சனி, 27 அக்டோபர், 2018

BBC :ரணில் பதவி நீக்கத்துக்கு இந்தியாதான் காரணம்? கப்பல் தளத்தை இந்தியாவுக்கு தர மறுத்தமையா ?

கொழும்பு துறைமுகத்தில் மணலை அகற்றும் மண்வாரி கப்பல்.கொழும்பு மேற்கு கப்பல் தளத்தை இந்தியாவுக்குத் தருவதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது பிரதமர் மாற்றத்துக்கான தாக்கத்தை செலுத்திய காரணங்களில் ஒன்று என இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த எம்.பி. நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திர கட்சி சார்பில் கொழும்புவில் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இவர், ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன-வை கொல்வதற்கான முயற்சி குறித்து உரிய விசாரணை முன்னெடுக்கப்படாததும் அக்கறை செலுத்தாதும் இந்த மாற்றத்துக்கான காரணிகளில் மற்றொன்று என்று நிமல் குறிப்பிட்டார்.
இந்த மாற்றம் குறித்து வெளிநாடுகளின் பார்வை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது வெளிநாட்டு தூதர்களுக்கு இதுபற்றி ஜனாதிபதி விளக்குவார் என்று சுதந்திர கட்சியின் மற்றொரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீரெட்டி. ‘மீ டூ’ பற்றியும் அவரது புகார் குறித்தும் என்ன கூறுகிறார் ?

நக்கீரன்: தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர்மீது பாலியல் புகார்கள் கூறிவந்த
ஸ்ரீரெட்டியிடம் ‘மீ டூ’ பற்றியும், அவரது புகார் மீதான நிலை குறித்தும் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்,
பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி சினிமாவில் இருக்கும் பெண்களே தவறாக பேசுகிறார்களா?</ சிலர் இதை வியாபாரமாக செய்கிறார்கள், நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். விபச்சாரமாக செய்கிறார்கள். நான் அனைவரையும் கூறவில்லை, ஒரு சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன். சிலர் இப்போதெல்லாம் யாரையும் அழைப்பதில்லை. நாங்கள் அந்த பயத்தை உண்டாக்கியுள்ளோம். இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் ஃபோன்கூட செய்வதில்லை. அதை ரெக்கார்ட் செய்துவிடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உண்டாகியுள்ளது. இதனாலும்கூட சிலர் மீ டூ விற்கு எதிராக பேசுகிறார்கள்.
மீடூவில் பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என நினைக்கிறீர்களா?
பத்து வருடங்களுக்கோ, பதினைந்து வருடங்களுக்கோ முன்பு நடந்திருந்தாலும் அதுவெல்லாம் பொருட்டே கிடையாது. வலி வலிதான் அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. எனது வலியை தீர்மானிக்க நீங்கள் ஆளில்லை. யாராலும் எனது வலியை உணரமுடியாது. இதுதான் உண்மை.

விபத்தில் சிறுமிக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு .. மேல்முறையீடு ரூ.52 லட்சம் .. உயர் நீதிமன்றம் உத்தரவு.. இன்சுரன்ஸ் கம்பனி அதிர்ச்சி

tamilthehindu :சாலை விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு ரூ. 19 லட்சம் இழப்பீடு
வழங்க உத்தரவிட்ட கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்துக்கு வந்த இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 52 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் சாலையோரம் சென்று கொண்டிருந்த 2-ம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமி மீது தனியார் பேருந்து ஏறிச் சென்றதில், அவர் தன் வலது காலை இழந்து விட்டார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்கும்படி, திருப்பூர் விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து 19 லட்ச ரூபாயை வழங்கும் உத்தரவை உத்தரவை பரிசீலிக்க கோரி ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ஹர்திக் பட்டேல் : இப்போது ஒன்று சேராவிட்டால் பிறகு தேர்தலே நடக்காது!

இப்போது ஒன்று சேராவிட்டால் பிறகு தேர்தலே நடக்காது!மின்னம்பலம்: “வருகிற மக்களவைத் தேர்தலில் அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்று சேராவிட்டால், 2019 தேர்தலுக்குப் பின் இனி தேர்தலே நடத்த முடியாத சூழ்நிலை உண்டாகிவிடும்” என்று குஜராத் மாநில சமூக ஆர்வலரும், பட்டிதார் சமூகத்துக்காக போராட்டம் நடத்தியவருமான ஹர்திக் பட்டேல் எச்சரித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சிக்காக இன்று (அக்டோபர் 27) மும்பை வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பட்டேல்,
“2019 மக்களவைத் தேர்தல் என்பது பிரதமர் மோடிக்கும் நாட்டின் விவசாயிகளுக்கும் இடையே நடைபெறுகிறது. வரும் தேர்தலை ஒட்டி மோடிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் நானும் கலந்துகொள்வேன்.

