வியாழன், 21 நவம்பர், 2013

ஏடிஎம்மில் பெண்ணை தாக்கிய குற்றவாளி அடையாளம் தெரிந்தது

பெங்களூர் ஏடிஎம்மில் பெண்ணை தாக்கிய குற்றவாளியின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கர்நாடக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.< வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குற்றவாளியின் புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவனை கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். புது தில்லியில் நடைபெறும் காவல்துறை மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போது அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்  dinamani.com

Chennai மனைவியை படம் எடுத்து ப்ளாக் மெயில் செய்த டாக்டர் கைது

A postgraduate dental student was arrested by the Medical College police following a complaint from his wife that he had threatened to post her nude photographs and video clips of their private moments on the Internet.திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவைக் கல் பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன். இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (27). பல் டாக்டரான இவர் தற்போது கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் எம்.டி.எஸ். படித்து வருகிறார். கடந்த செப்.15ம் தேதி இவருக்கும் அடூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மனைவியுடனான படுக்கை யறை காட்சிகளை அவருக்கு தெரியாமல் ஜெயகிருஷ்ணன் வீடியோ எடுத்துள்ளார்.  மேலும் அவரை நிர்வாணமாக்கி புகைப்படமும் எடுத்துள்ளார். இவை அனைத்தையும் லேப்டாப்பில் பதிவு செய்தார். மனைவியை மது குடிக்கவும், ஆபாச படங்கள் பார்க்கவும் ஜெயகிருஷ்ணன் வற்புறுத்திள்ளார். இதற்கு மனைவி மறுக்கவே அவரை கொடுமைப்படுத்த தொடங்கினார்.

ம பியில் மீண்டும் BJP ஆட்சியை பிடிக்கிறது ? அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ?

மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா 3–ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்– மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த மத்திய பிரதேசத்தில் 2003–ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து அங்கு பாரதீய ஜனதாவே 4 முறை ஆட்சியில் இருந்து வருகிறது.
உமாபாரதி, பாபுலால் கவுர் ஆகியோருக்குப் பின் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்து 2–வது முறையாக முதல்– மந்திரி பதவி வகித்து வருகிறார்.
வருகிற 25–ந்தேதி மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே நடந்த கருத்துக்கணிப்புகளில் பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது.
இப்போது புதிதாக நடந்த கருத்துக் கணிப்பில் பாரதீய ஜனதா 3–ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சிப் பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஏ.பி.பி. நியூஸ் என்ற செய்தி நிறுவனத்துக்காக ஏ.சி. நீல்சன் நிறுவனம் இந்த புதிய கருத்துக்கணிப்பை நடத்தியது.

புது காதலனோடு சேர்ந்து கணவனை கூலிப்படை வைத்து கொன்ற காதல் மனைவி ! மதுரவாயல்


மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 17–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). போரூரில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வித்யா (27). இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றுகிறா வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது . பெற்றோர் சம்மதத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 6 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பின் அஷ்டலட்சுமி நகரில் ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
இன்றுகாலை ராஜ்குமார் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

காதலித்து ஏமாற்றிய ஏ.எஸ்.பி. வருண்குமார் நாளை கோர்ட்டில் ! நம்பிக்கை துரோகி ASP யான கதை

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பிரிய தர்சினிக்கும், ஐ.பி.எஸ். அதிகாரியான வருண்குமாருக்கும் இடையேயான காதல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருச்சியை சேர்ந்த வருண்குமாரும், பிரியதர்சினியும், அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அகாடமியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. அப்போது வருண்குமார், பிரியதர்சினியிடம் ‘‘எனக்காக நீ ஐ.ஏ.எஸ். தேர்வில் கலந்து கொள்ள வேண்டாம். நான் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்’’ என்று கேட்டுள்ளார். இதனால் காதலுக்காக தனது ஐ.ஏ.எஸ். கனவை பிரியதர்சினி கலைத்தார். வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாவதற்கு பல உதவிகளை அவர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியானார். இதனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரதட்சணையாக பெரிய தொகையை தரவேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

SHE TAXI பெண்களால் நடத்தப்படும் டாக்சி கேரளாவில் அறிமுகம்

கேரள மாநில சமூக நீதி துறையின் கீழ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்காக ‘ஜென்டர் பார்க்’ என்ற அமைப்பு சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் முதல் நடவடிக்கையாக, பெண்களால், பெண் பயணிகளுக்காக நடத்தப்படும் டாக்சி சேவையான ‘ஷி டாக்சி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பெண் தொழில் அதிபர்களால் நடத்தப்படும் இந்த சேவையின் தொடக்க விழா நேற்று திருவனந்தபுரம் அருகே கனகக்குன்னு என்ற இடத்தில் நடந்தது. விழாவில் நடிகை மஞ்சுவாரியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைத்தார். அதன்படி 5 பெண் டிரைவர்களிடம், கார்களுக்கான சாவியை அவர் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில பஞ்சாயத்து மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் எம்.கே.முனீர், முரளீதரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்சி சேவையை தொடங்கி வைத்ததும் தனது குடும்பத்துடன் அமைச்சர் எம்.கே.முனீர் டாக்சி ஒன்றில் பயணம் செய்தார். அதில் நடிகை மஞ்சுவாரியாரும் பயணம் மேற்கொண்டார்.24 மணி நேரமும் இயங்கும் இந்த டாக்சி சேவைக்கு சிறப்பு சேவை மையமும் (கால் சென்டர்) தொடங்கப்பட்டு உள்ளது. nakkheeran.in

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாம்!

கருநாடக மாநிலத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்!

பெங்களூரூ, நவ. 20- கருநாடகாவில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கேவலமான பிரார்த்தனை செய்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றதில் நிலுவையில் உள்ளது.

அமிதாப்புடன் இந்தியில் தனுஷ்! கமல் மகளும் நடிக்கிறார்!

தமிழில் மட்டுமல்லாமல், இந்தியிலும் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார் நடிகர் தனுஷ். தனுஷ் நடிப்பில் சமீபத்தி வெளியான நய்யாண்டி திரைப்படம் சொதப்பிவிட்டாலும், அடுத்ததாக தனுஷ் நடிக்கும் அநேகன் திரைப்படமும், வேலையில்லா பட்டதாரி திரைப்படமும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன.

சுங்கச்சாவடியை நெருங்கும் முன் செல்போன் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்

சுங்கச்சாவடியை நெருங்கும் முன் செல்போன் மூலம் கட்டணத்தை செலுத்த விரைவில் ஏற்பாடு: ஆஸ்கர் பெர்னாண்டஸ்
சுங்கச்சாவடியை நெருங்குவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன் தங்கள் செல்போன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறினார்.
மத்திய தரைவழி போக்குவரத்து துறை, மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.) ஆகியவை இணைந்து கூட்டாக பெங்களூருவில் ஏற்பாடு செய்த கட்டுமான உபகரணங்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பம் குறித்த “எக்ஸ்கான்–2013“ கண்காட்சியை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் பேசும்போது கூறியதாவது:–

கலைஞர் : தமிழக ராக்கெட் தயாரிப்பு பணிக்கு கேரளாவில் இருந்து ஏன் ஆட்கள் வருகிறார்கள்?

