சனி, 13 ஆகஸ்ட், 2016

அதிமுக பிரபலங்களின் அந்தரங்க விடியோக்களால் ஆட்டம் கண்ட அரசியல்!

சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமான மிக முக்கிய பிரமுகர்களின் ஏடாகூட வீடியோக்கள் தம் வசம் இருப்பதால்தான் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சசிகலா புஷ்பா தில்லாக மல்லுக்கட்டுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால்விட்டு பேட்டி கொடுத்த அதிமுகவினர் அண்மைக்கால சரித்திரத்தில் யாரும் இல்லை.. ஆனால் அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவோ, தமிழகத்தை தலைகீழாக புரட்டுவேன் என மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஒருபோதும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் சசிகலா தில்லாக கூறி வருகிறார். இப்படி சசிகலா புஷ்பா படுபோல்டாக ஜெ.வை எதிர்ப்பது பல காரணங்கள் கூறப்படுகிறது.
தென்மாவட்ட தொழிலதிபர் ஒருவரது பக்க பலம் சசிகலா புஷ்பாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சசிகலா புஷ்பாவையும் தென்மாவட்ட புள்ளியையும் வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் தமிழச்சி கோணத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்க வக்கீல் வலியுறுத்தல்!!

இளம் பெண் சுவாதி படுகொலை ஜாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சுவாதி படுகொலை சாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக்கொலை!
என்ற தலைப்பில் இந்த தமிழச்சி தனது பேஸ்புக் பதிவில் இதுகுறித்துக் குறிப்பிட்டுள்ளார். இவர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருபவர் ஆவார். இந்த பதிவில் அவர் பல பரபரப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
அதிலிருந்து சில.. சுவாதி படுகொலை செய்யப்பட்ட அன்றைய பரபரப்பான தினத்திலேயே ‘சுவாதியை கொன்றது பிலால் என்ற இஸ்லாமிய இளைஞர்’ என்று பொது ஊடகங்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் ஏற்படுத்தப்பட்ட ‪#‎வதந்தி‬ என்பது போகிற போக்கில் ‘உளறுவாயன்கள்’ பேசிய பேச்சல்ல. இஸ்லாமிய வெறுப்பு அரசியல்‬ சாதாரணமாக நடந்தவையல்ல. அனைத்தும் திட்டமிட்டே இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டவை.
ராம்குமார் கழுத்தை அறுத்தது போலிசுடன் வந்திருந்திருந்த அடியாட்கள் என்பது பொது ஊடகங்களில் மக்கள் நலம் விரும்பிகளால் அம்பலப்படுத்தப்பட்டதும் சுவாதியின் கொலை விசாரணை தடுமாற ஆரம்பித்தது. அவசர அவசரமாக இந்துத்துவ அமைப்பு ராம்குமாரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் சார்ந்த வக்கிலை அனுப்பி அதுவும் பல விதாதங்களால் முறியடிக்கப்பட்டது.

நயன்தாராவுக்கு தெலுங்கு படவுலகம் தடை விதிக்க ஆலோசனை!

படத்தின் புரமோஷன்களுக்கு வரமாட்டார். கிளாமர், நெருக்கம் காட்ட வேண்டும் என்றால் அதனை கதை சொல்லும்போதே சொல்லிவிட வேண்டும். சில ஹீரோக்கள், இயக்குநர்கள் தங்கள் இஷ்டத்துக்கு காட்சிகளை மாற்றுவார்கள். இந்த கதையே இருக்கக்கூடாது.
இவையெல்லாம் நயன்தாரா படத்தில் கமிட் ஆகும் முன்பே விதிக்கும் நிபந்தனைகள். முன்பே ஒருமுறை தெலுங்கில் இதுபோல ஒரு பிரச்னை உருவாகி, நயனுக்குத் தெலுங்கு பட உலகம் நடிக்க தடை போட்டுவிட்டது. இதனால் தவித்துப்போன ஹீரோக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நயனுக்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்தனர். வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கிறது ‘பாபு பங்காரம்’. தமிழில் நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக தமிழில் டப் செய்யப்பட்டு ‘செல்வி’ எனும் பெயரிலும் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

அன்னை மீனாம்பாள்.! பெண்கள் மாநாடு நடத்தி தந்தை பெரியாருக்கு பெரியார் பட்டத்தை வழங்கியவர்

மீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர், 1904 - 30 நவம்பர், 1992 பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர்
 இவர் தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர்

ஜோக்கர் மிகவும் சிறப்பான படம் .. விமர்சனம் .. கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்

தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறப்பான அரசியல் பகடி
திரைப்படம். வசனங்கள் ஒவ்வொன்றும் சரவெடி பட்டாசாய் தெறிக்கிறது.
பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் Sean Roldan.
இரண்டு முன்னணி பெண்
கதாப்பாத்திரங்களும் அருமையான வடிவமைப்பு. ஜெயகாந்தனின் தோற்றத்தில் வரும் பொன்னூஞ்சல் மனதில் ஆழப்பதிகிறார்.
அம்பேத்கர், பெரியார், ரோஹித் வெமுலா படங்களையும், கட்சிகொடிகள் காட்டப்படும் இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி Raju murugan-இன் அரசியல் அறிவு வெளிப்படுகிறது.
பளிச்சென தெரியும் போதும் இயக்குநர்
உச்ச நீதிமன்ற வழக்காடும் அறை, நீதிபதிகள் இருவரும் பேசிக்கொள்வது, சஃபாரி சூட்டில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளென அனைத்தையும் அச்சு அசல் அப்படியே காட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் எப்படி இருக்குமென்பதை இப்படத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

டெல்லி இரக்கமற்ற டெம்போ சாரதி கைது.. இறந்தவருக்கு நான்கு குழந்தைகள் delhi hit and run tempo driver arrested



டெல்லியில், சாலையில் சென்ற ஒருவர் மீது தனது வாகனத்தை மோதி படுகாயமடைய செய்துவிட்டு, அந்த நபரை காப்பாற்ற முயற்சிக்காமல் தப்பிச் சென்ற டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி சுபாஷ் நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற மாதிபுல் என்பவர் மீது, நேற்று முன்தினம் அதிகாலையில் டெம்போ வேன் ஒன்று மோதியது. விபத்தில் சிக்கியவரை அப்படியே விட்டு விட்டு டெம்போ டிரைவர் தப்பிச் சென்று விட்டார். சுமார் 90 நிமிடங்கள் வரை அவர், சாலையிலேயே உயிருக்கு போராடி  சிகிச்சையும் கிடைக்காமல், முடிவில் இறந்தும் போய் விட்டார். அது மட்டுமல்ல காயமடைந்து கிடந்த மனிதரிடம் இருந்து செல்போனையும் ரிக் ஷா ஓட்டும் ஒருவர திருடிக் கொண்டு போய் விட்டார். ஏராளமான மக்கள் அவரை கடந்து சென்றும் யாரும் உதவி செய்யவில்லை. ஆம்புலன்சுக்கு கூட தகவல் அளிக்கவில்லை.  