கட்சியை ஆரம்பிக்க குருமூர்த்தி தொடர்ந்து ரஜினிக்கு அழுத்தம்

டிஜிட்டல்  திண்ணை:  கூட்டணி... ரஜினி சொல்லும் நிபந்தனை!
மின்ன்னம்பலம்: ”ரஜினிக்கும் திமுகவுக்கும் இடையே நடக்கும் யுத்தம் முரசொலி விமர்சனம் மூலம் வெளிப்படையானதாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவும், ரஜினியும் உடன் இருந்தால் தேர்தலை எதிர்கொள்ள சரியாக இருக்கும் என கணக்குப் போடுகிறது பிஜேபி. அதற்கான அழுத்தம் ரஜினிக்கும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக தொடர்ந்து ரஜினியோடு பேச பல முயற்சிகளை செய்து வருகிறது பிஜேபி. ரஜினியைத் தொடர்பு கொண்டு பேசும் குருமூர்த்தி அவரை சந்திக்க பத்து முறை அப்பாயின்மெண்ட் கேட்டால், ஒருமுறைதான் ரஜினி வரச் சொல்கிறாராம். பல நேரங்களில், தவிர்த்தே வருகிறாராம். ‘அதனால என்ன போன்லயே சொல்லுங்களேன்...’ என்றும் கேட்கிறாராம் ரஜினி.
தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் இதை சொல்லியிருக்கிறார் ரஜினி. ‘எப்படியாவது என்னை அவங்க பக்கம் இழுத்துப் போடணும்னு கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. கூட்டணியெல்லாம் நான் யோசிக்க கூட இல்லை. தனிக்கட்சி அவ்வளவுதான். ஏ.சி.சண்முகம் கூட என்கிட்ட சொன்னாரு. ஆனால், கூட்டணி என பேசினால் கட்சியே வேண்டாம்னு சொல்லிட்டேன்.

இலங்கை ..தமிழ், முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு..நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து மைத்ரிபால ... குதிரை பேர உத்தி?

மனோ கணேசன்
ரிஷாத் பதியுதீன்
சம்பந்தர்
BBC :இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வை பதவியில் இருந்து
நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அதிரடியாக வெள்ளிக்கிழமை நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா. ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரமசிங்க-வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பழனி.திகாம்பரம்
ரவுப் ஹக்கீம்
அதைப் போலவே 7 எம்.பி.க்கள் வைத்துள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார். i>தற்போது கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பில் இவர்கள் இதைக் கூறினர்.
>என்ன நடந்தது</ இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். தமது கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அரசியல் செய்து, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உதவியோடு ஜனாதிபதி பதவிக்கு வந்தார் அவர்.

ரஜினியை சமாதானம் செய்ய முயன்ற சபரீசன்?

ரஜினியை சமாதானம் செய்ய முயன்ற சபரீசன்
minnambalam :ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்காத நிலையிலேயே, அவரைக் குறிவைத்து விமர்சன ராக்கெட்டுகளை ஏவ ஆரம்பித்துள்ளது திமுக. நேற்று (அக்டோபர் 26) வெளிவந்த திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில், சிலந்தி என்ற புனைப்பெயரில் ரஜினியைத் தாக்கி எழுதப்பட்ட விஷயம்தான் நேற்று இரவு தொலைக்காட்சி விவாதங்கள் வரை முக்கியப் பங்கு வகித்தன.
இந்நிலையில் முரசொலியில் வந்த ரஜினியைப் பற்றிய இந்த விமர்சனம் கட்சியின் தலைவர் ஸ்டாலினை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், இதனால் ஸ்டாலின் சார்பில் நேற்று ஒரு தூதர் ரஜினியிடம் பேச முயன்றார் என்ற தகவல்தான் அரசியல் அரங்கில் அடுத்த கட்ட பரபரப்பை தோற்றுவிக்கப் போகிறது.

இலங்கை .. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் .. Sri Lanka plunged into a constitutional crisis.. nytimes.com

