வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை ஆகியோரை குறிவைத்து (1977ல்) எய்த எறிகணை இன்று வடமாகாண மேலாதிக்க அரசியல்வாதிகளின் தலையை துண்டித்துவிட்டது.


நாங்களே ராசாக்கள், நாங்களே மந்திரிகள் இது தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரான திரு எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப்பின்னர் தமிழ்மக்களின் அரசியலில் ஏற்படுத்தப்பட்ட எழுதப்படாத யாப்பாகும். இந்த நிலையிலேயே திரு செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குமுன்னர் அதாவது திரு செல்வநாயகம் அவர்கள் 1977 ஏப்ரல் மாதம் 26 ந் திகதி மரணமானார். அவர் முற்றாக செவிப்புலன் இழந்திருந்த நிலையில் 1976 ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி அன்று கீரியும், பாம்புமாக வடமாகாண அரசியலில் செயற்பட்ட தமிழரசுக் கட்சியினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்கினர்.


புதிய அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் என்ன?


1970ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடமாகாணத்தின் பிரதான அரசியல்வாதிகளென அறிமுகமான சிலர் தோல்வியடைந்தனர். அதாவது திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் ( யாழ்ப்பாணம்) மு.சிவசிதம்பரம் (உடுப்பிட்டி) தா.சிவசிதம்பரம் (வவுனியா) திரு அ.அமிர்தலிங்கம் (வட்டுக்கோட்டை) ஈ.எம்.வி நாகநாதன் (நல்லூர்) முன்னைய மூவரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினதும், பின்னைய இருவரும் தமிழரசுக்கட்சியினதும் உறுப்பினர்களாவார். இந்நிலையில் இவர்களின் அரசியல் மறுவாழ்விற்கான ஒரு நாடகமே புதிய அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமாகும்.


திரு செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பதவியினை ஏற்பதற்கான அனைத்து தகைமைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த மட்டுநகர் பாராளுமன்ற உறுப்பினரான திரு செ இராசதுரை அவர்கள் புறந்தள்ளப்பட்டு கட்சியின் முக்கிய பதவிகள் இரண்டும் அதாவது தலைவர், செயலாளர் வடமாகாண அரசியல்வாதிகளின் பரம்பரைச் சொத்தாக ஆக்கப்பட்டு முறையே மு. சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம் ஆகிய இருவரினதும் அதிகாரத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.


அதன்பின்னர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமை தாங்கினார்.


குறிப்பு –திரு இராஜதுரை அவர்கள் கட்சியின் தலைமைப்பதவியினை வகிப்பதற்காக கொண்டிருந்த தகைமைகள் என்ன?


1952ம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியின் மட்டுநகருக்கான அமைப்பாளராகவும், 1956 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மட்டுநகர் மக்களினதும் கிழக்கு மாகாணத்தினதும் முடிசூடா மன்னனாக, பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவானது மட்டுமன்றி மட்டுநகர் மாநகர சபையின் முதலாவது நகர பிதாவாகவும் தெரிவுசெய்யப்பட்டு பணியாற்றிய பெருமைக்குரியவராக மட்டுநகர் மக்களால் நேசிக்கப்பட்டவராகும். அதேவேளை திரு மு. சிவசிதம்பரம் அவர்கள் 1956,ல் பருத்தித்துறையிலும் மற்றும் 1970ம் ஆண்டுத் தேர்தலில் உடுப்பிட்டியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்ததுடன் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் 1952, மற்றும் 1970 ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் வட்டுக்கோட்டையிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களாகும்.


இந்நிலையிலும் திரு இராசதுரை அவர்கள் கிழக்கு மாகாணத்தவர் என்னும் காரணத்தினால் அவர் தலைமைப்பதவியில் அமர்வதற்கு யாழ் மேலாதிக்க சக்திகள் இடமளிக்கவில்லை. அத்துடன் மட்டும் அவர்கள் தமது மேலாதிக்க அதிகாரத்தினை நிறுத்திக்கொள்ள முயலவில்லை. 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு இராசதுரை அவர்களை அரசியலிலிருந்து அகற்றும் நடவடிக்கையாக மட்டுநகர் மக்களின் கருத்துக்களுக்கு எவ்வித மதிப்புமளிக்காமல் திரு இராசதுரை அவர்களுக்கு எதிராக மட்டுநகர் தொகுதியில் திரு காசி ஆனந்தன் என அழைக்கப்படும் காத்தமுத்து சிவானந்தன் என்பவர் நிறுத்தப்பட்டார். ஆனால் அவரால் வெற்றியீட்ட முடியவில்லை.


அதேபோல் திருகோணமலை தொகுதியிலும் திரு தங்கத்துரை அவர்களுக்கு எதிராக திரு சம்பந்தன் (1977) நிறுத்தப்பட்டார்.


குறிப்பு –சம்பந்தனைவிட தங்கத்துரைக்கு இருந்த தகைமைகள் என்ன?


1970ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முதன்முதலாக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் திரு தங்கத்துரை. அதே ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் திரு பா நேமிநாதனாகும். அவரின் பதவிக்காலத்தின்போது மக்களுக்கு அவர் சரிவர பணியாற்றவில்லை என்னும் முறையீடுகள் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு தொகுதி மக்களால் முறையீடு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கமைய திருமலைத் தொகுதி மக்களினது தேவைகளையும் கவனிக்கும் பொறுப்பும் திரு தங்கத்துரை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவரே திருமலை மக்களினது தேவைகளையும் நிறைவேற்றினார்.


இந்நிலையிலேயே அமிர்தலிங்கத்தினதும், சிவசிதம்பரத்தினதும் அதிகாரம் தங்கத்துரையை திருமலைத் தொகுதிக்கான வேட்பாளர் (1977) பட்டியலிலிருந்து நீக்கியதுடன் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. இருந்தும் பின்னர் இடம்பெற்ற (1989, 1994 ஆகிய இரு தேர்தல்களிலும் தோல்வியடைந்த சம்பந்தன் (10-10–2000ல்) இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட அஞ்சியநிலையில் அவரது மருமகன் முறையான சிவபாலன் என்பவரை களமிறக்கி அதிலும் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் தம்மை பாராளுமன்ற பலகணியில் அமாவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த திரு அமிர்தலிங்கம் அவர்களை கொன்றொழித்த பிரபாகரனின் பாதங்களில் சாஸ்ட்டாங்க நமஸ்காரம் பண்ணியதற்கமையவே (05-12-2001ல்) இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற பலகணியில் அமர்வதற்கான வாய்ப்பினை தமதாக்கினார். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் இடும் கட்டளைகளை சிரம்மேல் சுமந்து பாராளுமன்றத்தில் குமுறிய சம்பந்தனின் (18.05.2009)ற்குப் பிந்திய வரலாறு என்ன?


இலங்கையில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இன்றுவரை மேற்கொள்ளாத புதிய அரசியல் நடைமுறை ஒன்றினை அரங்கேற்றிய சம்பந்தன் தனது ஏகப்பிரதிநிதியும் முன்னாள் எஜமானனுமான பிரபாகரனை கொன்றொழித்த இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுடன் தமிழ் மக்களுக்கான விலையினை தெரிவித்து அவருடன் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தினார். அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாகவே மேடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிவுற்றது.


கிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை ஆகியோரை குறிவைத்து (1977ல்) எய்த எறிகணை இன்று வடமாகாண மேலாதிக்க அரசியல்வாதிகளின் தலையை துண்டித்துவிட்டது.


அன்று கிழக்கு மக்களின் கதாநாயகர்கள் நாங்களே எனவும் கிழக்கிலங்கை மக்கள் வெறும் நடிகர்களே எனவும் முழக்கமிட்டவர்கள் அனைவரினதும் அதிகாரங்களை தனது கையில் இன்று எடுத்துக்கொண்ட (கிழக்கு மாகாணத்தவரான) சம்பந்தன் நானே ராஜா, நானே மந்திரி நீங்கள் அனைவருமே எனது அடியாட்களே என வடமாகாண மேலாதிக்க சிந்தனையாளர்களுக்கு தனது முதலாவது அதிகார பலத்தினை பிரயோகித்துள்ளார். பிரபாகரனிடம் இருந்த அதிகாரத்தினைவிட இன்று சம்பந்தனிடமுள்ள அதிகாரம் வட மாகாண அரசியல்வாதிகள் அனைவரையும் மண்டியிட வைத்துள்ளது.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகரான திரு ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் வாரிசான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கதி என்ன? புலியின் அதிகாரமிக்க உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், எம்.கே சிவாஜிலிங்கம், என் ஸ்ரீகாந்தா, சதாசிவம் கனகரெத்னம், மற்றும் சிவநாதன் கிஸ்ஸோர். ரசீம் முகமட் இமாம் இவர்களுக்கு ஏற்பட்ட கதியென்ன?


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அப்பாப்பிள்ளை வினாயகமூர்த்தி சம்பந்தனின் கால்களில் விழுந்து தம்மை யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொண்டார். ஆனால் இடம்பெறப்போகும் தேர்தலில் (08.04.10) வினாயகமூர்த்தி வெற்றிபெறுவது பகல் கனவே!


இவர்கள் தவிர புலிகளினால் வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்பட்டவர்கள் என அடையாளங்காட்டப்பட்டு தங்கேஸ்வரி கதிராமன், சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி.


மற்றும் திருமலைத் தொகுதியின் உறுப்பினரான கதிர்காமத்தம்பி துரைரத்தினம் என்பவர் சம்பந்தனுக்கும் சரத் பொன்சேகா அணியினருக்குமிடையிலான இரகசிய உடன்படிக்கையினை வெளியிட்டமைக்காகவும், இரு சாராருக்குமிடையில் இடம்பெற்ற நிதிப்பரிமாற்றங்களை சிலரிடம் தெரிவித்த குற்றச்சாட்டிற்காகவும் வேட்பாளர் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.


வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும், சக இனத்தவர்களையே அடிமைகளாக்க நினைப்பவர்களின் அதிகாரம் ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை என்பதனை நினைவு கூர்வதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.
ஆசிரியர் மஹாவலி.கொம்
தமிழகத்தில் வெளியாகும் பிரபல அரசியல் விமர்சன வார இதழான ‘துக்ளக்’ தனது 10-2-2010 இதழில் நீண்ட தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள  பல கருத்துக்கள் யதார்த்தபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் இருப்பதால், எமது தேனீ வாசகர்களும் அவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு, அதை அப்படியே இங்கே தந்துள்ளோம்.


இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல், பொதுவாகத் தமிழகப் பத்திரிகைகளிடம் ஒரு மாதிரியான விரக்தியைத் தோற்றுவித்திருக்கின்றது. ராஜபக்ஸவைத் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள், (தமிழ்க்கட்சியும், தீவிர சிங்களக் கட்சியும் உட்பட) இணைந்து, முன்னாள் ராணுவத் தளபதியை பொது வேட்பாளராக நிறுத்திய நேரத்திலிருந்து – தமிழகப் பத்திரிகைகளிடையே ஒரு பரபரப்பு உண்டானது. இதுவரை இலங்கைத் தேர்தலைப் பற்றி, இங்கு காணப்படாத உற்சாகம் இப்போது தோன்றியது.


விடுதலைப் புலிகளை வீழ்த்தி, அவர்களுடைய தலைவரின் வாழ்வையும் முடித்து வைத்த ஆட்சியின் தலைவர் என்பதால், தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்களுக்கும், ஈழப் பிரச்சாரகர்களுக்கும், தமிழ் ‘இன’ உணர்வாளர்களுக்கும், ராஜபக்ஸ மீது ஒரு விசேட வெறுப்பு உண்டாகிவிட்டது. இவர்களில் பலர் தமிழ்ப் பத்திரிகை உலகத் தொடர்புகள் மிக்கவர்கள், இதனால் இவர்களுடைய வெறுப்பு, பத்திரிகை உலகிற்கும் பரவியது. தமிழ் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு, இரு வகைப்பட்டது.


ஒன்று – உண்மையிலேயே, ராஜபக்ஸ தமிழர் விரோதி என்று நம்பிய வகை, மற்றொன்று ராஜபக்ஸவை மிக மோசமாகச் சித்தரிப்பது பத்திரிகை வியாபாரத்திற்கு உதவும் என்று நம்பிய வகை. இப்படித் தமிழ் பத்திரிகைகள் பல, ‘ராஜபக்ஸ வீழ்ந்தால், தமிழர்கள் வாழ்வார்கள்’ என்ற கருத்துக்களையும், அதற்கேற்ப செய்திகளையும் வெளியிட, இது சில ஆங்கிலப் பத்திரிகைகளையும் (‘ஹிந்து’ பத்திரிகை அல்ல) பாதித்தது. இவ்வாறாக, இங்கு ‘இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ராஜபக்ஸ தோல்வி காணக் கூடும்’ என்ற கருத்து பரவத் தொடங்கி, இறுதிக் கட்டங்களில் ‘பொன்சேகா வெற்றி பெறுவார்’ என்ற அபிப்பிராயம் கூட தோன்ற ஆரம்பித்து விட்டது. குறைந்த பட்சம் ‘கடும் போட்டி’ நடந்து, தப்பித்தோம் பிழைத்தோம் என்ற அளவில்தான் ராஜபக்ஸ வெற்றி பெறமுடியும் - என்று பலரும் நம்பி விட்டனர்.


இதற்கு நேர்மாறாகத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. ராஜபக்ஸ மிக வசதியாகவே வென்றிருக்கிறார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் நின்று ஆதரவு தெரிவித்தும் கூட, பொன்சேகா மிகவும் பின்தங்கித் தோற்றிருக்கிறார். இங்கு அனாவசியமாக ஃபொன்சேகாவை சுவீகாரம் எடுத்துக் கொண்ட பத்திரிகைகள், ராஜபக்ஸ வெற்றியைப் பற்றி சந்தேகத்தைக் கிளப்ப முயற்சிக்க, அதுவும் எடுபடாமல் போகவே, இலங்கைத் தேர்தல் முடிவு பற்றி ஒரு விரக்திப் பார்வை இங்கே தெரிகிறது.


இது சிறிதும் தேவையற்றது. ராஜபக்ஸாவாகட்டும், பொன்சேகாவாகட்டும், அதிபர் பதவிக்கு வந்திருக்கக் கூடிய வேறு ஒருவராகட்டும் - சிங்களவர் ஓட்டு இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது, இந்த நிலைமையில் அவர்கள் யாராயினும் சரி, தாங்களாகவே முன்வந்து தமிழர்களின் நலனை மிகத் தீவிரமாக அணுகிவிட மாட்டார்கள். ஆகையால், ‘இலங்கையில் இவர் ஜெயித்தால் தமிழர்களுக்கு தோல்வி’ – ‘இவர் ஜெயித்தால் தமிழர்களுக்கு உபயோகம்’ என்று சொல்லக் கூடிய சிங்கள அரசியல்வாதி எவரும் இருக்க முடியாது.


பொன்சேகாவே வெற்றி பெற்றிருந்தால் கூட, அவரை ஆதரிக்கின்ற சிங்கள எதிர்க்கட்சியான ஜனதா விமுத்தி பெரமுனா – அவரை ‘தமிழர் நலன் விரும்பி’யாகச் செயல்பட விட்டிருக்குமா? அவர்தான் அப்படி செயல்பட முனைந்திருப்பாரா? தமிழர்களுக்கு எதிராக அவர் முன்பு பேசியதை எல்லாம், ஒரேயடியாக மறந்துவிடத் தயாராக இருந்தால்தான் - அவரை ‘தமிழர் நலன் விரும்பி’யாக நாம் நினைக்க முடியும். தன்னுடைய ராணுவத் தலைமை பற்றிய ஒரு மிக உயர்ந்த அபிப்பிராயம், திடீர் அரசியல் ஆசை, எதிர்க் கட்சிகளின் ஆதரவினால் சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியும் என்ற ஒரு அதீத கற்பனை, வாய்க்கு வந்த வாக்குறுதிகள்ஸ போன்றவற்றைத் தவிர, வேறு எதையும் அவரிடம் பெரிதாகக் காண முடியவில்லை.