மணிப்பூர் இரோம் ஷர்மிளா முதல்வர் வேட்பளராக ஆம் ஆத்மி தயார் !

புதுடெல்லி, இரோம் சர்மிளா ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட்டால் மணிப்பூர் முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்த தயாராக உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் சர்மிளா 9-ம் தேதி உண்ணாவிரதத்தை முடித்ததை தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதல்–அமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார்.  ஜவகர்லால் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சையின்ஸ் வளாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சுயேட்சையாக போட்டியிடும் சர்மிளாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரோம் சர்மிளாவை சந்தித்து பேசினர். அப்போது ஆம் ஆத்மி கட்சியில் (இரோம் சர்மிளா) இணைந்து போட்டியிட வேண்டும். மேலும் முதல்-மந்திரி வேட்பாளராகவும் நிறுத்த நாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறினர். dailaythanthi.com

சற்குண பாண்டியன் காலமானார்.. திமுக துணை பொது செயலாளர்.. முன்னாள் அமைச்சர்

சென்னை : திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகாலை 3.30 மணிக்கு ராயபுரம் வீட்டில் உயிர் பிரிந்தது.  
இவர் சமூகநலத்துறை அமைச்சராக 1996 தேர்தலுக்குப் பின்[ அமைந்த புதிய அரசில் இருந்தார். இவர் தி.மு.க. சார்பில் தமிழ சட்டமன்றத்துக்கு இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இருந்து 1989, மற்றும் 1996 ஆண்டு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவரின் மருமகள்தான் சென்ற தேர்தலில்   அதே (ராதாகிருஷ்ணன் ) ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக களம்  இறங்கிய சிம்லா முத்துசெழியனாகும். 

சசிகலா புஷ்பா வெளிநாடு சென்று உள்ளார்?

டெல்லி போலீசார், சசிகலா புஷ்பா அவரது வீட்டில் இல்லை என்றும், அவர் எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை என டெல்லி காவல்துறை மூலம் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சசிகலா புஷ்பா வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. டெல்லி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. வெளிநாடு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார் இதனிடையே ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் ஏறுமுகம் கண்ட சசிகலா புஷ்பா. யாருமே செய்யத் துணியாத செயலாக ஜெயலலிதாவை பகிரங்கமாக எதிர்த்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரை தொண்டர்கள் அதிகம் கொண்ட வலுவான கட்சி அதிமுக. அதன் தலைவியை சசிகலா புஷ்பா எதிர்த்துள்ளது நாடு முழுவதும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பன்னீர்செல்வம் சட்டசபையில் கத்திய Beep வார்த்தை ... திருப்பி அடிச்ச ஸ்டாலின்

ஜெ., தொகுதி பற்றி பேச கூடாதா?' சென்னை:முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதி பற்றி, தி.மு.க., உறுப்பினர் குறைகளை அடுக்கியதால், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சட்டசபையில், நேற்று நடந்த சுற்றுச்சூழல் மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்:
தி.மு.க., - சுதர்சனம்: சென்னைக்கு குடிநீர் தரும் புழல், சோழவரம் ஏரிகளை சுற்றி, புதிய குடியிருப்புகள் அதிகரித்துள்ளன; அங்கு கழிவுகளை கொட்டுவதாலும், பாதாள சாக் கடை திட்டம் இல்லாததாலும், நீர் நிலை பாதிக்கப் படுகிறது விபத்தில் சிக்கியவர்களை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு போவதற்குள்,உயிர் பறி போய் விடுகிறது. அதனால், தாம்பரம் போல, மாதவரத்தில், பொது மருத்துவமனை அமைக்க வேண்டும்.

வினவு டுடோரியல் : இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி? முதல்ல ஒருத்தனையும் பேசவிடாதீங்க..

ரங்கராஜ் பாண்டேல்லூரி அட்மிஷன் கனஜோராக நடக்கும் இந்த சூழலில் உலகின் உள்ள எல்லா துறைகளைப் பற்றியும், அதில் எப்படி விற்பன்னராவது என்பது பற்றியும் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றிய ஆலோசனைகள் யாராலும் தரப்படுவதில்லை.> அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
முன்னேறும் வழி தெரியாமல் ஆண்டுக் கணக்கில் சென்னை வீதிகளை ஓட்டை டூவீலரில் சுற்றி சைனஸ் வந்து அல்லலுறும் பத்திரிகையாளர்கள், வாடகை கட்டுப்படியாகாமல் வீட்டை வருடா வருடம் மாற்றிக் களைத்துப் போகும் பத்திரிகையாளர்கள் என ஒரு கூட்டம் துன்பப்படுவதைப் பார்த்து கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது. எதேச்சையாக சந்தித்த பிழைக்கத் தெரியாத ஓரிரு பத்திரிக்கையாளர்களுக்கு டீயும் பன்னும்கூட வாங்கித்தராத குற்ற உணர்வு இன்றைக்குவரை என்னை வாட்டுகிறது.
அவர்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தற்சமயத்துக்கு பைசா இருக்காது என்பதால் இந்த பயிற்சியை இலவசமாகவே தருகிறோம்.

ரங்கராஜ் பாண்டே : சமூக வலைதளங்கள் கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்கள்!

கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன என்று தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே பேசினார். ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சிந்தனை அரங்கில் கருத்து (சு)தந்திரம் என்னும் தலைப்பில் அவர் பேசியதாவது: கருத்து சுதந்திரமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது நியாயத்தோடும், நடுநிலைமையோடும், அடுத்தவர் மனம் புண்படாதபடியும் இருக்க வேண்டும். உள்நோக்கத்தோடு பேசப்பட்டால் அது கருத்துச் சுதந்திரம் அல்ல, அது கருத்து தந்திரம் ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் இருக்கும் உண்மைத் தன்மைக்கு யார் உத்தரவாதம் தருவது? ஊடகங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டு இருக்கக் கூடாது. பல துறைகளைப் பார்த்து கேள்வி கேட்போம். ஆனால், நாங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் என செய்தியாளர்கள் கருதினால் அது கருத்து சுதந்திரம் அல்ல, கருத்துத் தந்திரமாகத்தான் கருதப்பட வேண்டும்.

அ.தி.மு.க., எம்.பி சத்தியபாமாவுக்கு கணவர் விவாகரத்து 'நோட்டீஸ்'... என்னை அடைத்து வைத்திருக்கிறார் கணவர் புகார்!

கோபி: திருப்பூர், அ.தி.மு.க., பெண் எம்.பி., சத்தியபாமாவுக்கு, அவரது கணவர் விவாகரத்து, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
திருப்பூர் எம்.பி., சத்தியபாமா, 1990ல், கோபி அருகே எலந்தக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சத்தியவசந்த், 24, என்ற மகன் உள்ளார். 2014 லோக்சபா தேர்தலில், சத்யபாமா அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், வாசு சார்பில், அவரது வழக்கறிஞர் ஜாகீர் உசேன், சத்யபாமாவுக்கு அனுப்பியுள்ள விவாகரத்து நோட்டீஸ்:வாசுவுக்கும், உங்களுக்கும், 1990 மார்ச், 30ல் திருமணம் நடந்தது. வாசுவால், கோபி
நகராட்சி தலைவர் ஆனதும், அவரை உதாசீனப்படுத்த ஆரம்பித்தீர்கள். வாசுவுக்கு தெரியாமல், பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள். லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது, பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு கொடுத்துள்ளார்.
மேலும், அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து, இரண்டு கோடி ரூபாய் பெற்றுத்தர வற்புறுத்தி உள்ளீர்கள். அதன்பின், சிகிச்சை என்ற பெயரில் அவரை அடைத்து வைத்துள்ளீர்கள்.

இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள், திமுகவால் இருட்டடிப்பு ? ஆதி திராவிடர் என்பதாலா?

இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள் அவர்களை இருட்டடிப்பு செய்தது யார்…?
இந்தி எதிர்ப்பு என்றாலே யாவருக்கும் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாண்ட நடராசன் தாளமுத்து ஆகியோரைத் தான் நினைவுக்கு வரும். ஆனால் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965ஆம் ஆண்டு தொடங்கியபோது அதில் முன்னணியில் நின்று போராடி எல்லோரையும் விட அதிக மாதங்கள் சிறையில் இருந்த ஒரே வீர மங்கை அன்னை சௌந்தரி அம்மாள் அவர்களை யாருக்கும் தெரியாது.. காரணம் அவர் மறைக்கப்பட்டதுதான். எல்லோரும் ஆறு மாதங்கள் சிறையில் இருந்த போது இவர் மட்டும் 8 மாதங்கள் சிறையில் இருந்தார். அந்த காலத்தில் ஒரு பெண் 8 மாதங்கள் சிறையிலிருப்பது எளிதான காரியமா..? அது மட்டுமின்றி நாடறிந்த முக்கியமான பெண் தலைவர் அவர்.

கோவை ஈசா யோகாவை முற்றுகையிட்டு சமூக நீதிக்கட்சியினர் போராட்டம் ... யானை வழித்தடங்களை மீட்க கோரிக்கை

கோவை ஈசா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள யானைகள் வழித்தடங்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி அந்த மையத்தை முற்றுகையிட முயன்ற சமூக நீதிக்கட்சியினர் 30 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈசா யோகா மையம் முன்பாக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;கோவை ஈசா யோகா மையம் இளைஞர்களை மூளை சலவை செய்வதாகவும்,ன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், ஈசா பள்ளியில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்நிலையில் கோவை ஈசா யோகா மையம் ஏராளமான வன நிலங்களை ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் யானைகள் வழிதடம் மறிக்கப்பட்டு அவை உயிரிழப்பதாகவும் கூறி சமூக நீதிக்கட்சியினர் இன்று ஈசா மையத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.  இதனையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தலைமையில் ஈசா யோகா மையம் முன்பாக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

டாஸ்மாக்கை மூடு - ஒரு காந்தியவாதி 'தீவிரவாதி'யான கதை ! 74 வயது ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். நல்லாசிரியர் விருது பெற்றவர்


சிறுதொண்ட நாயனாரின் குரலில் 74 வயதுக்குரிய முதுமை இல்லை. அவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். நல்லாசிரியர் விருது பெற்றவர். வரலாறு, தமிழ், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் காந்திய சிந்தனைகள் என்று மொத்தம் ஐந்து தனித்தனி துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால், ஜெயாவின் தமிழக அரசோ அவரைத் தீவிரவாதியாக இனங்காணுகிறது.
விருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் சிறுதொண்ட நாயனாரும் ஒருவர். சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.

திருமாவுக்கு தூண்டில் போட்ட பாஜக ! விடுதலை சிறுத்தைகள் பிளவுபடும் அபாயம் ! ஆளூர் ஷாநவாஸ் போர்க்கொடி !

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொதுச்செயலர் ரவிக்குமாருக்கும் துணைப் பொதுச்செயலர் ஆளுநர் ஷாநவாஸுக்கும் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளதால் அக்கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை ரவிக்குமார் தொடர்ந்து ஆதரித்து வருகிறார் என்பது ஆளுநர் ஷாநவாஸின் குற்றச்சாட்டு. அண்மையில் தலித்துகள் தொடர்பாக பிரதமர் மோடி பேசியதை ஊடகங்களில் ரவிக்குமார் ஆதரித்து கருத்து கூறியிருந்தார்.
இதில் கடும் அதிருப்தி அடைந்த ஆளூர் ஷாநவாஸ் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் திருமாவளவனுக்கு ஒரு பகிரங்க கடிதம் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டார். பின்ன ஷாநவாஸ் அப்பதிவை நீக்கிவிட்டார்.
 ஆளூர் ஷாநவாஸ் நீக்கிய பதிவு இது:
அன்புள்ள தலைவர் அவர்களுக்கு, நம் கட்சி பொதுச்செயலாளரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் சராசரி அரசியல்வாதிகள் அல்ல. பதவிக்காக பா.ஜ.க.வில் இணைந்து முன்னேறியவர்களும் அல்ல. சாதியைப் பாதுகாக்கும் இந்துத்துவத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவாகி அரசியலுக்கு வந்தவர்கள்.

