சனி, 5 ஆகஸ்ட், 2017

இந்த அரசின் பிக்பாஸ் யார் ? தோழர் மாறன் உரை.. தஞ்சையில் “விவசாயியை வாழவிடு” மாநாடு


ஞ்சையில் ஆகஸ்டு 5 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில் “விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை” என்ற தலைப்பில் தோழர் மாறன், மக்கள் அதிகாரம், தேவாரம், அவர்கள்  ஆற்றிய  உரையின் சுருக்கம்.
இந்திய விவசாயத்திற்கு ஏராளமான பாரம்பரியம் உண்டு என்று இந்திய அரசே சொல்கிறது. உலகில் காய்கறி ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது பெரிய நாடு. கோதுமை ஏற்றுமதியில் ஐந்து நாடுகளில் ஒன்று. காபி, தேயிலை , பால் ஏற்றுமதியில் முக்கியமான இடத்தில் உள்ளது இந்தியா. இவை எல்லாம் விவசாயிகளின் சொந்தமான சொத்து.
1886-இல் அகஸ்தர் ஒல்கர், இந்தியாவிற்கு விவசாய ஆய்விற்காக வருகிறார். அனைத்து மாநில விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்து எழுதுகிறார். நேரடி ஆய்வில் இந்திய விவசாயிகள் படிக்காதவர்கள் தான். அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. பருவமழை நீரை கொண்டு சிறப்பாக அறுவடை செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று எழுதினர்.

விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

”விவசாயியை வாழ விடு” – மாநாட்டு தீர்மானங்கள், ஆகஸ்ட் 5, 2017, திருவள்ளுவர் திடல், தஞ்சாவூர்
‘விவசாயியை வாழவிடு’ என்பது அதன் பொருளிலேயே கெஞ்சல் அல்ல; அறைகூவல் என்பதை உணர்த்துகிறது. விவசாயியை வாழவிடு என்ற முழக்கம் பெரும்பாலான மக்களின் மத்தியிலிருந்து வருகிறது. விவசாயியை வாழ விடாமல் வதைக்கும் அழிவு சக்தியாக ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் இருக்கிறது. நம்மை வாழவிடக் கூடாது என்ற முனைப்போடு பன்முனைத் தாக்குதலை தொடுக்கும் அரசுக் கட்டமைப்பிடமே கெஞ்சிக் கொண்டிராமல் விவசாயிகள் தங்கள் சொந்த அதிகாரத்தை நிறுவுவதே தீர்வாக இருக்கும் என்று இந்த மாநாடு உறுதியாக நம்புகிறது.
  1. விவசாயிகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் பிரச்சினைகளாக விவசாயக் கடன் பிரச்சினை, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, பாசனமின்மை, விவசாயிகள் தற்கொலை ஆகியவை உள்ளன.

இந்தியாவை தவிர வேறெங்கும் கையால் மலம் அள்ளுவது கிடையாது .. தொழில்நுட்பம் ... அங்கெல்லாம் சாதி இல்லை!


kalaimarx/ மேற்க‌த்திய‌ நாடுக‌ளில், ஒரு கால‌த்தில் இருந்த‌, கையால் ம‌ல‌ம் அள்ளும் தொழில் இல்லாதொழிக்க‌ப் ப‌ட்ட‌து எவ்வாறு? அது ந‌க‌ர‌த் திட்ட‌மிட‌லில் ஒரு ப‌குதி. அது ப‌ற்றிய‌ சிறிய‌ விள‌க்க‌ம், ப‌ட‌ங்க‌ளுட‌ன்.
எல்லா வீடுக‌ளில் இருந்தும் செல்லும் க‌ழிவு நீர் குழாய்க‌ள், நில‌க் கீழ் சுர‌ங்க‌ப் பாதைக்கு செல்கின்ற‌ன‌. அந்த‌ நில‌க் கீழ் குழாய்க‌ள், ம‌ழை நீரையும் சேர்த்துக் கொண்டு, சுத்திக‌ரிப்பு ஆலையை நோக்கி செல்கின்ற‌ன. அங்கு ந‌ன்னீர் பிரித்தெடுக்க‌ப் ப‌டுகின்ற‌து.
சுத்திக‌ரிப்பு ஆலையும், சுர‌ங்க‌ப் பாதைக் குழாய்க‌ளும் தானிய‌ங்கி முறையில் இய‌க்க‌ப் ப‌டுகின்ற‌ன‌. இந்த‌ப் பொறி முறையில் ம‌னித‌ உழைப்பு மிக‌வும் குறைவாக‌ உள்ள‌து. அநேக‌மாக‌ தொழில்நுட்ப‌ ப‌யிற்சி பெற்ற‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே வேலை செய்கிறார்க‌ள்.

முட்டை... ஐரோப்பாவின் மிக‌ப்பெரிய‌ கிருமிநாசினி ஊழ‌ல்..

kalaimarx :முட்டையில் முத‌லாளித்துவ‌ம். ஐரோப்பாவின் மிக‌ப்பெரிய‌ கிருமிநாசினி ஊழ‌ல் கார‌ண‌மாக‌ முட்டை விற்ப‌னை வீழ்ச்சி. ஜேர்மனி, பிரான்ஸ், நெத‌ர்லாந்து ஆகிய‌‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளில் க‌டைக‌ளில் இருந்து முட்டைக‌ள் அக‌ற்ற‌ப் ப‌டுகின்ற‌ன‌.
நெத‌ர்லாந்து கோழிப்ப‌ண்ணைக‌ளில் தான் இந்த‌ ஊழ‌ல் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ப‌ண்ணைக‌ளில் வ‌ள‌ர்க்கும்‌ கோழிக‌ளுக்கு ஏற்ப‌டும் கிருமித் தொற்றை அக‌ற்றுவ‌த‌ற்கு கிருமி நாசினி தெளிப்ப‌து வ‌ழ‌க்க‌ம்.
கோழிப் பேன் என்ற‌ழைக்க‌ப் ப‌டும் கிருமி அக‌ற்றுவ‌த‌ற்கு, Chickfriend என்ற‌ நிறுவ‌ன‌ம் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ இர‌சாய‌ண‌ப் பொருள் தான் ஊழ‌லுக்கு கார‌ண‌ம்.
கிருமிநாசினியில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ Fipronil என்ற‌ இர‌சாய‌ண‌ ப‌தார்த்த‌ம் ஒரு ந‌ஞ்சு. அதிலுள்ள Dega-16 எனும் ந‌ஞ்சு த‌டைசெய்ய‌ப் ப‌ட‌வில்லை. ஆனால் கிருமிநாசினியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ த‌டை உள்ள‌து.

ஹிட்லர் நாசி படைக்கும் இரானிய ஆரிய வம்சாவளி ஸ்வாதி....A-brham x-brham Abrham பிராமணனின் எதிர்ச்சொல்... ஆபிரஹாம் இப்பிரஹாம்

Venkat Ramanujam : ஹிட்லர் நாசி படைக்கும் இரானிய ஆரிய வம்சாவளி ஸ்வாதிக் குறியீடு காரணம் என்ன ..
கனிஷ்கர் (AD 127–150 ) காலத்தில் கல்வெட்டுகள் 1993 இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இரானிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
ஆரியன் அல்லாதவர்கள் யூதர்கள்ஆபிரஹாமைச் சார்ந்தவர்கள்.
A-brham x-brham Abrham பிராமணனின் எதிர்ச்சொல்

பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கைளை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை ஆரியமயமாக்குதல் என்று பெயர்.
இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகளை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டுத் தோற்கடித்தன.

ராகுலை தாக்கிய பாஜக தொண்டர் கைது!

குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜ.க தொண்டர் ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி ஆகஸ்ட் 04 ஆம் தேதி நேற்று பார்வையிட்டார். ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டியும், பிரதமர் மோடிக்கு ஆதரவான வாசகங்களையும் வைத்துக்கொண்டு பா.ஜ.க தொண்டர்கள் கோஷமிட்டனர். தானேரா பகுதியில் ராகுலின் பாதுகாப்பு வாகனத்தின்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் விஜயதரணி தினகரனை சந்தித்தார்!.. அதிமுக - காங்கிரஸ் இயற்கைக் கூட்டணியாம்!

