புதன், 1 பிப்ரவரி, 2012

மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில், நயன்தாரா அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிக்க மாட்டேன் என்று கூறிய நயன்தாரா மறுபடியும் நடிக்கிறாரா? என்று கேட்க வேண்டாம்.
 நீ தான் உலகம் என்று இருந்த இந்த ஜோடிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதன் காரணம் பிரபுதேவா அடிக்கடி தன் குழந்தைகளை பார்த்துவிட்டு வருவதுதானாம். இந்த செய்தியை அறிந்த நயன்தாரா ஓணம் பண்டிகையன்று பிரபுதேவாவை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்து திருப்பியனுப்பியது பழைய கதை.
 இப்படிப்பட்ட சில காரணங்களினால் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர் என்று பேசப்படுகிறது. நடிக்கலாம் என்று நினைத்தவுடன் நயன்தாராவுக்கு அடித்தது ஜாக்பாட் தான். நாகார்ஜுனா படத்தில் கிட்டத்தட்ட சீதை போன்ற தெய்வீக வேடத்தில் நடிக்க நயன்தாராவிற்கு பேசப்பட்ட சம்பளம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்.
 மற்ற நடிகைகள் எல்லாம் வயிறெரிந்த நேரத்தில் அடுத்த ஜாக்பாட், தமிழில் அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு.

சசிக்குமார் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தை இயக்குகிறார் இயக்குனர் பாலுமகேந்திரா. கடைசியாக தனுஷ் நடிப்பில் “அது ஒரு கனாக்காலம்” என்ற படத்தை இயக்கினார். பாலுமகேந்திரா இயக்கவிருக்கும் பெயரிடப்படாத அந்த படம் சசிகுமார் தயாரிப்பில் உருவாகவிருக்கிறது.
ஒரு படம் எடுப்பதற்கே கோடிக் கணக்கில் செலவாகும் இந்த காலத்தில் பாலு மகேந்திரா படத்தின் பட்ஜட் 90 லட்ச ரூபாய். சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் கதை பெரும்பாலும் ஒரே ஒரு வீட்டினுள் தான் இருக்குமாம்.
 ”ஒரு படம் நன்றாக வருவதற்கு படத்தின் பட்ஜட் காரணம் அல்ல. படத்தின் கதையும்,கதாபாத்திரங்களும் தான் முக்கிய காரணம் என்ற கருத்தை வலியுறுத்தவே இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன். கோடிகள் வேண்டாம், லட்சங்கள் போதும் கண்ணால் பார்க்கக் கூடிய அளவிற்கு படம் எடுப்பதற்கு” என்று கூறியுள்ளார் பாலுமகேந்திரா

கவர்னர் ஆட்சியில் தேர்தலை நடத்துங்க, நான் சந்திக்கத் தயார்-விஜயகாந்த் பதில் சவால்

சங்கரன்கோவிலுக்கு கவர்னரின் ஆட்சியின் கீழ் இடைத் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தனித்துப் போட்டியிடத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதில் சவால் விட்டுள்ளார்.
அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது.மிக மிக குறுகிய காலத்திற்குள் உடைந்து சிதறிப் போயுள்ள இந்த வித்தியாச கூட்டணி இப்போது அரசியல் அரங்கில் புதிய நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது என்பதை இன்றைய அரசியல நிகழ்வுகள் காட்டுகின்றன.
சட்டசபையிலிருந்து இன்று விஜயகாந்த்தும், அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து வெளியே வந்த விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு உள்ளே நடந்தது குறித்துக் கேட்டனர்.

ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது. இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக கருதப்படும் இந்த மோதல் குறித்த விவரம்...

சரண்யா மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில்

நடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.
நடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர். அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில் சரண்யா ஆடை இழந்துள்ளார்.
காதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர் சரண்யா. அடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பேராண்மை. தற்போது அவர் மழைக்காலம் படத்தில் நடித்து வருகிறார்.

