சனி, 3 நவம்பர், 2018

சிபிஐ இயக்குனருக்கு ஓய்வு அளித்தது சட்டவிரோதம்”- உச்ச நீதிமன்றத்தை நாடும் காங்கிரஸ்

5ld2b4oondtv.com : அலோக் வர்மா திரும்பவும் பணிக்கு வரவேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அலோக் வர்மாவுக்கு அளிக்கப்பட்ட கட்டாய விடுப்பு என்பதது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் அவரை பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியிருக்கிறார்.
 மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும், உயர் அதிகாரிகளை தேர்வு செய்யும் தேர்வுக்குவின் தலைவர் பொறுப்பிலும் மல்லிகார்ஜுன கார்கே இருந்து வருகிறார்.

விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக அமெரிக்க தூதரகம் : சிறிசேன ராஜபக்சே அதிர்ச்சி

இலங்கையின் புதிய பிரதமராக, ராஜபக்சே நேற்று பொறுப்பேற்றார். ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக, வரும் 16ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.
இதற்கிடையே, ரணில் விக்ரமசிங்கே பதவி பறிப்புக்கும், நாடாளுமன்ற முடக்கத்திற்கும் சபாநாயகர் ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல, பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவும், பெரும்பான்மை பலம் தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறி வருகிறார். இதன் காரணமாக இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இலங்கையில் நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தி பெரும் அளவில் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சேவுக்கு எதிராக இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டன பேரணி நடத்தினர்.

எனக்கு 10 கோடி! மகனுக்கு ரிசேர்வ் வங்கியில் வேலை ...... - சிவசக்தி ஆனந்தன்.. தமிழ் தேசிய கூட்டமைப்பு


Ajeevan Veer : எனக்கு 10 கோடி!
பொடியனுக்கு மத்திய வங்கியில் ஒரு வேலை ......
- சிவசக்தி ஆனந்தன்
தமிழ் எம்.பிக்கள் மகிந்தவுக்கு வாக்களிக்க எத்தனை கோடி கேட்டார்கள்- சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!(ஆடியோ ஆதாரம்).
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பீகாரில் இஸ்லாமிய முதியவர் உயிருடன் எரித்து கொலை! துர்க்கா பூஜை ..காவி காட்டுமிராண்டிகள் வெறியாட்டம்

bbnakkheeran.in- jeeva : 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது மதத்தின் பெயரால் கொடூர தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தற்போது பீகார் மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவர் கூட்டாக தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் சீதாமாரி பகுதியில்  கடந்த அக்டோபர் 20ஆம் தேதி துர்கா பூஜை ஊர்வலம் அதிக இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில்  செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அந்த பகுதியில் அனுமதி மறுக்கப்படவே இரண்டு பிரிவினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சய்னுல் அன்சாரி (80) தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு திருப்பிய நிலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.  எரித்து கொலை செய்யப்பட்டு இரண்டு தினங்களுக்கு பின்னரே அது அன்சாரி என்று தெரியவந்திருக்கிறது.

ஏமனின் பட்டினியை உலகுக்கு சொன்ன சிறுமி மரணம்... அமெரிக்க சவுதி கூட்டணி.. இரானிய ஹௌதிஸ் இயக்கத்தாலும் 10,000 உயிர்கள்

yemennakkheeran.in - santhoshkumar : ஏமனில் மனிதாபிமானம் அழிந்துவிட்டது என்பதை அடையாளப்படுத்த அமல் ஹுசைன் என்கிற 7 வயது சிறுமியின் புகைப்படம் கடந்த வாரம்  நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. தற்போது அந்த சிறுமி மரணம் அடைந்துள்ளார்.  சத்துணவு குறைப்பாட்டினால்தான் அவர் மரணமடைந்ததாக அச்சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். நியுயார்க் டைம்ஸில் வெளியான அந்த புகைப்படத்தை புளிட்சார் விருதை வென்ற புகைப்பட பத்திரிகையாளர் டைலர் ஹிக்ஸால் எடுக்கப்பட்டது.
அந்த புகைப்படத்தில், நெஞ்சு கூடு வெளியே தெரிந்து, தோல் மெளிதாக உள்ள நிலையில் ஏழு வயது சிறுமி படுக்கையில் படுத்திருப்பது போன்று இருக்கும். கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்தது.  மேலும் இந்த புகைப்படம் ஏமனில் நடந்த உள்நாட்டு போரினால் பல குழந்தைகள் சத்துணவு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளியே தெரிய வைத்தது.

சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கறுப்பு பண மோசடி வழக்கு கைவிடப்பட்டது

tamil.thehindu.com:  வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை மறைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது கருப்பு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்தில் ரூ. 5.37 கோடி மதிப்புள்ள சொத்துகள், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்துகளை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக கறுப்பு பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நவ.2- வரை மூவரும் நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

அமெரிக்க யோகா அரங்கில் துப்பாக்கிசூடு..! ஃப்ளோரிடா மாகாண HOT Yoga

ஃப்ளோரிடா மாகாண யோகா அரங்கில் மர்ம நபர் துப்பாக்கிசூடு..!ndtv.com :இந்த துப்பாக்கிசூட்டில் ஒரேயொரு நபர் மட்டும் தான் ஈடுபட்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது Tallahassee: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் தலைநகரமான தாலாஹாசியில் உள்ள யோகா அரங்கு ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட நபரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தாலாஹாசி போலீஸ் அதிகாரி மைக்கெல் டீலியோ, ‘எங்களுக்கு மாலை 5:47 மணி அளவில், யோகா ஸ்டூடியோ ஒன்றில் துப்பாக்கிசூடு நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு எங்கள் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். அப்போது, பலர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் தரையில் கிடந்தனர்.
உடனடியாக காயமடைந்த 5 பேரை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அதில் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டனர். சம்பவம் நடந்த போது, துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட மர்ம நபருக்கு எதிராக பலர் போராடியுள்ளது தெரிய வந்துள்ளது. பலர் மற்றவர்களையும் காக்க முற்பட்டுளனர்.

சர்கார் .. காப்பறேட்டுக்கள் .. பாக்கியராஜ் மீது மிரட்டல் ? சினிமாவில் காபரெட் கம்பனிகளின் சர்வாதிகாரம்?

bhagyaraj
வெப்துனியா: சர்க்கார் பட விவகாரத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் பாக்யராஜ் சில கார்ப்ரேட் நிறுவனங்களால் மிரட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்கார் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறினார்.
;இதனையடுத்து நீண்ட இழுபறிக்குப் பிறகு சர்கார் கதை திருட்டு விவகாரத்தை ஒப்புக்கொண்ட இயக்குனர் முருகதாஸ் வருண் ராஜேந்திரன் பெயரை படத்தில் போடவும் அவருக்கு சன்மானமாக 30 லட்சம் ரூபாயும் அளிப்பதாக ஒப்புக்கொண்டார்.

திருப்பூர் தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது

அகற்றப்பட்ட தீண்டாமை வேலி!மின்னம்பலம்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலகுமலை கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்று கூறி சாலையில் வேலி அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை அகற்றினர் அரசு அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகேயுள்ள அலகுமலை கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இப்பகுதியில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். கோயில் வழியே செல்லும் சாலையானது, அவ்வூரின் மற்ற பகுதிகளை அடைய உதவி வந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று அலகுமலை கோயில் சாலையின் குறுக்கே திடீரென்று முள்வேலி போடப்பட்டது. ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் தலைமையில், சிலர் இதனைச் செய்ததாகத் தகவல் வெளியானது.

ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!

ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!
மின்னம்பலம்: தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசைக் கண்டித்து கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.
அதிமுக என்ற கொள்ளையனிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுகவுக்கு உண்டு.

BBC :மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்போம்' - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் வெற்றிபெற வழிசெய்யும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லையெனவும், இந்த அதிகாரம் 19வது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஆகவே பிரதமரை நீக்குவதாக வெளிட்ட வர்தமானி அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக அறிவித்துவிட்டு, பெரும்பான்மையை அவர் நிரூபிப்பதற்கு வேண்டிய தேவையை தாமதிக்கவே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த காலநீட்டிப்பைப் பயன்படுத்தி, மந்திரி பதவிகளையும் பணத்தையும் லஞ்சமமாகக் கொடுத்து தனது பக்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுப்பது ஜனநாயக விரோத நடவடிக்கையென்றும் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இந்த சதிக்கு பலியானது கடுமையான கண்டனத்திற்கு உரியதென்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடுத்த ஆண்டு உலக இந்து மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு உலக இந்து மாநாடுமாலைமலர் :இலங்கையில் அடுத்த ஆண்டு மே மாதம் உலக இந்து மாநாடு நடைபெறும் என அந்நாட்டின் இந்து அறநிலையத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண அபிவிருத்தி துறை மற்றும் இந்து அறநிலையத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா இந்து சமயம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் தொடர்பாக அத்துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பழுதடைந்துள்ள இந்து கோவில்கள் மற்றும் அவற்றின் சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களை புனரமைப்பதற்கான பட்டியலை சமர்ப்பிக்குமாறு இந்த ஆலோசனை கூட்டத்தின்போது அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்

அயோத்தியில் 151 மீ பிரம்மாண்ட ராமர் சிலை: யோகி ஆதித்நாத்

அயோத்தியில்  151 மீ பிரம்மாண்ட ராமர் சிலை: யோகி ஆதித்நாத்
தினமலர் : லக்னோ: உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளன.
இது குறித்து உ.பி. தகவல் துறை கூடுதல் தலைமை செயலாளர் கூறுகையில் உ.பி. மாநிலம் அயோத்தியில் சராயு நதிக்கரையில் 151 மீ உயரத்தில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க முதல்வர் முடிவுசெய்துள்ளார். அதற்கான அறிவி்ப்பை வரும் 6-ம் தேதி வெளியிடுகிறார். இதற்கான திட்ட மதிப்பு குறித்து சுற்றுலா மற்றும கலாச்சாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கப்பட்டால் அது சுற்றுலாத்துறையை ஈர்க்கும் என்றார்.

