சனி, 21 ஜனவரி, 2017

மக்களின் கோபம் எல்லையை கடந்து விட்டது ... ஜல்லிகட்டு ஏற்றிவைத்த நெருப்பு இந்தியா முழுவதும் பரவப்போகிறது...!

இந்தப் போராட்டம் தற்போதைக்கு வெற்றி பெறலாம் அல்லது ஒடுக்கப்படலாம். ஆனால் போராட்டத்துக்கான காரணங்கள் இருக்கும் வரை போராட்டங்கள் ஓயாது. இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் மாநிலத்திலும் இப்படியான போராட்டங்கள் வெடிக்கலாம்
jallikattu marina protest 2
அவர்கள் பின்னால் நடிகர்கள் இல்லை; அரசியல் கட்சிகள் இல்லை; ஊடகங்களும் பெரிய அளவில் இல்லை; ஆனால் அவர்களின் முழக்கங்கள் தமிழ்நாடு முழுக்க ஒரே குரலாக எதிரொலிக்கிறது. இது எப்படி சாத்தியமானது? மெரினாவில் போராடிய இளைஞர்களைக் கலைப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. எங்கும் இருள் சூழ்ந்த போது அவர்களின் செல்போன்களின் ‘பிளாஷ் லைட்கள்’ ஒளிரத் தொடங்கின. தங்கள் செய்தியை அதின் மூலம் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்: ‘எங்களுக்கு யாரும் தேவையில்லை; எங்கள் கையில் இருக்கும் செல்போன்கள் போதும்’
எகிப்தில் நடந்ததைப் போன்று இது சமூக வலைத்தளங்களின் வழியாய்த் தீயெனப் பரவிப் படர்ந்த புரட்சி. ஒரு வாரத்துக்கு முன்னர் வரை இப்படி ஒரு பெரும் போராட்டத்தை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

போராட்டம் பண்ண கத்துகிட்டாங்கல்ல .. இனி வேற வேற வேற.... இஷுக்களுக்கும் கண்டிநியூ பண்ணலாம்..ஆமா!


மதியாதோர் தலைவாசல் மிதியாதேனு ஔவையார் சொல்லிருக்காங்க, நம்ம ஓபிஎஸ் அவர்கள் வாடிவாசல் பூட்ட நான் தான் உடைப்பேன்னு ஒத்த காலுல நிக்கிறாரு. ஔவையார் பேச்ச நாம ஏன் கேட்கனும்னு நினைச்சுருப்பார் போல. மத்தபடி மக்கள் எல்லாம் அவர் மேல மானாவாரியா மரியாதை(!) வச்சிருக்காங்க., சிரிச்ச முகமா போய் வாடிவாசல திறக்க வாழ்த்துக்கள் ஓபிஎஸ் அவர்களேனு அவருக்கு மட்டும் ஒரு அசிரிரீ கேட்டிருக்கும் போல. ஆனா பன்னீருக்கு போட்டியா ஒரு பழ வியாபாரியை இறக்க தயாராகிட்டாங்க நம்ம மக்கள். அவர் போகட்டும் நீங்க அப்டேட்ஸ பாத்துருங்க

அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு : முதல்வரே வந்தாலும் ஜல்லிகட்டு நடக்காது ... நிரந்த சட்டமே தேவை!

சென்னை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவந்துள்ளன மத்திய, மாநில அரசுகள். ஆனால் நிரந்தரமாக சட்டத்தில் திருத்தம் தேவை என அலங்காநல்லூரில் போராடி வரும் மக்கள் அறிவித்துவிட்டனர். போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய நிர்வாகிகள்,
முதல்வரே வந்தாலும் ஜல்லிக்கட்டு நடக்காது என அறிவித்தனர். இதை வரவேற்று மக்கள் கோஷமிட்டனர்.

சீமான் எச்சரிக்கை :டெல்லியில் நடப்பது ஜல்லிக்கட்டு நாடகம்தான்!

சீமான் ல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான வேலைகளும் களைகட்டத் தொடங்கியுள்ளன. ' டெல்லியில் நடக்கும் அரசியல் நாடகங்களை நான் நம்பவில்லை. பெயரளவுக்கு அனுமதியைக் கொடுக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது' என்கிறார் சீமான்.
தமிழகம் முழுவதும் ஐந்தாவது நாளாக, ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ' ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். வாடிவாசல் திறக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக் குதித்து வெளியே வரும்' என நம்பிக்கை தெரிவித்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் தமிழக ஆளுநர். "முதல்வர் பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணமும் அதையொட்டி தற்போது நடக்கும் காட்சிகளும் தற்காலிக ஏற்பாட்டை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

கேள்வி :- திமுகவினரின் மிகப்பெரிய பிரச்சினை என்ன?

கேள்வி :- திமுகவினரின் மிகப்பெரிய பிரச்சினை என்ன?
பதில் :- எதையும் அலசி ஆராய்ந்து முன்கூட்டியே தீர்க்கமாக சொல்வது. எடுத்துக்காட்டிற்கு ஜனவரி 3 ஆம் தேதியே ஸ்டாலின், ஜல்லிக்கட்டை நடத்த அரசு அவசரச்சட்டம் இயற்றவேண்டும் என்று அலங்காநல்லூர் போராட்டத்தில் பேசினார். (பிபிசி http://www.bbc.com/tamil/india-38493687 )
வழமைப்போல வேதவிற்பன்ன ஊடகங்களும் அவர்களின் அடிப்பொடிகளான பஜகோவிந்த சமூக ஊடகப்பங்களுக்கும் கெக்கெபிக்கெவென சிரித்தன. மூன்று வாரம் போராட்டம், உணர்ச்சி வயப்படல் என்று மக்களை அலைக்கழித்தபின்னர் மோடி - பன்னீர் அணி இன்று அவசர சட்டமியற்றுகிறது. வெற்றி வெற்றி என்று ஆர்.ஜே.பாலாஜிகள் திடீர் தலைவர்களாகி திமுக போராட்டத்தின் வெற்றியை தனகு சாதகமாக்குகிறது என்று பாய்கிறார்கள். தும்பைவிட்டு ஏன் வாலைப்பிடிக்கிறீர் என்று பகுத்தறிவாக கேட்பதுதான் திமுகவினரின் பிரச்சினை. தமிழக மக்களுக்கு அதிமுக அடிமை ஆட்சிமுறையோ இல்லை மோடியின் பசப்பு ஆட்சியோதான் சரியோ என்று சமயங்களில் தோன்றும், என்ன செய்வது நீரடித்து நீர் விலகுமா. மக்களின் அறியாமை என்னை வதைக்கிறது. முகநூல் பதிவு  கிளிமூக்கு அரக்கன்

தமிழ்நாட்டில் ஒருவாரமா போலீசையே காணோம் .. ஆனால் சட்டம் ஒழுங்கு அற்புதமாக இருக்கிறது .தோழர் மருதையன் முழக்கம்


இந்த ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு... மெரீனாவில் நேரலை!

காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.
jallikattu-vinavu-live-3

ல்லிக்கட்டுப் போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டிவிட்டது. ஒட்டு மொத்த தமிழகமே திரண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கிறது. தென்குமரி முதல் மெரினா வரை கீழத்தஞ்சை முதல் மேற்கு தொடர்ச்சி மலை வரை முழு தமிழகமும் இரண்டிலொன்று பார்த்து விடுவது என்ற உறுதியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள். அம்மா சமாதி ‘புகழ்’ மெரினா கடற்கரையில் மோடிக்கு பாடைகட்டி ஒப்பாரியும் செய்திருக்கிறார்கள் கட்டிளங் காளையான இளைஞர்கள். சாதி, மத, பாலின பேதங்களை கடந்து உழைக்கும் தமிழ் மக்களின் போராட்டக் குரல் தமிழகமெங்கும் மாபெரும் மக்கள் இசையாய் அணிதிரட்டி வருகிறது. கோமாதாவை கொண்டு மக்களை பிளவுபடுத்த முயன்ற காவி கும்பல்களை காளைகளை கொண்டு எதிர்கொள்கிறார்கள் தமிழ் மக்கள்.
அரசு, நீதிமன்றம், ஓட்டுக் கட்சிகள் எதையும் மக்கள் நம்ப தயாராக இல்லை. காவிரி, முல்லை பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக வெடித்திருக்கிறது. அரசுகளையும், ஆளும் வர்க்கத்தையும் அந்தக் குரல் இடையறாது அச்சுறுத்துகிறது. மைய ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்தின் அரசியல் முழக்கத்தை மறைத்து விட்டு வெறுமனே அடையாள போராட்டமாக காட்ட முயற்சிக்கின்றன.

நிரந்தர தீர்வு காணும்வரை வாடிவாசலுக்கு யாரையும் அனுமதிக்கமாட்டோம் .. அவசர சட்டத்தை நிராகரித்த மக்கள்!

TN Governor passes Jallikattu ordinanceமதுரை: நிரந்தர தீர்வு காணும் வரை வாடிவாசல் முன் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று அலங்காநல்லூரில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர தீர்வு தான் வேண்டும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். ஆனால் இந்த அவசர சட்டத்தை போராட்ட களத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்துவிட்டனர். தங்களுக்கு நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடப்பதற்கான சட்டமே தேவை என பொதுமக்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தமிழ்நாட்டில் நிரந்தர தடை ! மெரீனாவில் சங்கு ஊதப்பட்டது!


பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை இனி குடிக்கக் கூடாது, கடைகளில் விற்கக் கூடாது என, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தென் தமிழ்நாட்டின் நீராதாரங்களை உறிஞ்சுவதில் இந்த வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு முக்கியப் பங்குண்டு. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைத்தான் இந்த நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனால் குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது என்ற கோஷம் மக்களிடம் ஓங்கி ஒலிக்கிறது. சமீபத்தில் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை கடையில் இருந்து வாங்கி சாலையில் ஊற்றிய போராட்டமும் கோவில்பட்டியில் நடந்தது. இப்போது சென்னைக்கு அருகில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்து இறுதிச் சடங்கு நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதும் நடந்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் கையெழுத்து கட்டாயம் தேவை: கி.வீரமணி


ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையெழுத்தும் கட்டாயம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வரவிருக்கும் அவசர சட்டத்திற்கு, மத்திய அரசின் மூன்று துறைகளின் ஒப்புதல் பெற்றால் மட்டும் போதாது; இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையெழுத்தும் கட்டாயம் தேவை.இல்லையெனில் இதை வைத்து, பிறகு சட்டச் சிக்கல் ஏற்படலாம்;

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த போலீஸார்: பதறிய உயர் அதிகாரிகள்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட் டுக்கு ஆதரவான தொடர் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதில் இரு போலீஸார் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் போலீஸ் உயரதிகாரிகள் பதட்டத்துக்கு உள்ளாயினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் 4-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழர் மரபு மற்றும் ஜல்லிக்கட்டின் சிறப்புகள் குறித்து ஆக்ரோஷமாக பேசினார்.
அப்போது அங்கு சீருடையில் பணியில் இருந்த, புதுப்பேட்டை ஆயுதப்படைப் பிரிவு காவலர் மாய அழகு, திடீரென கூட்டத்துக்குள் நுழைந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக மைக்கில் பேசினார். இது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறை உயரதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

அதிமுக அமைச்சர்கள் மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைப்பார்கள் # பன்னீர்.

உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?
அலங்காநல்லூரில் குறைந்தது இரண்டு மாடுகளை வாடிவாசல் வழியே விடுங்கள்...நாங்கள் போய்விடுகிறோம் என்று இளைஞர்கள் கெஞ்சிய பொது....
உங்கள் ஏவல் படை அவர்களை தடியடி நடத்தி 250 பேரை கைது செய்தீர்கள்...
முதல்வர் அதைப்பற்றி வாய் திறக்கவே இல்லை.
மாறாக தடியடி நடத்தவே இல்லை என்று....
ஜெயாவைப்போலவே கூசாமல் வாய் நிறைய பொய் சொன்னீர்களே பன்னீர் !

மக்கள் இரவும் பகலும் தொடர்ந்து வெய்யில் குளிர் மழையில அவதிப்பட்டுக்கொண்டு இருந்த பொது உங்க மந்திரிகளின் எவனாவது அவங்களிடம் போனானா ? நீங்கள் மக்களின் அக் மார்க் விரோதிகள்...
இப்போது கொண்டுவந்த அவசர சட்டத்தை பொங்கலுக்கு முன் கொண்டுவந்திருக்கலாமே ஏன் கொண்டுவரலே ?
பொய்சொல்லி மக்களை ஏமாற்றி ஏமாற்றியே பழக்கப்பட்டுவிட்டீர்கள் பன்னீர்.

தமிழகமெங்கும் போராட்டம் தொடரும் ! போராட்டக்காரர்கள் திட்டவட்ட அறிவிப்பு

இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர் வித்யாசாகர்ராவ். நாளை காலை 10 மணிக்கு மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னை போராட்டக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், கும்பகோணம், கும்மிடிப்பூண்டி, விருதுநகர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் போராட்டக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.நக்கீரன்

என்னமா கவிதை வாசிக்கிறாங்க... இந்தி ன்னா இனிக்குதா தமிழுனா கசக்குதா?

