சனி, 10 டிசம்பர், 2016

சசிகலா காலில் அமைச்சர்கள்.. தொடர்கிறது அடிமைகள் மரபு!



மோடி : மக்களவையில் பேச அனுமதிக்கப்படாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்? முழுப்பூசணிக்காய சோத்துல...

மக்களவையில் தான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் தீசா கிராமத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் விட்டுவைக்கப்பட மாட்டார்கள். கறுப்பை வெள்ளையாக்க உதவிய வங்கி அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர். மோடி எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. பண மதிப்புநீக்க நடவடிக்கை ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தி. சமூக நலத்திட்டங்களை முடக்கிய ஊழல்வாதிகளின் அதிகாரத்தை பறிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

நோட்டு பிரச்சினையைக் கண்டிக்காத கட்சி பிஜேபியும் அதிமுகவும் மட்டும்தான்.

மதிமாறன்: கருணாநிதி நான் முதல்வராவதை தடுத்துவிட்டார்’ என்ற நெடுஞ்செழியன் போன்றவரின் காழ்ப்புணர்ச்சியாலும் திமுக வில் பதவிக் கிடைக்காத திராவிட இயக்க தலைவர்களாலும் தங்கள் சுயலாபத்திற்காக, எம்.ஜி. ஆரை ‘புரட்சித் தலைவர்’ என்று ஏத்தி விட்டு உருவான கட்சிதான் அதிமுக.
அதே கருணாநிதி எதிர்ப்பு திராவிட இயக்க குரூப்புதான் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி’ என்று ஜாக்கி வைத்து காரியம் சாதித்தார்கள்.
ஆக, அதிமுகவில் கொள்கை, கோட்பாடு எல்லாம் கிடையாது. ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற ஒரே முழக்கம்.

சுப்பிரமணியம் சாமி சசிகலாவை ஏற்கமாட்டாராம் .. பொதுசெயலாளராக சசிகலாவை ...

சென்னை: ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.,விற்கு ஜாதிய பின்புலத்துடன், சசிகலா பொதுச் செயலர் ஆவதற்கு முயற்சிக்கிறார். அதை, மற்ற ஜாதிகளை சேர்ந்த கட்சியினர் புரிந்து கொண்டு, அந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்பிரமணியன்சாமி கூறினார்.
இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி;தமிழகத்தைப் பொறுத்த வரை, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அரசியல் ரீதியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது நிஜம்தான். ஜெயலலிதாவோடு, தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித முரண்பாடுகளும் இருந்ததில்லை. அவர், சிலரின் கைப்பாவையாக மாறி, தமிழக நலன்களுக்கு எதிராக செல்கிறார் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்த பின் தான், அவருக்கு எதிர்ப்பாக செயல்பட துவங்கினேன். t;தி.மு.க., இந்துத்துவாவுக்கு எதிராக இருப்பதோடு, ஊழல் செய்யும் கட்சிகளில் முதன்மையானதாக இருப்பதால்தான், அக்கட்சியையும்; அக்கட்சித் தலைவர்களையும் எதிர்த்தேன்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரத்தயார் என்று பேட்டி!

சென்னை: மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று பேட்டியளித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலா நடராஜன் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. இவர் போயஸ்கார்டன் இல்லத்தில்தான் பிறந்தாராம். தீபா என பெயரை சூட்டியதே ஜெயலலிதாதான் என கூறப்படுகிறது. ஆனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் போயஸ் இல்லத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பிறகு, தீபாவின் குடும்பம் வெளியேற்றப்பட்டதாம்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தீபா அவரை சந்திக்க முயன்று தோற்றுப்போனார்.ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோதும், தீபா அவரை சந்திக்க சென்றார். ஆனால் சசிகலா மட்டுமே ஜெயலலிதாவுடன் இருந்து கவனித்து வந்ததால் இவரை உள்ளே விடவில்லை.

சேகர் ரெட்டி நீக்கம் - திருப்பதி கோவில் அதிரடி! திருப்பதில எப்போ ரெயிடு பண்ணுவாய்ங்க?

திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 500, 1000 ரூபாயை மாற்ற திருப்பதி உண்டியல் பணத்தை சேகர் ரெட்டி பயன்படுத்தியதாக புகார் எழுந்ததாலும், வருமான வரி சோதனையில் 194 கோடி சிக்கியதால் சேகர் மீது தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையால் திருப்பதி கோவிலில் அறங்காவலர் பதவியில் நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. ஓ.பி.எஸ். நட்பின் மூலம் தமிழக அரசின் முக்கிய ஒப்பந்த பணிகளை பெற்றார் சேகர் ரெட்டி.நக்கீரன்.இன்

சசிகலா தலைமையேற்க அதிமுக மூத்த நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது செங்கோட்டையன், மதுசூதனன், வளர்மதி, சைதைதுரைசாமி, கோகுல இந்திரா உள்ளிட்டோர், சசிகலாவை கழகத்திற்கு தலைமையேற்று ஜெயலலிதா வழியில் கழகத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும். அதிமுகவிற்கு அரணாக இருக்க வேண்டும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதிமுக உறுப்பினர்களும் திரண்டு வந்து சசிகலாவை தலைமையேற்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.நக்கீரன்.இன்
minnambalam.com :
செங்கோட்டையன் தலைமையில் அதிமுக மூத்த தலைவர்கள் இன்று (10/12/2016) போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அதிமுக-வின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கட்சிக்கு அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து, பல்வேறு வதந்திகள் உலவத் தொடங்கின.

ரெட்டி வீட்டில் இரண்டாவது நாளாகவும் ரெயிட் தொடர்கிறது ..

சேகர் ரெட்டி அம்மாவின் ஆசியால் திருப்பதியில் கடவுள் பணியில் ஈடுபட்டு வந்தவர். வேண்டியவர்களுக்கு அல்வா கொடுக்காமல் பிரசாத லட்டு கொடுத்தவர். மணல் அள்ளுதல், காண்ட்ராக்ட் போன்ற சமூக சேவையில் உள்ள இவர், மக்கள் விரோத செயல்களில் ஈடுபட மாட்டார். அ.தி.மு.க., பிரமுகரும் கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின்
வீடுகளில், இரண்டாவது நாளாக நேற்றும், வருமான வரி, 'ரெய்டு' தொடர்ந்தது. நேற்று மட்டும், ஏழு கோடி ரூபாய் ரொக்கம், ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனையால், தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர். இதற்கிடையில், வங்கி ஏ.டி.எம்.,களில், மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில், சேகர் ரெட்டி, 10 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுகள் பெற்றது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, பதுக்கல்காரர்களுக்கு, செப்டம்பர் வரை, மத்திய அரசு அவகாசம் தந்தது. அப்போது, தானாக முன்வந்து கணக்கு காட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தது.அதன்பின், வருமான வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் அதிபர்களும் தப்பவில்லை.  ஆனால் அந்த மூன்று காண்டேயினர்களும் 570 கோடி ரூபாய்களும் இன்னும் அருண் ஜெட்லி ,அதிமுக ,அமித் ஷா மற்றும் மோடி போன்றவர்களின் பைகளில் சங்கமமாகி விட்டதாக பலரும் கருதுகிறார்களே?