சிவகங்கை , மதுரையில் கனமழை . தூத்துக்குடியில் மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை

 Heavy rains in Sivagangai and Madurai
நக்கீரன் :சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சூரக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் மதுரை அண்ணா நகர், மாட்டுத்தாவணி, கே.கே நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், அரசடி ஆகிய பகுதிகளில் மழை பெய்துவருகிறது. கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குலைச்சல் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4130 கன அடியிலிருந்து 5548 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.090 அடி. நீர் இருப்பு 62.383 டி.எம்.சியாக உள்ளது.
 கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இந்த எம்பியின் விலை 48 கோடி ரூபாய்: இலங்கை எம்.பி. வாக்குமூலம்! ஒரு தமிழ் தேசிய கூட்டணி எம்பியும் விலை போனார்

என் விலை 48 கோடி ரூபாய்: இலங்கை எம்.பி. வாக்குமூலம்!மின்னம்பலம்:  ஜனநாயகம் பலவீனமாகும்போது பண நாயகம் கொழுப்பெடுத்து ஆடுவதை உலகம் முழுதும் இப்போது பார்க்க முடிகிறது. சில வருடங்களுக்கு முன் கூவத்தூரில் நடந்தது, இப்போது கொழும்பிலும் நடக்கிறது.
தாங்கள் எத்தனை கோடி ரூபாய்களுக்கு பேரம் பேசப்படுகிறோம் என்பதை இலங்கை நாடாளுமன்ற வளாகத்திலேயே எம்.பி.க்கள் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவைப் பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. அப்போது முதல் இலங்கையில் அரசியல் குழப்பம் தீவிரமாக இருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே கடுமையான முயற்சிகளில் இருக்கிறார்.
நேற்று (நவம்பர் 2) நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்தித்த 119 எம்.பி.க்கள், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும், ராஜபக்சேவின் பிரதமர் நியமனம் ஏற்கத் தக்கது அல்ல என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஒப்படைத்தனர்.

பாலைவனத்தில் எப்படி கப்பல் வந்தது? ஒரு கடலேரி காய்ந்தது .. காப்பரெட் கைங்கரியம்

Image may contain: outdoor Sundar P : கார்த்திக் முத்தையா
நேற்று நேஷனல் ஜியாகரபிக் வைல்ட் சேனலில், அவலமிக்க ஓர் ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது.
முதலில் உஸ்பெகிஸ்தான் நாட்டைக் காட்டினார்கள்.
கடுமையான வறட்சியில் இருக்கும் ஒரு பெரும் பாலைவனம். வெண்மணல்திட்டுக்கள். சிறுவர்கள் அம்மணல் திட்டுகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
காமெரா அப்படியே கழுகு பறக்கும் உயரத்துக்குப் போகிறது. அடடா உஸ்பெகிஸ்தானின் சகாரா போல என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, சரேலென பாலைவனத்தில் இருந்த சில குவியலான பொருட்கள் மீது காமிராக் கோணம் குவிக்கப்பட்டு இறங்கியது.
அவையெல்லாம் ஓட்டை ஒடிசலான துருப்பிடித்துப் போயிருந்த பெரிய பெரிய படகுகள்.
பாலைவனத்தில் ஏது படகுகள் ?
ஆய்வாளர் அப்போதுதான் சொல்கிறார், இது மாபெரும் ஏரியாய் இருந்த இடம்.
என்ன? பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா என்கிறீர்களா ?
இல்லை.... வெறும் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர்கள் பரந்து, ஒரு கடல் போல் இருந்த ஏரி இது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க 8 நாடுகளுக்கு அமெரிக்க தடை விலக்கு.. இந்தியா ஜப்பான் இத்தாலி . தென் கொரியா...

Mike Pompeo, the US secretary of state, did not say which eight countries would be exempted from the waivers but they are believed to be US allies like India, Japan, Italy, and South Korea.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்குமாலைமலர் :ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறியது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
 இதற்கிடையே, ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் விளக்கியது.
இந்நிலையில், ஈரான் நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கழிவறையில் குழந்தையை பெற்று வீசி சென்ற பெண்ணிடமே மீண்டும் குழந்தையை ஒப்படைத்த அலட்சிய போலீஸ்

tamilthehindu :சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்வழக்கறிஞர் ஒருவர் கழிவறையில் குழந்தையைப்பெற்று அதை பக்கெட்டில் போட்டுவிட்டு தப்பினார். அவரை கண்டுபிடித்த போலீஸார் மீண்டும் அந்தப்பெண்ணிடமே குழந்தையை ஒப்படைத்த அலட்சிய நிகழ்வு நடந்துள்ளது.
சென்னை சூளைமேட்டில் சௌராஷ்ட்ரா நகர் 7வது தெருவில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. நேற்றிரவு இந்த தனியார் மருத்துவமனைக்கு ஒரு இளம்பெண் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் வந்தனர்.

