சனி, 28 ஜூன், 2014

கழகத்தை ஸ்டாலின் மயமாக்கும் நடவடிக்கை தீவிரம் ! துரைமுருகன் போன்றோரும் விரைவில் அவுட் !

சென்னை: அங்கே கடித்து.., இங்க கடித்து.. கடைசியில் ஆளை கடித்த கதையாக, திமுகவின் முக்கிய புள்ளியும், கருணாநிதிக்கு நெருக்கமானவருமான துரை முருகனை திமுகவில் இருந்து நீக்க கோரிக்கைள் வலுத்து வருகின்றன. அவரும் நீக்கப்பட்டால், கருணாநிதி தனிமரமாக வேண்டிய நிலை உருவாகும் என்கின்றனர் திமுக முன்னணி நிர்வாகிகள். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலை திமுக அதன் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில்தான் எதிர்கொண்டது என்று சொல்ல முடியுமே தவிர, தலைவர் கருணாநிதி தலைமையில் என்று கூறிவிட முடியாது. ஸ்டாலின்தான் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து தனி நபராக களம் கண்டார் அல்லது ஷோ காட்டினார் , எந்த நேரம் கலைஞர் ஸ்டாலினுக்கு பேர் வைத்தாரோ அச்சு அசல் சர்வாதிகாரி ஸ்டாலின் மாதிரியே களையெடுப்பு அடக்கு முறை , ஆனால் என்ன திமுக ஒரு சர்வாதிகார நாடல்லவே ?

இராக்கில் உள்ள இந்தியர்களை மீட்க இரு போர்க்கப்பல்கள் விரைவு !

புதுடெல்லி,ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாதிகள் கடந்த 3 மாதங்களாக தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய நகரங்களை அவர்கள் கைப்பற்றி விட்டனர். மேலும் தீவிரவாதிகள் பாக்தாத் நகரை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈராக்கில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்குமே பாதிப்பு இல்லை என்றாலும் சண்டை நடக்கும் பகுதிகளில் சில நூறு இந்தியர்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர். இதுவரை நாடு திரும்ப விரும்பிய 36 இந்தியர்கள் மட்டுமே அங்கிருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து புதையுண்டது ! ஏரிக்கு மேல் கட்டப்பட்டதா ? 30 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் ?

சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்டோரில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கட்டிடம் அப்படியே இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருவர் பலி கட்டிடம் முழுவதும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அங்கு மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திமுகவில் மேலும் 15 நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் ! முதல்ல ஸ்டாலினுக்கும் தயாநிதிக்கும் அனுப்புங்கப்..பா !

 லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் அடுத்தடுத்து களை எடுப்பு நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. தேர்தலில் சரியாக பணியாற்றாதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் பூங்கோதை, தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன், வீரபாண்டி ராஜா உட்பட 15 நிர்வாகிகளுக்கு தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து கட்சியை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையின்படி திமுக 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அத்துடன் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்த பழனி மாணிக்கம் உட்பட 33 நிர்வாகிகள் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க ஒரு வார காலம் கெடு விதிக்கப்பட்டிருந்தது.

நாளைய இயக்குனர் குறும்படங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டால் ? அனேகமாக வெற்றி நிச்சயம் !

குறும்படங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டால் அது ரசிகர்களிடம் அமோக
வரவேற்பை பெறும் என்ற முதல் நம்பிக்கையை அபார வெற்றியின் மூலம் நிரூபித்த படம் ‘பீட்சா’. சிறிய பட்ஜெட் படங்களும் தரமான வெற்றியை அடைய முடியும் என்ற வாசலைத் திறந்து வைத்தவர் பீட்சா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் சித்தார்த், லட்சுமி மேனன் நடிப்பில் அடுத்து இயக்கிய படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்கள் முன்பு நடந்தது. விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட ஜிகர்தண்டா இன்னும் வெளியாகவில்லை. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நடத்து வரும் மோதலால் தான் படத்தின் ரிலீஸ் தாமதமாகிறது என்று சொல்லப்படுகிறது.மதுரையை மையமாக கொண்ட கதை ஜிகர்தண்டா. மதுரை மாவட்ட ரௌடிகளைப் பற்றியும் அங்கு நடக்கும் கடத்தல் சம்பவங்கள் பற்றியும் கதை நகர்கிறது. படத்தில் கத்தியால் குத்தி குடலை வெளியே எடுக்கிற மாதிரி அதிரவைக்கும் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் தனிக்கை முழுவினர். ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தால் வரிவிலக்கு கிடையாது என்பதாலும், படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாது என்பதாலும் ‘யு’ சான்றிதழ் வாங்க முயன்றுள்ளார் தயாரிப்பாளர் 'ஃபைவ்ஸ்டார்’ கதிரேசன். வன்முறைக் காட்சிகளை நீக்கவும், படத்தின் நீளத்தை குறைக்குமாறும் இயக்குனரிடம் கேட்டுள்ளார்.அதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒப்புக்கொள்ளாததால், தானே படத்தின் நீளத்தைக் குறைக்க முயற்சிகள் எடுத்துள்ளார் தயாரிப்பாளர்.

இந்து தீவிரவாதி R. கோபாலன்::ஆடிகூழுக்கு அம்மனுக்கு அரசு அரிசி வழங்கவேண்டும் !

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி 3 ஆயிரம் மசூதி, தர்க்காக்களுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழக அரசின் பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. பசித்திருக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, கூழ் அளிப்பது நல்ல விஷயம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மசூதிக்கு அரிசி தரும் தாயுள்ளம் ஏன் பல்லாண்டுகளாக ஆடிக்கூழ் ஊற்றும் அம்மன் கோயில்களுக்கு அரிசி வழங்குவதில்லை?. அறநிலையத்துறையின் இரும்புக்கோட்டையில் சிக்கி சீரழியும் திருக்கோவில்களில் கல்லா கட்டும் சில நூறு கோவில்களில் மட்டும் அன்னதான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். அன்னதான திட்டத்தை நடத்திட யானை உருவில் பக்தர்களை பயமுறு த்தும் பெரிய பெரிய உண்டியல், அதுவும் கோவில் பணத்தில் வைத்து பக்தர்களிடம் வசூலித்தே அன்னதானம் நடைபெறுகிறது.

மலையாளத்தை தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு கடத்திய EMS.நம்பூதிரிபாடு என்ற பார்பன கம்யுனிஸ்ட் !

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
emsசமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா? இதன் முழு பின்ணனி என்ன?
சிவகுமார்
சென்னை

அன்புள்ள சிவக்குமார்,
நானும் யாரோ என்னமோ என்று நினைத்துவிட்டேன். தமிழ்த்தேசியவாதிகள்தானே? அவர்கள் சொல்வதற்கெல்லாமா கோபித்துக்கொள்வது? அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே. எதையும் எப்படியும் சொல்வது என்னும் நூறாண்டுக்கால நெடிய வரலாறு அவர்களுக்கு உள்ளதே.
அவர்களுடைய இந்தச் சிந்தனையில் உள்ள மிகப்பெரிய பிழையே உலகிலுள்ள அனைத்து மொழிகளும், அனைத்துச் சிந்தனைகளும் தமிழே என்று அவர்களின் முன்னோடியான பாவாணர் சொன்னதை இக்கூற்று மறுதலிக்கிறது என்பதுதான். உலகிலுள்ள அனைத்துமொழிகளும் தவறாகப்பேசப்படும் தமிழே என்றும் அனைத்துச்சிந்தனைகளும் தமிழனிடமிருந்து திருடி திரித்துக்கொண்டவையே என்றும் [ஆமாம், உண்மையாகவே. வேடிக்கை இல்லை!] வாதிட்ட அவர் எங்கே, ஏதோ இ.எம்.எஸ் மட்டும்தான் திரித்தார் என்று சொல்லும் இவர்கள் எங்கே? விடுங்கள்.

