சனி, 20 ஆகஸ்ட், 2011

ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா? சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல இல்லை

ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் என்ன? ஜோதிடர் சொல்லும் காரணமா? பரிகாரத்தினால்தான் திருமணம் நடந்துவிடுமா?தினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலைகிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களைப் வெள்ளி மணியில் பார்க்க முடியும். ‘மக்கள் மகிழ்ச்சி’ என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.
“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”
“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”
“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”
“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை.  எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?”
“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். …… மேலும் திருமணம் எப்போது நடக்கும்?”
“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”
“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”
“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும?”
“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”
“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”
“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?”
இவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட  கேள்விகள்.
“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்….ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”
“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”
“உங்கள் மகளுக்கு…..அசுபக்கிரகச் சேர்க்கை பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”
“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”
“உங்கள் மகனுக்கு…..களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ….”
“உங்கள் மகனுக்கு…..அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்….”
இப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி ‘காலம் உங்கள் கையில்’ பகுதியில் பட்டியலிடுகிறார்.
மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.
இவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.
ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா? ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா?
படிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடு இல்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.  மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்வார்கள்.
வரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில்  சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, ‘அவ சரியல்லை’, ‘அவளோட அம்மா சரியில்லை’, இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம்,   பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் ‘முன்ன பின்ன’ இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வார்கள்.
இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.
உண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.

என்ன விலைக்கும் போகத் தயாராகவுள்ள…ஆள் சேர்த்துக் கொடுத்த தலைவர்

அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடைகின்றது. ஆனால், அரசிடமிருந்து இதுவரையில் எந்த விதமான பதிலும் இல்லை. எனவே, தீர்வுத்திட்டம் தொடர்பிலான மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு இணங்காவிடின் பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ அரசிடமிருந்து பதிலை கூட்டமைப்பு எதிர்பார்க்கின்ற போதிலும் அவர்கள் வெறுமனே சம்பந்தம் இல்லாமல் ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இந்த நிலை நியாயமான அரசியல் தீர்வுக்கோ பேச்சுவார்த்தையின் எதிர்காலத்திற்கோ சாதகமாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பாக சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த 4ஆம் திகதி அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பான 10ஆவது சுற்றுப் பேச்சை முன்னெடுத்தது. இதன் போது ஆட்சி அதிகார முறைமை மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான விடயதானம் மற்றும் செயற்பாடுகள் வரி நிதி தொடர்பிலான அதிகாரங்கள் என்ற மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு அரசிடம் வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ நிலைப்பாட்டை நாம் கோரினோம்.
இதற்காக இரண்டு வார கால அவகாசத்தையும் வழங்கினோம். நாளை வியாழக்கிழமையுடன் மேற்படி கால அவகாசம் நிறைவடைகின்றது. ஆனால் இதுவரையில் எந்த விதமான உத்தியோகபூர்வ பதிலும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்திற்காகவும் விரைவான அரசியல் தீர்வுக்காகவும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான வாய் மூலமாக கூட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்காத போது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை எட்டுவது என்பது எந்தளவிற்கு சாத்தியப்படும். பல அமைச்சர்கள் எமது நிபந்தனைகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால் அரசாங்கமோ நேரடியாக எம்மிடம் பதில் கூற மறுக்கின்றது.
எனவே பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் அரசாங்கம் வழங்க உள்ள மூன்று அம்சக் கோரிக்கையின் பதிலிலேயே தங்கியுள்ளது என்றார்.

கூட்டமைப்பு சத்தியப் பிரமாணம் விஷகருத்துக்களையையே வாந்தி எடுத்தார்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இரா. சம்பந்தன் சத்தியப்பிரமாணத்தை ஏற்று கையொப்பமிட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா உட்பட மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்
சம்பந்தன் தொடக்கம் அத்தனை பெரும் சொல்லி வைத்தால்போல் புலிபாணி விஷகருத்துக்களையையே வாந்தி எடுத்தார்கள்.அவ்வளவு பதவி ஆசை சுயநலம் ஏமாறுவதற்கு நாம் தயாராக இருக்கும்போது அவர்களுக்கு என்ன?

எனது சகோதரனை என்னிடமிருந்து தூர விலத்தி வைக்க இந்து பத்திரிகை விரும்புகிறது

Gotabhaya_Rajapaksaபாதுகாப்புச் செயலாளர் கோதாபய கூறுகிறார்
இந்தியத் தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் ருடேக்கு அண்மையில் தான் வழங்கிய பேட்டியை அடிப்படையாகக் கொண்டு "இந்து' பத்திரிகையானது தன்னை இலக்கு வைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை கவலை தெரிவித்திருக்கிறார். தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் சார்பில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜா வணசுந்தரவால்  இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வுடன் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் யுத்தத்திற்குப் பின்னரான சவால்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றியபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். 2011 ஆகஸ்ட் 11 இல் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமானது "அவரின் அலுவல்களைச் சார்ந்திராத உணர்வுபூர்வமான விடயங்கள் தொடர்பாக அவரின் சகோதரரின் பிரக்ஞை பிரவாகத்திலிருந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னைத் தான் தூர விலக்கி வைத்திருக்க வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக' பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் தன்னை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தும் அந்தப் பேட்டி தொடர்பாக தன்னை சாடியிருந்தமை குறித்து தான் ஆச்சரியப்பட்டதாக கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக கொழும்பு ஹில்டனில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை  விபர ஆய்வு மற்றும் ஒளிநாடா அங்குரார்ப்பண நிகழ்வின்போது அந்தப் பேட்டி அளிக்கப்பட்டிருந்தது.

சுருட்டிய பாதிரியார் படுகொலை,வேலை வாங்கித் தருவதாக பல லட்சம்

சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை பெரியகுளம் கணவாய்மடை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள அமலை செடிகள் புதருக்குள் இருந்த பிணத்தை மீ்ட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் இடுப்பில் துண்டு மட்டுமே அணிந்திருந்தார். இறந்தவரின் முகம், கை, கால்களில் இருந்த காயங்களில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடையநல்லூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஜெயம்பார்னபாஸ் என்பது தெரிய வந்தது. ஜெயம்பார்னபாஸ் கடையநல்லூர், சுரண்டை, சிங்கை போன்ற பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்களிடம் தான் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும், வேலைவாய்ப்பு அதிகாரிகளை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், பணம் தந்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
அவர் பேச்சை நம்பிய சிலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. சிங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி் ரூ.3. 5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதே போல் பலரிடம் அவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஜெயம்பார்னபாஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை காரி்ல் கடத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சிங்கையைச் சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபாகரனுக்கு ஒரு முடிவுகட்டி எனது மக்களைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்

- கலாநிதி: நோயல் நடேசன்
கோரிக்கைகளையும் காலக்கெடுவையும் முன்வைத்து அரசாங்கத்தை அச்சுறுத்துவதன் மூலம் தமிழ் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை பழைய தந்திரோபாயங்களில் ஈடுபடுகிறார்கள் போலத் தெரிகிறது.புதிதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.அது மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருப்பது மாத்திரமல்ல அரசாங்கம் அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலமாகிய 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்ற காலக்கெடுவையும் விதித்துள்ளது.
அது பேச்சு நடத்திய அரசாங்க தூதுக்குழுவிடம் முன்வைத்திருப்பது, அவர்கள், ரி.என்.ஏ யிடம் கீழ்காணும் விடயங்களுக்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் அளிக்க வேண்டும் என்று. அவையாவன:
    (1)ஆட்சியின் கட்டமைப்பு
    (2)மத்திய அரசாங்கத்தக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் செயற்பாடுகள்
    (3)வரிவிதிப்பு மற்றும் நிதியியல் அதிகாரப்பகிர்வு தொடர்பான சிக்கல்கள்
என்பனவாகும்.
இவைகள் பல சர்வதேச நாடுகளின் தலைநகரங்களில் நடந்த பேச்சுவார்த்தை பேரங்களில் எல்.ரீ.ரீ.ஈ யினர் பின்பற்றி தோற்றுப்போன திமிர்பிடித்த தந்திரங்கள். அது அவர்களை எங்கு கொண்டு சென்றது? மேலும் நான் கேட்க விரும்புவது, அரசாங்கம் ரி.என்.ஏயின் கோரிக்கைகளையும் காலக்கெடுவையும் பின்பற்ற மறுத்தால் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அவர்களிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கின்றனவா? அவர்கள் இந்தியாவுக்கு ஓடப் போகிறார்களா? 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியதைப்போல மீண்டும் ஒருமுறை தமிழ் இளைஞர்கள் முதுகில் ஏறிச் சவாரி செய்யப் போகிறார்களா? அல்லது 60மற்றும் 70களில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் செய்ததைப்போல சத்தியாக்கிரகத்தை மேடையேற்ற திட்டம் தீட்டுகிறார்களா?
தனது சமூகத்தின் அனைத்து நலன்களிலும் அக்கறையுள்ள எந்தப் பொறுப்புள்ள தலைமைத்துவத்தின் கடமையானது, முன்யோசனையின்றி முட்டாள்தனமாக ஒரு செயலை செய்வதற்கு அவசரம் காட்டுவதற்கு முதல் கடந்த காலத்தை பின்திரும்பிப் பார்த்து அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டே தமிழ் அரசியல்வாதிகள் முன்யோசனையின்றி அதீத ஆர்வத்துடன் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்குள் தலையை நுழைத்து தமிழ் சமூகத்தை பாரிய விலை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளார்கள். நான் ஒருபோதும் சந்தித்திராத மோசமான சூதாட்டக்காரர்கள் இவர்கள்தான். இந்துமத இதிகாசமான மகாபாரதத்தில்கூட, தருமர் தனது மனைவி திரௌபதியை மட்டும்தான் பணயம் வைத்து சூதாடினார், ஆனால்  எங்களின் இந்த அரசியல்வாதிகளோ ஒவ்வொரு தமிழனின் உயிரையும்  பணயம் வைத்து சூதாடுகிறார்கள். அவர்களின் தவறான அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கை 1920ம் காலகட்டத்துக்கு பின்தள்ளியுள்ளது.
எங்கள் அரசியல்வாதிகளை மகிழ்வடையச் செய்ய முயன்று தமிழ்மக்கள் பட்ட அவலங்கள் போதாதா? பாராளுமன்ற அங்கத்தவர்களாகவும்,அமைச்சர்களாகவும்,மற்றும் பல்வேறு சிறிய நிருவாகங்களிலும் இருந்துகொண்டு அவர்கள் கொழுத்த காசோலைகளைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்களை எமது மக்கள் பெறும் அதே வாய்ப்பை வழங்காமல் தங்களை விடுதலை வீரர்கள் எனப்பாசாங்கு செய்துகொண்டு நாளுக்குநாள் அவைகளை கண்டனம் செய்து வருகிறார்கள்.தமிழ்மக்களின் விடுதலையாளர் எனப் பறைசாற்றிக்கொண்டு பிரபாகரன் செய்ததையே சரியாக இவர்களும் செய்கிறார்கள்.
எந்த விடயமானாலும் சரி,வேலுப்பிள்ளை பிரபாகரனால் வழிநடத்தப்பட்ட  சிறப்பாக உருவாக்கப்பட்ட தமிழர்களின் முன்னணி எங்களை எங்கே கொண்டு சென்றது? அவரது கொடிய இராணுவ இயந்திரம்கூட தோல்வியடைந்தது என்றால் தமிழ்மக்களுக்கு ரி.என்.ஏ யினால் எதனை வினியோகிக்க முடியும்? ரி.என்.ஏயின் தலைமைப்பீடம் மற்றவர்களைக் காட்டிலும் இதனை நன்கறிந்திருக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ எனும் கொலை இயந்திரத்தின் பகுதியாகவும் பங்காகவும் இருந்து தமிழர்களின் ஏகப் பிரதிநிதியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலகளுக்கு கீழ்படிந்து நடந்தவர்கள்.
அவர்களது செயற்பாடுகள் சுட்டிக்காட்டுவது,தோற்றுப்போன கடந்தகால நிகழ்வுகளை விளங்கிக்கொள்ளும் அறிவு அவர்களுக்கு இல்லை என்பதையா அல்லது அவர்களும் பிரபாகரனைப்போல இதயமற்ற கொடியவர்கள் என்பதையா?
நான் ஒரு தமிழன் என்கிற வகையில் எருது எங்களது புனித சின்னம் என்பதை நானறிவேன். ஆனால் அதற்காக நாங்கள் எருதுகளைப்போல பழகிக்கொண்டு ஒரு  சீனப் பொருட்கள் விற்கும் கடைக்குள் வெறிகொண்டு ஓடி அங்குள்ள பொருட்களை அழித்து நாசமாக்கலாம் என்று கருத முடியாது. அரச எதிர்ப்பு கொள்கைகளாலோ அல்லது வன்முறைகளாலோ வெற்றிக்கான உத்தரவாதம் கிட்டாது என்கிற நிச்சயமற்றதான எதிர்காலத்தை நோக்கி விரைவதற்கு முன்னர், நாங்கள் ஆர அமர்ந்து எங்கள் கடந்தகாலத்தைப்பற்றி அசைபோடுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது.
கடந்த இரண்டு வருடமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எந்தவொரு உறுதியான அரசியல் தீர்வு யோசனையையும் முன்வைக்கவில்லை என்பது உண்மை. ஆனால் பொருளாதார முன்னேற்றத்தில் - இப்போது நாதியற்றிருக்கும் எமது மக்களுக்கு உண்மையாகவே வேண்டப்பட்ட முன்னேற்றம் - அவரும் அவரது அரசாங்கமும் மக்கள் தங்கள் அடிகளை மீண்டும் வேகமாக முன்னெடுத்து வைக்கத்தக்கதான வரலாற்று விகிதாசாரப்படியான பாரிய மறுவாழ்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீலங்காவுக்கு வருகைதரும் எந்தவொரு நபரும் நடைபெற்றுவரும் உட்கட்டமைப்பு வேலைகளின் அளவை தாங்களே காணமுடியும்.
என்னால் துணிகரமாச் சொல்லக்கூடியது, அது முன்னெப்போதுமிலாதளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது, மற்றும் எங்களது முதற்கடமை எங்கள் கடந்தகால மற்றும் நிகழ்காலத் தலைவர்களின் மடமையின் விளைவாக  அதளபாதாளத்தில் விழுந்து கிடக்கும் எமது மக்களை தூக்கி நிறுத்துவதற்காக அபிவிருத்தி மற்றும் மறுவாழ்வு வேலைகளுடன் ஒருமித்துச் செல்ல வேண்டியதே.எங்களின் பசிக்கு வேண்டிய சோறு கறிக்கு, முன்னே அரசியலை வைப்பதுதான் எங்களின் தோல்விக்கு காரணம்.
மகிந்த ராஜபக்ஸ தனது மரபுவழிச் சொத்தாக  60 வருட இனப்பிரச்சினையையும்,இரு பகுதியினரையும் திகில் மற்றும் பேரழிவிற்கு உள்ளாக்கிய 30 வருட பயங்கரவாதத்தையும் பெற்றுள்ளார். தவிரவும் தன்னுடன் பணியாற்றுவதற்காக மதிப்பு வாய்ந்த தமிழ் தலைவர் எவரையும் அவர் கொண்டிருக்கவில்லை. வன்முறையற்ற அரசியல் நீரோட்டத்தில் கலந்து நின்ற அனைத்து தமிழ் தலைவர்களையும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அழித்தொழித்து விட்டார்.கண்டிப்பாக தலைவர்கள் ஒரே இரவில் உருவாகிவிட மாட்டார்கள்.அவர்கள் மக்களின் விருப்பத்தின் மூலமாக வெளிப்படுவதற்கு,ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்கள் மக்களால் பரீட்சிக்ப்பட்டு மற்றும் முயற்சிக்கப்பட்டு வெளிவர வேண்டியுள்ளது.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ரி.என்.ஏ மற்றும் ஈபிடிபி உட்டபட தமிழ் அரசியலின் மாபெரும் தோல்வியையே வெளிக்காட்டியுள்ளது. தமிழ் தேசியத்தை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் நிலைநாட்டுவதன் மூலம் தமிழ்மக்கள் எதை அடையப் போகிறார்கள்? ரி.என்.ஏ மற்றும் ஈபிடிபி இடையிலான தெரிவானது இருமல் பெண்ணிற்கும் தும்மல் பெண்ணிற்கும் இடையே ஒரு பெண்ணைத் தெரிவு செய்வதைப் போல ஒன்று.

மானிட கௌரவமும் மற்றும் சுயமரியாதையும் உருவாவது வேலையின் மூலமாகவே ஆனால் பெரும்பாலான தமிழர்கள் வேலையற்று இருக்கிறார்கள்.அரசாங்கத்துடன் இணைவது மூலமாக தமிழ்மக்களுக்கு பலனுள்ள வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு ரி.என்.ஏக்கு கிட்டியிருந்தது. வேலைகள், வீடுகள், உணவு, சுகாதாரம், கல்வி, என்பவைகள்தான் அவர்களது கௌரவத்தை நிலைநிறுத்துவதற்கு அவசியமான சில விடயங்கள். அரசியல் முக்கியத்துவம் அவர்களின் உயிர்களை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.
மோதல் போக்கு மற்றும் இனவாத அரசியலை வெளிக்காட்டுவதற்கு வேண்டிய போதுமான விவேகத்தையும் முதிர்ச்சியையும் ரி.என்.ஏ யும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சிங்களத் தலைமைத்துவங்களால் வழங்கப்பட்ட சகல வாய்ப்புகளையும் நாம் தவற விட்டிருக்கிறோம்.தமிழர்களுக்கு ஈழத்துக்கு சமமான ஒன்றை வழங்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கொன்றது யார்? எங்கள் தோல்விகளை – எங்கள் முட்டாள்தனமான தோல்விகளை – ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக  நாங்கள் தொடர்ந்தும் சிங்களத் தலைமைகளுடன் மோதல் போக்கினையும் மற்றும் குற்றச்சாட்டு கூறுவதையும் மேற்கொண்டு வருகிறோம். இது எங்களை எங்கு கொண்டுபோய் சேர்க்கும்?
மற்றைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதைப்பற்றி வாதாடுபவர்களையும் மற்றும் அரசாங்கத்தின் பரந்த முன்னேற்றமான பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்குபவர்களையும் அரசாங்கத்தின் கைக்கூலிகள் எனக் குற்றம் சுமத்திக் கட்டிப் போடப்படுகிறது.அரசாங்கத்துடன் கைகோர்ப்பது மூலமாக எமது மக்களுக்கு நல்விளைவுகபை; பெறலாம் என நம்புபவர்களில் நானும் ஒருவன். இப்போது கிடைக்கக்கூடிய சாத்தியமான மாற்றீடு என்ன? எமது மக்களுக்கு உதவி செய்ய வேறுயார்தான் இருக்கிறார்கள்? எவ்வளவு தொகையான அரசியலால் அவர்கள் தினசரி தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ள முடியும்? ஜேன் வார இதழ் தெரிவித்திருப்பது,வருடம்தோறும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரித்திருப்பதாக.அந்தப் பணத்தைக்கொண்டு எமது மக்கள் தமிழ் பகுதிகளில் ஒரு சொர்க்கத்தையே நிருமாணித்திருக்கலாம். இந்தப் பணம் முழுவதும் எங்கே போனது? இப்போது ஏன் அந்தப் பணம் வருவதில்லை?
அவுஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ் தனது 2010ம் வருட ஆண்டறிக்கையில் பொதுசனத் தொடர்புக்காக அது 86,000 டொலர்களைச் செலவிட்டதாக அறிவித்துள்ளது? எனவே அந்தச் செலவினால் அடைந்த பயன்தான் என்ன? ஒரு கடற்படைத் தளபதியை தூதுவராக நியமித்ததை அவர்கள் தடுத்து நிறுத்தினார்களா? அவுஸ்திரேலிய கிரிக்கட் குழுவினர் ஸ்ரீலங்காவில் விளையாடுவதை அவர்கள் தடுத்து நிறுத்தினாhகளா?

நான் தெரிந்து கொண்டது மிகவும் ஆக்கபூர்வமான வழியில் எமது மக்களுக்கு உதவக்கூடியது அரசாங்கத்தால் வழங்கப்படும் வசதிகள் ஊடாகவே என்று. போரினால் சோர்வடைந்து சகலதையும் இழந்துள்ள மக்களுக்கு உதவுவதற்காக எந்தப் பகுதியினரினதும் பின்துணையை பெறுவதற்காக எவ்வளவு தூரத்திற்கு இறங்கிச் செல்வதற்கும் நான் வெட்கப்படவில்லை. கவனிக்கப்படாத அரசியல் வாக்குறுதிகளால் விரக்தி அடைந்துள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக ஈழம் வரும்வரை காத்திருப்பதற்கு நான் ஒரு முட்டாளோ அல்லது கடின இதயம் கொண்டவனோ அல்ல. பிரபாகரன் திரும்பி வருவார் என்று பேசப்படும் இந்தக் கதைகள் யாவும் உருப்படியான விளைவுகள் எதுவுமின்றி உலகத்தை சுற்றிவரும் பிதா.எஸ.ஜே. இம்மானுவலை ஒரு வேலையில் வைத்திருக்க மட்டுமே உதவ முடியும்.

நடைமுறைக்கு உதவாத தமிழீழ நாடுகடந்த அரசாங்கம் மேற்கத்தைய தளங்களில் உள்ள வசதியான தமிழர்களுக்கு ஏராளமான வேலைகளையும் பணத்தையும் வழங்கி வருவது உண்மை. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள ஏழை மக்களுக்கு அது எந்த வகையில் உதவியிருக்கிறது? மேற்கில் பரப்புரை நிகழ்த்தி வரும் புலிகள் சார்பான முகவர்கள் எங்கள் மக்களின் வயிற்றுக்கு உணவு போடுவதற்கு எவ்வளவு உதவிகளைச் செய்துள்ளார்கள்?