Tisca Chopra படுத்தால்தான் படவாய்ப்பு ஹிந்தி நடிகை டிஸ்கா சோப்ரா அதிரடி! தமிழ் இயக்குனரும் படுக்கைக்கு..... யார் அந்த இயக்கு?


பொதுவாக சினிமாவில் பெண்கள் முன்னேறுவது கடினம் என்று சொல்வார்கள். பெண்களுக்கு பாதுகாப்பில்லை பல வழிகளில் பாலியல் தொந்தரவு வரும் என பேசுவதுண்டு, சில சமயங்களில் நடிகைகளை பற்றி அந்த மாதிரி கிசுகிசுக்கள் கூட வரும்.இந்நிலையில் ஹிந்தி நடிகை டிஸ்கா சோப்ரா தன்னை இயக்குனர் ஒருவர் தன்னுடன் படுத்தால் பட வாய்ப்பு தருவதாக கூறினார் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.42 வயதான நடிகை டிஸ்கா சோப்ரா, தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவர் சார்லஸ் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது என்றார்.எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார். அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தினார் என பகிரங்கமாக குற்றசாட்டை வைத்தார்.

இந்தியாவின் முதல் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடுதான்..



‘ஹைடெக் முதல்வர்‘ என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தற்போது ‘இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வர முதல்வர்’ என்ற அந்தஸ்த்து(?) கிடைத்துள்ளது. ஆம்.... இந்தியாவில் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.134.8 கோடியாம். இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வர முதல்வர்கள் குறித்த பட்டியல் குறித்த ஆய்வை அசோசியேஷன் ஆப் டெமாகிரட்டிக் ரீஃபார்ம் நிறுவனம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் நடத்தியது. தற்போது, கோடீஸ்வரர் பட்டியலில் உள்ள முதல்வர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.134.8 கோடியாம். 2012ல் இவரது சொத்து மதிப்பு வெறும் ரூ.35.59 கோடியாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. நான்கு வருடத்துக்குள் நாயுடுவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

வானொலி தமிழ் செய்திகளுக்கு மூடுவிழா! அனைத்து மாநில மொழிகளையும் நசுக்கும் RSS அஜெண்டா ஆரம்பம்


பாரம்பரியமும் பெருமையும் மிகுந்த டில்லி மற்றும் திருச்சி வானொலி நிலைய தமிழ் செய்திகளுக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது, அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு செய்வது என அரசு அதிரடி காரியங்களில் இறங்கிவிட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதன் 25ஆம் ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் வேளை இது. இந்நிலையில், செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யப் போகிறது மத்திய அரசு. இந்த அமைச்சகத்தின்கீழ் இயங்கும் துறைகளின் பல கிளை அலுவலகங்களை மூட மத்திய அரசு ஆணையிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம் பெண்களின் நீச்சல் உடைக்கு பிரான்ஸ் கேன் நகரில் தடை..

சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேன்ஸ் நகரின் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெளியிட்டுள்ள உத்தரவில், கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும்
மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பிரான்ஸ் மற்றும் அதன் மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில், மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தடையை மீறி அந்த ஆடையை அணிபவர்கள் சுமார் 40 டாலர்கள் வரை அபாரதம் கட்ட நேரிடும்  bbc.com

மணப்பறை ..வானும் ஆம்னியும் விபத்து 11 பேர் உடன் மரணம்

திருச்சி அருகே வேனும் ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வேனும், ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டியைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குச் சென்றுவிட்டுச் வேனில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறை அருகே வளநாடு கைகாட்டி என்ற இடத்தில், வேனும், எதிரே வந்த ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இதில் வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதுhttp   ://ns7.tv/t

விஜயகாந்த் கல்லூரியில் எனது மகனை அடித்து கொலை செய்து விட்டனர்: சி.எம். செல்லில் பெற்றோர் புகார்

விஜயகாந்த் கல்லூரியில் படித்து வந்த தனது மகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக சீராளன் என்பவர் முதல் அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவைச் சேர்ந்த சீராளன் - நாகம்மாள் தம்பத்தியினர் அளித்துள்ள புகாரில், மாமண்டூரில் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார் எனது மகன் சிவசுப்பிரமணி. கடந்த 30.04.2016 அன்று மாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் வந்து பார்த்தபோது எனது மகன் இறந்துவிட்டான். எனது மகனின் நண்பர்களிடம் நான் விசாரித்தபோது, கல்லூரியிலேயே எனது மகனை அடித்து கொலை செய்து விட்டனர் என்று கூறினர். இது தொடர்பாக படாளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜக மூத்த தலைவர் பிரஜ்பால் மீது துப்பாக்கி சூடு 100 தடவை சூடு... BJP leader Brijpal Teotia in critical condition after being shot at in Ghaziabad

உத்திரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மர்ம நபர்கள் சிலர் பாஜக மூத்த தலைவர் பிரஜ்பால் மீது 100 ரவுண்டுகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், அவர் தற்போது கவலைக்கிடமாக உள்ளார்.>பிரிஜ்பால் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்ததுடன், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். சுமார் 100 ரவுண்டுகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பிரஜ்பால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அவர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர்: 350 பேருக்கு பார்வை பறிபோன பரிதாபம்!.. பெல்லட் குண்டுகளை பாவித்ததால் ராணுவம்...


