சனி, 16 ஜூலை, 2016

அருண் ஜெட்லி : எதிர்பார்த்த அந்நிய முதலீடுகள் இன்னும் வரவில்லை ! India yet to see best of private investment : Jaitley

தனியார்துறையின் மூலம் எதிர்பார்த்த முதலீடு இன்னும்வரவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி புலம்பியுள்ளார். மும்பை பங்குச் சந்தை 140-வது வருடத் தை நிறைவு செய்ததை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்துகொண்டு அதற்கான நினைவு தபால்தலை ஒன்றை வெளியிட்டார்.அப்போது பேசிய அவர், அனைத்து பொருளாதார நடவடிக் கைகளின் சாராம்சமும் முதலீட்டில் உள்ளது. பங்குச் சந்தைகள் பல தலைமுறைகளாக பொருளாதாரத்திற்கான வளத் திற்கு பெரிய அளவில் உதவி புரிந்துள்ளதாக கூறிக்கொண்டார். தனியார் துறையின் மூலம்முதலீடு எதிர்பார்த்த அளவு இன்னும் வரவில்லை என்றும் புலம்பினார். சர்வ தேச பொருளாதார நெருக் கடி நீடிக்கும் நிலையில், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட மோடியின் திட்டங்கள் பலன் அளிக்கவில்லை
Finance Minister Arun Jaitley today said India is yet to see the best of private sector investment. “India has grown well in last few years due to public investment and Foreign Direct Investment (FDI) but best of private sector investment is yet to come,” said Mr Jaitley while releasing a Commemorative Postal Stamp on completion of 140 successful years of BSE.

டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவன் சரவணன் கொலைசெய்யப்பட்டார்... தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை..

டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரியில், எம்.டி., படிப்பில் சேர்ந்த ஒரு வாரத்தில், தமிழக மாணவர் சரவணன், மர்மமான முறையில் இறந்தார். இது கொலையே என்ற சந்தேகம் கிளம்பி உள்ள நிலையில், சி.பி.ஐ., விசாரணை கோரி, தமிழகம் முழுவதும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூரைச் சேர்ந்தவர், டாக்டர் சரவணன், 26; மதுரையில், எம்.பி.பி.எஸ்., முடித்த இவருக்கு, எம்.டி., பொது மருத்துவ படிப்பில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்தது. ஜூலை 1ம் தேதி, படிப்பில் சேர்ந்தார். 9ம் தேதி இரவு, மர்மமான முறையில், தன் அறையில் இறந்து கிடந்தார். அவரது அறை திறந்து கிடந்தது; கையில், 'டிரிப்ஸ்' ஏற்றியதற்கான அடையாளமும் இருந்துள்ளது.    எம் டி படிப்புக்கு விலை சுமார் இரண்டு கோடிக்கும் மேலே சில தனியார் மருத்துவ கல்லூரிகளில். அந்த அளவுக்கு வால்யூ உள்ள படிப்பினை தனது அறிவின் ஆற்றலில் பெற்ற மாணவன்..தற்கொலை செய்துகொள்வது என்பது ஏற்பதற்கு முடியாதது. அறிவாற்றல் உள்ள அந்த மருத்துவரை உடனே இங்கே சிலர் கீழான முறையில் விமர்சிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். போதை பழக்கம் உள்ளவரா என்று கிளப்பி விடுவார்கள் இந்த சிந்தனை சிற்பிகள். நிச்சயம் இதிலே அரசியல் பின்னணியோடு கூடிய கொலை செயல் இருக்க சந்தர்ப்பம் உள்ளது. சிறந்த மாணவனை..நல்ல மருத்துவரை இழந்த பெற்றோர்களின் கோரிக்கையை கவனிக்க வேண்டும். படுபாதக செயல் இது..

சிவகங்கை கலெக்டர் மலர்விழி மீது விசாரணை: நீதிமன்றம் உத்தரவு!


நூறு நாள் வேலை திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், அதனால் நாகல் ஊராட்சி தலைவர் ஜெயந்திபாலா மீது நடவடிக்கை வேண்டும் என்றும் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பரில் தமிழரசன் என்பவர் வழக்கு தொடுத்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இந்த வழக்கு தொடர்பாக, வேலூர் கலெக்டர் நந்தகோபாலை ஆஜராகக் கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. அதனால், நந்தகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி தலைமை நீதிபதி கவுல் உத்தரவிட்டார். மேலும் நந்தகோபாலுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையொட்டி ‘கைது நடவடிக்கை வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, தலைமை நீதிபதி கவுல் கைது நடவடிக்கையைத் திரும்ப பெற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான் மாடல் அழகி கந்தீல் பலூச் கொலை Pak model Qandeel Baloch killed by brother


பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மாடல் அழகி கந்தீல் பலூச், கெளரவ கொலைகளின் வெளிப்பாடாக, தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் தைரியமாக தனது புகைப்படங்களை பதிந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச்.>சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள்,
வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வந்தார்.
தன்னை தற்கால நவீன பெண்ணியவாதியாக வர்ணித்துக் கொண்டார். ஆனால், பழமைவாதிகள் அவருடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் தெரிவித்தனர்.

BBC :துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முறியடிப்பு: 200 பேர் பலி

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுக்க நடந்த மோதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள். துருக்கியின் இரு பெரு நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் ஒரே இரவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, 1500க்கும் மேற்பட்ட ஆயுத படையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி அதிபர் ரீஸெப் தாயிப் எர்துவான் தொலைக்காட்சி உரையில், இந்த முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
தன்னுடைய அரசை கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் தேசத்துரோக செயல் என்றும், ராணுவம் சுத்தபடுத்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் பாகுபாடுகளின் ஆலயம்!.. இது வரையிலும் எந்த சமூகத்திற்கு கல்வி கிடைத்து வந்தது?

கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.  : :உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கூட மூப்பு அடிப்படையில் கீழமை நீதிமன்றத்திலிருந்து ஒருவர் பணியுயர்வு பெற்றுவிடலாம். ஆனால், இங்கே வழக்கறிஞராக தொழில் நடத்துவது தான் கடினம். ஏனென்றால், உச்ச நீதிமன்ற விதிகளின் படி இந்நீதிமன்றம் ஆண்டுதோறும் நடத்தும் “அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட்” தேர்வில் தேர்ச்சியடையும் வழக்கறிஞர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுக்கவும் வாதாடவும் முடியும் என்ற நிலை இருந்தது. அட்வகேட்-ஆன்-ரெகார்ட் என்பதை தமிழில் “பதிவிலிருக்கும் வழக்கறிஞர்” என்று பொருள் கொள்ளலாம். பின்னர், 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி, வழக்கறிஞர்கள் சட்டம், 1961 நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு, எந்தவொரு வழக்கறிஞரும் உச்ச நீதிமன்றம் உட்பட இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தும் உரிமை வழங்கும் அச்சட்டத்தின் பிரிவு 30 அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியின் முயற்சியின் விளைவாக அரசிதழில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

“பியூஷை சிறையில் முப்பது காவலர்கள் தாக்கியிருக்கின்றன

சேலத்தில், பொதுமக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்கப்படாமல், முள்வாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாகக் கூறி கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில், சூழலியல் செயற்பாட்டாளர் மற்றும் சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் மற்றும் கார்த்திக், முத்து ஆகியோரை கடந்த ஜூலை 8ஆம் தேதி, சேலம் டவுன் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
இதில், கார்த்திக் மற்றும் முத்துவுக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்டு விட்டது. பியூஷிக்கு பிணை வழங்க காவலர்கள் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர். அதனால் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுவிட்டது.

