வியாழன், 2 செப்டம்பர், 2010

காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கார் இயங்கத் தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும். இரசாயனப் பதார்த்தத்தைக் கொண்டு காற்றில் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும்.இதன் மூலம் சுற்றுச் சூழலில் மாசு ஏற்படாது. கார் இயந்திரங்களும் பழுதுபடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
“என்சைம்” களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரொபன்” மூலக்கூறில் இருந்து 3 காபன் அணுக்கள் சங்கிலித் தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரிபொருள் ஆகிறது என கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: