சனி, 30 ஏப்ரல், 2016

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி மீது......கலாசார காவாலிகள் வந்துட்டாய்ங்க....

“நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்! கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் தன்னுடைய முகநூலில் ஒரு புதிய படத்தைப் பகிர்கிறார். அந்தப் படத்தை முகப்பில் தந்திருக்கிறோம். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமாக உடை (தமிழ் கலாச்சார உடை எது? ரவிக்கை அணியாமல் நீளமான புடவையை உடலில் சுற்றிக் கொள்வது இப்படித்தான் பண்டைய தமிழர்கள் உடையணிந்தனர். இதுதான் இவர்கள் குறிப்பிடும் தமிழ் கலாச்சார உடையா?) அணிந்தார் என்பதற்காக கிருபாவுக்கு அறிவுரை வழங்குகிறார் ஒருவர். அவர் அறிவுரை குறித்து கேள்வி எழுப்பும் கிருபாவை அத்துமீறி எழுதுக்கிறார் இன்னொருவர்.கிருபா முனுசாமி
இன்று நான் மாற்றிய சுயவிவர படம் குறித்து என் உள்பெட்டிக்கு ஒரு தமிழ் கலாச்சார  பாதுகாவலர் அனுப்பிய செய்தி.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு திருட்டு விசீடீ....நிதானமாக காப்பி அடித்து அதிமுக தயாரிக்கும் திருட்டு தேர்தல் அறிக்கை?

விகடன்.com திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் 'பென்ஷன் ஸ்கீம்' அதிமுக கூடாரத்திலேயே வியந்து ரசிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து,  ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தேர்தல் அறிக்கையில் பல புதிய மாற்றங்களை செய்யும் வேலை கடந்த பத்து நாட்களாக  கார்டனில் சீரியசாக நடந்து வருகிறது என்கிறார்கள். பிரசாரத்துக்குப் போகிற பத்து பாய்ன்ட்டுகளில் ஐந்திலாவது,  'இந்த தேர்தலின் கதாநாயகன், திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ' என்று மறக்காமல் சொல்லி வருகிறார், மு.க.ஸ்டாலின். ஸ்டாலினின் விடாத இந்த பன்ச் அதிமுகவை மட்டுமல்ல, பாஜக போன்ற கட்சிகளையும் கிளப்பி விட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த பன்ச் டயலாக் குறித்து பல இடங்களில் பாஜகவின் தமிழிசை, விடாமல் கவுன்ட்டர் கொடுத்து வருகிறார். விலையில்லா டிக்கெட் மட்டும் அல்ல விலை இல்லா  திரை அரங்குகளே வழங்கப்படும்

5 கலெக்டர்கள், இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்...ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும்

விகடன்.com திருவாரூர் மாவட்ட கலெக்டர் உள்பட ஐந்து மாவட்ட கலெக்டர்கள், இரண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை பணியிடை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கலெக்டர்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், பல மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்தது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் இன்று எடுத்துள்ளது. 5 மாவட்ட கலெக்டர்கள், இரண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

மே முதல் வாரம் அ.தி.மு.க., அதிரடி?

என்னாடீ இது... அவிய்ங்கவிய்ங்க, அதக் குடுக்குறேன்... இதக் குடுக்குறேன்னு பொளந்து கட்டுறாய்ங்க... இந்தம்மா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாங்க... பிரசாரத்துல பேசினாப்ல ஆயிடிச்சா... அறிக்கையைக் காணோம்...' மதுரை மேலமாசி வீதியில் நேற்று, பூக்காரம்மா ஒருத்தங்க கேட்ட கேள்வி இது.
நியாயமான கேள்வியாகவே தெரிஞ்சிச்சு. ஏன் இவ்வளவு ரகசியம் காக்குறாங்க... என்ன விஷயம்...' என, நம் மண்டை சூடு பிடித்து சிந்திப்பதற்குள், 'எலக்சனுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யிறப்பவே, அந்தம்மாவுக்கு கோவம் வந்திருச்சு... அதுல ஆரம்பிச்ச கொழப்பம் இன்னும் தீரல போலிருக்கு டீ... பேசாம இரு... தேர்தலுக்குள்ளாற வரும்... மிக்சி வேணாம்... டாஸ்மாக் சரக்கைத் தவிர மற்ற எதையும் இலவசமாகக் கொடுக்க ஆத்தா ரெடிதான்.......

அதிமுக - திமுகவுக்கு மாற்று யார்?


1. அதிமுக - திமுகவுக்கு மாற்று கட்சிகள் தமிழகத்தில் கிடையாது 65.9
2. தேமுதிக - ம.ந.கூ. தலைமையில் ஆட்சியமைக்கும் சாத்தியம் 16.81
3. பாமக தலைமையில் 11.53
4. பாஜக தலைமையில் 2.5
5. நாம் தமிழர் கட்சி 3.0
 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளைத் தவிர தமிழகத்தின் பிற கட்சிகள், இயக்கங்களில் ஆட்சியமைக்கும் அளவிற்கு திறமையும், வாய்ப்பும் உள்ளதாக எதுவும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.

ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் இருக்கிறார்...வதந்தி ! உண்மையா? ....தெரிஞ்சு இன்னா ஆவபோவுது?

photoதமிழ்நாட்டில் எத்தனையோ சாதனை படைத்த நடிகர்கள் காலமானார்கள் அவர்கள் யாருக்கும் இங்கே சிலை வைக்க வில்லை உலகமகா நடிகர் டாக்டர் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் சிலையையே இந்த அரசு அகற்ற துடிக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஆந்திராவிலேயே மூன்றாம்கடை நடிகரான
சோபன்பாபுக்கு தமிழகத்தில் சிலை வைக்கபட்டுள்ளது இவர் தமிழகதிற்கு செய்த சாதனை என்ன அல்லது தமிழக மக்களுக்கு இவர் செய்த உதவி என்ன?
இவரின் ஒரே தகுதி ஜெயலலிதாவின் காதல் கணவன் என்பதுதான்
இந்த விசயதை தற்போது
மறைக்கும் ஜெயலலிதா சோபன்பாபு மூலமாக ஓர் மகள் உள்ளதையும் தற்போது மறைத்து வருகிறார்
ஆனால் அவருக்கு சிலை வைத்து அந்த சிலை எப்போதும் பளபளப்பாக இருக்க ஆட்கள் நியமிக்கபட்டுள்ளது தமிழ்நாட்டில் அவரது சிலைபோல் வேறு எந்த சிலையாவது பராமரிக்க படுகிறதா? .     livetrendingnow.com/trendingnews/News/541   அதெல்லாம் சரி அப்படி இருந்தா இருந்துவிட்டு போகட்டுமே? அது அவரின் பெர்சனல் விடயம் அதை போட்டு விவாதிப்பது பண்பல்ல