1942-ஆகஸ்டு 27-ம் நாள் காட்டிக் கொடுத்த ... பின்னாட்களில் பாரதப் பிரதமரானார். லீலாதரனும் வாஜ்பாயும் !

பூட்ஸ் நக்கித்துவம் என்றால் என்ன?
லீலாதரன்அது 1942-ம் வருடம். இந்தியாவெங்கும் காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் வீச்சாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. தேச விடுதலைப் போராட்டத்தின் குவிமுனையாக அன்று காங்கிரசு தான் நம்ப வைக்கப்பட்டது. இந்தியர்களின் விடுதலை உணர்ச்சியை நிறுவனமயமாக்கி மட்டுப்படுத்த வேண்டும் என ஆங்கிலேயர்களது ஆசியுடன் துவங்கப்பட்ட காங்கிரசை, காந்தி வழிநடத்திக் கொண்டிருந்தார். கீழ்மட்டத்தில் வெடிக்கத் தயாராக இருந்த மக்களின் கோபாவேசத்தை தணிக்க காங்கிரசு அவ்வப்போது அறிவித்த இயக்கங்களால் முடியவில்லை.
லீலாதரன் 1998-ல்
ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், சத்தியாகிரகங்கள் என்று தொடர்ந்து காந்தி அறிவித்து வந்த போராட்டங்கள் அனைத்தும் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்கேற்பின் விளைவாக தொடர்ந்து காங்கிரசு தலைமையின் கையை மீறிச் சென்று கொண்டே இருந்தன. 42-ம் வருடம் காங்கிரசு “வெள்ளையனே வெளியேறு இயக்க”த்தை அறிவித்திருந்தது – மக்கள் அந்த அழைப்பை உளமாற நம்பினர். காந்தியே எதிர்பாராத அளவுக்கு மக்களின் எழுச்சி வெடித்துக் கிளம்பியது. இரண்டாம் உலகப்போரில் களைத்திருந்த ஆங்கிலேயர் அரசாங்கம் மக்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

வெள்ளி, 27 ஜூன், 2014

டாக்டர் சாந்தி ஸ்ரீ பண்டிட் : மனுவின் அழுக்கான மனம் ! Manu's mind is Dirty !



மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் -

சென்னை ஐகோர்ட்டில் மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர்  முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நல பணியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘‘ கடந்த திமுக ஆட்சியில் பணியில்  சேர்க்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை அரசியல் உள்நோக்கத்துடன் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நீக்கம் செய்துவிட்டது. இது தொடர்பாக  தொடரப்பட்ட வழக்கில், அந்த உத்தரவை ரத்து செய்தும் 13 ஆயிரம் பேருக்கும் மீண்டும் பணி வழங்க  வேண்டும் என்றும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். இதன்படி,  மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட  வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘ மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை  வழங்குவது தொடர்பாக அடுத்த வாரத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். tamilmurasu.org

கோபால் சுப்ரமணியத்துக்கு மிரட்டல் ? மோடியின் போலி என்கவுண்டர் பூதம் தொடருமா ?

கோபால் சுப்பிரமணியன் 2ச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவருமான கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மே முதல் வாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் குழு, மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், ரோகிந்தன் நாரிமன் மற்றும் ஒடிசா மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்திருந்தது. அந்தக் நீதிபதிகள் குழுவில் நீதிபதிகள் எச் எல் தத்து, ஏ கே பட்னாயக், பல்பீர் சிங் சவுகான், தீரத் சிங் தாக்கூர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறைப்படி மத்திய உளவுத் துறை இந்நீதிபதிகளின் கடந்த காலம் குறித்து விசாரணை நடத்தி மே 15-ம் தேதி இவர்கள் மீதும் எந்த களங்கமும் இல்லை என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. பொதுவாக நீதித்துறையும், போலீசுத் துறையும் தங்களது எல்லைகளை அறிந்து கொண்டுதான் மோதிக் கொள்வார்கள். பெரிய முரண்பாடு வந்தால் விட்டும் கொடுப்பார்கள். மற்றவர்கள் யாரும் இந்த இரண்டு துறைகளை கேள்வி கேட்டால் இவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் உளவுத் துறை இந்த கிளீயரன்சை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் நீதிபதி நியமனத்துக்கான சடங்குகள் முடித்து வைக்கப்பட்டு கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் மத்திய அரசின் இறுதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மோடி தலைமையில் ஆட்சி அமையப் போவது உறுதியானதும், மோடி சி.பி.ஐ இயக்குனரிடம் கோபால் சுப்பிரமணியம் மீது ஏதாவது பிரச்சனையை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில் பாஜகவுக்கு கோபால் சுப்பிரமணியமோடு பெரும் பகை இருக்கிறது.

மதிமாறன் : பெண் தெய்வ விக்கிரகங்களை ஆண்கள் தொட அனுமதிக்க கூடாது ! அம்மன் கோவில்களில் பெண்கள் மட்டுமே அர்ச்சகராக வேண்டும்

பெண்களுக்கான ஒதுக்கீட்டை 100 சதவீதம் செய்ய வேண்டும். அதை கோயில்களில் இருந்து துவங்க வேண்டும். எல்லாக் கோயில்களிலும் பெண்கள் அர்ச்சகராக வேண்டும். குறைந்த பட்சம் பெண் தெய்வங்கள் உள்ள கோயில்களிலாவது, பெண்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்
மைதிலி யாருடனும் எப்போதும் பொறுப்போடு தான் பேசுவாள். அந்த பொறுப்பில் அன்பும் அக்கறையும் நிரம்பி வழியும். சில நேரங்களில் அந்த அன்பின் வடிவம் கோபமாகவும் இருக்கும். அந்தக் கோபம் நன்மையே செய்யும்.
என்னால் அவளுக்கு ஆன உதவியை விட அவளால் எனக்கான உதவிகளே அதிகம்.
அவளை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். நேரில் பேசிக் கொள்ளும்போது நீ, வா, போ என்றும் 3 வது நபர்களிடம் பேசும்போது
என்னை அவள் ‘அவன்’ என்பதும் அவளை நான் இதுபோல் ‘அவள்’ என்று சொல்வதும் தோழமையின் பொருட்டே.
இப்படி தனி மனித உணர்வுகளில் மென்மையான, அன்பான, அக்கறையான மைதிலி; சமூக விசயங்களில் அப்படியே நேர் எதிர்.
அவளின் பெண்ணியக் கருத்துக்களைத் தவிர வேறு எதுவும் அவளுக்கும் எனக்கும் ஒத்துப் போனதே இல்லை. அதிலும் சில நேரங்களில் பிரச்சினை தான்.

முல்லைவேந்தன் : ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி…பாசிஸ்ட் பண்பற்றவர் ! அதிருப்தியாளகள் ஒன்று திரள்வார்கள் ?

