சனி, 3 டிசம்பர், 2016

சீரான உணவு, உடற்பயிற்சி, மனவலிமை என உடம்பின் தன்மையை அறிந்தவர் கலைஞர்

பொதுவாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாகச் செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டு பக்கமுமே மேன்மையாகச் செயல்படுவது கருணாநிதிக்குத் தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி ஒருமுறை தெரிவித்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதான தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு வராமல் இருக்க மாட்டார். உடம்புக்கு சரியில்லா விட்டாலும் கூட சிறிது நேரமாவது வந்து விட்டுப் போவார். ஆனால், கடந்த ஒரு மாதமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த வயதிலும் மிகச் சிறந்த நினைவாற்றலுடன் தன்னுடைய உடலை கவனித்துக் கொள்வதில் மிகுந்த அக்கறையும் எச்சரிக்கை உணர்வும் கொண்டவர் கலைஞர் கருணாநிதி.
மன வலிமை மிக்கவர்.. ‘நீண்ட தூரம் ஓடினால்தான்,அதிக உயரம் தாண்ட முடியும்’ என்பதுதான் கருணாநிதி சொல்லும் பழமொழி. அவர் நீண்டதூரம் ஓடிய மனவலிமை கொண்ட மனிதர் என்றுதான் அவரைச் சொல்ல முடியும்.

எதிர்பார்த்த கருப்பு பணம் டெபாசிட் ஆகவில்லை மத்திய அரசு கடும் அதிர்ச்சி.. சமுக வலைதள முழக்கம்

1 -டெப்பாசிட் எப்படி வரும் ? வராது...
மோடிஜி...கறுப்புப் பண முதலாளிகளின்...கருப்பு பணத்துக்கு ஈடாக புது நோட்டுகளை மாற்றிக்கொடுத்து ..கருப்பை வெள்ளையாக்கிட்ட பிறகுதானே....அறிவிப்பைப்பெ செய்தீர்கள் ?
அக்டோபர் மாதமே உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் கருப்பு வெள்ளையாக்கிட்டதை மறைக்க நடிக்கிறீங்க....
ஏழைகளை வயிற்றிலடித்து பிடுங்குவது தானே உங்க பொழுதுபோக்கு...நடத்துங்க உங்க துக்லக் தர்பாரை...

2 -18 ஆண்டுகள் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிக்கு உதவி செய்து நீதியை கொன்றவர்கள்...
12 டேங்கர் லாரி நிறைய பல்லாயிரம் கோடி பணத்தை பதுக்க துணைபோன இரண்டு ப்ரோக்கர் மாமாக்கள்...
20 ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக்கொண்டிருந்த வருமானவரித்துறை வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்ட ப்ரோக்கர்கள்..
கருப்புப்பணத்தை ஊழலை ஒழிக்க கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா ...வழி விடுங்க யோக்கியர்கள் வராங்க...
3-இப்படியெல்லாம் ஊழலை ஒழிக்க முடியாது ..மோடிஜி..
உங்களது ஊழல் ஒழிப்பு நாடகம் மக்களை ஏமாற்றும் செயல்

அம்பானி பொண்டாட்டி சீதனமா? மோடி பொண்டாட்டி கொண்டுவந்த சீதனமா ? சமுக வலைதளங்களில் வெடித்து கிளம்பும்..

 1 கண்மூடித்தனமாக மோடியை ஆதரிக்கும் 'வாட்ஸ்ஆப் பூணூல் குரூப்'ல இப்போல்லாம் மோடியை விமர்சித்து ஏகப்பட்ட பதிவுகள் வருகிறது......!!
ஆனால் நடுநிலை வேஷதாரிகள் மட்டுமே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம, வேஷத்தை கலைக்கவும் முடியாமல் இன்னமும் 'தேசம், கறுப்புப்பணம்,மோடிடா, இந்தியாடா, தேசத்துரோகிகளே' என்று குரைத்துக்கொண்டு இருக்கின்றன....!!!

2 ஜியோ விளம்பரத்துக்கு தன்னோட படத்தை போட்டது இப்போ தான் இந்த உத்தமபுத்திரனுக்கு, உலகமகா யோக்கிவானுக்கு தெரியுதாமா...!!!

3 ஜியோ' அம்பானியின் பணம் என்றால், வங்கியில் வாங்கி வாங்கி அம்பானி ஏப்பம்விட்ட / ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான கோடிகள் எவன் வீட்டு பணம்டா /டி....!!! அம்பானியின் பொண்டாட்டி கொண்டு வந்த சீதனமா இல்லை மோடியின் பொண்டாட்டி கொண்டு வந்த சீதனமா....?!

48 விமானங்கள் தாமதம் .. சென்னை விமான நிலையத்தில் பனி மூட்டம் காரணமாக ..

சென்னை: மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லக்கூடிய 48 விமானங்கள் தாமதமாகின.
தற்போது குளிர்காலம் என்பதால் டெல்லியில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதேபோன்று அருகில் உள்ள மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்திலும் கடும் பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது.< சாலையில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. இதேபோல் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கி கியூவில் பிரசவம் .. கான்பூரில் கணவனை இழந்த பெண்..5000 ரூபாய்க்காக 5 மணித்தியாலங்கள் நின்றார் .


கான்பூரில் செலவிற்கு பணம் எடுக்க வந்து வரிசையில் சென்றபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது . கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளுக்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், சாதாரண ஏழை, எளிய ஜனங்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர். மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்தது, பணம் மாற்ற இயலாமல் தற்கொலை செய்துகொண்டது உள்ளிட்ட பல காரணங்களினால் நூற்றக்கும் மேற்பட்ட எளிய ஜனங்கள் உயிரிழந்தனர்.

ரூ.1150 கோடி - அமைச்சர் இடப்பாடி பழனிசாமி... சம்பந்தி இராமலிங்கம் கட்டுமான காண்ட்ராக்ட் ..

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி நிறுவனத்தில், ஈரோட்டில் உள்ள வங்கிகளில் ரூ.1150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை வருமானவரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கர்நாடக அரசு அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 5 கோடி புதிய நோட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி நிறுவனத்தில், ஈரோட்டில் உள்ள வங்கிகளில் ரூ.1150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை வருமானவரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதையடுத்து, இந்த வழக்கில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருக்குமா என்று, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மோடி : நான் ஒரு துறவி எனக்கு சொந்தமான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுவேன் ( சீஷெல் தீவுக்கா?)

மயிலாப்பூர் தொகுதியில் பாதி அளவு கூட இருக்காத ., மொத்தமே 90,024 மக்களே இருக்கும் ., ஹவாலா பதுக்கல் பணக்கார முதலைகள் #Seychelles தீவில் March 10-11 2015 இரண்டு நாட்கள் இந்திய பிரதமர் மோடி  இருக்க வேண்டிய அவசியம் என்ன ? இந்த கேள்வியின் பதிலில் Bharatiya Janata Party (BJP) ஊழல் பணத்தை மறைக்கும் scentific corruptive ராஜதந்திரம் அடங்கி உள்ளது ..if investigated it may be tip of an iceberg அவ்வளவு சுலபமாக இந்தியாவை விட்டு அவர் செய்த billion & billion dollors #petrolscam குற்றங்களுக்கு தப்பி விட முடியுமா என்று தெரியவில்லை(முகநூல் உபயம் சவேரா)
என்னை குற்றம் சொல்பவர்களால் என்னை ஒன்றுமே செய்ய முடியாது: மோடி பேச்சு:
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இங்கு அரசியல் காய்நகர்த்தல்கள் படுவேகமாக நடந்து வருகின்றன.  மாநிலத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட பா.ஜ.க. சார்பில் காசிப்பூர் நகரில் உள்ள ஐ.டி.ஐ. வளாகத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்ற பரிவர்த்தனை பிரச்சாரப் பேரணியை கடந்த மாதம் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.;இந்த பிரச்சாரப் பேரணியின் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற பரிவர்த்தனை  பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

மக்களின் பணத்தை வங்கிகள் வட்டி இல்லாமல் ரிசேர்வ் வங்கிக்கு கொடுத்து விட்டன .. இப்போ வாடிக்கையாளர்களுக்கு வட்டி கொடுக்க வேண்டுமே?

