சனி, 30 டிசம்பர், 2017

தினகரன் செய்திகளில்... ? கலைஞர் எப்போதும் செய்திகளில் நடுநாயகமாக ? ஸ்டாலின் விட்டு கொடுக்கிறாரா?

Veera Kumar - Oneindia Tamil ஸ்டாலின் செய்ய தவறியது இதுதான்!- வீடியோ சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வாக்குகள் இரண்டாக பிரியும் என நினைத்திருந்தபோதிலும், திமுகவால் 3வது இடத்திற்கே வர முடிந்தது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீவிர எதிர்ப்பலை இருந்தபோதிலும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு முன்பாக நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் திமுக ஒரு சீட்டை கூட வெல்ல முடியவில்லை. ஆனால் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தருமபுரியிலும் வெற்றி பெற்று திமுகவுக்கு கூடுதல் ஷாக். 
தகராறுகள் நடுவே அதிமுக தகராறுகள் நடுவே அதிமுக இது பரவாயில்லை. அப்போதாவது ஜெயலலிதா என்ற ஆளுமை திமுக தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் என பிரிந்து பிறகு சேர்ந்து, தினகரன் தரப்பு ஒருபக்கம் தனி ஆவர்த்தனம் பாடி.. சொல்லும்போதே மூச்சு முச்சு முட்டும் இத்தனை தகராறுகளுக்கு நடுவே நடந்த ஒரு இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு போயுள்ளது.

பிரான்சுக்கு சென்ற 22 பள்ளி மாணவர்களை காணவில்லை .. மேற்கு நாடுகளுக்கு அகதியாகி ...?

The CBI has registered an FIR after 22 minors from Punjab, Haryana and Delhi were allegedly illegally taken to France by three travel agents last year in the garb of giving them rugby coaching and went missing, agency officials said ...
மின்னம்பலம் ;ரக்பி விளையாட்டு பயிற்சிக்காக ஃபிரான்ஸ் சென்ற 22 இந்திய மாணவர்கள் மாயமானது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து நேற்று (டிசம்பர் 29) விசாரணையைத் தொடங்கியது.
2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபிரான்சில் நடைபெற்ற சர்வதேச ரக்பி போட்டியில் கலந்துகொள்ள டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த 13 முதல் 18 வயதுடைய 25 பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர். ஃப்ரெஞ்ச் குழுவிடம் இருந்து வந்த அழைப்பின் அடிப்படையில் மாணவர்கள் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஒரு வாரம் பயிற்சி வகுப்பை முடித்த அவர்கள் இந்தியா திரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயால், “பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கும் ரக்பி விளையாட்டு பயிற்சிக்கு இந்திய மாணவர்கள் 25 பேரை அழைத்துச் செல்வதாக, அவர்களின் பெற்றோரை பரீதாபாத் மற்றும் டெல்லியில் உள்ள டிராவல் ஏஜென்ட்கள் அணுகியுள்ளனர். ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்து 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்துள்ளனர்.

திரிஷா :கழிவறை பயன்படுத்துவது பெண்களின் மரியாதைக்கு அவசியமானது... ரஜினி கட்டி கொடுப்பார்?

மாலைமலர் :காஞ்சிபுரத்தில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, கழிவறை பயன்படுத்துவது பெண்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் அவசியமானது என்றார். காஞ்சிபுரம்: நடிகை திரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக கொரவம் வழங்கப்பட்டுள்ளது.& இந்த பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை தடுக்கும் முயற்சியில் திரிஷா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வடநெமிலியில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழிவறை கட்டும் நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகொண்டார்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் அரசுடைமையாகிறது .... எடப்பாடி பன்னீர் அதிரடி ...

tamilthehindu :சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வீட்டை அளவிடும் பணி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் ஆய்வை ஒட்டி போயஸ் கார்டன் இல்லத்தைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு அறிவிப்பும் அடுத்தடுத்த நகர்வுகளும்..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை, அவரது மறைவுக்குப் பிறகு  நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனையடுத்து அந்த வீடு அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நினைவிடமாக்கும் பணியையும் வருவாய் துறையினர் தொடங்கினர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முழுமையாக அரசுடைமையாக்கி, நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் இன்று தொடங்கின.

இர்பான் ஹபிப் CP- M : பிரகாஷ் காரத் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு .... பாஜகவையும் காங்கிரசையும் ஒரே தட்டில்தான் வைக்க வேண்டுமாம்

நக்கீரன் :பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைப்பதை பிரகாஷ் காரத் விரும்பவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் குறைகூறியிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா கூறியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பாஜகவையும் காங்கிரஸையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். பாஜகவை எதேச்சாதிகார கட்சி என்றோ, மதவாத பாசிசக் கட்சி என்றோதான் கருத வேண்டும். பாசிசிஸ்ட்டுகள் என்று கூறக்கூடாது என்கிறார் பிரகாஷ் காரத். இது தவறான போக்கு என்று இர்பான் ஹபிப் கூறியதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. 3மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் கூடவிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் ஒன்றில் இர்பான் ஹபிப் பேசினார். அப்போது பாஜகவையும் ஆர்எஸ்எஸ்சையும் நாஜிகளோடு ஒப்பிட்டார்.

நம்ம மக்களுக்கு முன்னோர் தான் தெய்வம்! CIFF விருது இயக்குனர் சுரேஷ் சங்கையா

நக்கீரன் :சர்வதேச  திரைப்பட விழா கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.  ஜெர்மன் படங்கள், கொரிய திரைப்படங்கள், இந்தியன் பனோரமா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் படங்கள் பிரிவில் ஒரு கிடாயின் கருணை மனு, 8 தோட்டாக்கள், அறம், குரங்கு பொம்மை, கடுகு உள்ளிட்ட  12 படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன. அதில் 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் சிறந்த தமிழ் படத்திற்கான  விருதைப்  பெற்றது. உலகப் படங்கள் என்ற பெயரில் ஹாலிவுட்டை பின்தொடராமல் நம் மண்ணின் தெய்வங்களை, பழக்கவழக்கங்களை அடிப்படையாக வைத்து உண்மையான உலகப்படத்தைக் கொடுத்த படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா அவர்களிடம் பேசினோம்...

கலைஞர் : இவ்வழக்கு முடியும் பொழுது இப்போது சொல்லபட்ட கதைகள், படுபயங்கர கற்பனை பொய்கள்

Flashback - கலைஞர் :"இவர்கள் செய்யும் காரியங்களை எல்லாம் பார்க்கும்பொழுது, தந்தை முத்துவேலருடன் அக்காலத்தில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்த நினைவு வருகின்றது
அன்று படம் மட்டும் ஓடும், இசையும் குரலும் சேர்ந்து வராது. பின்னால் இருந்து ஒருவன் காட்சியினை ஒலிபெருக்கியில் விளக்குவான்
அப்படி அன்று பார்த்த படத்தில் பராகசுரன் என்றொருவன் திரையில் வந்தான், காட்சியினை விளக்குபவனோ பாருங்கள் அசுரனின் பல் 10 அடி நீளம், கால் 50 அடி உயரம் அவன் எடை பல்லாயிரம் கிலோ, அவன் தலைமுடியிலே ஊஞ்சல் கட்டலாம், அவன் கையால் அடித்தால் மலை உடையும்" என்றெல்லாம் பேசிகொண்டிருந்தான்
இந்த நபர் அந்த அசுரனை கண்டவனா? என்றாவது அவனை அளந்து பார்த்தவனா என்றால் இல்லை, அவன் போக்கிற்கு திரையரங்கு மக்களை ஏமாற்ற என்னவோ சொல்லிகொண்டிருந்தான்
இவர்கள் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு அளவுகளை, பொய்களை சொல்ல சொல்ல அந்த டூரிங் டாக்கீஸில் கதை சொன்னவன் நினைவுதான் வருகின்றது