சென்னை: உள்கட்சி ஜனநாயகம் என்பது திமுகவில் இல்லை, ஸ்டாலின் சர்வாதிகாரம் செய்கிறார் என்று தாக்கியுள்ளார் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள முல்லை வேந்தன். திமுக தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 33 பேரில் முல்லை வேந்தனும் ஒருவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமலேயே தன்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அழகிரியால் வந்த புகைச்சல் முல்லைவேந்தனின் மகனுக்கு 2012ம் ஆண்டு பெங்களூருவில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதற்கு மு.க.அழகிரி வந்திருந்தார். இதுவே ஸ்டாலின் - முல்லைவேந்தன் புகைச்சலுக்குக் காரணம் என்கின்றனர்.
ஸ்டாலின் பண்பற்றவர் என்று குற்றம் சாட்டும் முல்லை வேந்தன், கோபாலபுரத்தில் நடைபெற்ற என்னுடைய மகனின் திருமணநிகழ்ச்சிக்கு அங்கிருந்து கொண்டே வராமல் தவிர்த்து விட்டார். திருமண வரவேற்புக்கு தேதி கேட்டும் கொடுக்கவில்லை என்கிறார். ஆனால் 90 வயதிலும் தனக்காக நேரம் ஒதுக்கியவர் கருணாநிதி, மு.க.அழகிரிக்கு தபாலில் அழைப்பு அனுப்பினேன் உடனே பெங்களூருக்கு வந்தார் என்கிறார்
ஸ்டாலின் ஒரு பாசிஸ்ட், கட்சிக்கு உண்மையாக பணியாற்றுபவர்களை எல்லாம் சர்வாதிகாரம் செய்து இம்சித்து வருகிறார். உள்கட்சி ஜனநாயமே திமுகவில் இப்போது இல்லை. ஸ்டாலினின் சர்வாதிகாரம் கட்சியை அழித்து வருகிறது.
கட்சியில் இருந்து என்னை யாரும் டிஸ்மிஸ் செய்யமுடியாது. நானே திமுகவை தூக்கிப்போட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார் முல்லை வேந்தன்
ஸ்டாலினால் பழிவாங்கப்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து புதிய இயக்கம் தொடங்க இருக்கிறேன் என்றும் புது குண்டு ஒன்றை போடுகிறார் முல்லை வேந்தன்
tamil.oneindia.in/

அதிதி ! அசத்தும் மலையாள ரீமேக் !

சிம்பிளான திரைக்கதையைக்
கொண்டு அசர வைக்கும் படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்த படங்களின் வரிசையில் அதிதி-யை சேர்க்கலாம். மலையாள படமான காக்டெயில் படத்தின் ரீமேக்கான இப்படத்தை பரதன் இயக்கி இருக்கிறார்.கலர்ஃபுல் காதல் காட்சிகள், அதிரடி சண்டை சாகசங்கள், குதூகலிக்கும் குத்தாட்டங்கள் என எதையும் நம்பாமல் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் அதிர்ச்சியாகவும் அதே சமயம் நியாயமான கேள்வியாகவும் அமைந்திருக்கிறது.ரியல் எஸ்டேட் பிசினஸில் திறமையானவர் நந்தா. தன் முதலாளிக்கு விசுவாசமாக இருந்து பல வசதிகளையும் பெற்றுக்கொள்கிறார். இதனால், அவருக்கு எதிரிகள் அதிகரிக்கிறார்கள். மிரட்டல்கள் நந்தாவை தொடர்கின்றன. தன் மனைவி, மகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நந்தாவுக்கு சோதனைக் காலம் தொடங்குகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் இனி இணையதளத்தில் கிடைக்கும்

சென்னை உயர் நீதிமன்றம் தினந்தோறும் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் இனி இணையதளத்தில் கிடைக்கும்.
விரைவில் அறிமுகப்படுத்தப் பட உள்ள இந்த வசதியால் வழக்கறிஞர்களும், வழக்காட வரும் பொதுமக்களும் பெரிதும் பயனடைவார்கள்.
உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் பிறப்பிக்கும் இறுதி உத்தரவுகள் மட்டுமின்றி, இடைக்கால உத்தரவுகள் கூட அன்றைய தினமே இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் தங்கள் வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்த ரவை அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்களும், வழக்கறிஞர்களும் தெரிந்து கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக திட்டமிட முடிகிறது.

இந்திய வங்கதேச விசா தளர்வு ! ஒப்பந்தம் கைச்சாத்தானது !

சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இந்தியாவும், வங்கதேசமும் முடிவு செய்துள்ளன.
டாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அபுல் ஹசன் முகமது அலி ஆகியோருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் விடுதிகளுக்கு 23 புதிய கட்டுப்பாடுகள் ! பொள்ளாச்சி பாலியல் கொடுமை எதிரொலி !

பொள்ளாச்சி சம்பவத்தின் எதிரொலியாக, பெண்கள் விடுதியை நடத்த 23 வகையான கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த விடுதிகளின் உரிமையாளர்களும், பெற்றோர்களும், பொது மக்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பொள்ளாச்சியில் உள்ள விடுதிக்குள் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பெண்கள் குழந்தைகள், இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் 23 வகையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன் விவரம்:
1. கட்டடங்களுக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகத்தை அமைக்க வேண்டும். அவற்றில் போதிய பாதுகாப்பு மற்றும் உரிய தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

1948 வெப்பத்தை நெருங்கும் 2014 வெய்யில் ! கடல்காற்று தாமதம் ! எல் நினோ எபெக்ட் ?

 சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில், 1948ல் பதிவான, அதிகபட்சமான, 43 டிகிரி செல்சியசை, தற்போதைய வெப்பநிலை நெருங்குகிறது.சுடுநீரில் குளிக்க, 'ஹீட்டர்' போட வேண்டாம்; பக்கெட் தண்ணீரை வெளியில் வைத்தால் போதும். கொதிக்கும் நீர் கிடைக்கும். உச்சி வெயிலில் வெளியில் சென்றால், உடலில் ஈரப்பதத்தை இழந்து, மனிதன் மரணிக்கும் அளவிற்கு, வெப்பம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில், வெப்பநிலை மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில், வெப்பம் அதிகரித்துள்ளதாக, வானிலை வல்லுனர்கள் தெரிவிக்கினறனர்.

ஐகோர்ட்: அதிமுக பின்னணி மதுரை பேராசிரியை கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது !

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் ரத்து: மதுரை ஐகோர்ட் தீர்ப்புமதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் சந்திரன் பாபு, கல்லூரி முதல்வர் இஸ்மாயில், பேராசிரியர் ஜெயராஜ் உள்பட 4 பேர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:–பல்கலைக்கழக மானிய குழு விதிப்படி துணைவேந்தர் பதவி வகிக்க 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் இணை பேராசிரியையாக பணியாற்றி உள்ளார். இவர் நாவலர் நெடுஞ்செழியனின் உறவினர். விண்ணப்பித்த நூற்று சொச்சம் பேரில் இவர் ஒருவர்தான் தகுதி குறைந்தவர் 

உம்மன் சாண்டி அடாவடி ! தலைமை ஆசிரியை தண்ணி இல்லா காட்டுக்கு இடமாற்றம் ! அமைச்சரை கண்டித்தால் பணிஷ்மெண்டு !