காஷ்மீர் கலவரத்தில் ராணுவத்தினர் ‘பெல்லட்’ குண்டுகளை பயன்படுத்தியதால் சுமார் 350 பேருக்கு பார்வை பறிபோயிருக்கிறது. மூன்று பேரின் உயிர் பறி போயிருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மருத்துவர்கள் ஒரு கண்ணை கட்டிக் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து மக்கள் ராணுவம் மற்றும் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சசிகலா புஷ்பாவுக்கு கொலை மிரட்டல்! கொலைகாரன் டெல்லியில் தங்கி இருக்கிரானா?

தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக தமிழக எம்.பி சசிகலா புஷ்பா கொதித்தெழுந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். “மேயராக இருந்த என்னை அழைத்து தமிழக முதல்வர் எனக்கு வழங்கிய எம்.பி பதவி ஒன்றும் சாதாரண பதவி கிடையாது. அப்படியொரு பதவியை எனக்கு அவர் வழங்கியிருக்கிறார் என்றால், நான் அதிமுக-வின் வளர்ச்சிக்கு அத்தனை உழைத்திருக்கிறேன். எனக்கு அந்த பதவி வழங்கப்பட்டபோது ‘என்னைவிட சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுங்கள்’ என்று மறுத்தேன். ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பதவியை கொடுத்தார். காரணம், என் திறமை குறித்தும் கட்சிக்காக நான் உழைத்தது குறித்தும் முதல்வருக்கு நன்றாகத் தெரியும்.
என் உழைப்பு குறித்து அடிமட்ட சாதாரண கட்சித் தொண்டனுக்குக் கூடத் தெரியும். என்னைப் போல் எத்தனையோ பேர் கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், எந்த நிமிடத்திலும் அவர்களை தயவு தாட்சண்யம் இன்றி தூக்கியெறிய ஜெயலலிதா தயங்குவதில்லை. எங்களுக்கும் மானம் இருக்கிறது. மரியாதை இருக்கிறது. சுயமரியாதை இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் துச்சமென மதித்து தூக்கி எறிபவர் முதல்வர்.

கே.பாக்கியராஜ்; நாட்ல நெறைய பேரு நான்தான் கடவுள் பிரதிநிதின்னு ... பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்

கடவுளின் பிரதிநிதிகள் என கூறும் ஆசாமிகளிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கே.பாக்கியராஜ் கடவுளின் பிரநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாந்துவிடாமல் விழுப்புடன் இருக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்கியராஜ் கூறியுள்ளார். ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய பாக்கியராஜ், நிறைய பேரு இன்னமும் சாமி, சாமி என சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். நம்ம ஜனங்க புரிஞ்சுக்காக கால்ல விழுந்துகிட்டே இருக்காங்க. மாட்டிக்கிட்டு கொஞ்ச நாள் கழித்து இந்த சாமி அப்படி ஏமாத்தினார். அந்த சாமி இப்படி ஏமாத்தினார் என்கின்றனர். இன்னமும் சாமியார்களின் காலம் நல்லவா இருக்கிறது. நமது தாய்மார்கள் இந்த சாமி விஷயத்தில மட்டும் இன்னும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். தயவு செய்து கடவுளின் பிரநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாந்துவிடாமல் விழுப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.நக்கீரன்.இன் 

வரலக்ஷ்மி விஷால் திருமணம் .. விரைவில் !

நடிகை வரலட்சுமியைத் திருமணம் செய்வது குறித்து நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போது? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில்: ‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சாதி சான்றிதழ் இல்லாமல் இருளர் பெண் நிஷா படிப்பை தொடர முடியவில்லை

நாங்க படிக்கல, எங்க புள்ளைங்க படிக்கல, ஆனால் எங்க பேரப்புள்ளைக படிக்குதுங்க, ஆனால் சாதிச்சான்று கிடைக்காமல் எங்க பேரப் புள்ளைக காலேஜில் சேர முடியலையே,பழங்குடி இருளர்களாகிய நாங்கள் மேல்படிப்பு படிக்க முடியாமல் செங்கல் சூளைகளிலும்,கல் குவாரிகளிலும் கொத்தடிமையாகக் கிடக்க வேண்டும் என்பது எங்கள் தலையெழுத்தா?எங்கள் தலையெழுத்தை அரசாங்கம்தாம் தீர்மானம் செய்கிறதா?
மழை வெள்ள நிவாரணப் பணியின் போது எனக்கு அறிமுகமானவர் பழங்குடி இருளர் பெண் நிஷா,+2 படிக்கிறேன் என்றார்,

சந்திரபாபு நாயுடு + செம்மர வியாபாரிகள்... அப்பாவி ஏழைகளை ஒருபக்கம் கைது செய்துவிட்டு மறுபக்கம்....நடக்கட்டும் நடக்கட்டும்

செம்மரம் வெட்டும் விவகாரம் ?
அம்மாவின் நண்பரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம் ஒரு கேள்வி ?
டியர் நாயுடு காரு.....
1. செம்மரங்களை வெட்ட...சொல்கிற முதலாளிகள் யார் யார் ?
2. அதற்கு ஆள் அமர்த்தும் தரகர்கள் யார் யார் ?
3 மரங்கள் வெட்டி கடத்த உறுதுணையாக உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் யார் யார் ?
4. கடத்தலில் தொடர்புடைய நபர்கள்...நிறுவங்கள் எவை ? எவை ?
5 இவற்றைப்பற்றியெல்லாம் விசாரித்து குற்றவாளிகளை பிடிக்கவேண்டிய உங்கள் நிர்வாகம்...அதையெல்லாம் விட்டுவிட்டு....

திருப்பதிக்கு சாமி கும்பிட வருகின்ற...கருத்த வதங்கிய தோலுடைய ...ஒட்டிய வயிறுடன் வரும் ஏழை தமிழர்களை மட்டும் கைது செய்வது என் ?
துணையான குற்றவாளிகளுக்கு உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும்...அவர்களிடமிருந்து உங்களுக்கு பங்கு வருகிறது என்றும்...அந்த உண்மையை மறைக்கவே...அப்பாவி மக்களை கைது செய்து...செம்மர கடத்தலை தடுப்பது போல நீங்கள் நாடகம் ஆடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கிறார்களே ?

சசிகலா புஷ்பா மீது பொய் வழக்குகள் போடும்போதே அதிமுக பலவீனமாகிவிட்டது என்று தெரியவில்லையா?

