சனி, 16 அக்டோபர், 2021

பிரிட்டிஷ் எம்.பியை குத்திக் கொலை செய்த இஸ்லாமிய பயங்கரவாதி ..சோமாலியாவை சேர்ந்தவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்

  Veerakumar  -  Oneindia Tamil :  லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி. டேவிட் அமெஸ் என்பவர் பட்டப் பட்டப்பகலில்  ஒரு இஸ்லாமிய பங்கரவாதியால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டேவிட் அமெஸ். 69 வயதாகும் மூத்த எம்பியாவார் .
 இவர் நேற்று எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அந்தப் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை சந்தித்தார்.
அப்போது திடீரென ஒரு இளைஞர் டேவிட் அமெஸை கத்தியால் குத்தினார்.
பலமுறை அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்ததும், அங்கு வந்த போலீஸார் அந்த மர்ம நபரைக் கைது செய்தனர்.
அந்த நபருக்கு 25 வயது சோமாலியா நாட்டை சேர்ந்தவர் உறுதி செய்தனர்
இதனிடையே டேவிட் அமெஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஐந்து வருடங்களில் இரண்டாவது முறையாக, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் பொது இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.   

for news link click   killer was Muslim man aged 25 Somali  

முதல் கட்ட விசாரணையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அமைப்புக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவை தடுக்கும் நோக்கத்தில் ..15 பவுன்சர்கள், 500 பேரை அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாதுகாப்பு போட்ட OPS-EPS.

 tamil.asianetnews.com  - Ezhilarasan Babu  : ஒரு வேளை சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தால், அவரை தடுக்கும் நோக்கில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, வெங்கடேஷ் பாபு பெஞ்சமின், பா.வளர்மதி உள்ளிட்டோர் அதிமுக அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா இன்று வருகை தந்ததை யொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 15 பவுன்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒருவேளை சசிகலா அதிமுக அலுவலகம் நோக்கி வரும் பட்சத்தில், அவரை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறையிலிருந்து விடுதலையானயாகி எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1233 பேருக்கு தொற்று உறுதி .. சென்னை, கோவை, ஈரோட்டில் பாதிப்பு அதிகம்

 Velmurugan P -  Oneindia Tamil :  சென்னை : தமிழகத்தில் அக்டோபர் 16ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1,233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,434 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 15,238 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 15,022 ஆக குறைந்துள்ளது.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1200 என்கிற நிலையில் உள்ளது.
கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

சோனியா காந்தி உறுதி : காங்கிரஸ் கட்சிக்கு நானே முழு நேர தலைவர்

Jeyalakshmi C  -   Oneindia Tamil :   டெல்லி: ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை என்றும் கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் நேர்மையான விவாதம் வேண்டும் என்றும் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி இதனைத் தெரிவித்துள்ளார். நான் சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால், முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி என்ற மத்திய அரசின் தொடர் பிரச்சாரம் நம்பக்கூடியதாக இல்லை.
நமக்கு தெரிந்தவரை பொருளாதார மீட்பு என கூறி தேசிய சொத்துக்களை விற்பதே மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி என்றும் மத்திய அரசை அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த பிறகு , கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை சோனியா காந்தி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

முரட்டுதனமாக பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த இருளர் இனப் பெண் இளம்பெண்..! செங்கல்பட்டு மாவட்டம்

முரட்டுதனமாக பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த  இளம்பெண்..! | Woman Rape killed...15 year old boy Arrest
tamil.asianetnews. - vinoth kumar  : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே மலைமுகட்டுப் பகுதியில் இருளர் இனப் பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பெண்ணின் மகன் தனது தாயை காணவில்லை என்று பல்வேறு இடங்களில்  தேடிக்கொண்டிருந்தார். அப்போது, புதர் அடங்கிய பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் மயங்கி இருப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்தான்.
சிறுவன்  பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே மலைமுகட்டுப் பகுதியில் இருளர் இனப் பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பெண்ணின் மகன் தனது தாயை காணவில்லை என்று பல்வேறு இடங்களில்  தேடிக்கொண்டிருந்தார். அப்போது, புதர் அடங்கிய பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் மயங்கி இருப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்தான்.

'ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் நியமனம்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

உருவாகிறது தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம். - #DMK4TN

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (15/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, 15 அக்டோபர், 2021

நோர்வேயில் அம்பு வில் மூலம் தாக்குதல் பலர் காயம் ஐவர் உயிரிழப்பு

 jayanewslive.com : நார்வேயில் வில் அம்புகளை எய்து பலரை கொலை செய்த கொடூர சம்பவம் - மர்மநபர் கைது
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் காங்ஸ்பெர்க் நகரில், மர்மநபர் ஒருவர் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வில் மூலம் அம்புகளை டன் வந்த எய்தி தாக்கியுள்ளான்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், போலீசார் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

பிரிட்டிஷ் எம்.பி., கத்தியால் குத்தி கொலை.. பட்டப்பகலில் தேவாலயத்தில் கொடூரம்

 Velayuthan Murali  - Samayam Tamil  : பட்டப்பகலில், சர்ச்சில் எம்.பி.,யை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பிரிட்டன் நாட்டில், தொகுதி மக்களை சந்திக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் என்பவரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது கட்சியைச் சேர்ந்தவர், டேவிட் அமெஸ். 69 வயதாகும் இவர், எசெக்ஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
டேவிட் அமெஸ், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில், தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்பது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமையான இன்று, எசெக்ஸ் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில், பொது மக்களை சந்திப்பதற்காக வந்தார்.

"எனது அண்ணன் அழகிரி லயோலா கல்லூரியில் படித்தவர்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நக்கீரன் செய்திப்பிரிவு  :  இன்று (15/10/2021) மாலை சென்னையில் உள்ள லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் அதி
நவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். லீபா என்னும் பெயரிடப்பட்ட இந்தக் கட்டடமானது புதிய வடிமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவால் கட்டப்படுள்ளது.
இந்தக் கட்டட திறப்பு விழாவின்போது கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, எழிலன் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., சேவியர் பிரிட்டோ (கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் தலைவர்), அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

ரத்தன் டாடா ஏர் இந்தியாவை கையகப்படுத்தியதில் சந்திரசேகரன் பங்கு .. ரத்தன் டாடா பேட்டி

ரத்தன் டாடா

Prasanna Venkatesh -  GoodReturns Tamil   :  மொத்தம் ரூ.7.43 லட்சமாம்! 60,000 ரூபாய் கடனுடனும், தினமும் 20 கோடி ரூபாய் நஷ்டத்துடனும் இயங்கி வந்த ஏர் இந்தியாவை எப்படியாவது விற்பனை செய்தாக வேண்டும் என மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது.
தொடர் தோல்வியின் காரணமாக கடந்த முறை விற்பனை செய்யும் அளவீட்டை மாற்றிய போது 5 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் வெற்றிப்பெற்று ஏர் இந்தியாவை கைப்பற்றியுள்ளது.
இந்த முயற்சிக்கு யார் காரணம் தெரியுமா..?
ரத்தன் டாடா சொன்னதை பாருங்க. ஏர் இந்தியா-க்கு போட்டியாக ஆகாஷ் ஏர்லையன்ஸ்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு ஓகே சொன்ன அரசு..! டாடா சன்ஸ் - டாடா டிரஸ்ட் டாடா சன்ஸ் - டாடா டிரஸ்ட் டாடா குழுமத்தில் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் மொத்த ஹோல்டிங் நிறுவனம் தான் டாடா சன்ஸ். இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் ஒரு அமைப்பு தான் டாடா டிரஸ்ட். இது டாடா குடும்பத்திற்கு சொந்தமானது. 


இந்த டாடா டிரஸ்ட் நிறுவனத்திற்கு தலைமை வகிப்பவர் தான் இந்தியாவின் தலைசிறந்த வர்த்தக தலைவர் ரத்தன் டாடா.

தலித் மாணவரை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது . கடலூர் மாவட்டத்தில்

தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர்


zeenews.india.com : கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
கடலூர் (Cuddalore) மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு அரசுப் பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவன் (School Student) ஒருவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்தார். இதனால் கடுப்பான ஆசிரியர் அவரை முட்டிபோட வைத்துள்ளார்.
பின்னர் அங்கு இருந்த பிரம்பால் அந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அந்த ஆசிரியர் இதோடு நிற்காமல் அந்த மாணவரை தனது கால்களால் எட்டியும் உதைத்ததுடன் இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக மாணவர் ஒருவர் வீடியோ பிடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த காட்சியை படம் பிடித்த மாணவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தடை நீங்கியது: கோவில்கள் திறப்பு- தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்

 மாலைமலர்  : சென்னை:  கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இன்று முதல் அளிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு தளர்வில் கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தடுப்பு வேலி அமைத்து பக்தர்களை நிறுத்தி தனித்தனியாக தரிசனத்துக்கு அனுமதித்தனர். பக்தர்கள் கூட்டமாக சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பல மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வமாக வந்தனர்.