1* சூடு போட்டா வரும் கண்ணீரு நீ பேசவே மாட்டியா பன்னீரு 2*அடுப்புல வெச்சா வெந்நீரு
அடிவாங்கவாது வாடா பன்னீரு
3* மழைத்தண்ணி சுடுதண்ணி பச்சத்தண்ணி பன்னீரு ஒரு மிச்சர் தின்னி...
4* திண்டுக்கல் னா ரீட்டா வெளியே போடா பீட்டா
5*500, 1000 செல்லா நோட்டு மோடி ஒரு வெத்துவேட்டு
6* நல்லெண்ண வேப்பெண்ணெ விளக்கெண்ண நாங்க ஜல்லிக்கட்டு நடத்துணா உனக்கெண்ண
7* Beata beata பிஞ்சிபோன Bata
ரோஜா செடி பூச்செடி மோடிய செருப்பாலடி
8* சின்னம்மா சின்னம்மா Ops எங்கமா
9*ஜானி ஜானி S papa ops Escape ஆ
10* மியாவ் மியாவ் பூன மொடி ஒரு கேன
11*அதோ பாரு வானம் ops ஆ காணோம்
12* விவசாயி கண்ணுல கண்ணீரு எங்கடா போன பன்னீரு
13*அடங்காத கூட்டம் இது தமிழனோட கூட்டம்
14* அடங்காத கூட்டம் இனிமேதான் ஆட்டம்
15* வாடிவாசல் திறக்காவிட்டால் மோடி வாசல் மூடப்படும்
16* ஜல்லிக்கட்டு Culture ரு சட்டசபைய கலச்சிரு
17*ஜல்லிக்கட்டு Culture ரு Ops திண்ணுவா மிட்ச்சரு
18*தமிழகமே கண்ணீரு என்னடா செஞ்ஜ பன்னீரு
19*மிட்சரு இங்க Ops உ எங்க
20*மோடி மோடி மெரினாவுக்கு வாடி
21*தமிழகம் சிந்துது கண்ணீரு இன்னுமா மி்ட்சர் திங்குர பன்னீரு
22* சு.சு சாமி ஆம்பளயா இருந்தா வா நீ

நிரந்தர தடை நீங்குவரை போராட்டம் தொடரும் .... போராட்ட குழுவினர் அறிவிப்பு !

நிரந்தர தடை நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும்: மெரீனாவில் போராட்டக்குழுவினர் தகவல் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை தாங்கள் வரவேற்றாலும், நிரந்தர தடை நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற வேண்டும். அதோடு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடையை நீக்க வேண்டும். இன்று 5வது நாளாக போராடுகிறோம். இந்த 4 நாட்களும் எங்களுக்கு 4 நிமிடம் போலத்தான் இருந்தது. இன்னும் 40 நாட்களும் இங்கே அமர்ந்து போராட தயாராக இருக்கிறோம். இந்த அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. அவசர சட்டம் என்று சொல்கிறார்கள். இந்த அவசர சட்டம் 6 மாதத்திற்கு பிறகு செல்லுமா என தெரியாது. நிரந்தர தீர்வு வேண்டும். 1960 மிருகங்கள் வதை தடை 11 செக்சன் Nல் திருத்தம் வேண்டும். அது வந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க பதியப்படும் என்றனர். நக்கீரன்

கூகிளின் சட்டர்லைட் கண்களில் தெறித்த ஜல்லிகட்டு போராட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலபேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ்!
2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் கிரவுட்சோர்சிங் என்று கூறப்படும் தொழில்நுட்பத்தின் மூலம், அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது.
இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும்.
அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.

போராட்ட தளம் வலிமையாக உருவாகி விட்டது ... தொடர்ந்து எழும் சமுக பிரச்சனைகளுக்கு போராட களம் அமைந்து விட்டது ? அரசுகள் அதிர்ச்சி!

தமிழக இளைஞர்கள் போராட்டம் < மத்திய - மாநில அரசுகள் அதிர்ச்சி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம், மத்திய - மாநில அரசுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக, மாணவ - மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அதனால், கடந்த ஆண்டைப் போல, பொங்கல் வரைபோராட்டம் இருக்கும்; பின் போராட்டம் பிசுபிசுத்து விடும் என, போலீஸ் அதிகாரிகள் நம்பினர். யாரும் எதிர்பாராதவிதமாக, போராட்டம் சூடுபிடித்துள்ளது. ஜாதி, மத பேத மின்றி, அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. அஹிம்சை வழியில் நடக்கும் போராட்டம், மத்திய - < மாநில அரசுகளையும், அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.< <இது குறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது:
/ சமூக வலைதளங்கள் உதவியுடன், மிகப்பெரிய போராட்டத்தை,மாணவர்கள் மற்றும் இளைஞர் கள் நடத்தி வருகின்றனர். இந்த எழுச்சி, இந்த போராட் டத்துடன் முடிந்து விடுமா என்பது சந்தேகம். அடுத் தடுத்து சமூக பிரச்னைகளுக் காக, இது போன்ற போராட்டங் கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

மெரினாவில் 7 லட்சம் பேர் ... இந்து பத்திரிக்கை தகவல் .. இந்திய அரசுக்கு நிலைமை இன்னும் புரியவில்லை

கடற்கரை நோக்கிச் செல்லும் சாலைகளில் மக்கள் வெள்ளம் ; ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று 4-வது நாளாக தொடர்ந்த போராட்டத்தின்போது 7 லட்சத்துக் கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். > ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சென்னை மெரினா கடற் கரையில் 4-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டக் களத்தில் நேற்று காலை 8 மணி அளவில் 2 ஆயிரம் பேர் மட்டுமே இருந்த நிலையில், பிற்பகலில் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. நேரம் ஆக, ஆக, மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து, அந்த இடமே ஸ்தம்பித்தது.
அங்குமட்டுமில்லாது, கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக் கம், வெட்டுவாங்கேணி, நீலாங் கரை, பாலவாக்கம், கொட்டிவாக் கம், திருவான்மியூர், அடையார் மற்றும் கோடம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், தேனாம்பேட்டை, புளியந்தோப்பு, புழல், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தினர்.

முதலமைச்சர் பதவிக்கு சசிகலாவும் நடராஜனும் மட்டுமல்ல திவாகரனும் போட்டியாம் .. முதல்லை பன்னீர் கிட்ட இருந்த புடுங்கணுமே?



நடராஜன் கனவு!
இதனை அறிந்து சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ""ஜெ. இறப்புக்குப் பிறகு கார்டனில் தான் வளைய வந்துகொண்டிருந்தார் நடராஜன். பொங்கலுக்கு முன்பு கார்டனுக்கு வந்த திவாகரன், நடராஜனுடன் சீரியஸாக விவாதித்தார். அதனடிப்படையில் இருவரும் டி.டிவி. தினகரனுக்கும் அவரது மைத்துனர் டாக்டர் வெங்கடேஷுக்கும் எதிராக சசிகலாவிடம் பேசினார்கள். அதில் கோபப்பட்ட சசிகலா, இருவரையும் கடுமையாக கண்டித்தார். ஆட்சி அதிகாரம் முழுமையாக சசிகலா வசம் வரும்வரை தவறான பேச்சுக்களைப் பேசக்கூடாது என கண்டிஷன் போட்டிருந்தார். முதல்வராக வேண்டுமென்பது நடராஜனுக்கும் கனவு. அதனால், மத்திய அரசு கொடுத்து வரும் நெருக்கடியை பயன்படுத்தி, ’"முதல்வர் பதவியில் நீ (சசி) உட்கார வேண்டாம்; எனக்">இதனை சசிகலா ரசிக்கவுமில்லை, ஏற்கவுமில்லை. இதனால் தனது மனைவி மீதே கடும் கோபத்தில் நடராஜன் இருந்து வந்த நிலையில்தான் தஞ்சைக்கு வந்து திவாகரனுடன் ஆலோசித்தார். அப்போது, ’""அக்காவை (சசி) தினகரனும் அவரது மச்சான் வெங்கடேசும் மயக்கி வெச்சிருக்காங்க. சொத்துக்குவிப்பு வழக்கில் அக்காவுக்கு ஏதேனும் ஆச்சுன்னா தினகரனை சி.எம்.ஆக்குனாலும் ஆக்கிடுவாங்க''’ என சொல்லியிருக்கிறார் திவாகரன்.

