ஒரு தற்குறியாக இதுவரை எந்த இசை மேதையும் பேசியதாக நான் அறியவில்லை . ஆணவம் எல்லாம் கண்டேன் உந்தன் நாறும் பேச்சிலே  - See tamilmurasu.org/

எம்.பி.ஏ. மாணவர் போலி என்கவுன்டர் வழக்கில் 18 போலீசார் குற்றவாளிகள் என தீர்ப்பு


உத்தரகாண்ட் மாநிலத்தில் எம்.பி.ஏ. மாணவர் கொல்லபட்ட போலி
என்கவுன்டர் வழக்கில் 18 போலீசார் குற்றவாளிகள் என சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்படுகிறது.
போலி என்கவுன்டர் உத்தரகாண்ட் மாநிலத்தில் 2009–ம் ஆண்டு ஜூலை 3–ந் தேதி காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர்சிங் என்ற எம்.பி.ஏ. மாணவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பட்டீல் அந்த மாநிலத்துக்கு வருகை தந்தபோது, மோகினி ரோட்டில் ரன்பீர் சிங்கும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஒரு குற்ற செயலில் ஈடுபட முயன்றதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரன்பீர்சிங் உடலில் 12 குண்டுகள் துளைத்திருந்ததும், 27 இடங்களில் ஆழமான காயங்கள் இருந்ததும் அவர் சித்ரவதை செய்யப்பட்டு போலி என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

அந்த 323 தொலைபேசி இணைப்புகளும் தயாநிதி மாறனும் ! விசாரணை ஆரம்பம் !

;தயாநிதி மாறனின், சன் டிவி அலுவலகத்திற்கு முறை கேடாக, அவரது
வீட்டிலிருந்து  323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியது தொடர்பாக விசாரணை மீண்டும் கிளறப்படுவது என்று தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
இந்த முறைகேடான தொலைபேசி வழக்கு 2008 ஆம் ஆண்டே வெளிச்சத்திற்கு வந்தாலும், காங்கிரஸ் அரசின் தயவால் கிடப்பில் போடப்பட்டிருந்தது  தற்போது மீண்டும் கிளறப்படுகிறது. < இதனையடுத்து, தற்போது, இது தொடர்பாக சன் குழுமத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவை சிபிஐ தற்போது விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த முறைகேடான தொலைபேசி எக்ஸ்சேஞ்சின் மூலம், தயாநிதி மாறன், மத்திய அரசிற்கு சுமார் 440 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்பேரில், கடந்த ஆண்டின் இறுதியில் தயாநிதி மாறன் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனத்தின் அப்போதைய தலைமைப் பொது மேலாளர்களான ப்ரம்மதத்தன் மற்றும் எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தயாநிதி மாறனின் போட் க்ளப் வீட்டிற்கும், சன் டிவி குழும அலுவலகத்திற்கும் இடையே பதியப்பட்டுள்ள உயர்தர ஃபைபர் ஆப்டிக் கேபிள் தொடர்பில், சக்ஸேனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

வெள்ளி, 6 ஜூன், 2014

ஐரோப்பாவில் தஞ்சம் பெற முயன்ற 2500 பேர் இத்தாலிய கடற்படையால் ஒரே நாளில் மீட்பு

புகலிடம் தேடி சட்டவிரோதமாக ஐரோபாவுக்குள் நுழைய முயன்ற 2500 பேர்
கடந்த 24 மணி நேரத்தில் மீட்கப் பட்டதாக இத்தாலிய கடற்படை அறிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 17 படகுகளில் மத்திய தரைக் கடல் பகுதி வழியே புகலிடம் தேடி சுமார் 2500 பேர் ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்றனராம். இது குறித்து இத்தாலிய கடற்படை அதிகாரிகள் கூறியபோது, சான் ஜியார்ஜியோ என்ற கப்பல் அதிக பட்சமாக 998 பேருடன் வந்தது. இதில் 214 பேர் பெண்கள், 157 பேர் சிறுவர் சிறுமியர்.

நவாஷ் ஷெரீப் அதிருப்தி ! இந்தியா போதிய மதிப்பு கொடுக்கவில்லை ?

இந்தியா வந்த போது  தனக்கு சரியான மதிப்பு கொடுக்கவில்லை என்று நவாஷ் ஷெரீப் அதிருப்தியில் உள்ளாதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஊடகம் வெளியிட்டு செய்தியில் பாகிஸ்தானின் ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி(என்)யில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த தலைவர் ஒருவர். இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாக கூறப்படுவது: 

சாயக்கழிவுகள் நிரம்பிய ஓரத்துபாளையம் அணை ! மொத்த விவசாயமும் நாசம்?

உலகிலேயே, திறக்க வேண்டாம் என்று விவசாயிகள் போராடிய ஒரே அணை
ஒரத்துப்பாளையம் அணையாகதான் இருக்கும். அதில் இருப்பது தண்ணீர் அல்ல. விவசாயிகளின் கண்ணீர். சுமார் 15 ஆயிரம் டீ.டி.எஸ். அளவு (Total disolved solids) கொண்ட திருப்பூர் சாய ஆலைகளின் ரசாயனக் கழிவு நீர் அங்கு தேங்கியிருக்கிறது. குடித்தால் மரணம்கூட நேரிடலாம். 24 ஆண்டுகளுக்கு முன்பு பாசனத் துக்காக என்று கட்டப்பட்ட அணை, தனது ஆயுள் காலத்தில் ஒருநாள்கூட பாசனத்துக்கு பயன்பட வில்லை என்று வயிறு எரியச் சொல்கிறார்கள் விவசாயிகள். ஒரத்துப்பாளையம் அணையையும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை யும் சென்று பார்த்தால் இந்த விஷ(ய)த்தின் வீரியத்தை நீங்கள் உணர முடியும்!

மோடி கடும் எச்சரிக்கை : காலில் விழுந்து வணங்க வேண்டாம் ! வெல் டான் !

என் காலையோ இல்லை மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து
வணங்கவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இன்று பாராளுமன்ற மையத்தில் பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள்  மற்றும் பாஜக எம்பிக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மோடி கூறுகையில், என் காலையோ அல்லது மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்றார். மேலும் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வரும் முன், உங்களை அதற்கேற்றவாறு தயார் செய்து கொண்டு வாருங்கள். கடுமையாக பணியாற்றுங்கள். நாடாளுமன்ற கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.dinamani .com 

பாலியல் அத்துமீறல்கள் : பாலியல் வறட்சிதான் அடிப்படையான காரணமா ?

பாலியல் அத்து மீறல்கள்  : மிகச் சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பட்டியல் எடுத்தால் பயங்கரமாக இருக்கிறது. வன்புணர்ந்து பிறகு தலையில் அடித்துக் கொல்வது, அடையாளம் தெரியாதபடிக்கு பாதி உடலை எரித்துவிட்டு போவது, தூக்கில் தொங்கவிடுவது என்று ஒவ்வொன்றும் குரூரமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வெறும் செய்தியாகப் படித்தால் பெரிதாக பாதிப்பு தெரிவதில் இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியிலும்தான் நடக்கின்றன என்றில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருந்துறையில் பெண் போலீஸ் ஒருவருக்கு லிப்ட் கொடுப்பதாகச் அழைத்துச் சென்று நடுக்காட்டில் கற்பழித்துவிட்டு பாதி உடலை எரித்துவிட்டுப் போயிருந்தான் ஒருவன். இன்னொரு சமயத்தில் சத்தியமங்கலத்தில் ஒரு நடுத்தர வயது பெண்ணை வன்புணர்ந்துவிட்டு தலையில் கல்லைப் போட்டு நசுக்கிவிட்டுச் சென்றிருந்தான் இன்னொருவன். இந்தச் சம்பவங்களில் வயதும் தடையாக இருப்பதில்லை. ஐந்து வயது சிறுமி, பதினைந்து வயது பள்ளிப்பருவப் பெண், முப்பது வயதுப் பெண், எழுபது வயது மூதாட்டி என்று யாருமே தப்பிப்பதில்லை. பெண். அவ்வளவுதான். அது சிறுமியாக இருந்தாலும் சரி. கிழவியாக இருந்தாலும் சரி. வடநாட்டில் இருந்தாலும் சரி. தென்னாட்டில் வாழ்ந்தாலும் சரி. இவற்றில் வட இந்திய ஊடகங்கள் கையில் எடுக்கும் செய்திகள் மட்டும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் பெறுகின்றன. மற்றவையெல்லாம் ஊடகங்களில் இருந்து தப்பித்துவிடுகின்றன. 