பிரபாகரனையும் அவரது புலிப் போராளிகளையும் இவ்வளவு சீக்கிரமாக தோல்வியடைய வைத்தது தவறு என்று எனது சிங்கள நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அரசாங்கம் போரை இவ்வளவு சீக்கிரமாக முடித்து வைத்திருக்கக்கூடாது என்றும் அவரைப் பின்தொடர்வதற்கு  ஒற்றைத் தமிழன்கூட இல்லாதவரை மேலும் மேலும் தமிழர்களை கொன்று குவித்தபடி இன்னுமொரு பத்து வருடங்களுக்கு தொடர அவரை அனுமதித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அவரை நீண்டகாலம் உயிர்வாழ விட்டிருந்தால் பிரச்சினை தன்னாலேயே தீர்ந்திருக்கும் ஏனெனில் தான் உயிர் பிழைப்பதற்காக இதர தமிழர்களின் உயிரைத் தியாகம் செய்யும்படி அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய அவரது கொடூரமான தந்திர உபாயமே அதை வெளிக்காட்டுகிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
அதற்கு எதிராக என்னால் வாதிக்க முடியாது ஏனென்றால் அதுதான் உண்மை. தவிரவும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் அவர்களின் சொந்தக் கணக்குகளின்படி பசுமையான வாழ்விடங்ளைத்தேடி மேற்குக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். மத்திய தர வகுப்பைச்சேர்ந்த தமிழர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஸ்ரீலங்காவைவிட்டு வெளியேறிவிட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈயும் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இன்னும் 10 வருடங்களுக்கு உயிரோடிருந்தால் மீதியாக இருக்கும் மத்திய தர வகுப்பைச்சேர்ந்த தமிழர்களுக்கு என்ன நடந்திருக்கும்? யாழ்ப்பாண சமூகத்தினதும் மற்றும் கலாச்சாரத்தினதும் முதுகெலும்பாக அவர்கள்தான் இருந்து வந்துள்ளார்கள். அவர்கள் போனால் சமூகத்தின் அடித்தளமும் அவர்களோடு போய்விடும்.
சிங்கள இனம் சிறுபான்மை இனங்களை உள்வாங்கியிருப்பதற்காக அறியப்பட்ட திறந்த வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.வரலாற்றின் உள்நோக்கி நீண்டதூரம் செல்ல நான் விரும்பவில்லை. சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கோட்டே அரசன் தென்னிந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து அநேக வில்லாளர்களை நியமனம் செய்திருந்தான். அவர்கள் ஸ்ரீலங்காவின் தென்பகுதிக் கரையோரமாக குடியேறியிருந்தார்கள். நாளடைவில் அவர்கள் சிங்களப் பெண்களை விவாகம் செய்து இங்கேயே தங்கிவிட்டார்கள்.
தூத்துக்குடிப் பகுதியைச் சேர்ந்த பரவ இன மக்களும் நீர்கொழும்பு பகுதிக்கு 100 வருடங்களுக்கு முன்புதான் செட்டிமார்களுடன் சேர்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் சிங்கள சமூகத்தின் ஒரு பகுதியாகி விட்டார்கள்.ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அது வித்தியாசமானது ஏனெனில் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களுடன் ஒருங்கிணைவதற்கு அவர்களின் மதம் அவர்களைத் தடுக்கிறது. இதர சிறுபான்மையினரை உள்வாங்கி சிங்கள மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டு போகிறார்கள்.
பல - இன, பல – மொழி, பல – மத கலாச்சாரமுள்ள ஸ்ரீலங்காவையே நான் விரும்புகிறேன். பிரபாகரன் உயிரோடிருப்பாரானால் தமிழர்கள் நிலைத்திருக்கச் சாத்தியமான ஒரு சமூகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் பூச்சியமாகக் குறைந்திருக்கும்.ஒன்றில் அவர் தமிழ் இளைஞர்களை தன்னால் வெல்ல முடியாத ஒரு போருக்கு அனுப்பியிருப்பார் அல்லது அவர்களைத் தானே கொன்றிருப்பார்.
ஆகவே நான் இதை முடிக்கு முன்னர் சொல்ல விரும்புவது, பிரபாகரனுக்கு ஒரு முடிவுகட்டி எனது மக்களைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று.எங்கள் தமிழ்மக்கள் தாங்கள் உயிர்வாழ்வாழ்வதற்காக எந்த விலை கொடுத்தாவது சமாதானத்தைப் பெறவேண்டியுள்ளது.
தமிழில்:எஸ்.குமார்

ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


jeyalalitha-rajivஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்படும். இந்த ஆண்டு ராஜீவ்காந்தி பிறந்த நாள் இன்று (ஆகஸ்டு 20) வருவதால், நேற்றே தலைமை செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப் படம் மலர் மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு, ராஜீவ்காந்தி உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தலைமை செயலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி சட்டசபை நிகழ்ச்சிகள் 1/2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

வட மாகாணத்தில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலை

இலங்கையில் ஒரே ஒரு புற்றுநோய் வைத்திய நிலையம் மட்டுமே உள்ளது. வடமாகாணத்தில் மிக அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கபடுவது தெரிந்ததே.குறிப்பாக சிறுவர் புற்றுநோய் என்பது மிகவும் கொடியது ஆனால் உரியகாலத்தில் சிகிச்சை அளித்தால் ஓரளவு குணப்படுத்தி விட முடியும்.இதற்காக யாழ்பாணத்தில் அமைக்கப்பட இருக்கும் இந்த கைங்கரியத்திற்கு தயவுசெய்து உங்கள் பங்களிப்புகளை உரிய முறையில் செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.


Direct payment instructions are as follows:
Please download the registration form here.
Attach the completed registration form with the copy of the bank deposit slip and mail it back to us at:
Colours of Courage Guarantee Limited
C/O Mas Intimates (Pvt) Ltd.
7th Lane, Off Borupana Road,
Kandawala Estate
Ratmalana, Sri Lanka
(Please mention Trailsl at the top right hand corner of the envelope)
Bank : HNB
Branch : Head Office
Bank Account No. : 003010491671
Swift Code : HBLILKLX
Cheques should be drawn in favour of ‘Colours of Courage Trust (Guarantee) Limited’
IBAN For All European Region Countries

HNB IBAN maintained with Deutsche Bank AG Frankfurt
The IBAN is DE54500700100957289200
Direct payment information for US citizens
Company Established: January 25, 2010 (Colours of Courage America, Inc.)
Under Section 402 Not for Profit Corporation
County - New York,
State - New York
Federal Tax Number/ EIN No.: 27-1667408
Filed Address: 450 7th Avenue, Suite 707, New York, NY 10123 Tel 212 203 4381
Direct contact Filer and Commissioned by: Dale Dharmaraja 917 330 9944
for further details  www.trailsl.com

சிக்குனான்டா அடிமை' ராசாவை தேர்தல் நேரத்தில் அமுக்கினார்கள்

தினமும் எதாவது ஆங்கில அல்லது ஹிந்தி - பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் வடநாட்டு - செய்தி சேனல்களைப் பார்க்கும் போது தோன்றியது தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு. எந்த சேனலைத் திருப்பினாலும் "தமிழ் அமைச்சரின் ஊழல்" என்றே இந்த ஸ்பெக்ட்ரம் என்னும் விசயம் சொல்லப்படுகிறது. 

இன்று வரை இதில் எவ்வளவு பணம் ஊழல் செய்யப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. 1.76லட்சம் கோடி வருமான இழப்பு. இப்படி இழப்பு ஏற்படுத்த சாதாரண மந்திரிக்கு மட்டும் லஞ்சம் கொடுத்தால் போதுமா? இதை ஏன் வடநாட்டு மீடியாக்கள் சொல்வதில்லை? தெரிந்தும் சொல்ல மறுக்கின்றனவா? அவர்கள் அங்கே சொல்வதை இங்கே நமது அடிவருடிகளும் ஏதோ ராசாவும் தயாநிதி மாறனும் தான் ஊழல்வாதிகள் என்பதைப் போல் சித்தரிக்கிறார்கள்.
நேரடியாக ஊழல் மற்றும் லஞ்சம் நிகழ்ந்த காமன்வெல்த், ஆதர்ஷ் போன்றவை பற்றி இப்போது எந்தத் தொலைக்காட்சியிலும் ஆங்கில நாளிதழ்களிலும் செய்தியே வருவதில்லை. வராத மாதிரி பார்த்துக்கொள்ளப்படுகிறது என்றும் சொல்லலாம். ஏன் என்றால் காங்கிரஸுக்கு அது கெட்ட பெயரை உண்டு பண்ணிவிடும் நேரடியாக அந்தக் கட்சிக்காரர்களே அதில் ஈடு பட்டிருப்பதால். ஆனால் இந்த அரசு ஊழலை எதிர்ப்பது போலவும் காட்டவேண்டுமே, அதற்கு என்ன செய்வது?

'சிக்குனான்டா அடிம' என்பது போல் ராசாவை தேர்தல் நேரத்தில் அமுக்கினார்கள். அது ஒன்றை மட்டுமே வைத்து இன்று வரை இதை தேய் தேய் என்று தேய்க்கிறார்கள். கூட்டணியில் இருக்கும் கட்சி என்றாலும் நாங்கள் ஊழலை ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம் என்பது தான் இவர்கள் சொல்ல வருவது. அதிலும் செய்திகளில் தமிழ் அமைச்சர்கள், தமிழ்நாட்டு அமைச்சர்கள் என்று குறிப்பிட்டு கூறும் போது இதில் ஏதோ உள்அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.

அந்த அன்னைக்கு ஒரு இனத்தையே அதன் கலாச்சாரத்தையும் வேரையும் அழித்தும் தன் ரத்தவெறி அடங்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம்? தமிழ் பேசுபவன் எங்கு இருக்கிறான் என்று தேடினால் இதோ தான் வாழ்க்கைப்பட்ட இந்திய நாட்டின் காலடியில் இருப்பது தெரிந்துவிட்டது. சொந்த நாட்டிலே போர் தொடுக்க முடியாது, இலங்கையில் செய்தது போல் பேடித்தனமாக பின் இருந்து தாக்க முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவு தான் இந்த "தமிழர்களின் ஊழல்".

உயிரைத்தான் வாங்க முடியவில்லை. மானத்தை வாங்கலாம் அல்லவா? ஒரு காலத்தில் நாம் பிஹாரிகளையும் ஜார்கண்ட்காரர்களையும் ஊழல்வாதிகள் என்று எள்ளினோம். இன்று லட்சம் கோடி ஊழல் என்று உலகமே வாயைத் திறந்து பார்க்குமாறு செய்தாகிவிட்டது.

சரி, அந்த லட்சம் கோடி ஊழலும் தமிழன் செய்தான் என்றே வைத்துக்கொள்வோம். ஊழல் பணம் எங்கே என்று கேட்டால் 'அது ஊழல் இல்லை வருமான இழப்பு' என்றார்கள். எல்லா அமைச்சர்களும் அப்படித்தானே செய்தார்கள், பின் எதற்கு கைது? என்றால், "அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்தார்" என்கிறார்கள்.

இன்று வரை அந்த லஞ்சப்பணத்தையும் சரி, லஞ்சம் கொடுத்தவர்களையும் சரி இந்த அரசாங்கமும் வடநாட்டு மீடியாக்களும் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் காரணம் நீரா ராடியா என்னும் வடநாட்டுக்காரி தானே? ரிலையன்ஸுக்கும் சம்பந்தம் உள்ளதே? டாடா கூட பேசினாரேப்பா? அவர்கள் மேல் எல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன?

இன்றைய தேதியில் ரிலையன்ஸ் மீதும் டாடா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், மறுதினமே இந்த அரசு (எந்த அரசாக இருந்தாலும்) கவிழ்ந்துவிடும். அவர்களைப் பற்றி எல்லாம் இரண்டு நாட்கள் செய்தி போட்டுவிட்டு அப்படியே மறந்தாகிவிட்டது. ஆனால் கனிமொழி, தயாநிதி என்று ஒவ்வொருவராக கைது செய்யப்படுகின்றனர். "Tamil Minister Arrested" என்று செய்திகள் வேறு.

இதை எல்லாம் பார்க்கும் மக்கள் சிரிதும் யோசிப்பதே இல்லையா? ஒரு அமைச்சர் எப்படி அத்தனையும் செய்ய முடியும்? "எனக்கு ஒன்னுமே தெரியாது"ன்னு ஒரு பிரதமர் சொல்றாரு. அமைச்சரவையில் வேறு யாருக்குமேவா தெரியாது? சரி ஊழல் நேரடியாகத் தெரிந்த ஆதர்ஷ், காமன்வெல்த் பற்றியெல்லாம் ஏன் யாருமே பேசுவதில்லை? மீடியாக்களும் மறந்துவிட்டனவா?

ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும் தமிழனும் மற்ற ஊழல் பற்றி பேசுகிறானா? ஏதோ ஊழல் என்றாலே தமிழ்நாடு தான் என்றாகிவிட்டது. வடநாட்டுக்காரன் எல்லாம் நம்மை நக்கலாகத்தான் பார்க்கிறான். இப்போது கூட கட்சிக்கு நாயை விட அதிகமாக விசுவாசமாக இருக்கும் சிதம்பரத்துக்கு அவர் தமிழன் என்கிற காரணத்தால் தான் செக் வைக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் வருகிறது.