அழகிரி உணர்ச்சி பேச்சு : இன்றுதான் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள்!



மக்களின் போராட்டத்தை அரசியல்கட்சிகளின் போராட்டம் நீர்த்து போக செய்யுமா?

All Opposition Parties/Leaders in #Tamilnadu Sub : #Jallikattu #Jallikattufight #ban #peta #rss Ref : M. K. Stalin Dr. S. Ramadoss G Rama Krishnan R Mutharasan E.V.K.S.Elangovan Su.Thirunavukkarasar Thol.Thirumavalavan Seeman
கொட்டும் மழையிலும் ., கடும் பனியிலும் மாநில மற்றும் மத்திய அரசின் இயலாமையை ., மாநில மத்திய சர்க்கார் எதிர்ப்பு களத்தில் அவ்வளவு ஆவேசமாக உள்ளது .. சில இடங்களின் மோடி அவர்களின் பாடையை கொளுத்துகிறார்கள் பெண்கள் ஆவேசமாக "சின்னமா #OPS எங்கம்மா" என்று எழுப்பும் கோஷம் பெரும் வரவேற்பு பெறுகிறது ... எதிர்க்கட்சி நீங்கள் நடத்தும் உண்ணாவிரதம் ரயில் மறியல் எக்ஸ்ட்ரா போராட்டத்தின் மூலம் நீர்த்து போக செய்து விடாதீர்கள் . #DMK #congress #PMK #Communists #vck #ntk எல்லோரும் உங்கள் போராட்டத்தை விலக்கி ஆதரவு மட்டும் கொடுங்கள் .. Kindly take a back seat and do extend back end support only to #Students 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்து விளையாடுகிறார்கள் மாணவர்கள்.. கள நிலவரம் நேரில் 14 மணி நேரம் பார்த்த பிறகே இதனை சொல்கிறோம்..  முகநூல் பதிவு சவேரா

திராவிட கலாசாரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்குச் சமமானது

PawanKalyanC ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் பந்தயம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையானது திராவிட கலாசாரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்குச் சமம் என்று ஜன சேனைக் கட்சித் தலைவரும், தெலுங்கு திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:
ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் பந்தயம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என ஜன சேனை வலியுறுத்துகிறது.
மிருக வதை காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இவ்வாறான கண்டிப்பான அணுகுமுறையை அரசு கடைபிடிக்குமாயின், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சி, கோழி இறைச்சி குறித்த புள்ளிவிவரங்களை ஆராய வேண்டியது அவசியமாகிறது.

தமிழகத்தில் நாளை ஜல்லிக்கட்டு? தற்காலிக அனுமதி?

தமிழகத்தில், நாளை ஜல்லிக்கட்டு நடத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தடையை நீக்கி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் எனக்கோரி, தமிழகம் முழுவதும், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அகிம்சை வழியில் போராடி வருகின்றனர்.< 'அலங்காநல்லுாரில் வாடிவாசல் திறந்து, ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம்' என, அவர்கள் அறிவித்துள்ளனர்./>எனவே, ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் பன்னீர்செல்வம்
மேற்கொண்டு உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக, இன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், நாளை, அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டு நடத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதை, முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்க வாய்ப்பு உள்ளது.

திமுக தனி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

mksஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. அரசு உடனடியாக செய்ய வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே, நாளை திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து சற்றுமுன் அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக சார்பில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் கொண்டுவரக் கோரியும், மத்திய அரசே நேரடியாக அவசரச்சட்டம் கொண்டு வராததைக் கண்டித்தும் இன்று மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கருதி காவல்துறையின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து முன் கூட்டியே விடுதலையானாலும், ஜல்லிக்கட்டு நடத்தப்படும்வரை திமுக இப்பிரச்சினையில் அயராது குரல் கொடுக்கும். இதற்கிடையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் ABVP? : விவசாய கோரிக்கைகள் பீட்டாவாக மட்டும் சுருங்கியது ஏன்…

abvpthetimestamil : ராஜசங்கீதன் ஜான்<> போராட்ட களத்தில் இருக்கும் சில உண்மை விவரங்களை பகிர விரும்புகிறேன். இந்த சிக்கல்கள் எல்லா பெருந்திரள் போராட்டங்களிலும் உள்ளவைதான். எனினும் இந்த சிக்கல்களுக்குள் மற்ற சில விஷயங்களும் புதைந்திருப்பதால் சற்றே விரிவாக கூற விரும்புகிறேன். ‍
Disclaimer: இளைஞர் போராட்டத்தில் பெருமதிப்பு கொண்டிருப்பவன்தான் நான். இன்னும்! ‘இதைத்தான் நாங்கள் முன்னாடியே சொன்னோமே’ கோஷ்டிகள் தயவுசெய்து வேறு பதிவுகளுக்கு சென்று விடவும். சில தெளிவுகளை ஏற்படுத்தி கொள்ளத்தான் இந்த முனைப்பு, இருப்பதை குலைப்பதற்கு அல்ல. ‍‍
மெரீனாவில் போராட்ட குழுக்கள் நான்காக இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோரிக்கை பட்டியல். ஆனால், தொடங்கப்பட்ட போது ஒரு குழுதான் இருந்தது. அந்த குழுவும் விவேகானந்தர் இல்லத்தின் எதிர்புறத்தில் முதல் நாள் நின்று போராடியது. அதன் பின் கூடிய கூட்டத்தில், பலதரப்பட்ட கருத்துகள் அலையாடி ஏற்பட்ட முரண்களால், முதற்குழு கலங்கரை விளக்கத்தை நோக்கி சற்று நகர்ந்து தன் போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. ‍‍

: சமூகத்தை தூய்மையாக்கும் இளைஞர் படை!


minnambalarm :ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் போராடும் இளைஞர் படை, தமிழகத்தின் கலைகளை வளர்ப்பதைப் பற்றி நேற்றுப் பார்த்தோம். இன்று சமூக அக்கறையுடன் அவர்கள் செயல்படுவதைப் பற்றிப் பார்ப்போம்.

சென்னை மெரினா கடற்கரைக்குள் நுழையும் இளைஞர்களில் பலர் கைகளில் கையுறைகளுடன் நுழைகிறார்கள். முதலில் சுகாதாரம் கருதி பாதுகாப்புடன் வருகிறார்கள் என நினைத்தால், நம்மைக் கடந்து சென்றவர் திடீரென குனிந்து கீழே இருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து கையில் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டு சென்றார். அவரைப் பின்தொடரலாம் எனக் கூட்டத்துக்குள் புகுந்து சென்ற போது, எதிரே வரும் யாரையும் பொருட்படுத்தாமல் கண்ணில் படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பைக்குள் திணித்துக்கொண்டு சென்றார். அவரைப் பார்த்த சிலரும் அவர்களுக்குக் கீழே இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து அவரது பைக்குள் போடத் தொடங்கினார்கள்.