பஞ்சாப் பொற்கோவிலில் இரு பிரிவினரிடையே வாள்சண்டை பலர் காயம் !


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், 12 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. பொற்கோவிலில் வெளிப்படையாக இரு பிரிவினர் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 12 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலில் ஆபரேஷன் புளூஸ்டார் நடத்தப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, பொற்கோவிலில் இன்று காலை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை, பொற்கோவிலை நிர்வகித்துவரும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு முற்போக்கு சீக்கிய அமைப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

காட்சிகளை ஸ்பொன்ஸர் செய்து இலவசமாக தியேட்டர்களில் மலையாளப்படம் ! புதியமுறை திரைப்பட விநியோகம்

இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் சினிமா தொழில் என்பது வணிகம்
என்ற ஒற்றை அச்சாணியை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வருகிறது. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக தந்து திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்கள், படத்தை ஏரியா வாரியாக விற்பனை செய்வதன் மூலம் போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கின்றன. அப்படி, ஏரியா உரிமம் எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை என்றால், தயாரிப்பு நிறுவனங்களே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, படத்தை திரையிட்டு, டிக்கெட் கட்டணத்தின் மூலம் முதலீட்டு தொகையில் ஒரு பகுதியை சம்பாதித்து விடுவதுண்டு. தற்போது வரை இவை இரண்டு மட்டுமே சினிமா தொழிலின் சுழற்சி முறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த தொழில் மரபை தகர்க்கும் ஒரு புதிய முயற்சி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் 13ம் தேதி நிகழவுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களுக்கு ‘ஸ்பான்ஸர்கள்’ இருப்பது போல், திரையரங்குகளில் காட்டப்படும் படத்துக்கும் விளம்பரதாரர்களை ஸ்பான்ஸர்களாக்க மனோஜ் குமார் என்ற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

கேரளா MLA ராஜினாமா ! சரிதா நாயரை ஹோட்டலில் பாலியல் பலாத்காரம் !

திருவனந்தபுரம்: கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி
பலரிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள அரசியலில் இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் உம்மன்சாண்டியின் தனி உதவியாளர் டென்னி ஜோப்பன் கைது செய்யப்பட்டார்.  முதல்வர் உம்மன்சாண் டிக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாகவும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சரிதா நாயர் 9 மாத சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீ னில் விடுவி க்கப்பட் டார். பின்னர் அவர் நிருபர்களிடம், தன்னை காங்கிரஸ் எம்எல்ஏ. அப்துல்லா குட்டி திருவனந்தபுரத்தில் ஒரு ஓட்டலில் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து, அப்துல்லா குட்டி மீது திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சசி தரூர் பாஜக பக்கம் சாய்கிறார் ! மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம் !

புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின்
நடவடிக்கைகள் ‘இன்ப அதிர்ச்சி’யாக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் கூறினார். அது அவரது சொந்த கருத்து என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.< இன்ப அதிர்ச்சி முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், தேர்தலுக்கு பின்னர் அவர் தன்னை வழிநடத்திச் செல்லும் விதம், பேசும் விதம் ஆகியவை தான். வெற்றி பெற்றதில் இருந்து அவர் அன்பாகவும், உதவி செய்யும் குணமுள்ளவராகவும், குறிப்பாக அவர் பேசும் வார்த்தைகள், அவர் பேசும் தொனி போன்றவை ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.

பூனா இளைஞர் கொலை – பார்ப்பனிய பயங்கரவாதம் ஆரம்பம் !

மாராட்டிய மாநிலம் பூனா மாநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மோசின் ஷேக், இந்து ராஷ்டிர சேனா எனும் மதவெறி இயக்கத்தால், திங்கள் கிழமை 2.6.14 இரவு கொடூரமாக கொல்லப்பட்டார். பாஜக ஆட்சியின் முதல் ரத்தப் பலி துவங்கி விட்டது.
மராட்டிய அரசன் சிவாஜி, சிவசேனாவின் செத்துப் போன தலைவன் பால் தாக்கரே குறித்து கேலி செய்யும் படங்கள், கடந்த வாரம் பேஸ்புக்கில் உலா வந்தன. அதிகமும் பூனா மாநகரப் பகுதியிலேதான் இந்த படங்கள் பரவியிருக்கிறது. இதை எதிர்த்து, இந்துமதவெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரங்கள் பூனா மாநகரையே மையம் கொண்டிருந்தன.
முதலில் சிவாஜி, பால்தாக்கரே குறித்த படங்கள், அவை கேலிக்குரியதாகவோ இல்லை ஆட்சபணைக்குரியதாகவோ இருந்தால் என்ன பிரச்சினை? கலவரங்களுக்கு தலைமை ஏற்று, சிறுபான்மை மக்களை கொன்ற பாசிஸ்டுகளாத்தான் மோடி, தாக்கரேவை, நாங்கள் உள்ளிட்டு பல்வேறு ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள், சிறுபான்மை இயக்கங்களும் பார்க்கின்றோம்.

கலைஞர் டிவி-யின் ரூ.200 கோடி பரிவர்த்தனையில் எனக்குத் தொடர்பில்லை - ஆ.ராசா

டிபி குழுமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி அளித்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார் ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீதும், குற்றப்பதிவு மீதும் வாதாடிய அவரது வழக்கறிஞர் மனு சர்மா, 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு வழக்கில் ஆ.ராசா ஜாமீன் பெற்றுள்ளார் என்றும் அவர் தனது அரசியல் பணிகளுக்கிடையே நீதிமன்ற நடைமுறைகளிலும் பங்கேற்று வருகிறார் என்று கூறினார். ஆ.ராசா. திமுக உறுப்பினர் என்பதும், கட்சி கலைஞர் தொலைக்காட்சி என்ற ஒன்றைத் துவங்க திட்டமிட்டதும் தற்செயல் நிகழ்வு என்றும், இவருக்கும் இந்த ரூ.200 கோடி பரிவர்த்தனைக்கும் தொடர்பிருப்பதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் வாதாடினார். "பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது எனக்குத் தெரியும் என்று அமலாக்கப்பிரிவினர் எப்படி கூறமுடியும்?

பாலியல் பலாத்காரம் சிலநேரங்களில் தவறில்லையாம் ! பாஜாக மந்திரியின் அருள் வாக்கு !

பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவது சில நேரங்களில் சரியானதுதான்: பாஜக மந்திரி கருத்தால் பரபரப்புபாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவது சில நேரங்களில் சரியானதுதான் என பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்துள்ள கருத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.உத்திரப்பிதேச மாநிலத்தில் கடந்த மாதம் 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு கும்பல், அவர்களை கொன்று தூக்கிலிட்டனர். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இப்படியே உளறி கொட்டிண்டே போங்க சீக்கிரம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்திடும

பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம் : வேடிக்கை பார்த்த பயணிகள்!

மும்பை அருகே அரசு போக்குவரத்துக் கழக பேருந்தின் பெண் கண்டக்டரை பயணி ஒருவர் அடித்து உதைத்து, ஆடையை கிழித்து மானப்பங்கம் செய்ததை மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மும்பையை அடுத்துள்ள தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்யாணிலிருந்து  பன்வேல் செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இன்று காலை 8.30 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்தில் 34 வயது பெண் கண்டக்டர், அப்பொழுதுதான்  தனது முதல் டிரிப் பணியை தொடங்கினார்.
இங்குள்ள பேருந்துகளில், பயணிகள் பின்பக்கமாக ஏறி, முன்பக்கமாக இறங்குவதுதான் நடைமுறையாக உள்ளது. இந்நிலையில் 30 வயதுடைய அபிஷேக் சிங் என்பவர் வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் வழக்கமாக ஏறும் பின்பக்க வாசலுக்கு பதிலாக முன்பக்கமாக ஏறியுள்ளார். அவர் அவ்வாறு ஏறியதை பார்த்த டிரைவர் சத்தம் போட்டுள்ளார்.

மீண்டும் 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் ?

