சனி, 14 நவம்பர், 2015

தெலுங்கு நடிகர் பாலபிரசாந்த் 6-வது மாடியில் இருந்து விழுந்து மரணம்..கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பியபோது

ஹைதராபாத்: கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் பால பிரசாந்த் மரணமடைந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில் தங்கி இருந்து குறும் படங்களில் நடித்து வந்தார்.
இவர், ‘இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர் உண்டா பாபு’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

மாணவனை மலம் அள்ள வைத்ததாக நகராட்சி பள்ளி ஆசிரியை விஜயலக்ஷ்மி கைது.

நாமக்கல், ராமாபுரம்புதுார் காலனியைச் சேர்ந்த வீராசாமி மகன், சசிதரன், 7. அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலை, வகுப்பறையில் சக மாணவன் ஒருவன் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டான்.
அதை பார்த்த, வகுப்பாசிரியர் விஜயலட்சுமி, 35, சக மாணவனான சசிதரனை மிரட்டி அள்ள வைத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று காலை, பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பெற்றோர் தரப்பில், 'சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள், 'இரண்டு நாட்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்' என, உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், இரண்டு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. late news: ஆசிரியர் விஜயலட்சுமி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் மேலும் பதினைந்து நாள் காவலில் வைக்கபப்டுள்ளார்

உயில் சொத்து மனைவிக்கே; வாரிசுக்கு அல்ல

புதுடில்லி: மனைவிக்கு கணவன் எழுதி வைத்த சொத்து மீது, மகன்கள் உரிமை கோர முடியாது' என சுப்ரீம் கோர்ட், அதிரடி தீர்ப்பு வழங்கிஉள்ளது. ந்திராவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பா. இவர், 1920ல், தன் உயிலில், மூன்றாவது மனைவி, வீரராகவம்மாவுக்கு, ராஜமுந்திரியில் உள்ள வீட்டை எழுதி வைத்தார். ஆனால், வாரிசு இல்லாத வீரராகவம்மா, தன் வீட்டை, சுப்பாராவ் என்ற உறவினருக்கு, 1976ல் கொடுத்து விட்டார். இந்நிலையில், அந்த வீட்டை, வெங்கட சுப்பாவின் இரண்டாவது மனைவி மகன் நரசிம்மராவ், பார்த்தசாரதி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதை எதிர்த்து, சுப்பாராவ் தொடர்ந்த வழக்கில், 'சொத்தில் வாரிசுக்கு உரிமை உள்ளது' எனக் கூறிய கீழ் கோர்ட், வீடு விற்பனையை நிறுத்தி வைத்தது. ஆனால், ஐகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டில், சுப்பராவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து, நரசிம்மராவ் வாரிசுகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

பிரான்சில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு ! பாரிஸ் தாக்குதலில் பலியானோருக்கு...

பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இதில் பலியானோருக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் தாக்குதல் சம்பவத்தையொட்டி பிரான்ஸ் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளதாக அதிபர் ஹாலண்டே கூறினார்.

Pepsi க்கு தமிழக அரசு 15கோடிக்கு மேல் பெறுமதியான நிலத்தை 100 ஆண்டுகளுக்கு வெறும் 3600 ரூபாய்க்கு குத்தகை...கலைஞர் அதிரடி...

திமுக தலைவர் கலைஞர் 14.11.2015 சனிக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,கேள்வி :- பணியிலே இருக்கும்போது இறந்து விடும் அரசு அலுவலர் குடும்பத்தின் உடனடித் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த முன்பணம் 5000 ரூபாய் என்பதை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- இந்தத் தொகை அரசு அலுவலர் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து வழங்கப்படுவதாகும்.   இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்திலேயே  சட்டப்பேரவையில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப் பட்ட போதிலும், அதற்கான அரசாணைதான்  ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அ.தி.மு.க. அரசி னால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் எதற்கு முனைப்பும் வேகமும் காட்டு கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறட்டுமா? 

பாரிஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் வீடியோ ..அவசர கால நிலை பிரகடனம் ...வீட் டுக்கு வெளியே வரவேண்டாம் என்று அறிவிப்பு


Police shoot Paris attackers dead
Around 100 people were killed during the attack on the Bataclan concert venue in Paris.The assault at the venue is now over with at least two attackers killed.
Posted by Channel 4 News on Friday, November 13, 2015


பாரிஸில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம் இதுவரை 160 பேருக்கும் மேல் பலி மேலும் பலர் பணயக்கைதிகளாக.....

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன இத்தாக்குதல்களை அடுத்து அனைத்து எல்லைகளையும் பிரான்ஸ் மூடியுள்ளது. பாரிஸ் நகரிலுள்ள மக்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. குறைந்தது மூன்று துப்பாக்கித்தாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நகரின் வட கிழக்குப் பகுதியில் குறைந்தது இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன. ஒரு உணவு விடுதியிலும், இசை அரங்கு ஒன்றிலும் இத்துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன. அந்த இசை அரங்கில் குறைந்தது 100 பேர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவித்தன. பலர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர் இவை மட்டுமன்றி தேசிய விளையாட்டு அரங்கிலும் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த அரங்கில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றபோது, நாட்டின் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந்த் ஜெர்மனிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். தாக்குதல்களை நடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இத்தாக்குதல்கள் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டவையா என்பது குறித்து உடனடியாக சொல்ல முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். bbc.tamil .com

600 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை பிளாக்கில் டிக்கெட் வாங்கி......உருப்படுமா?

டாஸ்மாக் மோசமா அல்லது இந்த சினிமா வியாதி மோசமா? சும்மாவா சொன்னார் நடிகவேள் ? இரண்டுமே மோசம்தான் ! இரண்டுமே ஒரே இடத்தில் தான் சங்கமிக்கிறது....ஜாஸ்மாக்கும் டாஸ்மாக்கும் ஒண்ணுதாய்ன். எந்த கருமத்துக்கு காசை கொட்டினாலும் எல்லாம் ஒண்ணுதாய்ன் !

வெள்ளி, 13 நவம்பர், 2015

சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

"இந்து திருமண சட்டத்தில் 7-ஏ என்ற பிரிவை புகுத்தி, 1968-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.>இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறையான, பிராமணர் புரோகிதர் முன்னிலையில் தாலி கட்டி, தீயை 7 முறை சுற்றி வலம் வருவது போன்ற நடைமுறையை, சுயமரியாதை திருமண சட்டம் வலியுறுத்தவில்லை.>இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.அசுவத்தாமன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். அதில், மாப்பிள்ளையும் பெண்ணும் அக்னியை வலம் வருவது முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை திணிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.>பாரம்பரிய வழக்கத்தை சுயமரியாதை திருமணம் உறுதி செய்யவில்லை. எனவே அந்த சட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.

இன்னக்கு 100 கோடி எல்லாம் சர்வசாதாரணம்....அம்மாகிட்ட இருந்தா தப்பா? அமைச்சர் வீரமணி சொந்த செலவில் சூனியம்...