கேரளா, மற்றும் ஆந்திரா மாநிலங்களின் செல்வாக்குதான், இஸ்ரோவில் அதிகமாக உள்ளது
“குலசேகரபட்டனத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று நான் கடிதம் எழுதினேன். ஆனால், தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை” என கூறியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, “தமிழகத்தில் நடக்கும் ராக்கெட் தயாரிப்பு பணிக்கு, கேரளாவில் இருந்து ஏன் ஆள் கொண்டுவருகிறார்கள்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய வான்வெளி, திரவ வாயு மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலம் அந்த மண்டலமே வளர்ச்சி பெற்றதாக நிச்சயம் மாற்றமடையும். நம் நாட்டில் தொழில் நுட்ப புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும்.
இந்த இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
ஆனால், குலசேகரப்பட்டினம் புறக்கணிக்கப்படுகிறது.
கேரளா, மற்றும் ஆந்திரா மாநிலங்களின் செல்வாக்குதான், இஸ்ரோவில் அதிகமாக உள்ளது. தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; தமிழகத்திற்கு கிடைத்து விடக்கூடாது என்ற பிடிவாத மனநிலையில் சிலர் செயல்படுகின்றனர்.
ராக்கெட் தயாரிப்பில் 60 சதவீதப் பணி மகேந்திரகிரியில்தான் நடக்கின்றன. ஆனால் அதற்கான ஆள் எடுப்பு பணியோ, திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதனால், சில குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிக்கு வருகின்றனர்.
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்காக நான் பிரதமருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்னதான் நாம் பிரதமருக்கு கடிதம் எழுதினாலும், தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைத்தால் தானே, அந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறும். இதற்கு தமிழக அரசு ஏன் முன்வரவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

viruvirupu.com

ஆயத்த ஆடைதயாரிப்பில் சாதிக்கும் திருநங்கைகள்

மதுரை: மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள்  இவர்களுக்கு வேலை கொடுக்கவே தயங்கும் நிலை இன்றும் உள்ளது. ஒதுக்கப்படும் இந்த சமூகத்தை சேர்ந்த இருவர், திருநங்கைகள் மட்டுமின்றி ஆண், பெண் அனைத்து தரப்புக்கும் வேலை வாய்ப்பை அளித்து முன்னுதாரணமாக உள்ளனர்.மதுரையை சேர்ந்தவர் பாரதி கண்ணம்மா. திருநங்கையான இவர், தற்போது தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை துவக்கி திருநங்கைகளுக்கான  பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். வேலை தேடிக் கொண்டிருக்காமல், பிறருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நோக்கத்தோடும், அவர்கள்  மீதான தவறான பார்வையை போக்கிடவும் முயற்சிகளை துவக்கினார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ATM இல் ஜோதி வெட்டப்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க அச்சம்!

பெங்களூரு : பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில், வங்கி பெண் அதிகாரி, மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே, அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 'ஏ.டி.எம்., மையங்களுக்கு பாதுகாவலர்களை நியமியுங்கள் அல்லது, ஏ.டி.எம்.,களை மூடுங்கள்' என, வங்கிகளுக்கு, கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  ஏ.டி.எம்., ஷட்டரை மூடினால்) அலாரம் அடிக்கும்படி செய்யலாம் ( சர்விஸ் செய்ய தனி ஸ்விட்ச்சை ஏ.டி.எம்., மெஷினில் பாஸ்வேர்டுடன் வைக்கலாம் ) 2) ஒரு ஆளுக்கு மேல் உள்ளே நுழைந்தால் ஏ.டி.எம்.,லாக் செய்வது போல செய்யலாம் 3) சி சி டி வி கேமராவை பார்த்து அலறினால் ( ஒரு குறிப்பிட்ட டெசிபல் சத்தத்துக்கு மேல் அலறல் சத்தம் அல்லது அருகில் ஒரு அலாரம் செயின் ரயிலில் இருப்பது போல செட் செய்யலாம்

ராகுல் கேள்வி: சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்?' விளங்கிடும்

போபால் : "மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, சாலை வசதியை
ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது. சாலை வசதியை ஏற்படுத்தினால் மட்டும், ஏழைகளுக்கு உணவு கிடைத்து விடுமா?'' என, காங்., துணை தலைவர் ராகுல், கேள்வி எழுப்பினார்.ம.பி., மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் துணை தலைவர் ராகுல், தார் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், நேற்று பேசியதாவது:மத்திய பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அந்த கட்சியினர், பெருமையுடன் கூறுகின்றனர். அதை நாங்கள் மறுக்கவில்லை. சாலைகளும், கட்டமைப்பு வசதிகளும், ஏற்படுத்தப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், இங்கு, வறுமையில் வாடும், ஏழை மக்களுக்காக, என்ன செய்தீர்கள்?
.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
  அட, ஞான சூனியமே........நாட்டுக்கு சாலை வசதி என்பது மனித உடலில் இருக்கும் ரத்த நாளங்கள் போல என்று கூட தெரியலையே.....ரத்தம் உடல் முழுக்க சீராக செல்ல வேண்டாமா?...இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்.....

மதுரையில் ஆசிரியர்கள் பீதி ! மாணவர்களின் தற்கொலை மிரட்டல் !

மதுரை : வகுப்பறையில் கண்டிப்பதால், தற்கொலைக்கு முயற்சிக்கும்
மாணவர்களால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அலறுகின்றனர். மதுரையில் நேற்று, சமயநல்லூர் அரசு இருபாலர் பள்ளியின் பிளஸ் 1 மாணவர், அரளி விதையை மென்று, தற்கொலைக்கு முயன்றார்.நேற்று முன்தினம், சக மாணவியை மாணவன் மதுசூதனன் கேலி செய்ததால், அம்மாணவி தலைமையாசிரியரிடம் புகார் செய்தார். பெற்றோரை அழைத்து வருமாறு, ஆசிரியை தெரிவித்துள்ளார். பெற்றோர் இல்லாமல், நேற்று பள்ளிக்கு வந்த மதுசூதனன், பையில் வைத்திருந்த அரளிவிதையை மென்று துப்பியுள்ளார். சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்கவே, மதுரை அரசு மருத்துவமனைக்கு, ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். 
தமிழ்நிதி - chennai,இந்தியா
ஆசிரியர்களுக்கு திட்டவோ அடிக்கவோ, தண்டனை கொடுக்கவோ யார் உரிமை கொடுத்தது? இதுபோன்ற ஆசிரியர்களை சிறையில் தள்ள வேண்டும். மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள கூடாது. மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களை போலீசில் மாட்டிவிட்டு வேலை இழக்க செய்ய வேண்டும்.

சக்காரோவ் மனித உரிமை விருது' மலாலாவிற்கு ஐரோப்பா கௌரவம்

 Pakistan's teenage activist Malala Yousafzai is awarded with the Sakharov Prize for Freedom of Thought by European Parliament chief Martin Schulz in Strasbourg, eastern France, on November 20, 2013
பெண் கல்விக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் போராடி வரும் சிறுமி மலாலாவிற்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம், அதன் உயரிய விருதான சக்காரோவ் மனித உரிமை விருது தந்து கௌரவித்துள்ளது. ஸ்ட்ராஸ்பெர்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருது அளிக்கப்பட்டது. மலாலா பேசுகையில் இந்த விருதை பாகிஸ்தானின் கவனிக்கப்படாத நாயகர்களுக்கு அர்ப்பணம் செய்வதாகக் கூறினார், மேலும் ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பாவைத் தாண்டி, பல நாடுகளில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்டு வாழும் மக்களையும் கவனத்தில் கொண்டு, உதவும் என நம்புவதாகவும் தெரிவித்தார். 16 வயதான மலாலா, 2009ஆம் ஆண்டு, பிபிசி உருது பிரிவுக்காக எழுதிய கட்டுரையில், தாலிபான் ஆட்சியில் வாழ்வதைப் பற்றியும், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் வாழும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதைப் பற்றியும் மலாலா எழுதியிருந்தார்.

புதன், 20 நவம்பர், 2013

பெங்களூர் ATM ஈவு இரக்கமே இல்லாமல் நிதானமாக வெட்டுகிறான் ! திரைப்படங்களால் வளர்ந்த அரிவாள் வெட்டு கலாசாரம் ,

இந்த வீடியோவை பார்த்தீர்களா? காலையில் எழுந்தவுடன் தெரியாத்தனமாக பார்த்துத் தொலைத்துவிட்டேன். சில வினாடிகள் உயிரே போய்விட்டது. ஏடிஎம்முக்குள் புகுந்த முரடன் ஒருவன் அந்தப் பெண்மணியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். அது பொம்மைத் துப்பாக்கி போலிருக்கிறது. அந்தப் பெண் தப்பிக்க முயற்சிக்கிறார். அவரை
வெளியேறவிடாமல் மறித்தபடியே சாவகாசமாக அரிவாளை எடுத்து அவரை வெட்டிவிட்டு இருப்பதை பறித்துக் கொண்டு ஓடியிருக்கிறான். அத்தனையும் பெங்களூரின் ஜே.சி.சாலையில் நடந்திருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும் போது ’ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் நடந்திருக்கிறது’ என்பார்கள். ஆனால் இந்தச் சாலையை  ஒதுக்குப் புறமான இடம் என்றெல்லாம் புறந்தள்ளிவிட முடியாது. மாநகராட்சி அலுவலகம் இந்த ஏரியாவில்தான் இருக்கிறது. ஜன சந்தடி மிக்கது. அதுவும் காலை ஐந்து மணிக்கு ஆட்கள் நடமாடத் தொடங்கிவிடுவார்கள். இத்தகைய இடத்தில் இருக்கும் ஒரு ஏடிஎம்முக்குள்தான் புகுந்து, ஷட்டரை மூடி அவரை வெட்டியிருக்கிறான்.

வயிற்றில் போதைப் பொருள் கடத்தியவரின் வயிறு வெடித்து வெளிநாட்டவர் பலி!

மும்பை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டவரின் வயிற்றில் அவர் கடத்தி வந்திருந்த போதைப்பொருள் கேப்சியூல் வெடித்ததால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே பலியானார். ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர் அவர்கள் இருவரும் போதை மருந்து கடத்தி வருவதாக மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் இவர்கள் இருவரின் உடமைகளையும் சோதனையிட்டும் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடரந்து அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், அவர்கள் தோள் பட்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தாக தெரிவித்தார்கள் ஆனால் அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் வயிற்றில் போதை மருந்து கடத்தி வந்திருக்கலாம் என்று கருதி இருவரையும் அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க அனுமதி பெற்றனர். அப்போது அவர்களில் ஒருவர் திடீர் என்று வயிறு வலிப்பதாக கூறி துடித்தான் இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர ஆனால், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியாகினான்

மறைந்த நடிகை மஞ்சுளா திட்டமிடப்பட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டாரா ? பின்னணியில் யார் யார் ?


நடிகர் விஜயகுமாரின் வீட்டில் என்னதான் மர்மங்கள் நடந்தன ? நடக்கின்றன .
தென்னிந்திய சினிமா பிரபலங்கள் ரஜனி உட்பட அங்கு அடிக்கடி விஜயம் செய்துள்ளார்கள் . அங்கு நடைபெறுவதாக அல்லது நடைபெற்றதாக கூறப்படும் பலவிடயங்களையும் வனிதா விஜயகுமார் மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதை எழுதுவது மிகவும் சிக்கலான விடயமாகும் .அதற்கு வேலையே வைக்காமல் வனிதா மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.

ரூ.3 கோடி முறைகேடு! கெஜ்ரிவாலை கண்டித்த ஹசாரே வீடியோவால் பரபரப்பு!


கடந்த ஆண்டு ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட தொகையில் 3 கோடி ரூபாய் அளவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேடு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சி என்ற அரசியல் கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அன்னா ஹசாரேவுக்கும் தற்போது மோதல் வெடித்துள்ளது. தனது பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்ததுடன், தனது பெயரில் பணம் திரட்டப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் தமிழ் முதியோரின் நடனம், நாடகம், பாடல் '

லண்டன்: இங்கிலாந்தில் ஹாரோ தமிழ் சங்கம் நடத்திய மூத்தோருக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹாரோவில் முதியவர்களுக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டத்தை ஹாரோ தமிழ் சங்கம் கடந்த 3ம் தேதி நடத்தியது.
பின்னர் வில்லேஜ் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான முதியோர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
லண்டன்:
இங்கிலாந்தில் ஹாரோ தமிழ் சங்கம் நடத்திய மூத்தோருக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹாரோவில் முதியவர்களுக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டத்தை ஹாரோ தமிழ் சங்கம் கடந்த 3ம் தேதி நடத்தியது.
பின்னர் வில்லேஜ் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான முதியோர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்களான தயா இடைக்காதர், கவிஞர் பாவை. ஜெயபாலன், அவரது மனைவி, டாக்டர் வி. ரவிகுமார், ஆர்தர் சூசன் லியோங் மற்றும் 2 பெரியோர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்

கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷாரா இந்திபடத்தில் நடிக்கிறார் .

சென்னை:மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த அக்ஷரா, பாலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கிறார்.கமலின் 2வது மகள் அக்ஷரா. முதல் மகள் ஸ்ருதி ஹாசன் நடிகையாகி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அக்ஷராவை பொறுத்தவரை டைரக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் உதவி இயக்குனராக பாலிவுட் படங்களில் பணியாற்றி வருகிறார். நடிப்பதற்காக பல அழைப்புகள் வந்தபோதும் ஏற்கவில்லை. ‘கடல் படம் மூலம் அவரை அறிமுகப்படுத்த மணிரத்னம் விரும்பினார். இதுபற்றி அக்ஷராவிடம் அவர் கேட்டபோது, நடிக்கும் எண்ணமில்லை என்று மறுத்ததுடன், திரைக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பீட்ஸா- 2 வில்லா’: வாந்தி-பேதிக்கு எந்த வகையிலும் பொறுப்பல்ல..