புதுடில்லி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய தொகையை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கும், 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை, மீண்டும் தொடர வேண்டும் என, தாண்டே குழு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அரசின் பல்வேறு மானிய உதவிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2013ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி, 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 1 முதல், இத்திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானிய தொகையை, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. பின், இத்திட்டம், 291 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில், 'ஆதார்' அட்டை வைத்துள்ளோரின் வங்கிக் கணக்கில், மானியம், வரவு வைக்கப்பட்டது. இத்தொகையுடன், பயனாளிகள் எரிவாயு சிலிண்டரை சந்தை விலையில் வாங்கி வந்தனர்.

வியாழன், 5 ஜூன், 2014

காயிதே மில்லத் , தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி - ஜெ., புறக்கணித்தது ஏன்? ஆர் எஸ் எஸ் சார்பு ?

காயிதே மில்லத் 119வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. திருவல்லிக்கேணி வாலாஜா
பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் பலர் திரண்டு வந்து மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஆனால், தமிழக முதல்வர் புறக்கணித்துவிட்டார். 

திமுகவை வலுப்படுத்த 6 பேர் குழு அமைப்பு!

 1. திருவேங்கடம், கலசப்பாக்கம் 2. கல்யாணசுந்தரம், திருத்துறைப்பூண்டி 3. இரா.ராஜமாணிக்கம், ஒரத்தநாடு 5. கே.எஸ். ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் 6. சச்சிதானந்தம், ஈரோடு
சென்னை: திமுகவை வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இதைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் திமுகவை வலுப்படுத்துவதற்கான குழு ஒன்று அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் திமுக தலைமையகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக வலுப்படுத்தும் சாத்தியக் கூறுகளை ஆராய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  விஷயம் சிம்பிள் ஆனா மனம் இல்லை தொடர் தோல்வி வந்தாலும் பிடிவாதம் விடோம்

பிரதமர் மோடி அலுவலக இணைய தளமா? ஆர்.எஸ்.எஸ். வரலாற்றுப் பெட்டகமா?

புதுடில்லி, ஜூன் 4- பிரத மர் நரேந்திர மோடி அலு வலகத்தில் இயங்கும் இணைய தளத்தில் ஆர்.எஸ்.எஸ். வரலாறு விரி வாக வெளியிடப்பட்டுள் ளது.
இதுகுறித்து பிசினஸ் லைன் (மே 30) ஏட்டில் வெளிவந்த செய்தி வருமாறு:
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான மய்யங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் நுழைய துவங்கி விட்டது. புதிய பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தை புதுப்பித்து http://pmindia.nic.in என்ற முகவரியுடன் கூடிய தளம் உருவாக்கப்பட்டுள் ளது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி எழுதப் பட்டுள்ளது.

பாஜகவை நெருங்கும் ஜெயலலிதா ! எல்லாம் சொத்து குவிப்பு மகிமை !

சென்னை: டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா பாஜக தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து சந்தித்து வந்தது அரசியல் அரங்கில் புதிய பாதைக்கு வித்திட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு இல்லாமல் இருந்த வந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். ஆனால் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. பாஜகவை நெருங்கும் ஜெயலலிதா: டெல்லி அரசியலில் புதிய திருப்பம் இந்த நிலையில் பெங்களூருவில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு அரசியல் ரீதியாக பெரும் குடைச்சலாக இருப்பதால் பாஜக தயவை ஜெயலலிதா நாடுவதாக கூறப்படுகின்றது.

2ஜி வழக்கு: ஆ.ராசா உள்பட 10 பேர் ஜாமீன் மனு மீதான வக்கீல் வாதம் முடிந்தது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்காக டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியது தொடர்பான 2–வது வழக்கில் மத்திய அமலாக்கப்பிரிவு சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதில் ஆ.ராசா, கனிமொழி சரத்ரெட்டி உள்ளிட்டோருடன் தயாளு அம்மாள் பெயரும் இடம் பெற்றுள்ளது. தயாளு அம்மாள் தவிர குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். உடல் நலக்குறைவு காரணமாக தயாளு அம்மாளுக்கு கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் அவர் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 9 பேர் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். இன்று கடைசியாக 9–வதாக ஆ.ராசா தரப்பு வாதம் முடிந்தது.
தயாளு அம்மாள் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யாததால் அவரது வக்கீலையும் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஓ.பி.சைனி கூறினார்.
இதைத் தொடர்ந்து தயாளு அம்மாள் தரப்பில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வக்கீல் வாதமும் உடனே தொடங்கி முடிந்தது. இந்த வழக்கில் 10 பேரது ஜாமீன் மனு வாதம் முடிந்துவிட்டதால் விரைவில் இதில் தீர்ப்பு கூறப்பட உள்ளது. maalaimalar.com

விஜயகாந்த் : மக்களே மக்களே ! நான் ஷூடிங்க்ல பிசி ! உங்களை அப்புறம் சந்திக்கிறேய்ன் !

லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,விற்கு ஏற்பட்ட படுதோல்விக்கு, மாவட்ட செயலர்களே காரணம் என, அக்கட்சி தலைவர், விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சில மாவட்ட செயலர்களை கடுமையாக அவர் கண்டித்தது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு தே.மு.தி.க., படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், மாநில நிர்வாகி கள், மாவட்ட செயலர்கள், பல்வேறு அணிகளின் செயலர்கள், துணைச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.தேர்தலுக்காக வசூலித்த நிதியையும், அதன் கணக்கு விவரங்களையும் ஒப்படைக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு, மாநில பொருளா ளர் இளங்கோவன் அறிவுரை வழங்கினார்.கட்டுமரமே கழண்டு போச்சு இதுக்குள்ளார  இவரு வேறு

அழகிரியை தேடி மா.செ.,க்கள் ஓடினால்...: கருணாநிதியை கட்டிப்போடும் ஸ்டாலின்

தேர்தல் தோல்விக்கு காரணமான, மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள், அழகிரி பக்கம் சாயும் ஆபத்து ஏற்பட்டு விடும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கருதுவதாக தெரியவந்துள்ளது.இதையடுத்து, அவர்களை காப்பாற்றும் விதமாக, 'மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பொருளாளர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன்' என்று கருணாநிதியிடம், ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
உயர்நிலை செயல் திட்டக் குழு கூடுவதற்கு முன், சென்னை, செனடாப் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில், மே, 30ம் தேதி ஆலோசனை நடந்துள்ளது. அதில், ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஸ்டாலினும் ராகுலும் பேசி வச்சு சதி பண்றாய்ங்களோ ? இரு ஜோக்கர்களுக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு சகோதரர் / சகோதரி தலைமை ஏற்க வருவதை இருவருமே விரும்ப மாட்டாய்ங்க .இனி அவிங்களுக்கு நிரந்தர மூன்றாம் இடம்தாய்ன் ! ஆனா அறக்கட்டளை மட்டும் ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின் ? விளங்கிடும் ?

தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை மாநாடு

சென்னை லயோலா கல்லூரியில் தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பா.வளர்மதி பேசியபோது,  ’’பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
விதவைகள் மறுமணத்துக்காக உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய கல்வித்தகுதி இல்லாததால் பலர் பயனடைய முடியவில்லை.
கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு "ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்தின்படி' மாதம்தோறும் ரூ.500 ஆக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகை தமிழக அரசால் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பை முடித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது.விதவைப் பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசு மேலும் செயல்படுத்த வேண்டிய கோரிக்கைகளை அளித்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார் அவர்.

கமல்நாத் கோபம்: சோனியா சமாதானம் ! லோக்சபா காங்., தலைவராக கார்கே தேர்வு !

லோக்சபா காங்கிரஸ் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டது, காங்கிர சில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை சமாதானப்படுத்த, காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தேர்தலில், நாடு முழுவதும் காங்கிரஸ் பரிதாப தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்க முடியாத அளவுக்கு, வெறும், 44 பேர் தான் எம்.பி.,க்கள் ஆகி உள்ளனர்.இதனால், லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக கூட, சோனியா, ராகுலால் அமர முடியாது. அப்படியே அமர்ந்தாலும், அந்த பதவிக்குரிய சலுகை கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. இப்படியொரு இக்கட்டான நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள சோனியாவும், ராகுலும், எதிர்க்கட்சி தலைவர் பதவி ஏற்க மறுத்து விட்டனர். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியும், இந்த பொறுப்பை ஏற்க, ராகுல் மறுத்துள்ளது, அக்கட்சி யில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.இந்த சர்ச்சை அடங்குவதற்குள், புதிய பிரச்னை யில் காங்கிரஸ் மேலிடம் சிக்கி தவிக்கிறது.

