சனி, 28 ஜூலை, 2018

அழகிரி : கலைஞர் நலமாக இருக்கிறார்! தொண்டர்களிடையே மகிழ்ச்சியும் உற்சாகமும் ...

மாலைமலர் :மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வரும் கருணாநிதி நலமுடன்
இருப்பதாக மு.க அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி நாட்டில் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.

திருவாரூர் திமுக நிர்வாகி தமீம் மாரடைப்பால் உயிரழப்பு ... கலைஞர் மருத்துவ மனையில்...

மாலைமலர் :திமுக தலைவர் கலைஞர்  உடல்நிலை மோசமடைந்ததால் அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.   திருவாரூர்: தி.மு.க. தலைவர் கலைஞர்  (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். உடல் நலிவுற்றுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான தகவல்கள் பரவி வருவதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

தமிழ்நாட்டுக்காக புலிகளும் ஈழத்தமிழர்களும் இதுவரை செய்தது என்ன?

AThi Asuran : "ஈழத்தைப்பற்றிப் பேச கொளத்தூர் மணிக்கும், கோவை
இராமக்கிருட்டிணனுக்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?" என்று சீமான் பேசிய பிறகும், விடுதலைப்புலிகள் இன்றுவரை சீமானைக் கண்டித்திருக்கிறார்களா?
திராவிடர் இயக்கங்களின் தோழர்கள், புலிகளுக்காக இளமையை இழந்து, பொருளை இழந்து, வாழ்வை இழந்து, உயிரையே இழந்து போராடிக் கொண்டிருந்தபோது - சினிமாவில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் - பார்ப்பனர்களுக்கு எடுபிடிகளாக இருந்தவர்களும், இன்று திராவிடர் இயக்கங்களையும் எம் தலைவன் பெரியாரையும் கொச்சைப் படுத்துகிறார்கள். அதை ஒரே ஒருமுறையாவது விடுதலைப்புலிகள் கண்டித்திருக்கிறார்களா?
தமிழ்நாட்டுத் தமிழர்களின் எந்தச் சிக்கல்களுக்காகவாவது விடுதலைப்புலிகள் இன்றுவரை குரல்கொடுத்திருக்கிறார்களா?
தமிழ்நாட்டுத் தமிழர்களின் அழிவுக்கும் - புலிகளின் அழிவுக்கும் காரணமான பார்ப்பனர்களை என்றைக்காவது "பார்ப்பனர்கள்" என்று மறந்தாவது உச்சரிக்கவாவது செய்தார்களா?
ஊர்த் தமிழர்கள், சேரித்தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை என்றைக்காவது வெறும் அறிக்கை மூலமாவது கண்டித்திருக்கிறார்களா?
தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமைகளுக்காக ஒரு கண்துடைப்பு ஆர்ப்பாட்டமாவது நடத்தியிருக்கிறார்களா?

மாதா அமிர்தானந்தமயி நிறுவனம் மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் (தேனீ) கொட்டுகிறார்கள் கேரளாவில் இருந்து

மருத்துவக் கழிவுகள்: தொண்டு நிறுவனத்தில் குவிப்பு!மின்னம்பலம்: தேனி மாவட்டம், குச்சனூரில் மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் மருத்துவக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழிக் கழிவுகள் கொண்டுவந்து சட்டவிரோதமாக தமிழகத்தில் கொட்டப்பட்டுவருகிறது. இந்தச் சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கின்றனர். இருப்பினும் காவல் துறையினரின் கண்காணிப்புகளையும் மீறி மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்து தமிழகத்தில் சாலையோரங்களிலும், குப்பைகளிலும் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

சீமான் கட்சி கலைஞர் மீது வெறுப்பை உமிழ்வது ... கூலிக்காக....? வைகுண்டராஜனின் நியூஸ் 7 ....

Venkat Ramanujam : ஒரு சில நபர்கள் Iyer & Iyengar Network ல் விஷம் கக்கும் பேச்சு
ஒரு புறம் .,
பெருவாரியான சீமானின் தம்பிகள் அவர்கள் எதிர்பார்த்த .,ஏழு வருடம் ஆட்சியில் இல்லாத திமுக தலைவரின் மரணம் நடக்காமல் போனவுடன் மறுபுறம் வெறி பிடிச்சி கடிச்சி திரிய காரணம்..
கூட்டணி கட்சிகள் #காங்கிரஸ் #மதிமுக #CPI #CPM நலம் சொல்லும் வாழ்த்து பெறுவது இயல்பு தான் ..விடுங்கள் ..
ஆனால் ஆட்சி போகும் பயத்தில்  ஒபிஎஸ் தொடங்கி  குருமுர்த்தி மற்றும் அதிமுக அமைச்சர்கள் என வரிசையாக Kalaignar Karunanidhi க்கு புகழாரம் சுட்டி வரும் விந்தையை நாம் காணுகிறோம் ..
திமுக திவிரமாக எதிர்க்கும் பிரதமர் .,ஜனாதிபதி தொட்டு ஆளுனர் தொடங்கி ., #பாஜக வில் வரிசையாக ரானுவ மந்திரி முதல் வரபோகும் துனை ஜனாதிபதி வரை நேரில் நலம் பெற தெரிவுக்கும் வாழ்த்துக்கள் .,
தமிழ் தேசிய தலைவராக உருப்பெற்ற திருகுவளை குக்கிராம உதயசூரியன் உயரத்தை பார்க்க முடியாமல் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்றே கருத வேண்டி உள்ளது ..
சாதி அதரவு #news7tamil +இன்னும் சில டிவிகள் தரும் கதகதப்பில் ., ஜாதி வெறி கொழுப்பில் திரிந்து வரும் சீமான் இவர்கள் டெய்லி பேட்டா வாங்கும் வைகுண்டராஜன் தாது மணல் கொள்ளையை நிறுத்துவோம் என்று M. K. Stalin எடுத்த கொள்கை முடிவு ஒரு புறம் ..

