சனி, 25 ஆகஸ்ட், 2018

இந்தியா பெண்களுக்கான நாடு இல்லை..

Thamizh Thozhar : This is why is India is dangerous for women இந்தியா பெண்களுக்கான
நாடு இல்லை என மீண்டும் நிரூபித்துள்ளது..
பீகாரில் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திவரப்பட்ட அவமானம்.
காட்டுமிராண்டிகள்.. இளைஞர் ஒருவரின் கொலை எதிரொலி: பெண்ணை நிர்வாணப்படுத்தி
அடித்து இழுத்து சென்ற அரசியல் வாதி: அதிர்ச்சி தரும் சம்பவம்!
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விமலேஷ் சாவ் என்ற இளைஞர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இளைஞர் மரணத்தை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர். பின்னர் விமலேஷ் மரணத்திற்கு அதேப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் தான் காரணம் என்று கூறி அந்த ஊரைச் சேர்ந்த சிலர் அவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர்.

திருநாவுகரசர் : அமித் ஷா பங்கேற்பு: கூட்டணியில் மாற்றம் வராது!

அமித் ஷா பங்கேற்பு: கூட்டணியில் மாற்றம் வராது!மின்னம்பலம் :திமுக தலைவர் கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்னும் தலைப்பில் தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திமுக விழாவில் பாஜக பங்கேற்பது குறித்தும் பல்வேறு விவதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

சென்னையின் ஆணிவேர் நீதிக் கட்சி!... சமூக நீதிக் கட்டமைப்புக்கு வித்திட்டுச் சென்ற இவர்களின்

மின்னம்பலம்: பிரகாசு :சென்னை வாரத்தில் சென்னையின் வரலாறு தேடி...
சிறப்புக் கட்டுரை: சென்னையின் ஆணிவேர் நீதிக் கட்சி!
சர் ஏ.டி.பன்னீர்செல்வம் பூங்கா, நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, சர்.பி.டி.தியாகராயர் அரங்கம், பனகல் மாளிகை, சவுந்திர பாண்டிய பஜார் (இப்போது பாண்டி பஜார்) போன்றவை சென்னையில் பிரபலமான இடங்கள். அதேபோல தியாகராய நகர், ஏ.கே.சண்முக செட்டியார் சாலை, டி.எம்.நாயர் தெரு, நடேசன் சாலை, எம்.சி.ராஜா தெரு, சைவ முத்தையா தெரு, உஷ்மான் சாலை, சுப்பராயன் சாலை போன்ற பெயர்களும் சென்னை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இதுமட்டுமின்றி தியாகராயர் சிலை, பனகல் அரசர் சிலை, சுந்தரராவ் நாயுடு சிலை, நடேசன் சிலை, டி.எம்.நாயர் சிலை, முத்தையா முதலியார் சிலை போன்றவையும் சென்னையில் இருக்கின்றன. இவர்களெல்லாம் யார்? எதற்காக சென்னை முழுவதும் இவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ள சாலைகளும், பூங்காக்களும், கட்டடங்களும் நிறைந்துள்ளன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா?
சென்னை வாரத்தை சென்னை வாழ் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வரலாற்றில் கலந்திருக்கும் இவர்களையும் சற்று அறிவோம். சென்னையைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரமாயிரம் இருந்தாலும் சென்னையிலிருந்து தவிர்க்க முடியாத அடையாளம் நீதிக் கட்சியும், அதன் வரலாறும். இன்றைய தலைமுறையினர்கள் பலருக்கு நீதிக் கட்சி என்றொரு கட்சி இருந்ததே கூட தெரியாமலிருக்கலாம். ஆனால் சென்னையில் வாழும் இன்றைய இளைய தலைமுறையினர் நீதிக் கட்சித் தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமல் சென்னையில் ஒரு நாளைக் கடப்பது என்பது கூட அரிதுதான்.
ஆம், மேலே சொல்லப்பட்ட அனைவரும் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களாக விளங்கியவர்கள். தமிழகம் கண்டிருக்கும் சமூக நீதிக் கோட்பாட்டிற்கு அடித்தளமிட்டவர்கள் இவர்கள்.

திருமுருகன் காந்திமீது ‘உபா’ சட்டம் ஏன்?

திருமுருகன் காந்திமீது ‘உபா’ சட்டம் ஏன்?மின்னம்பலம் : மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தி மீது இதுவரை 13 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 24) ஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அங்கிருந்த காவலர்களை நோக்கி, “என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க? நான் என்ன தீவிரவாதியா? வண்டிய நிறுத்துங்கன்னு நிறைய வாட்டி சொன்னேன். சிறுநீர் கழிக்கணும்னு மூணு மணிநேரமா சொல்றேன். வண்டிய நிறுத்தவில்லை. எஸ்.வி.சேகரை மட்டும் ஏன் இன்னும் கைதுசெய்யல. சிறுநீர் போகக்கூட அனுமதிக்க மாட்றீங்க. என்னைப் பரிசோதித்த மருத்துவர் எனக்கு சிகிச்சை அளிக்கணும்னு சொன்னாங்க. அதுக்குக்கூட அனுமதிக்கல” என்று ஆவேசமாக பேசினார். அங்கிருந்த நிருபர்களிடம், ‘'என்மீது உபா (UAPA) வழக்கு போட்டிருக்காங்க. பயங்கரவாதிங்க மீது போடுற வழக்கு அது. மோடி அரசை விமர்சித்தால் அந்த வழக்கு போடுவீங்களா? நூறு முறை உபா வழக்கு போடுங்க. நான் பயப்பட மாட்டேன்’' என்றும் திருமுருகன் காந்தி கூறினார்.

கர்நாடகாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகராறு


தினத்தந்தி : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மாநில அமைச்சர் ச.ரா.மகேசு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,
இது பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூர கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மடிக்கேரி, குஷால் நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் பொதுமக்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜோடுபாலா, மதேநாடு, மன்னங்கேரி, குஷால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மாணவி வளர்மதி கைது ..