புதன், 4 ஜூன், 2014

டிஜிடல் தொழில் நுட்பத்தால் தமிழ் சினிமா புரட்சி ? சிறிய பட்ஜெட் படங்களுக்கு எதிராக பெரிய பட மாபியாக்கள் ?

தமிழ் சினிமாவில் புரட்சி? ‘என்னமோ ஏதோ’ என்று பயந்துவிடாதீர்கள். இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழில் வெளியாகியிருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை நான்கே மாதங்களில் செஞ்சுரி போட்டு விட்டது. வதவதவென வாராவாரம் வெள்ளிக்கிழமைக்கு ஆறு, எட்டு, பத்து என்கிற எண்ணிக்கைகளில் படங்கள் வெளியாவது புரட்சியா அல்லது வீழ்ச்சியா. தமிழ் சினிமாவில் ‘என்னமோ நடக்குது’ என்பது மட்டும் நிச்சயம்.;நூற்றி எட்டு தமிழில் வருடத்துக்கு எத்தனை திரைப்படங்கள் வெளிவரும்?நேரடி தமிழ்ப்படங்கள் தவிர்த்து இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என்று மற்ற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களையும் சேர்த்து ஆண்டுக்கு நூற்றி முப்பதிலிருந்து நூற்றி ஐம்பது படங்கள் வரை வெளியிடப்படுகின்றன. இது கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி.ஆனால் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிலேயே இந்த எண்ணிக்கையை தமிழ் சினிமா கடக்கப் போகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை முதல் நான்கு மாதங்களில் மொத்தம் நூற்றி எட்டு புதிய படங்கள் அரங்குகளில் திரையிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் டப்பிங் படங்களை கழித்துவிட்டால் நேரடி தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கையே எண்பதை தொடுகிறது.

facebook படத்தால் மும்பை எஞ்சினியர் இந்து தீவிர வாதிகளால் அடித்து கொலை !

புனேவை சேர்ந்த 24 வயதுமிக்க மொஹின் சாதிக் ஷைக் என்ற முஸ்லிம்
கணிப்பொறி பொறியாளரை ஹிந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 7 பேர் அடித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மொஹின் சாதிக் ஷைக் பேஸ்புக்கில் சிவாஜி போட்டோவையும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே போட்டோவையும் இழிவு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார். இதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவர் தனது நண்பருடன் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு திரும்பும் போது ஹிந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 7 பேரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனால் புனேவில் பரப்பரப்பு ஏற்பட்டது. 200 க்கும் அதிகமான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் dinakaran .com

90 வங்காளதேச குடும்பங்கள் திரிபுரா மாநிலத்திற்குள் வருகை !

வங்காளதேசத்தில் இருந்து வேலியற்ற எல்லை வழியாக திரிபுரா மாநிலத்திற்கு 90 குடும்பங்கள் ஊடுருவி உள்ளன. வங்காளதேசத்தின் கராச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர் அனைவரும் திரிபுராவின் தலாய் மாவட்டம் துய்சக்மாவில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இதனை உறுதி செய்துள்ள மாவட்ட கலெக்டர் மிலித் ராம்டேக் துய்சக்மாவில் முகாமிட்டு, ஊடுருவியிருக்கும் வங்காளதேச மக்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார். < இதையொட்டி எல்லைப் பாதுகாப்பு படை இன்று மாலை மயாங்கில் வங்காளதேச எல்லைப் பாதுகாப்பு படையினருடன் கொடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பிரச்சினையை தீர்ப்பதற்காக வங்காள தேசத்தில் இருந்து விங் கமாண்டர் வருகிறார். தற்போது ஊடுருவியுள்ள அனைவரையும் வங்காளதேசத்திற்கு திருப்பி அனுப்பும் நம்பிக்கையில் இருக்கிறோம் என்றும் கலெக்டர் கூறினார்.

ஐ நா செயலாளர் பான் கி மூன் : உபி சிறுமிகள் பாலியல் கொலை உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது !

இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று ஐ.நா. தலைவர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்குள் உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழிவான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. நைஜீரியா, பாகிஸ்தான், கலிபோர்னியா மற்றும் இந்தியாவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் இரு மைனர் பெண்கள் கழிவறை இல்லாத காரணத்தினால் வெளியே சென்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள்கற்பழிக்கப்பட்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விஜயகாந்த் : 144 தடை உத்தரவு மூலம் பணநாயகம் ஜெயித்தது ! தேர்தல் கமிசனும் காவல்துறையும் இணைந்து பெற்ற வெற்றி !

தேமுதிக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மத்திய அரசில் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது. இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியாவில் ஜனநாயகம் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒருபுறத்தில் இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் எந்தவித தேவையும் இன்றி வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 144 தடை உத்தரவை பிறப்பித்ததன் மூலம், ஆளும் கட்சியினர் அராஜகத்திலும், முறைகேட்டிலும் ஈடுபட்டு, பணநாயகத்தை வெற்றி பெற வைத்தனர்.

தமிழ் நடிகர்கள் வாங்கும் சம்பள விபரம் !

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா?
  கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர் பலமொழிகளில் வெளியிடப்படும் படத்திற்கு ரூ. 30 கோடியும், தமிழில் மட்டும் வெளியிடப்படும் படத்திற்கு ரூ.20 முதல் 25 கோடி சம்பளமும் பெறுகிறார்.
 கமல் ஹாஸன் படம் ஒன்றுக்கு ரூ.25 கோடி வாங்குகிறார். அவர் படத்தின் திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்பேற்றால் கூடுதல் சம்பளம் வாங்குவார்.
விஜய் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ.20 கோடி சம்பளம் வாங்குகிறார்.
 அஜீத் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வாங்குகிறார்
படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கும் சூர்யா படம் ஒன்றுக்கு தெலுங்கு உரிமையுடன் ரூ.18 கோடி வாங்கிறார். தெலுங்கு உரிமை மூலம் அவருக்கு மேலும் சில கோடிகள் கிடைக்கும்

யாமிருக்க பயமே பெருவெற்றி ! எந்த விநியோகஸ்தரும் முதலில் வாங்க முன்வரவில்லை !

யாமிருக்க பயமே' U சான்றிதழோடு வெளியாகி இருந்தால் இந்த ஆண்டின்
மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார்கள் தமிழ் திரையுலகில். கிருஷ்ணா, கருணாகரன், ஒவியா, ரூபா மஞ்சரி உள்ளிட்ட பலர் நடிக்க, டி.கே இயக்கத்தில் வெளியான படம் 'யாமிருக்க பயமே'. எல்ரெட் குமார் தயாரிப்பில் மே 9ம் தேதி இப்படம் வெளியானது.
படத்திற்கு U/A சான்றிதழ் அளித்தார்கள் தணிக்கை அதிகாரிகள். ஒரு வேளை படத்திற்கு U சான்றிதழ் அளித்திருந்தால் இந்தாண்டின் மாபெரும் வசூலை வாரிக் குவித்த படமாக 'யாமிருக்க பயமே' அமைந்திருக்கும் என்றார்கள்.
எப்படி என்று விசாரித்ததில், "'யாமிருக்க பயமே' படத்தினை 3 கோடியில் தயாரித்து, 2 கோடி ரூபாயை விளம்பரத்திற்கு செலவு செய்து வெளியிட்டு இருக்கிறார் எல்ரெட் குமார். முதலில் இப்படத்தினை வாங்குவதற்கு எந்த ஒரு விநியோகஸ்தரும் முன்வரவில்லை.

6 மாதங்கள¤ல் 100 படங்கள் ரிலீஸ் -தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை ! எல்லாம் டிஜிடல் புண்ணியம் !