தி.நகரில் தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை : சி.எம்.டி.ஏ., பதில்

சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில், தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை' என, ஐகோர்ட்டில் சி.எம்.டி.ஏ., பதிலளித்துள்ளது. அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி, தி.நகரில் கட்டடங்கள், வணிக வளாகங்கள், கடைகள் கட்டப்பட்டதாகக் கூறி, அவற்றுக்கு, "சீல்' வைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில், கட்டடம் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள், வியாபாரிகள் சங்கங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. இம்மனுக்கள் கடந்த வாரம், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தன. அரசும், சி.எம்.டி.ஏ.,வும் பதிலளிக்க, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, 7ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

2வதும் பெண்ணா? மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்


காபூல்: ஆப்கானிஸ்தானில் இரண்டாவதும் பெண்ணாய் பெற்றதற்காக மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் குன்துஸ் மாகாணத்தில் உள்ள கானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது. அவரது மனைவி எஸ்டோரை(22). அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஷேர் முகமது பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

பல்டி அடிக்கும் உதயகுமார்!கூடங்குளம் அணு உலைக்கு

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, "ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை' என கூறிய உதயகுமார், கூடங்குளத்தில், "போலீசார் சிறப்பாக செயல்பட்டு, அணு உலை ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்' என பாராட்டியதால், பொதுமக்கள் குழம்பியுள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான, உதயகுமாரின் சட்ட அனுமதியில்லாத போராட்டத்திற்கு, போலீசார் தேவையான பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
நேற்று, திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்திற்கு, திடீரென ஆட்களை திரட்டி வந்த உதயகுமார், அங்கு மனு அளிக்க வந்த, அணு உலை ஆதரவாளர்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார். அங்கு பேட்டி அளித்த அவர், "இந்த ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை; மதவெறியர்கள் வெறிச்செயலில் ஈடுபடுகின்றனர்' என, ஆவேசமாக கூறினார். பின், கூடங்குளத்திற்கு சென்ற அவர், அணு மின் நிலையம் காமராஜர் சிலை அருகே பேசுகையில், "நாம் ஆத்திரமடையக் கூடாது; போலீசார் நமக்கு சிறந்த பாதுகாப்பு தந்தனர். அணு உலை ஆதரவாளர்கள் மீது, வழக்கு பதிந்து விட்டனர். போலீசாருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்' என, மாற்றிப் பேசினார். திருநெல்வேலியில் பாதுகாப்பில்லை என, திட்டிப் பேசிய உதயகுமாரின் பேச்சைக் கேட்ட அவரது ஆதரவாளர்களே, கூடங்குளத்தில் அவரது பாராட்டு பேச்சைக் கேட்டு, குழம்பிப் போயினர்.

- நமது சிறப்பு நிருபர் -

ஜெயலலிதா,,,திமுக மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி

முதல்வர் ஜெயலலிதா அனுமதியோடு
திமுக மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி
தமிழகத்தை, மாற்றாந்தாய் மனப்போக்கில் மத்திய அரசு நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ள, அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, இதைக் கண்டிக்கும் வகையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவதாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தராமல், மாற்றாந்தாய் மன நிலையில் மத்திய அரசு வஞ்சித்து வருவது கண்டிக்கத்தக்கது.

.50,000 கோடிக்கு 'டஸ்ஸால்ட் ரபேல்' போர் விமானங்களை வாங்கும் இந்தியா!


Dassault Rafale
டெல்லி: பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த டீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் கோயில் சுரண்டல்களை நேரடியாகக் கண்டு நொந்து

‘‘பசுவிடம் இருந்து பால் கறந்துகொள்ளுங்கள்... வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், பசுவின் மடியையே அறுக்கும் வேலையைச் செய்யாதீர்கள்...’’-
இப்படி ராமேஸ்வரம் கோயிலில் நிலவும் சுரண்டல்களை நேரடியாகக் கண்டு நொந்துபோய், கடந்தாண்டு தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார் மதுரை உயர் நீதிமன்ற நீதியரசர் சசிதரன்.
“உண்மைதான்...’’ என்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடக்கும் மோசடிகளை பட்டியலிட ஆரம்பித்தார்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஷாரூக்கான் விருந்தில் தோழியின் கணவரை புரட்டி எடுத்தார்



மும்பை: அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான்.
ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபாத் படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள உணவகத்தில் சஞ்சய் தத் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ஷாருக்கான் விருந்துக்கு வந்தார்.

