சனி, 2 மார்ச், 2013

Indian Cinema நூறாவது வருடம் சென்னையில் விழா நடத்த ஏற்பாடு

இந்திய சினிமாவிற்கு இது நூறாவது வருடம். இந்திய சினிமாவில் இருக்கும் பல திரையுலகங்களும் இந்த நூற்றாண்டு விழாவை பல வகைகளில் கொண்டாட திட்டமிட்டிருக்கின்றனர்.  தென்னிந்திய சினிமாவை சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட், சாண்டில்வுட் ஆகிய நான்கு திரையுலகங்களும்(தென்னிந்திய திரையுலகினர்) இணைந்து இந்நூற்றாண்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடவிருக்கிறார்கள்.சமீபத்தில் தென்னிந்திய திரையுலக ஃபில்ம் சேம்பரின் பிரதிநிதிகள் கலந்து பேசி இதற்கான முடிவெடுத்துள்ளனர். நூற்றாண்டு விழாவைப் பற்றி பேசிய தென்னிந்திய திரையுலக ஃபில்ம் சேம்பரின் தலைவர் கல்யான் பேசிய போது “ இது தென்னிந்தியாவின் கொண்டாட்டத்திற்கான நேரம். ஏப்ரல் 26, 27,28 ஆகிய தேதிகளில் சென்னையில் விழா நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். 

தமிழக அமைச்சருக்கு கழிவுநீரால் "அபிஷேகம்'

சென்னை: பழங்குடியின கல்லூரி மாணவியருக்கான விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற, ஆதி திராவிட அமைச்சரை வரவேற்றவர்கள், சால்வைக்கு பதில் புடவை தர, வளாகத்தை சுற்றிப் பார்த்த அமைச்சர் உள்ளிட்டவர் களுக்கு, மாணவியர் கழிவு நீர் அபிஷேகம் நடத்த, அமைச்சர் பங்கேற்ற விழா, கலாட்டாவாக நடந்து முடிந்தது.சென்னை, ராயபுரம், கல்லறை சாலை சந்தில் உள்ள, பழங்குடியின கல்லூரி மாணவியருக்கான விடுதி திறப்பு விழா மற்றும் விடுதிக்கான சமையல் பாத்திரங்கள், மாணவியருக்கு போர்வை உள்ளிட்டவை வழங்கும் விழா, நேற்று நடைபெற்றது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், முன்னாள் சபாநாயகர் ஜெயகுமார், பழங்குடியின நலத்துறை இயக்குனர் கிரிதர், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சீதாலட்சுமி உள்ளிட்டோர், விடுதி அறைகளை திறந்து வைத்து பார்வையிட்டனர். முன்னதாக அமைச்சர் மற்றும் முன்னாள் சபாநாய கரை வரவேற்ற அதிகாரிகள், சால்வைக்கு பதில் புடவையை அணிவித்து வரவேற்றனர். இதைக் கண்ட அமைச்சரும், முன்னாள் சபாநாயகரும், "இது என்ன புதுப் பழக்கமா இருக்கு?' எனக் கேட்க, புடவையானாலும் பரவாயில்லை என, அவரது சகாக்கள், புடவையை மடித்து எடுத்துச் சென்றனர். அதன் பிறகு நடந்த அனைத்துமே அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியாகவே அமைந்தது.

Delhi Rape சிறுவன் மீதும் கொலை வழக்கு பதிவு

புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவியை பலாத்காரப்படுத்தி கொலை செய்தது தொடர்பாக, சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுவர் நீதிமன்றத்தில், இந்த வழக்கில் கைதாகி உள்ள சிறுவன் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை கடத்தி பலாத்காரப்படுத்தி கொலை செய்த வழக்கில், 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை போலீசார் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இதையடுத்து சிறுவன் மீது  கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் நடப்பதற்கு முன் அவன் ஒரு வியாபாரியை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கையிலும் சிறுவன், அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, சிறுவர் நீதிமன்ற மூத்த மாஜிஸ்திரேட் கீதாஞ்சலி கோயல் போலீசாருக்கு உத்தரவிட்டதன் பேரில், கைதாகி உள்ள சிறுவன் மீது கும்பலாக சேர்ந்து பலாத்காரம் செய்தது, கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. - dinakaran.com

வெள்ளி, 1 மார்ச், 2013

காந்திக்கு அம்பேத்கர் என்றால் பயம்


சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !


 அங்கனூர் தமிழன் வேலு
தோழர் வே.மதிமாறன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும்காந்தி நண்பரா? துரோகியா?” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பை பெற்றேன். வாசித்து முடித்தவுடன் வேறு யாருக்காவது கொடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்படியே எனக்கு நன்கு அறிமுகமான 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு கொடுத்தேன்.  அவர் காந்தியின் தீவிர விசுவாசியாக இல்லாவிட்டாலும் காந்தியின் மீது வெறுப்பு கொண்டவர் இல்லை; பெருமதிப்பு உடையவர். புத்தக தலைப்பை பார்த்தவுடனே ஒரு முறை என்னை ஆழமாக பார்த்தார். படித்துவிட்டு சொல்லுங்கள் என்று கிளம்பிவிட்டேன்.
இரண்டு நாள் கழித்து அவரிடம் சென்றேன்; புத்தகம் படித்தீர்களா? என்றேன். படித்தேன், என் நண்பருக்கு அந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன் என்றார். அவரையும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் படித்துவிட்டு அவருடைய நண்பருக்கு அதை படிக்க கொடுத்திருக்கிறார்; அவர் அவருடைய நண்பருக்கு கொடுத்திருக்கிறார். இப்படியே பலரையும் தாண்டி பயணித்து இறுதியாக ஒரு பள்ளி சிறுவனுக்கு அதை கொடுத்திருக்கிறார்கள். பலரையும் கடந்து வந்த புத்தகத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த முதியவரிடம் கேட்டேன்.
அவர் “புத்தகத்தின் மீது என்னால் மறுப்புரை சொல்ல முடியவில்லை; காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தே விமர்சனம் செய்திருப்பதால் யாராலும் மறுப்பு சொல்ல இயலாது. நல்ல பயனுள்ள நூல் கொடுத்தமைக்கு நன்றி” என்று மிகவும் நேர்மையான மதிப்பீட்டை வழங்கினார். அவருடன் பேசியதில் “காந்தியின் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் கல்லெறிந்து விட்டார் என்பது மட்டும் நிச்சயம்” என்று புரிந்துகொண்டேன்.
 அந்த மகிழ்ச்சியோடு, காந்தி நண்பரா? துரோகியா?” நூலை வாசித்ததன் மூலம் நான்  பெற்ற அனுபவத்தையும், அதன் மீதான மதிப்பீட்டையும் வழங்க விரும்புகிறேன்.
 வருடத்தில் மூன்று மாதங்கள் காந்தி பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். ஜனவரி 15 முதல் 26 வரை, ஆகஸ்ட் முதல் தேதி முதல் 15 வரை, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் கலைக் கூத்தாடிகளின் அரை நிர்வாணப் படத்திற்கு தடா. அதற்குப் பதில் காந்தி வருவார் அரை நிர்வாணத்தில். அதை கண்டுகளித்து மகிழும் காந்தி பக்தர்களின் கனவில் கல்லெறிந்து விட்ட வே.மதிமாறன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் (?) …!
ஒருவன் என்ன தான் பொதுநலன் குறித்து சிந்திக்க கூடியவனாக இருந்தாலும் சாதிப்பித்து கொண்டவனாக  இருப்பானேயானால் அவனின் பொது நலன் சார்ந்த சிந்தனைகள் அனைத்துமே சாதியின் கோரமுகத்தின் வடிவாகவே இருக்கும். அப்படித்தான் இந்நூலின் மூலம் காந்தியின் அஹிம்சை “கோடானு கோடி மக்களை எப்படி இம்சித்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்”

அமீர்: தணிக்கைக்குழு மாபியா கும்பல் போல் செயல்படுகிறது

ஆதிபகவன் திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்க சினிமா தணிக்கை குழு பணம் கேட்டதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், >சினிமாக்களை தரம் பிரித்து சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிலாக, பணம் வாங்கிக்கொண்டு சான்றிதழ் கொடுக்கிறார்கள். பணம் கொடுக்க முடியாது என்பதால், ஆதிபகவன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்கான காட்சிகள் படத்தில் இல்லை. இந்த சட்டங்கள் எல்லாம் இப்பதான் வந்திருக்கிறதா? இல்லை முன்பே இருக்கிறதா? படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஏ சான்றிதழ் கொடுக்க என்ன இருக்கிறது. முத்தக் காட்சி இருக்கா. ஆடை அவிழ்ப்பு காட்சி இருக்கா. கட்டிப்பிடித்து யாராவது உருண்டாங்களா, கற்பழிப்பு காட்சி இருக்கா. இந்தப் படத்தை பார்க்கக் கூடாது என்று ஏ சான்றிதழ் அளித்துள்னர் என்ன மோட்டீவ் என்று எனக்கும் புரியவில்லை. சான்றிதழக்கு ஏற்ப ரேட் உள்ளது என்றார்கள். ரேட் கொடுத்து சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றேன். படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் படத்துக்கான பிரமோஷன் வேலைகளை சரியாக செய்யமுடியவில்லை. ஒட்டுமொத்தத்தில் தணிக்கைக்குழு மாபியா கும்பல் போல் செயல்படுகிறது என்றார்

அழகன் அழகி 32 மாவட்டங்களிலிருந்து 32 நடிகர், நடிகைகள் நடிக்கும் பட

சென்னை: 32 மாவட்டங்களிலிருந்து 32 நடிகர், நடிகைகள் நடிக்கும் படமாக உருவாகிறது ‘அழகன் அழகி’ இதுபற்றி பட இயக்குனர் நந்தா பெரியசாமி கூறும்போது,‘நேர்மையும் துணிவும் கொண்ட ஆண், முயற்சியும் முனைப்பும் கொண்ட பெண் என இருவர் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு தேர்வாகின்றனர். அதன் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் 32 ஆண், பெண் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இது கிராமத்தில் நடக்கும் நகரத்து கதை, வடக்கே சென்னையில் தொடங்கி தெற்கே காரைக்குடியில் முடிகிறது. ஹீரோ ஜோ. ஹீரோயின் ஆருசி. இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஜெகன், ஆர்த்தி, சாம்ஸ் நடிக்கின்றனர். பாடல் காட்சி ஒன்றில் மும்பை அழகிகளுடன் ஆட்டம்போடுகிறார் பவர் ஸ்டார். சென்னை, வத்தலகுண்டு, மணப்பாடு, ராமநாதபுரம் என பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு வட்டார வழக்கு, கலாசாரம் பதிவு செய்யப்படுகின்றன. பிரபு தயாளன் ஒளிப்பதிவு. கண்ணன் இசை. தயாரிப்பு விசு, விஜி’ என்றார்.tamilmurasu.org

Maharashtra செழுமையும் மறுபகுதி வறட்சியும்


எவ்வாறு மறுபகுதி வறண்டு போகிறது ?
“அடுக்குமாடி குடியிருப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக் கனவு. அரசனின் மகுடத்தின் உச்சியில் பதிக்கப்படும் நவரத்தினம் போன்றது இது.”  படாடோபமான வாழ்க்கை முறை அவற்றை இன்னும் பெரியதாகச் சொல்கிறது.  ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திலும் சொந்தமாக நீச்சல்குளம் இருக்கிறது.  “மிக ஆடம்பரமானது”, “சிறப்பான கலைநயமான வடிவமைப்புகள்” “உங்கள் வாழ்நிலை உயர்வுக்கு பொருந்தும் அமைப்புகள்” என்று விளம்பரங்கள் பளபளக்கின்றன.
 தோட்டங்களுடன் கூடிய தனி வீடுகளை (வில்லா) உருவாக்குபவர்களும் கட்டடக் கட்டுமான முதலாளிகளும் இப்படிப்பட்ட குடியிருப்புகளை “முதல் தரத்தில் மதிப்பிடக் கூடியவை” என்று உயர்வாக சொல்கின்றனர்.  அவை 9000 முதல் 22000 சதுர அடி அளவுகளில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் நீச்சல் குளம் உண்டு.  இன்னும் வரவிருக்கிற ஒரு குடியிருப்பு வளாகத்தின் உச்சியில் அதாவது மேல்தளத்தில் ஓர் ஆச்சர்யம் அமையவிருக்கிறது. ஆம், நீங்கள் அனுமானிப்பது போல் அங்கும் ஒரு நீச்சல் குளம் இருக்கும்.

17 போலீசாரை தலிபான்கள் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடூரமா கொன்றனர்

 Taliban insurgents poisoned and then shot to death 17 people in an overnight attack on a government-backed militia post in eastern Afghanistan, an official said Wednesday
Kabul ஆப்கானிஸ்தானில் 17 போலீசாரை தலிபான்கள் கொடூரமான முறையில் கொன்றனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள காஜ்னி மாகாணம் தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்குள்ள போலீஸ் முகாம் ஒன்றில் 2 தலிபான் தீவிரவாதிகள் போலீஸ் வேடத்தில் ஊடுருவினர். நேற்று முன்தினம் இரவு போலீசார் சாப்பிடும் சாப்பாட்டில் 2 தீவிரவாதிகளும் மயக்க மருந்து கலந்தனர். மருந்து கலந்த சாப்பாட்டை 17 போலீசார் சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் மயங்கியதும் 2 தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு 17 பேரையும் கொன்றனர்.

Solar மின் தகடுகள் பொருத்த உத்தரவு : அரசு கட்டிடங்களுக்கும் புதிய விதிகள்

சென்னை: புதிதாக கட்டப்படும் அரசு கட்டிடங்களில் சூரிய மின் சக்தி தகடுகள் பொருத்த வேண்டும். தேசிய கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தனியார் கட்டிடங்கள், திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததை அடுத்து, இப்போது அரசு துறைக்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: கேல்வி நிறுவனம் அல்லது அரசு துறைக்கான பல அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது  ஊரகமைப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், வனத்துறை போன்ற சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி பெற வேண்டும். பூகம்பம், நில நடுக்கம் போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடங்கள் கட்ட வேண்டும்.  «என்.பி.சி.  2005 விதிகளின்படி (இந்தியன் பில்டிங் கோட்) கட்டிடங்கள் அமைதல் வேண்டும். கேட்டிடத்தின் முகப்பிலும், லிப்ட் பகுதியிலும் மாற்று திறனாளிகள் எளிதில் பயணம் செய்யும் வகையில் சாய்தளம் அமைதல் வேண்டும். தேவையான பார்க்கிங் வசதி, கழிவறை, கழிவு நீரை வெளியேற்றும் வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி இருத்தல் வேண்டும். தீயணைப்பு துறையில் இருந்து நோ  அப்ஜெக்ஷன் சான்று, தீத்தடுப்பு சாதனைகள் இடம் பெற வேண்டும். மேழை நீர் சேகரிப்பு அமைப்புகள் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

வியாழன், 28 பிப்ரவரி, 2013

குமுதம் சஞ்சிகைக்கு நீதிமன்ற தடை: நடிகை லட்சுமி ராய் பற்றி வாய் திறக்க கூடாது

சமீப காலமாக குமுதம் குரூப்புக்கு நேரம் சரியில்லையா? (அல்லது, பப்ளிசிட்டியால் சர்க்குலேஷன் பிய்த்துக்கொண்டு ஓடுகிறதா) என்று தெரியவில்லை, சர்ச்சை மேல் சர்ச்சையாக உள்ளது.
இறுதியில் விவகாரம் நீதிமன்றம் போய், தடை வாங்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

Ragini nandwani விஜய் படத்தில் பாலிவுட் நடிகை

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய், அமலாபால், சந்தானம், சத்யராஜ் என ஒரு பலமான கூட்டணியுடன் மும்பையில் நடந்துகொண்டிருக்கிறது தலைவா படப்பிடிப்பு. தலைவா திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், படக்குழுவில் பாலிவுட் நடிகையை சேர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய். இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த ராகினி நந்த்வானி சமீபத்தில் தான் டேராடூன் டைரி என்ற இந்தி படத்தில் நடித்தார். முதல் திரைப்படத்தில் நடித்ததுமே கோலிவுட்டின் முன்னணி கதாநாயகனின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது ராகினிக்கு. தலைவா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பல தேர்வுகளுக்குப் பின் ராகினியை தேர்ந்தெடுத்திருக்கிறாராம் ஏ.எல்.விஜய். 

நாகாலாந்திலும் ஆட்சியில் மாற்றம் இல்லை : திரிபுராவில் கம்யூனிஸ்ட், மேகாலயாவில் காங். முன்னிலை

அகர்தலா: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியது. 3 மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகளே பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளன. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலய சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் கடந்த 14-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் 23-ம் தேதியும் தேர்தல் நடந்தது. திரிபுராவில் 93 சதவீத வாக்குகளும், மேகாலயா, நாகாலாந்தில் முறையே 88, 83 சதவீத வாக்குகளும் பதிவாகின. 3 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன.
திரிபுராவில் கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மாணிக் சர்க்கார் உள்ளார். ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால், அங்கு மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலையில் இருந்தது. மொத்தமுள்ள 60 இடங்களில் காலை 11 மணி நிலவரப்படி 43 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியும், 1 இடத்தில் இந்திய கம்யூனிஸ்டும் முன்னிலையில் இருந்தன. 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது.

எங்கே நம்ப பூஜா? நடிக்கிறதுக்கு டாடி no பர்மிஷன்

 நடிகை பூஜா  வீட்ல போராடி பாத்துட்டாராம்...  ஆனா மறுபடியும் நடிக்கிறதுக்கு டாடி பர்மிஷன் கொடுக்க மறுக்கிறாராம். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி பேமிலில அட்வைஸ் பண்றாங்களாம். ‘உன் கூடவே இண்டஸ்ட்ரிக்கு வந்த ரீமா, கோபி ஹீரோயினெல்லாம் மேரேஜ் பண்ணி குழந்தை குட்டின்னு செட்டிலாயிட்டாங்க. நீ ஏன் ஏஜ் கடத்திட்டுபோறேன்னு டோஸ் விட்றாங்களாம்... எங்கே நம்ப பூஜா?

ரத்த தான சங்கம் எதிர்ப்பு! அ.தி.மு.க.-வில் ‘ரத்த சரித்ரா’ படைத்த ஹூசைனிக்கு

“இந்தாளுக்கு ரத்த குறைபாடா? சிலை செய்யாமல், சிம்பிளாக காலில் விழுகிறாரே?”
“இந்தாளுக்கு ரத்த குறைபாடா? சிலை செய்யாமல், சிம்பிளாக காலில் விழுகிறாரே?”ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு எந்தவொரு அ.தி.மு.க. தொண்டனும் செய்யாத வகையில் ‘ரத்த சரித்ரா’ படைத்த கராத்தே வீரர் ஹூசைனியின் தியாகத்தை எண்ணிப் பார்க்காமல், சர்ச்சையை கிளப்புகின்றனராம் ரத்த தான வங்கி அமைப்பினர்.
ரத்த தான வங்கியினருக்கு அ.தி.மு.க. கொள்கைகள் புரியுமா? ‘ரத்தத்தின் ரத்தமே’ என்றால் அர்த்தம் தெரியுமா? அந்த அர்த்தத்தை சிலையாக வடித்திருக்கிறார், உண்மை அ.தி.மு.க.காரரான ஹூசைனி. ரத்தத்தை உறைய வைத்து புரட்சித் தலைவியின் சிலை வடித்திருக்கிறார் அவர்.
ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும், 10-ம் நூற்றாண்டு எகிப்திலும் இப்படி ஓரிருவர் செய்திருக்கிறார். 12-ம் நூற்றாண்டில் மொங்கோலிய அரசர் தெமூ ஜின், எதிரிகளை கொன்று அவர்களது ரத்தத்தை எடுத்து தமது சிலையில் பூச செய்தார். அந்த சிலை, மன்னர் பிறந்த ததல் சும் பகுதியில் இன்னமும் உள்ளது.
அ.தி.மு.க.-வில் ரத்தத்துக்கு மரியாதை செய்தது ஹூசைனிதான்.
மொங்கோலிய அரசர் தெமூ ஜின் சிலை
மொங்கோலிய அரசர் தெமூ ஜின் சிலை
இதே ஹூசைனி சில வருடங்களுக்கு முன்பு ரத்த ஓவியங்களை வரைந்து காட்டியிருக்கிறார். அப்போது அவர் நடத்தும் வில் வித்தை பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி கொடுத்த நடமாடும் தெய்வம், நம்ம புரட்சித் தலைவிதான். ஓவியத்துக்கே 50 லட்சம் என்றால், சிலைக்கு எவ்வளவு கிடைக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
ரத்ததான வங்கி அமைப்பினருக்கு என்ன சிக்கல்? உயிர்காக்க பயன்படுத்தும் ரத்தத்தினை இப்படி சிலை வடித்து வீணடித்து விட்டார் என்றும், வில்வித்தை கற்றுக்கொள்ள வந்தவர்களிடம் ரத்தம் எடுத்து, அனுமதியின்றி பதுக்கி வைத்து விட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கூறுகிறார்களாம் அவர்கள். இதற்கெல்லாம் புகார் செய்வதா? ரத்தத்தை உறைய வைத்து சிலைதானே செய்தார்? உலையில் வைத்து குடித்தால்தான் தப்பு.
இதெல்லாம் அந்த கட்சி சமாச்சரம். கட்சி கலாச்சாரம். தடுக்க ரத்ததான வங்கி அமைப்பினருக்கு உரிமை கிடையாது.

அந்நிய தேசங்களிலும் அவமானத்தையும்,கஷ்டத்தையும்

உண்மைகள்.உறங்குகின்றன..
(Koviloor Selvarajan)
நமது தாயகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனட, அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏதுமில்லாதவர்களாக வெறுமனே ஏதிலிகளாக வந்த எம் மக்கள் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மொழி,வேலைவாய்ப்பு, கலாச்சாரம், காலநிலை, என்று பல காரணிகளால் கஷ்டப்பட்டார்கள். ஊரிலிருந்த காணிபூமி, அம்மா, அல்லது மனைவியின் தங்க நகைகள், ஏன் பத்துசத வட்டிக்கு கூட கடன் வாங்கியே முகவர்களுக்கும், விமான பயணத்திற்கும் கொடுத்தார்கள். அப்படித்தான் அநேகம் பேர் இந்த மேற்குலக நாடுகளுக்குள் வந்தார்கள். இவர்களில் தாயகத்தில் தரமான உத்தியோகத்தில் இருந்தவர்கள் கூட தங்களின் நிலத்தைவிட்டு  ுலத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. இங்கு  வந்தபோது  இவர்கள்தான் மிகவும் கஷ்டப் படவேண்டியதாகப் போய்விட்டது.

புதன், 27 பிப்ரவரி, 2013

பெண்ணடிமைத்தனத்தை பேணிக்காக்கும் உச்சநீதிமன்றம் / பார்ப்பனீய விழுமியங்கள்

பராமரிப்பின்றி பாழாகும் நூலகம்! ADMK குறுகிய மனப்பான்மை

சென்னை: திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. நூலகத்தை குலைக்க முயற்சிக்கும் குறுகிய மனப்பான்மையை அண்ணாவே மன்னிக்க மாட்டார் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தற்போது எந்த அளவிலே உள்ளன என்பதற்கு சான்று தேடி வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை.   கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் எதுவும் முறையாக நடப்பதாக தோன்றவில்லை. நூலகத்தில் உருவாக்கப்பட்டுள்ள வசதிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று ஆங்கில பத்திரிகை ஒன்று எழுதியிருக்கிறது. அதிமுக ஆட்சி தொடங்கியதும் அண்ணா நினைவு நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள கட்டிடத்தில் குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப் போவதாகவும் ஜெயலலிதா அறிவித்தார். இதுகுறித்த வழக்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, ‘இப்படி ஒரு அருமையான நவீன வசதி கொண்ட நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட நூலகத்தை இடம் மாற்றம் செய்வது ஏன்? மருத்துவமனை கட்டுவது என்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே. அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது’ என்று குறிப்பிட்டனர். அதன் பிறகு, வேறு வழியில்லாமல் அந்த நூலகம் அங்கேயே நடந்து வருகிறது. ஆனால், நூலகத்துக்கு சென்று படிப்போர் முழுமையாக பயன்படுத்த முடியாத அளவுக்கு முறையாக நடத்தாமல், ஏனோதானோவென்று அலட்சிய உணர்வோடு செயல்படுகின்றனர். அதிமுக அரசு எந்த அளவுக்கு நூலகத்தை புறக்கணித்து வருகிறது என்பதற்கான உதாரணம்தான் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி. அண்ணா பெயரால் நாம் அமைத்த நூலகம் என்பதற்காக அதையும் குலைத்துவிட முயற்சி செய்யும் குறுகிய மனப்பான்மையை அண்ணாவே மன்னிக்க மாட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். -

Jayalalitha dismiss கோகுல இந்திரா, என்.ஆர்.சிவபதி, டாக்டர் விஜய்

மூன்று பேரின் அமைச்சர் பதவிகளோடு,
கட்சி பதவிகளும் பறிப்பு! ஜெ. நடவடிக்கை!

தமிழக அமைச்சரவையில் கோகுல இந்திரா, என்.ஆர்.சிவபதி, டாக்டர் விஜய் ஆகியோரின் அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் கட்சி பதவிகளையும் ஜெயலலிதா பறித்துள்ளார்.
கோகுல இந்திரா அதிமுக மகளிர் அணி செயலாளராக இருந்தார். திருச்சி புறநகர் மாவட்ட பொறுப்பு வகித்தவர் என்.ஆர்.சிவபதி. வேலூர் மாவட்ட செயலாளராக இருந்தவர் டாக்டர் விஜய்.
கோகுல இந்திரா சுற்றுலாத் துறையை கவனித்து வந்தார். இவர் சென்னை அண்ணா நகரில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். பள்ளிக்கல்வி, சட்டம் உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தவர் என்.ஆர்.சிவபதி. இவர் திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் தேர்வு செய்யப்பட்டவர். வேலூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர் விஜய். இவர் சுகாதாரத்துறையை கவனித்து வந்தார்.

பங்காரு அடிகளார் மனைவி, மகன்களுக்கு முன் ஜாமீன்! லஞ்சம் கொடுத்தபோது சிக்கிய கேஸ்!!

சாமிக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. ஆசாமிக்கு கொடுக்கலாம்... ஆசாமியும் கொடுக்கலாம்!
 சாமிக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. ஆசாமிக்கு கொடுக்கலாம்… ஆசாமியும் கொடுக்கலாம்! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு தொடங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய நிறுவனர் பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார்.
இவர்கள் லஞ்சம் கொடுக்க முயன்றபோது, பொறி வைத்து பிடித்தது சி.பி.ஐ. விபரங்களை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.
சி.பி.ஐ., இந்த லஞ்ச விவகாரத்தில் லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன்கள் செந்தில், அன்பழகன் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சம்மன் அனுப்பியது. கைதாவதை தடுக்க லட்சுமி உள்ளிட்ட மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர். சுப்பையா, மனுதாரர்கள் 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், மனுதாரர்கள் 3 பேரும் சம்பந்தப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் மார்ச் 15-ம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். viruviruppu,com

முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா மத பயங்கரவாதமாகும் -மொஹமட் முஸ்ஸாமில்-

முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா மத பயங்கரவாதமாகும் -மொஹமட் முஸ்ஸாமில்-
முஸ்லிம் பெண்கள் முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா ஆடை மத பயங்கரவாதத்தை வெளிப்படுத்துவதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல்சபை உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் கூட இந்த ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்வை எனவூம் அவர் சுட்டிக் காட்டியூள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவோ, பங்களாதேஷ் பிரதமரே, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரப்பானியோ இப்படியான ஆடைகளை அணிவதில்லை எனவூம் அவர் கூறியூள்ளார். சில மத அடிப்படைவாதிகளின் தேவைக்காகவே இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிந்து வருவதாகவூம் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியூள்ளார்.

சினேகா: நான் நடித்த படத்தைப் பார்த்து நானே அழுதது

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் கிஷோர், சினேகா, குழந்தை நட்சத்திரம் பிருத்விராஜ் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஹரிதாஸ். திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் அரங்குநிறைந்த காட்சிகளாக, தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ஹரிதாஸ் படத்தில் சினேகா நடிப்பும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.ஹரிதாஸ் திரைப்படத்தைப் பார்த்தவர்கள்  அனைவரும், சினேகா அமுதவல்லி டீச்சராகவே வாழ்ந்திருக்கிறார் என்று பாராட்டுகின்றனர். இத்தகைய    பாராட்டுக்குறிய   சினேகா சமீபத்தில் அளித்த பேட்டியில் “ யதார்த்தமான கதைகளில் நடிப்பது சாதாரணமானது அல்ல. முதல்முறையாக நான் மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறேன். அமுதவல்லி டீச்சர்  கதாபாத்திரமாகவே மாறி நடித்தது மறுக்கமுடியாத உண்மை. இதுவரை மற்றவர்கள் படங்களைப் பார்த்து;அழுதிருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தைப் பார்த்து நானே அழுதது இது தான் முதல் முறை.ஹரிதாஸ் சிறந்த படம். நான் கலங்கிய கண்களுடன் தியேட்டரை விட்டு வெளியேறியது கிஷோர், பிருத்துவி நடிப்பப் பார்த்துதான்” என்று கூறினார். மேலும் பேசிய போது “ நானும் பிரசன்னாவும் தினமும் தலைப்புச் செய்திகளில் வந்துகொண்டிருந்த்தால் தான், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாமல் பேட்டிகளை தவிர்த்துவந்தோம்” என்று கூறினார்.cinema.nakkheeran.in

தமிழ்நாடு தகவல் ஆணையம் மிகவும் வேதனை தரக்கூடியது.”

Right-To-Information

மூடுமந்திரம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்


பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்தரம் என்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனையாகவும்  சொல்லப்படுவது 2005ல் நடைமுறைக்கு வந்த தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.  இந்தச் சட்டம் இயற்றப்பட்ட நோக்கம் அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதன் நிர்வாக அதிகார அமைப்புகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும். அதன் வாயிலாக பொதுமக்களின் வேண்டுகைகள், கோரிக்கைகள் ஊழலின்றி, லஞ்சமின்றி நிறைவேற்றப்படுவதை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.
அந்தச் சட்டத்துக்கு இணங்க நடுவண் தகவல் ஆணையமும் மாநிலம் தோறும் மாநில தகவல் ஆணையங்களும் நிறுவப்பட்டன. இதில் துவக்கம் முதலே நடுவண் தகவல் ஆணையம் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Jeyamohan அசடுகளும் மகாஅசடுகளும்

நான் தமிழகத்தின் உண்மையான சமூகசேவகர்களில் ஒருவராக, அறிஞராகக் கருதும் மனிதர்களில் ஒருவர் ஒத்திசைவு ராமசாமி. விஜய் டிவியின் மாணவர்கள் – களப்பணியாளர்கள் என்ற நிகழ்ச்சியைப்பற்றி அவர் எழுதியிருந்ததை வாசித்தேன்.

அந்நிகழ்ச்சியைத் தரவிறக்கிப் பார்த்தேன். [நானும் இருபது வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லாதவன்] எனக்கும் அதே எண்ணம்தான் ஏற்பட்டது. களப்பணியாளர்கள் என்று ஒரு கூட்டத்தைக் கொண்டு வந்து அமரச்செய்திருக்கிறார்கள்.
அவர்களில் முக்கால்வாசிப்பேரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்கள் என்ன களப்பணி செய்கிறார்கள் என்று கேட்டால் நான் சங்கடப்படுவேன்.பெரும்பாலானவர்கள் திராவிடக்கட்சிகள் அல்லது இடதுசாரிக்கட்சிகளின் ஏதேனும் அணிகளில் ஒட்டிக்கொண்டு எதையாவது செய்துகொண்டிருப்பவர்கள். அல்லது தன்னார்வக்குழு வைத்துக் காசு பார்ப்பவர்கள். அல்லது ஆங்கிலச்செய்தி இதழ்க் கட்டுரைகளை ஒட்டித்தமிழில் அபத்தமாக எதையாவது எழுதுபவர்கள். ஒருவர் கூட , ஆம் ஒருவர் கூட, எதையாவது வாசிப்பவர்கள் அல்ல

கள் இறக்க அனுமதி கோரி : சென்னையில் யாகம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


ஈரோடு: தமிழக அரசு கள் இறக்க விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நாளை மறுநாள்(28ம் தேதி) சென்னையில் அஸ்வமேத யாகம் நடத்த அனுமதி வழங்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வமேத யாக குதிரை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து கிளம்பி புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகம் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்கவும், அவ்வாறு செல்லும்போது குதிரையை தடுத்து நிறுத்தி வாதிடுவோர்கள் இயக்க கோரிக்கையில் நியாயம் இல்லை என்பதை நிரூபித்தால்கள் இறக்குவதற்கான அனுமதி கோருவதையே கள் இயக்கம் கைவிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டம்  ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும், நகரின் போக்குவரத்தின் முக்கியத்துவம் கருதியும் யாகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு - மறு ஏலமும் தோல்வியடைகிறது!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மறு ஏலமும் மீண்டும் பயனில்லாமல் போகப் போகிறது.2014-ம் ஆண்டு தொலைதொடர்பு லைசென்ஸ்களைப் புதுப்பித்தல் மற்றும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் விற்கப்படாமல் இருந்த பகுதிகளையும் சேர்த்து மத்திய தொலைதொடர்புதுறை இரண்டாவது ஏலத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.இந்த ஒதுக்கீட்டுக்கான ஏலம் மார்ச் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இதர்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள். ஆனால் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள சிஸ்டெமா என்ற நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்துள்ளது. வேறு எந்த ஒரு நிறுவனமும் ஏலத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.இதனால் ஸ்பெக்ட்ரம் ஏலம் மீண்டும் பயனில்லாமல் போகப் போகிறது.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கடல் திருட்டு VCD கூடபெரும் தோல்வி

கடல் திரைப்படம் கிருத்துவ மதத்தை மோசமாக காட்டியது அதைப்பற்றி உங்கள் கருத்து?
-கே. மணிகண்டன், திருநெல்வேலி.
  படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய வினியோகிஸ்தர்கள் மட்டுமல்ல, பொண்டாட்டி தாலிய அடகு வைத்து, போலிசுக்கு பயந்து, தன் வாழ்க்கையையே பணயம் வைத்து திருட்டு விசிடியில் கடல் படத்தை கொண்டுவந்தவங்க கூட நடுத்தெருவுல நிக்கிறாங்களாம்; அதுதான் வருத்தமா இருக்கு.
கடல் கிறிஸ்த்துவ மதத்தை உயர்வாகத்தான் காட்டியது. குறிப்பாக கிறிஸ்த்துவ பாதிரியார்களை தியாகிகளாகவும் கிறிஸ்த்துவ நிறுவனங்கள்; ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்பவையாகவும், ஒழுக்கக் கேடான நபர் பாதிரியாராக ஆக முடியாது, பாதிரியாக உள்ளவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தாலும் அவர்களை உடனே அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்ற புனித பிம்பங்களோடுதான் ‘கடல்’ கிறிஸ்த்துவ நிறுவனங்களை கவுரப்படுத்தியிருந்தது.

கீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை!

அனுராதா ஷர்மாவினவு
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
ரியானாவை சேர்ந்த விமானப் பணிப்பெண் கீதிகா ஷர்மாவின் தற்கொலைச் சம்பவத்தை இவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. அவர் இறந்து 6 மாத காலத்திற்குள் 51 வயதான அவருடைய தாயார் அனுராதாவும், கீதிகா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட அதே அறையில், அதே முறையில் சென்ற பிப்ரவரி 15 ஆம் தேதி தன் உயிரையும் போக்கிக்கொண்டுள்ளார். அவரின் மறைவு கீதிகாவின் தந்தை தினேஷையும் தம்பி அங்கித்தையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீதிகா மற்றும் அவருடைய தாயார் இறப்பதற்கு முன் எழுதி வைத்துள்ள வாக்குமூலங்களின்படி, அவர்கள் சாவிற்கு ஹரியானா மாநில முன்னாள் அமைச்சராக இருந்த கோபால் கோயல் கண்டாவும் அவரது உதவியாளர் அருணா சத்தா என்பவரும் கொடுத்த தொடர்ச்சியான தொல்லைகளும் அதனால் ஏற்ப்பட்ட மன உளைச்சலுமே காரணம் என்று பதிவாகியுள்ளது.
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
‘பெற்ற மகளை தற்கொலைக்கு தள்ளிய கண்டாவையும் அருணாவையும் தண்டித்தே தீரவேண்டும்’ என்று இறுதிவரை போராடியிருக்கிறார் அனுராதா. மகளை இழந்த மனவேதனை ஒரு பக்கம் இருக்க, கோர்ட், கேஸ் என்ற அலைச்சல்கள் ஒரு பக்கம், மகளைப் பற்றிய கிசுகிசுப்புகள், அவதூறுகள் இன்னொரு பக்கம் என்று எல்லாம் சேர்ந்து அந்த குடும்பத்தின் நிலையை முற்றிலுமாக திருப்பிப் போட்டுள்ளன.

பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு ரயிலில் வந்த பெண்ணின் பிணம்

டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் ஒன்றில் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் பிணம் இருந்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி ரயில் நிலையத்திற்கு ஞாயிறு இரவு அரியானா மாநிலம் பானிபட்டிலிருந்து வந்த ரயிலின் இருக்கைக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய ஒரு பெண்ணின் பிணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது .>அந்த பெண்ணின் கைகள், கால்கள், கழுத்துடன் இணைத்து பிளாஸ்டிக் க‌யிரா‌ல் சுற்றப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி லோக்நாயக் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். கொல்லப்பட்ட அந்த பெண் யார், கொலை ரயிலில் நடந்ததா போன்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவ மாணவி கற்பழிப்பு, போலீஸ் உதவி மையத்திற்கு எதிரே பீன் சுட்டு கொலை போன்ற சம்பவங்களை தொடர்ந்து டெல்லி ரயிலில் ஒரு பெண்ணின் பிணம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகின்றன  tamil.webdunia.com

உறைய வைத்த ரத்தத்தில் ஜெயலலிதா சிலை! கிடுகிடு நடுக்கத்தில் நாஞ்சில் சம்பத்!!

“அமலாபால் போட்டோவை குதிரை என்னா பண்ணிச்சு?”

Viruvirupu


முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை விதம்விதமாக கொண்டாடுவதில் அ.தி.மு.க.வினர் போட்டி போட்டுக்கொண்டு செயலாற்றி வருகையில், தமது ரத்தத்தை எடுத்து உறைய வைத்து, உறைந்த ரத்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை செய்துள்ளார், கராத்தே வீரர் ஹுசைனி.
முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளை அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 65 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
புரட்சித் தலைவிக்காக சாதனைகள் எதையும் படைக்க திராணியற்றவர்கள், கேக் சாப்பிடுவதுடன் முடங்கிக் கொண்டனர்.
ஆனால், சாதனையாளர்கள் பொங்கி வழியும் கட்சியல்லவா, அ.தி.மு.க.? எனவே, புரட்சித் தலைவியின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாதனைகள் புரிந்து வருகின்றனர் அ.தி.மு.க.வினர்.
கோட்டையில் காலில் செருப்பு அணியாமல் நடப்பது, அம்மா முன் 45 பாகை கோணத்தில் நடப்பது, இடது கையால் வாயை பொத்திக்கொண்டு, வலது கையால் சல்யூட் அடித்தல் போன்ற ட்ரில்களில் அமைச்சர்கள் ஈடுபட…
மற்றையவர்கள் தத்தமது திறமைகளுக்கு ஏற்ப, தீச்சட்டி ஏந்துதல், கையில் சூடம் ஏற்றி மூன்று தடவை அம்மா படத்தை சுற்றி வருதல், அமலா பால் படத்தை கொள்ளுக்கு பதிலாக குதிரைக்கு போடுதல் என்று என்னென்னவே எல்லாம் செய்கிறார்கள்.
இந்நிலையில் கராத்தே வீரர் ஹுசைனி, முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து அதில் ஜெயலலிதாவின் சிலையை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து ஹுசைனி செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை உருவாக்குவதற்காக 8 ஆண்டுகள் எனது உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்தேன். அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர்.
ஆண்டுக்கு 100 மில்லி லிட்டர் வீதம், முதல்வரின் 65-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் எனது 6½ லிட்டர் ரத்தத்தையும், வில்வித்தை மாணவ, மாணவியரின் 4½ லிட்டர் ரத்தத்தையும் சேர்த்து மொத்தம் 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து இந்த சிலையை உருவாக்கியுள்ளேன். உறைய வைத்த ரத்தத்தில் உருவச் சிலையை படைத்திருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்” என்றார்.
கேட்கும்போதே ரத்தம் உறைவது போல இல்லையா?
உங்களுக்கு உறைகிறதோ, இல்லையோ… பகுத்தறிவுவாதியாக இருந்துவிட்டு தற்போது புதிதாக அ.தி.மு.க.வுக்கு வந்துள்ள நாஞ்சில் சம்பத், திகிலுடன் இருப்பார்.
“சம்பத் அண்ணே…  நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் போடுங்க” என்று யாராவது சொன்னால் என்ன செய்வது?

தமிழக நெடுஞ்சாலைகளில் 500 மதுபானக் கடைகள் மூடப்படும்

சென்னை: "தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, 500, மதுபானக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில், 6,654 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மது அருந்தி விட்டு, வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோரை, குஷிப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில், நீண்ட தூர பயணம் செய்யும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், "தாக சாந்தி' செய்து விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

helicopter இடைத்தரகர்கள் முன்னாள் தலைமை தளபதியை 6 அல்லது 7 முறை சந்தித்துப் பேசியுள்ளனர்

எஸ்.பி.தியாகிஇந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும், மற்ற மிக முக்கியமான நபர்களும் வசதியாக பயணம் செய்தவற்காக தலா ரூ 300 கோடி விலையில் 12 ஹெலிகாப்டர்களை மொத்தம் ரூ 3,600 கோடி செலவில் வாங்குவதற்கு ரூ 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பான சில நபர்களையும் தனியார் நிறுவனங்களையும் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
இந்தியா வாங்கும் இந்த ஹெலிகாப்டர் இத்தாலிய-ஆங்கில கூட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பின்மெக்கானிக்கா என்ற இத்தாலிய நிறுவனத்திற்கு சொந்தமானது. பின் மெக்கானிக்காவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (CEO) கியூசெப் ஒர்சி லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக இத்தாலிய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்தாலியில் மாஃபியா, பெருநிறுவனங்கள், அரசு அமைப்புகள் இவர்களுக்கிடையேயான தொடர்புகளை விசாரணை செய்த நேப்பிள்ஸ் நகரின் நீதித் துறை அதிகாரிகள் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் ‘நிறுவன தொடர்புகள்’ துறையின் தலைமை மேலாளர் லொரன்சோ பொர்கோகினி என்பவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்.

சென்னை பெங்களூரு புதிய இரட்டை தட்டு ரயில்

double decker train would run between Bangalore and Chennai South India’s first double-decker AC train ––between Bangalore and Chennai––is likely to be commissioned in about a month.

இளம்பெண் சுட்டு கொலை வேடிக்கை பார்த்தது போலீஸ்

புதுடெல்லி : டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி இறந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் இளம் பெண் ஒருவரை சுட்டுக் கொன்றனர். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பஸ்சில் இருந்து வீசப்பட்ட மருத்துவ மாணவி இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதோடு, நீதிமன்றமும் கவலை தெரிவித்தது.

இத்தாலி ஹெலிகாப்டர் ஊழல் former Air chief Shashi P Tyagi..CBI names

சோனியா, மன்மோகன் சிங் உட்பட வி.வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் விவகாரம் தொடர்பாக, இத்தாலி சென்ற அதிகாரிகள் குழுவுக்கு, சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆவணங்களில் விசாரணையைத் தொடங்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் பேர முறைகேடு புகார் தொடர்பாக இத்தாலி சென்ற இந்தக் குழுவில், சி.பி.ஐ., பாதுகாப்பு அமைச்சு, மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் உள்ளனர். விமானப்படை கொள்முதல் மேலாளர் அருண்குமார் பால் இந்தக் குழுவுடன் இத்தாலி சென்றிருந்தார்.
இவ்வழக்கு தொடர்பான சில ஆவணங்களை இத்தாலிய அதிகாரிகளிடம் இருந்து அதிகாரிகள் பெற்றுள்ளனர். அந்த ஆவணங்கள் சி.பி.ஐ.-யிடம் தற்போது உள்ளன. இன்னும் இரு தினங்களில் முதல் கட்ட விசாரணை தொடங்கவுள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய சிறிய கண்டம் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

For ages now, Mauritia has been hiding. The small, precambrian continent once resided between Madagascar and India, before splitting off and disappearing beneath the ocean waves in a multi-million-year breakup spurred by tectonic rifts and a yawning sea-floor. But now, volcanic activity has driven remnants of the long-lost continent right through to the Earth's surface. After millions of years, and some incredible geologic sleuthing, it seems Mauritia has been foun
இந்தியாவில் இருந்து Madagascar நாடு பிரிவதற்கு முன்பு, சுமார் 61 மில் லியனிலிருந்து 83 மில் லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மொரிசியா என்று பெயரிடப்பட் டுள்ள ஒரு சிறிய கண் டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இந்தியப் பெருங் கடலில் மொரிசியஸ் நாட்டுக்கு அருகில் கட லுக்கு அடியில் உள்ள தாக கூறியுள்ளனர்.
மொரிசியஸ் கடற்கரை மணலில், 660 மில்லிய னிலிருந்து, கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகள் வயதான சிர்கோன்ஸ் எனப்படும் மினரல், இருப்பதை ஆராய்ச்சி யாளர்கள் பகுப்பாய்ந்து உள்ளனர். இந்த சிறிய தாதுத் துகள்கள் குறிப் பிடத்தக்க ஒரு கண்டு பிடிப்பு என்று சொல்லப் படுகிறது. இந்த சிர்கோன் துகள் கள், மொரிசியஸ் தீவின் அடியில் உள்ள, இந்த சிறிய மொரிசியா கண் டத்தின் பிளவு பற்றி குறிப்பிடுகிறது.
பின்னர் இந்தியப் பெருங்கடல் சுற்றி வளைத்து அப்பகுதி நிலங்களை மறைத்து விட்டன என்றும் கூறி யுள்ளனர். இங்கிருந்து 200 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு பிரிந்த பேங்கீ என்ற ஒரு பாறை அடுக்கு, தெற்கில் கோண்டு வானாவாகவும் வடக் கில் லாரேசியா எனவும் பிரிந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த கோண்டுவானா 80 -130 மில்லியன் ஆண்டு கள் இடைப்பட்ட காலங் களில், பிரிந்து மதகாஸ் கர், இந்தியா, ஆஸ்திரே லியா மற்றும் அண்டார் டிகா என மாறி இருக் கலாம் என்று சொல்லப் படுகிறது.viduthalai.in

Facebook 'கில் குரியனின் குற்றத்தை எதிர்த்தவர்கள் மீது வழக்கு: போலீஸ்

திருவனந்தபுரம்: ராஜ்யசபா துணை தலைவர் குரியனுக்கு, வக்காலத்து வாங்கிய கேரள மாநில மகளிர் காங்., தலைவர் பிந்து கிருஷ்ணாவை, சமூக வலை தளத்தில் விமர்சித்த, 140 பேர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், கேரள போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவி, 1996ல், ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், தற்போதைய ராஜ்யசபா துணை தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான, குரியன் சிக்கினார். ஆனாலும், சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில், இவர் விடுவிக்கப்பட்டார். குரியனை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக, பாதிக்கப்பட்ட பெண் கூறியதை அடுத்து, இந்த விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. "குரியன், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. ஒன்பதாம் வகுப்பே படிக்கக்கூடிய ஒரு பள்ளி மாணவியின் பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை ஆதரிக்க அவதரிப்பதே பெண்மைக்குப் பேரிழுக்கு. சமூக வலைத்தளங்களால் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் புயல் சின்னமொன்று நிலைகொண்டிருப்பது மட்டும் உண்மை. நாளடைவில் இதுமாதிரியான வலைத்தளங்களை முற்றிலும் தடைசெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விமர்சனங்களுக்கு இடமளிக்காத நடத்தையைப் பற்றி ஏன் ஒருவன் கருத்தெழுதனும்? கார்டூன் வரையனும்? இப்பவெல்லாம் கிறுக்குறவன் ஏதோ ஒரு மூலைல கிறுக்கிட்டு போறான்னு அப்டியே உட்டுறமுடியலைல? காரணம் சிம்பிள், எப்போதும்போலத்தான் "கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது" ஆனால் அதவிட கூர்மையானது கணினியின் கீபேட் முனை

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தி.மு.க. மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது .

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்தும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் ஆஜராகி, பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுவேன்' என, முன்னாள் அமைச்சர் ராஜா, குட்டையை குழப்பியுள்ளார். ராஜாவின் இந்த மிரட்டல் கோரிக்கை குறித்து, ஐ.மு.கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசுவோம் என, தி.மு.க.,வும், மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது ."2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை, நடப்பு பார்லிமென்ட் தொடருக்குள் தாக்கல் செய்யும் வகையில், இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இக்குழு, முன் ஆஜராகி விளக்கம் அளித்த, அட்டர்ஜி ஜெனரல் வாகன்வதி, மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர், ராஜாவின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார்.இதையடுத்து, தன் தரப்பு கருத்தையும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் தெரிவிப்பதற்கு, அனுமதிக்க கோரி, லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கும், குழுவின் தலைவர் பி.சி.சாக்கோவுக்கும், ராஜா கடிதம் எழுதியுள்ளார். இதில், "2ஜி விவகாரத்தில் உள்ள பல முரண்பாடுகளையும், இதில் பல தகவல்களையும் விளக்க முடியும்' என, ஏற்கனவே கூறியிருந்தார். பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவரான, சாக்கோவுக்கு, ராஜாவை மீண்டும் அழைக்க விரும்பவில்லை.

ஜெயலலிதா நினைத்தால் சீனாவின் வல்லரசு கனவு டமால் வைகை செல்வன் DAMN SERIOUS!

Viruvirupu “இந்தியா வல்லரசு நாடாக மலர வேண்டும் என்றால், இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா வரவேண்டும்” என்று முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார், தமிழக அரசு தலைமை கொறடா வைகைச்செல்வன். “ஒட்டு மொத்த இந்திய மக்களும், ஜெயலலிதா பிரதமராக வருவதை தான் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றார்கள்” என்றும் ஒரே போடாக போட்டிருக்கிறார் இவர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் ஒற்றுமை திடலில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் கபடி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளரும், தமிழக அரசு தலைமை கொறடாவுமான வைகைச்செல்வன் இதில் கலந்துகொண்டு பேசியபோதே, இந்தியாவுக்கு இருக்கும் அரிய பெரிய வாய்ப்பு பற்றி தெரிவித்தார்.
வைகைச்செல்வன் பேசும்போது, “விளையாட்டு மூலம் பல சாதனை புரிய முடியும். விளையாட்டு துறை மூலம் இளைஞர்களை கவர்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார் சரத்பவார். தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு தான் அதிக அளவு நிதி ஓதுக்கிடு செய்து சாதனை புரிந்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

பாலியல் பலாத்கார சிறுவர்களைசிறாராக பார்க்க கமிட்டி எதிர்ப்பு

மும்பை: "பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி, 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக கருதக்கூடாது' என, மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்த, விசாரணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி, சந்திரசேகர் தர்மாதிகாரி கமிட்டியை, மகாராஷ்டிரா அரசு நியமித்தது. விசாரணை நடத்திய கமிட்டி, முதல் இடைக்கால அறிக்கையை, 2010ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது அறிக்கையை, 2011, செப்டம்பரிலும் தாக்கல் செய்தது. மூன்றாவது அறிக்கையை, இம்மாதம், 16ம் தேதி தாக்கல் செய்தது.இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சுட்டி காட்டியிருந்தது.இந்நிலையில், மும்பை ஐகோõர்ட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தொடரப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின் போது, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை அறிக்கையின் பிரதி தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மாற்று கருத்து போராளி தோழர் சண்முகலிங்கம்

தோழர் சண்முகலிங்கம் அவர்கள் மிகவும் நேர்மையான ஒரு மனிதர். தனது கொள்கைகளை ஒரு போதும் விட்டு கொடுக்காதவர் . எந்த வித சுய லாபமும் இல்லாத ஏராளமான பொது காரியங்களில் இவர் சிரத்தையோடு ஈடுபடுவதை எப்போதும் காணலாம் . . இவர் நடந்து வந்த பாதை சரித்திர மகத்துவம் வாய்ந்தது . இளமையில் இடது சாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  மிக சிறு பிராயத்திலேயே சம சமாஜ கட்சியில் முழு நேர தொண்டனாக தன்னை இணைத்து கொண்டவர் தனது பிறந்த ஊரான கரவெட்டியை விட்டு வெளியேறி மலையகத்தில் இடது சாரி கொள்கைகளுக்காக தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டார் .இனப்பிரச்சனை பூதாகரமான வடிவை எட்டியபோது டாக்டர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து காந்தியத்தை ஸ்தாபித்தார் . இவரது முழு வரலாறும் ஒழுங்கான முறையில் எழுதப்பட வேண்டிய ஒன்றாகும் ஏராளமான போராட்டங்களை சந்தித்த இவர்  இறுதி வரை உண்மையிலேயே ஒரு புரட்சி வாதியாகவே வாழ்ந்தார் . மாற்று கருத்தாளர்களை ஈவு இரக்கம் இன்றி வேட்டையாடிய  பாசிச கும்பல்களிடம் இருந்து தனது சுயத்தை விட்டு கொடுக்காது தான் நினைப்பதை நெற்றி அடியாக நேருக்கு நேர் சொல்லி விடுவது இவரின் தனி பண்பாகும் . விழுந்த பாட்டுக்கு குறி சுடும் சமுகத்தில் சுயமாக சிந்தித்து இறுதி வரை சுயம் இழக்காமல் வாழ்ந்த தோழர் shan எமக்கு ஒரு ஒளி விளக்காக திகழ்கிறார்

சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது பாலிய நண்பர் ஜெயகுமார் (பாரதி பாலன்) சமரச பூமி என்ற நாவலை கனடாவில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் .அவர் அச்சடித்த புத்தகங்களுடன் டென்மார்க்கில் இருந்து கனடா வந்து தனது உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தார் . அப்பொழுது அவருக்கு புத்தக வெளியீடு தொடர்பாக உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தவர்கள் பின்பு வழக்கமான அடாவடி  கலாசாரத்தின் பின் விளைவுகளை எண்ணி ஜெயகுமாரின் புத்தக வெளியீட்டுக்கு உதவி செய்ய வில்லை .

பெண்ணுக்கு பெண்மீது LOVE வர காரணம் என்ன?

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம்  ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும்  லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும்  பெண்ணும் இணையும் கலாச்சாரம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் பிற பெண்களிடம் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் வரை உணர்ச்சி  பெற்றிருக்கின்றனராம்.வெளிநாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு  கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம். 50 சதவிகித  பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். போய்சே பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை பேராசியர் எலிசபெத் மோர்கன்  மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.பெண்கள் 'லெஸ்பியன்' உறவை நாடிச் செல்வதற்கான காரணம்

Maldives இந்திய ஆசிரியை பலாத்காரம் மாலத்தீவில் 3 பேர் கைது

 A 24-year-old Indian computer teacher was brutally raped in Maldives and is in “very serious condition”, prompting India to take up the matter with Maldivian government. The young Indian teacher working on the island of Dhangethi in Alif Dhaal Atoll has been hospitalised after a group of people broke into her home on Sunday night and allegedly raped her, Minivan News reported
மாலத்தீவில் இந்திய ஆசிரியை பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாலத்தீவின் அலிப்தால் அடோல் தங்கேதி என்ற இடத்தில், இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை ஒருவர் கடந்த 11ம் தேதி வீட்டில் மர்ம கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்ற போது, அங்கு ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் ஆசிரியை இருந்தார். இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர், மாலத்தீவை சேர்ந்த 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து குற்றப்பிரிவு தலைவர் முகமது தாவூத் கூறியதாவது: இந்திய ஆசிரியையை ஒரு கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது.

ஹைதராபாத் குண்டு வெடிப்பு: ஏன் மதானியை விசாரியுங்கள் என்கிறது மத்திய உளவுத்துறை?


மதானி: இவருக்கு இதில் என்ன கனெக்ஷன்?
மதானி: இவருக்கு இதில் என்ன கனெக்ஷன்? viruviruppu,com
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பெங்களூரூ சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியிடம் விசாரணை நடத்த ஆந்திர போலீஸ் முடிவு செய்துள்ளது. மத்திய உளவுத்துறை உத்தரவின்பேரில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு இருப்பதாகவே போலீஸ் உறுதியாக நம்புகிறது. வெடிகுண்டு வைக்கப்பட்ட விதம், அது தயாரிக்கப்பட்ட முறை ஆகியவை இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தொடர்பை உறுதி செய்துள்ளன.
டில்லி போலீசால் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் மக்பூல், இம்ரான்கான் ஆகியோர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஐதராபாத்தில் எங்கெங்கு குண்டு வைக்கலாம் என பைக்கில் சென்று ஒத்திகை பார்த்ததாக ஏற்கனவே கூறியுள்ளனர். எனவே, ஹைதராபாத் குண்டுவெடிப்பு குறித்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் இந்திய முஜாகிதீன் அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கலுக்கும் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வித்யா மரணமடைந்தார்! ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட சென்னை

சென்னை:சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல் விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையி்ல் சிகிச்சை பலனளிக்காததால் வித்யா மரணமடைந்தார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாணவி விநோதினி கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அதே போன்று அமிலவீச்சினால் வித்யா உயிரிழந்‌துள்ளார். இதன் மூலம் அமில வீ்ச்சில் பலியானவர்களின் எண்ணி்‌க்கை 2 ஆக அதி்கரித்துள்ளது. விஜயபாஸ்கர் தற்போது சிறையில் உள்ளார்.
வினோதினி:காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் வினோதினி என்ற இளம் பெண், மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டார்.