சனி, 20 ஏப்ரல், 2013

ராகுல்: இனி திராவிட கட்சிகளுடன் கூட்டு இல்லை ! கடை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்

சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் நாட்டிய நாடகம் 
சென்னை::தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேருவதில்லை
என்ற தனது அதிரடி தேர்தல் முடிவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி எடுத்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும். ஆனால் இப்போது உள்ள அரசு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருவதால் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அநேகமாக இந்த ஆண்டே தேர்தல் நடைபெறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களை முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை மாயாவதியும் அறிவித்துள்ளனர்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் குறைந்தது 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு தேர்தல் வியூகங்களை ராகுல் காந்தி வகுத்துள்ளார். மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசுடனும், கேரளாவில் முஸ்லீம் லீக்குடனும், மணி பிரிவு கேரள காங்கிரசுடனும் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார். பீகாரில் பஸ்வானுடனும், லாலுவுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளது.மேற்குவங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதேபோல தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. திராவிடக்கட்சிகள் அல்லாத மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி விரும்புவதாக தெரிகிறது.

வரதராஐப்பெருமாள்: புலிகளை மன்னித்தது போல் ஏனையோரையும் மன்னிப்போம்

புலிகள் செய்த யுத்தக் குற்றங்களையும் மானுட இனத்துக்கு எதிரான குற்றங்களையும் எப்படி மறக்கமுடியும்: முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐப்பெருமாள்!

இலங்கை::கடந்த காலத்தில் அரச படைகள் என்ன செய்தன. அதனால் தமிழர்கள் எவ்வளவு இழப்புக்களுக்கு உள்ளானார்கள், எவ்வாறான துன்பங்களுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டார்கள் என அசைபோட்டு அசைபோட்டு தமிழர்கள் மத்தியில் ஆத்திரமூட்டல்களையும் பழிவாங்கும் உணர்ச்சிகளையும் தூண்டுவதில் ஈடுபட்டிருப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரச இராணுவமாக இருந்தாலென்ன அல்லது புலி இராணுவமாக இருந்தாலென்ன
  ஒரு புறம் படைகள், மறுபுறம் தமிழ் வெறி ஏற்றப்பட்ட படைகள். இந்த இரண்டு படைகளுமே யுத்தகளத்தில் மக்களைப் பற்றிக் கவலைப்;படவில்லை. முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட இலங்கை இராணுவம் நடந்து கொண்ட விதத்துக்கு எந்தவகையிலும் குறையாமலே முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்ட, தமிழர்களின் விடிவுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புலிகளும் தமது சுயநலத்துக்காக யுத்தகளத்தில் அகப்பட்டுப் போன தமிழ் மக்கள் மீது தமது கொலைவெறியைத் தீர்த்தனர் என்பதே உண்மை.

Prakash Raj சினிமாவில் யாருக்கும் வாராத துணிச்சல் ! ஜாதிக்காக கௌரவக் கொலைகள்



கௌரவம் - விமர்சனம்!ஆண்டாண்டு காலமாக இந்திய கிராமங்களில் பற்றியெறிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை, இன்னும் சொல்லப்போனால் இதுவரை யாருக்கும் சொல்ல தைரியம் இல்லாத நிலையில், பிரகாஷ் ராஜ் குழு துணிச்சலோடு ஜாதி கௌரவத்தால் நடைபெறுகிற கௌரவக் கொலைகளைப் பற்றிய ஒரு சம்பவத்தை ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.முதலில் பிரகாஷ் ராஜ் குழுவுக்கு ஒரு பெரிய சல்யூட்! ’டீ கடையில் இரட்டைக் குவளை, ஊர் நுழைவில் மறைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, தெரியாமல் கால்பட்டதால் ஒரு கலவரமே வெடிப்பது’ என பல விஷயக்களை விவாதிக்கிறது படம். ’காலணி’ என்ற வார்த்தையை மிகவும் அழுத்தமாகவே பதிவுசெய்கிறது இந்தப்படம். 

