சனி, 19 நவம்பர், 2011

கொத்தடிமை? சுமங்கலி’ திட்டத்தை கைவிட வெளிநாடுகள் வலியுறுத்தல்


சென்னை : ஜவுளி மில்களில் வேலை, தங்குமிடம், உணவு அளித்து மொத்தமாக ஊதியம் வழங்கும் ‘சுமங்கலி’ திட்டம் பெண்களை கொத்தடிமையாக்குவதாக இந்தியாவில் இருந்து ஜவுளி இறக்குமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஏராளமான ஜவுளி மில்கள் உள்ளன. இந்திய ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஏற்றுமதியில் 80 சதவீதத்தை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெறுகின்றன. இந்நிலையில், தமிழக ஜவுளி மில்களில் ‘சுமங்கலி’ என்ற பெயரில் பெண்களுக்கான திட்டம் செயல்படுகிறது.
ஜப்பானில் இருந்து 90களில் அறியப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் 18&21 வயது பெண்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. தங்குமிடம், உணவு அளிப்பதுடன் 3 ஆண்டு ஒப்பந்த காலம் முடியும்போது ரூ.36,000 முதல் ஸி56,000 வரை ஊதியம் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வேலையில் இருந்து வெளியேற முடியாது என்பதால் அதை கொத்தடிமையாக நடத்துவதாக அமெரிக்க, ஐரோப்பிய சில்லறை ஜவுளி மற்றும் ஆடை விற்பனை நிறுவனங்கள் கருதுகின்றன.

2G Action: சி.பி.ஐ.-யின் கூடைக்குள் புதிதாக துள்ளுவது எந்த பூனை?

ViruvirupuNew Delhi, India: CBI conducted raids at Vodafone office in Mumbai and Airtel office in Gurgaon  in conjunction with discrepancies in 2G spectrum allocation. Also there were raids at the residences of former Telecom Secretary Shyamal Ghosh and former director of Bharat Sanchar Nigam Limited (BSNL) JR Gupta.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தடாலடியாக இன்று (சனிக்கிழமை) எஃப்.ஐ.ஆர். ஒன்றைப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே குற்றப் பட்டியலில் இருந்தவர்களைத் தவிர புதிதாக ஆட்களை வழக்குக்குள் கொண்டுவரும் உத்தேசம் சி.பி.ஐ.-க்கு இருப்பதாகத் தெரிகின்றது.
ஆ.ராசா அமைச்சராக இருந்த காலத்துக்கு முந்தைய காலத்து விவகாரங்களையும் புதிதாக கிளறத் தொடங்கியுள்ளது சி.பி.ஐ.
ஆ.ராசாவுக்கு முந்தைய காலம் என்று வரும்போது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்துடன், அதற்கு முன் ஆட்சி செய்த பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ட்ரான்ஸாக்ஷன்களும் வழக்குக்குள் வரப்போகின்றன.

இடி விழுந்த மாதிரியான முடிவுகள் வந்து தமிழகத்தையே அதிர வைத்திருக்கு

""பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம்னு எல்லாவற்றையும் உயர்த்தி, அதற்கு நியாயம் சொல்லும் ஜெ.வின் நடவடிக்கை யைத்தானே சொல்றே!''
""ஆமாங்க தலைவரே… நவம்பர் 17-ந் தேதி கேபினட் கூட்டம்னதுமே, ரொம்ப முக்கியமான முடிவுகள் வெளியாகும்னும்,மறுபடியும் மந்திரிசபை மாற்றம் இருக்கும்னும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. கடைசியா, ஜெ.வே டி.வி.யில் விலையுயர்வு பற்றி அறிவிச்சி, மக்கள் தலையில் இடி விழ வச்சிட்டார். இந்த இடி, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னாடியே விழும்னு எதிர்பார்க்கப்பட்டதை நம்ம நக்கீரன்தான் அப்பவே எழுதியிருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க ஜெயிக்கணும்ங்கிறதுக்காக லேட்டா விழும்னும் சொல்லியிருந்தது. அதுபோலவே இப்ப விழுந்திடிச்சி.''
""ஜெ தன்னோட உரையில் பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது பற்றி கண்டனம் தெரிவிச் சிருக்கிறார். பெட்ரோ லியப் பொருட்களோட விலை உயர்ந்தால் எப்படி மற்ற பொருட்களின் விலையும் உயருமோ, அதுபோல மின்கட்டணமும் பேருந்து கட்டணமும் உயர்ந்தால் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும்.''
""தலைவரே… பாலுக்கான கொள்முதல் விலையை 2 ரூபாய் மட்டும் உயர்த்திட்டு, விற்பனை விலையை ஆறேகால் ரூபாய் உயர்த்தியிருக்காங்க. பஸ் கட்டணத்தை ரகவாரியா உயர்த்தியவங்க, பஸ்களின் தரத்தை உயர்த்துவது பற்றி எதுவும் சொல்லலை. அரசு பஸ்ஸில் பயணிக்கிறதே எமனோட வாகனத்தில் போறமாதிரிதான்னு சொல்லும் பயணிகள், எங்க உயிரைப் பணயம் வைக்க, அதிகக் கட்டணம் கொடுக்கணுமான்னு கேட்குறாங்க.''

ஜெ. வகையறாக்கள் தலித் நிலத்தை ஆக்கிரமித்தது உண்மையே

22-ந்தேதி பெங்களூரில் நடக்கும் வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் எப்படி சாட்சியம் அளிக்க வேண்டும் என போயஸ் கார்டனில் வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருக் கிறார் ஜெயலலிதா. இந்தச் சூழலில், சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சிறுதாவூர் சொகுசு பங்களாவில் நில மோசடி நடக்கிறது என ஒரு பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா அடிக்கடி ஓய்வு எடுக்கும் சிறுதாவூர் சொகுசு பங்களா அமைந்துள்ள திருப்போரூர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கடந்த 14-ம் தேதி (திங்கள்) நடைபெற்றது. அந்த மாநாட்டில், சிறுதாவூர் சொகுசு பங்களா வளாகத்திற்குள் ஆக் கிரமிப்பு செய்யப் பட்டுள்ள 31.25 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலத்தை மீட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!'