20131115138448051661277
‘பீட்ஸா- 2 – வில்லா’ என்ற பெயரி்ல் ஒரு படம் வந்திருக்கிறது.
அது, ‘கோயில்களுக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கும் சென்றால்,  நமது மனதிற்கு பாஸிட்டிங் வைப்ரேஷன் ஏற்படும், அதுபோல சூனியம், மந்திரம் போன்றவை செய்யக்கூடிய இடத்திற்குச் சென்றாலோ அல்லது  செய்துவைத்துள்ள இடத்தில் இருந்தாலோ நமது மனதில் நெகட்டிவ் வைப்ரேஷன் ஏற்படும்.’  என்ற கருத்தை அறிவியலாக சொல்கிறதாம்.
“அதெல்லாம் உண்மடா மச்சான். ஆனா நீ நம்ப மாட்ட.. பகுத்தறிவுன்னு.. வௌக்கெண்ண நியாயம் பேசுவ.. ” என்று படம் பார்த்து வந்த 4 நண்பர்கள், படம் பாக்காத என்னை பாடாய் படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
அந்த நாலுபேரில் இரண்டு பேருக்கு இரண்டு நாளா வயிற்றுப் போக்கு. இன்னும் இரண்டு பேருக்கு வாந்தி. அதுக்குக் காரணம், ஒரே நாளில் ஏகப்பட்ட தீபாவளி பலகாரம் சாப்பிட்டது.

சுகாதாரமற்ற கழிவறைகளால் மரணிக்கும் குழந்தைகள்!

டெல்லி: திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்துவதன் மூலமும், சுகாதாரமற்ற கழிவறைகளின் மூலம் தினசரி 2000 குழந்தைகள் மரணிக்கின்றனர் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தை பேணுவது இல்லை. 1.1 பில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகளை நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற ஐக்கிய நாடு பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய ஐ.நா தூதர் மார்க் நியோ கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் உலக நாடுகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நவம்பர் 19ம் தேதியை உலக கழிவறை தினமாக கடைபிடிக்க ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்டது. விவாதத்தை தொடர்ந்து 193 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்

சிறையில் உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி

சிறையில் உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. அதேசமயம், சிறைத் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்க வேண்டும் என்றும், சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் கடந்த ஜூலை மாதம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. குற்றவியல் வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளைக் காக்கும் வகையில் அமைந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(4)-ஆவது பிரிவை "சட்டவிரோதம்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி அறிவித்து தீர்ப்பளித்தது.

கிரீன் சிக்னல் ? ஏற்காடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க. காங்கிரஸ் போட்டியிடாமல்.....

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல், தே.மு.தி.க., ஒதுங்கிக் கொண்டதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுடன் அக்கட்சி கூட்டணி சேர்வதற்கான, "கிரீன் சிக்னல்' என, அரசியல் வட்டாரத்தில் விமர்சிக்கப்படுகிறது. ஆதரவு கேட்டு தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு கிடைத்த, "ரெஸ்பான்ஸ்' எனவும், இரு கட்சிகளின் பிரபலங்களுக்கு இடையே நடந்த ரகசிய சந்திப்பும், பேச்சும் முக்கிய காரணம் எனவும், கருத்துகள் கூறப்படுகின்றன.தி.மு.க.,வை பொறுத்தவரையில், லோக்சபா தேர்தலுக்கென புது கூட்டணிக் கணக்கு போடப்பட்டுள்ளது. அதில், தே.மு.தி.க.,வுக்கு தான் அதிக மதிப்பெண் தரப்பட்டுள்ளது. "காங்கிரசும், தே.மு.தி.க.,வும் கூட்டணிக்கு வந்துவிட்டால் போதும்; கணிசமான எம்.பி.,க்களை பெற்று விடலாம் என்பது தான் தேர்தல் இலக்கு' என்கிறது தி.மு.க., வட்டாரம். அதற்கான, காய் நகர்த்தலின் விளைவு தான், ஏற்காடு தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடாமல் போனது என்றும், எதிர்கால கூட்டணிக்கான ஒத்திகை, முன்னோட்டம் என்றெல்லாம், அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வலம் வருகின்றன.

Attack on women inside ATM கேமிராவில்! பங்களூர் ஏடிஎம் மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்


ஏடிஎம் மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த வீடியோ காமிராவில் பதிவாகி உள்ளது. பெங்களூர் எஸ்.ஜெ. பார் பகுதியில் எல்.ஐ.சி. கட்டிடத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை உள்ளே நுழைந்தார். அவரை பின்தொடர்ந்து ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த ஒருவன், ஏ.டி.எம். ஷெட்டரை இழுத்து உள்பக்கமாக பூட்டினான். பின்னர் கைத்துப்பாக்கியை எடுத்து காட்டி மிரட்டி ஏதோ மிரட்டினான். அந்த பெண் மறுத்து தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றதால், ஆத்திரம் அடைந்த கொள்ளையன் அப்பெண்ணை தான் வைத்திருந்த பையிலிருந்து அரிவாளை எடுத்து மிரட்டினான். அதற்கும் அந்த பெண் பயப்படாமல் இருந்ததால், அப்பெண்ணை கீழே தள்ளி சரமாரியாக வெட்டினான். பின்னர் அந்தப் பெண்ணின் பையிலிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பினான். இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே ரத்த துளிகளை கண்ட துப்புரவு பணியாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் அதே கட்டிடத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியின் மேலாளர் ஜோதி என்பது தெரிய வந்தது. பெங்களூர் மாநகர காவல்துறை துணை ஆணையர் கமல்பான்ட் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் தற்போது ஓரளவு சுயநினைவு இருந்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்கும் நிலையில் அவர் இல்லை. போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் உள்ளனர். அவரிடம் தகவல் பெற முயற்சித்து வருகின்றனர் என்றார்.nakkheeran.in/

செவ்வாய், 19 நவம்பர், 2013

கொல்கொத்தா சாலைகளில் சைக்கிளுக்கு அனுமதி இல்லை ! மம்தாவின் வெகுஜன விரோத செயல் !

கொல்கத்தா ஆர்ப்பாட்டம்சைக்கிளில் சென்று வீடுகளுக்குப் பால் – செய்தித்தாள் விநியோகிப்பவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷாவை வைத்துப் பிழைப்பவர்களுக்கும் இனி கொல்கத்தா நகரின் சாலைகளைப் பயன்படுத்த முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. சைக்கிள்கள், கைவண்டிகள், டிரை சைக்கிள் போன்ற மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாகவும், இவ்வாகனங்களால் கொல்கத்தாவின் சாலைப் போக்குவரத்து வேகம் தேசிய சராசரியை விடக் குறைந்து விட்டதாகவும் காரணங்களை அடுக்கி, அந்நகரத்தின் 174 சாலைகளில் சைக்கிள் உள்ளிட்ட சாமானிய மக்களின் வாகனங்களுக்குத் திமிர்த்தனமாகத்  தடை விதித்துள்ளது மம்தா அரசு. தடையை மீறினால் ரூ.110 அபராதம் அல்லது சைக்கிள் பறிமுதல் – என எச்சரிக்கும் போலீசு, ”சைக்கிள்களில்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்” எனப் பீதியூட்டி, அரசின் இம்முடிவை வக்கிரமாக நியாயப்படுத்துகிறது. கொல்கத்தா நகரின் சாலைகளில் மிதிவண்டி மற்றும் ரிக்ஷா உள்ளிட்ட சாமானிய மக்களின் வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம். அடடா அப்படியே நம்ப இதயதெய்வம் புரட்டு தலைவியின் அணுகுமுறை அங்கும்  பரவுகிறது அம்மாவும் மம்மாவும் ஒன்றா ?

ஜெ., பிறந்த நாள் பரிசு வழக்கு : ஜனவரியில் இறுதி விசாரணை

 1992ல் முதல்வர் ஜெயலலிதா 1.5 கோடி பிறந்த நாள் பரிசு பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.  சிபிஐ தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.  சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்நிலையில், ஜெயலலிதா பிறந்த நாள்பரிசு வழக்கில் இறுதி விசாரணை ஜனவரியில் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

டெல்லியில் ராகுலின் கூட்டத்திற்கு கூட்டமே இல்லை !

