சனி, 21 செப்டம்பர், 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?' - தீவிரம் காட்டும் தி.மு.க, அ.தி.மு.க

தி.மு.க - காங்கிரஸ்கலிலுல்லா.ச - vikatan : காங்கிரஸின் நிலைப்பாடு வெற்றி என்ற இலக்கை நோக்கித்தான் இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும், அவர்கள் கட்சி நின்று வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானவர் ஹெச்.வசந்தகுமார். நாடாளுமன்றத் தேர்தலின்போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், பொன்.ராதாகிருஷ்ணனைத் தோற்கடித்து, எம்.பி-யானார். இதையடுத்து, அவர் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், நாங்குநேரி தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது.
``இடைத்தேர்தல் வரவிருக்கிறது. திருநாவுக்கரசரிடம் ஒரு வேண்டுகோள். நாங்குநேரித் தொகுதியைத் தி.மு.க-வுக்குக் கொடுக்க வேண்டும்” என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்தார் உதயநிதி. மீண்டும் நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கருத்து, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

சி. என்.ஏ(அண்ணா)தான் இந்திபேசாத மாநிலங்களின் டி.என்.ஏ! – மே.வங்கம்..கர்க சட்டர்ஜியுடன் ஓர் உரையாடல்..

அறிஞர் அண்ணாவும் இந்தித் திணிப்பும்tamil.asiavillenews.com - அபிஷேக் நாகன் : மேற்கு வங்கத்தைச்
சேர்ந்த பேராசியர் கர்க சட்டர்ஜி, மாநில உரிமைகள், இந்தி எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஏசியாவில் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.
இன்று மாநிலங்களின் உரிமைக்காக ஹிந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் குரலை உயர்த்தி வருவதற்குத் தமிழகமே முன்னோடி. இதை இன்றும் நினைவுகூர்கிறார் வங்காளியான கர்க சட்டர்ஜி. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் இந்தி திணிப்புக்கு எதிராகவும்
, மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதையும் எதிர்த்துத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

ஹிஜாப் பிறந்த கதை.. .ஸ்வ்தா என்ற கிழவிக்காக கொண்டு வரப்பட்டது அதை தான் இன்று 2 வயது குழந்தை முதல்...

Saadiq Samad : இஸ்லாத்தை தூக்கி நிறுத்தும் இந்த ஹிஜாப் ,புர்கா,நிகாப்
கதைகளுக்கான முதற்புள்ளியை ஹதீஸ்களிலிருந்தே பார்ப்போம்
ஸவ்தா(ரலி) அவர்கள் சம்பந்தமாகவே ஹிஜாபுடைய வசனம் அருளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காலை கடன்களை கழிக்க ஸவ்தா(ரலி) வெளியே செல்லும் போது மிகவும் சிரமப்பட்டார்கள்,(வயது முதுமை காரணமாக இருக்குமோ) இதனைபார்த்த உமர்(ரலி) அவர்கள், இறைதூதரின் மனைவிமார்கள் பர்தா அணிந்தால் நன்றாக இருக்குமே?, என்று நபி(ஸல்) அவர்களிடம் கூற, சில நாட்களில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற இறைவசம் அருளப்பட்டது.
(ஹதீஸ் சுருக்கும் புஹாரி/முஸ்லிம் )
இதுதான் இன்றும் நம்ம மூமினாக்கள் என் உடை என் உரிமை என் அழகு என் கணவனுக்கு மட்டுமே .என்று சொல்வதாக ஆண் மூமினாக்கள் கூறுவதற்கான அடிப்படை செய்தி
உமர் எதுக்கு கக்கூஸுக்கு போகும் ஸ்வ்தாவை பின் தொடர்ந்து பாக்கணும் ? பெண்கள் கழிவறை பகுதிகளில் இந்த கிழட்டு பய உமருக்கு என்ன வேலை?
அந்த மூதாட்டி காலை கடனை கழிக்கிற இடத்திற்கு உமர் நீ ஏன் போன?..
இவனுங்கதான் இஸ்லாத்தின் கலிஃபாக்களாம் இவனோட நாக்கிலிருந்துதான் அல்லாஹ் பேசினானாம் ( இந்த உமரை தான் நம்ம காந்தி சிலாகித்து பேசியதும் என்பதை கவனத்தில் கொள்க வாய்ப்பு இருக்கும்போது உமர் எப்படிப்பட்ட முட்டாள் முரடன் அயோக்கியன் என்பதை பதிவு செய்கிறேன்)
சரி ஸவ்தா யாரு ? இளம் குமரியா? அந்த கதை என்ன? அதையும் ஹதீஸ் வழி பார்த்து விடுவோம்

நாங்குநேரியில் குமரி அனந்தன் போட்டி?

பாஜகவின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் அப்பா இவர் .. காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் அண்ணன் இவர்
தினமணி : தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும்
அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சனிக்கிழமை அறிவித்தார். இதையடுத்து விக்ரவாண்டியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் அறிவிப்பு : நாங்குநேரியில் காங்கிரசும் விக்கிரவாண்டியில் திமுகவும் !.. அக்., 21 தேதி தேர்தல்

stalinnakkheeran.in - stalin : மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
இதனால், அந்த 3 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என சில வாரங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார்.
இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 வயது சிறுமி நாசம்.. உயிரோட விடாதீங்க.. கொந்தளித்த மக்கள் ..

அலறல் tamil.oneindia.com - hemavandhana : 4 வயது சிறுமியை நாசம் செய்தவரை கட்டி வைத்து உதைத்த மக்கள்-வீடியோ திருப்பூர்: "அறுத்துப்புடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க..." என்று கொதித்து போய் சொல்லி செருப்பை கழட்டி அந்த நபரை வெளுக்கிறார்கள் பெண்கள்! காரணம்.. 4 வயது குழந்தையை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் இந்த காமுகன்!
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு வயது 34 ஆகிறது. பனியன் தொழிலாளியாக உள்ளார். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் வழக்கமாக தெருவில் விளையாடி கொண்டிருப்பார்கள்.
அப்படித்தான் 4 வயது குழந்தை கந்தசாமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.
இன்று காலை முதலே குடிபோதையில் இருந்த கந்தசாமி, வீட்டருகே விளையாடும் குழந்தையை பார்த்துவிட்டான். உடனே தன் வீட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கி உள்ளார்.

வீடியோ - சிக்கிய சென்னை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மோகன் ராவ் .. கதறிய குழந்தைகள்; மருமகளுக்கு `பைத்திய' பட்டம்!


ramamohana rao

 Sindhu Sharmaவிகடன் : சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ராமமோகன ராவ் தன் மருமகளைத் தாக்கியதாக வெளியாகும் வீடியோவால் அவரது குடும்பம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஹைதராபாத்தில் ஒரு பெண்ணை மொத்தக் குடும்பமும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்ணை, அடிப்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமமோகன ராவும் அவரது குடும்பமும் என்பது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ ஏப்ரல் மாதம் 20-ம் தேதி எடுக்கப்பட்டது. இரவு 11 மணிக்கு மேல் ராமமோகன ராவின் மகன் வசிஸ்டாவுக்கும் அவரின் மனைவிக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் வசிஸ்டா அவரின் மனைவி சிந்து சர்மாவை சோபாவில் தள்ளுகிறார். அவரைத்தொடர்ந்து ராமமோகன ராவும் தன் மருமகளை அடித்துத் துன்புறுத்துகிறார். தொடர்ந்து கடுமையாக அவரிடம் பேசுகிறார்.

சென்னை பெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... அரிவாள்வெட்டு .. மூளையை எடுத்து தட்டில் வைத்த கொடூரம்

மூளை tamil.oneindia.com - hemavandhana.: பெண்ணின் உடையை கிழித்த ரவுடி, கொந்தளித்த 2 பேர்.. சரமாரி அரிவாள் வெட்டு! சென்னை: பெண்ணின் டிரஸ்ஸை ரவுடி அறிவழகன் கிழித்துவிட்டாராம்..
இந்த ஆத்திரத்தில்.. சாப்பிட்டு கொண்டே இருந்த அறிவழகனின் தலை, கை, கால், முகத்தினை 2 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்து, மூளையை தனியே எடுத்து ஒரு தட்டில் வைத்து தப்பியும் விட்டது.
திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் அறிவழகன். 24 வயதாகிறது.
இவர் ஒரு ரவுடி. கொலை வழக்கு கூட இவர்மீது பதியப்பட்டு உள்ளது. ரவுடி பல்புகுமாரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியே இந்த அறிவழகன்தான்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி இருக்கும். அறிவழகன் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, 2 பேர் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் கையில் அரிவாள் உள்ளிட்டவைகளை பார்த்ததும், அறிவழகன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அந்த 2 பேரும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர்.

சவுதிக்குள் அமெரிக்க ராணுவம் நுழைகிறது

சவுதிக்குள் நுழையும் அமெரிக்க ராணுவம்!மின்னம்பலம் : சவுதி எண்ணெய் ஆலை மீதான தாக்குதலுக்கு பின்னர் சவுதி அரேபியாவின் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா தன் ராணுவத்தை அனுப்புகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று(செப்டம்பர் 20) சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகளை அதிகரிக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்ப ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக பெண்டகனிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியில், முதற்கட்டமாக அமெரிக்கா அளவான எண்ணிகையில் ராணுவத்தை அனுப்புகிறது என தெரிவித்திருக்கிறது. மேலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இராணுவ உபகரணங்களை விரைவாக வழங்குவதற்கான திட்டங்களையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

மோடி- ஸ்டாலின்... பயந்தது யார்? சீன அதிபர் வரும்போது திமுகவின் போராட்டம் ... பயந்த பாஜக?

டிஜிட்டல் திண்ணை: மோடி- ஸ்டாலின்... பயந்தது யார்? மின்னம்பலம் :  மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“ஆளுநர் மாளிகை என்பது எப்போதுமே கட்சி அரசியலில் இருந்து விலகி நின்று, அரசியல் அமைப்பு சாசன கடமையைச் செய்யும் அலுவலகம் என்றுதான் பல சந்தர்ப்பங்களில் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் மோடி பிரதமர் ஆனதிலிருந்தே ஆளுநர் மாளிகையும் பகிரங்கமாகக் கட்சி அரசியல் செய்யும் ஒரு களமாகிப் போனது என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் இதற்கு முன்னர் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இரு அணிகளாக இருந்த எடப்பாடியையும், ஓ.பன்னீரையும் தன் இரு கைகளால் சேர்த்து வைத்த புகைப்படம் ஆளுநர் மாளிகையின் அரசியலுக்கு உதாரணமாக இருந்தது. அதே வரிசையில் இப்போது போட்டோ இல்லையே தவிர, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் மாளிகைக்கு திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்துப் பேசியதும் பக்கா அரசியலாகவே கருதப்படுகிறது. ஆளுநர் மாளிகை மூலம் ஸ்டாலின் மிரட்டப்பட்டார் என்றும், மத்திய அரசுதான் ஸ்டாலினின் போராட்டத்தைக் கண்டு மிரண்டுவிட்டதாகவும் இருவேறு பார்வைகளில் இரு வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கட்டுமானத்துறையில் அரசாங்கமே முதல்போடாத பார்ட்னர்! 75% பங்குபயனை அடைகிறது!


Sundar P : கொள்ளைக்கார உலகம்:-
ஒரு பில்டர் சென்னையில் 1.5 கோடிக்கு 1000 சதுரமீட்டர் இடம்வாங்குகிறார்.
பத்திரசெலவு மற்றும் பதிவுகட்டணம் 11% = 16.5 லட்சம்
அதில் 1300 சதுரமீட்டரில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டுகிறார் என்றால் அதன் அதன் கட்டுமான செலவு 1300 x 20000 = 2.6 கோடி
இதர செலவுகள்:
-ஆர்க்கிடெக்ட் 3% (7.8 லட்சம்),
-ஸ்ட்ரெச்சுரல் 2% (5.2 லட்சம்)
- கட்டுமானசெலவில். அபிவிருத்திகட்டணம் @200 சதுரமீட்டருக்கு (2.6 லட்சம்)
- மேல்நிலைத்தொட்டி (5லட்சம்)
மொத்தம் = 1.8 கோடி
பில்டர் 13 வீடுகள் ஒவ்வொரு வீடும் 100 சதுரமீட்டரில் கட்டுகிறார்.
அதன் ஒன்றின் விலை 45 லட்சம் என விற்கிறார்.
பிளாட் வாங்குபவரின் செலவுகள் :
வீட்டின்விலை 45 இலட்சம்
GST 5.6 லட்சம்
ஆவணசெலவு 1.35 லட்சம்
பதிவுகட்டணம் 90 ஆயிரம்
போன்றவற்றை பிளாட் வாங்குபவர் செலவுசெய்கிறார்
பில்டர் 1% வாட்வரியாக 45 ஆயிரம்கட்டுகிறார்
ஆகா மொத்தம் ஒரு வீடு விற்கப்படும்போது ஒரு வீட்டுக்கு 8.3 லட்சம் ரூபாய் அரசு வசூலிக்கிறது
13 x 8.3 இலட்சம் = 1.8 கோடி