அம்பானி, டாடா, ஏர்டெல்,மித்தல் அன்னா போராட்டத்துக்கு ஸ்பான்சர்

பெரியோர்களே தாய்மார்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே,
அனைவரையும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளத்தின் முதல் பக்கத்துக்கு உடனே வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இரண்டு உரிமைப் போர்களுக்கு அணிதிரளுமாறு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு இன்று தனது வாசகர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
முதல் போராட்டம் “சரக்கடிக்கும் உரிமை” தொடர்பானது. “குடிப்பதற்கான வயது வரம்பு 25″ என்று மகாராட்டிரா, டெல்லி அரசுகள் தீர்மானித்திருப்பதை எதிர்த்த தனது போராட்டத்தின் நியாயத்தை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது டைம்ஸ் ஆப் இந்தியா:
“இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலகமே வியந்து போற்றுவது நம் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. மென்மேலும் அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வரவும் அதன் மூலம் மக்களைத் துன்புறுத்தி லஞ்ச வசூலை அதிகரித்துக் கொள்வதற்கே கிழட்டு நரிகளான அரசியல்வாதிகள் திட்டமிடுகிறார்கள்.”
“மைக்கை பிடுங்கி அடித்து கெட்டவார்த்தைகளால் ஏசிக்கொள்கிற எம்.பி எம்.எல்.ஏக்களும், நாட்டைக் கொள்ளையடிக்கின்ற அமைச்சர்களும் ஒழுக்கம் பற்றி நமக்கு உபதேசம் செய்வதா? இது தண்ணியடிப்பது பற்றிய பிரச்சினை அல்ல. நம்முடைய சுயமரியாதை மற்றும் சுதந்திரம் பற்றிய பிரச்சினை. படித்த, நேர்மையான, பொறுப்பான, கடினமாக உழைக்கக்கூடிய இளைஞர்கள் அனைவரும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுந்து நின்றாக வேண்டும். இது என்னுடைய வாழ்க்கை. உன்னால் உதவ முடியாவிட்டால் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாதே என்று முழங்கவேண்டும்” என்று குமுறி வெடித்திருக்கிறது டைம்ஸ் .ஆப் .இந்தியா.
இரண்டாவது போராட்டம் ஊழல் எதிர்ப்பு, அண்ணா ஹசாரே ஆதரவு தொடர்பானது. சரக்கடிக்கும் உரிமையைப் போலன்றி, இது எல்லோருக்கும் தெரிந்த எளிமையான பிரச்சினை என்பதால் இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா அதிகம் விளக்கவில்லை.
சரக்கடிக்கும் உரிமை தொடர்பான டைம்ஸ் ஆப் இந்தியாவின் “அப்ரோச்” கவனிக்கத்தக்கது. “ITS MY LIFE இது என்னுடைய வாழ்க்கை. நான் குடிப்பேன், குளிப்பேன், குப்புற அடிச்சுப் படுப்பேன். நீ யார்றா கேக்குறதுக்கு – ITS NONE OF UR BUSINESS” என்று அரசாங்கத்துக்கு சவால் விடுகிறது அந்த முழக்கம்.
இல்லையா பின்னே? உண்ணாவிரதம் இருக்கணும்னா 22 கண்டிசன் போடறான். சரக்கடிக்கணும்னா 25 வயசுன்னு கண்டிசன் போடறான். என்ன சார் இது சர்வாதிகாரமா இருக்கு? சாப்பிடவும் கூடாதுங்குறான், சாப்பிடாம இருக்கவும் கூடாதுங்கிறான். சாப்பிட்டா நமக்கு ஜெயில். சாப்பிடலேன்னா ஹசாரேக்கு ஜெயில்.
ஊழல் கனிமொழிக்கு திகார் ஜெயில், ஹசாரேவுக்கும் அதே ஜெயிலான்னு கேட்டிருக்கார் கேப்டன். ஜெயில் மட்டுமா? ரெண்டு பேருக்கும் அதே போலீசு, அதே மாஜிஸ்டிரேட், அதே சி.ஆர்.பி.சி. என்ன சார் நியாயம்?
This is how you deal with a honest tax payer of this country? சரக்கடிச்சிட்டு ரோட்ல உருள்றவனுக்கும் பப்ல உக்காந்து டீசன்டா பியர் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம்னா where is the country heading towards?
அதுனாலதான் “ஐ ஆம் அன்னா ஹசாரே” ன்னு லட்சக்கணக்குல ‘சிட்டி’சன்ஸ் ரோட்டுக்கு வந்துட்டாங்க.
“அந்தப் பிரச்சினை வேற, இந்தப் பிரச்சினை வேற” ன்னு ஏமாத்த முடியாது சார். சாயங்காலம் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் டைம்ஸ் ஆப் இந்தியா.
ஐ ஆம்ன்னா ஹசாரே !
குறிப்பு:
ன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் தம் ஆதரவைத் தெரிவிக்கலாம். ரிலையன்ஸ் அம்பானி, டாடா, ஏர்டெல் மித்தல் ஆகிய முதலாளிகள் ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப் போரை ஸ்பான்சர் செய்திருப்பதனால், மேற்படி கம்பேனிகளின் மொபைலிலிருந்து ஊழல் எதிர்ப்பு போராளிகள் இலவசமாக பேசலாம் பேசலாம் பேசிக்கிட்டே இருக்கலாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.
“இட்ஸ் மை லைப்” என்று முழங்கும் சரக்குரிமை இயக்கத்திலிருந்து ஹசாரேயின் ஊரான “ராலேகான் சித்தி”க்கு மட்டும் டைம்ஸ் ஆப் இந்தியா விலக்களித்திருக்கிறது. அந்த ஊரில் மட்டும் சரக்கடிப்பவர்களின் வயது 25 க்கு கீழே இருந்தாலும், மேலே இருந்தாலும் அவர்கள் கட்டி வைத்து உரிக்கப்படுவார்கள்
www.vinavu.com

Padhmanaba swamy கோவில் பிரச்னம் பார்க்கும் பகல் கொள்ளையர்கள்

கடவுளை நம்புறது ஆன்மீகம். கடவுள் பேரால எதைச்சொன்னாலும் நம்புறது ஆன்மீகமல்ல. பிரசன்னம் எப்படி பாக்குறாங்க? அதிலே தென்படுகிற அறிகுறிகளுக்கு யார் அர்த்தம் சொல்லுறார்? அவர் விருப்பு வெறுப்பில்லாமல்தான் அந்த அறிகுறிகளுக்கு அர்த்தம் சொல்றாருன்னு எப்படி நம்புறது? அதை வெளிப்படையாகத்தான் பண்றாங்களா அல்லது ஓமகுண்ட திருச்சபையினர் மட்டும் பண்ணுறாங்களா? சாமியை நம்புறது சரி, ஆசாமியை நம்புறது தப்பு. கிடைத்த நகைகளை ஏதாவது ஒரு விதத்திலே பயன்படுத்தினால்தான் அந்த நகைகளுக்கு மரியாதை. இந்த நகைகளில் இன்றைய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்களின் காணிக்கையும் (அப்போது அவர்கள் இந்துக்களாகத்தான் இருந்தனர்) அல்லது அவர்கள் மன்னருக்கு நாட்டில் சாலை, குடிநீர் வசதிகளுக்காக கொடுத்த வரிப்பணமும் உண்டு. எனவே இதை பொதுப்பணிகளுக்கு தாராளமாக பயன்படுத்தலாம். சரி இதை ஹிந்துக்களுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம் என்றால் அதை ஹிந்து பிற்படுத்தப்பட்டவர், ஹிந்து தலித் உட்பட எல்லா ஹிந்துக்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பயன்படச்செய்ய வேண்டும். அல்லது இதை சும்மாவேதான் வைத்திருப்போம் என்றால் அதை ரிசர்வ் வங்கியிலாவது வைத்திருங்கள், நாட்டின் ரூபாய் மதிப்பு ஏறும், பெட்ரோலிய பொருள் விலையாவது குறையும். இதெல்லாம் எதுவுமில்லை, பிரசன்னம் பார்ப்பவர்கள் சொல்வதைத்தான் நம்புவேன் என்றால் இந்த பிரசன்னம் பார்ப்பவர்கள் உண்மையில் கடவுள் பிரசன்னத்தில் சொன்னதைத்தான் சொன்னார்களா அல்லது இவர்களாக இட்டுக்கட்டி சொன்னார்களா என்பதை சந்தேகத்துக்கிடமின்றி ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அந்த பிரசன்னம் பார்ப்பவர்களின் மீது பகவானை வேண்டிக்கொண்டு பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துவிட வேண்டும். உண்மையில் அவர்கள் பகவானின் வார்த்தைகளைத்தான் கூறினார்களென்றால் அவர்களை பகவான் பிரகலாதனை காப்பாற்றியதைப்போல் காப்பாற்றுவார். அவர்கள் பொய்யாக கூறியிருந்தால் அவர்களுக்கு பகவான் தக்க தண்டனை அளிப்பார். அதன்பிறகு அதுபோல பகவான் பேரைச்சொல்லி யாரும் பொய் சொல்லமாட்டார்கள்.
ஊரை ஏமாத்திய கொள்ளைகாரர்கள் பிரச்னம் பார்க்கும் ஜோதிடர்களைதான் நம்புவோம் என்று அடம்பிடிக்கிறார்கள். இவர்களின் வழக்குகளை எல்லாம் விசாரணைக்கு எடுப்பதே பெரும் கேலிக்கூத்து. இனி இந்தியாவின் எல்லா வழக்குகளையும் ஜோதிடர்களின் உதவியாலேயே தீர்க்கலாமே?

ரகசிய அறையை திறக்க அனுமதிக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடில்லி: "பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில், இன்னமும் திறக்கப்படாமல் உள்ள ஆறாவது அறையை திறக்க அனுமதிக்கக்கூடாது' எனக்கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "பத்மநாபசுவாமி கோவிலில் இதுவரை திறக்கப்படாத "பி' அறையை திறக்கக் கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. பாதாள அறைகளை திறப்பது, பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கி விடும் என, தேவ பிரசன்னத்தில் கண்டறியப்பட்டுள்ளது. பொக்கிஷங்களை பார்வையிடுவதற்கு முன், ஐவர் குழுவினர் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐவர் குழு, திருவனந்தபுரம் கோவிலில் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய தயார் நிலையில் இருக்கும்போது, இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடந்தது என்ன? : கேரளா திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பூமிக்கடியில் உள்ள ஆறு ரகசிய அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து அறைகளை, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழு ஏற்கனவே திறந்து பார்த்து, கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால், அந்தக் குழுவினர் ஆறாவது அறை (பி அறை)யை மட்டும் திறந்து பார்க்காமல் விட்டு விட்டனர். இதையடுத்து, கோவில் ரகசிய அறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. தேசிய அருங்காட்சியக துணைவேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் தலைமையிலான இக்குழு, தற்போது திருவனந்தபுரத்தில் கோவிலின் பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறது.
பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் முன்பாக, சுவாமியின் கருத்தை கேட்பதற்காக தேவ பிரசன்ன நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவிலில் பல்வேறு தோஷங்கள் இருப்பதும், சுவாமி அதிருப்தியில் இருப்பதும், தோஷ பரிகாரங்கள் செய்ய வேண்டியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதன்பின், தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டபடி, கோவிலில் பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
Javier Pearl - Chennai,இந்தியா
2011-08-20 02:48:04 IST Report Abuse
ஒரு பெரியார் இல்ல ஓராயிரம் பெரியார்கழ் வந்தாலும் நீங்க திருந்தமாடிங்கடா ... எல்லாம் ஆசாமி உண்டாகினதுதான் ஒன்றும் சாமி உண்டாகுனது இல்ல...இந்த நம்பூதிரிங்க பண்ற அட்டுழியம் தாங்க முடியலட.... இப்ப புரியுது ஏன் சுவாமி விவேகனந்தர் கேரளாவை "முட்டாள்களின் நாடு" என்று. மக்களை முட்டாள்களாக வைப்பதில் இந்த நம்பூதிர்களின் குள்ள நரித்தனம் மிக அதிகம். அனைத்து பொருளையும் எடுத்து மத்திய வங்கியில் வைப்பதுதான் சிறந்தது.
ranjan - trichy,இந்தியா
2011-08-20 05:57:05 IST Report Abuse
உன்னைப்போல மங்குணிப் பாண்டியர்கள் இருக்கும் வரை இந்த தேசம் உருப்படாது. நீயும் நாட்டுக்கு எதுவும் செய்யமாட்டே, பகவானா பாத்து நாட்டு நலனுக்கு ஏதாவது குடுத்தாலும் அதையும் பயன்படுத்த விட மாட்டே, அடச்சீ. நீயெல்லாம் ஒரு மனுஷனா?பரிகார பூஜை பண்ணனும்னா அந்த ஆறாவது அறையையும் சேத்து திறந்துட்டு மொத்தமா பரிகார பூஜை பண்ணிக்கலாம்லே? அந்த அறைக்குள்ளே நகைகள் மட்டுமில்லாம திருவாங்கூர் மன்னர்களும் பூசாரிகளும் மக்களை எப்படி எல்லாம் வாட்டி வதைத்தார்கள், வரி வசூலித்தார்கள் என்று ஆவணமிருப்பதால் அதை திறக்கவிடக்கூடாதுன்னு நினைக்கிறீங்க....

