சனி, 2 ஜூன், 2018

நீட் எதிர்ப்பு அடம் பிடிக்கிறதா வேலூர் சி.எம்.சி? - நீட் எதிர்ப்பு பற்றி விளக்கம்

ramnath at cmccmccmc buildingநக்கீரன் - ராஜ்ப்ரியன் : 'நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர்களை எங்கள் கல்லூரியில் சேர்க்கமாட்டோம்' என உச்சநீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்துகிறது வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி. கடந்த வாரம், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சி.எம்.சி.யின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு பெருமைப்படுத்திய நிலையில், அதனை நோக்கி சர்ச்சைகளும் சுழல்கின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக சி.எம்.சி. போட்ட வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தமிழக நிர்வாகி திருப்பதி நாராயணன் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "நீட் தேர்வு முறையால் தங்களுடைய கல்லூரியில் படிப்பதற்கு தகுதியும் பொருத்தமும் உள்ள மாணவர்களை மட்டுமே சி.எம்.சி. தேர்வு செய்கிறது.

கைராணா இடைத்தேர்தல் தோல்வி பாஜகவுக்கு உணர்த்தும் செய்தி என்ன ?

சவுக்கு : பத்து  மாநிலங்களில் பரந்து அமைந்துள்ள  நான்கு லோக்சபா தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை இடங்களுக்கான  தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வரும்  பெரிய பாடம் என்னவெனில், பாரதீய ஜனதா கட்சியின் சரிவு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்திற்கு மாநிலம், அதே கதைதான். சில மாதங்களுக்கு முன்புவரை பாஜகவின் கோட்டை என கருதப்பட்ட தொகுதிகளில் இப்போது விரிசல்கள், உடைப்புகள் ஏற்பட்டுள்ளன..
பாஜக-வின் கவலை மிகப்பெரியது. ஏனெனில், கைரானா போன்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த தொகுதிகளில் மட்டுமின்றி, மேற்கு வங்கத்தில் மகேஷ்தலா போன்ற சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் நெருக்கடியை தீவிரமாக எதிர்த்து சமாளித்து, நாடாளுமன்ற தேர்தலில் மாநிலங்களில் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை  பாஜக நம்பியிருந்தது. இரண்டாவது இடத்தில் இருப்பது பாஜகவுக்கு ஆறுதலானது அல்ல.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க திமுக முடிவு- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்

Hemavandhana - Oneindia Tamil சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க முடிவு செய்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அது குறித்து திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 
மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதை படித்து பார்த்தபின்னரே தம்முடைய கருத்தினை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

புல்லெட் ட்ரெயின் .. பழங்குடியினர் கடும் எதிர்ப்பு .. நிலம் பறிமுதலுக்கு .


மின்னம்பலம்: புல்லெட் ரயில் திட்டத்துக்கான நிலம்
கையகப்படுத்துதலுக்கு பழங்குடியின மக்களின் கடுமையான எதிர்ப்பால் பணிகள் தாமதமாகி வருகிறது.
நாட்டின் முதல் புல்லெட் ரயில் திட்டம் மகாராஷ்டிரா - குஜராத் பாதையில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 2022ஆம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமாகி வருகின்றன. மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் புல்லெட் ரயில் திட்டத்தின்படி 70க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களின் வழியாகத் தண்டவாளம் அமைக்கப்படவுள்ளது. இந்தக் கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தால் தங்களது குடியிருப்புப் பகுதிகள் அகற்றப்படுவதை விரும்பவில்லை. இதனால் பழங்குடியின மக்கள் புல்லெட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்தின்படி பல்கர் மாவட்டத்தில் புல்லெட் ரயில் 110 கிலோ மீட்டர்களைக் கடந்து செல்கிறது.

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட ஆயுள் கைதி சிறையில் உயிரழப்பு .. தற்கொலை என்று அறிவிப்பு

மின்னம்பலம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது கைது செய்யப்பட்ட ஆயுள் கைதியின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: சர்ச்சையை எழுப்பும் கைதியின் மரணம்!தூத்துக்குடி மாவட்டம் மறவன்குடி பகுதியைச் சேர்ந்த பரத்ராஜா (36) கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆயுள் கைதியான இவர் தனது தம்பி தனசேகரனுக்கு மே 23ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மே 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 7 நாள் பரோலில் வந்தார்.
இதற்கிடையில் மே 22ஆம் தேதியன்று தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இரவு நேரங்களில் வீடு புகுந்து இளைஞர்களை போலீசார் கைது செய்வதும் தொடர்கதையாகி வந்தது.
அண்ணா நகர் 12ஆவது தெருவில் தனது அண்ணன் வீட்டில் இருந்த பரோல் கைதி பரத்ராஜாவையும் காவல் துறையினர் பலமாகத் தாக்கி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் எடுக்க அரசு அனுமதி: 3 நிறுவனங்களுக்கு உரிமம்

tamilthehindu :தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் எடுக்கவும், அதில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும் 3 நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உரிமங்களை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய அளவில் தென்னை சாகுபடி பரப்பில் முதலிடத்திலும், தென்னை உற்பத்தியில் 2-ம் இடத்திலும் தமிழகம் இருக்கிறது. அதோடு லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. தென்னை மரத்தின் மலராத தென்னம்பாளையில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்குவதற்கும், அதைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உதவும் வகையில், தமிழ்நாடு நீரா விதிகள் 2017-யை வடிவமைத்து, தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது.

கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரம் - நாகர்கோவிலில் அதிர்ச்சி

வெப்துனியா :ஏழ்மையில் வாடும் கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பலை பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.நாகர்கோவிலை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் தாய் நாகர்கோவில் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் என மகள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு 19 வயது முடிந்துவிட்டதால் எனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினேன். முதலில் சம்மதித்த என் மகள் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் திடீரென வீட்டை விட்டு சென்றுவிட்டாள். மேலும், காவல் நிலையத்தில் என் மீது தவறான புகார் அளித்து, என் உறவினர் ஒருவரோடு செல்ல விரும்புவதாக கூற போலீசாரும் அவருடன் என் மகளை அனுப்பிவிட்டனர்.