இன்றைக்கு 100 கோடி சொத்து என்பது சர்வசாதாரணம்.
இந்த மேடையில இருக்குற பல பேருக்கு நூறு கோடிக்கு மேல சொத்து இருக்கிறது. நகரச் செயலாளர் பழனிக்கு நூறு கோடி சொத்து இருக்கிறது. நகரத் தலைவர் அமுதாவுக்கு நூறு கோடி சொத்து இருக்கிறது. பாலசுப்ரமணி, மதியழகன்னு எல்லாருக்கும் பல கோடி சொத்து இருக்கு. எங்களுக்கே இருக்கும்போது அம்மாவுக்கு இருக்கக் கூடாதா?
அதிமுக நகர செயலாளர் ரூ.100 கோடி சொத்து வைத்துள்ளார் என்று பொது மேடையில் அமைச்சர் வீரமணி பேசியது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பேச்சின்போது, பொதுச்செயலாளரிடம் (ஜெயலலிதா) ரூ.66 கோடி இருக்காதா..? என்றும் நகர செயலாளரோடு ஒப்பிட்டு பேசியுள்ளார் வீரமணி. அதிமுக தனது நான்காண்டு அரசின், 'சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை' தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சமீபத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர் கே.சி.வீரமணியும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் அதில் பங்கேற்றனர்.  இதுதாண்டா  ஒப்புதல் வாக்கு மூலம்.......

சோட்டா ராஜனுக்கு சிபியை காவலில் Five Star உபசாரம்...வெளிநாட்டு உணவு ஜூஸ் ...

பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு, சிறையில் வெளிநாட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன
போலி பாஸ்போர்ட் உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜன், தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத்தள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 10  நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிஐ விசாரித்து வருகிறது.
வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு ரொட்டி, பருப்பு வகை மற்றும் ஒரு காய்கறி மட்டுமே அளிக்கப்படும். ஆனால் சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. மும்பையில் இருந்தது வரை இந்திய உணவு வகைகளை உண்டு வந்த சோட்டா ராஜன், 27 வருடங்களுக்கு முன் வெளிநாடு தப்பிச் சென்ற பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டார்.

மோடிக்கு லண்டனில் கிடைத்த "வரவேற்பு"???

ன்றைய நிலையில் நாடு எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ பாசிசத்தை மக்கள் இனங்கண்டு அங்கங்கே தன்னெழுச்சியாக எதிர்த்துப் போராடிவருகிறார்கள். இது இன்றைக்கு உலகம் முழுவதும் வீச்சாக செல்லும் பொருட்டு மோடியின் இலண்டம் பயணம் வரலாற்று இழிபுகழாக வந்து நிற்கிறது.
நாடாளுமன்ற வளாகம்எழுத்தாளர்கள் கொல்லப்படுவது, மாட்டுக்கறி அரசியல், மைஅடிப்பது, வகுப்புவாத கலவரங்களை மூட்டுவது, தலித்துகளை உயிரோடு எரிப்பது, அண்டை நாடான நேபாளத்தில் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என அத்துணை அரசபயங்கரவாதத்திற்கும் எதிராக இலண்டன் மக்களின் எழுச்சி இன்றைக்கு பாசிச மோடியை காறித்துப்பிக்கொண்டிருக்கின்றன. இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்கும் பொருட்டு சமூகத்தின் பரந்துபட்ட சனநாயக குரல்கள் எழுப்பும் எழுச்சி மிகு முழக்கங்களும் பாசிசத்தை அடியோடு நிராகரிக்கும் மக்களின் குரல்களும் வாசகர்களின் பார்வைக்கு இங்கே புகைப்படங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.
பிரபலமான பிக் பென் கோபுரத்துக்கு அருகில் நாடாளுமன்ற வளாகத்தின் மீது நரேந்திர மோடியின் ‘நெகடிவ்’ பிம்பம் காட்டப்பட்டது.

தண்ணீரில் தள்ளாடுது தமிழகம்..ஊத்தி (கெ)கொடுத்த வானம்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால், பெரும்பாலான இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நவஜீவன் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு, மதியம், 12:00 மணிக்கு பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டது. வாரம், இருமுறை இயக்கப்படும் திருவனந்தபுரம் - ஷாலிமர் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில்கள், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை, 7:30 மணிக்கு புறப்பட வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பிற்பகல், 1:30 மணிக்கும்; காலை, 7:15 மணிக்கு புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் மெயில் மதியம், 12:30 மணிக்கும் புறப்பட்டு சென்றன. தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை எழும்பூருக்கு வர வேண்டிய ரயில்கள், பல மணி நேரம் தாமதமாக வந்தன.

400 மேல்பட்ட படங்கள் முடக்கம்...தியேட்டர்களில் டிக்கெட் விலையோ கொள்ளையோ கொள்ளை.....

கனிமொழி நவீன் : மெல்ல தமிழ் சினிமா இனி சாகும் !
தலைப்பை பார்த்தால் பகீரென்று தான் இருக்கும் ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் உண்மை நிலை இது தான்..வாரம் பத்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. எத்தனை படங்கள் போட்ட முதலீடையாவது எடுக்கிறது என்றால் பெரிய பூஜ்யத்தை தான் சொல்ல வேண்டும். இன்றைய தமிழ் சினிமாவில் உட்கார்ந்த இடத்தில் சம்பாதித்து கொண்டிருப்பது யாரென்று தெரியுமா…? பழம்பெரும் தயாரிப்பாளரா…? பழம்பெரும் வினியோகஸ்தரா..? இல்லை திரையரங்க உரிமையாளர்களா..? இதில் எவருமே இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை…என்பது எத்தனை பேருக்கு தெரியும்..? அந்த அளவுக்கு சினிமா புதுப் புது தரகர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.; அதே போல் இன்று திரைப்படங்கள் தயாரிப்பதும் தயாரிப்பாளர் கவுன்சிலோ..சேம்பரோ…கில்டிலோ இருக்கும் பழைய மெம்பர்கள் இல்லை என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்.

வித்யா பாலன் : இந்திராகாந்தி, எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வருகிறது”

சில்க் ஸ்மிதா வேடம் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யா பாலன். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ‘கஹானி’ படத்தில் தீவிரவாதியாக மாறிய கணவனை தேடிப்பிடித்து கொலை செய்யும் பெண்ணாக வந்தார். தற்போது மறைந்த இந்தி நடிகை கீதா பாலி வேடத்தில் புதுப்பட ஒன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் வந்த ‘குரு, உருமி’ படங்களிலும் நடித்து இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு பிரபலங்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இது குறித்து வித்யா பாலன் அளித்த பேட்டி வருமாறு:-
வாழ்க்கை கதை ‘‘நான் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததில் இருந்து வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களுக்கு அழைப்பு வருகின்றன. இந்திராகாந்தி வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். அந்த படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க அழைத்தனர்.

மோடி :மத சகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது..லண்டனில் ஜோக்கடித்த குஜராத் எக்ஸ் சி எம் ....

லண்டன்: இந்தியாவில் மத சகிப்புத் தன்மையின்மைக்கு இடமில்லை. மத சகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர
மோடி இங்கிலாந்தில் தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று மாலை லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அரசு மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அந்நாட்டு பிரதமர் கேமரூனை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசுகையில்,  இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசுவது பெருமையாக உள்ளது. இருநாட்டு உறவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளும் வலுவான ஜனநாயகம், பொருளாதாரத்தை கொண்டுள்ளன. இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் இங்கிலாந்து 3-ம் இடம் வகிக்கிறது.

