சனி, 29 மார்ச், 2014

சாவித்திரி சந்தித்த சோதனைகள் ! ஏமாற்றிய உறவினர்கள் ! சினிமாவின் மறுபக்கம் 63.





இதைக்கேட்டதும் நான் துணுக்குற்றேன்.
பிராப்தம்’’ படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்கான இடத்தை அதன் கதை அமைப்பிற்கு ஏற்றபடி, தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணத்தை மையமாகக் கொண்டு அதன் மேற்கு அல்லது கிழக்குப் பகுதிகளில் காவிரிக் கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் நிறைந்த ஏராளமான கிராமங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சென்னையிலிருந்து 225 மைல்களுக்குள் போக்குவரத்து வசதியாகவும், செலவும் குறைவாகவும் இருக்கும் என்று சாவித்திரிக்கு எடுத்துக் கூறினேன். அவர் அதைக் கேட்கவில்லை.
‘சென்டிமென்டாக ‘மூகமனசுலு’ தெலுங்குப்பட ஷூட்டிங் நடந்த அதே ஆந்திரப்பிரதேச கோதாவரி நதிக்கரை ஊர்தான் வேண்டும்’ என்று கூறி அங்கு படப்பிடிப்பிற்காக ‘செட்டிங்ஸ்’ மற்றும் ஏற்பாடுகளைச் செய்ய முனைந்துவிட்டார்.
தமிழ்ப்படத்திற்கு தகுந்தவாறு – தெலுங்கு கோதாவரி நதியை நான் காவிரி நதியாக மாற்றியிருந்ததை அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு நேரத்தில் நான் எது சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்ட என் அண்ணி சாவித்திரி, இப்பொழுது அவர் எது சொன்னாலும் நான் கேட்க வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டார்.

எம்.ஜி.ஆர். காலத்து ஜெயலலிதா சேலம் அ.தி.மு.க. மேடையில்! ஒ.பி.எஸ் அலர்ட் பிளீஸ்!!


“வணக்க்க்…..கம்” புகழ் நிர்மலா பெரியசாமி வித்தியாசமான கெட்டப்பில் அ.தி.மு.க. மேடைகளில் தோன்றி அசத்துகிறார். ஜெயலலிதா ஆரம்ப நாட்களில் அ.தி.மு.க. மேடைகளில் தோன்றிய தோற்றத்தை இவர் பிரதிபலிக்கிறார் என புளகாங்கிதம் அடைகின்றனர் அ.தி.மு.க.வினர்.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி, வணக்கம் என்ற வார்த்தையை வணக்க்க் ……கம் என வித்தியாசமாக உச்சரித்து பலரது மனதைக் கவர்ந்து புகழ் பெற்றவர். இதனால், இவரது வணக்க்க்கத்துக்கே ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. இவரது உச்சரிப்பை மறைந்த நடிகர் மணிவண்ணன்கூட அடிக்கடி மிமிக்ரி செய்வதுண்டு.
சன் டிவியில் இவரது செய்தி நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென இவர் செய்திகளில் மிஸ்ஸானதால் பலரும் நிர்மலா பெரியசாமி எங்கே எனத் தேடத் தொடங்கினர். பின்னர்தான் விஷயம் வெளியே கசிந்தது.

அழகிரி : முத்துராமலிங்கத்தை தோற்கடியுங்கள் ! திமுக 4-வது இடத்திற்குப் போக வேண்டும் !!! ?

உசிலம்பட்டி: லோக்சபா தேர்தலில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை வரும் தேர்தலில் படுதோல்வி அடையச்செய்ய வேண்டும் என்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார். மேலும் இத் தேர்தலில் திமுக 4-வது இடத்திற்குப் போக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திமுக.,வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தி.மு.க. நகர பொறுப்பாளர் அஜித் பாண்டியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது தந்தை இறப்பிற்கு துக்கம் விசாரித்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சவுந்திரபாண்டியன் மனைவி இறந்ததையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற மு.க.அழகிரி, அவரிடமும் துக்கம் விசாரித்தார்.;பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரசை மன்னிக்க தயார் என கருணாநிதி தான் சொல்லி இருக்கிறார்; காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கப் போவதாக நான் ஒரு போதும் கூறவில்லை என்றார். மேலும் தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை வரும் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து அவருக்கு 4வது இடத்தை பெற்றுத்தர வேண்டும். என தமது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற மு.க.அழகரி பேசி உள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
tamil.oneindia.in

நடிப்பு மீது நம்பிக்கை இல்லாத மாணவி

நம்பிக்கையே இல்லாமல் நடிக்க
வந்திருக்கிறேன் என்றார் 10ம் வகுப்பு மாணவி மாளவிகா.
பார்வையற்றவர்களின் காதல் மற்றும் உணர்வுகளை மையமாக வைத்து ‘குக்கூ‘ படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் வெற்றி நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.  இயக்குனர் ராஜுமுருகன், தயாரிப்பாளர் சண்முகம், ஹீரோ தினேஷ், ஹீரோயின் மாளவிகா மற்றும் பட குழுவினர் பங்கேற்றனர். அப்போது மாளவிகா கூறியதாவது:
எனக்கு 16 வயது ஆகிறது. நடிக்க கேட்டு எனக்கு அழைப்பு வந்ததாக என் தந்தை கூறினார். கேலி செய்கிறார் என்று எண்ணினேன். பிறகுதான் அது உண்மை என்று தெரிந்தது. எனக்கு நடிப்புபற்றி எதுவும் தெரியாது. நம்பிக்கையே இல்லாமல் இயக்குனர் ராஜூ முருகனை சந்தித்தேன். பார்வையற்ற பெண்ணாக நடிக்க வேண்டும்.

ஆம் ஆத்மி : வாரணாசியில் கேஜ்ரிவாலின் புதிய அரிதாரம்

அரவிந்த் கெஜ்ரிவால் புனித கங்கையில் நீராடிய காட்சிகள் இன்றைய செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. சந்தனப் பட்டை, குங்குமத்துடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். தரிசனத்துடன் சேர்த்து இங்க் அபிஷேகமும் கிடைத்திருக்கிறது. எத்தனையோ கறைகளைப் போக்கியுள்ள கங்கை இதையும் இந்நேரம் போக்கியிருக்கும் என்று நம்பலாம்.
இங்கே பிரச்னை தாக்குதல் அல்ல. அதைச் செய்தவர்கள் யார் என்பதும் அல்ல. அரவிந்த் கெஜ்ரிவால் எதற்காக இந்தப் புனித நீராடலை காமிரா சகிதம் நிகழ்த்தியிருக்கிறார்? நரேந்திர மோடியை வாரனாசியில் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டுமானால் இந்துக்களின் வாக்குகளைக் கவரவேண்டும்; அதற்குப் புனித கங்கையில் நீராடவேண்டும் என்று அவர் நம்புகிறாரா?

மோடியை ஆதரித்து வருபவர்கள் மீது சாணியை கரைத்து வீசுவோம்- சேலத்தில் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

சேலத்தில் இன்று வெள்ளிக்கிழமை  ஜூம்மா மசூதியின் வாசலில் தே.மு.தி.க வேட்பாளர் சுதீஷ் துண்டறிக்கைகளை கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வந்த பெறும் திரளான இஸ்லாமியர்கள் ‘எங்கள் இனத்தை கொத்து கொத்தாக குஜராத்தில் கொன்று குவித்தது பா.ஜ.க கட்சி மோடி. அவரை ஆதரித்து நீங்கள் இங்கேயே பிரச்சாரம் செய்யலாமா?’ என்று கொந்தளித்தனர்.> இந்நிலையில் அங்கே தி.மு.க வேட்பாளர் உமாராணி செல்வராஜூம் வாக்கு சேகரிக்க வந்த நிலையில் தி.மு.க வினர் தங்களை தாக்கி விட்டதாக பேச ஆரம்பித்தனர் தே.மு.தி.க.வினர்.  இந்த தகவலால் இருதரப்பும் மோதிக்கொண்டனர்.  காவல்துறை தலையிட்டும் பிரச்சனை அடங்கவில்லை. அதன் பின்னும் இஸ்லாமியர்கள் தே.மு.தி.க விற்கு எதிராக கோசமிட அங்கிருந்து வாக்கு சேகரிக்காமலேயே கிளம்பினார் சுதீஷ். நாம் அங்கே திரண்டு இருந்த இஸ்லாமியர்களிடம் பேசினோம். த.மு.மு.க வை சேர்ந்த இப்ராகிம் கூறும்போது , ‘எங்கள் இஸ்லாமிய இனத்தை குஜராத்தில்  கொன்று குவித்த கட்சி பா.ஜ.க மோடி. அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு எந்த தைரியத்தில் இங்கு பள்ளிவாசல் முன்பு வந்து ‘மோடியை பிரதமராக்குங்கள்’ என்று வாக்கு கேட்கலாம்? இனியும் இவ்வாறு பள்ளிவாசல் முன்பு வந்து அவர்கள் வாக்கு கேட்டால் சாணியை கரைத்து மூஞ்சில் ஊற்றுவோம்’ என்றார் ஆக்ரோஷமாய்.
காவல்துறையோ ‘தே.மு.தி.க –தி.மு.க இரண்டு கட்சிகளுக்குமே இங்கு பள்ளிவாசல் முன்பு வந்து வாக்கு சேகரிக்க அனுமதி தரவில்லை.மீறி வந்துள்ளனர்’ என்றனர்.
பதட்டமாக உள்ளது சேலம். nakkheeran.in/

விஜயகாந்தின் சகோதரர் k.பால்ராஜ் அதிமுகவில் இணைந்தார்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் கே.பால்ராஜ் மனைவியுடன் மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் கே.பால்ராஜ், அவரது மனைவி வெங்கடலட்சுமி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கிய முதல்வர், நலம் விசாரித்தார்.