இந்த ஆண்டில் ஜூன் மாதம் முடியும்போது 100 படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகிவிடும். தமிழ் சினிமா வரலாற்றில் இது புது சாதனையாகும்.கடந்த சில வருடங்களை மிஞ்சும் அளவுக்கு இந்த ஆண்டு தமிழ் படங்களின் வரத்து மின்னல் வேகத்தில் இருக்கிறது. கோச்சடையான், ஜில்லா, வீரம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தவிர சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் என 85 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இம்மாதம் மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, மெல்லிசை, நான்தான் பாலா, அரிமா நம்பி, பூலோகம், ஜிகர்தண்டா, சைவம், திருமணம் எனும் நிக்காஹ், அரண்மனை உள்ளிட்ட மேலும் 15 படங்கள் வெளியாக உள்ளதாக தெரியவருகிறது.

ஆள் கடத்தல், கொலை ! போலீஸ் டி.ஜி.பி. எஸ்.கே.சர்மா மீது வழக்கு !

அமிர்தசரஸ், ஜுன் 4- 24 ஆண்டுகளுக்கு முன்னர் விசாரணைக்காக
போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட நபர் மாயமானதால் பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், ரோபார் மாவட்டத்தை சேர்ந்த குல்தீப் சிங்(21) என்பவர் கடந்த 1990-ம் ஆண்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார். பின்னர், அவர் என்ன ஆனார்? என்பது தொடர்பான விபரம் எதையும் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். அவர் காணாமல் போய் விட்டதாக கூறி தங்களது பொறுப்பை தட்டிக் கழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் என் மகனை கடத்திச் சென்று, அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடுகின்றனர் என்று குல்தீப் சிங்கின் தந்தை ரோபார் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

2ஜி: அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகையில் ஸ்டாலின் பெயர்-ஆ.ராசா பேட்டி

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குனரகம் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் தமிழக முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலினின் பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பாக கருத்து கூறியுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 2ஜி ஊழலில் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடலை பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய மெகா கோள் கண்டுபிடிப்பு


நாம் வசிக்கிற பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும், இரண்டு மடங்கு பெரியதுமான ‘கெப்ளர்-10 சி’ என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோள், 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள் ( ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல் தொலைவு) தொலைவில் உள்ளது. இந்த புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும்.

பத்திரிகைகளுக்கு கலைஞர் விடுத்த கோரிக்கையும், எச்சரிக்கையும்!

திமுக தலைவர் கலைஞரின் 91-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.  இதை முன்னிட்டு  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிறந்தநாள் பொதுக்கூட்டம் இரவு நடைபெற்றது.  திமுக பிரமுகர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள் திரண்டு வந்திருந்து வாழ்த்தினர்.திமுக தலைவர் கலைஞர் பேசியபோது, ’’ஒரு இயக்கத்தை நசுக்கிவிடவேண்டும் என்று எண்ணுகிற எதிர் தரப்புக்கு இன்றைய பத்திரிகை உலகம் இரையாகிவிடுவது நியாயமா? இந்த பிறந்தநாள் விழா மூலமாக பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.  நாம் ஜனநாயக ரீதியிலே பாடுபடுகின்றவர்கள்.

அமலாக்க துறையின் குற்றச்சாட்டு பொய்': சிறப்பு கோர்ட்டில் கனிமொழி வாதம்

புதுடில்லி:'கலைஞர், 'டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் ஜாமின் கோரி, கனிமொழி சார்பில், மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனு, நீதிபதி ஓ.பி.சைனி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் புனையப் பட்டுள்ளன' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தரப்பில், நேற்று, டில்லி சிறப்பு கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க திராணியில்லாமல் வழக்கை தடுத்து நிறுத்த ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி இறங்குபவர்கள் (jeyalalitha _) பெரும் பதவிகளை அடைய முடிகிறது. மக்களும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு கனிமொழி தன் மீதான வழக்கு பொய்யென தைரியமாக வாதாடுகிறார். இதில் தான் குற்றமற்றவர் என நிரூபித்து விட்டால் இன்று கிண்டல் கேலி செய்பவர்கள் அரசியல் பேசுவதையே நிறுத்தி விடுவார்களா.......? ஆளுக்கு தகுந்த வேஷம் கட்டுவதில் நம் மக்களுக்கு இணை யாரும் கிடையாது.

செவ்வாய், 3 ஜூன், 2014

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பிறந்த வீட்டுக்கு சென்ற மணமகளுக்கு பாராட்டுவிழா

திருமணம் செய்த கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் கணவனோடு
ஒன்றாக வாழ முடியாது என்று கூறிவிட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட்ட புது மணப்பெண்ணுக்கு பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சமூக நல அமைப்பு பாராட்டு விழா நடத்தி கௌரவப்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அந்த புரட்சி பெண்ணின் பெயர் லாதா. இவரை பாட்னாவுக்கு அருகிலுள்ள பிகா பலோத் என்ற கிராமத்தைச் சேர்ந்த கவுபீர் என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்தபின் மணப்பெண் லாதா கணவருடன் புகுந்த வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்குள்ள வீட்டில் கழிப்பறை வசதி இல்லை.  இதனை  கண்டு அதிர்ச்சியடைந்த லதா, கழிப்பிடறை வசதி இல்லாத இங்கு என்னால் வசிக்க முடியாது. கழிப்பறை கட்டினால் மட்டுமே என்னை கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு மீண்டும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையறிந்த சுலப் இன்டர்நேஷனல் என்ற சமூக நல அமைப்பு லாதாவின் கணவர் வீட்டில் கழிப்பறை கட்டிக்கொடுத்ததோடு அப்பெண்ணுக்குப் பாராட்டு விழா ஒன்றும் நடத்தியது.

மல்லிகா ஷெராவத்தும் ஆர்.எஸ்.எஸ் ரசிகர்களும் !

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பன்வாரி தேவி எனும் பாரதப் பெண் இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை விட தேசியக்கொடி கவர்ச்சிக்காக பயன்பட்டிருக்கிறது என்பதே கவலை.
சாதிப் படிநிலையில் கீழே உள்ள ஆண்களை காதலிக்கவோ அல்லது திருமணம் செய்யவோ நம் நாட்டு ஆதிக்க சாதிப் பெண்களுக்கு உரிமை கிடையாது. யாரும் மீறி முயன்றால் கவுரவக் கொலை நிகழ்த்தி நம் ‘பாரத’ப் பண்பாட்டை தூக்கி நிறுத்துவது சங்க பரிவாரங்கள் மற்றும் ஆதிக்க சாதி வெறியர்களின் முக்கியமான வேலை.
அடங்கிக் கிடப்பதே பெண்களின் நல்லியல்பாகவும் மறுத்தால் ஒடுக்கியும் வரும் பார்ப்பனியத்தின் பாதுகாவலர்கள் மறுபுறம் அதே பெண்களை நதி, தாய்நாடு, தெய்வம் என்று தொழுவதாக பீற்றிக் கொள்ளுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் பெண்களை மரியாதை செய்யும் இலட்சணம் இப்படிப்பட்டதே!

நாகேஷுக்கு பல படங்களில் டப்பிங் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி !

இந்தியாவின் முதல் சலனப் பதிவாக்க தொழில்நுட்பத்தில் (மோஷன் கேப்சர்) ‘என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியின் திறமையை பாராட்டுவது நானே என் முதுகை தட்டிக்கொள்வதுபோல’ என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார் நாகேஷ். நாடகம், சினிமா என்று நாகேஷ் பிஸியாகத் தொடங்கியபோது “ரயிலில் ஏறும்போது நான் இன்ஜின்ல ஏறிட்டேன். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட என் நண்பர்கள் எல்லாம் 4 பெட்டி பின்னாடி ஏறிட்டாங்க’’ என்று நண்பர்கள் கூடி அரட்டை அடிக்கும்போது சொல்லி சிரிப்பார். எதார்த்தம், அன்பு இதெல்லாம் நாகேஷிடம் கொட்டிக்கிடக்கும்.
உருவாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் சம்புமித்ரர் கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஷை வடிவமைத் திருக்கிறார்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த கதாபாத்திரத்துக்கு நாகேஷின் 30 ஆண்டுகால நண்பர் கிருஷ்ணமூர்த்தி தன் குரலால் உயிரூட்டியிருக்கிறார். தங்களது ‘நட்புக்காலம்’ பற்றி உற்சாகமாக பேசுகிறார், ‘நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்தி. நாகேஷ் நடித்த ‘மின்னலே’, ‘ரிதம்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘காதல் கொண்டேன்’, ‘தசாவதாரம்’ படங்களில் நான்தான் அவருக்கு டப்பிங் கொடுத்திருப் பேன்.

144 ? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி : ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரையிலும் திமுக கூட்டணிக்கு 20தொகுதிகள் வரை நிச்சயமாக கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

கலைஞர் தலைமையில் 144 தடை உத்தரவுக்கு
நியாயம் காணவேண்டும்: கிருஷ்ணசாமி பேச்சு :
 ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரையிலும் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற நிலை களத்திலே இருந்து என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளர்கள்தான்.  20தொகுதிகள் வரை நிச்சயமாக கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 
திமுக தலைவர் கலைஞரின் 91-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.  இதை முன்னிட்டு  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிறந்தநாள் பொதுக்கூட்டம் இரவு நடைபெற்றது.  திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.இக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியபோது,  ‘’ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற நாடாளூமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கீழ் அமையப்பெற்ற கூட்டணியினர் எவரும் வெற்றி பெறவில்லை. 

விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்!!

டெல்லி: சாலை விபத்தில் சிக்கிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். டெல்லி விமான நிலையம் அருகே இன்று காலை அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கோபிநாத் முண்டே மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது திடீரென கோபிநாத் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்க போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபிநாத் முண்டே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேஷ் : பெண் நீதிபதியை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்தனர் !

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் 22 வயது பெண் ஒருவர் உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உ.பி.யில் உச்சகட்ட அக்கிரமம்: பெண் நீதிபதி பலாத்காரம்- உயிர் ஊசல்! இப்படி அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் அடுத்தடுத்து பலாத்காரங்கள் நடக்கிறது. அவரோ மீடியாக்கள் தான் தனது மாநிலத்தில் நடப்பதை பெரிதுபடுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அலிகரில் பெண் நீதிபதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. உடல் முழுவதும் காயங்களுடன் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மயங்கிய நிலையில் அவர் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் பாதி பாட்டில் பூச்சிமருந்து கிடந்தது. விஷமிகள் அவரை பலாத்காரம் செய்து அவருக்கு வலுக்கட்டாயமாக பூச்சி மருந்து கொடுத்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதியின் நிலைமை மோசமாக உள்ளது.  பாலியல் பலாத்கார சம்பவங்கள்  இந்த அளவு இடம் பெறுவதற்கு  என்ன காரணம் ? நம்ப கலாசாரம்  ? மதம் ? பாலியல் வறுமை ?

பனிரெண்டு வேடத்தில் வித்தியா பாலன் அலப்பறை !

கஜினி, ரமணா போன்ற கோலிவுட் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி வெற்றிபெற்றதையடுத்து தமிழ் படங்கள் மீது பாலிவுட் திரை யுலகினரின் கவனம் திரும்பியதுடன் சூது கவ்வும், பீட்சா போன்ற வித்தியாசமான கான்செப்ட் தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதேபோல் தற்போது விரைவில் திரைக்கு வரவுள்ள ‘பாபி ஜாஸுஸ் என்ற படத்தில் நடிகை வித்யாபாலன் 12 கெட்அப் அணிந்து நடிக்கிறார். இதற்காக இவருக்கு 100 வித கெட்அப் அணிந்து மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் 12 வேடங்கள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது பாலிவுட்டில் உருமாறி நடிக்கும் வேடங்கள் புதிய டிரெண்ட் ஆகி வருகிறது.

தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் தமிழக மத போதகர் கடத்தல்!

காபூல்: ஆப்கானிஸ்தானில் மத போதகர் அலெக்சிஸ் பிரேம் குமார், ஆயுதம்
தாங்கிய தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். சிவகங்கையைச் சேர்ந்த அலெக்சிஸ் பிரேம் குமார் என்ற மத போதகர், ஆப்கானிஸ்தானில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஹெராத் பகுதியில் உள்ள அகதிகள் பள்ளிக்கு நேற்று பிற்பகல் சென்றிருந்தபோது அங்கு வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.  இந்த கடத்தல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தலிபான் தீவிரவாதிகளின் கைவரிசையாகத்தான் இது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஹராத் அதிகாரிகளை அங்குள்ள இந்திய அதிகாரிகள் தொடர்புகொண்டு நிலைமையை கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே ஹெராத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் கடந்த மாதம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/tamil.oneindia.in

தமிழக புதிய ஆளுநராக ஜஸ்வந்த்சிங் ? முதல்வரின் சாய்ஸ் ?

பாரதிய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங் தமிழகத்தின்
ஆளுநராக நியமிக்கப்பட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஹரியானா உள்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் எதிப்புகளை புறந்தள்ளிவிட்டு ஆளுநர்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பாரதிய ஜனதாவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது dinakaran.com

நக்சலைட்கள் கொடுரம் : இயக்கத்தில் சேர மறுத்த பழங்குடி இளைஞன் வெட்டி கொலை !

பீஜாபூர்: நக்சல் இயக்கத்தில் சேர மறுத்ததற்காக சத்தீஸ்கரில் பழங்குடி இன வாலிபர் ஒருவர் படுகொலைச் செய்யப் பட்டுள்ளார். சத்தீச்கரில் உள்ள பீஜாபூர் பகுதியில் உள்ள பாய்குடாவைச் சேர்ந்தவர் தேவேந்திரா மோடம் என்ற இளைஞர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த தேவேந்திரா அல்லது அவரது சகோதரரை தங்கள் இயக்கத்தில் சேரச் சொல்லி நக்சல்கள் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால், அதற்கு தேவேந்திரா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 25 போராட்டக்காரர்கள் நேற்றிரவு தேவேந்திராவின் வீட்டைச் சுற்றி வளைத்தனர். வீட்டிற்குள் இருந்த தேவேந்திராவை பயங்கர ஆயுதங்களால் தாக்கி தங்களது இயக்கத்தில் சேரச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், தொடர்ந்து வலியைப் பொறுத்துக் கொண்டு நக்சல்கள் இயக்கத்தில் சேர முடியாது என தெவேந்திரா மறுத்துள்ளார். இதனால் மேலும் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் கோடாரியால் தேவேந்திராவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தேவேந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை : பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளை அடித்தவன் பிடிபட்டான்

மதுரவாயலை சேர்ந்தவர் சரோஜினி. என்ஜினீயரான இவர் எம்.இ.
படித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் போலீசில் புகார் செய்தார்.
அதில் இணைய தள திருமண தகவல் மையம் மூலம் திருக்கோவிலூரை அடுத்த அத்திப்பாக்கத்தை சேர்ந்த அந்தோணி குரூஸ் அறிமுகம் ஆனார். அவர் தான் அனாதை என்றும் சொந்த ஊரில் பார்சல் சர்வீஸ் நடத்துவதாகவும் கூறினார்.
எங்கள் இருவருக்கும் திருவேற்காட்டில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 6 நாட்கள் மட்டும் இருந்தார். சொந்த ஊரில் வேலை இருப்பதாக கூறிச் சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மேலும் பல பெண்களை திருமணம் செய்து இருப்பதாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவனது முகமே இவன் கேடி என்பதை காட்டுகிறது ஏன்தான் பெண்கள் ஏமாறுகிறார்கள் ?

திங்கள், 2 ஜூன், 2014

பீடித் தொழில் – ஒரு பார்வை

பீடி சுற்றும் பெண்கள்ஓரிரு ரூபாய்களில் விற்கப்படும் மினி சிகரெட் முதல் பத்திருபது ரூபாய்களில் விற்கும் உள்நாட்டு-வெளிநாட்டு கிங்ஸ் சிகரெட்டை புகைப்போர் உலகம் தனி. புகை பிடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்றாலும் அதற்கு பலியாகியிருப்போர் பலர். ரூபாய்களில் வாங்கி புகைக்க முடியாத சாதாரண  உழைக்கும் மக்கள் இன்றும் பீடியைத் தான் பயன்படுத்துகிறார்கள். இன்றளவும் உடலுழைப்பு வேலை செய்யும் தொழிலாளர்கள் பரவலாக பீடி பயன்படுத்துவதை பார்க்கலாம். பெருகி வரும் வாழ்க்கை பிரச்சினைகளின் பதட்டத்தை சிறு அளவில் தணிப்பதாக நம்பி புகை பிடிக்கும் பழக்கம் இங்கே வேரூன்றியிருக்கிறது. புகை பிடிப்பதை குறைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் அரசு ஆண்டுக்காண்டு சிகரெட், பீடி விலையை ஏற்றுகிறது.

