சனி, 12 ஏப்ரல், 2014

வடிவேல் :மொழி சண்டையை இழுத்து விட்டு சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்


நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படத்தை திரையிட அனுமதிக் கக்கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். தங்களுக்கு திரையிட்டுக்காட்டி, தங்கள் அனுமதி வழங்கிய பிறகே படத்தை திரையிட வேண்டும் என்றும், அதுவரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத் துள்ளனர். முன்னதாக, வடிவேலு வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும், வடிவேலு மீது தாக்குதல் நடத்தப்படும் என்று சில அமைப்புகள் மிரட்டியதால், இந்த பிரச்சினையில், வடிவேலுவுக்கு ஆதரவாக ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,   அறிக்கை விடுத்தார்.  அவரை கண்டித்து தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.

ரஜினியை சந்திக்கிறார் மோடி ! ரஜனி , ஏராளமான பொய்கள் ? பெரும் காப்பரெட் மோசடியாக பரிணமிக்கிறார் !


நாளை சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாக பாஜக பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. திரைத்துறையைத் தாண்டி ரஜினிகாந்த் உன்னதமான மனிதர்.? அவர் ஒரு தேசியவாதி. நாட்டு நலனில் மிகவும் அக்கறையுள்ளஅவர் சரியான நேரத்தில் தனது கருத்தைத் தெரிவிப்பார்" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாளை ரஜினிகாந்தை - நரேந்திர மோடி சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது?

பொய்களை திரும்ப திரும்ப சொன்னால் அவை உண்மையாகிவிடும் என்பது சிலரின் நம்பிக்கை. குறிப்பாக அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் இந்த டெக்னிக்கை அடிக்கடி உபயோகப்படுத்துவார்கள் .
தமிழ் சினிமா உலக வரலாற்றில் எத்தனையோ அபத்தங்கள் நிகழ்துள்ளன. வெறும் பொய்களாலேயே கட்டி எழுப்பபட்ட மாளிகைகளும் பல உண்டு,
வசூல் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக நடிகர் ரஜனிகாந்த் எதோ ஒரு அற்புதமான நடிகன் ஒரு வரலாற்று பொக்கிஷம் மகா மகா ஆத்மீக பேர்வழி என்றெல்லாம் கொஞ்சம் கூட உண்மையே இல்லாத பொய்களை   மீடியாக்கள் வெட்கம் இல்லாமல் பரப்பி வருகின்றனர், இதர சினிமா பிரபலங்களும் தங்கள் வருமானம் என்றே ஒற்றை காரணத்திற்காக வெட்கமே இல்லாமல் ராஜனிகாந்தை அடுத்த மகாத்மா லெவலுக்கு தலையில் தூக்கி வைத்து பொய் ஜால்ரா வீசுகின்றனர்.

மலேசிய விமானம் மாயமான போது துணை விமானி செல்போனில் அவசர அழைப்பு?

மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னாள் அதன் துனை  விமானி தனது செல்போனில் அழைப்பு விடுத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் பீஜீங் சென்ற விமானம் கடந்த மாதம் 8-ந்தேதி அதிகாலையில் மாயமானது. இந்த விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்கள் மற்றும், கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது தவ்ஹீத் ஜமாத்!

சென்னை: அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபுதீன் தகவல் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக-வை அதிமுக விமர்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஏப்ரல் 14ந் தேதி அறிவிக்கப்படும் என்று ஜெய்னுலாபுதீன் தெரிவித்தார். கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த செவ்வாய்கிழமை விருதுநகர் தனியார் அரங்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஊழியர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி ! உலகப் புத்தகத் திருநாள் ! today


சென்னை, ஏப்.11- உலகப் புத்தகத் திருநாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரி டையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா-வுடன் இணைந்து, சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக் கண் காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், உணவுத் திருவிழா, கலை மற்றும் பறையிசை, மாணவர்கள் பங்கேற்கும் நடைப்பயணம் ஆகியவை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து இன்று (11.04.2014) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களிடையே சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் புகழேந்தி, எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண்ணன், பெரிகாம் பப்ளிக்கேஷன்ஸ் க.ஜெயகிருஷ்ணன், விழிகள் பதிப்பக தி.வேணுகோபால், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வீ.அன்புராஜ் ஆகியோர் கூறியதாவது:-
உலகப் புத்தக நாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா-வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்னும் பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா: தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை ??? யாரோ சதி பண்றாங்க ? இதுதாண்டா ஜெயலலிதா


தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இல்லை என்றும், மின்சார தட்டுப் பாடு திட்டமிட்ட சதியால் ஏற்படுத்தப் படுகிறது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
திருநெல்வேலி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, திருநெல்வேலி பாராளு மன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து நேற்று பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விளக்கம்
இன்று தமிழகமெங்கும் மின்சார நிலைமை பற்றிய பேச்சு நிலவுகிறது. திடீரென்று மின் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் பேசுகின்றனர். இதையே ஒரு குறையாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இதைப் பற்றி சில விளக்கங்களை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
இதற்கு முன்பு 2 முறை நான் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கிறேன். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் நான் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறேன். எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின் விநியோகம் சீராக இருந்தது.

செஞ்சி ராமச்சந்திரன் : திமுக 'ஒன் மேன் ஆர்மி' ஆகிவிட்டது

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக-வில் இணைகிறார்.
இதுகுறித்து செஞ்சி ராமச்சந்திரன் ’தி இந்து’விடம் கூறியதாவது: அதிமுக தரப்பிலிருந்து என்னோடு பேச்சு வார்த்தை நடத்தியது உண்மை. திமுக-வில் குடும்ப ஆதிக்கமும் கொள்கை முரண்பாடுகளும் அதி கரித்துவிட்டதாகச் சொல்லித்தான் வைகோ-வுடன் சென்றோம். ஆனால், அங்கேயும் முடிவுகளை திணிக்கும் தனி நபர் ஆதிக்கம் அதிகரித்தது. அதனால்தான் மீண்டும் திமுக-வில் இணைந்தோம்.
திமுக-வில் இப்போது குடும்ப ஆதிக்கத்துடன் பண ஆதிக்கமும் அதிகரித்துவிட்டது. நான் திமுக-வில் நீடிக்க முடியாத அளவுக்கு அங்குள்ள சில தனிநபர்கள் எனக்கு நெருக்கடி தருகின்றனர். இம்முறை திமுக-வில் வேட்பாளர் தேர்வு முறையே தவறாக நடந்திருக்கிறது. ஒருமுறை தப்புச் செய்யலாம் ஆனால், திமுக-வில் உள்ள சிலர் தப்பு செய்வதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த முறை எனக்கு சீட் கொடுக்க கனிமொழி சிபாரிசு செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆனால், எனக்கு சீட் கொடுக்கச் சொல்லி கனிமொழி சிபாரிசு செய்ததே தவறு என்கிறேன்.
நான் யார் என்று கட்சித் தலை மைக்கு தெரியாதா? 

Y.G.மகேந்திரா: M.S.விஸ்வநாதனைத் தவிர வேறு யாரையும் இசையமைப்பாளராக கருதவில்லை:


"உலக சமாதானத்துக்காக இசையமைத்த 229 பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது. அதற்கான சான்றிதழை பொங்கும் இசைக் குழுவின் நிறுவனர் எம்.எஸ்.மார்ட்டினிடம் வழங்குகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். உடன் (இடமிருந்து) சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைச் செயலர் தனவேல், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா." உலக சமாதானத்துக்காக இசையமைத்த 229 பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது. அதற்கான சான்றிதழை பொங்கும் இசைக் குழுவின் நிறுவனர் எம்.எஸ்.மார்ட்டினிடம் வழங்குகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். உடன் (இடமிருந்து) சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைச் செயலர் தனவேல், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா. எம்.எஸ்.விஸ்வநாதனைத் தவிர வேறு யாரையும் என்னால் இசையமைப்பாளராகக் கருத முடியவில்லை என நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்தார்.