Swathi K : இன்றைய செய்தி.. மாணவி வளர்மதி கைது.. இந்த ஒரே செய்தியை இரண்டு பத்திரிக்கைகள் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்று பாருங்கள்.. தி இந்து - மாணவி வளர்மதி கைது!! தினமலர் - நக்சல் ஆதரவு மாணவி கைது!! (Page# 3, Dinamalar Chennai edition) இதனால் தான் மறுபடி சொல்கிறேன்.. தினமலர் மாதிரி ஊடகங்கள் நாட்டுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு மோடியினால் ஏற்படும் பாதிப்பை விட அதிகம்.. நம்மை அறியாமல் ஒருவரை பற்றிய
தவறான கண்ணோட்டத்தை ஊடகங்களால் எளிதாக நம்மில் புகுத்தி விட முடியும்.. இதைத்தான் தினமலர் மாதிரி "ஹிந்துத்துவா" ஊடகங்கள் வெற்றிகரமாக செய்து வருகிறது.. தினமலர் ஒரு கொடிய விஷம் கொண்ட பாம்பு.
tamilthehindu : ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்ற போது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும் என்று தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.
பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் பொறுப்பாளரும் மற்றும் இயற்கை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (19.7.2017) சட்டப்பேரவையில், விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கலெக்டர் ரோகிணியின் அலப்பறை மோடியை மிஞ்சிய டுபாக்கூர்

Devi Somasundaram : ரோகினி அக்காவும் மோடியும்..
அவர் டீ ஆத்தினத பார்த்தவர்கள் யாருமில்ல ,
அக்கா கலெக்டர் சீட்ல உட்கார்ந்து வேலை பாத்தத பார்த்தவர்கள் யாருமில்ல,
அவர் நாடு நாடா சுத்துவாரு,
அக்கா தெரு தெருவா சுத்துவாங்க,
அவர் கலர் கலரா கோட் போடுவார்,
அக்கா கலர் கலரா .புடவை கட்டுவாங்க,
அவர் ஏழை தாயின் மகன்,
அக்கா ஏழை தாயின் மகள்,
அவர்க்கு கேமரா எங்க இருக்குன்னு தெரியும்,
அக்காவுக்கு கேமரா எங்க இருக்குன்னு தெரியும்,
ஏன் அக்காவ அடுத்த பிரதமராக்க கூடாது..
ஐ சப்போர்ட் அக்கா for PM
Dhana Sekar M இவங்க ஐ ஏ எஸ் பரிட்சையில எழுதுன மெயின் பேப்பர ரீ வேல்யுவேசன் பண்ணனும் இவங்க மெயின்ஸ் பரிட்சை எழுதுனாங்களான்னே சந்தேகமா இருக்கு

முல்லை பெரியாறு - கேரளா கம்யுனிஸ்டுகளின் தமிழக வெறுப்பு சுயரூபம்

பதிலடி தர வேண்டும்/tamil.oneindia.com -veerakumaran: சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.
புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது.
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வாழும் சுமார் ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயிகளின் ஒரே நீர் ஆதாரமாக இருப்பது முல்லை பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர்தான்.

உனக்கும் ஒண்ணும் கிடைக்கப் போறதில்ல!” – கனிமொழியிடம் அப்போதே சொன்ன அழகிரி,,, துர்க்காவின் ராஜ்ஜியம் ஆரம்பம்?

vikatan -ஆ.விஜயானந்த் தி.மு.கவில் கனிமொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படாமல் இருப்பதில் அதிருப்தியில் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ‘ பொதுக்குழுவில் சீனியரான துரைமுருகன் முன்னிறுத்தப்படுவதில் தவறு இல்லை. அதேநேரம், கனிமொழிக்கும் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்தோம்’ என்கின்றனர் ஆதங்கத்துடன்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் பொதுக்குழு கூட இருக்கிறது. வரும் 28-ம் தேதி நடக்கும் நிகழ்வில் தி.மு.கவின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதில், கழகத்தின் புதிய பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், துரைமுருகன் கையில் வைத்திருக்கும் முதன்மை நிலையச் செயலாளர் பதவி, டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அறிவாலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மொத்தம் மூன்றே பதவிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க இருக்கின்றனர். இதனால் கனிமொழி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
” கருணாநிதி மறைவுக்குப் பிறகு, ‘ கட்சிக்குள் கனிமொழி கால் ஊன்றிவிடக் கூடாது’ என்பதில் குடும்ப உறுப்பினர்கள் சிலர் உறுதியாக இருக்கின்றனர்.

சிங்கார சென்னையும் நவீன இனஅழிப்பும்..! - ஷாலின் மரியா லாரன்ஸ்

எந்த ’பின்னி’மில்லை சுற்றி இந்த சென்னை வடிவமைக்கப்பட்டதோ.. கூவத்தில் படகுகள் விடப்பட்டதோ... எங்கே எம் சி ராஜாவும் திருவிகாவும் உலாவினார்களோ... எங்கே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் துவங்கப்பட்டதோ... எங்கே சாதி வெறிக்கு எதிராக முதல் தொழிலாளர் புரட்சி வெடித்ததோ... அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடம் இப்போது ஹிந்தி பேசி கொண்டிருக்கிறது. அங்கே வரலாற்றை அழித்து நவீன அக்ராஹாரத்தை, சாதிய படிநிலைகளை கட்டி கொண்டிருக்கிறார்கள் மார்வாடிகள்.
வீடு ! ஏதோ சில காரணங்களுக்காக நான் சென்னையில் இப்பொழுது இருக்கும் வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை. இப்பொழுது இருக்கும் இந்த புரசைவாக்கத்து வீட்டை விட்டு போக வேண்டும் என்று கேள்விப்பட்ட மூன்று மாத காலமாக உண்மையாக சொல்லுகிறேன் மனது மனதாக இருக்க மறுத்துவிட்டது. சரியான உறக்கம் இல்லை, உணவை ருசிக்க முடியவில்லை, எழுத்து வசப்படவில்லை. இன்னும் சொல்ல போனால் முழுமனதாக அங்கே காதலும் கொள்ள முடியவில்லை.
வீடு என்பது வெறும் கற்களால் ஆனது கிடையாது. உணர்வுள்ளவர்களுக்கு அது ரத்தத்தினாலும் நரம்புகளிலும் பின்னி பின்னி இழைத்து கட்டப்பட்ட உணர்ச்சி கூடு அது. இந்த வீடு என்னோடு சிரித்திருக்கிறது, இந்த வீடு என்னோடு அழுதிருக்கிறது, தூக்க மாத்திரைகள் அள்ளி வாயில் திணித்த அன்று இந்த வீடு ஓலமிட்டு மற்றவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி இருக்கிறது. வீடு அஃறிணை அல்ல.