ஐந்து சீனர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை!

. 2003ம் ஆண்டு சீனர் ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக குறித்த ஐந்து சீனர்களுக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனர்கள் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் தலைமறைவாக வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமறைவாக வாழும் இருவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது


நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்: கலைஞர்
திமுக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் சென்னை மயிலாப்பூரில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர்,
புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தை தமிழக அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற பதிலுக்காகக் காத்திருந்தேன். கடைசியில் மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்ற பதில் கிடைத்துள்ளது.
மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை: இதற்கும் நானே வழி காட்டியிருக்கிறேன். என் ஆயுள் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.
அதேசமயம் 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.
அது என் சொந்தக் கட்டடமா மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது
தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாக கட்டப்பட்ட கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.

தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட நாள் நடைபெற முடியாது. கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள். இவ்வாறு கலைஞர் பேசினார்.

வழமையாக பரப்பப்படும் வதந்திகளில் ஒன்று!நெடுந்தீவில்

நெடுந்தீவில் சிங்களக்குடியேற்றம் என்பதுவழமையாக பரப்பப்படும் வதந்திகளில் ஒன்று!
யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர் கமலேந்திரன்! நெடுந்தீவில் பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியானது வழமை போல் அரசியல் சுயலாப நோக்கில் தீய சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கும் வதந்திகளில் ஒன்றே என்றும் இது குறித்து யாரும் குழப்பமடைய தேவையில்லை என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் பாரிய நீர்வழங்கல் திட்டமொன்று



யாழ். மாவட்டத்தில் பாரிய நீர்வழங்கல் திட்டமொன்று
யாழ். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு பாரிய நீர்வழங்கல் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதற்கமைய 164.4 பில்லியன் ரூபா செலவில் பாரிய நீர்வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கமைய யாழ்ப்பாணம், கொடிகாமம், கரவெட்டி, சாவகச்சேரி, கோப்பாய், அச்சுவேலி, சண்டிலிப்பாய், சங்கானை, நல்லூர், எழுவைத்தீவு, மற்றும் மூளாய், பளை, புங்குடுதீவு, கைதடி, அனலைதீவு, பூநகரி, அரியாலை, காரைநகர், வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் பாரிய நீர் தாங்கிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதிகளில் காணப்படுகின்ற குளங்களை ஆழப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அணைக்கட்டினை உயர்த்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

அமெரிக்க விமானப்படையுடன் இலங்கை விமானப்படை கூட்டுப்பயிற்சி

இலங்கையில் நடைபெறும் விமானப்படை கூட்டுப் பயிற்சியொன்றில் அமெரிக்க விமானப்படையுடன் இணைந்து தான் பங்குபற்றவுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க விமானப்படை விமானங்கள் இலங்கை வான்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இரு வாரங்களுக்குள் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டுப் பயிற்சியானது அமெரிக் விமானப்படையின் பசுபிக் கட்டளைப் பிரிவின் சிந்தனையில் உதித்தாகும் என என இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹார்ஷா அபேவிக்கிரம தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய விமானப்படை, மலேஷிய விமானப்படை, பங்களாதேஷ் விமானப்படை ஆகியனவும் இப்பயிற்சிகளில் பங்குபற்றவுள்ளன.
பிராந்திய நாடுகளுடனான இடைத்தொடர்புகளை மேம்படுத்தவும் பிராந்திய நாடுகளின் விமானப்படைகளுக்கு சர்வதேச அனுபவங்களை பெற்றுக்கொடுக்கவும் உலகெங்கும் இத்தகைய பல்நாட்டு கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இரத்மலானை, அம்பாறையிலுள்ள விமானப்படைத் தளங்களில் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.  பல்வேறு வகையான பரசூட்கள் மூலம், பல்வேறு பொருட்களை விமானத்திலிருந்து தரையிறக்குதல் போன்ற பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன.
இராணுவ மோதல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின்போது மனிதாபிமான உதவிகளை வழங்குதல், இயற்கை அனர்த்தங்களை வினைத்திறனுடன் கையாள்வதற்கு ஏற்ப இந்தோ-பசுபிக் நாடுகளின் விமானப்படை ஆற்றல்களை விருத்தி செய்தல் ஆகியனவே இப்பயிற்சிகளின் பிரதான இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Paschim Banga மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பஸ்சிம் பங்கா என மாற்றப்படுகிறது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இனி மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் பங்கா என அழைக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வரும்.
மேற்கு வங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் West Bengal என வருவதால் அகர வரிசைப்படி கடைசி இடத்தில் இருப்பதாகவும், இதனால் அனைத்து விஷயங்களிலும் கடைசியாகவே மேற்கு வங்கத்தை அழைக்கிறார்கள் என்றும் புகார்கள் கிளம்பின. நமது மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் அங்கு கோரிக்கைகள் கிளம்பின.
இதுகுறித்து இடதுசாரி கூட்டணி ஆட்சி இருந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரினமூல் அரசு இதுகுறித்த கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்தது.
இதையடுத்து மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் சூரிய காந்த மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழு அமைக்கப்பட்டு புதிய பெயர்களைப் பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

அக்குழுவும் பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து கடைசியாக பங்களா, பஸ்சிம் பங்கா, பங்க பிரதேஷ், பங்கபூமி ஆகிய நான்கு பெயர்களை இறுதிப்படுத்தி அரசிடம் கொடுத்தது.
இந்தப் பெயர்கள் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. அதிலிருந்து இறுதியாக பஸ்சிம் பங்கா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தின் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றவுடன் அமலுக்கு வரும்.
சமீபத்தில்தான் ஒரிசா மாநிலத்தின் பெயர் ஒடிஷா என மாற்றப்பட்டது நினைவிருக்கலாம். இதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது. அதேபோல சென்னை, பெங்களூர் உள்ளிட்ட சில நகரங்களின் பெயர்களும் கூட மாற்றம் கண்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பஸ்சிம் பங்கா என மாறுகிறது.
பஸ்சிம் என்பது வங்க மொழியில் மேற்கு என்று பொருள். அதாவது இதுவரை ஆங்கிலத்தில் அழைத்து வந்த பெயரை தற்போது வங்க மொழியில் மாற்றியுள்ளனர். எனவே இதுவரை டபிள்யூ என்று ஆரம்பித்த இம்மாநிலத்தின் ஆங்கிலப் பெயர், இனி பி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அழகிரி வழக்கு: போலீசார்மீது கோர்ட் கண்டனம்.அரசியல் பழிவாங்கலாக தெரிகிறது



மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள தயா வலைதள பூங்கா நிறுவன மேலாளர் மணிகண்டன ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,’’வலைதளபூங்காவில் அழகிரி, காந்தி அழகிரி, துரைதயாநிதி மூவரும் இயக்குநர்களாக இருக்கின்றன்ர். தொழிலதிபர் மார்ட்டினிடம் 3 ஏக்கர் 18 செண்ட் மற்றும் 78 செண்ட் நிலத்தை 2010ல் 85 லட்சத்திற்கு முறையாக பத்திரப்பதிவு செய்து நிலத்தை வாங்கியிருக்கிறோம்.

அந்த இடம் நாகேந்திர அய்யர், நாகேந்திர பூஜை வகையறா அறக்கட்டளைக்கு சொந்தமாக இருந்தது.   இந்த இடம் விவசாயத்திற்கு உதவாது என்று கூறி மார்ட்டினிடம் விற்றுள்ளனர்.  அவரிடம் இருந்து நாங்கள்  முறையாக கிரயம் செய்துள்ளோம்
இந்நிலையில் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்தை நாங்கள் மோசடி செய்து அபகரித்துவிட்டோம் என்று பொய்ப்புகார் கூறுகின்றனர். இதனால் எங்களை விசாரித்து வருகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி சுதாகரன் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப்பின்னர், 9 வருடங்களுக்கு முன்பு முறையாக வாங்கியிருக்கிறார்கள்.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த தொந்தரவுகளை கொடுப்பதாக தெரியவருகிறது.
எனவே விசாரணைக்கு இந்த நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிக்கிறது. இது சம்பந்தமாக ஏதும் புகார் இருந்தால் டிஜிபி மூலமாக அதை கோர்ட்டுக்கு தெரிவியுங்கள். யூகத்தின் அடிப்படையில் நடவடிக்கை ஏதும் எடுக்காதீர்கள் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார் நீதிபதி.
திருச்சி இன்பத்தமிழன்
 ஜெயலலிதா ஆட்சி நடக்கும் பொழுது இந்த நிலத்தை வாங்கியுள்ளார் மார்டின். 2004 இல் இதனை எதிர்த்து ஒருவர் சிவில் வழக்கு தொடர்ந்தார். நீதி மன்றம் மார்டினுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியது. வழக்கு தொடர்ந்தவர் உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது எப்படி போலிஸ் அதே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாம்.? இப்போதைய நிலவரம்: கீழ் கோர்ட் தீர்புபடி மார்டின் வாங்கிய நிலம் மார்டினுக்கே சொந்த மானது. அதனை 2010 இல் மார்டின் அழகிரியின் குடும்ப நிர்வாகத்துக்கு விற்றுள்ளார். இதனால்தான் நீதி மன்றம் தலையிட்டுள்ளது. மக்கள் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்து ஆட்சி செய்வதற்காக, பொய்வழக்கை போடா போலிசுக்கு கற்று கொடுக்க அல்ல.

சென்னை புறம்போக்கு
இது தமிழக அரசுக்கு கிடைத்த இரண்டாவது அடி. முதல் அடி சமசீர் கல்வி வழக்கில். ஜெயலலிதா அடிகடி கூறுவார் "எனது தலைமையிலானா அரசு" என்று. எனவே இதை ஜெயலிதாவுக்கு நீதி மன்றம் கொடுத்த இரண்டாவது அடி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

கொடைநாடு பன்னாடை
இதில் உல் குத்து இருக்கு, நாங்க்கள் நம்ப மாட்டோம். முறையான விசாரணை தேவை.

நமீதா: அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான்

சென்னை: ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. மாற்றம் மக்களிடமிருந்து வர வேண்டும், என்றார் நடிகை நமீதா.
ஹஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தாவிடம் கருத்து கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், "அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள்.

ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும்.
கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும்.
நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.
இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்," என்றார்.

ஹஸாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, "இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது," என்றார் நமீதா.
இந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறித்து?
"அது உண்மைதான். காரணம் இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹஸாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரச்சாரம் கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹஸாரே பார்க்கிறார். இதில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?" என்றார் நமீதா.

வேலூர் ஜெயில் முன்பு முற்றுகை போராட்டம்!


