சனி, 10 நவம்பர், 2018

ரணில் விக்கிரமசிங்கா நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார்

Image result for ranil wickremesinghe sajith premadasaNDTV.com : இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே கடந்த 26-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதேநேரம் சபாநாயகர் கரு ஜயசூர்ய, `ரணில் பிரதமராக தொடர்வார்’ என அறிவித்தார். இதேபோல் தமிழ் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு என அறிவித்தனர். இதனால் இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவி வந்தது.
இதனால், கடந்த 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜயசூர்ய, அந்நாட்டு எதிர்க்கட்சிகள், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருவழியாக எதிர்ப்புக்குப் பணிந்த சிறிசேன வரும் 14-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்ட உத்தரவு பிறப்பித்தார்.

தருமபுரி பாலியல் தாக்குதல்: மாணவி உயிரிழப்பு!

பாலியல் தாக்குதல்: மாணவி உயிரிழப்பு!மின்னம்பலம்: தர்மபுரி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது காயமடைந்த மாணவி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி அண்ணாமலை-மலர். இவர்களுக்கு சவுமியா (17) என்ற மகள் உண்டு. இவர் பாப்பிரெட்டிபட்டியில் தங்கி அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த இவர் கடந்த 5 ஆம் தேதி, இயற்கை உபாதை காரணமாக காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார் சவுமியா. அக்கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ் ஆகிய இருவரும் அவரைப் பின்தொடர்ந்து சென்று, ஆற்றங்கரையோரமாகத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம் .. திராவிட அரசியலை பின்பற்றி ஏராளமான இலவச உதவி திட்டங்களை அறிவித்த காங்கிரஸ்

சிறப்புச் செய்தி: ம.பி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும், சர்கார் படமும்!*ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பசுமடம் அமைக்கப்படும். 
 *விவசாயக் கடன் 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.
 *விவசாயிகளுக்கு 50 சதவிகித மின் கட்டணம் குறைப்பு. 
 *வீடுகளுக்கு மின் கட்டணத்தில் முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம். 
 *பால் லிட்டருக்கு ரூ.5 போனஸ். 
*வீடற்றவர்களுக்கு, 450 சதுர அடி மனை மற்றும் வீடுகட்ட 2.5 லட்சம் ரூபாய் மானியத்தொகை. 
 *இலவச மருந்து வழங்கல். 
*மத்தியப் பிரதேசத்திலேயே பொருட்கள் தயாரித்தல். 
*தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு. 
*சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்வு. *பெண்களுக்கு பிஎச்டி வரை இலவச கல்வி. 
பெண்களுக்குத் திருமண உதவித் தொகை ரூ .51,000 
பொதுத் தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் 
 *பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உரிமை.
 *60 வயதுக்கும் அதிகமான பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் பென்ஷன்..
மின்னம்பலம்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தில், தமிழக அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக பாதுகாப்புத் திட்டங்களின் முழுமையான வரலாறு தெரியாமல் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும், தயாரிப்பாளர் கலாநிதிமாறனும் செயல்படுவதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

41 % தமிழகக் கடற்கரையைக் காணோம்! கடற்கரை அரிப்பு ...

41 % தமிழகக் கடற்கரையைக் காணோம்! மின்னம்பலம்:  கடல் அரிமானத்தினால் தமிழகத்தின் 41 விழுக்காடு கடற்கரை அரிக்கப்பட்டு விட்டதாக தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (நவ-10) கடற்கரை ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரம்,புதுச்சேரிக்கு அருகிலுள்ள பொம்மையார்பாளையம் ஆகிய பாதிக்கப்பட்ட இடங்களில் கடற்கரையின் அரிமானத்தை மேலும் தடுக்க தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
துறைமுகங்கள், ஆறுகளில் அணைகள் கட்டப்படுவதால் அங்குள்ள மண் ஓட்டமானது தடைபடுகிறது. அதனால் கடற்கரைக்கு மண் வரவிடாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கடல் இருக்கின்ற கடற்கரையை அரித்து சென்று விடுகிறது.இ
துதான் கடல் அரிமானத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது
991.47 கி்.மீ தொலைவு உள்ள தமிழக கடற்கரையில் ஏறத்தாழ 407.05 கி.மீ பகுதி கடற்கரையில் அரிமானம் ஏற்பட்டுள்ளது.23 விழுக்காடு கடற்கரையில்தான் மணல் உள்ளது.

BBC : இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தீயில் பீகார்.. 3 மாதத்தில் 64 கலவரங்கள்!

சமீபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களின்போது, அக்டோபர்
20ஆம் தேதி விஜயதசமியன்று, துர்கை சிலை பீகாரின் சீதாமடி நகரத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த பகுதி பதற்றமான பகுதி என அடையாளம் காணப்பட்டிருந்ததால், அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது கல் எறியப்பட்டதால், மாற்றுப் பாதையில் ஊர்வலம் சென்றது. ஆனால், இந்தத் தகவல் பரவியதும், மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி அந்த பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் கல்லெறிய, போலீஸ் நிலைமையை சமாளிக்கத் திணறினாலும், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. விரைவிலேயே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இதனிடையில் 80 வயது முதியவர் ஜைனுல் அன்சாரி என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை மறைப்பதற்காக சடலத்தை எரிக்கும் முயற்சியும் நடந்தது.
பாதி எரிந்த நிலையில் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக "இதுவரை 38 பேரை கைது செய்திருக்கிறோம், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன" என்று சீதாமடியின் காவல்துறை உயரதிகாரி விகாஸ் வர்மன் பிபிசியிடம் தெரிவித்தார்.இது இன்றைய பீகார் மாநிலத்தின் நிலை என்றால், 1989இல் பாகல்பூரில் நடந்த இனக்கலவரத்தில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, ஆங்காங்கே சிறிய அளவிலான மோதல்களைத் தவிர பெரிய அளவிலான இனவாத வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை.

மாபா பாண்டியராஜனின் தேர்தல் வழக்கை நிராகரிக்க முடியாது .. உயர்நீதிமன்றம்

THE HINDU TAMI : ஆவடி தொகுதியில் தான் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சார்பில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாஃபா பாண்டியராஜன், தற்போது தமிழக அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாண்டியராஜன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட நாசர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ‘அமைச்சர் பாண்டியராஜன் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்கினார். அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

மனிதர்கள் மீது மாடுகளை ஓடவிட்டு வழிபாடு .. மத்திய பிரதேசம்

Manjai Vasanthan என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
போபால், நவ.9 பாஜகஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தீபாவளியின் தொடர்ச்சியாக பக்தி, சடங்குகளின் பெயரால் தரையில் படுக்கவைத்து மனிதர்களின்மீது மாடுகளை ஓடவைக்கின்ற காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதனால் ஏராள மானவர்கள் படுகாயமடைந்தார்கள்.
மத்தியப்பிரதேசமாநிலத்தில் உஜ்ஜயினி, ஜாபா பகுதிகளில் கிராமங்களில் கோவர்த் தன பூஜையின் ஒரு பகுதியாக தீபாவளிக்கு அடுத்த நாளில் காய் கவுரி என்கிற பெயரில் சடங்காக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மனிதர்கள்மீது மாடுகள் ஓடும்போது மாட்டின் சாணத்தைக் கொண்டு செய் யப்பட்ட கோவர்த்தன் கடவுளின் உரு வத்தை மாடுகள் மிதித்து உடைத்திட வேண்டும். அப்படி உருவ பொம்மை உடைக்கப்படாவிட்டால் அச்சடங்கு முடிந் ததாக கொள்ளமாட்டார்களாம். (நியூஸ் 18 இணையம், 20.10.2017)
மாடுகளை மனிதர்கள்மீது ஓடவைக் கின்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் தங்களின் தலையை போர்வையால் மூடிக் கொண்டு, தரையில் படுத்துக்கொள்கின்றனர். பின்னர் அவர்கள்மீது ஏராளமான கோயில் மாடுகள் ஒரேநேரத்தில் ஓட விடப்படுகின் றன.

மெகா கூட்டணியில் இணைகிறது திமுக.. நாயுடு சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் அறிவிப்பு

ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்பேன்
வரவேற்கிறேன் tamil.oneindia.com : சென்னை : சந்திரபாபு நாயுடு முன்எடுக்கும் பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியில் திமுக இணைவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2014 பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தெலுங்குதேசம் கட்சி அண்மையில் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க ஆந்திர முதலமைச்சரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். மாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி வரும் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்தார்.

கிணறு இல்லையேல் சென்னையில் வாழ்வு இல்லை!

கிணறு இல்லையேல் சென்னையில் வாழ்வு இல்லை!மின்னம்பலம்: நரேஷ் சென்னைக்குச் செய்ய வேண்டியவை – 17<“சென்னையில் வசிப்பவர்கள் மிகவும் அலட்சியமாகத் தங்கள் இல்லங்களில் உள்ள கிணறுகளை மூடிவிடுகிறார்கள். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். வருங்காலத்தில் இந்தக் கிணறுகள் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் சென்னையில் வாழ முடியும்.” - இந்தியாவின் மழை மனிதன் சேகர் ராகவன்.
சென்னையிலேயே சுவையான இயற்கையான நிலத்தடி நீர் கிடைக்கும் இடம் - பெசன்ட் நகர். கடற்கரையில் இருந்து கண் அளக்கும் தூரத்தில் இருந்தாலும், உப்புத் தன்மை அறவே இல்லாத அமுதமான நீர் ஊறும் பெரு நிலம் பெசன்ட் நகர். இதற்கு மிகமுக்கியக் காரணம், பெசன்ட் நகர் பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய இடங்கள் யாவும் பள்ளமான பகுதிகள். பெய்யும் மழை நீர் இயற்கையாகவே வடிந்து வந்து தேங்கும் நிலங்களாதலால், இவ்விடங்களில் இருக்கும் நீர் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

ராஜபக்‌ஷே பிடியில் சிறிசேனா.. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு!

மின்னம்பலம்: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு! ராஜபக்‌ஷே பிடியில் சிறிசேனாஇலங்கை அதிபர் மைத்ரி சிறிசேனா நேற்று (நவம்பர் 9) அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். நவம்பர் 10 நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது. நாடாளுமன்றக் கலைப்பு அறிவிப்போடு வரும் 2019 ஜனவரி 5 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார் சிறிசேனா.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு ராஜபக்‌ஷேவை எப்படிப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாரோ அதுபோலவே இந்த நாடாளுமன்றக் கலைப்பும் சட்ட விரோதமானது என்று கொழும்பில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்துள்ளன.
ராஜபக்‌ஷேவுக்குப் பெரும்பான்மை இல்லை
ராஜபக்‌ஷேவைப் பிரதமராக நியமித்ததைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் எவ்வளவு முயன்றும் ராஜபக்‌ஷேவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிட்டவில்லை.

