புதன், 1 செப்டம்பர், 2010

ஸ்பெயினில ஆண் பாலியல் தொழிலாளர்கள் 64 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்பெயினில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஸ்பெயினஆண் பாலியல் தொழிலாளர்கள் 64 பேரை போலீசார் கைது செய்தனர். ் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பெரும்பாலான டான்ஸ்பார்களில் ஆண் பாலியல் தொழிலாளர் ஈடுபட்டுவருதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 22 வயது முதல் 29 வயது வரை 64 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிரேசில் நாட்டின் மரன்ஹோவா மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என்றும் வேலைவாங்கித்தருவதாக கூறி தங்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் தங்களுக்கு பல வழிகளில் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் போலீசாரிடம் கூறினர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வயகரா உள்ளிட்ட செக்ஸ் கிளர்ச்சியூட்டும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதே போன்று ஸ்பெயின் முழுவதும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் பாலியல் தொழிலாளர்கள் ஏராளமானோர் இருப்பதாகவும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: