புதன், 22 டிசம்பர், 2010

குளிரினால் இத்தாலியில் இலங்கையர் மரணம் _

இத்தாலியில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியில் வீடற்று இருக்கும் 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு குளிர் தாங்க முடியாது உயிரிழந்துள்ளார்.
மிலான் பிரதேசத்தில் வியாபரினி என்ற இடத்தில் அமைந்திருக்கும் கரேபோர் சந்தையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருந்து உயிரிழந்த இலங்கையருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.

சின்னத் தீர்மானங்கள்

சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.  காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான்.  மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.
கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.  இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால்,  அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.
படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.
நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான்.  அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.
அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது.  அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில்  சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது.  தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.  ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.
அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.
0000
கதையைப் பற்றிப் பேசும்போது,  தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான்.  என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.
இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன.  பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள்,  ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்.  இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம்.  இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
0000
இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை.  ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.
தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான  விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.
இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன்.  இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை.  காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.
00000
வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம்.  ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள்.  இது உண்மை தான்.
ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்.  இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.
இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது,  ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.
இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.
ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.
இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்.

மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவே

அத்தியாயம் 11
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அன்புவின் அனுபவம் ஒரு டைப்பான சுவாரஸ்யம். தாஜ்மஹால் படப்பிடிப்பு. கதாநாயகி ரியாசென் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு கண்ணீரோடு மாட்டு வண்டியில் பயணிப்பது போல காட்சி. கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு அழகான பிரதேசத்தில் படமாக்கிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. குளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்ற வித விதமான கோணங்களில் படமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார் அன்பு. புது மணப்பெண்ணான ரியாசென் கழுத்தில் அணிந்திருக்க வேண்டிய தாலி மிஸ்சிங்.
டைரக்டரிடம் சொன்னால் இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க என்று அடி விழுந்தாலும் விழும். ஏனென்றால் இந்த தவறுக்கு பொறுப்பு கன்ட்டினியுடி பார்க்க வேண்டிய உதவி இயக்குனர்தான். அவ்வளவு பதற்றத்திலும், நைசாக ஒரு காரியம் செய்தார் அன்பு. ஒளிப்பதிவாளர் கண்ணனின் காதருகே போய் விஷயத்தைச் சொன்னார். முதலில் திடுக்கிட்ட அவர், அந்த ஷாட் முடிகிற வரைக்கும் காத்திருந்தார்.
பிறகு மெல்ல பாரதிராஜாவிடம் போய், அந்தப் பொண்ணு மாலையை கழட்டுற மாதிரி ஒரு ஷாட் எடுத்துரலாமே என்றார். ம்ம்ம்.. சரிய்யா என்றார் அவரும். அந்த இடைவெளியில் ஒரு தாலியை அவசரம் அவசரமாக ரியா கழுத்தில் மாட்டினார்கள். அதையும் ஜாக்கெட்டுக்குள் பதுங்கியிருப்பது மாதிரி மாட்டினார்கள். மாலையைக் கழற்றும்போது ஜாக்கெட்டுக்குள்ளிருந்து அந்தத் தாலி வெளியே வருவது போலவும் ஒரு ஷாட் எடுத்தார் கண்ணன். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒளிப்பதிவாளரிடம் சரண் அடைந்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்பதும் ஒரு யுக்தி.
இப்படி ஒவ்வொன்றையும் ஆரம்பித்தால் எல்லா திரைப்படத்திலிருந்தும் ஒரு காட்சி தேறும் என்பதால் அடுத்தப் பகுதிக்குப் போவோமோ?
நடிகர் நடிகைகளைக் கையாளும் விதம் :
செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்துக் காட்டியதைப் போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.
உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தைச் சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஷாட் போகும். அதிலும் முடியவில்லை என்றால் அடுத்தது. இப்படி ஷாட்டுகள் தொடர்ந்து கொண்டே போகும்போது ‘ஷாட் ஒன்று இரண்டு’ என்று உரக்கச் சொல்லிக்கொண்டே கிளாப் அடிப்பார் உதவி இயக்குனர். ஒன்று இரண்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போய் ஷாட் நம்பர் பத்து என்று சொல்கிறபோது எவ்வளவு நம்பிக்கையோடு அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும், முகம் இருண்டுவிடும் நடிகருக்கு. அதனால் புத்திசாலி உதவி இயக்குனர் என்ன செய்வார் தெரியுமா?
ஷாட் ஒன்… ஷாட் டூ என்று அடுக்கிக் கொண்டேயிருப்பார். ஒரு கட்டத்தில் அதை நீளவிடாமல் திடீரென்று ஷாட் ஒன் ஏ என்று சுருக்கிக் கொள்வார். அது பி, சி என்று நகருமே தவிர பத்தை நோக்கிப் போகாது. இந்த எண்ணிக்கை யுக்தி மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய விஷயமாகத் தெரியாது. உளவியல் ரீதியாகப் பார்த்தால் கிரேட்! அடிக்கடி ரீ டேக் வாங்குகிற ஹீரோ சோர்வடைய மாட்டார் அல்லவா?
இன்னொரு விஷயம். எவ்வளவுதான் நெருங்கிப் பழகிய நடிகர் என்றாலும் பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதையை உதவி இயக்குனர் என்பவர் கொடுத்தே ஆக வேண்டும். அந்த நேரத்தில் முதுகைத் தட்டிப் பேசுவது, மேலே விழுந்து நசுக்குவது போன்ற கீழ் குணங்களோடு நடந்து கொண்டால் அது அவரது எதிர்காலத்தையே குழி தோண்டிக் கூடப் புதைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
அஜீத் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் நித்யா. படப்பிடிப்பு முடிந்தால் பணி முடிந்ததென்று வீட்டுக்கு போய்விடுகிறவர் அல்ல அஜீத். தனது யூனிட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்களோடு பேட்மிட்டன் ஆடுவார். வீட்டுக்கு வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். இப்படியே அஜீத்திடம் மிக நெருங்கிப் பழக ஆரம்பித்தார் நித்யா. இந்தப் பழக்கம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், நித்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து அவரை விரைவில் இயக்குனராக்கிவிட வேண்டும் என்று அஜீத்தே ஆசைப்படுகிற அளவுக்கு.
விதி இருக்கிறதே, அது தேர் ஏறியும் வரும். சில நேரங்களில் திண்ணையிலும் படுத்திருக்கும். இந்த பாழாய்ப் போன விதி, நித்யாவுக்கு அவர் சொன்ன ஒரு ஜோக்கில் குடியிருந்தது. ஒரு மாலை நேரம் அஜீத் வீட்டுக்குப் போயிருந்தார் நித்யா.
சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். ஜோக்கடிப்பார்கள். அந்த ஜோக்குக்கு அவர்களே குய்யோ மொய்யோ என்று குரல் விட்டு சிரிப்பார்கள். அப்படியே ஓடிவந்து அந்த ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மையும் ஒரு தாக்கு தாக்குவார்கள். அதாவது நமது முதுகில் ஓங்கி தட்டிவிட்டு சிரிப்பார்கள். இவர்கள் ஜோக் சொல்ல ஆரம்பிக்கும்போதே பாதுகாப்பான தூரத்தில் நின்று அதை ரசிக்கப் பழகியிருப்பார்கள் சக தோழர்கள். நித்யாவும் அப்படி ஒரு ஜோக்காளிதான்.
திருமதி அஜீத்தும் அந்த சந்திப்பின்போது இருந்தார். ஏதோ ஒரு ஜோக் சொல்லிவிட்டு அப்படியே எழுந்து ஓடிப்போய் அஜீத்தின் வயிற்றில் குத்திவிட்டார் நித்யா. கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கக் கூடிய பெரிய ஜோக் போலிருக்கிறது. அதற்கேற்றாற்போன்ற முரட்டுக் குத்து அது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி கோபத்தில் விருட்டென்று எழுந்து உள்ளே போக, முகத்தில் வலியைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமானார் அஜீத். அந்த அறையே வேறொரு மூடுக்குப் போனது. “சரி, நான் நாளைக்கு வர்றேன்” என்று கிளம்பினார் நித்யா. மறுநாள் அவர் போனபோது பழைய அஜீத்தைப் பார்க்க முடியவில்லை அவரால். நித்யா அஜீத்தை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அந்த சம்பவத்தால் நிறைவேறாமல் போனது. பல வருடங்களுக்குப் பின் அவர் எடுத்த ‘வேதா’ என்ற படமும் ஓடவில்லை. நித்யாவுக்காக காத்திருந்த ஒரு பெரிய வாழ்க்கையை வெள்ளந்தியான அவரது குணமே காவு வாங்கியது.
நடிகர், நடிகைகளைப் படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும்.
மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவேன் கதவை தட்டி, ஷாட் ரெடி சார். வாங்கன்னு சொல்வது அவ்வளவு நாகரிகம் அல்ல. அப்படியென்றால் என்ன செய்வதாம்? பெரும்பாலும் இந்த கேரவேன் கதவுகளுக்கு வெளியே தங்கள் மேக்கப் மேனையோ காஸ்ட்யூமரையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் நடிகர்கள். அவர்களிடம் சொல்லி கதவை திறக்க செய்யலாம். அப்படி திறக்கிற நேரத்தில் தனது வருகையை அவர்களுக்கு அறிவித்துவிட்டு கீழேயே நிற்கலாம்.
டைரக்டர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் ஒரு காமெடி செய்தார்.
அது அடுத்தவாரம்.

புதன், 8 டிசம்பர், 2010

ரமணா ரெட்டியின் வீட்டுக்குள் பர்தா.'ரத்தசரித்திரம்' Part 2

இதன் பின்பு அனந்தப்பூர் மாவட்டத்தின் நிலைமை தலைகீழானது. மாவட்ட நிர்வாகமே பரிதலா ரவியின் கீழ் மண்டியிட்டுவிட்டது. அண்ணன் கண் அசைவில்லாமல் தொகுதியில் எதுவும் நடக்காது என்ற நிலைமையானது. இந்தச் சமயத்தில்தான் பரிதலா ரவியின் துப்பாக்கிச் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்கத் துவங்கியது என்கிறது மீடியா.

சூர்ய நாராயண ரெட்டியின் ஆதரவாளர்களும், ரமணா ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டியின் அல்லக்கைகளும் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். பலரும் கர்நாடகாவுக்குத் தப்பியோடினார்கள். உள்ளூரில் தனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது என்ற பரிதலா ரவியின் உத்தரவை அவருடைய அடிப்பொடிகள் சிரமமேற்கொண்டு செய்து வந்த தருணத்தில் எதிர்பாராத ஒரு சிக்கல் முளைத்தது. இது அவரது சொந்தக் கட்சியிலேயே..

பொதுவாகவே ஆந்திர அரசியலை நிர்மாணிப்பது ரெட்டிகளும், நாயுடுக்களும்தான். பண முதலைகளான இவர்கள்தான் ஆந்திராவின் ஆட்சியையே தீர்மானிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள். இப்படியொரு ரெட்டியாக அனந்தப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் திகழ்ந்து வந்த ஜே.சி.பிரபாகர் ரெட்டி என்பவர் தெலுங்கு தேசக் கட்சியில் இணைய முன் வந்தார். (இப்போது இந்த பிரபாகர் ரெட்டிதான் காங்கிரஸ் அரசில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கிறார்)

ஆனால் இவரது வருகையை பரிதலா ரவி விரும்பவில்லை. இவரைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று எதிர்த்தார். இந்த எதிர்ப்பை அவர் என்.டி.ராமாராவிடமும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்போது ராமாராவ் அவரது புதிய மனைவி லட்சுமி சிவபார்வதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எதுவும் சொல்ல முடியாத நிலைமை. ஹைதராபாத்தில் என்.டி.ஆரை பார்த்து காலில் விழுந்து கட்சியில் சேர்ந்தார் பிரபாகர் ரெட்டி.

இதனைக் கேள்விப்பட்ட உடனேயே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ரவி. ஆனால் அப்போதும் அனந்தப்பூர் மாவட்டம் அவரது முழு கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது. இதன் பின்பான சமரசப் பேச்சில் ரவியின் மீதான பாசத்தில் கட்டுப்பட்ட ராமாராவ், மீண்டும் ரவியை அழைத்து பேசி, சமாதானம் செய்து அவரையே எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்க வைத்து மீண்டும் எம்.எல்.ஏ.வாக்கிவிட்டார்.
இந்த நேரத்தில்தான் சந்திரபாபு நாயுடு, லட்சுமி சிவபார்வதிக்கு எதிராக உட்கட்சிக் கலகம் செய்து முக்கால்வாசி எம்.எல்.ஏ.க்களைக் கடத்திக் கொண்டு போய் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் தனக்கு அரசியல் அறிமுகம் கொடுத்த ராமாராவுக்கு தனது முழு ஆதரவையும் நீட்டினார் ரவி.

தனது அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கிருஷ்ணன் பக்கம்தான் என்று பகிரங்கமாக அறிவித்து என்.டி.ஆருக்கு தனது நன்றிக் கடனைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக என்.டி.ஆர். திடீரென்று மரணமடைந்துவிட.. கட்சியின் கடிவாளம் லட்சுமி சிவபார்வதியின் கைகளுக்குச் சென்றது..

ஏற்கெனவே சிவபார்வதியுடன் சண்டையில் இருந்த ரவி அனந்தப்பூர் மாவட்டத்தில் மட்டும் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மாநிலத் தலைமைக்கு சவால் விட்டபடியே இருந்திருக்கிறார். அவருடைய அதிருப்தி சிவபார்வதியைவிடவும் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்கு தெரிய வர.. அன்போடு அழைப்பு வந்தது ரவிக்கு..

“அனந்தப்பூர் மாவட்டத்தில் வேறு எந்த நபரும் உங்களுக்கெதிராக கொம்பு சீவி விடப்பட மாட்டார்கள்..” என்று சந்திரபாபு நாயுடு உறுதிமொழியளிக்க அணி மாறினார் பரிதலா ரவி.

1996-ல் நடந்த ஆந்திர தேர்தலில் அதே பெனுகுண்டா தொகுதியில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதே ரமணா ரெட்டியைத் தோற்கடித்தார் பரிதலா ரவி. இதன் பின்பு அடுத்தச் சுற்று பழி வாங்குதல் பணி துவங்கியது..

ரவியின் கூலிப்படை டீம் இப்போது உயிரோடியிருக்கும் தலைவர்களைக் குறி வைத்தது. முதல் பலி ஓபுல் ரெட்டி. 1996-ம் ஆண்டு ஒரு நாள். ஓபுல் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்திற்கு வந்தவர் ஹோட்டலுக்கு விலைமாதுவை வரவழைத்து குஷியாக இருந்துள்ளார். இவரது வருகையை மோப்பம் பிடித்த ரவியின் டீம் பக்கா பிளானோடு ஹோட்டலுக்குள் நுழைந்துள்ளது.

ஓபுல் ரெட்டி 'வேலை'யை முடித்துவிட்டு ஹாயாக குளியல் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அறைக்குள் நுழைந்த டீம், விலைமாதுவை வெளியேற்றிவிட்டு ஓபுல் ரெட்டிக்காக காத்திருக்கிறது. வெளியில் வந்த ஓபுல் ரெட்டியின் தொண்டையை அறுத்ததுடன் இல்லாமல் அவரது ஆணுறுப்பையும், விதைப்பையையும் அறுத்து காக்காய்க்கு வீசிவிட்டு பறந்தோடி விட்டது. இந்தக் கொலையை நக்ஸல் இயக்கம்தான் செய்தது என்றாலும் முதல் குற்றவாளியாக பரிதலா ரவிதான் சேர்க்கப்பட்டார்.

இவரது கொலையில் இரண்டுவிதமான செய்திகள் கிடைத்துள்ளன. இவரது வீட்டில்தான் இந்தக் கொலை நடந்ததாகவும் சொல்கிறார்கள். உண்மை எது என்று தெரியவில்லை.

இப்போது சூரியின் டர்ன்.. தனது ஆதரவாளர்களையும், தனக்கு நெருக்கமான உறவுக்காரருமாக இருந்த ஓபுல் ரெட்டியின் மரணத்திற்கு அடுத்து ரவி தன்னைத்தான் குறி வைத்திருக்கிறார் என்பது உணர்ந்து ரவிக்கு முன்பாக தான் முந்திக் கொள்ள நினைத்திருக்கிறார். ஆனால் அதனைச் செயல்படுத்தியவிதம் இந்த இரண்டு குடும்பங்களின் வம்ச சண்டையை அகில இந்தியாவுக்கும் எடுத்துச் சென்றது..

19.11.1997 அன்று காலை 11.50 மணி. ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ராமாநாயுடுவின் சினி ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தன கார்களின் அணிவகுப்பு. அதில் நடுநாயகமாக வந்த காரில் நடிகர் மோகன்பாபுவுடன், பரிதலா ரவியும் இருந்தார்.

தான் தயாரித்த தனது தந்தை ராமுலுவின் வாழ்க்கை சரித திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதில் தனது தந்தையாக நடிக்க ஒப்பந்தமாயிருக்கும் மோகன்பாபுவுடன் பேசியபடியே ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் ரவி.

ரவியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஸ்டூடியோவில் இருந்து 25 அடி தூரத்தில் ஒரு பழைய பியட் கார் நின்று கொண்டிருந்தது.. எமனாக நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் அது வெடிக்கப்படும் சூழலில் தயாராய் இருந்தது.

எல்லாம் சரியாக இருந்திருந்தால் பரிதலா ரவியுடன் அன்றைக்கு மோகன்பாபுவும் சேர்ந்தே இறந்து போயிருப்பார். ஆனால் எங்கும், எதிலும் முந்திக் கொள்ளும் மன நிலையை உடைய பத்திரிகையாளர்கள் செய்த ஒரு சின்ன செயலால்தான் அன்றைக்கு ரவி லேசான காயங்களோடு தப்பித்துக் கொண்டார்.

ரவியின் வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த தெலுங்கு E டிவியின் குழு வந்த வாகனம் திடீரென்று ரவியின் வாகனத்தை முந்திக் கொண்டு முன்னால் சென்றது.. இந்த பத்து செகண்ட்டுகள் வித்தியாசத்தில் ரிமோட் கண்ட்ரோல் அழுத்தப்பட பியட் கார் வெடித்த வெடிப்பில் E டிவியின் கார் சுக்கு நூறானது.. அதில் இருந்த 6 பணியாளர்களும் இறந்து போனார்கள். அப்பாவி மக்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் மரணம். 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்
மோகன்பாபுவும், பரிதலா ரவியும் சிறிதளவு காயங்களுடன் தப்பித்தது கடவுள் புண்ணியம்தான்.. ஆந்திராவே பதைபதைத்தது.. இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட போலீஸ் மட்டும் இது சூரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று உடனுக்குடன் போலீஸ் தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியதுடன் சூரியுடன் கடைசியாக அனந்தப்பூரில் தென்பட்ட தர்மாவரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்லரு வாசுதேவ ரெட்டி என்ற 20 வயது வாலிபனைப் பற்றியத் துப்பையும் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சிஐடி போலீஸார் வசம் சேர்ப்பித்தனர்.

இங்கேயிருந்து நூல் பிடித்த போலீஸின் தேடுதல் வேட்டையில் எல்லாவிதமான ரெட்டிகளும் சிக்கிக் கொண்டார்கள். போலீஸின் தேடுதல் வேட்டையில் சூரியின் மனைவி பானுமதி போலீஸில் பிடிபட்டார். அவரை வைத்து போனில் மிரட்டியதையடுத்து கர்நாடகாவில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் பதுங்கியிருந்த சூரி நாராயண ரெட்டி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி கர்நாடக போலீஸில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றம்சாட்டப்பட்டு அதில் 14 பேர் மட்டுமே பிடிபட்டார்கள். மீதியிருக்கும் 7 பேர் இன்றுவரையிலும் தேடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதில் சூரிய நாராயண ரெட்டிதான் முதல் குற்றவாளி.

குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர்களில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், மீதி 8 பேரை விடுவித்தது. ஏ-1 குற்றவாளியான சூரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து சூரி அப்பீல் செய்தபோது, ஆந்திர உயர்நீதிமன்றம் இதனை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று மாற்றித் தீர்ப்பளித்து பரபரப்பாக்கியது.

ஆனாலும் இதற்காகவெல்லாம் சூரி தரப்பு பயந்துவிடவில்லை. இதற்குப் பின்னும் படுகொலைகள் தொடர்ந்தன. கோர்ட் குற்றவாளியில்லை என்று விடுவித்தாலும் நாங்கள் விடுவதில்லை என்று துப்பாக்கிகள் ராயலசீமா மாவட்டங்கள் முழுவதும் முழங்கின. இந்த முறையும் நக்ஸல் இயக்கம் ரவியின் முன்னே நின்று கொள்ள கொலைகள் விழத் தொடங்கின.

ஹைதராபாத்தில் கொத்தபள்ளி என்னுமிடத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த இருவரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர். பானுகோட்டா கிஷ்டப்பா, குண்டிமாடி ராமுலு, வெங்கடேசலு, கொண்டா ரெட்டி என்ற சூரியின் ஆதரவாளர்களை அடுத்தடுத்துப் போட்டுத் தள்ளியது ரவியின் தரப்பு.. இதில் போயா நாகராஜூ என்பவர் மட்டும் இரண்டு முறை நடத்திய தாக்குதலின்போதும் தப்பித்துக் கொண்டார். ஆயுசு கெட்டி போல..

சிறுசுகளையெல்லாம் போட்டாச்சு என்றாலும் ஒரேயொரு பெரிசு மட்டும் ஊர்ப் பக்கமே வராமல் ஹைதராபாத்திலேயே பலத்த போலீஸ் பாதுகாப்போட உக்காந்திருக்கே.. விடலாமா? அதுலேயும் எலெக்ஷன் வேற நெருங்கிருச்சு. இப்பவே போட்டாத்தான அடுத்த தேர்தல்ல ஈஸியா ஜெயிக்கலாம் என்று யோசித்த ரவி தரப்பு, இப்போது குறி வைத்தது ஓபுல் ரெட்டியின் அண்ணனும், பெனுகுண்டாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமணா ரெட்டியை..

1999-ல் ஹைதராபாத்தில் இருந்த ரமணா ரெட்டியின் வீட்டுக்குள் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். கட்சி விஷயமாக பேசுவதற்காக அவர்தான் வரச் சொன்னார் என்றார்கள். நானா? லேடீஸையா? என்றபடியே சந்தேகத்தோடு எழுந்து வந்த ரமணா ரெட்டியை பார்த்த மாத்திரத்தில் பர்காவை விலக்கி கைகளில் இருந்த துப்பாக்கியால் சராமரியாகச் சுட்டுத் துளைத்ததில் ரவியின் பெரிய எதிரியின் உயிரும் உதிர்ந்து போனது.

1999 தேர்தலும் வந்தது. பரிதலா ரவி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். சிறையில் இருந்தபடியே சூரி நாராயண ரெட்டி தனித்துப் போட்டியிட்டார். உயிர் மேல் இருந்த பயம் காரணமாக காங்கிரஸின் முக்கியத் தலைகள் போட்டியிட முன் வராததால் ஒப்புக்குச் சப்பாணியாக பெல்லாம் சுப்ரமணியம் என்பவரை நிறுத்தி வைத்தது காங்கிரஸ். பரிதலா ரவி  70.82 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். சூரிக்கு டெபாஸிட்டே காலியானது.

அனந்தப்பூர் மாவட்டம் கனிம வளம் நிறைந்தது.. சுரங்கங்கள் நிறையவும் உள்ளன. குவாரிகள் துவங்கி காசு பார்க்க ஆரம்பித்த நேரத்தில் பரிதலா ரவியின் சொத்துக்களும் கூடத் துவங்கின. ரவிக்குத் தெரியாமல் எந்த அரசு கான்ட்ராக்டும் மாவட்டத்தில் யாருக்குமே கிடைக்காது. அவர் கண் ஜாடை காட்டினால்தான் மாவட்ட நிர்வாகமே நடக்கும் என்ற நிலைமையில் இதெல்லாம் சகஜம்தானே..

கர்நாடகாவிலும் அனந்தப்பூரை ஒட்டிய மாவட்டங்களிலும், ஊர்களிலும் நக்ஸல்கள் குரூப்பை வைத்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நிறுவிக் கொண்டார் ரவி. இந்த நேரத்தில் அவர் சம்பாதித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு 300 கோடி இருக்கும் என்கிறார்கள்.

சிறைக்குள் இருந்தாலும் ரவியைப் போட்டுத் தள்ளும் முடிவில் மாற்றமில்லை சூரியிடம். ரவியின் வீட்டின் மீது குண்டு வீசித் தாக்குதல் தொடுக்கும் விதமாக ஒரு நடவடிக்கையையும் அப்போது சூரி செய்திருக்கிறார். இதுவும் காவல்துறையில் வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டாவது குற்றவாளி யார் தெரியுமா? ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி.

ரவியைத்தான் போட முடியவில்லை. அவரது ஆட்களையாவது துப்பரவு செய்து அகற்றுவோம் என்ற நினைப்பில் ரவியின் ஆட்கள் மூவரை வெங்கடபுரம் அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் சூரியின் ஆட்கள். இப்போதும் தெலுங்கு தேசம் ஆட்சிதான்.

அதேபோல் ரவியும் சூரியை சிறையிலேயே போட்டுத் தள்ளவும் செட்டப் ஆட்களை அனுப்பி வைத்து ஆழம் பார்த்திருக்கிறது. இதை போலீஸும், உளவுத்துறையும், சிறை நிர்வாகமும் கண்டறிந்து சூரியை மிகப் பாதுகாப்பான பகுதியில் வைத்து அடைத்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஒருவேளை சூரியை கோர்ட்டுக்கு கொண்டு வரும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்து மிகப் பெரும் செக்யூரிட்டியோடுதான் சூரியை கோர்ட்டுக்கு கொண்டு வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அம்பிகா கதை, வசனத்தில் நடிக்கும் 'மிஸ் கேரளாவின்' தம்பி!

Indu Thambyமிஸ் கேரளா பட்டம் வென்றவரான மாடல் அழகி இந்து தம்பி, அந்தக் காலத்து ஹீரோயின் அம்பிகாவின் கதை, வசனத்தில் உருவாகும் புதிய மலையாளப் படத்தில் நாயகியாக அவதாரம் எடுக்கிறார்.

இந்த ஆண்டு மிஸ் கேரளா போட்டியில் வெற்றி பெற்றவர்தான் இந்து தம்பி. அப்படியே மலையாள முகம் இந்து தம்பிக்கு. இப்போது இவர் சினிமாவுக்கு வந்துள்ளார். அனபேலா என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு நடிகை அம்பிகாவின் தம்பி சுரேஷ் நாயர் என்பவர் கதை எழுதியுள்ளார். அர்ஜூன் நாயர் தயாரிக்கிறார். அம்பிகா வசனம் எழுதுகிறார். படத்தை இயக்குவதும் அம்பிகாதான்.

படம் முழுக்க புதுமுகங்கள்தானாம். தென் இந்திய மீடியா என்ற பெயரில் இப்படத்தை அம்பிகா உருவாக்குகிறார். அர்ஜூன் நாயரும், அம்பிகாவின் தம்பி என்பதால் இது அம்பிகாவின் சொந்தப் படமாக உருவாகிறது.

மலையாள முத்திரை இருந்தாலும், இந்து தம்பியை ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் மாதுரி தீட்சித் போலவே இருக்கிறது. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் திரிஷா போல தெரிகிறது. நயனதாராவின் சாயலையும் காண முடிகிறது. இப்படி பல கலவையாக இருக்கும் இந்து தம்பி, மிக விரைவிலேயே தென்னிந்திய திரையுலகைகக் கலக்கக் கூடும் என்று எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு மலையாளத்தில் அறிமுகமானாலும் இந்து தம்பியின் உண்மையான இலக்கு தமிழாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ் ஹீரோக்களே ரெடியாகிக்கோங்க!
English summary
Miss Kerala 2010 Indu Thamby forays into Cinema through Anabela, a Malayalam movie, penned by yesteryear Actress Ambica. Anabela is the directorial debut of Ambica and her brother Arjun Nair produces the movie.

13 புதுமுகங்களுடன் களமிறங்கும் செல்வா!

Naan Avan Illaiநான் அவனில்லை படத்துக்குப் பிறகு 13 புதுமுகங்களுடன் களமிறங்குகிறார் இயக்குநர் செல்வா.

நாங்க என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை நிகழ்காலத்தில் துவங்கி எண்பதுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 13 பேரில் 5 பேர் இந்தப் படத்தின் ஹீரோக்கள். நான்கு ஹீரோயின்கள், இரண்டு வில்லன்கள், இரண்டு காமெடியன்கள்.

இதுகுறித்து செல்வா கூறுகையில், "புதியவர்களை அறிமுகப்படுத்துவது எனக்குப் புதிதில்லை. அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து தொடர்கிறது. இப்போது அறிமுகமாகவிருக்கும் 13 பேருமே இதே துறையைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது", என்கிறார்.

இந்தப் படம் செல்வாவின் 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Naan Avan Illai fame director Selva is going to introduce 13 new faces in his forthcoming film Naanga. Among these 13 faces, 4 new heroines, 5 heroes, 2 villains and 2 comedians and remember this is Selva"s 25th film. The story revolves around an alumni meeting of friends in a college, who travel back to their college da

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள் : இலங்கை மின்சாரசபை!

 
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.மின்சாரசபை கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மின்பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டப்பணம் மூலம் 12.5 மில்லியன் ரூபாய் மின்சாரசபைக்கு கிடைத்துள்ளது.

இதனால் மின்சாரசபைக்கு நாளொன்றுக்கு 6 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறான மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடும் தண்டப்பணத் தொகையை மேலும் அதிகரிக்குமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை திடீர்சோதனைப் பிரிவின், 1987 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

JeganMohan Reddy:காங்கிரசை அழிப்பேன்: ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை என, ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, அக்கட்சியில் இருந்து வெளியேறினார். மேலும் தனது எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் தந்தை இறந்த போது, ஏராளமான கட்சி தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர். அவர்களை சந்திப்பதற்காக ஆறுதல் யாத்திரை துவங்கினேன். இதற்கு கட்சி மேலிடம் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும், யாத்திரையின் நோக்கத்தை வலியுறுத்துவதற்காக டில்லி சென்றேன்.

சோனியா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அனுமதி கேட்டேன். ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆந்திராவுக்கு திரும்பிய நான், யாத்திரையை தொடர்ந்து நடத்தினேன். இந்த விவகாரத்தில் தான், கட்சி மேலிடத்துக்கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. தொடர்ந்து என்னை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தன. என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற, நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக, என் குடும்பத்தினரையும் பிரிக்க முயற்சித்தனர். இதனால் நானே கட்சியில் இருந்து வெளியேறி விட்டேன்.என் பலம் என்ன என்பதை நிரூபித்து காட்டுவேன்.

இன்னும் 45 நாட்களுக்குள் புதிய கட்சியை துவங்குவேன். அந்த கட்சி, ஆந்திர மக்களை பெருமைப்படுத்தும் கட்சியாக இருக்கும். ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் என் கட்சி கொடி பறக்கும்.இன்னும் மூன்று ஆண்டுக்குள் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழித்து காட்டுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை மிரட்டுகிறார் கருணாநிதி: ஜெ சொல்கிறார்

Jayalalithaசென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் ராசாவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த விவகாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயங்க மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை முதல்வர் கருணாநிதி மிரட்டுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது எப்படி நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதே போல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதி.

இளைஞன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி கலந்து கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக ரூ. 45 லட்சம் தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை கருணாநிதியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை செய்த முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த திரைப்பட நிகழ்ச்சியை பயன்படுத்தினார் கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை ஒரு புராணக் கதையுடன் ஒப்பிட்டு, இத்தனை கோடி ரூபாய் ஊழலை ராசா ஒருவரால் மட்டுமே செய்திருக்க முடியாது என்ற வகையில் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி.

இது கலப்படம் இல்லாத உண்மை! கருணாநிதி, அவருடைய மகள் கனிமொழி மற்றும் சிலரும் இந்த சுரண்டலின் பங்குதாரர்கள் என்பதை தானே ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியைப் போலவே அவரது அறிக்கையும் வில்லங்கமாகவே உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெத்தனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையை மறைமுகமாக அச்சுறுத்துவது போல் அவரது பேச்சு அமைந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவை நெருக்கிப் பிடிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்த ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிட தயங்க மாட்டேன் என்று எச்சரித்து இருக்கிறார் கருணாநிதி.

இது போன்று உண்மையை வெளியிடுவதை காங்கிரஸ் விரும்பாது என்பது தான் இதன் பொருள். வழக்கம் போல், கருணாநிதி கூட்டணிக் கட்சியை மிரட்டும் பாணி தான் இது.

மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலகியது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு முடிவல்ல. நாட்டிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மதிப்பிடுவதைத் தாண்டி விசாரணை நடைபெற வேண்டும்.

இந்த இமாலய ஊழல் நடைபெற்றதில் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் எவ்வளவு?. யார், யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பது குறித்த உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது. நாட்டிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மதிப்பிடுவதைத் தாண்டி விசாரணை நடைபெற வேண்டி இருக்கிறது. நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, அந்த நீதி அனைவருக்கும் தெரியும்படி வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒரே வழி நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தான். இதைத் தான் எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

ஆனால், மத்திய அரசு இதை அமைக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசாங்கம் தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வராததன் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக நாடாளுமன்றம் நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதை எந்த அளவுக்கு எதிர்க்கிறதோ, அந்த அளவுக்கு இந்தப் பிரச்சனை நின்றுவிட வில்லை என்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

உண்மையை வெளிக்கொணர நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசார ணையைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு ஒப்புக் கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாது.

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும், என்ற எனது கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து பதில் அளிக்கும் விதமாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிலே அமைச்சராக இருந்து, பதவியை ராஜினாமா செய்தபோது, அவர்களை மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறினாரா? என்று ஒரு பொருத்தமற்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கருணாநிதி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் இது போன்ற சூழ்நிலை யாருக்கும் எழவேயில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதற்கிடையே, இந்த ஊழலுக்குப் பின்னால் அதிக நபர்கள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளதால், அவரே தானாக முன் வந்து உண்மையை ஒப்புக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். இதன்மூலம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய தர்மசங்கடத்தை தவிர்க்கலாம்.

முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருட்டிணன் பட்டப் பகலில் பல பேர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்பாக மதுரையில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு, அதன் காரணமாக மூன்று அப்பாவி ஊழியர்கள் இறந்தனர். மதுரைக்கு அருகே ஒரு லாரி ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அனைத்து குற்றங்களுக்கும் மூளையாக செயல்பட்டவர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். அந்தக் குற்றவாளியை காப்பாற்றியவர் தானே கருணாநிதி?.

இல்லையெனில், மேற்படி வழக்குகள் அனைத்தும் தீர்க்கப்படாத வழக்குகளாக இன்னமும் காவல் துறை பதிவேடுகளில் ஏன் இருக்கின்றன?. ராசா மற்றும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம் நடந்த இடம் தமிழகத்தில் உள்ள ஒரு பகுதியல்ல, டெல்லி என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும்.

புகார்தாரர்களையும், சாட்சிகளையும் பிறழ் சாட்சிகளாக மாற்றி, தன் சொல்படி கேட்க வைக்க முடியாது. இந்த செயலற்ற நிலை தான் கருணாநிதியை அறிக்கைகளை வெளியிடச் செய்திருக்கிறது. ஏனெனில், தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்குத் தெரியும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆந்திர காங். எம்எல்ஏக்களுக்கு ரோஜா சவால்

ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற காங்.எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிட தயாரா என, நடிகை ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, ராஜசேகர ரெட்டி சுய மரியாதை மிகுந்தவர். இதேபோல் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியும், சுயமரியாதை மிக்கவர். யாருக்குப் பணிந்து செல்ல மாட்டார். காங்கிரஸ் மேலிடம் கீழ்மட்ட தலைவர்களை அடிமைபோல் நடத்துகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவிய ஆந்திராவுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து ஆந்திராவை சீர் குலைத்தது தான் காங்கிரசின் சாதனை.

கடந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா?

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பெயரைச் சொல்லி ஆந்திர பொதுமக்களிடம் ஓட்டு கேட்க தைரியம் உள்ளதா? தற்போது மாநில, மாவட்ட, வட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு விலகி ஜெகன்மோகன் ரெட்டி பக்கம் வந்து விட்டார்கள்.

தேர்தலின் போது காங்கிரசுக்கு வாக்குசாவடி ஏஜெண்ட் நியமிக்க கூட ஆள் இல்லை என்பது தான் உண்மை. அடுத்த தேர்தலில் பீகாரில் ஏற்பட்ட நிலை தான் ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: 2001லிருந்தே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு-பாஜக வேடம்

Vajpayee டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மேலும் விரிவாக விசாரிக்கும் வகையில், கடந்த 2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், என்ன நடந்தது என்பதையும் சேர்த்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்போது ராஜா செய்தது போல, அப்போதும், முதலில் வருவோருக்கே உரிமம் என்ற முறையைத்தான் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறுகையில்,

இந்த வழக்கில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மட்டும் பிரச்சனை எழவில்லை. மாறாக அதற்கும் மேலும் என்ன நடந்தது என்பது தெரிய வேண்டும். இந்த வழக்கின் விசாரணையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

இருப்பினும், பிரச்சனையின் ஆழத்தை மேலும் விரிவாக ஆராயும் வகையில், கடந்த 2001ம் ஆண்டு (பாஜக ஆட்சியில்) என்ன நடந்தது என்பதையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதை சிபிஐதான் விசாரித்து நடந்ததை வெளியே கொண்டு வர வேண்டும் என்றனர்.

மேலும் இந்த வழக்கில் தீர்ப்பையும் ஒத்தி வைத்தனர்.

நீதிபதிகளின் இந்தக் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், 2001ம் ஆண்டு பாஜக ஆட்சியில் என்ன கொள்கையை தொலைத்தொடர்புத்துறை கடைப்பிடித்ததோ, அதையேதான் நானும் பின்பற்றினேன் என்று முன்னாள் ராசா தொடர்ந்து கூறி வருகிறார்.

பாஜகவின் 'உத்தமர் வேடம்' கலையும்?:

இந் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு ராசாவுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்புகள் எழுந்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரும் பிரச்சனையாக்கி, 'உத்தமர் வேடம்' போட்டு வரும் பாஜகவுக்கு இது பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

2001ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது ஏலம் நடத்துவதற்குப் பதில், முதலில் வருவோருக்கு உரிமம் என்ற கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2001ம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறையின் அமைச்சரான மறைந்த பிரமோத் மகாஜன் தான் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வி்ற்பதில் முக்கிய முடிவுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக அப்போதே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. (பிரமோத்தை சுட்டுக் கொன்ற அவரது அண்ணன் பிரவீன மகாஜனுக்கு ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் மாதம் ரூ. 5 லட்சம் வரை ஊதியம் தந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கு என்ன வேலை பார்த்து வந்தார் என்பது தெரியவில்லை).

மேலும் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையும் வகுக்கப்பட்டது. அதன்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான லைசென்ஸ் கட்டணம், லாபத்தி்ன் அடிப்படையிலான கட்டணமாக மாற்றப்பட்டது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் பலன் கிடைத்தது. ஆனால், நாட்டுக்கு பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டது.

மேலும் மகாஜன் அமைச்சராக இருந்தபோது தான் ரிலையன்ஸ் நிறுவனம் லைசென்ஸ் கட்டணத்தையே செலுத்துவதற்கு முன் நாடு முழுவதும் சேவையைத் தொடங்கவும் அனுமதி தரப்பட்டது.

பின்னர் மகாஜன் பதவி விலகி தொலைத் தொடர்பு அமைச்சரானார் அருண் ஷோரி. இதையடு்த்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அமைச்சரவையில் தயாநிதி மாறன் இந்தத் துறையின் அமைச்சரானார்.

அவரைத் தொடர்ந்தே ராசா தொலைத்தொடர்பு அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் 19வது நாளாக ஒத்திவைப்பு:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்ற பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 19வது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.

இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும், வாரணாசி குண்டுவெடிப்பில் பலியான சிறுமிக்கும், தமிழக மழை வெள்ளத்திற்குப் பலியானவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து ஒரு நிமிட நேரம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதையடுத்து இரு அவைகளிலும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் வழக்கம் போல ஜேபிசி விசாரணை தேவை என்ற கோஷத்துடன் பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் குதித்ததால் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து முதலில் பிற்பகல் வரையிலும், பின்னர் நாள் முழுமைக்கும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் முடங்கி இன்றுடன் 19 நாட்களாகிறது. இதனால் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட ஒரு அலுவலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
SC today asked CBI to look into What happened in 2001 during the NDA regime in 2G Spectrum allocation. SC favours widening of the ambit of the ongoing probe into the 2G Spectrum case. It is noted that, during NDA period, first-come-first-served was the norm for Spectrum allocation.

GCE(OL) Vembadi வேம்படி 3 ஏ யில் முன்னணிப் பெறுபேறுகள்

க.பொ.த. (உ/த) பெறுபேறு வெளியானது - யாழ்.இந்து, வேம்படி மகளிர் கல்லூரி 3 ஏ யில் முன்னணிப் பெறுபேறுகள்
க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறு திருப்திகரமாக இல்லை; யாழில் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி
க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பேறுபேறுகள் நேற்று வெளியாகின. இதில் யாழ். மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி என்பன முன்னணி பெறுபேறுகளை பெற்றன.

இதில் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கு.நிருஜன் பெற்றுக்கொண்டார்.

கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன், ஹாட்லிக் கல்லூரி மாணவன் தெய்வேந்திரன் பிரணவன், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் சின்னக்கோன் சிந்துஜன் ஆகியோர் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருசோத்தம குருக்கள் ராஜாராம் 3 ஏ சித்திபெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தையும் மூன்றாம் இடத்தை வேம்படி மகளிர் கல்லூரி மாணவி லக்ஸ்ரெலா மரியதாஸும் பெற்றுக்கொண்டனர்.
பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து. 3 ஏ-12, வேம்படி மகளிர் கல்லூரி 3 ஏ-11, ஹாட்லிக் கல்லூரி 3 ஏ-8, சாவகச்சேரி இந்து 3 ஏ-5, கொக்குவில் இந்து 3 ஏ-4 பெற்றுள்ளனர்.
க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறு திருப்திகரமாக இல்லை; யாழில் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி
க.பொ.த உயர்தர பரீட்சையில் திருப்திகரமான பெறுபேறு கிடைக்காத நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட  மாணவிகள் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையைச் சேர்ந்த  மாணவிகளான இவர்கள் இருவரும், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை முடிவுகளை நேற்றுக் காலையில் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் எதிர்பார்த்தபடி பரீட்சை பெறுபேறுகள் திருப்திகரமாக அமையாததால் மனமுடைந்த இம்மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
பின்னர் இம்மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
2010ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்  நேற்று வெளியாகின.

அப்படியா? Vaiko?

அப்படியா?

புயல் தலைவர் அடிக்கடி தேசத்தின் தலைநகரத்திற்குச் சென்று வருவது பற்றிக் குறிப்பிடும் கட்சி நிர்வாகிகள், ""தலைவரின் வாரிசு தலைநகருக்குப் பக்கத்தில் உள்ள தொழிற் பேட்டையில் அந்த மாநில அரசின் அனுமதியோடு 150 சி செலவில் கம்ப்யூட்டர் பொருட்களை பேக்கிங் செய்யும்... அட்டைப்பெட்டி களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் 40 சி முதலீட்டில் ஒரு ஹோட்டலையும் வாரிசு நடத்தி வருகிறார்'' என்கிறார்கள்.

ஏட்டய்யா' விஜயகாந்த்..'மாட்டிக்கொண்ட' மன்மோகன் சிங்... 'நாளைய முதல்வர்' ஸ்டாலின் பேரன்!

இது வெ(ற்)றிகொண்டான் தாண்டவம்

நுரையீரலில் நீர்கோத்து அபாயக் கட்டத்தில் அப்போலோவில் சேர்க்கப்பட்ட தி.மு.க-வின் திடுதிடு பேச்சாளர் வெற்றிகொண்டான்... இப்போது மீண்டும் மேடைகளில்!

வயது முதிர்வும் நுரையீரல் கோளாறும் வெற்றி கொண்டானின் பழைய சுருதியைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. விருகம்பாக்கத்தில் தி.மு.க-வின் சாதனை விளக்கக் கூட்டத்தில் பொளந்து கட்டினார் வெற்றிகொண்டான். எப்போதுமே கூட்டணி குறித்த முடிவை தி.மு.க. தலைமை எடுத்துவிட்டால், அதற்கேற்ற முழக்கத்தை வெற்றிகொண்டான் மூலம் பாய்ச்சித்தான் ஆழ நீளம் அறியும். அப்படி ஏதும் வெற்றிகொண்டானுக்கு சிக்னல் கிடைத்ததோ என்னவோ... காங்கிரஸுக்கு எதிராகக் கர்புர் காட்டி வெளுத்தார் வெற்றியார்!

''தலைவர் கலைஞர் என்னையப் பார்க்க வந்ததை வெச்சு, 'வெற்றிகொண்டானுக்கு முடிவு நெருங்கிடிச்சு. அவரோட இரங்கல் கூட்டத்தில் நான் அவசியம் கலந்துக்குவேன்’னு சில நாட்களுக்கு முன்னால், எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆனா, நடந்தது என்னன்னு உங்களுக்கே தெரியும். அவரோட இரங்கல் கூட்டத்துக்கு நான் போற சூழ்நிலை உருவாகிடுச்சு. அவரோட மறைவை என்னால தாங்க முடியலைன்னாலும், அவர் வார்த்தைகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்னு தோணிச்சு!'' என ஆரம்பத்திலேயே அரசியல் சுழற்சியை உருக்கமும் உண்மையுமாய் புட்டுப் புட்டுவைக்கத் தொடங்கிய வெற்றிகொண்டான், அடுத்தபடியாய் காங்கிரஸைக் கடாசத் தொடங்கினார்.

''எங்களுக்கு அ.தி.மு.க-காரன் எதிரி இல்லை. அவன் வீட்ல துக்கம்னா, நாங்கதான் போகணும். எங்க வீட்டு பாடை தூக்க, அவன்தான் வரணும். இன்னிக்கு காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்னு யார் யாரோ கத்துறாங்க. காமராஜர், காங்கிரஸ் கட்சி யில இருந்தாலும்... கடைசிக் காலத்தில் அவரைக் காப் பாற்றியது தி.மு.க-தான். 'காமராஜர்... காமராஜர்’னு இன்னிக்குக் கத்துறவங்களில் பாதிப் பேர் அவர் உயிரோட இருந்தப்ப பிறந்திருக்கவே மாட்டாங்க. குழந்தை அழுவுறதால கல்யாணம் நின்னுபோயிடும்னு சில பேர் நினைக்கிறாங்க. 'சாப்பாடு சரியில்லை... கல்யாணத்தை நிப்பாட்டுங்க’ன்னு சில தறுதலைங்க சத்தம் போடுதுங்க... சின்னப் பயலுகளோட சத்தத்தை எல்லாம் எங்க தலைவர் சட்டை பண்ணிக்க மாட்டார்.

இந்த நாட்டுக்காக, தான் வாழ்ந்த வீட்டையே கொடுத்தவர் எங்க தலைவர். அவர் சும்மா இருந்தாலும் அவரோட சுழி சும்மா இருக்காது. அவர் வீட்டை ஆஸ்பத்திரிக்கு கொடுக்கச் சொல்லி யாரும் மனுவா போட்டாங்க? மகாத்மா காந்திகூட தன்னோட சபர்மதி ஆசிரமத்தை யாருக்கும் எழுதிவைக்கலியே...

நேருவோ, இந்திரா காந்தியோ தங்களோட பண்ணை வீடுகளை இந்த நாட்டுக்காக எழுதிவெச்சாங்களா? தேசத் தலைவர்கள்கூட செய்யாத காரியத்தை என் தலைவர் செஞ்சிருக்காருய்யா. வீடு ஒண்ணுதான்யா அவர்கிட்ட மிச்சம் இருந்துச்சு. அதை வாங்க அவர் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா..? கதை வசனம் எழுதி, பெரியார்கிட்ட வேலை பார்த்து, குடியரசு பத்திரிகையில் சப் எடிட்டரா இருந்து வாங்கிய வீட்டை கொஞ்சம்கூட யோசிக்காம ஆஸ்பத்திரிக்கு எழுதிவெச்சிருக்கார். இவ்வளவு பெரிய தியாகத்தை ஜெயலலிதா பித்தலாட்டம்னு சொல்லுது!'' என்றவர் மீண்டும் கூட்டணி குடைச்சலையே கையில் எடுத்தார்.

''இன்னிக்கு அத்தனை கட்சியும் கூட்டணிக்கு அலையுது. 'அவர்கிட்ட போகலாமா... அந்தம்மாகிட்ட போகலாமான்’னு போட்டி போட்டு அலையுறாங்க. அந்தம்மா கூட்டணிக்குப் போகணும்னு துடியாத் துடிக்கிறவங்களுக்கு ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புறேன். ராஜீவ் காந்தியும் சோனியாவும் ஒண்ணாப் படிச்சாங்க. லவ் பண்ணினாங்க. கல்யாணம் கட்டிக்கிட்டாங்க. ராகுல், பிரியங்கான்னு ரெண்டு குழந்தைகளும் பிறந்திடுச்சு. அப்ப எல்லாம் ஏதும் சொல்லாதவங்க ராஜீவ் காந்தி கொலையானப்ப, காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் ஒண்ணா சேர்ந்து, 'சோனியா இத்தாலிப் பெண்... அவங்களை இத்தாலிக்கே விரட்டணும்’னு தொண்டை வலிக்க கத்தினாங்க. அன்னிக்கு ஒரே ஒரு குரல் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவெச்சுச்சு. 'சோனியா காந்தி இந்தியாவின் மருமகள். இந்தியாவை ஆளும் தகுதி அவங்களுக்கு உண்டு’ன்னு சொன்ன அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் கலைஞர்தானேய்யா!

காங்கிரஸ்காரனுங்களே அன்னிக்கு அந்த அம்மாவுக்கு எதிராப் பேசினாங்க. அந்த நேரத்தில் ஜெயலலிதா பேசிய பேச்சு எல்லாம் காங்கிரஸ்காரங்களுக்கு மறந்துபோச்சா? கூட்டணிக்காக இதை நான் சொல்லலை. கூட்டணிக்கு அலையுறாங்களே... அவங் களுக்காகச் சொல்றேன்!'' என சூடுவைத்த வெற்றிகொண்டான் அடுத்தபடியாய் அ.தி.மு.க-வைக் குறிவைத்துப் பேசியதுதான் ஹைலைட்!

''நாங்க ஜெயலலிதாவை மத்த விஷயங்களில் எதிர்க்கலை. ஒரு தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளணும் கிறதுதான் எங்க கோரிக்கை. அதனாலதான் அந்தம்மா இந்த நாட்டை ஆளக் கூடாதுன்னு சொல்றோம். நாளைக்கே ஜெய லலிதா, 'சசிகலாவை முதல்வர் ஆக்குவேன்’னு ஒரு அறிக்கை விடட்டும். நாங்க இப்பவே அதுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கிறோம். இல்லைன்னா, ஊமையர் சங்கத் தில உறுப்பினரா இருக்கிற ஓ.பி.எஸ்-ஸை முதல்வர் ஆக்குவதா சொல்லட்டும். நாங்க அதுக்கும் சம்மதிக் கிறோம். இப்படி அறிவிக்க ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கா?'' எனக் கேட்க தி.மு.க-வினரே ஜெர்க் ஆகிப் போனார்கள்.

அடுத்தபடியாய் அனைவரும் ஆவலு டன் எதிர்பார்த்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்தார் வெற்றிகொண்டான்.

''இன்னிக்கு அத்தனை பேரும் கத்துறான்... டெல்லியில் ஊழலாம்... பார்லிமென்ட்டில் ஊழலாம்... ஒருத்தன் சுப்ரீம் கோர்ட்ல தலை வெச்சு புகாரும் கையுமாத் தூங்கிட்டு இருக்கான். இதுநாள் வரைக்கும் கொசுவை விரட்ட ஆர்ப்பாட்டம் நடத்திட்டு இருந்த அந்தம்மா, இதை எல்லாம் பார்த்துட்டு, 'ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம்’னு கூவிக்கிட்டு போராட்டத்தில் இறங்கிடுச்சு. 'ஊழல், குடும்ப ஆட்சி’ன்னு ஏதேதோ கூவிட்டுக் கூட்டணிக்கு அலையுது. நான் பகிரங்கமா சொல்றேன்... நாங்க நடத்துறது குடும்ப ஆட்சிதான். எனக்குப் பிறகு என் வீடு, என் பையனுக்குத்தானே சொந்தம்... அந்த மாதிரிதான் இந்த நாடும், என் தலைவரோட வாரிசுகளுக்குத்தான் சொந்தம். 100 வயசு தாண்டி வாழக்கூடிய என் தலைவருக்குப் பின்னால், அவர் மகன் ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆளுவார். அவருக்குப் பிறகு, ஸ்டாலின் பேரன் ஆளுவார். எங்களுக்குக் குடும்பம் இருக்கு. அதனால குடும்ப ஆட்சி நடத்துறோம்... ஆனா, உங்களுக்கு..?'' எனச் சீறியவர் மேற்கொண்டுப் பேசியவை பிரசுரிக்க முடியாதவை.

வெற்றிகொண்டானின் அடுத்த அட்டாக்கில் சிக்கியவர் விஜயகாந்த். ''எல்லாவித ராஜ தந்திரங் களையும் படைச்ச ராஜகோபாலச்சாரியாராலேயே இந்தத் தமிழ்நாட்டுல சுதந்திரா கட்சியை நடத்த முடியலை. 'அத்தனை பிராமணர்களும் இடது கையில் பூணூலையும், வலது கையில் உதயசூரியன் கொடியையும் பிடிக்கணும்’னு சொல்லிட்டு கட்சியைக் கலைச்சிட்டார் ராஜகோபாலச்சாரி. ஆனா, இன்னிக்கு ஏட்டய்யா வேஷம் போட்ட ஒருத்தர் நாட்டைப் பிடிக்க ஆசைப்படுறார். சமீபத்தில அவர் நடிச்ச படத்தைப் பார்த்தேன். ஐ.ஏ.எஸ். ஆபீஸரா நடிக்கிற அவர் பிரதமரையே காப்பாத்துறாராம். சினிமாவிலேயே அதை நம்மளால தாங்கிக்க முடிய லைய்யா. ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர்கிட்ட அஞ்சு நிமிஷம் தாக்குப்பிடிச்சு விஜயகாந்த் பேசிட்டார்னா, அவரையே தமிழக முதல்வரா அறிவிச்சிட்டு நாங்க கிளம்பிடுறோம்யா!

ஆனானப்பட்ட ஆளு மன்மோகன் சிங்கே பார்லி மென்ட்ல மாட்டிக்கிட்டுப் படாத பாடுபடுறார். 15 நாளைக்கும் மேலா பார்லிமென்ட்டை நடத்தவிட மாட்டோம்னு அரிச்சந்திரனுக்கு பிறந்தவனுங்க ஆட்டுவிக்கிறானுக. அவனுங்களை மன்மோகன் சிங் கண்டுக்கிறதே இல்லை. கடந்த முறை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தப்ப நோட்டுக் கட்டுகளை லஞ்சம் கொடுத்ததாகக் காட்டிய அத்தனை பண்டாரப் பயலுகளும் இப்பக் கத்துறானுங்க. ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பத்தி யாராச்சும் யோக்கியவானுங்க பேசட்டும். அதுக்கு நாங்க பதில் சொல்லக் கடமைப் பட்டு இருக்கோம்.

ஒரு காலத்தில் எங்களை ஒழிச்சுக்கட்ட மத்திய சர்க்கார் நடத்தாத அராஜகமா? அதையே ஊதித் தள்ளிட்டு இத்தனை வருஷங்களைக் கடந்து வந்துட் டோம். ஸ்பெக்ட்ரம் பிரச்னை எல்லாம் எங்களுக்கு பிஸ்கோத்துய்யா. கலைஞர்ங்கிற தெய்வ மகனை மறுபடியும் முதல்வர் நாற்காலியில உட்காரவைக்காம நாங்க ஓய மாட்டோம்!'' என ஆடித் தீர்த்து விட்டார் வெற்றிகொண்டான்!