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு; மாறன் சகோதரர்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு: சென்னை உயர் நீதிமன்றம்

tamil.thehindu.com : சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் மீண்டும் முறையாக குற்றச் சாட்டைப் பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தி சன் தொலைக்காட்சிக்காக சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதையடுத்து 700-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு ரூ. ஒரு கோடியே 76 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதிமாறன், கலாநிதிமாறன், பிஎஸ்என்எல் பொதுமேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், பிஎஸ்என்எல் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செய லாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலெக்ட்ரீசியன் ரவி ஆகிய 7 பேர் மீதும் சிபிஐ கடந்த 2007-ல் வழக்குப்பதிவு செய்தது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அவசர கோரிக்கை .. உடனே நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்

தினக்குரல் :அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை நீக்குவதற்ககாக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும், உடனே பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தாமதிக்குமானால் சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கின்ற நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், முதலீட்டாளர்கள் இலங்கையை நாடுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது

அரசு கொடுத்த இலவச பொருட்களை உடைத்து போட்ட சர்க்கார் பட ரசிகர்கள்

மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய வக்கில்லாத பொறிக்கி சினிமா நடிகர்கள் அரசாங்கம் கொடுத்த இலவச மடி கணினிகளை உடைத்து நொறுக்கும் ஒரு சமுகவிரோதிகளாக இளையோரை உருவாக்கி விட்டுள்ளார்கள் .
நேற்றுவரை அரிவாளும் கையுமாக அலைகின்றானே ?
துரத்தி தூரத்தின் பெண்களின் பின்னால் ஓடிகின்றானே என்றெல்லாம் கவலைப்பட்ட மக்களுக்கு ,
அதையெல்லாம் தாண்டி ஒரு லாப்டாப் ஐ உடைக்கும் மிருகங்களாக ரசிகர்கள் என்ற ஒரு முழு முட்டாள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்கள் நடிகர் விஜய் முருகதாஸ் ஜெயமோகன்  ஆகியோர் .
இவர்களை ஏன் இன்னும் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யவில்லை என்பதுதான் கேள்வியே!
தமிழக அரசு கொடுத்த இலவச லாப்டாப் என்பது ஒரு நூலகம் போன்றது . நீ அதன்மூலம் படித்து உலகை அறிவதற்காகவும் நீ வாழ்வில் முன்னேறுவதற்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து வாங்கி உனக்கு வழங்கபட்டது .
இந்த சினிமாக்காரர்களின் இந்த மோசடிகளுக்கு பின்னால் இருப்பது பாஜகதான் என்பதில் கடுகளவு சந்தேகமும் கிடையாது .
இவர்கள் மீது ஏராளமான கறுப்புப்பண மோசடிகள் இருக்கின்றன.
இந்த கறுப்புப்பண குற்றமும் சினிமாக்காரர்களும் எப்பொழுதும் இரட்டை குழந்தைகள்தான் .

முருகதாஸ் - நடிகர் விஜய் - ஜெயமோகன் ... பாஜகவின் அழுக்கு கூட்டணி

tamil.thehindu.com : இலவசங்களை வெகுமக்கள்
மயக்குத் திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக் காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும்தான் அறிவுத்தேடலில் ஈடுபட முடிந்தது.
மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க வலிக்க பொறியியல் பாடங்களைக் கையால் எழுதி மொழிபெயர்த்த வலிகளைப் போக்கியது - நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினிதான். அதில் அத்தனை பாடங்கள், நூல்களைச் சேகரம் செய்து தந்திருந்தார்கள். அதன் உதவியோடுதான் என் குடிமைப்பணித் தேர்வு முயற்சிகள் சாத்தியமாகின.
“பெண்களுக்கு இலவச மருத்துவக் கல்வி, சென்னை மருத்துவக் கல்லூரிதான் தந்தது. அது இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது” என மனநல மருத்துவத்தில் மகத்தான சாதனைகள் புரிந்த சாரதா மேனன் குறிப்பிட்டிருக்கிறார்.

வெள்ளி, 9 நவம்பர், 2018

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது ! சற்று முன்பாக ..Sri Lanka President Dissolves Parliamen

Colombo: President Maithripala Sirisena sacked Sri Lanka's parliament Friday hours after his party announced he did not have a majority to get his prime minister nominee through the legislature, a minister said. Sirisena signed an official notification dismissing the 225-member assembly with effect from midnight, clearing the way for a snap election nearly two years ahead of schedule, the minister said asking not to be named. COMMENT "The election is likely to be held in early January," the minister told AFP after the United People's Freedom Alliance (UPFA) said they were eight legislators short of a majority in the 225-member assembly that remains suspended.
Strong Speculations Of Dissolution Of Parliament Tonight: Opposition Forces Say The Move
Grossly Unconstitutional
Ajeevan Veer :பாராளுமன்றம் கலைக்கப்பட்டது !
இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது! பாராளுமன்றத்தை மைத்ரிபால சிரிசேன கலைத்துள்ளதாக அறிய முடிகிறது.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு உரிய கெசட் பத்திரத்தில் இரவு 8.30க்கு மைத்ரிபால சிரிசேன கையெழுத்திட்டுள்தாக நம்பகமான தகவல்கள் ஊடாக தெரிய வருகிறது. ஆனால் இதுவரை அது குறித்த தகவல்கள்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