திருநாவுக்கரசர் ... ஒரு நிஜமான குற்றவாளியின் காலம் கடந்த ஒப்புதல் வாக்குமூலம்

தமிழ்நாடு கெட்டது என்னாலே.. : காங்கிரஸ் திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு : சென்னை ராணி சீதை மன்றத்தில் இன்று இரவு ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக காங்கிரசின் தற்போதைய தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பேசினார். ‘’எம்.ஜி.ஆரைப்பற்றி பல்வேறு நினைவுகளை பேசியவர், அண்ணன் ஆர்.எம்.வீ. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபோது ஆர்.எம்.வீ. கிட்டத்தட்ட சிஎம் மாதிரி செயல்பட்டார். ஆனால் அவரே சிஎம் ஆக வேண்டியதை கெடுத்தது நான் தான். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் அப்போதே சிஎம் ஆகி இருந்தால் இந்த நாட்டில் இவ்வளவு கேவலம் நடந்திருக்காது. அதற்கு பின் ஒரு சந்தர்ப்பம். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ராகவானந்தம், ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்குவதற்கான ஆதாரங்களூடன் வந்தார் எம்.ஜி.ஆரிடம். புரட்சித்தலைவரும் ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்துவிட்டார். அப்போது தலைவர் அங்கிருந்த என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்டார். நான் தனியாக பேச வேண்டும் என்று சொன்னேன். மாடிக்கு அழைத்து சென்றார். ஒரு மணி நேரம் அவருடன் பேசினேன். கீழே இறங்கி வரும்போது அண்ணன் ராகவானந்தம் என்னிடம், ’’கட்சியையும் நாட்டையும் கெடுத்த பாவத்திற்கு நீ ஆளாகிவிட்டாய்’’ என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார்.

அமெரிக்கா அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார். அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு


வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெனால்டு டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக தேர்வானார். 45வது அதிபர்: வெள்ளை மாளிகையில் இன்று(ஜன.,20) நடந்த பதவி ஏற்பு விழாவில் அமெரிக்காவின் 45- வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். துணை அதிபராக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் கோக், பெப்சி விற்கத் தடை! ஜனவரி 26 முதல் முதல் ! தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு

வெளிநாட்டு நிறுவனமான பீட்டா அமைப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஜனவரி 26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.  விகடன்

வெள்ளி, 20 ஜனவரி, 2017

வட இந்திய ஊடகங்களுக்கு தமிழ்நாடு என்றாலே ஒரவஞ்சனைதான்...இம்முறை வசமாக மாட்டிக் கொண்டது! ஜல்லிகட்டு காளையின் குறி தப்பாது !

உச்சநீதிமன்றதீர்ப்பை
  • காவிரியில் கர்நாடகா மதிக்கவில்லை, முல்லைப் பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மனித பிரமிடு கூடாது என்ற உத்திரவை மகாராஷ்டிரா மதிக்கவில்லை, நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசே மதிக்கவில்லை. ஜல்லிகட்டில் தமிழகத்தை கட்டுப்படுத்த என்ன அருகதை இருக்கிறது?
  • சுப்பிரமணியசாமி, தமிழன் கட்டிய சிதம்பரம் கோவிலை தீட்சதர்களுக்குக் கொடு என சொன்னான், உச்சநீதிமன்றமும் கொடுத்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ்நாட்டில் மட்டும் கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.
  • மாணவச் சமூகமே, பிடிஇறுகட்டும், டெல்லியின் கொம்பை பிடிவிடாதே

    டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது ! விடாதே ! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு ! டெல்லியை அடக்கினால் அச்சப்படும் அடங்கிப்போனால் நம்மை விரட்டும் ! தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடி இருகட்டும், டெல்லியின் கொம்பை பிடி விடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. 
    சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீகாட்டுத்தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும். சிறைபட்டது காளை மட்டுமல்ல, காவிரி மட்டுமல்ல, கல்வி உரிமை மட்டுமல்ல, தமிழர் பண்பாடு மட்டுமல்ல மொத்த தமிழினமும்தான். டெல்லி ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் உரிமைப் போராட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
    7 கோடி மக்களின் பிரதிநிதிகளான தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். காவிரியை தடுத்த மோடியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம், செய்யாத குற்றத்திற்கு டெல்டா விவசாயமே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. எந்த சட்டமும் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே இரவில் செல்லாது என 100 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடியால், ஜல்லிகட்டு நடத்த முடியாதா? செத்துப்போன மொழியான சமஸ்கிருதத் திணிப்பு பள்ளிகளில் சி.பி.எஸ்இ. பாடத்திட்டம் திணிப்பு: தமிழக மாணவர்களை நடுத்தெருவில் நிறுத்த நீட்தேர்வு.

    ஜல்லிக்கட்டு’ எனக்குப் பிடிக்கல. ஆனால், மாணவர் போராட்டம் பிடிச்சிருக்கு... மதிமாறன்

    சேவல் சண்டைக்காகச் சேவல் வளக்கிறவன் கோழி சாப்பிட மாட்டானா? இல்ல சேவலதான் திங்க மாட்டானா? கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்ட பலியிட்டுச் சாமியாடா தின்னுது?
    அதென்ன மாடு புடிக்கிறதுக்கு மட்டும் மாட்டிக்கறி சாப்பிடக் கூடாது?
    கறிச் சாப்பிடாதவனால், மாட்டைப் புடிக்க முடியாது. மாட்டு மூத்திரத்தைதான் புடிக்க முடியும். கறி சாப்பிட்டாதான் ஜல்லிக்கட்டு காளையைப் அடக்க முடியும். மாட்டுக்கறி சாப்பிடறவனாலதான் இன்னும் நல்லா மாடு புடிக்க முடியும்.
    பயம். நம்ம மாட்டை மாட்டுக்கறி சாப்பிடறவன் புடிச்சிறபோறான்னு.
    ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கியவர்கள் சைவம் சாப்பிடுகிறவர்கள். ஆனால், பல மூட பிரமுகர்கள் கம்பு சுத்துறது மாட்டுக்கறி சாப்பிடறவன்கிட்ட. இந்த அநியாயத்தை மாடே ஒத்துக்காது.
    ‘ஜல்லிக்கட்டு’ எனக்குப் பிடிக்கல. ஆனால், மாணவர் போராட்டம் பிடிச்சிருக்கு. ஏகாதிபத்திய – பார்ப்பனிய கூட்டான Peta வுக்கும் குறிப்பாக மோடி க்கு எதிரான முழக்கங்களோடு தமிழ்நாடு தழுவிய பெரிய முதல் போராட்டம் இது; அதுவும் மாணவர் நடத்துவது.

    ஜல்லிகட்டு அவசர சட்டம் ..ஒரு கண்துடைப்பு ஏமாற்று நாடகம்?. மீண்டும் ஒரு தற்காலிகம் திட்டம்?

    ஓ பி எஸின் இந்த அவசர சட்ட நாடகத்தின் ஆயுள் ஒரு வாரத்துக்கு மட்டுமே.
    அதற்குள் ஜல்லிக்கட்டு ஒப்புக்கு நடத்திவிட்டு... மாணவர் போராட்டங்களை கலைந்துபோக விடலாம்
    போராட்டக்காரர்கள் மோடிக்கும் பன்னீருக்கும் நன்றி நன்றி நன்றி என்று புகழ்மாலை சூட்டலாம்.
    அதன் பிறகு வழக்கம்போல உச்சநீதிமன்ற தீர்ப்பும் பீட்டாவின் தர்பாரும் தொடரும்....
    மறுபடியும் வரும் பொங்கலுக்கு இதே நாடகம் மீண்டும் அரங்கேறும்.
    அப்போது இந்த மாணவர் படை ஒன்று திரள்வது சந்தேகமே..