பரதேசி,லூசு,உயிர்கொல்லி...இளங்கோவன்,விஜயகாந்த், சீமான்....அட இதுவுல கூட வைகோ இல்லைங்க. தேர்தல் காமெடி ட்ராக்

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பரதேசி என்று பொருள் படுமாறு பேட்டியளித்ததோடு, மக்கள் நல கூட்டணியை சாவு ஊர்வலத்துக்கு ஒப்பிட்டு பேசினார் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவ்வப்போது பிறரது மனம் புண்படும்படியான கருத்துக்களை பேசி சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். இதை அவர் தெரியாமல் செய்கிறாரா, அல்லது செய்திகளில் தனது பெயரும், கட்சி பெயரும் இருக்க வேண்டும் என்று நினைத்து விரும்பி செய்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதேநேரம், அவரது கருத்துக்கள் மிக மோசமானவை என்பதில் நடுநிலையாளர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு பிரதமர் மோடி, சென்று சந்தித்தபோது, தனிமையில் அவர்கள் தப்பு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று மோசமான ஒரு கருத்தை வாய் கூசாமல் கூறியவர் இளங்கோவன். இதற்காக தமிழகம் முழுக்க பெரும் போராட்டங்களை அதிமுகவினர் நடத்தினர். ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

தாராபுரத்தில் பெண் போலீஸ் காயத்திரி தற்கொலை: டி.எஸ்.பி. செரீனா பேகம் மீது பரபரப்பு புகார்

தாராபுரம்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காயத்ரி(வயது 30). இவர்களுக்கு கார்த்திக்(8), பிரகதீஷ்(4) என்ற 2 மகன்கள் உள்ளனர். காயத்ரி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் போலீஸ்காரராக வேலைபார்த்து வந்தார். இவர் தாராபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். விடுமுறை கிடைக்கும் போது ஊருக்கு சென்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் டி.எஸ்.பி. ஜெரீனாபேகத்தின் உதவியாளராக பணி அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் நேற்று டி.எஸ்.பி. ஜெரீனாபேகத்துடன் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு இரவு காயத்ரி வீடு திரும்பினார்.

கலைஞர் சோனியா தீவுத்திடலில் மே 5 ஆம் தேதி பிரசாரம்....கூட்டணி தலைவர்களும்.....வேட்பாளர்கள் அறிமுகம்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் பங்கேற்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. சோனியா காந்தி உரையாற்றவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

வைகோவை நம்பி வந்த விஜயகாந்த்...தேரை இழுத்து வந்து தெருவீதியில் விட்ட வைகோ?

விஜயகாந்த் ஆலோசனை புறக்கணிப்பு வைகோ மீது தே.மு.தி.க.,வினர் கடுப்பு விஜயகாந்த் ஆலோசனையை ஏற்று, தேர்தலில் போட்டியிடும் முடிவை, வைகோ எடுக்காதது, தே.மு.தி.க.,வினர் மத்தி யில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நல கூட்டணி யில், தே.மு.தி.க., இடம்பெற மூல காரணம், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ. இதனால், தி.மு.க., கூட்டணியை விரும்பிய அக்கட்சியினர், வைகோ மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ளனர். சாத்துார் தொகுதி: இந்நிலையில், கோவில் பட்டி தொகுதியில் போட்டியிடாமல் கடைசி நேரத்தில் வைகோ ஒதுங்கினார். வைகோவின் இந்த முடிவால், கூட்டணி யின் செல்வாக்கு சரியும் என விஜயகாந்த் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கருதினர்.  சு.சாமியின் சொல்கேட்டு(பிரேமலதா) ஒரு அரசியல் ஜெயலலிதாவின் சொல்கேட்டு (வைகோ)ஒரு அரசியல்..நாட்டு மக்களின் சொல் மட்டும் கேட்கவே மாட்டாங்க

தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்.....பெயரோடு ஜாதியை சேர்த்துகொள்ளும் பழக்கத்தை மீண்டும் உருவாக்குகிறார்

Arun Mo  அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதப் படங்கள் வேரூன்றக் காரணமாக இருந்து வருகிறது. போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே போன்றே, அவரின் அடுத்தப் படமான சபாஷ் நாயுடுவும் ஏதோ நாயுடுகளின் பெருமையை பேசுவது போலவே இருக்கிறது. அது கமலின் நோக்கம் இல்லை என்றால், ஏன் அத்தகைய தலைப்பை தெரிவு செய்ய வேண்டும். பெரியாரின் பிள்ளையாக தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்த பகுத்தறிவாளனுக்கு பெரியார் மூலம் தமிழகத்தில் விளைந்த இந்த சாதி செருக்கை பறைசாற்றும், பெயருக்குப் பின்னே சாதியை எழுதும் வழக்கத்தை ஏன் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.

மதமாற்றத்தால் தலித்துகள் பலவீனப்படுகிறார்கள்....!' -கொந்தளித்த திருமா

விகடன்.com ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறும் தலித்துகளால் எண்ணிக்கைதான் குறைகிறது. அதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை' என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவனின் கருத்து, அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர், பெளத்த மதத்திற்கு மாறிய அறுபதாம் ஆண்டின் தொடக்கம் இது.
இந்த சிறப்பு நாளைப் பற்றிப் பேட்டியளித்த திருமாவளவன், " அம்பேத்கர் மதம் மாறிய அறுபதாம் ஆண்டு இது. தலித்துகள் மதம் மாறுவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறுபான்மை சமூகக் குழுக்களாக அவர்கள் துண்டாடப்படுகிறார்கள். இதை நாங்கள் விரும்பவில்லை. சாதி மறுப்பு என்பது அம்பேத்கரின் முக்கியமான லட்சியம். தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து தப்பிக்க, சாதி மறுப்பு மிக முக்கியமானதுதான். ஆனால், இது மட்டுமே போதுமானதாக இல்லை.