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்று வரும் நிலையில்... திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி இன்று ஆகஸ்டு 5 ஆம் தேதி சென்னையிலுள்ள தினகரனின் வீட்டுக்குச் சென்று தினகரனை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி, ‘’தினகரனது மாமியார் மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக வந்தேன். அதிமுகவை இன்றைக்கு மத்திய பாஜக அரசு தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதிமுக மீது அழுத்தத்தையும் அச்சுறுத்தலையும் பாஜக திணித்து வருகிறது.( திருநாவுக்கரசு சிஸ்டம் ?)

சித்தராமைய்யாவுக்கு ஸ்டாலின் பாராட்டு! சமத்துவத்திற்கான தேடல் மாநாடு ..

சமத்துவத்திற்கான தேடல் என்ற மாநாட்டை நடத்தி பெங்களூரு பிரகடனத்தை வெளியிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் ஆகஸ்ட் 05 ஆம் தேதி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''சமத்துவத்திற்கான தேடல் என்ற உன்னத நோக்கத்தோடு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்தியமைக்காக என்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஜூலை மாதம் 21 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்ற டாக்டர். பி.ஆர்.அம்பேதகர் சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெங்களூரு பிரகடனத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தேன்.
அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படை அம்சங்களை உளமாற தொடர்ந்து பாதுகாக்கவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான தூண்களை மேலும் வலுப்படுத்தவும் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்று நான் கருதுகிறேன்.

2,000 அடி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் பலி.. போதை? தற்கொலை? மகாராஷ்டிரா


மும்பை: மஹாராஷ்டிராவில், அம்போலி மலைப் பாதையில், 2,000 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து, இரு வாலிபர்கள் இறந்தனர்.
மஹாராஷ்டிராவில், கோல்காப்பூரில் உள்ள, கோழிப் பண்ணை ஒன்றில் பணியாற்றும் ஏழு வாலிபர்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, அம்போலி காட், மலை வாசஸ்தலத்துக்கு சென்றனர். அப்போது, இரு வாலிபர்கள் மட்டும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஏறினர். மற்றவர்கள், வேண்டாம் என, தடுத்தும் கேட்காமல் ஏறினர்.உச்சிப்பகுதிக்கு சென்ற அவர்கள், கீழேயிருந்த தன் நண்பர்களுக்கு உற்சாகமாக, 'சாகசம்' செய்து காட்டினர். அதை சிலர், மொபைல் போனில் பதிவு செய்தனர். அப்போது, இரு வாலிபர்களில் ஒருவர் கால் தடுமாறினார். இதையடுத்து, மற்றொருவரை அவர் பிடிக்கவே, இருவரும், 2,000 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தனர்.

15-வது குடியரசு துணைத்தலைவரானார் வெங்கய்ய நாயுடு!

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றார். குடியசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்கட்சி சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 98.2% வாக்குப்பதிவு ஆகியிருந்தன. மொத்தமுள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து வெங்கய்ய நாயுடு முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்று நாட்டின் 15வது குடியரசு துணைத்தலைவராக வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் 516 பேர் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். வெங்கய்ய நாயுடுவை எதிர்த்து போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் . நக்கீரன்

BBC : டிடிவி தினகரன் நியமனத்தை ஏற்க மறுக்கும் அதிமுக நிர்வாகிகள்

அ.தி.மு.க. அம்மா அணிக்குள் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் விதமாக புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார். ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அ.தி.மு.க. அம்மா அணியில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கும் கூடுதல் பொறுப்புகளுக்கும் சிலரை நியமனம் செய்து அறிவித்தார். இந்தப் பட்டியலில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களுமான பி. பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், ஏ.கே. போஸ், சத்யா பன்னீர்செல்வம், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. வி.கே. சசிகலாவின் ஒப்புதலுடன் அந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலர் டிடிவி தினகரன் அறிவித்த பொறுப்புகளை ஏற்க மறுத்துள்ளனர். மதுரையில் சனிக்கிழமை காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸ் தான் பதவியேதும் கேட்கவில்லையென்றும் தன்னைக் கேட்காமலேயே தனக்கு விவசாயப் பிரிவின் இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தனக்கு அது தேவையில்லை என்றும் கூறினார்.

மாநிலங்கள் அவையில் காங்கிரசை விட பாஜகவுக்கு அதிக ஆசானங்கள் ...

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, அதிக ராஜ்யசபா உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் 13 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். இதில் கடந்த 2ஆம் தேதி வரை காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் தலா 57 உறுப்பினர்களுடன் சம பலத்தில் இருந்து வந்தன. இந்த நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக-வைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் சம்பதியா உகே, மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் பாஜக எம்.பி-க்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. மேலும், காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி மாநிலங்களவையில் முதன்முறையாக தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

ஸ்டாலின் வேண்டுகோள் : டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்ப வேண்டும்

மின்னம்பலம் :‘தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்ப வேண்டும்’ என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு ஏற்கெனவே 41 நாள்கள் முதற்கட்ட தொடர் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் உச்சகட்டமாய் நிர்வாணப் போராட்டம் நடத்தியும் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை 16 முதல் மீண்டும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 4ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…

பார்ப்பானின் மந்திரங்கள் பலவும் பாவமன்னிப்பு கோரிக்கைகள்தான் .. இதோ பட்டியல்!

Sanskrit is much younger language than Tamil. Thousands of words were borrowed from Thamizh into Sanskrit.
Thagadoor Sampath :பாவமன்னிப்பு : எடுக்கிறதே பிச்சை இதிலே தானமிட்டவன் புனிதமற்றவனா? பிராமணன் என்ன செய்கிறான் எவ்வாறு எம்மை நோக்குகிறான் என்று பாருங்கள்.
“ஆப புநந்து ப்ருதிவீம் ப்ருத்வீ
பூதா புநாதுமாம் புநந்து ப்ரஹ்மணஸ்
பதி ப்ரஹ்மபூதா புநாது மாம்
யதீச்சிஷ்டம் அபோஜ்யம் யத்வா
துஸ்சரிதம் மம ஸர்வம் புனந்துமாம்
ஆப அஸதாம்ச ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா”
இதற்கென்ன அர்த்தம்...?
“அய்யா தேவதைகளே... நான் (பிராமணன்) காலை கிளம்பி பல இடங்களுக்கும், கிரகங்களுக்கும் (வீடு) ஹோமம் பண்ணி வைக்கப் போகிறேன். யாகம் பண்ணி வைக்கப் போய் வருகிறேன்.
அப்போது... எனக்கு முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கிற சாமான்களையெல்லாம் தானமாக வாங்கிக் கொள்கிறேன். அவர்களில் சிலர் எனக்குக் கொடுத்த தானங்கள் எச்சில் படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
ஒருவேளை அவர்கள் புனிதம் கெட்ட கீழ் வர்ணத்தவர்களாக இருக்கலாம். அவர்களிடமிருந்து தானம் வாங்கினால் எனக்கு பாவம் ஆயிற்றே... நானும் தெரியாமல் வாங்கி வந்து வீட்டில் போட்டிருப்பேன். அதனால்... அந்த எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்...” என வேண்டுகிறான் பிராமணன்.

ஆதிக்கசாதியினர் Sweeper என 20000 ரூபாய் பெற்றுகொண்டு 6000 ரூபாயை ஒடுக்கப்பட்ட சாதிக்கு ..

Divya Bharathi : துப்புரவு பணியாளர்களை தெருத் தெருவாக சென்று தமிழகம் முழுக்க சந்தித்து பாருங்கள். அப்போது தான் கள நிலவரம் புரியும். அதில் Bc mbc இருப்பதாக தொடர்ந்து கூறப்படட்டு வருகிறது. ஆம் உண்மை தான் யாரும் மறுக்க வில்லை. தங்கள் ஆதிக்கத்தை பயன்படுத்தி Sweeper என கிட்டதட்ட 20000ரூ சம்பளம் வரக் கூடிய அரசு பணியை பெற்றுக் கொண்டு வரும் ஆதிக்கத் சாதியினர், துப்புரவு பணி செய்வதில்லை. அந்த சம்பளத்திலிருந்து 6000 ரூபாயை ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த மக்களுக்கு அளித்து மேல் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, தங்களுக்கு பதில் ஆளாக அவர்களை தான் துப்புரவு பணி செய்ய வைக்கிறார்கள், அவர்கள் வேறு வேலை செய்து கொள்கிறார்கள். தமிழகம் முழுக்க துப்புரவு பணியில் இருக்கும் "பதில் ஆட்கள்" ஏதோ ஒரு Bc, Mbcன் sweeper என்கிற அரசு பணியை 5000, 6000 கூலிக்கு செய்து கொண்டு வருகிறார்கள் என்பதை களத்தில் இறங்கி தெரிந்து கொள்ளுங்கள். ஆதிக்க சாதியினரின் இந்த ஆதிக்கம், அயோக்கியத்தனமானது.

மலையகத்தில் பத்தடிக்கு எட்டடியில் .. 200 ஆண்டுகளாக ஒரு பிக்பொக்ஸ் ஹிரோக்கள் ஹீரோயினிகள்

.எஸ்தர் நத்தானியல்: தூங்கும்முன் இப்பதிவை எழுத நினைக்கிறேன் முன்ன விட இப்போது அதிகம் சிந்தனை வருகிறது வயது போக போக ஞானம் வருவதுப் போல!!!
பிக் பொக்ஸ் லன்ச் பொக்ஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதேயில்லை ஆனால் அதன் கருத்து விவாதம் களத்தில் நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.
அண்ணன் கமல் அவர்களே ஒரே வீட்டில் ஒரே அறையில் நடப்பதை நீங்கள் கேமராவை வைத்து ரெடி கட் என்று கத்தி நடிக்க வைக்கிறீர்கள் .
பெண்களுக்கும் ஆண்களுக்கும் மேக்கப்போட்டு காட்டுகிறீர்கள்.
இங்கே இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள் கூட்டத்தில் எழுந்து வந்தவள் நான் சொல்கிறேன் ,இங்கே ஒரு கூட்டம் பிக்பொக்ஸ் ஹிரோக்கள் ஹீரோயினிகள் இருக்கிறார்கள் .
பத்தடி எட்டடி காம்பிராவில் எவ்வித அடிப்படை வசதீயின்றி ஒரே அறையில் உண்டு, குடித்து ,உறங்கி, புணர்ந்து, பிள்ளைப்பெற்று மருமகன் மாமா மாமி கூட்டத்தோடு வாழ்ந்து விடீயும் முன் எழுந்து தேயிலையை தேடி மலையேறும் கூட்டம் உண்டு .
கங்காணிக்கு புன்னகைத்து கணக்குப்பிள்ளைக்கு தலை வணங்கி சாதிப்பார்த்து தள்ளி வைப்பவனால் அவனோட எதுக்குப்பா வம்பு என்று மாற்று பாதை தேடி நடக்கும் இம்மக்களே உண்மையான ஊமையான பிக்பொக்ஸ் நாயகர்கள் .

சினிமாவில் அடிமைத்தனத்தின் உச்சம்! கீரோக்களின் காட்டுமிராண்டி பிஹாவியர்

அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினியின் அப்பா, மாதவனின் அப்பாவைப் பார்த்து கேட்கும் கேள்வி நியாபகம் இருக்கலாம். இல்லையென்றால் நியாபகப்படுத்துகிறோம். “எப்ப சார் வருது இந்த திமிரு? பணம் வரும்போதா? இல்லை, புகழ் சேரும்போதா? என்று கேட்பார். அந்தக்கேள்வி கேட்கப்பட்ட சூழலுக்கும், இந்த சம்பவத்துக்கும் வித்தியாசங்கள் இருந்தாலும் ஒரு மனிதரைவிட தன்னை சுப்பீரியராக நினைக்கும் தன்மை இரு இடங்களிலும் பொதுவானதுதான்.
நந்தாமுரி பாலகிருஷ்ணாவின் 102வது திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவில், பாலகிருஷ்ணா தனது அசிஸ்டெண்டின் தலையில் அடித்தது , தற்போது டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

குஜராத்தில் ராகுல் மீது தாக்குதல்! இந்துத்வா பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்?

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி சென்றனர். தாக்குதலிலிருந்து ராகுல்காந்தி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
குஜராத் மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வட குஜராத்தின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுச் சென்றார். மேலும் குஜராத் மாநிலத்துக்கு 500 கோடி ரூபாய் நிதியும் வழங்கியுள்ளார்.

64 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியில் முக்கிய 18 நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டிக்கு எதிரான எம்.எல்.ஏக்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பனுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. சேலஞ்சர் துரை, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி.ஆதித்தன், சாருபாலா தொண்டைமான், காமராஜ், மாணிக்கராஜா, டி.கே.எம்.சின்னையா, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன்,ஆ ர்.மனோகரன். எஸ்.டி.ஜக்கையன், மேலூர் ஆர்.சாமி,  சி.சன்முகவேலு, மாதவரம் மூர்த்தி அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் தலைவராக கே.கே.சிவசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரிவு இணைசெயலாளர்களாக தங்கதுரை, திருப்பூர் சிவசாமி, கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத், இளவரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இணைச் செயலாளர்கள் நடராஜன், ராதாகிருஷ்ணன், சுகுமார் பாபு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளர்களாக செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், கு.ப.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். லைவ்டே

ஜோதி குப்தா ..அரியானா: தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஆக்கி அணி வீராங்கனை

அரியானாவில் இந்திய ஆக்கி அணி வீராங்கனை ஜோதி குப்தா ரெயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அரியானா: தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஆக்கி அணி வீராங்கனை அரியானா: அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச ஆக்கி வீராங்கனை ஜோதி குப்தா. இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வருகிறார். ஆசிய போட்டியில் விளையாடி உள்ளார். 20 வயதான அவர் கடந்த 2-ந்தேதி ரோடாக்கில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழில் உள்ள பெயர் எழுத்து பிழைகளை சரி செய்ய செல்வதாக பெற்றோரிடம் கூறியபடி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் ரெவாரி ரெயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஜோதி குப்தா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மாலைமலர்

திவாகரனிடம் 30... தினகரனிடம் 37 எம்.எல்.ஏக்கள்.. எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் அம்மா கோஷ்டி?

Mathi Oneindia Tamil சென்னை: திவாகரனின் அன்புக்கு கட்டுப்பட்டு 30 எம்.எல்.ஏக்களும் தினகரனிடம் 37 எம்.எல்.ஏக்களும் இருப்பதாக எடப்பாடியை அதிமுக அம்மா கோஷ்டி மிரட்டி வருகிறது.
தினகரன் மீண்டும் தீவிர அரசியலில் குதித்திருப்பது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலின் காலத்தின் குரலில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த டிவி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக (அம்மா) கோஷ்டியின் காசிநாதபாரதி கூறியதாவது:
திராவிட தலைமை டெல்லி குறிவைத்திருக்கும் தலைமைதான் திராவிடத் தலைமை. தினகரன்தான் உண்மையான திராவிடத் தலைவர். ஜனாதிபதி தேர்தலில் திமுக ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிக்க முடியாது என்பதால் பாஜக வேட்பாளரை ஆதரிக்க நேர்ந்தது. திவாகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திவாகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தினகரன்- திவாகரன் சமாதானமடைவதற்கு முன்பே திவாகரனின் அன்புக்கு கட்டுப்பட்டு அமைச்சர்கள் உட்பட 30 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். எடப்பாடி வசம் இருக்கும் ஆட்சி அதிகாரத்தை பற்றி கவலைப்படாமல் தற்போது 37 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்தனர்.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தர்மகுடிகாடு அருந்ததியர் கொலை... ஒட்டுமொத்த தலித் ஒற்றுமைக்கான முயற்சிக்கும் அவமானம்.