BJP : தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் ! ம்ம் வேண்டாங்க அழுதுருவேனுங்க


தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்' என்று மோடி திருமண விவகாரத்தில், காங்கிரஸுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது மனைவியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தரப்பில் முதன்முதலாக பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மனைவியின் பெயரை மறைத்த மோடி, நாட்டிலுள்ள பெண்களின் பாதுகாவலராக எப்படி இருக்க முடியும? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  எத்தினி பொய்யை சொல்லு ஒரு பொசிஷனுக்கு வர எவ்வளவு கஸ்ரம் ? இப்பதான் என்னையும் ஒரு ரவுடின்னு ஒத்துகிராங்க  அல்லாத்தையும் டமால் ஆக்கிடாதீக ? 

சொந்த தொகுதியிலேயே தம்பிதுரையை ஓட ஓட விரட்டிய மக்கள் ! அமைச்சருக்கும் அர்ச்சனை !

நீ போன முறை தி.மு.க வுக்கு ஓட்டு போட்டியே அப்ப கருணாநிதிகிட்ட தண்ணி கேட்டு வாங்க வேண்டியது தானே என்று அமைச்சர் பதில் சொல்ல,  சுற்றி இருந்த மக்கள் மேலும் சுற்றி வளைக்க அங்கிருந்து தப்பினார்கள் அமைச்சர் விஜயபாஸ்கரும், வேட்பாளர் தம்பிதுரையும்.சொந்த தொகுதியிலேயே அமைச்சரை விரட்டியடித்த பொதுமக்கள்( படங்கள்)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் பாராளு மன்ற தொகுதிக்குள் வருகிறது. கடந்த முறை நின்று வெற்றி பெற்று டெல்லிக்கு சென்ற அ.தி.மு.க தம்பிதுரை தான் இந்த முறையும் இலை சின்னத்தில் வேட்பாளராக போட்டிக்கு நிற்கிறார். இந்த விராலிமலை சட்டமன்ற தொகுதி சுகாதாரதுறை அமைச்சரும் அ.தி.மு.க புதுக்கோட்டை மா.செ வுமான டாக்டர் விஜயபாஸ்கர் நின்று ஜெயித்த சொந்த தொகுதி. இந்த தொகுதிக்குள் தான் வேட்பாளர் தம்பிதுரையும் அமைச்சர் விஜயபாஸ்கரும் நுழைய விடாமல் விரட்டுகிறார்கள் பொதுமக்கள்.

தமிழகம் எங்கும் குடிநீர் பஞ்சம்!

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'அய்யோ...திரும்பவும் பஞ்சம் வரப்போகுது' என, மக்கள் புலம்பிவந்த காலம் உண்டு. உண்மையில் திமுக ஆட்சியில் தான் மழை பொய்க்காமல் பெய்திருக்கிறது . ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் இப்போது, அ.தி.மு.க.,விற்கும் அந்த அடையாளம் ஒட்டப்படும் நிலை உருவாகி உள்ளது.தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், முதல்வராக பக்தவத்சலம் இருந்த போது, 1964 - 65 காலகட்டத்தில் ஏற்பட்ட, தண்ணீர் பஞ்சத்தை, யாரும் மறந்துவிட முடியாது. அப்போது, விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, மக்கள் எலிக்கறி சாப்பிடும் அளவிற்கு பஞ்சம் தலை விரித்தாடியது.  Jeya :கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை விட என் ஆட்சியில் அதிக அளவில் தான் மழை பெய்கிறது. இருந்தாலும் ஏன் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது தெரியுமா ? யாரோ வேண்டுமென்றே சதி செய்து குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள், அல்லது அடைத்து விடுகிறார்கள். அதனால் தான் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. அவர்கள் யார் என்று கண்டுபிடித்து, அவர்களை கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்குவேன் என்பார்.

Jeya: மின் வெட்டுக்கு சதித் திட்டமே காரணம் ! நடிகைகளிலும் எத்தனையோ நாணயமான தரமிக்க நடிகைகள் உண்டு. இது ருசி கண்ட பூனை.

சென்னை : தமிழகத்தில், அதிகரித்து வரும் மின் வெட்டால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது, லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மின்வெட்டுக்கான காரணம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா, தினம் ஒரு விளக்கம் அளித்து வருகிறார். மக்களிடம் ஏற்பட்டு உள்ள அதிருப்தியை நீக்க, நேற்று, திருநெல்வேலியில் பேசும்போது, ''மின் வெட்டுக்கு சதித் திட்டமே காரணம். இச்சதியில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்போம்,'' என, சூளுரைத்துள்ளார்.  மம்மிஜி தமிழகத்தின் மின்சார பிரச்சினை தீர்வதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பது தான் உண்மை. மம்மிஜி 'என் பகீரத முயற்சி' என்று வாய் கூசாமல் தம்பட்டம் அடிப்பது தி.மு.க ஆட்சியில் செய்ய பட்ட முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்களை தான். அதனால தான் சொல்றோம் மக்களே, தயவு செய்து இந்த தேர்தல்ல மம்மிஜியை அதிக அளவில் ஜெயிக்க வச்சுடாதீங்க.. அப்படி வச்சீங்கன்னா மம்மிஜி தலை கால் புரியாம ஆடுவாங்க.. நாட்டை நாசம் பண்ணுவாங்க

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

நயன்தாரா தெலுங்கு படங்களில் நடிக்கவே விரும்புகிறார். ஐதராபாத்தில் குடியேறுகிறார்?

தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டு ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க நயன்தாரா முடிவு செய்துள்ளார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.டோலிவுட் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதுபோல் கோலிவுட் இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் தனது இருப்பிடத்தை நிரந்தரமாக ஐதராபாத்துக்கு மாற்ற நயன்தாரா முடிவு செய்திருக்கிறார் என்று சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தெலுங்கு படங்களில் நடிக்கவே நயன்தாராவும் அதிகம் விரும்புகிறார். அந்த அளவுக்கு தமிழ் படங்களுக்கு அவர் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, ‘தமிழில் 3 படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதில் உண்மை இல்லை. தெலுங்கு ஹ¦ரோக்களை போலவே தமிழ் ஹீரோக்களும் அவருடன் நட்பாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழில் நடித்தபோதுதான் இருமுறை அவர் காதலில் விழுந்தார். 2 காதல்களும் தோல்வி அடைந்தாலும் அந்த காதலை கொடுத்த தமிழகத்தை அவர் மறக்க மாட்டார். தென்னிந்திய படங்களில் எல்லா மொழியிலும் பேதம் பார்க்காமல் நடித்து வருகிறார்.

ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் போராட்டம் ! ரூ.200, சாப்பாடு, தண்ணி எதுவும் தரல..

அன்னூர்: சாப்பாடு, தண்ணீர், ரூ.200 பணம் எதுவும் தரவில்லை எனக் கூறி ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 650 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, கோவை அருகே உள்ள காரமடையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் இருந்து பஸ்களில் பொதுமக்களை கட்சி நிர்வாகிகள் காரமடைக்கு அழைத்துச் சென்றனர். அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த எல்லப்பாளையம் சுப்ரமணிக்கவுண்டன்புதூர், வெள்ளாளபாளையம், காந்திகர் பகுதிகளைச் சேர்ந்த 650 பேர், 5 பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு ரூ.200, சாப்பாடு, தண்ணீர் தருவதாக கட்சி நிர்வாகிகள் கூறியிருந்தனர். இவர்கள் சென்ற பஸ், காரமடைக்கு முன்பாக உள்ள குமரன் குன்று பகுதி அருகில் சென்றது. அதற்குள் முதல்வர் ஜெயலலிதா கூட்டம் துவங்கி விட்டது.

மாயமான விமானத்தை யாரோ கடத்திபுட்டாங்க ? ரஷ்யா சொல்லுதாக

மாயமான விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?
239 பயணிகளும் ஆப்கானிஸ்தானில் பிணை கைதிகளா? மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று  மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து சிதறி இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது. இது குறித்து நடைபெற்ற தொடர் விசாரணையில், விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் திடீரென்று அணைக்கப்பட்டதும், விமானம் திசை மாறி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில், உலக நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன. இதற்கிடையில், மலேசிய அரசு உண்மையை மறைக்கிறது. விமானம் மாயமானதில் ஏதோ மர்மம் இருக் கிறது. விமானத்தை பற்றிய முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று சீன அரசும், விமானத்தில் சென்ற 156 சீன பயணிகளின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென் மேற்கே சுமார் 2,500 கி.மீ. தொலைவில் சில மர்ம பொருட்கள் மிதப்பது தெரிய வந்தது. அவை மலேசிய விமானத்தின் நொறுங்கிய பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் கடலில் மிதந்த பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என்பது உறுதி செய்யப்படவில்லை.