minnambalam :இலங்கையின் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, புதிய
பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷேவை நியமனம் செய்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா. நேற்று (அக்டோபர் 26) இரவு நடந்த இந்த நியமனம், இலங்கை அரசியலில் நிலையற்ற தன்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், ‘இலங்கைக்கு இப்போதும் நான் தான் பிரதமர். அதிபர் சிறிசேனாவின் செயல் இலங்கை அரசியல் சாசனத்துக்கு முரணானது. சட்ட விரோதமானது’ என்று ரனில் கூறியுள்ளார். இதனால் இப்போதைக்கு இலங்கை இரு பிரதமர்களைப் பெற்று அரசியல் சுனாமியில் சிக்கியுள்ளது.
நேற்று இரவு திடீரென கொழும்பில் இருக்கும் அதிபர் மாளிகையான அளறி மாளிகைக்கு வந்தார் அந்நாட்டின் முன்னாள் அதிபரான ராஜபக்‌ஷே. அவரோடு அவரது இலங்கை மக்கள் முன்னணியின் பிரமுகர்களும் வந்திருந்தனர். சில நிமிடங்களில் ராஜபக்‌ஷேவுக்கு நாட்டின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் சிறிசேனா. இந்தத் தகவல் அரசு டிவியில் லைவ் ஆக ஒளிபரப்பான பிறகுதான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
2005 முதல் 2015 வரை பிரதமராகவும், அதிபராகவும் இருந்த ராஜபக்‌ஷேவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும், அந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் நடந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடும் போரில் முக்கியப் பங்கு வகித்தவராகவும் இருந்தவர் சிறிசேனா. 2015 அதிபர் தேர்தலில் ராஜபக்‌ஷே தோல்வி முகத்தில் இருந்த நிலையில்... சிறிசேனா தனியாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அதன் பின் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி மொத்தமுள்ள 225 இடங்களில் 106 இடங்களில் வென்றது. இதையடுத்து சிறி சேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசு (unity government) என்ற பெயரில் 2015-ம் ஆண்டு அரசமைத்தனர். ரனில் 2015ல் பிரதமராக பொறுப்பேற்றார். .

அம்பானிகள் மரியாதையான குடும்பம் என்பதால் ஒப்பந்தம் .. பிரான்ஸ் ரபேல் சி இ ஒ

மின்னம்பலம்: ரஃபேல் விவகாரத்தில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை
என்று தெரிவித்துள்ள டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் ட்ராபியர், இந்த விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கூறியுள்ளார்.
ரஃபேல் – விசாரணைக்குத் தயார்: டசால்ட்ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக டசால்ட் சி.இ.ஓ எரிக் ட்ராபியர் அளித்துள்ள பேட்டியை எக்னாமிக் டைம்ஸ் ஊடகம் நேற்று (அக்டோபர் 26) வெளியிட்டுள்ளது. அதில், “ஹாலண்டே அதிபராக இருந்த காலத்திலோ, தற்போதைய இந்திய பிரதமர் மோடி காலத்திலோ இது முடிவானது அல்ல. நீண்ட நாட்களாக நாங்கள் ரிலையன்ஸ் உடன் பேசி வருகிறோம் ரிலையன்ஸ் நிறுவனத்தை 2011-2012ஆம் ஆண்டுகளிலேயே நாங்கள் கண்டுகொண்டோம்.
அம்பானிகள் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடன் டசால்ட் ஒப்பந்தம் செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.3000 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தவறான தகவல். ரூ.850 கோடிக்குத்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று எரிக் விளக்கமளித்துள்ளார்.

கேரளா அரசு கலைப்பு ? மிரட்டும் உயர்நீதிமன்றம் .. சபரிமலை ...கைது செய்தால் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்

tamiltehindu : சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்கள் என்ற போர்வையில் சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள், மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று கேரள அரசை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது உள்ள பெண்கள் செல்ல அனுமதியில்லை எனும் பாரம்பரிய நடைமுறை நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், கோயில் திறந்தபின் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பிவிடப்பட்டனர்.

ராகுல் காந்தி கைது ..அலோக் வர்மாவை நீக்கியதற்கு கண்டனம்: டெல்லி சி.பி.ஐ. அலுவலகம் முன் போராட்டம்

தினத்தந்தி :சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நீக்கப்பட்டதை கண்டித்து,
டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் முன் தொண்டர்களுடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். புதுடெல்லி, சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் லஞ்சப் புகார் கூறி மோதலில் ஈடுபட்டனர்.< இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. பின்னர் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு உள்ளன. குறிப்பாக ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காகவே சி.பி.ஐ. இயக்குனர் மாற்றப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

தலையில்லாத ராஜலக்ஷ்மியின் உடல் துடித்தது , சேரி படுகொலைக்கு நீதிக்குரல்கள் வருவதில்லை. ஊடகங்கள் வருவதில்லை. அதிகாரிகள் வருவதில்லை.

Vincent Raj : தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது…
வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பற தேவிடியா முண்ட என்று
அரிவாளால் வெட்ட முயல, அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு என் மகளை ஒன்றும் செய்துவிடாதே என்று கெஞ்சுகிறர் சின்னப்பொண்ணு. தள்ளிப்போடி பறத் தேவிடியா என்று சொல்லிக் கொண்டே ராஜலெட்சுமியின் பின்கழுத்தில் ஓங்கி வெட்டுகிறான் தினேஷ்குமார். வெட்டப்பட்டு ரத்த கசிந்த நிலையில் கிடந்த ராஜலெட்சுமியை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தவன் மறுபடியும் ஓங்கி அரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தோட்ட வீட்டிற்கு செல்கிறான். அங்கிருந்த தினேஷ்குமாரின் மனைவி சாரதாவும் தம்பி சசிக்குமாரும் இவளது தலையை ஏன் இங்கே கொண்டு வந்தாய்? ரோட்டில் வீச வேண்டியதுதானே என்று கூற ஆத்தூர் – தளவாய்பட்டி சாலையில் அந்த தலையை வீசிவிட்டு தினேஷ்குமாரும் சாரதாவும் சசிக்குமாரும் ஒரு வாகனத்தில் ஏறி காவல்நிலையம் செல்கின்றனர்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

சேலம் ராஜலக்ஷ்மி கொலைக்கு நியாயம் கேட்டு சபரிமாலா உண்ணாவிரத போராட்டம் . உடனே தூக்குதண்டனை வழங்....