சவூதி மன்னரை ஒபாமா சந்திப்பது வெட்கக் கேடு: சிறைபட்டிருக்கும் மகள்கள் பேட்டி

blame their father King Abdullah as their mother calls on Obama to help free them Alanoud AlFayez, 57, appealed to Obama on Thursday as he prepares to visit Saudi Arabia and King Abdullah married to the king but fled to London after he divorced her in 2003

  • The women and their mother say they're being starved and physically and psychologically abusedசவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்திக்க சமீபத்தில் ஒளிபரப்பாகிய இந்த பேட்டி, உலகில் உள்ள பெண்ணியக்க வாதிகளிடமிருந்து கண்டனக் குரல்களை எழச் செய்தது. தற்போது ஒபாமா சவூதி வந்திருக்கும் நிலையில் மன்னர் அப்துல்லாவின் மகள்களான இளவரசிகள் சஹர் மற்றும் ஜவஹர் கூட்டாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர். ’பெற்ற மகள்களான எங்களையே வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து மன்னர் சித்திரவதை படுத்துவதை வைத்து மற்ற பெண்களின் கதி என்ன? என்பதை சிந்தித்து பாருங்கள். எங்களுக்கு நேர்ந்த அவலம் சர்வதேச சமுதாயத்தின் பார்வைக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக பின்னால் ஏற்படப் போகும் ஆபத்தை கூட பொருட்படுத்தாமல் இந்த பேட்டியை தருகிறோம்.
  • Admk வெற்றிக்கு வேட்டு வைக்குது பஸ் டிக்கெட்டு ?

    அவன் பட்டு வேட்டிக்கான கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் அல்லவா களவாடப்பட்டது? சுதந்திரத்தைப்பற்றி எழுதப்பட்ட கவிதை, இன்றைய தமிழக அரசியலுக்கும் கச்சிதமாய்ப் பொருந்திப் போகிறது. தி.மு.க., மீதான அதிருப்தியால், அ.தி.மு.க.,வுக்கு வாக்களித்த மக்களின் உண்மையான நிலை, இன்று இதுதான்.லஞ்சம், ஊழல் அதிகரிப்பு, அதிகார அரசியல், மக்களின் உணர்வுகளை அறியாத மக்கள் பிரதிநிதிகள்... இவற்றோடு, மின் தடை, ஈழத்தமிழர் பிரச்னை என பல காரணங்களையும் மனதில் வைத்தே, கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க.,வைத் தோற்கடித்தார்கள் மக்கள். ஆனால், இப்போதைய நிலை, 'உள்ளதும் போச்சுடா...' என்ற நிலையில்தான் இருக்கிறது.மற்றவற்றை விடுங்கள்...சாதாரண சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கம் அதிகமாகப் பயன் படுத்தக் கூடிய பஸ் கட்டணத்தில் இந்த அரசும், அதிகாரிகளும் செய்திருக்கிற, செய்து கொண்டிருக்கிற அநியாயத்தை எந்த மக்களும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

    வெள்ளி, 28 மார்ச், 2014

    சமந்தா : நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்

    சித்தார்த்துடன் காதலா என்றதற்கு நான் ஒருவரை காதலிக்கிறேன் அவர் யார் என்பது சஸ்பென்ஸ் என்றார் சமந்தா.‘நான் ஈ‘ பட ஹீரோயின் சமந்தா அளித்த பேட்டியில் கூறியதாவது:நான் பணக்காரவீட்டு பெண் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். ஆடம்பர கார், நட்சத்திர ஓட்டல் அறையில் தங்குதல் என்பதெல்லாம் கனவில்கூட நினைத்துப்பார்த்ததில்லை. அதெல்லாம் எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது.  எத்தனையோ பேர் வாழ்வில் உயர்வதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே ஜெயிப்பதில்லை. விதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதுதான் என்னை இந்தநிலைக்கு உயர்த்தி இருக்கிறது.சினிமா மூலம் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. தோல் அலர்ஜி பிரச்னையால் மணிரத்னம் ஷங்கர் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதுவும் விதியின் செயல்தான். அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விதி இருந்தால் நிச்சயம் நடக்கும். இந்தி படங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நம்பர் ஒன் நடிகை போட்டியிலும் நம்பிக்கை இல்லை. சித்தார்த்துடன் காத - tamilmurasu.org

    அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

    ஞாநி
    ஜெமினியில் விக்ரம் “ஓ” போடச் சொல்லி பாடுவதற்கு முன்பேயே தமிழக வாக்குச் சாவடிகளில் ‘ஓ’ போடப் சொல்லி காலம் எல்லாம் இசைத்தவர் பத்திரிகையாளர் ஞாநி சங்கரன். அவரது ‘கோரிக்கையை ஏற்று’ தேர்தல் ஆணையமும் “நோட்டா” பொத்தானை இந்த தேர்தலில் அறிமுகப்படுத்துகிறது. ஆனால் இன்று நோட்டாவுக்கு ஓ போடச் சொல்லும் நிலையில் ஞாநி இல்லை.

    ஓ போடச் சொன்ன ஞாநியை மாற்றியது அமெரிக்க ஆத்மியின் ‘யானம்’ !
    ஆம். அவர் தேர்தல் அரசியலில் போட்டியிடும் ஞானத்தை பெற்று விட்டார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போட்டியிடப் போகிறார். இதைத் தொடர்ந்து அவரை ஆதரித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர். அதில் முக்கியமானது, ஆம் ஆத்மி கட்சி மீதான விமரிசனங்களை ஞாநி எப்படி எதிர்க்கொள்கிறார் என்பது. இந்த எதிர்கொள்ளலிலிருந்தே அவரது ஆம் ஆத்மி ஞானத்தை உண்மையில் யானத்தை (24-ம் புலிகேசியின் ஞானம்) அறியலாம்.
    “ஏதோ நம்மாலான தானம்” என்று கோவில் படிக்கட்டு பிச்சைக்காரர்களுக்கு தர்மமளிக்கும் ‘வள்ளல்கள்’ போல “ஏதோ நம்மாலான தொண்டு அரசியல்” என்று மட்டும் ஞாநியின் ஆம் ஆத்மி ஞானத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் தமிழகத்தில் ஞாநியோ இல்லை ஒட்டுமொத்த ஆம்ஆத்மியையோ கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்யுமளவு அவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் சாதிக்காத போதே இவர்களது சந்தர்ப்பவாதம் எப்படி விசுவரூபமெடுக்கிறது என்பதை முக்கியத்துவம் கொடுத்துத்தான் பார்க்க வேண்டும்.

    ப. சிதம்பரம், அழகிரி திடீர் சந்திப்பு: மகன் கார்த்திக்கு ஆதரவு கோரினாரா?