ராகுலின் பேச்சை கேட்பதென்றால், ‘தண்ணீர் குடித்தபடி’ கேட்கவேண்டும். இல்லாவிட்டால், “ராகுலின் பேச்சே வேண்டாம்” என ஆட்கள் தண்ணீர் குடிக்க போய் விடுகிறார்கள்” இவ்வாறு சொல்லியிருப்பவர், பா.ஜ.க.காரர் அல்ல, டில்லி முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, ஷீலா தீட்ஷித்!
தண்ணீருக்கும் ராகுலுக்கும் இடையே போட்டி வைத்தால், தண்ணீர் ஜெயிக்கிறது என்ற ரகசியத்தை, ஷீலா தீட்ஷித் ஏன் வெளியிட்டுள்ளார்?
டில்லியில், முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம் 4-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க., அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையே, மும்முனை போட்டி நிலவுகிறது.

36,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஈமு கோழிகள் 50 ரூபாய்க்கு ஏலம்

36,000 ரூபாய் விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட  ஈமுகோழி 50,ரூபாய்க்கு ஏலம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுசி ஈமு பார்ம் இந்தியா பிரைவேட் லிட்., நிறுவனத்தில், பணத்தை முதலீடு செய்தவர்கள் 2012 ஆகஸ்ட், 6-ம் தேதி, பணத்தை திருப்பிக்கேட்டு முற்றுகையிட்டனர்.இதை தொடர்ந்து, அதன் உரிமையாளர் குருமூர்த்தி என்ற குரு தலைமறைவானதால், அந்நிறுவனம் மூடப்பட்டது. தொடர்ந்து, ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம் என பல இடங்களில் இயங்கி வந்த 42 ஈமு கோழி நிறுவனங்கள் மூடப்பட்டது.ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 225 கோடி ரூபாய் மோசடி குறித்து புகார் தெரிவித்தனர். 154 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 76 பேர் கைது செய்யப்பட்டனர்.மோசடி நிறுவனங்களின் கட்டிடங்கள், பண்ணைகள், 163 வாகனங்களுடன், ஈமு கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கால்நடை துறை மூலம் ஈமு கோழிகள் பராமரிக்கப்பட்ட்டு வருகிறது..

பாகிஸ்தானில் இந்திய நிகழ்சிகளை ஒளிபரப்பியதால் ஒரு கோடி ரூபா அபராதம் !



பாகிஸ்தானில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை பலமுறை ஒளிபரப்பிய 10 தொலைக்காட்சி சேனல்களுக்கு பாகிஸ்தான் அரசு ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானில் 10 தொலைக்காட்சி சேனல்கள் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலையும் மீறி இந்தியா மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை பலமுறை ஒளிபரப்பியுள்ளன. இதையடுத்து அந்தத் தொலைக்காட்சி சேனல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மதுரவாயலில் பறக்கும் சாலை திட்டத்தை ஜெயலலிதா முடக்குவது ஏன் ? அதிமுகவுக்கு ஒட்டு போட்டவங்ககிட்ட கேளுங்க ? `!

  சென்னை: மதுரவாயல் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை மேம்பால சாலை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்தது. 1,200 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் 2010ம் ஆண்டு தொடங்கி வைத்தார். ஒரு ஆண்டுவரை இந்த பணிகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டத்துக்கு அதிமுக அரசு தடை விதித்தது. பறக்கும் சாலைபணிகளை நிறுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை நோட்டீஸ் கொடுத்தது. இதை ரத்து செய்யக்கோரி தேசிய நெஞ்சாலைத்துறை சார்பாக, மத்திய அரசின்  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் நேற்று உயர்நீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்தார்.அதில் கூறியிருப்பதாவது:‘மதுரவாயல் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத் துக்கு தமிழக அரசு விதித்த தடை தொடர்ந்து நீடித் தால் திட்டத்தை உடனே மத்திய அரசு வாபஸ் பெறும்.

கோவில்களில் வேட்டிதான் கட்டவேண்டும் என்று தினமலரிடம் பக்தர்கள் கோரிக்கையாம் ? சொன்னாங்க!

'கோவில்களில், நம் நாட்டின் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வண்ணம், அறநிலையத் துறை அதிகாரிகள் வேட்டி கட்ட வேண்டும்' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், 39 ஆயிரம் கோவில்கள் உள்ளன. 'இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர், பூசாரி, பாரம்பரிய உடையான வேட்டி கட்ட வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே போல், கோவில்களை நிர்வகிக்கும், அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளும், வேட்டி அணிந்து வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்கள் டாப்லஸ் ஆகத்தான் வரவேண்டும் அப்பத்தான் அவங்கள் பொண்ணுங்க பார்க்க மாட்டாங்க ! பெண்கள் கூடுமானவரை தங்கள் அழகுகளை மறைத்து அசிங்கமாக வரவேண்டும் . மேலும் வெவரம் வேணுமின்னா தாலிபான்காரங்கிட்ட  கேளுங்க

பண்பு தெரியாத ராகுல் பிரதமருக்கு சொன்ன நான்சென்ஸ் ! மோடி தாக்கு !

“பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் எடுத்த முடிவை, ‘நான்சென்ஸ்’ என்று சொல்லியிருக்கிறாரே ராகுல். அது பிரதமரின் முகத்தில் விழுந்த அறை அல்லவா?” என்று கூறியுள்ள நரேந்திர மோடி, “எதற்கும் உங்கள் கட்சியின் துணை தலைவர் ராகுலுக்கு மரியாதையாக பேசுவது எப்படி என்பதை முதலில் கற்றுக் கொடுங்கள்” என்று கிண்டலாக காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரையும் கூறியிருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 25-ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ.க. அரசு ஆட்சி செய்துவரும் அங்கு, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பேசினார்.
அப்போதுதான், ராகுல் பற்றிய விவகாரம் அவரால் பேசப்பட்டது.
அங்கு மோடி பேசுகையில், “இங்கு ஒரு பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘பா.ஜ.க. கட்சியினர், அரசியல் எதிரிகளை அவமதிக்கும் வகையில் பேசுகின்றனர். மரியாதையாக பேச அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்’ என பேசியுள்ளார்.

சிறையில் உள்ள வெளிநாட்டு மாலுமிகள் Alcohol Filled Chocolate ப்ளஸ் சிகரட் கேட்கிறார்கள்.

புழல்: இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த குற்றம் தொடர்பாக கைதாகி, புழல் மத்திய சிறையில் உள்ள, வெளிநாட்டு கைதிகள், விலை உயர்ந்த சாக்லெட் மற்றும் சிகரெட் கேட்டு, சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே, அமெரிக்காவின், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, 'சீமேன் கார்டு ஓகியோ' என்ற கப்பல், கடந்த அக்., 12ம் தேதி, இந்திய கடல் எல்லைக்குள் வந்தது.