கேரளாவில் உள்ள காட்டன்ஹில் பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக ஊர்மிளா தேவி பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 16ம் தேதி, பள்ளியில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கல்வி அமைச்சர் அப்து ராப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு அமைச்சர் வருவார் என்பதால், மாணவிகள், ஆசிரியைகள் காத்திருந்தனர். ஆனால், அமைச்சர் வரவில்லை. இதையடுத்து, மாணவிகளை வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு, தானும் ஒரு அலுவலக கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டார் தலைமை ஆசிரியை ஊர்மிளா தேவி.
இந்நிலையில், அமைச்சர் ராப், பகல் 12.30 மணிக்கு பள்ளிக்கு வந்தார். பள்ளியின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. யாரும் இல்லாததால், அமைச்சருடன் வந்தவர்களே கதவை திறந்தனர். பின்னர் விழா துவங்கியது.
விழாவில் பேசிய தலைமை ஆசிரியை ஊர்மிளா தேவி, 'பள்ளி விழாக்களுக்கு வரும் பிரபலங்கள், நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால், மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்று, பாடம் படிப்பதில் பாதிப்பு ஏற்படும்,' என்றார்.
அடுத்த இரண்டு நாட்களில் ஊர்மிளா தேவிக்கு, தண்ணி இல்லாத காட்டுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வந்தது. இதையறிந்த எதிர்கட்சியினர் சட்டசபையில் குரல் எழுப்பினர். ஆனால், இந்த இட மாற்றம் வழக்கமானது தான் என, முதல்வர் உம்மன் சண்டி கூறியுள்ளார். nakkheeran.in

வியாழன், 26 ஜூன், 2014

குஜராத் தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் சதி


தீஸ்தா சேதல்வாத்னித உரிமை ஆர்வலரும், 2002-ம் வருடம் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தளராத போராட்டத்தை நடத்தி வருபவருமான தீஸ்தா சேதல்வாத் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது செயல்பாட்டை மட்டுமல்ல, பார்ப்பனிய பாசிசத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் எவரையும் முடக்கி விட முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்கள், படுகொலையின் முக்கிய குற்றவாளிகளான இந்து மதவெறியர்கள். 2000 பேர் கொன்றழிக்கப்பட்ட இனப்படுகொலை சம்பவத்தின் சான்றுகளையும், சாட்சியங்களையும் சேகரித்து தனித்தனி வழக்குகளாக நீதிமன்றங்களில் தொடுத்து நீதியை பெற்று தரும் முயற்சியில் ஓரளவாவது வெற்றி பெற்று வந்தார் தீஸ்தா சேதல்வாத். இது வரையிலும் 117 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் மோடியின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த சுகாதாரத்துறை அமைச்சர் மாயா கோட்னானி 28 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்.

பென்சில் வாங்க காசில்லாமல் தற்கொலை செய்த ஓடிஸா சிறுமி ! நடிகர் சாருக்கான் தங்கத்தில் பாத்ரூம் கட்டியுள்ளான்


A 14-year-old girl committed suicide in Odisha after her parents said they didn't have enough money to buy her basic stationery like pencil and notebook and other study materials. Reuters, for representation purpose only.
A 14-year-old girl committed suicide in Odisha after her parents said they didn't have enough money to buy her basic stationery like pencil and notebook and other study materials.
The girl named Jayanti, a resident of Aska town in Ganjam district which is about 170 km from state capital Bhubaneswar, had been requesting her parents to pay some money for her studies after the school - where she was recently promoted to class 7 - opened June 23
ஒடிசாவில் அடிப்படை எழுதுபொருள் வாங்க பெற்றோர் காசு தராததால், மனமுடைந்த 14 வயது சிறுமி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஒடிசாவின் தலைநகரான புவனேஷ்வரிலிருந்து 170 கி.மீ அருகே உள்ள அஸ்கா என்ற பகுதியில் பிஜாய் நாயக் என்பவர் வசிக்கிறார். இவரது மகள்(14) இந்த ஆண்டு 7 ஆம் வகுப்புக்கு தேர்வாகினர். பெற்றோரிடம் நீண்ட நாட்களாக புதிய வகுப்புக்கு புதிதாக நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட அடிப்படை எழுதுப்பொருட்கள் வாங்க காசு தருமாறு கேட்டிருந்தார்.

மசாலா படங்களை ஜுஜுப்பி ஆக்கிய மோகனாம்பாளின் செம்மர கடத்தல் சாம்ராஜ்யம் !

வேலூர்: செம்மர கடத்தல் கும்பல் கடத்தியபோது, பல கோடி ரூபாய் கொடுத்து சித்தி மோகனாம்மாள், காப்பாற்றியதாக போலீசாரிடம் சரவணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.காட்பாடி அருகே வீட்டில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கிய வழக்கில் கரகாட்டக்காரி மோகனாம்மாள், அவரது அக்கா நிர்மலா, மகன் சரவணன், இவருடைய மனைவி மதுபாலா, அணைக்கட்டு அரசியல் பிரமுகர் பாபு, செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த வேல்முருகன், சதீஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அதில், ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை கடத்தும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இந்த கடத்தலுக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. செம்மர கடத்தலே சரவணனை பல கோடிகளுக்கு அதிபதியாக மாற்றியது. அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களின் நம்பிக்கைக்கு உரியவராக சரவணன் மாறினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் சீனிவாசன்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதல் தலைவராக என்.சீனிவாசன் இன்று முறைப்படி நியமிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டனர்.
இந்தப் புதிய சீர்திருத்தங்களுக்குப் பிறகு, தேர்வு செய்யப்படும் முதல் ஐசிசி தலைவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டு எவ்வளவு தரம் தாழ்ந்து விட்டது என்பதற்கு இனி வேறு சாட்சிகள் தேவையில்லை ? எங்கும் மாபியா ?

கமல்: சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை ! பச்சை பொய் !சகல அரசுகளும் சினிமாவுக்கு தானே சேவகம் செய்கிறது ?

சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன்.
சந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ‘தேவி தியேட்டரில் நடைபெற்றது.   பாடல்களை கமல் வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கமல் பேசும்போது,   ‘’ சினிமா என்பது விசித்திரமான உலகம். இங்கு ஏராளமான திறமை சாலிகள் இருக்காங்க. அதே நேரம் நான் வியந்த பல திறமைசாலிகளில் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. >நானெல்லாம் ஏதோ குலுக்கலில் விழுந்த மாதிரி இந்த இடத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன். மக்களின் பணத்தில் மகராஜாக்களாக வாழும் நட்சத்திரங்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் ? மனசாட்சியே இல்லாமல் கமல் பேசலாமா ?