பழ.கருப்பையா : சசிகலாவுக்கு வழக்கினால் சீர்குலைவு ஏற்பட்டால் இந்த அரசாங்கத்தை பெருமளவு தவிடு பொடியாக்கிவிடும்

பழ.கருப்பையா, முன்னாள் எம்.எல்.ஏ: ஒரு வலிய தலைவர் இயற்கை எய்திவிட்ட நிலையில், அந்தக் கட்சியினுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுவது மிகவும் இயற்கையானதுதான். அந்த ஆர்வத்திலேதான், இந்த நாட்டினுடைய தலைமை அமைச்சர் தன்னுடைய அரிய நேரத்தை ஒதுக்கி, ஒருவழியில் ஜெயலலிதாவுக்கு மரியாதை தெரிவிக்க வந்தார் என்று சொன்னாலும்கூட, இன்னொருபக்கம் அவர் மீன் பிடிக்க வந்தவர்தான்.
ஆகவே, இந்த அரசு அந்த வலையில் சிக்கிக்கொண்டு இருக்கிறதா, இல்லையா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சசிகலாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கின்ற உச்சநீதிமன்றத்தின் வாள், அது தலையின் மீது தொங்குகிற வாள் மட்டும் இல்லை. அது இந்த அரசாங்கத்தின் மீது தொங்குகிற வாளும்கூட. ஏனென்றால், அவருக்குப் பிறகு இந்தக் கட்சியை ஓரளவுக்குத் தன்னுடைய கைக்குள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிற அந்தப் பெண்மணிக்கு, இந்த வழக்கினால் ஏதாவது ஒரு சீர்குலைவு ஏற்படுமானால், அது இந்த அரசாங்கத்தை பெருமளவுக்கு தவிடுபொடியாக ஆக்கிவிடும்.

ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கும் கொள்கை முடிவு எப்போது எடுக்கப்பட்டது? உச்சநீதிமன்றம் கிடுக்கி பிடி ?

minnamalam.com :பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு கூறியபடி நடந்து கொள்ளாதது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த8-ஆம் தேதி பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால், ஏற்பட்ட பணத்தட்டுபாட்டால் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறனர். வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் 2000 ரூபாய் மட்டுமே பெற முடிகிறது. இதுபோன்று, வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளதால் மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு நவம்பர் இறுதி முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழிவகை செய்யப்பட்டது. அதன்படி வாரத்திற்கு ரூ.24000 வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், அரசு அறிவித்தபடி வங்கிகளில் இருந்து ரூ.24000 வரை எடுக்க முடிவதில்லை.

வாகன விற்பனை கடும் சரிவு ..இரண்டு மாதங்களுக்கு கார் தயாரிப்பு நிறுத்தம்! மோடியின் எபெக்ட்


பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வர்த்தகத்துறையில் கடும் சரிவை ஏற்படுத்தி உள்ளது. சில்லறை வியாபாரிகள் முதல் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்திக்கான இடைக்கால ஓய்வை நீடிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
கார் தயாரிப்பாளர்கள் பொதுவாக டிசம்பர் மாதம் தங்களது உற்பத்தி பணிக்கு ஓய்வு கொடுப்பது வழக்கம். தற்போது பண மதிப்பிழப்பு அறிவிப்பால் பண நெருக்கடி நிலவி வருவதால், இந்த இடைக்கால ஓய்வு நீட்டிக்கப்பட உள்ளது. மாருதி, ஹோண்டா, ஹுண்டாய் போன்ற அனைத்து முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த மாதமும் அடுத்த மாதமும் தயாரிப்பு பணிகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
கடந்த மாதம் வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்பைத் தொடர்ந்து கார் தயாரிப்பாளர்கள் தேவை குறைவைச் சந்தித்தனர். அதனால் தயாரிப்புகள் தேங்கி கிடந்தன. வியாபாரிகளிடம் இவை குறைந்த விலைக்கே விற்கப்பட்டன. வங்கிகளின் அழுத்தம் காரணமாக கடன் வழங்கல்களிலும் தாமதம் ஏற்பட்டது.

பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கொலையான இளம்பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு மேலும் பரபரப்பு தகவல்கள்

தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கொலையான இளம்பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண் கொலை சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம் கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவருடைய மகள் சோனியா(வயது 23). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இவரும், அதே தெருவில் வசித்து வரும் பிரசாந்த் (24) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திடீரென பிரசாந்துடன் சோனியா பேச மறுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், நேற்று முன்தினம் மாலை பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் சோனியாவின் கழுத்தை அறுத்தார்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டம்

நெகிழி (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வதைத் தொடங்கி விட்டதாகவும் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ""தாள் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நெகிழி ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதா?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ""பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலப் பொருள்களின் உதவியுடன் நெகிழி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; அதற்கான கொள்முதல் தொடங்கிவிட்டது'' என்று தெரிவித்தார்.

இந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 அதிகாரிகள் கைது Ex-IAF chief SP Tyagi's to face court


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக, இந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற அந்த நிறுவனம் இந்தியர்களுக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் லஞ்சம் வழங்கப்பட்டதை இத்தாலி நீதிமன்றம் உறுதி செய்தது.

கௌதமிக்கு சி.ஆர்.சரஸ்வதி பதில் ; அப்போலோவில் நடந்தது மோடிக்கு தெரியும்....ஒவ்வொரு நாளும் ரிப்போர்ட் ... அப்போ கூட்டு முயற்சியா?

தேசிய தலைவர்கள் பொய் சொன்னார்களா? ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அவற்றை வெளி கொண்டு வர வேண்டும் என்றும் கௌதமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கௌதமிக்கு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி பதலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் காலமான ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாக கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது என அனைத்துமே பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இது தொடர்பான உண்மைகளை பிரதமர் மோடி வெளி கொண்டு வர வேண்டும் என்று கௌதமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
கௌதமியின் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி. இதுதொடர்பாக அவர் பேசியது: அப்போலோவில் நடந்தது மோடிக்கு தெரியும் அம்மாவின் உடல் நலம் குறித்து ஒவ்வொரு நாளும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து பிரதமர் அலுவலகம் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டே இருந்தது.

புதிய தலைமை செயலகம் ... கலைஞர் மீதான வன்மத்துக்கு பலியான அழகிய கட்டிடம்

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் பற்றி என்ன தெரியும் ?
1. இந்தியாவிலேயே மிக பெரிய அரசு கட்டிடம் !!
2. தங்க சான்றிதல் பெற்ற கட்டிடம்.
3. தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடக்கிய கட்டிடம்.
4. தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பை குறித்த திட்டம் அடங்கிய கட்டிடம்.
5. சக்கர வடிவிலான 36 isosceles த்ரியாங்க்லஸ் கொண்ட கட்டிடம்.
6. ஒரே சமயத்தில் 500 வாகனங்களை நிறுத்த முடியும்.
7. பூங்கா லைப்ரரி என உள்ளடக்கியது !!
8. ஆசியாவிலே மிக பெரிய சிறந்த பசுமை வீடு கட்டிடம்.
9. ஒரு சட்டமன்றம் இயங்க தேவையான மின்சாரத்தில் அதிக அளவு (20%) தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த கட்டிடம்.
10. ஆசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்த கட்டிடம் பற்றி வந்து பார்த்து கற்று படித்தது வரலாறு !
11. சட்டமன்றத்தில் பகல் நேரங்களில் இயற்கை சூரிய ஒளி விளக்காக இயங்கும் வண்ணம் அமைக்க பெற்றது.
12. அணைத்து மின் உபகாரணங்களும் தேவை கேற்ப தானாகவே ஆன் ஆப் ஆகும் திறன் கொண்டது.

சசிகலா மீது உள்ள அத்தனை கேள்விகளும் மோடி மீதும் உள்ளன .. அப்போலோவுடன் கூடவே மத்தியஅரசின் எய்ம்ஸ் வந்ததே?

ஜெ மரணத்தில் சசிகலாவை குற்றம் சாட்டும் ஆட்களிடம், கும்பலிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நான் முன்வைக்கிறேன்.
அப்பல்லோவில் ஜெ அட்மிட் ஆனவுடன் ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரே தொடர்பு அப்பல்லோ அறிக்கைகள் மட்டும் தான். இதெல்லாம் சரி.
ஆனால்... மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பலமுறை வந்து ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார்களே!! ஜெ இறுதிநாளில் மிக சீரியசாக இருக்கிறார் என்ற தகவல் வந்தபோதும் உடனே அவர்கள்தானே பறந்து வந்து ஜெ உடல்நிலையை ஆய்வு செய்தார்கள்! உடல்நிலை கோளாறால் மரணம் என்பதையும் அவர்கள்தானே உறுதி செய்தார்கள்!
ஆக , சசிகலாவை குறை சொல்லும் ஆட்கள் ஏன் மத்திய அரசின், அதாவது மோடி அரசின் கீழ் இயங்கும் ஏய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகளை வசதியாக மறைக்கிறார்கள்?