Poor
சென்னை: திடீரென பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டதால், கையில் பணமின்றி மனைவி குழந்தைகளுடன் நடந்தே வீட்டுக்குப் போனார் ஒரு தொழிலாளி.
அந்தத் தொழிலாளியின் பெயர் செந்தில். திருவண்ணாமலை காரப்பட்டு கிராமத்திலிருந்து சென்னை வந்து கட்டட வேலை செய்பவர். மனைவி மற்றும் இரு குழந்தைகள் இவருக்கு உள்ளனர்.
துரைப்பாக்கத்தில் தங்கி கட்டட கூலியாக வேலை பார்த்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் ஊருக்குப் போன அவர் நேற்று சென்னை திரும்பினார். பஸ்ஸில் ஏறியபிறகுதான் டிக்கெட் கட்டணம் ஏற்றப்பட்ட விவரம் தெரிந்திருக்கிறது.
வழக்கமாக ரூ 100 கொடுத்தால் தாம்பரத்துக்கு இருவர் வந்துவிட முடியும். ஆனால் இப்போது தாறுமாறாக கட்டணம் ஏற்றப்பட்டுள்ளதால், அவர் ஊர் திரும்ப ரூ 200-க்கு மேல் ஆகிவிட்டதாம்.
வைத்திருந்த மொத்த பணத்தையும் கொடுத்து தாம்பரம் வரை டிக்கெட் எடுத்த செந்தில், தாம்பரத்தில் இறங்கியதும் தான் குடியிருக்கும் துரைப்பாக்கம் செல்ல போதிய பணமில்லாததைக் கண்டார்.
கொண்டு வந்திருந்த மூட்டையை தலையில் சுமந்து கொண்டு மனைவி- குழந்தைகள் இருவருடன் நடந்தே செல்ல ஆரம்பித்துவிட்டார்.
நடந்து கொண்டே, இந்த அம்மா வந்தா நம்மை காப்பாற்றுவார், வருமானத்துக்கு வழி பிறக்கும்னு பாத்தா, இருக்கிறதையும் பிடுங்கிட்டு தெருவில் அல்லாட விட்டுட்டாங்களே!, என்று வேதனையுடன் புலம்பியபடி சென்றார்.
இதைக் கவனித்த சில லோக்கல் நிருபர்கள் அவரை நிறுத்தி விஷயத்தைக் கேட்க, அவர் திருவண்ணாமலையிலிருந்து தான் புறப்பட்டு வந்த கதையைச் சொல்லிவிட்டு, நடையைத் தொடர்ந்தார்!
இன்னும் எத்தனைப் பேர் இப்படி நடைப்பயணத்தை மேற்கொண்டார்களோ என்ற கேள்வியுடன் திரும்பினர் நிருபர்கள்.
விலைவாசியை ஜெயலலிதா உயர்த்தியதற்கு பாராட்டு தெரிவிக்கும் பசியறியா, நடையறியா, பேருந்துப் பயணம் அறியா, வியாதிக்காக மட்டுமே நடந்து பழகிய சொகுசு வர்க்கத்துக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது!

2 ஜி புதிய வழக்கு: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் சிபிஐ ரெய்ட்!

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் புதிய வழக்கு ஒன்றை சிபிஐ பதிவு செய்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் மறைந்த பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மகாஜன் காலத்தில் ஒதுக்கீட்டு உரிமம் பெற்ற ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.
முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் ஷியாமல் கோஷ் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. இந்த இருவரும் பாஜக ஆட்சிக் காலத்தில் பதவியில் இருந்தவர்கள்.

3 லட்சம் லஞ்ச வழக்கு - முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டு சிறை


Sukhram
டெல்லி: நரசிம்மராவ் அமைச்சரவையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராமுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
1996-ல் தனியார் நிறுவனத்துக்கு கான்ட்ராக் வழங்கியதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சுக்ராமுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பைக் கேட்ட சுக்ராம் தனக்கு 86 வயது ஆகிவிட்டதால், தண்டனையை குறைத்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சுக்ராமின் கோரிக்கையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த 1996ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் சுக்ராம். அப்போது தமது துறை சார்ந்த ஒப்பந்தம் ஒன்றை, ஹரியானா டெலிகாம் லிமிடட் என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கினார்.
ரூ.30 கோடி மதிப்புள்ள அந்த ஒப்பந்தத்தை அளிப்பதற்கு, ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த 1998-ல் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த 15 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.சி. பாண்டே, சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதையடுத்து, சுக்ராம் உடனடியாக திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக, தனக்கு 85 வயதாகிறது என்பதால், இதனை கருத்தில் கொண்டு கருணைகாட்டும்படி, சுக்ராம் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
சுக்ராம் மீது தாக்குதல்
தீர்ப்பு வெளியான உடன் சுக்ராமை நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கினார் ஒரு இளைஞர். அவர் பெயர் ஹர்விந்தர் சிங். உடனடியாக போலீசார் அந்த இளைஞனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். எதற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தினார் என்று தெரியவில்லை

குடி: கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை!

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
- 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனும் டெல்லி அரசின் முடிவுக்கெதிராக ‘போராடும்’ டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்க முழக்கம்!
அன்றைய தினம் ஏறக்குறைய நூறு பேர் அந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் இருந்தார்கள். அவர்கள் அனைவரது மனநிலையும் இதுதான். அவர்கள் உச்சரித்த எண்ணற்ற வார்த்தைகளின் சாராம்ச பொருளும் இதுவேதான்.
உழைக்கும் மக்களில் ஆரம்பித்து, அதிகார வர்க்க எடுபிடிகள் வரை சகல தரப்பினரும் அங்கு சிதறியிருந்தார்கள். மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள் முடிய அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். இரைச்சல்களுக்கிடையில் தங்கள் முதலாளிகளை திட்டினார்கள்.

இஷ்டப்படி வாழட்டும் - ஸ்ருதியின் அம்மா சரிகா

என் மகள்கள் தங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும். அதில் நான் ஒருபோதும் தலையிட மாட்டேன், என்றார் நடிகையும் கமல்ஹாஸனின் முன்னாள் மனைவியுமான சரிகா.
சித்தார்த்-ஸ்ருதி இணைந்து நடித்த ஒ மை பிரண்ட்” தெலுங்கு படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தாய் சரிகாவுடன் வந்திருந்தார் ஸ்ருதி ஹாஸன்.
சரிகா தற்போது மும்பையில் வசிக்கிறார். அவருடன் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாஸனும் இருக்கிறார். ஸ்ருதி சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்வது மற்றும் அவரது எதிர்காலம் குறித்து சரிகா கூறுகையில், "சினிமாவை தவிர வெளி உலகம் தெரியாதவள் நான். சிறு வயதில் இருந்தே நடிப்பு, நடிப்பு என்றுதான் இருந்தேன். படப்பிடிப்பு அரங்குகள்தான் எனக்கு வகுப்பறை. அங்கு என் சீனியர் நடிகர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
இப்போது நிறைய குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்கின்றனர். அவர்கள் நடிப்பு மட்டுமின்றி விளையாட்டு, படிப்பு என வேறு திறமைகளிலும் பளிச்சிடுகின்றனர். இவர்களைப்போல் சிறு வயதில் எனக்கு வாய்ப்பு அமையவில்லை.

நான் ஒருமுறை கூட விலைகளை உயர்த்தவே இல்லையே!


Karunanidhi
சென்னை: பஸ் கட்டணம், பால் விலை ஆகியவை தி.மு.க. ஆட்சியில் ஒருமுறை கூட உயர்த்தப்படவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
பேருந்து கட்டண உயர்வு
ஜெயலலிதா, வந்ததும் வராததுமாக சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு வரியை சுமத்திவிட்டு; இப்போது எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - கட்டண உயர்வு - பால் விலை உயர்வு - என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிறார். அந்தப் பழியைக் கடந்த கால அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லையா? உயர்த்திக் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் தமிழக அரசு தாங்கிக் கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா? ஆவின் கட்டணத்தை அதிகமாக உயராமல் பார்த்துக் கொள்ளவில்லையா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

போலீசுக்கும் இனி 'கேன்டீன்' - சலுகை விலையில் அனைத்தும் கிடைக்கும்!