தமிழிசை :தூத்துக்குடியில் 13 பேரின் இழப்பு 1000 பேரின் இழப்பைத் தடுத்திருக்கிறது

tamilthehindu :தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரின் இறப்பு 1000 பேரின் இழப்பைத் தடுத்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து   கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை  சவுந்தரராஜன் பேசும்போது,  "தூத்துக்குடியில் நடந்த வன்முறை சூழலில் 1000 உயிர்களுக்கு மேல் பலியாகி இருந்திருக்க வேண்டியது. மிக கொடூரமான விஷயம் அங்கு நடந்து கொண்டிருந்தது. அங்கு 13 பேர் பலியானது மனதுக்கு வலிக்கிறது. எனினும்  இந்த 13 பேர் சுடப்பட்டது 1000 பேரின் உயிரிழப்பைத் தடுத்திருக்கிறது” என்றார்.
 தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே  காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக கூறப்படுவது  குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஸ்டாலின், திருமாவளவன், கம்யூனிஸ்ட் என அவர்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கூறலாம். ஆனால் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ரஜினி ஒரே கருத்தை கூறினால் சொல்லிக் கொடுத்துப் பேசுகிறார்கள் என்பதா? தமிழக மக்கள் இதனை அளவுகோலாக பார்த்துக் கொள்ளட்டும்.

ஸ்டெர்லைட்- அவுஸ்திரேலிய தாமிரத்தின் அமில கழிவுகளை கொட்டும் இடம்தான் தூத்துகுடி .. மிகப்பெரிய மோசடி!

மாலைமலர் :ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுத்து இந்தியாவில் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் தாமிரத்தாது பற்றி தெரிந்து கொள்வோமா? போராட்டம்... போராட்டம்... எதற்கெடுத்தாலும் போராட்டம்! இப்படியே போனால் நாட்டில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது.
இந்தியா குப்பை கிடங்காக மாற்றப்படுகிறதா? ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதைந்த ரகசியங்கள்இப்படி ஒவ்வொரு ஆலையாக மூடிக்கொண்டே வந்தால் வேலைக்கு எங்கே போவது?
வேலை கேட்டும் போராடுகிறோம். வேலை தரும் ஆலைகளும் வேண்டாம் என்கிறோம். இதற்கு என்னதான் தீர்வு? என்ற நியாயமான கேள்வி எல்லோரது மனதிலும் இருக்கிறது.
இந்த கேள்வி யதார்த்தமானதுதான்.
ஸ்டெர்லைட் வேண்டும் என்று நினைப்பது போல் வேண்டாம் என்று சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. அதில் புதைந்து கிடக்கும் ரகசியத்தை புரிந்து கொண்டால் நிச்சயம் வேண்டாம் என்றுதான் சொல்ல தோன்றும்.
எல்லோரும் நினைப்பது போல, ஸ்டெர்லைட் என்பது தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலை அல்ல.. அது தாமிர உருக்காலை.. உருக்காலை என்று சொல்வதைக் காட்டிலும், சுத்திகரிப்பு ஆலை என்றே சொல்வதுதான் சரியாக இருக்கும்.
அதாவது பூமியில் வெட்டியெடுக்கப்படும் தாமிரத் தாதுவிலிருந்து தாமிரத்தைத் தனியேப் பிரித்தெடுப்பதுதான் ஸ்டெர்லைட்டின் வேலை. நல்லதுதானே. இதில் நமக்கு என்ன நஷ்டம்? என்று தான் நினைக்க தோன்றும்.
ஏதோ ஒரு ஆலை. அதன் மூலம் மூவாயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கிறதே... இருந்துவிட்டுப் போகட்டுமே என்று தான் நினைப்போம்.

தூத்துக்குடி ..உண்மையில் இறந்தவர்கள் தொகை என்ன? ரகசிய சிறைகளில் இன்னும் பலர்?

Ellaam Samam : ஸ்டெர்லைட் ஆலையை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்ற ஜெயலலிதாவால் பல உயிர்கள் பலியாகியும் தீரா நோய்வாய்ப்பட்டும் வாழ்ந்து கொண்டிருந்த தூத்துக்குடி மக்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய போது இன்று 82 உயிர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. 22 வருடங்களாக நடந்த தொடர் எதிர்ப்புப் போராட்டங்களில் ஒரு உயிர்கூடப் பறி போகாதபோது இப்போது இத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டதும் பலர் ரகசியமாகச் சிறைப்படுத்தப்படுவதும் மோடி என்ற அரக்கன் ஆட்சியால் தான் என்பதை ஏற்பீர்களா? அவன் திட்டத்தைச் செயல்படுத்த இரண்டு அடிமைத் திருட்டுப்பயல்கள் மாநில ஆட்சியைப் பிடிக்க உதவி செய்ததும் அந்த அரக்கனே
தமிழகத்தை நாம் மீட்போம் என்ற நம்பிக்கை அறவே போய்விட்டது.
தூத்துக்குடி மக்கள் எப்படிக் காக்கப்படுவார்களோ?
இனி நாம் முன்னெடுக்கும் மற்ற போராட்டங்களின் நிலை என்னவோ?

தூத்துக்குடி படுகொலைகள்- ஐநா மனித உரிமைகள் வல்லுநர் குழு இந்திய அரசுக்கு அழுத்தம்

UN human rights experts* have condemned the apparent excessive and disproportionate use of lethal force by police against protesters calling for the closure of a copper smelting plant in the Indian state of Tamil Nadu over health and environmental concerns. 
Police opened fire on thousands of protesters on 22 May, reportedly killing 12 people and injuring dozens of others marching against the expansion of the heavily polluting copper smelter in the southern port city of Thoothukudi. The protest marked the 100th day of demonstrations against the copper smelting facility that had been proceeding peacefully.
தூத்துக்குடிவிகடன் :இரா.தமிழ்க்கனல் : தூத்துக்குடியில் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையொட்டி, ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழக போலீஸ் அளவுக்கதிகமாக உயிர்குடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என ஐ.நா. வல்லுநர் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்தின் ஒரு பிரிவாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையை விரிவாக்க முடிவுசெய்யப்பட்ட நிலையில், அதனால் குடிநீர், நிலம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என பாதிக்கப்படும் பகுதி மக்கள் போராடத் தொடங்கினர். போராட்டத்தின் நூறாவது நாளன்று மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