தெலங்கானா..பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றுவோம்

பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும்: தேர்தல் வாக்குறுதிNDTV.com: சமீபத்தில் என்னற்ற நகரங்கள் மற்றும் ரயில் Hyderabad: தென் மாநிலமான ஹைதராபாத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படுமென்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் இன்று தெரிவித்தார். கோஷமஹால் தொகுதியின் சார்பில் போட்டியிட்ட ராஜா சிங் செகந்திராபாத்தின் பெயரை கரிம்நகர் என்று மாற்றப்படும் என்று கூறினார்.
நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
1590களின் தொடக்கத்தில் கியூலி குதூப் ஷா ஹைதராபாத்திற்கு வந்தபோது, ஹைதராபாத் பாக்யாநகர் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. எனவே அதே பெயரை மீண்டும் ஹைதராபாத்திற்கு சூட்ட திட்டமிட்டுள்ளதாக ராஜா சிங் கூறினார். தெலுங்கானாவில் பாஜக அமோக வெற்றியடைந்ததும் எங்களுடைய முதல் குறிக்கோள் ஹைதராபாத் என்ற பெயரை பாக்யாநகர் என்று மாற்றுவதே ஆகும்.

திருக்குறளை திரிக்க முயலும் ஆங்கில நூல்.. நாகசாமியின் நச்சு புத்தகம் .. கொழுத்தப்பட வேண்டும் .. சுபவீ .


இலங்கநாதன் குகநாதன் : திருக்குறளை திரிக்க முயலும் ஒரு ஆங்கில நூல் - ` Tirukkural - An Abridgement of Shaastras ` :::
Image may contain: 1 person, standing👉நாகசாமி என்பவர் Tirukkural - An Abridgement of Shaastras என்றொரு (புத்தகத்தினை) புரட்டினை எழுதியுள்ளார். அதில் மனுதர்மம் முதலிய சமசுகிரத நூல்களின் பிழிவிலிருந்தே (சாரம்சம்) திருக்குறள் தோன்றியதாக வழமையான பார்ப்பன புரட்டினை கூறியுள்ளார். மனுதர்மம் காலத்தால் திருக்குறளிற்குப் பிற்பட்டது என்று ஏற்கனவே அறிஞர்களால் சான்றுபடுத்தப்பட்டதனை அவர் கவனத்திற்கொள்ளவில்லை. நூலின் தலைப்பிலும், நூல் முழுவதுமே திருக்குறள் வடமொழி சாத்திரங்களின் வழிவந்ததே என அழுத்திக் கூறும் இவர், ஒரிடத்தில் மட்டும் இது எதிர்கால ஆய்விற்குரியது என்கின்றார்.
👉திருக்குறள் மீது பார்ப்பனர்களின் ஒவ்வாமை வரலாறு அறிந்ததே. “தீக் குறளை சென்று ஓதோம்” (கோள் சொல்லுதல் கூடாது) என்ற ஆண்டாள் பாடலிற்கு “திருக்குறளை ஓதவேண்டாம்” என வலியப் பொய் சொன்ன மூத்த சங்கரச்சாரியார் முதல் “முதல் பத்து குறள்களை மட்டுமே பயன்படுத்தலாம்” என்று சொன்ன செயேந்திர சங்கரச்சாரியார் ஈடாக இன்றைய நாகசாமியின் இப் புத்தகம் வரை இந்த தமிழ் வெறுப்பினைக் காணலாம். இப் புத்தகத்தின் பொய்மையினை உடைக்க சங்கரச்சாரியார் விரும்பும் முதல் பத்து குறள்களிலேயே சில குறள்களை முதலில் நாமும் அவர் விருப்பப்படி எடுத்துக்கொள்வோம்.

கூத்தாடிகளின் கோடிக்கணக்கான வரிஏய்ப்பு .... இலவச கல்வி சான்றிதழை கொழுத்துவீர்களா? நடிகர்களிடம்தான் சான்றிதழே இல்லையே?