    மதுரை: மு.க. அழகிரியும், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் திடீர் என்று சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியை பல்வேறு கட்சியினர் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சென்று தனது தாய் தயாளு அம்மாள் மற்றும் தங்கை கனிமொழியை சந்தித்த அழகிரி அங்கிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் மதுரை வந்த அதே ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் பயணம் செய்தார். மதுரை விமான நிலையத்திற்கு வந்த உடன் அவர்கள் இருவரும் விஐபி பயணிகள் காத்திருக்கும் இடத்திற்கு சென்று சிறிது நேரம் பேசினர். அதன் பிறகு அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டனர். அழகிரியை பல்வேறு கட்சியினர் சந்தித்து ஆதரவு கோரி வருவதால் அவர் தேர்தல் வேலையில் வெளிநாட்டுக்கு செல்லப் போவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சிதம்பரம், அழகிரி சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க
    tamil.oneindia.in

    அமிதாப் பச்சன் மூட நம்பிக்கைய வளர்ப்பதாக முறைப்பாடு

    தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சி மூலம் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் நடிகர் அமிதாப்பச்சன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:– இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உணவு பொருள் நிறுவனம் ஒன்றின் சார்பாக தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் நடித்து உள்ளார். அதில் அவர் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் நடித்து இருக்கிறார். பேய்–பிசாசு போன்றவை இருப்பதாக நம்பும் வகையில் அந்த விளம்பரம் அமைந்துள்ளது. இது பொய்யான, மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பது ஆகும்.இதுதொடர்பாக நான் பாந்திரா போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதனால் கோர்ட்டை நாடி உள்ளேன். அமிதாப்பச்சன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது மராட்டிய மூட நம்பிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு நேற்று நீதிபதி சீதா குல்கர்னி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏப்ரல் 8–ந்தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்


    கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலங்களை தாரை வார்க்கும் மோடி!

    விவசாயி - அதிகாரிவிவசாயிகளை கொடூரமாக வதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலங்களை தாரை வார்ப்பதை குஜராத்தில் மிகச் சிறந்த முறையில் கொள்கையாக செய்து வரும் மோடிதான் இந்தியா முழுவதிலும் விவசாயிகளை ரட்சிக்கப் போகிறாராம்.
    காராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒட்டிப் போன விவசாயிகளின் துயரத்தை ஆய்வு செய்ய வந்திருக்கும் கொழுத்துப் போன மத்திய அரசு அதிகாரிகள். (படம் : நன்றி The Hindu)
    34 வயதான, முதுகலை பட்டதாரியான ராஜேந்திர லோம்தே என்ற விவசாயி மார்ச் 12-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு மார்ச் 18-ம் தேதி உயிரிழந்தார்.

    கண்ணீரில் மிதக்கும் மக்களை மோடி காப்பாத்துவார் என்று தண்ணீரில் மிதக்கும் விஜயகாந்த் ?

    கண்ணீரில் மிதக்கும் மக்களை காப்பாற்றப்போகிறார் நரேந்திரமோடி : விஜயகாந்த்  பேச்சு (படங்கள்)
    மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட் பாளர்  இல.கணேசனுக்கு ,   திருவான்மியூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டம் இன்று இரவு பங் கேற்று ஆதரவு திரட்டினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இக்கூட்டத்தில் அவர்,  ‘’தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்று பாட்டு உண்டு.  அதிமுகவும் திமுகவும் மக்களை கண்ணீரில் மிதக்க வைத்துள்ளனர்.  நரேந்திரமோடிதான் கண் ணீரில் மிதக்கும் மக்களை காப்பாற்றப்போகிறார்’’ என்று பேசினார் விஜயகாந்த்.  குடை கோடி ஆலவட்டத்துடன் கண்கொள்ளா காட்சி

    Dinamalar : கனிமொழி, ராஜாத்தியிடம் அழகிரி பேசியது என்ன? நியாயம் கிடைக்க செய்வதாக வாக்குறுதி

    சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, மகள் கனிமொழி ஆகியோரை, சென்னை சி.ஐ.டி., காலனி இல்லத்தில், அழகிரி நேற்று காலை சந்தித்தார். அவர்களுடன், ஒரு மணி நேரம் பேசினார். அப்போது, 'எனக்கும், என் ஆதரவாளர்களுக்கும் கட்சியில் கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு, நீங்கள் இருவரும் ஆதரவு தர வேண்டும்' என, அழகிரி கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு, 'உன் வேண்டுகோளை, கருணாநிதியிடம் தெரிவிக்கிறேன். அதுவரை, அமைதியாகவும், பொறுமையாகவும் இரு' என, ராஜாத்தி, அழகிரிக்கு யோசனை தெரிவித்ததாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வியாழன், 27 மார்ச், 2014

    சமஸ்கிருத்தை உயர்வாக மதிப்பீட்ட பாரதியை கண்டித்து வ.உ.சி


    _13729174630
    திரு. பொ. வேல்சாமி என்பவர் January 5 அன்று அவருடைய facebookல் // தெலுங்கு பிராமணர் + கப்பலோட்டிய தமிழர் = தொல்காப்பிய இளம்பூரணம்.// என்ற தலைப்பில் சில தகவல்களை எழுதியிருந்தார்.
    அதில், //தமிழ்நாட்டில் சுதந்திர வேட்கையை முன்னிறுத்தி ஆங்கிலேய அரசாங்கத்துடன் பெரும் போராட்டத்தை நடத்திய ஒரு சிலரில் பாரதியும் வ.உ.சி யும் குறிப்பிடத்தக்கவர்கள்.// என்றும் எழுதியிருந்தார். அதில் என்னுடைய கருத்தை பதிவிட்டேன். அது தொடர்பாக நடந்த விவாதம்(?)
    *
    வே. மதிமாறன்: //பாரதியும் வ.உ.சி யும்// என்பதற்கு பதில், வ.உ.சி யும் சுப்பிரமணிய சிவமும் என்று இருந்தால்தான் சரியாக இருக்கும்.
    இந்தக் கருத்தை நேற்று இரவே எழுதியிருந்தேன். அதைக் காணவில்லை. அதன் பிறகு நண்பர்கள் பட்டியலில் இருந்து நான் விலக்கப் பட்டிருக்கறேன்

    டி.ஆர் பாலு: காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் …அழகிரியும் காங்கிரசும் சேரகூடாது அதான்

    கலைஞரும் பாலுவும் திடீரென்று காங்கிரஸ் மீது காதல் தான் கொள்வது வெறும் பொய் காதல்தான் ,எல்லாம் அழகிரிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் தந்துவிட கூடாது என்ற மிக உயர்ந்த நோக்கம் தான் .
    சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று டி.ஆர்.பாலு ஆருடம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வின் தஞ்சை தொகுதி வேட்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கூட்டணி அமையும்" என்று அவர் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து ஆதரவு நிலை எடுத்துள்ளார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு. டி.ஆர்.பாலு சாபவிமோசனம் தஞ்சை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு. தஞ்சையை அடுத்து, கண்டியூரிலுள்ள கரசாப விமோசன பெருமாள் ஸ்வாமி கோவிலில், கடந்த 25ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். இதை, படம் பிடித்த டி.வி., சேனல் நிருபரிடம் இருந்து கேமரா 'சிப்'பை, டி.ஆர்.பாலு உத்தரவின்பேரில் தி.மு.க.,வினர் பறித்தனர். சிப் ஒப்படைப்பு இது குறித்த தகவல் ஊடகங்கள், பத்திரிக்கை வாயிலாக வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து, பறிக்கப்பட்ட கேமரா சிப்பை டி.ஆர்.பாலு ஒப்படைத்தார்.  கலைஞரும் காங்கிரசை மன்னிப்போம் என்ற கருத்தில் கூறியது இதற்காகத்தான் , அழகிரியின் வேகம் எங்கே போகும் என்பது நன்றாகவே விளங்கி விட்டது, தேர்தலில் வெல்வது இரண்டாம் பட்சம் ஆனால் அழகிரி தலை தூக்க கூடாது , இதுதானே தற்போது உள்ள பிரயோரிடி ?
    tamil.oneindia.in

    கனிமொழியை சந்தித்து பேசிய அழகிரி: பொறுத்திருங்கள், 2 மாதங்களில் நடவடிக்கை பாயும்..!


    சென்னை: திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பிறகு சென்னை வந்துள்ள மு.க. அழகிரி திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவரும், தனது தங்கையுமான கனிமொழியை இன்று சந்தித்து பேசினார். திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பிறகு மு.க. அழகிரி நேற்று சென்னை வந்தார். திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிச் சென்ற பிறகு நேற்று மாலை கோபாலபுரம் சென்று தனது தாய் தயாளு அம்மாவை சந்தித்து பேசினார் அழகிரி. சுமார் அரை மணிநேரம் தாயுடன் இருந்துவிட்டு அவர் சென்றார். இந்நிலையில் அழகிரி திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவரும், தனது தங்கையுமான கனிமொழியை இன்று சந்தித்து பேசினார். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார் அழகிரி. முன்னதாக 2ஜி வழக்கில் கைதாகி கனிமொழி திகார் சிறையில் இருந்தபோது அவரை அவ்வப்போது சந்தித்து ஆறுதல் கூறினார் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் மட்டும் 1000 போலி கால்சென்டர்கள் ? நெசமாலுங்களா? நம்மளைய வச்சு காமடி கீமடி பண்ணலையே??


    போலி கால்சென்டர்கள்கடந்த ஆண்டு வெளியான ஒரு தரவு டெல்லியில் மட்டும் 10,000 போலி கால்சென்டர்கள் இயங்கிவருவதாகத் தெரிவிக்கிறது. இந்த கால்சென்டர்களின் பிரதானமான செயல்பாடு, போலிப் பணப் பரிவர்த்தனை மோசடிகள்தான்.
    பிரிட்டனைச் சேர்ந்த 60,000 பேரிடமிருந்து இந்த மோசடிகள் மூலம் ரூ. 100 கோடி அளவில் பணம் பெறப்பட்டதாகக் கடந்த ஆண்டு ‘டெய்லி மெயில்’ என்ற பத்திரிகை தெரிவிக்கிறது. இந்த கால்சென்டர்கள் தினமும் பல்லாயிரக் கணக்கானவர்களை மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசிகள் மூலமாகவும் தொடர்புகொள்கின்றன.
    பெரும்பாலானவர்கள் விழிப்பாக இருந்தாலும், தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் இதில் ஏமாந்துவிடுகிறார்கள். அமெரிக்க வங்கிகளில் கடன்பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாதவர்கள் இந்த கால்சென்டர்களின் இலக்குகளில் முக்கியமானவர்கள். அவர்களுடைய தனிப்பட்ட தரவுகள் இந்த கால்சென்டர் நிறுவனங்களுக்கு எப்படிக் கிடைக்கின்றன?
    நாம் வாழும் காலம் அந்தரங்கம்  இல்லாத காலம். எல்லாருடைய தனிப்பட்ட தரவுகளும் அரசாங்கங்கள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பெருவாரியாகத் திரட்டப்படுகின்றன. இந்தத் தகவல்களைக் கையாளும் பணியில் இருப்பவர்களில் சிலர் கருப்பு ஆடுகளாக மாறினாலே போதும் தகவல்கள் கசிவதற்கு.
    இந்த கால்சென்டர்களால் ஏமாற்றப்படுபவர்களின் அவலத்துக்கு இணையானது, அங்கே கால்சென்டர்களில் பணிபுரிபவர்களின் அவலம்.

    BJP க்குள் நடக்கும் பனிப்போர் வீதிக்கு வந்த கேலிக் கூத்து! பின் னணியில் RSS


    போபால், மார்ச் 26- பி.ஜே.பி.க்குள் நடக்கும் பனிப்போர் இப்பொழுது வீதிக்கும் வந்து சந்தி சிரிக் கிறது.
    பா.ஜ.க., பிரதமர் வேட் பாளர், நரேந்திர மோடிக் கும், கட்சியின், முக்கிய தலைவர்களில் ஒருவரான, சுஷ்மா சுவராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட் டுள்ளதாக வெளியாகும் தக வல்களால், பா.ஜ.க.,வினர் இடையே கலக்கம் நிலவு கிறது.
    தேர்தல் பிரச்சார கூட் டங்களில், சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடியின் பெயரை உச்சரிப்பதில்லை என, தகவல் வெளியாகியுள் ளது.
    வேட்புமனு தாக்கல்
    பா.ஜ.க.வின் மூத்த தலை வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜஸ்வந்த் சிங்கிற்கு, ராஜஸ்தான் மாநி லம், பார்மர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, வாய்ப்பு மறுக்கப்பட்டது. பா.ஜ.க., தலைவர்கள், தனக்குத் துரோகம் செய்து விட்டதாக கூறிய ஜஸ்வந்த் சிங், அந்தத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜஸ் வந்த்சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு, பா.ஜ.க., மூத்த தலைவர் களில் ஒருவரான, மக்க ளவை எதிர்க்கட்சித் தலை வர், சுஷ்மா சுவராஜ் கண் டனம் தெரிவித்திருந்தார்.

    10000 கோடியை ஜாமீனாக டெபாசிட் செய்த சஹாரா குழும சுப்ரதா !

    முதலீட்டாளர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி பணம் திரட்டிய வழக்கில், சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க, சஹாரா நிறுவனம் ரூ.10,000 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தர வேண்டிய இந்தத் தொகையை செலுத்துவதற்காக, சஹாரா குழுமத்தின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலீட்டாளர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி பணம் திரட்டிய வழக்கில், சுப்ரதா ராய் மற்றும் சஹாரா குழுமத்தின் இரண்டு இயக்குனர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீனில் விடுவிக்க சஹாரா நிறுவனம் ரூ.10,000 கோடியை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும் என்று நிபந்தணை விதித்து உத்தரவிட்டது.

    சீனிவாசன் பதவி விலகுகிறார்: பிசிசிஐ தலைவர் ஷிவ்லால் யாதவ்?


    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி மாதம் ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.
    அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான தகவல்களை கூறி குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
    இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வந்தபோது ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் விலகவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். பதவி விலகாவிட்டால் தாங்களே உத்தரவிட வேண்டி இருக்கும் என்று தெரிவித்தனர்.

    ஸ்டாலின் கலைஞரை எப்படி பிளாக் மெயில் செய்து அழகிரியை வெளியேற்றினார் ?

    அழகிரியை கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், பிரசாரத்திற்கு போக மாட்டேன்' என, கருணாநிதியிடம் திட்டவட்டமாக தெரிவித்த ஸ்டாலின், சொன்னபடியே, தன், இரண்டாம் கட்ட பிரசாரத் திட்டத்தை ரத்து செய்து விட்டார். அதன் விளைவாகவே, தி.மு.க.,வில் இருந்து, அழகிரியை அடியோடு நீக்கும் அதிரடி நடவடிக்கையை கருணாநிதி எடுக்க வேண்டியதாகி விட்டது என, அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, அழகிரியை நீக்கிய பின்னால் தான், மதுரை, தேனி, திண்டுக்கல்லுக்கு பிரசாரத்திற்கு செல்வேன் என, ஸ்டாலின் நிபந்தனை விதித்துள்ளளார். அது நடந்த பிறகே, நேற்று அவரது தென் மாவட்ட பிரசார பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் இடையேயான மோதல், நீண்ட காலமாக உள்ளது. ஒவ்வொரு முறையும், இந்த பிரச்னை வெளியே வரும்போது, ஏதாவது சமாதானம் செய்து, அதை மறைத்து விடுவதையே, கட்சித் தலைமை வாடிக்கையாக கையாண்டது.
    அழகிரி எங்காவது வேற்று கிரகத்தில் குடியேறினால் தவிர பிரச்சினை இனித் தீரப்போவதில்லை. 

    புதன், 26 மார்ச், 2014

    கருணாநிதி வீட்டில் அழகிரி திடீர் வருகையால் பரபரப்பு

    திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி இன்று காலையில் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.  இன்று மாலை திமுக தலைவரும், தந்தையுமான கலைஞர், சிந்தாதிரிப்பேட்டையில் மக்களை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
    இதைத்தெரிந்து கொண்ட அழகிரி, கலைஞர் இல்லாத சமயத்தில் கோபாலபுரம் சென்றார். அங்கே, தன்னு டைய தாயார் தயாளு அம்மாளை சந்தித்தார்.
     தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்த அழகிரி, உருக்கமாக சில விசயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த  சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.   பின்னர், தாயாரிடம் விடைபெற்றுக் கொ ண்டு,  லை,சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    பிராமணர் சங்கம் அழைக்கிறது: ’தமிழ்த்தேசியத்தின் பேரில் சுயஜாதி பாசத்தோடு வாங்க தமிழ் உணர்வை ஊட்டலாம்..’


    தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் திராவிட இயக்க எதிர்ப்பு என்கிற பெயரில் தொடர்ந்து திமுக வை மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அதில் ஒரு ‘பார்ப்பன பிண்ணனி இருக்கிறது’ என்று பலர் குற்றம்சாட்டினால்… உடனே அனுமார் போல் தங்கள் இதயத்தை பிளந்து காட்டி.. ‘யாரு நானா?’ என்றும் சீறுகிறார்கள்.
    ஆனாலும் இவர்களுக்கு தொடர்ந்து சோதனை வைக்கும் முயற்சியில் இம்முறையும் பிராமணர் சங்கம், அதிமுகவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. அதுவும் ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன எச். ராஜாவை மட்டும் சிவகங்கையில் ஆதரிப்பது’ என்றும் சிறப்பு சலுகை செய்திருக்கிறது?
    இது குறித்து திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள், அதிமுகவை அல்ல.. பிராமணர் சங்கத்தையாவது கேலி செய்திருக்கிறார்கள்?