சென்னை: ராணுவ வீரர்களைப்போல போலீசாரும் குறைந்த விலையில் பொருட்களை வாங்க சலுகை அங்காடிகளை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக சென்னை, மதுரை, திருச்சியில் 3 அங்காடிகள் திறக்கப்பட உள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வெளிநாட்டு பகைவர்களிடமிருந்து நாட்டையும், மக்களையும் காப்பது ராணுவம். உள்நாட்டில் வாழும் சமூக விரோதிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பது காவல்துறை.
இரவு பகல் பாராமல் நம் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அயராது உழைக்கின்ற காவல்துறைக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வரும் முதல்வர் ஜெயலலிதா, குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கு ராணுவத்தினருக்கு என தனியாக அங்காடிகள் இருப்பதைப் போல தமிழக காவல்துறைக்கும் குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் கிடைக்கக்கூடிய அங்காடிகளை அமைப்பதற்கு உத்தர விட்டுள்ளார்கள்.
இந்த அங்காடிகளால் வாங்கப்படும் பொருட்களுக்கும், அவற்றின் விற்பனைக்கும் மதிப்புக்கூட்டு வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கவும், முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

பேருந்து பயணம் கனவாகிவிடுமோ என்று பயணிகள் அதிர்ச்சி


பேருந்து கட்டண உயர்வு உடனடியாக அமல்: பேருந்து பயணம் கனவாகிவிடுமோ என்று பயணிகள் அதிர்ச்சி
பேருந்து கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சாதாரண பேருந்து முதல் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் வரை அனைத்து பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த கட்டண உயர்வு இன்று காலை முதல் அதிரடியாக அமுலுக்கு வந்துள்ளது.
சென்னையில் நகர பேருந்துகளில் குறைந்த கட்டணமாக 3 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மற்ற கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
இன்று காலையில் பேருந்தில் ஏறிய பயணிகள், கட்டணம் உயர்த்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். கட்டண உயர்வால் பேருந்து பயணம் கனவாகி போய்விடுமோ என்று பயணிகள் கூறியுள்ளனர்.
விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்திருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும், இந்த விலை ஏற்றத்தை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆளும்கட்சி ஆதரவாளர்களாலேயே ஜீரணிக்கமுடியாத ,நியாயப் படுத்தமுடியாத கட்டனவுயர்வு..இந்நிலை தொடரந்தால் அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்கப் போவது ரத்தினக் கம்பள வெற்றி..ஜெயலலிதா அவர்களே சிந்தியுங்கள்..

தமிழக அரசின் இந்த அணுகுமுறை தவறானது ! ஏனென்றால் குறைவான சம்பளம் பெரும் தொலில்லளர்கள் பாதிக்கபடுவர்கள் !எனக்கு மாத சம்பளம் ரூபாய் 3000 .ஆனால் எனக்கு மாத பேருந்து கட்டணம் ரூபாய் 2400 .நான் எப்படி குடும்பத்தை சமாளிப்பது என தெரியவில்லை .

வெள்ளி, 18 நவம்பர், 2011

நளினி+ ராமராஜன்+ மகள்+ குழப்பம்


தனியா நின்னு குழந்தைங்கள அவங்க விரும்பினதெல்லாம் படிக்க வைச்சேன். கல்யாணமும் பண்ணி முடிச்சா நிம்மதியாயிடலாம்னு பார்த்தா இப்படி ஆயிடுச்சே!’’ படப் பிடிப்புத் தளம் என்றும் பாராமல் அழுகிறார் நளினி. நவம்பர் 27-ம் தேதி நடக்கவிருந்த தன் மகள் அருணாவின் திருமணம் நின்றுபோனதுதான் இதற்குக் காரணம்.
நடிகர் ராமராஜனை விவாகரத்து செய்த நளினி, தன் இரட்டைக் குழந்தைகள் அருண், அருணாவுடன் தனியாக வசித்து வருகிறார். மகள் அருணாவுக்கு நவம்பர் 27-ம் தேதி திருமணம் என முடிவுசெய்து, அனைவருக்கும் பத்திரிகை கொடுத்த நிலையில், திருமணம் நளினி வீட்டாரால் நிறுத்தப்பட்டிருக்கிறது. என்ன காரணம் என நளினியே சொல்கிறார்.

பிளாக்கில் நிர்வாணப் படம் வெளியிட்ட எகிப்து மாணவி: மக்கள் கொதிப்பு


கெய்ரோ: எகிப்தைச் சேந்த கல்லூரி மாணவி ஆலியா மக்தா எல்மஹ்தி, தனது நாட்டில் பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பிளாக்கில் தன்னுடைய நி்ர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் எகிப்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது ப்ளாக் விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
www.arebelsdiary.blogspot.com
எகிப்தைச் சேர்ந்தவர் ஆலியா மக்தா எல்மஹ்தி (20). பல்கலைக்கழக மாணவி. எகிப்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பிளாக்கில் தன்னுடைய நி்ர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான லிபரல்ஸ் மற்றும் கன்சர்வேட்டிவ்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

எகிப்தில் முஸ்லிம் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிந்து தான் வெளியே செல்வார்கள். அப்படி இருக்கையில் ஆலியா நிர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளது முஸ்லிம் மதக் கொள்கையை மீறியுள்ளதாக அமைந்துள்ளது.

உலகின் மிக மலிவான கம்ப்யூட்டர் ஆகாஷ், வாங்குவதற்கு 3 லட்சம் பேர் முன்பதிவு!


புதுடெல்லி : உலகிலேயே மிகவும் விலை குறைவான மினி கம்ப்யூட்டர் (டேப்லெட்) அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இதை வாங்குவதற்கு இது வரை 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த டேட்டாவிண்ட் நிறுவனம், மலிவான விலையில் Ôஆகாஷ்Õ என்ற பெயரில் மினி கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது. இந்திய அரசு, தேசிய கல்வித் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மினி கம்ப்யூட்டர்களை ஸி2,250க்கு வழங்கி உள்ளது. ஐஐடி, மண்டல பொறியியல் கல்லூரிகள், பிட்ஸ் பிலானி, டெரி யுனிவர்சிட்டி உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர சில கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Ôஆகாஷ்’ மினி கம்ப்யூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ‘இதுவரை 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இதனுடன் மாதம் ரூ.99 விலையில் டேட்டா பிளான் வழங்குவதற்கான நிறுவனத்தையும் தேர்வு செய்துள்ளோம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இலவசமாக இன்டர்நெட் வசதி செய்து தரப்படும். 700 எம்பி பைலை 25 எம்பி பைலாக சுருக்கி சேமிக்கும் தொழில்நுட்பம் இதில் இருக்கும்Õ என டேட்டாவிண்ட் தலைமை செயல் அதிகாரி சுனீத் சிங் துலி கூறியுள்ளார்

விஜய் மல்லையா அசத்தும், “பெயர் குறிப்பிடாத நபர் தரும் ரூ1250 கோடி!”

Viruvirupu

: Vijay Mallya confirmed his company is nearing for a 370 million Dollar deal, with an Indian private investor and a group of banks. He did not name the banks. But, it’s understood 14 banks led by State Bank of India is the group, he is talking about. Also, he did not say the Indian private investor’s name.
மிகமிக அவசர பணத் தேவையில் உள்ள கிங்ஃ.பிஷர் ஏர்லைன்சுக்கு, சுமார் 370 மில்லியன் டாலர் பணம் இன்னமும் ஓரிரு தினங்களில் வந்து சேரும் என்று தெரிவித்துள்ள கிங்ஃபிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா, இதில் 118 மில்லிடன் டாலர் தொகை, 14 பேங்குகளிடமிருந்து கடனாக கிடைக்க உள்ளது என்கிறார்.
மிகுதி 250 மில்லியன் டாலர், பெயர் வெளியிட விரும்பாத பணக்கார இந்தியர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் போகின்றது என்கிறார் மல்லையா! இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 1,250 கோடி ருபா!

முதலில் சோரம் போனவர்கள் பார்ப்பன மேல் சாதியினர்தான்.

வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?   வினவு"
மறைக்கும் காவிப் புழுதி;

”நமது நாட்டில் உள்ள நகரங்களுக்கும் சாலைகளுக்கும் சிறப்பான வரலாற்று இடங்களுக்கும் முகலாய ஆட்சிக் காலத்திலும், கிறித்தவ ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. தற்போது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு சென்னை என்ற பெயரைப் பெருமிதமாக நினைக்கிறோமே, அதுபோல பிரிஞ்சி முனிவர் தவம் செய்த இடம் ஆகையால் பறங்கிமலை என்பதை மாற்றி ‘பிரிஞ்சி மலை’ என்று அறிவிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்து மக்களின் கருத்திற்கு மதிப்பளித்தார். ஆனால் 1997 ஜனவரி முதல் வாரத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் அந்தக் குன்றுக்கு தாமஸ் என்று பெயரிட்டு இந்துக்களை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். தாமஸ் என்பது தமிழ்ப் பெயரில்லை. அவர் இந்தியாவிற்கு வந்தாரா என்பதே விவாதத்திற்குரிய விசயமாக இருக்கிறது. அலகாபாத் என்ற பெயர் முகலாயர் ஆட்சியில் திணிக்கப்பட்டது. உண்மையான பெயர் பிரயாகை ஆகும். அகமதாபாத் கர்ணவதி எனவும், ஹைதராபாத் பாக்யா நகர் என்றும் மாற்றப்பட வேண்டும். எனவே நகரங்கள், சாலைகள், சிறப்பான வரலாற்று இடங்கள் ஆகியவற்றிற்கு முன்பிருந்த பண்டைய பெயர்களை மாற்றி வைக்க வேண்டும்.” - ‘மதமாற்றத் தடைச்சட்டம் ஏன்?’

ஜெயலலிதாவின் நரித்தனத்திற்கு தினமலர், தினமணி, ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊடக மாமக்கள் விளம்பரம்

ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் போலீசு கயவாளிகளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி ஏழு தலித்துக்களை கொன்று குவித்த பிசாசு ஆட்சி; மாதம் இரண்டு லாக்கப் கொலைகளைச் செய்யும் போலீசுத் துறைக்கு அளவிலா சலுகைகள்.
ஆனாலும் ஜெயலலிதா விடுவதாக இல்லை. முந்தைய முறை தன்னை முதலமைச்சராக தெரிவு செய்யாத மக்களை இந்த முறை வேறு வழியின்றி தெரிவு செய்திருந்தாலும் பழிவாங்க நினைக்கிறார் போலும்.

பஸ் கட்டண உயர்வு: ஆண்டுக்கு ஒரு முறை தான் சொந்த ஊரைப் பார்க்க முடியும்- பொது மக்கள்

அதி நவீன சொகுசு பேருந்துகளுக்கு இணையாக தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் டப்பா பேருந்துகளும் கட்டணம் வசூலிப்பதால் பொது மக்கள் உச்சகட்ட வெறுப்பில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக செங்கோட்டை கிளையின் மூலம் சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் தொலை தூர பகுதிகளுக்கும், இராணகுளம், புதுவை, திருப்பதி, பெங்களூரு போன்ற பிற மாநில பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய பகுதி என்பதால் இங்குள்ள பலர் புதுவை, கோவை போன்ற பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளின் கட்டணத்தை கடு்மையாக உயர்த்தியுள்ளது.
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு 325 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 445 ரூபாயாகவும், கோவைக்கு 225 ரூபாயாகவும் இருந்த கட்டணம் தற்போது 275 ரூபாயாகவும் இரா,ணகுளத்திற்கு 345 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 425 ரூபாயாகவும், பெங்களூருக்கு 420 ரூபாயாக இருந்த கட்டணம் 520 ரூபாயாகவும், திருப்பதிக்கு 390 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 505 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை குறித்த மேப் கேட்கிறார்கள் போராட்டக் குழுவினர்- மத்திய குழு பரபரப்பு புகார்!


Dr Muthunayagam
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த வரைபடங்களையெல்லாம் போராட்டக் குழுவினர் கேட்கின்றனர். இதெல்லாம் எதற்குக் கேட்கிறார்கள். இதனால் அவர்களின் நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மத்திய குழுவின் தலைவர் டாக்டர் முத்துநாயகம் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கூடங்குளம் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில குழுக்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. முன்னதாக மத்திய குழு கடந்த 3 நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்திய குழுவின் முத்துநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பிக்பாஸ் 5 வீட்டில் ஆபாச நடிகை சன்னி லியோன்


பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோ நடக்கும் வீட்டில் சூட்டைக் கிளப்ப வருகிறார் ஆபாசப் படங்களில் நடிக்கும் இந்திய வம்சாவழி நடிகை சன்னி லியோன் (அ) கேரன் மல்ஹோத்ரா.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 5வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. அதில் லேட்டஸ்டாக கலந்து கொண்டவர் சாமி அக்னிவேஷ். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடனை திருப்பி செலுத்தாத 100 'டாப்' தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிடுமா ரிசர்வ் வங்கி?


டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் அதிக அளவில் கடன் பெற்றுவிட்டு திரும்பச் செலுத்தாத பெரும் தொழிலதிபர்களின் பெயர்களை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட மத்திய ரிசர்வ் வங்கி ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
பெரிய நிறுவனங்களின் தொழிலதிபர்கள் பலர் பொதுத்துறை வங்கிகளில் பல கோடி ரூபாய் கடனை பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்துவதாகவும், இதனால் வாராக்கடன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்திருந்தது.

பஸ் கட்டண உயர்வை திசை திருப்ப போக்குவரத்துறை அதிகாரிகளின் வீடு, அலுவலங்களில் ரெய்டு


தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா 17.11.2011 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசினார்.
அதில், போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரையில், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழங்கள் செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக் கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் கருத்தில்கொண்டு, பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன என்றும், இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த திடீர் அறிவிப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. பொதுமக்கள் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை, பத்திரிகைகளில் பேருந்து கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு பற்றிய செய்தி மக்கள் மனதில் பதியும்படி வெளிவரும் என்பதால், தமிழக அரசு இந்த விஷயத்தை திசை திருப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வெள்ளிக்கிழமை அன்று காலை முதலே போக்குவரத்துத்துறையில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை அவர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வீடுகளிலும் சோதனை நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜார்க்கண்டில் போராடிய கேரள கன்னியாஸ்திரி படுகொலை: மாஃபியா அட்டூழியம்

கொச்சி: ஜார்க்கண்டில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி வல்சா ஜான் என்பவர் சுரங்க மாஃபியாவால் படுகொலை செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளியைச் சேர்ந்வர் வல்சா ஜான்(53). கடந்த 1984ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆனார். முதலில் கொச்சியில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் பொருளாதார ஆசிரியையாக பணியாற்றினார். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி வளம் அதிகமுள்ள தும்கா பகுதிக்கு சென்றார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடி வந்தார். நிலக்கரி மாஃபியா அந்த பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து விரட்டிவிட்டது. இதை எதிர்த்து போராடி வந்தார் கன்னியாஸ்திரி வல்சா ஜான்.