ராஜ்யசபா சீட் ! லோக் சபா சீட் ! கனிமொழி, சிதம்பரம், வாசன், வைகோ, கம்யுனிஸ்டு ராஜா, ஜால்ரா பாண்டியன்

தமிழக அரசியல் வித்தியாசமான சதுரங்கத்தில் நின்று கொண்டிருக்கிறது. குறிப்பாக தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் கனிமொழி, இந்திய நிதியமைச்சராக இருக்கும் ப சிதம்பரம், ம.தி.மு.க. பொது செயலாளராக இருக்கும் வைகோ, காங்கிரஸ் கட்சிக்குள் (முன்னாள் தமிழ்மாநில காங்கிரஸ் பிரிவு தலைவர்) இருக்கும் இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராகவும், ராஜ்ய சபை எம்.பி.யாகவும் இருக்கும் டி.ராஜா ஆகியோரை சூடுபிடிக்கும் ‘டெல்லி அரசியல்’ கண்டபடி மிரட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த ரவுண்டில் இந்திய ராஜ்ய சபையிலோ, நாடாளுமன்றத்திலோ தாங்கள் இடம்பெறுவோமா என்ற ‘சங்கடம்’ இந்த ஐவரையும் « வருக வருக » என்று வரவேற்கிறது. இந்த ‘பஞ்சபாண்டவர்களுக்கு’ இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள சோதனை தமிழகத்தில் பரபரப்பான விவாதங்களுக்கு விதை போட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ராஜ்ய சபை எம்.பி.க்கள் பதவி காலம் முடிவடைவதும், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்பட்டதும் இந்த திடீர் சோதனையின் பின்னணி விவகாரங்கள். தமிழக சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்கள். ஒரு ராஜ்ய சபை உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால், தமிழகத்திலிருந்து 6 ராஜ்ய சபை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

Kerala மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டர், செல்போன் வழங்கப்படும்

கேரளாவில் மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது  இதன் காரணமாக தற்போது ஏராளமான பெண்களும் இத்தொழிலை மேற்கொள்கிறார்கள் .
தென்னை மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டர், செல்போன் வழங்கப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.கேரள மாநிலம் காசர்கோட்டில் மத்திய தோட்டப் பயிர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பெண்களுக்கு தென்னை மரம் ஏற பயிற்சி
அளிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெற்ற பெண்கள் தற்போது கேரளாவில் பல பகுதிகளில் தென்னை மரம் ஏறி தேங்காய்களை பறித்து வருகின்றனர்.இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்றார்.அப்போது அவரிடம் தென்னைமரம் ஏறும் பெண்கள் மனு கொடுத்தனர். அதில், ‘‘தென்னை மரம் ஏறுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பஸ்சில் கொண்டு செல்ல சிரமம் இருப்பதால், தங்களுக்கு இருசக்கர வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்‘‘ என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் உம்மன்சாண்டி, ‘‘தென்னை மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டரும், செல்போனும் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என உறுதியளித்தார்.

மோடி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட மாட்டார் ! நிதின் கத்காரி உறுதி

கூட்டணி கட்சிகளை இழக்கவோ, கட்சியில் உள்ளவர்களை தியாகம் செய்யவோ பா ஜ க  விரும்பவில்லை: அருண்ஜெட்லி
கூட்டணி கட்சிகளை இழக்கவோ, கட்சியில் உள்ளவர்களை தியாகம் செய்யவோ, பா.ஜ., விரும்பவில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அருண்ஜெட்லி கூறினார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அருண் ஜெட்லி, பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்தப்படமாட்டார் என, பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உறுதியளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி நாங்கள் எவ்வித கருத்து தெரிவிக்கவில்லை. அது தான் சிக்கலுக்கு காரணமானது. நாங்கள் கட்டுப்பாடான கட்சியை நடத்துகிறோம். பிரதமர் வேட்பாளர் தொடர்பாக, கட்சி முடிவு எடுத்தால் மட்டுமே, அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.
தே.ஜ., கூட்டணியில், மேலும் கட்சிகள் சேருவதால், பலன் அடைவதை விரும்புகிறோம்; அதற்காக எவ்வித தியாகமும் செய்வோம் என அர்த்தமல்ல. இப்போதைக்கு அதுபற்றி, கருத்து எழவில்லை. எங்கள் வேட்பாளர் குறித்து, நாங்கள் முடிவு செய்யும் போது, அது பற்றி தெரிவிப்போம்.மோடி பெயர் முன்னிறுத்தப்படுவதால், எவ்வித

காலாவதியான தடுப்பூசிகள் மீது மறு லேபிள் ஒட்டி விற்கப்பட்டமை கண்டுபிடிப்பு

சென்னை: காலாவதியான தடுப்பூசிகள் மீது மறு லேபிள் ஒட்டி விற்கப்பட்டது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், மறு உத்தரவு வரும் வரை கடைக்காரர்களோ, டாக்டர்களோ தடுப்பூசிகளை கையாள வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.குழந்தை பிறந்த 6, 10, 14வது மாதங்களில் டிப்தீரியா, டெட்டனஸ், ஹெபடைட்டிஸ் உள்ளிட்ட 5 நோய்கள் தாக்காமல் இருக்க ஒரே தடுப்பூசி போடுகின்றனர்.டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு மருந்து நிறுவனம் தயாரித்து சப்ளை செய்த தடுப்பூசிகள் காலாவதியாகி விட்டன. ஆனால், மறு லேபிள் ஒட்டப்பட்டு அவை கடைகளில் விற்கப்படுவதாக தமிழ்நாடு மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

லஞ்சம்: பள்ளியில் சேர்க்க ஜாதி சான்றுக்காக பெற்றோர் தாசில்தார் அலுவலகத்தில் தவம்

கோவை : பள்ளி சேர்க்கை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஜாதிச்சான்றுக்காகஅத்தாட்சி சான்றில் எழுதியிருக்கும் தேதியன்று, தகவல் மையத்திற்கு சென்றால், "தவறாக நிரப்பப்பட்டுள்ளது, சரி செய்து விண்ணப்பம் கொடுங்கள்' என்கிறார்கள். அல்லது, "இன்னும் சான்றிதழ் தயாராகவில்லை. சான்றிதழ் அட்டை பற்றாக்குறையாக உள்ளது.
மக்கள் அலைமோதுகின்றனர். தாசில் தார் அலுவலகத்திற்கு ஜாதிச் சான்றுக்காக சென்றால், "இன்று போய் நாளை வா...' என அலைக்கழிக்கின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு, ஜாதிச்சான்று அட்டைகளை ஊழியர்களே பதுக்கிக்கொள்வதே அலைக்கழிப்புக்கு காரணம்.குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், வேலைவாய்ப்புக்கும் ஜாதிச் சான்றிதழ் கட்டாயம். தாலுகா அலுவலகங்களில் ஜாதிச்சான்று கேட்டு, தினமும் மனுக் கொடுக்கின்றனர். கோவை தாலுகா அலுவலக வளாகத்தில் முகாமிட்டிருக்கும் எழுத்தர்கள் மற்றும் முக்கிய ஜெராக்ஸ் கடைகளில் மட்டுமே இதற்கான விண்ணப்பம் கிடைக்கிறது.எழுத்தர்கள் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் தாலுகா அலுவலக, தகவல் மையத்தில் ஒப்படைத்தால், அத்தாட்சி சான்று கொடுக்கின்றனர். இந்த அலைச்சலை விரும்பாத சிலர், இடைத்தரகர்கள் உதவியை நாடுகின்றனர்.இவர்களிடம் 500 ரூபாய் கொடுத்தால் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

காங்கிரஸ் / கூட்டுக்குழு அறிக்கை இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம் ! கபில் சிபல்

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்கும், பார்லிமென்ட் கூட்டு குழுவான - ஜே.பி.சி.,யின் அறிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அப்படியிருக்கும்போது, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள், யூகங்களை கிளப்பி விடுவதை கைவிட வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கை விரைவில், பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்பாக, இக்குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கை, குழுவின் உறுப்பினர்களுக்கு நேற்று முன் தினம் வினியோகிக்கப்பட்டது. வரும், 25ம் தேதி, ஜே.பி.சி., கூட்டம் நடக்கிறது. அதில், தீர்மானம் ஏற்றுவதற்கு வசதியாக, வரைவு அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வரைவு அறிக்கை கசிந்ததைப் பார்த்து, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள் கொதித்து போய், கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. "இது, ஜே.பி.சி., அறிக்கை இல்லை; காங்கிரஸ் அறிக்கை' என, பாரதிய ஜனதா கடுமையாக சாடியுள்ளது. தி.மு.க., உட்பட பிற எதிர்க்கட்சிகளும் சாடியுள்ளன.

தமிழக மாணவர் போராட்டம் இலங்கை தமிழர்களின் நிம்மதியை மீண்டும் கேள்விக்குறியாக்குகிறது

இலங்கையில் துக்ளக்;இங்கு நடக்கும் போராட்டங்கள் - அங்கு நிலவும் கருத்துக்கள்
மேலே உள்ள படம் யாழ்பாணத்தில் பிரபலமான வேம்படி மகளிர் கல்லூரியாகும் .
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர அனேகமாக மற்ற எல்லா அரசியல்
கட்சிகளுமே மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்துகின்றன.இங்கு புத்த பிக்குகள் தாக்கப்படுகின்றார்னள். ஆன்மீகச் சுற்றுப்பயணம் வரும் பக்தர்கள் அடித்துத் தாக்கப்படுகின்றார்கள். இலங்கை அரச அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. அரசியல் சார்பில்லாத மாணவர்கள் கூட தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுக்கின்றார்கள்.
thuglak
இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இங்கு நடக்கும் போராட்டங்கள் பற்றி இலங்கையில் உள்ள தமிழர்களும் இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்ப்பத்திரிகைகளும் என்ன சொல்கின்றன. நமது நிருபர்கள் நேரடியாக இலங்கை சென்று அங்கு ஆறு நாட்கள் கொழும்பு,யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு,முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி ஆகிய  நகரங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழ் மக்களை தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து வந்துள்ளனர்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

குருவி அயன் படங்களை பார்த்து கொலைகள் செய்த மாணவர்கள்

செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம மட்டக்களப்பு – செங்கலடி நகரில் கடந்த
வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே
இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டம் ஒன்றை அவர்களது மகள் தக்ஸிகா மேற்கொண்டிருந்தார். அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அத்திட்டம் வெற்றியளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வதென காதலர்கள் இருவரும் முடிவு செய்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது.< தற்போது இடம்பெற்றுள்ள திட்டங்கள் செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் பிரைட் ரியுசன் சென்றரிலும் வகுக்கப்பட்டது. கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி

ஷாபாக் ஆர்ப்பாட்டம்முஸ்லிம்கள் என்றால் ஜனநாயக உணர்வற்ற பழைமைவாதிகள், இஸ்லாமிய மதவெறியிலும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிக் கிடப்பவர்கள் என்று இந்துத்துவ ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் தவறான கருத்துதான் நமது நாட்டில் நிலவுகிறது. ஆனால், இது எவ்வளவு பச்சைப்பொய் என்பதை அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் இஸ்லாமிய மதவெறிக் கொடுங்கோலர்களுக்கு எதிரான போராட்டங்களின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இஸ்லாமிய மதவெறிக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் குண்டர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுப் போராடும் மக்களை அச்சுறுத்திய போதிலும், அவற்றைத் துச்சமாக மதித்து வங்கதேச மக்கள் நீதிக்காகவும், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்காகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றனர்.

காவல்நிலைய வளாகத்தில் 2 பேர் வெட்டிக் கொலை! திமுக செயற்குழு உறுப்பினர் கொலைவழக்கில் பிணையில் இருந்தவர்கள்

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கொலை வழக்கில் தற்போது பிணையில் உள்ள இருவர் பூம்புகார் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வந்த போது, காவல்நிலைய வளாகத்திலேயே அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.நாகப்பட்டினம் மாவட்டம் மேலையூரில் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராஜேந்திரன் கொலை வழக்கில் பிணையில் உள்ள ரவி மற்றும் ராஜேந்திரன் இருவரும் தினமும் பூம்புகார் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை இருவரும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பும்போது, ஒரு மர்ம கும்பல் திடீரென அங்கே நுழைந்து காவல்நிலைய வளாகத்திலேயே அரிவாளால் வெட்டி ரவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். அதற்கு சற்று நேரம் முன்பாக கையெழுத்து போட்டுவிட்டு வெளியே சென்ற ராஜேந்திரன், காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, அவரையும் ஒரு கும்பல் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனர். இருவர் கொலை தொடர்பாக தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே சடலங்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறது.