வெள்ளி, 9 டிசம்பர், 2016

நீட் தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு ..

புதுடெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எழுத வேண்டும். தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். இந்நிலையில் நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மக்களவையில் சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும். மேலும் அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி மொழிகளிலும் நீட் தேர்வை எழுதலாம். ஆங்கிலம், ஹிந்தி தவிர்த்து பிற மாநில மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும். மேலும் மருத்துவ இளம், முதுகலை படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்  மாலைமலர்.காம்

காவேரி நதிநீர் ஆணையத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “காவேரி நதி நீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது” என்று மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பளித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. மேட்டூர் அணை வரலாறு காணாத அளவிற்கு வற்றிவிட்ட சூழ்நிலையில், தினமும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. காவேரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, இன்றைக்கு அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகும் அவல நிலை உருவாகி இருக்கிறது. காவேரி டெல்டா பகுதியிலிருந்து தினசரி வரக்கூடிய ‘விவசாயி தற்கொலை’ என்ற செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.

நடிகை கௌதமி கேட்கவேண்டிய கேள்வி : எய்ம்ஸ் மருத்துவர்கள் என்ன கூறினார்கள் என்பதை பிரதமர் ஏன் மறைத்தார்?

அணுக கூடிய பிரதமர் சென்னை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இந்நிலையில் நடிகை கவுதமி இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜெயலலிதா சாவிலுள்ள மர்மத்தை அவிழ்க்க வேண்டும் என கோரியுள்ளார். சாமானியர்களின் பிரதிநிதியாக தான் இந்த கோரிக்கையை முன் வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடிதம் குறித்து தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு கவுதமி அளித்த பேட்டி இதுதான்: என்ன நடந்தது என்பது மட்டும் இன்று மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஏதாவது நடந்தால் கூட என்ன ஆனது என்ற ஆர்வம் வரும். அப்படியிருக்கும்போது இவ்வளவு பெரிய தலைவருக்கு, அன்பு செலுத்தப்பட்டவருக்கு ஒன்று ஆகியுள்ளது என்றால், அது பற்றி அறிய ஆர்வம் இருக்கவே செய்யும்.

எந்த ஒரு அதிமுக பிரமுகரும் இதுவரை பத்திரிகைகளில் அஞ்சலி வெளியிடவில்லை .. அம்மா இருக்கும்போது பக்கம் பக்கமாக ..

முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவரின் பிறந்த நாளாகட்டும், தேர்தல் வெற்றி ஆகட்டும், சிறைக்கு போய் திரும்பினாலும் பல நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் வாழ்த்து விளம்பரங்கள் போட்டு திணறிடிப்பார்கள்.
தங்கத் தலைவி, புரட்சித்தலைவி, அம்மா, நிரந்தர முதல்வர் என ஆயிரம் ஆயிரம் அடைமொழிகளில் பேப்பரை நனைத்திருப்பார்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதா தயவில் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தான். இதை ஏன் இப்போது பதிவிடுகிறேன் என்றால்...
அப்பேர்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றோடு 48 மணி நேரத்தை தாண்டி விட்டது. 5ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு அவர் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது... மறுநாள் காலை என் வீட்டில் விழுந்த நாளிதழ்களை எடுத்து பார்த்தேன்.... எல்லாம் வழக்கம் போல வெளியானது. கூடுதல் பக்கங்கள் எதையும் காணோம்.

பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம்'

tamil.thehindu.com
இந்தியர்கள் தங்களின், தங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசிடம் அடைக்கலம் புகுந்துள்ள நம்பிக்கையை சின்னாபின்னமாக்கி விட்டார்.
மன்மோகன் சிங் | கோப்புப் படம்.நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல..
இந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85) பண மதிப்பு நீக்கம் குறித்த தனது கருத்தை கட்டுரையாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் எழுதியுள்ளார். அதன் தமிழக்கம் வருமாறு:
“பணம் என்பது நம்பிக்கை ஆற்றலை ஏற்படுத்தும் ஒரு கருத்து” என்று கூறப்படுவதுண்டு. நவம்பர் 9, 2016 அன்று கோடிக்கணக்கானோருக்கும் மேலான இந்தியர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 85% மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என்று ஒரே இரவில் பிரதமர் அறிவித்தார். போதிய சிந்தனையற்று வலுக்கட்டாயமாக எடுத்த முடிவினால், நாட்டின் பிரதமர் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களின், தங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசிடம் அடைக்கலம் புகுந்துள்ள நம்பிக்கையை சின்னாபின்னமாக்கி விட்டார்.

சசிகலா அதிமுக தலைவர் .. ஜெயாவுக்கு பிந்திய போயஸ் எபிசொட்

.“கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் பன்னீர்செல்வத்தின் கார் தினமும் போயஸ் கார்டன் போய் வருகிறது. பன்னீர் முகத்தில் சின்ன சிரிப்பு கூட இல்லை. இருண்ட முகத்துடன் தான் இருக்கிறார். போயஸ் கார்டனில் இருந்து வெளியில் வரும்போதும் சரி… பின்னி சாலைக்குள் கார் நுழையும்போதும் சரி... முதல்வர் பயணிக்கும் காரின் கண்ணாடி இறக்கப்படுகிறது. கூப்பிய கரங்களுடன்தான் அந்த சாலையில் பயணிக்கிறார் முதல்வர் பன்னீர். இன்றும் முதல்வர் பன்னீர் வழியில் நின்றிருந்த மக்களைப் பார்த்து கும்பிட்டபடியேதான் போனார். போயஸ் கார்டனில் இப்போது இளவரசியின் மகன் விவேக் சத்தம்தான் அதிகமாக கேட்கிறதாம். வழக்கமாக ஜெயலலிதா இருந்தவரை முதல்தளத்தில் உள்ள வரவேற்பு அறையில் வைத்துதான் அமைச்சர்களை பார்ப்பார். இப்போதும் அதே அறையில்தான் சசிகலா சந்திக்கிறார். சசிகலா, இன்று முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பேசும்போது மன்னார்குடி உறவுகள் அந்த அறை முழுக்க சூழ்ந்து இருந்தார்களாம்.

ஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஆசிரியரின் அனுபவம்! நானும் செத்து செய்தியாகியிருப்பேன்

parvathiy-sriபார்வதி ஸ்ரீ: நேற்று கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே இருந்தது. மகள் விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்ல வேண்டும். ATM சென்று நின்றேன். எனக்கு முன்னால் சுமார் 200 பேர் நின்றிருந்தனர்.. என்னுடன் எங்கள் பக்கத்து ஊர் பள்ளி ஆசிரியர் ஒருவரும் உடனிருந்தார். இரண்டு சிறுவயது மகள்களைத் தனியே விட்டு வந்திருந்தார். அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்திருந்ததால் எனது பேசியை வாங்கி தனது மகள்களுக்கு இன்னும் ஒருமணி நேரமாகும் எனவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறிவிட்டு தின்பண்டங்கள் எல்லாம் இருக்குமிடத்தைக்கூறி அழும் சிறியவளுக்கு சமாதனங்களைச் செய்துவிட்டு என்னிடம் தந்தார்..
“வீட்டு வாடகைக் கொடுக்கனும் டீச்சர். தினமும் வந்து 2000 எடுத்துட்டுப் போறேன். நேத்து இரண்டாவதா நிக்கும்போது பணமில்லாமப் போயிடுச்சி” என்றார்.. வங்கிக்குச் சென்றால் அங்கு அதைவிடக்கூட்டம் எனவும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துச் சென்றும் பணம் எடுக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார். பாவமாகத்தான் இருந்தது.

அப்போலோ...எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது!