    இறுதிவரை தமிழின எதிரி மோடி அரசு காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீஎக்கப்போவதுமில்லை..
    பீட்டாவை தடை செய்யப் போவதுமில்லை.

    அசதுத்தீன் ஒவைசி: ஜல்லிகட்டு போராட்டம் இந்துத்வா சக்திகளுக்கு மிகப்பெரிய பாடம்!


    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டம் இந்துத்துவா சக்திகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று, அனைத்திந்திய மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஒவைசி, ‘ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது இந்துத்துவா சக்திகளுக்கு பாடமாக அமைந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை இந்த தேசத்தில் அமல்படுத்த முடியாது. இந்த தேசம் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும் தேசமாக மாற்ற முடியாது. நாம் பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்டாடும் தேசமாக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
    மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொது சிவில் சட்டம் அமல்படுத்தும் முயற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதை பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

    காட்சிப்பட்டியலில் இருந்து காளையை நீக்க மத்திய அரசு அவசர சட்டம்?

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்று காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி அவசர சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி இனி வரும் காலங்களில் தடையின்றி நடைபெற வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். லைவ்டே

    ஜல்லிகட்டு திமுகவை வசைபாடுவது அறியாமையின் வெளிப்பாடு . கிருபா முனிசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்!

    ஜல்லிக்கட்டு போராட்ட குரல்களில் ஒன்றாக தி.மு.க.வையும், ஸ்டாலினையும் வசைபாடுவதை கேட்க நேர்கிறது.
    போராட்ட நோக்கத்தின் பின்னணியும், அரசியலும் தெரிந்துக் கொள்ளாத அறியாமையின் வெளிப்பாடே இது!
    தமிழக அரசு ஒருபோதும் ஜல்லிக்கட்டிற்கு எதிராக இருந்ததே கிடையாது. அதுவும் குறிப்பாக தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசுக்கு எதிராக "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009" சட்டத்தை இயற்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சவால் விடுத்தது. அதன் அடிப்படையிலேயே 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தமிழ்நாடு அரசே ஜல்லிக்கட்டை எடுத்து நடத்தியது.
    அப்படியாக தி.மு.க. அரசு கொண்டுவந்த "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009" சட்டத்தை அகற்ற கோரியே 'பீட்டா' அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் காரணமாகவே ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.
    உண்மையிலேயே அவர்கள் குற்றம்சாட்ட வேண்டுமானால், தி.மு.க.விற்கு பிறகு ஆட்சிக்கு வந்து ஜல்லிக்கட்டை நடத்தாத ஜெயலலிதாவின் ஆ.தி.மு.க. ஆட்சியையே குறைக்கூற வேண்டும்!

    மாணவர் போராட்டமும் -- பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளும்

    சசிகலா தேறாது...பன்னீர் போண்டி ஆகாது...தீபா களை கட்டாது
    .ம. ந .கூ ....வைக்கோ ...சீமான் இனியும் உதவாது
    என்ற முடிவுக்கு வந்துவிட்டது போலும்...பார்ப்பன சமூகம். அதனால்தான்....திமுக என்னும் திராவிட கட்சிக்கு எதிராக... எம்ஜிஆரைப்போல தங்கள் சொற்படி தலையாட்டும் ... ஒரு பொம்மை தலைமையை ... மாணவர்கள் போராட்டக்களத்தில் இருந்து தேடிப்பிடிக்க துவங்கிவிட்டார்கள்.
    பார்ப்பன ஊடகங்கள் இப்போதே...மாணவர்கள் இளைஞர்கள் என்று போர்வையில் தங்கள் ஆளை திணித்து முன்னிறுத்தத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
    தங்கள் சொற்படி ஆடும் ஒரு சப்பாணியை முதல்வராக அமர்த்திவிட்டு ......... ஆட்சி அதிகாரத்தை எப்போதுமே தங்கள் கைக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதே ... தமிழக பார்ப்பன ஆதிக்க அரசியல் சித்தாந்தம்
    ஹிந்து...விகடன் மணி நாளேடுகள் செய்திகளை உற்று நோக்கினால் அவர்கள் திட்டம் புலப்பட்டுவிடும்.
    மாணவர்கள் வழக்கம்போல ஏமாந்துவிடக் கூடாது  முகநூல் பதிவு சென்னை தாமோதரன்

    ஸ்டாலின் கனிமொழி கைது ... ரயில் மறியல் போராட்டதில் திமுக ..

    சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயி்ல மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் தி.முக..,வினர் கைது செய்யப்பட்டனர். திமுக போராட்டம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று கடையடைப்பு போராட்டம், தனியார் பள்ளிகள் விடுமுறை, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். உறுதுணை: இதன்படி சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க.,வினர் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி கைது செய்யப்பட்டார். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு தி.மு.க., உறுதுணையாக இருக்கும் என அவர் கூறினார். தமிழகத்தின் பல இடங்களில் ஏராளமான தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமால்ர்

    போலீஸ்காரர்களை தட்டி எழுப்பிய ஜல்லிகட்டு : வேலையே போனாலும் உங்களோடு நானும் வருகிறேன்

    மத்திய அரசுக்கு எதிரான  ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது. மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து துறை சார்ந்தவர்களும் தமிழால் இணைந்தனர். இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துத் துறை எஸ்.ஐ. சேகரன் என்பவர் சீருடையுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். ” உங்கள் போராட்டத்தை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை. நானும் உங்களோடு போராடுகிறேன்” என்றார். ஆனால் போராட்டக்காரர்கள், ” ஐயா நீங்கள் இப்படி சொன்னதே எங்களுக்கு போதும். உங்கள் வீட்டில் உங்களது மகன்கள்  இருந்தால் அனுப்பி வையுங்கள், உணர்வுள்ள ஒரு தமிழர் காவல்துறை அதிகாரியாக இருப்பது தான் எங்களுக்குத் தேவை” என அனுப்பி வைத்தனர்.

    1965 இல் இந்தி பேயை விரட்டிய வீரம் மீண்டும் வந்தது பாரீர் வீறு கொண்டெழுவதை பாரீர்


    மின்னம்பலம்: தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை அண்ணாநகரில் இருந்து, கோயம்புத்தூரில் இருந்து ஜல்லிக்கட்டு நடக்கிற அல்லது நடக்காத பகுதிகள் என்று இல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த எல்லாப் பகுதி இளைஞர்களும், தமிழ் கலாசாரத்தின், பாரம்பரியத்தின் அடையாளமாகிய ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற குரல் எழுப்பி எழுந்திருக்கிறார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாத இடத்தில் ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரவென்றும், பகலென்றும் பாராமல் திரண்டு, தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் முன்னின்று நடத்தவில்லை. தன்னெழுச்சியாக இந்தப் போராட்டம் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. மிக விரைவாக சிற்றூர்களுக்குக்கூட பரவி வருகிறது.

    ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் ... பன்னீர்செல்வம் வாக்குறுதி! போராட்டத்தை கைவிடவேண்டுமாம்! எப்படீ?

    ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும்: டெல்லியில் ஓ.பி.எஸ். பேட்டி டெல்லியில் தமிழக முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறபிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என்றார். பன்னீர் செல்வம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழக அரசு சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இதையடுத்து டெல்லியில் தங்கி சட்ட வல்லுநர்களுடன் விவாதித்தேன். அதன் அடிப்படையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு மாநில அரசு திருத்தம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல்ல  ராவோடு  ராவா  சட்டத்தை கொண்டுவாங்க.. .ராவோடு  ராவாக பதவி பிரமாணம் செய்ய தெரியுதில்ல?

    கீழடி அகழாய்வு முடக்கம் .. தமிழர்கள் மீது மோடி தொடுத்த போர்? தொடர்முழக்கப் போராட்டத்துக்கு அழைப்பு!


    தமிழர்களின் நாகரிக வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக, மதுரை அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுக்கு முந்தைய தமிழர்களின் சுமார் 5300 பண்டைய பொருட்கள் கண்டறியப்பட்டது. கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. ஆப்கன் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ் மரபில் இருந்திருக்கிறது என்ற தகவல்கள் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு பரிணாமத்தை வழங்குகின்றன. காவிரிப்பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய தொல்லியல்துறை தமிழகத்தில் கீழடியில் ஆய்வு நடத்தி இருக்கிறது. ஆனால் கீழடி அகழாய்வு தற்போது தொடர்ந்து நடைபெறவில்லை.

    தமிழகமெங்கும் ஜல்லிகட்டு முழக்கம்! அரசியல்வாதிகளை மிரள வைத்து ஆட்சியாளர்களை நடுங்க வைத்து ...


    மின்னம்பலம் :ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று மோடி கைவிரித்து விட்ட நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் இன்னும் தமிழகம் திரும்பவில்லை. ஆனால் மோடியின் அறிவிப்பை பிரதமர் அலுவலகம் ட்விட்டர் மூலம் வெளியிட்ட சில மணி நேரங்களில் தமிழகத்தில் போராட்டங்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.  

    மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை இயங்காது

    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:< தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு விழா இந்த ஆண்டும் நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக் குழு சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு எங்கள் சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது.

    ஜல்லிகட்டு .. பெங்களூர் அதிர்ந்தது இப்படித்தான் .. களத்தில் இருந்து நேரடி விபரம்!

    .nisaptham.com:  பெங்களூரில் இவ்வளவு கூட்டம் சேருமென்று எதிர்பார்க்கவில்லை. நேற்றிலிருந்தே வாட்ஸப் குழுமங்களில் பரவலாக பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்று மாலையில் ஒரு செய்தி வந்தது- வியாழன் மாலை 4 மணிக்கு டவுன்ஹாலில் திரண்டு விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. அந்திவேளையில் சில இளைஞர்களிடம் பேசிய போது அனுமதியளிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் இரவில்தான் கடிதம் கைக்கு வரும் என்றார்கள். ஆனால் இரவு வரைக்கும் கிடைக்கவில்லை. இரவு பத்து மணிக்கு மேலாகத்தான் அனுமதியில்லை என்ற தகவல் வந்தது.& இந்த உரையாடல் அத்தனையும் வாட்ஸப் குழுமங்களில்தான் நடைபெற்றது.& பெங்களூரில் அனுமதியில்லாமல் கூட்டம் நடத்துவது லேசுப்பட்ட காரியமில்லை. வேறு மாநிலம். இப்பொழுதுதான் பிரச்சினைகள் உண்டாகின. ஆனாலும் இளைஞர்கள் உறுதியாகத்தான் இருந்தார்கள். ‘யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் போறேன்’ என்று பிலால் என்கிற இளைஞர் செய்தி அனுப்பியிருந்தார். அவரை நேரில் எல்லாம் பார்த்ததில்லை. குழுமத்தின் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். அவரைப் போலவே இன்னமும் பல இளைஞர்கள்.

    மதிமாறன் :பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் எப்போதுமே கள்ளக்கூட்டு. சாட்சி Peta.


    தேச விரோத Peta + தேச பக்தி = கள்ளக்கூட்டு
    சுப்பிரமணிய சுவாமியை கொண்டு வந்து போராடும் மாணவர் மத்தியில் ஒப்படைத்து விடுங்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பதை விடவும் அது முக்கியமானது.
    சிறப்பான முறையில் மாணவர்களே ஜல்லிக்கட்டை நடத்தி முடிப்பார்கள். பேராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எளிய வழி.
    18 தேதி.
    ‘பொறுக்கி என்று தமிழர்களை திட்டிய சு.சுவாமி மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சு. சுவாமி பகிரங்க < மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்ற முழக்கமும் முதன்மையாக இருக்க வேண்டும்.‘Peta தேச விரோத அமைப்பு’ என்று மு.க. ஸ்டாலின் சொன்னதற்கு, ‘விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி’ என்று விலங்காபிமானத்தோடு ‘சைவ உணவு’ பிட்டா அமைப்பாளர்களிடமிருந்து பதில் வந்திருக்கிறது. நல்லது.
    காலில் சங்கிலியிட்டு, அங்குசத்தால் குத்தி, காதருகே வெடி வெடித்து, கும்பலாக சூழ்ந்து பக்தியினால் இம்சித்து அதிகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது கோயில் யானைகள்.
    ‘யானைகளை கோயிலில் பயன்படுத்தக் கூடாது’ என்று தடை அல்ல கோரிக்கைக் கூட ஏன் வரவில்லை?

    ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு!

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நேற்று இரவு டெல்லி சென்றார். காலையில் அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பாக ஓரு மனுவை கொடுத்து கோரிக்கையையும் அவர் கூறினார். பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை விரைவில் காண்பீர்கள் என கூறினார்.

    எழுத்தாளர் லக்ஷ்மி சரவனகுமார் சாகித்திய அகடெமி பரிசை திருப்பி கொடுக்கிறார் .. ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ..

    LakshmiSaravanakumarஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றாததைக் கண்டித்து சாகித்ய அகாதெமி சார்பில் வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை திருப்பிக் கொடுக்கப் போவதாக எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அறிவித்துள்ளார்.
    "கானகன்' நாவலுக்காக 2016 -ஆம் ஆண்டில் யுவபுரஸ்கார் விருது லஷ்மி சரவணகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதையை அவர் திருப்பிக் கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் கூறியிருப்பது: தமிழ்ச் சமூகம் தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்னைகளுக்காக சிறு சிறு குழுக்களாக மக்கள் போராடினாலும், அந்தப் போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் மழுங்கடிக்கப்பட்டன.

    வியாழன், 19 ஜனவரி, 2017

    மெரீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கோபத்தில் ஆதார் ,வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்தனர் !

    சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் அடுத்த கட்டமாக, பல ஆயிரம் மக்கள் தங்கள் ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்தனர். சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை மாணவர்கள் - இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒருமித்த ஆதரவை அளித்துள்ளனர் இன்று மூன்றாவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நடக்கும் இந்தப் போராட்டத்தில், அடுத்த கட்டமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கிழித்தும் வீசி எறிந்தும் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். 'தமிழர் உணர்வை, பண்பாட்டை மதிக்காத மத்திய அரசின் அடையாளங்கள் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை', 'இனி நாங்கள் இந்தியர் இல்லை... தமிழர் மட்டுமே..' என்ற கோஷங்களோடு அந்த அட்டைகளை வீசி எறிந்துவிட்டனர். இதுவரை வேறு எந்தப் போராட்டங்களின்போதும் பொதுமக்கள் இப்படி அடையாள அட்டைகளை வீசி எறிந்ததில்லை. இதுபோன்ற உணர்ச்சி மிகுந்த போராட்டத்தைப் பார்ப்பதும் பங்கேற்பதும் இதுவே முதல் முறை என்றனர் வந்திருந்த பலரும்
    //tamil.oneindia.com/

    தமிழகம் ஸ்தம்பித்தது தமிழ்த்தலைகள் எல்லாம் ஓரணியில் ! சாது மிரண்டால் ....

    சிங்கத்தை தூக்கி மிதித்தி புலிப்படையடா நாங்கள்சென்னை: ஊர் உலகமே உன்னை உற்றுப்பார்க்க வேண்டும் என்பார்கள். இன்று ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் மொத்தமாக திருப்பி வருகிறது தமிழ்நாட்டு இளைஞர் படை, பெண்கள் படை. தமிழகத்தின், தமிழர்களின் வரலாற்றில் இது மாபெரும் தருணமாக, பெருமை மிகு போராட்டமாக பதிவாகியுள்ளது.
    இது எங்க ஏரியா உள்ளே வராதே.. இதுதான் போராட்டக் களத்தில் இருக்கும் புரட்சி நாயகர்கள் அரசியல்வாதிகளுக்கும், பிறருக்கும் தரும் ஒரே பதிலாக இருக்கிறது. எங்க பிரச்சினையை இதுவரை தீர்க்காத நீங்க எங்களுக்கு வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்பதே இதற்கு அர்த்தமாகும். இதுவரை தமிழ் கூறும் நல்லுலகம் காணாத வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாட்கள் இவை. தமிழர்களின் பொற்காலமாக இது மாறியிருப்பதுதான் வியப்பின் உச்சமாகும். ஒட்டுமொத்த தமிழகமும் வீதியில் திரண்டு நிற்பதை நாடே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்காரர்கள் முட்டாள்கள், எதற்குமே ஒன்று சேர மாட்டார்கள், சினிமா அடிமைகள், வாய்ச் சொல் வீரர்கள், பழம் பெருமை பேசியே வீணாய்ப் போனவர்கள் என்று கூறி வந்த அத்தனை வாய்களும் இன்று அடைத்துப் போய்க் கிடக்கின்றன. ஏன் தமிழக அரசியல்வாதிகளையே ஒட்டுமொத்தமாக புறம் தள்ளி விட்டு பூரித்து ஆர்ப்பரித்து தனது கலாச்சாரத்தைக் காக்க ஆரவாரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.< கடற்கரையில் தமிழ் தலைகள்< இன்று போராட்டக் களத்தில் புரட்சி படைத்துக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர் படை தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்து விட்டது.

    பன்னீர்செல்வம் மோடியை சந்தித்த பின் அருள்வாக்கு : யாவும் நன்மையாக முடியும் ...

    ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார். தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அவருடன் புறப்பட்டுச் சென்றனர். இன்று காலை பிரதமரைச் சந்தித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ‘தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களும் கடிதத்தின் வாயிலாக ஜல்லிக்கட்டு நடத்தவேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

    Free Sex-ற்கு கூட 50 ஆயிரம் பேர் வருவார்களே!! ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விலங்குநல ஆர்வலர் ராதா ராஜன் கருத்து

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தன்னுடைய கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்திருக்கிறார். அந்த கேள்வி-பதில் வகையிலான பேட்டியில்…. “தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேட்டால் 25 ஆயிரம் பேர் வருவார்கள். ப்ரீ செக்ஸ் பற்றிய டாபிக் வைத்திருந்தால், அதற்கு கூட ஐம்பதாயிரம் பேர் வருவார்கள். ஒரு பிரச்சனைக்காக தெருவில் வருவதுதான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த நாடு என்பது சட்டத்தின் ஆட்சியே நடக்கிறது. சட்டத்தின் ஆட்சிதான் இந்த நாட்டில் நடைபெறுகிறது. அதுதான் முக்கியம். உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு சட்டம் பிறப்பிக்க பட்டிருக்கிறது என்றால், அதுதான் நடைமுறைப்படுத்தவேண்டும்” என்றும் ராதா ராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

    மதுரை சேலம் ரயில் சிறைப்பிடிக்க பட்டது.. ரயில் மறியல் தொடர்கிறது

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. 3வது நாளாக நடக்கும் இந்த போராட்டம் தற்போது உக்கிரமாக நடந்து வருகிறது. மேலும் போராட்டக்காரர்கள் ரயிலை மறிக்க ஆரம்பத்து உள்ளனர்.
    இந்த ரயில் மறியல் போராட்டம் கூட சாதாரண அளவில் இல்லை. மதியம் 2 மணி அளவில் மறிக்கப்பட்ட ரயில்கள் எதுவும் இன்னும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  மதுரை மற்றும் சேலத்தில் ஓடும்  ரயிலையே நிறுத்தி மாணவர்கள் புதிய சகாப்தம் ஏற்படுத்தி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் ரயில் மறியல் தீவிரம் அடைந்துள்ளது.
    மேலும் ரயில் மறியல் போராட்டத்தால் தற்போது வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று சென்னை வர வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. லைவ்டே

    ஜல்லிக்கட்டு..கர்நாடகத்தில் போராட்டத்தில் குதித்த கன்னட தமிழ் மக்கள்

    ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு இந்த வாசகத்திற்கு இன்று உலக தமிழர்கள் ஒன்று இணைந்துள்ளார்கள் என்பது உண்மை.
    ஜல்லிக்கட்டை பற்றி தெரியாத நாடுகளில் கூட இன்று ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, லண்டன், மலேசியா உட்பட பல உலக நாடுமுழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளது.
    காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கர்நாடகாவில், இன்று தமிழர்களுக்கு ஆதரவாக, பெங்களூரு டவுண் ஹால் முன்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் என வலைதளங்களில் தகவல் வெளியானது.
    யார் அந்த தகவல் முதலில் வெளியிட்டார் என்று தெரியவில்லை. ஆனால் தகவல் வைரலாக பரவியது.
    சரியாக மாலை நான்கு மணிக்கு 25 நபர்கள் மட்டும் டவுன் ஹால் முன்பு வந்தனர். போலீஸார் அனுமதி வாங்கவில்லை, போலீஸாரிடம் நாங்கள் ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்த வந்துள்ளளோம் என்று சொன்னதும், கன்னடபோலீஸார் முடியாது என்று சொல்லாமல் நாங்களும் ஆதரவு தருகிறோம் நடத்துங்கள் என கூறியுள்ளனர்.