ராசா பதிலடி: மன்மோகன் சிங்கோடு ஆலோசித்த பின்பே முடிவெடுத்தேன்

கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையானது ஏமாற்றத்தை தருவதாகவும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை காப்பாற்றும் வகையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 
 2ஜி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று வரைவு அறிக்கை
தாக்கல் செய்தது. கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ தாக்கல் செய்த அந்த அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் பிரதமர் மற்றும் நிதி மந்திரி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதியற்ற நிறுவனங்களுக்கு நெட்வொர்க் லைசென்சுகள் பெறுவதற்கும் உதவும் வகையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை முன்னாள் தொலைத் தொடர்புத்துறை மந்திரி ராசா மாற்றியிருக்கிறார் என்றும், பிரதமரை அவர் தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆ.ராசா, சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2ஜி வழக்கு தொடர்பாக என்னை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற பலமுறை கடிதங்கள் அனுப்பியும், நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் என்னை விசாரணைக்கு அழைக்கவில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். ஒவ்வொரு முடிவையும் பிரதமருடன் ஆலோசனை நடத்தியபிறகே எடுத்தேன். இதுதொடர்பாக ஜே.பி.சி.க்கு 100 பக்க கடிதத்தை நாளை அனுப்புவேன். 2ஜி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். அமலாக்கத்துறை வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் என்னிடத்தில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது? நான் எடுத்த முடிவுகள் அனைத்தும், பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கூறினார். இதேபோல் பாரதீய ஜனதாவும், இடதுசாரிகளும் இந்த அறிக்கையை ஏற்கவில்லை maalaimalar.com

Malalai Joya தாலிபான்களுக்கும் அந்நிய படைகளுக்கும் இடையில் போராடும் பெண் மலாலாய் ஜோயா

இ.பா.சிந்தன் maattru.com
1978 இல் ஆப்கானிஸ்தானில் பரா;என்கிறஊரில் பிறந்தார்
மலாலாய் சோயா. 4 வயதாக இருக்கும்போதே, போரில் தந்தையை இழந்தார். அதன்பின்னர், ஈரான் மற்றும் பாகிஸ்தானிற்கு சென்று அகதி வாழ்க்கை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மலாலாய் சோயாவின் குடும்பம். போர் பரிசளித்த துயர்மிகுந்த அகதி வாழ்க்கை அவருக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. தன்னுடைய 8ஆம் வகுப்பு முதலே, காலையில் கல்வி பயின்றும் மாலையில் மறைமுகமாக ஏராளமான பெண்களுக்கு கல்வி பயிற்றுவித்தும் வந்தார் மலாலாய் சோயா. கல்வியறிவற்ற அரசியலில் நேரடியாக ஈடுபட்டிருக்காத மக்களிடமிருந்தே, மக்களுக்கான அரசியலையே கற்றுக்கொண்டார். அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களில், ஒவ்வொருவரிடமும் ஆப்கானிஸ்தானின், ஈரானின், ஈராக்கின், பாகிஸ்தானின் அரசியலை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பல ஆண்டுகள் அகதி வாழ்க்கை வாந்தபின்னர், ஆப்கானிஸ்தானில் தன்னுடைய சொந்த ஊருக்கே திரும்பி வந்தார் மலாலாய் சோயா. 90களில் பெண்களை வீட்டை விட்டே வெளியே வரவிடாமல் தடுத்துவந்த தாலிபான்களின் ஆட்சிக்காலத்திலேயே தன்னுடைய சொந்த ஊரான பராவில் ஒரு ஆதரவற்றோர் இல்லமும், இலவச மருத்துவமனையும் உருவாக்கி நடத்தினார். பெண்கள் கல்வி கற்பது தடைசெய்யப்பட்டிருந்த போதும், பெண்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதற்கென மறைமுகமாக கல்விக்கூடங்களை நடத்தினார்.

மோசடி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்! மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் போக்குவரத்து கூட்டுறவு
அமைப்புகளுக்கு நடந்த மோசடி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஜனநாயக பூர்வமாக தேர்தலை நடத்த வேண்டும என்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலைஞர்: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?

பாராளுமன்ற கூட்டு குழுவில் நேரடி விளக்கம் தர ராசா அனுமதி கேட்டார் ஆனால் அது மறுக்கப்பட்டது, அதன் தலைவர் சாக்கோ (மலையாளி) ராசாவை சந்திக்க மறுத்ததன் மூலம் அவர்கள் இந்த விதமான தீர்ப்புக்களை தான் வெளியிடப்போகிறார்கள் என்பது சிறு பாப்பாவுக்கு கூட தெரியுமே
அமைச்சர் ஒருவர் பிரதமரை எப்படி தவறாக வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.
திமுக தலைவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு கொடுத்துள்ள வரைவு அறிக்கையில், பிரதமரை மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராஜா தவறாக வழி நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கலைஞர்: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?
கேள்வி: ஆ. ராஜா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்த பிறகு இதைப்பற்றி அவருக்கு ஆலோசனை கூறுவீர்களா?
கலைஞர்: அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்குத் தெரியாத ஆலோசனைகளை நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சரியான வழியில் நீதி வழங்கப்பட வேண்டும், முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை “சிலப்பதிகாரக்” காலத்திலிருந்து தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
கேள்வி: கூட்டுறவு தேர்தல்களை நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டியிட்டு இப்போது மார்க்சிஸ்ட் கட்சி போன்றவை அந்தத் தேர்தல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?
கலைஞர்: நாங்கள் முன்பே கூட்டுறவுத் தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பதை உணர்ந்து, கூட்டுறவுத் தேர்தல்களை புறக்கணித்து விட்டோம். மற்றக் கட்சிக்காரர்கள் இப்போது உண்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்து, போராட்டங்களை நடத்துகிறார்கள் என்று கூறினார்.