கலைஞர் படை எழுச்சி பாடல் ... தூய தமிழிசையின் மீள் வருகை?

தமிழ் மறவன : தற்போது தலைவர் கலைஞருக்கு தோழர்கள் எ.வ.வேலு,
சாவல்பூண்டி சுந்தரேசன் ஆகியோர் இசை வணக்கம் செலுத்தியதை இழிவு படுத்துகிற மூடர் கூட்டமே!
மிக முந்திய காலத்தில் தமிழிலேயே கீர்த்தனைகளை இயற்றி தமிழிசையை வளர்த்தவர் மூவராவார். அவர் சீர்காழி முத்துதாண்டவர்(1525-1625), சீர்காழி அருணாசலக் கவிராயர் (1711-1779), மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) என்பவர். இவர்கள் கீர்த்தனங்களும் பதங்களும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. தற்போதைய திடீர் போராளிகளுக்கு இந்த வரலாறெல்லாம் தெரியாது.
இன்றைய கருநாடக இசையில் கையாளப்பட்டுவரும் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய கீர்த்தனை வடிவத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் முத்துத்தாண்டவரே.
"பஜனை" எனும் சொல்லாடலால் அவைகளை புறந்தள்ள வேண்டுமா?
தற்காலத்திலும் அய்யா ந.அருணாசலம், அய்யா சுப.வீ, அய்யா பழ.நெடுமாறன் போன்றோர் புஷ்பவனம் குப்புசாமி, தேனிசை செல்லப்பா போன்ற பாடலாசியர்கள் மூலம் தமிழ் இசையை மீட்டெடுக்க ஆற்றிய பணிகள் குறித்த வரலாற்றை அறிவோம்..

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

கொள்ளிடத்தில் புதிய கல்லணை கட்டப்படும் .. முதல்வர் இடப்பாடி பழனிசாமி

கொள்ளிடத்தில் புதிய கதவணை: முதல்வர்!மின்னம்பலம் : திருச்சி முக்கொம்பில் வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள 45 மதகுகளின் மூலமாக அணையில் இருந்து காவிரி மற்றும் கால்வாய்களுக்குத் தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் ஒன்பது மதகுகள் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன்கூட்டியே சீரமைக்கத் தவறிய அதிமுக அரசே இந்தப் பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணல் கொள்ளையும் அணை உடைந்ததற்குக் காரணம் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

அழகிரி : தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலினே இருக்கட்டும். நான் தடையாக இருக்க மாட்டேன்

ஸ்டாலின் பேசினாலே போதும்: அழகிரிமின்னம்பலம்: திமுக தலைவர் கலைஞரின் நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி செல்லப்போவதாகவும், இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் பேரணி நடத்துவது தொடர்பாக இருவேறு மனநிலையில் அழகிரி உள்ளார். இது தொடர்பாக நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் கூறியிருந்தோம்.
இந்நிலையில், மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் அழகிரி இன்று (ஆகஸ்ட் 24) ஆலோசனை நடத்தினார்.
கட்சியின் பொறுப்புகளில் இருந்தவர்கள், அழகிரியால் அரசு அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது அழகிரிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பின்னர், வந்தவர்களிடம், “உங்கள் பகுதிகளில் இருந்து எத்தனைப் பேர் வருவார்கள், எத்தனை கார், வேன் வரும் ஆகிய விவரங்கள் அடங்கிய லிஸ்ட்டைக் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

குடகு வெள்ள பாதிப்பு ... நிர்மலா சீதாராமனின் வழக்கமான அடாவடி .. ரவுசு

nநக்கீரன் - சி ஜீவா பாரதி : கேரளாவைப் போலவே கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறது.   மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ சபை உறுப்பினரான நிர்மலா சீதாராமன்   வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்ய நேற்று மைசூர் வந்திருந்தார்.

nஇந்த நிலையில் இன்று காலை மைசூரிலிருந்து ஷராஞ்சி ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் வந்தடைந்தார். அதன் பின்னர் சாலை வழியாக வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகள், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில், நிவாரண முகாம்களை நேரடியாக பார்வையிட்டார். அதன் பின்னர் பயணத் திட்டத்தின் படி துணை ஆணையர் அலுவலகத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்தான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசுவது தொடர்பான நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிவாரணம் முகாமுக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சந்திப்பு என பயணத் திட்டத்தில் இல்லாத இடங்களுக்கு மத்திய அமைச்சர் சென்றிருக்கிறார். நேரடியாக அங்கு சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் அதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் அங்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

சுப்பிரமணியன் சாமி : திமுக கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க மாட்டார் .. டுவீட் செய்தி

சு.சாமி :“திமுக கூட்டத்தில் கட்சி தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து அறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது”
மாலைமலர் :சென்னையில் நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல்
கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படும் நிலையில், சுப்பிரமணிய சாமி ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், அமித் ஷா கலந்து கொள்ள உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

டாக்டர் தொல்.திருமாவளவன் ... மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பி எச் டி ..

VCK’s President Thirumavalavan now becomes Doctor; complete his Ph.D. viva voce tamileoneindia : நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அவர் தனது பிஎச்டி டாக்டர் பட்ட ஆய்வேட்டுக்கான வாய்மொழித் தேர்வை முடித்து டாக்டர் பட்டம் பெறுகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். அவருடைய ஆரம்பகால அனல் பறக்கு பேச்சுகள் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக புயலைக் கிளப்பியவை. அதே நேரத்தில், திருமாவளவன் சிறந்த படிப்பாளியும் ஆவார்.

திருமாவளவன் முதலில் பிஎஸ்சி வேதியியல் பட்டப் படிப்பு படித்தார். பின்னர், பி.எல். சட்டப்படிப்பு முடித்தார். அதன் பிறகு எம்.ஏ. கிரிமினாலாஜி படித்தார். இதையடுத்து, அவர் தடயவியல் துறையில் அரசு ஊழியராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்தான் டிபிஐ என்கிற தலித் பேந்தர் இயக்கத்தில் சேர்ந்து அரசியலில் தீவிரமானார்.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139.9 அடியாக தொடர்ந்து பராமரித்திட உச்சநீதிமன்றம் உத்தரவு

மாலைமலர் :முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆக.31 வரை 139.9 அடியாக தொடர்ந்து பராமரித்திட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி, கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது.
மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.< இதனால் இடுக்கி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது. இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

முக அழகிரி பேட்டி... காலம் வரும்போது கூறுவேன்

தனிக்கட்சி தொடங்க திட்டமா?- முக அழகிரி பேட்டிமாலைமலர் :ராசிபுரத்தில் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியிடம் தனிக்கட்சி தொடங்க திட்டமா?
என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
 ராசிபுரத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. விவசாய அணி செயலாளருமான கே.பி.ராமலிங்கத்தின் இல்லத் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
கேள்வி:- சென்னையில் நடைபெறும் பேரணி எந்த அளவிற்கு வெற்றி தரும்?

பதில்:- இந்த பேரணி வருங்காலத்தில் நிச்சயமாக எங்களுக்கு வெற்றியை தரும்.

கே:- தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

முக்கொம்பில் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை - முதல்வர் அறிவிப்பு

முக்கொம்பில் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை - முதல்வர் அறிவிப்பு
மாலைமலர் :திருச்சி முக்கொம்பில் வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சி: திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருச்சி காவிரி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் பிரியும் பகுதியில் உள்ள 9 ‌ஷட்டர் மதகுகள் உடைந்துள்ளது. அதனை தற்காலிகமாக சீரமைப்பதற்காக துரிதமாக, வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களில் அந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும். கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அணை உடையவில்லை சட்டர் பழுதானது. அது சரி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியை பொறுத்தவரை அதிகமான கழிவு நீர் டேமிற்குள் வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட அரிப்பினால் சட்டர்களில் பழுது ஏற்பட்டது. அதை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை திமுக நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

மாலைமலர் :சென்னையில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி
நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
திமுக முன்னாள் எம்.பி டி.ஆர் பாலு ஸ்டாலின் சார்பாக அமித் ஷாவை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். சென்னை பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

கேரளா :வெள்ளப்பாதிப்புக்கு தமிழகமே காரணம் ,,, வேதாளம் மீண்டும் முருங்க மரத்தில்..

Kerala govt blames TN govt for its flood tamil.oneindia.com - arivalagan. ;டெல்லி: கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு தமிழக அரசும் ஒரு காரணம் என்று விஷமனத்தமாக கூறியுள்ளது கேரள அரசு.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கும் வழக்கில் அது நேற்று உச்சநீதிமன்றத்தில் ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்தது. அதில்தான் இவ்வாறு தமிழகத்தின் மீது பழியைத் தூக்கிப் போட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டதால் இடுக்கி அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட வேண்டியதாயிற்று என்றும் பச்சைப் பொய்யைக் கூறியுள்ளது. ஆனால் இதே கேரள அரசுதான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க கோரி ஒற்றைக் காலில் நிற்கிறது.

கோபாலபுரத்தில் உதயநிதியின் அடாவடி ஆரம்பமா? சீனியர்களை மதிக்காத .. வாரிசுகள்?

தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது மு.க.அழகிரிக்கும் -ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அதிகாரப்போட்டியல்ல. அவர்களது மகன்களுக்கான இருப்பிடத்தை இப்போதே உறுதி செய்து கொள்வதற்கான முன்னேற்பாடு என்றே கூறி வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவர்களது பேரன்களான தயாநிதி அழகிரியும், உதயநிதி ஸ்டாலின் தத்தம் தந்தைகளை இயக்கும் கருவியாக மாறி விட்டனர். அவர்களிருவரும் இப்போதே கோஷ்டிகளை உருவாக்குவதிலும், செயல்பாடுகளிலும் நான்கு கால் பாய்ச்சல் காட்டி வருகின்றனர்.
''இனிமேல் இவர்கள் மட்டும்தான் தி.மு.க போல நடந்து கொள்கிறார்கள். இது அஞ்சலி செலுத்த வரும் பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

ஆளூர் ஷா நவாஸ் கேள்வியும் துரை தயாநிதி பதிலும்

துரை தயாநிதிவிகடன் :மலையரசு: சுப்பிரமணியன் சுவாமி குறித்த ஆளூர் ஷாநவாஸ் கேள்விக்கு,  மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய அவரின் மகன் மு.க.அழகிரி, ``உண்மையான தி.மு.க விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள்'' எனக் கூறியது, தி.மு.க-வில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தி.மு.க தொடர்பாக அவர் தெரிவித்துவரும் கருத்துகள் அக்கட்சி தொண்டர்கள், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறினாலும், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் எந்த ஒரு ரியாக்‌ஷனும் காட்டாமல், பொதுக்குழு வேலைகளிலும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கவனம்செலுத்திவருகிறார். மேலும், அழகிரியின் கருத்துக்கு இரண்டாம்கட்ட தலைவர்களே பதிலளித்து வருகின்றனர். 

