சனி, 15 ஆகஸ்ட், 2020

செந்தில் வேல் : NEWS 18 தொலைக்காட்சியில் இருந்து நான் ஏன் விலகினேன்? நேரடி விளக்கம் . காணொளி

         Nilavinian Manickam : திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டேன். மரம் வெட்டியுள்ளேன், பழ வியாபாரம் செய்துள்ளேன்.

ஒருமுறை 3 மாதங்கள் உழைத்து 2 மாத சம்பளத்தை வீட்டிற்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு இங்கு வந்தது வரை என் வாழ்க்கை முழுக்க கஷ்டம், துன்பம், கவலை மட்டுமேதான். கடுமையாக போராடி என் படிப்பை தொடர்ந்தேன், ஊடகத்திலும் இணைந்தேன். ரூ.8000 சம்பளத்தில் ஆரம்பித்து இன்று பல லட்சங்கள் வரை சம்பாதிக்கிறேன். சத்தியம் டிவியில் பணியாற்றியபோது பொங்கல் பண்டிகை அன்று பிரபலங்களை வைத்து நிகழ்ச்சி நடத்திய சேனல்களுக்கு மத்தியில் திருநங்கைகளை வைத்து நான் நிகழ்ச்சி நடத்தினேன்.              ஏனென்றால் ஆரம்பம் முதலே நான் குரலற்றவர்களின் குரலாக இருப்பதில் பேரார்வம் கொண்டவன். அதற்கு அடிப்படை காரணம் நான் கடந்து வந்த பாதை. கூடன்குளம் அணு உலைக்கு எதிராக மக்களோடு கைகோர்த்து குரல் கொடுத்தேன்.          கதிரா மங்கலத்திற்கு எதிரான சாமானியர்களின் போராட்டத்தில் பங்குபெற்றேன். சென்னை பெருவெள்ளம் வந்தபோது முழுக்க நான் ஊடகத்திலேயே இருந்துதான் மக்களுக்கான குரல்களை நாட்டிற்கு ஒளித்துவந்தேன். அன்றைய தினம் என் மனைவி, பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பதுகூட தெரியாது. ஆலப்பாக்கம் பகுதியில் இருந்த எனது மொத்த வீடும் மழைநீரால் நிரம்பியிருந்தது பின்னர்தான் தெரியவந்தது.

அதிமுக எந்த சாதனை செய்த தைரியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது? சாவித்திரி கண்ணன்

சாவித்திரிண்ணன் : எந்த சாதனையை செய்த தைரியத்தில் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்? சுய அறிவும் கிடையாது..!
சொல்வதைப் புரிந்து கொள்ளும் திரானியும் இல்லை! இருவரும் சுய நலத்தின் உச்சம்! மக்கள் நலன் சார்ந்து யோசிக்காமால் தங்களுக்கு என்ன ஆதாயம் என்ற கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் அணுகுகிறார்கள்! கொரானா விவகாரம் ஒன்று போதுமே…உங்கள் கோமாளித் தனத்தைக் கண்டு நாடே சிரிக்கிறது..! அதிகாரவர்க்கம் இழுத்த இழுப்புக்கு ஓடுவதும், கிடைத்தவரை ஆதாயம் என எல்லா வழிகளிலும் சுருட்டுவதும் தான் நடக்கிறது! 2016 ஆண்டின் இறுதி தொடங்கி இன்று வரையில் தமிழகத்தில் காலியாகும் எல்லா மத்திய அரசு பணியிடங்களிலும் கிட்டதட்ட 90% வட மாநிலத்தவர் வந்து ஆக்கிரமித்து வருகிறார்கள். இரண்டு நாட்கள் முன்பு கூட திருச்சி பொன்மலை ரயில்வே கோட்டத்தில் அடி நிலை பணியாளர்களுக்கான 518 இடங்களுக்கு தமிழ் நாட்டில் அல்லாதார் 500 பேரை நியமித்துள்ளார்கள் என்றால், இவர்கள் இருவரையும் முகமாக வைத்துக் கொண்டு பாஜக நடத்தும் சித்துவிளையாட்டு தானே இது!

திமுக கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்? ஐபேக் சர்வே!

மின்னம்பலம:    வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான உத்தி வகுத்தலுக்காக பிரசாந்த்
கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளதும், அதற்கான பல்வேறு பணிகளில் ஐபேக் குழுவினர் ஈடுபட்டிருப்பதும் மின்னம்பலம் வாசகர்கள் அறிந்ததே. திமுகவுக்காக தமிழகத்தில் பல்வேறு சர்வேக்களிலும் ஐபேக் குழுவினர் இறங்கியுள்ளனர்.   

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை மாதத்துக்கு இருமுறை சந்தித்து அவ்வப்போதைய தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசி அதன் மூலம் மக்களின் எண்ண ஓட்டம் எந்தத் திசையில் செல்கிறது என்பதை கணிக்க சிறப்பு சர்வேக்களை எடுத்து வருகிறது ஐபேக். இது தொடர்பாக ஏற்கனவே மின்னம்பலம் இதழில் செய்தி   ..   வெளியிட்டுள்ளோம். தற்போது மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் சர்வே முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து போனிலேயே சர்வே எடுத்து வருகின்றது ஐபேக். திமுக வரும் தேர்தலில் 180 சீட்டுகள் வரை ஜெயிக்க முடியும் என்றும், கொங்கு பகுதியில் திமுக 3% சரிவைச் சந்தித்துள்ளது என்றும் ஏற்கனவே கிடைத்த சர்வே முடிவுகளை திமுக தலைமைக்கு அனுப்பியிருக்கிறது ஐபேக். அந்த வகையில் லேட்டஸ்டாக திமுக கூட்டணியைப் பற்றி சர்வே எடுத்துள்ளது ஐபேக்.

கோயில் யானைகளை சித்ரவதை செய்து கொன்று விட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்’ ..கேரளா வீடியோ

சுவாமிநாதன் நடராஜன் -- பிபிசி உலக சேவை:   

மதத்தின் பெயரில் யானைகள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் பணியில் கடந்த ஏழு ஆண்டுகளாக சங்கீதா ஈடுபட்டுள்ளார்.  “தனது சொந்த படைப்பு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதை எந்த கடவுளால் பொறுத்துக்கொள்ள முடியும்? இது முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.  கேரளாவில் பிறந்து, தற்போது கனடாவின் டொரோண்டோ நகரில் வசித்து வரும் ஆவணப்பட தயாரிப்பாளரான இவர், தான் இளம் வயத்தில் மற்ற சிறுவர்களை போன்று யானைகளை காணும்போதெல்லாம் மிகவும் உற்சாகமடைந்ததாக கூறுகிறார்.“என் சிறு வயதில் யானைகள் அணிவகுத்துச் செல்லப்பட்டதை கண்டபோது, அவை மிகவும் அழகாக இருப்பதாக நான் நினைத்தேன்” என்று சங்கீதா கூறுகிறார். இவ்வாறு அணிவகுத்து செல்லப்படும் யானைகள் அனுபவிக்கும் கோரமான விஷயங்களை சில காலத்திற்கு பின்னரே அவர் அறிந்தார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி .. பாஜகவின் குதிரை பேரம் தோல்வி

தினமலர் : ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில், முதல்வர் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது. 'காங்கிரசின் வலிமையான போர் வீரன் நான்; என்ன விலை கொடுத்தேனும், ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றுவேன்,'' என, சச்சின் பைலட் கூறினார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட்டிடமிருந்து, துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், தனக்கு பெரும்பான்மையிருப்பதாக தெரிவித்த முதல்வர் கெலாட், அதை சட்டசபையில் நிரூபிக்க முடிவு செய்தார். கோரிக்கை.    இதற்காக, சட்டசபையை கூட்ட வேண்டும் என கோரி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு, கெலாட் அரசு, நான்கு முறை கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஆக., 14ம் தேதி சட்டசபையை கூட்ட, கவர்னர் அனுமதி அளித்தார். இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, எம்.பி., ராகுல் ஆகியோரை, சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டது. கெலாட்டுடன் இணைந்து பணியாற்ற, சச்சின் பைலட் சம்மதித்தார்

தனலட்சுமியின் கல்வி கேள்விக்குறி .. ஜாதி சான்றிதழ் இல்லையாம் ... பரங்கிணி கிராமம்

Yuvan Swang : படத்தில் இருக்கும் பெண் தனலட்சுமி.தி.பரங்கினி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி பெண்.பத்தாம் வகுப்பில் தான் படித்த பள்ளியில்
முதலிடம்.இப்போது +2 முடித்திருக்கிறார்.     கடந்த வாரம் அவரை நான் திண்டிவனம் வரவழைத்து பிஎஸ்சி அக்ரி படிப்புக்கு விண்ணப்பிக்க ஒரு பிரவுசிங் செண்டருக்கு அழைத்துச் சென்றேன்.       காந்திகிராமம் பல்கலைக்கழகம் இணையதளத்தில் சாதிச்சான்று வழங்கப்பட்ட தேதி,வழங்கிய அதிகாரி நிலை கேட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாதிச்சான்றிதழ் கேட்டது.     இவரிடம் சாதிச்சான்று இல்லாததால் இரண்டு இடங்களுக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை. அவர் முகத்தில் வெளிப்பட்ட ஏமாற்றத்தை உணர முடிந்தது.
அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு இயல்பாக இருக்க முயற்சி செய்தார்.

இப்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் விண்ணப்பம் பெறப்படுகிறது.

இன்னும் பதினைந்து நாட்களுக்குள் இவருக்கு சாதிச்சான்று கிடைத்தால் அவருக்கு உறுதியாக அக்ரி சீட் கிடைக்கும்.ஆனால் சாதிச்சான்று இல்லாமையால் இவர் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

பெரியார் : வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் நாட்டை ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன்..

ஈட்டி´ என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. (´குடிஅரசு´, 06.12.1947)  பார்ப்பனியத்தின் படுமோசமான போக்கை, அதனால் ஏற்படும் ஆக்கிரமமான அழிவுகளை நாம் அடிக்கடி எடுத்துக் காட்டி அப்பார்ப்பனியப் பிடிப்பிலிருந்து நாம் (திராவிடர்கள்) அகன்றால்தான் நமக்கு வாழ்வுண்டு என்பதையும் சொல்லி வந்திருக்கின்றோம். 

பார்ப்பனியம் இந்த நாட்டில் நுழைந்த காலத்திலிருந்தே அதற்கு எதிர்ப்பு இருந்து வந்திருக்கின்றது. அதற்கு ஏற்பட்டிருக்கும் அளவற்ற எதிர்ப்புக்குப் பிறகும், அது இன்னும் ஆட்சி செய்கிறதென்றால்  – ஆட்சியை ஆட்டி வைத்து வருகின்றதென்றால், அதற்குக் காரணம் அந்தப் பார்ப்பனியத்தின் “எட்டினால் குடுமியைப் பிடி, எட்டாது போனால் காலைப்பிடி” என்கிற போக்குத்தான் காரணம் என்றும் விளங்கி வந்திருக்கின்றோம். 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

புதிரை வண்ணார் சமுகம் .. ஆதி தமிழ் சமுகத்தின் சித்த வைத்தியர்கள்

பூர்வீக மிழர்ட்சி: தற்போது பல வரலாற்று ஆசிரியர்களால் சொல்ல படுவது புதிரை வண்ணார் என்பவர்கள் தலித் சமூகமான பள்ளர் பறையர்
சமூகத்திற்கு முடி திருத்துதல், அவர்களின் துணியை துவைத்து கொடுத்தால், இறப்பு நிகழ்வுகளில் துவக்கம் முதல் முடிவு வரை நின்று சொர்க்கவாசல் திறப்பு போன்ற பல சம்பிரதாயங்களை செய்பவர்கள் என்பது மட்டும் தான்..

ஆனால் புதிரை வண்ணார் என்பவர் மருத்துவர் இல்லாத காலத்தில் கிராமப்புறங்களில் பல உயிர்களை காப்பாற்றிய தமிழ் சித்த மருத்துவர் இந்த புதிரை வண்ணார் தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் சொல்ல மறந்தது ஏன் என்று தெரியவில்லை!!     இன்றும் பல கிராமங்களில் வைத்தியர் என்றால் அது இந்த புதிரை வண்ணார்கள் தான் ..
சிறிது காலத்திற்கு முன்பு சித்தவைத்தியம் பற்றி ஏடுகள் அதிகமாக கிடைத்தது என்றால் அதும் இந்த புதிரை வண்ணார்களிடம் தான் அதிகம்...

காங்கிரசில் இருந்து விலகியது புத்திசாலித்தனமான முடிவு: எஸ்.எம்.கிருஷ்ணா

தினத்தந்தி :காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம் நான் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்து உள்ளதாக நினைக்கிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.         

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:- நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை விமர்சிக்கும் பயத்தை கைவிட வேண்டும். காங்கிரஸ் சக்தி வாய்ந்த கட்சியாக இல்லாமல் போய் விட்டது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் கட்சியின் பலம் அதிகரிக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு       மாலைமலர்: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்தற்தை அவமதிக்கும் வகையில் டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பின் தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் இணைந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22-ந்தேதி டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார்.
இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்தது. இன்று அந்த வழக்கு மீதான தீர்ப்பை அருண் மிஷ்ரா தலைமையிலான பி.ஆர். கவாய், கிருண்ஷ முரளி கொண்ட அமர்வு வழங்கியது.div>அப்போது பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவித்தது.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

 தினமணி : கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது..      இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை மிக சிக்கலான நிலையில் இருப்பதாக மருத்துவமனையில் அறிக்கை தெரிவிக்கிறது.   அவரது உடல்நிலையை மருத்துவர்களின் குழு ஒன்று கண்காணித்துவருவதாக அவர் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.   

யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி

வினவு : வொயிட் போர்ட், எக்சல் ஷீட், எக்கோ வாய்ஸ், ஃபேக் நியூஸ் புகழ் மாரிதாஸ்... யார் இவர், இவரை இயக்குவது யார்... தெரிந்து கொள்ள பாருங்கள் இந்த காணொளியை... தமிழ் ஊடகங்களில் காவிகளைப் புகுத்தும் வேலைக்காக அடியாளாக செயல்பட்டவர் மாரிதாஸ். அதுமட்டுமல்லாது தொடர்ந்து தனது பேச்சில் பெரியாரையும், மார்க்சியத்தையும் வசைமாறி பொழிவதும், பொய்களை சத்தமாக பேசுவதும், புள்ளிவிவரம் என்று எக்சல் ஷீட்டை வைத்து பிதற்றுவதும் அவரது வழக்கம். தமிழகத்தின் ‘சிறந்த ஊடகவியலாளர்’ என பொறுக்கி நித்தியானந்தா வாயால் ஆசி பெற்றதிலிருந்தே இவரது மாகத்மியத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

எஸ் வி சேகர் மீது வழக்கு . .தேசிய கொடியை அவமதித்தார் ..?

தினகரன் : சென்னை: தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக.வை சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும் என்று எஸ்.வி.சேகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

11 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி .. 150 பள்ளிகளில் ஒருவர் கூட தேறவில்லை .. உத்தர பிரதேசம்

Sergio Marquina : · மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு கருவி.
கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு அறுக்கத் தெரியாதவன் கையில் 1008 அருவா . இதன் பொருள் ஒரு செயலை செய்வதற்கு அறிவு முக்கியம் வெறும் கருவிகளை வைத்து கொண்டு ஒன்றும் செய்துவிட முடியாது என்பது. தமிழகத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தமிழும் தொழில்நுட்ப அறிவு பெறுவதற்கு சர்வதேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு ஆங்கிலமும் இங்கே பெரும்பான்மையானவர்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே நன்றாகவே தெரிந்திருக்கிறது.     தமிழர்களுக்கு இன்னொரு மொழியை கற்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படும்போது அதை கற்றுக் கொள்வதற்கு தேவையான மேம்பட்ட அறிவு இங்கே இருப்பதற்கு மூடத்தனமான கொள்கைகளை தமிழகம் இதுநாள்வரை கடைபிடிக்காத ஒரு நேர்மையான கல்விக் கொள்கைகளே காரணம்.

கல்வி அந்தந்த மாநிலங்களில் மொழி கலாச்சாரம் வரலாறு தொடர்பாக இருக்க வேண்டுமே தவிர தொடர்பற்ற வேற்றுமொழி மனிதர்கள் அவர்களின் இலக்கியங்களை படிப்பதில் தனிமனிதனுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது.

STOP ADANI ஆஸ்திரேலியாவில் அதானி சுரங்கத்திற்கு எதிராக போர்க்கொடி

சுமதி விஜயகுமார் : · ஆஸ்திரேலியாவில் இந்திய பெயர் ஒன்று மிக

பிரபலம். மோடி இல்லை. இந்தியாவில் தான் கல்யாணம் ,காது குத்து என துவங்கி தேர்தல் வரை பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்படும். ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பெரிய தேர்தல் என்றாலும் முட்டிக்கால் அளவிற்கு ஒரு குச்சியில் வேட்பாளர் படமும் அவரின் பெயர் மற்றும் கட்சியின் பெயர் இருக்கும், அவ்வளவு தான். ஆனால் ஒரு இந்திய பெயர் தாங்கிய மிக சிறிய போஸ்டர் ஒன்று ஆஸ்திரேலியாவின் தலைநகராகிய கான்பராவில் ஒட்டப்பட்டிருக்கிறது. 

வெறும் பெயர் மட்டும் சொன்னால் பல ஆஸ்திரேலியர்களுக்கு தெரியாது. ஒரு இயக்கத்திற்கே அவரின் பெயர் தான்     . STOP ADANI. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சியான SBS இந்தியாவில் ஒரு String operation நிகழ்த்தினார்கள்.       குஜராத்தில் அதானி குழுமம் எப்படி ஒரு துறைமுகத்தையே வளைத்து சொந்தம் கொண்டாடி அதை நிர்மூலம் ஆக்கியதென்று. அதோடு மட்டும் நிற்காமல் அதானி குழுமத்திற்கு அந்த அனுமதியை இந்திய அரசு எப்படி கொடுத்தது என்றும் ஆராய துவங்கினார்கள். 2 நாட்கள் தான். இரண்டாம் நாள் இரவு SBS நிருபரும், ஒளிப்பதிவாளரும் (இருவரும் ஆஸ்திரேலியர்கள்) நடு இரவு மிரட்டப்பட்டு இரவோடு இரவாக ஆஸ்திரேலியாவிற்கு துரத்தப்பட்டார்கள். மிரட்டியவர் ஒரு காவல்துறை அதிகாரி. அதுவரை காட்சிப்படுத்தியதையும் , தாங்கள் மிரட்டப்பட்டு துரத்தப்பட்டதையும் தொகுத்து நிகழ்ச்சியாக வழங்கினார்கள்.