புறக்கணிக்கப்பட்ட பட்டியல் வெளியேற்றமும் ... புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும்

Murugan Kanna :  பள்ளர் சமுகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் அஜன்டாவை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய தேவேந்திர சங்கங்களும், அமைப்புகளும் மற்றும் பசுபதிபாண்டியன் போன்ற ஒரு சிலர் அறியாமையிலும் பேசி வந்தனர்.
கடந்த ஓராண்டு காலமாக புதியதமிழகம் கிருஷ்ணசாமியும் பேசி வருகிறார். ஆனால் கடந்த காலங்களில் மற்றவர்கள் பேசும் போது அரசியல் ரீதியாக பெரியளவில் பேசப்படவில்லை. கிருஷ்ணசாமி பேசிய பின்பே அரசியல் கருத்தாக உருவெடுத்தது. அதே சமயம் டாக்டர் கிருஷ்ணசாமி பட்டியல் வெளியேற்ற கருத்தை பேசிய பின்பே இந்த அஜன்டா ஆர்.எஸ்.எஸ் திட்டம் என்று பொதுவெளியில் அப்பட்டமாக தெரியவந்தது. இந்த வகையில் இந்த அஜன்டா பள்ளர் சமுக மக்களுடையது அல்ல ஆர்.எஸ்.எஸ் திட்டம் என்று அறிய செய்த கிருஷ்ணசாமியை பாராட்டுவோம்.
பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை புதியதமிழகம் கட்சி தங்களது அரசியல் இயக்க கோரிக்கையாக முன் வைக்கும் போது அதனோடு ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய தேவேந்திர சங்கங்களும் இணைந்து கொன்டது ஆனால் மாறாக மக்கள் இணையவில்லை. பல்வேறு இயக்கங்கள் சார்பாக எதிர்ப்பு பிரச்சாங்கள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளும் வலுவாக நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையோடு முடியப் போவதில்லை! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது லஞ்ச புகார்?

Prabha - Oneindia Tamil  சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டாலும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் இன்னும் கொதிப்பில்தான் இருக்கிறார்கள். 
' இத்தனை பிரச்சினைகளுக்கும் தொழிற்சாலை மூடப்பட்டதற்கும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான்' எனக் கொதிக்கிறார் கொங்கு ஈஸ்வரன். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரம் உற்பத்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன். மேலும் அந்த அறிக்கையில், ' ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்துக்கும் 13 பேர் சுடப்பட்டதற்கும் யார் காரணம் என்ற விவாதம் அனைத்து தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 
ஆளுங்கட்சிதான் காரணமென்றும், பிரதான எதிர்க்கட்சி தான் காரணமென்றும், காவல்துறை தான் காரணமென்றும், சமூகவிரோதிகள் காரணமென்றும் அவரவர் பிறர் மீது பழி போடும் வசனங்கள் தினசரி தொடர்கதையாகி போனது. 
 இதையெல்லாம் மக்கள் பார்த்து குழம்பிப் போயிருக்கிறார்கள். இத்துனை பிரச்சினைகளுக்கும் இப்போது தொழிற்சாலை மூடப்பட்டதற்கும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான்.

வெள்ளி, 1 ஜூன், 2018

சூதாட்டத்தில் தோல்வி... கணவர் கண்முன்னே மனைவி பலாத்காரம்.. ஒடிசாவில் பயங்கரம்

Jaya chitra - Oneindia Tamil  புபனேஷ்வர்: ஒடிசாவில் சூதாட்டத்தில் தோற்றதால், கணவரின் கண்முன்னேயே மனைவியை அவரது நண்பர் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 
ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள பாலியாபால் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர், கடந்தமாதம் 23ம் தேதி தனது மனைவியை வைத்து நண்பர் தலாய் என்பவரிடம் சூதாட்டம் ஆடியுள்ளார். இதில் கட்டிட தொழிலாளி தோற்றுவிடவே, முன்னர் அளித்த வாக்குறுதிப்படி தன் மனைவியை தலாயிடம் ஒப்படைக்க அவர்  முடிவெடுத்துள்ளார். 
தன் மனைவியிடம் உண்மையைக் கூறினால் அவர் வரமாட்டார் என்பதால், குளம் வரை சென்று வரலாம் என கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த குளப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த தலாயிடம் தன் மனைவியை அவர் ஒப்படைத்துள்ளார். 
கணவர் கண்முன்னேயே அவரது மனைவியை தலாய் பலாத்காரம் செய்துள்ளார்.

ரஜினியை யார் நீங்க என்று கேட்ட சந்தோஷ் ராஜ் மீது "தேசிய கொடி எரிப்பு" வழக்கு?

Veera Kumar - Oneindia Tamil :   சென்னை: தூத்துக்குடியில் ரஜினிகாந்த்திடம் "யார் நீங்க" என்று கேள்வி கேட்ட இளைஞர் மீது வழக்கு பதிய முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ரஜினிகாந்த் சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒவ்வொருவரிடமாக நலம் விசாரித்து வந்தார். இதில் தலையில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22 வயதாகும் சந்தோஷ் ராஜ் என்ற கல்லூரி மாணவரும் ஒருவராகும். 
யார் நீங்க சந்தோஷ் ராஜ் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்தவர். அனைத்து மாணவர் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் 
உள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றபோது போலீசாரின் தடியடியால் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவராகும். 
இவர் ரஜினிகாந்த்தை பார்த்து, யார் நீங்க என கேட்க அதற்கு நான்தான்பா ரஜினிகாந்த் என அவர் பதிலளித்தார். நியாயமான கேள்விகள் நியாயமான கேள்விகள் 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது, சென்னை ரொம்ப தூரத்தில் இருந்திச்சோ, அப்போல்லாம் எங்களை பார்க்க வரவில்லை, இப்போது வந்துள்ளீர்கள். மற்றபடி நீங்கள்தான் ரஜினிகாந்த் என்பது எங்களுக்கு தெரியும் என்றார் அவர். உடனே ரஜினிகாந்த் முகம் கடுமையானது. நைசாக அங்கேயிருந்து அடுத்த படுக்கைக்கு கிளம்பி சென்றுவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் அதன்பிறகு கடும் கோபமடைந்தார்.