தினகரன் அறைகூவல் : ஆட்சி கலையாமல் இருக்கவேண்டுமாயின் என் பக்கம் வந்து விடுங்கள்

Lakshmi Priya - Oneindia Tamil பதவியேற்ற பின் டிடிவி தினகரன் கொடுத்த பர பர பேட்டி- 
சென்னை: அதிமுக ஆட்சி கலையாமல் அதன் முழு பதவிக் காலத்தை அடைய வேண்டும் என்றால் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு தினகரன் யோசனை தெரிவித்தார். ஆர்கே நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி வெற்றார். அவர் இன்றைய தினம் பதவியேற்க சட்டசபைக்கு வந்தார். சபாநாயகர் தனபால் அறையில் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது. அப்போது சபாநாயகர் தினகரனுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தினகரன் பேட்டி தினகரன் பேட்டி ஆர்கே நகர் எம்எல்ஏவாக தினகரன் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வரலாற்றில் என்றுமே துரோகம் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. மக்களின் பிரதிபலிப்பு மக்களின் பிரதிபலிப்பு ஆர்கே நகர் வெற்றி மூலம் 6.5 கோடி மக்களின் பிரதிபலிப்பு வெளிப்பட்டுள்ளது.

வெள்ளி, 29 டிசம்பர், 2017

கன்னட நடிகர் சுப்ரண்யா காதலிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் ....

வெப்துனியா : தன்னுடைய காதலியை கற்பழித்து விட்டு அவரை திருமணம் செய்து கொள்ள தயங்கிய நடிகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர் சுப்ரண்யா. இவர் ‘ஹோம்பன்னா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பேஸ்புக் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார்.  அதன்பின் அது காதலாக மாறியுள்ளது. இது இருவரின் குடும்பத்திற்கும் தெரிய வர திருமணம் பேச்சுகள் எழுந்தன. ஆனால், தன்னுடைய முதல் படமான ஹோம்பன்னா வெளிவந்த பின்னரே திருமணம் எனக்கூறி சுப்ரமண்யா தட்டிக் கழித்துள்ளார்.<>அதன் பின்பு படம் வெளியான பின்பும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. சொந்தமாக ஒரு வீடு கட்டிய பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

அரசு கேபிள் மோசடியும் ஆபத்தும் ... டிவிகளின் ஜால்ராவும்

ராஜா ஜி : ஒரு பிரபல சேனலில் பணிபுரியும் தோழரிடம் பேசியது-மீள்....
அண்ணே பெரியார் பத்தி பேச உங்களைப்போலுள்ளோர் வாங்கண்ணே!
- தம்பி நாங்களெல்லாம் நுனிப்புல் மேயுறோம்- அப்படி பேச வந்தா அவங்களை பேசவே விடறதில்லையே தம்பி.
நாங்கள் நடத்தும் விவாத தலைப்பையே இந்துத்துவா அமைப்புகள் மாற்றச்சொல்லி போனெல்லாம் வரும்ணே----
- இதையெல்லாம் சொல்லலாம்ல.

பாலிஷா நடக்கும்போதே இப்படி சொன்னா சேனலே நடக்காதுணே!
- இப்படியெல்லாமா நடக்கும்?
சம்பளத்தை குறைச்சுட்டாங்கண்ணே!
- ஏன் உங்க சேனல் நல்லாத்தானே போவுது?
அவ்வப்போது நடுநிலை காட்டவேண்டி புரோக்ராம் நடத்துவாங்க! உடனே தமிழகத்தின் சில பகுதியில கேபிளில் தெரியாது- TRP குறையும் - குறைஞ்சா வருமானம் போயிறும்- சம்பளத்தை குறைப்பாங்க.
மூனு மாசம் முன்னாடி பாலிமர் டிவி நம்பர் ஒன்னுன்னு பேரு வாங்குச்சே எப்படி தம்பி - அதுல அவ்வளவு நல்ல புரோக்ராம் இல்லையே!!
TRP யை ஏற்ற ரெண்டு சேனலை கட் பன்னி அரசு கேபிள் செஞ்ச வேலைணே.
- அரசு கேபிள் ஆபத்தும் டிவிகளின் ஜால்ராவும் புரியுது தம்பி.
அரசு கேபிள் உள்ளவரை திமுகவுக்கு நல்ல பெயரே வராது.
இருக்கும் பெயரையும் கெடுப்பான்.
நாம் வலைத்தளங்களில் புலம்புவோம்.  அரசு கேபிள் மீது வழக்கு போடலாம். இதற்கான தரவுகள் உள்ளது.  ஆனால் கேட்கத்தான் ஆளே இல்லை

தமிழக அரசின் தூக்கத்தை கெடுக்கும் "சிலிப்பர் செல் கனவுகள்"

டிஜிட்டல்  திண்ணை!மின்னம்பலம்: “அடையாறில் தொடங்கி கோட்டை வரை திருவிழா போல இருந்தது. ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார். அதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு முழுவதுமிருந்து தினகரன் ஆதரவாளர்களைச் சென்னைக்கு வரச் சொல்லி இரண்டு தினங்களுக்கு முன்பே தகவல் சொல்லியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அவர்கள் வருவது, தங்குவது என அத்தனை ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜ்கள், மேன்ஷன்கள் என மொத்தமும் நேற்று இரவிலிருந்தே புக் செய்யப்பட்டுவிட்டன.
தினகரன் வீட்டிலிருந்து கிளம்புவது தொடங்கி கோட்டை வரை, அவர் வரும் வழியெல்லாம் தொண்டர்களை நிறுத்த வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜி திட்டம். அதற்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர் அவர்தான். ‘கடலூர் மாவட்டத்துக்காரங்க பட்டினப்பாக்கம் சிக்னலில் இருந்து சங்கீதா ஹோட்டல் வரை நிற்கணும். அடுத்து அப்படியே விழுப்புரம் மாவட்டத்துக்காரங்க நின்றுடுங்க... எல்லோருடைய கையிலும் தினகரன் போட்டோ இருக்கணும். அவர் வண்டி வரும்போது பூவும் தூவுங்க... முடிஞ்ச வரைக்கும் டிராபிக் ஆகணும்.

திமுக :முறையாக தேர்தல் பணி ஆற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை

தினத்தந்தி : சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை  நடைபெற்றது.  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள்  பங்கேற்றனர். இந்த செயல்திட்டக்குழு கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீரமானங்கள் பின்வருமாறு:- 1.புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ரூ.13,520 கோடி வழங்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
2.பெரும்பான்மையை இழந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அதிமுக அரசு ஜனநாயகத்திற்கு களங்கம் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

தினகரன் எம் எல் ஏ : பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஆட்சி கவிழும்

tamilthehindu :ஜனவரி இறுதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வரும். பிப்ரவரி அல்லது மார்ச்சில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஒரு முடிவு வரும். ஆகவே அதிக நாட்கள் இவர்கள் நீடிக்க முடியாது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் மக்கள் மாபெரும் நல்ல தீர்ப்பை வழங்கிவுள்ளனர். நான் தேர்தலில் வாக்கு சேகரித்தபோது இந்த தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி அவர் விட்டுச்சென்ற பணியை தொடர எனக்கு வாய்ப்பு அளியுங்கள் என்றே கேட்டேன். தமிழகத்தில் இன்று நடைபெறுகின்ற மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஏழரை கோடி மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தேர்தல் என்று தெரிவித்தேன்.
ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு ஆதரவான மக்கள். அவர்கள் வழியிலே சசிகலா தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒன்றரைகோடி தொண்டர்கள் கொண்ட நங்கள்தான் உண்மையான அதிமுக என்பது நிரூபணம் ஆகியுள்ளது. வெறும் சின்னமும் கட்சியின் பெயரும் இருந்தால் போதாது.