செல்லாக்காசு விவகாரத்தால் பல பிரச்சனைகள். இந்தக் கட்டுரை வங்கிகள் சந்திக்கவிருக்கும் ஒரு பிரச்சனையை சொல்கிறது. நேற்று முன்தினம் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் இதைச் சுட்டிக்காட்டின.
அதாவது, இந்திய வங்கிகளில் தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் டெபாசிட் ஆகின்றன. இந்தப் பணத்தை வங்கிகள் குறைந்த வட்டிக்கு கடனாக அளிக்க ஆரம்பித்தால் சந்தையில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால், இப்போது வந்திருக்கும் தொகை அனைத்தையும் தன்னிடம் டெபாசிட் செய்ய வேண்டுமெனச் சொல்லிவிட்டது ரிசர்வ் வங்கி. வழக்கமாக 4 சதவீதத்தை மட்டுமே ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்ய வேண்டும்.
இப்போது வங்கிகள் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால், தங்களிடம் குவிந்திருக்கும் பணத்திற்கு, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறைந்தது 4 சதவீத வட்டியாவது கொடுக்க வேண்டும். ஆனால், அந்தப் பணத்தையெல்லாம் வட்டியில்லாமல் ரிசர்வ் வங்கிக்குக் கொடுத்தாகிவிட்டது. ஆக, வங்கிகள் தங்கள் லாபத்திலிருந்துதான் இந்த வட்டியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

எந்திரன் 2.0 கருப்பு பண நடிகனும் கருப்பு பண இயக்குனரும் கருப்பு பணத்தில் கருப்பு பணத்துக்கு எதிராக படம் எடுக்கிராக .

SHANKARvinavu.com :ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரனின் இரண்டாவது பாகம் 2017 தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இது 2.0 என்ற பெயரில் அழைக்கப்படும் அத்திரைப்படத்தின் முதல் பார்வை விழா. எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார்.

எந்திரனில் எழுந்த ரோபாவான சிட்டி, இரண்டாவது பாகத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் செதுக்கப்பட்டு ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் 3 டி படமாக வெளிவருகிறது. முதல் பாகத்தின் இரு பரிமாணத்தை விட இரண்டாம் பாகத்தின் முப்பரிமாணம் தரத்திலும், செலவிலும், நுட்பத்திலும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தாக வேண்டும். அதிகம் குவிந்திருப்பதால் மட்டுமே பணம் தனது பளபளப்பை பராமரிக்க இயலாது. மேலும் மேலும் தன்னைப் பெருக்கிக் கொள்வதே நிதிக்கலையால் மிளிரும் பணத்தின் ஆகச்சிறந்த அழகு.

லைக்கா மொபைல் – ஒரு சர்வதேச திருட்டுக் கம்பெனி! சுபாஷ்கரன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பும், சட்ட விரோத வருமானமும்

vinavu.com :லைக்கா மொபைல் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் ஒரு கார்ப்பரேட் கிரைம் தில்லருக்கு உரியவை. இங்கிலாந்து உள்ளிட்டு இந்த ஊடகங்கள் அனைத்தும் சுபாஷ்கரண் நிறுவனத்தை சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் என்றே அழைக்கின்றன.
subashkaran with cameron பத்தாண்டுகளில் ஒரு பில்லியன் யூரோவை நிறுவன மதிப்பாக கொண்டிருப்பது எப்படிப் பார்த்தாலும் சாத்தியமில்லை. அது நிச்சயம் இருண்ட பக்கத்தைக் கொண்டிருக்கும்.
நவம்பர் 2015-ல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவிடும் பொருட்டு 6.6 மில்லியன் பவுண்ட் நிதியை – கிட்டத்தட்ட 56 கோடி இந்திய ரூபாயை அளிப்பதாக அறிவிக்கிறார். கன்சர்வ்வேட்டிவ் கட்சிக்கு இலங்கை மீதான இந்த திடீர் பாசத்தின் பின்னணி என்ன? இந்த அறிவிப்புக்கு முந்தைய வருடத்தில் அக்கட்சிக்கு அங்கே வாழும் தொழிலதிபரான சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு மில்லியன் பவுண்டை அதாவது 8.5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறார்.  அவர் பிறந்து வாழ்ந்த வடக்கு இலங்கைக்குத்தான் இங்கிலாந்து உதவி செய்வதாக அறிவித்தது. காமரூன் கட்சிக்கு அவர் கொடுத்த நன்கொடையும் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்த உதவியும் இப்படி பிரச்சினைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுவதற்கு காரணம், சுபாஷ்கரன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பும், சட்ட விரோத வருமானமும் ஆகும். இலங்கை அரசின் போருக்கு பிறகு 2009-ம் ஆண்டில் பிரிட்டன் அரசு மனிதாபிமான உதவிகளை செய்வதாக அறிவித்தது. லைக்கா மொபைல் நன்கொடை விவகாரத்திற்கு பிறகு இந்த உதவி சூடு பிடித்தது ஏன்?

மோடி:ரொக்க பண புழக்கமே ஊழலுக்கு வித்து! அப்படியே மூச்சு இருப்பதால்தான் மூச்சு திணறல் ஏற்படுகிறது ... அடே அடே அடே ...

Cashless economy.. Truth less politicians .. spine less journalists .. Heart less corporates.. Life less people and Brain less prime minister...
புதுடில்லி: ''அதிக அளவில் ரொக்க பண புழக் கம், ஊழல் மற்றும் கறுப்பு பணம் அதிகரிக்க வழிவகுக்கும்,'' என, பிரதமர் மோடி கூறி உள்ளார். செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையில், எதிர்க் கட்சிகள், பிரதமர் மோடியை கடுமையாக விமர் சித்து வருகின்றன. இந்நிலையில், அதுகுறித்து, இணையதளம் ஒன்றில், பிரதமர் மோடி எழுதிய கட்டுரை விபரம்: ஊழலால் நாட்டின் வளர்ச்சி முடங்கி போகிறது. 21ம் நுாற்றாண்டில், ஊழல் இல்லாத நாடாக, இந்தியா திகழ வேண்டும். இனிமேல், ஊழல் ஒழிந்து, வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர பிரிவு மக்களின் கனவு நனவாக வேண்டும்; இதற்கு ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிப்பது அவசியம். அதிக அளவில் ரொக்க பணம் புழக்கத் தில் இருப்பதே, கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு வித்திடுகிறது.

ஒரு பாசிச கோமாளியால்.. புழக்கத்திற்கு அதிகமாக பணம் வங்கிகளில் ..விபரீத நிலையில் இந்திய பொருளாதாரம்

மாதவராஜ்மாதவராஜ்: வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம்.
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பு 4.70 லட்சம் கோடி.
ஆக வெளியே இருந்தது 10.74 லட்சம் கோடி. இதில்தான் பெரும்பகுதி கருப்புப்பணம் இருக்கிறது என்று மோடியும், மோடியின் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி கருப்புப்பணம் என கணக்கிடப்பட்டது

தேசிய கீதம் திரைப்படங்களின் ஒபெனிங் சாங்... போலி தேசபக்திக்கு கிளாசிக் உதாரணம்

அ. குமரேசன்அ. குமரேசன் சமுதாயத்தில் சில பிரச்சனைகள் அறிவுப்பூர்வமாகக் கையாளப்படுவதற்கு மாறாக உணர்ச்சிப்பூர்வமானதாக மாற்றப்படுவது எப்போதுமே ஆபத்தானது. சிந்திப்பதற்கும் முன்னேறுவதற்கும் முட்டுக்கட்டை போடுவது. மக்களிடையே பகைமையைத் தூண்டுவது.
அவ்வாறு உணர்ச்சிகள் கிளறிவிடப்படுகிறபோதெல்லாம் தலையிட்டு நிதானத்திற்குக் கொண்டுவருகிற பெரும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு இருக்கிறது. ஆனால், தேசப்பற்றையும், தேசிய கீதத்தையும் சம்பந்தப்படுத்தி உச்சநீதிமன்றமே ஒரு இடைக்கால ஆணை பிறப்பித்திருப்பது, அப்படி உணர்ச்சிவயப்படுத்தும் திருப்பணியால் திசை திருப்ப முயல்கிற சக்திகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் தேசிய கீதம் திரையிடப்பட வேண்டும், பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும், அவர்கள் வெளியே செல்லாமலிருக்கக் கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் டிசம்பர் 1 அன்று ஒரு இடைக்கால ஆணை பிறப்பித்திருக்கிறது.

