காங்கிரஸையும் அழைத்து வந்தால் திமுக கூட்டணிக்கு தயார் என யோசனை சொல்கிறார் விஜயகாந்த். ஆனால், காங்கிரஸோடு கூட்டணி வைப்பது காங்கிரஸையும் திமுக-வையும் சேர்த்தே குழியில் தள்ளிவிடும் என திமுக தரப்பிலிருந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு பக்குவமாக தகவல் சொல்லி அனுப்பப் பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்து குலாம் நபி பேச்செடுத்தபோது, ’அதற்கு இப்போது வாய்ப்பில்லை. தேர்தலில் போட்டியிட்டு பாஜக-வைவிட கூடுதலான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறட்டும் அப்போது நாங்கள் காங்கிரஸை ஆதரிக்கிறோம்’ என்று கருணாநிதி சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.