BBC : பெண் போலீஸ்காரரை அறைந்து அறை வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.

அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இது குறித்து ஆய்வு நடத்துவதற்கான கூட்டம் ஒன்று இமாச்சலப்பிரதேசத் தலைநகர் சிம்லாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்திருந்தார்.
இந்தக் கூட்டத்துக்கு வந்த டல்ஹௌசி தொகுதியின் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஆஷா குமாரி கூட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிகழ்விடத்துக்கு வெளியே கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அவர் பெண் போலீஸ்காரர் ஒருவரை அறைந்துள்ளார். இதையடுத்து அந்த போலீஸ்காரரும் அவரைத் திரும்பி அறைந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் அகிம்சை வழியில் செயல்படும் கட்சி என்றும், எந்தவொரு தலைவரும் கட்சியின் கொள்கைகளை மீறி நடப்பதை அனுமதிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினி பேச்சு ,,, 700 ஏக்கரில் ஆஸ்ரமம் இருக்கிறது. அது சொர்க்கம்...

tamilthehindu :சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரர் கல்யாண மண்டபத்தில் நான்காவது நாளாக இன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். மிகுந்த உற்சாகத்துடன் ரஜினியை வரவேற்று ஆரவாரம் செய்தார்கள் ரசிகர்கள். காலமும் நேரமும் மாறும். மாறியே தீரும் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது ரஜினி பேசியதாவது :
’நான்காவது நாளாக உங்களைச் சந்திக்கிறேன். இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது (என்று சொல்லி நிறுத்தினார். உடனே கைத்தட்டலும் விசில் சத்தமும் பறந்தது). பிறகு இரண்டுநாள் என்றால்... நான் உங்களைப் பார்ப்பது. அப்புறம் உங்களை நான் மிஸ் பண்ணுவேன். அதைச் சொன்னேன்.
கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கிறீர்கள். என் வாழ்வில் முக்கியமான இடம் பிடித்த ஊர் இது. நிறைய நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள். என் குருநாதர்கள் இருக்கிறார்கள். சுவாமி சச்சினாந்தரின் ஆஸ்ரமம் இருக்கிறது. மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய படித்தவர். ஒருகட்டத்தில், பழனி சுவாமிகள் என்பவரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார். பிறகு இமயமலைக்குச் சென்றார். அங்கே சிவானந்த சுவாமிகளிடம் தீட்சை வாங்கி, சச்சிதானந்த சுவாமிகளானார். பிறகு அவரின் குருநாதர் வழிகாட்டுதலின்படி, அமெரிக்காவுக்குப் போய் ஆன்மிகமும் தியானமும் பரப்பு என்று சொல்ல, அங்கே சென்றார்.

புத்தரின் தாய் மகா மாயாவை, ஆத்தா மகமாயி என்றாக்கி

ஜீவகன்: மோசடி என்பது..
புத்தரின் தாய் மகா மாயாவை, ஆத்தா மகமாயி என்றாக்கி, பராசக்தியெனப் புனைந்து வைத்தது.
மோசடி என்பது..
அட்சய பாத்திரம் ஏந்தி உணவளித்த மணிமேகலையை..
அன்ன பூரணியம்மாள் ஆக்கியது.

மோசடி என்பது..
பவுத்தத்தில் முழு விழிப்புணர்வை எட்டி, மலர்ந்த நிலையைக் குறிக்கப் பயன்பட்ட தாமரையை, கட்சிச் சின்னமாக்கியது.
மோசடி என்பது..
சயனகோல புத்தரின் வடிவத்தை,
பாம்புப் படுக்கை விஷ்ணுவாக மாற்றி வைத்தது.
மோசடி என்பது..
தலையை மொட்டையடிக்கும் புத்த பிக்குச் சடங்கினை 'முடி காணிக்கை' ஆக மாற்றி, உண்டியலை நிரப்புவது.
மோசடி என்பது..
புத்தர் தனது சந்நியாசிகளுக்கு வழங்கிய ஆரஞ்சு நிற உடையைத் திருடி, காவியாக்கி வைத்துக் கொண்டது.
மோசடி என்பது...  புத்தம் சரணம் கச்சாமி யை  சாமியே சரணம் ஐயப்பானு
மாற்றியது.  ஜீவகன்

சமுகவலை தளங்கள் - current news social media வில் இருந்து தான் மட்டுமே வருகிறது .

Venkat Ramanujam : வயல் வீடியோ FB twitter Instagaram வைரல் ஆனதை தொடர்ந்து மனித உரிமை நீதிபதி வயலில் டிராக்டர் விட்ட தமிழக போலீஸ் DSP க்கு விட்ட நோட்டீஸ் எதை காட்டுகிறது ..
இன்றைய ஊடக தர்மம் என்கிற " தட்டி கேக்கும்" கொள்கையை சமூக வலைதளத்தில் மட்டுமே காண முடிகிறது என்பதை ..
திமுகவில் இல்லாத ஒருவர் Vrs திமுக செயல் தலைவர் பற்றிய விவாதம் சூடாக நடப்பதில் தப்பில்லை .,
ஆனால் ஒரு ஆர்எஸ்எஸ் தீவிரவாத கொள்கை கொண்ட ஒருவரால் தமிழக முதல்வர் துணை முதல்வர் ஐ ஆண்மையற்றவன் என்று பகிரங்கமாக கூற முடிகிறது அதனை மைக் எடுத்து கேள்வி கேக்க துப்பற்ற ஊடகங்கள் .. ரஜினி வந்தால் யாருக்கு பாதகம் என்று ஜாதகம் பார்க்க தொடங்கி உள்ளன .
இப்போவே current news social media வில் இருந்து தான் மட்டுமே வருகிறது . காலையில் எழுந்து செய்தி தாளை பார்த்தால் எல்லாமே ஆறிப்போன கஞ்சிகளாக செய்திகள் அதுவும் அரசு சார்போடு ., அரசு தரும் விளம்பர பணத்தில் மார்ச்சரி பிணமாய் ஊடகங்கள் ..
ஆனால் இதனை கண்டுகொள்ளாத சமூகவலைத்தளம் விடியோவை வைரல் ஆக்கி அநியாயத்தை தட்டி கேட்டு போராடும் விவசாயி பெண்மணிக்கு நியாயம் வழங்கி உள்ளது ..