வெள்ளி, 2 நவம்பர், 2018

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டு.. ஏனிந்த கொலைவெறி? தாய்மொழி மீது உள்ள பற்று திராவிடம் தந்த சொத்து

Ravishankar Ayyakkannu : ஏன் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டு பசங்க எந்த
ஏன் என்றால், ஒரு புதிய சொல் விடாமல் அனைத்தையும் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற கொலை வெறியுடன் திரியும் ஒரே இந்திய மொழிச் சமூகம் தமிழ்ச் சமூகம் தான். திராவிடத்தைக் காதலித்த நமது தமிழாசிரியர்கள் எப்படியோ இந்த உணர்வை நமக்குள் கடத்தி விட்டிருக்கிறார்கள்!
உறுத்தலும் இல்லாமல் மொழிபெயர்ப்பதற்குப் (translate) பதில் ஒலிபெயர்க்கிறார்கள் (transliterate) ?
பெரும்பாலான மற்ற இந்திய மொழிகளில் எல்லாம்
Bus, bus தான்.
Telephone, telephone தான்
Internet, internet தான்
Mobile phone, mobile phone தான்
Blog, blog தான்
Facebook, facebook தான்.
சந்தேகம் இருந்தால் Google Translateல் சில சொற்களை இட்டு இந்தி, குஜராத்தி, வங்காள மொழிகளில் மாற்றிப் பாருங்கள். நாம் பல பத்தாண்டுகளாக எந்த உறுத்தலும் இல்லாமல் புழங்கிக் கொண்டிருக்கும் பல எளிய தமிழ்ச் சொற்களைக் கூட அவர்கள் அப்படியே ஆங்கிலத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

ரணிலுக்கு 118 எம்பிக்கள் இணைந்து ஆதரவு .. அறுதி பெரும்பான்மை உறுதி

Resolution Of No-Confidence Against MR Appointment Backed By 118 MPs Handed Over To Secretary-General Of Parliament

Mano Ganeshan : பிரதமராக இருந்த ரணிலை நீக்கியது மகிந்தவை பிரதமராக்கியது சட்டத்துக்கு முரணானது.
இன்று கூடிய 118நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இதை
உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே பாராளுமன்ற வளாகத்தில் இருந்து; 118 எம்பிகள் ( ஐதேமு, ததேகூ, ஜேவிபி) நேரடியாக கூடி பாராளுமன்றத்தை கூட்டும்படி சபாநாயகரை கோரினோம். (இன்னமும் 11 எம்பிகள் வர இருக்கிறார்கள்). 225 இல் இது பெரும்பான்மை இல்லையா? "சட்ட விரோத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்" என்ற கோஷம் வானை பிளந்தது.
tweet :පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරු 118 කගේ බහුතරයක් සුදානමින් සිටී. එමෙන්ම අත්‍යවශ්‍ය අවස්ථාවක ජනතා විමුක්ති පෙරමුණේ මන්ත්‍රීවරු 6 දෙනාද මේ ව්‍යවස්ථාවිරෝධී කුමන්ත්‍රණය පරාජය කිරීමට සහය දෙන බව එකඟවී ඇත.
பாரளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி 118 பா.ஊக்கள் தயார். தேவைப்பட்டால் JVP இந்த சதியை முறியடிக்க தயார் என ஒப்புக் கொண்டுள்ளனர்.

ரபேல் ஊழலில் புதிய ஆதாரம் .. ஊடகங்கள் மூடி மறைக்கும்... அதிர்ச்சி செய்திகள் .

Swathi K : ஏழைத்தாயின் மகன் செய்யும் கேடித்தனம் பாரீர்!!
ரபேல் ஊழலில் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.. எந்த ஊடகமும் இதுபற்றி வாய திறக்கவில்லை.. இதுவரை வருவாய் எதுவும் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வரும் அனில் அம்பானியின் RADL (Reliance Airport Developers Limited) கம்பெனி பங்குகளை ரபேல் நிறுவனம் 284 கோடி ரூபாய்களை கொடுத்து வாங்கி, அனில் அம்பானிக்கு லாபம் ஈட்டி தந்துள்ளது. Dassault-RADL எந்த தொடர்பும் இல்லை.. ஆனாலும் 284 கோடிகள் சம்பந்தம் இல்லாமல் அந்த கம்பெனிக்கு கொடுத்துள்ளது.. கொஞ்சம் கொஞ்சமாக ரபேல் ஊழல் வெளியே வர ஆரம்பிக்கிறது..
ரபேல் பற்றி நிறைய ஆய்வு கட்டுரை எழுதுயாச்சு இதற்க்கு முன்.. மிக எளிமையாக ரபேல் விளக்க வேண்டும் என்றால்,
1. அனில் அம்பானி கிட்டத்தட்ட லட்சம் கோடிகள் வரை கடன்கள் வாங்கி நிறைய தொழில் தொடங்குகிறார்..
2. எல்லா தொழிலிலும் கடுமையான நஷ்டம்..
3. கிட்டத்தட்ட 80,000 கோடிகள் கடன் பாக்கி..
4. அவரின் நண்பர் மோடியை அணுகுகிறார் உதவி செய்யச்சொல்லி..
5. 40,000 கோடிகள் வரை கடன் தள்ளுபடி செய்தாகியாச்சு.. இன்னும் கடன் பிரச்சனை தீரவில்லை..
6. Reliance Defence னு ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறார் அம்பானி மோடியின் திட்டப்படி..