சபாஷ் நாயுடு’ – டைட்டில் ஜாதி பெயர்தான்! – ஆனா ஏன் வைச்சேன் தெரியுமா?” = கமல் விளக்கம்

ka 3ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல், ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார் கள். இப்படத்திற்கு தலைப்பு ‘சபாஷ் நாயுடு’ என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார். நாயுடுஜாதி  மக்களின்  ஆதரவு  அதிலும் ஒட்டு மொத்த தெலுங்கு பேசும் மக்களின் ஆதரவு...அதாவது  வசூல் வசூல் வசூல் ...வேற ஒரு புண்ணாக்கும் இல்லை 

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

திருமாவளவன்...தொலை நோக்கு கொண்ட சிறந்த தலைவர்...இந்து பத்திரிக்கை அலசல்

திருமாவளவன் பேட்டியின் முழுத் தொகுப்பு. தமிழ் இதழியலை அடுத்தடுத்த புள்ளிகளை நோக்கி நகர்த்தும் முயற்சியில் ‘தி இந்து’ எடுத்துவைத்திருக்கும் முக்கியமான புள்ளிகளில் ஒன்றாக இந்த நேர்காணலைப் பார்க்கிறேன். இதுவரை 5 நாட்களுக்கு நீளமாக இப்படி ஒரு விரிவான பேட்டி இந்திய நாளிதழ்கள் எதிலும் வெளியானது இல்லை. சாத்தியமாக்கியவர் ஆசிரியர் அசோகன். தனிப்பட்ட வகையிலும் சந்தோஷம் தந்த நேர்காணல்.தமிழகத்தில் தொலைநோக்குள்ள மிகச் சில தலைவர்களில் ஒருவராகத் தெரிகிறார் திருமா. தமிழக அரசியல் களம் தேர்தல் வெப்பத்தில் தகிக்கும் சூழலில், திருமாவளவன் ஓடிக்கொண்டிருக்கிறார். இது கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே எடுத்த நேர்காணல். ஆறு வெவ்வேறு நாட்களில் மணிக் கணக்கில் நீண்ட நேர்காணல். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காத்திரமான தலித் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன் எல்லாக் கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டார்.

தமிழகத்தில் 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 7627 பேர் - தேர்தல் ஆணையம் தகவல்

Chennai: Tamil Nadu has a very good number of super-senior citizens, as chief electoral officer Rajesh Lakhoni revealed today that 7627 electors in the state have crossed 100 years. Speaking to reporters in Chennai, he said that, Vellore district stood first in housing maximum numbers of voters who are above 100, as 597 electors there are over 100-year-old.
தமிழகத்தில் 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 7627 பேர் உள்ளனர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.100 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற கணக்கு விபரம் இதுவரை தெரிந்தது இல்லை. முதன்முறையாக வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதால் இத்தகவல் தெரியவந்துள்ளது.

லைக்கா சுபாஷ்கரன் ஒரு கோடி கொடுத்தார்.....நடிகர் சங்க கட்டிட நிதிக்காகவாம்

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். இப்படத்திற்கு தலைப்பு 'சபாஷ் நாயுடு' என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பர்கூர் .ஆட்டோ அரசு பேருந்து மோதல் 6 பேர் பலி

பர்கூர் அருகே ஷேர் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்துபர்கூர் அருகே ஷேர் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஜெகதேவி நோக்கி நேற்று இரவு ஷேர்ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை, ஜெகதேவியைச் சேர்ந்த ஓட்டுநர் பிரகாஷ்(50) ஓட்டிச் சென்றார். ஆட்டோவில் 11 பயணிகள் இருந்தனர்.

தொலைகாட்சி விவாதத்தில் அமைச்சருக்கு சரமாரி தாக்குதல் கேரளவில்..... Minister Shibu Baby John Attacked During TV Debate


கேரள மாநிலத்தில் மே 16-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கொல்லம் அருகே உள்ள சவரா தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் விவாத நிகழ்ச்சி ஒன்றை ஒரு தொலைக்காட்சி சேனல் ஏற்பாடு செய்தது. இதில் காங்கிரஸ் கூட்டணியின் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி வேட்பாளரும், கேரள தொழிலாளர் துறை மந்திரியுமான சிபு பாபுஜான், இடதுசாரி வேட்பாளர் விஜயன் பிள்ளை உள்பட சிலர் கலந்து கொண்டனர். அப்போது குடிநீர் பற்றாக்குறை பற்றி விவாதம் நடந்தபோது, அதற்கு மந்திரி சிபு பாபுஜான் அளித்த பதிலால் ஆத்திரமடைந்த சிலர் கற்களையும், நாற்காலிகளையும் தூக்கி வீசினார்கள்.

சீமான் : உதயசூரியன், இரட்டை இலைகளுக்கு வாக்களித்தால் கையில் குஷ்டம் வந்துவிடும்....விஞ்ஞானி சொன்னா சரிதாய்ன்.. .

விகடன்.com உதய சூரியன் மற்றும் இரட்டை இலையில் வாக்களித்தால் அவர்கள் கையில் குஷ்டம் வந்துவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.  தனது பிரசாரத்தை பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி பல இடங்களில் பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் சீமானை ஆதரித்து சீமான் பேசுகையில், தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஒவ்வொரு இடங்களிலும் ஏய்கப்படுகின்றனர். குடிக்கும் பாலில் கூட வெளிநாட்டு ரகமாடுகளின் பால் என்று சொல்லி ஆசைகாட்டி நாட்டில் சர்க்கரை நோய்களை இழுத்துவிட்டனர். அதற்கு பிறகு அவர்களிடம் இருந்தே சர்க்கரை நோய்க்காக மருந்துகளையும் இறக்குமதி செய்கின்றனர். இப்படி கமிஷன் காசிற்காக ஊழல் செய்து நாட்டை குட்டி சுவராக மாற்றிவிட்டனர் இந்த புரோக்கர் ஆட்சியாளர்கள்.

சிறிய டி.வி.யை கொடுத்து கருணாநிதி ஏமாற்றிவிட்டார்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

விழுப்புரம்: கடந்த 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி சிறிய டிவியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார். அதே நேரத்தில் தனது குடும்பத்தினர் வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறந்துவிட்டார் என ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 13 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 1.28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.  ஆமாங்க  அவரு சைசுக்குதான் கொடுத்திருக்காரு

கரூர் டாஸ்மாக்கில் மூவர் பலி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

karur-tasmac-protest-13ரூரில் டாஸ்மாக் பாரில் சாராயத்தை குடித்த திருப்பூரைச் சேர்ந்த துரைசாமி அங்கேயே இறந்துகிடந்தார். மேலும் ஈரோட்டைச் சேர்ந்த கணேசன், பொன்னமராவதியைச் சேர்ந்த கருப்பையா ஆகியோர் டாஸ்மாக் பாரில் சாராயத்தை குடித்துவிட்டு வெளியில் வந்து துடிதுடித்து செத்துக் கிடந்தனர். தமிழகத்தில் நடைபெறும் ஜெயலலிதாவின் சாராய ஆட்சியினால் தினமும் அப்பாவி மக்கள் தங்கள் உயிரை பலி கொடுக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். இதனை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
குடிபோதையால் தமிழ் சமூகமே சீரழிக்கப்பட்டு, பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் எனக் குடிப்பது அதிகரித்துள்ளது. ஒரு கோடிபேர் குடி நோயாளியாக உள்ளனர். லட்சக்கணக்கான பெண்கள் வாழ்க்கையை இழந்து விதவையாக உள்ளனர்.