வியாழன், 12 நவம்பர், 2015

மற்றவர்களை துச்சமாக பார்ப்பதில் நம் நடிகர் திலகத்திற்கு ஈடு இணை கிடையாது....savukkuonline.com

tng 9அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தேன் – சுற்றி எப்போதும் துதிபாடிகள், கதை சொல்லும்போதும் அவருக்கு ஐஸ் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும், உடனிருப்போர் ஆஹா ஆஹா என்று சொல்லுமளவு, ஷூட்டிங்கில் மற்றவர்கள் சாப்பிட்டார்களா என்பதைப் பற்றி கவலைப்படவே மாட்டார்
திரையுலக நிருபராக !
எதிர்பாராத வகையில் எனக்கு சம்பந்தத்திடமிருந்து விடுதலை கிடைத்தது.
இண்டியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஸ்க்ரீன் என்று ஆங்கில வார ஏடு ஒன்றையும் வெளியிட்டு வந்தது. திரையுலகச் செய்திகள் தாங்கி வந்த இதழுக்கு அகில இந்திய அளவில் நல்ல மதிப்பு இருந்தது. அதன் சென்னை நிருபர் சங்கர் வயதானவர். எக்ஸ்பிரஸ் நிருபர்கள் அறையைத் தான் அவர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஏதோ ஒரு நேரம் வந்து ஓரிரண்டு மணி நேரம் இருந்துவிட்டுச் சென்றுவிடுவார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். அவருக்கும் சம்பந்தத்திற்கும் ஆகாது எனத் தெரிந்துகொண்டேன். ஒரு நாள் மதியம் அலுவலகத்தில் வேறு எவரும் இல்லாத நேரத்தில் சங்கரிடம் எல்லாவற்றையும் மூச்சுவிடாமல் சொன்னேன்.

சசி குழுவின் ஜாஸ் சினிமா கட்டுப்பாட்டில் 136 தியேட்டர்கள்...வேதாளம் மீண்டும் முழுமூச்சில்

சென்னை: சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்' என்பார்கள்; இவர்களின் புளுகு மூட்டையை எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும் என்பது போகப் போகத் தான் தெரியும்! என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் ஜாஸ் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசியின் மகன் விவேக். அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால் அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது? முதன் முதலில் இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு நாளிதழ், "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலே உள்ள திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தானே செய்தி வெளியிட்டது. அந்த சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கும், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கும் என்ன தொடர்பு?

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் சோனியா, கெஜ்ரிவால், மம்தா ,அகிலேஷ் யாதவ் ங்கேற்கிறார்கள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அம்மாநில முதல்–மந்திரியாக நிதிஷ்குமார் 5–வது முறையாக பதவி ஏற்க உள்ளார் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை வரும் 14–ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14–ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பதவி ஏற்பு விழா தேதி அதிகாரப்பூர்வமாக முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளது. இருப்பினும், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வருகின்ற நவம்பர் 20-ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பா.ஜ.க., அல்லாத மாநிலங்களின் பெரும்பாலான முதல்-மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி தேவகவுடா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி பாபுலால் மராண்டி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

அடிவாங்கிய கருத்துகணிப்புகள்...பிகாரில் காபரெட் மீடியாக்களுக்கு மரண அடி..பாஜக பலூனை ஊதியது இவர்கள்தான்..


bihar election (7)
bihar election (6)தில்லி கொடுத்த அடியை விட இந்துத்துவ கும்பலுக்கு பீகார் கொடுத்த அடி அதிகம். கிட்டத்தட்ட முதுகு தோலை உரித்து அனுப்பியுள்ளனர். இது ஓட்டுக்கட்சித் தேர்தல் என்கிற பித்தலாட்ட நாடகத்தில் கிடைத்த தோல்வி தான். என்றாலும் இத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து எப்படியும் வென்றே தீர வேண்டும் என்பதற்காக  பாரதிய ஜனதா காட்டிய பிரயத்தனங்களை பார்த்தால் காவிக் கும்பலின் இரத்த வெறியைப் புரிந்து கொள்ள முடியும்.
பாரதிய ஜனதா அமைத்த தேர்தல் வியூகங்களில் அதன் அல்லக்கைகளாக செயல்படும் முதலாளிய ஊடகங்களுக்கு முக்கியமான பங்கு இருந்தது. மாட்டுக்கறி ஆகட்டும், பாகிஸ்தானாகட்டும் – இல்லாத “தேசிய விவாதங்களை” இருப்பதைப் போலவே ஊதிப் பெருக்கிக் காட்டியதில் இவ்வூடகங்களுக்கு பெரும் பங்கு இருந்தது.
ஆரம்ப கட்ட தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது பாரதிய ஜனதா முன்னிலை பெற்றதாக குதூகலித்த முதலாளித்துவ ஊடகங்கள், பின்னர் நிதிஷ் – லாலு கூட்டணியின் வெற்றி உறுதிப்பட்ட போது தோசையை அப்படியே திருப்பிப் போட்டனர். பாரதிய ஜனதா கூட்டணி கணக்குகளை தவறாக போட்டு விட்டது என்றனர் – சிலர் வளர்ச்சிக்கும் சாதிக்கும் இடையே நடந்த சண்டையில் சாதி வென்றது என்று தீர்ப்பெழுதினர் – வேறு சில ஊடகங்களோ பாரதிய ஜனதாவின் காவி செயல்திட்டங்களை இடித்துரைப்பது போல் சுட்டிக்காட்டி விட்டு, இனிமேலாவது இந்துத்துவத்தை விடுத்து வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும் என்று செல்லமாக தட்டிக் கொடுத்தனர்… இந்த ’ஆய்வுகளின்’ தராதரம் என்ன?

கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு சேதம்

கடலூர் மாவட்டத்தில், கன மழை மற்றும் வெள்ளத்தால், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் மற்றும் போக்குவரத்து, இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 9ம் தேதி மாலை, கடலூர் அருகே கரையைக் கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால், கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கியும், வீடுகள் இடிந்தும், 28 பேர் இறந்துள்ளனர்; ஏராளமான கால்நடைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.<br /> <span style=" />மின்சாரம் துண்டிப்பு: ; கன மழையுடன், 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன; மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கின. மின்சாரம் இல்லாததால், குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. கிராமங்களில், குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர்.மாவட்ட தலைநகரான கடலூர், செம்மண்டலம் பகுதியில், நேற்று மாலை தான் மின்சாரம் வழங்கப்பட்டது. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.கன மழையால், மின் வாரியத்திற்கு மட்டும், 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திப்பு சுல்தான் ஜெயந்தி வன்முறை: மரண எண்ணிக்கை இரண்டாக உயர்வு

திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. பெங்களூரில் வி.எச்.பி போராட்டத்தில் தள்ளுமுள்ளு கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி என்கிற நகரில் நடைபெற்ற திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, இரு தரப்புகளுக்கு இடையே மோதல் உண்டாகியது. அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. முதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், மோதலில் பலியாகவில்லை என்றும், ஒரு விபத்தின் காரணமாகவே அவர் இறக்க நேரிட்டது என்றும் கர்நாடக காவல்துறை அறிவித்துள்ளது. இரண்டாவதாக இறந்தவர் கலவரத்தின் போது ஏற்பட்ட காயத்தால், இறந்ததாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் உறுதி செய்கின்றன. பிரிடிஷ்காரன் கல்வியை கொடுத்தான் பெண்களுக்கு சம உரிமை கொடுத்தான் உள்ளூர் மேட்டுக்குடியை விட அவன் ஒன்றும் கொடுமையானவன் அல்ல

அட யாருங்க இப்ப சாதி பார்க்கிறா?



Ex எம்பி ராஜேந்திரன் சுடப்பட்டு மரணமானார்...முன்பு அதிமுக இப்போ திமுக....

கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவில்பட்டி புதிய பேருந்து நிலையில் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்தார். >இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரது உடலையும் அங்கிருந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 11 நவம்பர், 2015

இந்த தாரைகையை ஏமாற்றிய.....உண்மையாக காதலிக்க சினிமாக்காரனால் ..முடியாதாமே?...அவனுக...

இந்த நடிகை என்னப்பா சேலையை மாற்றுவது போன்று காதலரை
மாற்றுகிறாரே என்று கோலிவுட்காரர்கள் இளம் நடிகை ஒருவரை பற்றி பேசுகிறார்கள். உண்மையில் இவர் யாரையும் ஏமாற்றவில்லை இவரை காதலித்ததாக  கூறப்பட்ட அத்தனை ஆண்களும் எதோ ஒரு விதத்தில் இவரை பயன்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. அண்டை மாநிலத்தில் இருந்து கோலிவுட் வந்த அந்த நடிகை வந்த வேகத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். பின்னர் வாய்ப் பேச்சு அதிகம் பேசும் அந்த இளம் நடிகரை காதலித்தார். அவர்கள் காதல் முறிந்து போனது. காதல் முறிந்த சோகத்தில் இருந்த நடிகை அழ ரப்பர் பாடி தோள் கொடுத்தார். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையான அவரை மணக்க நடிகை திரையுலகை விட்டு விலக முடிவு செய்தார். அந்த காதலும் முறிய நடிகை காதலே வேண்டாம் என்று கூறி மீண்டும் நடிக்க வந்தார்.

இந்துத்துவா கொள்கைக்கான வெற்றிடத்தை சிவசேனா நிரப்பும்: உத்தவ் தாக்கரே...

இந்துத்துவா கொள்கைக்கான வெற்றிடத்தை சிவசேனா நிரப்பும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் சுமார் 25 ஆண்டுகள் நகமும் சதையுமாக இருந்த பா.ஜ.க. – சிவசேனா கட்சிகளிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது திடீர் பிளவு ஏற்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்படாததால் சட்டசபை தேர்தலை தனித்தனியே சந்தித்தன. தேர்தல் முடிவில், மொத்தம் 288 இடங்களைக் கொண்ட மராட்டிய சட்டசபையில், தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 145 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 122 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 63 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் வெற்றி பெற்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் சேர சிவசேனா சம்மதித்தது. இருப்பினும், பா.ஜ.க. மீது சிவசேனா மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.  பிகாரில் பாஜகவுக்கு ஏன் மரண அடி   விழுந்தது என்பது இன்னும் இவனுகளுக்கு வெளங்கல...

வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 36...கடலூரில்

தமிழகத்தின் பல பகுதிகளில், மூன்று நாட்களாக கொட்டிய கன மழைக்கு, பலியானோர் எண்ணிக்கை, 36 ஆக உயர்ந்துள்ளது; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில், சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையால் கடலுார் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. வங்கக் கடலில், புதுச்சேரி அருகே, 150 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று முன்தினம் கடலுார் அருகே கரையை கடந்தது. இதனால், சென்னை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, சேலம் உட்பட, பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது.மழை வெள்ளத்துக்கு, கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது; ஏராளமான இடங்களில், நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி, மூன்று நாட்களில், தமிழகம் முழுவதும், மழை, வெள்ள பாதிப்புகளுக்கு, 36 பேர் உயிரிழந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக, 19 பேர் பலியாகியுள்ளனர்.

பர்மா தேர்தல் முடிவுகளை ராணுவம் சகித்து கொள்ளுமா? ஆட்சி அமைக்க ஆன் சான் சூசி பேச்சுவார்த்தை...

பர்மிய தேர்தலில் சரித்திர ரீதியிலான வெற்றியை பெறுகின்ற நிலையில் உள்ள ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்கள் தேசிய நல்லிணக்க பேச்சுக்கு வருமாறு இராணுவ ஆதரவு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத் தலைவர்களை பேச்சுக்கு அழைக்கிறார் சூச்சி அதற்கான பதிலாக, ஞாயிறன்று நடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளை தேர்தல் ஆணையம் முழுமையாக அறிவித்து முடிந்த பின்னர் அந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று அதிபர் தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார். தொலைக்காட்சிக்கான செவ்வி ஒன்றில், ஆங் சான் சூச்சியின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இதுவரை 40 வீதமான இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 90 வீதமான வாக்குகளை ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி பெற்றுள்ளது. bbc.tamil.com

கேளிக்கை வரி அரங்கு உரிமையாளர்களுக்கு ஏன் செல்லவேண்டும். சசி அன் கோவின்..ஜாஸ் ஜாஸ் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்காக .

கேளிக்கை வரிச்சலுகை, மக்களுக்கா? தியேட்டர் உரிமையாளர்களுக்கா? கலைஞர் கருத்து கேளிக்கை வரிச்சலுகை, மக்களுக்கா? தியேட்டர் உரிமையாளர்களுக்கா?
உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி திமுக தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 22-7-2006 முதல் தமிழிலே பெயரிடப்பட்டு, தயாரிக்கப்படும் தரமானத் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பழைய திரைப்படங்கள் தமிழிலே பெயரிடப்பட்டிருந்தால் அவைகளுக்கும் 20-11-2006 முதல் கேளிக்கை வரியிலிருந்து கழக ஆட்சியிலேயே விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இலுமினாட்டி மாபியா என்பது உண்மையா?



செவ்வாய், 10 நவம்பர், 2015

BJP க்குள் குத்து வெட்டு...அமித்ஷாவுக்கு எதிராக அத்வானி ஜோஷி போர்க்கொடி! பில்டிங் ஸ்ராங் பேஸ்மென்ட் வீக்... பீகார்

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சி தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் சாந்த குமார் ஆகியோர் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி உள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி பாடம் கற்கவில்லை என்றும் அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படு தோல்வி அடைந்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேச்சுகளையும் அக்கட்சி மூத்த தலைவர்களே கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

ஸ்ரீதேவியின் பேராசை...புலி தயாரிப்பாளர்கள் திணறல்..இவர்களுக்கு வேற நடிகைகளே கிடைக்கலயா?

புலி’ படத்தில் நாங்கள் சம்பள பாக்கி வைத்திருப்பதாக நடிகை ஸ்ரீதேவி அவதூறு பரப்புகிறார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினார்கள். விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘புலி’. சிம்புதேவன் டைரக்டு செய்தார். சிபு தமீம், பி.டி.செல்வகுமார் தயாரித்தனர். இந்த படம் கடந்த மாதம் வெளியானது. இதில் தனக்கு ரூ.50 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும், அந்த பணத்தை வாங்கி
தரும்படியும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர்கள் சிபு தமீம், பி.டி.செல்வகுமார் ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு: ஸ்ரீதேவி மரியாதைக்குரிய மூத்த நடிகை. நாங்கள் அவருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக அவதூறு பரப்பி இருக்கிறார். ‘புலி’ படத்தில் ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்தபோது ரூ.3 கோடி சம்பளம் கேட்டார். நாங்கள் சம்மதித்தோம். அதில் ரூ.2½ கோடியை உடனடியாக கொடுத்தோம். மீதி பணத்தை படம் வெளியாகும்போது தருவதாக சொன்னோம்.

கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழாவில் பயங்கர மோதல்.... வி.ஹெச்.பி. நிர்வாகி உயிரிழப்பு !

