புதன், 22 டிசம்பர், 2010

குளிரினால் இத்தாலியில் இலங்கையர் மரணம் _

இத்தாலியில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியில் வீடற்று இருக்கும் 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு குளிர் தாங்க முடியாது உயிரிழந்துள்ளார்.
மிலான் பிரதேசத்தில் வியாபரினி என்ற இடத்தில் அமைந்திருக்கும் கரேபோர் சந்தையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருந்து உயிரிழந்த இலங்கையருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.

சின்னத் தீர்மானங்கள்

சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.  காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான்.  மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.
கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.  இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால்,  அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.
படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.
நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான்.  அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.
அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது.  அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில்  சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது.  தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.  ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.
அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.
0000
கதையைப் பற்றிப் பேசும்போது,  தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான்.  என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.
இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன.  பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள்,  ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்.  இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம்.  இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
0000
இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை.  ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.
தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான  விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.
இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன்.  இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை.  காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.
00000
வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம்.  ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள்.  இது உண்மை தான்.
ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்.  இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.
இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது,  ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.
இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.
ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.
இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்.

மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவே

அத்தியாயம் 11
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அன்புவின் அனுபவம் ஒரு டைப்பான சுவாரஸ்யம். தாஜ்மஹால் படப்பிடிப்பு. கதாநாயகி ரியாசென் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு கண்ணீரோடு மாட்டு வண்டியில் பயணிப்பது போல காட்சி. கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு அழகான பிரதேசத்தில் படமாக்கிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. குளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்ற வித விதமான கோணங்களில் படமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார் அன்பு. புது மணப்பெண்ணான ரியாசென் கழுத்தில் அணிந்திருக்க வேண்டிய தாலி மிஸ்சிங்.
டைரக்டரிடம் சொன்னால் இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க என்று அடி விழுந்தாலும் விழும். ஏனென்றால் இந்த தவறுக்கு பொறுப்பு கன்ட்டினியுடி பார்க்க வேண்டிய உதவி இயக்குனர்தான். அவ்வளவு பதற்றத்திலும், நைசாக ஒரு காரியம் செய்தார் அன்பு. ஒளிப்பதிவாளர் கண்ணனின் காதருகே போய் விஷயத்தைச் சொன்னார். முதலில் திடுக்கிட்ட அவர், அந்த ஷாட் முடிகிற வரைக்கும் காத்திருந்தார்.
பிறகு மெல்ல பாரதிராஜாவிடம் போய், அந்தப் பொண்ணு மாலையை கழட்டுற மாதிரி ஒரு ஷாட் எடுத்துரலாமே என்றார். ம்ம்ம்.. சரிய்யா என்றார் அவரும். அந்த இடைவெளியில் ஒரு தாலியை அவசரம் அவசரமாக ரியா கழுத்தில் மாட்டினார்கள். அதையும் ஜாக்கெட்டுக்குள் பதுங்கியிருப்பது மாதிரி மாட்டினார்கள். மாலையைக் கழற்றும்போது ஜாக்கெட்டுக்குள்ளிருந்து அந்தத் தாலி வெளியே வருவது போலவும் ஒரு ஷாட் எடுத்தார் கண்ணன். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒளிப்பதிவாளரிடம் சரண் அடைந்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்பதும் ஒரு யுக்தி.