ராஜீவ் கொலைக் கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜீவ் கொலைக் கைதிகளை நேற்று முன்தினம் வைகோ சந்தித்து பேசினார். நேற்று சீமானும் சந்தித்தார். அப்போது அவர் உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றார். இதேபோல் மரண தண்டணையை ரத்து செய்யக்கோரி மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேர் சைக்கிளில் பேரணியாக சென்னையிலிருந்து வேலூர் வந்தனர். அப்போது அவர்கள் வேலூர் ஜெயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரப்பான நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனை பார்க்க அவரது உறவினர்களான அத்தை, தம்பி ஆகியோர் வேலூர் ஜெயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் ஜோலார்பேட்டை தற்போது பொள்ளாச்சியில் வசித்து வருகிறோம். நாங்கள் மாதம் ஒரு முறை வந்து பேரறிவாளனை சந்தித்து விட்டு செல்வோம். முதலில் எங்களுக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேம். தற்போது பல கட்சிகளை சேர்ந்தவர்கள் மரண தண்டனையை எதிர்ப்பதால் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மரண தண்டனை மறுபரிசீலனை செய்யப்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உயிருடன் இருந்தவரை இறந்ததாக் கூறி காணி விற்பனை மோசடி

உயிருடன் இருந்த வயோதிபரை இறந்ததாக் கருதி 5 பரப்புக் காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து பல இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தவர்களின் மோசடிச் சம்பவம் ஒன்று யாழில் இடம் பெற்றுள்ளது.

போலி உறுதிமுடித்தவரும் காணியை விலை கொடுத்து வாங்கியவரும் காணியை முதியவரிடம் கையளித்து விலகிக்கொண்ட சம்பவம் வலி.கிழக்குப் பிரதேச மத்தியஸ்தர் சபையில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வலி. வடக்கில் முதியவருக்குச் சொந்தமாகவுள்ள 5 பரப்புக் காணியை தென்மராட்சியிலுள்ள பிரபல நொத்தாரிசு ஒருவரின் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் கைமாற்றிக் கொண்டனர்.

முதியவர் தனது காணி தனக்குத் தெரியாமல் உறுதி எழுதி கைமாறியிருப்பதை அறிந்து வலி. கிழக்கப் பிரதேச மத்தியஸ்தர் சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டு விசாரணையின் போது முதியவரை இறந்து விட்டதாகக் கூறி உரிய 5 பரப்புக் காணி விற்பனை செய்யப்பட்டதுடன் இதற்கு தென்மராட்சியைச் சேர்ந்த பிரபல நொத்தாரிசு உறுதி எழுதியதும் தெரியவந்துள்ளது.

உயிருடன் இருக்கும் முதியவரை இறந்ததாகக் கூறியது மற்றும் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் காணியை கைமாற்றியது, போலியான உறுதி எழுதியது என்பன மோசடிக் குற்றச்சாட்டில் கடும் தண்டனைக்கு உரியமையை உணர்ந்து முதியவரிடம் கையளிப்பதற்கு இணங்கிய நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் விலகிக் கொண்டனர்.

500 படகுகள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைப்பு ?ராமேஸ்வரம் மீனவர்களது

ராமேஸ்வரம் மீனவர்களது 500 படகுகள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைப்பு ?

இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்காக கடலுக்கு சென்றிருந்த மீனவர் குழுவொன்றை நேற்றைய தினம் இலங்கை மீனவர்கள் குழுவொன்று விரட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராமேஸ்வரம் மீனவர்களது 500 படகுகள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அதன்போது இந்திய மீனவர்களின் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் மீன்பிடி திணைக்களத்துக்கோ பொலிசாருக்கோ ராமேஸ்வரம் மீனவர்களால் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு தடுப்புக்காவல்!தங்கச் சங்கிலி மற்றும் பென்டன் என்பவற்றை கொள்ளையிட்ட

சுமார் ஒரு இலட்ச ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பென்டன் என்பவற்றை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தடுப்புக்காவலில் வைக்கும் படி கொழும்பு மாஜிஸ்திரேட் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார். இவ்வாறு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர் கொழும்பு கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வெல்லகே ரொசான் இந்துனில் சில்வா என்ற பொலிஸ் கான்ஸ்டபிளாவார்.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் தென்மராட்சியின் சில ஆசிரியர்கள்


தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரபல பாடசாலைகளில் உள்ள சில ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சாவகச்சேரி பிரதேச செயலர் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஆகியோரினால் இந்த முறைப்பாடுகள் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய ஆசிரியர்களை கைது செய்வதற்கு வேண்டிய சட்ட ஏற்பாடு களைக் கவனிக்குமாறு சாவகச்சேரி நீதி மன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா பொலி ஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்களினால் சில பெண் பிள்ளைகள் இவ்வாறு பாதிப்புக்கு உள் ளாகி இருக்கின்றபோதும், அவர்களின் எதிர்கால நலன் கருதி அவற்றை வெளிக்கொணர பிள்ளைகளின் பெற்றோர் தயக்கம் காட்டு கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் முறைகேடுகளுக்குச் சிறுவர்கள் உள்ளாக்கப்படுவது தொடர்பில் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதும், பாதிக்கப்பட்ட பெண்பிள்ளைகளின் பெற்றோர் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும் அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். பெற்றோரின் இத்தகைய செயலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆசிரியர்கள் தொடர்ந்தும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதால் பண்பாட்டுச் சீரழிவு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேசமயத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்ந்து பாடசாலைக்குச் செல்ல அஞ்சுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.இந்த விவகாரம் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் ஆசிரியர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார், சட்ட உதவிக் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் கவனத்துக்கு இந்த விவகாரங்களை உடனடியாகக் கொண்டு வந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

தொண்டர் நிறுவனங்கள், புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவை அமைக்கவேண்டும்: ரொஹான் குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான எதிர் பிரச்சாரங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனைப் பிரிவொன்றையும் புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவொன்றையும் ஏற்படுத்த வேண்டும் என இலங்கை அரசாங்கத்துக்கு பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் சவால்கள் எனும் கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.'எமது தூதரகங்கள் மேலும் வினைத்திறனானதாக இருக்கவேண்டும். எல்.ரி.ரி.யினால் சர்வதேச ரீதியாக மேறகொள்ளப்படும் பொய்யான பிரசாரங்களை வெளிவிவகார அமைச்சினால் முறியடிக்க முடியவில்லை. எல்.ரி.ரி.ஈ. தலைமைத்துவம் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் சர்வதேச வலையமைப்புக்கு அரசாங்கத்தினால் தனியாக பதிலடிகொடுக்க முடியவில்லை' என அவர் கூறினார்.'எமது வெளிநாட்டு பங்காளர்களுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். எல்.ரி.ரி.ஈ. தற்போது ஓர் பிரசார அமைப்பாக மாறியுள்ளது. புலம்பெயர்ந்தோருடன் செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ருத்ரகுமாரன் போன்ற நபர்கள், சர்வதேச தலைவர்களிடமும் வாக்குகளுக்குப் பேராசையுள்ள அரசியல்வாதிகளிடமும் பொய்யான தகவல்களை வழங்கி, பாரபட்சமான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எமது நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்' என அவர் கூறினார்.1995 ஆம் ஆண்டு 95 சதவீதமான ஆயுதங்கள் லெபனான் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாங்கப்பட்டன. 1997 இல் 95 சதவீதமான ஆயுதங்கள் வடகொரியாவிலிருந்து வாங்கப்பட்டன. எல்.ரி.ரி.ஈ.யின் முன்னணி ஆயுத முகவர்களை கைது செய்வதற்கு அமெரிக்கப் புலனாய்வுத்துறை எமக்கு மிக உதவியாக இருந்தது' எனவும் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்

சரவணா ஸ்டோர்ஸில் பல கோடி ரொக்க பணமும் தங்க கட்டிகளும் பறிமுதல்

சென்னை சரவணா ஸ்டோர்ஸில் இரவு பகலாக 33 மணி நேரமாக நடந்த சோதனை முடிவுக்கு வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் 18.08.2011 அன்று காலை முதல் இடைவிடாமல் சோதனை மேற்கொண்டனர். கடந்த 6 ஆண்டு கால கணக்கு ஆய்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

33 மணி நேர சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களும், பல கோடி ரொக்க பணமும் சிக்கியுள்ளதாகவும், பல கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செயதிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்டிகளும் 

மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை முதல்கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அது 300 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்க வாய்ப்பில்லாத இத்திட்டத்தை தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் கைவிட வேண்டும். உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 60 இடங்களில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன. இவற்றில் 48 திட்டங்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே உள்ளன.

உலகில் உள்ள மோனோ ரயில் திட்டங்களின் ஒட்டுமொத்த நீளத்தையும் கூட்டினால் அது வெறும் 400 கிலோமீட்டர் மட்டுமே வருகிறது. உலக நிலவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழக அரசு சென்னையில் மட்டும் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் அமைக்கப் போவதாகக் கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை:  புதிய தலைமைச் செயலக் கட்டிடம் பிரமாண்ட மருததுவமனையாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், "ஏ" பிளாக்கில் மருத்துவமனை, "பி" பிளாக்கில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்.
இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதல்வரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, இவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.
தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயலகக் கட்டடம் வீணடிக்கப்படக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரி வந்த நிலையில் அந்த கட்டடத்தை பிரமாண்ட மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்படு்ம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் 4வது அரசு மருத்துவக் கல்லூரி
இங்கு அமையும் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை நகரில் அமையும் 4வது அரசு மருத்துவக் கல்லூரியாக இருக்கும். ஏற்கனவே சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை சென்னை பெறவுள்ளது.

அன்னாவின் போராட்டம் பலன் தராது, நியாயமற்றது-நந்தன் நிலகேனி

டெல்லி: அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் ஊழலுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டம் நியாயமற்றது, பலன் தராது, இந்தப் போராட்டத்தால் ஊழலை ஒழித்து விட முடியாது என்று முன்னாள் இன்போசிஸ் தலைமை செயலதிகாரியும், அடையாள அட்டைத் திட்ட தலைவருமான நந்தன் நிலகேனி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஊழலை ஒழிக்க தற்போது அன்னா ஹஸாரே தலைமையில் நடந்து வரும் போராட்டம் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை. இந்தப் போராட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியாது. லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலுக்கு எதிரான பல்வேறு ஆயுதங்களில் ஒன்றாக அது இருக்க முடியுமே தவிர அதனால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று வாதிடுவது அர்த்தமற்றது.
படிப்படியாக திட்டமிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே ஊழலை ஒழிக்க முடியுமே தவிர இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம் ஒழிக்க முடியும் என நான் நினைக்கவில்லை.
ஊழலை ஒரே அடியாக அடித்து வீழ்த்தும் தோட்டவாக நான் லோக்பால் மசோதாவைப் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கவும் முடியாது. சட்டம் போட்டு ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறுவது சரியல்ல.
அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே குழுவினர் கூறும் ஜன் லோக்பால் மசோதாவும் சரி, ஊழலை ஒழிக்கும் ஒரே ஆயுதம் அல்ல. இந்த சட்டம் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று நினைப்பது கற்பனைக்கு சரி வருமே தவிர நிஜத்தில் சாத்தியமில்லாதது.

சமூக அளவில் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மக்களின் வேதனைகள், விரக்திகள், கோபங்களை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அதேசமயம், புற்றுநோயாக மாறியுள்ள ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் போதுமானது என்று கருதுவது தவறானது. ஊழிலை ஒழிக்க மிகப் பெரிய அளவிலான நடவடிக்கைகள் நமக்குத் தேவைப்படுகிறது. பல நடவடிக்ககளை நாம் எடுக்க வேண்டியுளள்ளது. அதில் ஒரு நடவடிக்கையாக மட்டுமே லோக்பால் இருக்க முடியும்.