தமன்னா இனி படு கிளாமராக நடிக்க போகிறாராம்

படுகிளாமராக போட்டோ ஷூட் நடத்த திடீரென முடிவு செய்துள்ளார் தமன்னா.தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த முதல் படம் ‘ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ‘ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர் நடிப்பு பற்றி விமர்சிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட தமன்னாவுக்கு பாலிவுட் கைவிட்டதை எண்ணி கலக்கம் அடைந்தார். தற்போது டாப் ஹீரோக்களின் கவனத்தை கவர புதிய திட்டம் வகுத்து வருகிறார். படுகவர்ச்சிக்கு மாறினால் வாய்ப்பு வருமா என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறார். ‘முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன், டூ பீஸ் உடையில் நடிக்க மாட்டேன். இது என் பாலிசி என்று நீ போடும் கண்டிஷன் பாலிவுட்டில் எடுபடாது. இந்த நிபந்தனைகளை தூக்கிப் போடும்வரை பெரிய படங்கள் வராது என்று நட்பு வட்டாரங்கள் கறாராக கூறிவிட்டார்களாம். மார்க்கெட்டை பிடிக்க தமன்னா தனது பாலிசியை காற்றில் பறக்க விட யோசித்துள்ளாராம். இதற்காக முதல்கட்டமாக டூ பீஸ் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி பாலிவுட்டில் பரப்பிவிடவும் திட்டமிட்டுள்ளாராம். - See more at: .tamilmurasu.org

ஆசராம் பாபு ! ஆன்மீகம், ஆயுர்வேதம், இந்துமதம் எல்லாம் கலந்த நவீன கார்ப்பரேட் கொலைகாரன் /சாமியார் !

வரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம் நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்ன?பாசம், அயோக்கியத்தனம் இரண்டிற்கும் புகழ் பெற்ற, ஆசாராம் பாபுவின் பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. ஆன்மீகம், ஆயுர்வேதம், இந்துமதம் எல்லாம் கலந்த, நவீன கார்ப்பரேட் சாமியாராக வலம் வந்தவர் அவர். இந்த பேர்வழியின் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், கொலைகளும், ஹவாலா மோசடிகளும் ஒவ்வொன்றாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து வெளியானது. பிறகு அவரும், மகன் சாய் நாராயணும் கைது செய்யப்பட்டு  ஜோத்பூர் சிறையிலடைக்கப்பட்டு, தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. மோடியின் நண்பரான ஆசாராம் பாபுவின் மீதான வழக்குகள், கொலைகார ஜயேந்திரனது வழக்கு போல புஸ்வாணமாகும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

மோடி பயப்படுகிறாரா ? கோபால் சுப்ரமணியம்: நீதிபதிகள் நியமன பரிந்துரை பட்டியலில் என் பெயரை நீக்குங்கள்

Gopal Subramanium, a top lawyer for the previous government, has said he no longer wants to be considered for promotion to a Supreme Court judge. "I am sorry that the Supreme Court did not stand up for me," said Mr Subramanium, 56, to NDTV. His decision comes after the government rejected Mr Subramanium from a list of four names recommended for appointment as Supreme Court judges by a panel headed by the Chief Justice of India, RM Lodha.
As amicus curiae in the Sohrabuddin fake encounter case, Subramanium was critical of the Gujarat government headed by Narendra Modi and brought out new facts on the basis of which the Supreme Court had ordered a CBI probe into the case.
புதுடில்லி: 'சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்துக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து, என் பெயரை நீக்குங்கள்; எனக்கு நீதிபதி பதவி வேண்டாம்' என, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சொலிசிட்டர் ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்களில் கோபால் சுப்ரமணியமும் ஒருவர். இவர், தமிழகத்தை சேர்ந்தவர். ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு உள்ளிட்ட, பல முக்கிய வழக்குகளில், அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்துக்கு, கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன், கோபால் சுப்ரமணியம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

புதன், 25 ஜூன், 2014

நயனுக்கு கணேஷ் மேல் ஏதோ அது ஏதோ.... இருக்கிறது !

நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராம் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிறது. படப்பிடிப்பில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதாகவும் காதலிப்பது போல் தெரிகிறது என்றும் படக் குழுவினர் கிசுகிசுக்கின்றனர். தனி ஒருவன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி வருகிறார். ஜெயம் ராஜா இயக்குகிறார். கதாநாயகனுக்கு இணையான முக்கிய கேரக்டர் கணேஷ் வெங்கட்ராமுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படப்பிடிப்பு துவங்கிய போது இருவரும் சாதாரண நண்பர்களாக அறிமுகமாகி கொண்டனர். ஆனால் சில தினங்களில் அந்த நட்பு இறுக்கமானது. காட்சிகள் படமாக்கப்பட்டதும் இருவரும் தனியாக போய் உட்கார்ந்து கொள்கிறார்களாம். சிரித்து சிரித்து பேசிக் கொள்கிறார்கள். பிரிக்க முடியாதவர்கள் போல் ஆகிவிட்டனர் என்கின்றனர்.

அம்மா இட்லி ஒரு ரூபாய் ! LKG சீட் 20000 ரூபாய் ! Facebook ஐ கலக்கிய இந்து நாளிதழ் படம் !

நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களும் நம் மனதில் நிற்பதில்லை. புகைப்படத்தில் இருப்பவர்களைவிட, அந்தப் புகைப்படம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமே அதனை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.
‘தி இந்து’ நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நம் புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை பகிர்வது உண்டு. அப்படி பகிரப்படும் புகைப்படங்கள் மக்கள் மனதை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை உடனுக்குடன் வரும் பின்னூட்டங்கள், விருப்பங்கள் (லைக்) மூலமாகவும் அது எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது என்பதிலும் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக கோவையில் நடந்த கண்டனப் போராட்டத்தில், நமது புகைப்படக்காரர் ஜெ.மனோகரன் எடுத்த ஒரு புகைப்படம், ‘தி இந்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக அமைந்தது.
விலைவாசி உயர்ந்த நேரத்தில் குறைந்த விலையில் தரமான உணவை ‘அம்மா உணவகம்’ மூலம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதேபோல குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க ‘அம்மா பள்ளிக்கூடம்’ தொடங்குவாரா என ஒரு சிறுவன் கேட்பதுபோல இருந்தது அந்த படம்.

அடையாறு பாலத்தில் இருந்து குதித்து 82 வயது தொழில் அதிபர் தற்கொலை

சென்னை அடையாறு பாலத்தில் தொழில் அதிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். புதன்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.சென்னை அருகே கந்தன்சாவடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. தொழில் அதிபரான இவருக்கு வயது 82. எலக்ட்ரானிக் கடை அதிபர். புதன்கிழமை காலை காரில் வந்த அவர், அடையாறு திரு.வி.க. பாலம் அருகே வந்ததும், காரை நிறுத்தச் சொன்னார். காரை டிரைவர் நிறுத்தினார். காரை விட்டு இறங்கிய திருநாவுக்கரசு, மெதுவாக நடந்து சென்று பாலத்தின் கைப்பிடிக்கு அருகே சற்று நின்றவர் திடீரென்று கீழே குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் இதுகுறித்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி திருநாவுக்கரசு உடலை மீட்டனர். மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வயதான காலத்தில் இவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கங்கையில் மூழ்கினால் 'கேன்சர்'... கும்பமேளா நீரை சோதித்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!

ஹைதராபாத்: கங்கை நீரில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர் ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மைய ஆராய்ச்சியாளர்கள். கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளா திருவிழாவின் போது சேகரிக்கப் பட்ட கங்கை நீரின் மாதிரிகளை ஆய்வு செய்தது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கங்கையில் மூழ்கிக் குளித்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்களின் மனதில் உள்ளது. ஆனால், அந்நீரில் புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய தாது அதிகளவில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கங்கையில் மூழ்கிக் குளிப்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

MGR உருவாக்கிய சாராய ரவுடி ஜேப்பியாரின் எச்சில் காசுக்கு வாலாட்டும் போலீசு ! வெற்றிவேல் செழியன் கைது !