பலாத்காரம் பாதிக்கப்பட்ட: பெண்களையும் தூக்கிலிட வேண்டும்... இது முலாயம் கட்சியின் அபு ஆஸ்மி


மும்பை: பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களையும் தூக்கிலிட வேண்டும் என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பிரச்சினையில் சிக்கியுள்ளார் மற்றொரு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி. நேற்று உத்தரபிரதேசத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மொரதாபாத்தில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்" என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்யப் பட்டுள்ளது. முலாயமின் கருத்திற்கு டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பலாத்காரம் தொடர்பாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மற்றொரு சமாஜ்வாடி கட்சித் தலைவர். இந்த ஆளை முதல்ல சவுதிக்கு அனுப்பங்க !

பெண்களுக்கும் கறுப்புத் தோல் கொண்டவர்களுக்கும் எதிராகத் தமிழ் சினிமா பிரயோ கித்துவரும் வன்கொடுமை


பெண்களைப் பற்றித் தமிழ் சினிமா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது? ஒரு பக்கம் பெண்களை வெறும் உடலாகப் பாவித்து
முடிந்தவரையில் அவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது. இன்னொரு புறம் தாய்ப் பாசம், தங்கைப் பாசம் என்று பாச அபிஷேகம் செய்து ஆராதிப்பது. இவற்றுக்கு இடையே அடக்கம், பண்பு, நாகரிகம் ஆகியவற்றைப் பற்றிப் பாடம் எடுப்பது. இப்படியாகப் பெண்களைப் ‘பன்முகம்’ கொண்ட கோணங்களில் அணுகும் தமிழ் சினிமா இவற்றுக்கிடையில் இருக்கும் உள் முரண்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
இவை ஒரு புறம் இருக்க, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களைக் கேவலப்படுத்துவதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் பல திரைப்பட இயக்குநர்களும் வசனகர்த்தாக்களும். அண்மையில் வெளியான ‘மான் கராத்தே’ படத்தில் ஒரு காட்சி. நாயகனை ஒரு போட்டியில் இடம்பெற வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு குழுவினர் அவனுக்குப் பணம் தருவதுடன் பல வசதிகளையும் செய்துதருகிறார்கள். இதுதான் சாக்கு என்று அவன் மேலும் பல வசதிகளைக் கோருகிறான். அப்போது அந்தக் குழுவில் இருக்கும் ஒருவன் தன் அருகே இருக்கும் பெண்னைக் காட்டி இப்படிச் சொல்கிறான்: “விட்டா இவளையும் கேப்ப போலருக்கே?”
அந்தக் குழுவினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் இளைஞர்கள். தங்களைப் போலவே படித்த, தங்கள் குழுவில் ஒரு அங்கமாக உள்ள சக மனிதப் பிறவியைச் சட்டென்று ஒரு பண்டத்துக்கு நிகராகப் பேச அவனால் முடிகிறது. அதைக் கேட்டுக்கொண்டு அந்தப் பெண் சும்மாதான் இருக்கிறாள். அதற்கு நாயகன் சொல்லும் பதில் என்ன தெரியுமா?
“நல்லா இருந்தா கேட்டிருப்போம்ல?”

Einstein's Big Idea - Full Documentary வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்


1906-ம் ஆண்டு இன்றைய தேதியான ஏப்ரல் 11 அன்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற சார்பியல் தத்துவத்தை வெளியிடுகிறார். அதை நினைவு கூர்ந்து இந்த ஆவணப்பட விளக்க கட்டுரையை வெளியிடுகிறோம். நெடிய இந்த கட்டுரை ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளை வரலாற்றுப் பார்வையோடு விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, கூடவே அதன் நெடிய பாதையில் அரசியலும், மக்கள் புரட்சிகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் எப்படி பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதையும் இங்கே புரிந்து கொள்ள முடியும். மதங்களையும், கடவுள்களையும் அருங்காட்சியகத்திற்கு மட்டும் அனுப்ப வேண்டிய அடையாளங்கள் என்பதை ஐன்ஸ்டீனது கண்டுபிடிப்புகள் நமக்கு வலியுறுத்துகின்றன. அறிவியலை கற்பது என்பது அரசியல் போராட்டம், மனித குல வரலாறு கற்பதோடு பிரிக்க முடியாத ஒன்று என இந்த ஆவணப்படம் எடுத்துக் கூறுகிறது. படியுங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்!நவீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.

ஜே.கே.ரித்தீஷ்:திமுகவை அழிக்கும் வேலையை ஸ்டாலின் செய்துவருகிறார்


ஜே.கே.ரித்தீஷ்.| படம். ம.பிரபு
திமுகவை அழிக்கும் வேலையை மு.க.ஸ்டாலின் செய்துவருகிறார் என்று ஜே.கே.ரித்தீஷ் கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜே.கே. ரித்தீஷ். இவர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், வியாழக் கிழமையன்று முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் ஜே.கே ரித்தீஷ், அ.தி.மு.க.வில் இணைந் தார். அவருக்கு முதல்வர் ஜெய லலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.

குஷ்பு பேட்டி : மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது.


தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு.|  
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார் திமுக-வின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை குஷ்பு. பிரச்சாரத்துக்கு நடுவே `தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி.
பிரச்சாரப் பயணம் எப்படி இருக்கிறது? மக்களிடம் திமுக-வுக்கு வரவேற்பு உள்ளதா?
மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது. மக்களின் அடிப்ப டைக் கட்டமைப்பு வசதிகள், அத்தியாவசியத் தேவைகளில் அரசின் பங்களிப்பு இல்லாதது, மின் வெட்டுப் பிரச்சினை, குடிநீர், சாலை வசதி போன்றவற்றை தற் போதைய அரசு மேற்கொள்ளாதது குறித்து பேசுகிறேன்.
மக்கள் கவனமாகக் கேட் கின்றனர். தனித்தனியாக மக் களைச் சந்தித்தும் பேசுகிறேன். அவர்கள் தங்கள் குறைகளை மனம் விட்டு சொல்கிறார்கள். திமுக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள்

புதுடில்லி: எப்போதும் இல்லாத வகையில், லோக்சபா தேர்தலில், பிரபல நிறுவனங்களின் தலைவர்கள், வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். சில தொகுதிகளில், அரசியல் தலைவர்களை விட, நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு, மலைக்க வைக்கிறது.பணக்கார வேட்பாளர்: இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களிலேயே, பணக்கார வேட்பாளராக, முதலிடத்தில் திகழ்பவர், நந்தன் நிலேகனி. 'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தின், அமைப்பாளர்களில் ஒருவரான இவர், பெங்களூரு தெற்கு தொகுதியில், காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மற்றும் இவரது மனைவியின் சொத்து மதிப்பு, 7,700 கோடி ரூபாய். நிலேகனியை எதிர்த்து போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமாரின் சொத்து மதிப்பு, 1.22 கோடி ரூபாய் தான். அத்தொகுதியின், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், நினா நாயக்கின் சொத்து மதிப்பு, 3.5 கோடி ரூபாய். லோக்சபா தேர்தலில், முதல்முறையாக களம் காண்பவர்கள், ஆம் ஆத்மி சார்பில் தான், அதிகம் போட்டியிடுகின்றனர்.
இன்போசிஸ் ல நந்தனுக்கு மட்டும்தான் 7700 கோடி ரூபாய் சம்பாரிக்க மாறி சம்பளம் கொடுத்திருக்காங்க. மத்தவங்களுக்கு பிம்பிளிக்கி பிலாப்பி ...அடுத்த ஆட்சிலே இவர்தான் முதல்லே ஜெயில் க்கு ஆப் ஷோர் வொர்க் பண்ண போறார்
 இதுவரை பின்னணியில் இருந்து இயக்கிவந்தவர்கள் முன்னுக்கு வந்துவிட்டனர் . அவ்வளவுதான் வித்தியாசம் .