ஸ்டாலின் தி: தர்மகுடிகாடு அருந்ததியர் கொலை, பறையருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தலித் ஒற்றுமைக்கான முயற்சிக்கும் அவமானம்.
திட்டக்குடி அருகே உள்ள கிராமம் கோழியூர். அதன் அருகே உள்ள கிராமம் தர்மகுடிகாடு. கோழியூரில் உள்ள வேணுகோபால சாமி கோயிலுக்கு தர்மகுடி காட்டில் கோயில் இருக்கிறது. பல பத்தாண்டுகளாகவே அந்த நிலம் கோழியூர் பிள்ளை மார்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. காலப் போக்கில் அந்த நிலம் கோயில் நிலம் என்பதே மறக்கப்பட்டு கோழியூர் பூமிநாத பிள்ளை குடும்ப நிலம் என்றே அறியப்பட்டுவந்தது. அந்த நிலத்தை பராமரிக்கும் பணியை பல ஆண்டுகளாக செய்து வந்த அருந்ததியர் குடும்பமும் அந்த நிலத்திலேயே வசித்தும் வந்ததது. காலம் கடந்து, அந்த நிலத்தைப் பற்றிய தகவலை வி.சி.க. பொறுப்பாளரான கோழியூர் அலெக்ஸாண்டர் அரசு ஆவணத்தின் மூலம் அறிந்து தங்களுக்கும் நிலத்தில் உரிமை வேண்டும் என்று கிளம்ப பூமிநாத பிள்ளை குடும்பம் வெளியேறியது. அதுவரை சரிதான். ஆனால் அங்கேயே வசித்துவந்த அருந்ததியர் குடும்பங்களையும் வெளியேறச் சொன்னதுதான் அலெக்ஸாண்டர் தரப்பின் மாபெரும் பிழை. அந்த பிழையே இன்று கொலைக் குற்றமாக உருவெடுத்து விட்டது.

500/ 1000 ரூபாய் தாள்கள் நீக்கம் இமாலய தவறு... CAG நாடாளுமன்ற கணக்கு குழு ..

Devi Somasundaram · 500/ 1000 ரூபாய் தாள்கள் நீக்கம் இமாலய தவறு..அதனால் யாதொரு பயனும் இல்லை. - நாடாளுமன்ற குழு.. அனேகமா பத்ரி இண்டக்‌ஷன் ஸ்டவ், ரெடிமேட் நூடுல்ஸ் போஸ்ட் போட மாட்டார்ன்னு நினைக்கிறேன்..இன்னிக்கு பேடீ எம்ல எவ்லோ டிரான்ஸ்ஷாக்‌ஷன் நடக்குது...உங்க பர்ஸ்ல காசு வைக்க தேவை இல்லாததால வெய்ட் கொறஞ்சு. சட்டை ஈஸியா போட முடியுது. .ரூவாய வச்சு வச்சு எடுத்து அழுகாகாதாதால சோப்பு செலவு மிச்சம்னு போஸ்ட் போடுவார்ன்னு சொன்னா நம்பவா போறிங்க....

காலா வழக்கு: ரஜினியுடன் உள்ள போட்டோக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!

Shankar Oneindia Tamil சென்னை: காலா படத்தின் கதைக்கு உரிமை கோரி வரும் ராஜசேகரன் என்பவர், ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் என்று கூறி சில படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்துக்கு தடைகோரி, சென்னை 4-வது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜசேகரனை யார் என்றே தெரியாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ரஜினிகாந்துடன் உள்ள தொடர்பை நிரூபிக்கும் விதமாக சில புகைப்படங்களை ராஜசேகரன் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கின் இருதரப்பு வக்கீல்களின் வாதங்களுக்காக, விசாரணையை 8-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

50 ஆண்டுகளில் இந்தியாவின் பாதி மொழிகள் அழிந்துவிடும்!

அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அழிந்துவிடும் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்போது 780க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதில் ஒருசில மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளது. இது தொடர்பாக பீப்பில் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவுகள் தொடர்பாக 11 தொகுதிகள் அடங்கிய குறிப்பை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அடுத்த 50 ஆண்டுகளில் அழியக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 250 மொழிகள் அழிந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவலும் இடம்பெற்றுள்ளது. ஒரு மொழி அழியும்போது அது சார்ந்த கலாச்சாரமும் அழிந்து போகிறது. கல்வியறிவின்மை, பள்ளி செல்லாத காரணத்தால், பழங்குடியின மக்கள் மொழிகள் அழியும் ஆபத்து அதிகம் உள்ளது. இதில் ஆயிரம் வருஷம் பழமையான இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மைதிலி (பீகார்) உட்பட 22 பழங்குடியின மொழிகள் அழியும் நிலை உள்ளது.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் பணியை தொடரும் பெரு.துளசி பழனிவேல்

பிலிம் நியூஸ் ஆனந்தனின் மறைவுக்கு பிறகு அவரது பணியை மக்கள் தொடர்பாளர் பெரு.துளசி பழனிவேல் அவர்கள் தொடர்ந்து வருவது சினிமாத்துறையினரால் வரவேற்கப்படுகிறது. தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். இவர் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த போது நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என திரைப்படத் துறையின் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த் திரைப்பட செய்திகள் அனைத்தும் “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.

BBC :ஆழ்கடல் மீன்பிடி சாத்தியமா? மீனவர்கள் தயக்கம்?

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு முறை நிரந்தரத் தீர்வு தரும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் நேற்று அறிவித்தார்.
Image caption நடுக்கடலில் மீனவர்கள் இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி முறை என்றால் என்ன? அந்த திட்டத்துக்கு தமிழக மீனவர்கள் தயாராக உள்ளனரா , என்பது பற்றி பிபிசி தமிழிடம் மீன் வளத் துறை நிபுணர்கள், மீனவர்களின் பிரதிநிதிகள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.ஃபெலிக்ஸ் கூறுகையில், "டிராலர்" எனப்படும் இழுவலை மோட்டார் படகுகள் மூலம் மீன்பிடிக்கும் முறை, தமிழகத்தில் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக உள்ளது" என்றார். ஆனால், "கடல்வளம் அழிவதாகக் கூறப்படுவதால், இழுவலை டிராலர் படகுகள், இரட்டை மடிவலைகள் மூலம் மீன் பிடிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பொன்.ராதாகிருஷ்ணன் :நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில், திமுக பகல் வேஷம் போடுகிறது, காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கிடைக்காது, அவ்வாறு கிடைத்தால் தமிழக மாணவர்களின் அழிவுக்கு அது வழிவகுக்கும். நீட் தேர்வு அவசர சட்டம் மூலம் மாணவர்களை குழுப்புவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நக்கீரன்

கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை ... தேடப்படும் நபராக அறிவிப்பு!

அன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற்று தந்ததில் மோசடி செய்ததாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், விசாரணைக்கு அவர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலையில், அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் கார்த்தியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. மேலும் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் வெளிநாடு செல்ல முயன்றால் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கார்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு வரும் 7ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.நக்கீரன்

ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் உணவிற்காக செலவிடுவது இரட்டிப்பாகும் ,,, அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

tamilthehindu :அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் உணவிற்காக செலவிடுவது இரட்டிப்பாகும் என்று மத்திய உணவு பதனிடும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார்.
இந்தியாவின் உணவு மற்றும் உணவு பதனிடும் துறை குறித்து உலகிற்கு தெரிவிக்கவும் உலக உணவு பதனிடும் துறையினர் இந்திய உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும் புதுடெல்லியில் நவம்பர் மாதம் 3 முதல் 5-ந்தேதி வரை பிரமாண்ட அளவில் 'உலக உணவு இந்தியா-2017' என்ற தலைப்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் உணவு பதனிடும் துறையில் ஈடுபட்டுள்ள தமிழக தொழிற்துறையினர் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய உணவு பதனிடும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கோக் பெப்சிக்கு மட்டும் 24 மணி நேரமும் தண்ணீர் சப்ளை எப்படி? வளர்மதி வினா