துருக்கியில் ராணுவ ஆட்சி அமுல்..விமான நிலையங்கள் இணையதளங்கள் செயலிழந்தன.. பிரதமர் ஓட்டம்?


துருக்கி: துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி ஒன்றில் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் துருக்கி தலைநகர் அங்காராவில் அரசு மாளிகை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் ராணுவ நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது என அந்நாட்டு பிரதமர் பின்னாலி எல்டரீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகிங் கொடுமையால் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற....

சேலம், சேலத்தில் உள்ளாடையுடன் நடனம் ஆட சொல்லி ‘ராக்கிங்’ செய்த விவகாரத்தில் தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்லூரி வார்டன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவர் சேலம் உடையாப்பட்டி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவ–மாணவிகள் தங்கி படிப்பதற்காக தனித்தனியே விடுதி வசதி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 18) என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

Rose Valley Group மோசடி .... 15,000 கோடிகள், 150 கார்கள், 700 ஏக்கர்கள்,23 ஹோட்டல்கள், 3,078 வங்கிக் கணக்குகள்

12 மாநிலங்களில் 700 ஏக்கர் நிலம், 23 ஹோட்டல், 150 கார்கள், 900 நிறுவன கிளைகள் மற்றும் 3,078 வங்கிக் கணக்குகள் 
இந்தியாவை உலுக்கிய சாரதா நிறுவன மோசடிகளில் இருந்து இன்னமும் மீளாத மக்களுக்கு ரோஸ் வேலி குரூப் நிறுவனத்தின் மோசடி மக்கள் மனத்தில் நீங்கா வடுவாய் அமைந்துள்ளது. ரோஸ் வேலி குரூப் நிறுவனம் இந்தியாவில் ஹோட்டல், ரியல் எஸ்டேட் மற்றும் எண்டர்டெயின்மென்ட் துறையில் போலி முதலீட்டுத் திட்டங்களின் மூலம் மக்களிடம் சுமார் 15,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளது. இது சாரதா நிறுவனத்தை விடவும் 6 மடங்கு அதிகமாகும்.
ரோஸ் வேலி குரூப் சாரதா நிறுவன மோசடிகள் வெளியான அடுத்தச் சில நாட்களிலேயே இந்நிறுவனத்தின் சாயம் வெளுக்கத் துவங்கியது. இதனைச் சுதாரித்த அமலாக்க இயக்குநரகம் இந்நிறுவனத் தலைவர் கெளதம் குந்து-ஐ கடந்த மார்ச் 25ஆம் தேதி கைது செய்யதனர்.

ஆங்கிலத்தில் பேச முடியாததால் தீக்குளித்த பி.காம் மாணவி.. தொடரும் மாணவர்களின் தற்கொலைகள்

கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்திற்காக, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பி.காம் மாணவி ஒருவர். " ஆங்கில மோகத்தின் உச்சகட்ட அவலம் இது. தாய்மொழியில் படித்தால் அவமானம் எனக் கற்பிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" எனக் கவலையோடு பேசுகின்றனர் கல்வியாளர்கள். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் மாணவி ராஜலட்சுமி. மிகுந்த வறுமைச் சூழலுக்கு இடையில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். முழுக்க தமிழ் வழிக் கல்வியில் படித்தவருக்கு, கல்லூரியின் ஆங்கிலச் சூழல் ஒத்துவரவில்லை. சக மாணவ, மாணவிகளிடையே சரளமான ஆங்கிலத்தில் பேச முடியாமல் வேதனைப்பட்டு வந்திருக்கிறார். நேற்று ராஜலட்சுமியின் தாய் சுசீலா வேலைக்குச் சென்றதும், வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் மாணவி.

வெள்ளி, 15 ஜூலை, 2016

நீதித்துறையின் அடாவடித்தனம்! வழக்கறிஞர்களின் போராட்டம்!...

lawyers-struggle-salem-rallyநீதித்துறை தானே முகங்கொடுக்க வேண்டிய, தீர்வு காணவேண்டிய பொறுப்புகள், கடமைகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கன்றன. உச்சநீதி, உயர்நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள், கீழமை நீதிமன்றங்களில் பல இலட்சம் வழக்குகள் பல ஆண்டு காலமாகத் தேங்கிக் கிடக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளை, உத்தரவுகளை மத்திய-மாநில அதிகாரிகளும் ஆட்சியாளர்களும், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும், இயற்கை வளக் கொள்ளையர்களும் அவர்களின் கிரிமினல் குற்றக் கும்பல்களும் சாதி, மதவெறியர்களும் மதிப்பதேயில்லை. இந்த நிலையில் நீதித்துறையின் மீது காலனிய காலத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி கேட்கவே கூடாத புனிதத் தோற்றம் உடைந்து நொறுங்குகிறது. இதற்குக் காரணமும் பொறுப்பும் நீதித்துறைதான். ஆனால், தான் மதிப்பிழந்து போவதையும் தனது சரிவையும் தடுக்க முடியாத நீதித்துறை, அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக நீதிமன்ற (வளாகத்தின்) கண்ணியத்தையும் மாண்பையும் காக்கும் திருப்பணியை மேற்கொண்டுள்ளது.   கபாலிக்கு காவடி தூக்கும் நீதித்துறை .. லேடஸ்ட் வியாபாரம் அல்லது விபசாரம்

ஜெகத் ரட்சகனை 3 நாட்கள் வீட்டில் முடக்கி ... பாஜகவின் அரசியல்.. 570 கோடி காண்டேயினர்...நிசப்தம்

கலைஞர் முகநூல்  : திரு.ஜெகத்ரட்சகன் அவர்கள் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித் துறையினரின் நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது!
வருமான வரித் துறை சோதனை என்ற பெயரில் மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகனை இல்லத்தில் சிறைக் கைதி போல் அடைத்து வைத்திருப்பது முறைதானா?
திரு.ஜெகத்ரட்சகன் அவர்கள் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகக் கூறி மூன்று நாட்களாக அவரை சிறைக்கைதி போல வீட்டி லேயே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
வருமான வரித்துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ, அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை.
ஆனால், திரு. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள் வதாகக் கூறி அனைத்து இடங்களிலும் அதிகாரி களை அனுப்பிய பிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகன் அவர்களை, அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும் ((illegal Detention). வருமான வரித் துறையினரின் இத்த கைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

84 பேரைக்கொன்ற பயங்கரவாதியின் அடையாளத்தை பிரெஞ்சு காவல்துறை வெளியிட்டுள்ளது

பிரான்ஸின் கடலோர நகரான நீஸில் கூட்டத்துக்குள் கனரக லாரியை ஏற்றி 84 பேரைக்கொன்று தாங்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதலாளியின் அடையாளத்தை பிரெஞ்சு காவல்துறை வெளியிட்டுள்ளது.
வாகன ஓட்டியின் பெயர் மொஹம்மட் லுஹ்வாஸ் ஃபூலெல் என்று பிரெஞ்ச் ஊடகங்கள் கூறுகின்றன. 31 வயதான அவர் துனிஷிய நாட்டைச்சேர்ந்தவர் என்று காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அவர் உள்ளூரில் வசித்தவர். அவரது அடையாள அட்டை கிடைத்துள்ளது. நீஸிலிருக்கும் அவர் வீட்டில் காவலர் சோதனையிடுகிறார்கள்.
இவர் சிறு குற்றங்கள் செய்பவர் என்று காவல்துறைக்கு ஏற்கனவே தெரியுமென காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் தீவிரவாத குழுக்களோடு தொடர்பு இருந்ததாக காவல்துறைக்கு தெரியாது என்பதால் பிரெஞ்சு புலனாய்வுத்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் இவர் வைக்கப்படவில்லை.