A.R.Rahman எப்படி குதறி இருந்தார் என்பதையும் நாடே அறியும்

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமனாதன், இளையராஜா போன்ற இந்துமதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்களை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவிற்கு ஆஸ்கார் விருது வாங்கித்தந்த ஏ.ஆர். ரகுமான் பற்றி இதுவரை ஒன்றுமோ சொல்லவில்லையே?
-கே. அப்துல்காதர், திருச்சி.
சொல்லிட்டா போச்சி.
கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.
அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்தரராஜனை  பாட வைத்தார்.

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணை கிடையாது-விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மேலும் சொத்துக் குவிப்பு வழக்கை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் விரைந்து முடிக்குமாறும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்கு.

சாதி சடங்கு பொருத்தங்களுடன் சமூகத்தில் நடக்கும் திருமணம்

முன்னுரை:
1996-97ஆம் ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரத்தை’ உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்தக் ‘கலவரத்தில்தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். இக்காலத்தில் எமது அமைப்புகள் தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தியது. பல்வேறு அளவுகளில், களங்களில் நடந்த இந்த இயக்கத்தின் போது நடந்த மணவிழாவின் பதிவுதான் இந்தக் கட்டுரை. சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப்  பாருங்கள்!

அரிவாளை கீழே போடுங்கய்யா...! - இளையராஜா

சினிமாவில் இன்றைக்கு அரிவாள், ரத்தம் என வன்முறை அதிகரித்து வருகிறது. ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள், என்றார் இசைஞானி இளையராஜா.
ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள செங்காத்து பூமியிலே படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா கூறுகையில், "செங்காத்து பூமியிலே வன்முறைக்கு எதிரான படம். இன்றைய காலகட்டத்தில் அப்படி வந்திருக்கும் ஒரே படம் என்று கூடச் சொல்லலாம்.

பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த IAS அதிகாரி மனைவி தலைமறைவு



பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் "மும்பை ஹீரோஸ்' "கர்நாடகா புல்டோசர்ஸ்' இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இதைக் காண்பதற்காக தன் மகளுடன், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பங்கஜ்குமார் பாண்டேயின் மனைவி அம்புஜா பாண்டே ஸ்டேடியத்துக்கு வந்தார். கேட் எண் ஒன்றில், உள்ளே நுழைய முயன்ற அம்புஜாவை, கப்பன் பார்க் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா நாயக் தடுத்து, டிக்கெட் கேட்டார்.
அம்புஜா, தன்னிடம் இருந்த ஒரு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். இரண்டு பேருக்கு ஒரு டிக்கெட் கொடுப்பது ஏன்? என்று அஞ்சுமாலா கேட்டு, யாருக்கோ போன் செய்தார். பின்னர், அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார்.
தன்னை இவ்வளவு நேரம், கேட்டில் காக்க வைத்ததால், கோபமடைந்த அம்புஜா, இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார்.

நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி!



Jayalalitha and Panruti Ramachandran
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தானே புயல் நிவாரணிப் பணிகள் தொடர்பாக தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சரமாரியாக குற்றம் சாட்டிப் பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பதிலடி கொடுத்து விளக்கம் அளித்தார்.
இது நாள் வரை அதிமுகவும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பெருத்த லாபமடைந்த தேமுதிகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்தன. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இந்த கூட்டணி டமாலாகி விட்டது.