பல்கலைக்கழக விதிகளை மீறி நான் எதுவும் செய்யவில்லை. துண்டறிக்கை கூட வெளியில் தான் வழங்கி இருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யாரையும் இடைநீக்கம் செய்யவில்லை. ஆனால் நெடுவாசல், கதிராமங்கலத்திற்கு ஆதரவாக போராடிய என்னையும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களையும் இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அரசு தனக்கு எது எல்லாம் சாதகமாக இருக்கிறதோ அதை எல்லாம் பயன்படுத்திவிட்டு, தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை நசுக்க நினைக்கிறது. நான் படித்ததே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான். அதனால் இந்த இடைநீக்கத்தால் எதிர்காலம் பாதிக்கப்பட்டதாக நினைக்கவில்லை. இங்கு எவ்வளவுதான் வறட்சியாக இருந்தாலும் கோக், பெப்சி போன்ற பல நிறுவனங்களுக்கு எந்தவிதமான தடையும் இன்றி 24 மணி நேரமும் தொடர்ந்து தண்ணீர் தரப்பட்டு வருகிறது. குறிப்பாக வெயில் காலத்தில் மட்டும் அதிக அளவில் குளிர்பானம் தயாரிக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வாரிக் கொடுத்துவிட்டு பருவ மழையைக் காரணம் காட்டி பொய்யாக பரப்புரை செய்கிறது. (மேலும் விரிவாக இன்றைய நக்கீரனில்)

திருச்சி .. இரு மாணவிகள் தற்கொலை .. பின்னணியில் மாணவர்கள் .. கண்டுகொள்ளாத ஆசிரியர்கள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சரளப்பட்டியை சேர்ந்த ரதிதேவி மற்றும் வைரம்பட்டியை சேர்ந்த செல்வி ஆகியோர் வையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் இருவரும் கடந்த 2-ம் தேதி மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவிகள் இருவரையும் அவர்களது பெற்றோரும், காவல்துறையினரும் தேடி வந்தனர்.இந்தநிலையில்,3-ம் தேதி காலை வையம்பட்டியை தட்டாரப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மாணவிகள் இருவரும் சடலமாக கிடக்கிறார்கள் என்கிற தகவல் தீயாகப் பரவ ஆரம்பித்தது.விஷயம் கேள்விப்பட்டவுடன் முதன் முதலாக அந்த இடத்திற்கு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன், மாணவியின் உடலை பார்க்க செல்லாமல் அருகில் வேறு ஏதேனும் பொருள் கிடக்கிறதா என்று தேடி பார்த்தவர் மாணவியின் பையில் வைத்திருந்த ஜாம்மன்ரி பாக்ஸ்-ல் வைத்திருந்த  கடிதத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்.அதன் பிறகு தகவலறிந்து வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து மாணவிகள் இருவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லண்டன் .. இந்திய டாக்டர் மனிஷா மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள்

East London GP charged with 118 sexual offences. Manish ... Shah is registered as a doctor working with the national health service. ... Specialist detectives from Scotland Yard's sexual abuse command have been involved in
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் மணிஷ் ஷா மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி டாக்டர் மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள் லண்டன்: இங்கிலாந்து நாட்டில் லண்டன் ரோம்போர்டு பகுதியில் புருனல் குளோஸ் என்ற இடத்தில் வசித்து வருபவர் டாக்டர் மணிஷ் ஷா (வயது 47). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். அவற்றில், 13 வயதுக்குட்பட்ட குழந்தையிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.தற்போது டாக்டர் மணிஷ் ஷா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மஞ்சு வாரியாருக்கு முன்பே உறவுப் பெண்ணை ரகசிய திருமணம் செய்த திலீப்

மஞ்சு வாரியாருக்கு முன்பே உறவுப் பெண் ஒருவரை நடிகர் திலீப் ரகசிய திருமணம் செய்திருக்கிறார். அந்த பெண் வளைகுடா நாட்டில் தங்கியிருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் நடிகர் திலீப் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நடிகர் திலீப்பின் வாழ்க்கை பற்றிய பல்வேறு ரகசியங்கள் போலீசாருக்கு தெரியவந்தது. அவர் நடிகை மஞ்சுவாரியாரை திருமணம் செய்வதற்கு முன்பே உறவுப்பெண் ஒருவரை ரகசிய திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நடிகர் திலீப் பதிவு செய்துள்ளார்.

தோழர் கோவை ஈஸ்வரன் ... தமிழக மனித உரிமை வரலாற்றில் மிக முக்கிய தடம் பதித்த....


தோழர் கோவை ஈஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியத்தில் தொடங்கியவராயினும் வாழ்வின் பெரும் பகுதியை அரசுகளால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி இயக்கங்களோடு குடும்ப சகிதம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்.
யாரைப் பற்றிச் சொல்லும் போதும் அவர்களின் சாதியைச் சொல்ல வேண்டியது இல்லை என்பது உண்மை தான் . ஆயினும் ஈஸ்வரன் அவர்களைப் பற்றிச் சொல்லும் போது. அதைச் சொல்வது அவசியம் என நினைக்கிறேன் . கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் முறைப்படி மந்திரம் ஓதிப் பூணூல் அணிந்து கொள்ளும் அசாரமான குடும்பத்தில் பிறந்தவர் .எனினும் முற்றிலுமாகத் தன்னைச் சாதி விலக்கம் செய்து கொண்டு வாழ்ந்தவர் . மிகச் சிறிய வயதில் பூணூல் அணிவிக்க வீட்டுக்கு வந்த புரோகிதர் , இவர் மந்திரம் சொல்ல இயலாததைக் கண்டு , " நீ பிராமணன் இல்லை . சூத்திரனுக்குத் தான் பிறந்திருக்கணும்" எனச் சபித்ததைச் சொல்லிச் சிரிப்பார் ஈஸ்வரன்.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

“ஏமாத்திட்டாங்க தம்பி...ரோகினி, ராகினி தியேட்டர்ல டூட்டி போட்டாய்ங்க,

Hariharasuthan Thangavelu: “சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?"
வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார்,
மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ரொம்ப தூரம், இங்கயே நில்லுங்க ! என நான் சொல்ல சொல்ல, "இல்ல தம்பி நான் நடந்தே போய்டுவேன்" என வேகத்தை குறைக்காமல் அதே விறுவிறு நடையை தொடர்ந்தார்.
‘அட, பெருசு சொன்னா கேக்கிறாரா பாரு!' என சலித்து நின்ற என்னை, என் மனசாட்சி மைக்ரோ நொடியில் வெளியே வந்து உலுக்கி அவர் வறுமையை மூளையில் உறைக்க வைத்தது. குற்ற உணர்வுடன் அவரை துரத்தி பிடித்தி “பஸ் காசு தரேன், பஸ்ல போங்க” என்றேன், என்ன நினைத்தாரோ என்னவோ
“ஏமாத்திட்டாங்க தம்பி, நல்லா ஏமாத்திட்டானுக! அதான் நடந்தே ஊருக்கு போறேன்" என்றார்.

எடப்பாடி கும்பல் சசிகலா கும்பலை அல்லது மோடி கும்பலை சந்திப்பது இயற்கையே ... குற்றவாளிகளே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி ... யார் யார் யாரெல்லாம் காரணம்?

தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமையில் அ.தி.மு.க கும்பல் நெளிகிறது. ஏ 1 இறந்த உடனேயே மன்னார்குடி கும்பல் சார்பாக சசிகலா இறக்கப்பட்டார். பிறகு காவிக் கும்பலின் ஆணைக்கிணங்க ஓபிஎஸ் கும்பல் தியானத்தோடு முக்கியது. பிறகு தினகரனை முன்னிறுத்தி எடப்பாடி பழனிச்சாமியை அரியணை ஏற்றினார்கள். அடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது மூலம் தினகரன் கனவு கலைந்து திகாரில் சப்பாத்தி சாப்பிடச் சென்றார்.
இந்த களேபரத்தை வைத்து இரு அணிகள் இணைப்பு என்ற உப்புச் சப்பில்லாத ஊசிப்போன விவகாரத்தை வைத்து ஊடகங்கள் வாரக்கணக்கில் அரட்டை மன்றங்களை நடத்தின. தினகரன் உள்ளே போனது நல்லதே என்றிருந்த திவாகரன் கும்பல் ஏதும் கிடைக்குமா என்று அலைந்தது.
சிறையில் தனக்கு கிடைத்த வசதிகளோடு அ.தி.மு.க கும்பலை கட்டுக்கு கொண்டு வர சசிகலா முயலும் நேரத்தில் அவரது சிறை ஊழல் வெளியே வந்தது. இதற்கிடையில் அ.தி.மு.க கோஷ்டிகள் அனைத்தும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாமரைக்கு கொடி பிடித்தன. ஓபிஎஸ், ஏபிஸ் கோஷ்டிகள் மாறி மாறி மோடியை தரிசித்து தாம்தான் பெரிய அடிமை என்பதை பீற்றினார்கள்.

ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்

வினவு :நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 30/-க்கு அதிகமாக வருமானம் உள்ள ‘பெரும் பணக்காரர்களுக்கு’ ரேசன் மானியத்தை இரத்து செய்தது மன்மோகன் சிங் அரசு. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைக்க, நேரடிப் பணப் பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையே கொஞ்சம் பெயரை மாற்றி கவர்சிகரமான முறையில், “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று அறிமுகப்படுத்தினார் மோடி.
னியார்மய-தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்து வரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் ஒழித்துக் கட்டுவதையே ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வெள்ளை நிற அட்டை, பச்சை நிற அட்டை என ரேசன் அட்டைகள் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் படிப்படியாக  ஒழித்துக்கட்டப்பட்டது.

நீதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்துகிறார் ஒரு நீதிபதி !

அனைத்து விதமான சட்டரீதியான போராட்டங்களைக் கையில் எடுத்துப் பார்த்து விட்டு கடைசியில் எவ்விதப்பலனும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, நீதிபதி ஸ்ரீவாஸுக்கு. கடைசியில் தற்போது வீதியில் இறங்கியிருக்கிறார் நீதிபதி ஆர்.கே.ஸ்ரீவாஸ்
/மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள உயர்நீதிமன்ற வாயிலில் தர்ணா போராட்டத்தை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கினார் மாவட்டக் கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஆர்.கே.ஸ்ரீவாஸ்.
கடந்த 15 மாதங்களுக்குள், தமக்கு நான்காவது முறை பணியிட மாற்றம் அளிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தத் தர்ணா போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் ஸ்ரீவாஸ். பதினைந்து மாதங்களுக்கு முன்பு மத்தியப்பிரதேசத்தின் தார் பகுதியில் பணியாற்றி வந்த ஸ்ரீவாஸுக்கு ஷாடொல் பகுதிக்கு இடமாற்றம் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்குள்ளாகவே அங்கிருந்து ஷோராவுக்கும், அடுத்த சில மாதங்களில் அங்கிருந்து ஜபல்பூருக்கும் மாற்றப்பட்டுள்ளார். இத்தகைய தொடர் பணிமாற்றத்தால் இவரது வாரிசுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகரில் படித்துவரும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

Karthikeyan Fastura · விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது மிக சுலபமே.

1. ta.wikipedia.org தளத்திற்கு சென்று "புதிய கணக்கை உருவாக்கவும்" என்ற லிங்க் பக்கத்தின் மேல் வலது மூலையில் இருக்கும். அதை க்ளிக் செய்து நிரப்புங்கள்.
2. உள்ளே நுழைந்ததும் இடது பக்கத்தில் "புதிய கட்டுரை எழுதுக" என்ற லிங்க் இருக்கும். அதை கிளிக்கினால் ஒரு பக்கம் வரும். அதில் நீங்கள் எழுத விரும்பும் கட்டுரையின் தலைப்பை இடவும்.
3. பொதுவான தலைப்பு என்றால் "வேண்டாம்" என்று மறுத்து என்ன தலைப்பில் எழுதலாம் அல்லது மொழிமாற்றம் செய்யலாம் என்று அதுவே பரிந்துரைக்கும். அல்லது நீங்களே புதிதாக ஒன்றை பரிந்துரைக்கலாம்
4. தலைப்பை தேர்ந்தெடுத்தவுடன் இடது பக்கம் ஆங்கில மூலமும், வலதுபக்கம் நீங்கள் டைப் பண்ணவேண்டிய பகுதியும் தோன்றும். ஆங்கில மூலத்தை படித்து அதற்கேற்ற தமிழ் கட்டுரையை நீங்கள் எழுதலாம்.
5. இது தான் ஆரம்பப்பணி. உங்கள் பங்களிப்பு அதிகரிக்க அதிகரிக்க இந்த குழுமத்தில் உள்ள பலரும் உங்களை தொடர்பு கொள்வார்கள். உங்களின் பொறுப்புகள் கூட வாய்ப்புண்டு.
6. மூத்த உறுப்பினர்கள் உங்களுக்கு இந்த கட்டுரையை எழுதலாம் என்று பரிந்துரைப்பார்கள். அதையும் முயற்சிக்கலாம். அல்லது உங்களது விருப்பமான பகுதியை எடுத்து எழுதலாம்.

பாசிசவாதம் .. இந்தியா ஒரு இந்து நாடு:இஸ்லாமிய படையெடுப்பாளரை வெட்டிய இந்து மகாராஜ்: உ.பி பாடத்திட்டக் கேள்விகள் இது…

1. இந்தியா ஒரு இந்து நாடு என்று கூறியவர் யார் ?
கேஷவ் பலிராம் ஹெட்கேவார் 2.சிகாகோவில் சுவாமி விவேகானந்தா  எந்த மதத்தை முன்னிருத்தினார் ?
இந்துத்துவா
3. மகாராஜ் சுஹேல்தியோ என்கிற மன்னர், வெட்டி சாய்த்த இஸ்லாமிய  படையெடுப்பாளர் பெயர் என்ன ?
சையத் சலார் மசூத் காஸி
4.ராம் ஜென்மபூமி எங்கிருக்கிறது ?
அயோத்யா
  1. ஹரிஜன்ஸ் என்று காங்கிரசும், காந்தியும் கூறியதை எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன ?
    Congress and Gandhi Have Done
    “சாமான்ய க்யான் பிரதியோகிதா – 2017” என்பது உத்தரப்ரதேச பள்ளிகளில் நடைபெறும் பயிற்சித் தேர்வுகளுக்காக அந்த மாநில அரசு அளித்துள்ள 70 பக்க பாட புத்தகத்தின் பெயர். அதில் இடம் பெற்றுள்ள பொது அறிவுக்கேள்விகள்தான் இவை.

வளர்மதி மீது குண்டர் சட்டம் ... சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணை


மாணவி மீது குண்டர் சட்டம் : கோர்ட் உத்தரவு!சேலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவி வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். அதே போல, தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக அந்த கிராம மக்கள் போராடி வருகின்றனர். கதிராமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெர்வித்தும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவி வளர்மதி, சேலம் கோரிமேடு பெண்கள் கல்லூரி முன்பு துண்டுப் பிரசுரம் விநியோகித்ததற்காக ஜூலை 13ம் தேதி சேலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி சேலம் மாநகர போலீஸார் மாணவி வளர்மதியைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதல்வர் - அமைச்சர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஆணை !

சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்டது தொடர்பான வழக்கில் பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் 4 பேருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைசெல்லும் முன் முதல்வர் பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்துவிட்டுச் சென்றார். மேலும் சிறையில் இருந்த சசிகலாவிடம் அமைச்சர்கள் சென்று ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 'ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிராக, தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஆலோசனை பெற்ற அமைச்சர்களையும், இவர்களை கண்டிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென மனுதாக்கல் செய்திருந்தார்.

தயாரிப்பாளர் Vs தொழிலாளர்: திரை மறைவில் திடீர் யுத்தம்!

tamilthehindu : 1967 – ம் ஆண்டில் திரைப்படத் தொழிலாளர்களுடைய நலனுக்காக தொடங்கப்பட்டதுதான் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி). இந்த அமைப்பு 50 – வது ஆண்டு கொண்டாட்டத்துக்குத் தயாராக வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் – பெப்சி தொழிலாளர்களுக்கு இடையே சம்பளப் பிரச்சினை தொடர்பாக வேலைநிறுத்தம் என்கிற நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.
திரைப்படத்துறையில் சங்கங்கள் உருவான பிறகு,கடந்த 25 ஆண்டுகளில் அவ்வப்போது பிரச்சினை எழுவதும், அது தொடர்பான வேலைநிறுத்தமும், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதும் தவிர்க்க முடியாததாகவே ஆகிவிட்டது.

கடற்கரை சாலையிலிருந்து சிவாஜி சிலை அகற்றம்

ராத்திரியோட ராத்திரியா மெரினாவுல இருந்த சிவாஜி சிலையை தூக்கிட்டானுங்க... இன்னும் சிவாஜி ரசிகருங்க மட்டும்தான் போராடலன்னு அவங்களுக்கு ஃஆபர் கொடுத்துருக்கானுங்க... சிலை உறுத்தலா இருக்குன்னு நினைச்ச ஜெயலலிதாவேதான் இப்ப இல்லையே எதுக்காக சிலையை தூக்கிட்டானுங்க?
 சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், 2006-ம் ஆண்டு, நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது. பின்னர், அந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என அகற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போது, 'சிவாஜி சிலையை அகற்றக்கூடாது' என்று சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அங்கிருந்து அகற்றபட்டால், அதே சாலையில் வேறு இடத்தில் வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு, சிவாஜி சிலையை அடையாற்றில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனக் கூறியது. இதற்குத் தடை கோரி தாக்கல்செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலையை அகற்ற தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தது.
இன்னைக்கு என் சிலையை தூக்கின அத்தனை பயலுவளும் அன்னைக்கு எங்காத்தா கண்ணகியோட சிலையை தூக்கின பயலுவள்தாய்ன் .. அன்னைக்கு விதி விளையாடி கண்ணகி சிலையை மறுபடியும் இருந்த இடத்திலேயே கொண்டார வச்சதே.....மறந்துட்டானுவளே...

புதிய 200 ரூபாய் தாள் தீபாவளிக்கு வெளியாகிறது

Mayura Akilan Oneindia Tamilடெல்லி: புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுக்களை தீபாவளி பண்டிகை முதல் புழக்கத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது ஆரஞ்ச் கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பணமதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டன. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன.
அதேபோல, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும், சில மாற்றங்களுடன் புதிய வடிவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஒரு ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று கூறப்பட்டது.

ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திரன் வருணன் வசிஷ்டர் அகஸ்தியர்.... ஆரிய மத சான்றுகள்

Venkat Ramanujam :வேதகால கடவுள்களாக இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றவர்களும், ரிஷிகளான வசிஷ்டர், அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர் ..
ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1600 அய்ச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு. 1400 அய்ச் சேர்ந்த மித்தாணி கல் வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்களின் பெயர்களும் ஒத்துப் போகின்றன..
ஆரியர்கள் யாகங்கள் செய்தனர், தீயை வணங்கினர், பசுவை வணங்கினர், குதிரையை வணங்கினர். காமதேனு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் ., யாகங்களைப் பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் உள்ளது
மறுக்க முடியாத #வரலாறு ஆவணங்கள் ..
Indra appears as the name of an arch-demon in the Zoroastrian religion, while his epithet Verethragna appears as a god of victory.
The Avestic Daeva is the natural complement of Ahura. Originally 'the Shining One', this word retain its pristine purity practically throughout the history of Indian languages.
But in the Avesta the word is never used in its old signification of 'Deity', even in the earliest portions, and in the later Avesta it invariably means 'Demon'.
In the Veda however, we find the word used a couple of times as an epithet of the demons. Of individual deities there are but few that have suffered this inversion.

திவ்யா பாரதியின் உயிருக்கு ஆபத்து !உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்து விசாரணை செய்யவேண்டும்!


ஒருபுறம்,
தமிழகத்தில் அரசியல்
பெண் செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம் முதல் ஆட் கடத்தல் வழக்குகள் வரை , பினாமி பாஜக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் தொடுத்துக் கொண்டிருக்கின்றது.

மறுபுறத்தில், பாஜக வுடன் கூட்டு சேரும் போதையில் உள்ள PT கிருஸ்ணசாமியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களாக பாலியல் வக்கிரத்துடன் கொலை மிரட்டல்களை தொலைபேசியிலும், முகநூலிலும் திவ்யாவிற்கு விடுத்து வருகின்றனர். இது வெறுமனே Character assassination என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
எந்த தூய்மைப் பணியாளர்களுக்காக உரிமைக்குரலை #கக்கூஸ் திவ்யா எழுப்பினரோ, அவர்களையே கடத்தியதாக தமிழக காவல்துறையே பொய் வழக்குப் போடும் என்றால்... "கூலிப் படை வைத்து என்னைக் கொலை செய்து விடுவார்கள்" என திவ்யா அச்சப்படுவதில் முழுமையான நியாயம் இருக்கிறது.

நீதிமன்றத்தில் பொய் உரைத்த கிர்ஜா வைத்தியநாதன்? ... பாவம் இவளொரு பாப்பாத்தி

பொய்யான ஒரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கிரிஜா துணிந்தார் என்றால் அவரது தலைமைச் செயலர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ? அவர் உண்மையை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தால், அதிகபட்சம், அவர் தனது தலைமைச் செயலர் பதவியை இழந்திருப்பார். வேறு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பார். இதைத் தவிர ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை எந்த அரசும் எதுவும் செய்து விட முடியாது.
jeyaganthan-paavam-ival-oru-pappaththi
maxresdefault
.savukkuonline.com தலைப்பை பார்த்ததும் கொதித்தெழும் பக்தாள் கவனத்துக்கு.  இந்த வாக்கியம் என்னுடையது அல்ல.   எழுத்துச் சிற்பி ஜெயகாந்தன் 1979ம் ஆண்டு எழுதிய நாவலின் தலைப்பே இது.  என்னை செதுக்கிய ஜெயகாந்தனின் தலைப்பை பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் இந்திய வெளியுறவுப் பணியான ஐஎஃப்எஸ் மற்றும் இதர சில பணிகளுக்கான தேர்வு. இதல் யாருக்கு ஐஏஎஸ் கிடைக்கும் என்பது ஒருவர் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படும். ஐஏஎஸ் பதவியைத்தான் அனைவரும் விரும்புவார்கள்.   ஏனென்றால் அந்த பதவியில்தான் மக்களோடு நேரடி தொடர்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் அரசின் கொள்கை முடிவுகளை அமல்படுத்த முடியும். ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், மீண்டும் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வெற்றி பெற்ற பல கதைகளை நீங்கள் இணையத்தில் காணலாம்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்துத்வா பிரசாரம்

marx.anthonisamy: கிருஷ்ணசாமியின் சமீபத்திய நகர்வுகளை, "ஒடுக்கப்பட்ட சமூகம் தன் மீது சுமத்தப்பட்ட சாதீய இழிவுகளைக் களையும் ஆவேசம்" என்கிற ரீதியில் சிலர் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் இன்னொரு பக்கமாக ஆவணப் படம் எடுத்த திவ்யா மீது இவரது ஆட்கள் ஏவும் ஆபாசத் தாக்குதல்களையும் அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் உண்டு என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். கிருஷ்ணசாமியின் இந்த நகர்வு அப்பட்டமாக பா.ஜ.கவை, இந்துத்துவத்தை, பாசிசத்தை நோக்கிய நகர்வு என்பதுதான் அது.
நீட் தேர்வை ஆதரித்து போராட்டம் நடத்தி மோடி - அமித்ஷா கும்பலை குளிரூட்டப் போகிறாராம்.
"போராட்டம்" அறிவித்துள்ளார்.
யாரை எதிர்த்து இந்தப் போராட்டம்?
ஒட்டுமொத்தமான தமிழ் மக்களை எதிர்த்து.
மருத்துவப் படிப்பின் தரம் குறைந்து விட்டதாம். இந்தக் காரணத்தைச் சொல்லித்தான் இப்போது இவர் எந்த வாலைப் பிடித்துத் தொங்குகிறாரோ அந்த வாலுக்குரிய ஆர்.எஸ்.எஸ் இட ஒதுக்கீட்டையே எதிர்க்கிறது.
இனி கிருஷ்ணசாமி 'மெரிட்'டின் பெயரால் இட ஒதுக்கீட்டையும் எதிர்ப்பாரா?