நீதிமன்றத்தை ஹைஜாக் செய்த கபாலி ( மயிலாப்பூர் கபாலிஸ்வரர்?)... 200 வெப்சைட்களுக்கு நீதிமன்றம் தடை.. பிளாக் டிக்கட் விற்பனைக்கு தடையில்லை

கபாலி திரைப்பட குழுவினர் தொடர்ந்த வழக்கு: 200க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க ஐகோர்ட் உத்தரவு கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் முழுபடமும் வெளியாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி படக்குழுவினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது படக்குழுவினர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கபாலி படம் டிஜிட்டலில் வெளியாவதால், படம் வெளிவந்த 5 முதல் 10 நிமிடத்திலேயே இணையதளத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இணையதளங்களை தடை செய்தால், அவை வேறு பெயர்களில் மறுபடியும் உலா வருகிறது. இதனை தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். படக்குவினரின் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கபாலி திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களை முடக்கவும், அனுமதியின்றி இயக்கும் 200க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

IIT ஐஐடி தற்கொலைகளில் 90% பேர் தலித், பழங்குடியின மாணவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளில் உயர்கல்விக் கூடங்களில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. ஐஐடிகளில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% பேர் தலித் பழங்குடியின மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல், பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. ஐஐடிகளில் மாணவர்களின் தற்கொலை விகிதம் 18% சதவீதம் வருடாவருடம் அதிகரிக்கிறது. ஹைதராபாத் பல்கலையில் மட்டும் எட்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் (2010-15) ஐஐடி சென்னையில் 10 மாணவர் இறந்திருக்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ஐஐடி கான்பூரில் 8 தற்கொலைகள் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளது.
பட்டியலைப் பாருங்கள்.
1) Chuni Kotal, 16th August, 1992, the first female graduate from the Lodha tribe in West Bengal, Masters course (M.Sc.) at the local Vidyasagar University.
2) Rejani S. Anand, 22nd July, 2004, a student of Institute of Human Resource Development (IHRD) Engineering College at Adoor in South Kerala.

ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் கைதின் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ராம்குமார் கைதில் காவல்துறை சொன்ன தகவல்களில் உள்ள ஓட்டைகள் குறித்து சாமானியனுக்கும் ஏக சந்தேகம் வந்தது. ஊடகங்கள் கேட்க மறுத்த கேள்விகளை சமூக ஊடகங்கள் முன்வைத்தன.
இதைப் படியுங்கள்:  ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்…
ஒருபுறம் இந்தக் கொலைக்கு பிலால் என்பவர்தான் காரணம் என இந்துத்துவ ஆதரவு பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பரப்பினர். இன்னொரு புறம் இந்துத்துவ ஆதரவு வழக்கறிஞர் தாமாக முன்வந்து ராம்குமாருக்கு வாதாடப் போவதாக அறிவித்தார். பிறகு, பின்வாங்கினார்.

பிரான்ஸ் லாரி தாக்குதலில் 84 பலி.. கொலையாளி துனிசியா இஸ்லாமிய பயங்கரவாதி முஹமத் லாஹ்னாஜ் புஹேலேல் .......

Nice attack killer: Mohamed Lahouaiej Bouhlel identified as terrorist behind Bastille Day massacre
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் லாரியால் மோதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தீவிரவாதத்தை ஒத்த தாக்குதல் என்று கூறியுள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே, "நைஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாதம் என்பதை மறுப்பதற்கில்லை" என்றார். பிரான்ஸ் நாட்டு உள்துறை செய்தித் தொடர்பாளர் பியர் ஹென்ரி பிராண்டெட் கூறும்போது, "நீஸ் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் வேகமாக டிரக்கை (கனரக லாரி) ஓட்டி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்றார். பிரான்ஸ் நாட்டில் நீஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பொதுநிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லாரியை அதிவேகமாக செலுத்தியதில் 80 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

பிரான்ஸ்: கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல்; 75 பேர் பலி


பிரான்சில் நைஸ் நகரில் பயங்கரவாதி ஒருவன் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லாரியை ஏற்றியதில், 75 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். >பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நைஸ் நகரில் நடந்த வாண வேடிக்கையை காண மக்கள் பலர் குழுமியிருந்தனர். இந்நிலையில் திடீரென வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, மக்கள் குழுமியிருந்த கூட்டத்தை நோக்கி பாய்ந்தது. இத்தாக்குதலில் 75 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிக வேகத்தில் வந்து கூட்டத்தில் 2 கி.மீ., வரை லாரியை செலுத்தியதாகவும், பின் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரைவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. >இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், கண்டய்னர் லாரியில் கையெறி குண்டுகளும், ஆயுதங்களும் இருந்ததாகம் நைஸ் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.  dinamalar.com

வியாழன், 14 ஜூலை, 2016

மிருகத்தனமாக அடித்த போலீசை பதவிநீக்குக ! அடிவாங்கிய தலித் குடும்பம் அதிரடி கோரிக்கை ~

எங்களை தாக்கிய காவலர்கள் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்யாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்” பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ராஜா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்த ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை செங்கம்- போளூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதோடு, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள் நம்மாழ்வார் அந்த வழியாக வந்தார். அவர் தகராறு குறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார். இது குடும்ப தகராறு இதில் போலீசார் தலையிட வேண்டாம் என்று ராஜா கூறியுள்ளார்.

திருமாவளவன் : காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்

காஷ்மீர் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஜனநாயக விரோத வன்முறைத் தாக்குதல்களை மத்தியஅரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக ராணுவத்தாலும் துணை ராணுவப் படைகளாலும் அந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையில் 30க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுவாதி ரம்ஜான் நோன்பு இருந்தாரா? பிலால் மாலிக்தான் குற்றவாளி என்று YGM ஏன் ?

ராம்குமார் பற்றி பிலால் போலீஸில் சொன்னது என்ன? சுவாதி வழக்கில் பிலால் முக்கிய சாட்சி என்பதால் ராம்குமார் பற்றி அவர் சொன்ன தகவலை வெளியிட முடியாது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே பிலாலுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம் என்று தனிப்படை விசாரணை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவரை நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.அவரிடம் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ( முகநூல் உபயம்: திலீபன் மகேந்திரன் : ஸ்வாதிக்கு ஏற்கனவே திருமணம் ஆயிடுச்சி, ரிஜிஸ்ட்டர் மேரேஜ். இந்த பொன்னு போன மாசம் நோம்பும் இருந்திருக்கு...
ஸ்வாதியின் தந்தை சந்தான கோபலகிருஷ்ணன். RSS- இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்.
ஸ்வாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்.
ஸ்வாதி போன மாசம் நோம்பு இருந்திருக்கு...
ஸ்வாதிய ஒரு வாரம் முன்பு சிவப்பா, உயரமா செவுள்ளையே அறைஞ்சிருக்கான்.
கொலை செய்த இடத்தில் அப்பா ரியக்‌ஷன் சரியில்ல, சித்தப்பா போட்டோ புடிச்சி யாருக்கோ அனுப்பிட்டு இருந்தாரு
எங்கையும் பிசிரடிக்கல.. கரைக்டா சிங் ஆகுது..

நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ்... உலகம் முழுதும் எத்தனை ஐ எஸ் ஐ எஸ்?