இப்பேர்ப்பட்டவரை, சிங்கள எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தாங்களும் ஆதரிக்க விடுதலைப்புலி ஆதரவு முன்னணியும் முன்வந்தது, ஒரு மிகத் தவறான அணுகுமுறை. அந்தப் புலி ஆதரவு முன்னணியில் உள்ள பலர், தமிழகத்தில் உள்ள தமிழ் பத்திரிகை உலகத் தொடர்பு உள்ளவர்கள் என்பதால், அவர்களும் தமிழகப் பத்திரிகைகளும், ஒத்த கருத்து உடையவர்களாக ‘பொன்சேகா வெற்றி – தமிழர் நல்வாழ்வு’ என்று நம்பி, பிரச்சாரமும் செய்து, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டனர். இது பரவாயில்லை, இதனுடைய ஒரு விரும்பத் தகாத விளைவு இலங்கைத் தமிழர்களிடையே ஏறபட்டது. ராஜபக்ஸ தோல்வி நமக்கு நல்லது – என்று இலங்கைத் தமிழர்கள் தீர்மானித்ததால், தமிழர் பகுதிகளில், பொன்சேகா பெரும் ஆதரவு பெற்றார். தமிழர் பகுதிகளில் குறைந்த அளவு வாக்குப் பதிவு நடந்திருந்தாலும், அது ராஜபக்ஸவிற்கு எதிராகவே அமைந்தது. (அத்தனை வாக்காளர்களும், அவருக்கு வாக்களித்திருந்தால் கூட அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது – என்பது வேறு விடயம்)


இப்போது, இந்த ராஜபக்ஸ எதிர்ப்பிற்காக, தமிழர் பகுதிகளில் வருத்தம் தோன்றியிருப்பதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் செய்தி கூறுகின்றது. அவர்களின் பிரதிநிதி ஒருவர், ‘பொன்சேகாதான் வெற்றி பெறப் போகிறாh என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை நம்பி அவருக்கே வாக்களித்தோம். இதைவிடப் பேசாமல், ஓட்டளிக்காமல், தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம். இப்போது ராஜபக்ஸவிற்கு தமிழர்கள் மீது கோபம்தான் வரும்’ என்று கூறியிருக்கிறார்.


இலங்கைத் தமிழர்களிடையே இந்த அபிப்பிராயம் எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இந்த அபிப்பிராயத்தில் கூறப்பட்டுள்ளது போல, தமிழர்கள் தனக்கு எதிராக வாக்களித்தனர் என்பதற்காக, அவர்கள் மீது கோபம் கொண்டு, அவர்களுடைய நலன்களைப் புறக்கணிக்க ராஜபக்ஸ முனைந்தால், அது ‘அவர் வகிக்கிற பதவிக்கு அருகதையற்றவர்’ என்பதைத்தான் காட்டும். சிங்களவர்களில் கூட, சுமார் 30 சதவிகிதத்தினர், ராஜபக்ஸவிற்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். அதற்காக அவர்கள் நலனைப் புறக்கணிக்க ராஜபக்ஸ முற்படுவாரா? இதுதான் ஒரு தேர்தலின் விளைவு என்றால் - ஜனநாயக முறையே அர்த்தமற்றதாகிவிடும்.


சொல்லப் போனால், தமிழர் நலன் பற்றி விசேட கவனம் செலுத்துவது, தனக்கு இப்போது அரசியல் ரீதியாகக் கூட மிகவும் அவசியமாகி இருக்கிறது என்பதை ராஜபக்ஸ உணர வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் இனிதான் நடைபெற வேண்டும். விலைவாசி, சட்டம் - ஒழுங்கு, ஊழல், உறவினர்களை முன்னேற்றுதல்ஸ என்ற பல விவகாரங்கள் மக்கள் முன் பெரிதாக நிற்கிறபோது, சிங்களவர்களின் ஓட்டுக்கள் ராஜபக்ஸவிற்கு கொத்தாக விழும் நிலை மாறும், அப்போது தமிழர்கள் போடக் கூடிய ஓட்டுக்களும் அவருக்கத் தேவைப்படும்.


அது மட்டுமல்ல, சிங்களவர்களுக்கு நிகராகத் தமிழர்களும் உரிமைகளைப் பெறவும், சமஸ்டி அமைப்பு வழியில் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவும், தமிழர்கள் அமைதியுடன் வாழ்ந்து, வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் வழி செய்யப்படுவது சிங்களவர்களுக்குக் கூட நல்லது. ஏனெனில், தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டால், தமிழர்களிடையே தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கும்.


விடுதலைப் புலிகளை வீழ்த்தி விட்டதால், தீவிரவாதம் அழிந்து விட்டது என்று இலங்கை அரசு நினைத்து விட முடியாது. தங்களை ஒரு ராணுவப் படை’ என நினைத்துக் கொண்டதால் – தங்களை மிஞ்சி செயல்பட்டு, இறுதியில் ஒரு சாரணர் (ஸ்கௌட்) குழு போன்ற சிங்கள ராணுவத்திடம் புலிகள் தோற்றுப் போனார்கள். ஆனால், தீவிரவாதிகளின் நாசவேலைகள் இப்படிப்பட்டதல்ல. அவற்றை எஞ்சியிருக்கும் புலிகளோ, அல்லது மற்ற சிலரோ மீண்டும் ஆரம்பிக்கலாம். அம்மாதிரி நிகழ்ந்தால், பொருட்சேதம், உயிர்ச் சேதம் மட்டுமின்றி, பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும். அம்மாதிரி நிலை தோன்றினால், அப்போது சிங்களவர்களே கூட, ‘ தமிழர்களுக்கு நியாயம் வழங்காதது அரசின் தவறு’ என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்.


சிங்களவர்களும், தமிழர்களும் சம உரிமை பெற்று வாழ்கிறபோது, இலங்கை பெரும் பொருளாதார வளர்;ச்சியைக் காணும். மக்களுக்கும் - நாட்டிற்கும் - ஆட்சியாளர்களுக்கும் கூட அதுதான் நல்லது. சர்வதேச அமைப்புகளின் உதவியைப் பெறவும் அம்மாதிரி நிலை பெரிதும் உதவும். இதை உணர்ந்து ராஜபக்ஸ, இனியும் தமிழர்களின் பிரச்சினைகளைக் கவனிப்பதில் அலட்சியமாக இருந்துவிடாமல், தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை தன்னுடைய முதல் பணியாக ஏற்க வேண்டும்.


சிங்கள வெறியர்களும், ராஜபக்ஸவை அரசியல் ரீதியாக எதிர்க்கிற கட்சிகளும், இதை எதிர்க்கக் கூடும். இப்போது பெற்றிருக்கிற வெற்றிகளைப் பயன்படுத்தி, சர்வதேச உதவிகளைப் பெற்று, பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தைக் கண்டு, ஊழலைத் தவிர்த்துச் செயல்படுவதன் மூலம் ராஜபக்ஸ, இந்தச் சிங்கள வெறி மற்றும் சந்தர்ப்பவாத எதிர்ப்பை எளிதில் எதிர் கொண்டு விடலாம். இதற்கு இந்தியாவும் அவருக்கு உதவ முன்வர வேண்டும். அது மட்டுமின்றி, ‘தமிழர்களின் உரிமைகளை இன்னமும் இலங்கை புறக்கணிப்பது தொடர்ந்தால், அது இந்திய அதிருப்தியை முழுமையாகச் சம்பாதித்துத் தரும்’ என்பது இலங்கை அரசுக்கு உணர்த்தப்பட வேண்டும். ‘இலங்கை அரசுக்கு ராஜரீக ரீதியில் நெருக்குதல் ஒருபுறம், இலங்கைக்கு பொருளாதார ரீதியான உதவிகள் மறுபுறம்’ – என்று இருமுனை அணுகுமுறையைக் கடைப்பிடித்து - இலங்கையில் சமஸ்டி முறையிலான ஆட்சி முறை ஏற்படுவதற்கும், தமிழர்கள், சிங்களவர்களுக்கு சமமாக வாய்ப்புகள் பெறவும், இந்தியா வழி காண வேண்டும். இதைச் சாதிக்க கால அவகாசம் தேவைப்படும்., ஆனால், இதற்கான தொடக்கத்திற்கு விரைவாகவே வழி செய்ய முடியும்.


ராஜபக்ஸவைப் பொறுத்த வரையில், ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி என்ற முறையில், இந்திய – இலங்கை நட்புறவின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகவே இருப்பார். திடீர் அரசியல் ஆசை பற்றி விட்ட – பற்பல கட்சிகள் தயவில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பட்ட - பொன்சேகாவை விட, ராஜபக்ஸ, சர்வதேச கருத்து, இந்திய ராஜரீக நிர்ப்பந்தங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணரக் கூடியவராக இருப்பார் என்று எதிர்பார்க்க இடமிருக்கிறது.


ஆகையால், இலங்கையில் பொன்சேகாவின் தோல்வி, தமிழர்களின் தோல்வியாக வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் நடாத்தப்படுகிற நாடகக் காட்சிகள், தங்களைத் திசைதிருப்பி விடாமல், இலங்கைத் தமிழர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு நடக்கிற நாடகங்கள் ஒன்றா, இரண்டா? இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கிற துன்பத்தில் ஒரு சதவிகித துன்பமும் காணாத தமிழக புலி ஆதரவாளர்களின் - சவால்கள், ஒரு சில மணி நேரப் பிணைப்பைக் காட்டுகின்ற மனிதச் சங்கிலிகள், காலை உணவிற்கும் மாலை உணவிற்கும் இடையிலான உண்ணாவிரதத் தியாகங்கள் , இனப் பற்றுப் பேருரைகள், வீர சாகஸக் கட்டுரைகள் - போன்றவற்றினால் பாதிக்கப்படாமல், அநேகமாக அவை எல்லாமே தமிழகத்தில் செல்வாக்கு அல்லது வர்த்கம் ஆகியவற்றின பெருக்கத்திற்காகச் செய்யப்படுகிற ‘சாகஸங்களின் சங்கமம்’ என்பதை இலங்கைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


வன்முறையாளர்களுக்கும், பிரிவினையாளர்களுக்கும் தருகிற நேர்முக மற்றும் மறைமுக ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களுடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வழி தோன்ற ஆரம்பிக்கும்.
www.thenee.com

புதன், 24 பிப்ரவரி, 2010

கனடிய புலிகளின் கோஷ்டி மோதலின் பிரதிபலிப்பே ‘உதயன்’ பத்திரிகை மீதான தாக்குதல்!

கனடா கந்தசாமி
அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகைக் காரியாலயம் தாக்கி சேதமாக்கப்பட்ட செய்தி, கனடிய ஆங்கில ஊடகங்களிலும், உலகம் முழுவதுமுள்ள தமிழ் ஊடகங்களிலும் ஒரு முக்கிய செய்தியாக வெளியாகியிருந்தது. இந்தத் தாக்குதல், ‘இனம் தெரியாத’ ;நபர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் குறிப்பிட்டன. கடந்த காலங்களில், அதாவது மே 18, 2009 ஆணடிற்கு முன்னர், தமிழ் ஊடகங்களில் ‘இனம் தெரியாத’ என்ற சொல்லு புலிகளைக் குறிப்பதற்கே பாவிக்கப்பட்ட ஒன்று என்பது, அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். ஏனெனில் புலிகள் உரிமை கோரமுடியாத சூழ்நிலையில் கடந்த காலத்தில் செய்த கொலைகள் எல்லாவற்றையும், ‘இனம் தெரியாத நபர்களினால் செய்யப்பட்ட கொலைகள்’ என்ற சொற்பதத்தின் மூலமே, தற்பொழுது சந்தேகமற புலி ரவுடிகளால் தாக்குதலுக்குள்ளான கனடிய ‘உதயன்’ முதல் எல்லா தமிழ் ஊடகங்களும் குறிப்பிட்டு வந்துள்ளன.
கனடிய உதயன் பத்திரிகை தற்பொழுது தாக்குதலுக்குள்ளானதற்கு, அது அப்படியொன்றும் புலிகளுக்கு எதிரான பத்திரிகை என்பது காரணமல்ல. 2009 மே 18ம் திகதி புலிகள் வன்னி மண்ணிலிருந்து முற்றுமுழுதாக அரச படைகளால் துடைத்தெறியப்பட்ட பின்னர், புலம் பெயர் புலிகள் மத்தியில், புலிகளின் சொத்துக்களுக்காக தொடங்கிய நாய்ச்சண்டையின் ஒரு வெளிப்பாடே, உதயன் மீதான தாக்குதலுக்குக் காரணமாகும். கனடாவிலும் சரி, ஏனைய புலம் பெயர் நாடுகளிலும் சரி, புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகக் கடந்த காலங்களில் பவனி வந்தவர்கள், சாதாரண தமிழ் மக்கள் அல்ல.
புலம் பெயர் நாடுகளில் கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டவர்கள், வியாபாரம் என்ற போர்வையில் வங்கிக்கடன் பெற்று ஏமாற்றியவர்கள், கொள்ளை இலாப வியாபாரிகள், ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள், புலிகளுக்காக நிதி வசூலித்து ஏப்பமிட்டவர்கள், ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாக’ வேசம் போட்ட ‘அறிவாளிகள்’, இலவச பத்திரிகை நடாத்தும் ‘ஊடக வியாபாரிகள்’ என பல தரப்பட்டவர்கள் அடங்குவர். இவர்களில் கனடிய உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் கடைசி வகையைச் சேர்ந்தவர்.

யாழ்ப்பாணத்தில் தீவுப் பகுதியைச் சேர்ந்த லோகேந்திரலிங்கம், ஆரம்ப காலங்களில் அங்கு மதிப்புக்குரிய ஆசிரியர் ஆ.சபாரத்தினம் அவர்கள் தலைமையில் இயங்கிய ‘காவலூர் இலக்கிய வட்டத்தில்’ ஒரு ‘பின் வரிசை மாணவனாக’ இருந்தது உண்மைதான். அந்த வட்டத்தில் இருந்தவர்களில் அநேகமானோர் முற்போக்கான கருத்துக்களையும், இடதுசாரி இயக்கத் தொடர்புகளையும் கொண்டிருந்ததால், லோகேந்திரலிங்கமும் அவர்களுடன் ஒரு ஒத்தோடியாக சில காலம் இருந்ததும் உண்மைதான். ஆனால் கனடாவுக்கு அவர் இடம் பெயர்ந்த பின்னர், இயல்பிலேயே புகழ் விரும்பியான அவருக்கு கனடா மண் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.
கனடாவில் அவர் வந்த காலத்தில் சண்டித்தனங்களிலும், பண பலத்திலும் புலிகள் மேலோங்கி நின்றதைக் கண்ட லோகேந்திரலிங்கம், ‘இயற்கையாகவே’ அவர்களது நெருங்கிய கூட்டாளியாகிச் செயற்படத் தொடங்கிவிட்டார். புலிகளின் எந்த நிகழ்ச்சியானாலும், லோகேந்திரலிங்கம் முன் வரிசையில் நிற்பார். அதேபோல, எந்த வர்த்தக நிறுவன நிகழ்ச்சியானாலும் அங்கு போட்டோவுக்கு ஒரு போஸ் கொடுக்கத் தவறமாட்டார். அநேக சந்தர்ப்பங்களில் அவரது உதயன் பத்திரிகையின் முக்கியமான தலைப்புச் செய்தியாக, ஏதாவது ஒரு வர்த்தக நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்வு தான் இருக்கும்! இவைகளை மட்டும் அவர் செய்து கொண்டிருந்தால், அவரை மன்னித்து விடலாம்.
அவரது பத்திரிகையில் புலிகள் அல்லாத அனைவரையும் ‘துரோகிகள்’ என வரிக்கு வரி வர்ணிப்பதில் லோகேந்திரலிங்கம் மேற்கொள்ளும் அதீத கரிசனை தான் சீரணிக்க முடியாத ஒன்றாகும். ‘நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன’ என்பது போல, லோகேந்திரலிங்கத்துக்கு, டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன், வரதராஜப்பெருமாள், ஆனந்தசங்கரி, கருணாநிதி, ஜெயலலிதா, சோனியாகாந்தி என எல்லோரும் ‘துரோகிகள்’ தான். புலிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் நாலு கால்களில் நின்று வாலை ஆட்டாத நாளில்லை எனலாம்.

இப்படியான ஒருவரின் பத்திரிகைக் காரியாலயத்தை கனடிய புலிக் காடையர்கள் தாக்குகிறாhகள் என்றால், அது கொள்கை சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கு முடியாது. இந்தத் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னரும் கூட ஒரு தடவை, கனடிய உதயன் பத்திரிகையை தமிழ் வர்த்தக நிறுவனங்களில் விநியோகத்துக்கு வைக்கக்கூடாது என புலிகள் அச்சுறுத்தியுள்ளனர். இவற்றுக்கான காரணங்கள் உதயன் பத்திரிகை புலிகளுக்கு எதிரான ஒரு உண்மையான நடுநிலைமையான பத்திரிகையாக மாறிவிட்டது என்பதனால் அல்ல.

உண்மையென்னவென்றால், புலிகளை நம்பியும், அவர்களது தயவிலும் தமது வியாபாரங்களை கனடாவில் நடாத்தி வந்த சில தமிழ் வர்த்தகக் கில்லாடிகள், புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமது பிழைப்பைத் தக்க வைத்துக் கொள்ள, இலங்கை அரசின் தயவை நாடத் தொடங்கினர். அவர்களுக்கு தேவை யாருடைய கையைக் காலைப் பிடித்தென்றாலும் பணம் சம்பாதிப்பது தான். அவர்களில் சிலா அண்மையில் இலங்கைக்குச் சென்று, வடக்கு கிழக்குப் பகுதிகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்ததுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து, தமது முயற்சிகளுக்கு அங்கீகாரத்தையும் பெற்று வந்துள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலிகளின் இன்னொரு கோஷ்டி, தமது வழமையான பாணியில் அவர்களைத் ‘துரோகிகள்’ என முத்திரை குத்தி வசைபாட ஆரம்பித்துள்ளது. இந்தத் தாக்குதலில், ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதில்’ சமர்த்தரான லோகேந்திரலிங்கமும், இலங்கை சென்று வந்த கோஷ்டியுடன் இணைந்து நின்றதால் வந்த வில்லங்கமே, அவரது உதயன் பத்திரிகை மீதான தாக்குதலாகும்.

எது எப்படியிருப்பினும், உதயன் பத்திரிகை கடந்த காலங்களில் ஜனநாயகத்துக்கு விரோதமாக, பாசிச புலிகளின் செயல்பாடுகளை ஆதரித்திருந்த போதிலும் கூட, புலிகளுக்கு எதிரான அத்தனை பேரையும் ‘துரோகிகள்’ என வர்ணித்து வக்கணை செய்து வந்திருந்த போதிலும் கூட, தற்பொழுது புலி ரவுடிகளால் அப்பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்பட்டதை சகலரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஏனெனில் லோகேந்திரலிங்கம் கடந்த காலத்தில் நடந்தது போல, நாமும் ஜனநாயக மறுப்பில் ஈடுபடாமல் இருப்பது நமது கடமையாகும். லோகேந்திரலிங்கம் இனிமேலாவது தன்னைத் திருத்திக் கொள்வது என்பது அவர் சார்ந்த விடயமாகும்.
http://www.thenee.com/

திங்கள், 22 பிப்ரவரி, 2010

Kaaங்கிரசுடன் மோதலுககும் தயாராகும் திமுக?!திங்கள்கிழமை, பிப்ரவரி 22, 20 -அறிவழகன்
சென்னை: தமிழக அரசியல் களத்தை சூடாக்க தயாராகி விட்டது திமுக. காங்கிரஸுடன் இதுவரை நடத்தி வந்த நிழல் யுத்தத்தை இப்போது நிஜ யுத்தமாக்க அது தயாராகி விட்டது.
நாம் ஒரு தெளிவான முடிவை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க இயலாத நிலை. நம்மை நாமேதான் வலுப்படுத்திக் கொண்டு இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும்
 நம்மோடு இன்றைக்குத் தோழமை கொண்டு, இயங்கிக் கொண்டிருக்கின்ற மத்திய அரசும் - நம் நிலையை உணர்ந்து - நமக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும். அப்படி நேசக்கரம் நீட்டுவது, அந்தக் கரத்தை நாம் பிடிப்பது தேர்தலுக்காக அல்ல. இந்த மாநிலமும், இதை ஒட்டி இருக்கின்ற மாநிலங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதற்காக மாத்திரமல்ல. காவேரி பிரச்சினைக்காக, முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக - இந்த இரண்டு ஆறுகளின் பிரச்சினைக்காக மாத்திரமல்ல, இந்தக் கைகுலுக்கல். ஒட்டுமொத்த இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக, ஒற்றுமைக்காக என்பதை மற்ற மாநிலங்களில் இருப்பவர்களும், மத்தியிலே இருப்பவர்களும் உணர வேண்டும், உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக இன்னும் பொறுமை காப்போம் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாம் ஒரு காலக்கட்டத்திற்குத்தான். எல்லை மீறி விடுமேயானால், அப்படி மீறுகிற நேரத்தில் நாம் நம்முடைய வீரத்தை, நம்முடைய போர்க் குணத்தை, நம்முடைய உரிமைக் குரலை அந்த நேரத்திலே காட்டத்தான் போகிறோம். அப்போது நாம் வாளாயிருக்கப் போவதில்லை.
போர்க் குணம் 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு அழிந்து விடவில்லை. இன்னமும் அதன் சாரல் இருக்கிறது. அதனுடைய காரம் இருக்கிறது. அதனுடைய வேகம் இன்னமும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்த உறுதியை, வேகத்தை, காரத்தை, சாரலை இழந்து விடாமல் அதை வைத்தே மேலும் மேலும் உங்களையெல்லாம் உணர்ச்சிப் பிம்பங்களாக ஆக்க வெகு நேரம் ஆகாது. இரண்டொரு கூட்டங்கள் - தஞ்சையிலும், நாகையிலும், காவேரிப் பூம்பட்டினத்திலும், தூத்துக்குடியிலும், நெல்லையிலும், சென்னையிலும் பேசினாலே மீண்டும் அந்த உணர்வை ஏற்படுத்த முடியும்.
திமுக பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி பேசியவை மேற்கண்ட வார்த்தைகள். ஒரு கட்சியின் தலைவர் பேசியவையாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ள முடியாது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவரின் குரலில் தொனித்த மிகப் பெரிய ஆதங்கமாகவே இவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மிகவும் பொறுமையாக இருக்கிறோமே, இன்னும் இந்தப் பொறுமையை எவ்வளவு நாளுக்கு சோதிக்கப் போகிறீர்கள் என்று கேட்பது போல இருக்கிறது முதல்வரின் பேச்சு.
அதாவது மோதலுக்கு காங்கிரஸ் தயாரானால், அதற்கும் திமுக தயார் என்று தான் முதல்வரின் பேச்சை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
முதல்வரின் இந்த ஆதங்கத்திற்கும் காரணம் உண்டு.
கடந்த ஆட்சியில் திமுக எம்பிக்களை முழுக்க முழுக்க நம்பி ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு இப்போது திமுக சுமை போல தெரிய ஆரம்பித்துள்ளது. திமுக இல்லாவிட்டாலும் அரசு நிலைக்கும் என்பதால், மரியாதையை குறைத்துக் கொண்டுவிட்டது.
கடந்த தேர்தல் முடிந்த பின் சில துறைகளைக் கேட்ட திமுகவை அலையவிட்டது காங்கிரஸ், கேட்டதையும் தரவில்லை. இதனால் அரசு பொறுப்பேற்கும் முன்பே கோபத்தில் சென்னைக்குத் திரும்பி வந்தார் முதல்வர்.
இதையடுத்து ராகுல் உருவத்தில் மீண்டும் மரியாதை பிரச்சனை வந்தது. செனனைக்கு இரண்டு முறை வந்த ராகுல் ஒரு மரியாதைக்குக் கூட முதல்வரை சந்திக்கவில்லை.
மேலும் தமிழகத்தில் கட்சியை வளர்க்கிறோம் என்ற பெயரில் திமுகவை முழுக்க ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் ராகுல். இப்போது ராகுல் பேச்சு தான் காங்கிரசில் எடுபடுகிறது. அதன் அடிப்படையில் காங்கிரசும் மத்திய அரசும் நடந்து கொள்ளும் விதம் திமுகவின் பொறுமையை மிகவும் சோதித்து வருகிறது.
சமீபத்தில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என்று தனது ஆதரவு பத்திரிக்கைகள் மூலம் ஜெயலலிதா புயல் கிளப்பிவிட்டபோது, அதை திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் சமாளிக்க வேண்டி வந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாவோ அல்லது பிரதமர் மன்மோகன் சி்ங்கோ இது குறித்து வாயே திறக்கவில்லை.
டிவி கேமராக்கள் முன்னால் மட்டுமே பேசும் சில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் தான் இதற்கு உப்பு சப்பில்லாமல் பதில் தந்தார்கள். அதில் அபிஷேக் சிங்வி போன்ற செய்தித் தொடர்பாளர்கள், கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முன், ஜெயலலிதாவின் உதவியை காங்கிரஸ் பெற்றாலும் தவறில்லை என்று பேசியவர்கள் தான். (அதாவது திமுக-அதிமுக இதில் யார் அதிக இடங்களில் வெல்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி!)


2009ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே திமுக-காங்கிரஸ் உறவு நல்லபடியாக இல்லை. ஆனால், தனது சொந்த நலனுக்காக காங்கிரஸை விடாமல் தொங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது திமுக.
இதை காங்கிரஸ் நன்றாக உணர்ந்துள்ளதால் திமுகவுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வருகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, சேது சமுத்திரத் திட்டமாக இருந்தாலும் சரி, சமீபத்தில் புதிதாக கிளம்பிய உர மானிய கொள்கையாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தில் தமிழில் அமைச்சர்கள் பதில் சொல்வது குறித்த விவகாரமாக இருந்தாலும் சரி எதுவுமே திமுகவுக்கு சாதகமான வகையில் இல்லை.

இந்த விவகாரங்களில் சில நீதிமன்றத்தில் இருந்தாலும் இதில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளதாகவே கருதப்படுகிறது.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மகா பொறுமையுடனும், மிகப் பெரிய சகிப்புத்தன்மையுடனும் முதல்வர் கருணாநிதி நடந்து கொண்டதை நாடறியும். இதனால் தமிழக எதிர்க்கட்சிகளால் வறுத்தெடுக்கப்பட்டார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியவர் ஜெய்ராம் ரமேஷ். முற்றிலும் தமிழகத்தை கேவலப்படுத்தி விட்டு, கேரளாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டு புதிய அணைக்கான சர்வே பணிக்கு அனுமதி அளித்தார் ரமேஷ். இதை காங்கிரஸ் கட்சி சற்றும் கண்டுகொள்ளவில்லை, தமிழக முதல்வர் கடுமையான முறையில் எச்சரித்தும் கூட அதை காங்கிரஸும் சரி, பிரதமர் மன்மோகன் சிங்கும் சரி, சோனியாவும் சரி கண்டு கொள்ளவே இல்லை.

மேலும் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு 'பலம் வாய்ந்த' தமிழக குட்டி காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் கருணாநிதி ஜாடையாகப் பேசுவதும், அட்வைஸ் தருவதும், கிண்டலடிப்பதுமாக கிளம்பியுள்ளனர். இவர்களுக்கு 'ராகுல்ஜி'யின் ஆசிர்வாதம் உள்ளதாக திமுக நம்புகிறது.

இப்படி காங்கிரஸின் போக்கு தாறுமாறாக போக ஆரம்பித்திருப்பதால்தான் திமுகவும் தன் பங்குக்கு இப்போது கோபத்தைக் காட்டுவதாகத் தெரிகிறது.

காங்கிரசின் இந்தப் போக்கை இனியும் பொறுக்க முடியாத நிலைக்கு வந்து விட்டதைத் தான் முதல்வர் கருணாநிதி மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.
கட்சியை வளர்க்கிறோம் என்ற பெயரில் திமுகவை மேலும் ஒதுக்கவோ அல்லது ஒடுக்கவோ முயன்றால் காங்கிரசுக்கு எதிரான களத்தில் குதிப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்பதை தான் திமுகவின் பொதுக் குழு தீர்மானங்கள் கூறுவதாகத் தெரிகிறது.

பொதுக்குழுவில் மொத்தம் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 19 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு 'வேண்டுகோள்' விடுப்பவையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்தால் இந்த 'வேண்டுகோள்கள்' எல்லாம் அப்படியே 'கோரிக்கைகளாக' மாறலாம்.
'கோரிக்கைகளும்' நிறைவேற்றப்படாவிட்டால் 'கெடு்'க்களும் வரலாம்.

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக கூட்டணியில் இருந்து விலக திமுக சொன்ன முக்கிய காரணம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தர மறுக்கிறார்கள் என்பது தான்.
இது தொடர்பாக திமுக பொதுக்குழுவில் தீர்மானங்களை 'கோரிக்கையாக' வைத்தும் பாஜக கேட்கவில்லை என்பதால் தான் கூட்டணியை விட்டு விலகுவதாக திமுக சொன்னது.

இதனால் தான் இப்போது திமுக பொதுக் குழுவில் வைக்கப்பட்டுள்ள 'வேண்டுகோள்களும்' முக்கியத்துவம் பெறுகின்றன.

திமுக இந்த 'வேண்டுகோள்கள்' எதிர்காலத்தல் 'கோரிக்கைகளாக' மாறுவதும் மாறாமல் போவதும் காங்கிரஸ் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே அமையும்.
இலங்கையில் சாதியப் பிரிவுகள் தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் நிலவிவந்தாலும் வடபகுதியில் மட்டுமே மிகவும் ஆழமாக வேரூன்றி உள்ளது. அது மட்டுமன்றி வடபகுதியில் மட்டுமே சாதியம் என்பது பல்வேறு படிநிலை ஏற்றத்தாழ்வுகளுடன் தீண்டாமை எனும் மானிட விரோதக் கருத்தியலையும் உள்ளடக்கியதாக இருந்து வருகின்றது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இச்சாதியம் இலங்கையின் வடபகுதியில் மட்டும் வேரூன்றக் காரணம் என்னவென்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

வெள்ளக்காரர்கள் இலங்கையை ஆட்சி புரிந்த காலத்தில், குறிப்பாக ஆங்கிலேயர்களுடைய வருகைக்குப் பிற்பாடு கல்விப் பாரம்பரியத்திலும், காலணித்துவ நிர்வாக அலுவலகங்களிலும் மிகப்பயன் பெற்றவர்களாக இருந்தவர்கள் தமிழ்பேசும் மக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே என்பதை வரலாறு எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

இவ்வாறான வாய்ப்புகள் எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் தேடுகின்றபோது ஆங்கிலேயர்களது அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவும், அவர்களது சுரண்டல்களுக்கு துணைபோனவர்களாகவும் செயல்படுவதனூடாகவே தமிழர்களில் ஒரு பிரிவினர் பல்வேறு வாய்ப்புகளையும் வசதிகளையும் பெறக்காரணமாகியது. இந்த ஒரு பிரிவினர் தான் யாழ்ப்பாண மேலாதிக்க தன்மைகொண்ட ‘சுண்டி எடுக்கப்பட்ட’ உயர் குலத்தோர் எனச்சொல்லப்படுபவர்களாகும். இக்குலத்துக் கல்விமான்கள் சிங்கள மக்களுக்கும், ஏழைத் தமிழர்களுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
இக்கல்விமான்களின் வழி வந்த ஆறுமுகநாவலர் அவர்களே தமிழ்ச் சுமூகத்தில் நிலவும் சாதியத்தை இறுக்கமாக கட்டமைத்த முதல் மனிதராவர். இவரைத்தொட்டு தொடர்ச்சியாக வந்த தமிழ்த் தலைவர்கள் எனச் சொல்லப்படுவோர் சாதிய வெறியை ஊட்டி வளர்த்ததுடன் தீண்டாமைக் கொடுமையையும் கடைப்பிடித்து வந்துள்ளனர். சாதியின் பெயரால் ஒரு குறிப்பிட்ட தமிழ்பேசும் மக்கள் ‘எழிய’ சாதியினர் எனவும் , பஞ்சமர் எனவும், சிறுபான்மைத் தமிழர் எனவும் அழைக்கப்படுவதுடன் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட வர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறான சமூக ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு போரடப் புறப்பட்டட முதல் மனிதன் திரு. ஜோவல் போல் என்பவராகும். இவர் 1927 இல் கூலித் தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பின் ஊடாக தமது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இந்த அனுபவத்தினூடாக விழிப்புணர்ச்சிபெற்ற பல இளைஞர்களின் முயற்சியே வாலிபர் சங்கங்களாக தோற்றம் பெற்று சிறுபான்மைத் தமிழர் மகாசபையாக பரிணமித்து 1980 வரை சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக உறுதியுடன் போராட வழிகோலியது.
மறுபுறமாக தீவிர குணாம்சம் கொண்ட வேறுபலர் முற்போக்கு சக்திகளையும் இணைத்து தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் எனும் அமைப்பின் ஊடாக சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். மேற்படி இரு அமைப்புகளும் சாதியத்திற்கு எதிராக போராடும் அதே நேரத்தில் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராடிவந்தனர். தமது உரிமைகளுக்காக தாமே போராடி பல வெற்றிகளையும் கண்டனர். இவ் இயக்கங்கள் 1980 இல் விடுதலைப்புலிகளால் தடைசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அனாதைகளாகவே இருந்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் மீது மேற்கொண்ட தீண்டாமை கொடுமைகளை எதிர்கொண்டு தீவிரமாக போராடிக்கொண்டிருந்த தலித் அமைப்புகளை யாழ் மேலாதிக்க கட்சிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே அக்கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும் தலித் மக்களின் போராட்டங்களை வளரவிடாமல் தடைசெய்ய பல்வேறு சதிகளை மேற்கொண்டனர்.