தமிழ் மறவன் : சர்க்கார் திரைப்பட சர்ச்சைக்கு பின் இலவசம் என்பதை
குறித்த புதிய கருத்துக்கள் துவங்கி இருக்கிறது.
தற்பொழுது புதிய விவாதம் உருவாகியுள்ளது. அரசு இலவசங்களை தரவும் கூடாது மக்கள் அந்த இலவசங்களை பெறவும் கூடாது என்று சொல்கிறார்கள்.
ஓர் அரசு வாக்குறுதிகளின் அடிப்படையி்லும், திட்டங்களின் அடிப்படையிலும் தருகிற எதுவொன்றும் இலவசம் என்று முடிவு செய்ய இவர்கள் யார்?
அரசு தரும் எதையும் இலவசம் என்று குறிப்பிட்டால், நாம் அரசுக்கு செலுத்துகின்ற வரியை இவர்கள் என்னவென்று சொல்வார்கள்?
ஓர் அரசு என்பது மக்களுக்காக பணியாற்றுகிற ஒரு இயந்திரம் தானே தவிர மக்களுக்கு பிச்சை இடுக்கிற முதலாளிகள் அல்ல!
முற்போக்காளர்களை போலவும், அறிவுஜீவிகளை போலவும் இவர்கள் இலவசத்திற்கு எதிராக பேசுவது அபத்தமானது! ஆபத்தானது!!
கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் இன்னபிற அனைத்து உரிமைகளையும் பெறக்கூடிய தகுதியும் உரிமையும் மக்களுக்கு உண்டு.
ஓர் அரசு என்பது மக்களுக்கானது, மக்களுடையது.
ஒரு அரசு நிர்வாகத்தில் மக்களுக்காக வழங்கப்படுகிற அல்லது செயல்படுத்தப்படுகிறது எந்த ஒன்றும் இலவசமல்ல மக்களின் வரிப்பணமே!
மக்களுக்கும், அரசுக்கும் தொடர்பே இல்லாதது போலவும், மக்கள் பிச்சைக்காரர்கள் போலவும், அரசு பெருமுதலாளி போலவும், அரசு பார்த்து நமக்கு பிச்சை இடுவதைப் போலவும் இலவசங்களை எதிர்த்துப் பேசுகிற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல?

தமிழக அரசு கொடுத்த மடிக்கணினிகளை தீயில் போட்ட விஜய் ரசிகர்கள் .. ஏன் இன்னும் குண்டர் சட்டம் பாயவில்லை?

Devi Somasundaram : முந்தாநை முடிச்சுன்னு ஒரு படம்...பாக்யராஜ் எடுத்த படம் ,
1983 ல வந்துச்சுன்னு நினைக்கிறேன்.அதுல பாக்யராஜ் கிராமத்து வாத்தியார் .க்ளாஸ் ல மூணூ வால் பசங்க...அதுல தவக்களைன்னு ஒரு கேரக்ட்டர் .அவரோட டிரவுசர்க்கு ஊக்கு போட்டு விட்டு திரும்பினா பின்னாடி ஓட்டையா இருக்கும் . இதுக்கு டவுசரே போட்றுக்க வேணாம்னு பாக்யராஜ் சொல்வார்.
அன்னிக்கு கிராமபுற ஏழை மாணவர் பலர் நிலைமை கிழிஞ்ச டவுசர் தான்..பல பெண்கள் அம்மா புடவை கிழிச்சு தாவணி போட்டு பள்ளிக்கு போனார்கள்ன்னு கிராமத்தில அப்பள கச்சேரிகளில் பேச கேள்வி பட்டு இருக்கேன்..
அன்னிக்கு இலவச பள்ளி ச்சீருடை திட்டம் அந்த ஏழை மாணவர்களுக்கு வர பிரசாதம்..அது தான் கொஞ்சமாச்சும் தன் மானத்த்தோட கல்விய தேட அவர்களுக்கு தைரியம் தந்துச்சு
ஏற்கனவே சாதி ரீதியா ஏற்பட்ட தாழ்வுணர்வு இதோட
தபாலாபிசு, கிழிஞ்ச டவுசர் போன்ற சொல்லாடல்கள் அவர்கள் மனதை எத்தனை காய படுத்தி இருக்கும் .அதில் கொஞ்ச மாவது விடுதலை தந்தது பள்ளி ச்சீருடை..

ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு சந்திப்பு .. கூட்டணி பேச்சுவார்த்தை


 tamil.indianexpress.com :திமுக தலைவர் முக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் டெல்லியில் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்கட்சிகளும், காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி - சத்தீஸ்கரில் ராகுல்

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி - சத்தீஸ்கரில் ராகுல் வாக்குறுதி maalaimalar: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் பகுதியில் பகன்ஜோர் நகரில் உள்ள பண்டிட் சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது

வேலூரை உலுக்கிய கொலை .. நைட்டியுடன் பிணமாக மிதந்த அனிதா..

சதுப்பேரி tamil.oneindia.com - hemavandhana.:வேலூர்: கணவனையும், பெத்த 3 குழந்தைகளையும் மறந்துபோய் அனிதா செய்த காரியம்தான் இன்று அவரது உயிரையே எடுத்துவிட்டது!!
அனிதா!! சிஎம்சி ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார். இவரது கணவர் கதிரேசன். கீழ்மொணவூர் திருமால் நகர் டேங்க் தெருவில்தான இவர்கள் குடியிருக்கிறார்கள். இவர்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
சதுப்பேரி இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனிதாவை காணவில்லை. எல்லா இடங்களிலும் கதிரேசன் தேடினார்.
எங்கேயுமே அனிதா இல்லாததால் போலீசில் புகார் செய்தார். போலீசாரும் விரைந்து அனிதாவை தேடினார்கள். இதனிடையே நேற்று காலை சதுப்பேரி ஏரியில் பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

6 விமான நிலையங்கள் தனியாரிடம் குத்தகைக்கு .. மங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம்

வெப்துனியா :கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் கைவசம் இருக்கும் பல துறைகள் தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது விமான நிலையங்களும் படிப்படியாக தனியாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கிவிட்டது. இதன்படி இந்தியாவில் உள்ல ஒருசில விமான நிலையங்களள தனியார்களிடம் குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக மங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 6 விமானநிலையங்களை தனியாரிடம் குத்தகைக்குவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.<இதனையடுத்து எதிர்காலத்தில் இன்னும் ஒருசில விமான நிலையங்களை தனியார்களிடம் குத்தகைக்குவிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி எம்.எல்.ஏ தகுதி நீக்கம்! ... சொத்துக்குவிப்பு ... என் ஆர் காங்கிரஸ்...

