அப்பல்லோ ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் பிசியோதெரபி பயிற்சி நிபுணர்கள் நாளை சென்னை வர உள்ளனர். சென்னை: முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்று (சனிக்கிழமை) டாக்டர்கள் 24-வது நாளாக சிகிச்சை அளித்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே ஆலோசனை வழங்கி வருகிறார்.













vikatan.com : காதலித்து
ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால்
மனம் உடைந்த பெண் போலீஸ் ராமு தற்கொலை செய்தார். காவல்துறை உயர்
அதிகாரிகளின் மிரட்டல் காரணம் ராமு இந்த முடிவை எடுத்துள்ளதாக மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.




