வியாழன், 17 நவம்பர், 2011

வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 3 பேர் கைது

 தமிழகம் காம வெறியர்களின் கூடரமாவது ஏன்? காம வறுமை அதிகரித்து விட்டது பண்பாடு கலாசாரம் என்று எவர்கள் அதிகம் கூச்சலிடுகிரார்களோ அவர்கள்தான் முதலில் அவற்றை தொலைப்பவர்கள். இந்த மாதிரி  பண்பாட்டு குஞ்சுகள் அதிகம் இல்லாத நாடுகளில் காம வெறியர்கள் தொகை அதிகம் இல்லை .
மேலூர் : மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரை அடுத்த ரெங்கசாமிபுரம் முன்னக்குடி கண்மாயில் 5 நாட்களுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அந்த பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில் கீழையூர் பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் தெரியாத பெண் ஒருவர் வந்துள்ளார். தனது பெயர் சுப்ரியா எனக்கூறியுள்ளார். வேறு எதுவும் பேசத்தெரியவில்லை. அதன்பின் அவரை சிலர் விரட்டியதையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கீழையூரைச் சேர்ந்த பூரி மகன் சுதந்திரராஜன்(21), அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அபிமன்யூ(19) மற்றும் ஓடைப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(45) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். சுதந்திரராஜன், அபிமன்யூ ஆகியோர் அந்த பெண்ணை சம்பவத்தன்று மாலையில் விரட்டியுள்ளனர். பொதுமக்கள் கேட்டபோது, பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரவு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக முன்னக்குடி கண்மாய் பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.
முதலில் சுதந்திரராஜன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் குவாரியைச் சேர்ந்த வாட்ச்மேன் இவர்களை பார்த்துள்ளார். இதனால் வேறு இடத்திற்கு அவளை இழுத்துச் சென்று  அடித்து உதைத்து அபிமன்யூ பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஆறுமுகம் என்பவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். மூன்று பேரும் பலாத்காரம் செய்ததால் அந்த பெண் இறந்து விட்டார். உடலை அங்கேயே போட்டுவிட்டு மூன்று பேரும் தப்பியது விசாரணையில் தெரியவந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

நாட்டின் எல்லைக்கு கீழே, அரை கி.மீ. நீள ரகசிய சுரங்கப் பாதை சிக்கியது!

Viruvirupu

San Diego, USA: A tunnel stretched about half a kilometer and linked between two border cities of two countries found on Wednesday. An estimated 14 tons of marijuana was seized with the discovery of this tunnel. It linked two warehouses in San Diego, USA; and Tijuana, Mexico. US authorities said this was one of the most significant drug smuggling passages ever found on the United States-Mexico border.

இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நிலத்தடியே ரகசியமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாக கடத்துவதற்காக வைதக்கப்பட்டிருந்த 14 டன் (14,000 கிலோ) மரிஜூவானா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா-மெக்சிகோ இடையிலான இந்த ரகசிய சுரங்கப்பாதைதான் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீளமான சுரங்கப்பாதை.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கோட்டுக்கு கீழே நிலத்தடியே செல்லும் சுரங்கப்பாதையின் நீளம் சுமார் அரை கி.மீ. (500 மீட்டர்). அமெரிக்காவின் சான் டியாகோ நகரிலுள்ள வேர்ஹவுஸ் ஒன்றையும், மெக்சிகோவின் டிஜூவானா நகரிலுள்ள வேர்ஹவுஸ் ஒன்றையும் இணைக்கும் வகையில் சாமர்த்தியமாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை
இந்த இடத்தில் தரையடியே சுரங்கப்பாதை ஒன்று இருப்பது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்? விலை உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள்: ஜெயலலிதா


முதல் அமைச்சர் ஜெயலலிதா 17.11.2011 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், தனியார் தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் தங்களது இன்றியமையாப் பணியை மக்களுக்கு தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கான வழிவகைகள் குறித்தும் இன்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, “வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப  சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எனது தலைமையிலான அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

Formula 1 பந்தயம்:ஏழைகளின் நாட்டில் பணக்காரத் திமிர்!

புத்தா கார் பந்தய மைதானம்
“இந்தியர்களுக்கு இனிமேலும் காபி தேவையில்லை; காப்பெச்சீனோ தான் தேவை” – பார்முலா 1 கார் பந்தையங்கள் குறித்து வலைபதியும் குணால் ஷா என்கிற ஆங்கில வலைபதிவர் சமீபத்தில் விடுத்திருக்கும் பிரகடனம்.
காபி கிடக்கட்டும், ஒழுங்காகத் தண்ணீர் விட்டாலே போதும் என்று நள்ளிரவில் குடங்களோடு ஊர்வலம் போகும் சாதாரண மக்களுக்கு காப்பெச்சீனோ பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. அது ஒரு ஐரோப்பிய காபி வகை.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?

vinavu.com
அரசு உதவினால் மல்லையா தப்பிவிடுவார் என்று நம்பிக்கையூட்டுகின்றன. மல்லையாவின் ஊதாரித்தனமும் அவரது விமான நிறுவனத்தின் கையாலாகாத்தனமும் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவில் போக்குவரத்துத் துறைக்கு முன்னறிவிக்காமல் விமானங்கள் ரத்து செய்ததற்கும், பயணிகளைத் தவிக்க விட்டதற்கும், தனது நட்டத்தை வங்கிகளின் தலையில் சுமத்தியதற்கும் மல்லையாவைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று இப்பத்திரிகைகள் கோரவில்லை.
சாராய சாம்ராட் விஜய் மல்லையாவுக்கு அனேகமாக இந்நேரம் போதை தெளிந்திருக்க வேண்டும். அவரது விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் மல்லையா யாரிடம் போய் அழுவார்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே.. அதனால் தான் மன்மோகனிடம் கேட்கிறார் – ‘மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்’. பொதுத்துறை நிறுவனங்களின் கையாலாகாத்தனத்தால் அல்லலுறும் மக்களின் நலனுக்காகவே தனியார்மயத்தை இந்தியாவுக்கு இழுத்து வந்து அறிமுகம் செய்வித்த மன்மோகன் சிங்கோ வெட்கமில்லாமல் மல்லையாவிடம் சொல்கிறார் – ‘உங்கள் கோரிக்கையை அரசு பரிவுடன் பரிசீலிக்கும்’ என்று.
கடந்தவாரம் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தனது விமான சேவையில் 50% அளவுக்கு ரத்து செய்தது மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம்.

ஆவின் பால் விலை ரூ.6.25 உயர்கிறது-இனி லிட்டர் 24 ரூபாய்!!


Aavin Milk
தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுவரை 1 லிட்டர் ரூ.17.75க்கு விற்கப்பட்ட ஆவின் பால் இனி 24 ரூபாய்க்கு விற்கப்படும்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள விலை உயர்வு பட்டியலில் கூறப்பட்டுள்ளதாவது:
பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி!