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்! லிங்காவிலும் கபாலியிலும் விட்டதை காலாவில் பிடிக்க முயற்சி?

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!மின்னம்பலம: மினிதொடர்: காலாவுடன் ஒரு வியாபாரப் பயணம் - 1 இராமானுஜம்:
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்தவற்றில் அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அதிகம் வசூலான திரைப்படம் எந்திரன். அதை விடக் குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி எந்திரன் படத்துக்கு இணையான வசூலைக் குறைந்த நாட்களில் எட்டிப் பிடித்த படம் விஜய் நடித்து வெளியான மெர்சல்.
மெர்சல் படத்தைவிடக் குறைவான தியேட்டர்களில் தமிழகத்தில் வெளியான மொழிமாற்றுத் திரைப்படம் பாகுபலி - 2. குறைவான டிக்கெட் கட்டணத்தில் அதிக நாட்கள் ஓடி அதிக பார்வையாளர்கள் பார்த்து மெர்சல், எந்திரன் படங்களுக்கு இணையான வசூலைப் பெற்றது பாகுபலி - 2. இந்தப் படங்களுடன் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா, கபாலி படங்களின் வசூலை ஒப்பிட்டால், நினைத்துப் பார்க்க முடியாத அளவு குறைவான வசூலை பெற்றுத் தோல்வியைத் தந்த படங்கள் அவை எனத் தெரியும்.

7 திமுக எம்.எல்.ஏ க்கள் மீது ஸ்டாலின் சந்தேகம்!

டிஜிட்டல் திண்ணை: 7 திமுக எம்.எல்.ஏ க்கள் மீது ஸ்டாலின் சந்தேகம்! மின்னம்பலம்:  “திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 30ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலி, திருச்சி, சேலம், மாவட்டங்களிலும் மாதிரி சட்டமன்றக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். சென்னையைத் தொடர்ந்து ஏன் உடனடியாக மற்ற மாவட்டங்களிலும் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
’மே 31-ம் தேதி, திமுக சட்டமன்ற கழகக் கொறடா சக்கரபாணியின் வாட்ஸ்-அப்,லிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அதில் சட்டமன்ற ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ள ஊழல் அதிமுக அரசின் முகமூடியை தோலுரித்துக் காட்ட மாதிரி சட்ட மன்றக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மஹாராஜ நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜூன் 5ஆம் தேதியும், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஜூன் 8ஆம் தேதியும், சேலம் இரும்பாலை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜூன் 12ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. அதில் தவறாமல் எம்.எல்.ஏ,கள் கலந்துகொள்ளவேண்டும்.

டூத் பேஸ்ட்: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து!

டூத் பேஸ்ட்: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து!மின்னம்பலம்: மக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கியப் பொருளான பற்பசையில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று, டூத் பேஸ்ட் எனப்படும் பற்பசை. முந்தைய காலகட்டத்தில் பல் துலக்க வேப்பம் குச்சி, உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். அவை மறைந்து, இன்று அனைவருமே ரசாயனம் கலந்த டூத் பேஸ்ட்தான் உபயோகிக்கிறார்கள்.
டூத் பேஸ்ட் மற்றும் பார் சோப்புகளில், ட்ரைக்ளோசான் என்ற ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு ரசாயனப் பொருள் காணப்படுகிறது. இது குடலில் பாதிப்பை ஏற்படுத்தி, பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் "அறிவியல் மொழிபெயர்ப்பு மருத்துவம்" என்ற இதழில் வெளியாகியுள்ளது.

நடு இரவில் மிரட்டப்பட்ட "யார் நீங்க" ... ரஜினிக்கு டேமேஜ் கண்ட்ரோல் விடியோ வெளியீடு

வெப்துனியா: ஆறுதல் கூற வந்த ரஜினியிடம் ‘யார் நீங்க?’ என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பை எழுப்பிய சந்தோஷ்ராஜ், இன்று நான் கூறியதை ஊடகங்கள் திரித்துவிட்டன என அந்தர் பல்டி அடித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடிக்கு சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று சந்தோஷ் என்ற வாலிபர் கேள்வி கேட்டார். மேலும், சென்னையிலிருந்து இங்கே வர உங்களுக்கு 100 நாட்கள் ஆனதா? எனக்கேட்டு ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்தார்."
இந்த வாலிபரை நெட்டிசன்கள் கொண்டாடினார். நான்தான்பா ரஜினிகாந்த் என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் பிடித்தது. இவர்தான் உண்மையான, வீரமான தமிழர்கள் என்று போற்றினார். ஒருசில மீடியாக்கள் இவர் கேட்ட கேள்வியை வைத்து ரஜினியை டோட்டலாக டேமேஜ் செய்தன.

ரஜினியும் அவரது தப்பு தாளங்களும் ... .... ஒரு Flashback


நிசப்தம்.காம்  : பாலச்சந்தரின் படப்பிடிப்பு. நாயகி குளித்தபடியே நாயகனிடம் வசனம் பேச
வேண்டிய காட்சிக்காக யூனிட்டில் தயாராக இருக்கிறார்கள். நாயகனும் மேக்கப்புடன் ரெடியாக இருக்கிறார். பாவாடையை மார்புவரைக்கும் கட்டிக் கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார் அந்த கறுப்பு நடிகை. வந்தவருக்கு அதிர்ச்சி. அண்டாவில் வெந்நீர் இல்லை. வெந்நீர் இல்லாமல் நடிக்க முடியாது என்று சத்தம் போடுகிறார். அதன்பிறகு அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அவசர அவசரமாக அண்டா நிறைய தண்ணீரை ஊற்றி காய வைக்கிறார்கள். காத்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் டென்ஷனாகிவிடுகிறார். பொறுமையிழந்தவர் வெந்நீர் தயாராகும் இடத்திற்கு போகிறார். போனவர் அசிஸ்டண்ட் டைரக்டரை நகரச் சொல்லிவிட்டு அண்டாவுக்குள் அசால்ட்டாக ‘ஒண்ணுக்கடித்து’விட்டு வந்து தன் இடத்தில் அமர்ந்து கொள்கிறார். பிறகு ஹூட்டிங்கின் போது அதே தண்ணீரில்தான் அந்தப் பெண்மணி குளித்தாராம். 
பதிவில் இருந்த குறிப்புகள், கமெண்ட்களை வைத்துப் பார்த்தால் இது ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் ரஜினிகாந்த், சரிதா சம்பந்தப்பட்ட காட்சியின் போது நடந்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரோ, பவர் ஸ்டாரோ- ஒவ்வொரு ஆளுக்கும் ஏதாவதொரு விதத்தில் கோர முகம் இருக்கிறது பாருங்கள்.