புதுச்சேரி எம்.எல்.ஏ தகுதி நீக்கம்!மின்னம்பலம்: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்து புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்த் 2007-08 ஆண்டுகளில் புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக 3.15 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து ஆனந்த், அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

1996 இல் ஆட்சி அமைத்த அந்த மெகா கூட்டணி மீண்டும் வருகிறது?

1996 மீண்டும் திரும்புமா?மின்னம்பலம்: மக்களவை தேர்தலுக்காக மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
2019 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் அணி சேர்க்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இயங்கி வருகிறார். கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். மேலும் அரவிந்த் கேஜ்ரிவால், மாயாவதி, ஃபரூக் அப்துல்லா, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்தித்து கூட்டணி குறித்து பேசியிருந்தார்.

குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு – வெளிவரும் புதிய உண்மைகள்.

சவுக்கு :குஜராத் கலவரத்தில் அரசு எப்படிச்
செயல்பட்டது என்பது பற்றிய நேரடி சாட்சியம்
தி வயர் இதழின் அர்பா கானும் ஷெர்வானி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜமீர் உதின் ஷாவை, வெளிவரவிருக்கும் அவரது வாழ்க்கை வரலாறு நூலான தி சர்க்காரி முஸல்மான் தொடர்பாக நேர்காணல் செய்தார். இதில் அவர் குஜராத் கலவரங்களின்போது ராணுவ நடவடிக்கைக்குத் தலைமையேற்ற தனது அனுபவத்தை விவரிக்கிறார். இந்த புத்தகத்தில், குஜராத் முதல்வருக்கு பல முறை வேண்டுக்கோள் விடுத்தும் கூட, வாகனங்களுக்காக காத்திருந்ததால் ராணுவம் உயிர் காத்திருக்கக்கூடிய முக்கியமான மணிநேரங்களை ராணுவம் இழந்தது பற்றி பேசுகிறார்.
அர்பா கானும் ஷெர்வானி: வணக்கம். நான் அர்பா கானும் ஷெர்வானி. 2002 குஜராத் கலவரத்தின்போது அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், குறைந்த உயிரிழப்பு மட்டுமே ஏற்பட்டிருக்குமா? கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியுமா? ராணுவம் சரியான நேரத்தில் பிரயோகப்படுத்தப்பட்டிருந்தால் குறைந்த உயிரிழப்பே ஏற்பட்டிருக்கும் என வாதிடும் புதிய புத்தகம் ஒன்று வெளியாக இருக்கிறது.

மூன்று வேளை சோறுதான் பெரிது என்பவன் முட்டாள் .. முத்தையா முரளிதரன் மீது மனோ கணேசன்

ibc.com :சிறிலங்காவின் முன்னாள் சுழல் பந்து
வீச்சாளர் முத்தையா முரளிதரன்
நாட்டு மக்களுக்கு ஜன நாயகத்தை விட மூன்றுவேளை உணவுதான் முக்கியம் என கூறியுள்ள நிலையில் பல்வேறுபட்ட தரப்பினரும் தமது எதிர்ப்பினைப் பதிந்து வருகின்றனர். அதன்படி நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் மனோ கணேசன் முத்தையா முரளிதரனை சமூக உணர்வற்ற முட்டாள் என மறைமுகமாக சாடியுள்ளார். ”மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்.” என தனது முக நூலில் பதிவு செய்துள்ளார். குறித்த கருத்திற்கு பல்வேறுபட்ட தரப்பினரும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் முரளிதரன்மீது கண்டனங்களையும் பதிவுசெய்துவருகின்றனர். பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் முத்தையா முரளிதரன் தமிழ் மக்களை புண்படுத்தும் விதமாக கருத்து பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நடிகர் விஜய் மீது கருணை கொள்ளுதல் தகாது ,கமல் ரஜினியை போல் பாஜகவின் C டீம்...