தமிழருவி மணியனை காணவில்லை ! மணி ஓடிப்போன நேரம் பாத்து பண்ணிபுட்டங்க்லே ! நெடுமா ஜெயிலில் கவலை

by வே.மதிமாறன்
தமிழருவி_மணியன்தமிழக அரசு, சரியா திட்டமிட்டு, காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ஊர்ல இல்லாதபோது, முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருக்கிறது. அது மட்டுமல்ல, நெடுமாறன் அய்யாவையும் கைது பண்ணி சிறையில் அடைச்சிருச்சி.
அய்யா தமிழருவி மணியன் தமிழ்நாட்ல இருந்திருந்தால் இப்படி அராஜகத்தைச் செய்ய தமிழக அரசுக்கு துணிவு இருந்திருக்குமா?
ஊர்ல இருந்து தலைவர் வரட்டும், அப்புறம் இருக்குது… முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிச்சவங்களுக்கு.
சிங்கத்தை சீண்டி பாத்திடுச்சி தமிழக அரசு.. இனி நடக்கப்போற விளைவுகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு.

தேமுதிக வையும் இத்துக்குனு வாங்க ? காங்குக்கு திமுக கண்டிசன் ? தினமலர் சொல்கிறது

ஏற்காடு இடைத்தேர்தல் ஒருபுறம் இருக்க, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் இடையே, லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பெரும் இழுபறி நீடித்து வருகிறது. "தே.மு.தி.க., வந்தால் மட்டுமே காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும்; வராமல் போனால், தற்போது கைவசம் இருக்கும் கட்சிகளின் துணையோடு லோக்சபா தேர்தலை சந்திக்கலாம்' என, தி.மு.க., தலைமைக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தலில், வலுவான கூட்டணி ஏற்படுத்த முயற்சித்து வரும் தி.மு.க., அதில், காங்., தே.மு.தி.க., சேர வேண்டும் என, விரும்புகிறது. ஆனால், தே.மு.தி.க., அதற்கு உடன்படுமா என்ற சந்தேகம், தி.மு.க.,வுக்கு இருக்கிறது. அதற்கு காரணம், விஜயகாந்தின் ஆதரவைப் பெற, தி.மு.க., மேற்கொண்ட சமீபத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது தான். வழக்கம் போல இதுவும் " ஊஹ" செய்தியே....உறுதிப்படுத்தப்பட்ட செய்தி இல்லை....பழமிருந்தால் மரம் கல்லடி படுவதில் வியப்பில்லையே?

திங்கள், 18 நவம்பர், 2013

நவீன சேரிகள் ! அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள்

மேற்கூரை பெயர்ந்து விழும் விடுதி கட்டிடம்.

சிமெண்ட்டுகள் பெயர்ந்து சிதிலமடைந்த கட்டிடங்கள்; துருத்திக் கொண்டிருக்கும் துருப் பிடித்த கம்பிகள்; மேற்பூச்சு பெயர்ந்து விழுந்த பல்லிளிக்கும் மேற்கூரைகள்; பிடிமானமின்றி அந்தரத்தில் தொங்கும் ஜன்னல்கள்; பாசி படர்ந்து கருமையாகி போன நீரில்லா “நீர்த்தொட்டிகள்’; பல ஆண்டுகளாக சொட்டு நீரைக் கூட பார்த்திராத குடிநீர்க் குழாய்கள்; மலமும் சிறுநீரும் குட்டையாய் தேங்கிக் கிடக்கும் திறந்த வெளி செப்டிக் டேங்குகளாய் கழிவறைகள்; சுற்றுச்சுவரோ, மேற்கூரையோ தேவைப்படாத திறந்தவெளி குளியலறைகள்…
திகில்படக் கதையொன்றில் வரும் பங்களா பற்றிய விவரிப்புகள் அல்ல; தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகளின் அவலங்கள் இவை. விடுதி என்பதற்குரிய எந்த வித அடிப்படை வசதிகளுமற்ற வதை முகாம்களாக தமிழகமெங்கும் படர்ந்திருக்கும் 1300 ஆதி திராவிடர் நல விடுதிகளில் 97,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சொல்லொண்ணா துயரில் உழல்கின்றனர்.

சி.பி.எம் : கிரிமினல் கும்பலாகச் சீரழிந்து விட்ட சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம் !

சமர் ஆச்சார்ஜிதிரிபுரா மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கான அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரராகத் தொழில் செய்து வருகிறார் சி.பி.எம். கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினரான சமர் ஆச்சார்ஜி. திரிபுராவின் தலைநகர் அகர்தலா உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் ஏழை மக்களுக்காக 2,400 கழிப்பறைகளைக் கட்டித்தர அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசிடமிருந்து ஒப்பந்தப் பணிகளை எடுத்துள்ளார். இதன் மூலம் ரூ. 2.5 கோடி வரை சம்பாதித்துள்ள அவர், கடந்த அக்டோபர் 10-ஆம் தேதியன்று தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 லட்சத்தை ரொக்கப் பணமாக எடுத்து வந்து மெத்தை மீது விரித்து, அதன் மீது படுத்துக் கொண்டு சில நோட்டுக் கட்டுகளை தன் மீது பரப்பிக் கொண்டு, அக்காட்சியைத் தனது செல்பேசி கேமரா மூலம் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு பெருமிதத்துடன் அனுப்பியுள்ளார். இது தனது வாழ்நாள் கனவு என்றும், இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது என்றும், கட்சியின் பிற தலைவர்களைப் போல பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு சம்பாதித்த சொத்துக்களை மறைத்து ஏழையைப் போல நடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.  இந்த வீடியோவை அவரது நண்பர் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சிக்குக் கொடுக்க, அது நாடெங்கும் இப்போது ஒளிபரப்பாகி, ஊழல் பெருச்சாளிகளான காங்கிரசுக்காரர்களே காறித்துப்புமளவுக்கு சி.பி.எம். கட்சியின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது.

குஷ்பு மீது அழுகிய தக்காளி முட்டை வீசிய பாமக குண்டர்கள் மீதான வழக்கு

நடிகை குஷ்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு;நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் முருகன் மேட்டூர் குற்றவியல் கோர்ட்டு எண் 2–ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை குஷ்பு மேட்டூர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். பின்னர் வெளியே வந்தபோது, அவர் மீது ஒரு கும்பல் அழுகிய தக்காளி, முட்டை ஆகியவற்றை வீசியது.இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் அளித்த புகாரின்பேரில், மேட்டூர் போலீசார் பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடர்பான விசாரணை மேட்டூர் குற்றவியல் கோர்ட்டு எண் 1–ல் நடந்து வருகிறது.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் சாட்சிகள் யாரும் ஆஜராகாததால் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ், விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 26–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.     nakkheeran.in

பாரதரத்னா என்பது ஒரு லஞ்சம் ! பெரியார் அண்ணாவை விடவா சச்சின் தகுதியானவர்?