TN Govt Bus

சென்னை: தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
சென்னை நகர பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாக உயர்த்தபட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 32 பைசாவிலிருந்து 56 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் சூப்பர் டீலக்ஸ் சொகுசு பேருந்துகள் மற்றும் சூப்பர் டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 52 பைசாவிலிருந்து 70 பைசவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம்

முன்பு புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப்புலி தலைவர்களாக இருந்தவர்களில் சண்டியர்கள்  மாபியாகாரர்கள் என  பல குறைபாடுகள் இருந்தாலும் இயக்க விடயத்திலும் பண விடயத்திலும் நேர்மையானவர்களாக இருந்தார்கள். தற்பொழுது அவர்கள் ஓரங்கட்டப்பட்டு பக்கா திருடர்களும் பொய்யர்களும் எந்தக்காலத்திலும் பொதுச் சேவையில் ஈடுபடாத தற்குறிகள் வந்து சேர்ந்து ஒன்றை ஒன்று கொலை செய்யும் நோக்கத்தில் திரிகின்றன. விநாயகம் குழு நெடியவன் குழுவை தீர்த்துக்கட்ட திரிகிறார்கள். இதற்கு லண்டன் பாரீஸ் சம்பவங்கள் உதாரணம். பிரபாகரனுக்கு அந்திரட்டி செய்ய துணிவில்லாத இந்த கோஷ்டிகள் இரண்டு மாவீரர் தினம் வைத்தாலும் ஆச்சரியமில்லை. இந்த தற்குறிகளின் செயல்களால் இலங்கை அரசாங்கம் இராணுவத்தை தமிழர் பிரதேசத்தில பலமாக வைத்திருக்க விருப்புகிறது
- நடேசன்
கம்போடியாவில்  ரொன்லி சப் (tonle Sap); என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான  2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தி;ல் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும.; மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் பகுதி; மக்கள் ஆளுக்கு 100கிலோ  மீன்புpடிப்பதன் மூலம் தங்கள் உணவுத் தேவையை தீர்த்துக்கொள்வார்கள். கம்போடியாவின் அரைவாசிப்பேருக்கு உணவு வழங்கும் அமுதசுரபியாக இந்த ஏரி அமைந்துள்ளது
இதே போலத்தான் வன்னிப்பிரதேசத்திலும் கணுக்கால் அளவு நீர் நிறைந்திருந்த போது வயலாக நினைத்து நாற்று நடலாம். ஆனால் மழைக் காலத்தில் குளமாகிவிடும்;. இப்படியான தாழ்ந்த பகுதியில்  நாற்று நடுவோம் என யாராவது அடம் பிடித்தால் எப்படியான உணர்வு உங்களுக்குத் தோன்றும்?.

மாநிலத்தின் தேவைக்கு ஒருசில ஊர்கள் அழிந்தாலும் பரவாயில்லை?

இடிந்தகரை : இடியாத மனங்கள்


இடிந்தகரைக்குப் போயிருந்தேன். நான் செல்வதற்கு முந்தைய நாள் கூடங்குளத்துக்கு அருகிலிருக்கும் செட்டிகுளம் என்கிற ஊரில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட ஒரு பெரும் போராட்டம் நடந்து முடிந்திருந்தது. இதில் பலதரப்பினரும், பல அறிவியல் வல்லுனர்களும் கலந்துகொண்டனர். இதனால் அன்று இடிந்தகரை போராட்டப்பந்தலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அறுப‌து, எழுப‌து பெண்க‌ளும் சுமார் முப்ப‌து ஆண்க‌ளும் இருந்த‌ன‌ர். சீமான் முன்பு ஆற்றியிருந்த‌ உரை ஒன்றின் ஒலிநாடா ஒலித்துக்கொண்டிருந்த‌து. அர‌ங்கைச் சுற்றி த‌மிழிலும் ஆங்கில‌த்திலும் அணு ச‌க்திக்கு எதிரான‌ பிர‌சார அறிவிப்புகள் மாட்டிவிடப்பட்டிருந்தன.
சிறிது நேர‌த்தில் ப‌க்க‌த்து விவசாய கிராம‌மொன்றிலிருந்து ஒரு வாக‌ன‌த்தில் சில‌ர் வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். இதிலும் பெண்க‌ளே அதிக‌மிருந்த‌ன‌ர். அதைத் தொட‌ர்ந்து  கோட்டாறிலிருந்து சில‌ இளைஞ‌‌ர்க‌ளும் வ‌ந்து சேர்ந்துகொண்ட‌ன‌ர்.
ஒரு பாதிரியார் முத‌லில் எல்லோரையும் வ‌ர‌வேற்று பேசினார். அடுத்து ஒருவ‌ர் மிக‌ விரிவாக‌ அணு உலைக‌ளினால் வ‌ரும் ஆப‌த்துக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியும், அணு உலை விப‌த்துக்க‌ளின் வரலாறு குறித்தும் விள‌க்கி பேசினார். ’1979ல் மூன்று மைல் தீவில் விப‌த்து நிக‌ழ்ந்த‌போது இதை சரி செய்துவிட்டோம். இனிமேல் இப்ப‌டி ந‌ட‌க்க‌வே ந‌ட‌க்காது என்றார்க‌ள்.

மாதம் இரண்டு லாக்அப் கொலை: “பச்சை”யான போலீசு ஆட்சி!


கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக சென்னை  விருகம்பாக்கம் போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட முத்து என்பவர் போலீசாரால் மிருகத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.  இக்கொட்டடிக் கொலை தொடர்பாக மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளபொழுதிலும், “”முத்து நெஞ்சு வலியால்தான் இறந்து போனதாக” உயர் போலீசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
மாதம் இரண்டு லாக்அப் கொலை : பச்சை யான போலீசு ஆட்சி !இது அப்பட்டமான பொய் என்பதற்குப் பல நேரடியான சாட்சியங்கள் உள்ளன.  சென்னை போலீசார் முத்துவைக் கைது செய்து, இத்திருட்டு சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக முத்துவின் சொந்த ஊரான கடலூருக்கு அவரை அழைத்துவந்தபொழுதே, “”அவரது தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்ததாக”க் கூறுகிறார், அம்பிகா என்ற பெண்.  முத்து இரத்தம் வடிந்த நிலையிலேயே கடலூருக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டதை முத்துவின் பெற்றோர்களும் உறுதி செய்துள்ளனர்.  வழக்குரைஞரும் முத்துவின் உறவினருமான நாகசுந்தரம் என்பவரும், “”முத்துவின் தலையிலும் காதுகளுக்குக் கீழேயும் காயங்கள் இருந்ததையும், அவரது மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததையும் அவரது கையின் புஜப்பகுதி வீங்கிப் போயிருந்ததோடு, உடலெங்கும் காயங்கள் இருந்ததையும் தான் பார்த்ததாக”ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்.

கவுரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை ;19 பேருக்கு ஆயுள்: மதுரா கோர்ட் அதிரடி தீர்ப்பு

மதுரா:உத்தரபிரதேசத்தில் காதலர்களை கவுரவக் கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


உ.பி., மதுரா மாவட்டம் பர்சானா பகுதியை சேர்ந்த ரோஷினியும், பிஜேந்தரும் காதலித்தனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள உதவ முயன்றவர் ராம்கிஷன். வேறு ஜாதி வாலிபனை திருமணம் செய்து கொள்ள முயன்ற இந்த ஜோடியையும், இதற்கு உதவிய ராம் கிஷனையும் கவுரவ கொலை செய்யும் படி, பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். இதையடுத்து, கடந்த 91ம் ஆண்டு இந்த மூவரும், மரத்தில் தொங்கவிடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டனர்.
கவுரவ கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். 16 பேர் வழக்கு நடக்கும் காலத்திலேயே இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு, சிறார் கோர்ட்டில் நடக்கிறது.இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த மதுரா மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஏ.கே. உபாத்யாயா, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 34 பேரில், 15 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜெ. ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : புகழேந்தி பேச்சு

கடலூரில் நேற்று திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாநில மாணவரணிச் செயலாளர் கடலூர் புகழேந்தி பேசினார்.
அவர்,‘’ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் இருண்டகாலம் தொடங்கி விடுகிறது. மக்கள் நலப்பணியாளர்களை வேலை நீக்கம் செய்து அவர்கள் குடும்பங்களை பரிதவிக்க வைத்துள்ளார்.
மக்கள் நலப்பணியாளர்களை தொடர்ந்து ஜெயலலிதா சாலை பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றை சேர்ந்த பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்.
வேலை தருகிறோம் என்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் வேலைகளை பறித்து அவர்களை படுகுழியில் தள்ளும் படுபாதக செயலை செய்து வருகிறார்.ஜெயலலிதாவின் காட்டாட்சியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் பணியை தி.மு.க மேற் கொண்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழகத்தில் மவுன புரட்சி தொடங்கி உள்ளது.
யானை தன் தலையில் மண்ணை வாரிக்கொட்டிக்கொண்டதை போல தமிழக மக்கள் தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட அநியாயம் நடந்துள்ளது.
ஜெயலலிதா என்ற மண்ணால் அழுக்கான யானை குளித்து அழுக்கை போக்கும். மீண்டும் உதயசூரியன் உதிக்கும். மக்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பும் வரை தி.மு.க தொண்டர்களுக்கு இனி ஓய்வில்லை உறக்கமில்லை’’ என்று பேசினார்.