என் தந்தை உட்பட 28 ஆண்கள் என்னுடன் வன்புணர்வு கொண்டுள்ளனர்.. பகுஜன் . சமாஜ்வாதி அரசியல்வாதிகள் உட்பட ... உத்தர பிரதேசம் 17 வயது பெண்.

 tamil.asianetnews.com  - Ezhilarasan Babu : மேலும், ஒருமுறை அந்த பெண் தன் மாமா வீட்டிற்கு சென்றபோது, ​​அங்கே அவரது உறவினர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒரு கட்டத்தில் அவளுடைய மாமா அவளை சிலருக்கு விற்க முயன்றார், ஆனால் அவள் அங்கிருந்து தப்பித்த தாகவும் காவல் துறையிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து லலித்பூர் எஸ்பி நிகில் பதக் கூறுகையில் 'இது மிகவும் உணர்ச்சிபூர்வமாக வழக்கு. நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.
தனக்கு ஏற்பட்ட இந்த கொடூரத்திற்கு முழு காரணம் தனது தந்தைதான் என அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் லலித்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் சிலரும் அடங்குவதாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். 

சாம்பார் நல்லா இல்ல” : தாய், தங்கையை சுட்டுக்கொன்ற இளைஞர் - கர்நாடகாவில்

 கலைஞர் செய்திகள் : சாம்பார் சரியில்லை என்ற காரணத்தால் வீட்டில் தகராறு ஏற்பட்டு தாய் மற்றும் தங்கையை இளைஞர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்புரா அருகே குடகோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (24) நேற்று இரவு குடித்துவிட்டு வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளார்.
அப்போது சாம்பார் ருசியாக இல்லை என்ற காரணத்தால் தகராறு ஏற்பட்டதில், தாய் மற்றும் தங்கையை தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கி எடுத்து சுட்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே தாய் பார்வதி (42) மற்றும் தங்கை ரம்யா (19) ஆகியோர் உயிரிழந்தனர். வெளியில் சென்றிருந்த தந்தை வீட்டுடு வந்து மனைவியும் மகளும் கொலையுண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், சித்தாப்புரா காவல் நிலைத்தில் தன் மகன் மீது புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், மஞ்சுநாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 14 அக்டோபர், 2021

மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்கு திரும்பும் அமுதா ஐ.ஏ.எஸ்.!

 நக்கீரன் :  பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார்.  1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் தடைகளைத் தகர்த்து சாதித்தவர் என பெயர் பெற்றவர் அமுதா.
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுதந்திரமாக உலவிய காலகட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சார் ஆட்சியராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்., அடர்ந்த காடுகளுக்குச் சென்று உள்ளூர் மக்களைச் சந்தித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர்.

பிரதமர் மகிந்தா ராஜபக்ச வீட்டில் சுப்பிரமணியன் சாமி நவராத்திரி கொண்டாட்டம்

May be an image of 3 people, people standing and indoor
பிரதமருக்கு அருகில் தரையில் சு.சாமி

vishnupriya R  -   Oneindia Tamil :  கொழும்பு: இலங்கை பிரதமர் ராஜபக்ச வீட்டில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தையொட்டி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார்.
நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அது போல் இலங்கையிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலரியில் உள்ள மாளிகையில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டார்.

YGP மதுவந்தி 1,21,30,867 ரூபாய் கடனை செலுத்தாமல் ஏய்ப்பு? வீட்டிற்கு அதிகாரிகளை வீடு சீல் வைப்பு

கலைஞர் செய்திகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் : கடனை கட்டாமல் இழுத்தடித்தாரா? - நடந்தது என்ன?
பிரபல ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பி கட்டாத காரணத்தினால், பா.ஜ.க நிர்வாகியும் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பா..ஜக பிரமுகரும் நடிகையுமான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும் நடிகை மதுவந்தியின் வீடு ஒன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இந்த வீட்டை வாங்குவதற்கு கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார்.
ஆனால் கடன் வாங்கி சில மாதங்கள் மட்டுமே வாங்கிய கடனுக்கான தவணைகளை கட்டியுள்ளார்.
மேலும் வாங்கிய கடனுக்கு வட்டியையும் தவனை பணத்தையும் கட்டாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கி அதிகாரிகள் மதுவந்தி வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் அசலையும் சேர்த்து ரூபாய் 1,21,30,867 குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் காபூலில் இருந்து விமான இயக்கத்தை நிறுத்தியது.. தலிபான்களின் அச்சுறுத்தல்

 மாலைமலர் : ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால் காபூலில் இருந்து விமான இயக்கத்தை நிறுத்தியது பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி, அதன்பின் ஆட்சியை பிடித்தனர். இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடு சென்றுவிட்டனர். வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமான போக்குவரத்தை நிறுத்தின.
பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்து தலிபான் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் காபூலில் இருந்து விமானங்களை இயக்கி வந்தது. இந்த ஒரு விமான நிறுவனம்தான் சர்வதேச விமானங்களை இயக்கி வந்தது.
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன் அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களை திரட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பம்பரமாக சுழலும் தி.மு.க MPக்கள்!

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களை திரட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பம்பரமாக சுழலும் தி.மு.க MPக்கள்!

கலைஞர் செய்திகள் : பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவுக் கோரி வருகின்றனர் தி.மு.க. எம்.பிக்கள்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்யப்படும் என தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல் கட்ட நடவடிக்கையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

275 படங்களில் நடித்து சிவாஜி கணேசன் இயக்கிய ஒரே படம் ரத்தபாசம் .. வெற்றி படம்.

 cinemapettai.com  :  சிவாஜி கணேசன் என்று கூறுவதை விட நடிகர் திலகம் என கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் அடையாளமாகவே வாழ்ந்து வந்த சிவாஜி உயிருடன் இல்லை என்றாலும், அவர் நடித்த படங்கள் மூலமாக நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு சிறந்த நடிகர் சிவாஜி மட்டுமே.
பராசக்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கணேசன் தமிழில் மட்டும் சுமார் 275 படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் 10, ஹிந்தியில் 2, மலையாளத்தில் 1 என மொத்தம் 288 படங்களில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 அக்டோபர், 2021

மலையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் .. சகோதரன் கைது .. இரகசியமாக பெட்ரோல் வாங்கினார்

 இராகலை  முதலாம் பிரிவு தீவிபத்தில் உடல்  கருகி உயிரிழந்த சம்பவத்தில்  அக்குடும்பத்தை சேர்ந்த மகன் தங்கையா ரவீந்திரன் என்பவர் கைது செயப்பட்டுள்ளார்
இவர் சம்பவம் நடந்த அன்று ராகலை பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கியதாக தெரிகிறது  .. மேலும் வீட்டின் தீயை அணைக்கவந்த அயலவர்களிடம் வீட்டில் யாரும் இல்லை என்று இவர் பொய் கூறியதாகவும் தெரிகிறது
மேலும் கிடைக்கப்பெற்ற இதர ஆதாரங்களின் அடிப்படையிலும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு வலப்பனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

Tamil Mirror: நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸ் தண்டவாளத்தில் உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழப்பு

 தினமலர் : பாரீஸ்: பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகர் பியாரிட்ஸ். இது பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான வழித்தடமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள், இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.
பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6:00 மணிக்கு இந்த தண்டவாளத்தில் வந்த ரயில் அவர்கள் மீது ஏறியது. இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு கால் உடைந்தது. இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

 நக்கீரன் : இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்மோகன் சிங், கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயதாகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்- 1,145 இடங்களில் வென்று தி.மு.க. இமாலய சாதனை

May be an image of text that says 'புதிய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தலைமுறை 2021 ண் ன உடனுக்குடன் மாவட்ட கவுன்சிலர்கள் 140/140 முன்னிலை நிலவரம் நேரம் 09.10AM திமுக 139 அதிமுக MET EN 1 அமமுக மநீம நாம் தமிழர் கட்சி பாமக தேமுதிக S பிற Follow 13|10/2021 www.puthiyathalaimurai.com'

 மாலைமலர் :  மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் தி.மு.க. கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
சென்னை:  மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 6-ந்தேதியும், 9-ந்தேதியும் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடந்தன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.
இதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளும் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இது நீடித்தது.
மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 138 இடங்களை கைப்பற்றி உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க. வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. இதே போல் வேலூர் மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 14 இடங்களையும், ராணிப்பேட்டையில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், கள்ளக்குறிச்சியில் மொத்தம் உள்ள 19 இடங்களையும், திருப்பத்தூரில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், நெல்லையில் மொத்தம் உள்ள 12 இடங்களையும், தென்காசியில் மொத்தம் உள்ள 14 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 

உள்நாட்டு விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்

latest tamil news

தினமலர் : புதுடில்லி: கோவிட் காரணமாக உள்நாட்டு விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. வரும் 18ம் தேதி முதல் வழக்கம் போல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச்சில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும், மார்ச், 23லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன.
பின், வைரஸ் பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து, மே மாதம், உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும் குறைந்தளவு கட்டுப்பாடுகளுடன் துவங்கப்பட்டன.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.. வெண்ணிற ஆடை தங்கப்பதக்கம்,,

 தினகரன் : வெண்ணிற ஆடை தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்
சென்னை: தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். 1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார்  ஸ்ரீகாந்த். சிவாஜி, கணேசன், முத்துராமநம் ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த்.

எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை - சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி

பிரீதம் ஜுகல்கர், சமந்தா

cinema.maalaimalar.com  : நாகசைதன்யா ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பிரீதம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை - சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது.
இதையடுத்து பிரீதம் ஜுகல்கருடன் நடிகை சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

கொலை வழக்கில் சரண் அடைந்த திமுக எம்பி ரமேஷ்: சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனு

DMK MP Ramesh seeks 1st class jail cell, சிறையில் முதல் வகுப்பு கேட்கும் திமுக எம்பி ரமேஷ், கொலை வழக்கில் சரணடைந்த திமுக எம்பி ரமேஷ், திமுக, கடலூர், முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கொலை, DMK MP Ramesh, cuddalore sub jail, DMK MP Ramesh booked murder surrenders, cashew nut unit worker murder, Panruti

tamil.indianexpress.com : கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் முந்திரி பருப்பு தொழிலாளியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் அக்டோப்ர் 11ம் தேதி காலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பண்ருட்டி நீதித்துறை நடுவர் ஆர் கற்பகவள்ளி சரணடைந்த கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேஷை அக்டோபர் 13ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கோவிட்-19 சோதனைக்கு நடத்தப்பட்ட பிறகு ரமேஷ் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். திமுக எம்.பி ரமேஷின் வழக்கறிஞர் கே.சிவராஜ் கடலூர் மத்திய சிறையில் உள்ள எம்.பி.க்கு சிறையில் முதல் வகுப்பு அறையை அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். கோவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்தால் ரமேஷ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) சிறையில் முதல் வகுப்பு அறைக்கு மாற்றப்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சிக்கு தடைவிதிக்க கோரிக்கை வைத்த காங்கிரஸ் congress demand to ban nam tamilar party

congress demand to ban nam tamilar party

tamil.asianetnews.com - manimegalai a காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஈழத்தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ்தான் முக்கிய காரணம் என கட்சி தொடங்கிய நாளில் இருந்தே சீமான் முழங்கி வருகிறார். அவரது தம்பிகளும் எப்போதும் காங்கிரஸ்-க்கு எதிராக அனலை கக்கி வருகின்றனர். சீமான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது பதில் கொடுத்தாலும், அவரை பெரிதாக எதிர்த்தது கிடையாது.

9 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க... சொல்லி அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 கலைஞர் செய்திகள் : தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அதேபோல் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் இதுவரை 121 இடங்களில் தி.மு.க கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் 1,380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க கூட்டணி 392 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அதேபோல் செங்கல்பட்டில் 16ல் 11 இடத்திலும், வேலூரில் 14ல் 11 இடத்திலும் முன்னிலையில் உள்ளனர்.
ராணிப்பேட்டையில் 13ல் 10 இடத்திலும், திருப்பத்தூரில் 13ல் 11 இடத்திலும், விழுப்புரத்தில் 28ல் 26 இடங்களிலும், கள்ளக்குறிச்சியில் 19ல் 18 இடங்களிலும், திருநெல்வேலியில் 12ல் 9 இடங்களிலும், தென்காசியில் 14க்கு 14 இடத்திலும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

சாட்டை' துரைமுருகன் கைது; அரசியல் காழ்ப்புணர்ச்சி - பழிவாங்கும் போக்கு: நாம் தமிழர் கட்சி கண்டனம்

ntk-condemns-dmk-government

.hindutamil.in/  : 'சாட்டை' துரைமுருகனைக் கைது செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும், தமிழக அரசு இயற்கை வளங்களைக் காக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் யூடியூபர் சாட்டை துரைமுருகன் பேசும்போது, கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியதோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து உள்நோக்கத்துடன் அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர்..? ஜெயகுமாரின் பதில்!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  அதிமுக பொன்விழா ஆண்டு வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று (11.10.2021) காலை 10 மணியளவில் தொடங்கி 2 மணிநேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயகுமார், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்விழா கொண்டாட்டம் தவிர, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பது குறித்தும், அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் : சென்னை மாநகராட்சி

 கலைஞர் செய்திகள்  : குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பருவமழைக் காலத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சி, மழைக்காலத்தை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டு, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,070 கி.மீ. நீளமுள்ள 9,224 மழைநீர் வடிகால்கள் மற்றும் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

”பலாலி – மீனம்பாகம் விமானசேவையு விரைவில்.. இந்திய துணை தூதர் அ .நடராஜன் பேட்டி

 Nadarajah Kuruparan  :  “வட கிழக்கு மாகாணங்களில், மூன்றாவது பங்காளர்களின் தேவையும் இல்லை, அதனை இந்தியா விரும்பவும் இல்லை”
”13ஆவது திருத்தம் குறித்து, இந்தியா மீண்டும் ஆழமாக வலியுறுத்தி உள்ளது.”
”இலங்கை எந்த நாடுகளுடனும் உறவைப் பேண முடியும். அது ஒரு சுதந்திர நாடு. அனால் இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க முடியாது.”
”யாழ் கலாசார மையம் விரைவில் திறக்கப்படும் என நம்புகிறேன்.”
”பலாலி  – மீனம்பாகம் விமானசேவையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.”
”இலங்கையில் இந்தியா பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.”
”இலங்கையில் வாழும்  இந்திய வம்சாவழி மக்கள் குறித்தும் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது.”

திங்கள், 11 அக்டோபர், 2021

சிங்கள மக்களின் மரபணுக்கள் 69.86% +/- 0.61 தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது

செல்லபுரம் வள்ளியம்மை :  இலங்கை தமிழர்களின்மரபணுக்கள் (  ஜீன்கள்)  சிங்கள மக்களின் மரபணுகளோடு   55.20% +/- 9.47 வீதம் பொருந்தி உள்ளது  
இலங்கையில் உள்ள சிங்கள  மக்களின் மரபணுக்கள்  69.86% +/- 0.61 தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள தமிழர்களின் மரபணுக்கள்  16.63% +/- 8.73 தென்னிந்திய தமிழர்களோடு பொருந்தி உள்ளது
ஆச்சரியமான ஒரு விடயம்  இலங்கை தமிழர்களை விட சிங்கள மக்களின் மரபணுக்கள்   தமிழ்நாடு தமிழர்களோடு அதிக அளவில் பொருந்தி உள்ளது
மேலும் சிங்கள மக்களின் மரபணுக்கள்  25.41% +/- 0.51 வீதம் வங்காள மக்களோடு பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள சிங்கள மக்களும் தமிழ் மக்களும் 55%.மரபணுக்கள்  பொருந்தி உள்ளது

 The  Sinhalese had the greatest contribution from South Indian Tamils (69.86% +/- 0.61),
Sri Lankan Tamils to have a greater contribution from the Sinhalese of Sri Lanka (55.20% +/- 9.47)
While the Sri Lankan Tamil are closely related to the Sinhalese who are closely related to Indian
followed by Bengalis from the East India (25.41% +/- 0.51). With both the Sri Lankan Tamils and Sinhalese in the island sharing a common gene pool of 55%.
They are farthest from the indigenous Veddahs.[1] This close relationship between the Sri Lankan Tamils and Sinhalese makes sense, as the two populations have been close to each other historically, linguistically, and culturally for over 2000 years.

இலங்கை கடல் தொழில் தமிழ் அமைச்சருக்கு பதிலாக ஒரு சிங்கள அமைச்சரை நியமிக்க வேண்டுமாம் . தமிழ் தேசிய கூட்டணி அரசிடம் வேண்டுகோள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக ஒரு தமிழரான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இருப்பது தெரிந்ததே.
ஆனால் இவரது அமைச்சுக்கு ஒரு சிங்களவர் நியமிக்க படவேண்டும் என்று  தமிழ் தேசிய கூட்டணியின் எம்பியான திரு சார்ள்ஸ் நிர்மலநாதன்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்  
Tamil Mirror தமிழ் மிரர் -எஸ்.றொசேரியன் லெம்பேட் :

சார்ள்ஸ் நிர்மலநாதன் MP

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும்  அரசாங்கமும் மௌனம் காத்து வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இதற்கு பிரதான காரணம், இந்தியாவுக்கு பயந்துகொண்டு, அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள் எனவும் கூறினார்.
மேலும், இவ்விடயத்தில் மௌனமாக இருப்பதை விட, டக்ளஸ் தேவானந்தா தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுடன், சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவர் கூறினார்..
மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்

மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

BBC :  மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் மலையாள பட உலகில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். கேரளாவை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை நடந்து வந்தது. அதில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று பிற்பகலில் காலமானார்.
தமிழில், 'அந்நியன்', 'பொய் சொல்ல போறோம்', 'இந்தியன்', 'சர்வம் தாளமயம்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக 'நவரசா' இணையத்தொடரில் தமிழில் நடித்திருப்பார்.
மேலும், மலையாள முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் அவருடைய இறப்புக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கொலை வழக்கில் திமுக MP ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்; 2 நாள் நீதிமன்றக் காவல்

கொலை வழக்கில் திமுக MP ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்; 2 நாள் நீதிமன்றக் காவல்

zeenews.india.com : சென்னை: முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆளும்கட்சியான திமுகவின் எம்.பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
தொழிற்சாலை பணியாளர் கொலை தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலையில் பணிபுரியும் நடராஜ், சுந்தர், வினோத், கந்தவேல், அல்லா பிச்சை என மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 பேரை கைது செய்திருந்தனர்.

என் மீதும், எனது ஆட்சி மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது - இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச வேதனை

 மாலைமலர் : புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறை அடுத்த வருடத்துக்குள் உருவாக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:  : இலங்கையின் 72-வது ராணுவ தினவிழா அனுராதபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டார்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். இதனால் நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்காக நான் நியாயம் கூறப்போவது இல்லை. ஆனாலும் இதை முறியடித்து வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம்.

தாய்வான் .. சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு! ஜனநாயக சீன வரலாறு தெரியுமா?

 BBC : சீனாவுடன் தைவானின் மறு இணைப்பு நிச்சயம் நடக்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசிய மறுநாளே தைவான் அதிபர் த்சை இங்-வன் தெரிவித்துள்ளார்.
“நாம் அதிகம் சாதிக்க, சாதிக்க சீனாவிடம் இருந்து வரும் அழுத்தம் அதிகமாகும்,” என்று ஞாயிறன்று நடந்த தைவானின் தேசிய தின உரையில் அவர் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தைவானில் சீ னாவின் ராணுவ நடவடிக்கை அதிகரித்திருப்பது உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாகவே சீனா இன்றுவரை பார்க்கிறது. மீண்டும் தன்னுடன் இணையும், அல்லது இணைந்திருக்கும் பிராந்தியமாகவும் கருதுகிறது.
ஆனால் இதை பெரும்பகுதி தைவானிய மக்கள் ஒப்புக் கொள்வதில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இறையாண்மை கொண்ட ஒரு தேசத்தில் வாழ்ந்து வருவதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

சாட்டை துரைமுருகன் கைது .. 25 ஆம் தேதிவரை நாங்குநேரி கிளைச் சிறையில் அடைப்பு .

May be an image of 1 person and standing

 மின்னம்பலம் : முதல்வர் மீது அவதூறு: நாம் தமிழர் பிரமுகர் கைது?
நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் நேற்று (அக்டோபர் 10) கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.
கன்னியாகுமரியில் நேற்று அக்டோபர் 10ஆம் தேதி , குமரியில் இருந்து இயற்கை வளங்கள் கேரளத்துக்குக் கடத்தப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.
இதில் பேசிய சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறப்பு பற்றி இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். ஏற்கனவே மணல் கடத்தல் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சித்துப் பேசியதற்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார் சாட்டை துரைமுருகன்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் தாக்கி இழிவுபடுத்திப் பேசியதற்காக துரைமுருகன் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் நேற்றே திமுகவினரால் புகார்கள் அளிக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்..உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டெடுப்பு

 Vigneshkumar  -  Oneindia Tamil News  :  சென்னை: கடந்த 4ஆம் தேதி காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த விற்பனையாளர் உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த துளசிதாஸ் (வயது 43) மற்றும் ராம் (42) ஆகியோர் ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தனர்.
கடந்த 4ஆம் தேதி இவர்கள் வழக்கம்போல் விற்பனை நேரம் முடிந்தவுடன் கடையைப் பூட்டிவிட்டுக் கிளம்பியுள்ளனர். தாக்குதல் தாக்குதல் கடையின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுக்க இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துளசிதாசை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கினர். மறைத்து வைத்திருந்த கத்தியால் துளசிதாஸை குத்தினர்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

அரசை விமர்சனம் செய்யுங்கள் .. ஆனால் சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கலைஞர் செய்திகள் : “அரசை பாராட்டி எழுத சொல்லவில்லை. விமர்சனம் செய்யுங்கள், மனதார ஏற்போம். சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
“டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழின் வார தொகுப்பு ஆக பொருளாதாரம், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'மெர்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ்(Merchants of madras)” திங்கட்கிழமை தோறும் ஒவ்வொரு வாரமும் வெளிவர உள்ளது.

U.P லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது.

  Rayar A -   Oneindia Tamil  :  லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் இன்று கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் பெரும் மோதல் மூண்டது.

லக்னோ மும்பை ஓடும் ரயிலில் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு.. தடுக்க முயன்றவர்களுக்கு வெட்டு... கொள்ளையர்கள் அட்டூழியம்

 Vignesh Selvaraj  - கலைஞர் செய்திகள்  :     ஓடும் ரயிலில் கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பல், இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. குறிப்பாக வட மாநிலங்களில் நாள்தோறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறி வருவது பெண்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.
மும்பை நோக்கிச் சென்ற ரயிலில், எட்டு பேர் கொண்ட கொள்ளை கும்பல் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான நான்கு பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை நோக்கி புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது லகத்புரி நகருக்கு அருகே ஏ.சி பெட்டியில் ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஏறியது.

நள்ளிரவில் பொன்னார் கைது! திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை வழக்கு பதிய கோரிகை

திமுக எம்.பி மீது வழக்கு பதிய வேண்டும்: நள்ளிரவில் பொன்னார் கைது!

மின்னம்பலம் : நெல்லை மக்களவை தொகுதி திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் நேற்று (அக்டோபர் 9) நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட நாளான 9ஆம் தேதிக்கு முதல் நாள் 8ஆம் தேதி நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டாரத்தில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் பாஜக வட்டாரத் தலைவர் பாஸ்கர் என்பவர் தன்னை திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் திமுகவினர் தாக்கியதாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதையடுத்து பாஸ்கரை தாக்கிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: பச்சிளம் குழந்தை மீட்பு - கண்ணீர் மல்க காலில் விழுந்து நன்றி தெரிவித்த பெற்றோர்

  puthiyathalaimurai.com  -  sharpana :  தஞ்சாவூர் மாவட்டம் பர்மா காலனியை சேர்ந்த குணசேகரனின் மனைவி ராஜலட்சுமிக்கு ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும் - சேயும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாய்க்கு உதவி செய்வது போல் நடித்த ஒரு பெண், நேற்று காலை குழந்தையை கட்டைப் பையில் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றுள்ளார். இதுதொடர்பான புகாரை அடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வழி நெடுகிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் பட்டுக்கோட்டையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
விசாரணையில் குழந்தையை கடத்தியவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜி என்பதும், மூன்றாவது கணவரிடம் குழந்தையை காட்டி, அவரது சொத்துக்களை பெறுவதற்காக கடத்தியதும் தெரியவந்தது. குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கண்ணீர் மல்க குழந்தையை பெற்றுக்கொண்ட பெற்றோர், காவல்துறையினரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


வரதராஜ் ஏர்லைன்ஸ்... அரசு ஊழியர் வர்க்கம் இந்த சமூகத்துக்கு எதையுமே கற்றுத்தரவில்லை.

May be an image of text that says 'NCOME Dodger of Tax new chapter very connected several Naidu Naidu began retirement transport business. income department which became great friend Shanmukham Chetty Naidu. enquired about Coimbatore. Minister, being status income Cabinet, should would Court under Lordship Justice Rupees alsodi ighti proposed tax Income magazines drew sympathy public press. philanthropist keM regularly donating money much levied xfor Education, Army treatment meted out the authorities was consideredtobeunfair. im'

RS Prabu  :  ஏர் இந்தியா, பிஎஸ்என்எல்,  எல்ஐசி, இந்தியன் இரயில்வே என ஒவ்வொன்றாக அரசாங்கம் விற்கிறது என்று பலர்  வருத்தப்படுகின்றனர்.
அரசாங்கத்துக்கு என்று சொந்தமாக ஒரு விமான கம்பெனி கூட இல்லாத நாடாக மாறப்போகிறோம் என்றும் கருத்து சொல்லப்படுகிறது.
முதலாளிகள் கொடூரமானவர்கள் என்ற கருத்தைத் தவிர அரசு ஊழியர் வர்க்கம் இந்த சமூகத்துக்கு எதையுமே  கற்றுத்தரவில்லை. உலகமயமாக்கலுக்குப் பிறகுதான் கொஞ்சமாவது ஆடி அசைந்து வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.
சந்தையில் போட்டியிட்டு இலாபம் சம்பாதிக்காவிட்டாலும் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் அளவுக்குக்கூட நிர்வகிக்கப்படவில்லை.
அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு ஒவ்வொரு முறையும் மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கிடுவது தொட்டதுக்கெல்லாம் வரி கட்டி, வாழ்க்கையில் குறைந்தபட்ச தரத்துடன், தன்மானத்துடன் வாழ வழிவகை செய்யப்படாத நடுத்தர வர்க்கத்துக்குச் செய்யும் துரோகமாகும்.
டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கம் கையகப்படுத்தித்தான் இந்தியன் ஏர்லைன்ஸ் உருவாக்கப்பட்டது. அப்போது துணிச்சலாக, டாடாவுக்குப் போட்டியாக தென்னிந்திந்தியாவின் முதல் தனியார்  ஏர்லைன்ஸ் என்ற பெருமையுடன் கோயமுத்தூரில் எல்ஜி குழுமம் வரதராஜ் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தை உண்டாக்கியிருந்தது.