    விமானம் மூழ்கிய ஆதாரம் எது? மலேசியா பொத்தி வைத்த ரகசியம் இதோ இதுதான்!


    மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு.
    இப்போது நாம் கூறப்போகும் விஷயம், மலேசியாவுக்கு சில தினங்களுக்கு முன்னரே பிரிட்டிஷ் நிறுவனம் இன்மார்சாட்டினால் சொல்லப்பட்டு விட்டது. அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாலைந்து நாட்களை கடத்திய மலேசியா, பின்னர், “விமானம் மூழ்கிவிட்டது” என்று மட்டும் அறிவித்தது.
    அதை எப்படி கண்டுபிடித்தோம் என்று வாய்திறக்கவில்லை.
    அதையடுத்து சீன அரசு ஆதாரம் கேட்டது, பயணிகளின் உறவினர்கள் கேட்டார்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவும், “மலேசியா என்ன வைத்திருக்கிறது என்பதை பார்க்கப் போகிறோம்” என்றது.
    இதையடுத்து மலேசியா தாம் அதுவரை பொத்திக் காத்து வைத்திருந்த ரகசியத்தை அமெரிக்காவுக்கு காட்ட.. மீதியை ஊகித்திருப்பீர்களே.. ஆம், விஷயம் அமெரிக்காவில் லீக் ஆகிவிட்டது.
    இவர்கள் பொத்தி வைத்திருந்த ரகசியம் இதோ இதுதான்:

    கலைஞர் :நன்றி மறந்தவர்கள், திமுகவை பழிவாங்கவே காங்கிரசார் ஸ்பெக்ட்ரம் வழக்கை தொடர்ந்தனர். அன்று காங்கிரசை கைதூக்கி விட்டது திமுக


    சென்னை: தமக்கு கொள்கைதான் முக்கியம்,, நன்றி மறந்தவர் அண்ணன், தம்பி யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டோம்..திமுகவை பழிவாங்கவே ஸ்பெக்ட்ரம் வழக்கை காங்கிரஸ் தொடர்ந்தது என்று திமுக தலைவர்  கலைஞர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வடசென்னை திமுக வேட்பாளர் கிரிராஜன் ஆகியோரை ஆதரித்து சிந்ததாரிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  கலைஞர் பேசியதாவது: நான் திமுகழகத்தின் தலைவன்.. தொண்டர்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்ற நான் இறுமாப்புடன் பேச தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அல்ல. இங்கே இந்துவாக முஸ்லீமாக சீக்கியராக, கிறிஸ்துவராக இருந்தாலும் அனைவரும் தோழர்களே இதற்காக மத ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலை அன்று பாடினர். 1938-ல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன். ஏறத்தாழ 75 ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலேயே உருண்டோடிவிட்டன. ஆனால் அண்ணா பெயரை மட்டும் வைத்துக் கொண்டு ஒப்புக்காக தமிழகத்திலேயே சிலர் கட்சிகள் நடத்துகின்றனர். அப்படி கட்சி நடத்துகிற ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை இடித்து தூளாக்கினார்.

    Hitesh bhagat .3 ஆயிரம் கோடி சூதாட்ட தலைவன் வயிற்று வலியால் துடிதுடித்து G H சில் மரணம்


    கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மும்பை மட்கா சூதாட்ட வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சூதாட்ட கும்பல் தலைவன் ஹிதேஷ் பகத், வயிற்று வலியால் அவதிப்பட்டு அரசு மருத்துவ மனையில் இறந்தார். ரூ.3 ஆயிரம் கோடி சூதாட்ட பிசினஸை கைப்பற்ற தன் தாயுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி தந்தையை படுகொலை செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ராம்கோபால் வர்மாவின் இந்திப் படம் கணக்காய் விரிகிறது ஹிதேஷ் பகத்தின் மட்கா சூதாட்ட பின்னணி.
    3-வது தலைமுறை சூதாட்டம்
    ஹிதேஷ் ஏதோ யதேச்சையாக மட்கா சூதாட்ட பிசினஸுக்குள் வந்து
    விழவில்லை. தாத்தா, அப்பா என்று மூன்று தலைமுறையாக வழிவழியாக வந்த பிசினஸ். தாத்தா கல்யாண்ஜி பகத், குஜராத்தின் கட்ச் பகுதி ரடாடியா கிராமத்தைச் சேர்ந்தவர்.
    பிழைப்பு தேடி 1941-ல் மும்பை வந்தவர். ஆரம்பத்தில் ரோட்டோரத்தில் மசாலா சாமான் கடை வைத்தார். நாளாவட்டத்தில் ஒர்லி பகுதியில் மளிகைக் கடை போட்டவர், கூடவே ‘மட்கா சூதாட்ட’ பிசினஸை யும் ஆரம்பித்தார். ஆண்டுகள் ஆகஆக மட்கா சூதாட்டம் களைகட்டியது.
    பல ஆயிரங்கள் புரண்டுகொண்டிருந்த பிசினஸை கல்யாண்ஜி பகத்தின் மகன் சுரேஷ் பகத் கையில் எடுத்தார். லட்சங்கள் புரளத் தொடங்கின. 1979-ல் ஜெயா செட்டாவை கல்யாணம் செய்தார்.

    விஜய்காந்த் மச்சான் சுதீஷ் : நான் மத்திய அமைச்சராவேன் ! இன்னுமொரு மொள்ளைமாரி ரெடி ?

    சேலம்: சேலத்தில் நானும், தர்மபுரியில் அன்புமணியும் வெற்றிபெற்று அமைச்சராவது உறுதி என்று சேலம் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளராக தேமுதிகவை சேர்ந்த சுதீஷ் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் சேலம் வந்து கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ, பாமக, மதிமுக, ஐஜேகே, கொமதேக ஆகிய கட்சிக ளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இவர் நேற்று பாமக நிர்வாகிகளுடனான சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது வேட்பாளர் சுதீஷ் பேசுகையில், ``ஏற்கனவே சேலம் அறிமுகமான பகுதி என்பதால் நான் இங்கு பாஜக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன்.
    பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக சேரக் கூடாது என மற்ற கட்சியினர் கருதினர். ஆனால், நானும், அன்புமணி ராமதாசும் இக்கூட்டணியில் தான் சேர வேண்டும் என நினைத்தோம். தற்போது சேர்ந்து விட்டோம். இக்கூட்டணி வலுவாக உள்ளது.  நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி ஊரை அடிச்சு உலையில போட இன்னுமொரு மொள்ளைமாரி ரெடி ?

    குக்கூ - அசரவைக்கும் ஒரு படம் ! அழகான மனிதர்களின் Feel good movie

    தமிழ்சினிமாவிற்கு சில நேரங்களில் மூச்சு திணறல் ஏற்படும்போதெல்லாம், அதற்கு சுவாசமூட்டுகிற வகையில் ஒரு படைப்பு வரும். தமிழ்சினிமாவின் ரசிகர்கள் சோர்ந்துபோய் தலைகுனிந்து இருக்கும் போது, அசரவைக்கும் ஒரு படம் வெளியாகி அவர்களை தலைநிமிர்ந்து நடக்க வைக்கும். அப்படி நமக்கு மரியாதையும் காதலும் ஏற்படுத்துகிற ஒரு சினிமா தான் ‘குக்கூ’. இருட்டை மட்டுமே சொந்தமாக வைத்திருக்கும் அந்த அழகான மனிதர்களின் வாழ்வியலை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது ‘குக்கூ’.

    அன்பழகன் மீது வழக்கு தொடர்வேன்; அறிவாலயம் எங்களது உழைப்பு கட்சி என்பது யாருக்கும் சொந்தமல்ல. யாரும் உரிமை கோர முடியாது !


    தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள் மு.க.அழகிரி, “கட்சி யாருக்கும் சொந்தமானதல்ல”  என்றும் பொடி வைத்து பேசியிருக்கிறார்.
    தி.மு.க.விலிருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்ததை அடுத்து, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் அழகிரி. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க.,விலிருந்து என்னை நீக்கும் முடிவு, கருணாநிதியால் எடுக்கப்பட்ட முடிவல்ல” என்றார்.
    “எந்த காரணத்தை காட்டி என்னை நீக்க நிர்பந்திக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த நீக்கத்தில் ‘அவர்களின் நண்பர்களின்’ பங்கு உள்ளது. இந்த உண்மை விரைவில் தெரியவரும்” என்றும் கூறினார்.
    அவர் கூறியதன் அர்த்தம், நிழல் போல இருக்கிறதா? இதைப்பற்றித்தான், இன்று ஆதரவாளர் கூட்டத்தில் பேசினார் என்று தெரிகிறது. அதில் ‘அவர்களின் நண்பர்களின்’ பெயர்களை குறிப்பிட்டு சொன்னாராம்.
    இதை ஏன் செய்தியாளர்களிடம் இன்று சொன்னார்? காரணம், தி.மு.க.வில் புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று அழகிரிக்கு தெரியும்.
    கட்சியில் இருந்து தாம் நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து என்ன சொல்கிறார் அழகிரி?