தூத்துக்குடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு போலீசார் தொந்தரவு தரகூடாது.. உயர்நீதிமன்றம்

tutநக்கீரன் :தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் குற்றம் சாட்டபட்டவர்களின் குடும்பங்களுக்கு போலீசார் தொந்தரவு தரக்கூடாது என சட்ட உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் தங்கப்பாண்டி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’’ நான் நெல்லை மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். மே 22 ஆம் தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த போராட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பலபேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கும் பொருட்டு அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை போலீசார் விசாரணை என்ற பெயரில் நள்ளிரவு நேரங்களில் கூட துன்புறுத்தல் செய்கின்றனர்.

BBC : நான்கு திசைகளிலும் தோல்வி - பாஜகவை எச்சரிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மே 28 அன்று, இடைத்தேர்தல் மற்றும்
ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடத்தப்பட்டது. 11 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி உத்தராகண்ட் மாநிலம் தராளி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பிற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. >இவற்றுடன் உத்தரபிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பல்கார் மற்றும் பந்தாரா - கோந்தியா மற்றும் நாகலாந்து ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அவற்றில் பல்கார் தொகுதியில் பாஜகவும், நாகலாந்து தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன. மற்ற இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்துள்ளது.
 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மக்களவை இடைத் தேர்தல்களில் இதுவரை ஒன்றில்கூட வெற்றிபெறாமல், தொடர்ந்து மக்களவையில் தனது பலத்தை இழந்து வந்த பாஜக முதல் முறையாக ஒரு மக்களவை இடைத்தேர்தலில் வென்றிருப்பதும் இம்முறைதான்.

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது
மாலைமலர் : சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்து தேசியமும் தமிழ் தேசியமும் .... கொடிய பாசிச நோய்கள்

சிறப்புக் கட்டுரை: இந்து தேசியமும் தமிழ்த் தேசியமும்!மின்னம்பலம்: ஆர்.அபிலாஷ் :தமிழ்த் தேசியம்: தனித்தமிழ் இயக்கத்திலிருந்து ‘நாம் தமிழர்’ வரை – ஒரு பார்வை
நண்பர் ஒருவருடன் ‘நாம் தமிழர்’ கட்சியின் அரசியல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் இக்கேள்வி எழுந்தது: இவர்களின் தமிழ்த் தேசியத்துக்கும் திராவிடக் கட்சிகளின் தமிழ்த் தேசியத்துக்கும் என்ன வித்தியாசம்? வித்தியாசம் உண்டா இல்லை, இரண்டும் ஒன்றா?
தமிழ்த் தேசியம் என்பது திராவிடர் கழகத்துடன் தொடங்குவதாகக் கருதக் கூடாது என்று அவரிடம் கூறினேன்.
தமிழ்த் தேசியத்தின் தொடக்கமும் மாற்றங்களும்
பெரியாரும் அவருக்கு முன்பு நீதிக் கட்சியினரும் ஒரு திராவிட தேசியத்தை முன்வைத்தனர். டி.எம்.நாயர், தியாகராய செட்டியார், நடேச முதலியார் போன்ற நிறுவனர்களின் நோக்கம் தமிழ் மொழி சார்ந்த தேசியம் அல்ல – பிராமண எதிர்ப்பும் பிராமணர் அல்லாதோரின் ஒருங்கிணைப்புமே அவர்களின் பிரதான நோக்கம். இந்தியா முழுக்க இந்த பிராமண எதிர்ப்பைக் கொண்டுசெல்ல அவர்கள் நினைத்தனர். பிராமண ஆதிக்கம் கொண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்தனர். அதே காரணத்துக்காக அன்னி பெசன்டையும், பிராமணியத்தை ஆதரிக்கிறார் என காந்தியையும் எதிர்த்தனர். இதற்கெல்லாம் உச்சமாக இந்திய தேச விடுதலைப் போராட்டத்தையே எதிர்த்தனர்.

அம்போவான கிம்போ.. நிறுவனத்தின் இணையதளமும் .kimbho.com தற்போது முடங்கி உள்ளது.

savukkuonline.com Jeevanand Rajendran":
இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர்.
ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி.

கேரளா ஜாதி ஆணவ கொலைக்கு துணை போன ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த இரு தோழர்கள்

Savitha Munuswamy : கேரளாவில் காதல் திருமணம் செய்துக்கொண்ட கெவின்
என்ற இளைஞனை கடத்திக்கொண்டுபோய் இரு கண்களையும் நோண்டி கொடூரமாய் கொலைசெய்துவிட்டு ஏரியில் வீசிய பெண் வீட்டாருக்கு இச்சாதியாணவப் படுகொலைக்கு உதவி புரிந்தவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த இருவர் என்றும் தெரியவந்துள்ளது..! ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் அரசியல்வாதிகளாகிவிடுகிறார்கள் சித்தாந்தங்களை மறந்து ....DYFI -- க்கு 'தோழர்'-என்ற சொல்லாடலின் பொருள் தெரியாதா..??! செல்ப் அக்கௌண்டபிலிட்டி அவசியம் டோலர்களே..!
இந்துமதம்தான் சாதியின் பிறப்பிடமாக உள்ளது , பிறப்பின் அடிப்படையில் வேற்றுமையை போதிக்கின்றது என்றெண்ணிதானே இம்மக்கள் சிலர் கிருத்தவத்தை தழுவினார்கள்..? கிருத்தவமும் சாதியினடிப்படையில் மனிதனை பிரித்தாளுகிறது , மீறுவோறையும் இப்படி கொன்றொழிக்கிறது..! த்தூ.  படம் :- சாதியாணவப் படுகொலை செய்யப்பட்ட கெவினின் குடும்பத்தார்..!
Raja Mohammad :இதில் அந்த பெண்ணின் தந்தை கத்தோலிக்க கிறித்தவர் தாயார் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது தாங்கள் மட்டும் காதல் திருமணம் செய்யலாம் மகள் காதல் திருமணம் செய்தால் மருமகனை கொலை செய்வார்களாம் முட்டாள்கள்

வியாழன், 31 மே, 2018

சாதுவேடத்தில் வந்தவர்களால் தான் பல சாம்ராஜ்யங்கள் அழிந்திருக்கின்றன.. கலைஞர் ...