Shalin Maria Lawrence : நேற்றுதான் 7ஆம் அறிவு
படத்தில் இடம்பெற்ற
இடஒதுக்கீட்டிற்கு எதிரான வசனங்களுக்காக முருகதாஸ் மேல் வழக்கு போட முடியுமா என்பதை பற்றி பேசி கொண்டிருந்தோம். ஏனென்றால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்தை பரப்பதுவது சட்டப்படி குற்றமாகும். அதற்காக அவர் மேல் ஒரு defamation கேஸ் போடலாம்.
அவரின் எல்லா படங்கள் மீதும் வழக்கு போடலாம்.அவ்வளவு அயோக்கியத்தனம் செய்து இருக்கிறார் முருகதாஸ்.
அதற்கு முன்பு...
வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் சென்சார் போர்டு (CBFC,Tamilnadu film division)மேல்தான் முதலில் செய்ய வேண்டும்.அரசு நல திட்டங்களுக்கு எதிராக இருக்கும் வசனங்களை /பொய் பிரசாரங்களை கண்டுபிடித்து தணிக்கை செய்ய அறிவில்லாத ,துப்பில்லாத தணிக்கை துறைதான் முதல் குற்றவாளி.அரசாங்க சம்பளத்தை வாங்கி பல வசதி வாய்ப்புகளோடு வாழும் தணிக்கை அதிகாரிகளுக்கு இந்த அறிவு கூட ஏன் இல்லாமல் போனது?
சரி படம் வந்துவிட்டது.
படத்தில் சர்ச்சை கூறிய காட்சிகள் இருந்தால் நீக்க சொல்லலாம். வழக்கு பதியலாம்.
ஆனால் தடை செய்யும் அளவிற்கு சர்க்கார் ஒன்றும் புரட்சி காவியம் அல்ல.அது ஒரு வெத்து பட்டாசு.
படம் காட்சிகள் நீக்கப்பட்டு ஓட வேண்டும்.முருகதாஸ் சட்டப்படி தண்டிக்க பட வேண்டும்.
துணிவிருந்தால் படத்திற்கு சான்று கொடுத்த தணிக்கை அதிகாரி மேல் அரசு ஒரு வழக்கு போடட்டும்.

வியாழன், 8 நவம்பர், 2018

சரிகிறது ரெட்டி சகோதரர்கள் சாம்ராஜ்யம்.. கைது பயத்தில் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு

Janardhan Reddy, is likely to be sent behind bars tamil.oneindia.com :
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கொன்றில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த ரெட்டி சகோதரர்களில் ஒருவர் ஜனார்த்தன ரெட்டி. சட்ட விரோத சுரங்க தொழில் மூலமாக, இரும்பு தாது ஏற்றுமதியால் பல லட்சம் கோடி சம்பாதித்த பெரும் பணக்காரர் இவர்.
எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் ஜனார்த்தன ரெட்டி. ஆனால், சட்ட விரோத குவாரித் தொழிலுக்கு எதிராக எடியூரப்பா எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து எம்எல்ஏக்களை பிரித்து ரிசார்ட் அரசியலை துவக்கி வைத்தவரும் இவரே. அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் ஜனார்த்தன ரெட்டி.

விராட் கோலியின் தேசப் பற்று வேஷம் கலைந்தது. ஏன் பிற நாடுகளை விரும்புகிறீர்கள்?

‘நாட்டை விட்டு வெளியேறுங்கள்’- விராட் கோலி கருத்தால் டுவிட்டரில் ரசிகர்கள் கடும் விமர்சனம்
மாலைமலர் : இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்
என்ற கருத்தால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்திய அணி கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாள் அன்று தனக்கு சொந்தமான ‘APP’  ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுதில். அதில் ‘‘நீங்கள் இந்தியாவில்தான் வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை. செல்லுங்கள். வேறு எங்காவது சென்று வாழுங்கள். ஏன் இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற நாடுகளை விரும்புகிறீர்கள்.
இதைக்கூறுவதால் என்னைப் பிடிக்காது என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், இங்கு வசித்துக் கொண்டு மற்ற நாடுகளையும், அங்குள்ள விஷயங்களையும் விரும்புவதை என்னால் நினைக்க முடியவில்லை. உங்களுடைய முன்னுரிமையை சரிதாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நிர்மலா தேவி வழக்கிலிருந்து விடுவிக்க மனு!

வழக்கிலிருந்து விடுவிக்க நிர்மலா தேவி மனு!மின்னம்பலம்: கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்துவரும் வழக்கில், தங்களை விடுவிக்கக் கோரி நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் இன்று (நவம்பர் 8) நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக செல்போன் ஆடியோ வெளியான வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை மத்தியச் சிறையில் இருந்துவரும் இவர்கள், 7 முறை ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி!

சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி!மின்னம்பலம் :  சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 20ஆம் தேதி சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வருகிற நவம்பர் 20ஆம் தேதி மதிப்புக்கூட்டிய சிறுதானிய பண்டங்கள் தயாரிப்பு முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. வரகு, திணை, குதிரைவாலி, கம்பு போன்ற சிறுதானிய பண்டங்கள் தயாரிப்பு முறை, சிறுதானியங்கள் சுத்தம் செய்யும் முறை, விற்பனை செய்யும் முறை, மதிப்புக்கூட்டல் உணவுத் தயாரிப்பு முறை, செயல்படுத்தும் முறை, பயன்படுத்தும் முறை மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் பங்கெடுக்க விரும்புவோர் 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பணமதிப்பழிப்பு: தனிநபரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்!

பணமதிப்பழிப்பு: தனிநபரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்!மின்னம்பலம் : “பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டுக்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை முதலில் வரவேற்ற அனைவரும், சில நாட்களுக்குப் பிறகு கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்காக பல மணி நேரம் வங்கிகள் முன்பு மக்கள் காத்திருந்தனர். வரிசையில் நின்றபோது உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
பணமதிப்பழிப்பின்போது திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்த நிலையில், ரூ.13,000 கோடி மட்டுமே இன்னும் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து பணமதிப்பழிப்பின் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாகிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

30 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது .

மின்னம்பலம்: 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர்
இதுவரை 30 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 6 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. அதுவும் இந்த ஆண்டு மட்டும் 2014 மக்களவைத் தேர்தலில் வென்ற 9 தொகுதிகளை பறிகொடுத்திருக்கிறது பாஜக.
மக்களவை இடைத்தேர்தல்கள்: 6இல் மட்டும் வென்ற பாஜக!
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 282 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலையில் வெறும் 44 இடங்களில்தான் வென்றிருந்தது.லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் குஜராத்தின் வதோரா, மகாராஷ்டிராவின் பீட் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக 70% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் இதன்பிறகு பாஜகவின் வாக்கு வங்கியில் ஆட்டம் ஏற்பட்டுவிட்டது.
கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் பாஜகவுக்கு கடும் பின்னடைவையே தந்திருக்கிறது. இதனால் மக்களவையில் பாஜகவின் பலம் 272 ஆக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் காங்கிரஸின் பலம் 50 ஆக அதிகரித்திருக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரஸுக்கு இன்னும் 5 எம்.பி.க்கள் தேவை.

குடிநீருக்குத் தனியாரை நம்பியிருக்கக் கூடாது!

பேராசிரியர் எல். வெங்கடாசலம் tamil.thehindu.com
உயிரியல் ஆய்வாளர் காரட் ஹார்டின் ‘பொது வளங்களின் துயரம்’ என்ற முக்கியமான ஒரு கட்டுரையை 1968-ல் ‘சயின்ஸ்’ இதழில் வெளியிட்டார். நிலத்தடிநீர் போன்ற பலருக்கும் பொதுவான வளங்கள் நமக்கு இயற்கை அளித்த மகத்தான மூலதனங்கள். அவ்வளங்கள் சுயநலக்காரர்களின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதால் ஒரு நாள் இவை முற்றிலுமாக அழிக்கப்பட்டு மனிதகுலத்தையே மீளாத்துயரில் ஆழ்த்திவிடும் என்பதுதான் அந்தக் கட்டுரையின் செய்தி. ஹார்டினின் கூற்றை, 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நிலத்தடிநீர் சம்மந்தப்பட்ட சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பு நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.
உரிய அனுமதியின்றி லாப நோக்குடனும் வணிகரீதியாகவும் செயல்படும் தனியார்க் கிணறுகளை மூட வேண்டும் என்று 2014-ல் உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். நிலத்தடிநீர் நமது தேசத்தின் சொத்து எனவும் அதை உரிய அனுமதியின்றி எடுப்பது திருடுவதற்கு ஒப்பாகும் எனவும் தீர்ப்பளித்தது.

உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !

vinavu.com :தனியார்மய கல்வியை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வி! என்ற லட்சியத்தோடு உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு கடந்த 27.10.2018 அன்று சென்னை பெரியார் திடலில் பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு அமைப்பின் அறிமுக கூட்டம் மற்றும் “உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர், பேராசிரியர். வீ. அரசு,  ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும், விவேகானந்தா கல்லூரி வரலாற்றுதுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும் குடியாத்தம் அரசு கலைகல்லூரி  முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப. சிவக்குமார், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி பொருளியியல் துறை பேராசிரியர் அமலநாதன், பொருளாளர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழக உயிரிவேதியியல் துறை பேராசிரியர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு உயர்கல்வி எதிர் கொண்டிருக்கும் முக்கிய சவால்களான ஊழல், இந்துத்துவ திணிப்பு, தனியார்மயம் ஆகியவற்றை பற்றி பேராசிரியர்கள் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் என மொத்தம் 120 பேர் கலந்து கொண்டனர்.

நவம்பர் 8 ..நாட்டின் அச்சாணியை மோடி புடுங்கிய நாள்!

Swathi K : கருப்பு பண ஒழிப்பு நாடகம்  பணமதிப்பிழப்பு ஊழல் தினம் - Nov
8, 2016
இந்த உலகத்திலேயே ஒரு அரசாங்கம் அந்நாட்டு மக்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கிய ஒரு திட்டம்னா அது இந்தியாவின் "பணமதிப்பிழப்பு".
ஊழல் ஒழிப்பு, கருப்புபணம் ஒழிப்பு, கள்ளபணம் ஒழிப்பு, புரட்சி,
புண்ணாக்குன்னு எவ்வளவு எளிதாக இந்திய மக்களை லூசாக்க முடியுதுன்னு நினைக்குறப்ப கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது...
மக்களின் மறதி அரசியல்வாதிகளின் வரம்.. இன்றில் இருந்து அடுத்த மூன்று நாளைக்கு மற்ற செய்திகளுடன் "பணமதிப்பிழப்பு" பற்றிய பழைய, புதிய செய்திகள், மீம்ஸ் ஷேர் செய்ய உள்ளேன்.. சில பதிவுகள் சிந்திக்க, சில பதிவுகள் சிரிக்க!! Follow all my posts..
தங்களின் வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி & கோ செய்த இந்த மாபெரும் ஊழலை எப்போதும் மறக்காதீர்கள்..
Start with one of my favourite video.. சோகத்தில் கூட இந்த வீடியோ பார்த்து சிரிக்க முடிந்தது.. இப்படி தான் நாமும் ஒரு நோட்டுக்கு வாராக்கணக்கில் ATM முன்னால் தவம் இருந்தோம்.. மறக்கவேண்டாம்..