என்னிடம் 60 எம்.எல்.ஏக்கள், நான் தான் முதல்வர்: எடப்பாடியின் தூதுவுக்கு தினகரன் பதிலடி

webdunia : ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற அபாரமான வெற்றி அவரை ஒரு தலைவராகவே ஆக்கிவிட்டது. இதுவரை திமுக, அதிமுக என்று இருந்த தமிழக அரசியல் தற்போது தினகரனா? எடப்பாடியா? என்ற நிலைக்கு போய்விட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்தபோதே, தினகரனுக்கு எடப்பாடியிடம் இருந்து தூது போனதாம். ஓபிஎஸ் வகிக்கும் துணை முதல்வர் பதவியை தினகரனுக்கு அளிக்க தயார் என்றும் உடனே இன்னொரு இணைப்பை நடத்தலாம் என்றும் கூறப்பட்டதாம்
ஆனால் தினகரனோ ‘இப்போதே என் கைவசம் 60 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். நான்தான் முதலமைச்சர். எனக்கு யாரும் துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை’ என்று கூறியதோடு, என்னால் முதலமைச்சர் ஆனவர் எனக்கே துணை முதல்வர் பதவி தருகிறாரா? என்று எக்காளமாக கேட்டதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்திற்குள் தினகரன் சென்றவுடன் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகவே அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.

2017இல் கோடிகளைக் குவித்த இந்தியர்கள்!... புதிய ஏழைகளும் கோடிக்கணக்கானோர் ....

2017இல் கோடிகளைக் குவித்த இந்தியர்கள்!2017ஆம் ஆண்டில் பல்வேறு உச்சங்களைத் தொட்ட இந்தியாவின் பங்குச் சந்தையானது செயல்பாட்டு அடிப்படையில் ஆசியாவின் இரண்டாவது சிறந்த பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் எவ்வளவு சொத்துகளைச் சேர்த்தனர் என்ற விவரத்தைப் புளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்துப் பார்க்கலாம்...
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.2,52,282 கோடியாக உள்ளது. இவர் 2017ஆம் ஆண்டில் தனது சொத்து மதிப்பில் ரூ. 1,11,638 கோடியைச் சேர்த்துள்ளார். சுமார் 14 கோடி சந்தாதார்களைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சேவை வாயிலாகவே முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பைப் பெருமளவில் உயர்த்தியுள்ளார். அம்பானியைத் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வர்த்தக நிறுவனமான அதானி குழுமத்தின் சொந்தக்காரரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.36,315 கோடிகள் உயர்ந்து, ரூ.66,085 கோடியாக உள்ளது.

ரபேல் விமான பேரம் – மோடியின் தேசபக்தி... சவுக்கு

by Jeevanand Rajendran :15 வருடங்களாக இழுபறியில் இருந்த  ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அதிரடியாக மோடி முடித்து வைத்தார், இது  நம் இந்திய விமான படைக்கு கிடைத்த பரிசு என்று 2015 ஆம் ஆண்டு முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.  2009 -14 UPA-2 ஆட்சியில் அதிகப்படியான ஊழல் புகார்கள் குவிந்ததால், மத்திய அரசாங்கம் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க பயந்து காலம் தாழ்த்த துவங்கியது. முடிவுகளை ஒத்திப் போட்டது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் பெருநிறுவன முதலாளிகள் “பாலிசி பாராலிஸிஸ்”, கொள்கை முடக்கம் என்று விமர்சனம் செய்து கொண்டிருந்த நேரம். ஒரு சிறிய ஒப்புதலுக்கே பல மாதம் காத்து கிடக்க நேர்ந்த காலத்தோடு ஒப்பிடுகையில், பிஜேபி அரசு எடுத்த துரித முடிவு அதிரடி மாற்றமாகவே பார்க்கப்பட்டது.
இது உண்மையாகவே தேசத்திற்கான அதிரடி மாற்றமா அல்லது அரண்மனைக்கு நெருங்கிய ஒரு சில முதலாளிகளுக்கு பயனளிக்க எடுக்கப்பட்ட முடிவா ? இல்லை எதேச்சையாக எடுக்கப்பட்ட முடிவா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

ஆ.ராசா :என்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்..

Shyamsundar - Oneindia Tamil மன்மோகன் சிங்கை திட்டும் ஆ.ராசா- வீடியோ நீலகிரி: 2ஜி வழக்கை மன்மோகன் சிங்க சரியாக புரிந்து கொள்ளவில்லை என ஆ.ராசா குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். நேற்று மேட்டுப்பாளையத்தில் தனது தொகுதி மக்களை சந்திக்க சென்ற ராசா இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2ஜி வழக்கில் கடந்த 21ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 
இந்த தீர்ப்பிற்கு பின் ராசா நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு திமுக தொண்டர்களால் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் மேட்டுப்பாளையத்தில் மக்கள் முன்னிலையில் 2ஜி வழக்கு குறித்து பேசினார். அதில் "இந்த 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று சித்தரித்தார்கள். இதை பற்றி பேசி, பேசி இரண்டு முறை எங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார்கள். மன்மோகன் சிங் நல்ல ஆட்சி நடத்தினார். ஆனால் இதனால் அவரும் பாதிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்'' என்று குறிப்பிட்டார்.

அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி ... பலரும் இன்னும் சரியாக அறியாத பட்டுகோட்டை அழகிரி

Image திராவிட அரசியல் வரலாற்றில் அஞ்சாநெஞ்சன், தளபதி இந்த இரண்டு அடைமொழிகளாலும் அழைக்கப்பட்டவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள். திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவர்களுள் முக்கியமானவர். பெரியாரின்  அண்ணா உள்ளிட்ட 12 சீடர்களில் வாழ்நாளில் அதிக நாட்களை பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்திற்காக செலவிட்டவர்.<
பெரியாருக்கு முன்பாகவே சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர். அவரை நேரில் பார்த்து பழகிய முக்கிய ஆளுமைகளில் சம காலத்தில் நம்மிடையே வாழ்பவர்  கலைஞர் கருணாநிதி அவர்கள். கலைஞருடனான அழகிரியாரின் சந்திப்பு மிகவும் தற்செயலானது ஆனால் அது திராவிட அரசியல் வரலாற்றின் கெயொஸ் தியரி.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார். அங்கேயே பத்தாம் வகுப்பு வரை படித்தார்.
துள்ளித்திரியும் இளமை பருவத்திலேயே பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து 1914 முதல் 1918 வரை நடந்த முதலாம் உலகப்போரில் சண்டையிட்டவர்.

கண்ணீர் கடல் ... மக்களை உறையவைத்த... அரசுகள் அலட்சியம் காட்டிய .. கதை .. ஆவணப்படம்


ன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கிறது ஒக்கிப் புயல். இந்த புயலால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும், உடைமைச் சேதமும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து மீனவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்பது தெரியாது. காணாமல் போன மீனவர்கள் இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என அவர்களது குழந்தைகளும், மனைவியும், தாய் தகப்பனும் கதறலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடல் விமானத்தில் வந்து இறங்கி பவுசு காட்டினார் மோடி. ஆனால் துயரில் ஆழ்ந்திருக்கும் மீனவர்களைப் பார்க்க எந்த வாகனத்திலும் வரமுடியாதாம்.
புயலுக்கான முன்னறிவிப்பு எச்சரிக்கை கொடுப்பதில் தொடங்கி மீட்புப் பணி வரையிலான அனைத்துக் கடமைகளிலும் மெத்தனம் காட்டியது அரசு. விளைவு, 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. கொதித்துப் போன மீனவ மக்கள் போராடினார்கள். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – முனைவர் சேதுபதி..வினவு

கதிராமங்கலத்தில் எந்த ஒரு சிறு அல்லது பெரு தொழிற்சாலைகளோ அல்லது சாயப்பட்டறைகளோ இல்லை. ஆதலால் இங்கு நிலத்தடிநீர் திடீரென குறைவதற்கும், மாசுபடுவதற்கும், பெட்ரோலிய/ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. ஒ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம் 2002ஆம் ஆண்டு முதல், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுத்து வருகின்றனர். ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு குழுவை சந்திக்கவும், களநிலவரத்தை ஆராயவும் கதிராமங்கலம் சென்றிருந்தபோது மக்கள் பருகும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மிக அதிக அளவில் மாசடைந்துள்ளதை கண்டு அதிர்ந்தேன். 100 முதல் 150 அடி ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வெளிவரும் நீரின் தன்மை எவ்வாறு இருக்கிறதென்றால், குடிநீரின் மேல்பரப்பில் கச்சாஎண்ணெய் (crude oil) படர்ந்திருந்தும், பெட்ரோல் நெடி கொண்டதாகவும், பழுப்பு நிறம் கொண்டதாகவும் மற்றும் சிறு சிறு மண்/தூசித்துகள்கள் கலந்ததாகவும் இருக்கிறது. அதே நீரை மறுநாள் பருக முடியாதபடி, குடிநீரின் நிறம் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டதாக மாறிவிடுகிறது.