கச்சத்தீவு திருவிழா - தமிழக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது!

minnambalam.com கச்சத்தீவில் வருகிற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டதில், ‘கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதற்கு மீனவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் தமிழக மீனவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். வரலாறு
கச்சத்தீவு, ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக் ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம். கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913ஆம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது.

கேஷ்லெஸ் இந்தியா’.. லைப் லெஸ் பீப்பிள் .. பிரெயின் லெஸ் பிரைம் மினிஸ்டர்.. ஹார்ட் லெஸ் காபரெட்ஸ்


minnambalam .com ;ரூபாய் ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் இனி செல்லாது என்ற செய்தி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் ஸ்கூட்டியை சர்வீஸுக்கு விட்டிருந்தேன். ஆயிலே இல்லாமல் ஓட்டி எஞ்சினை ஒரு வழி பண்ணி வைத்திருந்ததாலும் மேலும் பல பட்டி, டிங்கரிங் வேலைகள் அதில் இருப்பதாலும் கணிசமான தொகையை பில்லாகத் தீட்டியிருந்தார் மெக்கானிக்.
அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை தவணை முறையில் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஆயிரம் ரூபாய் பாக்கி. வண்டி இன்னும் கைக்கு வரவில்லை.! அக்கா ஊரிலிருந்து சென்னை திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் இருந்தேன். வழியனுப்ப வந்த அங்கிளுக்கு (திரு.மாதவராஜ்) வந்த தொலைபேசி அழைப்பின் மூலமே முதலில் இந்தச் செய்தியை அறிந்தேன். நம்பவே முடியவில்லை.

தஞ்சையின் சின்ன கலைஞர் கோ.சி.மணி ... திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்


மின்னம்பலம்.காம்: முன்னாள் அமைச்சரும், திமுக-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய சகாவுமான கோ.சி.மணி (87) தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார். நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மேக்கிரிமங்கலம் என்ற கிராமத்தில் கோவிந்தசாமி - அஞ்சலை தம்பதிக்கு மகனாக 13 செப்டம்பர் 1929ஆம் ஆண்டு பிறந்த சிவசுப்பிரமணியன்தான் பின்னர் கோ.சி.மணி ஆனார்.
இவருக்கு சாவித்திரி, கிருஷ்ணவேணி என்று இரு மனைவிகள். இவரது மூத்த மகன் கோ.சி.மதியழகன் நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத் தலைவராக பணியாற்றி பின்னர் உடல்நலம் குன்றி இறந்தார். இவரது இரண்டாவது மகன் கோ.சி.இளங்கோவன் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியத் துணை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

திருமதி ரஞ்சிதம் நல்லகண்ணு மறைவு.

தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் துணைவியார் திருமதி ரஞ்சிதம் நல்லகண்ணு மறைவு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் மனைவி திருமதி.ரஞ்சிதம் அம்மையார் (வயது 82) இன்று (01.12.2016) காலை 10.30 மணி அளவில் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீவைகுண்டம் அன்னாசாமி தேவர் சந்தோசியம்மாள் தம்பதிகளின் மகளான ரஞ்சிதம் அம்மையாருடன் பிறந்த சகோதரர் 3 பேரும், சகோதரிகள் 6 பேரும் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை தேவர் சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதாலும், அடிதட்டு மக்களுக்கு ஆதரவாக நின்றதாலும் சில சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர். சமூக நல்லிணக்கத்திலும், மனிதாபிமானமாக செயல்படுதிலும் ஆர்வமுள்ள குடும்பத்தை சார்ந்தவர்.

குஷ்பூவின் நிஜங்கள் நிகழ்ச்சி மனதை புண்படுத்துகிறதா?

தனியார் தொலைக்காட்சிகளில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்துகளுக்கு எதிராகக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். ‘அரச சபையை நடத்துவது போல குஷ்புவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் தனி ராஜாங்கம் நடத்துகின்றனர். தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்ய வேண்டும்’ எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, சன் டி.வியில் ‘நிஜங்கள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில், குடும்ப விவகாரங்களுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல், சினிமா இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியும் அவ்வப்போது விமர்சிக்கப்படுகிறது.  இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகை ஸ்ரீப்ரியா ‘தம்பதிகளுக்கிடையே பிரச்னை வந்தால் அதைத் தீர்த்து வைக்க குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. கிரிமினல் குற்றங்களை கையாள தனித்தனி சட்டப் பிரிவுகள் உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்னைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

புதிய சிபிஅய் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா . சீனியர்களை ஓவர்டேக் செய்த குஜராத்தி.

பிரதமர் - குஜராத்தி 
RBI கவர்னர் - குஜராத்தி 
பிஜேபி லீடர்- குஜராத்தி 
அம்பானி - குஜராத்தி 

அதானி - குஜராத்தி 
குஜராத்தின் வளர்ச்சி....!!!!
CBI இயக்குனரும் குஜராத்தி

மத்திய உளவுத்துறையான சிபிஐ-க்கு புதிய இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.நாட்டில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கொலை, கொள்ளை வழக்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உளவுத்துறை முகமையான சிபிஐ விசாரித்து வருகிறது. அரசியல் குறுக்கீடு மற்றும் யாருடைய தலையீடுக்கும் இடமளிக்காமல் மிகவும் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாக இயங்கிவரும் சிபிஐ-க்கான புதிய இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிலாரி வெற்றி! 2.5 மில்லியன் வாக்குகள் பின்தங்கிய டிரம்ப்? தேர்தல் முடிவுகள் மாறலாம்?


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 2.5 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எனினும், மொத்த வாக்கு எண்ணிக்கை இதுவரை நிறைவடையவில்லை.
தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 65,152,310 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரை தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 62,626,216 வாக்குகள் பெற்றுள்ளார். மற்ற வேட்பாளர்கள் 7,373,248 வாக்குகள் பெற்றுள்ளனர். இதன் மூலம் டிரம்பை விட ஹிலாரி 1.9 சதவீதம் 2,526,094 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். எனினும், ஜனவரி 20ம் திகதி அவர் அதிகாரத்தில் அமர முடியாது.

தை 1ஆம் தேதி முதல் வங்கி பரிவர்த்தனைக்கு ஆதார் அட்டை அவசியம் ..ரிசேர்வ் வங்கி அறிவிப்பு !

 Aadhar card mandatory for Cash transaction - RBIடெல்லி: வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ராஜ்யசபாவில் சேலம் உருக்காலை... திருச்சி சிவாவை பேசவிடாமல் அடாவடி செய்த அதிமுக விஜிலா எம்.பி

மின்னம்பலம்.com :‘சேலம் உருக்காலை நஷ்டத்தில் ஓடவில்லை. திட்டமிட்டே அதனை முடக்கி வரும் பணியில் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகிறது’ என்று குற்றம்சாட்டி, ‘சேலம் உருக்காலையை மூடக்கூடாது’ என்று திருச்சி சிவா எம்.பி மாநிலங்களவையில் பேசினார். ஆனால், அவர் பேசும் போது அவரை பேச விடாமல் தடுக்கும் விதமாக அதிமுக பெண் எம்.பி விஜிலா எதிர்ப்பு தெரிவிக்க அவருக்கு அவைத்தலைவர் குரியன் கண்டனம் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விதி எண் 56இன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று தொடர்ந்து காங்கிரஸ் பிடிவாதம் செய்து வருகிறது.

ஜனநாயகக் கொலை: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு!


minnambalam.com : ரூபாய் நோட்டு அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளனர். ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அவையை முடக்கிவைத்திருக்கும் நிலையில், கருப்புப் பணத்துக்கு 50 சதவிகித வரியும், வருமான வரித் துறையினரால் கண்டுபிடிக்கப்படும் கருப்புப் பணத்துக்கு 85 சதவிகித வரியும் விதிக்க வகைசெய்யும் வருமான வரி திருத்த மசோதா, பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில், இச்சட்டத்தை கண்டித்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாடி, திமுக, தேசிய காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட 16 கட்சிப் பிரதிநிதிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு ஒன்றை அளித்தனர். ஐக்கிய ஜனதாதளம் சார்பில் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை.

வரதட்சணையை புது ரூபாய் நோட்டுகளில் தரவில்லை; மணப் பெண் அடித்துக் கொலை

Failure to provide dowry: Newlywed bride murdered by in-laws ... In-laws demanded 170,000 IR as dowry, father of bride failed due to cancellation of currency notes ... The shocking incident took place in Indian state of Orissa.
மத்திய அரசின் செலாவணி நீக்க அறிவிப்பு பல உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொலைகளையும் நிகழ்த்தி வருகிறது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரங்கிபூர் என்ற ஊரில் புதிய ரூபாய் நோட்டுக்களில் வரதட்சணை பணத்தை தரவில்லை என்பதற்காக மணப் பெண், மணமகன் வீட்டீனரால் கொரடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மோடியின் அறிப்புக்கு அடுத்த நாளான நவம்பர் 9-ஆம் தேதி பிரபதி என்ற பெண்ணுக்கும் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி நாயக் என்பவருக்கு திருமணம் நடந்திருக்கிறது.

மைக்ரோ பாசிசமும் பேரழிவிற்கான முன்தயாரிப்பும்!

ஜமாலன் thetimestamil.com : schadenfreude என்றொரு சொல் உள்ளது ஆங்கிலத்தில் ஜெர்மனிலிருந்து உள்வாங்கப்பட்டு ஆளப்படுவது. இதன் பொருள் “மற்றவரின் துன்பத்தில் மகிழ்வது. மற்றவரின் துரதிருஷ்டத்தில் அல்லது தோல்வியில் மகிழ்வை உணர்வது.” இது பொறாமை என்ற உணர்வல்ல. பொறாமை மற்றவரின் வளர்ச்சியைப் பார்த்து வருவது. இது அடுத்தவரின் வீழ்ச்சியில் மகிழ்ச்சிக் கொள்வது.
தற்போதைய இந்திய அரசின் திடடங்கள் பொதுமக்கள் அல்லது பொதுபுத்தியின் உணர்வினை கொள்முதல் செய்கிறது தனது அரசியலுக்காக. அந்த அரசியலை நாம் schadenfreude politics எனலாம். இது ஒரு மைக்ரோ பாசிசத்திற்கான அடிப்படைகளை உருவாக்கும் உணர்வு. இந்திய குடிமக்களின் உடலுக்குள் இந்த உணர்வை முதலீடு செய்வதே அரசின் செல்லாக்காசுத் திட்டமும் அதன் தொடர்நடவடிக்கைகளும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பாசிஸ்டாக மாற்றும் முயற்சி. வேற்றுமையில் ஒற்றுமைக்கு பதிலாக ஒற்றுமையில் வேற்றுமையை உருவாக்கும் முயற்சி.

40 மத்திய மந்திரிகள் ரூபாய் நோட்டை எப்படி மாற்றினார்கள்? மிகப்பெரிய மோசடி .

500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பலர் வங்கிகளில் கியூவில் நின்று தங்களது பணத்தை மாற்றினார்கள். ஆனால், இந்த கியூவில் எந்த மத்திய மந்திரியும் நிற்கவில்லை. இத்தனைக்கும் அவர்களிடமும் பல லட்ச ரூபாய் கையில் ரொக்கமாக இருந்தது. அந்த பணத்தை புதிய பணமாக மாற்ற அவர்கள் என்ன செய்தார்கள்? எப்படி அந்த பணத்தை மாற்றினார்கள்? என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது. காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு மத்திய மந்திரிகள் சொத்து பட்டியலை சேகரித்தது. அந்த அமைப்பு கேட்ட தகவல்களை மத்திய மந்திரிகள் வழங்கி இருக்கிறார்கள். 2016 மார்ச் மாதம் அவர்களிடம் இருந்த சொத்து பட்டியலை கூறி இருக்கிறார்கள். அதன்படி மொத்தமுள்ள 76 மத்திய மந்திரிகளில் 40 பேரிடம் அதிக அளவில் ரொக்க பணம் கையிருப்பில் இருந்துள்ளது.

விகடன் டிவி : கருப்பு பணம் எங்கே என்று மோடிக்கும் தெரியும் குருமூர்த்திக்கும் தெரியும் .. அவர்கள் யாராவது கியூவில் நிற்கிறார்களா?



தனுஷ் கஸ்தூரி ராஜாவின் மகன் என்கிறார் விசு .. அவர் வெளியிட்ட புகைப்படம்

விசு வெளியிட்ட போட்டோ ஆதாரம் இயக்குனரும், நடிகருமான விசு தனுஷ், கஸ்தூரி ராஜாவின் மகன் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.. விசு வெளியிட்ட போட்டோ ஆதாரம்< நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளனர். தனுஷ் எங்களுடைய மகன் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் நாங்கள் தயார் என கூறுகின்றனர் அந்த திடீர் பெற்றோர்கள். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு அளித்த பேட்டியில் தனுஷ் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தான் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

ரூ.500, 1000 செத்தது ஏன்? - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா! – 3

trump putinkeetru.com: கோமாவில் வீழ்ந்த தனது தேசியப் பொருளாதாரத்தை மீட்பதற்கு பொருளார விதிகளுக்கு முற்றிலும் புறம்பான கடன் பொருளாதாரம் என்பதை நடைமுறைப்படுத்த அமெரிக்கா துவங்கியது. வங்கிக்கடனை மக்களுக்கு வாரி வழங்கியது. அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்வுக்கான ஆதாரமாக வங்கிக்கடன் மாறியது. தனது பொருளாதார சரிவைத் தடுக்க ரசியா, ஈரான் ஆகியவற்றின் எண்ணெய், எரிவாயு சந்தைகளை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டது. அய்ரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு தரைவழிப் பாதை அமைத்து எண்ணெய், எரிவாயு கொண்டு செல்ல முயன்ற அமெரிக்க முயற்சிக்கு ஒத்துழைக்காத நாடுகளின் ஆட்சியாளர்களை பதவியிலிருந்து தூக்கி எறிய சதிசெய்தது.
            இதற்காக அய்.எஸ். தீவிரவாத அமைப்பை உருவாக்கியது. அதற்குத் தேவையான நிதி, ஆயுதம் ஆகியவற்றை சவுதி அரேபியா மூலமாக வழங்கியது.

மே.வங்காளத்தில் இராணுவத்தினர் குவிப்பு .. மம்தா கடும்கோபம்,, Army at Toll Plazas, Has Emergency Been Imposed, Asks Mamata


கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 2 சுங்கச்சாவடி மற்றும் தலைமை செயலகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும் வரை தலைமை செயலகத்தைவிட்டு வெளியேற மாட்டேன் என்று ேமற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். மத்திய அரசு கடந்த 8ம் தேதி திடீரென 500, 1000 நோட்டு செல்லாது என்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை திரும்பக் பெறக்கோரி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன் என்று சவால்விடுத்தார். இந்த பரபரப்பு ஓய்வதற்குள், நேற்று இரவு டெல்லியில் இருந்து மம்தா வந்த விமானம் உடனடியாக தரையிறங்காமல் வானத்திலேயே வட்டமடித்தது. இது தன்னை கொல்ல சதி நடப்பதாக மம்தா கூறியதால்  இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பே முடியாத நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேற்குவங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை 22ல் உள்ள டங்குனி மற்றும் பால்ஷிட் சுங்கச்சாவடிகளில் நேற்று ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

ஜாதி பக்தியை மறைக்கக் தேசபக்தி கோஷம் ... போலி தேசபக்தர்களின் ஒபினிங் சாங்.

மத்திய அரசின் செயல்பாடுகள் தொல்பொருள்துறையின் செயல்பாட்டினை ஒத்து இருக்கிறது.
வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் வசிப்போர் தங்கள் தேசியக் கொடியை தங்களின் உள்ளாடைகளிலும் செருப்புகளிலும் கூட அணிந்திருந்தாலும் தேசபக்தி என்று வரும் போது நம்மை விட அதிக அளவு கொண்டவராகவே அதை வெளிப்படுத்துகின்றனர்.ஏனெனில் அங்கே அவர்களுக்குள் இங்கே இருப்பது போல பள்ளன், பறையன், வன்னியன், முதலி, ரெட்டி, நாயுடு,பார்ப்பனன் என்ற சாதியோ வர்ண அமைப்போ கிடையாது.ஆனால் இங்கே மனிதரைக் கூறு போட்டு வைக்கின்ற அத்தனை அம்சங்களையும் வைத்துக் கொண்டு போலியாக தேசபக்தியை ஊட்டி தேச ஒற்றுமையைக் கட்டமைக்க நினைக்கின்றனர்.
சாதீய,பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களையும் நடவடிக்கைகளை சீரிய முறையில் தீவிரமாக செயல்படுத்தாமல் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு வளர்க்கின்ற தேசபக்தி தற்காலிகமாகவே வெற்றி பெறும்,அது நிலைத்திருக்காது.

டெபிட் கார்டு ...நீங்கள்லாம் உண்மைலையே கோமாளியா? இல்ல கோமாளிமாதிரி நடிக்கிறீங்களாடா!..

கோமாளிகளுக்கு புரியாது படிக்க வேண்டாம்!
ஏன் இந்தியா மற்ற நாடுகளை போல முன்னேறக்கூடாதா?...
மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிக்லாம் பயன்படுத்தகூடாதா?...
ஆன்லைன் பரிவர்தனைகள் வரக்கூடாதா?...
ஏன் டீக்கடைல paytym மெசின் யூஸ் பன்னகூடாதா? வளரச்சிடா! கவர்ச்சிடா! மோடிடா! (சங்கிகளின் வாய்ஸ்)

அட அரமண்டையங்களா!.. டெபிட்கார்டு பயன்படுத்துவதையும், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்வதையும் ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக உங்களுக்கு சொல்லிக்குடுத்தவன் எவன்டா?
நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.
அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாளமாகிய விவசாயத்தை மூலதனமாக்கு, விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.

மோடி அரசின் 700 நாள் ஆட்சியின் சாதனைகள் (வேதனைகள்)?

 மோடி அவர்களின் அரசு பதவியேற்று 700 நாட்களுக்கு மேலாகிவிட்டது.. அதன் சாதனைகளை சற்று திரும்பி பார்ப்போம்....
* 3 ரூபாய் இருந்த பிளாட்பார்ம் டிக்கட் இன்று 10 ரூபாய்.
* 98 ரூபாய் இருந்த நெட்பேக் இன்று 246 ரூபாய். 30 பைசா இருந்த கால் ரேட் இன்று 1 ரூபாய்.
* கச்சா எண்னையின் விலை பேரலுக்கு $ 119 இருந்த போது பெட்ரோல் விலை 67. ஆனால் பேரல் $ 30 என்ற போதும் பெட்ரோல் 60 ரூபாய் ..
* 70 ரூபாய்க்கு விற்ற பருப்பு இன்று 150 ரூபாய், இருந்தும் இது விவசாயிக்கு கிடைக்கவில்லை.
*12.36% இருந்த சேவை வரி தற்போது 14.50% .
* 10% இருந்த கலால் வரி தற்போது 12.36% .
* 58.50 என்று இருந்த டாலர் மதிப்பு இன்று 68.50.
* எரிவாயு மானியத்தில் கிடைத்த லாபம் சுமார் 100 கோடி ஆனால் அதற்கு விளம்பர செலவு 250 கோடி.
* கிலீன் இந்தியா செலவு 250 கோடி, ஆனால் துப்புறவு தொழிலாளிகளுக்கு சம்பளம் பாக்கி.

சீனா-பாக். சரக்கு ரயில் சேவை .. 500 டன் பொருட்களுடன் சீனாவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் கராச்சியை அடைந்தது


இஸ்லாபாத்: சீனா-பாகிஸ்தான் இடையே நேற்று முதல் முறையாக சரக்கு ரயில் சேவை துவங்கியது. சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. சீனாவும்-பாகிஸ்தானும் கடல்சார் வர்த்தகத்தை ஏற்படுத்தும் விதமாக சீன-பாக்.பொருளாதார பாதை திட்டத்தை (சி.பி.இ.சி) செயல்படுத்தி வருகின்றன.500 டன் பொருட்கள்.இந்நிலையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக ரயில் சேவையை துவக்கியுள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே சரக்கு ரயில் சேவை . சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள கன்மிங் நகருக்கும், பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்திற்கும் இடையே நேற்று துவங்கியது. 500 டன் பொருட்களுடன் கன்மிங் நகரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் பாகிஸ்தானின் கராச்சி நகர் வந்தடைந்தது. இதன் மூலம் சீனாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்தி வருவதாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது dinamalar.com

பொதுமக்களே திறந்து வைத்த வடபழனி மேம்பாலம் .. அரசு திறக்காமல் தூங்கி கொண்டிருந்ததால் ..

சென்னை, வடபழனியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இன்று காலை முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. அரசு திறக்காததால் பொதுமக்களே பாலத்தை திறந்து வைத்தனர்.
சென்னை வடபழனி சிவன் கோவில் அருகில் தொடங்கும் புதிய மேம்பாலப் பணிகள் முடிந்த போதும் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படாமல் இருந்தது. சென்னை வடபழனி 100 அடி சாலையில் ரூ.56 கோடி செலவில் மேம்பாலம் கட்ட கடந்த 2011ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் பணி மேம்பால பணி நடந்ததால் வடபழனி சிக்னல் அருகே மேம்பாலம் கட்டும் பணி தாமதம் ஏற்பட்டது.

கலைஞர் நன்றாக இருக்கும்போதே செயல்தலைவர் அறிவிப்பு தேவையா? கோபாலபுரத்தில் கொந்தளிப்பு.

மருத்துவமனை  நிமிடங்கள்!  - கோபாலபுரத்தில் கொந்தளித்த அழகிரி அப்போலோ மருத்துவமனையைப் போலவே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. ' நோய்த் தாக்கம் காரணமாக இரவு முழுவதும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார் கலைஞர். இன்னும் ஒருவாரம் அவர் சிகிச்சையில் இருப்பார்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 25-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைமைக் கழகம், ' வழக்கமாக அவர் உட்கொள்ளும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அவரைக் காண வருவதைத் தவிர்த்து, பார்வையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டது. கருணாநிதியின் உடல் முழுவதும் மீசெல்ஸ் எனப்படும் சிறு கொப்புளங்கள் பரவிவிட்டதால், மிகுந்த வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடலில் ஆட்டோ இம்யூன்(நோய் எதிர்ப்பு குறைபாடு) பாதிப்பும் ஏற்பட்டது.

Helplines during cyclone NADA .... 1070 / 1077 toll free numbers

Public may contact 1070 / 1077 (toll free numbers) for help in an emergency Greater Chennai Corporation has made elaborate arrangements for meeting an eventuality. Public can lodge complaints with round-the-clock control room at Corporation headquarters by dialing 044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570 and via Whatsapp on 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 9445477205. People in Cuddalore, Puducherry and Nagapattinam can dial 1070 and 1077 for assistance. People in Tiruvallur can call 1070,1077 and 044-27664177
5 districts including Chennai are likely to be affected by floods due to cyclone Nada. At this juncture, The State government has put in place all precautionary measures to face cyclonic storm Nada, which is likely to cross north Tamil Nadu coast between Vedaranyam and Puducherry, close to Cuddalore, by early morning of December 2. Government has also provided helpline numbers and emails for the public during emergencies  livechennai.com

நாடா புயல் வடக்கு இலங்கையையும் தமிழக கரையோரங்களையும் தாக்க தொடங்கி உள்ளது



மே.வங்கத்தில் இராணுவம் குவிக்கப்பட்டது ஏன்? உள்நாட்டு கலவரம் உண்டாக்க மத்தியரசு முயல்கிறதா? மம்தா பானர்ஜி கேள்வி .

mamata-banerjeetimestamil.com :  பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பேரணி நடத்தினார். மோடியை அரசியலிலிருந்து நீக்கியே தீருவேன் என ஆவேசத்துடன் பேட்டியளித்தார்.
இந்நிலையில் வங்காளத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
“நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்… பொருளாதார எமர்ஜென்ஸிக்கு அப்பால் ஜனநாயகத்தின் மீதும் கூட்டாட்சி அமைப்பின் மீதும் தாக்குதல் நடத்துவதன் மூலம், அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா?” என தெரிவித்தார் மமதா.