சங் பரிவாரங்களின் கொள்கைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேகமாக வளர்ந்து வருவதாக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஊடகப் பிரிவு தலைவர் மன்மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 45, 000லிருந்து 57, 000மாக சாகாக்களின் எண்ணிக்கை உயந்துள்ளது, தங்களின் கொள்கைகள் மக்களைச் சென்றடைந்துள்ளதைக் காட்டுகிறது என்கிறார் இவர். ஆர் எஸ் எஸ்ஸின் பிராந்திய தலைவர்களின் கூட்டம் கான்பூரில் ஜுலை 11 முதல் 15 நடக்கிறது. இதையொட்டிய செய்தியாளர் சந்திப்பில் வைத்தியா பேசினார். கிராமப்புற மக்களை சென்றடைய  குறிப்பாக கேரளத்தில் இந்த முயற்சியை வேகமாக செயல்படுத்த இருப்பதாகவும் அவர் சொல்கிறார். thetimestamil.com

கந்தமாலில் கொலை செய்யப்பட்டுள்ள 5 பேரும், காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ள 31 பேரும்

ஜோஸ்வா ஐசக் ஆசாத்< ஜூலை 8ஆம் தேதி மாலை காஷ்மீரில் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட அதே நேரத்தில் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம் துமுதிபந்த் கோட்டத்தில் இருக்கும் குமுதுமகா என்னும் கிராமத்தில் 5 தலித், ஆதிவாசிகள் மத்திய மாநில படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2 வயது குழந்தை உட்பட 1 ஆண், 3 பெண்கள் அடங்குவர். பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்திற்கு சென்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள்.
குமுதுமகா கிராமத்திற்கு அருகே 16 பேரோடு அவர்கள் பயணம் செய்த ஆட்டோவின் சக்கரம் பெய்துக் கொண்டிருந்த மழையால் சேற்றில் சிக்கிக் கொண்டது. அதை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மறைந்திருந்த அரச படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலைகளை அரங்கேற்றியுள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் மாணவர் சரவணின் மர்ம மரணம்

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த பயிற்சி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறப்பு குறித்து  சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,
“மாணவர் சரவணன் மரணத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவுன்சிலர்களே இனி மேயர்களை தெரிவுசெய்வார்கள்....கோடிகள் கைமாறும்.. இங்கே கவுன்சிலர்கள் விற்கப்படும் வாங்கப்படும்

கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்வுக்கு ஒரு வாக்கும், மேயர் தேர்வுக்கு ஒரு வாக்கும் வாக்காளர்கள் பதிவு செய்வார்கள். ஆனால், தற்போது சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது இந்த முறையை மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டது. அதாவது மாநகராட்சி மேயரை மக்களே தேர்வு செய்யும் முறையை மாற்றி, கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மேலும் நகராட்சிகள் சட்டத்தில் 2011ஆம் ஆண்டு அடிப்படையில், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டத்திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இச்சட்டத் திருத்தங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. minnambalam.com

தமிழக விரோதி வெங்கையா நாயுடுவை டிஸ்மிஸ் செய்ய மணியரசன் வலியுறுத்தல்

Modi should dismiss Venkaiah Naidu, demands Maniyarasanசென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராக செயல்படும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மணியரசன் வெளியிட்ட அறிக்கை:

இந்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, 10.07.2016 அன்று பெங்களுருவில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில், "காவிரிச் சிக்கலில் கர்நாடகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவேன்" என்று பேசியுள்ளார். இதன் பொருள் என்ன? காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பையும் அதை ஏற்று செயல்படுத்தும்படி கட்டளையிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கும் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்கு ஆதரவாக வெங்கையா நாயுடு நடந்து கொள்வார் என்பதே இதன் பொருளாகும். ஏற்கெனவே, அவர் அப்படித்தான் நடந்து வருகிறார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அனைத்துக் கட்சிக் குழுவினர் ஓராண்டுக்கு முன், தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்த போது, அக்குழுவில் வெங்கையா நாயுடுவும் இருந்தார்.

உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 பேருக்குள் ஷாருக் கான் அக்சய்குமார்...

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2016-ஆம் ஆண்டில் அதிக சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் இந்த ஜூன் வரை ஒரு வருடத்தில் அதிகம் சம்பாத்தித்த 100 பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க பாடகர் டெய்லர் ஸ்விப்ட், கடந்த வருடத்தில் ரூ.1141 கோடி வருமானம் ஈட்டி முதல் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர் இரண்டாவது இடத்தையும், எழுத்தாளர் ஜேம்ஸ் பீட்டர்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகர் ஜாக்கிசான் ரூ.409 கோடி வருமானம் ஈட்டி 21-வது இடத்த்தை பிடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ஆண்டிற்கு ரூ.221 கோடி வருமானம் ஈட்டி ஷாருக்கான் 86-வது இடத்தையும், ரூ.211 கோடி வருமானத்துடன் அக்ஷய் குமார் 94-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  தினமணி.காம்

பியுஷ் மனுஷ் ... 53 ஏக்கர் மூகநேரியை மீட்டெடுத்த சாதனையாளர்


யார் இந்த பியூஸ் மனுஷ்?
– ஒரு காலத்தில் குப்பைகளாலும், கழிவுகளாலும் அழிந்து போன 53 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார்
குறிப்பு: சென்னையில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள சேத்துப்பட்டு ஏரியினை புனரமைக்க அரசாங்கம் செலவழித்த தொகை 43 கோடி.
– தர்மபுரியில் வற்றிப்போன எட்டிமரத்துப்பட்டியில் உள்ள ஓடையை, அதன் அருகில் நூற்றைம்பது ஏக்கர் பரப்பளவில் காட்டை வளர்த்து, அதிக அளவில் மழை சேகரிப்பு குட்டைகளும், குழிகளும் தோண்டி மழை நீரை சேமித்து இன்று வருடம் முழுவதும், எந்த ஒரு வறட்சியிலும் நீர் ஓடும் வற்றாத ஓடையாக மாற்றியுள்ளார். இதன் மூலம் பாசனத்திற்காக நீர் பெரும் கிராமங்களின் எண்ணிக்கை 17.

23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் , தனி வீடுகள் கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதி


குடிசை மாற்றுவாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"சென்னை மற்றும் பிற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ஆகியவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் 59,023 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளது. மேலும், 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 7,513 தனி வீடுகள் என 10,537 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

சென்னை ஐ.ஐ.டியில் மாணவியும் பேராசிரியையும் தூக்கிட்டு தற்கொலை!


இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி முக்கியமானது. இங்கு கல்வி கற்பதென்பது பலரின் கனவு. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் ஐ.ஐ.டி வளாகத்தினுள் உள்ள குடியிருப்பில் இரு பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி-யில் புதுச்சேரியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. தத்துவவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர், ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் நேற்று புதன்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேசமயத்தில் ஐ.ஐ.டி-யில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் கணேசன் என்பவரின் மனைவியான விஜயலட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கமல்ஹாசன் மருத்தவ மனையில் அனுமதி.. மாடிப்படியில் தடுக்கி விழுந்து....


நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தின் படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும், கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சில வாரம் ஓய்வில் இருப்பார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தன் அடுத்த படமான சபாஷ் நாயுடுவின் ஷூட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். 42 நிமிடங்களுக்கான காட்சிகளை படமாக்கிவிட்டு, கடந்த வாரம் தான், அமெரிக்காவில் இருந்து, இந்தியா வந்தார் கமல்ஹாசன்.மூன்று மொழிகளில் படமாக்கப்படும் 'சபாஷ் நாயுடு'வில், கமலுடன் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விகடன்.காம்

புதன், 13 ஜூலை, 2016

எம்.ஜி.ஆர்' விஜயன் கொலை வழக்கு..ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை..!

;எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது. இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதலில் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கருணா என்ற போலீஸ்காரர் இந்த கூலிப்படையை அமர்த்தி கொலைக்கு உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.