நீரா ராடியா கனிமொழி டேப்புகள் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளன: மத்திய அரசு

டெல்லி: கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுக்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு ஏஜென்சிகள் பொறுப்பில்லை என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் கார்பரேட் தரகர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நீரா ராடியாவும் உதவியதாகக் கூறப்படுகின்றது. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து அவர் தொலைபேசியில் பேசிய டேப்புகள் ஊடகங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடைஆமை வேகத்தில்

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள், 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்காமல் இருக்கும் வகையில், இன்ஜின் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, தமிழகம் முழுவதும், 23 டெப்போக்கள் மூலம், 980 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்கள் அனைத்தும் படுமோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன.

குறளின்மீது ஆரிய முத் திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி

கலி.பூங்குன்றன்உடையும் இந்தியா ஆரிய திரா விடப் புரட்டும், அந்நிய தலையீடுகளும் - எனும் தலைப்பில் ஆரிய மனுதர்மச் சுமையைத் தலையில் தாங்கி ராஜீவ் மல்ஹோத்ரா அரவிந்தன் நீலகண்டன் எனும் இருவரால் எழுதப்பட்ட அவதூறு நூலைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் இம்மாதம் 8,9 ஆகிய இரு நாட்களில் அணு அணுவாகச் சிதைத்து உண்மை நிலையை உறுதிபடுத்தினார்.
அந்தவுரை உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
சில முக்கியமான அடிப்படையான அவதூறுகள் மறுக்கப்பட்டுள்ளன. வேரறுக்கப்பட வேண்டிய வேறு சிலவும் உள்ளன.

பள்ளிகளில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம்! அமெரிக்க நீதிமன்றத்தின் சீரிய தீர்ப்பு

இந்திய நீதிபதிகளின் மேலான பார்வைக்கு...!

கடவுள் வாழ்த்தை நிறுத்திய பெண்மணி! பள்ளிகளில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம்! அமெரிக்க நீதிமன்றத்தின் சீரிய தீர்ப்பு

கிரேன்ஸ்டன் (அமெரிக்கா) ஜன. 30: தீயணைப்புப் படை வீரரின் மகளும், ஒரு செவிலியருமான ஜெஸ்ஸிகா அல்கு விஸ்ட் என்ற பெண் ரோமன் கத்தோலிக்க மக்கள் அதிகமாக வாழும் அமெரிக்க நாட் டின் கிரேன்ஸ்டனில் வழக்கு தொடுத்து, 49 ஆண்டு காலமாக பள்ளியில் இருந்து வந்த இறைவணக்கப் பாடல் ஒன்றை நீக்க வைத்து சாதனை படைத்துள்ளார். இது குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறப்பான தாகும்.

முதல்வர் பாதுகாப்பு வாகனத்தை ‘ஓவர்டேக்’ செய்த தபால் வாகனத்துக்கு அபராதம்

முதல்வரின் பாதுகாப்பு போலீஸ்காரர்கள் செல்லும் வாகனத்தை முந்திச்சென்ற தபால் வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் இருந்து அஞ்சல் வேன் (டிஎன் 01; கே 3043) ஒன்று கடிதங்கள், பார்சல்களை சேகரித்து வர ஜன.28ம் தேதி மாலை 5. மணியளவில் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் விரைந்துக் கொண்டிருந்தது. அலுவலகங்கள் மூடும் நேரம் என்பதால், வாகனத்தின் டிரைவர் ஜெயராம் (41) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவசரமாக வண்டியை ஒட்டியிருக்கிறார்.

திங்கள், 30 ஜனவரி, 2012

கமல், அஜித் இணையும் படம்!

விஸ்வரூபம் படத்திற்கு அடுத்ததாக கமல் நடிக்கவிருக்கும் படம் “தலைவன் இருக்கிறான்”. தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இந்தியில் ”அமர் ஹேய்ன்” என இப்படத்திற்கு பெ
 படத்தில் கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிப்பதாக தெரிகிறது. கமலுடன் அஜித் இணையும் முதல் படம் இது. மற்ற முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
 படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு இந்தி நடிகை காத்ரீனா கைஃப்பிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.  