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் வி.ஹெச்.பி. நிர்வாகி ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விடுதலைப் போராட்ட வீரராக திப்பு சுல்தான் திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.  ஆனால் திப்பு சுல்தான் ஹிந்து விரோதி என கூறி இந்த விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.

Chicago... நீதிமன்றம் ...தீர்ப்பு ..சட்டம் ...கவர்ச்சி ....விளம்பரம் ..பத்திரிகைகள் ..எல்லாமே நாடகம்தான்? டேக் இட் ஈசி!

Chicago won six Academy Awards in 2003, including Best Picture. The film was critically lauded, and was the first musical to win Best Picture since 1969.The film is based on the 1975 Broadway musical, which ran for 936 performances
Chicago சிகாகோ ! இத்திரைப்படத்தை பற்றி
எழுதும்போதே மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஇது  ஒரு Broadway ஷோ சம்பந்தப்பட்ட கதை.
படம் பார்க்கும் போது  நாம்  ப்ராட்வே  ஷோவில்  ஒரு நாட்டிய நாடகம் போன்று  அதாவது  மானாட மயிலாட  பாணி நிகழ்ச்சியை  பார்க்கும் உணர்வு வருகிறது,
இத்திரைப்படத்தின்  கதை ஒரு ஒரு பெண் கைதிகளுக்கான சிறைச்சாலையில்தான் பெரும்பாலும் நகர்கிறது,
இரு வேறு வேறு கொலை குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு  சிறைக்குள் வந்து சேர்கிறார்கள் இரு இளம் அழகான நாட்டியகாரிகளும் Rene Zellwagger, Catherina Zeta Jones .
அவர்களுக்கு ஒத்தாசை புரியும்  Queen Latifaa ஊழல்  பெண் ஜெயில் வார்டன்.
அவர் சிபார்சில் வந்து சேர்ந்த  Richard Gerry கில்லாடி வக்கீல்.

இவர்களின் கொலைகள்  லேசுப்பட்டத்தால் . எனவே  இவர்களின் குற்ற பின்னணியின் கடுமையை குறைப்பதற்கு  முதலில் மக்களையும் பத்திரிக்கைகளையும் ஏமாற்றவேண்டும் . அதற்காக கில்லாடி வக்கீல்  அளக்கும் கதைகள் நாடகங்கள் மிகவும் சுவாரசியமானவை,.
அந்த  ஜெயிலில் பலவிதமான குற்றங்களை செய்த நூற்று கணக்கான பெண்கைதிகள்  இருந்தார்கள்.
பணம் இருந்தால் எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற்று வெளியே வரலாம் என்பதை ஓரளவு வெளிப்படையாக காட்டி
இருக்கிறார்கள்.  ஒரு அப்பாவி ஹங்கேரிய பெண் தூக்கில் இடப்படும் காட்சி மிகவும் வேதனையானது.
அதைகூட ஒரு நாட்டிய நாடக பாணியில் காட்டிஇருப்பது மிகவும் ஒரு அற்புதமான கலைவெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும், நவரசங்களையும் பாட்டு நடனமாகவே காட்டி இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பாகும். அதனாலதானோ என்னவோ ஆறு ஆஸ்கார் பரிசுகளையும் அளப்பெரிய வசூலையும் இது குவித்தது,

இலவச மொபைல் போன்: அ.தி.மு.க., தீவிரம்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இலவச மொபைல் போன் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட, அ.தி.மு.க., தயாராகி வருகிறது. தமிழகத்தில், 2006ல், முதன் முதலாக வாக்காளர்களுக்கு, இலவச கலர், 'டிவி' வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், சைக்கிள், பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, காஸ் அடுப்பு, ஆடு, மாடு போன்றவை, இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், வரும் தேர்தலை மனதில் வைத்து, தி.மு.க., தரப்பில், மொபைல் போன் திட்டத்தை, தேர்தல் அறிக்கையில், அறிவிக்க உள்ள தகவல் பரவியது. அதற்கு முன், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட, ஆளுங்கட்சி தயாராகி வருகிறது.    dinamalar.com

திங்கள், 9 நவம்பர், 2015

உச்சதின் மண்டபம்..நடிகர் சங்க கூட்டம்...லட்சங்களில் பில்.....இதுவா தொண்டு? என்னய வால வைத்த..தமில்..மக்கலுக்கு.

பாம்புக்கு தலையும், தவளைக்கு வாலும் ஒரே நேரத்தில் டிஸ்பிளே செய்தால் மட்டுமே இந்த கலியுகத்தில் பிடித்து நிற்க முடியும். அதுவும் டாப்பில் இருப்பவர்களின் நிலைமை, கொஞ்சம் பேலன்ஸ் தவறினாலும் தொபுக்கடீர்தான். உச்சத்தின் ஆதரவு கிடைத்தால் மிச்சத்தை நாமே பார்த்துக் கொள்ளலாம் என நடிகர்களின் இரு அணிகளும் கணக்குப் போட்டு அவரை சந்தித்தன. போட்டிபோட்டு உச்சத்துக்கு சொந்தமான மண்டபத்தில் கூட்டத்தையும் நடத்தினர். இலவசமாக இடம் கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு, லட்சங்களில் வந்த பில் கரண்டை கையில் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. அட, டிஸ்கவுண்ட்கூட தரலையாம் உச்சம். மாங்காய்னு நினைச்சு தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதைதான் webduniya.com

(ஏழ்மையில் வாடும்) சச்சின் உள்ளிட்ட 11 மாஜி வீரர்களுக்கு தலா ரூ.1.5 கோடி பரிசு தொகை

Tendulkar, Dravid, Ganguly and 8 others to receive Rs 1.5 crore each from BCCIமும்பை: சச்சின், கங்குலி, டிராவிட், ரவிசாஸ்திரி, கவாஸ்கர் உள்ளிட்ட , 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேல் ஆடிய அனுபவமுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ.1.50 கோடியை ஒரே நேர செட்டில்மென்ட்டாக அளிக்கிறதாம்.
பிசிசிஐ இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்: சச்சின் டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, திலிப் வெங்சர்கார், சையது கிர்மானி, வெங்கட்ராகவன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகிய 11 வீரர்களுக்கு தலா ரூ.1.5 கோடி பணம் ஒரு டைம் செட்டில்மென்ட்டாக தரப்பட்டுள்ளது.

பீகார் எதிரொலி...மாயாவதி கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கிறது..தேர்தல் கமிஷன்...

1984–ல் தேசிய அந்தஸ்து பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கு 2012–ம் ஆண்டுக்கு பிறகு சரியத்தொடங்கியது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சி மிகவும் குறைந்த சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. இதைத்தொடர்ந்து உங்கள் கட்சியின் தேசிய அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. அதன்பின் நடந்த மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களிலும் அக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க ஓட்டு சதவீதமோ, வெற்றியோ கிடைக்கவில்லை.

உமாபாரதி : பாஜக எம்பி சத்ருக்கன் சின்ஹா நிதிஷ்குமாரை சந்தித்து புகழ்ந்தது கூட்டு சதி


பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக
வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவருக்கு எதிராக மறைமுகமாக கூட்டு சதி நடந்துள்ளதாக மத்திய மந்திரி உமா பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி, சகிப்புத்தன்மை, இடஒதுக்கீடு, மாட்டுக்கறி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுத்தி கொண்டதாக குற்றம்சாட்டினார். மேலும், நிதிஷ்குமாரை சந்தித்த சத்ருகன் சின்கா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சத்ருகன் சின்கா பா.ஜ.க.,விற்கு எதிர் நிலைப்பாடு கொண்டவராக மாறியுள்ளார். கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார். முன்னதாக, பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பா.ஜ.க., எம்.பி.,யும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்கா இன்று சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சின்கா, நிதிஷ்குமாரை புகழ்ந்தும் பேசினார்.