ஒழுங்காக விசாரிக்கப்பட்டிருந்தால் மோடிக்கு தூக்குத்தண்டனை கிடைத்திருக்கும்:CPI m கே.பாலகிருஷ்ணன்

நீதிமன்றங்களும், புலனாய்வு அமைப்புகளும் குஜராத் கலவரம் குறித்து முறையான, நேர்மையான விசாரணையை மேற்கொண்டிருந்தால் நரேந்திரமேடிக்கு தூக்குத்தண்டனை கிடைத்திருக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ.>திருச்சி தொகுதி சிபிஎம் வேட்பாளர் எஸ்.ஸ்ரீதருக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம், ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமையன்று பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:>மத்திய அரசு கடந்த 10 வருடங்களில் 100 முறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வரலாறுகாணாத விலைவாசி உயர்வு ஏற்பட்டது. உரத்திற்கான மானியத்தை வெட்டிய மத்திய அரசு பெரு முதலாளரிகளுக்கு மட்டும் 21 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகையாக வாரி வழங்கியது. இதில் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குத் தந்திருந்தால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பஞ்சமே வந்திருக்காது.

வியாழன், 10 ஏப்ரல், 2014

முலாயம்சிங் : பையன்கள் பலாத்காரம் செய்வார்கள்.!.அதற்காக தூக்கு தண்டனையா? ?? போச்சு முலயம்ஜியின் பிரதமர் வாய்ப்பு போயே போச்சுடா


மொரதாபாத்: பலாத்கார வழக்குகளில் தூக்கு தண்டனை விதிப்பதற்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது: பொதுவாக பையன்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு பெண் தம்மை பலாத்காரம் செய்துவிட்டனர் என்று புகார் தெரிவித்தார்.. உடனே மூன்று ஏழை பையன்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பலாத்கார சம்பவங்களுக்கெல்லாம் தூக்கு தண்டனையா? அவர்கள் பையன்கள்.. தவறு செய்வார்கள்.. மும்பையில் இப்படித்தான் இரண்டு மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்டங்களை நிச்சயம் மாற்ற முயலுவோம். பொய்யான பலாத்கார புகார் தெரிவிப்போருக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்வோம். இவ்வாறு முலாயம்சிங் யாதவ் பேசினார். பலாத்கார சம்பவங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோருவது பல அமைப்புகளின் கருத்தாக இருக்கிறது. ஆனால் இதை முலாயம்சிங் யாதவ் மிகக் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. 

முலாயம்சிங் யாதவின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி முலாயம்சிங் யாதவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிரண்பேடி, இப்படி பேசுகிற அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும். முலாயம்சிங் யாதவின் பேச்சு பெண்களுக்கு மட்டும் எதிரானது அல்ல.. ஒட்டுமொத்த சமூகத்துக்கே எதிரானது. இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுப் போடாமல் தண்டிக்க வேண்டும்.
நம்கேன்னவோ முலயம்ஜியின் நெருங்கிய உறவுப்பையன் யாரேனும் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி உள்ளானோ என்ற சந்தேகம் வருகிறது 
tamil.oneindia.in  

தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார் ! அழகிரியின் தீவிர ஆதரவாளர்.

நடிகர் ரித்தீஷ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷ் எம்.பி.யும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து ரித்தீஷ் எம்.பி.க்கு தி.மு.க. தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ரித்தீஷ் எம்.பி. புறக்கணிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். அவர் அ.தி.மு.க.வில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இன்று மதியம் ரித்தீஷ் எம்.பி. போயஸ் கார்டன் சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.

டுபாக்கூர் மோடி : என் மனைவி name ஜஷோட பென் ! வேட்பு மனுவில் திருமணமானதை குறிப்பிட்ட கிரிமினல்


வதோதரா: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தன்னை திருமணமானர்.. தனது மனைவி பெயர் ஜஷோட பென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ,பியில் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார். ஜஷோட பென்.. என் மனைவி: வேட்பு மனுவில் மோடி ஒப்புதல்! வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தாம் திருமணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜஷோட பென் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மனைவின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியாது என மோடி தெரிவித்துள்ளார்.  மோடி தமக்கு திருமணமானதாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். எங்கே போய்விட்டன பெண் உரிமை அமைப்புக்கள் ? அநேகமான பெண் உரிமை அமைப்புக்கள் மேல்தட்டு பொழுது போக்கு மாமிகள் கூடாரம்தானே >? அவாள் எல்லாம்தானே மோடிக்கு பஜனை பாடுறா?

DMK ராஜாவின் சொத்து வெறும் மூணு கோடி மட்டுமே. அதிலும் முப்பது லட்சம் கடன்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவின் நீலகிரி தொகுதி ஏற்கனவே அகில இந்திய முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிலும் பாஜக தனது வேட்பாளரை அதிமுகவுக்காக விட்டு கொடுத்து ஒரு சின்னவீடு டைப் அரசியல் செய்வதால் அவர்களின் கள்ள கூட்டணி உறவு அம்பலமானதும் இதே நீலகிரியில்தான் எனவே இந்த தொகுதி நிலவரம் பலரின் ஆவலுக்கு ஆளானது, அங்கு நாம் கேட்ட சுவாரசியமான குரல்கள்:

தொழிற்புரட்சி செய்த ராஜா ஜெயிப்பார். தலித் என்பதாலும் தமிழர் என்பதாலும், வட இந்தியர்கள் ராஜாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டனர். அவரின் சொத்து வெறும் மூணு கோடி மட்டுமே. அதிலும் முப்பது லட்சம் கடன். இப்படி இருக்கையில் அவர் ரெண்டு லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்று பிஜேபி கட்சியினர் கொளுத்தி போட்டுவிட்டனர். இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். பழிவாங்கப்பட்ட அப்பாவி ராஜாவை ஜெயிக்க வைப்பதில் திமுகவிற்கு பெருமை அடங்கி உள்ளது. ராஜாவின் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழியை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள். குப்பனுக்கும் சுப்பனுக்கும் செல்போனை எட்ட செய்த ராஜாவிற்கு ஓராண்டு தண்டனைதான் கிடைத்தது. இன்று உலகிலேயே செல் பிளான் கம்மியாக உள்ள ஒரே நாடு இந்தியா தான். இது எதனால் என்று இந்தியர்களுக்கு புரியாது. அது ராஜா என்ற ஒரு தமிழனால் சாதிக்கப்பட்டது என்றும் புரியாது. அதை வடநாட்டவர்கள் தான் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

நீதிமன்றம் : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை தாமதப்படுத்த பல நாடகம் அரங்கேறுகிறது

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அனைத்து மட்டத்திலும் நாடகமே அரங்கேறி வருவதாக கர்நாடக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மெடோ ஆக்ரோ பாரம், லெக்ஸ் பிராபர்ட்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, அதை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகளாக காட்டப்பட்டுள்ளது. ‘இந்த வழக்கில் இருந்து நிறுவனங்களை விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணை நடத்தி முடிவு காணும் வரை, சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கம்பெனிகள் சார்பில் கடந்த மாதம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா, ‘சொத்து குவிப்பு வழக்கில் கம்பெனிகள் இணைக்கப்பட்டுள்ளதை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு அனுமதிக்கிறேன்.

3 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளே இல்லை ஆனால் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு ?