Subash Chandra Bose Rajavelan: ராஜலக்ஷ்மி கொடுரமான முறையில் கொலை செய்தவனுக்கு ஜந்து நாளில்
விசாரணை நடத்தி தூக்கு தண்டனை வழங்கவேண்டுமென நீட் போராளி சபரிமாலா ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாணவி ராஜலக்ஷ்மி கொடூர கொலைக்கு நீதிகேட்டு வள்ளுவர்கோட்டத்தில் தனியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். நீயூஸ் 7 தமிழுக்கு பேட்டி யளித்த சபரிமாலா ஜெயகாந்தன், தேனி ராகவி கொலை செய்ய பட்டு 30நாட்களுள் சேலத்தில் பள்ளி மாணவி ராஜலக்ஷ்ம கொலைசெய்யபட்டு இருக்கிறார். தொடர்ந்து இது போன்று அரங்கேற்றபடும் கொடுரதிற்கு தீர்வே வருவதில்லைஎன்றும் எல்லோரும்இதை வெறும் நிகழ்வாய் பார்த்து நகருவது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.
;பெண்கள் அமைப்புகளும் சமூக நீதி இயக்கங்களும் நாட்டில் என்ன செய்து கொண்டிருகிறார்கள் யென கேள்வி எழுப்பி யுள்ளார்.ஆட்சியாளர்கள் ஆட்சியை தக்கவைக்க முழு கவனம் செலுத்துவதை போல் சிறிதளவாவது பெண் குழந்தைகள் உரிமைகளை காக்க முன் வரவேண்டுமென்றார்..

ரணில் விக்கிரமசிங்க : நான்தான் பிரதமர்- என்னை நீக்க சிறிசேனாவிற்கு அதிகாரம் இல்லை

UNP has 106 seats on its own with just seven short of the majority. 
Rajapaksa and Sirisena combine has only 95 seats and is short of a simple majority
இலங்கைக்கு நான்தான் பிரதமர்- என்னை நீக்க சிறிசேனாவிற்கு அதிகாரம் இல்லை- ரணில் அதிரடி :  எம்மிடம் அறுதி பெரும்பான்மை எம்பிக்கள் ( 106) உள்ளனர் மகிந்தா கட்சியிடம் 95 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்!  
நியுஸ் 18 ::இலங்கை: இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ராஜபக்சே தோல்வியடைந்தார். இலங்கை விடுதலை கட்சி (SLFP), ஒருங்கிணைந்த தேசிய கட்சி (UNP) இணைந்து ஆட்சி அமைத்தது. சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்செ கட்சி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிசோன கட்சி அரசில் இருந்து இன்று திடீரென விலகியது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா. உடனடியாக அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் ரணில் விக்ரமசிங்கே தனது கட்சி ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

உயர்சாதி பனியாவும் பார்ப்பனரும் சேர்ந்து கட்டிய மாயக்கோட்டை தான் 2ஜி ஊழல் குற்றச்சாட்டும் வழக்கும்.

Krishnavel T S  : ஸ்பெக்ட்ரம் நாயகன்
இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆண்டிமுத்து ராசா அவர்களின் பிறந்த நாள். அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்கள் தொண்டு செய்ய வாழ்த்துகள்.
நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகும் இன்றும் சிலர் திமுக வழக்கம் போல விஞ்ஞான முறையில் ஊழல் செய்து தப்பித்து விட்டார்கள் என்று உளறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
விஞ்ஞான முறையில் இருப்பதை இருக்கிறது இல்லாதததை இல்லை என்று தான் நிருப்பிக்கமுடியும், அது எப்படி நடந்த குற்றத்தை நடக்கவில்லை என்று நிருபிக்க முடியும் என்று, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கை எதோ அவரது குடும்பத்தில் சொத்து தகராறு என்பது போல அந்த வழக்கை ஜெயலலிதா சொத்து வழக்கு என்று கடைசிவரை சொல்லிவந்த திருட்டு ஊடகங்கள் தான் விளக்க வேண்டும்
2ஜி ஸ்பெக்ட்ரம் என்னதான் நடந்தது
ராசாவின் காலத்துக்கு முன் அரசாங்கம் ஏதாவது ஒரு புதிய தொழில் நுட்பத்துக்கு லைசன்ஸ் வழங்குவது எப்படி என்றால், முதலில் முன் அனுபவம் உள்ள நிறுவனங்களை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க சொல்வார்கள், உடனே டாட்டா அம்பானி போன்ற பழம் பெருச்சாளிகள் விண்ணபிப்பார்கள்,

மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமர் ஆக பதவி ஏற்றார் .... சற்று முன் அறிவிப்பு ..