பீகாரில் பாஜக கப்பல் கவிழ்ந்தது ஏன்? சொந்த செலவில் சூனியம் வைத்த மோடியின் வெளம்பர வியாதி...

நல்லா தான் போய்கிட்டு இருந்தது... எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில், பிகாருக்கு ரூ. 5 கோடி நிவாரண உதவி கொடுத்தது தொடர்பாக பிகாரின் முன்னணி பத்திரிக்கைகளில் ரூ. 35 லட்சம் செலவு செய்து ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறார் நரேந்திர மோடி. அப்போது வெளியூரில் இருந்த நிதிஷ்குமார் காலையில் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு கடுப்பாகிறார். என்ன பிச்சை போடுகிறார்களா என்று கேட்டவாறே, பாட்னாவில் உள்ள தனது இல்லத்தின் செயலாளருக்கு போன் செய்து பாஜகவினருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தை ரத்து செய்ய உத்தரவிடுகிறார். சார், ஷாமியானா எல்லாம் போட்டாச்சு, 5 ஸ்டார் ஹோட்டல்களில் இருந்து சமையல்காரர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள், சமையல் ஆரம்பமாகப் போகிறது என்று பதில் பேசிய செயலாளருக்கு டோஸ் விழுகிறது. ஷாமியானைவை கழற்றி வீசிவிட்டு, சமையல்காரர்களை உடனே வீட்டை விட்டு வெளியே போகச் சொல் என்று கூறிவிட்டு பாஜக தரப்புக்கு போன் செய்து விருந்து கேன்சல் என்று அறிவிக்கிறார்.
அன்று தான் விழுந்தது பாஜக- நிதிஷ்குமார் இடையிலான கூட்டணியின் பெரும் விரிசல்....

முதல்வர் ஜெயலலிதா அவசரமாக சென்னை திரும்பியது ஏன்?

கோட நாட்டிலிருந்து, சென்னை, போயஸ் கார்டன் வீட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று திரும்பினார். சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அக்டோபர் 14ல், நீலகிரி மாவட்டம், கோட நாட்டிற்கு சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து, கட்சி மற்றும் அரசு பணிகளை கவனித்து வந்தார். நேற்று மதியம், கோட நாட்டிலிருந்து கோவைக்கு வந்த அவர், விமானம் மூலம், மாலையில், சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம், போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்த ஜெயலலிதாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள், மழையில் நனைந்தபடி வரவேற்றனர். இம்மாத இறுதியில் வர திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, முன்கூட்டியே சென்னை திரும்பியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதன் முக்கிய அம்சங்களாவன:
*அரசு பணிகளை விரைவுபடுத்த உள்ளார்

Burma..பர்மிய தேர்தலில் ஆங் சான் சூ சி யின் ஜனநாயக தேசிய முன்னணி பிரமாண்ட வெற்றி! தொகுதி முடிவுகள் வரத்தொடங்கி உள்ளது

தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது, இருபத்து ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் முதல் சுதந்திரமான தேர்தல் இதுதான் , ராணுவ ஆட்சி கொடுமையில் இருந்து அவர்களின் ஆதரவு ஆட்சியில் இருந்தும் முதல் தடவியாக ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் முதல் தேர்தல் இதுதான், நோபல் பரிசுபெற்ற  ஆங் சான் சூ சி தலைமையில் அவரது கட்சி மிகபெரும் வெற்றியை பெற்றுகொண்டு இருப்பதாக வெளிவரும் தொகுதி முடிவுகள் அறிவிக்கின்றன. இந்த  முடிவுகளை எல்லோரும் எதிர்பாததாக  என்று பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அவர் கூறியுள்ளார். ஆனால், அரசியலமைப்பின்படி, ஒட்டு மொத்த இடங்களில் இராணுவத்துக்கு 25 வீதமான இடங்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்க்கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானால், எஞ்சியுள்ள இடங்களில் அவர்கள் மூன்றில் இரண்டு பங்கை வென்றாக வேண்டும்<
 Myanmar's ruling party conceded defeat in a general election on Monday as the opposition led by democracy figurehead Aung San Suu Kyi appeared on course for a landslide victory that could ensure it forms the next government.
"We lost," Union Solidarity and Development Party (USDP) acting chairman Htay Oo told Reuters a day after the Southeast Asian country's first free nationwide election in a quarter of a century.
By late afternoon, vendors outside the headquarters of the National League for Democracy (NLD) in Yangon were selling red T-shirts with Suu Kyi's face and the words "We won".

நிதீஷ்குமார்: எங்கள் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர்..தேசிய அளவில் மாற்று சக்தி....

பாட்னா: ‘‘பீகார் தேர்தல்
முடிவானது, தேசிய அளவிலான மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. பலமிக்க மாற்று சக்தி உருவாக வேண்டுமென மக்கள் விரும்புவதை காட்டுகிறது’’ என ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் கூறினார். பீகாரில் மெகா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவு, தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது. இது, தேர்தலில் ஒரு புதிய மைல்கல்லாகும். ஒரு தீர்க்கமான முடிவை அளித்த பீகார் மக்களுக்கு நன்றி.
எங்கள் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர். நாடு முழுவதும் இந்த தேர்தல் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய அளவில் பலமிக்க மாற்று சக்தி உருவாக வேண்டுமென மக்கள் விரும்புவதை இது காட்டியுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.

அருண் சோரி : மோடி, அமித் ஷா, அருண் ஜெட்லியே பீகார் தோல்விக்கு பொறுப்பு...பாஜக வேகமாக உடைகிறது...

நாடு முழுவதும் பீகார் தேர்தல் பெரும்
அதிர்வை ஏற்படுத்தியுள்ள சூழலில், பா.ஜ.க-வின் தேர்தல் தோல்விக்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியவர்களே காரணம் என்று முன்னாள் மத்திய மந்திரி அருண் சோரி குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய பா.ஜ.க ஆட்சியின் போது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் மோடியை மையப்படுத்திய தேர்தல் பிரச்சாரம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும், மேலும் பா.ஜ.க வின் பிரிவினை உத்திகளும்தான் படுதோல்விக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று நிருபர்களைச் சந்தித்த அவர், பீகார் தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பு என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகையில், “இதற்கு மோடி, ராஜ தந்திரி(அமித் ஷா) அருண் ஜெட்லி இவர்கள் தான் பொறுப்பு, இவர்களைத் தாண்டி பொறுப்பாளியான நான்காவது நபர் கட்சியிலோ அரசாங்கத்திலோ இல்லை.” என்றார். அருண் ஷோரி பீகார்  தேர்தலுக்கு முன்பே  மோடியை  தாக்க தொடங்கி இருந்தார் என்பதை கவனிக்க வேண்டும். வெறும் டுபாக்கூர் வாக்குறுதிகளை  அள்ளி வீசி  முதலாளிகளின் பணத்தால் ஆட்சியை பிடித்த  மோடியின்  சுயரூபத்தை பாஜாகாவிலேயே பலரும் அறிவார்கள். இவ்வளவு நாளும் அவர்களை கட்டிபோட்டது மோடியின் வெற்றி இமேஜ்தான் ..இப்போ அது காலி.....பாஜக பெரும் புயலை சந்திக்க தொடங்கி விட்டது...பெரும் பிளவை நோக்கி செல்கிறது,

ஞாயிறு, 8 நவம்பர், 2015

மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு...கட்டிய மனைவிக்கு துரோகம்...பிரமச்சாரி வேஷம்...