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை துரத்தி வெட்டி கொன்ற இளைஞன்

வெப்துனியா: காதலித்துவிட்டு குடும்ப சூழ்நிலையால் திருமணம் செய்ய மருத்த காதலியை, காதலன் நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் உள்ள திருவடைமருதூரில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் 24 வயதான வசந்த பிரியா. இவரும் நந்தகுமார் என்பரும் காதலித்து வந்துள்ளதகா தெரிகிறதுஆனால், இவர்களது காதலுக்கு வசந்த பிரியாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் வேறு வழியின்றி வசந்த பிரியா தனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.அதன்படி கடந்த 5 நாட்களுக்கு முன்னர்தான் வசந்தபிரியாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த நந்தகுமார், வசந்தபிரியாவை சந்திக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார். இதனால் மனமிறங்கிய வசந்தபிரியா பள்ளி முடிந்ததும் நந்தகுமாருடன் பைக்கில் சென்றுள்ளார்.

தீபாவளி வெடிகள் வெடிப்பதற்கு நேர அட்டவணை .. அரசு அறிவிப்பு

வெடிக்கணும், சத்தமில்லாம வெடிக்கணும்!தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீபாவளியின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். “இரவில் பட்டாசு வெடிப்பது வட மாநிலத்தவர்களின் வழக்கம். தென் மாநிலங்களில் காலையிலேயே பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடுதலாக இரண்டு மணி நேரம் அவகாசம் தர வேண்டும்” என்று தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

சர்கார் திருட்டு கதை.. பாக்கியராஜ் பதவி விலைகலை திரை எழுத்தாளர்கள் சங்கம் ஏற்க மறுப்பு

பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மறுப்பு!மின்னம்பலம்: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாக்யராஜ் அளித்த கடிதத்தை சங்கம் ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ் குமார் பாக்யராஜுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சர்கார் படத்தின் கதை தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்த பின்னரும் அதன் தாக்கம் இன்னும் தமிழ்த் திரையுலகில் குறைந்தபாடில்லை. கதை திருட்டு தொடர்பாக தமிழ்த் திரையுலகில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள போதும் சர்கார் சர்ச்சையில் உடனடியாக தீர்வு எட்டப்பட்டதற்குச் சங்கத்தின் நிலைப்பாடு முக்கியமாகப் பேசப்பட்டது. இருப்பினும் அதே சர்ச்சை அவரது பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு அவரைத் தள்ளியுள்ளது. ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்ட பாக்யராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது அறிக்கையையே விளக்கமாக அளித்தார்.

5 வயது சிறுமி பாலியல் கொடுமை . 17 மணிநேரமாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனை .. பொதுமக்கள் சாலை மறியல்

tamilthehindu :பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு 17 மணிநேரமாகியும் முதலுதவி சிகிச்சை அளிக்காத திருப்பூர் மருத்துவமனையைக் கண்டித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் தம்பதியருக்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். தீபாவளி பண்டிகைக்கான உற்பத்தியை பின்னலாடை நிறுவனங்கள் தயார் செய்ய வேண்டியிருப்பதால், இரவு பகலாக பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தம்பதியரின் கணவர் கடந்த அக். 31-ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்போது மனைவி இரவு நேரத்தில் பணியாற்ற பின்னலாடை நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் அவர் வீடு திரும்புவார் என்பதால் வீட்டின் கதவைப் பூட்டாமல் இருந்துள்ளார்.

நியுற்றினோ திட்டத்துக்கு இடைக்கால தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்மாலைமலர் :நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தது.
Neutrino #NationalGreenTribunal புதுடெல்லி: நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் அணுத்துகள்களாகும். இந்த அணுத்துகள்களை ஆய்வு செய்தால் சூரியன் மற்றும் நியூட்ரினோதுகள்களின் ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் மலைப் பகுதியில் மிகப்பெரிய ஆய்வு கூடம் அமைத்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவும் இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நிர்மலாதேவி வழக்கு தீடிர் திருப்பம் சாட்சியங்களை ரகசியமாக விசாரிக்க நீதிமன்றம் முடிவு ,, விடியோ


ஸ்பெல்கோ : நிர்மலா தேவி வழக்கில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி அளித்த வாக்குமூலமே குற்றச்சாட்டுக்கு காரணம்.
உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்காக தான் மாணவிகளை அழைத்ததாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் முன்னதாக ஆளுனரை அவரின் மாளிகையை தொடர்ப்புபடுத்தி நிரமலா தேவி பேசிய விவகாரம் அனைவரும் அறிந்த்தே.. இது சம்பந்தமாக நக்கீரன் ஆளுனர் மாளிகை தொடர்வு செய்திகள் காரணமாக அதன் ஆசிரியர் கோபாலை அதிமுக எடப்பாடி அரசு செய்த கைதை நீதிமன்றம் ஏற்காமல் அவரை உடனடியாக விடுவித்தது என்பது அனைவரும் அறிந்ததே..

சிலை செலவில் வேறு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?



சவுக்கு.காம் :ஒற்றுமைச் சிலை ரூ.2989 கோடி செலவில்
நிறுவப்பட்டிருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தில் இரண்டு புதிய இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை (ஐஐடி) ஏற்படுத்தியிருக்கலாம்,
ஐந்து இந்திய நிர்வாகவியல் கல்வி வளாகங்களை (ஐஐஎம்) உருவாக்கியிருக்கலாம்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து (ISRO) ஆறு முறை செவ்வாய்க் கோளுக்கு விண்கலத்தை அனுப்பியிருக்கலாம்.
பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தில் இணைத்துக்கொள்வதற்காக என குஜராத் மாநில அரசு பல்வேறு முன்மொழிவுகளை மத்திய அரசுக்கு அளித்திருக்கிறது. அதற்கு ஒதுக்கக்கூடிய நிதியில் இரண்டு மடங்குக்கும் அதிகமான செலவில் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
அந்தச் செலவில் 40,192 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தியிருக்க முடியும், 162 சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பழுதுபார்த்தல், புதுப்பித்தல், மறுபடி இயங்கவைத்தல் ஆகியவற்றை மேற்கொண்டிருக்க முடியும். 425 புதிய தடுப்பணைகளைக் கட்டியிருக்க முடியும்.

நியூட்ரினோ வழக்கு: இன்று தீர்ப்பு!

மின்னம்பலம்:
நியூட்ரினோ வழக்கு: இன்று தீர்ப்பு!
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு, தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி மறுத்த நிலையில், டாடா நிறுவனம் அளித்த மனுவை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதனை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று, நீதிபதி ராகுவேந்திர எஸ் ரத்தோர் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

ரஃபேல் ஒப்பந்தமும் அவதூறு வழக்குகளும்!

மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத்  தீர்மானம் மீதான விவாதம் கடந்த ஜூலை 20ஆம் தேதி நடைபெற்றது. இதில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடி தேசத்திடம் பொய் கூறுகிறார். விமான கொள்முதல் மதிப்பை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது; பிரான்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நிர்மலா கூறுகிறார். பிரான்ஸ் பிரதமருடன் நாம் பேசியபோது அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

வைகுண்ட ராஜன் (விவி மினரல்ஸ்-நியூஸ் 7 ) நிதி கொடுத்ததாரா? தினகரன் மறுப்பு!


மின்னம்பலம்: விவி மினரல்ஸ் நிறுவனம் தனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாகப்
பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ள தினகரன், “பொய் தகவலைப் பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவி மினரல்ஸ் நிதி கொடுத்ததா? தினகரன் மறுப்பு!தமிழகத்தின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான வைகுண்டராஜனுக்குச் சொந்தமாக நெல்லை மாவட்டம் திசையன்விளையைத் தலைமையிடமாக கொண்டு விவி மினரல்ஸ் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் திசையன்விளை, சென்னையில் எழும்பூர், திருவான்மியூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள விவி மினரல்ஸுக்குச் சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஆறு நாட்களாக வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்திவந்தனர்.
சோதனை நேற்றுடன் (நவம்பர் 1) நிறைவடைந்த நிலையில் விவி மினரல்ஸ் நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், சோதனையின்போது கணக்கில் வராத எட்டு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுச் வேலை திட்டம் அமைத்து பேசித் தீர்ப்போம்,, ராகுல் - சந்திரபாபு நாய்டு .

மின்னம்பலம் :
தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த தெலுங்கு தேசம்!
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் ஓரணியாகவும், காங்கிரஸோடு நெருடல் கொண்ட வேறு சில மாநிலக் கட்சிகள் ஓரணியாகவும் இருக்கக்கூடும் என்பதே சில நாட்களுக்கு முந்தைய இந்திய அரசியலின் நிலைமை. காங்கிரஸை மாயாவதி தாக்குவதும், கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் அல்லாத அணி என்றும் சொல்லிவருவதுமான நிலைமையில் ‘மகா கட்பந்தன் என்பதெல்லாம் நடக்காத ஒன்று’ என்று பாஜக உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால், நேற்று (நவம்பர் 1) இந்த நிலையை மாற்றுவதற்கான தொடக்கப் புள்ளியை இட்டு, தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது தெலுங்கு தேசம். ஆம்... நேற்று டெல்லி 10, ஜன்பத் சாலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசத் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் கூட்டாக அளித்த பேட்டி பாஜகவின் வயிற்றில் ‘ஆந்திரப் புளியை’க் கரைத்திருக்கிறது.