விஜயகாந்த் பேச வேண்டாம்: சொந்த கட்சியினரே கோரிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் போட்டியிடும் தொகுதியான உளுந்தூர்பேட்டையில் பேசாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அவரது கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கு முன்பு வரை நன்றாக பேசி வந்த விஜயகாந்த் தற்போது மிகவும் மோசமாக சொதப்பி வருகிறார். தொண்டர்களிடம் கோபப்படுவது, ஒருமையில் திட்டுவது, சொம்பைகளா, வெளிய போங்கட, அடிச்சி தூக்கி எறியுங்க அவன போன்ற வார்த்தைகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார்.

ராமதாஸ்: முழு கிரானைட் மலையையே ஜெயலலிதா மறைத்துள்ளார்

கிரானைட் கொள்ளை விவகாரத்தில், ஜெயலலிதா கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்களையும் கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மதுரையில் முழு கிரானைட் மலையையே மறைக்க முயன்றிருக்கிறார் ஜெயலலிதா.கிரானைட் ஊழலை மூடி மறைக்கத் துடிக்கும் ஜெயலலிதா, அந்த ஊழலில் தமது அரசு நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியிருகிறார்.
அவரது இந்த மலையளவு பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள்.மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,‘‘ முந்தைய திமுக ஆட்சியில் தான் அதிக அளவில் கிரானைட் கொள்ளை நடைபெற்றது. கிரானைட் கொள்ளை குறித்த சட்ட ஆணையர் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று கூறியிருக்கிறார்.ஜெயலலிதாவின் இந்த கருத்தில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் நிறைந்திருக்கிறது.

ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆதர்ஷ். | படம்: பிரசாந்த் நக்வி.
ஆதர்ஷ். | படம்: பிரசாந்த் நக்வி. மும்பையில் கட்டப்பட்டுள்ள ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியத்தினால் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட 31 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்த 12 வாரங்கள் அவகாசம் கேட்டது ஆதர்ஷ் கூட்டுறவு, இதனை உயர் நீதிமன்றம் ஏற்று கால அவகாசம் அளித்துள்ளது.

ஜெயேந்திரர் உட்பட 9 பேரும் விடுதலை..ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில்

Kanchi Jayendra others acquitted in auditor assault case
சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 செப்டம்பர் 20-ம் தேதி வீட்டில் இருந்தபோது ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார். அரிவாளால் வெட்டியதில் அவர், மனைவி, வேலைக்காரர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது குற்றம்சாட்டி, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை ராதாகிருஷ்ணன் அனுப்புவதாக நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது. எனவே, இந்த தாக்குதல் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்ரமணியம், அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், சுந்தர் என்ற மீனாட்சி சுந்தரம், ஆனந்த் என்ற ஆனந்தகுமார், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், சின்னகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேன்முறையீடு செய்யபோவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியிருக்கிறார்கள். ..ரொம்ப சிரிக்க வேண்டாம் சாமிகளே 

சமத்துவ சரத்குமாரிடம் 10 கார்கள்...பத்திமினி முதல் ஆடி வரை...

தூத்துக்குடி: திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.சரத்குமார் தன்னிடம் பிரிமியர் பத்மினி முதல் ஆடி வரையிலான 10 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ.8.72 கோடியில் அசையும் சொத்தும், ராதிகாவிடம் ரூ. 9.22 கோடியில் அசையும் சொத்தும் உள்ளதாக தனது வேட்புமனுவில் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷின் "என்னுள் ஆயிரம்"....படிப்பினையாம்

மகனை வைத்து சொந்தமாக எடுத்த படம் தோல்வி அடைந்துவிட்டது என்று நடிகர் டெல்லி கணேஷ் புலம்பியிருக்கிறார். தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல், குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் டெல்லி கனேஷ். அவர் தன்னுடைய மகன் மகாவை கதாநாயகனாக வைத்து ‘என்னுள் ஆயிரம்’ என்ற திரைப்படத்தை எடுத்தார். ஆனால், அந்த படம் வியாபார ரீதியாக வெற்றியடையவில்லை. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி கணேஷ் பேசி வெளியிட்டதாக ஒரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதில் பேசும் அவர் “ தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் படங்களுக்கு ஒரு காட்சி கொடுப்பதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுக்கிறார்கள். மற்ற மொழிகளான இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில கார்ட்டூன் படங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழ் படங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை

தொகுதி மாறி போகாதீங்க': கட்சியினருக்கு ஜெ., கடிதம்

சென்னை:'கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பணியாற்றுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும்' என, முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்:
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, ஒவ்வொரு நாளும் சந்தித்து, அனைவரும் பயன்பெறும் வகையில், செய்யப்பட்டிருக்கும் நற்செயல்களை விளக்கிக் கூற வேண்டும்.இப்பணிகளை நிறைவேற்ற, தொகுதிக் குழு பொறுப்பாளர்களும், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும், அவரவர் சார்ந்த சட்டசபை தொகுதிகளில் பணியாற்றுவது மிகவும் அவசியம்.

வியாழன், 28 ஏப்ரல், 2016

சென்ற தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த மேதாவிகளின் இன்றைய கணிப்புக்கள்.....அதிர்ச்சி? யாருக்கு?

விகடன்.com யாருக்கு எத்தனை தொகுதிகள்? கணிப்புக் கில்லாடிகள் - தேர்தல் ரிசல்ட்வீ.கே.ரமேஷ், ச.ஜெ.ரவி, மாணிக்கவாசகம், நா.சிபிச்சக்கரவர்த்தி, ஏ.ராம் படங்கள்: கே.குணசீலன், எம்.விஜயகுமார், ரமேஷ் கந்தசாமி, பா.காளிமுத்து ஓவியங்கள்: ராஜா
 
தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கணிப்பதில் விகடன் வாசகர்கள் கில்லாடிகள். அனுதாப அலை, எதிர்ப்பு அலை என எந்த அலை அடித்தாலும் ஒவ்வொரு தேர்தலின் முடிவுகளையும் வாக்குப்பதிவுக்கு முன்னரே கச்சிதமாகக் கணித்துப் பரிசுகளை வென்ற விகடன் வாசகர்களின், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கணிப்பு என்ன?2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ‘அ.தி.மு.க-தான் ஆட்சியைப் பிடிக்கும்' என, தொகுதிகள், வெற்றி - தோல்வி, வாக்கு வித்தியாசம் எல்லாம் துல்லியமாகக் கணித்து முதல் பரிசு வென்றவர், திருவள்ளூர் மாவட்டம் புங்காத்தூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி. அப்போது ப்ளஸ் 1 மாணவியான இவர், இப்போது பி.எஸ்ஸி., நர்ஸிங் நான்காம் ஆண்டு படிக்கிறார்.

திமுகவுக்கு பலமான சம்மட்டி அடி கொடுங்கள்...அடிமைகள் அறிமுக விழாவில் இதய தெய்வம்.....