கட்சிப்பணம் 500 கோடியை கொள்ளை அடித்த விஜயகாந்தை கறைபடியாத கரம் என்று துதி பாடிய கம்யுனிஸ்டுகள்

cpi-cpm-kickedதே.மு.தி.க.வின் 14 மாவட்டச் செயலாளர்கள், விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அக்கடிதம், தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. “2005 முதல் 2016 வரை கட்சி நிதி, நன்கொடை, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் – என 500 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்த பணம் என்னவானது? கட்சிக்கு வரும் நன்கொடைகளை டிரஸ்ட் பெயரில் வாங்கினீர்கள். அந்த டிரஸ்டில் இருப்பது விஜயகாந்த், பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகிய மூன்று பேர் மட்டும்தான்” என்று அம்பலப்படுத்தும் இந்தக் கடிதம் இப்போது ஊடகங்களில் பரபரப்பாகியுள்ளது.
மிழகத்தில் மூன்றாவதுஅணி என்ற பெயரில் அழைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி மற்றும் விஜயகாந்த் கட்சி, வாசன் கட்சி ஆகியன இணைந்த கூட்டணியானது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவமானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி கம்யூனிஸ்டுகள் இத்தேர்தலில் வெறும் 0.8 சதவீத வாக்குகளைப் பெற்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டார்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தைப் பார்த்து அனுதாபப்படுவதைப் போல போலி கம்யூனிஸ்டுகளின் இந்தக் கேவலமான தேர்தல் தோல்வியையும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போயுள்ளதையும் கண்டு முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு பலரும் பரிதாபப்பட்டு அங்கலாய்ப்பதோடு, ஆலோசனைகளையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கை, தத்துவம், அரசியல், இசம், ஜனநாயகம் புடலங்காய் அனைத்தும் அண்ணனே தீர்மானிப்பார்

நாம் தமிழர் கட்சி சிமான
கட்அவுட் நடிகர்களுக்கு பீராலும், பாலாலும் அபிஷேகம் செய்த தமிழ் மண்ணில் சீமான் எனும் ‘இலட்சியப் போராளியின்’ ‘தமிழர் தத்துவ’ அரசியலுக்கு சில இளைஞர்களாவது செல்வது ஆரோக்கியமல்லவா என்றார் ஒரு நாம் தமிழர் தம்பி! அந்த ஆரோக்கியத்தை ஆய்வக சோதனைக்கு அனுப்பிப் பார்ப்போமா?

நாம் தமிழர் கட்சி சிமானுக்கு சொந்தமா, தம்பிகளுக்கு சொந்தமா ?
சி.பி.எம் கட்சியின் அருணனுடன் சீமான் நடத்திய “யார் லூசு” எனும் ‘வரலாற்றுச் சிறப்பு’மிக்க நிகழ்ச்சியை நினைவுபடுத்துங்கள்! பாண்டேவின் கள்ளச்சிரிப்புக்கிடையில் சீமான் சவால் விடுகிறார், “மக்கள் நலக்கூட்டணி எங்களை விட அதிக வாக்குகளைப் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சி.பி.எம்-இல் சேருகிறேன்” என்றார்! தேர்தல் முடிந்ததும் யாரும் இந்த சவாலை முன்னிட்டு சீமானை துன்புறுத்தவில்லை, பாவம் பிழைத்து போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். சீமானின் தம்பிகளோ அண்ணன் ஒரு ஃபுளோவுல பொங்கிட்டார், இதெல்லாம் ஒரு மேட்டரா என்று ஜகா வாங்கினார்கள்.

ஜெகத்ரட்ச்சகனின் 40 இடங்களில் வருமான வரி சோதனை

இன்று (ஜூலை 13ஆம் தேதி) அதிகாலை அதிரடி சோதனையை நிச்சயம் அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திடுதிப்பென ஆனால், திட்டமிடலோடு முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்த இது, திமுக மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஜெகத்ரட்சகன் வீடு, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், மதுபான ஆலை, கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள பாரத் பல்கலைக்கழகம், தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதி, தி.நகர் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனைக்கு... காசு கொடுத்து நோயை வாங்குங்க


சென்னை பொது அஞ்சலகம் மற்றும் தலைமை அஞ்சலகங்களில், நேற்று முதல், பாட்டில்களில் அடைக்கப்பட்ட, புனித(அசுத்த) கங்கை நீர் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய சில மணிநேரங்களில், அனைத்து பாஜகவினர் வாங்கியதால் அணைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்தன. மத்திய அரசு அறிமுகம் : புனித கங்கை நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, அஞ்சலகங்கள் வாயிலாக விற்பனை செய்யும் திட்டத்தை, சில நாட்களுக்கு முன், மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், சென்னை பொது அஞ்சலகம் மற்றும் தலைமை அஞ்சலகங்களில், நேற்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டது.  உலகின் மிகவும் மோசமான மாசடைந்த நீராக அது மாறின விபரம் கூட காவிகளுக்கு தெரியல

சாதியை காரணம் காட்டி ஆசிரியையை தள்ளி வைக்கும் தலைமை ஆசிரியன்

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா என்ற ஆசிரியை, கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.
நியூஸ் 7 செய்திப்படி,  ஆசிரியை ரோஜாவின் சாதியை காரணம் காட்டி, அவரது வகுப்பிற்கு மாணவர்களை அனுப்பாமல் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இதெல்லாம் இந்தியா ஒரு  வல்லரசு ஆகிவருவதன் அடையாளமப்பா...

பாலாறு அணை உயர்த்தப்படுகிறது.. ஆந்திராவின் அடாவடியை தடுக்க தவறும் தமிழக அரசு.. கலைஞர் எச்சரிக்கை

பற்றியெரியத் தொடங்கியுள்ளது பாலாற்று உரிமைப் பிரச்னை. இதுகுறித்து, மிகக் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி. அதில் தெரிவித்துள்ளதாவது: ‘1892இல், மெட்ராஸ் அரசாங்கத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில், பட்டியல் “ஏ” இணைப்பின்படி துங்கபத்ரா, வட பெண்ணை, தென் பெண்ணை, பாலாறு, காவிரி உள்ளிட்ட 15 ஆறுகளின் மேற்பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளின் உயரத்தையும், பரப்பளவையும் பராமரிப்பு என்ற பெயரில் அதிகரிக்கக் கூடாது. அதன் பாசன பரப்பளவையும் அதிகரிக்கக் கூடாது. மேலும், கீழ்ப்பகுதியில் பாசனம் பெறும் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் கட்டித் தண்ணீரை வேறுபகுதிக்கு திசை திருப்பக்கூடாது மற்றும் தேக்கிவைப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், தமிழக அரசின் எந்த முன்அனுமதியும் இல்லாமல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணை கட்டி, அதைக் கண்டித்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அப்போது அணை கட்ட தடைவிதிக்கப்பட்டது.

சத்தம் போடாமல் உதவி செய்யும் ஹன்சிகா மொத்வாணி


நடிகை ஹன்சிகா மொத்வானி சாலையோரம் வசிப்போருக்கு உதவி செய்யும் காட்சிகள், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் தூங்குவோருக்கு ஹன்சிகா போர்வையும், குடிநீர் பாட்டில் வழங்கியுள்ளார். தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பாமலேயே, அவர்களுக்கு அருகில் போர்வையும், குடிநீர் பாட்டிலையும் வைக்கிறார். விழித்திப்பவர்களிடம் அவர்களின் கையில் போர்வையும், குடிநீர் பாட்டிலையும் கொடுத்தார். ஹன்சிகா ஏற்கனே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் வங்கதில் மையம் கொண்டிருக்கும் பூகம்ப ஆபத்து..