சென்னை: தமிழகத்தில் 'தந்தை'யாக போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ரா மற்றும் பேரறிஞர் அண்ணா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு ஏன் பாரத ரத்னா விருது கொடுக்கப்படவில்லை என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடு பறக்கிறது. சச்சின் டெண்டுல்கர்.. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதை எவரும் ஆட்சேபிக்கவில்லை.. ஆனால் அவரைவிட இந்த விருதைப் பெறக்கூடிய தகுதி படைத்தவர்கள் இன்னமும் சிறப்பிக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக எழுகிறது தேசிய அளவில் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆருக்கு இவ்விருது வழங்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. அதேபோல் தமிழகத்தின் தந்தையாக போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ரா, பேரறிஞர் அண்ணா, இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை  சு சுவாமி சோ ராமசாமி ஜெயலலிதா போன்ற பார்பனர்களுக்கு பாரதரத்னா கண்டிப்பாக கிடைக்கும் ம்ம்ம் ஜெயப்பிரதாவுக்கும் கூட கிடைக்ககூடும் 

காசுக்கு விளையாடிய சச்சினுக்கு பாரதரத்னா விருது ! கோமாளித்தனத்தின் எல்லை

டெல்லி: பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி. நேற்று முன் தினம் தனது கடைசிப் போட்டியை ஆடினார் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். அதனைத் தொடர்ந்து முன்பு அளித்த வாக்குறுதியின் படியே, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழக்க இருப்பதாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால், அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி. இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது..
கிரிக்கெட் விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின். இவர் காசு வாங்கிக் கொண்டுதான் இத்தனை காலம் விளையாடினார். அவருக்குப் போய் பாரத ரத்னா விருது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது
இவரை விட தகுதியான மிகச் சிறந்தவர்கள் இந்த விருதுக்கும், கெளரவத்திற்கும் தகுதியான பலர் உள்ளனர்

தாயின் பாடலை ரசித்து கண்ணீர் மல்கிய குழந்தை !

தாயின் பாடல் கேட்டு குழந்தையொன்று கண்ணீர் மல்கிய காட்சிகள் அடங்கிய வீடியோவானது இணையத்தளத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்த க்கது.பிரிட்டனில் புகழ்பெற்ற பாடகியான போல்ட்ஸ் தனது பாடும் திறமையால் எதிர்பாலினரை ஈர்க்கும் தன்மை கொ ண்டவர் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அவரது பாட லை கேட்டு குழந்தையொன்று உருகி உருகி அழுதது இது வே முதல்முறையாகும். 'உனக்கு எனது பாடலை கேட்கவேண்டும் போல் உள்ளதா? பாடும்போது நீ என்ன செய்கிறாய் என்பதை நான் பார்க்க வேண்டும்' என்று அக்குழந்தையை பார்த்து அவர் கேட்பதும் பின்னர் அந்த பாடலை பாட குழந்தை பாடலைக்கேட்டு உருகி உருகி அழுவதும் குறித்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

மாலினி 22 : ஸ்ரீ பிரியா இயக்கம் . மலையாளத்தில் வெளியான ‘22 female கோட்டயம்

நித்யா மேனன் படம் ஆண்களுக்கு எதிரானதா? இயக்குனர் பதில் சென்னை:
மலையாளத்தில் வெளியான ‘22 பிமேல் கோட்டயம் படம்  தமிழில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் உருவாகிறது. ஸ்ரீபிரியா இயக்குகிறார். நித்யா மேனன், கோவை சரளா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவு. அரவிந்த் சங்கர் இசை. ஆண்களுக்கு எதிரான படமாக இக்கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறதே என்றதற்கு பதில் அளித்தார் ஸ்ரீபிரியா. ‘இது ஆண்களுக்கு எதிரான படமா என்கிறார்கள். வெளிவரும் பெரும்பாலான படங்களில் ஆண்கள் வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அந்த படங்களை ஆண்களுக்கு எதிரான படம் என்று சொல்ல முடியாது. இது ஆண்களுக்கு எதிரான படமல்ல. பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். இந்த வேடத்துக்கு நித்யா மேனன் பொருத்தமாக இருப்பார் என்று ராதிகா என்னிடம் கூறினார். கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் நித்யா என்றார். .tamilmurasu.org

சு சுவாமி : இந்திய அரசியல்வாதிகளின் கருப்பு பண பட்டியலை பாக். உளவுத்துறை வெளியிடும்!”

“பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ, இந்தியாவில் உள்ள அமைச்சர்களின் கருப்பு பண பட்டியல் கணக்கை வெளியிடப் போவதாக மிரட்டுகிறது” நம்ம இந்திய அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் இந்த தகவலை வெளியிட்டுள்ளார், அடிக்கடி பரபரப்பான தகவல்களை வெளியிடுவதில் கில்லாடியான சுப்ரமணியம் சுவாமி. இவர் சொல்வதில் எத்தனை சதவீதம் நிஜம், அத்தனை சதவீதம் கற்பனை என்ற கலவை ரகசியம், அந்த சுப்ரமணியம் சுவாமிக்கே வெளிச்சம். இருந்தாலும், அவ்வப்போது ஏதாவது சொல்லி மற்றையவர்களை துணுக்குற வைப்பதில் சுவாமி சமர்த்தர். இதற்குமுன் ஜனதா கட்சியை நடத்திக் கொண்டிருந்துவிட்டு, சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த சுப்ரமணியம் சுவாமி, நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போதுதான், இந்த விவகாரத்தை எடுத்து விட்டார். புவனேஸ்வரில் பேசிய சுவாமி, “பாகிஸ்தான் மீது நம்நாடு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டில் சேர்த்து வைத்துள்ள கருப்பு பணம் பற்றி விபரங்கள் முழுவதும் வெளியிட்டுவிடுவோம் என பாகிஸ்தானின் உளவுதுறை ஐ.எஸ்.ஐ. மிரட்டுகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர்களின் கருப்பு பணம் அனைத்தும் துபாயில் இருக்கும் ஹவாலா கும்பலால்தான் அனுப்பப்படுகிறது.

சரத்குமார் பேட்டி: எதிர்க்கட்சிகள் தேவையில்லை ! அப்படி போடு சரத்து ! இனி பன்னிர்செல்வதிற்கு சான்ஸ் கிடைக்காது !

நிர்வாகத் திறன் கொண்ட முதல்வர் இருக்கும்போது எதிர்க்கட்சிகள்
தேவையில்லை என்றார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
  அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வருகிறது. எனவே, மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த அதிமுகவின் நிலைப்பாடுகளுக்கு சமத்துவ மக்கள் கட்சியும் உடன்படும். கூட்டணித் தலைமை போட்டியிடக் கேட்டால் சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிடும். கூட்டணி தலைமையில் முடிவுக்கு கட்டுப்படுவோம்  அட வேறென்னதான் பண்ணுவீங்க   மாற்றுக் கருத்து இல்லை.
  அதேநேரத்தில் முதல்வர் ஜெயலலிதா இலங்கை விவகாரம் குறித்தும், முள்ளிவாய்க்கால் முற்றம் குறித்தும் தொடர்ந்து கவனித்து வருகிறார். அனைத்துக் கோப்புகளும் முதல்வரின் பார்வையில் இருந்து வருகின்றன. எனவே, அவர் நல்ல முடிவை எடுப்பார். தமிழர்களுக்கு பாதுகாப்பாக அதிமுக அரசு இருந்து வருகிறது.
  நிர்வாகத்தில் திறமையான அரசு மாநிலத்தில் இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தேவையில்லை. கேள்வியைத் தானே கேட்டு, பதிலையும் சொல்லும் கருணாநிதி தலைமையிலான திமுகவும் வேண்டாம், தேமுதிக வேண்டவே வேண்டாம்.