உங்கள் ஓட்டுகளை பெற கொள்ளை கூட்டம் வரும். அவர்களுக்கு நீங்கள் பலமான சம்மட்டி அடி கொடுங்கள். அப்போது தான் அந்த கொள்ளை கூட்டத்தை நிரந்தரமாக அழிக்க முடியும்.
பெரியாறு அணையில் 152 அடி தேக்குவது உறுதி: மதுரையில் ஜெயலலிதா சபதம்< மதுரை: ''முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்க அளவை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மதுரையில் நடந்த அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.
மதுரை பாண்டிகோயில் ரிங்ரோட்டில் அவர் பேசியதாவது:மக்கள் நலன் கருதி திட்டங்களை செயல்படுத்துகிறது அ.தி.மு.க., அரசு. ஆனால் குடும்ப நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுபவர் கருணாநிதி. முல்லை பெரியாறு அணை முழு நீர்த்தேக்க அளவான 152 அடியில் இருந்து தற்காலிகமாக 136 அடிக்கு குறைக்கப்பட்ட பின், மீண்டும் அதை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று முழு மூச்சுடன் செயல்படுவது

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி..உள்ளேயும் வெளியேயும் எதிரிகள்..

இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் பெற்ற பெண் அதிகாரி வந்திதா பாண்டே. பூர்வீகம் உத்தரப்பிரதேசம் அலகாபாத். தமிழக கேடரில் 2010ம் வருட ஐ.பி.எஸ். பேட்ஜ். கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி, மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர். காக்கிகளிடம் ரொம்ப கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்தவர்.
 "அதிரடியில் ஈடுபட்டாலே, தன்னை டிரான்ஸ்பர் செய்துவிடுவார்களோ?" என்பதற்காக தவறுக்கு துணைபோகும் காக்கிகள் மத்தியில், 'இந்தியாவில் எங்கே இடமாற்றம் கொடுத்தாலும் கவலைப்படேன்' என்று நேர்மை தவறாமல் பணியாற்றி வருபவர் வந்திதா.

விகடன்:அன்றே தப்பித்த அன்புநாதன்... பாஸ்போர்ட்டை முடக்க இப்போது ஏற்பாடாம்?!

ஆன்மிக உள்ளங்கள் தங்களின் ஆக்கினையை குளிர்வித்துக் கொள்ள தேடிவரும் அய்யர்மலைதான் கரூர் மாவட்டத்தின் அடையாளம். கடந்த சில நாட்களாக, 'அன்புநாதன்  ஊராம்பா இது...' என்று கரூர் பக்கம் சுற்றுலா போகிறவர்கள் அடையாளப்படுத்திச் சொல்லும் அளவுக்கு அன்புநாதன் என்ற பெயர் பிரசித்தமாகி விட்டிருக்கிறது.
தேர்தல் பிரசாரப் பயணத்தின் போது, திமுக தலைவர் கருணாநிதி, ' அன்புநாதனோ, அன்பு இல்லாத நாதனோ கைப்பற்றிய பணம் எவ்வளவு என்று மக்களுக்கு சொல்லுங்கள்' என்றதோடு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும்  கோரிக்கை விடுத்தார். ஆளுங் கட்சியான அதிமுகவுக்கு எதிராக நிற்கும் அத்தனை கட்சிகளுமே சிபிஐ விசாரணையைக் கோரியுள்ளன.

வெய்யில்....பகலில் சமைக்கவேண்டாம்..நிதீஷ்குமார் வேண்டுகோள்

பாட்னா : கடுமையான கோடை வெப்பம் காரணமாக பீகாரில் ஏற்பட்டு வரும் தீ விபத்துக்களை தடுக்க காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சமையல், பூஜை போன்ற தீயை பயன்படுத்தும் செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டாம் என பீகார் அரசு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.பீகாரில் வெயிலால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக பாட்னா, நாலந்தா, போஜ்பூர், ரோக்தாஸ், புக்ஷர், பாபுயா போன்ற பல்வேறு இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக காலை 9 மணி முதல் 6 மணி வரை சமையல், பூஜை போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என மக்களை அறிவுறுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். சமையல், பூஜை போன்றவற்றை காலை 9 மணிக்கு முன்னரே முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஏன் வெடித்தது ? சொத்து குவிப்பு ரிலீஸ் +அதிக சீட்+ இந்து வாக்குவங்கி பறிப்பு...

""தேசியக் கட்சியான பா.ஜ.க.வில் என்ன வியூகங்கள் இருக்கு?'' ""வியூகத்தைவிட கோபம்தான் அதிகமா இருக்குது. பா.ஜ.க.வின் ஒட்டுமொத்த கோபமும் இப்ப அ.தி.மு.க. பக்கம்தான் குவிஞ்சிருக்கு. கூட்டணி ஆசையில் டெல்லித் தலைமை எவ்வளவோ இறங்கிவந்தும், கார்டன் அசைஞ்சி கொடுக்காததில் அவங்களுக்குக் கடுப்பான கடுப்பாம். சொத்துக்குவிப்பு வழக்கைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், பிரதமரே கார்டனைத் தேடிப்போய் கை குலுக்கினாரு. சட்ட மந்திரியான அருண்ஜெட்லியும், விமர்சனங்களைப் பத்திக்கூட யோசிக்காமல் கார்டன்ல விருந்து சாப்பிட்டுட்டு வந்தாரு. அப்படி இருந்தும் 234-லும் இரட்டை இலைதான்னு கார்டன் பிடிவாதமா இருந்ததை தாமரைத் தலைமை ரசிக்கலை. ஏன் இப்படி பிடிவாதமா இருக்காங்கன்னு தமிழகத் தரப்பில் டெல்லி விசாரிச்சிது. இரண்டு நரிகள் ஒற்றுமையா இருப்பது கஷ்டம்தான்

கோவில்பட்டியில் வைகோ போட்டியிடமாட்டார் என்பது மதிமுககாரர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம்

நக்கீரன்:  ஹலோ தலைவரே, பதவியைத் தக்கவச்சே ஆகணும்ன்னு நினைக்கிற இந்நாள் முதல்வர் ஜெ.வும், அடுத்த முதல்வராகணும்னு களமிறங்கியுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரும், ஒரேநாள்ல அவங்கவங்க தொகுதிகள்ல வேட்புமனுவைத் தாக்கல் பண்ணியதைப் பார்த்தீங்களா?''’ ""பார்த்தேன். சொத்துக் கணக்கையும் சுவாரஸ்யமாக் கொடுத்திருக்காங்களே?''’ ""ஆமா, போயஸ்கார்டனில் இருந்து ஆர்.கே.நகர் வரை, வழிநெடுக ர.ர.க்களின் அமர்க்களமான வரவேற்புகளை ஏற்றபடியே போய், வேட்பு மனுவைத் தாக்கல் பண்ணினாரு ஜெ. இதேபோல், திருவாரூருக்குப் போன கலைஞர், சன்ன தித் தெருவில் இருக்கும் தனது அக்கா வீட்டில் இருந்து கிளம்பி, அடுத்த தெருவில் இருக்கும் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தன் வேட்பு மனுவைத் தாக்கல் பண்ணினாரு. அப்ப, ஏராளமான மக்கள் திரண்டு வந்து கலைஞரை உற்சாகப்படுத்தினாங்க.

அதிமுக : 4,000 கோடிக்கு பட்ஜெட் போட்டு தேர்தலை சந்திக் கிறோம்... 5 கோடி மட்டும்தான் அன்புநாதன் மூலம் சிக்கியிருக்கிறது

சிக்கிய அன்புநாதன் சாதாரண ஆள் இல்லை. ஓ.பி., நத்தம், வைத்திலிங்கம், எடப்பாடி, பழனியப்பன் ஆகிய மந்திரிகளும், ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம், ராமானுஜம், திரிபாதி போன்ற அதிகாரிகளும் சேர்ந்து உருவாக்கிய நபர். சசிகலாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு கார்டனுக்கு வரும் பணத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதிலும், சசிகலாவின் கண்காணிப்பு இல்லாமல் புதிய திட்டங்களுக்கும் காண்ட்ராக்ட்டுகளுக்கும் ஓ.கே. வாங்கும் அதிகாரம் பெற்ற இந்த மந்திரிகள், அதிகாரிகள் கும்பல் ஜெ. கைதாகி சிறைக்குப் போனபோது வேகம் பெற்றது. ;
சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பிறகு ஜெ. தன் உடல்நிலை காரணமாக இந்த மந்திரிகள், அதிகாரி களை நம்பி மட்டுமே  செயல்பட வேண்டி வந்தது. கடைசி இரண்டு வருட காலம் இந்தக் கும்பல் புகுந்து விளையாடியது. எதையும் முறையாக கார்டனுக்குச் சேர்க்காமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை எடுத்து அதில், பணக்கட்டுகளை அடுக்கி பாதுகாத்து வந்தது. அந்தச் சமயத்தில்தான் அன்புநாதன் நத்தம்விஸ்வநாதனுக்கு அறிமுகமாகிறார்..இந்தக் கும்பல் அன்புநாதனுக்குக் கொடுத்த முதல் அசைன்மென்ட்டே பணத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான்.


மருத்துவ நுழைவு தேர்வு...கலைஞர் உச்சநீதிமன்றத்துக்கு கோரிக்கை :தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும்.

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், இந்த ஆண்டே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டு, அதனை ஒட்டி கடந்த பல ஆண்டுகளாகவே நுழைவுத் தேர்வு இல்லாமலேயே பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தின் காரணமாக கிராமப்புற மாணவ மாணவியரும், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியரும் பெரும் அளவுக்குப் பலன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தமிழக மாணவ மாணவியரிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தமிழகத்தைப் பொறுத்த வரையிலாவது நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாகப் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதி பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

BBC: இந்தியாவில் பாலியல் குற்றவாளிகளின் முழு விவரங்களையும் வெளியிட முடிவு

பாலியல் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவுப்பட்டியலாக வெளியிடுவதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது தேசிய அளவிலான இந்த பதிவுப்பட்டியல் ஆவணத்தில் பாலியல் வல்லுறவு, பலாத்காரம், மறைந்திருந்து பார்ப்பது, பின்னால் சென்று தொல்லை கொடுப்பது உள்ளிட்ட எல்லாவிதமான பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களின் புகைப்படம், பெயர், முகவரி அனைத்தும் இடம்பெறும். இந்த குற்றங்களில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்ட பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களின் விவரங்களும் கூட இதில் இடம்பெறும்.
இதற்கான செயற்திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

25,000 கோடி கொள்ளை ..அதிக விலை கொடுத்து மின்சாரம்....கமிஷன் எவ்வளவு?

நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி பதிவாகி இருந்தது. இந்த வழக்கின் பின்புலம் என்ன? சூரிய மின்சக்தி விவகாரத்தில் மின் துறையில் நடந்தது என்ன? மின் திட்டம்: கடந்த 2014 செப்டம்பரில் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி தனியார் முதலீட்டாளர்கள் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க முன்வந்தால் அவர்களிடம் இருந்து ஒரு யூனிட்டுக்கு 7.01 ரூபாய் என்ற விலைக்கு மின்சாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின்வாரியம் கொள்முதல் செய்யும்.    அட, நம்ம மோடியின் ஆப்த நண்பர் அடானியிடம் கேட்டால் யாரிடம் கொடுத்தார்கள் என்ற விவரம் கிடைக்குமே.. அவருக்காகத் தானே எல்லா தில்லாலங்கடியும் அரங்கேறியது. இந்த "அதிரடி" செய்தி நாத்தத்துக்கு வைத்த ஆப்பா, இல்லை அடானிக்கு வைத்த ஆப்பான்னு தெரியல்லை.

சந்திரலேகா IAS மீதான அசிட் வீச்சு வழக்கு மீண்டும் விசாரணைக்கு? ஜெயலலிதா இனியும் எஸ்கேப்பாக முடியுமா?

படம் சொல்லும் பாடம்........ சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் - ‪#‎ஸ்பிக்‬ என்ற நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகள், தமிழக அரசு நிறுவனமான, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வசம் இருந்தது (டிட்கோ). ஸ்பிக் நிறுவனத்தின் நிறுவனர்களான, ஏ.சி முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் ஆகியோர், அரசு வசம் இருந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று கடும் முயற்சிகள் எடுத்தனர்.
அரசும் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பனை செய்வத என்பதில் கடும் சிக்கல் நீடித்தது. ‪#‎டிட்கோ‬ நிறுவனத்தின் தலைவராக சந்திரலேகா ஐஏஎஸ் இருந்தார். அப்போது தொழில் துறை செயலராக பி.சி.சிரியாக் இருந்தார். விற்பனை நடந்த அன்று சந்தை விலைக்கு விற்றிருந்தால், அரசின் பங்குகளுக்கு 40 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.

சென்னை..3 பேரை விஷ ஊசி போட்டு கொன்ற ரியல் எஸ்டேட் அதிபர் ....லஞ்சம் கொடுத்து இயற்கை மரணம் என........