ஆமதாபாத்: விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், பிரதமர்
நரேந்திர மோடி மனைவி யசோதா பென் மோடியின் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான சான்றிதழ் அல்லது கணவருடன் சேர்ந்து அளிக்கும் அபிடவிட் இணைக்கப்படாத காரணத்தினால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய பாஸ்போர்ட் அலுவலர் கான் கூறியுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்க செல்வதற்காக யசோதா பென் மோடி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.புதிய பாஸ்போர்ட் சட்டப்படி, புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், திருமணம் செய்திருந்தால், அது தொடர்பான ஆவணம் இணைக்கப்பட வேண்டும்.

சோபித தேரர் காலமானார்! இலங்கை சமூக நீதி மக்கள் இயக்க தலைவர்...ஆட்சி மாற்றத்திற்கு காரணமானவர்!

இலங்கையில் சமூக
நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும், மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவருமான மாதுலுவாவே சோபித தேரர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது 73வது வயதில் சிங்கப்பூரில் காலமானார்.காலஞ்சென்ற அவர் கோட்டே ஶ்ரீ நாக விகாரையின் விகாராதிபதியுமாகவும் இருந்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் அவர் முக்கியப் பங்காற்றியிருந்தார்.
உள் நாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வந்த இவர் கடந்த ஜனாதிபதி பொதுத் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று கூட எதிர்பார்கப்பட்டிருந்தது.
அண்மைக் காலமாக உடல்நல பாதிப்புக்குள்ளான அவர் கடந்த செவ்வாய்கிழமை மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துமனையொன்றில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். bbc.tamil.com

Heart and Souls கணக்குகள் முடியுமுன்னே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது சிலருக்கு....இல்லை இல்லை எல்லோருக்கும்தான்


இந்த திரைப்படத்தை பார்பதற்கு  உண்மையில் மிகவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . இது மனிதர்களின் எத்தனையோ அடிப்படை கேள்விகளுக்கு மிக சவாலான ஒரு படமாகும். இன்னும் சரியாக சொல்லப்போனால் எந்த புத்தகத்திலும் எந்த ஞானியும் சொல்ல முடியாத அளவு பிறப்பு, இறப்பு, வாழ்க்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம்  விலாவாரியாக விளங்க வைக்க முயற்சிக்கிறது.
எனது அனுபவத்தில் இது என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம். இந்த உலகில் நாம் எப்படி வந்தோம்? எப்படி போகப்போகிறோம்? எங்கே போகப்போகிறோம்? எப்படி வாழவேண்டும்? இந்த வாழ்வின் அற்புதம்தான் என்ன?
கதை என்னவோ இறந்தவர்களை பற்றிதான் ஆனால் மிகவும் உயிர்த்துடிப்புள்ள படம்.
கணவன் இன்றியே தனது மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் ஒரு  தாய்
தனது இரவு வேலைக்கு செல்கிறாள். அவள் ஒரு பேரூந்தில் ஏறுகிறாள்.
அந்த பேருந்தில் வேறு ஒரு நடுத்ததர வயது பாடகன் ஒருவனும் ஏறுகிறான் . அவனோ தன்னம்பிக்கை இல்லாதவன். பெரிய மண்டபத்தில் நடக்கபோகும் ஒத்திகைக்கு சமுகம் அளிக்க பயந்து தப்பி ஓடிவந்து பேருந்தில் ஏறியவன் .

பீகார் - சமூகநீதிக்கு கிடைத்திட்ட வெற்றி ..வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய ...கி.வீரமணி

பீகார் தேர்தல் முடிவு - ஒடுக்கப்பட்ட சமூகநீதிக் கூட்டணிக்குக் கிடைத்திட்ட வெற்றி: கி.வீரமணி நாடே எதிர்பார்த்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. துவக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை என்பது போல செய்திகள் வரத்துவங்கின! ஆனால் கடைசியில் லாலுபிரசாத்- நிதிஷ்குமார்- காங்கிரஸ் இணைந்துள்ள ராஷ்டிரீய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்துள்ள நிதிஷ் கூட்டணிக்கே மக்கள் பெருவாரியான ஆதரவைத் தந்து, பீகார் ஜனநாயக வரலாற்றில் பொன்னேட்டை இணைத்துள்ளனர்.
அந்நாளில் ‘திராவிடநாடு’ ஏட்டில் அறிஞர் அண்ணா தலைப்பிடுவார் “ஆரம்பத்தில் ‘அடானா’ முடிவில் ‘முகாரி’” என்று முதலில் மகிழ்ச்சி ராகம் பாடியவர்கள், பிறகு துயர ராகத்தில் முடிப்பர் என்று அதை நினைவூட்டுவதாக இது அமைந்தது!
இத்தேர்தலில் முடிவு இந்தியாவின் எதிர்காலம் இருட்டானதல்ல என்பதை நிரூபித்து மக்களின் அவநம்பிக்கையைப்போக்கி புது நம்பிக்கையை விதைத்துள்ளது!
பிரதமர் மோடி 30 பேரணிகள் நடத்தி, நிதிஷ்குமார், லாலுபிரசாத் போன்ற தலைவர்கள் மீது வைத்த தனிப்பட்ட தரக்குறைவான விமர்சனங்கள் “சைத்தான்”, ‘டி.என்.ஏ’, காட்டுத்தர்பார் நடத்துவோர், என்ற பேச்சு, நிதிஷ் அணிக்குப் பெரும் ஆதரவினைத் திரட்டியுள்ளது!

லாலு- நிதீஷ்- சோனியா கூட்டணி வெற்றிக்கு கலைஞர்- முலாயம் வாழ்த்து...

பீகாரில் சமுக நீதியை திறம்பட அமுல் படுத்தியதற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது என்று கலைஞர் தனது வாழ்த்தில் கூறியுள்ளார்
பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். . சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் மற்றும் உத்தர பிரதேச முதல் மந்திரியான அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஷிவ்பால் ஆகியோரும் பீகார் தேர்தலில் பலத்த வெற்றி பெற்றதை அடுத்து அக்கூட்டணி தலைவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளனர்.சமுக நீதி  கொள்கைகள்  சாதாரண மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது

Bihar : நிதீஷ் கூட்டணி 178, பாஜக கூட்டணி 59 இதர அணிகள் 6...பாஜக படுதோல்வி...

பாட்னா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா, இந்துஸ்தான் மோர்ச்சா ஆகியவை இணைந்துள்ளன. இதில் பா.ஜ.க. 160, லோக் ஜனசக்தி 40, ராஷ்டிய லோக் சமதா 23, மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அவசரப்பட்டு பாஜகவினர் வெடி கொழுத்தி சங்கு ஊதி லட்டு கொடுத்து......அப்புறம் நிதீஷின் வெற்றியை கொண்டாடினாய்ங்க

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணிலை வகித்ததால் அக்கட்சி தொண்டர்கள் சங்கு ஊதியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். ஆனால் சிறிது நேரத்துக்கு பின்னர் பா.ஜ.க. பின் தங்கியிருப்பதாக தேர்தல் முடிவுகள் வெளியானதால் அக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். பீகாரின் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து பாட்னாவில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் சங்கு ஊதியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதீஷ் குமார் கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி முகம் - மீண்டும் நிதீஷ் முதல்வராகிறார் ....பாஜக 72 மோடி மந்திரம் பலிக்கவில்லை


நிதீஷ் குமாரின் வெற்றி உறுதிபடுத்த பட்டு விட்டது  , ஆட்சி அமைக்க  தேவையான 122 தொகுதிகளையும் தாண்டி 140 தொகுதிகளில் நிதீஷ் லாலு காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி தற்போது உறுதியாக தெரிகிறது,
பாஜக முழு மத்திய மந்திரிகைகளையும் களம் இறக்கி ஏராளமான பணபலத்துடன் மோடியின் பூதகரமான இமேஜ் பில்டப்புக்களையும் தாண்டி மதசார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது.

Bihar Election நிதீஷ் கூட்டணி முந்துகிறது 135 இடங்களிலும் ....பா.ஜ., கூட்டணி 90 இடங்களிலும்

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் காலை 8 மணிக்கு துவங்கி எண்ணப்படுகின்றன. 243 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் 39 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதனால் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணி 82 இடங்களிலும், நிதிஷ்குமார், லாலு பிரசாத்-காங்கிரஸ் கூட்டணி 86 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ரகோபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரதாப் முன்னிலையில் இருந்து வருகிறார்.<

திமுக தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை...பிரேமலதா திமுகவை விமர்சிப்பது அதிக சீட் கேட்கத்தான்...

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க, தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, ரகசிய பேச்சு துவங்கப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.அ.தி.மு.க.,வை எதிர்க்க கூட்டணி அவசியம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், மகளிர் அணி செயலர் கனிமொழியும் கருதுகின்றனர். ஆனால், தனித்தே போட்டியிட, பொருளாளர் ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கு, கூட்டணி சேர, ஆட்சியில் பங்கு வேண்டும் என, நெருக்கடி கொடுப்பது தான் காரணம். ஆனால், தே.மு.தி.க., - காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, கனிமொழி, களமிறங்கி உள்ளார். கனிமொழியின் ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். அப்போது, இரண்டு கட்சிகளும் சேர வேண்டிய அவசியத்தை உணர்த்தியவர்கள், 'சீட்' பேரம் குறித்தும் பேசியுள்ளனர். இந்த தகவல் விஜயகாந்திடம் சொல்லப்பட்டுள்ளது. அவர், 'டிசம்பரில் நடக்கும் ராகு - கேது பெயர்ச்சிக்கு பின், கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம்' என கூறியுள்ளார்.

பீகார் தேர்தல் கடும் போட்டி பாஜக 80 இடங்களில்...நிதீஷ் கூட்டணி 79 இடங்கள் ..

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி முன்னிலை பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் காலை 8 மணிக்கு துவங்கி எண்ணப்படுகின்றன. 243 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் 39 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதனால் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. .nakkheeran.in

ஜெயலலிதா 38 கம்பெனிகளை சசிகலாவின் உறவுகளையும் நட்புகளையும் டைரக்டர்களாக்கி நடத்து கிறார்..

"வாரிச் சுருட்டும் கார்டன் கூட்டம்' என நக்கீரனில் வெளி வந்த கவர் ஸ்டோரியைத் தொடர்ந்து ஏராளமான தகவல்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் பறந்து வந்துகொண்டிருக்கின்றன. (2015 ஜூன் 27-30 இதழில் முதன்முதலில் இதை வெளியிட்டதும் நக்கீரன்தான்) ஜெ.வின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உறவுச் சங்கிலியில் இவரை விட்டுவிட்டீர்கள் என்ற தகவல்கள் ஒருபக்கம். மறுபக்கம், ஆட்சியைப் பயன்படுத்தி சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய 38 கம்பெனிகளை சசிகலாவின் உறவுகளையும் நட்புகளையும் டைரக்டர்களாக்கி நடத்து கிறார் என நாம் ஆதாரத் துடன் தந்த பட்டியலையும் தாண்டி இன்னும் பல கம் பெனிகள் இருக்கிறது என் கிறார்கள். அதில் முக்கியமா னது பலரும் அறிந்த மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ்.

2016 இல் தமிழக தேர்தல்....தனிதனியா கேட்டு அப்புறம் சேருவாய்ங்க.....வேற வழி? குதிரை பேரம்!

ஆர்.மணி வரும் 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் இதுவரையில் தமிழகம் கண்டிராத ஒன்றாக மாறும் அனைத்து சாத்தியங்களும் உள்ளன. . தமிழக அரசியல் வரலாற்றில் இத்தனை முதலமைச்சர் வேட்பாளர்களும், கட்சிகள் தனித் தனி அணிகளாய் நிற்கும் காட்சியும் இதுவரையில் நடந்தேறியதில்லை. அஇஅதிமுக சார்பில் ஜெயலலிதா, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாஜக சார்பில் ஒரு முதலமைச்சர் வேட்பாளர், தேமுதிக சார்பிலோ அல்லது ஒரு கூட்டணியின் சார்பிலோ விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில்  ஒரு வேட்பாளர். இது தவிர திமுக சார்பில் அனேகமாக இரண்டு வேட்பாளர்கள், ஆம்... மு.க. ஸ்டாலின் மற்றும் மு.கருணாநிதி. எல்லா கட்சிகளின் சார்பிலும் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்றால் திமுக சார்பில் இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்கலாம். இந்த இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் என்பது அறிவிக்கப் படாததாக இருக்கும். விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஸ்டாலினை முதலைமச்சர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நிறுத்தும் காரியத்தை திமுக ஒரு போதும் செய்யாது.

Abdul Sattar Edhi பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரைப்பட்ட கீதாவை பராமரித்தவர். உலகின் மிகப்பெரும் NGO வின் நிறுவனர்..நோபல் பரிசுக்கு உரியவர்...

ஏ.கே.கான்:  கீதா.... பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட வாய் பேச
முடியாத, காது கேளாத இந்த இளம் இந்தியப் பெண் இப்போது மீடியாக்களால் மறக்கப்பட்டு, இந்தூரில் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது உண்மையான குடும்பம் எது என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அவர்களிடம் கீதாவை ஒப்படைக்கும் வேலையில் உள்ளது வெளியுறவு அமைச்சகம். 14 ஆண்டுகளுக்கு முன் ரயில் ஏறி லாகூரில் போய் இறங்கிய இந்த சிறுமியை ஆவணங்கள் ஏதும் இல்லாததால் கராச்சியில் உள்ள ஈதி பவுண்டேசன் அமைப்பிடம் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரான ரேஞ்சர்கள். Meet Abdul Sattar Edhi, The Man Who Kept Geeta Safe அதுமுதல் அந்தக் குழந்தையை பத்திரமாக வைத்திருந்து பராமரித்தவர்கள் ஈதி பவுண்டசேனின் தலைவர் அப்துல் சத்தார் ஈதியும் அவரது மனைவி பில்கிஸ் ஈதியும் தான். சிறுமி தனது பெயரைக் கூட சொல்லத் தெரியாத, சொல்ல முடியாத நிலையில், இந்தியாவில் இருந்து வந்த சிறுமி என்பதால் கீதா என பெயர் சூட்டியதும் அப்துல் சத்தார் ஈதி தான்.