முலாயம்சிங் யாதவ் : கலைஞர் ஒரு உறுதியான போராளி... அவரது போர்க்குணத்தை நான் கண்டிருக்கிறேன்

சிறப்புக் கட்டுரை: கருணாநிதி ஒரு போராளி!மின்னம்பலம் : முலாயம் சிங் யாதவ் கலைஞரும் நானும் இரு வேறு மொழிகளில் பேசினாலும், செயல்பட்டாலும் மாநிலக் கட்சிகளை மத்திய அரங்கில் செயல்படச் செய்யும் முக்கியமான வரலாற்றுச் செயல்முறையை நாங்கள் இருவரும் பிரதிபலித்திருக்கிறோம் என நம்புகிறேன்.
மிகப் பெரிய மாநிலமான தமிழ்நாட்டில் இருந்துகொண்டு கருணாநிதியும் திமுகவும் தென்னிந்தியாவில் செய்துவந்ததை நான் உட்படப் பலரும் வடஇந்தியாவில், குறிப்பாக உத்தரப் பிரதேசம் போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் செய்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். குறிப்பாக, ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி செய்த 1996, 1998 ஆண்டுகளில் ஒன்றாக வேலை செய்தோம். எங்களது கட்சிகள் மூலமாக மாநில அரசியல் கருத்தியல்களை மத்திய அரசியலுக்குக் கொண்டுசெல்வதில் பணியாற்றி வந்தோம்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

டிஜிட்டல் இந்தியா + ஆதார் = பேரழிவு!, சேதத்தை சரி செய்ய பல வருடங்கள்?

.savukkuonline.com - jeevanand-rajendran : ஆதார் மிகவும் பாதுகாப்பானது, குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மட்டும் தான் ஆதாரை கண்டு அஞ்ச வேண்டும் இது போன்ற கூற்றுக்களை தினம் தினம் நாம் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம், அதே சமயம் எதோ ஒரு வகையில் ஆதாரை வைத்து தகவல் திருட்டு, சில சமயங்களில் பொருளாதார திருட்டு நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆதாரை பயன்படுத்தி ஒரு நூதன திருட்டு எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.
ஆந்திரா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது தகவல் தொழில்நுட்பத்தில் முன்னோடி மாநிலம் என்பதே. அரசு ஆவணங்கள், தகவல் பரிமாற்றங்களை கணினி மயமாக்குவதில் அந்த அரசு மிகவும் முனைப்புடன் செயல்படும், அதில் ஒரு பகுதியாக சொத்து பத்திரங்களை 2012 முதல் டிஜிட்டல் ரெக்கார்ட்டாக வைக்கத்தொடங்கியது. இதன் நோக்கம் மிக எளிதாக சொத்து விபரங்களை சரிபார்ப்பதும், தொலைந்து போவதை பற்றி பயப்படத் தேவை இல்லை எனபதும் தான்.
Mee-Seva மையம் மூலம் யார் வேண்டுமானாலும் 250 ரூபாய் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இது தவிர Mee-Seva வலைதளத்தில் முதல் இரண்டு பக்கங்கள் மட்டும் பிரிவியூ செய்யும் வசதியும் உண்டு. இரண்டாம் பக்கத்தில் இருக்கும் தகவல் தான் இந்த திருட்டுக்கு தேவையானது, சொத்து வாங்குபவர், விற்பவர் மற்றும் 2 சாட்சிகள்  இவர்கள் உடைய பெயர் ,வயது மற்றும் கைரேகை.

கலைஞர் பஜனை .. நினைவிடத்தில் திமுகவினர் எழுச்சி பாடல்களை ...


சென்னை: மறைந்த தலைவர் கலைஞரின்  நினைவிடத்தில் திமுவினர் கலைஞரின் எழுச்சி பாடல்களை பஜனையாக பாடினார்கள் ,
அமைச்சர் எவ வேலு தலைமையில் நேற்று முன்தினம் ஒரு குழுவுடன் சேர்ந்து கலைஞரின் வரலாற்றினை பாடல்களாக இயற்றி மேளதாளத்தோடு அவர்கள்  பாடியதை கொஞ்சம் வியப்போடு மக்கள் கேட்டு கொண்டிருந்தனர். ஏராளமானோர் அந்த குழுவோடு சேர்ந்து பாடியது மிகவும் இனிமையாக எழுச்சியாக இருந்தது!
பஜனை என்றவுடன் பலரும்  இது  ஒரு வழிபாடு என்று எண்ணி கொஞ்சம் அதிர்ந்தனர்.  வாத்திய கருவிகளின் இரைச்சலில் அவர்கள் பாடிய வரிகள் கேட்பதில் சற்று சிரமம் இருந்தது . ,அழகுமலை ,

நிர்மலா, உமா, புனிதா, மைதிலி.. சீரழிந்த உயர் கல்வித்துறை... சுனில் பாலிவால் மாற்றம் ஏன்?

Why Sunil Paliwal shifted?
tamiloneindia - Sutha :சென்னை: தமிழக உயர்
கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் உயர் கல்வித்துறை செயலாளராக இருந்து வந்த சுனில் பாலிவால் மாற்றப்பட்டுள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக அரசு இன்று பல முக்கிய துறை அதிகாரிகள், கலெக்டர்களை மாற்றியுள்ளது. அதில் முக்கியமானவர் சுனில் பாலிவால். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வித்துறை செயலாளராக இருந்து வந்தார். இன்று அவர் மாற்றப்பட்டுள்ளார். தமிழக உயர் கல்வித்துறை சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன சர்ச்சை, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் பாலியல் வற்புறுத்தல் புகார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா மீதான புகார்கள், திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தங்கப் பாண்டியன், மைதிலி மற்றும் புனிதா மீதான பரபரப்பு பாலியல் புகார்கள் என மோசடிகள் நீண்டு கொண்டே போகின்றன.