சாராய ரவுடி ஜே.பியாரின் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பேருந்து ஓட்டுனர்களுக்காக தொழிற்சங்கம் கட்டியதற்காக அப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேருந்து ஓட்டுனர் வெற்றிவேல்செழியன் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார். இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வினவில் வெளியாகியுள்ளன. சத்யபாமா நிர்வாகத்தின் இந்த அடாவடிகளுக்கெதிராக தோழர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பல்கலைக்கழக நிர்வாகமோ டஜன்கணக்கான முறை ஆஜராகாமல் வாய்தா ராணிக்கு இணையாக சாதனை படைத்தது. இதற்கிடையில் நிர்வாகம் தோழருக்கு தூண்டில் போட்டு பார்த்தது. உனக்கு என்ன விலை என்று தோழரை விலை பேச முயன்றது. எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிட்டு பேசாம ஒதுங்கிக்கொள் என்றது. தோழரோ ஜேப்பியார் முகத்தில் காறித்துப்பினார்.

காரைக்காலில் நமிதா வராததால் ரசிகர்கள் அடிதடி கலவரம் ! இதுக்கு போயி ஏன்தான் இந்த போராட்டமோ ?

காரைக்காலில் நடிகை நமீதா பங்கேற்கவுள்ளதாக அழைப்புவிடுக்கப்பட்ட நடன நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காததால், பார்வையாளர்கள் நாற்காலிகளை வீசி பிரச்னையில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பார்வையாளர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
காரைக்காலில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உங்களில் யார் லாரன்ஸ் என்ற தலைப்பில் சிறப்பு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 2 மாதங்களாக தனியார் நிர்வாகம், நமீதா உள்ளிட்டோர் படங்களுடன் நிகழ்ச்சிக்கான  அனுமதி கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின் விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது. இதில் கட்டணம் குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில், தொகை வாங்கிக்கொண்டு கூப்பன் அளித்ததாக கூறப்படுகிறது. நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலில் விளம்பரம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை திடலில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஏராளமான நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. கூப்பன் வாங்கியவர்கள் கூப்பனுடன் நுழைவு வாயிலின் வழியே சென்று திடலில் அமர்ந்தனர்.

எண்ண அலைகளை மூலம் நோயை குணமாக்க முடியும் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்த நபரின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மீண்டும் அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை அமெரிக்க மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். மத்தியமேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநில தலைநகர் கொலம்பஸ்-சை சேர்ந்தவர் லான் புர்கர்ட். தற்போது 23 வயதாகும் இவர், தனது 19-வது வயதில் நண்பர்களுடன் குளிக்க கடலுக்கு சென்றார். கடல் நீருக்குள் தாவிப் பாய்ந்து குதித்த போது அலையின் சுழலில் மாட்டி, மண் குதிருக்குள் சிக்கிக் கொண்ட புர்கர்ட்டை அவரது நண்பர்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை, கால்களை அசைக்க முடியாத பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்ட அவருக்கு மறுவாழ்வு அளிக்க ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவரது மண்டை ஓட்டில் ஒரு சிறிய துவாரம் போட்டு, 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு ‘சிப்’ அவரது மூளைக்குள் பொருத்தப்பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த ‘சிப்’ அவர் என்ன நினைக்கிறார்? என்ற எண்ண ஓட்டத்தை ஒரு கம்ப்யூட்டரின் மூலம் மொழிபெயர்க்கக் கூடிய தன்மை கொண்டதாகும்.

திமுகவின் தோல்விக்கே ஸ்டாலின்தான் காரணம்: முல்லைவேந்தன் போர்க்கொடி !

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் போக்குதான் காரணம் என்று அக்கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான முல்லைவேந்தன் குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவின் முன்னணி நிர்வாகிகளான பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு முல்லைவேந்தன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ! 'என்னை நீக்கியதற்கு என்ன காரணம், யார் புகார் சொல்லி என்னை நீக்கினார்கள் என்று எந்த விவரமும் தெரியவில்லை.

ஸ்டாலின் மீது கே.பி.ராமலிங்கம் சரமாரி குற்றச்சாட்டு! கலைஞருக்கு பகிரங்க கடிதம் !

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி அக்கட்சித் தலைவர் கருணாநிதிக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட கே.பி. ராமலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார். லோக்சபா தேர்தல் தோல்வியை முன்னிட்டு தி.மு.க.வில் இருந்து விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட 33 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் கட்சி அனுப்பும் கடிதத்துக்கு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பதில் அளிப்பேன் என்றும் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார். இந்நிலையில் ராசிபுரத்தில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கருணாநிதிக்கு எழுதிய விளக்க கடிதத்தை கே.பி. ராமலிங்கம் வெளியிட்டார்.  அதில் ராமலிங்கம் கூறியிருப்பதாவது: 1990 ஆம் ஆண்டு இப்போது போன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் தோற்ற நிலையில் தங்களிடம் என் அரசியல் வாழ்வை ஒப்படைத்து தி.மு.க.வில் இணைந்தேன். தாங்களும் இந்த 24 ஆண்டுகளில் என்னை உங்கள் பிள்ளையாக கருதி 3 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும், ஒருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தும் நாடாளுமன்ற மக்களவையில் பணியாற்றுவதற்கும் தற்போது 2010 முதல் மாநிலளங்களவையில் பணியாற்றுவதற்கும் வாய்ப்பளித்தீர்கள்.

மணவாழ்க்கையில் இருந்து மீண்டும் நடிக்கவரும் நடிகைகள் !


திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். ‘கத்திகப்பல், ‘இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்திருக்கிறது. விரைவில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறினார். ‘வரலாறு, ‘பைவ் ஸ்டார் படங்களில் நடித்த கனிகாவும் சில வருடங்களுக்கு முன் ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஒன்றிரண்டு வருடத்திலேயே மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தற்போது மலையாளத்தில் ‘கிரீன் ஆப்பிள்’ உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். ‘ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற மலையாள படம் மூலம் மஞ்சு வாரியர் ரீஎன்ட்ரி ஆகிவிட்டார்.இந்தபட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் நவ்யா நாயர்.

நடிகர் ஷாருக்கானின் பாத்ருமில் தங்கத்தில் குளியல் தொட்டி ! அரபு மன்னர்களை போலவே ....தானுமாம்,

மும்பை: ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி அமைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பணமும், புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்றார். தற்போது ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவில் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  ஷாருக்கான் தான் யார் என்பதை மிக தெளிவாக நிருபித்து விட்டார் -  tamilmurasu.org/

நீதிமன்றத்தில் போராட்டம் தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி

பெல்லாரி: தாயுடன் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவை ஏற்காமல் குழந்தைகள் தந்தையை பிடித்து கொண்டதை  பார்த்த நீதிபதி மனம் நெகிழ்ந்தார். கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டம், பசவதுர்கா கிராமத்தை சேர்ந்த  தேவேந்திரப்பாவுக்கும், ரத்னம்மா என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு  முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள்  உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். நீதிமன்றம் மூலம்  விவாகரத்தும் வழங்கப்பட்டது. நான்கு பிள்ளைகளையும் தேவேந்திரப்பா  வளர்த்தார். இதனிடையே, தனது 2 பெண் பிள்ளைகளை தன்னிடம்  ஒப்படைக்கும்படி ரத்னம்மா, பெல்லாரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சூடான் பெண் விடுதலையான பின் மீண்டும் கைது

ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டார். இதற்கிடையே, இவர் மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சூடான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மதம் மாறி திருமணம் செய்த மரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

80 கி.மீட்டருக்கு 2ம் வகுப்பு கட்டணம் உயரவில்லை சலுகைகள் அறிவிப்பு !