இலங்கையில் இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஆட்சிக்காலத்தில் தலித் அமைப்புகளும், சிங்கள தொழிலாளர்களும் இணைந்து பல போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். அதனை பொறுக்கமுடியாத மேற்படி வலதுசாரி சிந்தனைகொண்ட தமிழ்க் கட்சிகளானது சிங்கள வலதுசாரிகளுடன் இணைந்து பல இடையூறுகளை செய்து வந்துள்ளனர். தென் இலங்கை வலது சாரிகளும், வட இலங்கை வலது சாரிகளும் ஆளுக்கு ஆள் இனவாதம் பேசி தமிழ் சிங்கள மக்களுக்கிடையேயான உறவுகளை சீர்குலைத்து வந்தனர். இவ் இனவாத சிந்தனை வலுப்பெறுவதற்காக வட இலங்கை வலதுசாரிகள் முன்வைத்த கோட்பாடுகள்தான் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானமும்’, ‘தமிழீழக் கோசமுமாகும்’.

தமிழ் முதலாளிகள் (‘அப்புக்காத்துகள்’) ஒன்றிணைந்து தமிழர் கூட்டணி என்னும் பெயரில் ஒரு தமிழர் இயக்கத்தை உருவாக்கினர். தமிழ் ஈழம் கிடைத்த பின்னர் வலு இலகுவாக சாதிப்பிரச்சனையை தீர்த்துவிடலாம் என தலித் மக்களின் ஒரு சிலரிடம் ஆசைகாட்டி தம்பக்கம் இழுக்க முயன்றனர். தலித் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் தலித் சமூகத்தை சேர்ந்த இராஜலிங்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கியதோடு தலித் மக்களின் தொடச்சியான சமூகவிடுதலைப் போராட்த்தை சீர்குலைத்தும் வந்துள்ளனர்.

கூட்டணியினரது இனவாதப்பேச்சுக்களால் உள்வாங்கப்பட்ட இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய இயக்கங்களாக மாறிய பின் கூட்டணியினருது தலைமைத்துவம் இளைஞர்களால் பறிக்கப்பட்டது. தமிழ் இளைஞர்கள் மத்தியில் பல விடுதலை இயக்கங்கள் உருவாகினாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் எனும் இயக்கம் மட்டுமே சாதி ஒழிப்பின் அவசியத்தையும் முன்வைத்து இடதுசாரிக் கோட்பாட்டுடன் போராடிவந்தது. இதன் காரணமாக பல தலித் இளைஞர்கள் அக்கட்சியில் இணையும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.

இவ் இயக்கத்தின் கோட்பாடுகள் சாதியைப் பேணிப்பாதுகாக்க முனையும் யாழ் மேலாதிக்க சாதியினருக்கு இடையூறாகவே இருந்துவந்தது.
எனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் கோட்பாடுகளுக்கு எதிரான கருத்தியலைக்கொண்ட இயக்கத்தை தேர்வு செய்து அதை ஆதரித்தும் உற்சாகப்படுத்தியும் வந்தனர். அவ்வாறு அவர்கள் ஆதரித்து வளர்த்த ‘பிராணிதான்’ விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியின் பின்னணியில்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி ஈழம் பள்ளர் இயக்கம் என அடையாளப்படுத்தப்பட்டு பின்பு துரோகிகளுமாக்கி அழித்துச் சின்னாபின்னமாக்கப்பட்டது.
எனவே சாதியைக் காப்பாற்றுவதற்காக யாழ் மேலாதிக்கம் எந்த பிணம் தின்னும் பேயுடனும் கூட்டுச்சேரத் தயங்காது என்பது இலங்கை அரசியல் வரலாற்றின் சாட்சியங்களாக இருக்கிறது.

தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்தத்தில் முகம் கொடுத்துப் போராட முடியாத யாழ் மேலாதிக்கம் தமது உயிர் உடமைகளை காப்பாற்றும் நோக்கோடு செழிப்பான நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் தமது நலன்களைப் பாதுகாக்கும் தகுதி கொண்ட ஒரு இயக்கம் புலிகள்தான் என்பதையும் அடையாளம் கண்டுகொண்டனர். தமது யாழ் மையவாத சிந்தனையை தக்கவைக்கும் நோக்கத்துடனேயே புலிகளுக்கான பண உதவிகளையும் அதன் அனைத்து ஆராஜகப்போக்கையும் தடவிக்கொடுத்து வளர்த்து உலகின் மிகப் பலம்பெற்ற பயங்கரவாத இயக்கமாக புலிகள் வளரவும் காரணமாக இருந்தவர்கள்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகள் என்ற காலத்தில் நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத்தேர்தலில் தாங்கள் சாதி பாகுபாடு காட்டுவதில்லை என்று காட்டுவதற்காக தேடிப்பிடித்த மனிதன்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிவநேசன் என்ற அப்பாவியாகும். சாதியப் போராட்டங்கள் பலவற்றில் பங்குகொண்ட இம் மனிதன் இறுதியில் தமிழ்த் தேசிய போராளியாகி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். எனவே தொடர்ச்சியாகவே சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்படுபவர்களாகவும் , யாழ்மேலாதிக்க சதிகளை அறிந்து கொள்ள முடியாதவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழர் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் இன்றுவரை நடந்து வரும் சகலவித போராட்டங்களிலும் முன்னுக்குத் தள்ளப்பட்டு யாழ் மேலாதிக்க அதிகாரங்களுக்காக பலிகொடுக்கும் கூட்டமாக பயன்படுத்தப்பட்டும் வருகிறார்கள். மாவீரர்களாக, துரோகிகளாக, சமூகவிரோதிகளாக கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை அவதானித்தோமாயின் அவர்களில் பெரும்பான்மையாக தலித் சமூகத்தவர்களையே நாம் காணக்கூடியதாக இருக்கும். மேலும் புலம் பெயர்ந்த தமிழர் சிலர் தொடர்ந்தும் யுத்தம் நடத்தும் முகமாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்றும், நாடு கடந்த தமிழீழம் என்றும் வேடிக்கைகாட்டி சொந்த தேசத்தில் வாழும் அப்பாவி உயிர்களை பலி கொள்ள முயல்கின்றனர். இந்தப் புலம்பெயர் பிற்போக்கு வாதிகளே எமது இனம் அமைதியடனும் சமாதானமாகவும் வாழவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக செயலாற்றிவருகின்றனர்.
‘ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆழ நினைப்பதில் என்ன தவறு’ ஆமா நான் கேக்கிறேன் இவர்கள் யாரை ஆண்டார்கள். போத்துக்கேயர்களையா? ஓல்லாந்தர்களையா? ஆங்கிலேயர்களையா? இல்லை சிங்களவர்களையா? யாரை ஆண்டார்கள்? இவர்கள் அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி அடிமைப்படுத்தி ஆண்டதெல்லாம் சாதியின் பெயர் சொல்லி தம் மொழி பேசும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே இவர்கள் ஆண்டு பெருமை கண்டவர்கள். அதைத்தான் மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனரா? எம்மை ஆள நினைப்போரை, எம்மீது தொடர்ந்தும் சவாரி செய்ய நினைப்போரை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டுமா?
புலம் பெயர் தமிழர்கள் சிலர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் நாம் ஒன்றுக்கு பல தடவை மிக நிதானமாக சிந்திக்கவேண்டும். தங்கள் நலன் கருதி கோடி கோடியாய் பணம்தேடும் நோக்குடுன் செயற்படும் இவர்கள் திட்டத்தை நாம் இனம் காணவேண்டம். வன்னித் தலைமையை உசுப்பேத்தி, உசுப்பேத்தி ஒரு வழி பண்ணி விட்ட கதையை நாம் பாடமாகக் கற்றுக்கொண்டுள்ளோம். எமது தேசத்தில மரணங்கள் மலியவேண்டும் அதைக்காட்டி தாம் கோடி கோடியாக சம்பாதிக்கவேண்டும் என்பதே இவர்களது அடிப்படை நோக்கமாக உள்ளது. இலங்கை ஒரு யுத்த சூழலுக்குள் இருக்கும் வரைதான் இவர்களால் சம்பாதிக்கமுடியும. அத்துடன் மேற்குலக நாடுகளின் சூட்சிக்கு மொத்த இலங்கையையும் காட்டிக்கொடுக்க முனையும் இவர்களால் சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் மீது அக்கறைகொள்வது எப்படி சாத்தியமாகும். இவர்கள் போடும் தமிழ்த் தேசிய கபட நாடகங்களில் நாம் சிக்குண்டு சின்னாபின்னப்பட்டது போதும். எமது கண்களை அகல விழித்துக் கொள்வோம்.
எமக்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தை நாம் பயன் படுத்த தவறுவோமாயின் மேலும் மேலும் எமது சமூகம் எமாற்றப்படுவது தொடரும் என்பதை நாம் உணரவேண்டும்.
வடபகுதியில் தற்போது சனத்தொகையில் நாற்பது வீதத்திற்கு மேற்படடோர் எமது சமூகமாக இருப்பதால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது நான்கு உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்படவேண்டும். ஆனால் கடந்த காலங்களில் யாழ் மேலாதிக்க அரசியல் தலைமைகள் எமது சமூகத்திலிருந்து ஒருவரை உறுப்பினராக்கி எம்மை முட்டாள்களாக்கிய செயலை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இம்முறை நாம் மிகவும் விழிப்பாக செயல்படவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறையும் எங்களது சமூகத்தவர்களை தமது வலையில் சிக்கவைத்து தமது நலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே தலித் சமூகத்தைச்சேர்ந்த அச்சமூக நலன்களில் அக்கறை கொண்ட நான்கு உறுப்பினர்களை பாராளுமன்ற பிரதிநியாக ஏற்றுக்கொள்ள எந்தக்கட்சி முன்வருகின்றதோ அக்கட்சியை நாம் பயன் படுத்திக்கொள்ளலாம். இல்லாத பட்சத்தில் நாம் எமது பிரதிநிதிகளை சுயேட்சையாகவே பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட தாயார்படுத்தவேண்டியுள்ளது.. இது உடனடியான பயனைக் கொடுக்காதுபோனாலும் நீண்டகால எமது வளர்ச்சிக்கு இதுவே பயனுள்ள செயல்பாடாக அமையும்.

தமிழ் தேசியத்தின் பெயரில் வெளிநாடுகளில் கோடி கோடியாக சம்பாதிப்பதற்கு அவர்கள் போடும் அரசியல் கோசங்களை நாம் துணிவுடன் நிராகரிக்கவேண்டும். எமக்கான தலைமையை நாமே தேர்ந்தெடுக்கவேண்டும். இன்று உருவாகியிருக்கும் ஜனநாயகச் சூழலை மிகவும் நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ளவேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதிய அணுகுமுறைகொண்ட அரசியலை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே மீண்டும் சிந்திப்போம்.. செயல்படுவோம்.. தொடரும் எமது ‘இழிவை’ அகற்றுவோம்.

(சித்தன்) ‘சூத்திரம்’ இணையத்திற்காக எழுதப்பட்டது
© copyright 2009 thuuu.net

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பல்கலைத்தென்றல் சிறிதர் பிச்சையப்பா காலமானார்.
20.02.2010 - சனிக்கிழமை
எமது நாட்டின் கலைத்துறையை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்ற கலைஞர்களுள் ஒருவரான பல்கலைத்தென்றல் என அழைக்கப்படும் சிறிதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை எட்டு மணியளவில் கொழும்பில் காலமானார்.
பிரபல நாடகக் கலைஞராக எழுத்தாளராக நடிகராக பாடகராக பாடலாசிரியராக இயக்குனராக மிமிக்ரி கலைஞராக மற்றும் ஓவியராக என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு தன்னை முழுமையாகக் கலைத்தாய்க்கு அர்ப்பணித்தவர் சிறிதர் பிச்சையப்பா. இறக்கும்போது அவருக்கு வயது 47.
ஈழத்து இலக்கியத்திறக்கு அடித்தளமிட்டுக் கொடுத்த கலை இலக்கியவாதிகளில் பெரும் மதிப்பிற்குரிய ஒரு தார்மீகக் கலைஞர் சிறிதர் பிச்சையப்பா. இலங்கையின் சிறந்த நாடகக் கலைஞரான அவர் தனக்கென்று ஒரு துறையில் தடம் பதிக்காமல் முழு கலையுலகையுமே தனது ஆளுமையின் கீழ் வைத்திருந்த, இலங்கையின் புகழ்மிக்க மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தொகுத்து வந்த வானொலி மாமாதான் சிறிதரின் கலையுலக வாழ்வுக்கு வழி சமைத்துக் கொடுத்தவராவார்.

தனியே நாடகத்துறை என்றில்லாமல் ஆயகலை அறுபத்திநான்கையும் தனக்குள்ளே புதைத்து வைத்துத் திறம்பட செயற்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் கொண்டிருந்த அவர் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே அனைத்துக் கலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற பாரதியின் கூற்றுக்கு ஒரு முறை எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய இவர் மெல்லத் தமிழ் இனிச் சாகாது ஆனால் பாதிப்பு வரும். அதனையும் தன்னால் மாற்றியமைக்க முடியும் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்து செயற்பட்ட தமிழ் கலைஞராவார்.

சிங்கள தொலைக்காட்சி நாடகங்களைக் கூட ஒரு காலத்தில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய சிறிதர் இலங்கையின் ஈழத்தவர் கலையம்சத்தை தென்னிந்திய கலைத்துறையுடன் ஒப்பிட்டுக் கூறும் அளவுக்கு தொண்ணூறுகளில் தென்னிந்திய திரையுலகின் பின்னணியில் ஈழத்துப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். தமிழுக்காகவும் தனக்காகவும் எதிர்காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு ஒரு இறுவெட்டு ஒரு தொலைக்காட்சி நாடகம் ஆகிய மூன்றையும் தனது பெயரில் வெளியிட வேண்டும் என்பதே இவரது இறுதி ஆசையாக இருந்தது.

சிறிதர் பிச்சையப்பா என்ற இம்மாபெரும் கஞைன் புலிகளின் தாக்குதலில் தனது ஒரு கண்ணை இழந்தவர் என்ற விடயம் பலரும் மறந்துவிட்ட நிகழ்வாகும். காரைதீவில் இடம்பெற்ற இசைநிழ்ச்சி ஒன்றில் அவர் கலைக்குழுவினருடன் பங்குபற்றிக் கொண்டிருந்தபோது புலிகள் நடாத்திய கைக்குண்டுத் தாக்குதலில் தனது ஒரு கண்ணை பறிகொடுத்தபோதும் தனது கலைவாழ்க்கையிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.

சிறிதர் பிச்சையப்பா என்ற மாபெரும் கலைஞரின் மறைவு ஈழத்துக் கலையுலகுக்குப் பேரிழப்பு என்பது நிதர்சனமானது என்றால் கூட அது மிகையல்ல. சிறிதரது பூதவுடல் கொழும்பு போதனா வைத்தியசாலையில் இருந்து எடுத்துவரப்பட்டு செக்கட்டித் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.