ஜெயலலிதாதான் போல்டான தலைவர்' என்று மக்கள் நினைக்கிறார்கள். அவரைப் போலவே, ' நீங்களும் துணிச்சல்காரர்' என்று மக்கள் எண்ணுகிறார்கள். உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம். தைரியமாக இருங்கள்' என ஆறுதல் கூறிய பெருசு! .
சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய வைக்கும்
முயற்சிகளில் தளராமல் போராடுகிறார்கள் அ.தி.மு.க எம்.பிக்கள். அதே சமயம், ' நேற்று டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன் கனிமொழியிடம் நீண்ட நேரம் விவாதித்தார் சசிகலா' என்கின்றனர் தி.மு.கவினர். அ.தி.மு.க தலைமையோடு ஏற்பட்ட மோதலில், எம்.பி பதவியை ராஜினாமா செய்யாமல் டெல்லியிலேயே முகாமிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா. புதுக்கோட்டை மற்றும்  தூத்துக்குடி மாவட்டங்களில் அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க வழக்கறிஞர்கள், 'அந்தந்த மாவட்ட எல்லைகளுக்குள்  உள்ள நீதிமன்றத்தில்தான் பிணை கேட்க முடியும்' எனத் தெரிவித்தனர். இதன்பின்னர், வருகிற 22-ம் தேதி வரையில் சசிகலாவை கைது செய்தவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.

வைகுண்டராஜனின் VV மினரல்சிடம் இருந்து 30 டன் கனிம மணல் அரசு பறிமுதல்... பேரம் படியல்ல?

தூத்துக்குடி: வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு எதிராக தமிழக அரசு அதிரடியைக் காட்டத் தொடங்கிவிட்டது. நெல்லை அருகே கொடைவிளையில் 30 டன் கனிம மணல் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் கனிம மணலை வெட்டி எடுக்கும் தொழிலில் ஏக போகமாக கோலோச்சி வருபவர் வைகுண்டராஜன். ஜெயலலலிதா தரப்பின் பல நிறுவனங்களில் பங்குதாரராகவும் இருந்தார் இதனால் அவரைப் பயன்படுத்தி அதிமுகவில் ஏற்றம் பெற்றவர்கள் பலரும் உண்டு... இன்றைய சசிகலா புஷ்பா உட்பட. பின்னர் ஜெயலலிதா தரப்புடன் வைகுண்டராஜனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நியூஸ்7 என்ற தனி சேனலை தொடங்கினார் வைகுண்டராஜன். அது முழுவதும் அதிமுகவுக்கு எதிரானதாக செயல்பட்டது. இதனால் சட்டசபை தேர்தலின் போது கனிம மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தார் ஜெயலலிதா.

தனியார் நிறுவன பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதம் .. மசோதா தாக்கல்

புதுடெல்லி: அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாத காலமாகவும், தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு 3 மாத காலமாகவும் இதுவரை இருந்தது. இதனை மாற்றி தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கும் 6 மாத விடுப்பு அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்களுடனான மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது. மகப்பேறு விடுப்பு சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
  • இந்த மசோதாவால் தனியார் நிறுவன கர்ப்பிணி ஊழியருக்கான விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்கிறது.
  • 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்.
  • பச்சிளம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு அளிக்கப்படும்.
  • மகப்பேறு விடுப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெறவுள்ளனர்.  மாலைமலர்.com

போயஸ் தோட்டத்தில் டாஸ்மாக் திறக்கலாம்.. அம்மாவின் மரணதேசம்.. வினவு

விருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
சாராயம் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நாசகார விளைவுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை… “அரசாங்கமே ஸ்கெட்ச்சு போட்டு மக்களுக்கு சுலோ பாய்சன் மாதிரி சாராயத்தை ஊத்தி சாவடிக்குது சார். சாராயம் குடிச்சி செத்தவன் சாவுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சாவுக்கெல்லாம் கலெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி மேல எப்.ஐ.ஆர் போடனும்” என்கிறார் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான நந்தகுமார். மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் நந்தகுமாரும் ஒருவர்.

சென்னை சைதாப்பேட்டையில் நீதிபதி வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளை

இன்று காலையில் சென்னை நகைக்கடையொன்றில் 60 பவுன் நகை கொள்ளை போனது. இந்தச் சம்பவம் நடந்த சிலமணி நேரங்களிலேயே சென்னையில் சைதாப்பேட்டையில் கூடுதல் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 200 சவரன் நகைகள் திருட்டுப்போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைதாபேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியன் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஸ்ரீஜா வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 200 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுபற்றி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையொட்டி, கோட்டூர்புரம் காவல்நிலையப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க சமீபத்தில் காவல் துறையினருக்கு மிதிவண்டி மற்றும் பைக் வழங்கியது நினைவிருக்கலாம்!  maalaiமலர்..கம

தமிழக கவர்னராக முன்னாள் RSS அமைப்பாளர் T.H.சங்கரமூர்த்தி நியமனம்?

தமிழகத்தின் ஆளுநராக இருக்கும் ரோசய்யாவின் பதவிக்காலம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைய, ரோசய்யா ஆந்திராவின் 15ஆவது முதலமை‌ச்சராக பதவி ஏற்றார். பின்னர் உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜினாமா செய்தார். இந்நிலையில் அப்போதைய தமிழக ஆளுநர் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைய தமிழக ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 31ஆம் தேதி பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் புதிய ஆளுநரை நியமிக்க பாஜக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சுடுகாட்டை ஆக்கிரமித்த ஈஷா ஜாக்கி வாசுதேவ் : பழங்குடியின மக்கள் புகார்


கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையம் பழங்குடியின மக்களின் சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாக புகார் தெரிவித்துள்ள பழங்குடிகள், தங்களது சுடுகாட்டினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் அருகே மடக்காடு என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 75 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டினை காலங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மடக்காடு பழங்குடியின மக்களின் சுடுகாட்டினை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்து உள்ளதாக பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுற்றுவட்டார நிலங்களை விலைக்கு வாங்கியுள்ள ஈஷா யோகா மையம் தாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாகவும், நில அளவை செய்து யோகா மையத்தினர் சுடுகாட்டின் நடுவில் கல் நட்டு உள்ளதாகவும் பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் தங்களது சுடுகாட்டினை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பழங்குடியின மக்களின் ஊர்த்தலைவர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து பல திடுக்கிடும் புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. - அருள்குமார்  நக்கீரன்,இன்

