Maha Laxmi : சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில்,
இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும்
ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும்,
பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத்(67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு.
இந்த சாமியார் தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
திங்கள், 23 மார்ச், 2026
மகாராஷ்ட்ரா ஆசிரமத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் .. சி சி டிவியில் மாட்டிய பாஜக பிரமுகர்கள்
ஞாயிறு, 22 மார்ச், 2026
ஈரான் அல் காமினிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் இந்திய இடதுசாரிகள்
Sridhar Subramaniam : ஈரான்-அமெரிக்கப் போரில் எழும் எதிர்வினைகளில் என்னை ரொம்பவும் ஆச்சரியமூட்டியது ஒரு விஷயம்:
கமேய்னிக்கு இந்திய இடதுசாரிகள் கொடுத்த / கொடுக்கும் ஆதரவும் மரியாதையும்தான்.
பலர் கமேய்னியின் ஃபோட்டோவை முகநூல் முகப்புப் படமாகவே வைத்திருக்கிறார்கள்.
கமேய்னி ஒரு ஆயதொல்லா. ஆயதொல்லா என்றால் 'அல்லாஹ்வின் பிரதிபலிப்பு' அல்லது 'அல்லாஹ்வின் அறிகுறி' என்று அர்த்தம்.
அதாவது அவர் உண்மையில் ஒரு மதத் தலைவர்.
அவருடன் மோடியைக் கூட ஒப்பிட முடியாது.
காரணம் மோடி மதத்தலைவர் அல்ல. மோகன் பகவத்தையும் ஒப்பிட முடியாது.
காரணம், அவரிடம் மத அதிகாரம், அரசியல் அதிகாரம் இரண்டுமே இல்லை. வேண்டுமானால் யோகி ஆதித்யநாத்துடன் ஓரளவுக்கு ஒப்பிடலாம்,
அவரும் ஒரு மடத்தின் தலைவர் என்பதால். 'ஓரளவுக்கு' என்று சொன்னதற்குக் காரணம், யோகி மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர். கமேய்னி அது கூட இல்லை. 'நிரந்தர முதல்வர்' என்பது போல 'நிரந்தர அதிபர்'.