சேலத்தில் இந்து முஸ்லிம் மோதல் பதட்டம் (படங்கள்)

சேலம் மாநகரில் உள்ள கிச்சிப்பாளையம் கரீம் காம்பவுண்ட் பகுதியில், இந்து கோவில் அமைக்க முயற்சி செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் முஸ்லீம் அமைப்பினரும், கோயில் கட்டியே தீர வேண்டும் என இந்து முன்னனியினரும் கூடியதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் சமாதானம் பேசி வருகின்றனர்.

“நீங்கள் வெர்ஜினா?”: பீகார் மருத்துவ கல்வி நிறுவனம் விண்ணப்பத்தில் கேட்கிறது!

thetimestamil.com   பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஊழியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் திருமணம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதில், திருமணமாகாதவரா? கணவர்/மனைவியை இழந்தவரா? கன்னித்தன்மை இழக்காதவரா? என கேட்கப்பட்டுள்ளன. மேலும் எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் போன்ற கேள்விகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இது செய்தி ஊடகங்களில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

புதன், 2 ஆகஸ்ட், 2017

எரியும் வீட்டில் / தமிழகத்தில் புடுங்கும் எடப்பாடியே பதவி விலகு ... மக்கள் மன்றத்தில் ...

மார்ட்டின் சந்தர் கிங் : பழனிச்சாமி அண்டு கோவுக்கு... உமக்கு மோடி கேங்கை எதிர்க்கும் வலிமையோ பலமோ இல்லை. கன்வின்ஸ் பன்ற அளவுக்கு உனக்கு திறமையோ , மோடி நல்ல மனம் கொண்டவரோ இல்லை. தயவு செய்து விலகிடு... பல பேரின் டாக்டர் கனவை தகர்த்து நீ பதவியில இருந்து அப்படி என்ன ஆவப்போவுது.. சட்டமன்றம் ஓட்டளித்த ஒரு சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் கையெழுத்து வாங்க துப்பில்ல... இப்படி ஒரு எரியும் வீட்டில் இருந்து கிடைச்சத சுருட்டி அப்படி என்ன வாழ்க்கை வாழ்ந்துடப் போற...?? போ... போய் ஓய்வெடு... இருக்கற கொஞ்ச நஞ்ச மரியாதையை காப்பாத்திக்கோ .. பெரிய பிரச்சனைகளை சந்திக்க மட்டும் அல்ல/ ஒரு நியூசா கேக்கக் கூட மனவலிமையில்லாத ஆளுங்க தான் நீயும் உன் அமைச்சரவை சகாக்களும்... இடத்தை காலி பன்னுங்க... தேர்தலுக்கு வழிவிடுங்க.. #DamnItNeet

நிதிஷ் பதவியை பறிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணை...

 நிதிஷ்,Nitish,வழக்கு,Case, விசாரணை,  Investigation,சுப்ரீம்கோர்ட்,Supreme Court,புதுடில்லி,New Delhi, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்,Bihar Chief Minister Nitish Kumar,  ஐக்கிய ஜனதா தளம், United Janata Dal, வழக்கறிஞர், Advocate,  எம்.எல்.சர்மா, ML Sharma, எம்.எல்.சி., MLC, காங்கிரஸ், Congress, சீதாராம் சிங்,Sitaram Singh, சி.பி.ஐ., CBI, நீதிபதிகள், Judges, தீபக் மிஸ்ரா,Deepak Mishra,அமிதவ ராய் , Amitava Rai, எம்.எம்.கன்வில்கர் , MM Gunwiller புதுடில்லி:பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை, எம்.எல்.சி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு,விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு: பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் நிதிஷ் குமார், எம்.எல்.சி., எனப்படும்,மாநில சட்ட மேல் சபை உறுப்பினராக உள்ளார். இந் நிலையில், நிதிஷ்குமார் மீதுகொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி, எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

விவசாயியை வாழவைக்க குடும்பமாய் திரள்வோம் !

வருகின்ற ஆகஸ்ட் – 5, 2017 அன்று மக்கள் அதிகாரம் தஞ்சை நடத்தவிருக்கும் மாநாட்டை விளக்கி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
விவசாயியை வாழவிடு ! விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு !  கடந்த ஒரு மாத காலமாக தெருமுனைக் கூட்டங்கள், பேருந்து, கடைவீதி, ஆட்டோ, வேன் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களை மாநாட்டிற்கு அழைக்கும்  விதமாக மக்கள் அதிகாரம் தோழர்கள் செயல்பட்டு வருகின்றனர். மாநாட்டு செலவுகளுக்காக மக்கள் நிதி அளிப்பதுடன், கட்டாயம் குடும்பத்துடன் கலந்து கொள்வதாகவும் தெரிவித்து வருகின்றனர்.மக்கள் அதிகாரம்,திருச்சி.

கூவத்தூர் கும்மாளத்தில் கொடி பிடித்த பாஜக பெங்களூருவில் பொங்குகிறது

குஜராத்திலிருந்து நாடாளுமன்ற மேலவைக்கு பா.ஜ.க தலைவர் அமித்ஷா மனு தாக்கல் செய்கிறார் என்றதுமே “பேரக் குதிரை”கள் பொங்கி எழுந்து விட்டன. வரிசையாக காங்கிரசு எம்.எல்.ஏ -க்கள் தாமரையில் தஞ்சம் அடையும் காட்சியைக் கண்டு கதி கலங்கிய காங்கிரசுக் கட்சி மிச்சமிருக்கும் 42 சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பாக பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தது.
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ -க்கள் தங்கியுள்ள ஈகெல்டான் ஃகால்ப் ரிசார்ட்டில் நடைபெறும் சோதனையையொட்டி காவல் காக்கும் பாதுகாப்புப் படையினர்
பெங்களூரு அருகே ராமநகரா மாவட்டத்தில் இருக்கும் ஈகெல்டான் ஃகால்ப் ரிசார்ட்டில்தான் மேற்படி உறுப்பினர்கள் சர்வ வசதிகளுடன் தங்கியிருக்கின்றனர்.  தற்போது அந்த விடுதியில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதித்து வருகிறது.

கக்கூசுக்கு இரட்டைவேடம் போடும் சுவச் பாரத் !


தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமானதாக்க வேண்டுமென்கிற கடமை உணர்ச்சியில் ஏற்கனவே இருந்த கழிவறைகளையும் தூய்மை இந்தியா திட்டத்தினுள் கடத்தி வந்துள்ளனர் அதிகாரிகள்.
கிராமத் தலைவர் எங்கள் வீட்டில் இருக்கும் சிதைந்து போன கழிவறையை சரிப் படுத்தச் சொல்லியிருக்கிறார். ஆனால், நான் முடியாதென்று சொல்லி விட்டேன். ஏன் நான் செய்ய வேண்டும்? ஏன் அவரே செய்யக் கூடாது? அப்புறம் சில என்.ஜி.ஓ பணியாளர்கள் வந்தனர். வெளியே மலம் கழிப்பவர்கள், அவர்கள் கழிக்கும் பீயை அவர்களே தின்ன வேண்டும் எனச் சொன்னார்கள். யார் பீயை தின்ன வேண்டும்? நானா நீங்களா என்று கிராமத் தலைவரைப் பார்த்துக் கேட்டு விட்டேன். யார் நேர்மையின்றி இருப்பது, நானா நீங்களா? நான் வெளிப்படையாகவே கேட்டு விட்டேன்” என்கிறார் ராஜ்ராணி.
அது மத்னா கேடா கிராமம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் தான் மத்னா கேடா. பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் “திறந்தவெளி கழிப்பிட ஒழிப்பு” (Open Defecation Free – ODF) நடவடிக்கையின் கீழ் மத்னா கேடா திறந்தவெளிக் கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.