சனி, 27 ஏப்ரல், 2024

British மன்னர் சார்லஸின் உடல்நிலை கவலைக்கிடம்! .. தயாராகும் இறுதிச்சடங்கு திட்டங்கள்!

 tamil.samayam.com - பஹன்யா ராமமூர்த்தி : மோசமாகும் மன்னர் சார்லஸின் உடல்நிலை.. தயாராகும் 'ஆபரேஷன் மெனாய் பாலம்' இறுதிச்சடங்கு திட்டங்கள்!
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதால் அவருடைய இறுதிச்சடங்கு குறித்த திட்டங்கள் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் ஆபரேஷன மெனாய் பாலம் என்ற மறைமுக பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை Chirch குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் (RAW) – விமல் வீரவன்ச

Shri Ajit Kumar Doval (@iam_ajitdoval ...
Ajith doval
21st June as Canada Genocide Day ...
wimal weerawansa

வீரகேசரி: இலங்கை சேர்ச் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் – விமல் வீரவன்ச
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .
எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார்.

நடிகை ருக்மணி தேவி - சிங்கள திரையுலகின் டெய்சி ராசம்மா டேனியல்ஸ் (ருக்மணி தேவி) நுவரெலியா,

May be a black-and-white image of 6 people and people smiling

Pathmanathan Mahadevah :  டெய்சி ராசம்மா டேனியல்ஸ் (ருக்மணி தேவி) நுவரெலியா, ரம்பொட கிராமத்தில் 1923 ஜனவரி 15 அன்று கொழும்புச் செட்டி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.  ஐந்து பெண்களில் இரண்டாவது பெண், டெய்சியின் தந்தை ஜான் டேனியல் ஒரு தோட்டக்காரர், மற்றும் அவரது தாயார் பெலன் ரோஸ் ஒரு ஆசிரியராக இருந்தார்.
 அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை எண்பத்து நான்கு.  ருக்மணி தனது கணவர் எடி ஜெயமான்னவுடன் இணைந்து நடித்த படங்களில் “கெளஹ ஹண்ட” ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற படமாக அறியலாம்.  சீரியலதா (குஸ்டினா அல்லது ஸ்ரீலதா), தெய்வ யோகா (ஷீலா தாஸ்கோன், பெமிலா பிசாவா), கணவன் மனைவி தெய்வம் (சந்திரா), ஸ்பிரிட் அபோவ் (எமிலி) மற்றும் காட் வேர் ஆர் யூ (மரியா) ஆகியவை வேறு சில பிரபலமான படங்கள்.  மேலும் அவர் பிரேமாவாக நடித்த “நலகனன” திரைப்படம் இலங்கை கலாசாரத்திற்கு ஏற்றாற்போல் அவரது உடை கவர்ச்சியாக இருப்பதாகக் கருதி, தணிக்கை செய்யப்பட்டது.

யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது

 ilakkiyainfo.com  : தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

3 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு - (ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம்)

 nakkheeran.in : இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்காவை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுப்பு

 மாலைமலர் : புதுடெல்லி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா அந்த தொகுதியில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வானார். இந்த தடவை அந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காகவே சோனியா அங்கு போட்டியிடுவதை தவிர்த்து மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார்.
முதன் முதலாக தேர்தல் களத்துக்கு வரும் பிரியங்காவுக்கு முதல் தேர்தலிலேயே நெருக்கடி கொடுத்து தோல்வியை பெரியதாக கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவும் தீவிரமாகி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இது தொடர்பாக பல தடவை ஆய்வு செய்தனர்.

யாழ்ப்பாண தேசவழமைச் சட்டமும் , வெள்ளாளியமும்! அருண் சித்தார்த்

 Arun Siddharth : தேசவழமைச் சட்டமும் , வெள்ளாளியமும்!
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்துக்கு மட்டும் செல்லுபடியாகும் பிராந்தியச் சட்டமான தேசவழமைச்சட்டம் 12 வெள்ளாள முதலியார்களின் பரிந்துரையின் பேரில் இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்களான ஒல்லாந்தர்களினால் 1707 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.
இந்தச் சட்டம் அன்று 9 சரத்துகளாக வகுக்கப்பட்டது. அதில் 8 ஆவது சரத்து அடிமைகள் பற்றிய சட்டமாக இருந்தது. அந்த 8 ஆவது சரத்து மேலும் 8 பிரிவுகளாக அடிமை என்பவர்கள் யார் யார் ? என்னென்ன சாதியினர் அடிமைகளாக வரையறுக்கப்பட்டவர்கள் ? அவர்களுடைய கடமைகள் என்ன? அவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என உபசட்டங்களை விரிவாக வியாக்கியானம் செய்கின்றது.
அந்த 8 ஆவது பிரிவு ஆங்கிலத்தில் இவ்வாறு ஆரம்பிக்கின்றது.
The Thesawalamai or The Laws And Customs Of The Malabar Of Jaffna.
Section VIII Of The Male And Female Slaves.
1. Different classes of Slaves

மோடிக்கு எத்தனை சீட் கிடைக்கும்? – ஸ்டாலின் கணிப்பு! (100 to 150)

 மின்னம்பலம் Aara தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையோடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த க்ரூப் போட்டோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!

Producer Gnanavel Raja s house maid commits suicidal attempt

 tamil.oneindia.com  - Vishnupriya R  : சென்னை: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் வீட்டு பணிப்பெண், அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞானவேல்ராஜா , சூர்யா, கார்த்தியின் படங்களை தயாரித்து வந்தார். அவர் ஸ்டூடியோ கிரீன், ஆத்னா ஆர்ட்ஸ் என்ற இரு ஸ்டூடியோக்களை வைத்துள்ளார். இவருக்கு மனைவி நேகா.
Producer Gnanavel Raja s house maid commits suicidal attempt

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா!:விசேட அறிக்கை வெளியீடு

ilakkiyainfo.com : பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா!:விசேட அறிக்கை வெளியீடு
-ஆணைக்குழுஅறிக்கை வெளியான பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை என தெரிவிப்பு
1. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டஇரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார்
2. சிஐடி அதிகாரியை விசாரணைகளை சீர் குலைப்பதற்காக நான் பதவி நீக்கவில்லை
3. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே மேற்கொண்டனர்

வியாழன், 25 ஏப்ரல், 2024

திமுகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி?

 மின்னம்பலம் - Aara  :அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன், இபிஎஸ் – ஓபிஎஸ், ஓபிஎஸ் என்று தொடர்ந்து முகாம் மாறிய பெங்களூரு புகழேந்தி விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இதன் மூலம் சசிகலாவிடமும் ஜெயலலிதாவிடம் நல்ல நெருக்கத்தை பெற்றிருந்தார்.

இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

 Ada derana : : ”பாடல் கேசட்டுகள், சிடி-க்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசைத்தட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.
ஆனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசைத்தட்டு நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

 nakkheeran.in : ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி,
''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ்.
இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?
இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தார்!

hirunews.lk : ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

புதன், 24 ஏப்ரல், 2024

திரைப்பாடல்களுக்கு கவிஞர்களும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜாவிற்கு நீதிமன்றம் கேள்வி!

 மின்னம்பலம் - Kavi  :  திரைப்பாடல்களுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா பாடல்கள் வழக்கில் நீதிமன்றம் கேள்வி!
இளையராஜாவின் பாடல்கள் தொடர்பான வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டாலின் “சூறாவளி”.. வட இந்திய மாநிலங்களில் ரெடி ஆகிறது dmk ஷெட்யூல்! பலே பிளான்!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  மீண்டும் ஸ்டாலின் “சூறாவளி”.. வடக்கிலும் கால் பதிக்கும் திமுக.. ரெடி ஆகிறது ஷெட்யூல்! பலே பிளான்!
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில்,'இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மோடி: கர்நாடகாவை போல் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு கொடுக்கும்!

 மாலை மலர் :  கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

 மின்னம்பலம் -  indhu :  அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? என பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 23) உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

திமுகவின் மத்திய அமைச்சர்கள் யார் யார்? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!

7 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

 மின்னம்பலம் - Aara :   அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை கூட்டணிக் கட்சியினர், திமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் சந்தித்த படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அதன் பிறகு திமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து கடுமையான தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவித்தார்கள்.

சூரத்தில் நடந்தது பேரமா? போட்டியில்லாமல் பாஜக வென்றது எப்படி?

minnambalam.com - vivekanandhan : குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை அடுத்த இரண்டாவது மிகப் பெரிய மாநகரம் சூரத் ஆகும்.
அப்படிப்பட்ட முக்கியமான சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
 இது நாடு முழுக்க பரபரப்பான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரை வேட்பாளராக முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகளில் குளறுபடி இருக்கிறது என்று சொல்லி தேர்தல் அலுவலர் அவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்தார்.
நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் முன்மொழிந்துள்ள  மூன்று பேரும் மனு பரிசீலனையின்போது, நாங்கள் இந்த கையெழுத்தை போடவில்லை என்று மறுத்துவிட்டதாகச் சொல்லி தேர்தல் அலுவலர்  வேட்புமனுவை ரத்து  செய்திருக்கிறார்.

PM மோடியின் வெறுப்பு பேச்சுக்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை! ஒரே நாளில் 17,400 பேர்

May be an image of 1 person and text that says 'COMMUNAL POLITICS Over 17,400 citizens write to EC seeking action against PM Narendra Modi for hate speech Scroll Staff 5 hours ago Updated 42 minutes ago f'

Vasu Sumathi  :  நேற்று ராஜஸ்தானில், இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்துகளை பரப்பிய மோடியை சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் மக்கள் வச்சு வெளுத்து விட்டார்கள்…!
ஒரே நாளில் 17,400 பேர், மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்கள்.
காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி உட்பட ஒரு குழு நேரில் சென்று 16 விதிமீறல்கள் அடங்கிய புகாரை இன்று சமர்ப்பித்தனர்.
மோடியின் வெறுப்பு பேச்சு, பாஜகவின் தேர்தல் வெற்றியை வெகுவாக பாதிக்கும் என்று பல கருத்து கணிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் உண்மையிலேயே பயந்த மோடி, இன்று துளியும் வெட்கமில்லாமல் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அப்படியே ஒரு அந்தர்பல்டி அடித்தார்.
நேற்று இஸ்லாமியர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அழைத்துவிட்டு இன்று இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று வாய் கூசாமல் சொல்லுகிறார்.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஓட்டு யாருக்கு அதிகம்? மெகா சர்வே ரிசல்ட்!

minnambalam.com - vivekanandhan :  மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகளின்படி, 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழ்நாடு முழுக்க திமுக கூட்டணி 45.3% வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 28.3% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடமும், பாஜக கூட்டணி19.9% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடமும், நாம் தமிழர் கட்சி 5.5% வாக்குகளைப் பெற்று நான்காம் இடமும் பெறுகின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின் வாக்கு யாருக்கு செல்கிறது, இளைஞர்களின் வாக்கு யாருக்கு செல்கிறது, அரசு ஊழியர்களின் வாக்குகள் யாருக்குச் செல்கிறது, கிராம மக்களின் வாக்குகள் யாருக்கு, நகர்ப்புற மக்களின் வாக்குகள் யாருக்கு என்று கருத்துக்கணிப்பில் கிடைத்த பல்வேறு முடிவுகளைப் பார்ப்போம்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்குகள்
வழக்கமாக திமுகவிற்கு நகர்ப்புற வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும். இந்த முறை திமுகவிற்கு கிராமப் புற வாக்குகளிலும் முன்னேற்றம் இருக்கிறது.

இயக்குநர் (பசி) துரை காலமானார்! பல மொழிகளிலும் 46 படங்களை இயக்கியுள்ளார்.

மாலை மலர்  :  தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற 'பசி' திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய 'பசி' திரைப்படத்திற்கு 1979-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

திங்கள், 22 ஏப்ரல், 2024

கோவை வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் ஜாக்கியின் ஈஷா மையம்தான்

 பாலகணேசன் அருணாசலம் : கோயம்பத்தூர் வெப்பம் அதிகமானதுக்கு திமுக ஆட்சி காரணம் ன்னு மக்குமலை ஒரு அபூர்வ கண்டுபிடிப்பை சொன்னான்.
அவன் தரப்பு அநியாத்தால் விளைந்த ஒரு உண்மையை மறைக்கனும்னா அதற்கு சம்மந்தமில்லாத ஒரு பொய்யை பரப்புவது பாஜக பித்தலாட்டகாரர்களின் தந்திரம்..
அதாவது, கோவை க்கு அருகில் உள்ள காடுகளை கஞ்சா சாமியார் ஜக்கி மோதி ஆசியுடன் அழித்து அங்கே ஒரு கார்ப்பரேட் ஆசிரமத்தை ஏற்படுத்தினான்...அத்தனையும் கடந்த 2011 -2021 வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்தவைகள்..
கோவை வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் இந்த கார்ப்பரேட் சாமியாரின் காடு அழிப்பு செயல்கள்
போகட்டும்,
அவன் பொய் சொல்வதில் திறமைசாலியா  அல்லது அதை கேட்கும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏமாளிகளா...
இப்படித்தான் நாட்டு நிலை உள்ளது

அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழா. - அசல் குஜராத் வைஷ்ணவ சமாஜ் ஆட்களாய்டுவா...!?

 Seetha Ravi Suresh : வைஷ்ணவ அழகரு
பதினோராம் நூற்றாண்டில் மதுரை பாண்டியர்களுக்கும், நெல்லை பாண்டியர்களுக்கும் நடந்த அரசுரிமைப்போரில், நெல்லை பாண்டியர்கள் முதன்முதலாக கள்ளர்களை அரசுப்படைகளில் சேர்த்துக்கொண்டனர்.
வேள்விக்குடி செப்பேட்டில் கூறுகிறபடி இலங்கை படைகள் பாண்டிய சோழ பகுதிகளை தீக்கிரையாக்கியபோது, நெல்லைப்பாண்டியர்கள் சோழர்களுடன் இணைந்து இலங்கை படைகளை தோற்கடித்தனர்.  இதன் விளைவாக கள்ளர்களுக்கு அரசாங்க அங்கீகாரம் சிறிது கிடைத்தது.
அந்த அங்கீகாரத்தால்தான், மீனாட்சி திருக்கல்யாண கொண்டாட்டங்களில் கள்ளர்களின் சீர்கொண்டுவரும் நிகழ்ச்சிக்கு பகிரங்கமாக கள்ளர்கள் பெருங்கூட்டமாய் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது. 

10 இடங்களில் அதிமுகவிற்கு 3ம் இடம்?

 tamil.oneindia.com - Shyamsundar :சென்னை: கிட்டத்தட்ட 10 அல்லது 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக 3ம் இடம் செல்வதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக தெரிகிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். அதிமுக சரியாக வேட்பாளர் போடவில்லை, என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
Huge problem for AIADMK in 10 seats in Tamil nadu Lok Sabha Elections 2024

மோடியின் மதவெறி பேச்சு : நாட்டின் தங்கத்தை எல்லாம் முஸ்லீம்களுக்கு தருவோம் என்கிறது காங்கிரஸ்!

 tamil.oneindia.com  - Vigneshkumar : டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் தீயாகப் பரவி வரும் நிலையில், இதை திமுகவின் சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நமது நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
DMK and Congress targets Modi for his Speech on Muslims in Rajasthan Rally
நாகாலாந்து, மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை அரங்கேறிய நிலையில், அதைத் தவிர பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.

இலங்கை “Foxhill” கார் பந்தய விபத்து- 8 பேர் உயிரிழப்பு . தியத்தலாவ என்ற இடத்தில்

 வீரகேசரி தியத்தலாவ நரியகந்த, “Foxhill” கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இன்று (21) இடம்பெற்றதுடன், பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த  7போ் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் 21 பேர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனைப் பார்க்க முன்வந்த சிலர் மீது பின்னால் சென்ற மற்றுமொரு கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

கர்நாடக பல்கலைகழகத்தில் Congress அரசியல்வாதியின் மகள் கொலை- லவ்ஜிகாத்! – மாணவிகள் போராட்டம்

 வீரகேசரி : பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவருடன் படித்த ஃப‌யாஸ் (25) பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து ஹுப்ளி போலீஸார் ஃபயாஸை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் நேஹா முதலில் என்னை காதலித்தார்.

ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

தினமணி : (ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஆதரவாளர்கள்படம் | பிடிஐ
ஜார்கண்ட்டில் ஆளும் ’ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சி சார்பில் ராஞ்சியில் இன்று(ஏப். 21) 'புரட்சிப் பேரணி’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின்(தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்) மனைவி கல்பனா சோரன், ஜார்கண்ட் முதல்வர் சம்பாயி சோரன், பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான பகவந்த் மான், பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு

In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

 nakkheeran.in : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார்.
அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

யாழ்தேச வெறுப்பு அரசியலும் - ஜாதி அரசியலும்!

 ராதா மனோகர்  யாழ்ப்பாண மக்கள்  கண்ணுக்கு தெரியாத ஒரு  invisible Segregation   வெறுப்பு முள் வேலிக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள்!
யாழ்ப்பாணத்தில் உண்மையான சமூகவியல் ஆய்வாளர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்று உருப்பெருக்கி கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டி உள்ளது!
இந்த கேள்வியை வெறும் கேலியாகவோ அல்லது கோபமாகவோ நான் எழுப்பவில்லை.
நம் சமூகத்தின் பொதுப்புத்தி பற்றிய எனது பார்வையை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.
எனது பார்வை சரியா தவறா என்பதை காலம்தான் கூறவேண்டும்
கடந்த நூற்றாண்டுகளாக மெதுவாக ஆனால் ஆழமாக திட்டமிட்டு அடிப்படை மனித விழுமியங்களுக்கு எதிரான கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தில் புகுத்த பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்

ஜாதிய கட்டுமானத்தை தக்க வைப்பதற்காகவே   மனித விழுமியங்களுக்கு பொருந்தாத பல கோட்பாடுகள்  யாழ்ப்பாணத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வலுக்கும் எதிர்ப்புகள்: ஒரே நாளில் பாஜக வேட்பாளர்களை துரத்திய மக்கள்!

 கலைஞர் செய்தி  KL Reshma : வட மாநிலங்களில் வலுக்கும் எதிர்ப்புகள்: ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை துரத்திய மக்கள்!
ஹரியானா மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை மக்கள் துரத்தியடித்த சம்பவம் தற்போது பாஜகவுக்கு வட மாநிலங்களில் உள்ள எதிர்ப்புகளை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (ஏப் 19) முதற்கட்ட தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், பாஜகவின் NDA கூட்டணிக்கு மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி அதிகரிப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவைக்கு மக்கள் பாஜகவுக்கு தங்கள் எதிர்ப்புகளை இந்த தேர்தலின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சனி, 20 ஏப்ரல், 2024

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

 nakkheeran.in  :  உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
கடக்கும் முன் கவனிங்க...
இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

கனடாவில் 400 KG தங்கம் கொள்ளை! 5 இந்தியர்களும் ஒரு ஈழத்தமிழரும் கைது.. டொரோண்டோ விமான நிலையத்தில் இருந்து

 கனடா வரலாற்றிலேயே பெருந்தொகையான 400 kg தங்கம் கொள்ளை போயுள்ளது  
22 ,மில்லியன் கனடிய டாலர் பெறுமதியான தங்க கட்டிகளை விமான நிலையத்தில் இருந்து போலி பாத்திரங்களை காட்டி லாரியில் ஏற்றி சென்றுவிட்டனர் இந்த கொள்ளையர்கள்
ஆறு கொள்ளையர்கள் கைது செயப்பட்டுள்ளனர் மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் ஐந்து  பேரும்   இலங்கை தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  
அமித் ஜலோடா, அமத் சவுத்திரி .பாம்பால் சித்து ,அலி ரஸா ,பிரசாத் பரமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஏனைய  மூவர் மீது பகிரங்க அழைப்பாணை பிறப்பிக்க பட்டுள்ளது                       
இந்த காணொளியில் பேட்டி வழங்கும்  டொரோண்டோ போலீஸ் தலைமை அதிகாரி துரையப்பா அவர்கள் முன்னாள் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மேயர் அமரர் திரு அல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார்.

கோவை: தாமரைக்கு மாறிய இலை ஓட்டுகள்? பதட்டத்தில் வேலுமணி

 மின்னம்பலம் - vivekanandhan : கோவை: தாமரைக்கு மாறிய இலை ஓட்டுகள்? பதட்டத்தில் வேலுமணி
கோவை தொகுதி தமிழ்நாடு முழுதும் எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பான தொகுதியாக இருந்தது. குறிப்பாக அங்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் தமிழ்நாடு முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் கோவையில் இறங்கி வேலை பார்த்தனர். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் 63.8% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இந்த தேர்தலில் கோவையின் வாக்கு சதவீதம் 7 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து 71.17% ஆக பதிவாகியுள்ளது.

அதிமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு 250 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை வரை கோவை தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிமுக தரப்பு பெரும் நம்பிக்கையுடன் இருந்தது.

102 தொகுதிகளில் நடந்த மக்களவை முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவு

 மாலை மலர் :  18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
அதாவது, தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கார் (1) என 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

மக்களவை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 40 சதவீத வாக்குகள் பதிவு- உத்தேச கணிப்பு

May be a graphic of text that says 'एक भारत TAMILNADU SURVEY NILGIRIS BJP+ BJP+-18.2% 18.2% 18. 18.2% DMK+· DMK+-49.1% 49.1% 49.1% ADMK+ 28.2% NTK-4.5% NTK 4.5% 28.2% 4.5%'
மாலைமலர் : பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

Lok Sabha election 2024 வாக்குபதிவு... முதல் ஆளாக வாக்கு பதிவு செய்த நடிகர் Ajith Kumar!

 

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக Sugar சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

 தினமணி : இந்தியாவில், போர்ன்விட்டா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது, நெஸ்ட்லேவின் குழந்தைகளுக்கான உணவுகள் அபாயத்தை சந்தித்துள்ளன.
நெஸ்ட்லே நிறுவனம், ஏழை நாடுகளில் விற்பனையாகும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில்தான் அதிக சர்க்கையை சேர்ப்பதாகவும்,
அமெரிக்கா, ஐரோப்பிய, பிரிட்டன் நாடுகளில் விற்பனையாகும் உணவுகளில் இந்த அளவுக்கு சர்க்கை இருக்கவில்லை என்றும் ஆய்வறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்விஸ் புலனாய்வு அமைப்பு, சர்வதேச குழந்தைகள் உணவு அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வறிக்கையை ஆங்கில ஊடகம் ஒன்று வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை குறித்து நெஸ்ட்லே எதையும் சொல்லவில்லை. ஆனாவ், பொதுவான அறிக்கையில், உலகளவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு 11 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 18 ஏப்ரல், 2024

EVM ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

 dinamani.com : ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!
இணையதள செய்திப்பிரிவு
காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது ஒரு முறை தாமரை சின்னத்தை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவானதால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் நோட்டாவை சேர்த்து மொத்தம் 10 சின்னங்கள் பொருத்தப்பட்டிருந்தது. முதல்கட்டமாக 20 இயந்திரங்களில் உள்ள 10 சின்னங்களையும் அழுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டது? மருத்துவ மனையில் தேறி வருகிறார்

 தினமணி : நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
நேற்று வேலூர் குடியாத்தத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று உணவில் தனக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற பகீர் சந்தேகத்தை அவர் கிளப்பியுள்ளார்.
வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்காக குடியாத்தம் பகுதியில் பொதுமக்களிடையே தீவிர வாக்குச் சேகரிப்பில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டார்.

புதன், 17 ஏப்ரல், 2024

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்...மண்டல வாரியாக செல்வாக்கு யாருக்கு? மெகா சர்வே ரிசல்ட்!

மின்னம்பலம் - vivekanandhan ;  மின்னம்பலம் நடத்திய மெகா சர்வேயின் முடிவுகளின்படி, 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி 45.3% வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 28.3% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடமும், பாஜக கூட்டணி19.9% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடமும், நாம் தமிழர் கட்சி 5.5% வாக்குகளைப் பெற்று நான்காம் இடமும் பெறுகின்றன.

அடுத்ததாக மண்டல வாரியாக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு கூட்டணியும் எத்தனை வாக்கு சதவீதம் பெறுகிறார்கள் என்பதைப் பிரித்துப் பார்ப்போம். தமிழ்நாட்டில் உள்ள 5 மண்டலங்களான சென்னை மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் ஆகியவற்றில் மின்னம்பலம் கருத்துக்கணிப்பில் கிடைத்த முடிவுகள் இதோ.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

nakkheeran.in  : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.
இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

2024 சமூக ஊடக கருத்து கணிப்பு : இண்டியா கூட்டணி - 350+ தேஜ கூட்டணி - 150+ ஏனையவை - 25+

May be an image of 2 people and text that says 'LOK SABHA ELECTION 2024 ELECTION BREAKING SUN NNEWS பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது! 'இந்தியா' கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து எனக்கு தகவல்கள் வருகின்றன. -உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேட்டி SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 17-APR-24'

காசு. நாகராசன் : இந்திய அளவிலான தேர்தல் முடிவுகள்.....
இண்டியா கூட்டணி - 350+
தேஜ கூட்டணி - 150+
மற்றவை - 25+
#தமிழ்நாடு_புதுவையில்......
இண்டியா கூட்டணி - 40     
வாக்கு விகிதம் 55%
அதிமுக - 0
வாக்கு விகிதம் 25%
நாம் தமிழர் + நோட்டா + பிற - 0
வாக்கு விகிதம் 12.5 %
தேஜ கூட்டணி - 0
வாக்கு விகிதம் 7.5%
இம்முறை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக திமுக நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும்.
காங்கிரஸ் கட்சி தனித்து 150 முதல் 200 இடங்களில் வெற்றி பெறும்.
பாஜக தனித்து 100 முதல் 150 இடங்கள் வரையே வெற்றிபெற முடியும்.
தமிழ்நாடு , கேரளம், கர்நாடகம், ஆந்திரம்,

ஆ.ராசா VS எல்.முருகன்.. திமுக நம்பிக்கை, பாஜக எழுச்சி! நீலகிரி தொகுதியில் என்ன நடக்கிறது தெரியுமா?

 tamil.oneindia.com - Veerakumar :  ஊட்டி: திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் ஆகியோர் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாகியுள்ளது நீலகிரி (தனி). நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயகுமார் போட்டியிடுகிறார்.
தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் வெல்ல முடியும் என்ற திமுக கூட்டணியின் திடமான நம்பிக்கைக்கு ஓரளவுக்கு சவாலாக இருக்கக் கூடியவை மொத்தம் 6 தொகுதிகள்.
தென் சென்னை
வேலூர்
நாமக்கல்
ஈரோடு
நெல்லை
நீலகிரி (தனி)

1,900 ரூபாய் கொத்து விற்பனை!! விற்பனையாளரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!-

  ilakkiyainfor.con : வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தெரு உணவு விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த தினம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1,900 ரூபாய் என சந்தேகநபர் குறிப்பிடும் நிலையில், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கடை உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
இதனை குறித்த சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு செய்த நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியதை தொடர்ந்து சந்தேகநபரான தெரு உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயில் கடும் மழை வெள்ளம் .. காணொளி

 மலையோரம் செய்திகள் : வெள்ளக்காடாக மாறிய துபாய், 2வருடமாக பெய்யும் மொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததுள்ளது.
டுபாய் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விமான போக்குவரத்து பலமணிநேரம் தடைபட்டுள்ளது. மிகவும் பிஸியான விமான நிலையமாகவும்  உலக நாடுகளை இணைக்கும் connect flightகள் அதிகமாக இயக்கப்படும் விமான நிலையமாக இருப்பதாலும் இன்று அனைவரின் பார்வையும் டுபாய் மீது திரும்பியுள்ளது.
டுபாய் நகரம் வருடத்திற்கு சுமார் 3.12 inches அளவு மழைவீழ்ச்சியை பெரும் நகரம் ஆனால் திங்கள் கிழமை மாலை 10மணியில் இருந்து செவ்வாய் மாலை 10மணிவரை சுமார் 6.26 inches மழை பெய்துள்ளது. இதன்காரணமாக துபாய் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
டுபாய் நகரம் ஏப்ரல் மாதத்தில் வெறும் 0.13 inches மழைவீழ்ச்சியையே இதுவரை பதிவு செய்து வந்துள்ளது. இவ்வருடம் எதிர்பாராத அளவிலான (6.26 inches) மழை பெய்துள்ளமையே வெள்ளத்திற்கு காரணமாகிறது.

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி

கலைஞர் செய்திகள் Prem Kumar  :   இந்தியா கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது,
உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் ஆ.ராசாவை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்தி மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா என  பொதுமக்களிடம் கேட்டார்.

சிட்னியில் மீண்டும் வன்முறை – கிறிஸ்தவ தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல் – பலர் படுகாயம்- (வீடியோ)

 veerakesari :  சிட்னியில் கிறிஸ்தவதேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கிறிஸ்தவ மதகுரு உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சிட்னியின் தென்மேற்குபகுதியில் உள்ள கிறிஸ்தவதேவலாயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
மார் மரி இமானுவெல் என்ற ஆயர் ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் அவரை நோக்கி பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் அங்கு காணப்பட்டவர்கள் மீதும் அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி : இதெல்லாம் ஸ்டார்ட்டர் தான், 2047-ல தான் மெயின் கோர்ஸ்!

மாலை மலர் :  பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர சமூக வலைதளங்களிலும் புகைப்படம், வீடியோ, மீம்ஸ் என வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஆளும் கட்சி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களையும், பா.ஜ.க. சார்பில் காங்கிரஸ் மற்றும் எதிரக்கட்சியினருக்கு எதிரான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அப்படியாக ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர்களுக்கு காப்புரிமை கிடையாது! அவை தயாரிப்பாளர்களுக்கு உரியவை!

No photo description available.
Sunil Dutt r Nalini Jaywant  Radio Ceylon
Golden Music Directors In Tamil 50s 60s 70s

ராதா மனோகர் :  இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை  கோருவது சரியா?
அவை பாடல்களின் தயாரிப்பாளர்களுக்கு உரியவை அல்லவா?
இசையமைப்பாளர்கள் இசையமைப்பதற்கு பணம் வாங்கும் பொழுது அவர்களின் பாடலுக்கு உரிய உரிமையை தயாரிப்பாளர்களுக்கு விற்றுவிட்டார்கள.
அதன் பின் பாடலின் சகல உரிமையையும் தயாரிப்பாளர்களுக்கே உரியது.Who're The New Generation Music Directors In The Tamil Film, 41% OFF
இதில் சட்ட சிக்கல் ஏதுமில்லை
ஆனால் நடைமுறை சிக்கல்கள் கொஞ்சம் உண்டு.
இந்தியாவில் பாடல்களின் காப்புரிமை பற்றி மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.
இது ஏன் என்று சிந்தித்து பார்க்கும்போது இதற்கு ஒரு பின்னணி இருப்பது தெரிகிறது.

 இந்திய ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்பு ராஜாங்க அமைச்சராக இருந்த மெத்த படித்த பி வே கேஸ்கார் B. V. Keskar என்பவர் கடும் பிற்போக்குவாதி.
இவரின் காலத்தில் சினிமா பாடல்கள் மிகவும் தரம் குறைந்த இசை என்பதாகவும்  அந்த இசை ஆகாஷிவாணியில் ஒலிக்க கூடாது என்று தடைசெய்திருந்தார்.

திங்கள், 15 ஏப்ரல், 2024

திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி! ஏபிபி - சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்

 tamil.samayam.com - மரிய தங்கராஜ்  ; மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி இறைத்து மக்களின் பார்வையை தங்கள் பக்கம் திருப்ப பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழக மக்கள் யாருக்கு பெருவாரியான ஆதரவை வழங்க உள்ளனர் என்பது குறித்த ஆவல் அதிகரித்து வருகிறது.
திமுக கூட்டணி கடந்த முறை பெற்ற மிகப்பெரிய வெற்றியை இந்த முறையும் தொடர வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிக தொண்டர் படை உள்ள கட்சி என்று கூறப்படும் அதிமுகவும் தங்கள் பலத்தை நிரூபிக்க பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி தனி அணி அமைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்! நயினார் நாகேந்திரன் FIR

 நக்கீரன் : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில்,
முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் ; மதுரை மீனாட்சி அம்மன் - ராமேஸ்வரம் கோயில்களை அயோத்தி ராமர் கோயில் ட்ரஸ்ட் கையகப்படுத்த திட்டம்!

 tamil.samayam.com -  ஜே. ஜாக்சன் சிங்  :  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், ராமஸ்வேரம் கோயிலுக்கும் பெரிய ஆபத்து வரவுள்ளதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும்,
அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு கோயில்களையும் குறிவைத்து பாஜக காய் நகர்த்தி வருவதாக அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ளதால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் தனது தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறிய தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. அவர் கூறியதாவது:

திமுக பணத்தோடு பிடிபட்டால் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பாஜக சதித்திட்டம்? பாஜக அதிமுக தாராளமாக பண விநியோகம்

 மின்னம்பலம் - Aara :  டிஜிட்டல் திண்ணை: சபரீசன் சைலன்ட் ரவுண்டு… ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்! அஷ்டமி, நவமிக்கு முன் தொடங்கிய கரன்சி முகூர்த்தம்!
வைஃபை ஆன் செய்ததும் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் பற்றிய மின்னம்பலத்தின் மெகா சர்வே வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்துகொண்டே இருந்தன. அதுபற்றிய வாசகர்களின் ரியாக்‌ஷன்களும் வந்துகொண்டிருக்க, அவற்றை பார்த்தபடி வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியிருக்கிறது.
“நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், ஏப்ரல் 17 ஆம் தேதி வரைதான் பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால், பிரச்சாரக் களம் க்ளைமேக்ஸில் இருக்கிறது. இதை ஒட்டியே இன்னொரு களமும் சூடுபிடித்திருக்கிறது. அதுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ரகசியக் களம்.

பாகிஸ்தானில் மனைவி, 7 குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்ற கூலித்தொழிலாளி

மாலைமலர் : “இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஆவர். இந்தநிலையில் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்தார்.
ஆனால் தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தனது குழந்தைகளுக்கு வயிறார உணவு கூட வழங்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் சஜ்ஜத் இருந்துள்ளார்.

பாஜகவுக்கு 175-200 இடங்கள்தான்! ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப் போவது ...

 Annamalai Arulmozhi  ; இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி!
400 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லுபவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப் போவது 175-200 இடங்கள்தான்!
பி.ஜே.பி.,க்குக் கிடைக்கப்போகிற தேர்தல் முடிவுபற்றிய கணிப்பை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘‘400-ன்னு சொல்றாங்க,
மே கடைசி வரை காத்திருக்க
அது 250 ஆகக் குறையும்.
ஜூன் முதல் வாரம் 175-200 ஆகும்.
நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழ விலையைச் சொன்னேன்.’’
- மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
- பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசின் பத்தாண்டுகால மக்கள் விரோத, ஜனநாயக ஒழிப்பு இந்திய அரசமைப்புச் சட்ட ஒழிப்பு ஆட்சி முடிவுக்கு வருவதுபற்றி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் செய்திகளும், நிலவரங்களும் கட்டியம் கூறுகின்றன!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 117 ஆவது பிறந்த நாள் 14.04.1907 -

May be an image of 1 person

Soma Ilangovan  :   " கூத்தாடிகளுக்கு மன்றம் வைக்காதே"
பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் 117 ஆவது பிறந்த நாள் 14.04.1907 - 17.09.1979 இவர் ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாள் இணையர்களுக்கு 2 வது மகனாக சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை ரஷ்ய நாட்டில் இராணுவவீரராகப் பணியாற்றி வந்தபோது உருசிய எல்லையில் பஸ்ஸோவியா  என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார்.
தாயின் கண்டிப்பிலே வளர்ந்த ராதாவுக்கு தாயின் கண்டிப்பு பிடிக்காமல் தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பாரம் சுமக்கும் பணியாளராக வேலை செய்து வந்தார்.

இஸ்ரேல் கப்பலை ஈரான் மடக்கி பிடித்தது.. ஈரான் இஸ்ரேல் போர் மூழும் அபாயம்

 தினமணி : இந்தியா்களுடன் இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு: ஈரான் நடவடிக்கையால் பதற்றம்
இந்திய மாலுமிகள் 17 பேருடன் பயணித்த சரக்குக் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை சனிக்கிழமை சிறைபிடித்தது.
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், அந்தக் கப்பலுக்கு இஸ்ரேலுடன் தொடா்புள்ளதால், அதை ஈரான் படையினா் சிறைபிடித்துள்ளனா்.
உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல், ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படை இடையிலான போரால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடா்கிறது.