கருணாநிதி ஆட்சியில் 4 லட்சத்து 93 ஆயிரம் பெண்கள் வேலைக்குச் சென்றனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் 3 லட்சத்து 78 ஆயிரம் பெண்கள்தான் வேலைக்குச் செல்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் திமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து சென்னை பாடியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. தமிழக மக்கள் மீது அதிமுக அரசுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டினார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து அய்யப்பன்தாங்கல், மாங்காடு, பட்டூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனிமொழி புதன்கிழமை திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
மாங்காடு பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

Cricket வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன பாசிச அரசியல் தந்திரமாகவுள்ளது

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான ஆசியக் கோப்பை
கிரிக்கெட் போட்டி தொடங்கு முன்னரே, ராஜஸ்தானிலுள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்களைத் தாக்கும் இந்து மாணவர்கள். 
ஆங்கிலேயக் காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகக் குற்றஞ்சாட்டி, விடுதலைப் போராளிகளைத் தண்டிக்க 1860-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் 124-ஏ தேசதுரோகச் சட்டம். 154 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை ஏவி, அரசு எதிர்ப்புப் போராளிகளை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் காராகிருகத்தில் தள்ளப் பயன்படுத்தி வருகிறது, “சுதந்திர இந்தியஅரசு”.
“பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாதப் பீதியூட்டி, தேசிய வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன பாசிச அரசியல் தந்திரமாகவுள்ளது” என்பதை நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம். அந்த வகையில் பார்ப்பன பாசிசத்தின் தயார்நிலை சட்ட ஆயுதமாக உள்ளது, இந்த 124-ஏ தேசத்துரோகச் சட்டம். இதற்கு உச்சபட்ச சான்றானதொரு காரியத்தை உ.பி.யின் மீரட் நகரில் அவர்கள் செய்துள்ளார்கள். ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்தன. அவற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றின் போது சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானின் சாகித் அஃப்ரிதியைப் பாராட்டி ஆரவாரம் செய்துவிட்டார்கள், உ.பி.யின் மீரட் நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான சுவாமி விவேகானந்தா சுபார்தி பல்கலைக் கழகத்தில் பயிலும் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் சிலர். இந்தக் “குற்றத்துக்காக” அவர்கள் மீது பல்கலைக் கழகப் பதிவாளர் புகார் கொடுக்கவே, 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கும் போட்டுள்ளனர்.

Dinamalar: அ.தி.மு.க., - தி.மு.க., தலைமை திடீர் அதிர்ச்சி : கட்சியினரை முடுக்க வைத்த சர்வே முடிவு ?

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும், தங்களது சாதக, பாதக அம்சங்களை ஆராயத் துவங்கி உள்ளன. அ.தி.மு.க., தரப்பில் உளவுத்துறை மூலமும், தி.மு.க., தரப்பில், தனியார் ஏஜன்சி மூலமும், நடத்தப்பட்ட சர்வேக்களில், இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதால்,'வீக்'கான தொகுதிகளில், அதிக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளில், இரு கட்சிகளும் இறங்கி உள்ளன. யாருக்கு வெற்றி?தமிழகத்தில், பலமுனைப் போட்டி நிலவினாலும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி என்பது உறுதியாகி உள்ளது. இந்த மூன்று அணிகள் மோதும் தொகுதிகளில், யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அறிய, ஆளும் கட்சி தரப்பில், ஏற்கனவே, உளவுத்துறை மூலமும் தனியார் ஏஜன்சிகள் மூலமும் சர்வே எடுக்கப்பட்டது. மம்மிஜியின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகாவது மக்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கணும்னா அ.தி.மு.க. 10 தொகுதிகளுக்கு மேல ஜெயிக்கவே கூடாது. இல்லைன்னா ரெண்டு வருஷமும் தைய்ய தக்கா தான்.. மம்மிஜியின் ஆட்டத்தை சொன்னேன்..

புதன், 9 ஏப்ரல், 2014

நீலகிரியில் அதிமுக பாஜக கள்ளத்தொடர்பு அம்பலம் ! ராசாவின் வெற்றி நிச்சயம்!எழுதி வைத்துக்கொள்ளுங்கள் !


சென்னை: நீலகிரி பாரதிய ஜனதா வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக- அதிமுக இடையேயான கூட்டணி மலர்ந்துவிட்டதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் அதிமுக வீழ்த்த வேண்டும் என்று குறி வைத்திருப்பவர்களில் நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ. ராசாவும் ஒருவர். ஆனால் தொகுதி நிலவரமோ ஆ. ராசாவுக்கே சாதகமாக இருந்து வருகிறது. ஆ. ராசாவின் எதிர்ப்பு வாக்குகளள அதிமுகவும் பாஜகவும் பங்கு போடுவதால் அவர் வெல்வது எளிதான ஒன்றாக இருக்கும் என்பதும் ஒரு கணக்கு. இதனால்தான் பாரதிய ஜனதா வேட்பாளரை அதிமுக 'விலைக்கு' வாங்கிவிட்டது என்ற தகவல்கள் கசிந்தது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசனோ, அப்படியெல்லாம் எங்கள் கட்சி வேட்பாளர் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று சொல்லி 'ஏதோ' நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

அழகிரி :ஸ்டாலினுடனான உறவை பிரிக்க முடியாது ! சமரசம் ? நிலைமை புரிந்ததோ ? யாருக்கு ?

மு.க. ஸ்டாலினுடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது. கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோம் என்று, சகோதர சண்டையால் திமுகவில் இருந்தே நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த அழகிரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், மு.க. ஸ்டாலின் எனது சகோதரர், அவருடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது. கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோம் என்று கூறினார். மேலும், கருணாநிதி இல்லை என்றால், திமுகவே இல்லை என்றும், புதிய கட்சி துவங்கும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்றும் அவர் பேசினார்.> நிகழ்ச்சியின் போது, மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆருண் ஆகியோர் அழகிரியை சந்தித்து ஆதரவு கோரினர் dinamani.com


ஸ்டாலின் தலைமையை திமுக-வினர் ஏற்க மாட்டார்கள்: திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் பேட்டி


கட்சியினரை பாரபட்சமாக நடத்தும் ஸ்டாலின் தலைமையை திமுக வினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திமுக எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கூறியுள்ளார்.
திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ். | கோப்புப் படம். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவு எம்.பி.க்களான நீங்கள், நெப்போலியன் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் திமுகவில் இருக்கிறீர்களா அல்லது நீக்கப்பட்டு விட்டீர்களா?
திமுக-வில்தான் நாங்கள் இருக்கிறோம். திமுக-வில் நாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை கட்சிதான் சொல்ல வேண்டும்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி யுடன் தொடர்பு வைத்திருக்கும் திமுக-வினர் மீதும் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படுமென்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையா?
என்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். தகுந்த விளக்கம் கொடுத்து விட்டேன். நாங்கள் கட்சிக்கு தவறு செய்ய வில்லை. எனக்கு அழகிரி அண்ண னைப் பிடிக்கும். எனவே அவருடன் இருக்கிறேன். நான் மட்டுமல்ல கட்சிக்காக உழைத்த, கட்சித் தலைமை மீது மரியாதை கொண்ட திமுகவினர் பெரும்பாலும் அண்ண னுடன்தான் இருக்கிறோம்.
நாங்கள் தவறு செய்திருந்தால், எங்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும். அண்ணனை (அழகிரி) நீக்கி மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

அதிமுகவினர் பயங்கர கோஷ்டி மோதல் : நிர்வாகிகள் மண்டை உடைப்பு !

சங்கரன்கோவில்: தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்று காலை பிரசாரம் செய்த போது கட்சியின் இரு கோஷ்டிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனர். கார்கள் உடைக்கப்பட்டன. இதனால், வேட்பாளரின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் இன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் பிரசாரம் துவங்குவதாக இருந்தது. தேவர்குளம் பகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கிளைச் செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் எம்எல்ஏ முத்துச்செல்வி, ஒன்றிய பேரவை செயலாளர் செல்வராஜ், மாயாம்பாறை கந்தசாமி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மதுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தேவர்குளம் காவல்நிலையம் அருகே பேண்டு வாத்தியம் முழங்க வேட்பாளரை வரவேற்க காத்திருந்தனர்.

Spain இங்கிலாந்து தமிழ் பெண் டாக்டர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி;


லண்டன்,
ஸ்பெயினில் விடுமுறையை கழிக்க சென்றபோது இங்கிலாந்து வாழ் தமிழ் பெண் டாக்டர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழ் பெண் டாக்டர்கள்
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் பெண் டாக்டர்கள் உமா ராமலிங்கம் (வயது 42), டாக்டர் பாரதி ரவிகுமார் (வயது 39). இங்கிலாந்து நாட்டில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். உமா ராமலிங்கம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர். பாரதி ரவிகுமார் பொது மருத்துவ நிபுணர். இருவரும் உறவினர்கள்.
உமா ராமலிங்கம், மான்செஸ்டர் பகுதியில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தார். பாரதி ரவிகுமார், லிங்கன் நகரில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் மருத்துவமனையில் பங்குதாரர்.
3 பேரை அலை வாரிச்சென்றது
இவர்கள் விடுமுறையை உல்லாசமாக கழிப்பதற்காக தங்கள் குடும்பத்தினருடன், ஒரு சுற்றுலா குழுவினருடன் இணைந்து ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார்கள்.
அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அங்கு கேனரி தீவில் உள்ள டெனரிப் கடற்கரைக்கு சென்றனர்.

அதிமுகவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் கமல் ரசிகர்கள் ! திமுக வேட்பாளர்கள் கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ???

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் நடிகர் கமல் நடித்த விஸ்ரூபம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பல காட்சிகள் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது என்றும், இந்த காட்சிகளை நீக்கியே ஆக வேண்டும் என்றும் பல முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தது. ராமநாதபுரத்தில் சிலர் திரையரங்கு மீது பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு நடத்தினர். கமல் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளும் காட்சி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது. இதனால் விஸ்வரூபம் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்!

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு சிம்புதேவன் தன் வழக்கமான குசும்புகளைக் கொண்டு கதையமைத்திருக்கும் திரைப்படம். திரையில் கதாபாத்திரங்கள் சீரியஸாக பேசிக்கொண்டிருக்க தரையில் ரசிகர்கள் கலகலவென சிரித்து ரசிக்க, ‘பிளாக் காமெடி’ பாணியில் அமைகிறது படம். ரன் லோலா ரன் என்ற ஜெர்மானிய திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன் கதையின் ஸ்டைலாக இருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் அசத்தியிருக்கிறார் சிம்புதேவன். இதற்கு முன்பு இதே வகையான திரைக்கதையமைப்பில் ஷாம் நடித்த 12பி வந்திருக்கிறது. பிரம்மாவை நாரதர் சந்திக்க வரும் நேரத்தில், இருவருக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. விதி என்பது எழுதப்பட்டது என்பதானால். மனிதனின் வாழ்வில் நேரம் எப்படி மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதே அந்த கேள்வி. இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சிவன் தன் திருவிளையாடலை நடத்திக் காட்டுகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிப்பதா?: ஜெ., சசிகலா மீது நீதிபதி காட்டம்


பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் வகையில் செயல்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்புக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றத்தில் பெற்ற 3 வார தடைஉத்தரவு நகலை நீதிபதியிடம் கொடுத்தார். இதை ஏற்று கொண்ட நீதிபதி குன்ஹா இறுதி வாதத்துக்குரிய தடைநகலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்குக்கு இறுதி வாதத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் லெக்ஸ் மற்றும் மெடோ நிறுவனங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் லெக்ஸ் நிறுவன வழக்கில் சாட்சியங்களை அழைத்து வரவில்லை என்று கூறினார். இதற்கு நீதிபதி விளக்கம் கேட்ட போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த பதிலில் அவர் அதிருப்தி அடைந்தார். அத்துடன் இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்திலேயே செயல்படுவதாகவும் சாடினார். இந்த வழக்கை எவ்வாறு நடத்துவது என்று என லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
tamil.oneindia.in

பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?


பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?
ஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள்   - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;
நாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட  பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.
பி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்!

மோடி: கேரள மாநிலம் தீவிரவாதிகளை உருவாக்கி வளர்க்கும் நர்சரி !

தீவிரவாதிகளை உருவாக்கி வளர்க்கும் நர்சரி பள்ளிக்கூடமாக கேரள மாநிலம் மாறிவிட்டது என்று நரேந்திர மோடி பசினார். கேரளாவில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. காசர்கோட்டில் பாஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசு நமது நாட்டை இருண்ட பாதைக்கு அழைத்து சென்று விட்டது. வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால் இந்திய மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மம்தா பானர்ஜி ஆணையத்தின் உத்தரவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

ஆட்சியர் உள்ளிட்ட 7 அரசு அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை பணிந்தார்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்ய ஒப்புக் கொள்வதாகவும், தேர்தல் ஆணையம் புதிதாக 7 அதிகாரிகள் நியமித்ததை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு மாவட்ட ஆட்சியர், 4 காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 7 அதிகாரிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் தேர்தல் பணியில் இருந்து விடுவித்தும், அவர்களை இடமாற்றம் செய்தும், அவர்களுக்குப் பதிலாக வேறு அதிகாரிகளை நியமனம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

நீலகிரியில் பாஜக என்ன விலைக்கு போணியானது ? படிவங்கள் ஏன் கைமாறின?

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்ற பாடலுக்கு பொருத்தமாய், நடந்து முடிந்திருக்கிறது, நீலகிரி தொகுதியில் பா.ஜ., வேட்புமனு விவகாரம். இதன் மூலம், '2ஜி' ஊழலை பற்றி முழங்கி வந்த பா.ஜ., ராஜாவுக்கு எதிராக பேட்டியிடும் வாய்ப்பை இழந்து உள்ளது. பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தி, வேட்புமனு உடனான 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை, கலெக்டரிடம் தாமதமாக கொடுத்ததால், நேற்று முன்தினம் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கூட்டணி கட்சிகளோடு குடுமிபிடி சண்டைபோட்டு பெற்ற ஒரு தொகுதியை, வாக்கெடுப்பிற்கு முன்பே பா.ஜ., எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து உள்ளதை பற்றி, பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.
1 கடந்த 1994ல் துவங்கப்பட்ட ம.தி.மு.க., 1996 சட்டசபை தேர்தலை சந்தித்த போது, 180 இடங்களில் போட்டியிட, அந்த கட்சியினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஒரு மனு கூட தள்ளுபடியாகவில்லை. அதேபோல், கடந்த 2005ல் துவங்கப்பட்ட தே.மு.தி.க., 2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில், ஒரு வேட்பாளரின் மனு கூட தள்ளுபடி செய்யப்படவில்லை.

கனிமொழி பயோடேட்டா : ஜெயலலிதாவை விட கனிமொழிக்கு பிரதமர் பதவிக்கான தகுதி நிறையவே இருக்கு

ஒட்டுமொத்த தி.மு.க., தலைவர்களின் சொத்து பட்டியலை எடுத்துக் கொண்டாலும், பெங்களூரு நீதிமன்றத்தில் வெளியான, ஜெயலலிதாவின் சொத்து பட்டியலுக்கு இணையாகாது.
கருணாநிதியின் மகள் என்பதையும் தாண்டி, தனக்கென அரசியலில் தனி பாதையையும், தகுதியையும் வளர்த்துக் கொண்டவர், கனிமொழி. தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,யாக, தேசிய அரசியல் விவகாரங்களில், கட்சியின் கருத்தை பதிவு செய்யக் கூடியவராகவும் இப்போது வளர்ந்து நிற்கிறார். கட்சியின் நட்சத்திர பேச்சாளராக, பிரசார களமிறங்கியுள்ள அவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

* கோவையில் முதல் கட்ட பிரசாரத்தை துவங்கிய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'இது தான் என் கடைசி தேர்தல்' என்றும், 'தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், நீங்கள் உருப்பட மாட்டீர்கள்' என்றும் சாபம் விடுவது போல் பேசியிருக்கிறாரே. அந்த அளவுக்கு தி.மு.க., பலவீனமாக உள்ளதா?

சகுனம், அபசகுனம், சாபம் இதெல்லாம் தலைவர் (கருணாநிதி) வாழ்க்கையில் கிடையாது. அந்த பாரம்பரியத்தில் அவர் வந்தவரும் இல்லை. எங்கள் அம்மா வேண்டுமானால், அவரிடம், 'ஏங்க இப்படி...இது கடைசி தேர்தல்னு பேசுறீங்க' என்று, கேட்கலாம். எனவே, சாபம் விடும் அளவுக்கு அவர் பலவீனமாகி விட்டார் என, யாராலும் கூற முடியாது.  கனிமொழியின் பதி்ல்கள் அருமை. இதே பானியில் தயவு செய்து எலிகாப்டரம்மாவிடம் ஒரு பேட்டி தைரியம் இருந்தால் போய் கேட்டுவாங்கி போடுங்கள் ஃ கனிமொழியிடம் கேட்டது போலவே அம்முவிடமும் அதி்முகவை அடுத்து யார் வழிநடத்துவார்கள் என கேட்டுசொல்லுங்கள்

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

L.K.அத்வானி : பாஜக தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமே ! thank god !