..
ஆலஞ்சியார் : தமிழகம் வேறுமாதிரி என்பதை சிவாஜிராவ் அறிந்திருக்கவில்லை.. மாயஜால வேசம் கைகொடுக்குமென பழைய வித்தையை கையிலெடுத்து ஆர்எஸ்எஸ் ஆட்டுவித்த குரங்கு கடைசியில் கல்லடிபட்ட கதையானது. ஒவ்வொரு வியர்வை துளிக்கும் தங்ககாசு தந்தவன் இன்று முகத்துக்கு நேரே .. யார் நீ என கேட்கிறான்..

இந்த தைரியம் ஒருநாளில் வந்ததல்ல.. நெடுகாலமாய் இனமானத்தோடும்
தன்மானத்தோடு வாழ காலமெல்லாம் போராடிய தந்தை பெரியார் கற்று தந்த சுயமரியாதையின் #அறசீற்றம் இது .. சினிமாவெனும் மதி மயக்கும் அரிதார நிழல் கதையில் கதாநாயகன் வேசம் கட்டியதை.. கைதட்டி ரசித்தவன் அதை ஒரு கேளிக்கையாக கொண்டவன் கலை நாடகத்தில் அதீத மயக்கம் கொண்ட தமிழ் மரபினன்.. ஆனால் தன்மானத்திற்கு இழுக்கென்றவுடன் சீறிவரும் சிம்மமானான்.. ஆரியர்கள் எத்தனை வேசம் கட்டுகிறார்கள்.. எத்தனை பேரை களமிறக்குகிறார்கள் சூது சூழ்ச்சி ..மது மாது..கவர்ச்சி என வரிசையாக இறக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.. அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால் மிரட்டிபார்த்தார்கள் மசியவில்லையென்றவுடன்..மயிலிறகால் வருட பார்க்கிறார்கள்..

பாஜகவின் B team களை தெரிந்து கொள்ளுங்கள்

Shalin Maria Lawrence : கடந்த வாரம் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 11 இடங்களில் பாஜகவிற்க்கு வெறும் 2 இடங்களே கிடைத்துள்ளன. மற்ற 9 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றியடைந்து உள்ளன.
இது 2019 மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்பதனின் எடுத்துக்காட்டு.
ஆனால்
திராவிடத்தால் வீழ்ந்தோம்
ரஜினி நல்லாட்சி தருவார்
ஈழ எதிரி கருணாநிதி
விசிக ஜாதி கட்சி
கமல் ஊழல் இல்லாத ஆட்சி தருவார்
சாகாயத்தை முதல்வராக்குவோம்
எம்ஜியார் இன்னும் சாகவில்லை
அம்மாவின் ஆட்சி பொற்கால ஆட்சி
கம்யூனிஸ்ட் எல்லாம் வேலைக்கு ஆகாதவர்கள்
தனி தமிழ்நாடு ஒன்றே தீர்வு
என்று மனநிலை பிழன்றோர் போல் அண்ணங்களுக்கும்,நோட்டாவுக்கும்,இரட்டை இலைக்கும் ,பாஜகவுக்கு ஒட்டு போடுவீர்களானால் நீங்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கு மோடியின் ஷூவை நக்க தயாராய் இருங்கள்.
பெட்ரோல் விலை 200 ஆக உயரும்
ஒடுக்கப்பட்டவன் ,சிறுபான்மை சமூகம் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படுவார்கள்.
தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய அனைத்து நிதி உதவிகள் ரத்து செய்யப்படும்.

பா.ரஞ்சித்துக்கு முட்டு கொடுக்கும் தலித் மேதாவிகள் ஆ.ராசாவை கண்டுகொள்ளாதது ஏன்?


LR Jagadheesan : ரஞ்சித்துக்காக ிபற்றுக்கு சொறிந்துகொடுக்கிறது. அதனால் ரஜினி மாதிரி ஒரு facist உடன் கைகோர்த்தாலும் ரஞ்சித் உங்களுக்கு தலித் icon. அப்படியான உங்களின் ஜாதி அரசியலுக்கு பயன்படாத ஆ ராசாவை நீங்கள் கண்டுகொள்ள மறுப்பீர்கள். ராசாவை கடைசிவரை பாதுகாத்து சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது மாலைபோட்டு வரவேற்ற கருணாநிதிக்காக நீங்கள் ஒருநாளும் இப்படி களமாடியதில்லை. ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்புமே சேர்ந்து நின்று மூர்க்கமாக எதிர்த்தபோது அதை அவர்கள் வகுத்த ஆட்டக்களத்தில் அவர்கள் வரையறை செய்த விதிகளுக்கு உட்பட்டு ஆடி வென்று திரும்பிய ஆ ராசாவை நீங்கள் என்றாவது கொண்டாடியதுண்டா? அவரைப்போன்ற நிஜ உலக போராளிகள் பல்லாயிரம் பேரை உருவாக்கி பாதுகாத்த திமுகவை அதன் தாய் அமைப்பான திராவிடர் இயக்கத்தை ஆண்டைகளின் அமைப்பு சூத்திர இயக்கம் தலித் விரோதிகள் என்று முத்திரை குத்திய மூடர் கூடம் அட்டைக்கத்தி ரஞ்சித்துக்காக ரஜினிக்கு காவடி எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆண்டி முத்து ராசாக்களை உருவாக்கி பாதுகாக்கவல்ல ஒரு இயக்கத்துக்கு அசல் எது போலி எது என்றும் தெரியும். உண்மைப்போராளி யார் நிழலுலக அட்டைக்கத்தி எது என்றும் தெரியும். சினிமா ரசிக கும்பல் சினிமாக்காரர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதில் தவறில்லை. அது அவர்களின் உரிமை. அரசியலில் வந்து உங்கள் மொன்னையான அட்டைக்கத்திகளை சுழற்ற வேண்டாம். அதுவும் ரஜினிமாதிரி ஒரு காலிப்பயலுக்காக.