லோக்பால் மசோதா தேவையில்லை என்று நான் சொல்ல வரவில்லை. அதுவும் தேவை. அதேசமயம், அது மட்டும் போதாது, அதனால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது என்பதுதான் எனது குறித்து. ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளாமல் நாம் சட்டம் தேவை என்று கூறுவது அர்த்தமற்றது.
பொது சேவைகளில் நிலவும் முறைகேடுகள், ஊழல்களை நாம் களைய வேண்டும். படிப்படியாக ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக ஊழலை ஒழிக்க முடியும். அதற்கு சட்டம் மட்டும் போதாது.
ரேஷன் கடைகளுக்குப் போனால் அங்கு ஊழல். பென்ஷன் பணத்தை வாங்க லஞ்சம். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் மாறிப் போகும்போது வங்கிக் கணக்கை மாற்றவோ, கேஸ் இணைப்பை மாற்றவோ முயலும்போது அங்கும் லஞ்சம். மின் இணைப்பு பெற லஞ்சம், வேலையில் சேர லஞ்சம். இப்படி பல மட்டங்களில், அடி மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும்.
எனவே ஒரே ஒரு சட்டம் எல்லா ஊழலையும், லஞ்சத்தையும் ஒழித்து விடும் என்ற நம்பிக்கை தவறானது, அர்த்தமற்றது என்றார் நிலகேனி.

கலாநிதிமாறன் மீது அதான்டா, இதான்டா பட அதிபர் புகார்

`எம்பயர் மூவிஸ்' என்ற பட நிறுவனத்தின் அதிபர் அந்தோணி நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில்,அதான்டா, இதான்டா என்ற பெயரில் ஒரு படம் தயாரித்ததாகவும், பாண்டியராஜன், விவேக் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி ஓளிபரப்பு உரிமையை ரூ.10 லட்சத்துக்கு சன் டி.விக்கு விற்பனை செய்ததாகவும், ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே சன் டி.வி.யில் இந்த படத்தை வெளியிட்டு விட்டார்கள்.
இதனால் படத்தை வினியோகஸ்தர்கள் யாரும் வாங்க மறுத்து விட்டனர். இதனால் 1 கோடி வரை எனக்கு இழப்பு ஏற்பட்டது.
இது பற்றி கேட்ட போது, என்னை மிரட்டினார்கள் என்றும், இது தொடர்பாக சன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு ஏற்பட்ட நஷ்ட தொகையை வசூலித்து தர வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, தென் சென்னை இணை போலீஸ் கமிஷனர் சண்முகராஜேஸ்வரனிடம் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

10 யாழ் மாணவர்கள் டெல்லி விஜயம் மாணவர் பரிவர்த்தனை

A 10-member group of school boys of St. Patrick’s College, Jaffna, visited India, sponsored by the Student Exchange Programme of the India-Sri Lanka Foundation. The team was accompanied by Rev. Fr. M. Jero Selvanayagam, Rector of the school and Mr. Berty Bannister, a டீச்சர்

தங்கம்: பவுன் 20 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஆகஸ்ட் 18: தங்கம் ஒரு பவுனுக்கு இன்று ரூ. 20 ஆயிரத்தை தாண்டி, பவுனுக்கு ரூ, 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்து ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.18 ஆயிரத்தை தொட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வாக கருதப்பட்டது. அதில் இருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

கடந்த 9ம் தேதி தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.19 ஆயிரத்தை தாண்டியது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துவருவதற்குக் காரணம் சர்வதேச பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியாகும். பங்குகளில் முதலீடு செய்து வந்தவர்கள் தற்போதைய பங்குவர்த்தக வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு விரைவில் குறையக் கூடிய வாய்ப்பு இல்லை என்று முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஏனெனில் பங்கு மார்க்கெட் வீழச்சிக்கு அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைந்து வருவது முக்கிய காரணமாகும்.
அமெரிக்க கடன் பத்திர தரவரிசைப் பட்டியல், AAA என்ற முதல் இடத்தில் இருந்து AA+ என்ற இரண்டாம் இடத்துக்கு சரிந்து விட்டதாக கடந்த வார இறுதியில், ஸ்டாண்டர்டு அண்ட் புவர் என்ற சர்வதேச பொருளாதார ஆலோசனை அமைப்பு தெரிவித்தது.
இதனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் ரூ. 20 ஆயிரத்தை தாண்டி, பவுனுக்கு ரூ, 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியுள்ளது. இதனால் தங்கம் விலை கடுமையாக விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

Anna hazare வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு கிடைத்த பொக்கிஷம்

அண்ணா ஹசாரே
ங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி மேல் தோல்வி பெற்று இந்திய அணி சாதனை படைத்து வரும் வேளையில் இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதாவது படித்த நடுத்தர வர்க்க கனவான்கள் இலண்டனில் நடந்த இளைஞர்களின் கலகத்தைக் கூட கண்டு கொள்ளாமல் இருந்த நேரம். இந்திய அணி தோல்வியால் டி.ஆர்.பி ரேட்டிங் சரிந்து தொலைக்காட்சிகளின்  விளம்பரங்களும் குறைந்து போன நிலை. கிரிக்கெட் பால் போனால் என்ன இருக்கவே இருக்கிறது லோக் பால் எனும் பந்து. வந்தார் அண்ணா ஹாசாரே. அவர் அடிக்காத சிக்சரை அடித்ததாக நம்ப வைக்க ஊடகங்களும்  அணிவகுத்தன. சின்னத்திரையில் கோக் குடித்தும், லேஸ் கடித்தும் காட்சிகளை மலிவான உணர்ச்சிகளாக உசுப்பேற்றிக் கொள்ளும் மேன்மக்களும் ஆட்டத்திற்கு தயாரானார்கள். இதோ ஆரம்பித்து விட்டது ஜோக்பால் வெர்ஷன் 2.0
அரசு கொண்டு வர இருக்கும் லோக்பாலுக்கு பல் இல்லை என்று அவர்கள்  உருவாக்கியிருக்கும் ஜன லோக்பாலை வலியுறுத்தி அண்ணா அணியினர் காலவறையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார்கள். வழக்கமாக இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சமீபத்திய ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. தாராளமயமாக்கம் சூடுபிடித்த இந்த ஆண்டுகளில் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென்றே இந்த நிபந்தனைகளை அரசும், நீதிமன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுத்தி வந்தன.
சென்னையில் கூட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடங்களில் எல்லாம் இப்போது நடத்தக் முடியாது. சுவர் எழுத்து எழுத தடை, சுவரொட்டி ஒட்ட தடை, முக்கிய சாலைகளில் கூட்டம் நடத்த, ஊர்வலம் நடத்தத் தடை என்பதெல்லாம் அரசியல் கட்சிகளில் இருக்கும் அனைவரும் அறிந்த விசயம். இந்தகைய அடக்குமுறைகளை ஒழுங்கு என்ற பெயரில் கொண்டு வந்த போதும், அப்படி கொண்டு வரவேண்டுமென்று குத்தாட்டம் போட்ட மேட்டுக்குடி வர்க்கம்தான் இப்போது அண்ணா போராட்டத்திற்கு தடை என்றதும் சீறி எழுகிறது.
டிராபிக் ராமசாமி முதல் இப்போது அண்ணாவின் போராட்டத்தில் மெழுகுவர்த்தியை ஏந்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் பெரிசுகள் வரை இந்தகைய ‘ஒழுங்கைக்’ கொண்டு வரவேண்டுமென்று நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்திருக்கிறார்கள். இந்து பத்திரிகையில் வாசகர் கடிதம் எழுதியும் பொங்கியிருக்கிறார்கள். அத்தகைய பெரிசு அம்பிகள்தான் இப்போது மீண்டும் எமர்ஜென்சி வந்து விட்டது என்று துள்ளுகிறார்கள்.
சமச்சீர் கல்விக்காக எமது தோழர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய போது பல இடங்களில் போலிஸ் தடியடி, சிறை, வழக்குகளை சந்தித்துதான் நடத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் சில, பல நாட்கள் இருந்திருக்கிறார்கள். அதில் பதினைந்து வயது மாணவனும் உண்டு. இது இந்தியாவெங்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. எந்தப் போராட்டமும் இத்தகைய அடக்குமுறைகளை சந்தித்தே நடைபெறுகிறது. அப்போதெல்லாம் ஜனநாயகம் காக்கப்படுவதாக ராகம் பாடும் அம்பிகள் இப்போது மட்டும் அதுவும் செல்லமாக அண்ணா போராட்டம் சீண்டப்படும் போது துள்ளுவது காணச்சகிக்க வில்லையே?
அண்ணாவின் வீரகாவியமாக சித்தரிக்கப்படும் அந்த காலவறையற்ற உண்ணாவிரதம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில் வெறும் ஆறு மட்டும் அண்ணா அணியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 5000 பேர்களுக்கு மேல் கூடக்கூடாது, மூன்று நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தக்கூடாது என்ற அந்த நிபந்தனைகளை டெல்லி போலீசு புதிதாக ஒன்றும் உருவாக்கவில்லை. இவையெல்லாம் தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் வழிகாட்டுதல்கள்தான். அதன் படிதான் நிபந்தனைகளை விதித்திருப்பதாக டெல்லி போலீசு சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருக்கிறது.
இத்தகைய நிபந்தனைகள் மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிபந்தனைகளெல்லாம் இந்தியாவெங்கும் அன்றாடம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீர், வடகிழக்கு போன்ற போராட்ட மாநிலங்களில் இது இன்னும் காட்டு தர்பாராக இருக்கும். எனில் இத்தகைய நீதிமன்ற, அரசு நிபந்தனைகள், மக்களின் போராடும் உரிமையை ரத்து செய்கிறது, இவற்றை இந்தியாவெங்கும் ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா அம்பிகள் அணி கோரவில்லை. சொல்லப்போனால் அத்தகைய நிபந்தனைகள் இன்னும் அதிகம் வேண்டுமென்பதுதான் அண்ணாவின் பின் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் நிலை.
அண்ணாவிற்காக சென்னையில் சீன் போடும் அருணா சாய்ராம், அனிதா ராம், சுவர்ணமால்யா போன்ற கருநாடக, பரதநாட்டிய தாரகைகளிடம் அண்ணா சாலையில் தொழிலார்களின் ஊர்வலங்களை தடை செய்யலாமா என்று கேட்டுப் பாருங்கள்; கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்று ஒரே ஸ்வரத்தில் பாடுவார்கள், ஆடுவார்கள்! ஆனால் அவர்களது கோரிக்கைதான் ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பதால் இது ஒன்றும் பிரச்சினை அல்ல.
ஐரோம் ஷர்மிளா காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது போலீசு வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்று மருத்துவ மனையில் வைத்து உணவையும், மருந்தையும் வலுக்கட்டாயமாக புகட்டிவிடும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவின் போராட்டத்திற்கு மட்டும் போலிசு பவ்யமாக நிபந்தனைகளை விதிக்கிறது. தாள் பணிந்து பேசுகிறது. அதை அண்ணா ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன போது பவ்யமாக கைது செய்கிறது. மாஜிஸ்ரேட் கூட அண்ணாவின் இடத்திற்கு வந்து பவ்யமாக விசாரிக்கிறார். பின்னர் நீதிமன்றக் காவல் என்றதும் சிறையில் உண்ணாவிரதத்தை நடத்துகிறார். இரவே விடுதலை என்றதும் சிறையை விட்டு அகல மறுக்கிறார்.
இதுவே மற்றவர்களென்றால் இப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. போராட்டங்களுக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் எவரும் அன்றிரவே விடுதலை செய்யப்பட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி விடுதலை செய்யப்பட்டாலும் யாரும் சிறையிலேயே தங்குவேன் என்று அடம்பிடிக்க முடியாது. குண்டு கட்டாக இழுத்து வந்து வெளியே தூக்கி எறிவார்கள். ஆக அண்ணா ஹசாரேவுக்காக போலீசு, நீதிமன்றம், சிறை எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்கிறது. இந்த இலட்சணத்தில் இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று அண்ணா அறிவித்திருப்பதை என்ன சொல்ல? முருகா, முருகா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்து அழவேண்டியதுதான்.
அரசு கொண்டு வர இருக்கும் லோக்பால் மசோதா தற்போது  பாராளுமன்ற நிலைக்குழு முன் இருக்கிறது. இத்தகைய முறைகளில் பாராளுமன்றம்தான் இதை நிறைவேற்ற வேண்டும், மாறாக பாராளுமன்றத்திற்கு வெளியே சிலர் டெண்டு அடித்து போராட்டம் நடத்தி கொண்டு வருவது பாராளுமன்ற ஜனநாயகத்தை மறுப்பதாகும் என்று பிரதமர் மன்மோகன் உட்பட பல காங் அரசு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
பாராளுமன்றத்திற்கு தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கைநாட்டு இட்டது முதலான இட்டதுகளில் இருந்தே பாராளுமன்றத்திற்கு இறையாண்மையோ, புனிதமோ, உரிமையோ ஒரு எழவும் கிடையாது என்பது ஊரறிந்த விசயம். ஆனால் இதையெல்லாம் அண்ண அணி கூறவில்லை. நாங்கள்தான் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆக பாராளுமன்றத்தின் பல் எப்போதோ பிடுங்கப்பட்டு விட்டது என்பதும், இந்திய அரசும் இப்போது அமெரிக்காவின் அடிமையாகி விட்ட நிலையில் அது குறித்தெல்லாம் அண்ணா ஹசாரே அணி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் அந்த லோக்பாலை தூக்கிவிட்டு இவர்களது ஜன லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.
அமைப்பு முறை என்ற முறையில் இந்திய அரசு அமல்படுத்தி வரும் தனியார் மயம்தான் ஊழலின் ஊற்று மூலம் என்பதை மறுத்து அந்த தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஊழலை மட்டும் ஒழிக்க வேண்டுமென்று பொத்தாம் பொதுவான முழக்கத்தோடு அண்ணா அணி நடத்துவது ஒரு பச்சையான நாடகமே.
மேலும் அண்ணா ஹசாரே அணி உருவாக்கியிருக்கும் ஜன் லோக்பாலை காங்கிரசு மட்டுமல்ல, பா.ஜ.க, கம்யூனிஸ்டுகள் உட்பட எந்தக் கட்சியும் இதுவரை ஆதரிக்கவில்லை. எனில் எல்லா கட்சிகளையும் எதிர்த்து அண்ணா அணி போராடியிருக்க வேண்டும். அப்படி போராடமல் இருப்பதற்கு என்ன காரணம்? “நீ போராடுற மாதிரி ஆடு, நான் ஆதரிக்கிற மாறி நடிக்கிறேன்” என்று எதிர்க்கட்சிகளும் இந்த நாடகத்தை தெரிந்தே நடத்துகின்றன. அண்ணாவின் ஜன் லோக்பாலை பா.ஜ.க கட்சி ஏற்காத நிலையில் அதன் உறுப்பினர் வருண் காந்தி அதை தனிநபர் மசோதாவாக பாரளுமன்றத்தில் எழுப்புவேன் என்று கூறியிருக்கிறார். இது நாடகம் என்பதற்கு இது ஒன்றே போதும்.
அடுத்து சமீபத்திய பெரும் ஊழலான 2 ஜியை எடுத்துக் கொள்வோம். குற்றவாளி ராசா எடுத்து வைத்த வாதப்படியும், உண்மைகளின் படியும் பிரதமர் மன்மோகன் சிங்கையே இப்போது கைது செய்திருக்க வேண்டும். அவரையும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்களையும், முன்னர் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் அமைச்சர்களையும் கைது செய்ய வலுவான முகாந்திரம் உள்ள நிலையில் இப்படி எந்தக் கோரிக்கையையும் எழுப்பாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு என்று பேசுவது யாரை ஏமாற்ற?
காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் என்று ஊழலின் குறிப்பான விசயங்களைப் பற்றி எதுவும் பேசாமல், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை கலைக்கவே அண்ணாவின் காமடி நாடகம் பயன்படுகிறது. அது தெரிந்தே காங் அரசும் அண்ணாவை எதிர்ப்பது போல எதிர்த்து அணைப்பது போல அணைத்து இந்த ஆட்டத்தை தொடர்கிறது.
ஆனால் இந்த ஆட்டத்தில் தனது தராதரத்தை மறந்து அண்ணா கோஷ்டி அதிகம் ஹீரோயிசம் போட நினைப்பதுதான் காங்கிரசு அரசின் பிரச்சினை. இந்த ஆட்டத்தின் மூல நோக்கத்தில் இருவருக்கும் உடன்பாடு இருந்தாலும் உடனடி நற்பெயர் யாருக்கு என்பதில்தான் தற்போதைய காமடி சண்டை எழுந்திருக்கிறது.
ஊடகங்கள் அனைத்தும் ஒற்றுமையாக இந்த நாடகத்தை மாபெரும் வீரக்காவியமாக சித்தரிக்கின்றன. இந்தியா முழுவதும் 20 நகரங்களில் மக்கள் எழுச்சி என்றெல்லாம் தொடர்ந்து உசுப்பேற்றுகிறார்கள். எங்கும் காமராவின் எல்லைகளைத் தாண்டி கூட்டம் இல்லை. இருக்கும் கூட்டமும் அரசியல் என்றால் என்ன என்று அ-னா, ஆவன்னா கூட தெரியாத கனவான்கள் கூட்டம். அதிலும் டெல்லி திகார் சிறைக்கு கார்களில் வரும் மேன்மக்கள் ஒரு கி.மீட்டர் தொலைவில் காரை நிறுத்தி விட்டு நடந்து வந்து சிறை முன்பு கூடுகிறார்களாம். இத்தகைய மாபெரும் தியாகங்களை வைத்துத்தான் இதை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று தொடர்ந்து ஓதி நம்மை துன்புறுத்துகிறார்கள்.
42 வருடங்களுக்கு முன்னர் சி.என் அண்ணாதுரை காலமான பிறகு தமிழகம் தற்போது இரண்டாவது அண்ணாவை கண்டெடுத்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா குதூகலிக்கிறது. சில நூறு சேட்டுபையன்கள் தோற்றத்தில் இருக்கும் அம்பிகளின் கூச்சலை வைத்து திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவது அதன் நோக்கம். அதனால்தான் எந்த இந்தி மொழியை எதிர்த்து தமிழகம் போராடியதோ அந்த இந்தி மொழி பேசும் ஒரு தலைவரை தமிழகம் ஏற்றிருப்பதாகவும் அந்த நாளிதழ் விசமத்தனமாக பொய்யுரைக்கிறது.
அண்ணா ஹசாரேவின் காந்திய வேடங்களை பலர் தோலுரித்திருக்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டது, இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட் நிதியில் கையாடல் செய்தது, அதை நீதிபதி பி.பி.சாவந்த் உறுதி செய்தது, அண்ணா ஹசாரேவின் கிராமமான ராலேகாவ் சித்தியில் நாட்டாமையாக ஆட்டம் போட்டது, குடித்தவரை தூணில் கட்டி அடிப்பது, அசைவ உணவை கிராமத்தில் தடை செய்தது, கேபிள் டி.வியை முடக்கியிருப்பது வரை பல வண்டவாளங்கள் அண்ணா ஒரு நிலபிரபுத்துவ நாட்டாமை என்பதை தெரிவிக்கின்றன.
ஊடகங்களின் கவரேஜ்ஜுக்கு பொருத்தமாக தனது உண்ணா விரதத்தின் தேதியையெல்லாம் தள்ளிவைக்கும் இந்த விளம்பர மோகியின் பலவீனத்தை புரிந்து கொண்டு ஊடகங்களும் அவரை மாபெரும் போராளியாக சித்தரிக்கின்றன. குறைந்தபட்சம் நமது தங்கபாலு அளவுக்கு கூட அறிவில்லாத இந்த காமடியனை ஊடகங்கள் ஜாக்கி வைத்து தூக்க தூக்க அவரும் தன்னை ஒரு 70 எம்.எம் ஹீரோவாக கருதிக் கொள்ள நாட்டு மக்கள் இந்த நாடகத்தை பார்த்து தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.
புரட்சிகரமான முழக்கங்களின் மூலம் மக்களை திரட்டி அவர்களது அரசியலை காயடிப்பதை குறிக்கோளாக வைத்து இயங்கும் ஏகாதிபத்தியங்களின் ஆசி பெற்ற தன்னார்வக் குழுக்கள் அண்ணாவின் நாடகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்கள்தான் ‘இந்தியா’வெங்கும் மேன்மக்களை திரட்டி ஏதோ இந்தியாவே போராடுவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்வ இயக்கங்களும் அண்ணாவின் மூலம் கல்லா கட்டலாம் என்று மனப்பால் குடிக்கின்றன. ராம்தேவ், டபுள் ஸ்ரீ ரவி சங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் தங்களது சாம்ராஜ்ஜியத்தின் நலன் கருதி இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமாற்ற விழைகிறார்கள். இந்த வகையில் ஏராளமான உள்குத்துகள் நடந்தாலும் அது நமது கவனத்திற்கு வராது.
ராசா, கல்மாடி இருக்கும் திகார் சிறையில் அண்ணா அடைக்கப்பட்டதையே ஒரு மாபெரும் அநீதியாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. கைது என்றால் சிறையில்தான் அடைப்பார்கள். சிறை என்றால் குற்றவாளிகள், மற்றும் குற்றம் சுமத்தப் பட்டோர்தான் இருப்பார்கள். சிறையிலும் கூட தீண்டாமையுடன் கூடிய 5 நட்சத்திர தரத்தை எதிர்பார்க்கும் இவர்கள்தான் ஊழலை எதிர்க்க போகிறார்கள் என்றால் எருமை மாடு கூட வெட்கப்படும்.
பேரறிவாளன் 9வால்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் என்று சொல்லி அதுவும் ஒரு பொய்க்குற்றச்சாட்டு என்றாலும் அதற்கே தூக்குத் தண்டனை என்று தீர்ப்பளித்த  நாட்டில்தான் நோகாமல் மீடியா டார்லிங்காக இருக்கும் அண்ணாவிற்காக அரசு செய்யும் காமடிகளை மாபெரும் அடக்குமுறை என்று சித்தரிக்கிறார்கள். அந்த வகையில் அண்ணாவுக்கு கிடைக்கும் மலிவான கவரேஜ் அனைத்தும் இந்த நாட்டின் மக்கள் உரிமைகளை காவு கேட்பதற்கு பயன்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
2ஜி ஊழலில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள், அரசு அனைவரும் குற்றவாளிகளாக தெரியவரும் நேரத்தில் அதை மறைப்பதற்கே அண்ணாவின் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் அண்ணாவின் உண்ணவிரத நாடகம் அரசின் மறைமுக ஆதரவோடு இன்னும் கொஞ்ச நாட்கள் நடைபெறும். கார்ப்பரேட் ஊடகங்களும் அதை வைத்து வரும் நாட்களில் ஊதிப்பெருக்கும். ஓய்வு நேர அரசியலுக்கு வாகாக இருக்கும் இந்த மெழுகுவர்த்தி பேஷன் ஷோவில் கலந்து கொள்வதால் எந்தப் பிரச்சினையும் வராது என்பதை உறுதி செய்து கொண்டு வரும் படித்த நடுத்தர வர்க்கம் மேலும் பாசிசமயமாவதற்குத்தான் இந்த நாடகம் உதவி செய்யும்.
அந்த வகையில் அண்ணாவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அண்ணா ஹசாரேவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது. ஊழலின் ஊற்று மூலமான இந்த அரசு அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இந்த காமடி நாடகத்திற்கு அழ முடியாது. மீறி அழுபவர்களை யாரும் காப்பாற்றவும் இயலாது.