வியாழன், 28 டிசம்பர், 2017

BBC :ஜாதவ் மனைவியின் செருப்பில் சிப் இருந்தது: பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் குல்பூஷன் ஜாதவை சந்திக்கச் சென்ற அவரது மனைவியின் செருப்பில் உலோக சிப் இருந்ததாகவும், அது ஆராயப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காவாஜா முகம்மது ஆசிஃப் கூறியுள்ளார். ஜாதவை சந்திக்கச் சென்றபோது அவரது குடும்பத்தினர் நடத்தப்பட்ட விதம் குறித்தும், சந்திப்புக்குப் பின் ஜாதவின் மனைவியின் செருப்பு திருப்பி அளிக்கப்படாதது குறித்தும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், சுஷ்மா-வின் குற்றச்சாட்டுகள் முழுவதையும் மறுத்தார்.
"கமாண்டர் ஜாதவை அவரது மனைவியும், தாயும் சந்திக்க அனுமதித்தது முற்றிலும் மனிதாபிமான அடிப்படையிலானது. எல்லா இடைஞ்சல்களையும் தாண்டி இந்த சந்திப்பு நடைபெற்றுவிட்டது. இதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த சந்திப்புக்கு முதலில் 30 நிமிடமே அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களின் வேண்டுகோளை ஏற்று இது 40 நிமிடமாக நீட்டிக்கப்பட்டது. ஜாதவின் தாய் பாகிஸ்தானுக்கு நன்றி சொன்னதில் இருந்தே இந்த சந்திப்பின் வெற்றி தெரியும்,"என்று ஆசிஃப் தெரிவித்தார்.

முத்தலாக் மசோதா பெண்களை பாதுகாக்கிறோம் என்று சொல்வதை ஒரு ....

Parthiban Pakirisamy : முத்தலாக் மசோதா உள்நோக்கம் கொண்டதா ....?!!
RSS கூடாரம் ஒருநாளும் சாமானியனின் அல்லது சிறுபான்மையினரின் நலன்கருதியோ அல்லது குறைந்தபட்சமாக ஒரு துரும்பைக்கூட கனவில் மறந்தும் கிள்ளிப்போடாது என்பது 1925 ல் இருந்து நாம் பார்த்துவருவதே; இந்நிலையில் முத்தலாக் மசோதா என்கிறபெயரில் பெண்களை பாதுகாக்கிறோம் என்று சொல்வதை ஒரு புத்திசுவாதீனமில்லாதவன் கூட ஏற்கமாட்டான் எதிர்த்து கேள்விகள் கேட்பான்!
ஆடுகளை என்றுமே ஓநாய்கள் பாதுகாப்பதில்லை! ஒருவேளை அப்படி பாதுகாக்கிறோம் என்று சொல்லுமேயானால் மிகப்பெரிய கொலைகார சதித்திட்டம் அங்கே அரங்கேறப்போகிறது என்றுதான் பொருளேத்தவிர; பொது சிவில் சட்டத்திற்கான அடித்தமிடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கல்ல!
ஒரு மதத்தின் மீது கொண்டுவரும் இத்தகைய செயல்பாடுகளை சம்மந்தப்பட்ட மதத்தலைவர்களை அணுகாமல் குறைந்தபட்சம் அவர்களின் ஒட்டுமொத்த எண்ண உணர்வுகளையே கேட்டறியாமல்; சுமார் 20 கோடி மக்கள் வாழும் ஒரு இந்தியத்துணைக்கண்டத்தில் வெறும் நூற்றுக்கும் குறைவான வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி, இத்தகைய படுபாதக செயலை செய்கிறார்கள் என்றால்; உண்மையில் இவர்கள் பெண்களின் நலனில் அக்கறைகொண்டவர்கள் என்று ஒரு பைத்தியக்காரன் கூட நம்பமாட்டான்.

நீதிமன்றம் :லதா ரஜினிகாந்த் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம் வாடகையை ஏற்காவிட்டால் ..

tamilthehindu :மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா' தனியார் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அளித்த பதிலில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கடைவாடகை மாற்றியமைக்கப்படுவதாகவும், இதுவரை முறையாக செலுத்திவந்த லதா ரஜினிகாந்த் திடீரென எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர்த்தபட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லாவிட்டால் கடையை காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்தது.

ராஜேந்திரபாலாஜி : ரஜினி பாஜகவுடன் கூட்டணிக்கு அமைக்க வாய்ப்பிருக்கிறது

ரஜினிக்கு அரசியல் சரிப்படாது!மின்னம்பலம் :ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். தொடக்க நாளில் பேசிய ரஜினி, வரும் 31ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். நேற்றைய பேச்சிலும் இன்னும் நான்கு நாட்கள் காத்திருங்கள் என்றே குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அரசியல் என்றாலே பல சித்து விளையாட்டுகள் தெரிய வேண்டும். ரஜினி ஒரு வெகுளி. அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. அவருடைய ரசிகர்கள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளனர். அனைவரையும் சரிசெய்து அரசியல் செய்யும் நிலையை அவர் தாண்டிவிட்டார்.

சசிகலா அடுத்த மாதம் முழுவதும் மௌன விரதம் ?

டிஜிட்டல் திண்ணை!

மின்னம்பலம் : “சின்ன ப்ளாஷ்பேக்...கடந்த நவம்பர் 29ஆம் தேதி சசிகலாவை சந்திக்க பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார் தினகரன். அப்போது சிறைக்குள் நடந்தவற்றை நாம் டிஜிட்டல் திண்ணையில் சொல்லி இருந்தோம். அதில் ஒரு பகுதி மட்டும் நினைவூட்டலுக்காக...
‘இரட்டை இலையை எதிர்த்து நீ தேர்தலில் நின்றால் அது அக்காவை எதிர்த்து நிற்கிற மாதிரி. அதனால்தான் நான் வேண்டாம்னு சொல்றேன். நாம ஜெயிச்சாலும் இரட்டைஇலை தோற்பதுபோல ஆகிவிடும். இதுக்காகவா அக்கா பாடுபட்டாங்க?அது அவங்க நின்ற தொகுதி. அங்கே அவங்க போட்டியிட்ட இரட்டை இலை தோற்கக் கூடாது என்பதால்தான் சொல்றேன். அடுத்த தேர்தல் வரும்போது பார்த்துக்கலாம்... நீ அமைதியாக இரு!’ என்று சொல்லி இருக்கிறார் சசிகலா.
அதற்கு, ’ அடுத்த எலெக்ஷன் வரும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டா அதுக்குப் பிறகு கட்சி இருக்காது. தேர்தலில் போட்டியிடப் போறோம்னு சொல்லிட்டு இப்போ நாம பின் வாங்குறது சரியா இருக்காது. நீங்க சொல்ற மாதிரி இரட்டைஇலையை மீட்க வேண்டும் என்றாலும் அதுக்கு நாம நம்ம பவரை காட்டித்தான் ஆகணும். அதுக்கு தேர்தல்தான் ஒரே வழி...’ என தினகரன் சொன்னாராம். ஆனால், சசிகலாவும், இளவரசியும் சமாதானம் ஆகவே இல்லையாம்.