When the Neelankarai police began a probe into a burglary complaint from a 41-year-old real estate businessman, little did they think that they would have to reopen three death cases which were months ago closed as mere cases of unnatural death.
சென்னை: திருவான்மியூர் அடுத்த ஈஞ்சம்பாக்கம், அனுமன் காலனி பிரதான சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன் (45), ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசிக்கிறார். இவரது வீட்டில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (32), ஆனந்தம் (எ) முருகானந்தம் (27) ஆகியோர் வேலை பார்க்கின்றனர். கடந்த 4ம் தேதி ஸ்டீபன் வெளியே சென்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பீரோவில் நகைகள் மாயமாகி இருந்தது. இகுதுறித்து நீலாங்கரை போலீசில், ஸ்டீபன் புகார் செய்தார். அதில், 120 சவரன் நகை, நில பத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். விசாரணையில் ஸ்டீபன் வீட்டில் வேலை செய்த பாலாஜி மற்றும் ஆனந்தம் ஆகியோர் சதீஷ்குமார் (26) என்பவருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரிந்தது.

தமிழக தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது...இதோ உதாரணம்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் எந்த அளவு பாராபட்சமாக நடைபெற்றுக் கொள்கிறது என்பதை அப்பட்டமாக தெரியவந்துள்ளது.தமிழகத்தில், அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் அதிகாரி எழுந்து நின்று அவரது வேட்புமனுவை பெற்றுக் கொண்டனர்.அதே போல,திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் தனது வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் அதிகாரி உட்கார்ந்தே வாங்கினார். இதிலிருந்தே, தமிழகத்தில் தேர்தல் ஆணையம் எந்த அளவு பாராபட்சமாக நடைபெற்றுக் கொள்கிறது என்பதை அப்பட்டமாக தெரிந்து கொள்ளலாம். இது குறித்து, தமிழக தேர்தல் தலைமை அதிகாரி ராஜேஷ் லக்கானி விசாரணைக்கு உத்தரவிடுட்டுள்ளாரா அல்லது என்ன செய்துள்ளார் என தமிழக மக்களுக்கு விளக்க கடைமைப்பட்டுள்ளார்.வெப்துனியா.com

இந்தி எதிர்ப்பைவிட மிகவும் எதிர்க்க வேண்டியது சமஸ்கிருதத் திணிப்பைத்தான்: கி.வீரமணி

மத்திய அரசு, கம்ப்யூட்டர் மொழியை, தேசவிரோதமானது என அறிவித்து விடலாம்
இந்தி எதிர்ப்பைவிட மிகவும் முன்னுரிமை கொடுத்து எதிர்க்க வேண்டியது இந்த சமஸ்கிருதத் திணிப்பு என்பதை தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள், மொழிப் பற்றாளர்கள், இன உணர்வாளர்கள் மறந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வேதங்களிலும், பல்வேறு ஹிந்து புராண நுல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துக்களை படிக்க வசதியாக, நாடு முழுவதும், அய்.அய்.டி.,களில் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமஸ்கிருத மொழி வாயிலாக, ஹிந்து புராண நூல்களில் உள்ள தொழில்நுட்ப, அறிவியல் விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், வேதங்கள் மற்றும் புராண நூல்களில் இடம்பெற்றுள்ள விஷயங்களை, பாடவாரியாக போதிக்க வேண்டும்.

தி.மு.க.,வை விரட்டி அடியுங்கள்: ஜெ., ஆவேசம்

மதுரை: "ஓட்டு கேட்க வரும் தி.மு.க.,வினரை விரட்டி அடியுங்கள். 2011 ல் தி.மு.க., கூட்டணிக்கு கொடுத்த அடியை விட இந்த முறை பலமான சம்மட்டி அடி கொடுங்கள்" என மதுரையில் நடந்த அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் ஜெ., ஆவேசத்துடன் பேசினார்.மதுரை, தேனி, திண்டுக்கல், துாத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 47 தொகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மதுரையில்
ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அ.தி.மு.க., அரசு அயராது முயற்சி எடுத்து வருகிறது. மத்தியில் காங்கிரசுடன் கைகோர்த்து 2006 முதல் 2011 தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி முல்லை பெரியாறு பிரச்சனையை மறந்துவிட்டார். முல்லை பெரியாறு நீரை நம்பி வாழும் விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார்.     அதிமுக மேடை ஒரு அடிமை பயிற்சி முகாம்!  நவீன தீண்டாமை .....? வேட்பாளர்களே இந்த அம்மாவை நெருங்க முடியவில்லை, சரத்து மட்டும் கெஞ்சி கூத்தாடி கருப்பு கண்ணாடி போட்டிருக்காக. இந்த லட்சணத்தில்  மக்கள் எப்படி நெருங்க முடியும். பூலான்தேவியை தான் மக்கள் விரட்டி அடிக்கப்போகிறார்கள் . இவர்கள் கட்சி நடத்தவில்லை 45% கமிசன் கம்பனி தான் நடத்துகிறார்கள்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும்: உச்ச நீதிமன்றம்....

புதுடெல்லி 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் 9 பேரும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து சட்டசபையில் கடந்த மாதம் அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். எனினும் நிதி மசோதா சட்டசபையில் நிறைவேறியதாக சபாநாயகர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டப்படி நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார். இதையடுத்து சட்டசபையில் மார்ச் 28–ந்தேதி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மாநில கவர்னர் கே.கே.பால் உத்தரவிட்டார்.

புதன், 27 ஏப்ரல், 2016

யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து..கோகுல்ராஜ் கொலை வழக்கில்....

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.நாகமுத்து அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. கடந்த 2015 டிசம்பர் 25-ல் யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், யுவராஜ் மீதான குண்டர் தடுப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி சுமிதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உட்பட 17 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். அதில் யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி: சின்ன சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி

அன்பு என நினைக்கும்போதே நமக்கு தோன்றுவது என்னவோ "அம்மா" என்ற சொல்தான். அன்பின் உருவமே அம்மாதான். ஆனால், ஒரு தந்தையின் அன்பை நாம் எவ்வளவு பெரிய மனிதராக ஆகிறோம் என்பதை வைத்துதான் அறிந்துகொள்ள முடியும். காரணம், தந்தையின் அன்பு அவரது கண்டிப்பில் தெரியும். அந்த கண்டிப்புதான் ஒருவனை வாழ்வின் உயரத்திற்குக் கொண்டு செல்கிறது.
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிறுவனரும், CEOவுமான நாராயண மூர்த்தி,  தன்னுடைய மகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம், இணையத்தில் வைரலாகி உள்ளது.

சோனியா காந்தி : மீனை கூட பாதுகாக்க முடியாத மோடியால் எப்படி எல்லையை பாதுகாக்க முடியும்

கொல்கத்தா, இந்திய கடல்பரப்பில் மீனை கூட வெளிநாட்டு மீனவர்களிடம் இருந்து பாதுகாக்க முடியாத மோடியால் எப்படி எல்லையை பாதுகாக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் இதுவரையில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ளது. 5-வது கட்டமாக 53 தொகுதிகளுக்கு 30-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

ஈரோடு பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர்களின் இடங்களில் அதிகாரிகள் சோதனை

கோவை: ஈரோடு, பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர்களின் நிதி நிறுவனம், குதிரை பண்ணைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பொள்ளாச்சியில் டாக்டர் மகேந்திரன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனையில் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் வேண்டியவர் டாக்டர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. ADMK men houses raided in Erode and Pollachi வாக்காளர்களுக்கு தருவதற்கான பணம் மகேந்திரன் வீட்டில் பதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கின்றன.பொள்ளாச்சியில் டாக்டர் மகேந்திரன் என்பவரது குதிரை பண்னையில் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் காவ்யன் என்பவருடைய ஒன் எஸ் என்ற நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அதிமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான இரு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வசுந்தரா காசியப் : சினிமாவில் வெற்றி பெற கடின உழைப்பு, திறமை, அதிர்ஷ்டம் எல்லாமே வேண்டும்

வட்டாரம்’ படத்தில் அறிமுகமாகி ‘பேராண்மை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘போராளி’ போன்ற படங்களின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்றவர் வசுந்தரா காஷ்யப். தற்போது ‘மைக்கேல் ஆகிய நான்’, ‘புத்தன் இயேசு காந்தி’ படங்களில் நடித்து வருகிறார். இது பற்றி கேட்ட போது... “மைக்கேல் ஆகிய நான் ஒரு ஹாரர் படம். ‘புத்தன் இயேசு காந்தி’ சற்றே மாறுபட்ட படம். இதில் எது முதலில் வந்தாலும் அது என் பத்தாவது படமாக இருக்கும். இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். சினிமாவில் வெற்றி பெற திறமை வேண்டும். அதிர்ஷ்டமும் வேண்டும். கடின உழைப்பும் தேவை. திறமை இருந்தால் மட்டும் போதாது. அது போலவே கடின உழைப்புடன் திறமை, அதிர்ஷ்டம் எல்லாமும் அமைய வேண்டும். ‘காக்கா முட்டை’ படம் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு எளிமையாக இவ்வளவு பெரிய விஷயத்தை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். ‘இறுதிச்சுற்று’ பார்த்தேன் அதுவும் பிடித்திருந்தது. அதில் நடித்த ரித்திகாசிங்கிற்கு முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டேன். அவர் திறமைசாலி மட்டுமல்ல அதிர்ஷ்டசாலியும் கூட! இப்படிப்பட்ட பெருமை எல்லோருக்கும் வராது.

திண்டுக்கல்: மாணவியை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியர் சகாயராணி...இடைநீக்கம்

திண்டுக்கல் அருகே சிறுமலை பழையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருபவர் ஜெசிந்தாசகாயராணி. மதிய உணவை பள்ளியில் சத்துணவையே சாப்பிடிவாராம். பின்னர் சாப்பிட்ட தட்டை மாணவிகளை கழுவச் சொல்வாராம். சம்பவத்தன்று அவர் சாப்பிட்ட தட்டை 6ம் வகுப்பு மாணவியை கழுவ சொல்லியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதற்கு சம்மதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை அந்த மாணவியை செருப்பால் அடித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்  நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார தொடக்க கல்வி அலுவலர் பாண்டி விசாரணை நடத்தினார். விசாரணையில் தலைமை ஆசிரியை மாணவியை செருப்பால் தாக்கியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியையை தொடக்ககல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். வெப்துனியா.com

நிதின் கட்காரி : நெடுஞ்சாலைகளில் 3 டி பெயிண்டிங் வேக( போலி ) தடைகள்..அப்புறம் நிஜமான தடையை கூட பெயிண்ட்டிங் என்று நினைப்பாங்க அடிபடுவாங்க.

புதுடில்லி : சாலை விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் நாடு முழுவதிலுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 3-டி தொழில்நுட்பத்தில் மாய வேகத் தடைகள் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதின் கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் ஓராண்டில் மட்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துகளால் சுமார் 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம் அதிவேக பயணமே. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டுவதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும் வகையில் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய மாய வேகத்தடைகளை, சாலைகளில் வரைவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இது ஒரு அடி முட்டாள் தனமான ஏற்பாடு .கொஞ்ச நாள் பழகியதும் இது வெறும் பெயிண்டிங்தானே என்று வேகமாகவே போவார்கள். அதை விட ஆபத்து நிஜமாகவே ஏதாவது கண்ணுக்கு தெரிந்தாலும்  வெறும் பெயிண்டிங் என்ற எண்ணம்தான் வரும்.  விபத்துக்கள் அதிகம் நடக்கும், 

விசாகபட்டிணம் பயோ டீசல் யூனிட்டில் பயங்கர தீ விபத்து.. தீயணைக்க பல மணி நேர போராட்டம்

விசாகபட்டிணம்: ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்திலுள்ள பயோ எரிபொருள் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. விசாகபட்டிணம், நகரில் துவ்வடா என்ற பகுதியில், பயோமேக்ஸ் என்ற நிறுவனத்தின் பயோ எரிபொருள் உற்பத்தி பிரிவு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நேற்று இரவு இங்குள்ள டீசல் டேங்கர்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

சுபவீ : குளுகுளு மேடையும் கொளுத்தும் வெயிலும்



உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. நத்தம் விஸ்வநாதன் மீதான ஊழல் புகார்: விசாரணை நடத்த சென்னை ....

 madras high court asks action aganist natham viswanathanசென்னை: சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தொடர்பான தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் குறித்து, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வைகோ : நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்...என்னை .நம்பி இருந்தவர்கள் நாசமாய் போனார்கள் இதுதான் எந்தன் விருப்பம்.

ஒரு தொகுதி... ஓராயிரம் கேள்விகள் போராளி, புரட்சிக்காரர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வைகோ; ஸ்டெர்லைட், கோகோ கோலா போன்ற பிரம்மாண்ட பன்னாட்டு கார்ப்பரேட்களை எதிர்க்க தயங்காத வைகோ, ஏழு பேர் அடங்கிய ஒரு கும்பல் எழுப்பிய கூச்சலுக்கு அஞ்சி, தேர்தல் போட்டியில் இருந்தே விலகி விட்டார் என்பதை, தமிழகத்தில் யாராலும் நம்ப முடியவில்லை.
இதனால், பற்பல வடிவங்களில் கேள்விகள் எழத் தொடங்கி உள்ளன. அவற்றை பார்க்கும் முன், வைகோவுக்கு உச்சகட்ட கிலி ஏற்படுத்திய அந்த சம்பவத்தை பற்றி...துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, வடக்கு திட்டங்குளம் கிராமத்தில், தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வைகோ வந்தார். அப்போது, இண்டு பேர் வைகோவை வசைபாடியும், அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதை எதிர்த்தும் கூச்சலிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களை விரட்டினர். அந்த இளைஞர்கள், மேலும் ஐந்து பேரோடு சேர்ந்து மீண்டும் கூச்சலிடவே, அவர்களை போலீசார் கைது செய்தனர்.