பீடி சுற்றும் பெண்கள்

கால்டுவெல்லுக்கு நேர்ந்த அவமானம்!

10330480_753416194679182_7761847912043421482_n
‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியதோடு ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்று ஆரியத்திற்கு எதிராக திராவிடம் என்பதையும் உறுதியோடு பதிவு செய்தவர் மரியாதைக்குரிய கால்டுவெல்.
சமஸ்கிருத கலப்பில்லாமல் தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்டது என்பதோடு, தமிழை திராவிட மொழி என்றே உறுதி செய்தார்.
அதனாலேயே, அவருக்கு பின் வந்த பாரதியார், ‘திராவிடம்’ என்பதையும் கால்டுவெல்லையும் திட்டமிட்டுத் தவிர்த்தார். கால்டுவெல் உட்பட, வெள்ளை கிறித்துவப் பாதிரிகள் பாரத நாட்டுக்குத் தீங்கு செய்து விட்டதாக சபித்தார்.
நீதிக் கட்சிக்கார்களை கடுமையாக விமர்சிப்பதற்கு மட்டுமே ‘திராவிடம்’ என்ற பெயரை பயன்படுத்தினார். திராவிடத்திற்கு பதில் ‘ஆரியம்’ என்பதையே பாரதியார் பெருமையோடு பறை சாற்றினார்.
இப்படியாக கால்டுவெல்லுக்கு எதிராகவும், தமிழை விட சம்ஸ்கிருதம் உயர்வானது என்ற கருத்தும் கொண்ட பாரதியாரை தமிழராக சித்திரிப்பவரும், பெரியாரை தமிழரல்ல என்று புறக்கணிப்பவரும்,
திராவிட இயக்க எதிர்ப்பாளருமான பழ. நெடுமாறனுக்கு; திராவிட கருத்தியலுக்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் தந்த ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாளைக் கொண்டாட, யோக்கியதை இல்லை. இது பச்சையான சந்தர்ப்பவாதம்.
பழ. நெடுமாறன், கால்டுவெல் பிறந்த நாளைக் கொண்டாடியது அவரை அவமானப்படுத்தியதற்கு சமம்.

படிப்பு குறித்து பொய் தகவல்:நிரூபிக்கப்பட்டால் ஸ்மிருதிக்கு 6 மாத சிறை !

புதுடெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது கல்வி தகுதி குறித்து 3 முறை பொய் தகவல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை தண்டனை கிடைக்கும். ஆனால், அவரது எம்பி பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோகாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், டிவி நடிகை ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2004ம் ஆண்டு டெல்லியில் சாந்தினி சவுக் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அப்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், அஞ்சல் வழியில் பிஏ படித்திருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்கள்: சோதங்கரிடம் 7 மணி நேரம் விசாரணை


மோடிக்கு எதிராக தனது பேஸ்புக்கில் அவதூறு செய்ததாக புகார் எழுப்பப்பட்ட தேவு சோதங்கர் இன்று கோவா போலீஸ் முன்பு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று காலை 10.45 மணியளவில் சைபர் கிரைம் பிரிவில் ஆஜரான சோதங்கரை அவரது வழக்கறிஞர் முன்னிலையில் காவல்துறை உயரதிகாரி கார்த்திக் காஷ்யப் விசாரணை செய்தார்.
இதற்கிடையே சோதங்கர் மீது விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் போலீஸ் நிலையத்தில் கூடினர். அவர்கள் கடைசி வரையில் அங்கேயே இருந்துள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த சோதங்கர், சட்ட அமலாக்கப் பிரிவின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அவரது பேஸ்புக் கருத்துக்கள் அரசியல் சட்டத்தை அவமரியாதை செய்தவர்களுக்கு எதிரானதே என்றார்.

புதிய தெலங்கான அமைச்சரவை சந்திரசேகர ராவின் குடும்ப அமைச்சரவையானது ?

ஹைதராபாத்: நாட்டின் 29வது மாநிலமான தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவரது அமைச்சரவை உருவாக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவையில் குடும்ப ஆதிக்கம் அதிகம் இருப்பதுடன் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்ல தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக 11 அமைச்சர்களுடன் சந்திரசேகரராவ் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சரவையில் அவரது மகன் ராமாராவ் மற்றும் உறவுக்காரர் ஹரிஷ் ராவ் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவா பாச அர்பணிப்பு ? சுத்த முட்டாள்தனம் / கோழைத்தனம் !

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில், 'தி இந்து'வின் ஆறாம் பக்கத்தை
திருப்பியபோது ஒரு தலைப்பு அதிரச் செய்தது. அது, '500 ரூபாய் பிரச்சினையால் அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை' என்பது. வாசிக்கத் தொடங்கினேன். அடுத்த அதிர்ச்சி. குடும்பமே தற்கொலைசெய்துகொண்டதை அன்றில் பறவைகளோடு ஒப்பீடு செய்திருந்தார் செய்தியாளர். செய்தியின் முடிவில் மீண்டும் அதிர்ச்சி. ஓர் ஏழைக் குடும்பம் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொண்டுள்ள கோர நிகழ்வை, அன்றில் பறவைகளோடு ஒப்பீடுசெய்து, அது ஒரு பாச அர்பணிப்பு என்று குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது கோபத்தை வரவழைத்தது. 'தி இந்து' இப்படிச் செய்யக் கூடாது.
- சின்னையா காசி, முகநூல் வழியே…

உலக மக்களின் புகைப்படங்களை சேகரிக்கிறது அமெரிக்கா: நியூயார்க் டைம்ஸ்

அமெரிக்க உளவுத்துறையால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரின் முகத்தோற்ற படங்கள் நாள்தோறும் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பான என்.எஸ்.ஏ.யின் முன்னாள் உளவாளி ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி, அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், "என்.எஸ்.ஏ. அமைப்பு, முன்பு தனது உளவு வேலைகளுக்காக செல்போன் வாயிலாக அனுப்பப்படும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள், பிறரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களின் முகத்தோற்றம், கைரேகை பதிவுகள் உள்ளிட்டவைகளை சேகரித்து வருகிறது.நம்மளைய கேட்டா  நாமளும் போஸ் குடுப்பம்ல

தமிழகம் முழுவதும் மேலும் 360 அம்மா உணவகங்கள் !


தமிழகம் முழுவதும் மேலும் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த உணவகங்கள் திட்டம் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. பிற மாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

கலைஞர் : திமுகவினர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவினர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திமுகவை 1969-ஆம் ஆண்டு அண்ணா ஒப்படைத்து விட்டுச் சென்றார். கடந்த 45 ஆண்டுகளாக திமுகவின் தலைமைப் பொறுப்பு என்னுடைய தோள்களில் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த 45 ஆண்டுகளில் எத்தனையோ பிரச்னைகள், துரோகங்களைச் சந்தித்து, அனைத்தையும் சாதுர்யமாக அடக்கிச் சமாளித்துத்தான் திமுக அமைதியாக நடை போட்டு வருகிறது. யார்  சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்  என்பதில் தான் முக்கியமான கேள்வியே அடங்கி இருக்கிறது , கலைஞர் அவர்களே பகுத்தறிவு சுயமரியாதை இயக்கத்தின் கலங்கரை விளக்கம் தாங்கள்தான் ,  ஆனால் ஸ்டாலின் என்ற ஒரு மனிதரால் தான் திமுகவின் இத்தனை இடர்களும் தற்போது ஏற்பட்டிருக்கிறது,  அவர் எவ்வளவோ நல்ல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் , அவற்றை நாம் மறுக்க வில்லை , ஆனால் தற்போது திமுகவை வெறும்  இன்னொரு  அதிமுக பாணியில்  மாற்றி அமைத்துவிட்டார் , தமிழ்நாடு இன்னொரு அதிமுகவை தாங்காது

தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் ராஜினாமா?