தாய்லாந்தில் இன்று 50 இலங்கையர் கைது: புலி உறுப்பினர்களும் இருக்கலாம் என சந்தேகம்


தாய்லாந்தில் இன்று ஐம்பது இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐம்பது பேரில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் கணிசமான அளவில் இருக்கலாம் என்றும் தாய்லாந்துப் பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
இன்று காலை தலைநகரை அண்மித்த பிரதேசமொன்றில் நடாத்தப்பட்ட விசேட சோதனையின் போதே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.  இலங்கையிலிருந்து கிடைத்த தகவலொன்றையடுத்தே குறித்த பிரதேசம் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாக மேலதிக தகவல்களிலிருந்து தெரிய வருகின்றது.
குறித்த ஐம்பது பேரும் சட்டவிரோதமாக தாய்லாந்தில் தங்கியிருந்துள்ளதுடன், வாடகை அறைகளில் ஒழிந்து கொண்டு வசித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது குடிவரவுப் பணியகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக எமது தாய்லாந்துத் தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கிளிநொச்சியில் காணி உறுதி; புலம்பெயர் மக்களுக்கு அறிவிப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உரிமை உள்ள நிலையில், வெளிமாவட்டங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மக்களுக்கான அறிவிப்பொன்றை காணி அமைச்சு விரைவில் வெளியிடவுள்ளது.
காணி உரிமைபற்றியும் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றியும் தகவல்களைப் பெற்றுத்   தருவதற்குக் குறித்த ஒரு கால அவகாசத்தை வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகுமென்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட கிராமங்கள் தோறும் தற்போது உதவி அரசாங்க அதிபர்கள் தகவல்களைத் திரட்டி வருகிறார்கள். தகவல்கள் திரட்டப்பட்டதும் காணி உரிமையாளர்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்து உதவி அரசாங்க அதிபர்கள் சகலரையும் அழைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரச அதிபர் கூறினார்.
பிரச்சினைகள் உள்ள கிராமங்களில் தகவல்கள் திரட்டப்பட்டதும் எதிர்வரும் 23ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீளாய்வுக் கூட்டமொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி, காணி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பலரும் இந்த மீளாய்வுக் கட்டத்தில் கலந்து கொள்வார்களென்று தெரிவித்தார்.
மீளாய்வுக் கூட்டத்திற்குப் பின்னர், வெளி பிரதேசங்களில் உள்ளவர்களுக்கான ஓர் அறிவிப்பு வெளியிடப்படுமென்றும் அரச அதிபர் கூறினார்.
காணி உரிமை பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து ?பிம்சவிய? திட்டத்தின் கீழ் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அரச அதிபர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் மூலம் காணி உறுதி இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரத்தசரித்திரம் - ரத்தம் தெறிக்கும் உண்மைக் கதை..! part 1


சமீபத்தில் வெளியாகியுள்ள 'ரத்தசரித்திரம்' என்னும் தமிழ் டப்பிங் திரைப்படம் உண்மையாகவே ஆந்திர தேசத்தில் நடந்த கதைதான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அந்தக் கதையை முழுமையாகத் தெரிந்து கொள்ள கூகிளாண்டவர் துணையை நாடியபோது எனது ரத்தமே உறைந்து போனதைப் போன்றுதான் தோன்றியது.  இதுவரையில் நான் பார்த்த அத்தனை தெலுங்கு திரைப்படங்களின் ரத்தம் தெறித்த கதைகளைப் பற்றியெல்லாம் ஏதோ ரசிகர்களின் ரசனைக்காகத் தெலுங்கு திரைக்கதையாசிரியர்கள் தீனி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தின் மீது, நாலு லாரி மண்ணையள்ளிப் போட்டு மூடிவிட்டது.

கிட்டத்தட்ட 10 மணி நேரங்கள் முழுமையாக இணையத்தின் முன் அமர்ந்து இது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் தேடிப் பிடித்துப் படித்து, தொகுத்து அவற்றை ஏதோ, என்னால் முடிந்த அளவுக்கு, எனக்கிருக்கின்ற கொஞ்சூண்டு பத்தாம் கிளாஸ் அறிவுக்கேற்றாற்போல் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறேன்.

நீண்ட நெடும் கதை என்பதால்தான் அத்திரைப்படமே இரண்டு பாகங்களாக வந்திருக்கிறது.. நான் ஒரு பாகமாக முழுமையாகவே கொடுத்துவிட்டதால் பக்கங்கள் நீண்டுவிட்டன. பதிவுலகத் திலகங்கள் கொஞ்சம் சோம்பேறித்தனப்படாமல் இதனை முழுமையாகப் படித்து உண்மையைத் தெரிந்து கொண்டு, என்னைத் திட்டியாவது ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டுப் போனால் உண்மையாகவே செல்லங்களான எனது கைகளும், விரல்களும் மகிழ்ச்சியடைவார்கள்.. நன்றி..

ரத்தசரித்திரம்..! ஆம்..!! ரத்தம் தெறிக்க வைத்திருக்கும் இந்தக் கதையின் பல்வேறு முடிச்சுக்களும், திருப்பங்களும் பயங்கரமானவை. அதிகாரமும், அரசியலும் இணைந்து, பிணைந்து ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டில் எப்படியொரு சர்வாதிகாரத்தை நிலை நாட்டியிருக்கின்றன என்பதற்கு இந்த பரிதலா ரவியின் சொந்தக் கதையும் ஒரு சான்று..

இந்தக் கதையில் தற்போதைக்கு ஒரு முடிவுதான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு முடிவை காலம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதன் ஆதிமூலத்தை அறிய வேண்டுமெனில் நாம் பல காலம் பின்னோக்கி போக வேண்டியிருக்கிறது.. 

2005-ம் ஆண்டு ஜனவரி 24. மதியம் 2.55 மணி. ஆந்திராவின் ரத்த அரசியலுக்கு புகழ் பெற்ற அனந்தப்பூர் மாவட்டத் தலைநகரமான அனந்தப்பூரில் உள்ள தெலுங்கு தேசக் கட்சியின் தலைமையகம். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தல்கள் குறித்து கட்சி ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து வாசலுக்கு வந்து கொண்டிருந்தார் பரிதலா ரவி..

கட்சியினரின் கை கூப்பல்களையும், வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டே வந்தவரை எதிர்கொண்டவர்கள் ஐவர்.. அதில் இருவரின் கைகளில் இருந்த துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் பரிதலா ரவியின் உடலையும், தலையையும் ஊடுறுவித் தாக்க.. சம்பவ இடத்திலேயே பிணமாகவே சரிந்தார் ரவி.
கொல்லப்பட்ட பரிதலா ரவி சாதாரணமானவர் அல்ல. அப்போதைய அனந்தப்பூர் மாவட்டத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்.. பெனுகுண்டா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். ஒரு முறை தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அனந்தப்பூர் மாவட்டத்தின் காட்பாதரே இவர்தான்.

இவ்வளவு ஏன்..? 56 கொலை வழக்குகள், பல கொலை முயற்சி வழக்குகள், தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமான வழக்குகள் பல வகையிலும் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானவராக சம்பந்தப்பட்டவர்.. ஆனால் எந்த வழக்கிலும் சட்டப்படியாக இதுவரையிலும் தண்டிக்கப்படாதவர்.. இவரைத்தான் அன்றைய மதிய நேரத்தில் சில துப்பாக்கித் தோட்டாக்கள் சட்டவிரோதமாகத் துளைத்தெடுத்து படுகொலை செய்தன.

விஷயம் கேள்விப்பட்டு ஆந்திராவே தகதகத்தது.. அனந்தப்பூர் என்றில்லை.. ஹைதராபாத்வரையிலுமாக தெலுங்கு தேசம் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்து பட்டையைக் கிளப்ப... பரிதலா ரவியின் உடல் அடக்கம் செய்யப்படும்வரையிலும் வன்முறைக் காட்சிகள் தொடர்ந்தன.

ஆந்திர வரலாற்றிலேயே வன்முறையால் அதிக அளவுக்குப் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதில் இரண்டாமிடம் இந்த  நிகழ்ச்சிக்குதான். சுமார் 60 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தீக்கிரையானதாகச் சொல்கின்றன ஆந்திர மீடியாக்கள்..

கொந்தளித்துப் போயிருந்த பரிதலா ரவியின் ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே குரலில் சொன்னது, “அவனைத் தூக்குல போடு.. இல்லைன்னா ஒரு நாள் அவனை பெயில்ல விடு. அவன் கதையை நாங்க முடிச்சர்றோம்..” என்பதுதான்.. அந்த “அவன்” யார் என்பதை பத்திரிகைகளில் இருந்து, தொலைக்காட்சி செய்திகளில் இருந்து வெளிப்படையாகவே சொல்லித் தீர்த்தன மீடியாக்கள்.

“அந்த 'அவனி'ன் துணையோடு ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிதான் திட்டமிட்டு பரிதலா ரவியைப் படுகொலை செய்திருக்கிறார்..” என்று திட்டவட்டமாகவே, நேரிடையாகவே குற்றம்சாட்டினார்கள் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடுவும், அவருடைய கட்சித் தலைவர்களும்.

“இல்லை..” என்று மறுத்த அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி.. “இதற்காக எந்த தீக்குளிப்பையும் செய்யத் தயாராக இருக்கிறேன். எனது மகன் ஜெகன்மோகன் ரெட்டி அப்படிப்பட்டவன் இல்லை..” என்று மறுத்தார். டெல்லிவரையிலும் இந்தப் படுகொலையின் தாக்கம் எதிரொலித்தது.

சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஒரு ஆண்டுகூட ஆகவில்லை. அதற்குள் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வேண்டாம் என்று டெல்லி மேலிடம் எச்சரித்ததினாலும், கொந்தளித்துப் போயிருந்த எதிர்க்கட்சியினரைச் சமாளிக்க வேண்டியும் இந்தக் கொலை வழக்கை உடனேயே சி.பி.ஐ.க்கு மாற்றுவதாகக் கூறினார் ராஜசேகர ரெட்டி.

அடுத்து அவர் உடனடியாகச் செய்த வேலை.. கர்நாடக அரசுக்கு போன் செய்ததுதான். அப்போது உயிருக்குப் பயந்து பெங்களூரில் தங்க வைக்கப்பட்டிருந்த தனது மகன் ஜெகன்மோகன்ரெட்டிக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் பாதுகாப்பைத் தரும்படி கேட்டுக் கொண்டார் ராஜசேகர ரெட்டி.

இப்படி மாநிலத்தின் ஆட்சியையே ஆட்டம் காண வைக்குமளவுக்கு நடத்தப்பட்ட இந்தப் படுகொலையின் சூத்திரதாரியான அந்த அவனின் பெயர் “மட்டலச்செருவு சூர்ய நாராயண ரெட்டி” என்னும் “சூரி..” அதுதான் ஆள் தெரிந்துவிட்டதே.. “தூக்கி உள்ளே போட வேண்டியதுதானே..?” என்பீர்கள்.. ஆனால் இந்த சூரி அப்போது இருந்ததே ஹைதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறைச்சாலையின் அதியுயர் பாதுகாப்பு செல்லில்.. பின்பு எப்படி இந்தக் கொலை..? மில்லியன் டாலர் கேள்வி இது..?
ஆந்திர மாநிலத்தின் அரசியலில் மிகத் தீவிரமான வன்முறைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டங்கள் அனந்தப்பூர், கடப்பா, கர்னூல், சித்தூர் ஆகியவை. இவை ராயலசீமா பகுதிகள் என்றழைக்கப்படுபவை. இந்த நான்கு மாவட்டங்களுமே ஒன்றுடன் ஒன்று நிலத் தொடர்புடையவை.. இதில் அனந்தப்பூரும், சித்தூரும் கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதியாகவும் அமைந்துள்ளன.
காலம், காலமாக ஆந்திராவின் அரசியலில் நிலவி வந்த நிலச்சுவான்தாரர், குடிமக்கள் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.. பண்ணையார்கள் குடியானவர்களை அடிமைகளாக நடத்துவதையும், ஏழைகளின் நிலத்தை பறித்து தங்கள் சொத்தாக்கி அவர்களை கொடுமைப்படுத்துவதையும் எதிர்த்துதான் மார்க்சிய இயக்கத்தின் மீது தாக்கம் கொண்ட சிலர் தீவிரவாதம் பேசி நக்ஸலைட்டுகளாக உருமாறி பதில் தாக்குதல்களை ஆதிக்க சாதிகளின் மீது தொடுத்துக் கொண்டிருந்த சூழலும் இருந்தது.

நக்ஸலைட்டுகள் என்றழைக்கப்பட்ட தீவிர மார்க்சியவாதிகளின் ஆதிக்கம் இந்த நான்கு மாவட்டங்களிலும் உச்சத்தில் இருந்ததற்குக் காரணம் இங்கு நிலவிய வர்க்க வித்தியாசமும், ஆண்டான், அடிமை கலாச்சாரமும்தான். சுதந்திரம் அடைந்ததாக உண்மையாகச் சொல்லிக் கொண்டாலும், ஏழைகளுக்கு அது கிடைக்கவிடாமல் செய்யத்தான் அரசியல் துணையோடு இந்தப் பகுதி நிலச்சுவான்தாரர்கள் கூட்டணி வைத்திருந்தார்கள்.

நமது கதாநாயகன் பரிதலா ரவி இந்த வெப்பக் காடான அனந்தப்பூர் மாவட்டத்தின் பெனுகுண்டா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடபுரம் என்னும் கிராமத்தில் 28-05-1957-ல் பிறந்தவர். இவருடைய அப்பா ஸ்ரீராமுலு அப்போதே 300 ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். ஆனாலும் மார்க்சிய சிந்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். பரிவு கொண்டவர்.  இதனாலேயே தனது நிலங்களின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். அத்தோடு அந்தப் பகுதி ஏழை மக்களுக்குத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள் கனகன்பள்ளி பண்ணையாரான கங்குல நாராயண ரெட்டி என்பவரிடமும், சென்னகொத்தபள்ளி  பண்ணையார் சேனா சென்னா ரெட்டி என்பவரிடமும்தான் இருந்திருக்கின்றன.  இந்த இரண்டு பண்ணையார்களிடமும் இருந்த 600 ஏக்கர் நிலங்களை பராமரித்தல் மற்றும் அவற்றை ஏழை, எளிய உழைக்கும் மக்களிடம் கொடுத்து பாடுபட வைப்பது என்ற வேலைகளைச் செய்து வந்தது பரிதலா ரவியின் அப்பா ஸ்ரீராமுலுதான்.

1971-ம் ஆண்டில் ஸ்ரீராமுலு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சேர்ந்த வேகத்திலேயே ஏற்கெனவே அவருக்கு இருந்த நல்ல பெயரால், அந்த இயக்கத்தின் மிக முக்கியத் தலைவராகவும் ஆகிவிட்டார். நக்ஸல் இயக்கத்தில் இருந்தாலும் அவர் உயிருடன் இருந்தவரையிலும் யாரையும் கொலை செய்தததில்லை என்று நக்ஸல் இயக்கம் இன்றுவரையிலும் சொல்லி வருகிறது.

கங்குல நாராயண ரெட்டியின் நிலங்களை ஸ்ரீராமுலு ஏழைகளுக்கு வாரிக் கொடுப்பதையும், அதன் மூலம் கிடைக்கின்ற புகழ் அவருக்கே கிடைப்பதையும் கண்டு பொறாமைப்பட்ட சென்னா ரெட்டி, கங்குல ரெட்டிக்கு தூபம் போட்டு அவர் மனதை திசை திருப்பிவிட்டார். இந்தத் திடீர் வில்லங்கத்தினால் ஸ்ரீராமுலு, கங்குல ரெட்டி மற்றும் சென்னா ரெட்டி இருவருக்கும் ஒரே நேரத்தில் எதிரியானார்.

நக்ஸல் இயக்கத்தினரிடம் இந்த ரெட்டிகள் இருவரின் திடீர் மனமாற்றத்தையும், நிலங்களை தர மறுப்பதையும் ராமுலு எடுத்துச் சொல்லி போராட்டத்துக்குத் தயார்படுத்திய நிலையில் ராமுலுவை விட்டுவைத்தால் இனி தாங்கள்  நிம்மதியாக இருக்க முடியாது என்பதால் அவரைப் போட்டுத் தள்ள அவரது உதவியாளர்களில் ஒருவனையே சென்னா ரெட்டி தயார் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.