சரவணன் சந்திரன் சரவணன் சந்திரன்த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் உயரதிகாரியாய் வரும் ஆஷா சரத் ஒரு வசனம் சொல்வார். “எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது” என்பார். உண்மைதான் அது என்பதை நேற்று உணர்ந்திருப்பீர்கள். அப்போலாவின் சங்கீதா ரெட்டி க்ரேவ் சிட்டுவேஷன் என்று ட்வீட் செய்தார். அதற்கடுத்து ரிச்சர்ட் பீலே அறிக்கை அதை உறுதி செய்தது. மறுபடி சங்கீதா ரெட்டி மிக மிகக் கவலைக்கிடம் என்றார். இடையில் மரணமடைந்ததாக அறிவிப்பு வந்தது. அது திரும்பப் பெறப்பட்டது. அப்போலா சார்பில் அறிக்கை வெளியானது. இரவு 11.30 மணிக்குத்தான் இறந்ததாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.
அதற்கு முன்னர் வெங்கையா நாயுடு வந்துவிட்டுச் சென்றார். அவர் சென்னையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள்.

தயாநிதி மாறன் மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் ! சட்டவிரோதமாக 764 தொலைபேசி இணைப்புக்கள்

The CBI alleges that Dayanidhi Maran abused his official position to install 764 telephone lines at his residences in Chennai. These lines were allegedly used commercially by Sun TV, operated by his brother. The chargesheet estimates a loss of Rs 1.78 crore to BSNL, Chennai and MTNL, Delhi as no bills were generated for any of the 764 telephone connections provided to Dayanidhi Maran.
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்கா தமிழர் .. தன்மனைவியை ட்ராக்கிங் மூலம் கண்டுபிடித்து சுட்டு கொன்றார்

கொலைசெய்யவேண்டும் என்ற முடிவோடு அலைந்து திரிந்த தமிழர் ஒருவர், தனது முன் நாள் மனைவியின் காரில் ரக்கர் போனைப் பொருத்தியுள்ளார். பின்னர் மோபைல் போன் கம்பெனிக்கு போன் எடுத்து குறித்த மோபைல் போன் எங்கே உள்ளது என அறிந்து அவ்விடம் சென்று. தனது முன் நாள் மனைவியை கொலைசெய்துள்ளார் என்ற விடையம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. டயறோன் பிள்ளை என்னும் 31 வயது தமிழர், தனது முன் நாள் மனைவியான அனுலினி பிள்ளை என்னும் தமிழ் பெண்ணை சுட்டுக் கொலை செய்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. சம்பவ தினமான நேற்று முன் தினம் அனுலினி திடீரென தனது அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பை விடுத்து. தனது முன் நாள் கணவர் வந்துள்ளதாகவும் அவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும். உடனே தன்னை வந்து காப்பாற்றுமாறும் கதறியுள்ளார்.

மதுரவாயில் - சென்னை பறக்கும் சாலை திட்டத்துக்கு அனுமதி


மதுரவாயல் to துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்.// மதுரவாயல் டூ துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை தலைவர் கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காகவே ஜெயலலிதா அதை கடந்த ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போட்டார் . இந்த ஒப்பந்தத்தை பெற்ற SOMA நிறுவனம் நீதிமன்றத்தில் 900 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது . ஜெயலலிதா இறந்த பிறகு இந்த திட்டத்திற்கு ஓபிஎஸ் அரசு அனுமதி அளித்திருப்பது , இந்த திட்டத்தை இது வரை யார் தடுத்து நிறுத்தியிருப்பர்கள் என்பதை மக்கள் உணர ஒரு வாய்ப்பு . #மகிழ்ச்சி --- By Rajesh Dravidan முகநூல் பதிவு

பணமற்ற பரிவர்த்தனை என்பது ரெயிலில் Unreserved கம்பார்ட்மெண்ட்டுகளை ஒழித்துக்கட்டுவது போன்றது

ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் ரிசர்வ் செய்ய ஊக்கப்படுத்துகிறதாம் மோடியின் அரசு. Unreserved எல்லாம் ஒரு பொருட்டே இல்லை அரசுக்கு. பணமற்ற பரிவர்த்தனை என்பது Unreserved கம்பார்ட்மெண்ட்டுகளை ஒழித்துக்கட்டுவது என்பதே. ஆனால் இந்த தேசத்தில் unreserved கம்பார்ட்மெண்ட்டில் செல்லும் நிலையில்தான் மொத்த ஜனத்தொகையில் 70 சதவீதம் மக்கள் இருக்கிறார்கள்.
நாட்டின் செல்வமாம் நமது குழந்தைகள்
ரோட்டில் இறைந்து கிடக்குது – அந்த
கோட்டை மாளிகை வீட்டுக்கு முன்னே
‘கேட்’டுகள் பூட்டிக் கிடக்குது- உள்ளே
கேவலம் நாய்கள் குரைக்குது
(எழுத்தாளர் ஜெயகாந்தன்)  முகநூல் பதிவு  மாதவ ராஜ்

துணை நடிகை கொலை: பணத்திற்காக கொன்ற தோழி கள்ளக்காதலனுடன் கைது

Chennai TV serial actress murder case: 2 arrestசென்னை: செலவுக்கு பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் நடிகை ஜெயசீலியை அவரது தோழியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.
சேலத்தை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மூத்த மகள் ஜெயசீலி, 45. துணை நடிகையான இவர், சிறு சிறு விளம்பரங்கள், டிவி சீரியல்கள் மற்றும் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னை சாலிகிராமம், காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். கடந்த 4ம்தேதி இரவு அவரது வீட்டின் உள்ளே ஜெயசீலி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

முதல்வர் ஜெயலலிதா சிலருக்கு கடவுள் ? சிலருக்கு மன்னிக்கவே முடியாத குற்றவாளி?

பாலு ஜுவல்லர்ஸை அழித்தது, கங்கை அமரனின் பையனூர் பண்ணை  வீட்டை ஆட்டைய போட்டது, நாட்டாமை படத்தை பார்க்க வேண்டும் என்று கூறி வாங்கிய ஃபிலிமை ரிலீஸான இரண்டாவது நாளே ஜெயா டிவியில் ( அப்போது ஜெ.ஜெ டிவி) போட்டது, டான்சி கேஸில் ஆஜரான சன்முகசந்தரத்தை வெட்டியது, பரிதி இளம்வழுதியை ஜான்
பாண்டியனைவிட்டு ஓட ஓட விரட்டியது, சுதாகரனின் ஆடம்பர கல்யாணம் பின் அவர் மீதே கஞ்சா கேஸ் போட்டது, சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு பின் அதையே ஓரு கலாச்சாரமாக மாற்றியது..பாலன் என்ற பினாமியை உயிரோட வைத்து கொளுத்தியது..
ஆடிட்டரை வீட்டுக்குள் கூட்டிவந்து துவம்சம் செய்தது.. தன் கையெழுத்தை தானே போடவில்லை என்று மறுத்தது, ஒரே கையெழுத்தில் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி ESMA, TESMA சட்டம் போட்டது, கலைஞரை நள்ளிரவு கைது செய்தது, அதற்கு எதிராக நடந்த அமைதி பேரணியில் வன்முறை வெறியாட்டம் போட்டது, அந்த வன்முறைக்கு துணைபோன மீனவ சமுதாயத்தை சேர்ந்த வீரமணியை வளர்த்துவிட்டது பின் காரியம் முடிந்ததும் என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளியது..பால் விலை பஸ் டிக்கெட் விலை ஏற்றம், தன் ஈகோவால் கட்டிய சட்டமன்றத்தை பூட்டியது பின் எதிர்ப்பின் காரணமாக அதை மருத்துவமனையாக மாற்றியது, அண்ணா நூலகத்தை சீறழித்தது...

அம்மாவின் சொத்துக்கள் அடேயப்பா ? சுமார் 305 ? அவற்றின் இன்றைய மதிப்பு ????

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களின் மனதில் நீங்கா துயரத்தை அளித்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அவரின் இறப்பு அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பல்லாயிரக் கணக்காண சொத்துகளைப்பற்றி அறிந்திராத நிலையில் அவற்றின் விவரத்தை தற்போதும் பார்ப்போம்.
ரொம்ப நீளமா இருக்கு..! பொறுமையாக படிக்கவும்..
1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்
3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)
4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.
5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.
6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.
7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.
8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 – பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)
11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.

பிரியா ஆனந்: நண்பரின் மரணம்.. ஒருவருடமாக படங்களை ஒப்புக்கொள்ளவில்லை

minnambalam.com :நடிகை பிரியா ஆனந்த் செந்தமிழ் பேசும் தமிழ்ப் பொண்ணு. தமிழில் பல முக்கிய படங்களில் நாயகியாக நடித்திருப்பவர். 180 படத்தில் இவரது நடிப்புக்கு பெருமளவு ரசிகர்களால் பேசப்பட்டவர். சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால படங்களில் ஒன்றான 'எதிர்நீச்சல்' படத்தில் கதாநாயகியாக நடித்து பயங்கர ரீச் ஆனார். 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து கலக்கியவர். தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்கள் என தனது ரவுண்டை ஆரம்பித்தார். தமிழில் இரும்புக்குதிரை, அரிமா நம்பி, வை ராஜா வை என வரிசையாக படங்களில் கமிட் ஆகி அதர்வா, விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் என இளம் நடிகர்களின் சிறந்த ஜோடியாக நடித்து மோஸ்ட் ஃபேவரிட் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் விளங்கினார். அதன் பிறகு ஒரு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்காத பிரியா ஆனந்த், மறுபடியும் இரண்டு தமிழ் படங்கள், ஒரு மலையாளப்படம் என்று நடிக்க ஆரம்பித்துள்ளார். ஏன் இந்த இடைவெளி?

ஆணாதிக்க சமுகத்தில் ஜெயாவின் காலில் ஆண்கள் விழுவதை பெண்கள் ரசித்திருக்கிறார்கள். எதிரி வீட்டு பெண்களும் கூடவே ..

ஜெயலலிதாவைப் பற்றி பாராட்டுகளாகவும் விமர்சனங்களாகவும் ஆயிரம் எழுதலாம். ஒரு விஷயத்தில் மட்டும் தமிழகமே உடன்படுகிறது என்பதை என் வீட்டில் நடக்கும் உரையாடல்கள் முதல் நூற்றுக்கணக்கான முகநூல் குறிப்புகள் வரை பார்க்கிறேன்.
தமிழ்நாட்டுப் பெண்களின் சார்பாக – மூன்றரை கோடி பெண்களின் சார்பாக – எல்லா ஆண்களுக்கும் எதிரான ஒரு யுத்தத்தை அவர் நடத்திக்காட்டியிருக்கிறார். அவரது யுத்தம் உளவியல் ரீதியில் தமிழகப் பெண்களை ஆட்கொண்டிருக்கிறது.
அவரது வேறு எந்த சாதனை, வேதனைகளைவிட இந்த ஒன்று தமிழகப் பெண்களின் மனத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது.
இத்தனைக்கும் ஜெவின் பல செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான்.

மதிமாறன் :விமர்சனங்களை மறைத்து மறைந்தவர்களை பற்றி பேசுவது என் மனசாட்சிக்கு ....

மெல்லிசை மன்னர், ஆச்சி மனோரமா காலமானபோது புதியதலைமுறை தொலைக்காட்சி நேரலையில் கலந்துகொண்டேன். திரை, அரசியல், இசை பிரமுகர்களை விட நான்தான் அதிக நேரம் ஏறக்குறைய முழுமையாகவே இருந்தேன். அவர்களின் கலை சிறப்புகளை என் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொண்டேன். அதை நான் மிக விரும்பி செய்தேன்.
அப்துல் கலாம் அவர்கள் மரணத்தின் போதும், நா. முத்துக்குமார் இறந்தபோதும், இன்று முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தின்போதும் புதியதலைமுறை தொலைக்காட்சியினர் என்னை நேரலைக்கு அழைத்தார்கள்.
பொதுவாகத் திரைப்படப் பாடல் வரிகள் மீது எனக்கு ஈடுபாடு கிடையாது என்பதால்,
முத்துக்குமார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்ற காரணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம், இன்று முதல்வரின் மரணத்தின் நேரலையின் போதும் நான் கலந்து கொள்வதைத் தவிர்த்து விட்டேன். காரணம் இருவர் குறித்தும் எனக்கு மிக அதிகமான விமர்சனங்கள் இருப்பதுதான்.

மிடாஸ் சாராய நிறுவனம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதுதான் MIDAS GOLDEN DISTILLERIES OWNER Ms. JAYALALITHA

 Shockingly, MIDAS GOLDEN DISTILLERIES PRIVATE LIMITED IS OWNED AND RUN BY THE CHIEF MINISTER OF TAMIL NADU Ms. JAYALALITHA. The matter of fact is the promotion of MIDAS brand of liquor by TASMAC helps the ruling party and MIDAS GOLDEN DISTILLERIES PRIVATE LIMITED to generate crores and crores of income every year.
சொத்துகுவிப்பு முதல் மரணம்வரை எல்லா பழிகளையும் சசிகலா மீது போட்டுவிட்டு, "புனித ஆத்மா" என நிறுவமுயல்கிறார்களோ??? உதாரணமாக, மிடாஸ் மதுபான நிறுவனம் முழுக்க முழுக்க சசிகலா & இளவரசிக்கு சொந்தமானது என்றால், சென்ற 2012 ஆம் ஆண்டு, இவர்களை தனது போயஸ்கார்டன் வீட்டிலிருந்து ஜெயா வெளியேற்றிய போது, மிடாஸ் நிறுவன போர்டிலிருந்து சசி & இளவரசி நீக்கப்பட்டு, சோ ராமசாமி சேர்க்கபட்டது எப்படி?? சில மாதங்களில், மீண்டும், சசி & இளவரசி கும்பல், ஜெயாவுடன் சமரசமாகியவுடன், சோ நீக்கப்பட்டு, சசி & இளவரசி மிடாஸ் நிறுவன போர்டில் சேர்க்கபட்டது எப்படி??

ஜெயலலிதா மரணத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மீது விமர்சனங்களை அவாள் வைப்பதில்லை?

சசிகலா மேல் ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஜெ மரணத்தை அவர்மேல் சுமத்துவதின் பின்னணியில் கேவலமான, மூன்றாம் தரமான அரசியல் சதியும், அதிமுகவை கைப்பற்றவேண்டும் என்ற நப்பாசையும்தான் இருக்கிறதேயொழிய உண்மை என்பதோ, ஜெ மீதான அக்கறை என்பதோ துளியும் இல்லை.
ஜெ மரணத்தில் சசிகலாவை குற்றம் சாட்டும் ஆட்களிடம், கும்பலிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நான் முன்வைக்கிறேன்.
அப்பல்லோவில் ஜெ அட்மிட் ஆனவுடன் ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரே தொடர்பு அப்பல்லோ அறிக்கைகள் மட்டும் தான். இதெல்லாம் சரி.
ஆனால்... மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பலமுறை வந்து ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார்களே!! ஜெ இறுதிநாளில் மிக சீரியசாக இருக்கிறார் என்ற தகவல் வந்தபோதும் உடனே அவர்கள்தானே பறந்து வந்து ஜெ உடல்நிலையை ஆய்வு செய்தார்கள்! உடல்நிலை கோளாறால் மரணம் என்பதையும் அவர்கள்தானே உறுதி செய்தார்கள்!

பேரம் இன்னும் படியல்ல தொடர்கிறது ரெயிடு ... 170 கோடி, 130 கிலோ தங்கம்... முன்னே பிடிபட்ட570 கோடி காண்டேயினர்?


கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல், கருப்புப் பணத்தை கமிசனுக்கு வாங்கி செல்லும் ஏஜெண்டுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றன்ர். ஆந்திராவைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் அவர்களது ஆடிட்டர் பிரேம் ஆகியோர் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்ததாக தகவல் வந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.

சசிகலாவுக்கு எதிரான விமர்சனத்துக்கு சுப வீரபாண்டியன் பதிலடி

சசிகலா குறித்த விமர்சனமும் எனது பார்வையும் - சுப. வீரபாண்டியன்


Cashless economyக்கு அடிப்படையாய் இந்த மூன்று விஷயங்கள் .. மின்சாரம் , எழுத்தறிவு....

1. 100 சதவீதம் literacy. (at least கைநாட்டு வைக்காமல் கையெழுத்துப் போடத் தெரிய வேண்டும்)
2. 100 சதவீதம் தடையில்லா மின்சாரம்.
3. 100 சதவீதம் network connectivity to whole India.
அதற்கு முதலில் வழி பண்ணுங்கள்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறானாம்.
ஆதாரை இன்னும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது குறித்து பல வழக்குகள் முன் வருகின்றன. உங்கள் ரேகை, கண் எல்லாம் பதியப்பட்டு இருக்கின்றன. இந்த அரசு நினைத்தால் யாரையும் குற்றவாளியாக்க முடியும். ஒருவகையில் சொல்லப்போனால் இந்திய மக்களை குற்றப்பரம்பரை ஆக்கி வைத்திருக்கிறது. பல முனேறிய நாடுகளில் கூட இந்த முறை இல்லை.
  Black Money’ என்னும் பெயரிட்டு 50 நாட்களில் மோடி எடுக்க இருந்த படத்திற்கு இதுவரை 1.28 லட்சம் கோடி செலவு என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. அந்தப் படம் ஓடாது என்று தெரிந்தவுடன் பாதியிலேயே கைகழுவி இப்போது, ‘Digital Cash’ என்று அடுத்த படத்திற்கு பூஜை போட்டிருக்கிறார்.
முகநூல் பதிவு  மாதவா ராஜ்

பேரம் படியாததால் ரெயிடு பாய்ந்தது ..

570cr forgery lorry #container பணத்தை SBI பணம் என்று கூறி கோர்ட் இல் தலையில் நொங்குன்னு குட்டு வாங்கிய #modi அரசு .... அவரின் நெருங்கிய தோழி ஜெயலலிதா அரசின் ஊழல் ஒழிப்பில் ஈடுபட்டு இருப்பது மிகவும் பெருமையான வாழ்த்த வேண்டிய விஷயம் ..
அதிமுக #பிஜேபி மோதல் ஆரம்பித்து விட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..முகநூல் பதிவு சவேரா
 சின்னம்மா பெரியம்மா ஆகி அப்பலோல அட்மிட் ஆகும் போது, இளவரசி சின்னம்மா ஆகிடுவாங்க.....!!!!
அதானே முறை... முகநூல் பதிவு சுமி b

வியாழன், 8 டிசம்பர், 2016

ரெட்டி வீட்டு ரெயிட் சசிகலா மாபியாவுக்கு மோடி மாபியா கொடுத்த அடி! அதிமுகவை விழுங்கியே தீருவது ...மூர்க்கத்தனமாக மோடி அரசு முயற்சி

சசிகலா
தமிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி? சசிகலா குடும்பத்தினரைக்  குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு? தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற வருமானவரித் துறையின் அதிரடிச் சோதனை மூலம் எதை உணர்த்த விரும்புகிறது?
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி என்ற ஊர்தான் சேகர் ரெட்டியின் சொந்த ஊர். வயது 45. மத்தியதரக் குடும்பம். மனைவி, ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்டராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச் சாலைகள் போடுவது; டெலிபோன் கேபிள் அமைப்பது என சிறுசிறு வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். தொடக்கத்தில் காட்பாடியில் இருந்து சென்னைக்கு( இழவு  வீட்டில் RSS ரங்கராஜ் பாண்டேயின் குதூகல சிரிப்பு பாருங்க,, புரியும் )

அன்றைய இரவு போயஸ் கார்டனில் அறுசுவை விருந்து .. சமையல்காரம்மா மட்டும் துக்கத்தில் சாப்பிடாமல் இருந்தார்

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்ததாக கூறப்படும் டிசம்பர் 5 ஆம் தேதி இரவு போயஸ் கார்டனில் அறுசுவை விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அறிவிப்பதற்கு முன்னரே அதாவது மாலை நேரத்தில் போயஸிற்கு கார்கள் அணிவகுத்துள்ளன. ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்தை அந்த கார்கள் நெருங்கியபோது, காவலர்கள் நிறுத்தியுள்ளனர்.
உள்ளே எட்டிப் பார்த்தபோது, ஜெயலலிதா வரக்கூடாது என சொன்னவர்கள் வண்டியில் இருந்துள்ளனர். அவர்கள் சசிக்கலா, இளவரசியின் உறவினர்களாம். இதனால் அதிர்ந்த மூத்த அதிகாரி, சசிக்கலாவை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்களை உள்ளே விடுங்கள் என உத்தரவிட்டாராம் சசிக்கலா. உள்ளே சென்ற உறவினர்கள் ஒரு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்ப்பது போல் போயஸ் இல்லத்தை சுற்றிப் பார்த்தார்களாம்.
“இதுதான் பெரிய அம்மா அறையா”, “இது தான் சின்ன அம்மா அறையா” என பேசிக் கொண்டார்களாம்.  பின்னர் சமையல் கார பெண்ணிடம் வேண்டியதை சமைக்கச் சொல்லி சாப்பிட்டார்களாம்.
 ஜெயலலிதாவின் விசுவாச  சமையல்கார பெண் அன்று இரவு சாப்பிடாமல் இருந்துள்ளார். liveday.in

UPSC தேர்வு முடிவுகள் பார்ப்பனர்களின் கனவுகளை தகர்த்தது ...Tina Dabi to marry Kashmiri youth

டினா டாபியின் காதலும் காவி கும்பலின் வயிற்றெரிச்சலும்
tina-dabi-lead2015-ம் ஆண்டின் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தேர்வு முடிவுகள் வந்த போதே வட இந்திய பார்ப்பன அறிஞர் பெருமக்களுக்கு இஞ்சியைக் கரைத்துக் குடித்தது போலத் தான் இருந்தது. காரணம் டினா டாபி என்கிற 22 வயதே ஆன இளம் பெண் தேர்வாணையத்தின் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வென்றதோடல்லாமல், முதலாவதாகவும் தேறியிருந்தார்.
டினா டாபி மற்றும் ஆமிர் உல் ஷபி கான்
டினா டாபி ஒரு பெண் என்பதே அம்பிகளின் தொண்டை அடைத்துக் கொள்ள போதுமான காரணம் தான். அதற்கு மேலும், அவர் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கேள்விப்பட்டவுடன் வடநாட்டு அவாளெல்லாம் ஆங்கில செய்தித்தளங்களின் பின்னூட்ட பெட்டிகளில் ஒன்று திரண்டு கண்ணில் ஜலம் வச்சுண்டு அழத் துவங்கினர். இதற்கிடையே டினா டாபியின் குடும்ப பின்னணியையும் அவர் தேர்வில் வெல்ல எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் நூல்பார்ட்டி கம்பெனியில் குறைந்தபட்ச அறிவுள்ள சிலர் கூகுளின் மூலம் பீறாய்ந்து வரவே ஒப்பாரி ஓலங்கள் உச்சஸ்தாயியை அடைந்தன.

மோடியின் ராஜகுரு சோ ராமசாமி- மிடாசின் முன்னாள் இயக்குநர் மற்றும் பார்ப்பனியத்தின் பவர் புரோக்கர் மட்டுமே.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
chovinavu.com சோ ராமசாமி 7.12.2016 புதன் கிழமையன்று அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். சோ-வைப் போன்றே நகைச்சுவை நாடகத்தால் பிரபலமான எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியைச் சந்தித்த போது  “நம்முடைய ராஜகுரு எப்படி இருக்கிறார்?” என்று சோ ராமசாமியைக் கேட்டாராம். அதானி போன்ற குபேர குருக்களின் தயவில் ஆட்சியைப் பிடித்தவருக்கு ராமசாமி போன்ற ராஜகுருக்கள் என்ன உதவி செய்திருக்க முடியும்? மோடியின் ராஜகுரு சோ ராமசாமி (ஸ்ரீ நிவாச அய்யர் ) பார்ப்பனியத்தின் விதிப்படி தேவர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் குபேரனுக்கு குஜராத்தில்தான் ஆலயமே உள்ளதாம். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே இந்த ஆலயம்தான் என்று ஏதோ ஒரு சாதா ஜோசியர் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். அந்த குபேர ஆலயத்தில் குபேரனுக்கு விக்கிரகம் இல்லையாம். பாதாளம் வரை பாயும் பணத்திற்கு தனிச்சிறப்பாக எதற்கு ஒரு அடையாளம் என்று குபேரன் பெருந்தன்மையாக தவிர்த்திருக்கலாம்.

மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?

ஆத்மா சாந்தியடையட்டும் என்று சொல்ல ஆத்மாவில் நம்பிக்கையில்லாததால் , மரணத்தின் மூலமும் மன்னிக்க முடியாதவராகவே இந்த ” அம்மாவிற்கு” விடை கொடுக்க வேண்டியிருக்கிறது.
வினவு :மனித குலம் உருவான காலத்திலிருந்து மனிதனுக்கு அச்சத்தை தந்த ஒரு விடயம் மரணம். மரணம் பற்றிய பயத்தினால் தான் கடவுள் கூட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே மரணம் தந்த அச்சமே இப்போது தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மீது கட்டமைக்கப்படும் புனித பிம்பத்திற்கு காரணம்.
பெண் என்பதால் , அல்லது ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் புனிதமடைந்து விடுவாராயின் நமது அரசியல் நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது என்றே அர்த்தம். பெண் என்பதால் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வர்க்கம் சார்ந்து வேறுபடும்.

காங்கிரஸ் திமுக கூட்டணி டமால் ?ராகுல் மீது கோபத்தில் திமுக -..பீட்டர் அல்போன்ஸ்

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் மறுபடியும் கசப்பு உருவாகியிருக்கிறது. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவைச் சந்திக்க அக்டோபர் 7ஆம் தேதி தனி விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி, அப்பல்லோ சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களைச் சந்தித்து பேசி விட்டு டெல்லி சென்றார். அப்போது சென்னை வந்த ராகுல், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை என்பது சில சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கூட்டணி பற்றி சில கடுமையான கருத்துகளை வெளியிட்டார்.
பின்னர் தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலும், புதுச்சேரி நெல்லித்தோப்பில் இடைத்தேர்தலும் நடந்தது. தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் திமுக-வை காங்கிரஸ் ஆதரித்தது. புதுச்சேரியில் நாராயணசாமியை திமுக ஆதரித்ததோடு ஸ்டாலின் நாராயணசாமிக்காக பிரச்சாரமும் செய்தார்.

அப்போலோ மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக ஒரு நியுஸ் நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்


மின்னம்பலம்.காம் ஜெயலலிதா மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையிலும், அவர் படித்த பள்ளியான பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியிலும் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும் அவருடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் தனது வீட்டுக்கு வருமாறும், அவர்களுக்குச் சிறப்பான டீ தயார் செய்து அளிப்பதாகவும் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தன்னை தினந்தோறும் கவனிக்க வரும் மூன்று செவிலியர்களுக்கும் ‘கிங்காங்’ என்று ஜெயலலிதா செல்லப் பெயரிட்டு அழைத்துள்ளார். அவர்களிடம் ‘உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். நான் செய்கிறேன்’ என்று சிகிச்சையில் இருக்கும்போது ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முழு அதிகாராமும் எனக்கு வேண்டும்! சசியின் ஸ்டாண்ட் ( நாடு எக்கேடு கேட்டால்தான் என்ன?)

பல சிக்கல்களுக்கு இடையில் பன்னீர் முதல்வர் ஆனாலும்கூட அவருக்கு முள் மீது நிற்பதைப் போலத்தான் இருக்கிறதாம் முதல்வர் நாற்காலி. காரணம், தொடர்ந்து மிரட்டல்கள் வந்தபடியே இருப்பதுதான்! ஆனால், முதல்வரோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்கிறார்கள். ‘அம்மா உயிரோடு இருந்தபோதே அவரால் இரண்டு முறை முதல்வராக நியமிக்கப்பட்டவன் நான். எப்போதும் அம்மாவின் நம்பிக்கைக்கு உரியவனாகத்தான் நான் நடந்து (நடித்து) கொண்டிருக்கிறேன். அம்மா வளர்த்த கட்சியை எந்தக் காரணத்துக்காகவும் யார் மிரட்டலுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அது சிதைந்து போகவும் விட மாட்டேன்’ என்று தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லி வருகிறாராம் முதல்வர் பன்னீர்.
சசிகலா குடும்பத்தைப் பொருத்தவரை இன்னும் பன்னீர் முதல்வர் ஆனதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. சசிகலா குடும்ப உறவுகள் அத்தனையுமே அதைத் தொடர்ந்து சசிகலாவிடம் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, கார்டன் பக்கமே வரக்கூடாது என ஒதுக்கி வைத்திருந்தவர்கள் எல்லாம் இப்போது கால் மீது கால் போட்டு உட்கார்ந்து அதிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்”

ஜெயாவுக்கு மார்படைப்பு வந்தபோது அருகில் ஒருவரும் இல்லை .. நர்ஸ் தகவல்

உடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு மாரடைப்பு வந்தது என தகவல் வெளியானது. அப்பல்லோ நிர்வாகமும் அந்த தகவலை அறிக்கையில் உறுதி செய்தது. கடந்த 5ம் தேதி (திங்கட் கிழமை) அவர் மரணமடைந்தார். இந்நிலையில், அன்று அவருக்கு என்ன நடந்தது என்பதை அப்பல்லோ நர்ஸ் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். “நாங்கள் அவரின் அறைக்குள் நுழைந்ததுமே அவர் எங்களைப் பார்த்து அழகாக புன்னகைப்பார். எங்களிடம் சிரித்துப் பேசுவார். ஆனால், கடந்த ஞாயிற்றுகிழமை, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவரின் அறைக்குள் சென்ற போது அவர் சிரிக்கவும் இல்லை. பேசவும் இல்லை. சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவருடைய வெண்டிலேட்டர் கருவியை சோதனை செய்து பார்த்த பின்புதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர். அதன்பின் அவர் கண் திறக்கவேயில்லை. திங்கட் கிழமை மரணமடைந்தார்” என 75 நாட்கள் அவருக்கு உதவிகள் செய்து வந்த நர்ஸ் ஒருவர் கூறியுள்ளர். வெப்துனியா .காம்

விகடன்: எப்போது உயில் எழுதினார் ஜெயலலிதா?!' - சசிகலாவை திணறடிக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்

ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா.
 மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய பொது தகவல் அலுவலர், ராஜ்பவனுக்கு நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார். அதன் விவரம்:
* முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல் நடைபெற்றது. அதில் மத்திய அரசு சார்பாக கலந்து கொண்ட நபர்களின் பெயர், பணி பொறுப்பு, விவரம் தர வேண்டும்.
* இறுதி சடங்கில் முப்படையினர் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் முப்படையில் என்னென்ன பணி பொறுப்பில் உள்ளார்கள் என்ற விவரம் தர வேண்டும்.

ரெயில்கள்-பஸ்களில் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது: மத்திய அரசு

500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரெயில்கள்-பஸ்களில் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது: மத்திய அரசு புது டெல்லி: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் இரவு அறிவித்தார். மேலும் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் மோடி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கு சென்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் பழைய நோட்டுக்களை இப்போது டெபாசிட் மட்டும் செய்து வருகின்றனர். ரெயில், பஸ், மருத்துவமனை போன்ற அத்யாவசிய சேவைகளுக்கு பழைய நோட்டுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

சசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறும் மோடியின் நோக்கம் என்ன? - கி.வீரமணி பொளேர்..


K.Veeramani allegation on BJPசென்னை: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் 'கரிசனம்' அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்து மூன்று நாட்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் சில சக்திகள் தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரிகின்றன. வெங்கையா நாயுடுவுடன், பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்புt; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம்கூட காயவில்லை; அதற்குள் சிலரின் சீற்றம் ஆங்கில ஏடுகளின் வாயிலாக ஆரம்பமாகிவிட்டது. அதிமுகவின் எம்எல்ஏக்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.

பன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர் ரெட்டி வீட்ட்டில் 100 கிலோ தங்கம் ,70 கோடி புதிய நோட்டுக்கள் பிடிபட்டது



 IT officials raid in Sekar reddy houseவேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தி.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன. மேலும் சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக காட்பாடி, காந்தி நகர் 10-வது தெருவில் உள்ள வீட்டில் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டை வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜெ சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி



மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இன்று மாலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்
இரண்டாம் நாளான இன்று, அவரது சமாதிக்கு உறவினரான தீபா, பால்,பூ முதலிய பொருட்களுடன் அஞ்சலி செலுத்த வந்தார்.அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தீபாவைக் கண்ட பொதுமக்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.அதனால் அங்கு கூட்டம் ஏற்பட்டது. பின்னர், போலீஸார் துணையுடன் தீபா பத்திரமாக கிளம்பிச் சென்றார். முகநூல் பதிவு உமா

நீதிமன்ற காப்பகத்தில் ஜெயாவின் 750 செருப்புகள், 10,500 புடவைகள்,800 கிலோ வெள்ளி,தங்கம் .....


பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். இந்த வழக்கு இப்போது என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டால் அத்தோடு அந்த பிரச்சினை ஓயும். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் பட்சத்தில் ஜெயலலிதாவின் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள அவரது பொருட்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். 1991-1996ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சுமார் 66.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை குவித்தார் என்பது ஜெயலலிதாவின் மீதான குற்றச்சாட்டாகும். 800 கி.கி வெள்ளி, 750 ஜோடி செருப்புகள், 10,500 புடவைகள் மற்றும் 91 கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களை வழக்கிற்காக இணைத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் கண்ணீர்!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். ஜெயலலிதாவின் அப்பா ஜெயராமின் முதல் மனைவி ஜெயாவின்  மகனான வாசுதேவன் மைசூரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பேட்டியளித்துள்ள வாசுதேவன் “எனது தங்கை ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை, அவர் எனது தந்தை இரண்டாவது மனைவியின் மகளாக இருந்தாலும் ஜெயலலிதாவை நான் எனது சொந்த தங்கையாகவே நினைத்து வந்தேன். எனது மனைவி மற்றும்  மகனின் மறைவால் தவித்து வந்த எனக்கு ஜெயலலிதாவின் மரணம் மிகவும் பாதித்துள்ளது.
தலைவியை இழந்த  தமிழ்நாட்டு மக்களுக்கு வலியை தாங்கிக் கொள்ளும் சக்தியை சாமுண்டீஸ்வரி தேவி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். லைவ்டே.இன்

கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து சசிகலா கொலை செய்திருக்கிறார்.வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் அவரின் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெலலிதா மருத்துவமனையில் அனுமதித்திலிருந்து அவரின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தது வரை பல்வேறு சந்தேகங்களையும், அதிர்ச்சி நிகழ்வுகளும் சமூக வலைத்தளங்களில் செய்திகளாக பரவி வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோவில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்து விவரம் அவரிடம் இருப்பதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து சசிகலா கொலை செய்திருக்கிறார் என்று அவர் பேசியுள்ளார்.

சசிகலா ஜெயலலிதாவை தள்ளி விழுத்தியதால் ஜெயா நினைவிழந்தார்? தடுக்கப்போன பணிப்பெண்ணையும் சசி அடித்தார்?

கடந்த செப், 22 ஆம் தேதி 2016 அன்று காலை 08.50 மணி அளவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முதல் தளத்தில் சசிகலாவுக்கும், ஜெ., வுக்கும் இடையே தனது குடும்பத்தாருக்கு பதவி கேட்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்கு வாதமாக மாறியதில் சசிகலா ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்கும் அளவிற்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது.
பின்னர் சசிகலாவால், ஜெயலலிதா கீழே விழுந்து விட்டார். அப்போது ஜெயலலிதாவின் வீட்டின் பணியாளரான திண்டுக்கலை சேர்ந்த  இளம்பெண் ஜெயலலிதா தரையில் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை தூக்கி விட முற்பட்ட போது சசிகலா தடுத்ததாகவும், உடனே அந்த பெண் செக்யூரிட்டி அதிகாரியை அழைக்க கதவை திறக்க முயன்ற போது , அந்த பெண்ணை இழுத்துப் போட்டு அடி,அடி என்று அடித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்தே யாருக்கோ போன் செய்த சசிகலா என்னை வீட்டை வீட்டு வெளியே போக சொன்னாள். நான் மறுக்க எங்களுக்குள் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக அவள் கீழே விழுந்து விட்டாள் என்று கூறியுள்ளார்.
பின்பு 10.10 மணி அளவில் செக்யூரிட்டியை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் என்ன கூறினாரோ தெரியவில்லை. தனது சொந்தங்கள் முன்னிலையில் மருத்துவமனைக்கு நீதிபதியை அழைத்துச் சென்று இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் பெயரில் ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களும் உயில் பத்திரம் எழுதப்பட்டது என்ற ஒருஅதிர்ச்சி தகவல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முற்றிலும் இது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அல்லது பரவிக்கிடக்கின்ற சந்தேகங்களைத்தான் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. இது உண்மையா அல்லது பொய்யா என்ற கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு எழுகின்ற பொதுவான சந்தேகங்கள் தான் இவைகள்.  http://liveday.in/general/sep-22-secrets/

ஜெ’ இல்லம் நினைவிடம் ஆக்க வேண்டும்: சசிகலா புஷ்பா!

கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தைத் தழுவ, அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இதற்கு துணிச்சலாக பதில் கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“ஜெயலலிதாவின் மறைவு எனக்கு அரசியல்ரீதியாக பேரிழப்பாகும். என்னை அரசியலில் உருவாக்கிவிட்ட ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றபோது போலீஸ் நடத்திய விதம் வேதனையளித்தது. ஒரு எம்.பி. என்றும் பாராமல் என்னை போலீஸார் கீழே பிடித்து தள்ளினர். அத்தனை தடைகளையும் மீறி என் தாயை தரிசித்துவிட்டு வந்தேன்.
சிந்திக்க வேண்டும்

ஜெயலலிதாவின் உயில் ! ஒவ்வொரு சொத்துக்கள் வாங்கும் போதும் புதிதாக ஒரு உயில் எழுதுவது அவரது வழக்கம்

ஜெ.வுக்கு சொந்தமாக அவரது பெயரி லேயே உள்ள அசையும்-அசையா சொத்துகள் இவை. இவற்றை வேட்புமனு தாக்கலிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

* 79 (31 ஏ), போயஸ்கார்டன், கத்தீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-86 சொத்துமதிப்பு: 10,220 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் -1 டூ 4 தளத்தில் தனிக் கட்டிடம் * 424(614). அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06

சொத்து: காலியிடம் *
 442/18 ஏஎ (602/18) பர்சு மேனர், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06
சொத்து: 180 சதுர அடி * 81(36), போயஸ் கார்டன், கத்தீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-86 21,662 சதுர அடியில் 0 டூ 3 தளத்தில்

தனிக் கட்டிடம் * 213/இ செயிண்ட் மேரிஸ் சாலை, மந்தவெளிப்பாக்கம், சென்னை-28