இப்படி ஒவ்வொன்றையும் ஆரம்பித்தால் எல்லா திரைப்படத்திலிருந்தும் ஒரு காட்சி தேறும் என்பதால் அடுத்தப் பகுதிக்குப் போவோமோ?
நடிகர் நடிகைகளைக் கையாளும் விதம் :
செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்துக் காட்டியதைப் போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.
உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தைச் சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஷாட் போகும். அதிலும் முடியவில்லை என்றால் அடுத்தது. இப்படி ஷாட்டுகள் தொடர்ந்து கொண்டே போகும்போது ‘ஷாட் ஒன்று இரண்டு’ என்று உரக்கச் சொல்லிக்கொண்டே கிளாப் அடிப்பார் உதவி இயக்குனர். ஒன்று இரண்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போய் ஷாட் நம்பர் பத்து என்று சொல்கிறபோது எவ்வளவு நம்பிக்கையோடு அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும், முகம் இருண்டுவிடும் நடிகருக்கு. அதனால் புத்திசாலி உதவி இயக்குனர் என்ன செய்வார் தெரியுமா?
ஷாட் ஒன்… ஷாட் டூ என்று அடுக்கிக் கொண்டேயிருப்பார். ஒரு கட்டத்தில் அதை நீளவிடாமல் திடீரென்று ஷாட் ஒன் ஏ என்று சுருக்கிக் கொள்வார். அது பி, சி என்று நகருமே தவிர பத்தை நோக்கிப் போகாது. இந்த எண்ணிக்கை யுக்தி மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய விஷயமாகத் தெரியாது. உளவியல் ரீதியாகப் பார்த்தால் கிரேட்! அடிக்கடி ரீ டேக் வாங்குகிற ஹீரோ சோர்வடைய மாட்டார் அல்லவா?
இன்னொரு விஷயம். எவ்வளவுதான் நெருங்கிப் பழகிய நடிகர் என்றாலும் பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதையை உதவி இயக்குனர் என்பவர் கொடுத்தே ஆக வேண்டும். அந்த நேரத்தில் முதுகைத் தட்டிப் பேசுவது, மேலே விழுந்து நசுக்குவது போன்ற கீழ் குணங்களோடு நடந்து கொண்டால் அது அவரது எதிர்காலத்தையே குழி தோண்டிக் கூடப் புதைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
அஜீத் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் நித்யா. படப்பிடிப்பு முடிந்தால் பணி முடிந்ததென்று வீட்டுக்கு போய்விடுகிறவர் அல்ல அஜீத். தனது யூனிட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்களோடு பேட்மிட்டன் ஆடுவார். வீட்டுக்கு வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். இப்படியே அஜீத்திடம் மிக நெருங்கிப் பழக ஆரம்பித்தார் நித்யா. இந்தப் பழக்கம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், நித்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து அவரை விரைவில் இயக்குனராக்கிவிட வேண்டும் என்று அஜீத்தே ஆசைப்படுகிற அளவுக்கு.
விதி இருக்கிறதே, அது தேர் ஏறியும் வரும். சில நேரங்களில் திண்ணையிலும் படுத்திருக்கும். இந்த பாழாய்ப் போன விதி, நித்யாவுக்கு அவர் சொன்ன ஒரு ஜோக்கில் குடியிருந்தது. ஒரு மாலை நேரம் அஜீத் வீட்டுக்குப் போயிருந்தார் நித்யா.
சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். ஜோக்கடிப்பார்கள். அந்த ஜோக்குக்கு அவர்களே குய்யோ மொய்யோ என்று குரல் விட்டு சிரிப்பார்கள். அப்படியே ஓடிவந்து அந்த ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மையும் ஒரு தாக்கு தாக்குவார்கள். அதாவது நமது முதுகில் ஓங்கி தட்டிவிட்டு சிரிப்பார்கள். இவர்கள் ஜோக் சொல்ல ஆரம்பிக்கும்போதே பாதுகாப்பான தூரத்தில் நின்று அதை ரசிக்கப் பழகியிருப்பார்கள் சக தோழர்கள். நித்யாவும் அப்படி ஒரு ஜோக்காளிதான்.
திருமதி அஜீத்தும் அந்த சந்திப்பின்போது இருந்தார். ஏதோ ஒரு ஜோக் சொல்லிவிட்டு அப்படியே எழுந்து ஓடிப்போய் அஜீத்தின் வயிற்றில் குத்திவிட்டார் நித்யா. கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கக் கூடிய பெரிய ஜோக் போலிருக்கிறது. அதற்கேற்றாற்போன்ற முரட்டுக் குத்து அது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி கோபத்தில் விருட்டென்று எழுந்து உள்ளே போக, முகத்தில் வலியைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமானார் அஜீத். அந்த அறையே வேறொரு மூடுக்குப் போனது. “சரி, நான் நாளைக்கு வர்றேன்” என்று கிளம்பினார் நித்யா. மறுநாள் அவர் போனபோது பழைய அஜீத்தைப் பார்க்க முடியவில்லை அவரால். நித்யா அஜீத்தை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அந்த சம்பவத்தால் நிறைவேறாமல் போனது. பல வருடங்களுக்குப் பின் அவர் எடுத்த ‘வேதா’ என்ற படமும் ஓடவில்லை. நித்யாவுக்காக காத்திருந்த ஒரு பெரிய வாழ்க்கையை வெள்ளந்தியான அவரது குணமே காவு வாங்கியது.
நடிகர், நடிகைகளைப் படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும்.
மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவேன் கதவை தட்டி, ஷாட் ரெடி சார். வாங்கன்னு சொல்வது அவ்வளவு நாகரிகம் அல்ல. அப்படியென்றால் என்ன செய்வதாம்? பெரும்பாலும் இந்த கேரவேன் கதவுகளுக்கு வெளியே தங்கள் மேக்கப் மேனையோ காஸ்ட்யூமரையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் நடிகர்கள். அவர்களிடம் சொல்லி கதவை திறக்க செய்யலாம். அப்படி திறக்கிற நேரத்தில் தனது வருகையை அவர்களுக்கு அறிவித்துவிட்டு கீழேயே நிற்கலாம்.
டைரக்டர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் ஒரு காமெடி செய்தார்.
அது அடுத்தவாரம்.