வங்கதேசத்தை மையமாகக் கொண்டு மிக பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பூகம்ப அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கதேசமும் கிழக்கு இந்தியாவும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப் படுகைகள் மீது அமைந்துள்ளன. இந்த பகுதிகள் நிலநடுக்கத்தை தாங்க முடியாத லேசான பகுதிகள். New, Massive Earthquake Threat Could Lurk Under South Asia தற்போது இந்த பகுதிகளில் கீழே உள்ள டெக்கானிக் பிளேட் எனப்படும் தட்டுகளின் அழுத்தம் மிகவும் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்கின்றனர் புவியியல் ஆய்வாளர்கள். இதனால் மிக பயங்கரமான பூகம்பம் ஒன்று ரிக்டரில் 8.2 முதல் 9 அல்லது 9-க்கும் அதிகமான அளவுக்கு பதிவாகும் அபாயம் உள்ளது.

முன்னாள் சிபி ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீதி சுரங்க ஒதுக்கீடு ஊழல்....

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டோரை, அப்போது, சி.பி.ஐ., இயக்குனராக இருந்த ரஞ்சித் சின்ஹா சந்தித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, < சி.பி.ஐ., விசாரணைகளில் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை கண்டறிய, சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் எம்.எல்.சர்மா தலைமையில், விசாரணைக்குழுவை, சுப்ரீம் கோர்ட்அமைத்தது. இந்நிலையில், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மதன் லோகுர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று ஆஜராகி கூறியதாவது: எம்.எல்.சர்மா தலைமையிலான விசாரணைக்குழு, சீலிட்ட உறையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ரஞ்சித்சின்ஹாவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

திருவண்ணாமலையில் தலித் குடும்பத்தை பந்தாடிய ஜெயா போலீஸ்

காவல் துறையினர் யாரோ மூன்று தலித்துகளை அதுவும் துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்தினரை அடித்ததை சிலர் கண்டிக்கின்றனர். அதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.
ரோட்டில் வைத்து அடிக்கக் கூடாதாம்.
வேறு எங்கு வைத்து அடிப்பது?
ரூம் போட்டா அடிக்க முடியும்?
காவல்துறையினர் வேலை அடிப்பது தான்.
உங்களுக்குத் தெரியாதா?
தலித்துகளின் தலையை நீங்கள் வெட்டலாம்.
அவர்கள் அடிக்கக் கூடாதா?
தலித்துகளை நீங்கள் பலாத்காரம் செய்யலாம்.
அவர்கள் லேசாகத் தட்டக்கூடாதா?
வேதத்தில் சொல்லியிருக்கிறது. மத்தளத்தை, பெண்களை, சூத்திரர்களை அடிக்கலாம் என்று.
அவர்கள் என்ன உயர் சாதி மக்களையா அடித்தனர்?
அதனால் தான் எச். ராஜா குரல் கொடுக்கவில்லை.
அதனால் தான் நீதிபதி அய்யாவே மனுவைத் தள்ளுபடி பண்ணிவிட்டார்.
இப்போது புரிகிறதா?
போய் மோடியின் காஸ்ட்யூமை ரசியுங்கள்.  Amudhan Ramalingam Pushpam Facebook

செவ்வாய், 12 ஜூலை, 2016

எம்.ஆர்.ராதா - கலக்காரனின் கதை - ஒரு பகுத்தறிவு கலைஞரின் கதை ..முகில்

பொதுவாக தனிமனிதர்கள், தொழில் முனைந்து வெற்றிபெற்ற பெரும் வியாபாரிகள், பெரும் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்ட பொது வெற்றி பெற்ற நபர்கள் சார்ந்து வெளிவரும் புத்தகங்கள் ஒருவகையில் சுயமுன்னேற்ற புத்தக வகைமையில்தான் வரும். ஆனால் கலைஞர்கள் வாழ்க்கை தொடர்பாக வெளிவரும் புத்தகங்களை அவ்வகையில் நாம் சேர்த்துவிட முடியாது. சிஸ்த்சென்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை எனும் நூலை முதல் வகைப்பாட்டில் சேர்த்துவிட முடியாது. பொதுவாக ஒரு கலைஞன் தன்னுடைய பால்ய வயதிலேயே பெரும் பக்குவப்பட்டு பொதுப்புத்தி சமன்பாடுகளை உதறித் தள்ளி சமூகத்தின் பழமைவாதங்களில் விடுபட்டு, சமூக முன்னேற்றத்தை கோரும் வாழ்க்கைமுறையை பெற்றுவிடுகிறான்.

ஒழிவு திவச களி... சின்னஞ்சிறு பட்ஜெட்டில் பிரமாண்ட சாதனை .. எஸ்கேப் திரையரங்கில் இரவு 10.05 காட்சி

Sruti Harihara Subramanian : ஒழிவு திவஸதேக் களி (Ozhivu Divasaththe Kali)
மலையாளத்திலும், கன்னடத்திலும் சினிமா ஒரு முதலீட்டைக் கோரும் கலை என்பதை தாண்டி, அந்த முதலீட்டை தாண்டி சினிமா எப்படிக் கலையாக மாறுகிறது என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் கன்னடத்தில் வெளியான திதி படமும், தற்போது மலையாளத்தில் வெளியாகியிருக்கும் ஒழிவு திவஸதேக் களி படமும் அதற்கு சான்று. தமிழில் பெரும் முதலீடு இருந்தாலேயன்றி ஒரு படம் எடுத்து அதனை வெளியிட முடியாது என்கிற சூழலில் ஐந்து லட்சம், பத்து லட்சம், பதினைந்து லட்சம் என சொற்ப லட்சங்களில் ஒரு படத்தை எடுத்து, அதனை வெற்றிகரமாக மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதற்கு இந்த இரண்டு படங்களும் நிகழ்கால சாட்சிகளாக இருக்கிறது. 

முதலாளிகளை காப்பாற்ற ரகுராம் ராஜனை விரட்டும்.. RSS, குருமூர்த்தி , சு, சாமி ....

இந்தியத் தரகு முதலாளிகளின் கைக்கூலிகள்: சுப்பிரமணிய சுவாமி (இடது) மற்றும் எஸ்.குருமூர்த்தி.
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகளைக் காப்பாற்றவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜனை வெளியேற்றுவதற்குத் துடியாய்த் துடித்தது, ஆர்.எஸ்.எஸ்.....முதலாளிகளின் கைக்கூலிகள்: சுப்பிரமணிய சுவாமி  மற்றும் எஸ்.குருமூர்த்தி.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், “தான் பதவி நீட்டிப்பு கோரப் போவதில்லை; செப்டம்பரில் தனது பதவிக் காலம் முடிந்த பிறகு, ஆசிரியப் பணிக்குத் திரும்பச் செல்லவிருக்கிறேன்” என அறிவித்ததையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு மங்களம் பாடிவிட்டன, ஊடகங்கள். ஆனால், இப்பிரச்சினையின் பின்னே புதைந்து கிடக்கும் அபாயங்கள் இனிதான், அதன் முழு பரிமாணத்தோடு வெடிக்கவிருக்கின்றன.< பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி அவற்றுக்கு நாமம் போடும் விசயத்தில் இந்தியத் தரகு முதலாளிகள் மல்லையாவை விஞ்சியவர்கள். கடன்களை மறுசீரமைப்பது என்ற பெயரில் கடனைத் திரும்பக் கட்டாமலேயே தந்திரமாக இழுத்தடித்து வந்த தரகு முதலாளிகளுக்கும், அதற்குத் துணை நின்ற வங்கி நிர்வாகம் மற்றும் நிதியமைச்சகம் ஆகியவற்றுக்கும் கிடுக்கிப்பிடி போட்டு, சொத்தை விற்று கடனைக் கட்டுமாறு செய்தார் ரகுராம் ராஜன்.

Jaya TVக்கு தம்பி பாப்பா மதிமுகம் டிவி பிறந்துள்ளது...