1976-ம் ஆண்டு பக்ஸம்பள்ளி என்னும் ஊரில் நடந்த ஒரு கல்யாணத்துக்காக பேருந்தில் சென்ற ராமுலுவை பின் தொடர்ந்த அந்த உதவியாளர் பக்ஸம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகேயே பேருந்தில் இருந்து இறங்கி நிமிடத்தில் ராமுலுவை படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். இதுதான் இன்றுவரையிலான பரிதலா ரவி-சூரி பரம்பரையினர் இரு தரப்பிலும் போட்டுத் தாக்கும் படுகொலைகளின் துவக்கப் புள்ளி..

இந்த நேரத்தில் பரிதலா ரவி நக்ஸல் இயக்கத்திலும் இல்லை. எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவும் இல்லை. ரவியின் தந்தை ஸ்ரீராமுலு போலவே ரவியின் அண்ணன் ஹரியும் நிலச்சுவான்தார் ஒழிப்பு விவகாரத்தில் மிகத் தீவிரமான ஈடுபாடுடையவர். ஆனால் தந்தை ஸ்ரீராமுலுவால் அடக்கி வைக்கப்பட்டிருந்தவர் ஸ்ரீராமுலுவின் இறப்புக்குப் பின்பு 1979-ல் நக்ஸல் இயக்கத்தில் இணைந்தார்.

இயக்கத்தில் இணைந்த நிலையில் பல கொலைகளுக்கு சாட்சியாகவும், சில கொலைகளுடன் நேரடித் தொடர்பிலும் செயல்பட்டிருக்கிறார் ஹரி. இவரது செயல்பாட்டால் அப்போதைய அரசு இவரையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது.

இந்த நிலையில் 1982-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதியன்று தனது சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறார் ஹரி. அவரது வருகையை மோப்பம் பிடித்த வெங்கடபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர், பெரும் போலீஸ் படையுடன் வந்து ஹரியைச் சுற்றி வளைத்திருக்கிறார்.

போலீஸ் வந்துள்ளதைப் பார்த்து ஹரி வீட்டுக் கதவுகளைச் சாத்திக் கொண்டு உள்ளேயே மறைந்து கொள்ள.. ஹரியின் தங்கையைப் பிடித்துக் கொண்ட போலீஸ், ஹரி வெளியே வராவிட்டால் தங்கையை கற்பழித்துவிடுவோம் என்று மிரட்டிய காரணத்தால் போலீஸிடம் சரணடைந்தார் ஹரி.

அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நசனகொட்டா கிராமத்திற்கு ஹரியை கொண்டு சென்ற போலீஸ் அங்கே 2000 கிராம மக்கள் கூடியிருந்த நிலையில், அவர்களது கண் முன்பாகவே ஹரியை சுட்டுக் கொன்றுள்ளது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருந்ததும் அதே கங்குல நாராயண ரெட்டி, கங்குல நரசன்னா மற்றும் சேனே சென்னா ரெட்டியும்தான்..

ஸ்ரீராமுலுவின் குடும்பத்தை விட்டு வைத்தால் நமக்கு ஆபத்துதான் என்பதால் அடுத்து ரவியையும் இந்தக் கூட்டம் தேட ஆரம்பித்தது. இந்த நேரத்தில்தான் பரிதலா ரவி உருவகொண்டா நகரத்தின் அருகேயுள்ள சீர்பிகொட்டாளா என்னும் தனது தாய் பிறந்த ஊருக்குச் சென்று மறைந்து வாழ்ந்துள்ளார். அங்கே அவரது மாமா கொண்டையாவின் தயவினாலும், சிறிது காலம் இருக்கலாம் என்றுதான் சென்றிருக்கிறார். அங்கே வாழ்ந்து வந்த நேரத்தில்தான் 1986-ல் கொண்டையாவின் மகள் சுனிதாவை திருமணம் செய்திருக்கிறார் ரவி.

தனது பாதுகாப்பிற்காகவும், எதிர்கால வாழ்க்கைக்காகவும் இந்தச் சமயத்தில்தான் நக்ஸல் இயக்கத்தில் ரவி இணைந்திருக்கிறார். ஆனால் இதில் இருந்த சமயத்தில் அவர் எந்தவொரு கொலைகளையும் செய்ததில்லை என்று நக்ஸல் அமைப்பினரும், கத்தார் போன்ற மூத்தத் தலைவர்களும் இன்றுவரையிலும் சொல்லி வருகிறார்கள்.

ரவி இப்படி தனது மாமா ஊரில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய அப்பா மற்றும் அண்ணனின் மரணத்திற்குகாக நக்ஸல் இயக்கமே பழிக்குப் பழி ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது.

முதலில் கங்குல நாராயண ரெட்டியின் கூட்டாளிகளான நரசன்னா மற்றும் யாடி ரெட்டியை சுட்டுக் கொன்றது நக்ஸல் இயக்கம். 1983-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அனந்தப்பூரில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்த பெனுகுண்டா சட்டமன்ற உறுப்பினர் கங்குல நாராயண ரெட்டியை வெட்டிக் கொன்றார்கள் நக்ஸல்கள்.

இந்தப் படுகொலைச் செய்தி பரவியபோது இதனை செய்தது பரிதலா ரவிதான் என்றே ஆந்திரா முழுவதும் செய்திகள் பரவின. ஆனால் இதனைச் செய்தது நாங்கள்தான் என்று நக்ஸல் அமைப்பினர் இன்றைக்கும் சொல்கிறார்கள்.

அதுவரையில் பெனுகுண்டா தொகுதியின் அசைக்க முடியாத சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த நாராயண ரெட்டி கொல்லப்பட்ட பின்பு, ராமச்சந்திர ரெட்டி என்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ரெட்டிகாரு வந்த பின்புதான் அனந்தப்பூர் தொகுதி அமைதி முற்றிலுமாக சிதைந்து போனது என்கிறார்கள்.

நாராயண ரெட்டி மேலே போய்ச் சேர்ந்தாலும் இன்னொரு பண்ணையாரான சென்னா ரெட்டியும், அவரது மகன்களான ரமணா ரெட்டி, ஓபுல் ரெட்டி, இவர்களோடு கொல்லப்பட்ட நாராயண ரெட்டியின் மகனான கங்குல சூர்ய நாராயண ரெட்டி இவர்களுடைய கூட்டணி கொடுமைகள் அனந்தப்பூர் மாவட்டத்தில் அனலைக் கக்கியுள்ளது.

இதில் சூர்ய நாராயண ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டி மீது வண்டி, வண்டியாக புகார்கள். அத்தனையும் கற்பழிப்புச் செய்திகள்தான். ஊரில் எந்த ஒரு அழகான பெண்ணையும் விட்டுவைத்ததில்லையாம் இந்தக் கூட்டணி.

ஓபுல் ரெட்டி ஒரு மோசமான சேடிஸ்ட்டாக வாழ்ந்திருக்கிறார் என்கின்றன ஆந்திர மீடியாக்கள். பெண்கள் என்றாலும், 45 வயதுக்குள், திருமணமான பெண்களையே குறி வைத்து குதறி எடுப்பதுதான் ஓபுல் ரெட்டியின் மகத்தான மக்கள் சேவையாம்.

அதிலும் சில சமயங்களில் அந்தப் பெண்களின் வீடுகளுக்குள்ளேயே நுழைந்து கணவன்மார்கள் முன்னிலையிலேயே அவர்களைக் கற்பழிப்பதுதான் இவனது ஸ்டைலாம்.. அதே சமயம் இந்தச் சமயத்தில் அந்தப் பகுதியில் பொறுப்பில் இருந்த பல தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்த பெருமையும் இந்த ரெட்டிக்காரப் புள்ளைகளுக்கு உண்டு.

1989-ல் காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியமைத்தபோது பெனுகுண்டா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் சென்னா ரெட்டிதான். ஏற்கெனவே அவிழ்த்துவிட்ட காளைகளாக பவனி வந்த பிள்ளை ரெட்டிகள் கூட்டணி, இதன் பின்பு அசுர பலத்துடன் அப்பாவிகள் மீது பாய்ந்துள்ளன.

சென்னா ரெட்டியின் வீட்டின் அருகேதான் பெண்கள் கல்லூரி இருந்ததாம். 1989 முதல் 1993 வரையிலான காலக்கட்டத்தில் அந்தக் கல்லூரியில் படித்த பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கி வகுப்புக்கு இரண்டு பேர், மூன்று பேர் மட்டுமே படிப்பதற்காக வந்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த ஓபுல் ரெட்டியும், சூர்ய நாராயண ரெட்டியும் தங்களது மன்மத விளையாட்டை அந்த ஊரில் விளையாடித் தீர்த்திருக்கிறார்கள்.  

கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் தனது பள்ளியறைக்குத் தூக்கிச் சென்றிருக்கும் இந்த ரெட்டிகளைப் பார்த்து அன்றைய அனந்தப்பூர் மாவட்டமே கிலியடித்துப் போயிருந்ததாக இப்போதுதான் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். சொல்கிறார்கள்.

தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவியை வீடு புகுந்து கற்பழித்த செய்திதான் முதன் முதலில் ஓபுல் ரெட்டி மீதான பார்வையை உலகத்திற்குக் கொண்டு சென்றது என்கிறார்கள். ஆனால் நேரடி சாட்சியங்கள் எதுவுமில்லாததால் பேச்சோடு அது நின்று போனதாம். தமிழ்நாட்டில் இருந்து தர்மாவரத்திற்கு குடியேறிய இரண்டு பெண்களை ஓபுல் ரெட்டி கற்பழித்ததும் தொடர்ந்திருக்கிறது.

தெரியாத பெண்கள் என்றில்லை. ஓபுல் ரெட்டி தன்னிடம் வேலை செய்யும் ஆட்களின் வீடுகளிலும் கை வைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் டாக்டர் குள்ளயப்பா என்பவரின் மகளையும் கற்பழித்த புகார் இவர் மீது அப்போது எழுந்துள்ளது.

இவர் ஒரு சேடிஸ்ட் மனப்பான்மை கொண்டவர் என்பதையும் இவருடைய மரணத்திற்குப் பின்புதான் அங்கேயிருந்தவர்கள் வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ரயில் வந்து கொண்டிருக்கும்போது ஒருவரை உயிருடன் ரயில் முன் எறிந்து அதைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு கொடூரமானவர் என்கிறார்கள். இன்னும் எழுதியிருப்பதையெல்லாம் படித்தால் வாந்தி வருகிறது.

ஒரு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரின் உடலில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு கிலோவாக கொஞ்சம், கொஞ்சமாக வெட்டியெடுத்து வீசியெறிந்து  சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். ஒருவரின் வயிற்றில் டிரில்லிங் மெஷினை வைத்து ஓட்டை போட்டு கொலை செய்துள்ளார்.

இவருக்குச் சற்றும் சளைக்காதவராக இருந்திருக்கிறார் இவருடைய தோஸ்த்தான மட்டலச்செருவூ சூர்ய நாராயண ரெட்டி. வீடு புகுந்து பெற்றோர்கள் முன்னிலையிலேயே ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்திருக்கிறார். இந்தப் புகார்தான் முதன்முதலாக இவரைப் பற்றி வெளியில் பேச வைத்துள்ளது. ஒரு அரசு ஊழியையும் கற்பழித்த புகாரும் இவர் மேல் உள்ளது.

இவர்களுடைய அட்டூழியங்களைப் பொறுக்க முடியாத மக்கள் நக்ஸலைட்டுகளின் துணையை நாடத் துவங்க.. நக்ஸலைட்டுகள் இவர்களை அதிகம் நெருங்க முடியாமல் கைத்தடிகளை முதலில் போடடுத் தள்ளத் துவங்கியிருக்கிறார்கள். இதனால் கோபம் கொண்ட ரெட்டிகளும் தங்கள் பங்குக்கு துப்பாக்கிகளுக்கு வேலை கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். இரு புறமும் போட்டுத் தள்ளுவது இதன் பின்பு மிக அதிகமாயிருக்கிறது.

1990-ல் சென்னா ரெட்டி மற்றும் சூரிய நாராயண ரெட்டியின் ஆட்கள் பத்தாபாளையம் கிராம தலைவரான போயா வெங்கட ராமுடு என்பவரை படுகொலை செய்திருக்கிறார்கள். இவர் பரிதலா ரவியின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அத்தோடு கூடவே வேப்பகுண்டா கிராம சங்கத்தின் செயலாளர் வரதப்பாவையும் கொலை செய்து இருவரின் சடலத்தையும் டீஸல் ஊற்றி எரித்துள்ளனர்.

சென்னா ரெட்டி, சூர்யநாராயண ரெட்டி இருவருமே இணைந்தும் பல கொலை காரியங்களைச் செய்திருக்கிறார்கள். நேமிலிவரம் கிராம முன்சீப் சுப்பராயுடுவை கங்கணப்பள்ளிக்கு கடத்திச் சென்று அங்கேயே அவரை கொலை செய்திருக்கிறார்கள். 1994-ல் ராயுடுரகம் என்ற ஊரில் நாராயணப்பா என்பவரை கொலை செய்திருக்கிறார்கள். இவர் பரிதலா ரவிக்கு மிக நெருக்கமானவர்.

குடியரசு தினத்தன்று கொடியேற்றுவதற்காகச் சென்ற தகரகுண்டா கிராமத்தின் தலைவரான போயா நாகராஜூவை சூர்ய நாராயண ரெட்டியும் அவரது ஆட்களும் குண்டு வீசி கொலை செய்துள்ளனர். இவரும் பரிதலா ரவியின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்.

இப்படி தனக்கு நெருக்கமானவர்களையெல்லாம் சென்னா ரெட்டியும், சூர்யநாராயண ரெட்டியும் அவர்தம் கூட்டாளிகளும் பொலி போட்டுவிட்டதை அறிந்த பரிதலா ரவி பதிலடி கொடுக்க நேரம் பார்த்துக் காத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்.

அதற்கான சரியான தருணத்தை நக்ஸல் அமைப்பினரே அவருக்குக் கொடுத்திருக்கின்றனர். 1991-ல் இந்த அழித்தொழிப்பு பிராஜெக்ட்டில் நக்ஸல்களுடன் கை கோர்த்திருக்கிறார் ரவி.

இத்தனை நாட்கள் இவர்களுடைய அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டவர்கள் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தது இந்த ஆண்டில்தான் என்று ஆந்திர அரசியல் வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது.