திரைப்பட இயக்குனர்கள், இணை, துணை, உதவி இயக்குனர்களின் ஊதிய உயர்வை

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்த இயக்குநர்களின் சம்பள உயர்வை நேற்று சங்கத்தின் செயலர் அமீர் அறிவித்தார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இயக்குநர் அமீர் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேசி புதிய ஊதியங்கள் மற்றும் பணிகளுக்கான வரைமுறைகள் குறித்து 10-04-2008 அன்று கையெழுத்திட்டு கொண்ட ஒப்பந்தம் 3 ஆண்டுகள் முடிந்து காலாவதியாகி விட்டது.

30 லட்சத்தைத் திருப்பிக் கேட்டதால் அதிமுக மா.செ.வை கொலை செய்தாரா ராவணன்?


கோவை: மாவட்டச் செயலாளர் பதவி தர எனது தந்தை ரூ. 30 லட்சம் பணத்தை ராவணனிடம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி மாவட்டச் செயலாளர் பதவியை ராவணன் வாங்கித் தரவில்லை. இதையடுத்து பணத்தைத் திருப்பிக் கேட்டபோது உயிருடன் ஊர் திரும்ப மாட்டாய் என எனது தந்தையை எச்சரித்தார் ராவணன். இந்த நிலையில்தான் எனது தந்தை விபத்தில் இறந்ததாக தகவல் வந்தது. ஆனால் ராவணன்தான் எனது தந்தையைக் கொலை செய்துள்ளார் என்று நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராஜின் மகன் சதீஷ் குமார் புகார் கூறியுள்ளார்.

அழகிரி:மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை



என் மகனுக்கு கட்சி பதவி கேட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்த செய்தி பொய்யானது. அப்படி எந்த பதவியும் நான் கேட்கவில்லை. கேட்கும் எண்ணம் தற்போது இல்லை என்றார் அழகிரி.

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று தனது 61வது பிறந்த நாளை எளிமையான முறையில் மதுரையில் இன்று கொண்டாடினார்.
வழக்கமாக படு ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் அழகிரியின் பிறந்த நாளை மதுரையில் கொண்டாடுவார்கள் அவரது அடிப்பொடிகள். ஆனால் இந்த முறை அந்த பிரமாண்டம் மட்டும் மிஸ்ஸிங்.

ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!

ஸ்ரீமுகம் பெறுதல்:
ஸ்ரீ ஜகத்குரு, சங்கரமடம், காஞ்சிபுரம்.
ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதாரவிந்தங்களுக்கு மயிலாப்பூர் சுப்புணி நமஸ்காரம்.
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு.
வெறுப்போட நியூஸ் பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன். மத்தவா பேப்பரா இருந்தா தேமேன்னு போயிருப்பேன், நம்ப தினமணியிலேயே போட்டிருக்கா, ”திருப்பதியில கத்தியால மொட்டை அடிச்சா எய்ட்ஸ் வந்துருமோன்னு பிளேடு வாங்க உலக சுகாதார நிறுவனத்திடம் தேவஸ்தானம் உதவி கேட்கிறது”ன்னு.
என்ன கிரகச்சாரமோ கலி முத்திடுத்து. காமாசோமான்னு இத டீல் பண்ணாம, தெய்வீக காணிக்கை விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டா மத்தவா என்ன நெனைப்பாள்.

அ.தி.மு.க. எம்.எல்ஏ.க்களையும் இழுத்து, தே.மு.தி.க.-வில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களையும் வெளியே

சூட்கேஸ் சகிதம் நடராஜன் அனுப்பிய இரண்டு பேர் வருகிறார்கள்!