Lingam A Stamil.news18.com  : இலங்கை அரசியலிலும் அரசாங்கத்திலும் திடீர் திருப்பம் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். இதனை அடுத்து, அந்த பதவியில் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி இன்று தீடீரென உடைந்தது. இதனை அடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவராகவும் முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்திபால சிறீசேனா முன்னிலையில் ராஜபக்சே அவர் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார். இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்திய ராஜபக்சே, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த் குறித்து திமுக கடும் தாக்கு? முரசொலி கூறும் அந்த கறுப்பு ஆடு?

ndtv.com-vinoth-ravi : "யார் அந்த பிளாக் ஷீப்? ரஜினிகாந்த் குறித்து திமுக கடும்
தாக்கு!" 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது என்ற ரஜினிகாந்தின் கருத்திற்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ரஜினிகாந்தை திமுக கடுமையாக சாடியுள்ளது. மேலும் அதில், நடிகர் ரஜினிகாந்த் சில நபர்களின் கைகளில் கைப்பாவையாகவும், மற்றும் வகுப்புவாத சக்திகளின் ஆதரவிலும் உள்ளதாக அவர் மீது திமுக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக அவரது ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்” என்று நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.

மோடியின் மேக்கப் பெண்ணுக்கு ரூ.15 லட்சம் சம்பளம் .. வெளக்குமாத்துக்கு வெளிச்சம் ?

வெப்துனியா சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு பெண் மேக்கப் போடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனையடுத்து ரூ.15 லட்சம் சம்பளம் கொடுத்து பிரதமர் மோடி அந்த பெண்ணை மேக்கப் போட நியமித்துள்ளதாக வதந்திகள் பரவியது. உண்மையில் அந்த பெண், பிரதமரின் மெழுகு சிலை தயாரிக்க அவரை அளவெடுக்க வந்த பெண் என்றும், ஒருசிலர் மேக்கப் போடும் பெண் என தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.லண்டன் அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை கடந்த 2016ஆம் ஆண்டு வைக்கப்பட்ட போது அளவெடுக்க வந்த பெண் தான் புகைப்படத்தில் உள்ள பெண் என்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பின்புலம் கொண்ட ஒருவர் சிபிஐ இயக்குநர் ..

சிபிஐ இயக்குநர் ராவின் இந்துத்துவப் பின்னணி!மின்னம்பலம்: மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐக்கு அவசர அவசரமாக இயக்குநராக 23ஆம் தேதி இரவு நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பற்றிய பல்வேறு புலனாய்வுத் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக இருவரையும் நீண்ட விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவில் ஆந்திராவைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்கிற அதிகாரியை சிபிஐ இயக்குநராக நியமித்தது.
இவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, நாகேஸ்வர ராவ் முக்கியக் கொள்கை முடிவுகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

CBI அலோக் வர்மா ....2 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு


BBC :இந்தியாவின் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இது தொடர்பான புலனாய்வை இரண்டு வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிவிசி எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் மேற்பார்வையில் இந்த விசாரணை நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
மேலும், இடைக்கால சிபிஐ இயக்குநரான நாகேஸ்வர ராவ் அப்பொறுப்பில் தொடர்வார் என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஆனால் அவர் கொள்கை ரீதியான முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மத்திய அரசுக்கும் இந்த ஒட்டுமொத்த விவகாரம் குறித்து விளக்கம் கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - டிடிவி தினகரன் தரப்பு முடிவு

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - டிடிவி தினகரன் தரப்பு முடிவு மாலைமலர்: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
மதுரை: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த 18 பேரிடமும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மதுரை மாட்டுத்தாவணி, ரிங்ரோட்டில் உள்ள ஓட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார். அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

பிரகாஷ் ராஜ் : மீ டூ புகார் கூறும் பெண்களின் வாயை அடைக்க முயற்சி

மின்னம்பலம் :மீ டூ புகார் கூறும் பெண்களின் வாயை அடைக்க முயற்சி: பிரகாஷ்ராஜ்தற்போது பெண்கள் மீ டூ மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர்கள் அர்ஜுன், தியாகராஜன், ராதாரவி, இயக்குநர் சுசி கணேசன் ஆகியோர் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு கூறும் பெண்களுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ், சித்தார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களே இருக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ், ஸ்ருதி ஹரிகரன் புகாரின்பேரில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “திரைப்படத் துறையில் பல பெண்களுக்குப் பாலியல் ரீதியான அநீதி இழைக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து அவர்கள் புகார் எழுப்பினால் அவர்களை நோக்கியே அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள்.

சோபியா விவகாரம் ..தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!
மின்னம்பலம் : மாணவி சோபியா விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சோபியாவும் பயணம் செய்தார். அப்போது, தமிழிசை முன்பு “பாசிச பாஜக ஒழிக” என்று சோபியா முழக்கமிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை, சோபியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், அவர்மீது தூத்துக்குடி புதுக்கோட்டைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, புதுக்கோட்டைக் காவல்துறையினர் சோபியாவை கைது செய்தனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்திய நிலையில், தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

வி வி மினரல்ஸ் தடையை மீறி தாது மணல். வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் ஆய்வு

 Ore sand in violation of the ban; Inspection-Income Taxes in VV Minerals Overseas Transactionsnakkheeran.in -
விவி மினரல்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் கிளைகள் என 100-கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.& தமிழக அரசின் தடையை மீறி விவி மினரல்ஸ் நிறுவனம் கடற்கரை பகுதிகளில் முறைகேடாக தாது மணலை எடுத்துள்ளதாகவும், அப்படி தமிழக கடற்கரை பகுதிகளில் எடுக்கப்படும் தாதுமணல் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளத்தில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு மணல் ஏற்றி சென்றுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கையிலும் விவி மினரல்ஸ் நிறுவனம் கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.< தற்போது விவி நிறுவனத்தின் வெளிநாட்டு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருவதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.</

வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த 3 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை

தந்திடிவி :புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டி கிராமத்தை வெள்ளைச்சாமி என்பவரது மகள் ஷாலினி விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டி கிராமத்தை வெள்ளைச்சாமி என்பவரது மகள் ஷாலினி விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமி ஷாலினியை அவரது பெற்றோர்களும் உறவினர்களும் அப்பகுதியினர் தேடியுள்ளனர். இந்நிலையில் சிறுமி விசாலினி அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் பெண்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது

கேரளாவில் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது: இன்று கண்டன பேரணி நடத்த பா.ஜனதா முடிவுதினத்தந்தி :  :சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கடும் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த போராட்டம், வன்முறை தொடர்பாக ஏற்கனவே 440 வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 210 பேருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டனர்.
210 பேரின் புகைப்படங்களையும் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.

இஸ்லாமிய சைவம்.. Islamic Vegetarianism உயிர்ப்பலி இல்லா பண்டிகை... கவிஞர் தாமரை

Vegan Muslims Create a New ‘Qurbani’ Sacrifice Tradition With Compassion for Animals
Kavignar Thamarai : ( Festivals without Animal Sacrifice )
உயிர்களைக் கொன்று நாம் உயிர்வாழ வேண்டியதில்லை, அவற்றுக்கும் நம்மைப் போலவே உணர்வுகள், வலி, வேதனை, குடும்பம், ரத்தம், சதை உள்ளன, நாம் வாழ தாவர உணவுகளே போதுமானவை என்பதைப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். வள்ளுவர் முதல் வள்ளலார் வரை நமக்கும் இந்த மரபு உண்டு. உயிர் வாழ மனிதர்களுக்கு உள்ள உரிமை போலவே விலங்குகளுக்கும் உள்ளது என்பதை அறிந்தேற்றம் ( Recognition ) செய்வதே நோக்கம்.
விலங்குகளுக்கான உரிமை பற்றிப் பேசுவதென்பது ( Animal Rights ) மனிதர்களுக்கான உரிமைகளுக்கு ( Human Rights ) எதிரானது அல்ல. விலங்கு உரிமைகள் பற்றி ஆர்வலர்கள் பேசும் போதெல்லாம் பலரும் பதற்றமடைந்து தாக்குதலில் இறங்குவதெல்லாம் இதில் உள்ள நியாயத்தைக் கண்டு அச்சமடைவதன் காரணமே !. எங்கே சிந்தித்தால் நாமும் இதை ஏற்றுக் கொண்டு விடுவோமோ என்கிற பதற்றம்தான் !. மனிதர்கள் மேல் கொண்டுள்ள அன்பின் நீட்சியே விலங்குகளின் மேல் பொங்கும் அன்பு என்று புரிந்து கொண்டால் போதுமானது. இதற்கு எந்த மதத்தையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

குஷ்பூவுக்கு சின்மயி கணவர் விளக்கம்!

குஷ்பூவுக்கு சின்மயி கணவர் விளக்கம்! மின்னம்பலம்:  சின்மயி ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய குஷ்பூவுக்கு பதிலளித்துள்ளார் சின்மயியின் கணவர் ராகுல்.
முன்னதாக, கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை குஷ்பூ கேள்வியெழுப்பினார். இதுகுறித்து ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என்று கேட்டிருந்தார்.
இதற்கு, சின்மயி, “இன்னும் எவ்வளவு காலம் எங்களையே கேள்வி கேட்டுக் கொண்டிருப்பீர்கள். எப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை கேள்வி கேட்பீர்கள்” என்று விரிவான பதில் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது சின்மயியின் பதிவுக்கு பதிலளித்துள்ள குஷ்பூ, “நான் எப்போதும் உங்களை ஆதரித்துள்ளேன். ஆனால் எனது கேள்விகள் நியாயமானவை” என்று குஷ்பூ பதிலளித்துள்ளார்.

இலங்கை மலையகத் தமிழர்கள் மாபெரும் கிளர்ச்சி!

  : இலங்கை மலையகத் தமிழர்கள் மாபெரும் கிளர்ச்சி!
மின்னம்பலம்:
இலங்கை மலையகத் தமிழர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி மாபெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக ஈழத்தின் திருகோணமலை, மட்டக்களப்பில் தமிழர்கள் போராட்டத்தை நடத்தி உள்ளனர்.
இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எனப்படும் மலையக தோட்டங்களில் இந்திய வம்சாவளியினராகிய தமிழர்களே கூலிகளாக இருக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வரும் இவர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க அரசியல் கட்சிகள் எத்தனையோ முளைத்திருந்தன.

மாறன் சகோதரர்கள் வழக்கு: தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு!

மாறன் சகோதரர்கள் வழக்கு: தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு!மின்னம்பலம் : சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவருடைய சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு சென்னை பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாகவும் இதனால் அரசுக்கு சுமார் ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்... தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

 18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்?மின்னம்பலம : 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.
தகுதி நீக்க வழக்கில் இன்று (அக்டோபர் 25) தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன், 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளும் காலியாகியுள்ளது. அங்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மற்றும் தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு அரசியல் தலையீடு எதுவும் காரணமில்லை என்றும் ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியிருந்தார்.

திராவிட வெளிச்சம் நூர்ஜஹான்... கழகத்தின் வீர மங்கைக்கு வீரவணக்கம்!

கலைஞருக்கு இடது பக்கம் நூர்ஜஹான்
சிவசங்கர் எஸ்.எஸ் : நேற்று பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட மகளிரணி
நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டியவர் அம்மா நூர்ஜஹான் பேகம். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக, மதுரை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
மாநில மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி அவர்கள் மதுரை சென்று, அம்மா நூர்ஜஹானை பார்த்துவிட்டு தான் பெரம்பலூர் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார். இங்கு கூட்டம் முடியும் தருவாயில், அங்கு கூடு பிரிந்திருந்தார் அம்மா நூர்ஜஹான்.
கடந்த சில மாதங்களாக இந்தக் கூட்ட ஏற்பாட்டிற்காக தொடர்ந்து பேசி வந்தார். கடந்த வாரமும், அழைத்து கூட்ட ஏற்பாடுகள் குறித்து பேசிவிட்டு, "24 மதியம் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் அரியலூர் வந்து விடுகிறேன்", என்று சொன்னார். ஆனால், வரவில்லை. விடைபெற்று விட்டார், ஒட்டு மொத்தமாக.
இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பெண் பொதுவாழ்விற்க்கு வருவது, இப்போது எளிதாக சாத்தியமாகி வருகிறது. ஆனால், அம்மா நூர்ஜஹான் வந்த காலத்தில், அது அவ்வளவு சிரமமான காரியம்.
அதுவும் பெரியாரிய சிந்தனையோடு, திராவிட இயக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கொள்கைப் பிரச்சாரம் செய்தது அசாத்தியமான செயல். செய்து காட்டினார்.

வியாழன், 25 அக்டோபர், 2018

me too ஈழத்து பெண் ஊடகவியலாளரின் பார்வையில் ...

Rajes Bala : 'mee too''   இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்:
'மீ டூ'என்ற கோஷத்துடன் உலகில் உள்ள பல பெண்கள், வேலை செய்யுமிடங்களிலும், படிக்கு இடங்களிலும். அத்துடன் அவர்கள் நம்பிக்கையாகப் பழகும் ஆண்கள்; அவர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளைச் சொல்ல அக்டோபர் மாதம் 5ம் திகதி 2017ம் ஆண்டிலிருந்து முன்வந்திருக்கிறார்கள்.
2017ம் ஆண்டு அமெரிக்காவின் ஹொலிவுட் படவுலகின் பிரபலமான ஹார்வி வெயின்ஸ்ரெயின் என்பரின் பாலியல்க் கொடுமைகளைச் சொல்வதை நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டது. வேயின் ஸ்ரெயினின் காமலீலைகள் பற்றிய கொடுமைச் செயல்களை அமெரிக்க நடிகைகளான றோஸ் மக்கோவன்,ஆஷ்லி றட் என்ற நடிகைகள் அம்பலப் படுத்த முன்வந்தனர். அதைத் தொடர்ந்து பிரித்தானிய நடிகையான றொமெலா கைரி என்பவரும் 9.10.18ல் முன்வந்தார்.
அதைத் தொடர்ந்து,மெரில் ஸ்ரிப், ஆன்ஜலீனா ஜோலி,க்னவுத் பாhல்ட்ரொவ் போன்ற நடிகைகளின் போராட்டக் குரல்களுக்கு, அமெரிக்க முன்னாள் ஜானாதிபதி பராக் ஓபாமா, ஹெலிவுட் நடிகர் லியனாடோ டிகாப்பிரியோ, பிரித்தானிய நடிகர் பெனிட்க்ட் கம்பபார்ச் என்போர் 'மீ டூ' பெண்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வெயின்ஸ்ரெயினுக்கு எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து பாலியல் வன்முறைகளைத் தொடர்ந்து செய்த வெய்ன்ஸ்ரைன்மீது வழக்குப் பதிவானது.

ரஃபேல் விவகாரத்தில் பதற்றப்பட்டுத்தான் சிபிஐ இயக்குநரை நீக்கியுள்ளார்’: ராகுல் கடும் தாக்கு

tamilthehindu :டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்த காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மோடி அரசு கூறியது சட்டவிரோதம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு செய்த அவமதிப்பாகும் என்று மத்தியஅரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.
ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரின் நிலை என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அலோக் வர்மா, அஸ்தானா நீக்கம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.

ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்தி குத்து ... ஜெகன்மோகனுக்கு அனுதாப அலை ஏற்படவேண்டி அப்படி செய்தேன் ..

வெப்துனியா :ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டியை வாலிபர் ஒருவர் சிறிய கத்தியால் குத்தியதன் காரணம் போலீசாரை அதிர்சியடைய வைத்துள்ளது.ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்ற போது அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். அவர் அருகில் செல்பி எடுப்பது போல் வந்த ஒரு வாலிபர் அவரை குத்தியுள்ளார். மேலும், கோழி சண்டைக்கு பயன்படுத்தபடும் சிறு அளவிலான கத்தியை அவர் படுத்தியதும் தெரிய வந்தது.

Metoo .. மார்கழி உற்சவத்தில் பாட 7 இசைக் கலைஞர்களுக்கு தடை: மியூசிக் அகாடமி முடிவு


என்.முரளி, மியூசிக் அகாடமி-
 tamil.thehindu.com உலகம் முழுவதும் மீ டூ இயக்கம் பெரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மீ டூ புகார்கள் பிரபலங்கள் மீது எழுந்தவண்ணம் உள்ளன.
ஆனால், சற்றும் எதிர்பாராவிதமாக கர்நாடக இசை உலகில் மீ டூ தற்போது புயலைக் கிளப்பியுள்ளது. மெட்ராஸ் மியூசிக் அகாடமி சித்ரவீணா என்.ரவிகிரண் உட்பட 7 கிளாசிக்கல் இசைக் கலைஞர்களை இந்த ஆண்டு டிசம்பர் சங்கீத சீசனுக்குத் தடை செய்துள்ளது, காரணம் மீ டூ.
ரவிகிரண், இவர் சங்கீத கலாநிதி விருது பெற்றவர். வாய்ப்பாட்டு கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.தியாகராஜன், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம், மிருதங்க வாத்திய இசைக்கலைஞர்களான மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் மீ டூ புகார் அடிப்படையில் இந்த டிசம்பர் சீசனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளனர்.

தலித் சிறுமி கழுத்தை அறுத்து கொலை .. முழு விபரம் .. தினேஷ்குமார் முதலியார் .. சேலம் ..ஆத்தூர்.. தளவாய்பட்டி வருவாய் கிராமம்

Kathiravan Mumbai : "அண்ணா என்ன வெட்டாதே" " நான் ஒரு தப்பும் செய்யலை "
என்று கெஞ்சிய. தலித் சிறுமியை கழுத்தை அறுத்த சாதி வெறியன் தினேஷ்குமார் முதலியார்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், தளவாய்பட்டி வருவாய் கிராமம், சுந்தரபுரம் தெற்கு காட்டு கொட்டையில் சுமார் 3.கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டில் தலித் சாமிவேல், சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சர்குருநாதன் என்ற மகனும் அருள்ஜோதி ராஜலெஸ்மி என்ற இரு மகளும் இருந்தனர். அருள்ஜோதிக்கு மட்டும் திருமணம் ஆகி இருந்தது.
சாமிவேலும் மகன் சர்குருநாதனும் டாடா ஏசி வண்டி ஓன்று வைத்து தொழில் செய்து வந்தனர். இரண்டாவது மகள் ராஜலெஸ்மி 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 8வது வகுப்பு படித்து வந்துள்ளாள். இவர்களின் தோட்டம் வீட்டருகில் அதாவது தோட்டக்காட்டில் முதலியார் சாதியை சார்ந்த குழந்தைவேல் மகன் தினேஷ்குமார் சாரதா தம்பதிகள் அவனது தம்பி சசி என இரு குடும்பம் மட்டும் வசித்து வந்துள்ளனர். தினேஷ்குமாருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை ஓன்று உள்ளது.