எடப்பாடி மீது 3120 கோடி ஊழல் வழக்கு.. உயர்நீதி மன்றத்தில் ... ஆர் எஸ் பாரதி மனு தாக்கல் ..

tamilspecialcorrespondent : அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நெடுஞ்சாலையில் ஒப்பந்த பணிகளில் முதல்வர் ஊழல் செய்துள்ளதாக இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல்வேறு நெடுஞ்சாலையில் பணிகளில் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3120 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக ஆர்.எஸ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மீது வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் ஆணையிட கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி : என் தந்தை இறப்பிற்கு காரணமானவர் இறந்து கிடக்கிறார்... அது மகிழ்சசியை தரவில்லை!

பிரபாகரன் மரணம், ராகுல் காந்திபிரபாகரன் இறந்ததை கேள்விப்பட்ட பின்பு நான் அவருடைய குழந்தைகளைத் தான் நினைத்தேன் - ராகுல் காந்தி தந்தையை இழந்த குழந்தைகளின் வலியை நாங்கள் நன்றாகவே அறிவோம். அவரின் மரணம் எங்களுக்கு ஆறுதலைத் தரவில்லை பிரபாகரன் மரணம் குறித்து ராகுல் காந்தி : ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹாம்பர்க் பகுதியில் உள்ள புசேரியஸ் சம்மர் ஸ்கூலில் நடைபெற்ற நிகழ் ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
அவர் அங்கு பேசுகையில் இந்தியாவின் சாமானியர்களின் வாழ்வினைக் கேள்விக்குறியாக மாற்றிய ஜிஎஸ்டி, வேலையில்லாத் திண்டாட்டம், பணமதிப்பிழக்க நீக்கம் ஆகியவற்றைப் பற்றி அங்கு பேசியுள்ளார். மேலும் வன்முறைப் பற்றியும் அவருடைய தந்தை ராஜீவ் காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதைப் பற்றியும் பேசினார்.

தொண்டர்கள்தான் தலைவர்கள் : மு.க அழகிரி

தொண்டர்கள்தான் தலைவர்கள் : மு.க அழகிரிமின்னம்பலம் : தன்னிடம் வரும் அனைவரும் தலைவர்தான் எனக் கூறியுள்ள மு.க. அழகிரி, தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தலைவர் யாரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மகனுமான மு.க.அழகிரியை கட்சியில் இணைக்க குடும்பத்தினர் முயற்சித்த நிலையில், அதற்கு ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் அறிவிப்பேன்” என்றார். அழகிரியின் இந்த பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

100 டி.எம்.சி. காவிரி நீர் கடலில் - மேட்டூர் அணையின் மொத்த நீரைவிட அதிகம்

100 டி.எம்.சி. காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது - மேட்டூர் அணையின் மொத்த நீரைவிட அதிகம்
மாலைமலர் : மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. சென்னை: கர்நாடகாவில் உற்பத்தியாகி வரும் காவிரி ஆறு திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம்-சீர்காழி இடையேயும் கடலில் கலக்கின்றன.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது. அதன்பிறகு திருச்சி அருகே முக்கொம்பில் தண்ணீரை பிரித்து அனுப்பும் ஒரு அணையும், அதைத் தொடர்ந்து கல்லணையும் உள்ளன.
காவிரியில் அதிக வெள்ளம் வரும்போது, முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் கல்லணையில் இருந்தும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக திறந்து விடப்படும்.

மோடி குஜராத் பூகம்பத்தின் போது பெற்ற வெளிநாட்டு உதவிகள் பட்டியல்

வெளிநாட்டு நிதியை ஏற்கலாம்: பினராயிVenkat Ramanujam : மோடி குஜராத்தில் மாநில
முதல்வராக இருந்த போது பூகம்பம் ஏற்படுத்திய பேரிடரில் வெளிநாடுகளின் அவர் பெற்ற விவரம்.. Narendra #Modi when he as CM Gujarat received below foreign aids at the time of Earthquake ..
மின்னம்பலம்:: பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு தானாக விருப்பப்பட்டு உதவ முன்வந்தால், மத்திய அரசு ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “ஜூலை 30ஆம் தேதி வரை தண்ணீர் ஆரஞ்சு அலர்ட்டுக்கு குறைவாகவே இருந்தது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தண்ணீரின் அளவு பின் சென்ற நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி பெய்த கனமழை காரணமாகத் தண்ணீரின் அளவு அதிகரித்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டது. யாரும் இதை முன்கூட்டியே கணித்திருக்க முடியாது. எனினும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்” என்று தெரிவித்தார்.

பாஜக ஜெமீலா : மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'

மனுஷ்யபுத்திரன்,பகிரங்க மன்னிப்பு,கேட்க வேண்டும்,ஜமீலாதினமலர் :சென்னை : ‛பெண்களை கொச்சைப்படுத்தி கவிதை வெளியிட்ட மனுஷ்யபுத்திரன், அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என பா.ஜ., முன்னாள் பிரமுகர் ஜமீலா தெரிவித்தார். இதகுறித்து கமிஷனரிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.
திமுக.,வை சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன், ‛ஊழியின் நடனம்' என்னும் தலைப்பில் பெண்ணை மையமாக வைத்து இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி கவிதை எழுதியிருந்தார். இதனை கடந்த 18ம் தேதி அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அவரது அக்கவிதை பெண்களுக்கு எதிராகவும், இந்து பெண் தெய்வங்களை பழிப்பது போன்றும் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் பா.ஜ., பிரமுகர் ஜமீலா போலீஸ் கமிஷரிடம் புகார் ஒன்றை அளித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: ‛ஊழியின் நடனம்' எனும் தலைப்பில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும், பெண்களின் மாதவிடாய் குருதியையையும் இணைப்புப்படுத்தி கவிதை ஒன்றை மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில் மிகவும் ஆபாசமாகவும், கொச்சையாகவும் அவர் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.