மதிமுக-வின் நாமக்கல் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் திருச்செங்கோட்டில் கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோ, ‘தமிழ்நாட்டில் ஜனநாயகம் தூக்கி எறியப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் நடந்த போட்டியில் நூலிழையில் வெற்றி பெற்றுள்ளனர். ஊடகங்களும் பலியானது. இது தமிழ்நாட்டு அரசியலின் சாபக்கேடு. ஊடகங்களும், பத்திரிகைகளும் ஒத்துழைத்திருந்தால் நாம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம்’ என்றார். இந்நிலையில் தமக்கு ஒத்துழைக்காத ஊடகங்களை விட ஒத்துழைக்கும் ஊடகத்தை நாமே உருவாக்கினால் என்ன? என கருதிய மதிமுக-வின் முயற்சிகளில் பூத்துள்ளது ‘மதிமுகம்’ எனும் புதிய ஊடகம். இது முழுக்க முழுக்க மதிமுக-வின் ஊடகமாகும்.மக்கள் நல கூட்டணியை உருவாக்கி விஜயகாந்தையும் கந்தல் ஆக்கியதற்கு கிடைத்த கூலிப்பணம் வெளியே வருகிறது

ஜாகிர் நாயக் இந்தியா வராததால் பரபரப்பு

மும்பை,: 'பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோரை பிடிப்பதைவிட, இந்தியாவைச் சேர்ந்த, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஜாகிர் நாயக்கை முதலில் பிடிக்க வேண்டும்' என, மத்திய அரசை சிவசேனா வலியுறுத்திஉள்ளது. மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ளது சிவசேனா கட்சி. கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் நேற்று ெவளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தானில் உள்ள தாவூத்தை பிடிப்போம், டைகர் மேமனை பிடிப்போம் என்று சொல்வதை தற்காலிகமாக நிறுத்துங்கள். வங்கதேசத்தில், இந்திய பெண் உட்பட, 22 பேரை கொன்ற பயங்கரவாதி களை துாண்டிய, மத போதகர் ஜாகிர் நாயக்கை முதலில் பிடிக்க வேண்டும்.

ஜெயா போலீஸ் காட்டுமிராண்டி தர்பார். கர்ப்பிணி பெண்ணை அடித்து உதைத்து ஆடைகளை களைந்து கொடுமை


அப்பாவிகளிடம் வீரம் காட்டும் இவர்கள் மனிதர்களா? காக்கி உடை அணிந்தவுடன் மனிதாபிமானம் மரித்துவிடுமா?< மு.கு.: இந்த செய்தி ‘தி இந்து’ இணையத்தில் வெளியாகி இருந்தது. செய்தியை வாசித்து பகிர முயன்றால், அதற்குள் பதிவை நீக்கிவிட்டார்கள். யார் தந்த அழுத்தம்? இந்தக் கோழைகளா மக்களுக்கு உண்மையான செய்திகளைத் தருவார்கள்? நல்ல வேளையாக, நான் பின்னோக்கி செல்லாததால் பதிவைக் காப்பி செய்துவிட்டேன். ஸ்கிரீன் ஷாட்டும் எடுத்து வைத்துள்ளேன்.
செய்தி கீழே… திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியை சரமாரியாக தாக்கிய போலீஸார்: ஊருக்கு செல்லும்போது பேருந்தில் பனிக்குடம் உடைந்தது திருவல்லிக்கேணி அரசு மருத் துவமனையில் நிறைமாத கர்ப் பிணி மற்றும் அவரது கணவரை போலீஸார் அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் பனிக்குடம் உடைந்த தால் அவர் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.  புரட்சி தலைவின் காலில் விழுந்து கும்பிடுவது ஒன்றே தகுதியாக உள்ள தேசத்தில் இதுவும் நடக்கு இன்னமும் நடக்கும்

அந்தக் கொலையாளி பிடிபட்ட ராம்குமார் அல்ல... சம்பவ இடத்தில நின்றவர்கள் சாட்சியம்! மதுரை எவிடன்ஸ் அமைப்பு...

சுவாதி படுகொலை வழக்கின் உண்மைகளைக் கண்டறிய எவிடென்ஸ் அமைப்பினர் களமிறங்கியுள்ளனர். ‘படுகொலை வழக்கை அவசர கதியில் முடித்து வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். குறிப்பாக, ராம்குமார் பேசிவிட்டால் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் சிறையில் கெடுபிடி செய்கிறார்கள்’ என்கிறார் எவிடென்ஸ் கதிர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ‘ படுகொலை வழக்கின் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். அவரைக் கைது செய்தபோது, கழுத்தை அறுத்ததற்குக் காரணமே, அவர் பேசக் கூடாது என்பதற்காகத்தான்’ என வழக்கறிஞர்கள் சிலர் பேசி வந்தனர். அதிலும், வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இந்நிலையில், சுவாதி படுகொலை வழக்கின் உண்மையைக் கண்டறிய மதுரை எவிடென்ஸ் அமைப்பு களமிறங்கியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைமை பதவிக்கு குஷ்புவின் பெயரும் பரிசீலனையில் உள்ளது

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால், அதை ஏற்க தயார்,'' என்று, நடிகை குஷ்பு கூறினார்.தமிழக காங்கிரசுக்கு, புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக, காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனையில் உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களை அழைத்து, ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு,நேற்று டில்லியில், ராகுலை சந்தித்துப் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து, ராகுலுடன் பேசினேன். தலைவர் பொறுப்பிலிருந்து, இளங்கோவன் ராஜினாமா செய்ததற்கு, சட்டசபைத் தேர்தல் தோல்வியே காரணம்.இளங்கோவன் தலைமையில் தான்,தமிழகத்தில் பின் தங்கி இருந்த காங்கிரஸ், சற்று முன்னேறியுள்ளது. ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது.

திங்கள், 11 ஜூலை, 2016

நந்திதா தாஸ் மீண்டும் தமிழில்... சமுத்திர கனியுடன்...

நந்திதாதாஸ் நடித்த தமிழ்ப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அழகி, நீர்ப்பறவை, கன்னத்தில் முத்தமிட்டால் என ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் வேடங்கள் பிடிக்காததால் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது இந்தியிலும் பொருத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்காததால் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஏற்கனவே அரசியல் பின்னணியுடன் கூடிய ‘பைராக்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இவரின் அடுத்தப் படத்தை ஐரோப்பிய தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க உள்ளார். தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நந்திதா தாஸ். >பாடலாசிரியர் குட்டி ரேவதி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி ஹீரோ. குடும்ப பெண்கள் மீது பாயும் வன்முறைகளை எடுத்து சொல்லும் கதையாக இது உருவாக உள்ளது.  minnambalam.com

அரசு காப்பகத்தில் இருந்து 35 சிறுவர் ஓட்டம் 19 பேர் பிடிபட்டுள்ளனர்

சென்னை புரசைவாக்கம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 35 சிறுவர்களில் 19 பேர் பிடிபட்டுள்ளனர். மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.கெல்லீஸ் பகுதியில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்தில் சிறார் குற்றவாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின்போது கூர்நோக்கு இல்லத்தின் சுற்றுச்சுவர் மேலே ஏறி 35 பேர் தப்பினர். போலீசார் தேடியதில் 19 பேர் பிடிபட்டனர். மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட சிறுவர்களில் 3 பேர் டியூப் லைட்டுகளை உடைத்து தங்களது உடல்களில் கீறிக்கொண்டு தங்களை விடுவிக்குமாறு