    அழகிரி பரபரப்பு பேட்டி :நான்தான் திமுக அடித்து சொல்கிறார் !

    தி.மு.க.,வே என் கட்சி தான்; என் கட்சியில் இருந்து என் னை யாரும் நீக்க முடியாது; அதற்கு அதிகாரமும் கிடையாது. என் மீது எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடருவேன்; நீதிமன்றத்தில் அவர்களை சந்திப்பேன்,'' என்று, மு.க.அழகிரி தெரிவித்தார்.

    தி.மு.க.,வில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பரபரப்பு பேட்டி:

    தி.மு.க.,வில் இருந்து நீக்கியுள்ளார்களே... உங்களது அடுத்த கட்டம் என்ன?
    இப்ப தானங்க கட்டம் கட்டியிருக்காங்க... அதுக்குள்ள அடுத்த கட்டம் பத்தி எப்படி பேச முடியும்.

    கட்சி எடுத்த நடவடிக்கையை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்கிறீர்களே?
    எனக்கென்னங்க பயம்; மடியில கனம் இருந்தா தான பயப்படணும்.

    Thiagarajan - Vellore,
    பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாச்சி இனி வருவதை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.யாரையும் குறைத்து மதிப்பிடகூடாது. ஏனென்றால் புரட்சி தலைவர் பாணியில எதிரிய வெளியில விடகூடாது. கூடவே வச்சிக்கணும். அப்போ தான் எதிரியால பிரச்சினை எதுவும் வராது. மே மாதம் வரப்போகிற தேர்தல் முடிவுகளிலிருந்து தி.மு.க. தலைமை இதை உணரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். 

    வான்வழியாக வரும் ஜெயலலிதாவுக்கு தரையில் பாதுகாப்பு கொடுக்கும் ஆயிரகணக்கான போலீசு !

    திருவள்ளுர்(தனி) தொகுதி மாதவரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசிய அவர், வான்வழியே வரும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டினார். மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகரித்துவிட்டன. தி.மு.க.வினால் தொடங்கப்பட்ட அனைத்து  திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன. தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் சிந்திக்கும் என்றும் ஸ்டாலின் பேசினார்.

    அ.தி.மு.க.,வுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு ! பெரிய கொலம்பஸ் கண்டு பிடிச்சான் பாரு ?

    சென்னை: பதிவு செய்யப்பட்ட, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு, அ.தி.மு.க., கட்சியை ஆதரிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கடந்த, 23ம் தேதி, திருச்சி, ஸ்ரீரங்கத்தில், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதி நீங்கலாக, முதல்வர் ஜெ., தலைமையில் உள்ள அ.தி.மு.க.,வை ஆதரிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது' என, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கோரிக்கைகள்:
    * டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும், முன்னேறிய வகுப்பினருக்கு, பிற்படுத்த வகுப்பினர், மிகவும் பிற்படுத்த வகுப்பினருக்கு கொடுக்கப்பட்டது போல், குறைந்தபட்ச வயது உச்சவரம்பை, 32 வயது வரை, தளர்த்த வேண்டும்.

    மிரட்டல் எதிரொலி? மோடிக்கு எதிராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டம்

    வதோதரா : பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில், வதோதரா லோக்சபா தொகுதியில் களம் இறக்கப்பட்ட, நரேந்திர ராவத், 'தேர்தலில் போட்டியிட போவதில்லை' என, திடீரென அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக, புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத் மாநிலம், வதோதரா ஆகிய, இரு லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.வதோதரா தொகுதியில், மோடிக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த, நரேந்திர ராவத், தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார்.ராவத்தின் திடீர் அறிவிப்பை அடுத்து, கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான, மதுசூதன் மிஸ்திரியை, காங்கிரஸ் மேலிடம், வதோதரா தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. மோடிக்கு எதிராக பலமான வேட்பாளரை களம் இறக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மோடியை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்ற பயத்தில் தான், காங்கிரஸ் வேட்பாளர் பின் வாங்கியிருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.உ.பி.,யின் வாரணாசியில், மே மாதம், 12ம் தேதியும், குஜராத்தின், வதோதராவில், அடுத்த மாதம், 30ம் தேதியும் தேர்தல் நடக்கிறது.dinamalar.com

    ஒரு நாய் மாணவர்களின் முதுகில் ஏறி நடந்தது போல இந்த மோடி மக்களின் முதுகில் ஏறி நடக்கப்போகிறார் ஆப்போது தான் இந்த மக்களுக்கு புத்தி வரும்   

    தேர்தல் வாகன சோதனையில் போலீசுக்கு ஜாக்பாட் ! எட்டுலட்சத்தை அமுக்கிய எஸ் ஐ

    வாகனச்சோதனையின் போது சிக்கிய
    எட்டு லட்சம் ரூபாயை சுட்ட போலிஸ் எஸ்.ஐ.;
    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள முட்டல் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி, வயது-40, இவர் இவரது ஊரைச்சேர்ந்த 65 தொழிலாளர்களை கூட்டிக்கொண்டு போய் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள தனியார் தொட்ட்டங்களில் மரம் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.இந்த தொழிலாளர்களுக்கான இரண்டு மாத ஊதியம் ரூ.35 லட்சத்தை, முகவர் குப்புசாமியிடம் கொடுப்பதற்காக கேரளாவை சேர்ந்த மரம் வியாபாரி அஜிஸ் திங்கள்கிழமை பிற்பகலில் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.அவரிடம் ரூ.35 லட்சத்தை குப்புசாமி பெற்றுக் கொண்டு, தனது வேனில் ஓட்டுநர் பாலகிருஷ்ணனுடன் குப்பனூர் வழியாக ஏற்காடு திரும்பியபோது, குப்பனூர் சோதனைச் சாவடியில் வீராணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணி (வயது-50), கோவிந்தன் (வயது-50), இளைஞர் காவல் படையைச் சேர்ந்த பிரபு ஆகியோர் சோதனையிட்டனர்.  

    செவ்வாய், 25 மார்ச், 2014

    ஜெயலலிதாவின் நாலாயிரம் கோடி சொத்துகுவிப்பு விபரத்தை பத்திரிகைகள் மூடி மறைப்பது ஏன் ? நடந்த பேரம் தான் என்ன?


    ஏறத்தாழ நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றையதினம் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாததின் காரணம் என்ன? சூட்சுமம்என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம் தான் என்ன? 
    திமுக தலைவர் கேள்வி - பதில் அறிக்கை:

     கேள்வி :- “இரட்டை இலை” சின்னங்களை சிறிய பேருந்துகள் போன்ற வற்றில் மறைக்கப்பட வேண்டு மென்று பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடுத்த வழக்கில் உயர் நீதி மன்றம் இன்றைய தினம் தீர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி?

     கலைஞர் :- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதி மன்றத் தீர்ப்புக்கு தலை வணங்கி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தேர்தல் ஆணையம் ஜனநாயகம் ரீதியில் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளமாக, ஏற்கனவே இந்த “இரட்டை இலை” சின்னங்களை மறைக்க வேண்டுமென்று கூறியிருந்தது.

    அழகிரி : கட்சியில் இருந்து நீக்கியதால் அறிவாலயத்தை விட்டு வெளியே போ என்று சொல்லமுடியாது ! வழக்கு தொடருவேன்

    கட்சியில் இருந்து நீக்கியதால்  அறிவாலயத்தை விட்டு வெளியே போ என்று சொல்லமுடியாது : அழகிரி பேட்டி
    திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாலை மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
    ஆலோசனைக்குப் பின்னர் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
    கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோவை நீங்கள் சந்தித்தது தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியததால் இந்த விளைவா?
    பொடா சட்டத்தில் சிறை சென்று வந்த வைகோவை சிறை வாசலிலேயே சென்று சந்தித்து கட்டிப்பிடித்தார் கலைஞர்.  கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவரை அவர் கட்டிப்பிடிக்கலாம். நான் சந்திக்க கூடாதா? கலைஞருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? அவர் மட்டும் வைகோவை சந்திக்கலாம் நான் சந்திக்க கூடாதா?
    தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சியினரும் உங்களை  வந்து சந்திப்பது, கட்சிக்கு ஒரு பலவீனத்தை ஏற்படுத்தாதா?
      வீட்டுக்கு வருபவர்களை வரவேண்டாம் என்றா சொல்ல முடியும்.
     உங்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்களே?
    நான் யாருக்கும் ஆதரவு தருவதாக சொல்லவில்லையே.
    தேர்தல் நேரத்தில் உங்கள் நடவடிக்கைகள் கட்சிக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்தியதால்தான் இந்த நடவடிக்கையா?
    வேறு ஏதோ ஒரு காரணத்தால்தான் என்னை நீக்கியுள்ளனர் . ஏதோ ஒரு காரணத்தைக் கூறி என்னை நீக்கியுள்ளனர். இது திமுக தலைவரால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல, நிர்பந்தத்தின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரை மிரட்டிய நம் நண்பர் யார்? மிரட்டலுக்கு உதவியாக இருந்தவர் யார்?  என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த விவரத்தை நீங்கள் போகப் போக தெரிந்து கொள்வீர்கள்.