டெல்லி .CCTV .விபத்தில் சிக்கியவர் ஒரு மணிநேரமாக உயிருக்கு போராடி இறந்தார் யாரும் உதவவில்லை


A man hit by a tempo bled on a Delhi road for 90 minutes on Wednesday morning. Hundreds of people drove past the dying man, but not one person came forward to help. The only one who walked up to the injured man ended up helping himself: He walked away with the dying man's mobile phone
இந்தியத் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம்.
இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த நபரை மோதித் தள்ளிய பிறகு வேன் ஓட்டுநர் வெளியே வந்து பாதிப்புக்குள்ளான நபரை பார்க்கிறார். பின்னர் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்.பின்னர், அந்த வழியாக வந்த ஒருவர் இறுதியாக, அடிப்பட்டவரை அணுகுகிறார்.

கேழ்வரகு .. கெட்ட கொழுப்பை கரைக்கும் ,இதய நோய் வராமல் காக்கும்....

ragiஆறுமாத குழந்தை முதல் 100 வயதைக் கடந்த முதியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு.
நம் முன்னோர் வலுவுடனும், வளமுடனும் நலமுடனும் வாழ்ந்ததற்கு கேழ்வரகு உணவு மிக முதன்மையான காரணம். கால்சிய சத்து இதில் அதிகம். உடல் குளிர்ச்சியடைய உதவும். இரும்பு சத்தும், போலிக் ஆசிட்டும் இதில் அதிகம்.
ஆனால், இடைக்காலத்தில் அவ்வளவு கேவலமாகப் பார்க்கப்பட்டதன் விளைவு இன்று சத்தற்ற உணவுகளை உண்டு நோயாளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இரத்த சோகை வராமல் தடுக்க, வந்தால் போக்க இது பெரிதும் பயன்படும்.
எப்படிச் சாப்பிட வேண்டும்?
மோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது.

சசிகலா புஷ்பா : நடந்த கொடுமைகளை தெருத்தெருவாக கூறி பிரசாரம் செய்வேன்... அதிமுக ஒரு அடிமைகள் கூடாரம்

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை எந்த அளவுக்கு கஷ்டப்படுத்தினாலும் தனது கொள்கையிலிருந்து பின்வாங்க போவதில்லை என கூறியுள்ளார். ஒரு பெண்ணை கஷ்டப்படுத்துவதற்காகவா தமிழக மக்கள் ஒரு பெண்ணை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் தெருத்தெருவாக சென்று தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். நான் வீரமான சமூகத்தை சேர்ந்தவள் என்னை கேவலப்படுத்துவது என்னுடைய சமூகத்தை கேவலப்படுத்துவதற்கு சமம். என்னை போல பலர் அடிமைகளின் கூடாரமான அதிமுகவால் அநீதி இழைக்கப்பட்டு குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கெதிராக அநீதிகள் தொடர்ந்தால் என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் வேறு மாதிரி இருக்கும் மேலும் தமிழகத்தையே புரட்டிப்போடும் சக்தி எனக்குள்ளது என்றார். சசிகலா புஷ்பாவின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெப்துனியா.காம்

ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியிருக்க கூடிய குற்றாலீஸ்வரன் அமெரிக்காவில் பணிபுரிகிறார்... இங்கு போதிய ஆதரவு இல்லையே!

An FB post about Kutraleeswaranசென்னை: இது பேஸ்புக்கில் நமது கண்ணில் பட்ட ஒரு பதிவு. Muthuramalingam Subramanian என்பவர் Sridar Elumalai என்பவருடன் இணைந்து போஸ்ட் செய்துள்ள பதிவு.
இப்போது ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். அது தொடர்பானது இது. படியுங்கள்:

தங்க மீன்கள்: இந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ். ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள். குற்றாலீஸ்வரன் என்று சொன்னால் மட்டுமே பலருக்கு இவர் யாரென்று தெரியும்.
இவர் ஒரு தங்க மீன்.
13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி கடந்தவர். அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி மிர் சென்னின் உலக சாதனையை முறியடித்தார். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி நீந்தி உலக கடலையே கலக்கினார்.

ஜெயாவின் கிரிமினல் வரலாறு.. ஒரே பார்வையில்.. பாகம் - 1

தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக,
தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா!தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி ! சதி என்ற சொல் ஜெயலலிதாவின் அரசியல்
வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அவர் தன்னை எம்.ஜி.ஆரின் உடன்கட்டை (சதி) என்று அறிவித்துக்
கொண்டவர்.தற்போது குன்ஹாவின் தீர்ப்புப்படி, அவர் கூடிச் சதி செய்து கொள்ளையடித்த குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது இ.பி.கோ 120 – பி பிரிவின் படியான சதி. அ.தி.மு.க. அடிமைகளின் கூற்றுப்படி அம்மாவுக்கு எதிரான இத்தீர்ப்பு ராஜபக்சே அரங்கேற்றியிருக்கும் சர்வதேசச் சதி. தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக,
தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா. இவை ஒருபுறமிருக்க, நாம் இங்கே கூறவிரும்பும் சதி என்பது தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பனச் சதி! இந்தச் சதியின் நாயகி – ஜெயலலிதா.

சசிகலா புஷ்பாவுக்கு ஒருபுறம் பாலியல், லஞ்ச குற்றச்சாட்டுகள்.. .. மறுபுறம் பயங்கர கொலை மிரட்டல்கள்.. தொடர்கிறது டார்ச்சர்...



என் மீது பொய்யான குற்றச்சாட்டை 2 பெண்கள் கூறியுள்ளனர். அவர்களை மிரட்டியே அந்த புகார்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக கடிதம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன 
டெல்லி: தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் காரணமாக இருக்க முடியும் என்றும் அதிமுகவினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போது நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதன் பின்னர் சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன.