இலங்கை ராஜபக்சேயின் தம்பியின் இறுதி நிகழ்வில் சுப்பிரமணியன் சாமி ...

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்புமாலைமலர் :பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். கொழும்பு: பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் மடமுலனாவில் உள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் முன்னோர்கள் இல்லத்துக்கு சென்று அங்கு ராஜபக்சேவை சந்தித்தும் பேசினார். அப்போது டெல்லிக்கு வருமாறு சுப்பிரமணியசாமி அவருக்கு அழைப்பும் விடுத்தார். மேலும், நேற்று முன்தினம் மரணம் அடைந்த ராஜபக்சேவின் இளைய சகோதர சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

தமிழர்களை நாங்க தப்பா நினைச்சிருந்தோம், இப்போ உங்க மனசை புரிஞ்சுக்கிட்டோம்!'- நெகிழ்ந்து பேசிய கேரள

 kerala young நக்கீரன் : எல்லாருக்கும் வணக்கம், நான் பேசும் தமிழில் எதாவது பிழை இருந்தால் முதலில் மணித்துவிடுங்கள். என் பெயர் ஸ்ரீஜித், நான் கேரளாதான், பாலக்காடு என் ஊர். முன்னெல்லாம் கேரளாவில் தமிழ்நாட்டு மக்கள் என்று சொன்னாலே ஒரு மாதிரி பார்ப்பார்கள். அவர்களுக்கு படிப்பு குறைவு என்று நிறைய பேர் அவர்களை தவறாக நினைத்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக நான் வெள்ள நிவாரண மையத்தில்தான் இருக்கிறேன். தற்போதுகூட தமிழகத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்திலிருந்து, லாரியில் வரை டன் டன்னாக நிவாரண பொருட்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போதெல்லாம் தமிழர்கள் உங்களுடைய பவரை காண்பித்தீர்கள். ஆனால், இப்போது கேரள மக்களாகிய எங்களுக்காக உங்களுடைய அன்பான மனசை வெளிப்படுத்தியுள்ளீர்கள். தற்போதும் லோடு லோடாக எதாவது நிவாரணப்பொருட்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு பின் எந்த அமைப்பு இருந்தது என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் அங்கிருக்கும் தமிழர்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட எங்கள் மனதில் இருக்கிறது.

தனித் தமிழ் தேசியம் இன்று சாத்தியமா?

சிறப்புக் கட்டுரை: தனித் தமிழ் தேசியம் இன்று சாத்தியமா?மின்னம்பலம்: வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்- இன்று தமிழ் தேசியம் குறித்த விவாதங்கள் பல தளங்களில் நடந்துவருகின்றன. தமிழ்நாட்டில் வசிக்கும் “வந்தேறிகள்” குறித்த குரலும் உரக்க ஒலிக்கிறது. இந்தச் சூழலில் தேசிய இனங்கள், தமிழ் தேசியம், சுயாதிகார உரிமை ஆகியவை பற்றியெல்லாம் திறந்த மனதோடு விவாதிக்க வேண்டியுள்ளது.
தேசிய இனங்களின் தோற்றம்
தேசிய இனங்களின் தோற்றத்தைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு வரலாம். உலக நாகரிகங்கள் தோன்றியவுடன் மானிடம், இனம் இனமாகக் கூடி வாழ்ந்தது. அப்படிக் கூடி வாழ்ந்த இனங்களுக்குள் சில பொதுவான குணங்களும், தன்மைகளும், உறவுமுறைகளும் ஏற்பட்டன. சமுதாயம் சிந்திக்கத் தொடங்கியபோது, தங்கள் இனம், தங்கள் மண் என்ற பார்வைக்குத் தள்ளப்பட்டன. அந்த மக்களிடையே பேச்சு வழக்கில் மொழி தோன்றியது.

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழக நிலம் ..அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க உத்தரவு!

மின்னம்பலம்: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையில் திருமலைச்சமுத்திரத்தில் 1985இல் திறந்தவெளிச் சிறைச்சாலை கட்டுவதற்காகச் சிறைத் துறைக்கு 58.17 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தனது கட்டடங்களைக் கட்டிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகச் சிறைத் துறையானது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸைத் தொடர்ந்து வெளியேற்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன! மக்களுக்கு அபாய எச்சரிக்கை

7 shutters of Kollidam dam washed away tamil.oneindia.com -veerakumaran.: திருச்சி: கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
1836-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் திருச்சியையடுத்த முக்கொம்பில் கட்டப்பட்டது மேலணை. இதில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன.
இந்த அணையில் இருந்து தண்ணீர் காவிரி, கொள்ளிடம் மற்றும் கால்வாய்களில் பிரித்து அனுப்பப்படுகிறது. நீர் வரத்தால், முக்கொம்பு மேலணை நிரம்பி வழிகிறது. எனவே, வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியை கடந்து கொள்ளிடத்திற்கு நீர் திறக்கப்பட்டு வந்தது.

நடிகை சன்னி லியோன் கேரளாவுக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடை ...

Arun M : ஓரு நடிகை... சன்னி லியோன்.
அவங்களை கேவலமா பேசாதவனே இல்லைனு சொல்லலாம்... விதிவிலக்காக என்னை மாதிரி சிலர் இருக்கலாம். நான் எந்த பெண்ணின் தனிப்பட்ட வாழ்ககையையும் இதுவரை குறை சொன்னதே இல்லை. தவறே செய்தாலும் அவர்களின் தனிப்பட்ட விசயம் என்று கடந்து விடுவேன். அவர்களுக்கும் மனம் என்ற ஒன்றிருக்கும்.அதில் காயங்கள் ஏராளமாக இருக்கும் என்பதை உணர்ந்தவன். இன்று கேரளா பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பல சூப்பர்ஸ்டார்கள் நடிகர்கள் லட்சங்களில் உதவி செய்யும் பொழுது... ஏன் நம் தமிழ்நாடு முதல்வரே வெறும் 5 கோடிதான் உதவித்தொகை அறிவித்தார். நேற்று பிறந்த சிறு மாநிலமான தெலுங்கானா முதல்வர் 25 கோடி அறிவித்த பிறகுதான் மீண்டும் 5 கோடி அறிவித்தார். ஆனால் சன்னி லியோன் தனி நபராக 5 கோடி ரூபாயை கேரளாவிற்கு அளித்திருக்கிறார் . அவர் கஷ்டப்பட்டு பலரின் கேவலமான பேச்சுக்களை பார்வைகளை தாங்கிக்கொண்டு நடித்து சம்பாதித்த பணத்தை அள்ளி வழங்கியிருக்கிறார். 