ரவுடிகள் ஜாதிசங்களிலும் அரசியல் அமைப்புக்களிலும் அடைக்கலமாகி வருகிறார்கள் ! மாமுலுக்கு பாதுகாப்பு

மதுரை: பல்வேறு வழக்குகளில் சிக்கி, போலீஸ் கண்காணிப்பிற்கு உள்ளாகியுள்ள பிரபல ரவுடிகளில் சிலர், அரசியல், ஜாதி சங்கங்கள், அமைப்புகளின் பாதுகாப்பு பதவி களில், பதுங்கி வாழ ஆரம்பித்து
உள்ளனர். மதுரையில், 15 பிரபல ரவுடி களும், அவர்களுக்கு கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கூலிப்படை ஆட்களும் கட்டப்பஞ்சாயத்து, கொலை, வழிப்பறிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை, போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தாலும், சட்ட நுணுக்கங்கள் வழியாக சில மாதங்களிலேயே வெளியே வந்து, மீண்டும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில், பிரபல ரவுடிகள் சிலர், வெளியூலகிற்கு தெரியாமல் "சைலன்டாக' தனது ஆட்களை கொண்டு, நிரந்தர வருமானம் வரக்கூடிய தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

கோவையில் கவர்ச்சி உடை அணிந்தால் லைசன்ஸ் கிடைக்காதாம் ! பேசாம கோவையை காபுல்ன்னு மாத்துங்க

கோவை:மோட்டார் வாகன லைசென்ஸ் பெறுவோருக்கு, உடைகளுக்கான கட்டுப்பாடுகளை, கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் விதித்துள்ளது. "மாடர்ன்' உடை என்ற பெயரில், கவர்ச்சியான ஆடை அணிந்து வரும் பெண்களுக்கும், டீ-சர்ட் அணிந்து வரும் ஆண்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகன லைசென்ஸ் பெறுவதற்கு, தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர். முதல் கட்டமாக எழுத்துத்தேர்வு எழுதி, "பழகுனர் உரிமம்' பெறுகின்றனர். அதன் பின், 30 நாள் கால அவகாசத்தில் இரு சக்கர மோட்டார் வாகனத்தில், "8' என்ற எண்ணை போன்ற வடிவத்தில் வாகனம் ஓட்டி காண்பிக்க வேண்டும். டி சர்ட் போடகூடாத?அடேய் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ?சம்பளத்துக்கு ஒரு தாலிபானை வச்சுக்கிட்ட தேவல 

நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்திற்கு தடை விதிக்கவேண்டுமாம் ! முலாயம்சிங் யாதவ் . இந்த ஆளை பேசாம ஜூவில கொண்டு போய் விடுங்க !

எடாவா : ''பார்லிமென்டில், ஆங்கிலத்தில் பேச தடை விதிக்க வேண்டும்,'' என, சமாஜ்வாதி கட்சித் தலைவர், முலாயம் சிங் யாதவ் கூறி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.உ.பி.,யில் நேற்று நடந்த, இந்தி மொழி பாதுகாப்பு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற, முலாயம் சிங் பேசியதாவது:ஓட்டு கேட்க வரும்போது, இந்தி மொழியில் பேசும் அரசியல் தலைவர்கள், பார்லிமென்டில், ஆங்கிலத்தில் பேசுகின்றனர். அந்தந்த தாய்மொழிகளை பேசும் நாடுகள் தான், அனைத்து விதங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன.ஆனால், நம் நாட்டின் பார்லிமென்டில், ஆங்கிலம் தான் அதிகமாக பேசப்படுகிறது. பார்லிமென்டில், ஆங்கிலத்திற்கு தடை விதிக்க வேண்டும். இந்தி மொழியை பேச உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தான், இந்தியை பாதுகாக்க முடியும்.இவ்வாறு, முலாயம் சிங் பேசினார். தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை பார்த்து கெட்டு போய்விட்டார் என்று நினைக்கிறேன் அதனால் தான் இப்படி தவறாக பேசுகிறார் இப்படிதான் சிலோன்ல பெரிய பண்டாரநாயக்கா 56 ல்ல தனி சிங்களம் கொண்டுவந்து இன்றுவரை அந்தகாலத்து சொர்க்கபுரியை நாசமாக்கினார் .

அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.2 கோடி! ஆம் ஆத்மியும் பரவாயில்லை ?

புதுடெல்லி: டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்துள்ளார்.டெல்லி உள்பட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள மொத்தம் 70 தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜ சார்பில் விஜேந்திர குப்தா ஆகியோர் போட்டியிடுகிறனர்.

ராகுல் மன்னிப்பு: ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த அபிப்பிராயம்: காங்கிரஸ்

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த கருத்து என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
ராகுல் காந்தி பேச்சு
சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூரில் நடந்த கலவரத்துக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என்றும், அந்த கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு தொடர்பு கொண்டு இருப்பதாகவும் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாரதீய ஜனதா, இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தது. இதைத்தொடர்ந்து, வருங்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் பேசுமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்தது.
மன்னிப்பு கேட்கும் விவகாரம்  காங்கிரசில் அவரவருக்கு சொந்த அபிப்பிராயங்கள் வேறு இருக்குதாமே ?

ஞாயிறு, 17 நவம்பர், 2013

திருநங்கைகள் : அச்சம் தவிர் நிகழ்ச்சி மூலம் குஷ்பூ சமுக போராளியாக அவதாரம் எடுக்கிறார்

இன்று நிர்மலா பெரியசாமி ,லக்சுமி ராமகிருஷ்ணன் , குட்டி பத்மினி . கோபிநாத் போன்ற பலரும் டாக் ஷோக்கள் நடத்துகிறார்கள் . சிலரின் நிகழ்சிகள் கட்டை பஞ்சாயத்து லெவெலுக்கு தரம் தாழ்ந்து வெறும் பரப்பிற்காக அடித்தட்டு மக்களின் உணர்சிகளுடன் விளையாடும் அடாவடித்தனத்தையும் அரங்கேற்றுகின்றன,
இவர்களிடம் இருந்து குஷ்பூ மிகவும் வேறுபடுகிறார் என்றே சொல்ல வேண்டும் , வெறும் மேல்பூச்சு பிரச்சனைகளை விட சமுகத்தை ஆட்டி படைக்கும் விவகாரங்களைதான் பெரிதும் குஷ்பூ கையாள்கிறார்,

பீட்சா 2 வில்லா - விமர்சனம்!

அடுத்து இதுதான் நடக்கும் என்று படம் பார்க்கும் ரசிகர்களின் ஒட்டுமொத்த யூகங்களையும் அடுத்தடுத்த காட்சிகளில் உடைத்துப் போட்டது பீட்சா என்ற படம். புதிய சிந்தனைகளுக்கு வரவேற்பு உள்ளதையும், சிறு படங்களையும் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய படங்களாக மாற்ற முடியும் என்ற பெரும் நம்பிக்கையையும் திரையுலகில் அழுத்தமாக பதிவு செய்த படம் பீட்சா. அதன் இரண்டாவது பகுதியாக அதே பாணியில் வெளியாகி இருக்கும் படம் பீட்சா 2 வில்லா. படத்தின் முதல் காட்சியே கல்லரைத் தோட்டத்தில் துவங்குகிறது. தன் முதல் புத்தகத்தை எழுதிவிட்டு அதை வெளியிட எந்த பதிப்பகமும் முன்வராத காரணத்தால் விரக்தியில் இருக்கும் ஒரு எழுத்தாளன். அவன் தந்தை இறந்துவிடுகிறார். தனக்கென யாரும் இல்லை என புலம்பும் ஹீரோவை ஆறுதல் சொல்லி தேற்றுகிறார் காதலி.