கஞ்சா வியாபரத்தை தட்டி கேட்டதால் கொல்லப்பட்டார்கள்?

அகமுடையார் என்ற தமிழர் , பள்ளர் என்ற தமிழரை கீழ்சாதி என்று செய்த படுகொலையை அம்பலபடுத்த தயங்கும் முற்போக்குகள், அந்த கொலையை செய்தவனை விட சாதிவெறி பிடித்தவர்கள்
thozhar ? ஓவியா
//சிவகெங்கை பகுதியில் கஞ்சா விற்று வந்த பிற்படுத்தப்பட்ட சாதியைத் சேர்ந்த அல்லது சூத்திர சாதியைச் சேர்ந்தவர்களை தட்டிக் கேட்டதற்காக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களை வெட்டியிருக்கிறார்கள் அதில் இரு உயிர்கள் பலியாகி விட்டன என்று செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் எந்த நாளிதழிலும் விரிவான தகவல்கள் இல்லை. எனவே இதனையே நம்பத்தகுந்த செய்தியாகக் கொண்டு சில விசயங்களை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். முதலாவதாக கஞ்சா விற்பதை எதிர்த்து தகராறு செய்தது என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் அதனைச் செய்தார்கள் என்பது அவர்களின் பெருமைக்குரிய செயலாகும். அது ஒரு உண்மையான சமுதாயப் போராட்டமேயாகும். அதில ஈடுபட்ட பெருமையை முன்னுக்கு நிறுத்தாமல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததால் கொலை செய்து விட்டார்கள் என்று நம் நண்பர்கள் எழுதுகிறார்கள். இது தவறு என்பதாக நான் உணர்கிறேன். ஒரு பிரச்சனையின் உண்மைத் தன்மைகளை நாம் வெளிக் கொணர வேண்டும். எழுத்து என்பது அற்புதமான செயல்பாடு. அதன் அருமை உணர்ந்து பயனபடுத்த வேண்டும். தயவுசெய்து இப்படி சொன்னதற்காக பொங்காதீர்கள். இரண்டாவது கஞ்சா விற்பவன் அதனை யார் தடுத்தாலும் இதே வன்முறையை கையாளவே செய்வான்.
 அது பொண்டாட்டி பிள்ளையாக இருந்தால் கூட செய்வான். எனவே சாதி இங்கு அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது.

ரஜினி அப்படி கூறவில்லை : பா.ரஞ்சித் விளக்கம்

வெப்துனியா :போராட்டமே கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை என இயக்குனர் பா. ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். அப்போது ஒருவர் நீங்கள் யார்? 100 கழித்து ஏன் வந்தீர்கள்? என ரஜினியிண்ட நேரிடையாக கேள்வி கேட்டு அவரை அதிர வைத்தார்.<;">இதனால், டிவிட்டர் நான்தான்பா ரஜினிகாந்த் என்கிற ஹேஸ்டேக் மிகவும் வைரலானது. மேலும்,  ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்று செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்தார்.

10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

tamilthehindu :கைரானா தொகுதியில் வென்ற ராஷ்டிரிய லோக்தள் வேட்பாளர் தபசம் ஹசன் < மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா  படம்: ஏஎன்ஐ நான்கு மக்களவை தொகுதி மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. உ.பி.யில் பாஜக வெற்றி பெறுமா அல்லது தொடர்ந்து 3-வது தொகுதியை இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்- உ.பி.யில் சமாஜ்வாதி; கர்நாடாகா, மேகாலயாவில் காங்கிரஸ்; கேரளாவில் சிபிஎம்  இடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி முழு விவரம் - ஒரு பார்வை

4 மக்களவை தொகுதிகள்
1) கைரானா: உ.பி.யில் உள்ள கைரானா மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங்கை, 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஷ்டிரிய லோக்தள் வேட்பாளர் தபசம் ஹசன் அபார வெற்றி பெற்றுள்ளார்.
2)பால்கர்: மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மக்களவை தொகுதியில் பாஜக 29,572 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதனால் பாஜக எளிதில் வென்றது.

கச்சநத்தம் தாக்குதல்... சந்திரசேகர் உயிரழப்பு .. ஏற்கனவே இருவர் உயிரழந்துள்ளனர்

 Chandrasekar who dead in Katchanatham incident was very good in the morning tamil.oneindia.com/authors/lakshmi-priya.: சிவகங்கை: கச்சநத்தம் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சந்திரசேகரன் காலையில் நன்றாக இருந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். இங்கு கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதையடுத்து ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சிலர் கச்சாநத்தம் பகுதியில் உள்ளவர்களை வீடு புகுந்து கடுமையாக தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சந்திரசேகரன் என்பவர் இன்று மதியம் பலியாகிவிட்டார்.

காலையில் நன்றாக இருந்த சந்திரசேகரன் திடீரென மரணித்துவிட்டார் என்பது குறித்து மனித உரிமைகள் ஆர்வலர் எவிடென்ட்ஸ் கதிர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பின்னடைவு,, கைரானா தொகுதியில் RLD தபசும் ஹசன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள் - இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பின்னடைவு maaalailamalar : 4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தங்கள் வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. புதுடெல்லி:
உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார்.

பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகர் இடைத் தேர்தல்.. காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.. வெற்றி உறுதியானது

Congress leads Rajarajeshwarinagar tamil.oneindia.com-veerakumaran.>பெங்களூர்: ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 6வது சுற்று முடிவில், காங்கிரஸ் அபார முன்னிலை வகித்து வருகிறது. அத்தொகுதியில் ஏறத்தாழ காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டது.
கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரிலுள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதால், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை.< இதில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மஜத இணைந்து கூட்டணி அமைத்திருந்தாலும் கூட, ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில், காங்கிரஸ், மஜத தனித்தனியாக களமிறங்கின. பாஜகவுடன் சேர்த்து அங்கு மும்முனை போட்டி நிலவியது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல், காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான, முனிரத்னா முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்றில், முனிரத்னா, 9342 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முனிராஜு கவுடா 4122 வாக்குககளும், மஜத வேட்பாளர் ராமச்சந்திரா 1539 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் இறங்கிவிட்டனர்.