5 ஸ்டார் ஹோட்டல் போன்ற மாளிகையில் கேடி ஜாக்கி உல்லாசம் ! ஊரான் வீட்டு குழந்தைகளுக்கு மொட்டை உப்பில்லா சாப்பாடு

அதிர்ச்சி தரும் உண்மைகள் எல்லாம் வெளியே வரத்தொடங்கி உள்ளது. அப்பாவிகளை மூளைச்சலவை செய்து மயக்க மருந்துகளை உணவில் கலந்து கொடுத்து பதினெட்டு மணிநேரம் ஆஸ்ரம வேலைகளை வாங்குகிறார்கள் .  தனது  குடும்ப  சொத்துக்களை  பெருப்பித்து பெருப்பித்து இப்போது ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கு  இவன் குடும்பத்துக்கு சொந்தம் 

இஷா யோக ஜாக்கி விசாரணையின் போது பாஜக எச்.ராஜா ஆஜார்.. .. நீதிபதி விசாரணையில் குறிக்கிடும் மோடியின் கூஜா ராஜா

ஈஷா யோகா மையத்தில் மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை செய்யும்போது, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்றதால் பரபரப்பு நிலவியது. ஈஷா யோகா மையத்தில் தங்களது இரண்டு மகள்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக காமராஜ் - சத்தியஜோதி தம்பதியினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 பெண்களிடமும் விசாரணை நடத்தி நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு கோவை முதண்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், விசாரணையின்போது கோவை மாவட்ட எஸ்.பி. மற்றும் பெற்றோர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதன்படி இன்று கோவை மாவட்ட நீதிபதி பொங்கியப்பன், மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாவட்ட எஸ்.பி. ரம்யா பாரதி ஆகியோர், கோவையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, ஈஷா யோகா மையத்திற்குள் சென்றுள்ளதால் இந்த வழக்கில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. -அருள்குமார்  nakkeeran.in

புதன், 10 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பாவால் அப்செட்டில் இருக்கும் ஜெயாவுக்காக நடுநிலை ஊடங்கள் ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள்

விகடன் கப்சா : பாலியல் புகார், பணமோசடிப் புகார் என தொடர் வழக்குகளால் கடும் நெருக்கடியில் இருக்கிறார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ' பதவியை ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், கட்சிக்குள் அம்மா சேர்த்துக் கொள்வார்' என சமாதானப்படலத்தைத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.பிக்கள். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் நடந்த மோதல் தொடர்பாக, கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. இதன்பின்னர் ராஜ்யசபையில் பேசிய சசிகலா, ' என் தலைவர் என்னை அறைந்தார்' என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ' அ.தி.மு.கவினரால் என் உயிருக்கு ஆபத்து. பாதுகாப்பு வழங்குங்கள்' என மேல்சபைத் தலைவரிடம் கோரிக்கையும் வைத்தார். சசிகலாவின் இந்த அதிரடியை அ.தி.மு.க மேலிடம் எதிர்பார்க்கவில்லை. ' எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவார் என்றுதான் நினைத்தோம். அகில இந்திய அளவில் கட்சிக்குக் கெட்ட பெயரைத் தேடித் தரும் அளவுக்குச் செல்வார் என்று நினைக்கவில்லை' என அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளே புலம்பும் அளவுக்கு நிலைமை எல்லை மீறிப் போனது. தற்போது வரையில் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாத அளவுக்கு, தொடர் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா. ' தமிழ்நாட்டிற்குள் வந்தால் கைது செய்யப்படலாம்' என்பதால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

மண்ணுக்கேற்ற மார்க்சியமா ? மரபு வழி மார்க்சியமா ?

சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர்.ட்டுக் கட்சி அரசியல்வாதிகள் என்றால் எப்படியும் பேசுவார்கள், கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனதுதான். ஆனால், “அட இப்படியும் பேச முடியுமா” என்று ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டார், சீனிவாசன்.
இவர் நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார். ”ஒரு மூத்த கம்யூனிஸ்ட்” தலைவர் திடீரென்று, அக்கட்சியின் பரம எதிரியும், இந்து மதவெறி பாசிசக் கட்சியுமான பாரதீய ஜனதாவுக்கு எப்படி மாறினார்? ஏதாவது ஒரு முற்போக்கு சாயலுடைய கட்சிக்குத் தாவினால் கூட கொஞ்சமாவது நியாயமிருக்கும். சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர்.
”முன்புகூட சில சி.பி.ஐ. பிரமுகர்கள், தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போயிருக்கிறார்கள். கடந்த தலைமுறையில் மோகன் குமாரமங்கலம், நந்தினி சத்பதி, கே.ஆர். கணேஷ் போன்ற சில தலைவர்கள் காங்கிரசு – இந்திரா மூலமாக சோசலிசத்துக்குப் பாதை போடுவதாகச் சொல்லிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், இப்படியா!” திகைத்து நிற்கிறார்கள், அக்கட்சியில் சிலர்.
”பிழைப்புவாதம் எந்த வயதிலும் வரலாம், இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்று சமாதானம் கூறுகிறார், கட்சியின் இளைய – புதிய தலைவர் மகேந்திரன்.

விஜயகாந்த் பிரேமலதா மீதான 14 வழக்குகள் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவர் மீதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 2012, 2013, 2014 ஆகிய காலகட்டங்களில் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் மீது மொத்தம் 14 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தலித் தாக்குதல்கள் ! அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அடித்த அடியில்தான் மோடி வாயை திறந்தார்

சமர்:   ஒரு மதிப்புக்குரிய பன்னாட்டு ஊடக நிறுவனம், ஒரு ஜனநாயகக் குடியரசின் பிரதமரை நோக்கி மௌனத்தை உடைக்குமாறு கேட்பது அரிதானதொரு நிகழ்வாகும். அதுவும் ‘அவமானகரமான மௌனம்’ என்று அதனைக் குறிப்பிடுவது அரிதினும் அரிது. ஆனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இதைச் செய்துள்ளது. தனது தலையங்கத்தில் பாரத நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படிக் கூறுகிறது: பசுவழிபாடு செய்பவர்களின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தனது கேவலமான‌ மௌனத்தை அவர் உடைத்து, பொருளாதார வாய்ப்புகளும், கண்ணியமும் நீதியுமானதொரு அரசியல் நிலைப்பாட்டை அவர் எடுக்கா விட்டால், மோடியின் அரசு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்கவிருக்கிறது.