    கருவில் இருந்த குழந்தையின் பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு சிறை


    சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணின் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்த குற்றத்திற்காக தானேவைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களுக்கு தலா இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தானே நவ்பாடா பகுதியை சேர்ந்த மகப்பேறு மருத்துவரான உமேஷ், தன்னிடம் பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணின் வேண்டுகோளுக்கிணங்க கர்ப்பத்தில் இருந்த குழந்தையின் பாலினம் கண்டறிய முயற்சி செய்துள்ளார். இதற்காக ரூ 30 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளார் உமேஷ். இதற்காக சம்பந்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை உமேஷ் ராஜஸ்தானில் பொக்ரானுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தியுள்ளார்.

    புறக்கணிக்கப்பட்ட கனிமொழி அரைமனதோடு பிரசாரம்? எல்லாம் ஸ்டாலின் மயம் !


    சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் அதன் தலைவர் கவிஞர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவருமான கனிமொழி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் ஏப்ரல் 5ம் தேதி தென்சென்னையில் பிரச்சாரத்தை துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்கிறார்? இந்த முறை திமுகவில் கனிமொழி ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை. மாறாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் பலருக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கனிமொழி தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார்.

    அழகிரி ஸ்டாலின் மோதலுக்கு கலைஞர்தான் காரணமா ? அழகிரி மீது ஏன் இந்த கொலைவெறி ?

    மதுரை: ஒரு வழியாக மு.க.ஸ்டாலினின் இன்னொரு முக்கிய எதிராளியை கட்சியை விட்டுத் தூக்கி விட்டது திமுக. அந்த முடிவையும் முதல் முடிவைப் போலவே கருணாநிதி வாயாலேயே அறிவிக்கவும் செய்து விட்டனர். இந்த முடிவு நிச்சயம் அழகிரி எதிர்பார்த்த ஒன்றாகத்தான் இருக்கும். காரணம், நிலைமை அப்படி. மு.க.ஸ்டாலினுக்காக திமுகவில் காவு கொடுக்கப்பட்ட 2வது முக்கியப் புள்ளியாக வைகோவுக்கு அடுத்து அழகிரி வெளியேற்றப்பட்டு்ளார். வைகோ, கருணாநிதியின் உடன் பிறவா சகோதரராக பாசம் பாராட்டப்பட்டவர். அழகிரியோ, ஸ்டாலினின் உடன் பிறந்த சகோதரர். இந்த இரு சகோதரர்களுமே ஸ்டாலினுக்கு வழி ஏற்படுத்துவதற்காக திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்பதுதான் இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய
    அழகிரிக்கும் சரி, ஸ்டாலினுக்கும் சரி இன்று நேற்றல்ல, பல காலமாகவே மோதல்தான். யார் அடுத்த வாரிசு என்பதில். இந்த மோதலில் தெரிந்தோ தெரியாமலோ ஸ்டாலின் பக்கம் இருந்து விட்டார் கருணாநிதி.
    ஸ்டாலினைப் போல இல்லை அழகிரி. சற்று முரட்டுத்தனமானவர், அதிரடியாக இருக்கக் கூடியவர். எதுவாக இருந்தாலும் வெட்டு ஒனறு துண்டு இரண்டு என்று செயல்படக் கூடியவர். வேகமானவர். இதையே பலமுறை கருணாநிதி கூட குறிப்பிட்டதுண்டு. அழகிரி திமுகவை விட்டு வெளியேறுவது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஸ்டாலினின் தலைமையில் திமுக ஒரு அதிமுக போன்ற ஒரு ஜால்ரா கட்சியாகவே மாறிவிட்டது, சுயமரியாதை இயக்கம் இப்படி சீரழிந்து போவதை தடுக்க அழகிரி முன்வரவேண்டும் . வரலாறு நிச்சயம் கைகொடுக்கும் ,

    வாரணாசி: முட்டையை அடுத்து கெஜ்ரிவால் மீது மை வீச்சு

    வாரணாசி: முட்டையை அடுத்து கெஜ்ரிவால் மீது மை வீச்சுஉத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். அங்கு பாய்ந்தோடும் கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப் போய் விட்டதாக நிருபர்களிடம் கூறிய கெஜ்ரிவால், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    வாரணாசி நகரின் பிரபல கோயில் வழியாக கார் சென்றபோது, உள்ளே அமர்ந்திருந்த கெஜ்ரிவால் மீது சிலர் முட்டைகளை வீசினர்.

    திமுகவில் இருந்து மு.க.அழகிரி அறவே நீக்கி (DISMISSED) வைக்கப்படுகிறார்.


    சென்னை: திமுகவில் இருந்து மு.க. அழகிரியை அறவே நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
    திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி அக்கட்சியில் தென் மண்டல அமைப்புச் செயலராக இருந்து வந்தார். அவர் கருணாநிதியின் மற்றொரு மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
    அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்து போஸ்டர்களை அடித்து ஒட்டி கலகக் குரல் எழுப்பி வந்தனர். இதனால் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர்.
    தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க. அழகிரி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை தோற்கடிக்க முழு வீச்சில் வேலை செய்து வருகிறார். காங்கிரஸ், பாஜக, மதிமுக என அனைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களும் மு.க. அழகிரியை சந்தித்து பேசி வருகின்றனர்.

    தினமும் புதிதாக தலைவர்கள் அழகிரியை சந்திக்கிறார்கள் அவரும் ஆசிர்வாதங்கள் வழங்குகிறார் ! இங்க என்னதான் நடக்குதண்ணா

    அழகிரிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்ற விருதுநகர் மக்களவைத் தொகுதி பா.ஜ. வேட்பாளர் எச்.ராஜா, (அடுத்த படம்) மதிமுக தேனி வேட்பாளர் அழகுசுந்தரம். படங்கள்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.மு.க.அழகிரியை தினமும் புதிது புதிதாக தலைவர்களும், ஒரே தொகுதியில் போட்டியிடும் இரு வேறு வேட்பாளர்களும் சந்தித்து ஆதரவு கேட்ட வண்ணம் உள்ளனர். இது எடுப்பார் கைப்பிள்ளையா அழகிரி என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக.வில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட் டுள்ளார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக மேலிடம் எச்சரித்துள்ளது. ஆனால், அவர் திமுக.வில் இருந்து இதுவரை முழுமையாக வெளியேற்றப்படவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை மதிமுக தலைவர் வைகோ வும், திங்கள்கிழமை பாஜக மாநில துணைத் தலைவரும் சிவ கங்கை மக்களவைத் தொகுதி வேட் பாளருமான ஹெச்.ராஜாவும் சந்தித் தனர். இதனிடையே, செவ்வாய்க் கிழமை காலை மு.க.அழகிரியைச் சந்திக்க மக்கள் விடுதலை கட்சித் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல்ராஜன் அனுமதி பெற்றுள்ளா

    அவர் கூறுகையில், “எங்கள் தேவேந்திரகுல வேளாளர் சமு தாயத்தைச் சேர்ந்த பெண்ணை தான் அழகிரி மணந்துள்ளார். எனவே, அவர் எங்கள் அக்கா கணவர்.

    கிடப்பில் துயிலும் திமுக திட்டங்கள் ! ஒரு மனநோயாளின் கையில் தமிழகம் ?

    தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    விழுப்புரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கோ.முத்தையனுக்கு ஆதரவு திரட்டி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே திங்கள்கிழமை அவர் பேசியது:
    நாங்கள் எப்போதும் உங்களை நாடி வருபவர்கள். ஆனால் சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு என்று முதல்வர் கூறுகிறார். மின்வெட்டு நேரத்தில் ஏற்றம், பஸ் கட்டணத்தில் ஏற்றம், பால் விலையில் ஏற்றம், மின் கட்டணத்தில் ஏற்றம், விலைவாசியில் ஏற்றம் என இவ் வகையான ஏற்றங்கள்தான் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.
     கிடப்பில் திமுக திட்டங்கள்: மதுரவாயில் பறக்கும் சாலை ,சேது சமுத்ரம் கால்வை , விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மூலம் 120 வீடுகள், வீடு கட்டும் திட்டத்தில் ஏழை மக்களுக்கு 7,343 வீடுகள் ஆகியவை கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பெரிய திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. இதில் பாதாள சாக்கடைத் திட்டம் நாங்கள் ஆட்சியை விட்டுச் செல்லும்போது 75 சதவீத அளவுக்கு பணிகள் முடிவடைந்துவிட்டன. இவற்றில் 25 சதவீத பணிகள் மட்டுமே மீதம் இருந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.
     இதுபோல் திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஐ.டி. பார்க் கொண்டு வருவதாக அறிவித்தோம். ஆனால் அது கிடப்பில் கிடக்கிறது.

    நம்பலாமா ?விமானம் இவ்வளவு தொலைவு எப்படி வந்தது என்பதை நிரூபிக்க அவர்களிடம் ஒற்றை ஆதாரம்கூட கிடையாது

    விமானம் கடலில் வீழ்ந்தது என்று அறிவிக்க மலேசிய அரசுக்கு ‘ஏதோ நிர்ப்பந்தம்’ காரணம்? "

    விமானம் எப்படி இங்குவரை வந்தது?

    மலேசிய விமானம் இந்தியக் கடலில் வீழ்ந்தது என மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளதை, நாம் விசாரித்தவரை கனேடிய, மற்றும் அமெரிக்க ஏவியேஷன் வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
    விமானத்தின் பாகங்களை கடலில் கண்டெடுக்கும்வரை, இப்படியொரு அறிவிப்பை செய்தது, தவறான வழிகாட்டல் என்கிறார்கள் அவர்கள்.
    கனேடிய விமானி ஒருவர், “மலேசிய பிரதமரோ, அல்லது அவருக்கு தரவுகளை வழங்கிய பிரிட்டனின் ‘இன்மார்சாட்’ நிறுவனமோ, இந்த விமானம் இவ்வளவு தொலைவு எப்படி வந்தது என்பது குறித்து ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை.
    ஒரு விஷயத்தை என்னால் (கனேடிய விமானி) அடித்துச் சொல்ல முடியும். விமானம் இவ்வளவு தொலைவு எப்படி வந்தது என்பதை நிரூபிக்க அவர்களிடம் ஒற்றை ஆதாரம்கூட கிடையாது” என்றார்.
    இந்த மாய மறைவு குறித்த புலனாய்வில் ஈடுபட்டுள்ள சிலரே, “மலேசிய அரசு, ‘ஏதோ ஒரு நிர்ப்பந்தம்’ காரணமாக தேடுதல் முடிவடையும் முன், விமானம் விபத்துக்குள்ளானது என அறிவித்துள்ளது” என்கின்றனர்.
    அந்த ‘ஏதோ ஒரு நிர்ப்பந்தம்’ என்ன என்றே தெரியவில்லை.
    விமானம் கடலில் மூழ்கியது என மலேசிய பிரதமர் அறிவித்த சில மணி நேரத்தில் நேற்றிரவு, பயணிகளின் உறவினர் அடங்கிய குழு ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “இந்த விபத்துக்கு காரணம், மலேசியன் ஏர்லைன்ஸ், மலேசிய அரசு, மற்றும் மலேசிய ராணுவம்” என்று கூறப்பட்டுள்ளது.
    மலேசிய ராணுவத்தை இதற்குள் எதற்காக கொண்டுவருகிறார்கள்? ஒருவேளை அவர்களிடம் வேறு ஏதோ தகவல் உள்ளதோ
    viruvirupu.com  

    தூக்கு! உறுதி செய்தது ஐகோர்ட்! கோவை பள்ளி சிறுமியையும் சகோதரனையும் கொன்றவர்களுக்கு ..

    சென்னை:கோவையில், பள்ளி சிறுமியை பாலியல் வன்முறை செய்து, அந்த சிறுமியையும், அவளது சகோதரனையும், கொலை செய்த வழக்கில், வாலிபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
    கோவையைச் சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின்; தொழில் அதிபர். இவருக்கு, 10 வயதில், பெண் குழந்தையும், ஏழு வயதில், ஆண் குழந்தையும் இருந்தனர். இவர்கள், தனியார் பள்ளியில் படித்து வந்தனர். காரில் கடத்தல்:
    பள்ளிக்கு செல்வதற்காக, காத்திருந்த, இரண்டு குழந்தைகளையும், மோகனகிருஷ்ணன் என்பவர், காரில் கடத்தினார்.பின், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த, தன் நண்பர் மனோகரனையும், சேர்த்துக் கொண்டார். சிறுமியை, இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர்.சிறுமிக்கும், சிறுவனுக்கும், சாணி பவுடரை கலந்து கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, உடுமலை அருகே, தீபாலபட்டியில், ஒரு வாய்க்காலில் தள்ளி விட்டனர். இரு குழந்தைகளும், தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.இந்த சம்பவம், 2010, அக்டோபரில் நடந்தது. இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரனை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அழைத்து சென்ற போது, மோகனகிருஷ்ணன், என்கவுன்டரில் கொல்லப்பட்டார். 2010, நவம்பர், 9ம் தேதி, இச்சம்பவம் நடந்தது.

    திங்கள், 24 மார்ச், 2014

    மலேசிய விமானம் கடலில் முழ்கி விபத்துக்குள்ளானது உறுதி : நஜிப் ரசாக்

    கோலாலம்பூர்: மலேசிய விமானம் இந்துமாக் கடலில் முழ்கி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது என்று கோலாலம்பூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் நஜிப் ரசாக் தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்த 239பேரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக நஜிப் தெரிவித்தார். கோலாலம்பூரில் இருந்து மார்ச் 8-ம் தேதி விமானம் பெய்ஜிங் சென்ற போது விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு மேற்கே கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று விமானத்துறை நிபுணர்களை மேற்கொள் காட்டி மலேசிய பிரதமர் நஜீப் ராசாக் தெரிவித்துள்ளார்.விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த யாரும் உயிர்பிழைத்தாக  தகவல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்குள்ளான விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நஜீப் தகவல் அளித்துள்ளார். dinakaran.com

    உட்கட்சி கோஷ்டி பூசலில் தி.மு.க.நிர்வாகிகள் ! தேர்தல் பணியில்அமைதியாக இருக்க முடிவு ?

    தி.மு.க.,வில் உள்ள, சில மாவட்ட செயலர்களின், பெரியண்ணன் பாணி செயல்பாடுகளால், புறக்கணிக்கப்பட்டுள்ள தி.மு.க., நிர்வாகிகள், தேர்தல் பணியில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளனர். அதனால், அக்கட்சி வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அதிருப்தியில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை அறிவாலயத்திற்கு அழைத்து, ஸ்டாலின் தலைமையில், விரைவில், 'பஞ்சாயத்து' நடைபெறவுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, தேர்தல் பணியில் ஈடுபடுவதில், கோஷ்டி பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

    குண்டூர் காதல் திருமணம் செய்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெற்றோர்

    காதல் திருமணம் செய்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெற்றோர்நகரி, மார்ச். 24–
    கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெயர் தீர்த்தி (24). குண்டூர் அருகே உள்ள கோகுலகுடி கிராமத்தைச் சேர்ந்த அரிபாபு– சாம்ராஜ்யம் தம்பதிகளின் மகள். ஐதராபாத்தில் உள்ள பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
    அப்போது தன்னுடன் வேலை பார்த்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
    ஆனால் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கிரண்குமார் தனது பெற்றோருடன் பலமுறை பேசி தீர்த்தியை திருமணம் செய்ய சம்மதம் பெற்றார்.

    பழனி: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

    திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைகளில் சங்ககால கல்வெட்டுகள், கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சான்றுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு வருகின்றன.
    இந்த நிலையில் பழனி அருகே பாப்பன்பட்டி மலையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களை கண்டறிந்தனர்.
    இந்த குகை ஓவியங்கள் ரத்த சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் 3 தொகுப்பாக காணப்படுகின்றன. இதில் வெள்ளை வண்ண ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வரையப்பட்டதாகும். ரத்த சிவப்பு வண்ணத்தில் ஆன ஓவியங்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் வரையப்பட்டுள்ளன.