கலைஞர் நேற்று இரவு ஆபத்து கட்டத்தை மீண்டு வந்தார் ... என்ன நடந்தது ?

டிஜிட்டல் திண்ணை: நள்ளிரவில் என்ன நடந்தது?மின்னம்பலம் : "நேற்று இரவு 10 மணிக்குக் கருணாநிதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நலமாக இருப்பதாகச் சொன்ன பிறகே ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கோபாலபுரத்திலிருந்து கிளம்ப ஆரம்பித்தனர்.
ஆனால், சரியாக நள்ளிரவு 12.10 மணிக்குக் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் கிடுகிடுவெனக் குறைய ஆரம்பித்தது. நார்மலாக ஒருவருக்கு 120/80 என இருக்க வேண்டும். அதாவது குறைந்த அளவு 80 ஆகவும் அதிகம் 120 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால் கருணாநிதிக்கோ 120/ 20 ஆகக் குறைந்துவிட்டது. ரத்த அழுத்தம் 20 என்பதெல்லாம் மிகவும் ஆபத்தான கட்டம். இதனைக் கண்ட டாக்டர் உடனடியாக அமீனோ ட்ரிப் செலுத்தினார். அதன் பிறகுதான் ரத்த அழுத்தம் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்தது.

கலைஞரின் மருத்துவ மனை படம் ! இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவ மனையில் இருப்பார் ... டி வி எஸ் இளங்கோவன்

நேற்றைய படம்
கருணாநிதி 2 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் - டி.கே.எஸ் இளங்கோவன்மாலைமலர் :தி.மு.க தலைவர் கருணாநிதியின்
உடல்நிலை குறித்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், இன்னும் இரண்டு நாட்களுக்கு கருணாநிதி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவித்துள்ளார். சென்னை:< தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி நாட்டில் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டதாகவும், இருப்பினும் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் கருணாநிதி இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்

தா. பாண்டியனுக்கு உடல்நல குறைவு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

tamiloneindia :சென்னை: மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்
தா.பாண்டியனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர் தா.பாண்டியன். முதுபெரும் கம்யூனிச தலைவர்களில் ஒருவர். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 85 வயதான தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ட்ராபிக் ராமசாமி : கலைஞர் என்ற இளைஞருக்கு ஒன்றும் நிகழாது ... 100 வயதுக்கு மேல் இருப்பார்

100 வயதுக்கு மேல் இருப்பார் இந்தியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் எது வேண்டுமானாலும் நடைபெறுமே ஒழிய அவருக்கு எதுவும் நடக்காது. மக்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.
இளைஞருக்கு எதுவும் ஏற்படாது சென்னை: கருணாநிதி எனும் இளைஞருக்கு ஒன்றும் நிகழாது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே மருத்துவமனையில் உள்ள வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
24 மணிநேரமும் ஒரு மருத்துவரும் செவிலியர்களும் கருணாநிதியை கவனித்துக் கொண்டனர். டிரக்கியாஸ்டமி கருவியை மாற்றியதால் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.< உடல்நலம்< இதுபோல் நேற்றைய தினம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் கோபாலபுர இல்லத்துக்கு வருகை தந்தார். அப்போது ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பிரகாஷ் ராஜ் கண்டனம் .. அறிவுஜீவிகளை , முற்போக்குவாதிகளை சுட்டு கொல்லவேண்டும் பாஜக எம் எல் ஏ பசன கவுடா

tamil.thehindu.com
பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் , நடிகர் பிரகாஷ் ராஜ்   -  படம்: ஏஎன்ஐ
நாட்டில் அறிவுஜீவிகளை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பேசிய பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யட்னாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மோட்டார் வாயை மூடுங்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி எம்எம்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னா. இவர் நேற்று விஜயபுரா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் உள்ள அறிவுஜீவிகளும், முற்போக்குவாதிகளும் தேசவிரோதிகள். இந்த நாட்டில் அறிவுஜீவிகள் வாழ்ந்து கொண்டு, நாம் செலுத்துவரியில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். பின் நம்முடைய நாட்டுக்கு எதிராகவே கோஷங்களை எழுப்புகிறார்கள். இதுபோன்ற மனிதர்களிடம் இருந்து தேசம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறது.

ஆ.ராசா : கலைஞர் நலமாக உள்ளார் ...

கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - ஆ. ராசாதிடீரென்று ஏற்பட்ட ரத்த அழுத்த குறைபாடு காரணமாக கலைஞர்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கலைஞர்  நலமுடன் இருப்பதாகவும் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை, கடந்த 2016-ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கலைஞர்க்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வந்தார்.
இந்தநிலையில், திமுக தலைவர் கலைஞரின்  சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக  காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்தது. கலைஞரின்  உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கலைஞரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.

கலைஞரை பார்க்க வந்த 85 வயது திருவாரூர் பாட்டி,, கண்களில் கண்ணீர் நடையில் பதட்டம்

இந்த 85 வயது மூதாட்டி எங்கோ தொலை தூரத்தில் இருந்து வருகிறார்.  பேருந்தில் தட்டு தடுமாறி ஏறி வந்து சென்னை மாநகரின் பெருந்தெருக்களில் தன்னந்தனியாக எதையோ அல்லது யாரையோ தேடி பதட்டத்தோடு ஓட்டமும் நடையுமாக ,,, 
 அப்படி என்ன இந்த மூதாட்டியின் தேடல்?
ஆம் கலைஞர் உடல் நலம் குன்றிய செய்தி இவரை கண் துஞ்ச விடாமல் துரத்துகிறது.
அவரென்ன மூதாட்டியின் நெருங்கிய உறவா?
இந்த மூதாட்டியின் சின்னஞ்சிறு உலகத்தில் தமிழகத்தின் வரலாறு தன்னை இனம் காட்டி கொள்ளாமல் மறைத்து கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது !
அந்த நெருப்பின் சுவாலைதான் அவர் கண்களில் நீராக முட்டி வழிகிறது.
தன் வாழ்நாளில் தமிழகத்தின் அன்றைய தாழ்ந்த நிலையெல்லாம் அவள் மனக்கண்களில் திரைப்படமாக ஓடிகொண்டிருப்பது தெரிகிறது!
பெண்களுக்கு சொத்துரிமை என்பது வெறும் பொருள் சம்பத்தப்பட்ட விடயம் மாத்திரம் அல்ல! அதையும் தாண்டிய அநியாயம் அது! பல ஆயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கொடுமை .. அந்த கொடுமைக்கு முடிவு கட்டிய புரட்சிக்காரனை எண்ணி அவள் கண்கள் கலங்குவது தெரிகிறது!

குன்ஹாவும் குமாரசாமியும் ... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கு

நீதிபதி குன்ஹா
விகடன் : உங்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை
அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா.
ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா.
தீர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஜெயலலிதாவும் இல்லை. அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் இல்லை. கார்டன் ரகசியங்களைப்போல, அவரது மரணமும் மர்மமாகவே முடிந்துவிட்டது.
2014 செப்டம்பர் 27 அன்று வரலாற்றுத் தீர்ப்பு எழுதிய மைக்கேல் டி குன்ஹா, என்ன செய்து கொண்டிருக்கிறார் ?
" கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, தனது சட்டப் பணியைக் கவனித்துக்கொண்டு வருகிறார் குன்ஹா.
அண்மையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா?’ என ஒருவர் கேள்வி எழுப்பியபோது,
'நான் ஓர் அரசாங்க ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவேதான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை' என இயல்பாகப் பேசியிருக்கிறார்.

பிந்திய செய்தி : கலைஞர் தேறிவருகிறார் .. இரத்த அழுத்தம் வழமைக்கு திரும்பியது ...

nakkeeran :திமுக தலைவர் கலைஞரை அழைத்துச்செல்ல காவேரி
மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்தது. அங்கு தொண்டர்களின் பெரும் கண்ணீருக்கு மத்தியில் ஆம்புலன்ஸில் கலைஞர் ஏற்றப்பட்டு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டார். கலைஞரின் உடல்நிலை சற்று நலிவடைந்ததால், காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்துக்கு மருத்துவர் குழு வருகை தந்தனர். அவர்கள் உடனடியாக மருத்தவமனை அழைத்துச் செல்ல வேண்டும் என கூறியதால் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர்கள், மேல்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் குவிந்துள்ளனர். நேற்றைவிட கலைஞருக்கு இன்று நோய்தொற்று குறைந்துள்ளதாகவும், காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தற்போது ஏராளமான திமுக தொண்டர்கள் பெரும் பதட்டத்துடன் கோபாலபுரம் வீட்டின் முன் திரண்டுள்ளனர்.

வெள்ளி, 27 ஜூலை, 2018

கலைஞர் .. திட்டமிட்ட வதந்திகளின் பின்னணியில் .. ஹெலிகாப்டர், பன்னீர், நிர்மலா ...எல்லோரும் மறந்து விட்டார்கள்?

வேண்டுமென்றே வதந்தி தொடர்ந்த பரபரப்பு பரபரப்பு ஆரம்பம் லீக்கான படங்கள்
Veera Kumar - ONEINDIA TAMIL ON சென்னை: கருணாநிதி உடல்நலம் குறித்து திட்டமிட்டே வதந்தி பரப்பப்படுவதாக, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளது சாதாரண வார்த்தைகள் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கருணாநிதி உடல் நிலை குறித்த வதந்திகள் றெக்கை கெட்டி பறக்க துவங்கியது, வியாழக்கிழமையான நேற்று மாலை 6.30 மணியில் இருந்துதான். இதற்கு காரணம் கருணாநிதிக்கு சிகிச்சையளித்து வரும் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பு. காவிரி
மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று இருப்பதால் காய்ச்சல் இருப்பதாகவும், அதனால் அவருக்கு லேசான, உடல் நலிவு ஏற்பட்டுள்ளதாகவும், யாரும் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இசையமைப்பாளர் .ரஹ்மான் ஒரு நீதிபதியின் கட்டுப்பாட்டில் ? அவர் பாடலாசிரியர் விவேக்கின் தந்தை ..

அதிகாரத்தின் பிடியில் ஆஸ்கர் நாயகன்? - அதிர்ச்சியில் திரையுலகம் இந்தியன் எக்ஸ்பிரெஸ்: நேற்றும் அதற்கு முந்தைய தினமும் வெளியான சில ட்விட்டர் செய்திகள் தமிழக திரையுலகினரை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தின. ரஹ்மான் சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் செய்தி கூடுதல் கவனம் பெறுகிறது.
வாலி, வைரமுத்து உச்சத்தில் இருந்த போதும் வளர்கிற பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பு அளித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். உதாரணமாக, ரஹ்மானின் இசை தனது பாடல் வரிகளை அழுத்துவதாக வைரமுத்து மேடையில் குற்றம்சாட்ட, வைரமுத்துவை தனது படங்களில் விலக்க ஆரம்பித்தார் ரஹ்மான். அந்த காலகட்டத்தில் அழகம் பெருமாள் இயக்கத்தில் விஜய், சிம்ரன் உதயா படத்தில் நடித்தனர். இசை ரஹ்மான். வைரமுத்துடன் மோதல் ஏற்பட்டதால் அவரை விலக்கி, ரஹ்மான் வாய்ப்பளித்தது இளைய கம்பன் என்ற இளம் கவிஞருக்கு. அதன் பிறகு வைரமுத்து, பூ எறிந்து விளையாடியவர்களை வாள் எறிந்து விளையாடியதாக மீடியா திரித்துவிட்டது என அறம்பாடி மீண்டும் ரஹ்மானுடன் இணைந்து கொண்டார். எனினும், வாலி, வைரமுத்துக்கு இணையாக இளம் கவிஞர்களுக்கும் ரஹ்மான் இசையமைக்கும் படங்களில் வாய்ப்பு கிடைத்து வந்தது.

கலைஞர் ... முழு வைத்திய அறிக்கை! .. என்ன நடக்கிறது?

கருணாநிதிக்கு என்ன நடக்கிறது! மெடிக்கல் ரிப்போர்ட்!

மின்னம்பலம்: திமுகவின் ஐம்பதாண்டு கால தலைவர், தமிழகத்தின் ஐந்து முறை முதல்வர், இன்று இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் இப்படி பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரரான மு.கருணாநிதி,சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாட்டின் கடைகோடி குடிமகனான கிராமத்து உடன்பிறப்பு வரை, கருணாநிதியின் உடல் நலம் குறித்து பதற்றத்தோடு விசாரித்து அவர் குணமடைய வேண்டும் என்று தங்கள் விருப்பங்களையும் வேண்டுதல்களையும் முன் வைத்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடல் நலம் எப்படி இருக்கிறது?
2016 அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி திமுக சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் தனது வெளிப் பயணத்தை குறைத்துக் கொண்ட திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வந்தார்.

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் .. பீகார் குழந்தைகள் காப்பகத்தில்

குழந்தைகள் காப்பகம்: தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்!மின்னம்பலம்: பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் குழந்தைகள் காப்பகத்தில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபூர் பகுதியில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் தங்கும் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து சிறுமிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

ஸ்டாலின் : கலைஞருக்கு சிறப்பான சிகிச்சை; விரைவில் அவரே நன்றி சொல்வார்

THE HINDU TAMIL : தலைவர் கருணாநிதிக்கு சிறப்பான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து அவரது வார்த்தைகளாலே நன்றி சொல்வார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த 24-ம் தேதி மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. ‘திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில், வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரைக் கவனித்து வருகின்றனர் ’ என்று காவேரி மருத்துவமனை தெரிவித்திருந்தது.

கலைஞர் நலம் குன்றிய நிலையிலும் திட்டமிடபடி போராட்டத்தை முன்னெடுத்த திமுக

திமுக எப்போதும் போராடும் /tamil.oneindia.com-lakshmi-priya
சென்னை: கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் சொத்து வரியை குறைக்க கோரி மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
100 சதவீதம் தமிழகம்  முழுவதும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்துவரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி என உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் குடியிருப்புகள், வாடகை குடியிருப்பு கட்டடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கான சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
இந்த உத்தரவு வரும் அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 100 சதவீதத்துக்கு வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. 100 சதவீதம் டூ 50 சதவீதம்
உடல்நலம் பாதிப்பு இதையடுத்து உயர்த்தப்பட்ட வாடகைக் குடியிருப்புக்கான சொத்து வரியை 50 சதவீதத்துக்கு தமிழக அரசு குறைத்துவிட்டது. புதிய அரசாணைபடி வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வு 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் அதாவது 50 சதவீதத்துக்கு மிகாமல் வரி இருக்கும் என்றும் குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கான சொத்து வரியானது 100 சதவீதத்துக்குள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சொத்து வரியை குறைக்க மதுரையில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்?

tamithehindu : சோனியா மகளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின்
சகோதரியுமான பிரியங்கா வதேரா, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பி உள்ளது.
1999-ல் சோனியா காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உ.பி.யின் அமேதி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
அதன் பிரச்சாரத்திற்காக முதன் முதலாக களம் இறங்கினார் பிரியங்கா. இவர், பெல்லாரி தொகுதியில் அதிகமாக பிரச்சாரம் செய்தார். அங்கு பாஜகவின் சார்பில் போட்டியிட்ட சுஷ்மா ஸ்வராஜை வென்றார் சோனியா. பிறகு தொடர்ந்து அமேதி மற்றும் ராய் பரேலி தொகுதிகளில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்காகவும் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார் பிரியங்கா.
இவர், கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களாக போட்டியிடக் களம் இறக்கப்படுவார் என காங்கிரஸார் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், 2019-ல் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவார் எனும் சர்ச்சை மீண்டும் கிளம்பி உள்ளது. தன் உடல்நிலை கருதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா விலகிக் கொண்டார்.

கலைஞர் 50 ஆண்டுகள்.. திமுக தலைவராக பொன்.விழா ...

Shyamsundar  ONEINDIA TAMIL   சென்னை: திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்று இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாட திமுக கட்சி முடிவு செய்துள்ளது. 
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக  காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 
 இந்தநிலையில் அவரை நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாட திமுக கட்சி முடிவு செய்துள்ளது. 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கருணாநிதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார் கலைஞர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின் அவர் திமுக தலைவராக பொறுப்பேற்றார். 
அப்போதில் இருந்து இப்போது இப்போது வரை அவர் திமுகவின் தலைவராக இருக்கிறார். இதற்கு இடையில் கட்சியில் இருந்து வைகோ பிரிந்தது உட்பட ஒரு சில நிகழ்வுகளில் மட்டும் கட்சியில் சிறிய சிஸ்ரியா பிளவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் தாக்குப்பிடித்து கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார்.

நக்கீரன் கோபால் :கலைஞர் நலம் பெற்று வருகிறார் .. வதந்திகளை நம்பவேண்டாம்

nakkதிமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக இன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கலைஞரின் உடல்நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலையே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்தது.
இந்நிலையில், கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று இரவு கருணாநிதி இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், கலைஞர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

அழகிரி கலைஞரை பார்க்க மதுரையில் இருந்து புறப்பட்டார்

tamil.oneindia.com =shyamsundar: " தந்தை கருணாநிதியை பார்க்க மதுரையிலிருந்து சென்னை பறக்கிறார் அழகிரி சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, அவரது மகன் அழகிரி மதுரையில் இருந்து இன்று சென்னை வர இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள், நேற்று இரவோடு இரவாக அவரது வீட்டிற்கு வந்தார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நேற்று கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். அதேபோல் நடிகர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் , நடிகர் சரத்குமார், ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க அவரது மகன், அழகிரி சென்னை வருகிறார். மதுரையில் இருந்து அவர் சென்னை வருகிறார்.விமானம் மூலம் அவர் இன்னும் சில நிமிடத்தில் சென்னனை வர இருக்கிறார்

அமெரிக்கா 1800 குழந்தைகள் குடும்பத்துடன் சேர்ப்பு,, எல்லையில் பிரித்து வைக்கப்பட்ட குழந்தைகள்


BBC : நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் வந்த 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் தங்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. e>ஆனால்,பிரித்து வைக்கப்பட்ட 700 குழந்தைகள்
இன்னமும் அவர்களின் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்படவில்லை. இதில் 431 குழந்தைகளின் பெற்றோர் தற்போது அமெரிக்காவில் இல்லை. இவர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.
கடந்த மாதம் சான் டியாகோ ஃபெடரல் நீதிபதியான டானா சாப்ராவ் வழங்கிய தீர்ப்பில், குடியேறிகள் விவகாரம் தொடர்பாக டிராப் நிர்வாகம் இயற்றிய கொள்கையின்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட சிறார்கள் ஜுலை 26-ஆம் தேதிக்குள் அவர்களின் பெற்றோரிடம் மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டிட்டிருந்தார்.
ஆவணங்கள் ஏதுமில்லாமல் அமெரிக்கா வந்த பெற்றோர்களிடம் இருந்து 2500 குழந்தைகள் அந்நாட்டு அதிகாரிகளால் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். இது அப்போது உலக அளவில் மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது.

கலைஞர் உமா - பிரபா போன்றவர்களை அன்று காப்பாற்றினார்.... சமுகவலையில் Flashback

Ajeevan Veer : கலைஞர் ஈழத் தமிழருக்காக அதிகம் செய்துள்ளார். அவர் அளவு
ஈழ மக்களுக்கு  நன்மை செய்தோரில்லை. கலைஞரின் அரசியல் எதிர்களின் பரப்புரைகள் அவரை பற்றி ஒரு ....  !
Radha Manohar : எப்படியாவது கலைஞர் மீது சேறு பூசிவிடவேண்டும் என்று பலர் துடிப்பது புரிகிறது, அதிலும் ஈழ புலம்பெயர்கள் துடிப்பது மிக நன்றாகவே தெரிகிறது, அடிபடையில் வெள்ளாள ஜாதி வெறியை பள்ளி சிறார்களின் நூல்களிலேயே புகுத்திய ஆறுமுக நாவலரின் மூளை கழுவலில் உருவான சமூகத்திடம் வேறு என்ன சுய புத்தியை எதிர்பார்த்து விடமுடியும்.?

எப்பொழுதும் யாரை தாக்கினால் தமக்கு எந்த காலத்திலும் எந்த பிரச்சனையும் வராது என்று நிச்சயமாக தெரிகிறதோ அவரை மிக மூர்க்கமாக தாக்கும் சந்தை கும்பல் மன நிலையை விட்டு இவர்கள் இன்னும் வெளியே வரவில்லை. அதாவது சுய சிந்தனை பெறவில்லை .
சுயசிந்தனை பெறுவதற்கு நிறைய கற்கவேண்டும் ..
 புத்தகங்கள் படிக்கவேண்டும் . வரலாறுகள் அறியவேண்டும் இவை ஒன்றும்தான் கிடையாதே?
இவர்களுக்காக நெடுமாவும் சீமானும் வைகோவும் ஆண்டன் பாலசிங்கமும் தமிழ்செல்வனும் மட்டுமே சிந்தித்தால் போதும் அவர்களின் வாந்திகளை விழுங்கியே திருப்பி கக்கி கக்கி அதுவே தற்போது பழகி விட்டது ,, கலைஞர் ஒரு பார்ப்பனராக அல்லது வெள்ளாளர் அல்லது பிரபாகரனின் கரையர் ஜாதியாக இருந்திருந்தால் நிச்சயம் இந்த கூட்டம் கலைஞரை இவ்வளவு தூரம் தூற்றி இருக்காது ..
அவர்தான் நாயனக்காரர் ஆயிற்றே ... எண்ணிக்கையில் மிக மிக சிறுபான்மை ஜாதியை சேர்ந்தவர் . அதிலும் அவர் குடும்பத்தில் தலித்துகள் நாடார் பார்பனர் என்று பலரும் திருமணம் செய்து ஜாதிய கட்டுமானத்தை தகர்க்கும் செயல் முறையை நடத்தி காட்டிவிட்டாரே?

வியாழன், 26 ஜூலை, 2018

தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்.. 1,03 லட்சம் கோடி வங்கி பணத்தை ஸ்டெர்லைட் முழுங்கி .

thetimestamil.com : நித்தியானந்த் ஜெயராமன் : பிரித்தானிய பன்னாட்டு
நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில், புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ஆர்சனிக்கை தினமும் 2 முதல் 21 டன்கள் அளவு வரை (சராசரியாக 7.8 டன்கள்) வெளியிட்டிருக்கிறது என்று ஸ்டெர்லைட் நிறுவனமே
வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்செனிக் பொருண்ம மதிப்பீட்டின் (Arsenic Mass Balance) மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வேதாந்தாவின் ஆலோசகரான NEERI, 2005-இல் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில், உள்ளீடு செய்யப்படும் செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு 0.0579 சதவிகிதம் என்று அனுமானித்ததன் மூலம், ஆர்செனிக் உமிழ்வுகளின் அளவையும் மிகக்குறைவாக பதிவு செய்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட்டின் இறக்குமதி தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால், 2009-இல் இருந்து 2010 வரை அந்நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட்ட, செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு, 0.12 முதல் 0.64 சதவிகிதம் வரை இருந்துள்ளது என்பதே. இந்தக் குறைந்த தரத்திலான தாதுவை வாங்குவதற்காக, ஏற்றுமதியாளர் 4.8 கோடிகள் விலைக்குறைப்பு செய்தார் என்றும் அந்தத் தரவு தெரிவிக்கிறது.

கலைஞரின் இல்லத்துக்கு ஓ.பி.எஸ், ஜெயக்குமார் வருகை!

kksநக்கீரன்  : திமுக தலைவர் கலைஞரை நலம் விசாரிக்க சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் வருகை தந்ததனர்.
உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக திமுக தலைவர் கலைஞர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கலைஞரின் மூச்சுக்குழாயில் அவருக்கு பிரச்சனை இருப்பதன் காரணமாக அவருக்கு ட்ரக்கியாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி அவருக்கு குழாய் மாற்றும் பொருட்டு, காவேரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மாலையில் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கலைஞரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும் அவர் வழக்கத்தைவிட அதிகமான சோர்வடைந்ததாகவும் தகவல்கள் பரவின.

கிரித்திகா மரணம் ... பாரிசாலனும் ஹீலர் பாஸ்கரும் கைது செய்யப்படவேண்டும்.. ,,

திருப்பூர் கிருத்திகா மரணம்
பித்தலாட்ட ஹீலரும், பாரிசாலனும்
திருப்பூர் கிருத்திகா மரணம்


கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர்
வினவு :திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, வயது 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவர் கார்த்திகேயன் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கிருத்திகா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ளார். தமிழகத்தில் சமீபமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் போன்ற ஊடகங்களில் பரவி வரும் ’இயற்கை வாழ்வியல்’ குறித்து இத்தம்பதியினருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், தனது மனைவிக்கு இயற்கையான முறையில் மருத்துவ உதவி இன்றி வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். தனது மனைவிக்கு மட்டுமின்றி தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் வீட்டிலேயே இயற்கை முறையில் சுக பிரசவம் மேற்கொள்ள தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கிருத்திகாவுக்கும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்ள தான் உதவுவதாக முன்வந்துள்ளார்.

ஊடகங்களால் முடியாததைத் தனி ஒருவனாகச் சாதித்தார் ராகுல் காந்தி .. கேள்விக்கு உள்ளாக்கப்படும் அதிகாரம்

சவுக்கு : குத்துச்சண்டைக் களத்தில் முகமது அலி முதல் மைக் டைசன் வரை பலரும் நாக் அவுட் குத்து விடுவதை பார்த்திருக்கிறோம். ராகுல் காந்தி தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர் என்ற போதிலும், தனது நாக் அவுட் பஞ்சைக் குத்து மூலம் அளிக்கவில்லை. காட்டமான, தீவிரமான உரையை நிகழ்த்தியதற்குப் பின், அவர் கட்டி அணைப்பதன் மூலம் அளித்த பஞ்ச், பிரதமர் நரேந்திர மோடியைத் தீவிரமான திகைப்பில் ஆழ்த்தி, பாஜகவைத் திணறடித்தது. அவரது இந்தச் செயல், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என அனைத்தையும் வியாபித்து அமித் ஷா படையினரை ஓட ஓட விரட்டியது.
ராகுல், திகைத்துப்போன மோடியை கட்டி அணைத்ததன் மூலம் தோல்வியில் முடிந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தைக் காலிசெய்துவிட்டார். வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டித் தழுவும் பழக்கம் கொண்டவரும் மற்றவர்களை திணறடிப்பவரும் 56 அங்குலம் விரிந்த மார்பு கொண்டவருமான பிரதமரை ராகுல் கட்டி அணைத்தார். திகைத்துப்போன மோடி, ராகுலை பதிலுக்குக் கட்டி அணைக்கவில்லை. ஆனால் தொலைக்காட்சி காமிராக்களை உணர்ந்தவர் அரை மனதுடன் ராகுலிடம் கைகுலுக்கினார். ராகுல் முதுகில் லேசாக தட்டிப் பாராட்டவும் முற்பட்டார். ராகுல் திரும்பி வந்தபோது தனது காங்கிரஸ் சகாக்களைப் பார்த்து கண்ணசைத்தது அனைவரையும் கவர்ந்தது.

சுப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் போலீஸ் ,,, CCTV பதிவாகியது .. கான்ஸ்டபில் நந்தினி

திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட்!மின்னம்பலம்:
சென்னை சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நந்தினி என்பவர் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இவர் எழும்பூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு இன்று(ஜூலை 26) சென்றுள்ளார். அங்கு, வெகு நேரமாக அங்கும் இங்கும் நடந்தவாறும், செல்போனில் பேசியவாறும் இருந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஒரு பொருளை எடுத்து தன்னுடைய பாக்கெட்டுக்குள் வைத்துள்ளார். இதனைப் பார்த்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், அதை உரிமையாளர் பிரணவ் விடம் கூறினர்.
பின்பு, இரண்டு பொருட்களை மட்டும் பில் போட எடுத்து வந்துள்ளார் நந்தினி. அப்போது, பாக்கெட்டுக்குள் இருக்கும் பொருட்களையும் எடுத்து பில் போடுங்கள் என கடை உரிமையாளர் பிரணவ் கூறியுள்ளார். அப்படி எந்தப் பொருளும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தேர்தலில் இந்து வேட்பாளர் வெற்றி! ...பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் எம்பி ஆனார்!

பொதுத்தேர்தலில் வென்று பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்குள் நுழைய உள்ள முதல் இந்துவெப்துனியா :பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தார்பார்கர் தொகுதியில் போட்டியிட்ட மகேஷ் மலானி, கீழ் சபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெயரை பெற்றுள்ளார். #PakistanElection இஸ்லாமாபாத்:; பாகிஸ்தானில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.
இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும், அதிக இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது.
இதனால் இம்ரான்கான் பிரதமராக உள்ளதாக அறியவருகிறது.
  இந்நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்கர் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து மதத்தை சேர்ந்த மகேஷ் மலானி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அந்நாட்டு பாராளுமன்ற தேசிய சபை (கீழ்சபை) தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

கோவை விடுதி உரிமையாளர் கிணற்றில் சடலமாக மீட்பு


தலைமறைவு
tamil.oneindia.com - lakshmi-priya.: கோவை: கோவையில் விடுதி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் ஆலங்குளத்தில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
ஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஹாஸ்டல் வார்டனாக இருப்பவர் புனிதா. விடுதியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகளை பிறந்த நாள் விழாவுக்கான பார்ட்டி என்று கூறி புனிதா அவர்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

தமிழக மீனவர்களின் 168 படகுகள் விடுவிப்பு .. ஊர்காவல்துறை , மன்னார், மல்லாகம், பருத்தித்துறை

tamilthehindu :எஸ்.முஹம்மது ராஃபி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 168 படகுகளை அந்நாட்டு நீதிமன்றங்கள் விடுவித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கேசவ் கோகலே இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரசமுறைப் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அப்போது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இந்திய அரசின் சார்பாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலுமான 4 ஆண்டுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கப் பரிந்துரை செய்தது.

கலைஞருக்கு வீட்டிலேயே சிகிச்சை . தொண்டர்கள் பார்க்க வரவேண்டாம் என்று அறிவிப்பு

tamilthehindu :கலைஞருக்கு  உடல் நலத்தில் வயோதிகம் காரணமாக நலிவு
ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறார். தொண்டர்கள் யாரும் அவரைப் பார்க்க வரவேண்டாம் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வயது மூப்பு, ஒவ்வாமை காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 2016 டிசம்பர் 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீராகி டிம்பர் 7-ம் தேதி வீடு திரும்பியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 மூச்சுவிடுவதை எளிதாக்க அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு செயற்கை சுவாசக் குழாய், செயற்கை உணவுக் குழாய் பொருத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிசம்பர் 23-ம் தேதி அவர் வீடு திரும்பினார்.
அதன்பிறகு, கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று  ஒய்வெடுத்து வருகிறார். காவேரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது.

டெல்லியில் பட்டினி சாவு .. 8வயது,4வயது மற்றும் 2 வயது சகோதரிகள் 8 நாட்கள் தொடர்ந்து பட்டினி

தலைநகரில் பட்டினிச்சாவுகள்!
மின்னம்பலம் :நாட்டின் தலைநகர் டெல்லியிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் நேற்று(25.07.18)பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள மண்டவாலி பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8வயது,4வயது மற்றும் 2 வயதுடைய 3 சகோதரிகள் 8 நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடந்ததால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நள்ளிரவு 1மணிக்கு மருத்துவமனைக்கு அவர்களது தாயாரால் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடல் கூறாய்வில் மூன்று சகோதரிகளும் சத்திண்மையாலும் பட்டினியாலும் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவர்களின் உடலில் எந்தவித உணவு உண்டதற்கான ஆதாரங்களும் இல்லை.

" பங்களா " மே.வங்கம் பெயர் மாற்றம் .. சட்டப்பேரவையில் தீர்மானம்!


மின்னம்பலம் :மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்றும்
தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் வங்க மாநிலம், மேற்கு வங்கம் என்றும் கிழக்கு வங்கம் என்றும் பிரிந்தது. பின்னர் கிழக்கு வங்கம் வங்கதேசம் நாட்டோடு இணைந்தது. தற்போது, இந்தியாவில் 6ஆவது மிகப்பெரிய பொருளாதாரத்தை உடைய மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்தே குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 26) அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமாராக இம்ரான் ... வருவதில் புதிய சிக்கல்


விகடன் -அஷ்வினி சிவலிங்கம் : பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி  முன்னிலை வகித்து வந்த நிலையில்,  தற்போது புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.< பாகிஸ்தானில் நேற்று (25-07-2018) பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நேற்றிரவு 11 மணி நிலவரப்படி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி 101 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இம்ரான் கான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதில் இம்ரான் கான் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து குகையில் இருந்து மீண்ட 12 சிறுவர்கள் தற்காலிக துறவறம்!

தினமணி : பாங்காக், தாய்லாந்து குகையில சிக்கி, மீட்கப்பட்ட சிறுவர்கள்,
தங்களைக் காப்பாற்றிய நீச்சல் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
 கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 12  சிறுவர்களும் மொட்டை அடித்து, தற்காலிக துறவு மேற்கொண்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் சியாங் ராய் என்ற பகுதிக்கு, ௧௨ சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளர், சமீபத்தில் சுற்றுலா சென்றனர்.பல, கி.மீ., நீளம் உடைய குகைக்குள், அவர்கள் சென்றபோது, பலத்த மழை கொட்டியது. குகைக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால், குகையை விட்டு வெளியேற முடியாமல், உள்ளுக்குள் சிக்கினர். இவர்களை மீட்க, பல்வேறு முயற்சி செய்தும், மீட்புப் பணி தோல்வி அடைந்தது.இதையடுத்து, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
கடும் முயற்சியை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பின், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறுவர்கள் அனைவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுவர்கள், அங்குள்ள புத்த கோவிலில் நேற்று கூடினர்.

ராகுல்: பாஜக ஆர் எஸ் எஸ் ஐ தோற்கடிக்கும் வல்லமை உள்ள எவரையும் பிரதமாராக ஏற்போம்

பாரதிய ஜனதா மற்றும் RSS-ஐ தோற்கடிக்கும் வல்லமை பொருந்திய யாரையும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2019 தினமணி :மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு ஆதரவு அளிப்பதாக தேவெ கௌடா தெரிவித்தார்.
2019 மக்களவை தேர்தலில் வலுவான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்குமா என்ற சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன. 
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவெ கௌடா ராகுல் காந்திய பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் ஆட்சி நடந்து வருகிறது. 
இந்நிலையில், தேவெ கௌடா இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி தொடரும். ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும்' என்றார்.
ஆனால், மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் தொகுதி பங்கீடு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை

ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை குஜராத் நீதிமன்றம்

tamilthehindu :குஜராத்தில் 2015-ம் ஆண்டு படேல் சமூக இடஒதுக்கீடு
போராட்டத்தின்போது பாஜக எம்எல்ஏ அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேல் உள்ளிட்ட இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2015-ம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்தது. ஹர்திக் படேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அகமதாபாத் விஸ்நகரில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் சூறையாடப்பட்டது.