வில் x வேல் ; ஆரியர் x திராவிடர் / திருக்குறள்

WhatsApp-Image-20160625‘அம்பு’ ஆரியர் குறியீடு. மறைந்திருந்து தாக்குவதற்குப் பயன்படுவது வில். மகாபாரதம், ராமாயணம் வில்-அம்பு முக்கியப் பாத்திரம். அரிதான காட்டுயிர்களை வில்-அம்பு தான் வேட்டையாடி அழிக்கும்.
‘வேல்’ திராவிடக் குறியீடு. நேருக்கு நேர் நின்று சண்டையிடுவது. வேட்டையாடுவதிலும் வேல் அரிதான உயிர்களைக் கொல்லாது.
‘கான் முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ – வள்ளுவர். காட்டில் ஓடும் முயலை குறி தவறாமல் எய்த அம்பை ஏந்துதலை விட, வெட்ட வெளியல் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. தொடர்புக்கு வே.மதிமாறன்  90923 90017 – 97508 71000 – 91594 30004

பெருமாள் முருகனின் மாதொருபாகன்.... குருமூர்த்தியின் பார்பன அடாவடி

 சட்டம், ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கலாகாது என மாதொருபாகன் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இச்சமூகத்தின் முற்போக்குவாதிகள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
அதேவேளையில், அறியப்பட்ட பத்தி எழுத்தாளரும், விமர்சகருமான குருமூர்த்தி, இத்தீர்ப்பின் சட்ட முகாந்திரத்தையும், தர்க்க வாதங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார். இந்த வழக்கின் தீர்ப்பை தான் எதிர்ப்பதற்கான காரணங்களை விரிவாக விளக்குகிறார்.
குருமூர்த்தியுடனான நேர்காணலின் தொகுப்பு:
'மாதொருபாகன்' வழக்கின் தீர்ப்பில் நீங்கள் முன்வைக்கும் முதன்மை சர்ச்சை என்ன?

ஞாயிறு, 10 ஜூலை, 2016

700 போலீசார் துணி துவைப்பது தடை .. டிஜிபி உத்தரவு ! நாய்க்கு குளிப்பாட்டுவதும் தடை...

போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் காவலர்களை மீண்டும் போலீஸ் பணிக்கு அனுப்ப டிஜிபி அசோக் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஏராளமான போலீஸார் தற்போது வீட்டு வேலை செய்து வருகின்றனர். காவலர்களான அவர்கள் வேலைக்காரர்கள் ரேஞ்சுக்கு நடத்தப்படுகின்றனர்.
காய்கறி வாங்குவது, நாயைக் குளிப்பாட்டுவது, தோட்டை வேலை பார்ப்பது, துணி துவைப்பது என்று பல வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாகிர் நாயக்கின் வெறுப்பு பிரசார Peace tv யை வங்காளதேசம் தடை செய்தது..

டாக்கா, ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’ சேனலுக்கு வங்காளதேசம் தடை விதித்தது. 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். இதனால் அவர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. சமூகவலைதளத்தில் தாங்கள் மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டதாக பயங்கரவாதிகள் கூறியிருந்தனர். உடனடியாக பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்தது. இந்தியாவிலும் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து இதுதொடர்பாக மத்திய உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே
ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’ சட்டவிரோதமாக செயல்படுகிறது என்ற தகவலும் வெளியாகியது.

BBC:காஷ்மீர் வன்முறை: 15 பேர் மரணம், பல கட்டுப்பாடுகள் விதிப்பு

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர். அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற பரவலான மோதல்கள் நடந்து ஒரு நாள் கழித்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த மோதலில், குறைந்தது 15 பேர் பலியானர்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

தமிழர்களுக்கு ஹிந்திக்கார ராமன் ஒரு யுத்த வெறிபிடித்த ராஜா அல்லது கடவுள் என்ற விபரம்.... நஹீ மாலும்


ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய பாபர் மசூதி இடிப்பு குறித்த ஆவணப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி, மலையாளம் என இரு மொழிகளில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இங்கே…

கோபாலசாமி நாயுடு : 7 இடங்களில் உங்கள் சகோதரி, உங்கள் மதிப்புமிக்க சகோதரி என கடிதம் எழுதினார் ஜெயலலிதா

 தேன்குடிச்ச நரின்னா இதுதான். எப்படி ஒரு சிரிப்பு? இவரு   எந்த காலத்திலையும் திமுக தலைவர்களோடு  இப்படி மகிழ்ந்தது கிடையாது..18   வருடம் ராஜ்யசபாவில் இருத்திய கலைஞரிடம் கூட இவன் இந்த புன்னகையை காட்டவில்லை  சகோதரி மேல அம்புட்டு பாசம்? ..
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகியபோது கூட அவருடன் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருமளவு விலகவில்லை. ஆனால் வைகோ தி.மு.க.வில் இருந்து விலகியபோது 8 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர். தி.மு.க.வில் ஒரு செங்குத்தான பிளவை ஏற்படுத்தியவர் வைகோ. தி.மு.க.வின் கொடி, சின்னத்துக்கு உரிமை கோரி தி.மு.க.வை கிடுகிடுக்கச் செய்தவர். ஆனால், இப்போது அடுத்தடுத்த ;தோல்விகள் காரணமாக சற்று நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ம.தி.மு.க. 1993ல் தி.மு.க.வில் இருந்து வெளியேறி பின்னர் ம.தி.மு.க.வை துவக்கிய வைகோ, இந்த 23 ஆண்டுகளில் 5 சட்டமன்ற தேர்தல், 5 நாடாளுமன்ற தேர்தல்களைக் கடந்து வந்துள்ளார். இந்த வையாபுரி கோபாலசாமி திராவிட பகுத்தறிவு வேஷம் போட்ட பக்கா வியாபாரி. ஒருபக்கம்  பிரபாகரனின் சகவாசம் அதன் மூலம் திமுகவை கைப்பற்ற முயற்சித்த களவாணி.. மறுபக்கம் ஜெயலலிதாவின் அஜெண்டாவை காசுக்கு நிறைவேற்றி கொடுத்த  ஒரு கோடரிகாம்பு....  மனசுக்குள்ள நாயுடு வாயில் திராவிடம் இதுதான் வைகோ என்று அழைக்கபடும் ஜாதிவெறி நாயுடுவின் பயோடேட்டா . 

கர்நாடக டி எஸ் எப் கணபதி தற்கொலைக்கு முன் வழங்கிய டிவி பேட்டி

கர்நாடகத்தில் டிஎஸ்பி தற்கொலை வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மங்களுர் டிஎஸ்பி கணபதி (51), விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் அவர் உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த வீடியோ பேட்டியில், ”நேர்மையான அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு ஏடிஜிபி ராம்பிரசாத், ஐஜி பிரணாப் மொகந்தி, உள்துறை அமைச்சராக இருந்த கே.ஜெ.ஜார்ஜ் ஆகியோர்தான் காரணம். இவர்கள் எனக்கு பணியில் தொல்லை கொடுத்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பெங்களுருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் டிஎஸ்பி தற்கொலை வழக்கு, சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டி படுகொலை..முல்லை .ஆர்.ஞானசேகர் (58) சென்னை 21 வது வார்டு

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் மணலியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள். அ.தி.மு.க. கவுன்சிலர் சென்னையை அடுத்த மணலி, ராஜா கார்டன், அண்ணா தெருவில் வசித்துவந்தவர் முல்லை ஆர்.ஞானசேகர்(வயது 58). இவர் சென்னை மாநகராட்சி 21-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர். மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிலைக்குழு உறுப்பினராகவும் உள்ளார். திருவொற்றியூர் பகுதி அ.தி.மு.க. அவைத் தலைவராகவும் இருந்தார். இவருக்கு யசோதா என்ற மனைவியும், ராஜேஷ் சேகர், ராஷீ சேகர், ரகுசேகர், கிருஷ்ணன்சேகர் என்ற மகன்களும், லீவிதா என்ற மகளும் உள்ளனர். இவர் வழக்கமாக மாலை வேளையில் மணலி பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது நண்பர் சுந்தாராம் என்பவரது கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.