கோட்டையிலே கொலைகாரக் கூட்டம் ! கொந்தளிக்கிறது ஃபேஸ்புக்

வினவு : தூத்துக்குடியில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற அரசின் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பலரும் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு! பாகம் 2 அரசியல் கட்சிகள்  போராட்டங்களை சம்பிரதாயச் சடங்காக மாற்றின. மறுபுறம் அரசு மேலும் மேலும் மிருக பலமும் தடித்த தோலும் உடையதாக, குயுக்தி நிறைந்ததாக மாறியுள்ளது. இதன் காரணமாக போராட்டங்கள் தமது நெருக்கடி தரும் வலுவை இழக்கின்றன.
சூறாவளியாய் எழுகிற தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடுவழியில் திசை தெரியாத கப்பலாய் சிக்கிக்கொள்கின்றன.
ஒரு தொழிற்சாலையை அகற்ற அது அமைந்துள்ள இடத்தின் மக்கள் கூட்டாக தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதே போதுமானதாக இருக்கவேண்டும்.

தமிழறிஞர் ம.லெனின் தங்கப்பா இன்று அதிகாலை புதுச்சேரியில் காலமானார்: தமிழ் அறிஞர்கள் அஞ்சலி

haran - Oneindia Tamil  புதுச்சேரி: புதுச்சேரியில் வாழ்ந்துவந்த பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்கள் 31.05.2018 அதிகாலை 1. 30 மணியளவில் தம் 84 வது வயதில் காலமானார். 
இவர் தமிழுக்கு பல அரிய பணிகள் ஆற்றியுள்ளார். உடல்நலம் குன்றி, மருத்துவம் பார்த்து வந்த பேராசிரியர் தங்கப்பா அவர்கள் மருத்துவம் பயனளிக்காத நிலையில் இயற்கை எய்தியமை தமிழறிஞர் உலகத்தைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களின் ஆசிரியராகவும், இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்பாளியாகவும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும், தெளிதமிழ் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும், பல்வேறு தமிழ்நலம் சார்ந்த போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய செயல்மறவராகவும், வாழ்வியல் பேரறிஞராகவும் விளங்கிய தங்கப்பாவின் பணிகள் தமிழுலகில் என்றும் போற்றத்தக்க பணிகளாகும். 
தமிழ் இலக்கியம் பயின்றவர் தமிழ் இலக்கியம் பயின்றவர் நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டம், குறும்பலாப்பேரியில் 08.03.1934 இல் பிறந்தவர் ம.இலெனின் தங்கப்பா. இவர்தம் பெற்றோர் புலவர் ஆ. மதன பாண்டியன், இரத்தினமணி அம்மையார். தந்தையாரின் இளமைக்கால கல்விப் பயிற்றலில் இயற்கையாகவே தமிழ்ப்புலமை கைவரப் பெற்றவர் தங்கப்பா. பல்வேறு தமிழ் நூல்கள் இளமையிலேயே அறிமுகமாயின. 

15 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி

15 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி தினத்தந்தி :  15 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி உறுதிபட தெரிவித்து உள்ளார். பெங்களூரு, கர்நாடாகவில் கடும் இழுபறிக்கு பிறகு, மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. அங்கு முதல் மந்திரியாக ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி இருந்து வருகிறார். குமாரசாமி முதல் மந்திரியாக பதவி ஏற்றதும், 24 நேரத்துக்குள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று பாஜக கெடு விதித்து இருந்தது.ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்தபின்பு, அமைச்சரவை விரிவாக்கத்துக்குப்பின் முடிவு எடுக்கப்படும் எனக் குமாரசாமி தெரிவித்துவிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக, சில நாட்களுக்கு முன்  முழு அடைப்பு  போராட்டத்துக்கு அழைப்புவிடுத்து இருந்தது. 
இந்நிலையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வது குறித்து பெங்களூரில் குமாரசாமி நிருபர்களுக்கு இன்றுபேட்டி அளித்தார்.

இந்தி நடிகைகளின் சம்பள விபரம் ...பட்டியல் ...

201805310109553988_Deepika-Padukone-Rs-13-crore-salary_SECVPF.gif  கோடி கோடியாக சம்பாதிக்கும் இந்தி நடிகைகள்!!: தீபிகா படுகோனேவுக்கு ரூ.13 கோடி…(புதிய சம்பள பட்டியல்) 201805310109553988 Deepika Padukone Rs 13 crore salary SECVPFகோடி கோடியாக சம்பாதிக்கும் இந்தி நடிகைகள்!!:
வெப்துனியா : தீபிகா படுகோனேவுக்கு ரூ.13 கோடி…(புதிய சம்பள பட்டியல்) s இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருப்பதால் கோடி கோடியாக வசூல் பார்க்கின்றன. இந்தி பேசும் மாநிலங்கள் தவிர தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இந்த படங்களுக்கு வரவேற்பு உள்ளது. குறைந்த பட்சம் ரூ.100 கோடியும் அதிகபட்சம் ரூ.500, கோடியும் வசூலிக்கிறது. ஆங்கிலம், சைனீஸ், ஜப்பான், என்று வேற்று மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு பணம் பார்க்கிறார்கள்.
இதனால் நடிகர்கள் ஒரு படத்துக்கு ரூ.50 கோடி ரூ.60 கோடி என்று சம்பளம் வாங்குகிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்களுக்கும் கதாநாயகர்களுக்கு இணையாக பணம் சேருவதால் நடிகைகளும் சம்பளத்தை இப்போது உயர்த்தி உள்ளனர்.
அதிக சம்பளம் பெறும் 10 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். இவர் நடித்து எதிர்ப்புகளை தாண்டி ஜனவரியில் வந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி செலவில் தயாராகி ரூ.580 கோடிக்கு மேல் வசூலித்தது.

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை

Siva - Oneindia Tamil மதுரை: லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது 
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை. நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சி மூலம் தான் பல வீட்டு குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறுகிறார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது
 விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி கேட்கிறார். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் கள்ளத் தொடர்புகள் குறித்து பேசப்படுகிறது என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.