கும்பகோணம் ஆசிரியை குத்தி கொலை .. திருமணம் நிச்சயமான நிலையில் ..

murder
murder
murder nakkheeran.in -selvakumar : கும்பகோணத்தில் திருமணம் நிச்சயமான தனியார் பள்ளி ஆசிரியை மர்மமான முறையில் நடுரோட்டில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (24). கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்றுமாலை கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் மர்மமான முறையில் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
தகவல் அறிந்த  போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து  போலீசாரிடம் விசாரித்தோம் , " வசந்தபிரியாவுக்கும் வலங்கைமானைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28 ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில்  சம்மந்தமே இல்லாமல் காவிரி ஆற்றின் கரையில் கத்தியால் கழுத்து அறுத்துக்கிடந்தார்.

மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பு குற்றச்சாட்டு

.thanthitv.com : தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என பேராசிரியர் முருகன் வேண்டுகோள். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்திற்கு செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், மரண பயத்தை உண்டாக்கி நிர்மலா தேவியிடம் இருந்து வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

நிர்மலாதேவி - ஆளுநர் விவகாரத்தில் .. முருகன் பலிக்கடா? அந்த 50 பேர் பட்டியலை - முருகன் பரபரப்பு பேச்சு

நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 50 பேர் பட்டியலை
வெளியிடுவேன் - முருகன் பரபரப்பு பேச்சு!
பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் குறித்து அந்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக வெளிவந்த தகவலையடுத்து, அதை முருகன் மறுத்துள்ளார். நிர்மலா தேவியை மிரட்டி சிபிசிஐடி போலீஸார் பொய்யான வாக்குமூலம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் உதவிப் பேராசிரியர் முருகன். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 50 பேருக்கும் மேலான பட்டியலை ஆதாரத்தோடு வெளியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார் முருகன். .. தேவராஜ் .

வியாழன், 1 நவம்பர், 2018

சீனா-பாகிஸ்தான் பேருந்து சேவை.. இந்திய எதிர்ப்பை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது



மாலைமலர் : சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை வழியாக மேற்கொள்ளப்படும் பேருந்து சேவைக்கு இந்தியா தெரிவித்த எதிர்ப்பை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பேருந்து சேவை நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை வழியாக இந்த பேருந்து இயக்கப்பட உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை மீறும் செயல் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.

BBC முசிறி பட்டினம்: 2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் கண்டுபிடிப்பு

முசிறி பட்டினம்: 2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் கண்டுபிடிப்பு
_104125177_feaa5fa5-55a6-4520-a6e3-ae2c73618fc1  முசிறி பட்டினம்: 2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் கண்டுபிடிப்பு 104125177 feaa5fa5 55a6 4520 a6e3 ae2c73618fc1கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது. மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்கமுடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிவந்துள்ளனர். சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பட்டினம் பகுதியின் வரலாறு, அங்கு தொல்லியல் ஆய்வில் கிடைத்த பல்வேறு பொருட்களின் விவரங்களை ‘பாமா'(PAMA) என்ற தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் செரியன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா தெலுங்கான .. காங்கிரஸ் கூட்டணி ஓரளவு உறுதியாகி விட்டது

Swathi K : ஆந்திரா, தெலுங்கானாவில் சந்திரபாபு நாய்டுவின் தெலுங்கு தேசம்
கட்சியுடன் கூட்டணி.. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாவுடன் கூட்டணி.. தமிழ்நாட்டில் தி.மு.க'வுடன் கூட்டணி.. இந்த மூன்றும் தெற்கில் அவசியம்.. கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.. சரியான வழியில் செல்கிறது காங்கிரஸ்..
சென்ற தேர்தலில் பிஜேபி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 130 தொகுதிகளில் 37 இடங்களில் (பிஜேபி+கூட்டணி) தான் வெற்றி பெற்றது.. 2014 தான் மோடியின் புகழ் உச்சத்தில்.. காங்கிரஸ் புகழ் மிகமோசமான வீழ்ச்சியில் இருந்த நேரம்.. அப்போது கூட 37/130 தான் பிஜேபியால் பல கட்சிகள் கூட்டணியுடன் வாங்க முடிந்தது.. தென் மாநிலங்களில் ராமர் கோவில், பாகிஸ்தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரிக் எல்லாம் எடுபடப்போவதில்லை.. இந்த முறை 20/130 வாங்குவதே தென் மாநிலங்களில் கடினம். விரிவான பதிவு அடுத்த வாரத்தில்..
நமக்கு பிடித்தோ.. பிடிக்காமலோ நம்மை மத்தியில் காங்கிரஸ் or பிஜேபி தான் ஆளப்போகிறது அடுத்த 10-15 வருடங்களுக்கு... நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை விட.. நம்மை யார் ஆட்சி செய்ய கூடாது என்பது மிக முக்கியம்..
ஏப்ரல் 26ல் நான் போட்ட பதிவின் மீள் பதிவு.. படித்து பார்க்கவும்..
April 26, 2018:
கொஞ்ச நாளாவே எல்லோரும் காங்கிரஸ், பிஜேபி இல்லாத மூன்றாவது அணியை பற்றி கேட்கிறார்கள்.. அப்படி நடக்குமா? வாய்ப்பிருக்கிறதா?
உண்மை நிலை என்ன!!. காங்கிரஸ், பிஜேபி இல்லாத மூன்றாம் அணி அமைய வாய்ப்பே கிடையாது இன்னும் 10-15 வருடங்களுக்கு.. காரணங்கள் இவை தான்..

புதுகோட்டை கஸ்தூரி கொலை இல்லையாம் . உடலுறவின் போது மாரடைப்பால் உயிரிழந்தாரா? –சிக்கிய காதலன் வாக்குமூலம்

வெப்துனியா:  புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு உள்ளார்
அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலை அடையாளம் கண்ட போலிஸார் அந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்  19  வயதான கஸ்தூரி  . இவர் தனது பக்கத்து ஊரண ஆலங்குடியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத 29-ந்தேதி அன்று காணாமல் போனார். இது குறித்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை ஏற்று அவரைத் தேடி வந்த போலிஸார் நேற்று அவரது உடலை புதுக்கோட்டையில் உள்ள மல்லிப்பட்டினம் ஆற்றில் இருந்து கண்டு பிடித்தனர். கஸ்தூரியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ம் தேதி கூடுகிறது..

tamil.indianexpress.com : இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ம் தேதி கூடுகிறது. இலங்கை அரசியல் பெரும் பெரும் சவால்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. கடந்த வாரம், இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவை இலங்கையின் பிரதமராக அறிவித்தார் மைத்ரிபால சிறிசேனா. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்து வந்தன
 ரணில் விக்ரமசிங்கே நான் தான் பிரதமர் என்று கூறி, இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிக் கொண்டார். ஆனால் அவரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக அறிவித்தார் சிறிசேனா. நவம்பர் 16ம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ல் திறக்கப்படுகிறது ஆனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் சபா நாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் தொடர்ந்து, சிறிசேனாவிடம் நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தி வந்தனர்.
 கரு ஜெயசூர்யா கடிதம் மூலமாகவும் நேரிலும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயத்தினை சிறிசேனாவிற்கு நேற்று (31/10/2018) எடுத்துக் கூறினார்.

வேகம் குறைந்ததால் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது- இந்தோனேசியா விமான விபத்து புதிய தகவல்கள்

வேகம் குறைந்ததால் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது- புதிய தகவல்கள்மாலைமலர் : இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் வேகம் குறைந்ததால் கடலில் விழுந்து நொறுங்கியதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜகார்த்தா:< இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள்.
இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
விமானம் கடலில் விழுவதற்கு முன் பதிவான செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என்ஜின் இயக்கம் நின்று மின் விளக்கு, ஏ.சி., காற்றழுத்த கருவி போன்றவைகள் செயல்படாததால் பயணிகள் அதிர்ச்சியுடன் கதறினார்கள். இனி பிழைக்க வழியில்லை என்று உயிர் போகும் கடைசி நிமிடத்தில் கடவுளை உருக்கமாக வேண்டி அழும் கண்ணீர் காட்சிகள் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

'சர்கார்' கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் நீக்கம்! : உயர் நீதிமன்றம்

``விஜய் ரசிகர்களை நினைச்சா பயமா இருக்கு!’’-`சர்கார்' குறித்து சாந்தனு பாக்யராஜ்
'சர்கார்' பட டிக்கெட்டுகள் ரூ.500, 1000 என இணையதளத்தில் விற்கப்படுவதாக
வந்த புகாரை அடுத்து அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 விகடன் :`` `சர்கார்' படத்தோட விவகாரத்தில் நிறைய பேர் என்னையும், அப்பாவையும் ரொம்பத் திட்டுனாங்க. உண்மை என்னனு தெரிஞ்சிக்காமப் பேசிட்டாங்க. ஆனா, இன்னைக்கு உண்மை என்னனு தெரிஞ்சிக்கிட்டு அப்பாவைப் பாராட்டும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. முக்கியமா அப்பா கடைசி வரைக்கும் நடுநிலைமையா நின்னார்கிற விஷயம் ரொம்பப் பெருமையா இருக்கு...'' விஜய்யின் `சர்கார்’ பட கதை சம்பந்தமான பிரச்னையைத் தனது அப்பா சரியாக முடித்திருக்கிறார் என்கிற மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் சாந்தனு பாக்யராஜ்.