முதல் பலி பெனுகுண்டா எம்.எல்.ஏ.வான சேனா சென்னா ரெட்டிதான். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டில் சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சென்னா ரெட்டியை அணுகிய போலீஸ் உடையணிந்த நக்ஸல்கள் முதலில் ஒரு சல்யூட்டை அவருக்கு வைத்துவிட்டு பின்பு சராமரியாக அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இந்தக் களேபரத்தில் சென்னாவின் அடியாட்கள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

எம்.எல்.ஏ.வான சென்னா ரெட்டியின் மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் பி.டெக். மூன்றாமாண்டு மாணவராக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னா ரெட்டியின் மூத்த மகன் ரமணா ரெட்டி தனது படிப்பை நிறுத்திவிட்டு தேர்தல் களத்தில் குதித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் காடே லிங்கப்பா என்பவர் போட்டியிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திலேயே தங்களது கை வரிசையைக் காட்டியுள்ளது ரெட்டி தரப்பு. தெலுங்கு தேச கட்சித் தொண்டர்கள் சிலர் இந்தத் தேர்தலின்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடுமையான எதிர்ப்பிலும் ரமணா ரெட்டியே வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகியிருக்கிறார். இதன் பின்பு இந்தக் கொடூர கூட்டாளிகளின் அட்டகாசம் அனந்தப்பூரையே அதகளமாக்கியிருக்கிறது.

இந்த நேரத்தில்தான் ஆந்திர அரசியலையே புரட்டிப் போடக் கூடிய ஒரு நிகழ்வு நக்ஸல்கள் இயக்கத்தில் தோன்றியது. அதுவரையில் ஏழை, எளிய மக்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்கிற ஒற்றைக் குறிக்கோளோடு போராடி வந்த நக்ஸலைட்டுகள் அமைப்பு  என்றழைக்கப்பட்ட மக்கள் யுத்தக் குழு இரண்டாகப் பிரிந்தது.

புகழ் பெற்ற போராளியான கொண்டப்பள்ளி சீதாராமையா மக்கள் யுத்தக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார். மக்கள் யுத்தக் குழு சீதாராமையா குரூப் என்றே ஒரு தனிப் பிரிவு ஏற்பட்டது. சென்னா ரெட்டியை சுட்டுக் கொன்ற புகழ் பெற்ற இன்னொரு போராளி பொட்டுல்ல சுரேஷ் இந்த குரூப்பைச் சேர்ந்தவர்தானாம்..

இந்த நேரத்தில் ரவி எடுத்த ஒரு பகீர் முடிவுதான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மரணத்திற்கே காரணமாக அமைந்திருக்கிறது. சூர்ய நாராயண ரெட்டியைப் பழி வாங்க வேண்டி என்ன செய்யலாம் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டிருக்கிறது ரவியின் டீம்.

இந்தச் சமயத்தில் சூர்ய நாராயண ரெட்டியின் குடும்பத்தின் மீது அந்த ஊர் மக்கள் சிறிதளவு அனுதாபம் காட்டியிருந்ததாலும், சூர்ய நாராயண ரெட்டி அதிக நாட்கள் கர்நாடகாவிலேயே இருந்ததினாலும் அவரையும் நெருங்க முடியாமல் தவித்தது ரவியின் டீம். உண்மையில் தனது வலது, இடது கைகளைப் போன்றவர்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்படுவதை உணர்ந்து கொஞ்சம் பயந்து போன நிலையில்தான் சூர்ய நாராயண ரெட்டி கர்நாடகாவுக்குத் தப்பிச் சென்று பதுங்கியிருந்திருக்கிறார்.

அவரைக் கொலை செய்ய முடியாமல் தவித்தவர்கள் சூர்யநாராயண ரெட்டியின் வீட்டில் நடக்கவிருக்கும் விஜயதசமி கொண்டாட்டங்கள்  பற்றிய செய்தி கிடைத்ததும் பரபரப்பாகியுள்ளார். ஒரு சினிமாவின் திரைக்கதையைப் போல இந்த படுகொலையை கனகச்சிதமாகச் செய்திருக்கிறது ரவியின் டீம்.

1993-ம் ஆண்டு இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. சூர்யநாராயண ரெட்டியின் அம்மா தனது வீட்டு டிவி ரிப்பேராகிவிட்டதாக டிவி ரிப்பேர் கடையில் டிவியை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். இதை துப்பறிந்த பரிதலா ரவியின் டீம் மெம்பர்கள் இதனை வைத்தே அந்தக் குடும்பத்தை கூண்டோடு அழிப்பதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

டிவியை ஆன் செய்தாலே வெடித்துவிடும் வகையில் ஒரு வெடிகுண்டை செட்டப் செய்து டிவிக்குள் வைத்து அதனை அந்த நிகழ்ச்சி நடந்த நேரத்தில் சூர்யநாராயண ரெட்டியின் வீட்டுக்குக் கொண்டு போய் வைத்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார்கள்.

அவர்கள் வீட்டு வாசலைத் தாண்டவும், இங்கே டிவி வெடிக்கவும் மிகச் சரியாக இருந்திருக்கிறது. இந்தப் படுகொலைத் தாக்குதலில் சூர்ய நாராயண ரெட்டியின் அம்மா, தங்கை, அண்ணன், அண்ணன் மனைவி, வேலையாளர் என்று சிலர் இறந்து போய்விட்டார்கள். இந்தச் சமயத்தில் சூர்யநாராயண ரெட்டி, தனது மனைவி பானுமதியுடன் வீட்டுக்கு வெளியில் இருந்ததால் தப்பித்துவிட்டார். இந்தச் சம்பவம்தான் இன்றைக்கு ரவியை பரலோகத்துக்கு பார்சல் கட்டி அனுப்ப கடைசியான காரணமாக திகழ்ந்திருக்கிறது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பரிதலா ரவிதான் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவரை கொலையாளியாக உலகத்திற்கு அடையாளம் காட்டிய முதல் வழக்கும் இதுதான்.

இந்த நேரத்தில் மக்கள் யுத்தக் குழு மேலும் இரண்டாக உடைந்தது. ஒன்று ரெட் ஸ்டார் என்றும் மற்றொரு ரீ-ஆர்கனைஸிங் கமிட்டி என்றும் அழைக்கப்பட்டது. பொட்டுல்ல சுரேஷ் ரீ ஆர்கனைஸிங் கமிட்டிக்குத் தலைமை தாங்கினார். சுதர்சன் என்னும் நக்ஸல் தலைவர் ரெட் ஸ்டார் குழுவுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார்.

இதில் ரெட் ஸ்டாரை பிரமோட் செய்து ஆதரவளிக்க முன் வந்தவர்கள் சென்னா ரெட்டியின் மகன்களும், சூர்ய நாராயண ரெட்டியும். இந்தப் பக்கம் இவர்கள் இருந்தால் எதிர்த் தரப்பில் நிச்சயமாக பரிதலா ரவி இடம் பெறுவார் அல்லவா.? ஆமாம்.. ரீ ஆர்கனைஸிங் கமிட்டியின் பின்னணியில்.. ஆனால் முன்னணி பிரமுகராகத் திகழ்ந்தவர் பரிதலா ரவிதான்.

தனக்குப் பின்னேயிருந்த நக்ஸலைட் தோழர்களை வைத்துக் கொண்டு துவக்கப்பட்ட ரவியின் துப்பாக்கி தீர்ப்புகள் இனிமேல்தான் நிஜமாகவே ஆரம்பித்துள்ளன. ரவியின் குழு 16 பேரை நேரடியாக படுகொலை செய்துள்ளார்கள். ஓபுல் ரெட்டி மற்றும் சூர்ய நாராயண ரெட்டியின் ஆதரவாளர்களான 13 பேரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளார்கள்.

அப்போதைய காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் ரவியின் மீது அடுக்கடுக்காக பல வழக்குகள் சுமத்தப்பட்டன. மொத்தம் 57 வழக்குகள் என்றாலும் அதில்  நேரடி சாட்சிகள் இல்லை. ஆனால் 5 வழக்குகளில் மட்டுமே ரவியே நேரடியாக பங்கேற்று படுகொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

ரவியின் பின்புலத்தில் இருந்த நக்ஸலைட்டுகளை ரவி தனக்காகவும், பழி தீர்க்கவும் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள். ஆனால் நக்ஸல்கள் இப்போதுவரையிலும் அதனை மறுக்கிறார்கள். நக்ஸல்கள் இல்லாமல் ரவி தனக்கென்று தனியாக ஒரு படையைத் திரட்டி வைத்திருந்தார். அந்தக் கூலிப்படைதான் அவர் கை காட்டியவர்களையெல்லாம் படுகொலை செய்தது என்கிறார்கள். ரவிக்கு முக்கியத் தளபதியாக இருந்தவர் பொட்டுல சுரேஷ், சமான், பிரபாகர், மதுசூதனன் ரெட்டி இன்னும் பலர்..

சென்னா ரெட்டி குரூப் மற்றும் சூர்ய நாராயண ரெட்டியின் குரூப்பைச் சேர்ந்தவர்கள் வகை, தொகையில்லாமல் இந்தச் சமயத்தில்தான் ரவியினால் அழித்தொழிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அனந்தப்பூர் வட்டாரத்தில் தன்னை எதிர்ப்பவர்கள் இருக்கவேகூடாது என்ற ரவியின் கட்டளைக்குப் பணிந்த அவரது கூலிப்படை செய்த படுகொலைகளினால் எதிர்ப் படுகொலைகளும் நடத்தப்பட்டுதான் வந்திருக்கின்றன. ஆனாலும் ரவிக்கு இதில் எந்தப் பாதிப்பும் இல்லாமல்தான் இருந்திருக்கிறது.

இப்படி அனந்தப்பூர் மாவட்டமே இந்த பழி வாங்கல் கதையில் கலகலத்துப் போயிருந்த சூழலில் கட்சிக் கூட்டத்துக்காக வந்த ஒரு தலைவரே இந்த இரண்டு குழுக்களின் வலிமையைக் கண்டு ஒரு கணம் அசந்துபோய் திகைத்துவிட்டார். அவர் கலியுகக் கண்ணனான திரு.என்.டி.ராமாராவ்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தையே தன் கைக்குள் வைத்திருந்த ரமணா ரெட்டியை எதிர்க்கவும், அந்த மாவட்டத்தில் மட்டும் தனது கட்சியின் சார்பில் எதிர்த்து நிற்கும் தைரியமுள்ள ஒருவரும் இல்லாமல் தவித்தும் கொண்டிருந்த என்.டி.ராமாராவிடம் பரிதலா ரவி பற்றி எடுத்துரைத்தார்கள் கட்சிக்காரர்கள்.  "சிக்கினான்டா ஒரு அர்ஜூனன்.. இழுத்துட்டு வாங்கடா..." என்ற ராமாராவின் உத்தரவின்பேரில் முதல் முறையாக மீடியாக்களின் லைம்லைட்டுக்கு, அரசியல் வெளிச்சத்துக்கு வந்தார் பரிதலா ரவி.

அரசியல் துணையோடு, ஆட்சி, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு போலீஸ் துணையோடு ஆடி வரும் ரமணா ரெட்டியின் ஆட்டத்தை அடக்க வேண்டுமெனில் அரசியலில் நுழைவது சாலச் சிறந்தது என்ற ரவியின் அப்போதைய முடிவு சரியானதுதான்.

1993-ல் நடந்த மாநில சட்ட சபைக்கான தேர்தலில் பெனுகுண்டா தொகுதியின் தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் பரிதலா ரவி. ரமணா ரெட்டியின் கடுமையான எதிர்ப்பு. சில தொண்டர்களின் படுகொலைகள்.. இத்தனையையும் தாண்டி முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று  62 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் ரவி. கூடுதலாக ராமாராவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் ஆனார்

மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி

Bhuvaneshwari to back in TV serialசின்னத்திரை நடிகை புவனேஸ்வரி பாவத்தின் சம்பளம் என்ற புதிய தொடரில் நடிக்கிறார். தமிழ் சீரியல்களில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த புவனேஸ்வரி, தெலுங்கு சீரியல்கள் மற்றும் சினிமாக்களிலும் கொடிகட்டி பறந்தார். விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி, அதன் பிறகு சின்னத்திரையில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இடையில் அரசியல் அழைக்க, அதில் கவனம் செலுத்தியதால் நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. இப்போது இந்த இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி. வசந்த் டிவியில் கிறிஸ்துமஸ் தினத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரில் அவருடன் சேசு, யுவான்சுவாங், ஜெயதேவி, சத்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். எப்போதோ நடந்த ஒரு சம்பவத்துக்காக ஒரு அப்பாவி இளம்பெண் மீது சாக்கடையை அள்ளி வீசுகிறது சமுதாயம். தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற போராடும் அவளின் போராட்டமே பாவத்தின் சம்பளம்.