புதுடில்லி : ரயில்வே துறை சமீபத்தில் அறிவித்த, ரயில் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதேநேரத்தில், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறநகர் ரயில் கட்டணத்தில் மட்டும், நேற்று திடீரென சலு கை அறிவிக்கப்பட்டது. அதன்படி, புறநகர் ரயில்களில், 80 கி.மீ., தூரத்திற்கு மட்டும், 2ம் வகுப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

வட மாநிலத்தவர்கள் பெரும்பாலும் டிக்கட் எடுக்காமல் பயணம் செய்வார்கள்..ரயில் நிலையத்தை நெருங்குவதற்கு முன் சிக்னலுக்காக ரயில் நிக்கும் போது எல்லோரும் கீழே குதித்து ஓடுவார்கள்..அதே மாதிரி முன் பதிவு செய்யாமல் இடை இடையே ஏறுபவர்கள்(உதாரணத்துக்கு நாக்பூர்,ஆக்ரா,ஜான்சி,குவாலியர்,பானிபத்,சோனிபத்,அம்பாலா இது போன்ற இடங்களில்) ரயிலில் ஏறிய பிறகு டிக்கட் பரிசோதகரிடம் பணத்தை கொடுத்து தூங்குவதற்கு இருக்கை பதிவு செய்வார்கள்..ஆனா அந்த குறிப்பிட்ட இருக்கைக்கு பணத்தை வாங்கிய பரிசோதகர் முறையான ரசித்து தர மாட்டார்..இது போன்ற தில்லு முல்லுகள் நம் ரயிவே துறையில் நெறைய நடப்பதால் தான் ரயில்வே துறை இந்த அளவுக்கு நிதி சுமையில் சிக்கி தவிக்கிறது..நான் பிறந்தது தமிழ்நாடாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாமே சண்டிகார் என்பதால் வட மாநிலத்தை நன்கு அறிவேன்..(என் பெற்றோர்கள் இருவருமே சண்டிகரில் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள்)..கட்டணத்தை உயர்த்த காட்டும் அக்கறையை ரயில் நிலையம், ரயில் கழிவறையை பராமரிப்பதிலும் காட்ட வேண்டும் என்பதே என் போன்றோர்களின் எதிர் பார்ப்பு...

மோடி அரசு ஒரு மாதத்திற்குள் 1½ லட்சம் பழைய கோப்புகள் அழிப்பு !

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதில் ஒன்று, தேங்கிக்கிடக்கும் பல ஆண்டுகால கோப்புகளை அழிப்பது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் உள்துறை அமைச்சகம் மட்டும் 1½ லட்சம் கோப்புகளை அழித்துள்ளது. வடக்கு பகுதி அலுவலகத்தில் உள்ள இரும்பு பீரோக்களில் இருந்த இந்த குப்பைகளுக்கு இடையே சில வரலாற்று புதையல்களும் கிடைத்தன.

Bihar போலி என்கவுண்டர் போலீசுக்கு தூக்கு தண்டனை ! 7 போலீஸ்காரர்களுக்கு ஆயுள்தண்டனை !


போலீஸ் அதிகாரிக்கு தூக்கு, 7 போலீஸ்காரர்களுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கி பீகார் கோர்ட் அதிரடிபோலி எண்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி ஒருவக்கு தூக்கு தண்டனையும், 7 போலீஸ்காரர்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கி பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 2002ஆம் ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற போலி எண்கவுன்டரில் விகாஸ்சன ரஞ்சன், பிரசாந்த்சிங், சேகர் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 12 ஆண்டுகளாக பாட்னா விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதி ரவிசங்கர் சின்கா இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளார் . nakkheeran.in

பூட்டான் வென்ற பூவேந்தே வாழ்க ! பூடானை நேபாளாக்கிய புகழ்வேந்தே !

பூடான் நாடாளுமன்றம்பிரதமரின் நேபாள பயணம் மகத்தான வெற்றி பெற்றது என்று கேள்விப்பட்டேன்…. இல்லை இல்லை லடாக் பயணம் … கொஞ்சம் இருங்க, வாய் தவறி விட்டது. பூடான் என்றுதான் சொல்ல வந்தேன்.”
பூடான் நாடாளுமன்றத்தில் மோடியின் ‘வீர’ உரை
“இன்றைக்கு பூடானையும் நேபாளத்தையும் குளறுபடி செய்யும் மோடி நாளைக்கு ஐநா அல்லது பிரிக் (BRIC) கூட்டங்களில் சொதப்பி இந்தியாவை அவமானப்படுத்த மாட்டார் என்று நம்புவோம்”
“குஜராத்தி மொழியில் நேபாளம் என்றால் பூடான் என்று பொருளாக இருக்கும்”
“மோடி புவியியலில் கொஞ்சம் வீக் போல, அதுதான் பூடானுக்கு பதிலாக நேபாள்னு சொல்லியிருக்கிறார். முனபு (தேர்தல் பிரச்சாரத்தின் போது), சந்திரகுப்த மவுரியரையும் தட்சசீலத்தையும் பீகாருடன் இணைத்து பேசி குழப்பியவர்தான்”

மருந்துகளை இலவசமாக வழங்க அரசு திட்டம்

 காய்ச்சல், உடல் வலி போன்ற சாதாரண நோய்கள் முதல் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற பரவலாக காணப்படும் நோய் பாதிப்புகளை குணப்படுத்த தேவைப்படும், முக்கியமான, 50  மருந்துகள் இலவசம் ,
புதுடில்லி : நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் மருத்துவ செலவினங்களை குறைக்கும் வகையிலும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான மருந்துகளை இலவசமாக வழங்க மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பொது மருத்துவ மனைகளில் இப்போது வழங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .ஒரு சராசரி மனிதனின் வருமானத்தில் 20 வதிலிருந்து 30 சதம் வரை மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது.இத்திட்டத்தை வரவேற்க வேண்டிய அதே நேரத்தில் மக்களுக்கு உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனை செல்லும்போது உதாரணத்திற்கு செயற்கை இருதய வால்வு பொறுத்த வேண்டி வந்தால் ''அரசு கொடுக்கும் ரூ 30,000 க்கு சற்று தரம் குறைந்த வால்வு தான் பொருத்தமுடியும் இரண்டு வருட உத்திரவாதம் தான் அளிக்க முடியும்.அதே சமயத்தில் கூடுதலாக இன்னும் ரூ 30,000 செலுத்தினால் நல்ல வால்வு பொறுத்தமுடியும்'' என மக்களை பயமுறுத்தி திசை மாற்றி மேலும் பணத்தை பிடுங்கி விடுகிறார்கள்.இதனால் அரசு அளிக்கும் சலுகை சாதாரண தனி மனிதனுக்கு சென்று அடைவதில்லை.அரசு விழிப்புடன் செயல் பட வேண்டும். 