BBC :இன்குலாப்: பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர்

சொற்களை நெருப்புத் துண்டங்களாக்க முடியுமா? ஆயிரம் அறிவுரைகளால் தலை நிமிராத மக்களை ஒரு பாடலால் உசுப்பிவிட முடியுமா? முடியும் என நிரூபித்தவர் கவிஞர் இன்குலாப். ’அரசியல் கவிதைகளை அழகியலோடு’ சொன்ன கவிஞர் இன்குலாப் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1965 ல் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைப் புரட்டிப்போட்ட மொழிப்போராட்டத்தில் பங்கேற்றுத் தனது கருத்தியல் பிரச்சாரத்துக்கு உவப்பான கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட பலர் 1967 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதிகார அமைப்பின் ஆதரவாளர்களாகத் தேங்கிப்போயினர். ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கீழ் வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்டபோது அதைக் கண்டிக்காமல் மௌனம் காத்தனர். ஒருசிலர் அந்த சம்பவத்தால் மார்க்சியத்தை நோக்கித் திரும்பினர். அத்தகைய சிலரில் ஒருவராக இருந்தவர் இன்குலாப்.
'இந்தியாவின் ஆளும் வர்க்கம் என்பது காலனியமும் நிலப்பிரபுத்துவமும் கலந்து உருவானது.

வியாழன், 1 டிசம்பர், 2016

நல்ல நோட்டை ஒழுங்காக அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் ?

ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. .
எங்கே புதிய 500 ரூபாய் நோட்டு? பணத்தை இழந்த பிறகு அனைவரும் கேட்கும் கேள்வியிது. நாம் அனைவரும் வாட்ஸப்பிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் உண்மையில் நம்மில் பெரும்பாலானோர் அதைத் தொட்டுப் பார்த்ததில்லை. காரணம் இன்றியமையாத அந்தப் பண மதிப்பை அச்சிடுவதில் இருக்கும் மொத்த நிர்வாகக் குளறுபடிகள்.
  • மொத்தமாக 1660 கோடி 500 ரூபாய் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்தன.
  • இதுவரை 1 கோடி பணத்தாள்கள் மட்டுமே அதாவது வெறும் 06% மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
  • ஒட்டுமொத்த இந்திய நாணய மதிப்பில் பாதி அளவு 500 ரூபாய் பணத்தாள்களாக இருந்தது.
  • 500 ரூபாய் அச்சடிக்கும் நிறுவனத்திற்கு முழுநேரத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (Chairman and Managing director) கிடையாது.

பெங்களூரில் 4 கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள் 14 கிலோ தங்கம் .. ஐ ஏ எஸ் அதிகாரி வீட்டில் கைப்பற்றப்பட்டது



IT dept seizes over Rs 4 cr in new currency notes in Bengaluru பெங்களூர்: பெங்களூர் நகரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது, இரு நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.4 கோடி மதிப்புள்ள புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு கட்டுக்கள் சிக்கியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 7.5 கிலோ கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரில் நேற்றும் இன்றும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்றது. முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் வீட்டிலும்கூட ரெய்டு நடந்தது. (பாஜகவுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு நடப்பதில்லை )இந்த நிலையில், ரெய்டின்போது இரு நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று மாலை பி.டி.ஐ செய்தி நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சோதனையின் போது 7 கிலோ கிராம் தங்கம் மற்றும் 7.5 கிலோ கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்த்தியா சென் :ரூபாய் நோட்டு: சர்வாதிகாரச் செயல்.. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை...


ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் 500,1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், அரசின் இந்த அறிவிப்பானது ரூபாய் நோட்டில் அரசு அளித்திருக்கும் உறுதி மொழியை அரசே மீறும் சர்வாதிகாரச் செயல்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.minnambalam.com

மம்தா பானர்ஜியின் உயிருக்கு அச்சுறுத்தல் ..எரிபொருள் தீரும் நிலையில் விமானம் தரை இறங்க அனுமதி தாமதம்


நேற்று விமான விபத்தொன்றில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
நேற்று, இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த 6E 0342 என்ற எண்கொண்ட விமானம் பாட்னாவிலிருந்து கொல்கத்தாவுக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் திரிணாமூல் காங்கிரஸின் சட்ட வல்லுநர் முகுல் ராயையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது எரிபொருள் குறைபாட்டோடு கொல்கத்தா விமான நிலையத்தின்மேல் அரை மணி நேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்பு, இரவு 8.45 மணிக்கு விமானம் தரையிறங்கும்போது, தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் நின்றுகொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முகுல் ராய் கூறியதாவது: ‘எரிபொருள் குறைபாட்டால் விமானம் அரை மணி நேரம் ஆகாயத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.

மக்கள் கவிஞர் இன்குலாப் காலமானார்


தமிழக உழைக்கும் மக்களின் மகத்தான கவிஞர் இன்குலாப் இன்று (1.12.2016) இயற்கையோடு கலந்தார். உடலநலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த அவர் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்குலாப்பின் இயற்பெயர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது. மக்கள் கவிஞர் இன்குலாப்பை போலவே அவருடைய கவிதைகளும் உண்மையானவை, எளிமையானவை, சமுதாயத்திற்கானவை. கால காலங்களை கடந்து நிற்பவை. முற்போக்கு கவிஞரான இன்குலாப் கவிஞர் மட்டுமல்ல மிகச்சிறந்த நாடக ஆசிரியர். மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்ற புகழ்பெற்ற மேடைப்பாடலை எழுதியவர். சூரியனை சுமப்பவர்கள், துடி ,மீட்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர் இன்குலாப். பல்வேறு விருதுகளை கொள்கை ரீதியாக ஏற்க மறுத்த மக்கள் கவிஞருக்கு நக்கீரனின் வீர வணக்கம். மக்கள் கவிஞர் இன்குலாப் 2015ஆம் ஆண்டு மூத்த பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விருது பெற்று விழாவில் பேசிய வீடியோ.

தங்கம் யார் யார் எவ்வளவு வைத்துக்கொள்ளலாம் - மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

பொதுமக்கள் தங்க நகை வைத்துக் கொள்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் தங்கம் வைத்துக்கொள்ளலாம். திருமணம் ஆன பெண்கள் 500 கிராம் வரை மட்டுமே தங்க நகைகள் வைத்துக்கொள்ள அனுமதி. 
ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். 
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கத்தில், புதிய வருமான வரிசட்டத்தில், நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. வருமான வரி சட்டம் 1916ன் கீழ் பழைய வரிகளே தொடரும். வருமானத்துறை சோதனையின் போது, கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். முன்னர் 30 சதவீதமாக இருந்த வரி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின்படி திருமணமான பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 31.25 பவுன் நகை வைத்திருக்கலாம். ஆண்கள் 12.5 பவுன் நகை வைத்திருக்கலாம். இந்த நகைகள், கணக்கு காட்டிய பணத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது. பாரம்பரிய நகைகளுக்கும் வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நக்கீரன்,இன்

சேலம் உருக்காலையை பாஜகாவின் கருப்பு பண முதலைகள் விழுங்க துடிக்கின்றன!


