சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது; வேறுபட்டது ( டி.என்.ரே 1939)
வேதகால மக்கள் "பிபிதகா" என்ற தான்றி கொட்டைகளை ( Terminalia Bellirica ) பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள்.
"சாலகா" என்று நாரத ஸ்மிருதி குறிப்பிடுவது தந்தத்தால் ஆன நாற்கோணப் பகடை.
ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், கீழடி ஆகிய இடங்களில் சுடுமண் அறுகோணப் பகடைகள் ( cubic dice) கிடைத்துள்ளன.
"வல்லு" எனப்படும் பகடை தொடர்பான கலைச்சொற்களுக்கு போகிற போக்கில் புணர்ச்சி விதி சொல்கிறது தொல்காப்பியம்!
வல்லப் பலகை ( அகநானூறு 377); சங்குகளில் துளையிட்டு செய்த பகடைகள் ( அகநானூறு 135); சோழ மன்னன் தம்பியுடன் தாமப்பல் கண்ணணார் என்ற புலவர் ஆடிய பகடை விளையாட்டு ( புறநானூறு 43) போன்ற சங்க இலக்கியங்களுக்கு இணையான நடைமுறை சார்ந்த ஆவணம் வேறு எந்த மொழியிலும் இல்லை.