Viruvirupu.com
சசிகலா சின்டிகேட் அ.தி.மு.க.-வுக்கு அரசியல் ரீதியாக சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்ற ஊகம் பரவலாக ஓடிக்கொண்டிருக்க, ஓசைப்படாமல் விஜயகாந்தின் தே.மு.தி.க.-வுக்கு ஆப்பு வைக்கும் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. சசிகலா குரூப்பின் அரசியல் ஃபிலோசபர் நடராஜன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை கவர் பண்ணுவதற்கு தனது ஆட்கள் இருவரை சூட்கேஸ் சகிதம் இறக்கி விட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இது சில மாதங்களுக்கு முன், ‘வேறு விதமாக’ தொடங்கப்பட்ட ஆபரேஷன் என்கிறார்கள் விவகாரம் தெரிந்தவர்கள்.
சசிகலா குரூப் அ.தி.மு.க. பவர் சென்டராக இருந்த நாட்களில், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சிலர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

புறக்கணித்தார் மோடி: பா.ஜ., தலைவர்களுடன் மோதல் வெளிச்சம்

ஆமதாபாத்: பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அவர் புறக்கணித்தது, அக்கட்சி வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியும், உத்தரகண்டில் பா.ஜ., ஆட்சியும் நடந்து வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பிரசாரம் செய்வார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் வேட்பாளர்: பா.ஜ., சார்பில் இந்த மாநிலங்களில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பட்டியல், தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்டபோது, அதில் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

சமச்சீர் கல்வினு சொன்னப்போ, இது ஏதோ புதுசா வருதேன்னு பயமா இருந்துச்சு

தேர்வு முறையை தித்திப்பாக்கிய சமச்சீர் கல்வி!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து, ச.இரா.ஸ்ரீதர்

''டெலிபோன் மணியடிச்சா ரிங்கு
எங்க நட்பை பிரிக்க நினைச்சா சங்கு
நண்பா...
நாம் இருவரும் சேர்ந்து செய்த சேட்டை
நம் நட்புக்கு நாம் கட்டிய கோட்டை''

 இது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தமிழ் இரண்டாம் தாளில் எழுதிய புதுக்கவிதை! மாணவர்களின் படைப்பாற்றல் திறமைக்கு மேடை கொடுத்து இருக்கிறது சமச்சீர் கல்வி என்கிற சந்தோஷம் ஒருபுறம். ஆனால், கல்வியாண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கழிந்த பிறகுதான் சமச்சீர் கல்வி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. புதிய கல்வித் திட்டம், மிக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட பாடங்கள் என்ற தடைகள் கடந்து... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் மாணவர்கள்..? சில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்தோம். அவர்களின் சந்தோஷங்களும் சங்கடங்களும் இதோ....

முழுக்கு'ப் போட்ட நயனதாரா- பிரபுதேவாவின் கதி என்ன?!

எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா.
இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து வருகிறது. ரம்லத்தை அவர் திருமணம் செய்த ஸ்டைலும், அதை மறைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்த விதமும் அனைவராலும் மறக்க முடியாதது.
ரம்லத்துடன் அவர் கிட்டத்தட்ட ரகசிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். இவர்தான் எனது மனைவி என்று அவர் வெகு காலமாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், பிரபுதேவாவின் குடும்பத்தார் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்பதால். இதனால் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவுக்குப் பெரியவர்களாக ஆன பிறகும் கூட ரகசிய வாழ்ககைதான் வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.

இராணுவ சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளிக்கும் திருமணம்!

கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று உள்ளது.
  கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவச் சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஒரு நடிகையின் வாக்குமூலம்

நடி‌கைகளின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படம் "ஒரு நடிகையின் வாக்குமூலம்". நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஹீரோயினாக களம் இறங்குகிறார் நடிகை சோனியா அகர்வால். படத்தில் நடிகையாகவே சோனியா நடிக்கிறார். நடிகையான பிறகு அவர் சந்திக்கும் கஷ்டங்கள் மற்றும் திருமண வாழ்க்கை, விவாகரத்து போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தை ராஜ்கிருஷ்ணா என்பவர் திரைக்கதை அமைத்து இயக்குகிறார். பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ஆசிரியையாக விரும்பிய பெண் பிச்சை எடுக்கும் அவலம்

ஆலப்புழா: எதிர்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில் 1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார். ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல், நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை.