ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

சுசித்ரா : சரக்கு அடிக்க மாட்டேன்.. தம்முதான் அடிப்பேன்.. பேட்டியில் அதிரடியாக பல விடயங்களை போட்டுடைத்தார்

 தினமலர் : சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி தான் சுசித்ரா.
சுச்சி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போன இவர்,
பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சுச்சி லீக்ஸ் விஷயம் குறித்து பேசி வருகிறார்.
கடந்த சில மாதத்திற்கு முன் பேட்டி அளித்த இவர் தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருந்தார்.
இது பெரும் புயலை கிளப்பியதை அடுத்து கார்த்திக் குமார், தன்னை பற்றி தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததற்காக 1 கோடி கேட்டு,சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.