சோனியாகாந்தி! ஆர் எஸ் எஸ் குள்ள நரிகளின் வாலை பல தடவை ......

பாலகணேசன்ருணாசலம் : · இந்திரா காந்தியோ அல்லது ராஜீவ்

காந்தியோ அவர்கள் இயற்கையாக மணிக்கும் வரை ஆட்சி செய்திருந்தால் இந்தளவு இந்தியா முன்னேறியிருந்தி ருக்குமா...என்றால் சந்தேகமே?

.காரணம் அவர்களுடன் அட்டையாக ஒட்டிக் கொண்டிருந்த RSS கூட்டம் அவர்களை செயல்பட விட்டிருந்திருக்கமாட்டார்கள்..      சோனியா காந்தி காங்கிரஸ் தலைமை ஏற்றபிறகு காங்கிரஸில் இருந்த RSS கூட்டம் அவரை பிற்போக்குத்தனம் , பண்பாடு பாரம்பரியம் அது இது என அவரின் தலையில் மொளகா அரைத்து நாட்டை இருந்த நிலையிலேயே வைத்திருக்க முயன்றும் அது முடியவில்லை..

.RSS சித்பவன் கூட்டம் இந்திரா ராஜீவை அணுக முடிந்த அளவுக்கு சோனியாவை அனுகமுடியாது
அவர் ஒரு வெளிநாட்டுக்காரி என்று சங்கிகள் அவரை ஏளனம் செய்தது அந்த வெறுப்பில்தான்..இந்தியா பிற்போக்குத் தனத்திலிருந்து விடுதலை அடைந்ததும் வெள்ளைக்காரர்களாலேயே, இங்குள்ள ஏழைகளுக்கு தரமான வாழ்வு கிடைத்த தும் சோனியா காந்தி எனும் வெள்ளைக் காரியால்தான்..

நரசிம்மராவ் மன்மோகன் சிங் இன்னும் பல உலக அறிவு கொண்ட பொருளா தார அறிஞர்களின் ஆலோசனைகளுக்கு முட்டுக்கட்டை போடும் RSS நபர்களை ஆட்சி நிர்வாகத்தில் அண்ட விடாமல்   GO HEAD Tick அடித்து இந்தியாவை வளர்ந்த பொருளாதார நாடாக மாற்ற உதவினார்...

கமலா ஹாரிஸும் இந்திய நிறவெறியின் இரு முகங்களும் ! அதிகாரத்திற்கு அருகில் செல்ல துடிக்கும் கும்பல்கள்.

மனுஷ புத்திரன் : அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.  இந்த செய்தி நேற்று முதல் அமெரிக்காவிலும், இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மத்தியிலும் பெரும் களிப்பின் அலைகளை ஏற்படுத்தி வருகிறது.         கமலா ஹாரிஸின் தாய் சென்னையை சேர்ந்தவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்...   கமலாவின் தாய் தன்னை ஒக்லாந்தின் கருப்பின கலாச்சாரத்திற்கு மாற்றிக் கொண்டார், அவர் தனது இரு மகள்களையும் கருப்பின கலாச்சாரத்தின் படியே வளர்த்தார் என்றும் கமலா தனது பேட்டி ஒன்றில் தெரிவிக்கிறார்.   ..  "எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.        "நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும் எனவே நாங்கள் தன்னம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ராஜஸ்தானில் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி .. சச்சின் பைலட் பேராசை வீணானது!

சாவித்திரி ண்ணன்
: · ராஜஸ்தானில் ஆப்பரேஷன் லோட்டஸ் தோல்வி கண்டது! அதனால், அதிர்ஷ்டவசமாக நோயாளி தப்பித்துவிட்டார்! கோவாவில் கொத்தாக அள்ள முடிந்தது! நாகலாந்தில் நாற்றமெடுத்த அரசியலை அரங்கேற்ற முடிந்தது!       மணிப்பூரில் பாஜகவின் money politics வென்றது! கர்நாடகத்தில் கவிழ்க்க முடிந்தது!     மத்தியபிரதேசத்தில் ஜோதிராதித்திய சிந்தியாவை தூக்கமுடிந்தது!   பாஜகவின் பண பலம், அதிகார பலம், நீதிமன்றத்தை சட்டமன்ற அதிகாரங்களில் தலையிட வைத்தது, அழிச்சாட்டியம் செய்த கவர்னர்…. ஆகிய அனைத்து அஸ்திரங்களும் செயலிழந்தன! ஒரு மாத முயற்சிக்கு பிறகும் ராஜஸ்தானின் காங்கிரஸ் கோட்டையை ஒன்றும் செய்யமுடியவில்லை! பாஜக அவமானப்பட்டது தான் கண்டபலன்!

அனுபவசாலியான முதல்வர் அசோக்கெலாட்டின் உறுதிப்பாடு! காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஒற்றுமை, காங்கிரஸ் மத்திய தலைமையின் அசாத்திய பொறுமை ஆகியவற்றால் வெற்றி சாத்தியப்பட்டுள்ளது!

பிரதமருடன் பங்கேற்ற ராமர் கோயில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!

மின்னம்பலம் : அயோத்தி ராமர் கோயில், அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு வழா நடைபெற்றது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக 175 விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

என்னை வழிநடத்தும் சபரீசன்: கு.க. செல்வம் போடும் வெடி!

என்னை வழிநடத்தும் சபரீசன்: கு.க. செல்வம் போடும் வெடி! மின்னம்பலம் : திமுகவின் தலைமை நிலையச் செயலாளராகவும் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினின் முன்னாள் தொகுதியான ஆயிரம்விளக்கு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கு.க. செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 13) திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

கு.க. செல்வம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். ஆனால் அதன்பின் அவர் பாஜகவில் சேர வில்லை என்று மறுத்து வந்தார். மறுநாள் ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு பாஜகவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த சிறப்பு நிகழ்வில் செல்வம் கலந்து கொண்டார்.

உடனடியாக அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய திமுக தலைமை, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கியது. நிரந்தரமாக ஏன் நீக்கக் கூடாது என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு: கைதாவாரா?

 எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு: கைதாவாரா?

மின்னம்பலம்: எஸ்.வி.சேகர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகருமான முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரின் சமீபத்திய பேச்சுக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் உண்டானது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அவருக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும், அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை.     இதனிடையே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வரை விமர்சித்து எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர், எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார், வழக்கு என்றால் ஓடி ஒளிந்துகொள்வார் என விமர்சித்தார்.

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு

 மாலைமலர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.

* விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை

* பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை

* அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு செய்ய அனுமதி

கொங்கு திமுக: நேரு நடத்திய நேரடி ஆய்வு!

மின்னம்பலம் :கொரோனா கால ஊரடங்கு நேரத்திலும் கூட ஆகஸ்டு 10, 11 தேதிகளில் கோவை மாவட்ட திமுகவை பற்றி கவனமெடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார் திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே. என்.நேரு. ஏற்கனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டப் பகுதிகளுக்கு நேரு விசாரணைக்காகவே சென்றிருந்தார். ஆனால், கோவையில மாவட்ட திமுக அலுவலகத்தில் நிர்வாகிகளைக் கூட்டி ஆய்வுக் கூட்டமே நடத்தியுள்ளார் நேரு.

சமூக இடைவெளியோடும், மாஸ்க் அணிந்தும் ஏராளமான திமுக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆய்வில் கொங்கு பகுதியில் திமுகவுக்கு 3% வாக்குச் சரிவு ஏற்பட்டிருப்பதாக ரிசல்ட் கொடுத்திருப்பதை மின்னம்பலத்தில் கொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின். என்ற தலைப்பில் செய்தியாக கொடுத்திருந்தோம். இந்நிலையில் ஏற்கனவே திமுகவை சோதித்துக் கொண்டிருக்கும் கொங்கு திமுக மீண்டும் பலவீனம் அடைய கூடாது என்ற காரணத்துக்காக நேருவை அனுப்பி கொங்கு திமுகவை ஸ்கேன் செய்து வரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதன் அடிப்படையிலேயே கோவை திமுகவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளின் கருத்தை மனம் திறந்து பேசும்படி கூறினார் நேரு.

கல் குவாரிக்காக மலையை டெண்டர் விட்ட அதிமுக அரசு .. மக்கள் போராட்டம் .. திருவண்ணாமலை செய்யாறு அருகே

கல்குவாரிக்கு மலையை டெண்டர் விடுவதா? பொதுமக்கள் போராட்டம்!மின்னம்பலம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு அருகே கல் குவாரிக்காக முருகன் கோயில் உள்ள மலையை டெண்டர் விட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாறு தாலுகா அத்தி கிராமத்தில் அமைந்துள்ள மலையின் உச்சியில் பழைமையான முருகன் கோயில் உள்ளது. காலப்போக்கில் இந்தக் கோயில் பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அந்த மலையை கல்குவாரிக்கு டெண்டர் விடப்போவதாகத் தகவல் வெளியானது.

இதனால் கொதிப்படைந்த, அக்கிராம மக்கள் முன்னோர்கள் வழிபட்ட முருகன் கோயில் அமைந்துள்ள மலையை டெண்டர் விடக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் செய்யாறு உதவி கலெக்டர் கே.விமலாவிடம் மனு அளித்தனர். இதையடுத்து அத்தி கிராமத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், இந்தக் கோயில் அத்தி கிராமத்துக்குச் சொந்தமானது என்றும் ஆடி கிருத்திகைக்காக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் மலையில் ஏறி முருகன் கோயிலை சுத்தம் செய்திட முயன்றுள்ளனர்.

செளதியுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது? BBC

தாரேந்திர கிஷோர் - பிபிசி இந்தி சேவைக்காக :செளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது?ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு செளதி அரேபியாவின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், பாகிஸ்தான் செளதி அரேபியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது.

அண்மையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, “செளதி அரேபியா, காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக ஓஐசி எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை” என்று பகிரங்கமாக விமர்சித்தார்.       ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது ஷா மஹ்மூத் குரேஷி, “வெளியுறவு அமைச்சர்கள் சபையின் கூட்டத்தை கூட்டுமாறு நான் மீண்டும் OIC ஐ கேட்டுக்கொள்கிறேன். நீங்கள்அதைத் திட்டமிடவில்லை என்றால், காஷ்மீர் பிரச்சினையில் எங்களுடன் இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை அழைத்து ஒடுக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் இம்ரான் கானிடம் நான் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பேன்” என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி காலமானார் ... தொலைக்காட்சி விவாத முடிவில் மாரடைப்பு

   தினத்தந்தி :  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி காலமானார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் இன்று காலமானார். டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ராஜீவ் தியாகி இன்று பங்கேற்றார். இதன் பின்னர் தமது வீட்டில் ஓய்வு எடுத்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் காசியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ராஜீவ் தியாகியின் மரணத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

லண்டன் தமிழருக்கு எட்டு வருட சிறை .... பாலியல் குற்றவாளி

Thambirajah Jeyabalan : பாலியல் வன்கொடுமை புரிந்த பிரித்தானியாவில்
வாழும் இலங்கையருக்கு 8 ஆண்டுகள் சிறை! பிரைட்டன் போட்ஸலேட்டைச் சேர்ந்த பேரலிங்கம் நந்தவராமன் (40) என்பவருக்கு ஹூவ் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. ஓகஸ்ட் 8 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் முற்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள விம்பி உணவகத்தில் இடம்பெற்றுள்ளது. இது பற்றித் தெரியவருவதாவது, அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நந்தவராமன் பாதிக்கப்பட்ட பெண்ணை சிறு பார்ட்டி தருவதாகக் கூறி அழைத்துள்ளார். அவ்விளம் பெண் முதல் சுற்று மதுவோடு வீடு செல்ல புறப்பட, அவரை வற்புறுத்தி மேலும் மேலும் மதுவை வழங்கி இருக்கிறார். தன்னில் நன்மதிப்பு வர வேண்டும் என்பதற்காக தனக்கு திருமணமாகி ஒருகுழந்தை இருப்பதாகவும் கூறி இருக்கின்றார். அந்த இளம்பெண்ணைத் தேடி அவருடைய குடும்பத்தினர் போன் செய்த போதும் அந்த அழைப்பையும் இவரே பேசி இருக்கின்றார்.

அவ்விளம் பெண்ணின் துணைவர் அவரைத் தேடிய போது உணவகத்தில் ஆடைகள் இன்றி தனது துணை மயங்கிய நிலையில் நிலத்தில் இருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

பங்குச்சந்தை குறித்த அடிப்படைகளை தெரிந்துகொள்ள விரும்புவோர்களுக்கு வீடியோ ..

 

Karthikeyan Fastura : பங்குச்சந்தை மற்றும் அதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை பாதுகாப்பு மற்றும் முதலீடுகளை பற்றிய வீடியோ பதிவுகளை இந்த youtube சேனலில் சென்று பாருங்கள். முடிந்த அளவிற்கு தெளிவாக எளிமையாக புரியும் வகையில் பேசியிருப்பேன். இது இன்வெஸ்ட்மென்ட் ஒர்க் ஷாப்பில் பதியப்பட்ட விடீயோக்களில் இருந்து சில பகுதிகளை எடுத்து
சிறு சிறு வீடியோக்களாக மாற்றி பதிவிட்டிருக்கிறோம்.

விரைவில் மீண்டும் இன்வெஸ்ட்மென்ட் ஒர்க் ஷாப் எடுக்க இருக்கிறேன். இம்முறை இன்னும் புதிதாக புது தகவல்களுடன் வேறுவடிவில் ஆழமாக பார்க்க இருக்கிறோம். அதனால் தான் முன்பு எடுக்கப்பட்டதை இங்கு பதிகிறேன். இனி புதிதாக தானே எடுத்தாக வேண்டும்

பங்குச்சந்தை குறித்த அடிப்படைகளை தெரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் இந்த வீடியோ தொகுப்பில் சென்று ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ளலாம். இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து வரும் பங்குச்சந்தை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்... கேரளா மூணாறு

MUNNAR LANSLIDEnakkheeran.in - கலைமோகன் மூணாறு நிலச்சரிவில் மாயமான தனது எஜமானர் குடும்பத்தை வளர்ப்பு பிராணியான நாய் ஒன்று அந்த பகுதியிலேயே முகாமிட்டு தேடி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், 6 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.        இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தென்காசி, தூத்துக்குடி, கயத்தாறு என தென் மாவட்டத்தை சேர்ந்த மக்களிடையே இந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் கலவரம் வாகனங்கள் தீக்கிரை மூவர் உயிரிழப்பு நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் காயம் .. வீடியோ

மின்னம்பலம் :பெங்களூருவில் நேற்று நள்ளிரவு நடந்த வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரைச் சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் நவீன். நவீன் தனது முகநூல் பக்கத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு, பின்னர் அதனை நீக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இதுகுறித்து டி.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.         இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீட்டருகே கூடிய ஒரு கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், கற்களை வீசி ஜன்னல்கள், கதவுகளை உடைத்துள்ளது. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

தேவசகாயம் ஐ எ எஸ் : தேவிலால் உரையை மொழிபெயர்த்தது நானே.!

மின்னம்பலம் : தேவிலால் உரையை மொழிபெயர்த்தது நானே... ஹெச்.ராஜா சொல்வது சீரோ சதவிகிதம் கூட உண்மையில்லை!
தேவிலால் உரையை மொழிபெயர்த்தது நானே... ஹெச்.ராஜா சொல்வது சீரோ சதவிகிதம் கூட உண்மையில்லை!

-மொழிபெயர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றபோது, விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி இந்தியில் பேசியதாகவும், ‘ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்’ என்று கனிமொழி சொன்னதற்கு, ‘நீங்கள் இந்தியர்தானே இந்தி தெரியாதா?’ என்று கேட்டதாகவும் கனிமொழி தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை இதற்கு விளக்கம் அளித்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டதோடு, “ எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்பின் கொள்கை அல்ல” என்று கூறியது.

விபி துரைசாமியின் ‘திமுக vs பாஜக’ கருத்து - ‘சிலர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர்’ கனிமொழி பதிலடி

 மாலைமலர் :   தமிழகத்தில் இனி திமுக vs பாஜக என்ற விபி துரைசாமியின் கருத்துக்கு சில பேர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர் என திமுக எம்.பி. கன்மொழி பதிலடி கொடுத்துள்ளார்.  சென்னைவிபி துரைசாமியின் ‘திமுக vs பாஜக’ கருத்து - ‘சிலர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர்’ கனிமொழி பதிலடி: சென்னையில் பாஜக தலைமையகத்தில் செய்தியார்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, ‘பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி. பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜகவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ? அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும். தமிழகத்தில் அதிமுக vs திமுக என்ற நிலை மாறி தற்போது பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார். ஜக துணைத்தலைவரின் இந்த கருத்து அஇஅதிமுக மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. >இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம் பாஜக துணைத்தலைவர் விபி துரைசாமியின் ’திமுக vs பாஜக’ கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி ‘சில பேர் கனவு உலகத்தில் வாழ வேண்டுமென்றால் வாழட்டும். அதைபற்றி கவலை இல்லை’ என தெரிவித்தார்.


1989-ஆம் ஆண்டு தேவி லாலின் உரையும் கனிமொழியும் .. . எச்ச ராஜாவுக்கு குட்டு வைத்த பி பி சி

BBC :  1989-ஆம் ஆண்டில் கனிமொழி, அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அருகே அமர்ந்தவாறு தேவிலாலின் உரையை மொழி பெயர்த்ததாக கூறப்படும் நிகழ்வாக சமூக வலைதளங்களில் உலா வரும் சில புகைப்படங்கள் குறித்த தகவலை பிபிசி ஆராய்ந்தது.  அந்த புகைப்படத்தின் அடிப்படையிலேயே ஹெச் .ராஜா தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டதால் அதன்
பின்னணியை அறிவது அவசியமானது.   அந்த படங்கள் அனைத்தும், தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமாரின் வீட்டில், அவரை திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழியுடன் சந்தித்தபோது எடுத்தவை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த படங்கள் எங்கு, எப்போது எடுக்கப்பட்டவை என்பதை அறிய, திரைப்பட நடிகர் சிவகுமாருடன் பிபிசி பேசியது.

அரசியல் கலப்பில்லாத வகையில் பேசுவதாக ஒப்புக் கொண்டு, அந்த படங்கள் எடுக்கப்பட்டதன் பின்னணியை சிவகுமார் விவரித்தார்.  நடிகர் சிவகுமார் விளக்கம்     "கலைஞர் கதை வசனம் எழுதிய பல படங்களில் ஒன்றான "பாடாத தேனீக்கள்" படத்தில் 1988-89 ஆண்டுகளில் நான் நடித்திருந்தேன். அப்போது அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமைந்தது".

சிற்றரசுவை மாவட்ட செயலாளராக நியமிப்பதற்கு முன்பு செல்வத்திடம் ஆலோசிக்கக் கூட இல்லை.

Savukku · : திங்களன்று இரவு முழுக்க சமூக வலைத்தளங்களில் பரபரப்பு. இந்து குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஆர்கே.ராதாகிருஷ்ணன், நாளை கட்சி மாறப்போவது யார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆர்.கே வதந்தியை பரப்பும் நபரல்ல என்று அனைவருக்கும் தெரிந்ததால், ட்விட்டரில் ஒரே பரபரப்பு. ஆனால் அவர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. திமுக இந்த சூசக செய்தியை புரிந்துகொண்டதா இல்லையா என்று தெரியவி ல்லை. விஷயம் அறிந்து திமுக அதிர்ச்சியடைந்து, குக.செல்வத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவர் டெல்லியில் இருந்தார்.  செல்வத்தை திமுகவிலிருந்து பிஜேபிக்கு தூக்கும் முயற்சி, பிஜேபியின் உயர்மட்ட தலைவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். தமிழக தலைவர்கள் ஒருவருக்குக் கூட தெரியாது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “டெல்லியில் உள்ள பிஜேபி தலைமை,  தமிழகத்தின் எந்த பிஜேபி தலைவரையும் நம்புவதில்லை.   அவர்களில் பெரும்பாலானோர் சுயநலமிகள் என்றே தலைமை கருதுகிறது.   செல்வத்தை திமுகவில் இருந்து பிஜேபிக்கு எடுக்கும் நடவடிக்கை, தமிழகத்தில் ஒரு பிஜேபி தலைவருக்கும் தெரியாது.  தமிழக பாஜக தலைவர் முருகனை தவிர, ஒருவருக்கும் விஷயம் தெரியாது. 

கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டி! தாய் தமிழ் (சென்னை).. தந்தை ஜமைக்கா ... வீடியோ

  தினத்தந்தி:   ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.    வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், ஜோ பிடன் இருமாதங்களாக ஈடுபட்டு வந்தார். ;இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜோ பிடன் அறிவித்தார். டுவிட்டரில் இது குறித்து ஜோ பிடன் கூறுகையில், “  துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிகச்சிறந்த மக்கள் சேவகர்களில் ஒருவர் கமலா ஹாரீஸ் “ என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இலங்கை தேர்தலில் மலையக மக்களின் வெற்றிகூட்டணி ! .. தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரலாறு !

ல்லியப்புசந்தி திலகர் ;இன்றைய தமிழ் முற்போக்கு கூட்டணி ....( வரலாறு ) (சுருக்க வரலாறும் அதனை உறுதிபடுத்தக்கூடிய ஆளுமைகளின் பெயர்களும்) 1. 2000 ஆம் ஆண்டு “ மலையக தேசிய கூட்டணியாக” தொழிலாளர் தேசிய சங்க தலைவர் த.அய்யாத்துரை, தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் பி.ஏ. காதர் ஆகியோரை தலைவராகவும் செயலாளராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. அத்தகைய கூட்டணி உருவாக்க அழைப்பாளர்களாக பொகவந்தலாவை பொன். பிரபாகரன், கந்தப்பளை சிவம். பிரபாகரன் ( இவர்கள் இருவரும் எனது பல்கலைக்கழக நண்பர்கள்) ஆகியோருடன் ம. திரகராஜா - கொழும்பு பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவன்.( கட்டுரையாளர்). சட்டத்தரணி ராஜதுரை ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) எங்களுக்கு உதவியாக இருந்தார். கூட்டம் நடைபெற்ற இடத்தை தீர்மானித்ததும் அவரே.

கூட்டம் நடைபெற்ற இடம் : நுவரெலியா கூட்டுறவு சங்க விருந்தகம் ( Co- operative Resort - technical college Road )

பங்கு கொண்டோர் பெயர்ப் பட்டியல்.
த.அய்யாத்துரை ( தலைவர் - தொழிலாளர் தேசிய சங்கம்), பி . ஏ. காதர் தொழிலாளர் முன்னணி ( மலையக மக்கள் முன்ணியில் இருந்து விலகி உருவாக்கிய அமைப்பு. அவரோடு பொகவந்தலாவை அருளப்பன் இருந்தார்), பெ.சந்திரசேகரன் ( தலைவர் - மலையக மக்கள் முன்னணி ), அவருடன் கூட வந்தவர் எஸ். விஜேசந்திரன் ( இப்போது பேராசிரியர் த.மு.கூ உயர்பீட உறுப்பினர் ) வி.புத்திரசிகாமணி ( அப்போது ஐ.தே.க - LJEWU), இரா. தங்கவேல் ( ரொபர்ட் தங்கவேல் என அன்பாக அழைக்கப்படுபவர் - எம்.எஸ்.செல்லச்சாமி உருவாக்கியிருந்த இலங்கை தேசிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்), மனோகணேசன் ( அப்போது மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவர்.

உச்ச நீதிமன்றம் : ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! கலைஞர் 30 ஆண்டுகளுக்கு முன்பே செய்த சாதனை .. வீடியோ

மாலைமலர் : திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என்று கோர்ட் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி! .. ரஷ்யா அதிபர் புட்டின் மகளுக்கு செலுத்தியதாக அறிவிப்பு

BBC : உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கி ரஷ்யா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இந்த தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார். மகளுக்கு பரிசோதனை உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கி ரஷ்யா பட மூலாதாரம், Getty Images தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறும் புதின், பெரும் அளவில் இந்த தடுப்பு மருந்து விரைவில் உற்பத்தி செய்ய வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்ளார்

மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 48 பேராக உயர்வு..... வீடியோ

நக்கீரன்: கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில்  தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாகச் சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது

 

அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்

மாலைமலர் : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை: தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது

  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

* 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆக.24ந்தேதி முதல் தொடங்கப்படும்.

* 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை.

* ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.17 முதல் சேர்க்கை நடைபெறும்.

* பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும்.

தயாரிப்பாளர் சுவாமிநாதன் கொரோனாவால் உயிரிழப்பு ... அன்பே சிவம் . புதுபேட்டை ... லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்

v4umedia.in/news : கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  திரு. சாமிநாதன் அவர்கள்,

 லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் K.முரளிதரன், G.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, கர்ணன் வருவான், தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உள்ளம் கொள்ளை போகுதே, தோஸ்த், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, , உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, , அன்பே சிவம், கண்களால் கைது செய், ஒரு நாள் ஒரு கனவு, தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி ஐந்துக்கும் மேல் பிரம்மாண்டமன படங்களை தயாரித்துள்ளார்.r />இவர் தயாரித்த படங்களில் இவர் சிறிய வேடங்களில் நடிப்பார். அப்படி இவர் நடித்த சில சீன்கள் இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ப்ரியமுடன் படத்தில் தளபதி விஜய் யுடன் ஒரு காட்சி மற்றும் பகவதி படத்தில் வடிவேலு அவர்களுடன் தோன்றிய காமெடி காட்சி இன்று வரை அனைவராலும் ரசித்து பார்க்க முடிகிறது.

திரும்பி வந்த பைலட்: பிரியங்காவின் முதல் அரசியல் வெற்றி!

திரும்பி வந்த பைலட்: பிரியங்காவின் முதல் அரசியல் வெற்றி!

 மின்னம்பலம் :  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கி சரியாக ஒரு மாதத்துக்குப் பின் நேற்று (ஆகஸ்டு 10) மீண்டும் காங்கிரசையே தேடி வந்து சமரசமாகியிருக்கிறார் அம்மாநில துணை முதல்வர், காங்கிரஸ் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்ததன் அடிப்படையில் இந்த முடிவை எட்டியிருக்கிறார் சச்சின் பைலட்.

அதேநேரம் வரும் 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், தன்னோடு வந்த 18 எம்.எல்.ஏ.க்களில் சுமார் ஐந்து பேருக்கும் மேல் மீண்டும் அசோக் கெலாட்டுடன் சென்றுவிட்டதாகவும், தன் பலம் குறைந்துவிட்டதன் அடிப்படையிலேயே தேசியத் தலைமையோடு சமரசத்துக்குச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.     

திருச்சி ரெயில்வேயில் 450 வடமாநிலத்தவர்களுக்கு வேலை! அன்பில் மகேஷ் தலைமையில் போராட்டம் .. திருச்சி பொன்மலை

A Sivakumar : திருச்சி பொன்மலையில் அன்பில் மகேஷ் தலைமையில்
போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்!!!     திருச்சி ரயில்வே பணிமனையில் 450 வடமாநிலத்தவர்க்கு பணிஆணை வட நாட்டவர்களுக்கு இ-பாஸ் கொடுத்தது யார்..?        திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வட மாநிலத்தவர்கள் 300-க்கும் அதிகமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு இன்று வந்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் திருச்சி பொன்மலைக்குள் இத்தனை வடமாநிலத்தவர்கள் எப்படி வந்தார்கள்,..? ரயில்கள் ஓடவில்லை, பேருந்துகள் இயங்கவில்லை, இவர்களுக்கு எதனடிப்படையில் இ-பாஸ் கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகளோடு பொன்மலை ரயில்வே முன்னாள் ஊழியர்களின் வாரிசுகளும், கடந்த பல ஆண்டுகளாக பணிமனையில் அப்ரண்டிஸ் முடித்து விட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்போரும் ஆர்மரிகேட் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் திருமண கூடத்திற்கு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது போன்ற ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறி அப்ரண்டிஸ் முடித்தவர்கள் பணிமனை எதிரே தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இந்தி திணிப்புக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார் பாலகுரு சாமி .. முனைவர் பொன்முடி எம் எல் ஏ கடும் கண்டனம்

Maha Laxmi : "இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்புக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சிவப்புக் கம்பளம் விரிப்பது கண்டனத்துக்குரியது"! முன்னாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி MLA அவர்கள் அறிக்கை.! 

முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தான் ஒரு கல்வியாளர் என்ற நிலை தாண்டி, பழுத்த அரசியல்வாதி போல், தனது இந்தி மொழி மீதான விருப்பத்தை வெளியிட்டு, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கு 100% பச்சைக் கொடி காட்டியுள்ளார். அவர்தம் விருப்பப்படி, பள்ளிகளில் இந்தி இல்லை என்றால் (அ) தேசப்பற்று, தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றன அழிந்துவிடுமாம் (ஆ) தனிமனிதனின் அறிவும் ஆளுமையும் சரிந்து விடுமாம். 

(இ) மாநிலங்களுக்கிடையேயான வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரத்தின் வாய்ப்புகள் குறைந்து விடுமாம் . 

(ஈ) நாட்டு மக்களிடையே நல்லெண்ணம் இல்லாததாகி விடுமாம் . 

(உ) உலகளவிலான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் இருக்கவே இருக்காதாம். இவ்வளவு நீண்ட அனுபவமும், கல்வி அறிவும் உடைய பாலகுருசாமிக்கு - தேசப்பற்று, நாட்டு மக்களிடையே நல்லெண்ணம், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பதன் இலக்கணமும், பொருளும் புரியாமல் இருப்பது அல்லது புரிந்தும் யாரையோ திருப்திப்படுத்த தெரியாமல் இருப்பது போல் எழுதி இருப்பது, மிகுந்த வருத்தத்திற்குரியது; கண்டனத்துக்குரியது.

இயக்குனர் பீம்சிங் .. காலத்ததை வென்ற கலைப்படைப்புக்களின் பிதா மகன்

Abdul Samath Fayaz : ஒரு திரைப்படம் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த

வேண்டுமானால் அதன் கதைக்களம் சிறப்பாக இருக்க வேண்டும்.கதை மட்டுமே ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால் அதுவும் இல்லை..      அந்தக் கதை எப்படி திரையில் கையாளப்படுகிறது என்பது அதைவிட முக்கியம்..    அதை கலைஞர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் தொடங்கி டெக்னிக்கல் விஷயங்கள் என ஏகப்பட்ட வேலைகள் அதில் இருக்கிறது..   அத்தனை வேலைகளையும் தூக்கி தோளில் சுமக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் இருப்பவர் அதன் இயக்குநர்..    ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு இயக்குநரின் பங்கு முக்கியம். அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அவராலேயே தீர்மானிக்கப்படுகிறது.தமிழில் பல புகழ் பெற்ற இயக்குநர்கள் அந்தப் பணிகளை சிறப்பாகச் செய்திருந்தாலும் ஒருவர் மட்டும் அதில் தனித்து விளங்குகிறார். .  அருமையான இயக்குநரான பீம்சிங்கைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். திருப்பதிக்கு அருகிலுள்ள ராயல செருவு தான் பீம்சிங்கின் பிறப்பிடம்.அப்போதைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானதால் சென்னைக்கு படிப்பு முடித்து ஆந்திரபிரபா பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது தான் அவரது கலையார்வம் அதிகரித்தது.

எல்லிஸ் ஆர்.டங்கனிடம் திரைத்துறை அறிவை வளர்த்துக்கொண்ட கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் தாங்கள் கற்றதை பீம்சிங்கிற்கும் கற்றுத் தர அவரது ஆரம்ப அரிச்சுவடி அங்கு தான்.பீம்சிங் முதலில் ஆர்வமானது எடிட்டிங் துறை தான்.

பாலகுரு சாமி என்ற ஒரு ....

Munusamy Gauthaman : "உங்களுக்கு முன்னாடி தட்டுல இட்லியும், சாம்பாரும்

வைச்சிருக்காங்க... கைய பயன்படுத்தக்கூடாது... அதே வேளை ஸ்பூனையும் பயன்படுத்தக்கூடாது.... எப்படி சாப்பிடுவீங்க???? 

இப்படி ஒரு கேள்வியை கேட்டவர் யாரு தெரியுமா!!!!!     பாலகுருசாமி எப்போ கேட்டாரு தெரியுமா!!!!       அவரு UPSC member ஆ இருந்தப்போ ஐஏஎஸ் இன்டெர்வியூக்கு சென்ற தமிழக இளைஞரிடம் இந்தக் கேள்வியை கேட்டார். அந்த இளைஞர் ஐஏஎஸ்மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர். 300 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட (இப்போ 275)    அன்றைய இன்டெர்வியூல மிகச் சிறந்த மார்க் 210.... 220... நன்றாக பதில் சொல்பவர்களுக்கு 180....170

ரொம்ப சுமாராக பதில் சொன்னால் 150...130..

மோசமாக பதில் சொன்னால்.... 110...100

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த இளைஞனுக்கு இன்டர்வியூல 130 மார்க் போட்டிருந்தால் அவருக்கு IRS கிடைத்திருக்கும்.... 180 மேல் பெற்றிருந்தால் ஐஏஎஸ் ஆகியிருப்பார்.

ஆனால் அந்த இளைஞனுக்கு பாலகுருசாமி கொடுத்த மார்க் வெறும் 75....

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

ப.சிதம்பரம்: இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில்

   தினகரன் :  சென்னை: இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது முன்னாள் மத்தி நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த திமுக எம்.பி.,கனிமொழி, நேற்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை 'நீங்கள் இந்தியரா?' என்று வினவினார். இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தார்.

கனிமொழி, நீங்கள் இந்தியரா?" எதிர்க்குரல் எழுப்பும் தென் இந்தியா - DMK MP KANIMOZHI REIGNITES HINDI IMPOSITION ROW

BBC  :  திமுக எம்.பி கனிமொழிக்கு விமானநிலையத்தில் ஏற்பட்ட அனுபவத்துக்கு எதிராகப் பல அரசியல்வாதிகள் குரல் எழுப்பி உள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு சர்ச்சையானது. இதையடுத்து, கனிமொழியை டெல்லி விமான நிலையத்திலேயே சந்தித்து நடந்த சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் உயரதிகாரிகள் வருத்தும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினர். மேலும், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் நிர்ப்பந்திப்பது தங்களுடைய படையின் கொள்கை கிடையாது என்றும் சிஐஎஸ்எஃப் தலைமையகம் அதன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கனிமொழிக்கு ஏற்பட்ட விமான நிலைய அனுபவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் 743 பேருக்கு கொரோனா: பக்தர்களுக்குத் தடையா?

திருப்பதியில் 743 பேருக்கு கொரோனா: பக்தர்களுக்குத் தடையா?   மின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள்  தரிசனத்துக்கு ஆந்திர அரசு தடை விதித்தது. இந்நிலையில் மீண்டும் ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த எண்ணிக்கை நாளடைவில் இரட்டிப்பாக்கப்பட்டது. 

இந்த சூழலில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு  ஆந்திர அரசு தடை விதித்தது. இந்நிலையில் மீண்டும் ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த எண்ணிக்கை நாளடைவில் இரட்டிப்பாக்கப்பட்டது.

கேரளா நிலசரிவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி : மூணாறு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பெட்டிமுடி மலைக்கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கயத்தாறு, சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். பெட்டிமுடி மலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தொலைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் இருந்தன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 7ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் சரிந்து மண்ணில் புதைந்தன.  அந்த வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 78 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். அவர்களில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர்.

62 ஏக்கர் சங்கி கவுண்டர் ஆட்டுக்கார அண்ணாமலைக்கு .. இப்படிக்கு ஒரு ஏழை கவுண்டர்

Shankar A :
· அன்புள்ள 62 ஏக்கர் சங்கி கவுண்டர் ஆட்டுக்கார அண்ணாமலைக்கு OBC கோட்டாவில் தான் நீங்கள் IPS ஆனதாக பெருமையடன் சொன்னீர்கள். ஆனால் இட ஒதுக்கீட்டு எதிர்பாளர்கள் சொல்லும் கீரீமி லேயர் அமல் படுத்தபட்டிருந்தால் நீங்கள்  IPS ஆகியிருக்க முடியாது, ஆட்டு பண்ணை மட்டும் தான் மிஞ்சியருக்கும். உங்களை போல் அரிய வகை ஏழை கவுண்டர்கள் மிகவும் குறைவு. 90 சதவீதமான கவுண்டர்கள் 2 அல்லது 3 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்கள். வருமானம் இல்லாததால், திருப்பூர் பனியன் கம்பனியில் வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளம். சரியான தொழில் இல்லாததால் 40 வயதாகி திருமணமகாமல் உள்ளவர்களும் அனேகம். உங்கள் ஊரான கரூரிலும் தாராபுரம் வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பொய்த்து போனதால் லைனுக்கு போகிறேன் என்று கடன் வாங்கி கோவை திருப்பூர் கேரளாவில் வட்டி தொழில் செய்து வசூல் ஆகாமல், ஊருக்கு செல்ல முடியாத கவுண்ட தம்பிகள் அனேகம்.

முருகனின் உண்மை கதை .. உள்ளது உள்ளபடி .. ஆதார பூர்வமான பதிவு

Karthikeyan Fastura :  முருகனின் வரலாற்றை தமிழ் இலக்கியங்கள்
எப்படி பதிவு செய்கின்றன என்று தேடிப்பார்த்ததில் கிடைத்தவை. கொஞ்சம் பெரிய பதிவாக இருந்தாலும் படித்துவிடுங்கள்.        முருகனை பற்றிய உண்மை கதை. ஐந்து வகை தமிழர் திணைகளுள் முதன்மையானது குறிஞ்சி திணை. திணை என்றால் பெரும்நிலம். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சித் திணையில் வாழ்ந்த மக்கள் குன்றக்குறவர்கள் ஆவர் . இவர்கள் ஐவனம், தினை ஆகிய தானியங்களைப் பயிரிட்டு வாழ்ந்தவர்கள் . குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகு. முருகுக்கு நெடுவேள், சேய் போன்ற பெயர்களும் உண்டு. முருகுவை 'சேயோன்' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

அப்போது இருந்த முருக வழிபாடு நாம் இப்போது நடத்தும் குலதெய்வ வழிபாடு போன்றே நடந்துள்ளது. அன்று காட்டுவாசிகளாக இருந்த மக்களில் பெண்களுக்கு என்ன மனோவியாதி தோன்றியதென தெரியவில்லை. முருகு ஏறிவிட்டது, பெண்ணை பிடித்து ஆட்டுவிக்கிறது என்று அதனை ஆற்றுப்படுத்தும் வகையில் விழாக்கள் எடுக்கப்பட்டன. குறிஞ்சி நிலத்தில் செந்தினையை நீரோடு கலந்து நீர்விழாவி வணங்கும் முறை இருந்தது. இது வேலன் வெறியாடிய சடங்கு எனப்படும். வயதிற்கு வந்த இளம்பெண்களை பற்றிக்கொண்டதாகவும் அதை விலக்கிட நடக்கும் சடங்காகவும் நடந்தது. குறிஞ்சி மக்களின் பழங்குடி சடங்கு. இது புராதன சமயம் சார்ந்தது . முருகையே பிற்காலத்தில் 'முருகன்' என்று அழைத்தனர். 

மகனை தலை கீழாக கட்டி தாக்கிய தந்தை கைது ஆக்கிரா .. வீடியோ

       மின்னம்பலம் : ஆக்ராவில் சக கிராமவாசிகளின் முன்னிலையில் தன் மகனை கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு தாக்கிய வீடியோ வைரலானதால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.        விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் நேற்று (ஆகஸ்ட் 9) வைரலானது. அதில், ஒரு வீட்டின் ஜன்னலில், கயிற்றால் ஒரு சிறுவன் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கிறான்.    அவனை கிராம மக்கள் முன்னிலையில் ஒருவர் தாக்குகிறார். இரக்கமின்றி அச்சிறுவன் தாக்கப்படுவதைக் கண்டு, கூட்டத்தில் இருந்த சிறுவன் அதிர்ச்சியடையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.   

இதுகுறித்து மேற்கு ஆக்ரா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, “நான்கு நாட்களுக்கு முன், தன் மனைவியுடன் சண்டையிட்ட அந்த நபர், தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவருக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்த மகனை அவர் கயிற்றில் தலைகீழாகக் கட்டி தாக்கியுள்ளார். நாங்கள் அவரை விசாரிக்கிறோம். அவர் தனது குற்றத்தை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை குடிபோதையில் இந்தச் செயலைச் செய்துள்ளார்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான எஸ் எஸ் ஐ பால் துரை கொரோனாவால் உயிரிழப்பு

 தினத்தந்தி : சாத்தான்குளத்தில் தந்தை – மகன் போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கடந்த மாதம் 24-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மீண்டும் மும்மொழித்திட்டம் .. NEP2020ல் இந்தி திணிப்பை தூசு தட்டி பட்டி டிங்கேரிங் செய்து...

Muralidharan Pb : · NEP2020ல் மும்மொழிக் கொள்கையில், திணிப்பை மீண்டும் தூசு தட்டி பட்டி டிங்கேரிங் செய்து கொடுத்துள்ளார்கள் அதை வடிவமைத்த அறிஞர்கள். தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 1-10 வகுப்பு வரை, பெரும்பாலும் ஆங்கிலம், தமிழ் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி தேவையா ?     

நீங்கள் கல்வி பயிலவோ, வேலைக்கோ, தொழில் செய்யவோ வடக்கில் சென்று சில காலம் குடியேறப் போக நினைக்கிறீர்களா ?       

100% இந்தி மொழி கற்றல் நிச்சயம் தேவை. ஆகவே நீங்கள் எவ்வழியிலாவது CBSE பள்ளியில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இந்தி இரண்டாவது மொழியாக தேர்வு செய்து படிக்கலாம். எனக்கு எனது தமிழ் முக்கியம் என்றால் இரண்டாவது மொழியாக கற்க வைத்து, தனியாக இந்தி கற்றல் அவசியம். அதுவும் நீங்கள் இருக்கும் பகுதியில் இந்தி கற்று கொடுக்க பிரவீன் 2 படித்த ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் இருக்கிறார்கள்,அவர்களிடம் குறைந்தது பிரவேஷிகா வரை படிக்க 2 ஆண்டுகள் ஆகும். திட்டமிட்டு படித்து தேர்வு எழுதினால், உங்களால் நன்றாக இந்தி பேசும்/எழுதும்/புரியும் அளவிற்கு கற்றுக்கொள்ள முடியும்.

மூன்றாவது மொழியாக இந்தி படிப்பது உதவாது. இரண்டாவது மொழியாக கற்றல் தான் பயன் அளிக்கும்.

இலங்கை 50 இற்கும் மேற்பட்ட அரசியல் வாரிசுகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ளனர் .. பட்டியல் இதோ !

.elukathir.lk :   2020 ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம், மக்கள் பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவின் 9 வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பாராளுமன்றத்தில் பல தந்தைகள் தங்கள் மகன்களுடன் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அரசியல் வாரிசுகளின் உறவுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  

 பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ 

சமல் ராஜபக்ஷவின் மகன் சஷிந்திர ராஜபக்ஷ 

தினேஷ் குணவர்தனவின் மகன் யாதமினி குணவர்தன,

ஜனக பண்டார தென்னக்கூனின் மகன் பிரமிதா பண்டார தென்னக்கூன்

சமல் ராஜபக்ஷ பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மருமகன் நிபூனா ரணவக்க.  

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசா,

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் மகன் காஞ்சனா விஜசேகர,முன்னாள் முதல்வர் மகிபாலா ஹேரத்தின் மகன் கனக ஹேரத்,

தமிழக தமிழர்களை இஸ்லாமியர் இந்து என்று பிரிக்கும் சதியில் ஈழத்து புலி ஆதரவாளர்கள் ? ... வீடியோ

இலங்கை தமிழர்கள் ஏன் இஸ்லாமியர்கள் இந்துக்கள் என்று பிரிந்தார்கள்? புலிகளின் கைங்கரியம்

Karthick Ramasamy : · தமிழ்நாட்டில் தமிழர்கள் என்றால் மதவேறுபாடின்றி அனைவரும் தமிழர்கள்தான்.       இலங்கையில் இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள் போல, இஸ்லாமியர்களை அவர்கள் தமிழர்களாக கருதுவதில்லை போல.

.பல இலங்கைத்தமிழர்களின் பதிவுகளில் வெளிப்படையாகவே தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்று பிரித்து எழுதுகிறார்கள்.    சரி அது எப்படியோ போகட்டும், இலங்கை அரசியலை இங்கு பேசும் முட்டாள்கள் அதே நிலைமையை இங்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். எனக்கு விபரம் தெரிந்து தமிழ்நாட்டில் தமிழர்கள் என்றால் அது தமிழ்பேசும் அத்தனை பேரையும் மதவேறுபாடில்லாமல் உள்ளடக்கியதுதான். 

 இங்கு தமிழர் கடவுள் தமிழர் மதம் என்று இந்துத்துவ புராணக் காதபாத்திரங்களையே மீண்டும் அவர்களின் அடியாட்கள் வேறு பெயர்களில் நுழைக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோமையார் வந்தபோது கிறிஸ்தவ மதத்தை ஏற்ற தமிழர்களும் இருக்கிறார்கள், ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக இஸ்லாமை ஏற்ற தமிழர்களும் இருக்கிறார்கள்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

டாக்டர் கார்கா சாட்டர்ஜிக்கு என்ன நடந்தது? மேற்கு வங்கத்தின் திராவிட களப்போராளி

Kathir.RS திராவிடத் தலைவர்களை இந்திய ஒன்றியத்தின் காவலர்கள் என தேசிய அளவில் பேசி வந்த கர்கா சேட்டர்ஜி அஸ்ஸாம் அரச குடும்பத்தைப் பற்றிய கருத்து ஒன்றிற்காக அந்த அரசு கைது செய்திருக்கிறது.   இது நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. கர்கா விடுவிக்கப்பட்டு விட்டாரா? என்பது பற்றிய அதிகாரப் பூர்வ தகவல்கள் இல்லை.   சோசியல் மீடியாவிலும் அவரது பதிவுகளை பார்க்க முடியவில்லை.வங்காள போலீஸ் உதவியுடன் அஸ்ஸாம் போலீஸ் அவரை கைது செய்ததாக செய்தி வந்திருக்கிறது.    யாருக்காவது முழு விவரம் என்னவென்று தெரிந்தால் தெளிவு படுத்துங்கள்.அல்லது..  இது குறித்து கேள்வி எழுப்புங்கள். கர்கா,ஆசாத்,ஜிக்னேஷ் போன்ற இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் திராவிட முகங்கள்.. நாம் அவர்களுக்கு குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். கதிர் ஆர்.எஸ்  (

 கார்கா சட்டர்ஜியின் சென்னை உரை)
9/8/20 /indianexpress.com : Garga Chatterjee being targeted for supporting Assam Bengalis, says Bangla Pokkho A police complaint has been lodged against Chatterjee in Assam for the alleged objectionable comments about first Ahom king Chaolung Sukapha, and the Ahom community. A day after Assam Chief Minister Sarbananda Sonowal directed the police to arrest Kolkata-based political commentator Garga Chatterjee for allegedly insulting the first Ahom king, Bangla Pokkho, Chatterjee’s organisation, claimed he was being targeted for standing up for Bengalis in Assam.

காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விவரிக்கும் பிபிசியின் ஆவணப்படம் வீடியோ

காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விவரிக்கும் பிபிசியின் சிறப்பு ஆவணப்படம் 55 நிமிடங்களுக்கு முன்னர் காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விவரிக்கும் பிபிசியின் சிறப்பு காணொளி. மார்ச் 2015 இல், ஜம்மு-காஷ்மீரில் எதிரெதிர் சித்தாந்தங்களைக் கொண்ட பாஜக மற்றும் பிடிபி இணைந்து அரசமைத்தபோது, அது ஜனநாயகத்தில் ஒரு புதிய செயல்பாடாகப் பார்க்கப்பட்டது. ஜூன் 2018 இல், இந்தக் கூட்டணி உடைந்து, மாநிலம் மீண்டும் ஆளுநரின் ஆட்சியின் கீழ் சென்றது. 2018 டிசம்பரில் ஜனாதிபதியின் ஆட்சி இங்கு கொண்டுவரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்களை நடத்துவதற்கும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் கோரிக்கை எழுந்தது. ஆனால், டெல்லியில் மற்றொரு திரைக்கதை எழுதப்பட்டது. பின்னர் திடீரென 5 ஆகஸ்ட் 2019 அன்று, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து என்ற அரசியலமைப்புச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது

BBC : நீங்கள் இந்தியரா? விமான நிலையத்தில் கனிமொழியை கேட்ட சிஐஎஸ்எஃப் காவலர் வீடியோ

டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, "நீங்கள் இந்தியனா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு, சர்ச்சையாகியிருக்கிறது. இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில், தனது விமான நிலைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட கனிமொழி, "இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், "நீங்கள் இந்தியனா?" என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

#HINDIIMPOSITION என்ற இந்தி திணிப்பு தொடர்பான டிவிட்டர் ஹேஷ்டேக்கையும் கனிமொழி பயன்படுத்தியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு அவரது பக்கத்தை பின்தொடருவோர் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு, மொழி திணிப்பு கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.

மூணாறு நிலச்சரிவு: ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை

எம்.கணேஷ்- தினேஷ் ராமையா - ஈ.ஜெ.நந்தகுமார் -- விகடன் : மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது. மூணாறு அருகே ராஜமலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு மொத்தமாகப் புதைந்தது. மொத்தம் 40 வீடுகள் இருந்த நிலையில், சுமார் 25 வீடுகளில் தொழிலாளர்கள் வசித்து வந்திருக்கிறார்கள்.      தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 83 பேர் இந்த நிலசரிவில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருக்கும் காட்டாற்றில் இருந்து ஆறு உடல்கள் மற்றும் மண்ணில் இருந்து 30 பேரின் உடல்கள் என மொத்தம் 36 பேரின் உடல்களை மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மீட்டனர்.          மண் சரிவில் சிக்கிய 12 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.          

தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் தன்னார்வலர்களாக மீட்புப் பணிகளில் இணைந்திருக்கிறார்கள். இந்தநிலையில், தொடர் மழை மற்றும் வெளிச்சமின்மையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், பகல் நேரத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. போலீஸாரின் மோப்ப நாயும் மீட்புப் பணியின்போது பயன்படுத்தப்பட்டது.

இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த மாநிலங்களின் கதி ... ஆய்வு கட்டுரை

Sergio Marquina : · இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும்
முன்னேறியிருக்கும் இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்களே...! இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்களேன் பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி. உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான் அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி.

அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் ஆனால் தாய்மொழி ஹரியாணி

விஜயவாடா கொரோனா மையத்தில் தீவிபத்து... 7 பேர் உயிரிழப்பு

Vishnupriya R - tamil.oneindia.com : அமராவதி: ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமை முகாமில் தீவிபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.      நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவை நிரம்பிவிட்டன. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள், தனியார் ஹோட்டல்கள், வர்த்தக மையங்களில் கொரோனா வார்டுகளை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு ஹோட்டலில் கொரோனா தனிமை மையம் அமைக்கப்பட்டது. இந்த கொரோனா மையத்தில் 40 நோயாளிகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் 10 பேர் என மொத்தம் 50 பேர் இருந்தனர்.          இந்த நிலையில் இந்த ஹோட்டலில் சற்று நேரத்திற்கு முன்பு தீப்பிடித்தது. இதனால் நோயாளிகள் அங்கும் இங்கும் ஓடினர். இந்த விபத்திலிருந்து உயிர் பிழைக்க மாடிகளில் இருந்து குதித்தும், தப்ப முயற்சித்தும் தீயில் கருகி 7 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனானில் மக்கள் போராட்டம் வெடித்தது .. வெடிவிபத்தை தொடர்ந்து

நக்கீரன் : ெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளது. நகரின் ஒருபகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அதிர்வலைகள் அந்நகரத்தில் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இதுவரை இந்த விபத்தில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 4,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், 3,00,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,700 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இதற்கான காரணம் எனக் கூறப்படும் நிலையில், அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்தியாவில் 5 விமான ஓடுபாதைகள் ஆபத்தான டேபிள் டாப் விமான நிலையங்கள்: ஏஏஐ அதிகாரி

   தினமலர் : புதுடில்லி: இந்தியா முழுவதிலும் டேபிள்டாப் ஓடுபாதைகள் கொண்ட விமானநிலையங்கள் 5 இடங்களில் உள்ளன என இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 7 ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானி உட்பட 19 பேர் வரை பலியாகினர். இச்சம்பவம் குறித்து ரஷ்யா, அமெரிக்கா,பாக்., உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 இதனிடையே விமான நிலையத்தின் ஒடுதளம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அர்விந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோழிக்கோடு விமானநிலையத்தின் ஓடு பாதை டேபிள் டாப் வகையை சேர்ந்தது. இத்தகைய ஓடுபாதைகள் விமானிகளுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தகூடியவை. நாட்டில் மொத்தம் 5 இடங்களில் டேபிள் டாப் வகை விமான ஓடுதளம் அமைந்துள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூரு, இமாச்சல பிரதேசம் சிம்லா , சிக்கிம் மாநிலத்தின் பாக்கியோங் மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் ஆகியவையாகும்.

ரங்கராஜ் பாண்டேக்கு தேவி சோமசுந்தரம் சரமாரி கேள்விகள் : பீகார்காரரா உங்க மக்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?

Devi Somasundaram : Rangaraj Pandey Ragunathacharya .. அவர்களின் கவனத்திற்கு ..அன்பின் ரங்கராஜ், அண்ணன் ஆ.ராசா அவர்களின் பேட்டில சொன்ன கருத்துகளுக்கு, பதில் கருத்தா உங்க வீடியோ பார்த்தேன். என் அலுவலக வேலைகளால் உடனே பதில் சொல்ல இயலவில்லை. அத்துடன் உங்கள மாதிரி ஆதாரம் தரேன் என்று கூறிவிட்டு வெறும் அரட்டைக் கச்சேரி செய்வது என் பழக்கம் இல்லை. தரவுகளைத் தேட இரண்டு நாள் ஆனது. உங்க வீடியோவ ஒரு பாடலுடன் ஆரம்பித்து இருந்தீர்கள். நம் தொன்மையான மொழி எ
ன்று பிடிக்கும் போது சமஸ்கிருதத்தை விரும்பும் நீங்கள், ஆரம்பப் பாடலுக்கு மட்டும் ஏன் தமிழுக்குத் தாவி விட்டீர்கள் என்று புரியவில்லை. சர்வ மங்கள மாங்கல்யேன்னு கருவறைக்குள்ளும், தட்ல தட்சணை போடுங்கோன்னு தமிழுக்கும் மாறும் இயல்பு அறிந்ததால் அதை விட்டு விடுவோம். நானும் ஒரு பாடலோடு ஆரம்பிக்கின்றேன்.."

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா ?

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே! ".

இதில் பணத்தி என்பது பா,பாத்தி என்பதன் சுருக்க வடிவம் தான்.. ஒசை நயத்திற்காக என் பாட்டன் சிவ வாக்கிய சித்தர் அதை பணத்தி என்று சொல்லி இருக்கின்றார். சாதியும், மதமும் இல்லாத அன்பின் மொழி தமிழ் என்பதை இந்த உலகம் அறியும்.