திகார் சிறையில் இருந்தபடியே தொகுதி மக்களுக்கு ஆ. ராசா செய்த உதவி


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திகார் சிறையில் உள்ளபோதும், தொகுதி மக்கள் இருவருக்கு, பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து, இதய நோய் சிகிச்சைக்கு பணம் பெற்றுத் தந்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதான குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசா,  கைது செய்யப்பட்டு பிப்ரவரி 2ம் தேதியிலிருந்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு, நீலகிரி லோக்சபா தொகுதி மக்களின் கோரிக்கைகளைப் பெற்று, உதவியாளர் அனுப்பி வருகிறார்.
அப்படிப் பெறப்பட்ட கோரிக்கைகளில், கோத்தகிரியைச் சேர்ந்த ரவிசெல்வன் என்பவரது குழந்தை பரணிதரன், அன்னூரைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் இதயநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி கோருபவை.
இக்கோரிக்கைகளை, பிரதமருக்கு பரிந்துரைத்து, பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து, தலா 50 ஆயிரம் ரூபாயை, மருத்துவ சிகிச்சைக்கு ராசா பெற்றுத் தந்துள்ளார்.

புதன், 16 நவம்பர், 2011

Reliance Kingfisher: நெருப்பு இல்லாமல், புகை இல்லை!

Viruvirupu

Mumbai, Inia: Mukesh Ambani-led Reliance Industries denied a rumor widely spoken on business circle for the past 24 hours. The Indian energy major Reliance was in talks to buy a stake in cash-strapped Kingfisher Airlines was that talk! But, our sources said, there were some kind of dialogue between two parties related to this matter.

முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், வர்த்தக வட்டாரங்களில் கடந்த 24 மணி நேரமாக அடிபட்டுக் கொண்டிருந்த வதந்தி ஒன்றை இன்று (புதன்கிழமை) மறுத்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் ஒரு பகுதியை ரிலையன்ஸ் வாங்குவதற்கு பேச்சு வார்த்தைகளை நடாத்துகின்றது என்பதே அந்த வதந்தி.
ரிலையன்ஸ் - தெரியாத மைதானத்திலும் தைரியமாக இறங்கக் கூடிய ஆட்கள்!
நேற்று மதியத்தில் இருந்து இந்த வதந்தி மும்பை வர்த்தக வட்டாரங்களில் பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தது. குறிப்பிட்ட வதந்தி காரணமாக கிங்ஃபிஷர் பங்குகளில் சிறிய ஏற்றம்கூட ஏற்பட்டது என்பதிலிருந்து வதந்தி எந்தளவுக்கு பிஸினெஸ் சர்க்கிளில் அடிபட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை!

2008-ஆம் வருடம்  பெரம்பலுர் ஜோசப் கண் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் விழுப்புரம் மாவட்டம், நைனார் பாளையம், கடுவனுர் கிராமத்தை சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டு கண் புரை அறுவை சிகிச்சை செய்ததில் அனைவருக்கும் கண் பார்வை முழுமையாக பறிபோனது .மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தியை சொல்லாமல் சொட்டு முருந்தும், வெள்ளை மாத்திரையும் கொடுத்து அனுப்பிவிட்டனர்.

அழகிரியின் ‘பொட்டு’வுக்கே கியாதி என்றால், பொட்டுவின் ‘தட்டு’வுக்கு?


Viruvirupu

 After court ruled improper Gonads Act slapped on him, N Suresh Babu alias Pottu Suresh, was released from prison. After spending more than 100 days behind bars at Palayamkottai central prison, this close confidante of union minister M K Alagiri came out as a miracle. But, how was that possible? மதுரை காவல்துறையில் பல்வேறு விதமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. எல்லாமே பொட்டு சுரேஷ் சமாச்சாரம்தான்! இவர்கள் அதிகாரத்தையும், ஆதாரங்களையும் கைநிறைய வைத்துக்கொண்டு பொட்டு சுரேஷை அள்ளி உள்ளே போட, பொட்டு இவர்களை தள்ளி கொண்டு வெளியே வந்தது எப்படி என்பதுதான் சூடான விவாதம்!

ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி!

“மாநிலத்தில் 43 புதிய திட்டங்கள் – முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு”  இது நேற்றைய (15.11.2011) தினமணியின் தலைப்பு செய்தி. பக்கத்தை திருப்பினால், மூணாவது பக்கத்தில் காவல் துறைக்கு 34 புதிய திட்டங்கள் என்று இருந்தது. அம்மாவின் ராசி நெம்பர் 7 ஆக மாறிவிட்டது போலிருக்கிறது. 0 ஆக மாறாதவரை கவலை இல்லை. அது கிடக்கட்டும். திட்டங்களுக்கு வருவோம்.
அண்ணா நூலகத்தை மூடுவது, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் போன்ற திட்டங்களை இப்பத்தானே அம்மா அறிவிச்சாங்க, அதுக்குள்ள புதுசா 43 திட்டமா? இதே வேகத்தில் போனால் அடுத்த சில நாட்களிலேயே அன்புச் சகோதரர் மோடியின் குஜராத்தை அம்மா விஞ்சிவிடுவார் போலிருக்கிறதே என்று பயந்தபடியே தினமணி வெளியிட்டிருந்த திட்டங்களின் விவரத்தைப் பார்த்தேன்.
“பெரியகுளம் – கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.
“காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
“கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இதுக்குப் பேரெல்லாம் திட்டமாய்யா? இதை திட்டம்னு எழுதிக்கொடுத்திருக்கானே அவனெல்லாம் ஐஏஎஸ் ஆப்பீ..சரா என்று நாம் நினைக்கலாம்.

மார்வாடிகள் சதி? அங்காடிதெரு(ரங்கநாதன்) இடிப்பு ?

சவுகார்பேட்டை தெருவில் வசிக்கும் மார்வாடிகள் எத்தனை கட்டடங்களை கட்டி வைத்திருக்கிறார்கள். இவர்கள் தெருவில் சாலையின் நீளமே வெறும் பத்து அடிகள்தான். இவையெல்லாம் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பார்வையில் விதிமீறல்களாகத் தெரியவில்லையா?
விதிமுறை மீறி கட்டினா இப்படித்தான் ஆகும்’ என்கிற கடை முதலாளிகளுக்கு எதிரான பேச்சு ஒருபுறம், வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவான பேச்சு மறுபுறம் என இரண்டையும் வாங்கிக் கொண்டு அமைதியாய் இருக்கிறது தி.நகரின் கடை வீதிகள். விதிமுறை மீறிய கட்டடங்கள் என்கிற குற்றச்சாட்டோடு பத்து நாட் களுக்கும் மேலாய் மூடிக் கிடக்கின்றன வணிக வளாகங்கள்.

அம்பேத்காரை இந்துவாக்காதீர்கள் மனிதனுக்காகத்தான் மதம். மதத்துக்காக மனிதன்அல்ல


அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக இந்தப் போக்கு முன்பைக்காட்டிலும் அதிகரித்து வருகிறது. இது உண்மையிலேயே விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் அவர் தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த மதத்தைவிட்டு வெளியேறி வந்தாரோ, அந்த மதத்தின் அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகளை முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கர் முன்வைத்த மதமாற்றக் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வதுதான்.

வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் தமிழ் வளர்க்கலாம் - கமலுக்கு வைரமுத்து பதில்


Kamal and Vairamuthu
சென்னை: சினிமாவில் தமிழை வளர்க்க முடியவில்லையே என நண்பர் கமல்ஹாஸன் வேதனைப்பட்டிருந்தார். அவர் சொன்னதில் உண்மை இருக்கிறது. ஆனால், சரியான வாய்ப்பு வந்தால் சினிமாவில் தமிழ் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார் வைரமுத்து.
பிரபுதேவா, பிருதிவிராஜ், ஆர்யா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம், 'உருமி.' இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

நில அபக‌ரி‌ப்‌பி‌ல் ‌தி.மு.க. எ‌ம்‌.‌பி. நடிக‌ர் ‌ரி‌‌த்‌தீ‌ஷ் கைது

நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ‌தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் நடிக‌ர் ‌ரி‌‌த்‌தீ‌‌ஷை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.
த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் குறு‌கிய கால‌த்‌தி‌ல் கொடி க‌ட்டி பற‌ந்தவ‌ர் நடிக‌ர் ‌ரி‌த்‌தீ‌ஷ். இவ‌ர் நடி‌த்த நாயக‌ன் எ‌ன்ற பட‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய வெ‌ற்‌றி பெ‌ற்றது.
இதை‌த் தொட‌ர்‌ந்து ராமநாதபுர‌ம் நாடாளும‌ன்ற தொகு‌தி‌யி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றியு‌‌ம் பெ‌ற்று ‌வி‌ட்டா‌‌ர். எ‌ம்.‌பி. ‌சீ‌ட்டை பல கோடி ரூபா‌ய் கொடு‌த்து வா‌ங்‌கியதாக அ‌ப்போது இவ‌ர் ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்தது.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஸ்ரீபெ‌ரு‌ம்புதூ‌ர் அருகே 90 ‌செ‌ன்‌ட் ‌நில‌த்தை அபக‌ரி‌த்ததாக நடிக‌ர் ‌‌‌‌ரி‌‌த்‌‌தீ‌ஷ் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்த கா‌ஞ்‌சிபுர‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.


நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான். நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இம்ரான் கான்:நான் பிரதமரானால் ராணுவம் என் கையில்

இஸ்லாமாபாத்: நான் பாகிஸ்தானின் பிரதமரானால் ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான் தற்போது பிரதமர் பதவிக்கு அடிபோடுகிறார். நான் மட்டும் பாகிஸ்தான் பிரதமரானால் ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று ராணுவம் என்று பெயரிடப்பட்ட வீடியோ ஒன்றில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
என்னை யாரும், எப்பொழுதுமே கட்டுப்படுத்தியதில்லை என்று அவர் கூறியதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரானால் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஐஎஸ்ஐ அமைப்பை தன் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடம்

சென்னை, நவ. 15: அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் உள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கவுள்ளது.கட்டாயக் கல்விச் சட்ட விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை நிர்வகிக்க பெற்றோர்கள் அடங்கிய பள்ளி நிர்வாகக் குழு, பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கட்டாயக் கல்விச் சட்ட விதிமுறையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு: 5 ஆண்டுகளில் பயன்பாடு


Cancer Cell
லண்டன்: புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர். கேஜி5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டது. மேலும் கட்டி ஏற்படுத்தும் செல்களை பெருகவிடாமல் அழி்க்கும் என்று நேச்சுரல் மெடிசின் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று 15.11.2011 காலை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.


சென்னை மெமோ ரியல் ஹால் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார். இதில் பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.
1989ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியார் கள் ஏறத்தாழ 13 ஆயிரம் பேரை எவ்விதக் காரண மும் இன்றி பணி நீக்கம் செய்துள்ள அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து 15.11.2011 அன்று தமிழ் நாடு முழுவதும் மாவட் டத் தலைநகரங்களில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என தி.மு.க. பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்ப ழகன் அறிவித்திருந்தார்.

பெண்கள் மனநல விடுதிகளில் நடக்கும் பாலியல் அக்கிரமங்களை சொல்லும் ‘மயங்கினேன் தயங்கினேன்’

Mayanginen Thayanginen Movie“நானே நேரில் பார்த்த ஒரு விஷயம்தான் இந்தப் படத்தை எடுக்க உந்துதலாக அமைந்தது. ஒரு பெண்கள் மனநல காப்பகம் அது. கணவனை இழந்த ஒரு பெண்ணையும் அவரது வயதுக்கு வந்த மகளையும் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்தனர். பெரிய தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொண்டனர். ஆனால் அந்த அம்மாவுக்கும் பெண்ணுக்கும் சொல்ல முடியாத அளவு பாலியல் கொடுமை அங்கே நடந்துள்ளது. எதிர்த்துக் கேட்கப் போனவர்களையும் விரட்டியனுப்பினர். எங்களிடம் விஷயத்தைச் சொன்னபோது, நாங்களே நேரில் போய், கதவை உடைத்து அந்தப் பெண்களை மீட்டு வந்தோம்.

TimesNowTV டைம்ஸ் நவ் டிவிக்கு ரூ.100 கோடி அபராதம்

மும்பை, நவ.15 (டிஎன்எஸ்) பிஎப் ஊழல் முறைகேடு குறித்த செய்தியின்போது முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்தின் படத்தைத் தவறாக காட்டியதற்காக டைம்ஸ் நவ் டிவிக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாம்பே உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்குக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் டைம்ஸ் நவ் டிவி பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய பிஎப் பண ஊழல் விவகாரத்தில் பல்வேறு நீதிபதிகளுக்குத தொடர்பு இருப்பதாக கூறி டைம்ஸ் நவ் டிவி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. அப்போது தவறுதலாக அதில், சம்பந்தப்படாத முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்தின் படம் காட்டப்பட்டது. கிட்டத்தட்ட 15 விநாடிகள் அந்தப் படம் காட்டப்பட்டது.

கமல்.. மயில்சாமி..மண்சட்டி..மீன்குழம்பு!

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்றால் அவர் அழைப்பது நடிகர் மயில்சாமியைத் தான்.
கமல் ஹாசனுக்கு மீன் குழம்பு என்றால் இஷ்டம். எப்பொழுதெல்லாம் மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் முதலில் அழைப்பது நகைச்சுவை நடிகர் மயில்சாமியைத் தான். மயில்சாமி அவ்வளவு அருமையாகவா மீன் குழம்பு வைப்பார் என்று நினைக்க வேண்டாம்.
மயில்சாமியின் மனைவி கைப்பக்குவம் பிடித்திருப்பதால் தான் அவரை கமல் அழைப்பார்.