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில், 217 தொகுதிகளில், அ.தி.மு.க., முன்னிலை பெற்றது. திருவாரூர், பாளையங்கோட்டை, ஆத்தூர், கடலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே தி.மு.க.,வும் மீதமுள்ள 13 சட்ட சபை தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி முன்னிலையும் பெற்றது. இப்படி நுணுக்கமான புள்ளி விவரங்களை வைத்து, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம், அறிவாலயத்தில், இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

ஞாயிறு, 1 ஜூன், 2014

தனியார் மயமாகிறது ரயில்வே ! எங்க போயிட்டாயங்க நம்ப கம்முனிஸ்டு தோலருங்க ?

ரயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். ரயில்வே துறையை மேம்படுத்த அதிக அளவு நிதி தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ரயில்வே மேம்பாட்டுக்கு அன்னிய நேரடி முதலீடு அவசியம் என்றும் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.  dinakaran .com

ஜெயலலிதா : மத்தியில் மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது !

சென்னை: வருகிற 3 ம் தேதி டில்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழக நிதி நலன் அக்கறை குறித்து பேச்சு நடத்தவிருக்கும் வேளையில் மத்திய அரசு மீது தமிழக முதல்வர் தனது அதிருப்தியை அவசரப்பட்டு வெளியிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 50 பைசா உயர்ந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெ., மோடி அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; உணவு பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது தான் மத்திய அரசின் முதல் பணியாக இருக்கும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் கூறிய சில மணி நேரத்தில் இந்த டீசல் உயர்வு வேதனை தருகிறது. இதன் காரணமாக சுற்றுலா செல்வோர். மாணவ , மாணவிகள், பயணச்செலவு அதிகரிக்கும். நுகர் பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஏமாற்றமே மிஞ்சியுள்ளது : ஏன் சொத்து குவிப்பு வழக்கை ஊத்தி மூட சம்மதிக்கலயோ ?

கலைஞருக்கு திமுகவின் அடிமட்ட தொண்டனின் கடிதம் : பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேர்வதில்லை !

நல்ல முடிவு எடுங்கள்! தி.மு.க தலைவருக்கு தொண்டன் எழுதிய கடிதம்!
திமுக தொண்டர்கள் கட்சியில் ஒரு பெரும் மாற்றத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளார்கள். தங்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது பல அதிருப்தியில் தமிழகம் முழுவதும்மே உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு தொண்டன் கட்சி தலைவருக்கு எழுதிய கடிதம். தலைமைக்கு தபால் அனுப்பியவர் நமக்கும் ஒரு நகல் தந்தார்.இதில் இருக்கும் கருத்துக்கள் தமிழகத்தின் திமுக தொண்டர்கள் மனநிலை...
தலைவருக்கு தொண்டனின் கடிதம்...தமிழினத்தின் தன்னிகரில்லாத தலைவர் மாண்புமிகு கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் பார்வைக்கு கழகத் தொண்டன் ......................... பணிவுமிக்க வணக்கத்துடன் எழுதுகிறேன். தி.மு.கழகத்தின் மிகப்பெரிய பலம் தங்களது தலைமை தான் என்பதை நாடறியும். தங்கள் வழியில் இயக்கப்பணியாற்றும் மாண்புமிகு ‘தளபதி’ அவர்களின் உழைப்பும், செயல்திறனும் இயக்கத்திற்கு பலமே  ? ஆகும். உண்மையை சொல்ல துணிந்த தொண்டனே திமுகவின் வீழ்ச்சி ஸ்டாலினின் ஏகாதிபத்தியத்துடன் ஆரம்பகிய உண்மைய சொல்ல உனக்கு ஏன் பயம் ? இந்த  ஸ்டாலின் பயம்உள்ள எந்த தொண்டனாலும் சரி தலைவனாலும் சரி இனி திமுகவின் சரிவை தடுக்க முடியாது,ஒரு வேளை ஜெயலலிதாவின் அடாவடி அளவுக்குமீறி போனால்  வேறு உருப்படியான   கட்சிகளும்  தமிழ்நாட்டில்  இல்லை என்ற முடிவுக்கு வந்தால்  மாத்திரமே  திமுக சரிவில் இருந்து மீள முடியும் , அதற்கும் வாய்ப்பு  இருக்கிறது அந்த  அம்மாவின் குணம் அப்படி , உங்களை போல அதுவும் திருந்தாது ,

2 வயது குழந்தைக்கும் முழுகட்டணம் கேட்டு நடுவழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து !

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விதியின்படி பேருந்தில் 130 செ.மீ.க்கு மேல் உள்ளவர்களுக்கு முழக்கட்டணம் (டிக்கெட்) என நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அரை டிக்கெட் கிடையாது முழுடிக்கெட்தான் எடுக்கவேண்டும் என்று தனியார் பேருந்துகளில் கட்டாயப்படுத்தப்படுகிறது.ஜீன் 1 ஞயிற்றுக்கிழமை மதியம் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஒரு தனியார் பேருந்தில் 2 வயது குழந்தையுடன் வந்த பயணியிடம் நடத்துநர் 2 வயது சிறுவனுக்கும் டிக்கெட் கேட்டுள்ளார். பயணி மறுக்கவே பயணியை யாரிடம் வேண்டுமானலும் சொல்லுங்கள் என்று தரைக்குறைவாக பேசியும் இடையில் பேருந்து நிறுத்தமே இல்லாத பகுதியில் இறக்க சொல்லியுள்ளார்.

விஜய் டிவியின் வெற்றி முகம் ! தமிழ் தொலைக்காட்சிகளில் புதுமை புகுத்துபவர்கள் !

டி.வி. பொழுதுபோக்கு ஊடகம் என்றாலும் அதிலும் வணிகம் இருக்கிறது. கலை, பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி வணிக ரீதியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். இந்த வகையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி எந்த அடிப்படையில் நிகழ்ச்சிகளை உருவாக்குகிறார்கள், அடுத்த கட்டம் என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பொதுமேலாளர் கே.ஸ்ரீராமிடம் விரிவாக பேசினோம். அந்த உரையாடலிலிருந்து.
புதிய நிகழ்ச்சிகளுக்கான கான் செப்ட்டை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?
ஸ்டார் குழுமத்தில் இருக்கிறதால் அங்கிருந்து நிறைய ஐடியாக்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் எங்கு என்ன நடக்கிறது. அதை எப்படி இங்கு மாற்ற முடியும் என்பதைப் பார்க்கிறோம். மூன்று மாதத்துக்கு இரண்டு புதிய நிகழ்ச்சிகள் என்பது எங்கள் திட்டம். மேலும், focus group study செய்வோம்.

திருப்பதி தேவஸ்தான தங்குவிடுதிகளில் மெகா டிவிக்கள் ! விஐ பி பக்தர்களுக்கு தாராள வசதி ! ஏழை பக்தர்களுக்கு கோவிந்தா ?

திருப்பதி வைகுண்டம் தங்குமிட வளாகத்தில் ரூ.2.55 கோடி மதிப்பில் 108 இன்ச் ராட்சத டி.வி. வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
பக்தர்களின் அடிப்படை வசதிக ளுக்கு முன்னுரிமை வழங்காமல், ஆடம்பர பொருட்கள் வாங்க திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித் துள்ளதற்கு பக்தர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
திருமலைக்கு அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகள் குறித்து அறங்காவலர் குழு முடிவெடுக்காமல், ரு. 2.55 கோடி செலவில் 108 அங்குல ராட்சத டிவிக்கள் தேவைதானா எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை வந்தால், திருமலையில் பக்தர்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
திருமலையில் விசேஷ நாட்க ளில் 60ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதுவே பிரம்மோற்சவம் போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் ஒரு லட்சத்தை தாண்டுகிறது. ஆனால் இது போன்ற நாட்களில், பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள் கிடைக்காது.

தேர்தலின்போது 144 தடை உத்தரவு ஏன்? விளக்கம் அளிக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அவர்களிடத்தில் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என்றால், நேரடியாக அவர்களை சந்தித்து என்ன காரணத்திற்காக தமிழகத்தில் 144 தடை விதித்தீர்கள் என்று நான் கேட்க இருக்கிறேன். இவ்வாறு கூறினார் என்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து நேரில் விளக்கம் கேட்கப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். டாக்டர் சார் இதன் மூலம் தெரிய வரும் நீதியானது இனிமேல் தமிழகத்தை போல முழு இந்தியாவுக்குமான தேர்தல் வெற்றி தோல்விகளை தேர்தல் கமிஷனே தீர்மானிக்க முடியும் யுரேகா