உதித் சூர்யா விஷயத்தில் நீட்டே முதல் குற்றவாளி ... அனிதாவை அரசு ஏமாற்றியது ! உதித் அரசை ஏமாற்றினார்!

Devi Somasundaram : சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா ..அப்பா வெங்கடேசன் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல டாக்டர் .
உதித் நல்லாப் படிக்கின்ற மாணவர் என்று ஒரு தரப்பு சொல்கிறது ( +2 ல 1107 மார்க் என்கிறார் அவர் நண்பர் ) .
சென்னைல கோச்சிங எடுத்து முதல் நீட் அட்டெம்ப்ட்ல தோல்வி ..மருத்துவ படிப்பு உதித்க்கு கனவுப் படிப்பு..அதனால் செலவு செய்து ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்றிருக்கிறார் .
மொழிப் பிரச்சனை, ஊர் ஒத்துக் கொள்ளாமையால் டிஸ்கண்டினியு செய்து இந்தியா வந்திருக்கிறார் .
மீண்டும் நீட் எழுதி மீண்டும் பெயில். மருத்துவப் படிப்பின் மீது இருந்தக் காதலால் விடாமல் முயல
மூன்றாம் முறை பாம்பேயில் கோச்சிங எடுத்துள்ளார் .
அங்கு தான் தேர்வும் எழுதி இருக்கின்றார் .அதில் தான் ஆள்மாறாட்டம் என்பது செய்தி .
அனிதாவுக்கு நடந்தது தான் உதித்துக்கும் நடந்துள்ளது .
இருவருக்கும் மருத்துவம் படிப்பது ஆவல் .
இருவரும் நல்ல மார்க் எடுத்துள்ளனர் .
அனிதா கோர்ட் வரை சென்று நேர்மையாத் தன் உரிமைகாக போராடினார் .. அரசு அவளை ஏமாற்றியது .
உதித் அரசை ஏமாற்றியுள்ளார் ..
அனிதாவுக்கு நீட் என்பதே ஆள்மாறாட்டம் தான் ..அனிதாப் படித்த கல்விக்கு சம்பந்தமில்லாத தேர்வு அவர் வரை அரசு செய்த ஆள் மாறாட்டம் .
உதித் அதையே அரசுக்கு திருப்பி செய்துள்ளார் .
அனிதாவுக்கு அவர் எழுதிய தேர்வு சம்பந்தமில்லாதது .
உதித் விவகாரத்தில் தேர்வு எழுதியவர் சம்பந்தமில்லாதவர்
உதித் அவர் +2 மார்க் அடிப்படையில் ஈஸியா சீட் கிடைத்திருக்கும் ..நீட் அவர் மீது திணிக்கபட்டதால் அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார் .
அனிதா அப்பாவி தற்கொலை செய்து கொண்டார்..உதித் அரசை கொலை செய்திருக்கிறார் .

மந்திரத்துக்கு மரியாதை... பாஜக தலைவர்களின் கணக்கு வழக்கில்லாத முட்டாள் கருத்துக்கள்

savukkuonline.com : மோடி
உள்ளிட்ட பிஜேபி தலைவர்கள், அறிவியலுக்கு புறம்பாக, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவது ஒன்றும் புதிதல்ல.  இந்த முட்டாள்த்தனமான உளறல்களுக்கு அடிப்படை அமைத்துக் கொடுத்ததே மோடிதான்.
அக்டோபர் 2014ல், பிரதமராக ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி, “மகாபாரதத்தில் கர்ணன் அவர் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை.  மகாபாரத காலத்திலேயே, ஜெனடிக் அறிவியல் வளர்ந்திருந்தது.  அந்த அடிப்படையில்தான் கர்ணன், அவரின் தாயின் வயிற்றில் பிறக்காமல் வெளியில் பிறந்தார்.
நாம் அனைவரும், பிள்ளையாரை வணங்குகிறோம்.  அந்த காலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யும், அறுவை சிகிச்சை நிபுணர் இருந்ததால்தான், மனிதனின் உடலில் யானையின் தலையை வைக்க முடிந்தது” என்றார்.   மோடி இவ்வாறு பேசியது, மும்பையில் மருத்துவர்களின் இடையே என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜேபி எம்.பி பிரக்யா தாக்கூர், பசு மாட்டின் மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும் என்றார்.  ஜனவரி 2019ல், இந்திய அறிவியலாளர்கள் மாநாட்டில் பேசிய, ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஸ்வர ராவ், மரபணு ஆராய்ச்சி மற்றும், செயற்கை கருத்தரிப்பு மூலமாகத்தான், மகாபாரதத்தில் கவுரவர்கள் 100 பேர் ஒரே தாய்க்கு பிறந்தார்கள் என்றார். திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், மகாபாரத காலத்திலேயே இண்டெர்னெட் இருந்தது என்று கூறினார்.
இப்படி இவர்கள் உளறுவது புதிதல்ல என்றாலும், இத்தகைய முட்டாள்த்தனங்களுக்கு, அங்கீகாரம் அளித்து, மக்கள் வரிப் பணத்தில் இது குறித்து ஆராய்ச்சி செய்வது, இப்போது தொடங்கியிருக்கிறது.

ஈரான் . தெருவில் கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை அறிவிப்பு ! – அதிர்ச்சி செய்தி!

iran வெப்துனியா :  ஈரானில் வறுமை காரணமாக உடல் பாகங்களை மக்கள் விற்று வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியதிலிருந்தே பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. ஏகப்பட்ட பொருளாதார தடைகளால் ஏற்கனவே சீர்குலைந்த ஈரான் மேலும் பொருளாதாரரீதியான சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.

ஸ்டாலின் : இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும்: கீழடி ஆய்வறிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்

indian-history-the-state-no-longer-has-to-watch-out-as-far-as-an-excuse-to-say-at-least-now-realize-kiladi-to-study-stalin hindutamil.in :  சென்னை கீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட் நகரில் மத்திய அரசு, "சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்று அறிவித்துள்ளது. அதைப்போலவே கீழடியிலும், சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது, தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.
தமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம் பெரும் பழைமையான நாகரிகம் என்பதற்கு அசைக்க முடியாத சிறப்பான ஆதாரங்களும் கிடைத்திருப்பது; ஒவ்வொரு தமிழர் மனதிலும் பெருமித உணர்வு ஊற்றெடுத்துப் பொங்க வைத்துள்ளது.

நிர்மலா சீதாராமனின் கார்பரேட் வரிச்சலுகை அறிவிப்பு... காப்பறேட்டுக்களுக்கு பம்பர் பரிசு!

corportate tax, nirmala sitharaman, tax rate cut, indian express, gst meeting, indian economy, sexsex today, indian expresstamil.indianexpress.com : உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 22 சதவீதமும் புதிய உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு 15 சதவீத கார்பரேட் வரி என்ற...
உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 22 சதவீதமும் புதிய உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு 15 சதவீத கார்பரேட் வரி என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவாவில் இன்று (செப்., 20) நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு வரி சலுகைகளை அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால் இந்த சலுகைகளை அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரிகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும். கார்ப்பரேட் வரி அடிப்படையில் நாம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணையாக இருக்கிறோம்.

தூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்!

tamil.oneindia.com -hemavandhana : கனடாவில் மனைவியை கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்-
டோரண்டோ: "வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சுதான் எங்க பொண்ணை தந்தோம். இப்போ எங்க வீட்டு விளக்கு அணைந்துவிட்டது.. தூக்குல போடுங்க அவனை" என்று கொதித்து போய் சொல்கின்றனர் பெற்றோர்!
தர்ஷிகாவுக்கு வயசு 27. இலங்கை வாழ் தமிழர். இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர்.
தனபாலசிங்கத்துக்கு கனடாவில் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தர்ஷிகா இலங்கையில்தான் தங்கியிருந்தார். பிறகு 2017-ல்தான் கனடா சென்றார்.

தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை"... அமைச்சர் ஒ.எஸ். மணியன் அருள்வாக்கு

admk
நக்கீரன் : அண்மையில் மதுரை ரயில்வே கோட்டப் பணியில், பொறியியல் பிரிவில் பணியில் அமர்த்தப்பட்ட 189 பேரில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவிகித பேரும், வட மாநிலத்தவர் 70 சதவிகித பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். பின்பு இரண்டாம் கட்ட பணியான தண்டவாள பராமரிப்பு பணியில் அமர்த்தப்பட்ட 262 பேரில், 223 பேர் வடமாநிலத்தவரும், 39 பேர் மட்மே தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.
மற்ற இதர பிரிவில் பணியில் அமர்த்தப்பட்ட 89 பேரில், 84 பேர் வடமாநிலத்தவரும், 5 பேர் மட்மே தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் ரயில்வே தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக இளைஞர்களின் திறமையின்மை தான் காரணம் என்று அதிமுக அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐடி ஊழியர் டேனிதா மரணம் : வலுக்கும் சந்தேகம்

ஐடி ஊழியர் மரணம் : வலுக்கும் சந்தேகம் !மின்னம்பலம் : சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ். இருபத்துநான்கு வயதாகும் இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பிட் பூங்கா சாலையில் அமைந்துள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நாள் வேலைக்கு வந்துள்ளார்.
வேலைக்கு வந்த அவர், செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு அலுவலகக் கட்டிடத்தின் 8-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். டேனிதா கீழே விழுந்த அதே வேகத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

தென் மாவட்ட தொழிலுக்கு ஆபத்து!.. மத்திய அமைச்சரின் உத்தரவால்...

மத்திய அமைச்சரின் உத்தரவு:  தென் மாவட்ட  தொழிலுக்கு ஆபத்து! மின்னம்பலம் : வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வர்த்தகம் தமிழ்நாடு முழுதும் நடைபெறுகிறது. வட மாவட்டங்களில் முந்திரி ஏற்றுமதி நடைபெறும். தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நடைபெறும்.
தென் மாவட்ட ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது மத்திய அரசின் மதுரை மண்டல வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் அலுவலகம். தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் வெளிநாட்டு வர்த்தக மண்டல இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் இருக்கும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மண்டல இயக்குனர்அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைப்பது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் முடிவெடுத்திருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோல மண்டல அலுவலகங்களைக் குறைத்து ஒன்றோடொன்று இணைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.
அந்த வகையில் வரும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் மதுரை மண்டல இயக்குனர் அலுவலகத்தில் இருக்கும் ஃபைல்கள், உட்கட்டமைப்புகள் ஆகியவற்றை சென்னை அலுவலகத்தோடு இணைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் எக்ஸ்போர்ட் தொடர்பான புதிய விண்ணப்பங்களை 16 ஆம் தேதியிலிருந்து சென்னை அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை

நீட் தேர்வுநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைமாலைமலர் : நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மாணவன் உதித் சூர்யா மற்றும் ஹால்டிக்கெட்டில் இருந்த புகைப்படம்!
தேனி: சென்னை தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகன் உதித்சூர்யா (வயது 21). மும்பையில் உள்ள ஒரு மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். இவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதும், மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததும் தெரிய வரவே தேனி க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர் உஷா தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டுள்ளதால் அருகில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்து வெங்கடேசன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டது தெரிய வந்துள்ளது.

சந்திரலேகாவும் ..சசிகலாவும் .. தொடரும் விசித்திர பந்தம் ..

சாவித்திரி கண்ணன் : அதிர்ச்சியடைவதா? ஆச்சரியப்படுவதா?
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
என்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதா?
சந்திரலேகா கடலூர் மாவட்ட கலெக்டராக இருக்கும்போது அங்கே வேலை பார்த்தவர் நடராஜன்.
நடராஜன் தன் மனைவி சசிகலாவை சந்திரலேகாவிற்கு அறிமுகப்படுத்தியது முதல் சந்திரலேகாவிற்கு சம்பளமில்லா வேலைக்காரியாக தன்னை தகவமைத்து, அவரது மனதில் இடம் பிடித்து அவரது சிபாரிசில் ஜெயலலிதாவிற்கு அறிமுகமானவர் தான் சசிகலா!
அப்படி அறிமுகமான சசிகலா ஒரு அதிகார மையமாக ஆகி, ஜெயலலிதாவுடன் இணைந்து, சட்டத்துக்கு புறம்பாக தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள மறுத்த சந்திரலேகாவை ’ஆசிட்’ ஆபத்துக்கு இரையாக்கியது வரலாறு!
அந்த சோக சம்பவம் மக்களின் மனதில் சந்திரலேகாவிற்கு மிகப் பெரிய அனுதாபத்தை பெற்றுத் தந்தது.
அப்படி பாதிக்கப்பட்ட சந்திரலேகா இன்று சசிகலாவை சந்திக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
ஒரு காலகட்டம் வரை நான் சந்திரலேகா அவர்கள் மீது நல்ல மரியாதை கொண்டிருந்தேன்.
அவர் பிராமணப் பெண்ணாக இருந்தாலும் தலித் இளைஞரை திருமணம் செய்யும் அளவுக்கு முற்போக்கு உள்ளவராக இருந்தார். (அந்த திருமணம் பிற்காலத்தில் முறிவானது வேறு விஷயம்!)

விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது - முயற்சிகள் பலன் அளிக்கவில்லை!

விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது - மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை
மாலைமலர் : விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
 பெங்களூரு: சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகமெங்கும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அத்தனை நாடுகளிலும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடிப்படை காரணம், வளர்ந்த நாடுகளால் கூட இதுவரை தரை இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத, நிலவின் தென் துருவப்பகுதியை சந்திரயான்-2 விண்கலம் குறி வைத்ததுதான். 
ஒவ்வொரு கட்டத்தையும் விக்ரம் லேண்டர் நிச்சயித்தபடி வெற்றிகரமாக கடந்து கொண்டிருந்தது. 7-ந் தேதி அதிகாலையில் நிலவின் தென் துருவப்பகுதியில் விக்ரம் லேண்டர் எப்படியும் மெல்ல மெல்ல தரை இறங்கி விடும் என்று ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு எதிர்பார்த்தது. பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் டி.வி.க்கள் முன்பாக அமர்ந்து கொண்டிருந்தனர்.
அதிகாலை 1.30 மணியில் இருந்து விக்ரம் லேண்டரை சரியாக தரை இறக்க செய்வதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். விக்ரம், கடினமான இடங்களை எல்லாம் கடந்து தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று தெரியவந்தது.

இனி, டாக்டருக்குப் பதில்... மெடிக்கல் ஏடிஎம்!

இனி, டாக்டருக்குப் பதில்... மெடிக்கல் ஏடிஎம்!மின்னம்பலம் : வங்கிகளில் சென்று காசோலையை நிரப்பி பணப்பரிவர்த்தனைகள் செய்ததை ஏடிஎம் இயந்திரங்கள் எளிமைப்படுத்தியதுபோல, இனி க்ளினிக்குகளுக்குச் சென்று டாக்டருக்காகக் காத்திருப்பதை மெடிக்கல் ஏடிஎம்கள் எளிமைப்படுத்தப் போகின்றன.
ஏடிஎம் எனும் மின்னணு இயந்திரம், பொதுமக்களுக்கு அவர்களது அருகாமையிலேயே பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அதேபோல, காத்திருப்பு இல்லாத அதிவிரைவான மருத்துவ சோதனையை இனி ஏடிஎம் போன்ற இயந்திரத்தில் கிடைக்கும் வகையில் ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது ஸ்வயம் ஏஹெச்எம்.

காட்டுவாசிகளிடம் கற்றவை - 7. பழங்குடிகள் பாரம்பரிய மருத்துவம் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 7
மின்னம்பலம :மருத்துவ அத்தியாயம் -நரேஷ்
‘‘ஒரு பழங்குடிப் பெண் எங்கிட்ட சொன்னா, ‘நாங்க யானையோட நஞ்சை எடுத்து வெச்சிப்போம். ஒரு புள்ளைக்குப் பிரசவம் ஆகப் போவுதுன்னா விட்டத்துல கயிற்றைக்கட்டி, அவளை உட்காரும் நிலையில் முட்டிப்போட வெச்சிருவோம். முட்டிக்குக் கீழே யானை நஞ்சை வெச்சிடுவோம். அப்படி வெச்சா, வலியில்லாம புள்ள சுளுவா வெளியே வந்துரும்’ என்றார்.
இது எப்படின்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். அப்பதான் வனவிலங்கு மருத்துவர் ஒருத்தர் சொன்னாரு, `யானை நஞ்சுல ‘ஈஸ்ட்ரோஜென்’ என்கிற ஹார்மோன் இருக்குமாம். நவீன மருத்துவத்துல பிரசவத்தின்போது வலி ஏற்படாம இருக்க, மருத்துவமனைகள்ல இதை பயன்படுத்துறதா சொன்னாரு. அதைத்தான் அந்த மக்கள் தெரிஞ்சு வெச்சிருக்காங்க’ன்னாரு. இது எவ்ளோ பெரிய அறிவு. அந்த மக்கள் எந்த லேப்ல இதையெல்லாம் டெஸ்ட் பண்ணாங்க. இந்த பாரம்பரிய மருத்துவ அறிவை நாம பாதுகாக்க வேண்டாமா?” என்றொரு வியப்பான தகவலுடன் பேசினார் ஆதிவாசிகள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன்.

பொதுச் செயலாளர் அதிகாரங்கள் இனி தலைவருக்கு... மாற்றத்துக்குத் தயாராகும் திமுக!


டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் அதிகாரங்கள் இனி தலைவருக்கு... மாற்றத்துக்குத் தயாராகும் திமுக! மின்னம்பலம :  மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொகேஷன் அண்ணா அறிவாலயம் காட்டியது. முதலில் திமுகவின் அமைப்பு விதிகள் புத்தகத்தின் சில பக்கங்கள் ஸ்கிரீன் ஷாட்டில் வந்து விழுந்தன. பின் செய்தி வந்தது.
“தேசிய அரசியல் ரீதியாகவும், மாநில அரசியல் ரீதியாகவும், உட்கட்சி அரசியல் ரீதியாகவும் எப்போதுமே திமுகவுக்கு என்று ஒரு பரபரப்பு ஸ்தானம் உண்டு. அதேபோல இப்போதும் இந்தி எதிர்ப்புப் போராட்ட வாபஸ் அறிவிப்பால் தேசிய அளவில் பரபரப்பு கிளப்பிய திமுக அதை விவாதிப்பதற்கு முன் அக்டோபர் 6ஆம் தேதி பொதுக்குழு என அறிவித்திருக்கிறது.
திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுகவின் பொதுக் குழு கூட்டம் நடைபெறும், கழகப் பணிகள் கழகச் சட்டத்திருத்தம் தணிக்கைக் குழு அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்று செப்டம்பர் 19ஆம் தேதி அறிவித்திருக்கிறார். வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில்தான் பொதுக் குழு நடைபெறும். ஆனால், கடந்த பொதுக் குழுக் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தபோது போதிய இடமின்றி வெளியேயும் கூட்டம் வழிந்தது. மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் பொதுக் குழுவுக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. அதனால்தான் இம்முறை இடம் மாற்றப்பட்டது. இடமாற்றம் மட்டுமா? இந்தப் பொதுக் குழுவில் வேறு சில மாற்றங்களும் இருக்கும் என்கிறார்கள்.
இந்தப் பொதுக் குழுவின் முக்கிய அஜெண்டா கழகச் சட்டத்திருத்தம்தான் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.

மத்திய அமைச்சர் முடியை இழுத்து தள்ளிய மாணவர்கள்.. மேற்கு வங்கத்தில் ராஜ மரியாதை வீடியோ


மத்திய அமைச்சர் முடியை இழுத்து தள்ளிய மாணவர்கள்!மின்னம்பலம் :
ஜாதவ்புர் பல்கலைக்கழகத்துக்கு உரையாற்றச் சென்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். மாணவர்கள் தன் முடியை இழுத்து தள்ளியதாக மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்புர் பல்கலைக்கழகத்துக்கு ஏபிவிபி அமைப்பு மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நேற்று சென்றிருந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே கறுப்புக் கொடி காட்டி நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் வந்த பிறகும் பாபுல் சுப்ரியோ திரும்பிப் போக வேண்டும் என்று முழக்கமிட்டு இருக்கின்றனர்.

திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம்! - அமித்ஷா யூ-டர்ன் அடித்த பின்னணி என்ன?

திமுக இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினால், வழக்கொழிந்த இந்திய மொழிகளுக்கு சொந்தக்காரர்கள் தாய்மொழி உணர்வைப் பெற்றுவிடுவார்கள். இந்தியா முழுமையும் இந்தப் போராட்டம் கவனத்தை பெற்றுவிடும். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திமுகவின் போராட்ட உணர்வு பேசு பொருளாக மாறிவிடும்..  லேட்டாக வந்த ஞானம்!
DMK's anti-Hindi struggle return statment  What is the background of Amit Shah's U-turn nakkheeran.in - ;ஆதனூர் சோழன் : “கவர்னர் கூப்பிட்டு
மிரட்டிய மிரட்டலுக்கு திமுக பயந்துருச்சு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அதான் ஒத்தி வச்சுருச்சு” திமுக எதிர்ப்பாளர்கள் பரப்புகிறார்கள். “திமுக போராட்டத்தைக் கண்டு மத்திய அரசு பயந்துவிட்டது. அதனால்தான் ஸ்டாலினை அழைத்து இந்தித் திணிப்பு இருக்காது என்று உறுதியளித்துள்ளது. அமித் ஷாவே ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்” என்று திமுக ஆதரவாளர்கள் கவுண்ட்டர் கொடுக்கிறார்கள்.ஆனால் உண்மையில் என்ன நடந்திருக்கும்?
கடைசியாக 1986ல் இந்தி திணிப்பு முயற்சி நடைபெற்றது. அப்போது எம்ஜியார் உயிரோடு இருந்தார். திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. அந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கலைஞரையும் திமுகவினரையும் எம்ஜியார் கடுமையாக அலைக்கழித்தார். மத்திய அரசு இந்தித் திணிப்பு முயற்சியை கைவிட்டாலும், எம்ஜியார் கலைஞரை பழிவாங்கும் நோக்கில் வழக்கை நடத்தி, அவரைத் தண்டனைக் கைதியாக்கினார். தண்டனை அறிவிக்கப்பட்ட மறுநாளே அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

ஹிந்தி .. தோன்றி 200 வருடங்கள் கூட ஆகாத ஒரு மொழி

Prakash JP : ஹிந்தி எனும் மாயை - 1:
தோன்றி 200 வருடங்கள் கூட ஆகாத ஒரு மொழியை இந்தியாவில் 52 கோடி பேர் தாய்மொழியாக கொண்டுள்ளனராம். எப்படி? பார்க்கலாம்.
முதலாவதாக,
இந்திய அரசின் மொழிவாரி கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு மொழிக்கும் அதன் கிளைமொழிகளாக / வழக்குமொழிகளாக (dialect) 4/5 மொழிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் ஹிந்திக்கு மட்டும் 56+ மொழிகள் வழக்குமொழிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 56+ மொழிகளின் கூட்டு எண்ணிக்கை தான் இந்த 52 கோடி பேர்.
இன்னும் எளிமையாக சொல்வதென்றால், கிழக்கே பிஹாரில் பேசப்படும் போஜ்புரி மொழியும் மேற்கே ராஜஸ்தானில் பேசப்படும் ராஜஸ்தானி மொழியும் ஹிந்தியின் வழக்குமொழி வடிவங்களாம். அவை இரண்டும் வேறு வேறு மொழிகள் இல்லையாம். எப்படி என்றால் இரண்டுக்கும் வரிவடிவம் (Script) ஒன்றாம். (சரி அதுவாவது ஹிந்தியில் சொந்த வாரிவடிவமா என்றால் இல்லை. ஹிந்திக்கே தேவநாகரியிடம் கடன் வாங்கிய வரிவடிவம் தான் என்பது வேறு கதை)
சரி, வரிவடிவத்தை வைத்து அனைத்தும் ஒருமொழி என கொள்ளலாம் என்றால், தெலுங்கும் கன்னடமும் எப்படி இருவேறு மொழியானது இந்திய அரசியல் அமைப்பில்?

வியாழன், 19 செப்டம்பர், 2019

சுயஇன்பம் ..புணர்ச்சிக்கு ஒரு டீசர்... சாதாரண பயலாஜிகள் ப்ராசஸ்.!

Dr Aravindha Raj : ~𝐈𝐒 𝐌𝐀𝐒𝐓𝐔𝐑𝐁𝐀𝐓𝐈𝐎𝐍 𝐖𝐑𝐎𝐍𝐆 ? 'சுயஇன்பம்' செய்வது தவறா??
இந்த விஷயத்தை நீங்க தயங்கியோ,இல்லை யாருகிட்ட கேக்குறது ன்னு தெரியாம கூகிள்-ல என்னென்னமோ படிச்சு நாம புரிஞ்சிகிட்ட விஷயம் சரியா தவறா அப்டின்ற ஒரு பதற்றத்துலயே இருக்கிறதால தான் இந்த பதிவு.
முதல் ல சுய இன்பம் னா என்ன ?
ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளாமல் தங்களுடைய அந்தரகங்க உறுப்பை தாங்களே கிளர்ச்சி(AROUSAL) அடைய செய்து,அதன் மூலம் தங்களது பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்துறது தான் சுயஇன்பம்.
ரெண்டாவது, இது செய்யலாமா ?  செய்யக்கூடாதா? இதெல்லாம் செஞ்சா ஏதாவது பிரச்னை வருமா? இதான் அடுத்த குழப்பம்.
முதல் ல ஆண்களுக்கு இந்த விந்தணு எப்டி உற்பத்தி ஆகுதுன்னு பாக்கலாம்.
இந்த விந்தணு உற்பத்தி ஆகுற முறைக்கு 'SPERMATOGENESIS' னு பெயர்.... இது நம்ம உடல் ல தோராயமா 72 நாட்கள் நடக்கும் ஒரு சுழற்சி இது.
நாம நினைக்குற மாதிரி எடுத்த உடனே விந்தணு உற்பத்தி ஆயிடாது..
நம்முடைய விறைப்பகுதி(TESTICLE) இருக்கு ல்ல.... அதுல வளர்ச்சி அடையாத விந்தணு (IMMATURE SPERM)உற்பத்தி ஆகும்... அது பொறுமையா EPIDIDYMIS னு சொல்லப்படுற பகுதியை அடைஞ்சு,வளர்ச்சி அடையும்... வளர்ச்சி அடைந்த விந்தணு VAS DEFERENS ன்னு ஒரு சின்ன குழாய் மூலமா EJACULATORY DUCT க்கு வரும்...
அங்க இந்த விந்தணு SEMINAL VESICLES & PROSTATE னு சொல்லப்படுற இரண்டு சுரப்பிகள் கூட கலந்து "𝗦𝗘𝗠𝗘𝗡" ஆஹ் மாறும்...
அந்த SEMEN அப்டியே URETHRA ன்னு சொல்லப்படுற இன்னொரு குழாய் வழியா உடலுறவு கொள்ளுறப்ப ஆண்குறி (PENIS) மூலமா வெளிய வரும்.
ஒரு நாளைக்கு நம்ம விறைப்பை 200-300 மில்லியன் விந்தணு-வை உற்பத்தி செய்யுது... ஒரு முறை நாம சுயஇன்பம் மூலமா 1.5ml-5ml SEMEN வெளியேற்றும் போது சுமார் 40-100 மில்லியன் விந்தணுவை வெளியேற்றுறோம்...

இனியாவது உணரட்டும் ஹிந்தி வெறியர்கள்.

Muralidharan Pb : 350 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவன் கூட நாங்கள் வணிகம் செய்ய வந்திருக்கிறோம் என்றான். அன்று அதை அறியாத மன்னர்கள் நம்பி ஏமாந்து போனார்கள். பிறகு மக்கள் அவனுக்கு அடிமையானோம்.
அவனை விரட்ட நூறாண்டிற்கு மேல் பெரும் கூட்டத்தை உருவாக்கி, ஒன்றிணைத்து, போராடிய போது தானே வெளியேறினான்? நம் சொத்துக்களை வரி என்ற பெயரில் சிறிது சிறிதாக எடுத்துச் சென்றான்.
இன்று இந்தியா முழுவதும் இணைப்பிற்கு இந்தி கட்டாயம் வேண்டும் என்று கூறிவிட்டு, எதிர்ப்பு சொந்த கட்சி ஆளும் மாநிலத்திலேயே வந்தபடியால் திக்கு தெரியாது அமித் ஷா வேறு வழியின்றி மாற்றி பேசி சமாதனங்கள் கூறி பிரச்சனையை அழுத்தி விட்டார்.
மெய்யில் இவர்கள் மிக மிக மோசமானவர்கள். இதில் காங்கிரஸ் பாஜக பாகுபாடே கிடையாது. இரண்டு கட்சிகளும் ஒன்று தான்.
இந்தியைக் கொண்டு இந்தியாவை இணைக்க எத்தனிக்காமல் இந்தியர் அனைவரும் ஒன்று என்றாலே இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். இதை பலமுறை தமிழகம் குறிப்பாக திராவிட இயக்கம் சொல்லியும் கேட்காததன் விளைவு இன்று வரை குழுப்பம்.
இவ்வளவு ஏன்? ஆரம்பத்தில் இந்தி கட்டாயம் வேண்டும் என்று கூறிய ராஜாஜி கூட இறுதியில் தமிழகம் இந்தியை தவிர்த்தது தவறல்ல என்று உணர்ந்துக் கொண்டார்.
இப்போது, பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய முயலாமல் திசை மாற்றம் செய்ய என்ன முடியுமோ அதை செய்கிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எத்தனை காலம் தொடரும்?
இந்தி கற்றுக் கொள்ளாமல் போனதால் தமிழனோ, கன்னடனோ, தெலுங்கனோ, மலையாளியோ பின் தங்கியிருந்தால் அவர்கள்(காங்கிரஸ்-பாஜக) சொல்வது ஏற்புடையது.
இந்தியை ஏற்று தாய்மொழியை மறந்த மாநிலங்களில் ஏன் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது?

இந்தியை திணிக்க மாட்டோம் .. மத்திய அரசு திமுகவுக்கு வாக்குறுதி.. ஸ்டாலின் .. ஆளுனர் சந்திப்பின் விபரம்


Prakash JP : "ஆளுநர் அழைப்பு - சந்திப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்"
நேற்று காலையில் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் கால் ் ஷா என்னிடம் கூறினார். அதற்காக தான் அழைத்தேன். உங்கள் போராட்டத்தை வாப‌ஸ் வாங்க வேண்டும்" என்றார். நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்டேன். "கவர்னர் என்ற முறையில் நான் மத்திய அரசின் பிரதிநிதியாக சொல்கிறேன். நீங்கள் என்னை நம்பலாம்" என்று தெரிவித்தார். 
வந்தது. ஆளுநர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று தெரிவித்தார் ஒரு அதிகாரி. எனக்கு பல பணிகள் உள்ளன என்றேன். நீங்கள் வரும் நேரத்தில் உங்களை சந்திக்க ஆளுநர் காத்திருக்கிறார் என்றார். சரி. மாலையில் வருகிறேன் என்றேன். நானும், அண்ணன் டி.ஆர் பாலுவும் சென்றோம். ஆளுநர் என்னிடம் "இந்தி திணிப்பு செய்ய மாட்டோம் என்று உங்களிடம் தெரிவிக்கும்படி உள்துறை அமைச்சர்  அமித் ஷா என்னிடம் கூறினார்!

இலங்கை குடியரசு தலைவர் ஆட்சி முறையை நீக்க ரணில் மகிந்தா மைத்திரி பெச்சுவார்த்தை?

Jeevan Prasad : தலைவர்களது தலைகளை தப்ப வைத்துக் கொள்ள சர்வ ஜன வாக்கெடுப்பு ! ஜனாதிபதி தேர்தல் இல்லை?
அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக சர்வ ஜன வாக்கெடுப்பு (A referendum) ஒன்றுக்கு செல்வதற்காக ரணில் மற்றும் மைத்ரி இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகிறது.
ஜேவீபீ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது திருத்தச் சட்டத்துக்காக பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையை பெற்று உச்ச நீதிமன்ற முடிவின் பிரகாரம் சர்வ ஜன வாக்கெடுப்புக்கு சென்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்க பேச்சுகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஆரம்பத்தில் மகிந்த சாதகமான பதிலை கொடுக்காதிருந்தார். இப்போதுள்ள நிலையில் கோட்டாபய ஜனாதிபதி தேர்தலில் வெல்லக் கூடிய சாத்தியம் இல்லாத சூழ்நிலை மற்றும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் எனும் நிலையை உணர்ந்த மகிந்தவும் இதை ஆதரிப்பார் என தெரிய வருகிறது.

ரெயில்வே .தமிழ் நாட்டில் ஹிந்தியில் உறுதிமொழியாம்.. 262 இடங்களில் 16 பேர் மட்டுமே தமிழர்கள்

தமிழர்களின் நலன்களை அழித்து   RSS  பாஜகவுக்கு  க்கு கால்
கழுவி கொண்டிருக்கும் ,  சிலர் எழுத்தில் எழுத முடியாத அளவு கோபத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறர்கள்  அதிமுக அமைச்சுகள் விஐபிகள் புளுத்து சாவார்கள் என சமுகவலையில் மக்கள் சரமாரியாக சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

சந்திரலேகா ( சு.சாமி) - சசிகலா சந்திப்பில் வைகுண்டராஜனுக்கு என்ன பங்கு?

சந்திரலேகா- சசிகலா சந்திப்பில் வைகுண்டராஜனுக்கு என்ன பங்கு?மின்னம்பலம் : பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குச் சென்று அங்கே அடைக்கப்பட்டிருக்கிற சசிகலாவை சந்தித்துப் பேசினார்.
முதன் முதலில் வெளியிட்ட மின்னம்பலம்
இதை முதன் முதலில் வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்தியது தமிழின் முதல் மொபைல் தினசரியான மின்னம்பலம்தான். ‘சசிகலா- சந்திரலேகா சந்திப்பு! அதிமுகவில் சமரச அறிகுறி’ என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் பிறகே மற்ற ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் இந்த சந்திப்பு குறித்து கவனிக்க ஆரம்பித்தன.
2017 இல் கூவத்தூர் படலம், எடப்பாடி முதல்வரானது, சசிகலா சிறைக்குச் சென்றது முதல் இப்போது வரை பாஜகவிலேயே வித்தியாசமானவராக, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அவரது தூதுவராகத்தான் சந்திரலேகா சிறைசென்று சசிகலாவை சந்தித்ததாகவும் அதிமுக- அமமுக இணைப்பு பற்றி பாஜக நடத்தும் ஆபரேஷனின் ஒரு பகுதிதான் இது என்றும் இந்த சந்திப்பு பற்றி தகவல்கள் கிடைத்தன.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மத்திய அரசின் தமிழக மாணவர் விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்!...மு.க.ஸ்டாலின்

தினகரன் :சென்னை: தேனி மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்த முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அளித்த புகார்  மீது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவைத் தேடி தேனியிலிருந்து சென்னை வந்த தனிப்படை, தனது விசாரணையை நடத்தி வருகிறது.  உதித் சூர்யா வீட்டில் யாரும் இல்லாததால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். >
அரசு மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பயிற்சி மையம் மூலமாக நீட் தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளனரா? எனவும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் 4 பேர் நீட் தேர்வில்  ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலின் :தமிழக இளைஞர்களுக்கு வேலைவாப்ப்யில் முன்னுருமை ... மக்களை திரட்டி போராடுவோம் ! அரசுக்கு மு.க.ஸ்டாலின்

M.K.Stalin : ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
stalin
stalintamil.webdunia.com : தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் எனவும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க உரிய சட்டத்திருத்தம் வேண்டும் எனவும் தமிழக அரசை , திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையிலரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.;