செவ்வாய், 24 ஜூன், 2014

The Last Emperor சீனாவின் கடைசி மன்னனின் கதை !


‘தி லாஸ்ட் எம்ப்பரர்’ எனும் ஹாலிவுட் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. சீனாவின் கடைசி மன்னனான பூ ஈ கம்யூனிச புரட்சியில் எப்படி தனது அதிகாரம், பெருமிதம், கௌரவம், வசதிகள் அனைத்தையும் இழந்து பரிதாபத்திற்குரிய மனிதனாக மாறினான் என்பதை மிகுந்த அனுதாபத்துடன் அந்தப் படம் சித்தரித்திருந்தது. ஆனால் உண்மை அதுவல்ல.
பூ ஈ தனது சுய சரிதையை “மன்னனிலிருந்து குடிமகனை நோக்கி” என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் கம்யூனிச அரசு தன்னை எப்படி மறுவார்ப்பு செய்தது, சொந்த வேலைகளுக்கு கூட மற்றவர்களை எதிர்பார்த்திருந்த தன்னை எப்படி போராடி மாற்றினார்கள், மக்களை நேசிப்பதற்காக தான் உதறிய மேட்டிமைப் பண்புகள், இறுதியில் தான் ஒரு குடிமகனாக விடுதலை செய்யப்பட்டது அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அந்த புனரமைப்புப் போராட்டத்தைச் சுருக்கமாகத் தருகிறோம்.
இரண்டாம் உலகப்போரின் போது சீனாவின் வடகிழக்கில் ஐப்பானின் பொம்மை அரசராக இருந்தவர், போரில் ஐப்பான் தோல்வியடைந்த பிறகு ரசியாவிற்கு ஓடுகிறார். சோவியத் யூனியனிலிருந்து 1950-இல் கம்யூனிச சீனாவிற்கு கொண்டு வரப்படும் பூ ஈ 19 ஆண்டு மறுவார்ப்பு பயிற்சிக்குப் பிறகு சீன மக்கள் குடியரசால் விடுதலை செய்யப்படுகிறார்.

தமிழ்த் தேசிய நாடார்களின் கபட நாடக வேஷம் !

918fd6b5-df98-411c-856f-4cd9cad183ca_S_secvpf704a5ac4-7fc4-4708-9454-abb56df49f94_S_secvpfவே.மதிமாறன் : தூய இனவாதத்தோடு தமிழ்த் தேசியம் பேசுகிற நாடார் ஜாதி உணர்வாளர்கள், ‘என்ன எப்பப் பாரு.. பார்ப்பனர்களையே குறை சொல்றீங்க..?’ என்று பெரியார் தொண்டர்களிடம் கேட்கிறார்கள். அவர்களின் இந்தக் கேள்விக்குப் பின் இருப்பது தமிழ் உணர்வல்ல, பார்ப்பன நிறுவனங்களின் மூலமாக லாபமும் புதிய பார்ப்பன உறவும், தனி மனித லாபங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால் தான் பெரியாருக்கு துரோகம் செய்தவர்களையே சுட்டிக் காட்டி, ‘இது தான் பெரியார் இயக்கத்தின் யோக்கியதையா?’ என்று நற்பெயர் எடுக்கிறார்கள் தங்களின் பா. நிறுவனங்களிடமும் புதிய பா. உறவுகளிடமும்.
கம்யுனிஸ்ட், திராவிட இயக்கம், பெரியார், தலித் இயக்கம் என்று பலரை விமர்சித்து ஊர் நியாயம் பேசுகிற அவர்கள், தன் ஜாதி உணர்வாளர்களைக் குறித்து கள்ள மவுனம் காக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் காங்கிரசின் துரோகம் என்ற அடிப்படையில் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ப. சிதம்பரம், நாராயணசாமி; காங்கிரஸ் அல்லாதவர்களில் கலைஞர், திருமாவளவன், வைகோ இவர்களை மிகக் கடுமையாக கண்டிக்கிற அவர்கள்,
காங்கிரசில் இருக்கிற குமரி அனந்தனையும் (மகள் தமிழிசை சவுந்தரராஜனை பாஜகவில் வசதியாக)  வசந்த குமாரையும் கண்டிப்பதே இல்லை.

ரிலையன்ஸை புறக்கணிப்போம்'- ட்விட்டரில் இணையவாசிகள் போர்க்கொடி

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில், 'ரிலையன்ஸை புறக்கணிப்போம்' என்ற கோஷத்தை எழுப்பி, இந்திய இணையவாசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனத்தை ஈர்த்தனர்.
நிகழ்நேரத்தில் முக்கிய நிகழ்வுகள், பிரச்சினைகள், சுவாரசியங்கள், பிரபலங்கள், முக்கியச் செய்திகளையொட்டி, ட்விட்டர் தளத்தில் காரசார விவாதங்கள் அரங்கேறும்.
அந்த வகையில், இன்று காலை முதலே #BoycottReliance (ரிலையன்ஸை புறக்கணிப்போம்) என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.
ஹாஷ்டேகை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ அல்லது விவகாரத்தையோ எடுத்துக்கொண்டு, அதையொட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து பதிவிடுவதால், அது ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கும். ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேகை பயன்படுத்தி, நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் பதிவாகும்போது, அந்த ஹேஷ்டேக் தேச அளவில் பிரபலமடையும்.
ரிலையன்ஸுக்கு எதிரான கோஷம் ஏன்?

கரூர்: இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை ! உடலை வாங்க மறுத்து சாலை மறியல் !

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பொன்னுசாமி, இவர் இப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகவள்ளி. இவருடைய இரண்டாவது மகள் வினிதா (17) இவர் 12ம் வகுப்பு முடித்து கரூர் அருகேயுள்ள வீரராக்கியம் தனியார் கொசுவலையில் பணிபுரிந்து வந்தார். வரும் 2ம் தேதி தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க உள்ள நிலையில் விடுமுறை காலத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை (23-06-14) மாலை வேலை முடிந்து கிருஷ்ணராயபுரத்திலிருந்து பிச்சம்பட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வினிதாவை வெற்றிலை கொடிக்கால் பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொலைசெய்து அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுரி மாணவி தற்கொலை ! மாணவிகளின் பாலியல் ராக்கிங் காரணம் ?

சென்னை : சகமாணவியின் பாலியல் ரீதியான
ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலைசென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டிய சக மாணவிகளை போலீஸார்  கைது செய்துள்ளனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை 2ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த அந்த மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை விடுதி அருகே யாரும் இல்லாத போது  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி அவரது தந்தை கமலக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கல்லூரிக்கு சென்ற யோகலட்சுமியின் அறையில் போலீஸார்  சோதனை நடத்தினர். அதில் சில சந்தேகங்கள் உருவானது . இதையடுத்து அவரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.nakkheeran.in

போலி விசா, பாஸ்போர்ட் மூலம் 53 நாடுகளுக்கு 400 பேர் !

சென்னை: இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, அரபு உள்பட 53  நாடுகளுக்கு போலி விசா, பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்த 5  இலங்கை தமிழர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   குறிப்பாக, போலி  பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் மலேசியா, இங்கிலாந்து, கனடா,  ஆஸ்திரேலியா உள்பட 53 நாடுகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.  இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்ல சிவம், துணை கமிஷனர்  ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.