நடந்ததை விளக்கி பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட முனிசேகர்

கண்ணீருடன் நடந்ததை விளக்கி பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட முனிசேகர்மாலைமலர் :ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் விளக்கி இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் மனைவியின் காலில் விழுந்து சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னை: மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியபாண்டி(48). கொளத்தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில் வட மாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு சென்றார். அவருடன் அவரது நண்பரான இன்ஸ்பெக்டர் முனி சேகர் மற்றும் 5 போலீசாரும் சென்றனர்.
அங்கு நாதுராம் என்ற பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டுக்கு இரையானார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு வந்த தகவலில் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்ததில் கொள்ளையர்கள் அதை எடுத்து சுட்டு விட்டதாக கூறப்பட்டது. வடக்கில் இருந்து வந்த ஒவ்வொரு தகவலும் முன்னுக்குப்பின் முரணாகவே வந்தது. ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் தமிழக போலீசார் சுட்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும்! கதிரேசன் தம்பதியின் உருக்கமான கடிதம்

நக்கீரன் : நடிகர் தனுஷை தங்களது மகன் என்று கூறிவரும் மேலூர் கதிரேசன் தம்பதியினர் நடிக தனுஷுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். பெற்றோராகிய தங்களை பார்க்க தனுஷை அனுப்பும்படி ரஜினிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கதிரேசன் தம்பதியின் கடிதம்: ’’பாசமிகு உறவினர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். தங்களுடைய விருப்பமாம் நமக்கு முக்கியம் நம்முடைய தாய், தந்தைதான் அவர்கள்தான் வாழும் தெய்வங்கள் நம் குடும்பம்தான் முக்கியம் என கூறிய தங்களை மனமார வாழ்த்துகிறேன். நம் குடும்ப உறவு மேம்பட நான் பெற்று வளர்த்த என் மகனும் தாங்கள் மருமகனுமாகிய கலைசெல்வன் என்ற தனுஷ் - ஐ தனது பெற்றோராகிய என்னையும், என் மனைவி மீனாட்சியையும் வந்து ஒருமுறை பார்த்து செல்ல அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன். குடும்ப உறவு மேம்பட வாழ்த்துக்கள். - கதிரேசன் மீனாட்சி மேலூர் போஸ்ட் மதுரை மாவட்டம்’’ இது குறித்து கதிரேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் எந்து ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும். பெற்றோரான எங்களை கவனித்துக்கொள்ள தனுஷுக்கு அறிவுறை வழங்கி அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்

முத்தலாக் சட்டம் மக்களவையில் நிறைவேறியது

நக்கீரன் :  கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முத்தலாக் சட்ட மசோதா இன்று நிறைவேற்றம்! முத்தலாக் சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் எனப்படுவது இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பிற்கு எதிரானதாக இருந்தது. இஸ்லாமிய பெண் ஒருவரிடம், அவரது கணவர் தலாக் என மூன்று முறை சொன்னால் அது விவாகராத்தாக ஆகிவிடும் என்ற நடைமுறையும் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது. உண்மையில், தலாக் கொடுப்பதற்கு குறிப்பிட்ட கால அளவுகள் பின்பற்றப்பட வேண்டும். ஒவ்வொரு தலாக்கிற்கும் இடையில் மூன்று மாதங்கள் இடைவெளி விடவேண்டும். அதுவும் பெரியவர்களின் முன்னிலையில் முறைப்படி சொல்லவேண்டும்.
ஆனால், இது காலப்போக்கில் இஸ்லாமிய பெண்களின் திருமணப் பாதுகாப்பிற்கு எதிரானதாக மாறியது. தொலைபேசி வாயிலாக ஒரே தவணையில் தலாக், தலாக், தலாக் எனக் கூறி விவாகரத்து செய்வது வரைக்கும் இது பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்த முறையை மாற்றக் கோரி இஸ்லாமிய பெண்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, அது சட்டமாக இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் முத்தலாக்கை தடை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சுக்ராம் .. ராசா ,,, ஊழலை அணுகும் விதத்தில் இருக்கிறது பார்ப்பன சாதி வெறி?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!: மனுதர்மம்தான் ஆளுகிறது! ஊழல் செய்வதிலும் பார்ப்பானுக்கு சலுகையா?
‘தி இந்து’ (தமிழ்) நாளிதழில் நேற்று (26.12.2017) 10 ஆம் பக்கத்தில் சேகர் குப்தா அவர்கள் எழுதியுள்ள ‘‘அரசியலில் ஊழல் களுக்கும், சாதிகளுக்கும் என்ன தொடர்பு?’’ என்ற கடடுரையை அப்படியே எடுத்து வெளியிடுகிறோம். (ஆ-ர்)
ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்கு களில் பிடிபடுவதும், தண்டிக்கப்படுவதும் அதிகமா கிறதா? சில உண்மைகளை ஆராய்வோம்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந் ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்களுக்கு சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார். 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நிலக்கரி ஊழல் வழக்கில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மது கோடா, லஞ்சம் கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சிபு சோரன் ஆகியோர் பழங்குடி வகுப்பினர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலித். லாலு பிரசாதும், முலாயம் சிங்கும் யாதவ சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டவர்கள். அவ்விருவரும் ஊழல் செய்ததாகவும், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகவும் வழக்குகளுக்கு உள்ளானவர்கள்.

Troll Trousers 2.0 - அதிமுகவையும் பாஜகவையும் சமுகவலையில் ஓட ஓட விரட்டி ... சமுக வலை சக்கரவர்த்தி

Troll Trousers 2.0 : இணையத்தில் ஜெயாவிற்கு எதிராக எழுத எல்லோரும் தயங்கிய நேரம்... ஒரு பக்கத்தை உருவாக்கி ஜெயாவின் அராஜகத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி தொடங்கியதுதான் #TrollJaya என்ற பேஜ்.....
ஜெயா மரணித்த பின் அன்று உறக்கம் இன்று தவித்தவர்களில் நானும் ஒருவன்... கொள்கை ரீதியான எதிரியாகத்தான் பார்த்தேனே தவிர மரணனிக்க வேண்டும் என எண்ணியது இல்லை... பக்கத்தை மூடி விடலாம் என்று எண்ணினேன் ஆனால் அடிமையின் ஆட்டம் சசி அன் கோ வின் ஆட்டம் என்னை பக்கத்தை மூடும் எண்ணத்தை மாற்றியது...
முதலில் #TrollPolitical என பெயர் மாற்றி சில நாட்களிலேயே #Trollmafia என பெயர் மாற்றம் செய்து சசிகலா அடிமைகள் பற்றி பதிவுகள் வெளியிட்டு சசி உள்ளே செல்லும் வரை தொடர்ந்தது....
சசி உள்ளே சென்ற பின் நரி கூட்டம் அடிமைகளை அடிமை செய்து ஊர் உள்ளே சிங்கம் என கர்ஜித்து கொண்டு வந்தது அதை என்னால் எப்படி பார்த்து கொண்டிருக்க முடியும்...
நமக்குள் இருக்கும் சண்டைகள் பிறகு என மன்னார்குடி கும்பலை பிறகு பார்த்து கொள்ளலாம் என டவுசர்கள் கூட்டத்தை ஒழித்து கட்ட வேண்டும் என #TrollTrousers என பெயர் மாற்றம் செய்தேன்... டவுசர்கள் கிழிக்கப்பட வேண்டும் நம்முடைய தற்போதைய இலக்கும் அதுவே...