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறுவது கடினம்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திருவனந்தபுரம் வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூற முடியாது.
ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை பெறாத பலத்துடன் ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைவது உறுதி" என்றார்.
கேளரத்தில் இம்மாதம் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபாலை ஆதரித்து அத்வானி பிரச்சாரம் மேற்கொள்கிறார். tamil.thehindu.com/

வடிவேலுவை மிரட்ட தெலுங்கர்களை தூண்டிவிட்ட தெலுங்கன் விஜயகாந்த் !


வைகைப் புயலை மிரட்ட தெலுங்குக்காரர்களை தூண்டியவர் இவர்தானாமே?


காமெடிப் புயல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்து வெளியாகும் புதிய படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது, அந்த அரசியல் தலைவர்தான் என கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். 'ஏன்யா... அவரே தேர்தல்ல மகா பிஸியா இருக்கார். அவர் போயி இந்த மாதிரி சின்னத்தனமான வேலயச் செய்வாரா?' என்று திருப்பிக் கேட்காமலும் இல்லை நடுநிலையாளர்கள். ஆனால் அரசியல் தலைவரால், புயலின் அந்த பழைய நக்கல், நய்யாண்டி, எகத்தாள பிரச்சாரத்தை மறக்கவே முடியவில்லையாம். 'அவன் படம் வரவே கூடாது... அதுக்கு என்ன பண்ணனுமோ பண்ணுங்க... ' என்று தெலுங்கு அமைப்பின் தலைவர்களிடம் தெலுங்கிலேயே பேசித் தூண்டிவிட்டார் என அரசியல் தலைவர் மீது குற்றம் சாட்டுகின்றனர் வடிவேலு ஆதரவாளர்கள். இந்த உண்மை வெளிவந்ததால்தான், வைகைப் புயலுக்கு தமிழ் அமைப்புகள் பகிரங்கமாக ஆதரவளிக்க கிளம்பிவிட்டனவாம். சினிமா சங்கங்கள் அனைத்தும் வாயை மூடிக் கொண்டு சும்மா இருப்பதால், மேலும் சில அமைப்புகளும் வைகைப் புயலுக்கு ஆதரவாகக் களமிறங்கப் போகின்றனவாம். அரசியல் தலைவர் தூண்டிவிட்டார் என்றே வைத்துக் கொண்டாலும், அவரை ஆலகால விஷமாய் வெறுக்கும் ஆட்சி மேலிடம் ஏன் வைகைப் புயல் வீட்டுப் பாதுகாப்புக்கு அனுப்பிய போலீசை தடாலென வாபஸ் பெற்றுக் கொண்டது என்றுதான் புரியவில்லை!
tamil.oneindia.in/  

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிடம் நீதிபதி சரமாரி கேள்வி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை:ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்டவை மற்றும் அவர்களுக்கு சொந்தமான கம்பெனிகளில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துகளை விடுவிடுக்க கோரி சென்னை தனி நீதிமன்றத்தில் கடந்த 1998ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தள்ளுபடியானது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு 14 ஆண்டுகளுக்கு பின், நீதிபதி அருணா ஜெகதீசன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அசையும் சொத்துகளை திரும்பத் தர கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை முதலில் விசாரணை நடத்திய பின், முக்கிய வழக்கின் இறுதி வாதம் நடத்த வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

2 கோடி கப்பம் கேட்டு மிரட்டிய பாஜக MP நிஷிகாந்த் துபே சர்மா தேர்தல் செலவுக்கு மனைவி அனாமிகாவுடன் சேர்ந்து மிரட்டினார்

தேர்தல் செலவுக்கு 2 கோடி கேட்டு டெல்லி தொழிலதிபருக்கு அடி, உதை பாஜ எம்.பி.மீது வழக்கு -
புதுடெல்லி: தேர்தல் செலவுக்காக டெல்லி தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் அவரது மனைவி அனாமிகா
கவுதம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜவை சேர்ந்த நிஷிகாந்த் துபே ஜார்கண்ட் மாநிலம் கோடா மக்களவை தொகுதி உறுப்பினராக இருக்கிறார். இவர் இந்த > தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சந்தீப் சர்மாவுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தேர்தல் செலவுக்காக ரூ. 2 கோடி தர வேண்டும் என சந்தீப் சர்மாவுக்கு நிஷிகாந்த் துபேவின் ஆட்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். கடந்த மாதம் டெல்லியில் சந்தீப் சர்மாவை அவரது வீட்டில் வைத்து நிஷிகாந்த்தும், அவரது மனைவி அனாமிகாவும் சந்தித்துள்ளனர். அப்போது சந்தீப் சர்மாவை அவர்கள் அடித்து உதைத்ததாகவும், பணம் தராவிட்டால் தொலைத்து விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சந்தீப் சர்மா போலீசில் புகார் கொடுத்தார்.

தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு அமைப்புகள், தெனாலிராமன் படத்துக்கு எதிரா கிளம்பிட்டாங்க.


thenaliraman_தமிழ் நாட்டில் உள்ள ஒரு தெலுங்கு அமைப்பு, வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் கிருஷ்ணதேவராயரை அவமானப்படுத்துவதாக புரளியைக் கிளம்பி, தடை செய்ய வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள்.
கிருஷ்ணதேவராயன் என்ன பெரிய போராளியா?
1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் தென் இந்தியாவில் இருந்த மற்ற நாடுகள் மீது ரவுடித்தனம் செய்தவன். விஜயநகரப் பேரரசுவின் பெரிய ரவுடி கிருஷ்ணதேவராயன்.
பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கி, ஜாதி முறையை கட்டி காத்து தெலுங்கு, கன்னடம், தமிழ் பேசிய எளிய மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த களவானிதான் கிருஷ்ணதேவராயன்.
கிருஷ்ணதேவராயன் என்கிற இந்த மன்னனுக்கும் அவனுக்கு ஆலோசனை சொல்பவராக வரும் காரிய கோமாளி தெனாலிராமன் என்கிற பார்ப்பனருக்கும் உள்ள உறவே அதற்கு சாட்சி.
கண்டிப்பாக கிருஷ்ணதேவராயனை அவமானப்படுத்திதான் படம் எடுத்திருக்கனும்… ஆனால் பாவம் வடிவேலு புகழ்ந்துதான் எடுத்திருப்பார்.

வெறும் சோத்து பட்டாளம் அல்லது மாமாக்களாகி விட்ட கம்யுனிஸ்டுகள் !

கூட்டணி முறிவுநாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தன்னிச்சையாக அறிவித்து ஜெயலலிதா எட்டி உதைத்த போதிலும், எவ்வித எதிர்வினையுமின்றி அவரின் காலை நக்கிக் கொண்டு விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இடது, வலது போலி கம்யூனிஸ்டுகள். ஜெயலலிதாவின் அவமதிப்புகளை இப்போலி கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. அடிமைகளைப் போல இயல்பாக எடுத்துக் கொள்ளுமளவுக்குப் பக்குவமும் பெற்றுவிட்டார்கள்.
ஜெயாவுக்கு பல்லக்கு
ஜெயலலிதா எட்டி உதைத்ததால் கூட்டணி முறிந்த சோகக் கதையை விளக்கும் இடது, வலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள்.
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் ஏன் தி.மு.க. கூட்டணி யில் சேரவில்லை என்ற கேள்விக்கு, “ஒருவரால் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்ட நிலையில் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மற்றொருவரிடம் கைகோர்ப்பது சரியல்ல” என்று தத்துவார்த்த விளக்கமளிக்கிறார் வலது கம்யூனிஸ்டு துணைச் செயலாளரான மகேந்திரன். “இந்தத் தேர்தலில் மட்டும்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை” என்று மிகவும் கவனமாகக் கருத்து கூறுகிறார் அக்கட்சியின் செயலாளரான தா.பாண்டியன்.
இது அரசியல் நாகரிமல்ல; ஜெயலலிதாவை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்  

விலை போன (to admk) பாஜக வேட்பாளர் குருமூர்த்தி ! BJP நிர்வாகிகள் தலைமறைவு, பாமக கொதிப்பு; பாஜக அலுவலகம் உடைப்பு

நீலகிரி தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் பாஜகவை சேர்ந்த குருமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, மதிமுக, பாமக உள்பட கூட்டணிக் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மோடிதான் பிரதமர் என பிரச்சாரம் செய்தார். இதனால் கடந்த முறை தேமுதிக நீலகிரியில் போட்டியிட்ட நிலையில் இம்முறை பாஜக போட்டியிடுவது உறுதியானது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி குருமூர்த்தி வேட்புமனு தாக்கலின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டணியினர் திரண்டு வந்து திமுக, அதிமுக.வுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.