தோல்வி என்றால் டைரக்டர் முகத்தில் விழிப்பதே கொஞ்சம் சிரமம்தான். சுமார் ஒரு மாத

அத்தியாயம் 9
ரிலீஸ் தினத்தன்று தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களின் கருத்தை அறிவதும், அதை உடனுக்குடன் இயக்குனருக்குச் சொல்வதும் கூட உதவி இயக்குநர்களின் பணிதான். ஏனென்றால் இந்தப் படம் போனாலும் அடுத்தப் படத்தில் இந்த இயக்குனருடன்தானே வேலை பார்க்க வேண்டும்?
சில நேரங்களில் கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களுக்கு உதவி இயக்குனர்களை அனுப்பி வைப்பார் டைரக்டர். எந்த இடத்தில் ரசிகனுக்கு போர் அடிக்கிறது. எந்த இடத்தில் கதை தொய்வடைகிறது. எந்த இடத்தில் ரசிகன் எழுந்து வெளியே செல்கிறான் என்ற அத்தனை விவரத்தையும் இயக்குனருக்குக் கொடுக்க வேண்டும்.
இந்த விவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்கிற அவர், சில காட்சிகளுக்கு இங்கிருந்தே கட் கொடுப்பார். தியேட்டர் தியேட்டராகச் சென்று டைரக்டர் குறிப்பிட்ட பகுதிகளை கட் செய்வதும், அப்படி கட் செய்யப்பட்ட பிலிம்களை மீண்டும் சென்னைக்குக் கொண்டு வருவதும் உதவி இயக்குனர்களின் பணிதான்.
படம் வெற்றி என்றால் பத்திரிகை விமர்சனங்களைத் தொகுத்து ஒரு பைண்டிங் காப்பியாகத் தயாரித்து இயக்குனரிடம் தரலாம். அதுவே தோல்வி என்றால் டைரக்டர் முகத்தில் விழிப்பதே கொஞ்சம் சிரமம்தான். சுமார் ஒரு மாத காலத்திற்காவது இஞ்சி தின்ற எபெக்டில் இருப்பார் அவர். இந்த நேரத்தில்தான் அவரை அடிக்கடி சென்று பார்க்க வேண்டும். அற்ற குளத்து அறுநீர் பறவையாக ஓடிவிடும் உதவி இயக்குனர்களை அவர் மறப்பதே இல்லை. மதிப்பதும் இல்லை.
சில படங்கள் உலகப் பட விழாக்களில் கலந்து கொள்கிற அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இருக்கும். அத்தகைய படங்களுக்குத்தான் உதவி இயக்குனர்களின் பணி அவசியம் தேவைப்படும். இந்தப் படங்களில் இடம் பெறும் ஒவ்வொரு டயலாக்கும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சப் டைட்டில் போடப்படும். கோடம்பாக்கத்தில் அதற்கென்றே தனி திறமைசாலிகள் இருக்கிறார்கள். அப்படியென்றால் உதவி இயக்குனர்களின் வேலை என்ன? இப்படி சப் டைட்டில் போடுவதற்கு வசதியாக படத்தின் பிரதியைக் கொடுத்து உதவுவது. சப் டைட்டில் போடப்பட்ட படத்தின் டிவிடியை உலகப் படவிழா குழுவுக்கு அனுப்பி வைப்பது போன்ற வேலைகளை கவனிக்கலாம்.
ஊருக்குப் போவதைப் போல லக்கேஜோடு போய் இறங்குவது மட்டும் உதவி இயக்குனர்களின் வேலையல்ல, போருக்குப் போவதைப் போல புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் படப்பிடிப்பில். எங்கு, எப்போது, என்ன நடக்கும் என்பதை யாரால் அறிய முடியும்?
அந்நியன் படத்தில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் ஒரு கராத்தே ஃபைட் பார்த்திருப்பீர்கள். ஒருவர் முதுகில் ஒருவர் ஏறி வேக வேகமாக ஓடுவார்கள். இந்தக் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது நாலைந்து ஃபைட்டர்களின் முகங்கள் சுவற்றில் மோதி தாவங்கட்டை பிளந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதையெல்லாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் முதுகில் கட்டப்பட்ட ரோப், பில்டிங்குக்கு அந்தப் பக்கம் உள்ள லாரியில் இணைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அந்த லாரியை இயக்க வேண்டும். லாரி நகரும்போது அதில் கட்டப்பட்டிருக்கும் ரோப்பும் உயரும். இதில் அலாக்காக தூக்கிச் செல்லப்படும் ஃபைட்டர்கள் கீழே நிற்கிற மற்ற ஃபைட்டர்களின் முதுகில் ஏறி ஓடுவதைப் போல காட்சி அமையும். இந்த லாரியை இயக்கும் போது குறிப்பிட்ட ஒரு புள்ளியில் சென்று மிகச் சரியாக நிறுத்த வேண்டும். ஷூட்டிங்கின் போது டிரைவர் வண்டியை நிறுத்த வேண்டிய அந்த இடத்தில் ஒரு மார்க் மட்டும் வரையப்பட்டிருந்ததாம்.
இதை மேற்பார்வையிடுவது ஒரு உதவி இயக்குனர். இவரது கட்டுப்பாட்டையும் மீறி அந்த குறிப்பிட்ட புள்ளியை தாண்டி லாரி நிறுத்தப்பட்டதால் வேகமாக மேலே உயர்த்தப்பட்ட இவர்கள் மேலே உள்ள சுவற்றில் மோதி சிதைந்தவைதான் இந்த முகங்கள். இதற்கு உதவி இயக்குனர் என்ன செய்வார்? அது டிரைவரின் தவறுதானே என்று உச் கொட்டினாலும், அவர் சற்று கடுமையாக சில விஷயங்களை பின்பற்றியிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம். அந்த லாரி டிரைவர் வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்தால் கூட அந்த மார்க்கை தாண்டி சிறிதளவு கூட முன்னேற முடியாதபடி ஒரு பெரிய மரக்கட்டையை போட்டிருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா?
சரி போகட்டும். நாம் உதவி இயக்குனர்களின் சாதுர்யத்தைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம்? இதே அந்நியன் படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று. படித்தபின் டைரக்டர் ஷங்கரின் மீது உங்களுக்கு கோபம் கூட வரலாம்.
அந்நியனுக்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு படத்தில். விக்ரம் ஏன் அப்படி ஒரு மன நோயாளி ஆனார் என்பதற்கான வலுவான காரணம் அது. அன்பான தங்கையை மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இழந்திருப்பார் விக்ரம். சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சார வயர் விழுந்து கிடக்கும். அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவள் இறந்திருப்பாள் என்பதுதான் கண்ணீர் வரவழைக்கும் அந்த பிளாஷ்பேக். சிறுவயது விக்ரமுக்கு தங்கையாக அனு என்ற சிறுமி நடித்திருந்தாள்.
மின்சாரம் தாக்குவது போல காட்சியை எடுத்து முடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல, இந்தப் பெண் தன் குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பானவளாக இருந்தாள் என்பதை உணர்த்தவும் ஏராளமான காட்சிகள் முன்பே எடுக்கப்பட்டுவிட்டன. சிறிது நாட்கள் கழித்து இறந்து போன அந்தச் சிறுமியை பாடையில் ஏற்றிக் கொண்டு போவது போல காட்சிகளை எடுக்க விரும்பினார் ஷங்கர்.
ஸ்ரீபெரும்புதூரில் படப்பிடிப்பு. ஒரு குறுகலான தெருவையும், ஒரு வீட்டையும், சாவு வீட்டுக்கான செட்டப்பையும் அங்கே ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஸ்பாட்டுக்கு வந்த சிறுமிக்கு காட்சியை விளக்கினார் உதவி இயக்குனர். அவ்வளவுதான். அழ ஆரம்பித்துவிட்டாள் அந்த சிறுமி. “நான் பொணமா நடிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். யார் யாரோ பேசினார்கள். எந்தெந்த முறையிலோ கெஞ்சினார்கள். அவளது பெற்றோர்கள் சொல்லியும் மசியவில்லை அவள். ஷங்கரும் முடிந்தவரை சொல்லி பார்த்தார். அப்படி நடிக்க முடியாது என்பதற்கு அவள் சொன்ன காரணம், “நான் பிணமாக நடித்துவிட்டு ஸ்கூலுக்கு போனால் என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்னை பேய் என்று கிண்டல் செய்வார்கள். அதனால் முடியாது” என்றாள்.
இப்படியே நேரம் போய் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது யூனிட். இந்த சிறுமியை நீக்கிவிட்டு வேறொரு சிறுமியை நடிக்க வைக்கலாம் என்றால், இதற்கு முன்பு எடுத்த காட்சிகள் எல்லாவற்றிலும் இந்த சிறுமியை மாற்றியாக வேண்டும். ரீ ஷூட் என்றால் ஏகப்பட்ட பொருட் செலவு, நேர விரயம். என்ன செய்வது? அப்போதுதான் ஒரு உதவி இயக்குனர் ஷங்கரின் காதில் கிசுகிசுத்தார். “தூக்க மாத்திரை கொடுத்து அனுவை தூங்க வச்சிரலாமா?”
வேறு வழி? மதிய சாப்பாட்டில் தூக்க மாத்திரையைக் கலந்தார்கள் சிறுமிக்கு. அடுத்த அரை மணி நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிய அனுவை வைத்து எல்லா காட்சிகளையும் படம் பிடித்தார்கள். படம் வெளியான பின்புதான் இப்படி ஒரு காட்சியில் நடித்ததே அவளுக்குத் தெரிய வந்தது. நியாயமாகப் பார்த்தால், இது நியாயமில்லைதான். ஆனால் ஒரு உதவி இயக்குனரின் குறுக்கு யோசனை பெரும் சிக்கலில் இருந்து இயக்குனரை விடுவித்தது அல்லவா?
- தொடரும்

ராஜா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு : அதிர்ச்சியில் தி.மு.க.,


சென்னை:மாஜி அ‌மைச்சர் ராஜா வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது. இப்படிப்பட்ட பூதாகர சர்ச்சையில் சிக்கியதால் தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியை இழந்தார் ராஜா. சுப்ரீம்கோர்ட்டின் கண்டிப்பு என அடுத்தடுத்துநெருக்கடிகள் ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இந்த வரிசையில் இன்று ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்த துவங்கினர்.
காலை 7.30 மணிக்கு ரெய்டு தொடங்கியது. டில்லியில் இருக்கும் அவரது அதிகாரப்பூர்வ வீடு மற்றும் சென்னை பெரம்பலூரில் இருக்கும் அவரது வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. சென்னை ஆர். ஏ.புரம்,ஆல்வார்பேட், நந்தனம்,பெரம்பலூர்,கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் ராஜாவின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், பினாமியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.

4 அதிகாரிகள் :  ராஜாவின் வீடுகள் தவிற அவர் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகிய 4 அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுகிறது. டில்லியில் இருக்கும் தொலைதொடர்பு அலுவலகத்திலும் ரெய்டு நடைபெறுகிறது.

தி.மு.க., அதிர்ச்சி : மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க., வின் முக்கிய தலையான ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தப்படுவது தி.மு.க., மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் - மதுரை,இந்தியா
2010-12-08 09:42:17 IST
அப்படியே மஞ்சத்துண்டு வீட்டையும் ரெய்டு பண்ணுங்க, நிறைய கிடைக்கும்.......
நக்கீரர் - மதுரை,இந்தியா
2010-12-08 09:41:01 IST
வரவேற்கிறோம். சி.பி.ஐ., ரெய்டு மட்டும் போதாது. கூட்டுக்குழு விசாரணை கண்டிப்பாக தேவை....
தேவி - சென்னை,இந்தியா
2010-12-08 09:40:02 IST
சூப்பர் அப்பு...
அன்பு - சென்னை,இந்தியா
2010-12-08 09:39:56 IST
சாமி, அவருக்கு மொத்தம் எத்தன வீடு சாமியோவ்...
கனிமொழி - சேலம்,இந்தியா
2010-12-08 09:39:45 IST
நெருப்பில்லாமல் புகையாது ராசா...இதில் உமக்கும் கழகத்துக்கும் அதிர்ச்சி.பொது ஜனங்கள் ஆகிய எங்களுக்கு அதிர்ச்சி இல்லை..ஒரு நல்ல வேட்டை தான் இந்த ரிட்...இது பற்றிய உண்மைகள் முழுவதும் வெளியே வரட்டும்.......
venkat - ஜூரோங்வெஸ்ட்singapore,இந்தியா
2010-12-08 09:39:33 IST
நன்று .அவரது கட்சியை தேசிய அளவில் தடை செய்ய வேண்டும்.இப்படி செய்தால் தான் அரசியல் வாதிகள் திருந்துவார்கள் .அவர்களுடைய சொத்துக்கள் முடக்கவேண்டும் ....
அருண் சென்னை - சென்னை,இந்தியா
2010-12-08 09:39:21 IST
நீதி இன்னும் செத்து விடவில்லை. கடவுளுக்கு நன்றி....
ராஜசேகர் - salem,இந்தியா
2010-12-08 09:37:27 IST
என்னதான் ரெய்டு பண்ணினாலும் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கிடைக்கவா போவுது...
எம் ஜி லக்ஷ்மன் - சென்னை,இந்தியா
2010-12-08 09:36:33 IST
மத்திய அரசு கவனத்துக்கு வராம சி பி ஐ ரெய்டு நடக்க வாய்ப்பு இல்ல..கூட்டணிக்கு ஆப்பு.. மக்களை சோம்பேறி ஆக்கும் இலவச ஆட்சி மாறினால் சந்தோசம்..கடந்த நூற்றாண்டுல 300 % விலைவாசி ஏறியது கடந்த மூன்று ஆண்டுகளில்தான்..வயிறு எரியுது....
அம்பி - சென்னை,இந்தியா
2010-12-08 09:34:49 IST
நல்ல move. என்ன செய்ய போகிறார்கள் கரை வேட்டிகள். இதில் காங்கிரஸ் க்கும் கூட்டு உண்டு. தவறு செய்த அனைவரும் தண்டிக்க பட வேண்டும். இது இந்தியா. கனவு காண்போம்....
gvass - chennai,இந்தியா
2010-12-08 09:32:07 IST
அழிவு ஆரம்பம். மஞ்ச துண்டு என்ன சொல்ல போகிறது...
மீனா - சிகாகோ,இந்தியா
2010-12-08 09:31:32 IST
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி! நீதி தேவனின் அரசாட்சி! அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி! உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியலே! நம்ம கண்ணா நம்மாலே நம்ப முடியலே! எல்லாமே கண்துடைப்பு! காங்கிரஸ் செய்யும் ஒரு உன்னத நாடகம்! பணம் பத்திரமாக சுவிஸ்இல் இருக்கு! மக்கள் பாவம்! எதையும் நம்பி விடுவார்கள்! கருவுக்கு தெரியாத அரசியல் ஞானமா!...
தமிழழகன் - Puducherry,இந்தியா
2010-12-08 09:31:21 IST
அப்படி போடு சபாஷு......
கா.பெரியசாமி - தோஹாQatar,இந்தியா
2010-12-08 09:30:31 IST
very good action by Central Govt....
விஜய் - chennai,இந்தியா
2010-12-08 09:29:36 IST
dmk வை கண்டிப்பா காங்கிரஸ் கழட்டி விடப்போகுது..........
pandiyan - chennai,இந்தியா
2010-12-08 09:29:30 IST
தி மு க குடும்பத்துல எல்லார் வீட்டுலயும் தேடினாதான் ஏதாவது வாய்பிருக்கு....
ராஜா - singapore,இந்தியா
2010-12-08 09:27:37 IST
இனி தி.மு.க விற்கு சங்குதான். வாழ்க ஜனநாயகம். நல்லதொரு முடிவாக இருந்து இந்த தமிழ்நாட்டை காப்பாற்றினால் போதும்....
மயூர siva - மயூரவிகார்Delhi,இந்தியா
2010-12-08 09:26:11 IST
எத்தனை ரெய்ட் நடந்தால் என்ன சுருட்டிய பணம் வெளி வருமா ? இந்த ரெய்ட் ரொம்ப லேட். கொஞ்ச நாள் நாம் எல்லாம் மறந்து விடுவோம். இது வரைக்கும் எந்த அரசியல்வாதியாவது ஊழலுக்காக சிறை வாசம் அனுபவித்திருக்கிறார்களா ?...
Vicky - chennai,இந்தியா
2010-12-08 09:21:36 IST
சுப்ப்பர்ர்ர்ர்..... காலையில் ஒரு இனிய செய்தி...... வாழ்க சிபிஐ :) :) :) :)......
PRADEEP - Dubai,இந்தியா
2010-12-08 09:17:51 IST
only for eye wash....
karthik - s,சிங்கப்பூர்
2010-12-08 09:10:57 IST
just for fun........
ஜோசப் P K - சென்னை,இந்தியா
2010-12-08 09:03:40 IST