சரிகா (கமலஹாசன் ) மும்பையில் வீட்டை இழந்து தவிப்பு ... அமீர் கான் உதவி

அம்மா உதவி வீட்டு பிரச்சனையில் தவித்த கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் உதவி செய்ய முன் வந்துள்ளார். கமல் ஹாஸனும், சரிகாவும் கடந்த 2004ம் ஆண்டு பிரிந்தனர். இதையடுத்து சரிகா மும்பையில் வசித்து வருகிறார். சரிகாவின் தாய் கடந்த நவம்பர் மாதம் காலமானார். அதன் பிறகு சரிகா கோர்ட்டும், கேஸுமாக அழைகிறார்.
அம்மா சரிகாவின் சம்பளத்தை வைத்து அவரது தாய் மும்பை ஜுஹு பகுதியில் அபார்ட்மென்ட் வாங்கினார். ஆனால் அவர் இறந்தபோது அந்த அபார்ட்மென்ட் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் சரிகாவுக்கு இல்லாமல் யாரோ ஒரு குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாக்கர் என்பவருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
சரிகா தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய அபார்ட்மென்ட் தனக்கு இல்லை என்பதை அறிந்த சரிகா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் கோர்ட்டும், கேஸுமாக அழைகிறார்.

உதவி ஆமீர் கானின் சகோதரி நுஸ்ஸத்(நடிகர் இம்ரான் கானின் அம்மா) சரிகாவின் நெருங்கிய தோழி. சரிகா படும் கஷ்டத்தை பார்த்த நுஸ்ஸத் அவருக்கு உதவுமாறு ஆமீர் கானிடம் கூறியுள்ளார்.

20 ரூபாய் நோட்டுகளை வீடுகளில் தேடும் கரைவேட்டிகள் ... யார் எந்த கோஷ்டி என்று தெரியாமல் மக்கள் திகில் !

ஆர்.கே.நகர்ந.பா.சேதுராமன் இடைத்தேர்தல் முடிவுக்குப் பின்னால் ஆர்.கே.நகர் தொகுதியின் பெரும்பாலான மக்கள், பதற்ற மனநிலையில் இருக்கிறார்கள். ரோட்டோர டீக்கடைகளில் ஆரம்பித்து, தெருக்களில் நடந்துபோகும் மக்கள்வரை, அவர்களின் முகத்தில் குழப்ப ரேகை ஓடுவது தெளிவாகத் தெரிகிறது. குழப்பத்துக்குக் காரணம், 20 ரூபாய் நோட்டும் கரைவேட்டிகளும். கடந்த திங்கள் கிழமை காலையிலிருந்தே, இந்தக் கரைவேட்டிகள்  தொகுதியை முழுமையாக ஆக்கிரமித்து வைத்துள்ளன. “இருபது ரூபாய் நோட்டை யார் வைத்திருந்தாலும் அதை உடனே கொடுத்துவிட்டால் தப்பித்துப் பிழைத்தீர்கள்… இப்போது, ‘எங்களிடம் எதுவும் இல்லை’ என்று சொல்லிவிட்டு, 20 ரூபாய் நோட்டுக்கு ஈடாக 10 ஆயிரம் ரூபாயை வாங்கும்போது மாட்டிக்கொண்டால், தர்ம அடியுடன் ஜெயிலுக்கும் போக வேண்டியதுதான்” என்று மக்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறது ஒரு கரைவேட்டிகளின் பிரிவு.
ஆர்.கே.நகர்அந்தக் கரைவேட்டிகள் நகர்ந்ததும், இன்னொரு பிரிவு கரைவேட்டிகள், “அவங்க அப்படித்தான் சொல்வாங்க. இந்த 20 ரூபாய் நோட்டை நாங்கள் உங்களிடம் எப்படிக் கொடுத்தோம், எந்தத் தேதியில் கொடுத்தோம், கொடுத்தது பகலிலா, இரவிலா என்றே கண்டுபிடிக்க முடியாதவர்கள், இதையா கண்டுபிடிக்கப் போகிறார்கள்… நீங்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். இதைவிட உங்களுக்கு இன்னும் என்னென்ன கொடுக்கப் போகிறோம் என்று பொறுத்திருந்து பாருங்கள்” என்று வார்த்தையில் தேன் தடவுகிறார்கள். ”பணத்தைக் கொடுக்கும்போது கையும்களவுமாகப் பிடிக்கத் தவறியதுபோல், 20 ரூபாய் டோக்கன்மீது பணம் கொடுப்பது, வாங்குவது தெரிந்தால் இந்தமுறை விட்டுவிடக் கூடாது”  என்று ஒரு குரூப், தொகுதி முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிறது.

ராசாவுக்கு பக்கபலமாக நின்ற திராவிட இயக்கங்கள் மீது சில தலித்திய அமைப்புக்கள் ..

Prabaharan Alagarsamy : 2ஜி பொய்வழக்கை முறியடித்து ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை பெற்ற பிறகு, பல முன்னணி தலித்திய செயல்பாட்டாளர்கள், அவரை பாராட்டுகிறார்கள், நேரில் சென்று வாழ்த்துகிறார்கள். நமக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் அதேசமயம் தங்கள் வசதிக்கேற்ப ஆ.ராசாவின் வெற்றியை திரித்துக்கொள்ளலாம் என்று சிலர் நினைப்பது நேர்மையான செயல் அல்ல.
தோழர் எவிடன்ஸ் கதிர், "ஒற்றை ஆளாக நீதி களத்தில் போராடி வென்று இருக்கிறார் ராஜா.தி.மு.க மீதான களங்கத்தை தீர்ப்பு உடைத்து இருக்கலாம்.ஆனால் உடைத்தவர் ராஜா." என்கிறார்.
உண்மைதான், ஒற்றையாளாக நீதி களத்தில் போராடினார் ஆ.ராசா. ஆனால், தமிழக அரசியல் தளத்தில் அவருக்கு துணைநின்றவர்கள் யார் என்பதை அறியாதவரா கதிர்?
இந்த விடுதலைக்கு முன்பு, எப்போதாவது ராசாவிற்கு ஆதரவாக ஒரு வரியாவது எழுதியிருப்பாரா? சில மாதங்களுக்கு முன்பு, நீதிபதி கர்ணன் குறித்து அவர் எழுதிய ஒரு பதிவில், கர்ணன், மாயாவதி, ராசா போன்றவர்கள் தவறிழைத்தவர்கள் என்கிற பொருள்படும்படி எழுதியிருந்தார். அந்த பதிவிலும், ராசாவிற்கு ஆதரவாக நான் அவரிடம் கேள்வி எழுப்பினேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கு திரு.கவுதம சன்னா அவர்கள், ஆ.ராசாவின் ஆளுமையை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்த பதிவில் அவர், திமுக ஆ.ராசாவை கைவிட்டுவிட்டதாக எழுதியிருக்கிறார். எவ்வளவு ஒரு அபாண்டமான புளுகு இது?
திகார் சிறையில் இருந்த ஆ.ராசாவை திமுக தலைவர் கலைஞரும், ஸ்டாலினும் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கட்சி பொறுப்பில் இருந்து ஆ.ராசா நீக்கப்படவில்லை, சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ஆ.ராசாவுக்கு கட்சியின் சார்பில் விமான நிலையத்தில் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது, மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கட்சியின் எந்த ஒரு பொறுப்பாளரும் ஆ.ராசாவை கைவிட்டதில்லை.

தேயிலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை

ஊதிய உயர்வு கோரும் தேயிலைப் பணியாளர்கள்!
மின்னம்பலம் ": மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள 11.1 லட்சம் தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் ஊதியங்களை உயர்த்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கணக்குப்படி மேற்கு வங்கத்திலுள்ள 4,30,000 தேயிலைத் தோட்டப் பணியாளர்களும், அசாமில் 6,80,000 தேயிலைத் தோட்டப் பணியாளர்களும் உள்ளனர். 2015ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி இப்பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் செய்யப்படவில்லை. 1951ஆம் ஆண்டு தோட்டப் பணியாளர் சட்டத்தின் அடிப்படையில் ஊதிய மாற்றம் உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.
தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில் தொழிலாளர் செலவுகள் 60 சதவிகிதமாக உள்ளது. ஊதியத்தில் 10 ரூபாய் உயர்த்தினால் உற்பத்திச் செலவு ரூ.6 உயரும் என்றும், இதனால் நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் என்றும் ரோசெல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.எஸ்.பேடி பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினி ..... கட்சி இல்லையாம் .. பவுண்டேசனாம் .... சிவாஜி பட பாணியில் சேவையாம் ,,,, ஆர் கே நகர் எபெக்ட்?

டிஜிட்டல் திண்ணை: கட்சி இல்லை, பவுண்டேஷன்!மின்னம்பலம் :ரஜினியின் ரகசிய திட்டம்
அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
“குழந்தைகளை நல்லா வளர்க்கணும். அவங்கதான் நம்ம இன்வெஸ்ட்மெண்ட். ஆக்கபூர்வமான விஷயங்களை சிந்தியுங்க. குடும்பத்தை நல்லா பார்த்துக்கோங்க...’ -இன்று ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு தொடங்கியபோது இப்படித்தான் பேசினார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதி அரசியலில் என்ன முடிவெடுக்கப் போகிறேன் என அறிவிக்கப் போவதாக நேற்று அறிவித்திருந்திருந்தார் ரஜினி. அன்று என்ன சொல்லப் போகிறார் ரஜினி என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இன்று காலையில் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு நெருக்கமான சில நண்பர்களும் அங்கே வந்திருந்தார்கள். அவர்களிடம் பேசியபோது சில விஷயங்களைச் சொன்னார்கள். அதுதான் டிசம்பர் 31-ம் தேதி ரஜினி அறிவிக்கப் போகும் முடிவு பற்றியது. அவர்கள் சொன்னதை அப்படியே இங்கே சொல்கிறேன்.

கோவையில் ராசாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

கோவை: ராசாவுக்கு உற்சாக வரவேற்பு!மின்னம்பலம்:  2ஜி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக கோவை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு அம்மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது,
கடந்த 21ஆம் தேதி வழங்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பில் ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 23ஆம் தேதி சென்னை வந்த ராசா, கனிமொழி ஆகியோருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரடியாக விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த நாட்களில் அதுவும் ஒன்றானது.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக கோவை சென்ற ஆ.ராசாவுக்கு, விமான நிலையத்தில் திரண்ட திமுகவினர் மேள தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலினுக்கு வழங்கப்படும் வரவேற்புக்கு நிகராக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக மட்டுமல்லாது திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட இயக்கங்களும் வரவேற்பில் கலந்துகொண்டன.

ரஜினியின் வளர்ப்பு தந்தை : ரஜினிக்கு அரசியலும் வேண்டாம் சினிமாவும் போதும்... பேசாமல் ஒய்வு ,,,



அழகிரி :ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்காது! ..திமுக பதில்...

மின்னம்பலம் :திமுகவில் ஏதோ ஒரு மாற்றம் தேவை என்பதுதான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எதிரொலித்துள்ளது என்று திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறியுள்ளார். அழகிரி தன் இருப்பைக் காட்டவே இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு உடனடியாக திமுக சார்பில் பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் மருது கணேஷ் உள்ளிட்ட 57 வேட்பாளர்களுக்கு டெபாசிட்கூடக் கிடைக்கவில்லை. தோல்வி குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில் இது திமுகவுக்குக் கிடைத்த தோல்வி அல்ல, தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்த தோல்வி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர்-27) மு.க.அழகிரி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், "தோல்வியை யாரும் தோல்வியென்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கட்சி ஓட்டைப் பணம் சாப்பிட்டுவிட்டது என்று துரைமுருகன் கூறுகிறார். அவர் இப்படிக் கூறலாமா, கட்சியினருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? திமுகவினரை இப்படி கூறினால் எப்படி வருங்காலத்தில் திமுக நிலைத்திருக்கும்?” என்று கேள்விஎழுப்பினார்.
தொடர்ந்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

புதன், 27 டிசம்பர், 2017

ஆண் வேடத்தில் 3 பெண்களை திருமணம் செய்த ஆந்திர பெண்


tamiloneindia :திருப்பதி, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு அருகே உள்ள இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், தன்னை ஆண் எனக்கூறி வந்தார். ஆண்களை போல் வேடமிட்டு வலம் வந்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் 3 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளார். முதலில் அனந்தபுரம் மாவட்டம் கொத்தச்செருவு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
 பின்னர் கடப்பா மாவட்டம் பொதட்டூரைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து 3-வதாக ஜம்மலமடுகு பகுதியில் உள்ள பீமகுண்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன், எனக்கு அவசர வேலைகள் உள்ளது. விரைவில் சென்னையில் வீடு பார்த்து அழைத்துச் செல்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள் எனக்கூறி செல்லும் அவர், பின்னர் திரும்பி வருவதே இல்லை எனத் தெரிகிறது.

BBC : பெனாசிர் படுகொலையில் பின்னணியில் இருந்தது யார்?

ஒரு முஸ்லிம் நாட்டை வழிநடத்திய முதல் பெண்மணி பேனசீர் பூட்டோ. இவர் கொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறதே தவிர, இவரது கொலைக்கு உத்தரவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிலால் எனப்படும் 15 வயதான தற்கொலை குண்டுதாரியால், டிசம்பர் 27-ம் தேதி 2007-ம் ஆண்டு பூட்டோ கொல்லப்பட்டார்.
ராவல்பிண்டியில் நடந்த ஒரு தேர்தல் பேரணியைப் பூட்டோ முடித்துவிட்டுச் சென்றபோது பூட்டோவின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற பிலால், பூட்டோவை துப்பாக்கியால் சுட்டும், தற்கொலை வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினார். இந்த தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தாலிபன்களால் பிலால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரான சுல்பிக்கார் அலி பூட்டோவின் மகள்தான் பேனசீர் பூட்டோ. அலி பூட்டோவின் அரசியல் வாழ்க்கையும் விரைவிலே முடிந்தது. தளபதி ஜியா-உல் ஹக்கின் ராணுவ ஆட்சியின் போது அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.