சேலம் இரும்பாலை தொடர்பாக மக்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, அந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய எஃகு துறை இணையமைச்சர் பதில் தெரிவித்தார். பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி அன்று சேலம் இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த உருக்காலை வருவதற்கு மிகவும் முக்கிய காரணமானவராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்தான். அவரது பெருமுயற்சியால் தொடங்கப்பட்டு, உலகளவில் பிரபலமாகத் திகழும் இந்த உருக்காலை திட்டமிடப்பட்டே நஷ்டத்தில் இயங்கும் அளவுக்கு தள்ளப்பட்டு இன்று மத்திய, மாநில அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியதில் பாஜகவினர் கின்னஸ் சாதனை

செல்லாமல் போய்விட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு, மக்கள் தினசரி நீண்ட வரிசையில் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் நிற்கின்றனர். வாய் வயிற்றை சுருக்கிக் கொண்டு விட்டனர். இந்த விவகாரங்களில், நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஒரு பிரச்சினை மீது பல நாட்கள் பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் போராட்டங்கள், கிளர்ச்சிகளை நாடு சந்தித்து கொண்டுள்ளது.
கருப்பு பணம் மாற்றுவதில் பாஜக கட்சியினர் முன்னிலை!
புதிய நோட்டுக்கள் வரிசையில் நிற்பவர்களுக்கு ரூ.2000 கூட கிடைக்கவில்லை. நடப்பு கணக்கு வைத்து உள்ளவர்களுக்கு ரூ.10,000 கூட கிடைக்கவில்லை …
ஆனால், கடந்த நவ.27 ல், சேலம் மாநகரில் தற்செயலாக வாகன சோதனையின் போது, பாரதீய ஜனதா கட்சி இளைஞரணி பிரமுகர் JV.அருண் ரூ.20.50 இலட்சம் பணத்துடன், அதிலும் ரூ.18.50 இலட்சம் புதிய ரூ.2000 நோட்டுக்களுடன் சிக்கினார்.
அதிலும் தொடர்ந்த வரிசை எண்களுடன் அவருக்கு மட்டும் இலட்சக்கணக்கான ரூபாய் புதிய பணம் எப்படி கிடைத்தது? வெளியே சொல்ல முடியாத வழி அது!  கருப்பு பணத்திலேயே வாழ்ந்து வரும் சினிமாகாரர்கள் அத்தனை பெரும் சப்போர்ட் பன்றாய்ங்கோ ..எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றோர் வெளிநாடுகளில் புரோகிராம் செய்து வாங்கிய டாலர்கள் எல்லாம் வெள்ளையா ?

அடாவடி அறிவிப்பு :பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்


Rs 500 old notes can be used in petrol bunks until tomorrow : central govtடெல்லி : நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும் என மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 15ஆம் தேதி வரை செல்லும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது நாளை வரை மட்டுமே என மத்திய அரசு மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த மற்றும் பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. டிசம்பர் 15ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும் என இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் இதேபோல் விமான டிக்கெட்டுகளும் பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தி நாளை வரை மட்டுமே பெற முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இன்னும் பணத் தட்டுப்பாடு தீராத நிலையில், பழைய நோட்டுகளுக்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வழங்கப்பட்ட அவகாசத்தையும் அரசு தடாலடியாக, அடாவடியாக குறைத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  tamiloneindia.com

மதனின் வீட்டில் ஏராளமான பணம் சிக்கியது .. ஆவணங்கள் எரிப்பு ! ஆனாலும் இவரை பாஜக கைவிடாது?

லட்சக்கணக்கில் பணம் பதுக்கல்திருப்பூர்: வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே மாதம் 27ம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு திடீரென தலைமறைவானார். அவர், எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதாகச் சொல்லி ரூ.84 கோடி வரை வசூலித்து ஏமாற்றியது தெரியவந்தது. ஆனால் வசூல் செய்த பணத்தை எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டதாக அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
இது குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்து மதனின் நண்பர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மதன் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இந்தநிலையில், மதன் மணிப்பூரில் தலைமறைவாக இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதே நேரத்தில் மதன் மணிப்பூரில் இருந்து திருப்பூர் சென்று விட்டதாகவும், அங்கு அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்து சென்று மதனை கைது செய்தனர். பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி வெடி மருந்து தொழிற்சாலை விபத்து 20 பேர் பலி உடல்கள் உருக்குலைந்தது

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் ஆத்தூரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்த மான வெடிமருந்து தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு இரவு ஷிப்ட் முடிந்து 15 தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தனர். காலை ஷிப்ட் ஊழியர்கள் 15 பேர் தொழிற் சாலைக்குள் சென்றனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி மருந்து குடோன் வெடித்து சிதறியது.இதில் தொழிற் சாலை உருக்குலைந் தது. வெடி சத்தம் கேட்டு முருங்கப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு பார்த்தனர். வெடி மருந்து நெடியுடன் பல கி.மீ தூரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்தது. அப்போது தொழிலாளர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து ஆங்காங்கே சிதறி கிடந்தது. வெடி மருந்து வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களும் தரைமட்டமானது.

கலைஞர் காவேரி மருத்துவ மனையில் அனுமதி

திமுக தலைவர் கலைஞர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவ பரிசோதனைகள்,சிகிச்சைக்குப்பின்னர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தகவல்.;சிகிச்சைகள் தொடரவேண்டியுள்ளதால் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நக்கீரன்.இன்

டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது கட்டணமாக 1 % கழிக்கப்படும் .. இதற்குத்தானே ஆசைப்பட்ட மோசடிகுமாரா?

செல்லாக்காசு அறிவிப்பை தொடர்ந்து ..
நான் பொறுப்பு வகிக்கும் கல்வி நிறுவனத்திற்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப எனது டெபிட் கார்டை பயன்படுத்தினேன் ..!
எதேச்சையாக இன்று என் Net banking ல் பார்வையிட்ட போது 1% கணக்கில் கழிந்திருக்கிறது .
(அதையும் 10 நாட்கள் கழித்து செய்திருக்கிறார்கள். உடனே செய்திருந்தால் மூன்று முறை ஏமாந்திருக்க மாட்டேன் .
எல்லாவற்றிற்கும் மெஸேஜ் அனுப்பும் வங்கி இதற்கு அனுப்பவில்லை )
மாதத்திற்கு சுமார் 72000 ரூபாய் அளவிற்கு எரிபொருள் நிரப்ப,
நாங்கள் டெபிட் கார்ட் உபயோகித்து 720 ரூபாய் எதற்கு யாருக்கு என்று தெரியாமல் தண்டமாக இழக்க வேண்டும் என்றால் ,
ஒட்டு மொத்த மக்களும் எவ்வளவு இழக்க போகிறார்கள் ..?
இதன் மூலம் யார் பலன்பெற போகிறார்கள் ..?
பொதுமக்கள் வயிற்றில் துல்லியமாக தாக்கிவிட்டு
தேச நலனுக்கு என
"நாளுக்கொரு அண்டப்புளுகு" எவ்வளவு இழப்பு என்று கொஞ்சம் கூட தெரியாமல் கேடிக்கு கூஜா தூக்கும் முட்டாள் கிழிந்த அரை டவுசர் கூட்டங்களா..முகநூல் பதிவு

கரூர் போலிஸ் எஸ் ஐ அப்பாவிகள் வீட்டிற்குள் புகுந்து கணவன் மனைவியை தாக்கும் விடியோ



தேடி வந்த குற்றவாளியை காணவில்லை எனவே யாராவது ஒருவரை பிடித்தால் போதும் மாமுல் வாங்கலாம் அல்லவா?

லட்சுமி ராமகிருஷ்ணனின் குடும்ப கட்டை பஞ்சாயத்துக்கு ராதிகாவும் ஸ்ரீ ப்ரியாவுடன் சேர்ந்து கண்டனம்

சென்னை: டிவி சேனல்களில் நடிகைகள் நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை புத்தியில்லாதவர்கள் பார்ப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். டிவி சேனல்களில் சீனியர் நடிகைகள் தம்பதிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தமிழில் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், தெலுங்கில் கீதா, மலையாளத்தில் ஊர்வசி ஆகியோர் இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுகின்றன.  கணவன், மனைவி இடையே நடக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்க இந்த நடிகைகள் யார்? நான்கு சுவர்களுக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனையை இப்படி டிவியில் ஊர், உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்களே என பலர் சமூக வலைதளங்களில் குமுறினர்.

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான கூட்டை உடைக்கும் கூலியாக கோபாலசாமி செயல்படுகிறார்?