சோமாலியாவில் ஐ.நா. ஆலோசகர்கள் படுகொலை Two foreign UN workers killed in Somalia

கொடும் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆலோசனை வழங்கி வரும் 2 அதிகாரிகள் நேற்று சோமாலியா நாட்டில் உள்ள புண்ட்லேண்ட் பகுதிக்கு சென்றனர். கல்கயோ விமான நிலையத்தில் அவர்கள் தரையிறங்கியபோது, அங்கு பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் ஐ.நா. சபையின் ஆலோசகர்களான பிரிட்டனை சேர்ந்த ஒருவரும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இன்னொருவரும் பலியானதாக புண்ட்லேண்ட் பிரதமர் அப்டிவெலி மொஹ்மத் அலி தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு வீரர் ஒருவரும், அவரது சகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர் maalaimalar.com 

கலைஞர் : வீரபாண்டி ஆறுமுகம் இங்கு இல்லையே ! அழுகை எனக்கு இன்னும் நின்றபாடில்லை!

சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம் நாடாளமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திங்கள்கிழமை சேலம் வந்த திமுக தலைவர் கலைஞர், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடனான நினைவுகளை உருக்கத்துடன் தொண்டர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சேலம் பழைய பேருந்து நிலையம் போஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசும்போது,
சேலத்துக்கு எப்போது வருவது என்றாலும் எனக்கு தனி உற்சாகம் இருக்கும், ஆனால், அந்த உற்சாகம் இந்த முறை இல்லாமல் போய்விட்டது. வீரபாண்டி ஆறுமுகம் இங்கு இல்லையே என்ற நினைவே என்னை உற்சாகம் இழக்கச் செய்துவிட்டது. அந்த வேதனையை ஓரளவு சமாளித்துக் கொண்டுதான் நான் இங்கு வந்துள்ளேன்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் வீரம் செறிந்த முகத்தைக் காண முடியாவிட்டாலும், அவர் ஏற்படுத்திக் கொடுத்த அடையாளச் சின்னங்களை வரும் வழியில் நான் கண்டேன். இங்குள்ள திட்டப் பணிகள் யாவும் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆர்வத்தால், உள்ளத்தில் உதித்த சிந்தனையால் மக்களுக்குக் கிடைத்தவை. இவ்வளவும் தந்த ஆறுமுகம் இன்று இறந்துவிட்டார்.
ஒரு ஆறுமுகம் இல்லையே என்ற கவலை இருந்தாலும் அவரால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆறுமுகங்கள் இங்கு இருக்கின்றனரே என்ற ஆறுதலை நான் பெறுகிறேன். அவர் இறந்தபோது என்னுடன் இருந்தவர்கள் நான் கதறி அழுததைக் கண்டனர். அந்த அழுகை எனக்கு இன்னும் நின்றபாடில்லை. தமிழக அரசு அவரை 2, 3 முறை சிறையில் அடைத்தது.
சென்னை சிறையில் அவரை நான் சந்தித்துப் பேசியபோது என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கேட்காமல், சேலம் மாவட்ட மக்களுக்கான திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றனவே என்று மக்களுக்காகத்தான் கவலைப்பட்டார். அவர் இங்கு இல்லாவிட்டாலும் அவரது நட்பு, தோழமை, கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற சபதம் அழிந்துவிடவில்லை. என்றைக்கும் அழிந்துவிடாது.

கி.வீரமணி: வெல்லட்டும் மதச் சார்பின்மை! BJP யின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கை?


ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி இவற்றின் கூட்டுத் தொகையே பிஜேபி கூட்டணி  கணியூரில் தமிழர் தலைவர் கருத்துரைபூனைக்குட்டி வெளியில் வந்தது!
ராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்
காஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்!
பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது
மதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர்! பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பி.ஜே.பி.யின்  தேர்தல் அறிக்கை   பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ப. சிதம்பரம் : பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய அச்சுறுத்தல்கள் !

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவது
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மூன்று சர்ச்சைக்குரிய பிரச்னைகள் இடம்பெற்றிருப்பதற்காக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
 இது தொடர்பாக அவர் காரைக்குடியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம் தமது உண்மையான முகத்தை வெளிகாட்டியிருக்கிறது. 3 சர்ச்சைக்குரிய பொருள்களை அரசு நிர்வாகத்தில் நுழைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, தேர்தல் அறிக்கையில் மூன்று சர்ச்சைக்குரிய பிரச்னைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவது ஆகியவை.

டெல்லியில் மோடியின் பிரசாரம் ரத்து ! டெல்லி மக்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்துவிட்டது: காங்கிரஸ்

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெறுவதாக இருந்த மோடியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஹரூண் யூசுப் மற்றும் முகேஷ் சர்மா ஆகியோர் கூறுகையில்:- ''நேற்று முன்தினம் தக்சின்புரியில் ராகுல் காந்தி நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பிரசாரத்தை கண்டு பா.ஜ.க. பயந்து விட்டது. அதனால்தான் ராம்லீலா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த மோடியின் பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி மக்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்துவிட்டது. பா.ஜ.க. தலைவர்களால் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணம் டெல்லியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3டி தொழில்நுட்பங்களில் பிரசாரம் செய்தாலும் மக்கள் வர மாட்டார்கள் என்ற பயத்தில்தான் பா.ஜ.க. ராம்லீலா மைதானத்தில் நடக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்துள்ளது. இது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. பா.ஜ.க. தலைவர்கள் தேர்தலுக்காக செலவிடும் இந்த பணத்தை கள்ளச்சந்தையிலிருந்து வசூலித்திருக்கிறார்கள். மக்களின் முன் பா.ஜ.க.வின் உண்மை முகம் தெரிந்துவிட்ட போதிலும் இதுபோன்று கோடிக்கணக்கான பணத்தை பா.ஜ.க. செலவழித்துக் கொண்டிருக்கிறது.'' என்று கூறினர். maalaimalar.com/

ராபர்ட் வாத்ரா மூன்று மாதத்தில் ரூ.50 கோடி சம்பாதித்தது எப்படி? Priyanka Gandhi to Divorce Robert Vadra?

சண்டிகார்: ""சோனியாவும், அவர் குடும்பத்தினரும், அரியானா விவசாயிகளிடம், நிலத்தை அபகரித்து, ஏஜென்ட் மூலமாக, அந்த நிலங்களை விற்பனை செய்கின்றனர். இதன் மூலம், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, மூன்றே மாதங்களில், 50 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இது எப்படி சாத்தியம் என, அவர் விளக்குவாரா?'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.அரியானா மாநிலத்தில், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒரே கட்டமாக, வரும், 10ம் தேதி, 10 தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, ஜாஜ்ஜர் என்ற இடத்தில், நேற்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது: அரியானா மாநிலத்திலும், மத்தியிலும், காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது. இரு அரசுகளும் இணைந்து, இங்குள்ள விவசாயிகளை அச்சுறுத்தி, அவர்களின் நிலங்களை அபகரிக்கின்றன. விவசாயிகளிடமிருந்து, மிகக் குறைந்த விலைக்கு, நிலங்களை வாங்கி, ஏஜென்டுகள் மூலமாக, அந்த நிலங்களை விற்று, கொள்ளை லாபம் அடிக்கின்றன.

திங்கள், 7 ஏப்ரல், 2014

அமலாபால் - இயக்குநர் விஜய் திருமணம்!

கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை.
இந்நிலையில் விஜய் இயக்கிய சைவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது.  இந்த விழாவிற்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அமலாபால்.