புதன், 22 ஆகஸ்ட், 2018

மலையாள தேசாபிமானி : கலைஞர் நம்முன்னே கம்பீரமாய் முன்செல்கிறார்.!

Bava Chelladurai Bava : மலையாள இதழ் 👇
தேசாபிமாணியில் வெளிவந்த கவர்
ஸ்டோரியின் தமிழாக்கம்..
பெரியாரின் தொடர்ச்சி..
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த சமூக, அரசியல் தலைவனின் இறுதி அஞ்சலிக்கும் இத்தனை லட்சம் மக்கள் திரண்டதில்லை என அரசியல் விமர்சர்கள் கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வை மதிப்பிடுகிறார்கள். கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை கிராமங்களும், நகரங்களும் தங்கள் இயல்பை அப்படியே நிறுத்திவிட்டு சென்னையை நோக்கி திரும்பியது. ஒரு மகத்தான தலைவனால் மட்டுமே எந்த புற உந்துதல்களுமின்றி மக்களை இப்படி உந்தித் தள்ள முடியும்.
கலைஞர் கருணாநிதி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளையும் மீறி உலகம் முழுக்க வியாபித்திருக்கும் மக்கள் மனதில் உறைந்திருந்தார். நீதிக்கட்சி, திராவிடக்கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம் என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அடையாளப்படுத்தப் பட்டாலும், சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கேட்கும் அந்த இயக்கத்தின் குரல் காலத்துக்கு காலம் உரத்தும், தேய்ந்தும் இப்போதும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. கடந்த நூறாண்டுகளை சமமாக நாம் பிரித்துக் கொண்டால் முன் பாதிக்கான போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து கொள்கையையும் போராடும் குணத்தையும் அப்படியே சுவீகரித்துக் கொண்ட கருணாநிதி அடுத்த ஐம்பதாண்டுகளை தன் தலைமையின் கீழ் முன்னெடுத்தார்.

பெண் எஸ் பி க்கு வலைவீசிய ஐ ஜி முருகன் ,,, கனிமொழி மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்வியால் மாட்டிய ஐ ஜி ..

ஒரு பெண் அதிகாரி, ஒரு உயர் அதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் என்று குற்றம் சுமத்திய பிறகு கூட தமிழக அரசு, விசாகா கமிட்டியை அமைக்காமல் தவிர்த்து வந்தது. திமுக மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழி, தமிழக காவல்துறையில் ஏன் விசாகா கமிட்டி இல்லை என்று கேள்வி எழுப்பிய பிறகே, விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடு கொண்ட திரு.முருகா !!! Savukku : லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, தமிழகத்தில் இருக்கும் துறைகளிலேயே மாறுபட்ட ஒரு துறை.  1991 முதல் 2008 வரை அங்கே பணியாற்றிதால் எனக்கு இத்துறையைப் பற்றி முழுமையாக தெரியும்.  இதர அரசுத் துறைகளைப் போல அல்லாமல், இத்துறையில்  உள்ளவர்கள், நட்புணர்வோடு பழகுவார்கள்.   இதர அலுவலகங்களில் உள்ள சிறு சிறு பூசல்கள் இங்கேயும் உண்டு என்றாலும், மற்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்ச லாவண்யங்களில் திளைப்பது போல, இத்துறையில் பெரிய அளவில் ஊழல் இல்லை.
இத்துறையில் பணியாற்றிய அதிகாரிகளில் சிலர்,  ரகசிய நிதியினை கொள்ளையடித்துள்ளனர்.   காலப்போக்கில் 2001ம் ஆண்டுக்கு பிறகு, ரகசிய நிதியினை கொள்ளையடிப்பது ஒரு தவறே இல்லை என்ற நிலை உருவாகியது.   அப்படி ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்கள் வந்திருந்தாலும், இது வரை, தனக்குக் கீழ் பணியாற்றிய பெண் ஊழியர்களிடம் ஆண் அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொண்டனர் என்ற புகார் எழுந்தது கிடையாது.
இப்போது முதல் முறையாக ஒரு பெரும் புகார் எழுந்துள்ளது.  லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி தனக்குக் கீழ் பணியாற்றிய ஒரு  பெண் எஸ்பியிடம்  முறைகேடாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்பதே அந்த புகார்.  அப் புகாருக்கு உள்ளானவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநர் முருகன் ஐபிஎஸ்.

கேரளாவுக்கு அமீரகம் கொடுக்கும் 700 கோடியை தடுக்கும் மத்திய அரசு .. பினராயி விஜயன் கோரிக்கை

கேரளாவுக்கு ரூ.2600 கோடி சிறப்பு நிதி வழங்க மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கைதிருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க இருக்கும் 700 கோடி ரூபாயை மத்திய அரசு இந்தியாவிற்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மாலைமலர்: கேரளாவில் முதல்வர் தலைமையில் கூடிய மந்திரி சபையில், வெள்ளச் சேதங்கள், மறுகட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2600 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை மாநிலத்தை நிர்மூலமாக்கியது.
 மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. 370 பேர் மழைக்கு பலியானார்கள். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 3 லட்சம் விவசாயிகள், 45 ஆயிரத்து 988 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மண் மூடி சேதமானது.
; இப்படி மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்படுத்திய சேதம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று மாநில அரசின் முதல்கட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.