‘மக்கள் நலக்கூட்டணி கலகலத்துக்கொண்டு இருக்கிறது. வைகோ மீது மற்ற மூன்று கட்சித் தலைவர்களும் கடுப்பில் இருக்கிறார்கள். தமிழகத்தில் காவிரிப் பிரச்னை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில் இருந்தே வைகோவின் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அப்போதே, அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியினரோடு வைகோ முரண்பட்டார். அதன்பிறகு, இடைத் தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு மாறுபட்டார். அதன்பிறகு, விஜயகாந்தை விமர்சிப்பதிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களோடு வைகோ முற்றிலும் மாறுபட்டு நின்றார். அந்த முரண்பாடுகள் எல்லாம் பூசி மெழுகியதுபோல் இருந்தன. ஆனால், இப்போது கறுப்புப் பண விவகாரத்தில், ‘என் வழி தனி வழி’ என்ற ரீதியில் வைகோவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.”‘‘தி.மு.க.வுடன் திருமாவளவன் போய்விடுவார் என்று வைகோ நினைக்கிறாராம். தேசிய அளவில் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு போய்விடுவார்கள்.

2 மாதங்ககளுக்கு மேல் செயற்கை சுவாசம் மூலம் சுவாசித்தால் பின்பு இயற்கையாக சுவாசிக்கும் வாய்ப்பு??

விகடன் ..கழுகு : “அப்போலோ பிரதாப் ரெட்டி பேசும்போது, ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி இருக்கிறது; அவர் வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்கிறார்; அவர் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என்று  திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். கடந்த 25-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘ஜெயலலிதா நன்றாக உடல்நலம் தேறிவிட்டார். அவர் எழுந்து நடப்பதுதான் அடுத்தநிலை. மேலும், முதலமைச்சர் உணவுகளை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு TRACHEOSTOMY TUBE தேவைப்பட்ட போது மட்டுமே வைக்கப்படுகிறது. அதுபோல, செயற்கை சுவாசமும் அவ்வப்போதுதான் கொடுக்கப்படுகிறது’ என்றார். ரெட்டியின் தகவல்படி பார்த்தாலும், முதலமைச்சர் ஜெயலலிதா, இன்னும் தொண்டையில் குழாய் வைக்கப்படும் TRACHEOSTOMY மற்றும் செயற்கை சுவாசம் வைக்கும் நிலையில்தான் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ‘‘ஆமாம்!”< ‘‘இயல்பான உணவுகளை முதலமைச்சர் எடுத்துக் கொள்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதை என்ன முறையில் எடுத்துக் கொள்கிறார் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. தொண்டையில் ‘TRACHEOSTOMY TUBE’ இன்னும் இருக்கிறது. அதனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மூக்கின் வழியாக செல்லும் மற்றொரு ட்யூப் மூலம், உணவுகள் செலுத்தப் படுகின்றன.

புதன், 30 நவம்பர், 2016

அழகிரி திமுகவில் மீண்டும் சேர்வதை, பார்ப்பன சக்திகள் "ஏதோ" ஒரு காரணத்துக்காக விரும்பவில்லை

அழகிரி அவர்கள் திமுகவில் மீண்டும் சேர்வதை குறித்து உங்கள் கருத்து???
அவர் சேர்கிறாரா இல்லையா என்பது உறுதியாகாத நிலையில் என்ன சொல்வது?? இருந்தாலும்....
நேரடியாக கருத்தை சொல்வதைவிட, அறிவாசான் தந்தை பெரியாரின் கண்ணாடி கொண்டு பார்த்தால், அழகிரி திமுகவில் சேர்வதை, இந்த துக்ளக் சோ, தினமணி வைத்தி, தினமலர் ராமசுப்பு, ரிபோர்ட்டர் பார்த்தசாரதி போன்றோர் எப்படி விமர்சிக்கிறார்களோ அதற்க்கு நேர் எதிராக நமது கருத்தை எடுத்துக்கொள்ளலாம்...
உதாரணமாக, "அழகிரி மீதான இமேஜ் திமுகவை பாதிக்கும்", "அவர் வந்தால் அணிகள் உருவாகி திமுகவில் பூசல் தோன்றும்", "அவர் வருவதை ஸ்டாலின் நலம் விரும்பிகள் விரும்பவில்லை..."... இதுபோன்ற கருத்துக்களை, ஏதோ திமுக மீது கரிசனம் உள்ளதுபோல, திமுகவின் வலிமை குறையக்கூடாது என்று அக்கறை உள்ளதை போல இவர்கள் செய்திகளை வெளியிட்டால், அழகிரி திமுகவில் மீண்டும் சேர்வதை, இந்த பார்ப்பன சக்திகள் "ஏதோ" ஒரு காரணத்துக்காக விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளவேண்டும்...  முகநூல் பதிவு  prakash jp

இனிமேல் இலங்கை வியாபாரம் நடக்காது, இட்லியம்மா பணியாரமும் வேகாது ..கோபாலசாமியின் கடைசி புகலிடம் மோடி?

பாவம்யா உன் கட்சிக்காரன் எந்த நேரத்துல நீ எந்த கலருக்கு மாறுவேன்னு தெரியாம தினருறான் , கருப்பு போடுறே, சிவப்பு போடுறே, காவியை கட்டுரே தலையில் பச்சை முண்டாசை வரிஞ்சி வரிஞ்சி கட்டுறே , திடீரென்று மோடியை கட்டிப்பிடிக்கிறே அடுத்தநாள் திட்டித்தீர்க்கிறே, விஜகாந்த்தை முதலமைச்சருன்னு சொல்லுறே அப்புறமா அந்தாளை முதலமைச்சருன்னு சொன்னதாலேதான் என்னுடைய இமேஜூ போச்சுன்னு கத்துறே கதறுரே,.... தர்மருன்னு சொன்னே , அர்ஜுனருன்னு சொன்னே கடைசியா சகுனி வேஷம் போட்டு எங்களை ஏன் சாகடிக்கிறே பாவம்யா நாங்க எங்களை விட்டு்டு
பாவம்யா உன் கட்சிக்காரன் எந்த நேரத்துல நீ எந்த கலருக்கு மாறுவேன்னு தெரியாம தினருறான் , கருப்பு போடுறே, சிவப்பு போடுறே, காவியை கட்டுரே தலையில் பச்சை முண்டாசை வரிஞ்சி வரிஞ்சி கட்டுறே , திடீரென்று மோடியை கட்டிப்பிடிக்கிறே அடுத்தநாள் திட்டித்தீர்க்கிறே, விஜகாந்த்தை முதலமைச்சருன்னு சொல்லுறே அப்புறமா அந்தாளை முதலமைச்சருன்னு சொன்னதாலேதான் என்னுடைய இமேஜூ போச்சுன்னு கத்துறே கதறுரே,.... தர்மருன்னு சொன்னே , அர்ஜுனருன்னு சொன்னே கடைசியா சகுனி வேஷம் போட்டு எங்களை ஏன் சாகடிக்கிறே பாவம்யா நாங்க எங்களை விட்டு்டு.

அப்போலோ சின்னம்மா சீரியல் இன்றைய எபிசொட் ...


மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.
“தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டார்கள். பதவியேற்புக்கு முன்பும் பின்பும் நடந்தவற்றைச் சொல்கிறேன். அரவக்குறிச்சியில் ஜெயித்த முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி, எப்படியாவது சசிகலாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என, ரிசல்ட் வந்த நாளிலிருந்து தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபடியே இருந்தார். இளவரசியின் மகன் விவேக் மூலமாகத்தான் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் செந்தில்பாலாஜி.
நேற்று காலையும் வழக்கம்போல அப்பல்லோவுக்கு வந்துவிட்டார் செந்தில்பாலாஜி. அவர் வந்தபிறகு விவேக் அங்கே வந்தார். அவருக்கு வழக்கம்போல செந்தில்பாலாஜி வணக்கம் போட்டார். பதவியேற்புக்கு முன்பு, சசிகலாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி நினைத்தார். மருத்துவமனைக்கு வந்த விவேக், சசிகலாவிடம் இதுபற்றி பேசியிருக்கிறார்.