Lotteriesகாலையில் கக்கூசு ஒழுங்காக போகவில்லை என்றாலும் கருணாநிதியை காரணம் காட்டும் தமிழ் இன உணர்வாளர்கள் தற்போது  கள்ள மௌனம் சாதிப்பதே   யோக்கியதை இதுதான் என காட்டுகிறது . கோவையின் கல்லூரி மாணவர்கள் சந்தித்து அரட்டையடிக்க வாய்ப்புள்ள இடங்களில் முதன்மையானது தேநீர் கடைகள். கோவையின் டீ மாஸ்டர்கள் கணக்கில் அசகாய சூரர்கள். “மாஸ்டர், டூ பை த்ரீ… சிக்ஸ் பை 15.. ஒன் பை போர்” என்று விதம் விதமாக வேண்டுகோள் வந்தாலும் குழம்ப மாட்டார்கள். அதிலும், காந்திபுரம் ஆறாவது குறுக்குச் சந்தில் முன்பு ஒரு கில்லாடி கேரள சேட்டன் இருப்பார்.. அவருக்காகவே அந்தக் கடையில் கூட்டம் அள்ளும்.
மேற்படி நாயர் கடையில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி இருந்த அந்தக் கட்டிடத்தின் முன் அப்போதே விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து நிற்கும். பளபளப்பான மேட்டுக்குடி மக்களுக்கு இந்த அழுக்கு சந்துக்குள் என்ன தான் வேலை?