தூத்துக்குடியில் மனைவிக்கு மொட்டை போட்டு அறையில் பூட்டி வைத்த கணவன்

தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்தவர் மணவாளன் ஏஞ்சலா ஜூடு
(30). இவர் அங்குள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைன் மூலம் பெண் தேடினர். 2 ஆண்டுக்கு முன் மதுரையைச் சேர்ந்த அனிதா ஜெயராணி (27) என்பவர் ஆன்லைனில் அறிமுகமானதைத் தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி திருணம் செய்து வைத்தனர்.மணவாளன், பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். திருமணத்தின்போது, தான் டிகிரி முடித்திருப்பதாக பெண் வீட்டாரிடம் மணவாளன் தெரிவித்திருந்தாராம். ஆனால் திருமணத்திற்கு பின் அவர் 10ம் வகுப்பு வரைதான் படித்திருப்பது தெரியவந்ததும்

ஆப்ரிக்க நாடுகளுக்கு இடம்பெயரும் ஓசூர் விவசாயிகள்

indian farmers in africa 300x180 photo
Indian farmer celebrates his harvest in Ethiopia
Multinational corporations are buying enormous tracts of land in Africa to the detriment of local communities. Agazit Abate warns that the land grab puts countries on the path to increased food insecurity, environmental degradation, increased reliance on aid and marginalisation of farming and pastoralist communities.
The recent phenomenon of land grab, as outlined in the extensive research of the Oakland Institute, has resulted in the sale of enormous portions of land throughout Africa. In 2009 alone, nearly 60 million hectares of land were purchased or leased throughout the continent for the production and export of food, cut flowers and agrofuel crops.
 ஓசூர்: ஆப்ரிக்க நாடுகளில், குறைந்த விலைக்கு விவசாய நிலம் கிடைப்பதால், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், அங்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும், 5 ஆயிரம் ஹெக்டேரில் ரோஜா, ஜெர்பரா, கார்னேஷன், ஆஸ்டர் உள்ளிட்ட, 25 வகை கொய்மலர்கள் உற்பத்தியாகின்றன. குறிப்பாக, 5,000 ஏக்கரில், திறந்தவெளி மற்றும் உயர் தொழில்நுட்ப பசுமை கிடங்கு முறையில், விவசாயிகள், ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.தொழில்நுட்பம்:
ஓசூர், பேரிகை, பாகலூர், பேளகொண்டப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மலர் பண்ணைகளில், உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி யாகும் ரோஜா மலர்கள், ஐரோப்பா, அரேபியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பருவ மழை குறைந்துள்ளதால் இந்த பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், ரோஜா செடிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் செய்ய முடியவில்லை. சர்வதேச சந்தையில், ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. இந்நிலையில், எத்தியோப்பியா, கென்யா, கானா உள்ளிட்ட, ஆப்ரிக்கா நாடுகளில், மலர் சாகுபடிக்கு ஏற்ற சூழல், மிக குறைந்த விலைக்கு விவசாய நிலம், அதிகமான நீர் ஆதாரம், கட்டமைப்பு வசதி, குறைந்த ஊதியத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதால், அங்கு உலக தரம் வாய்ந்த ரோஜா மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தங்கம் விலை சரிவு ! கடன்கொடுத்த வங்கிகள் அப்செட்

 தங்கம் விலை தொடர் சரிவால், வாடிக்கையாளர்களின் நகைகளின் மீது, 95 இதன்படி தங்க நகை கடன் வழங்குகிறோம். தங்கத்தின் விலைக்கும், கடன் வழங்கும் தொகைக்கும் இடைப்பட்ட அளவீடு, 70 முதல், 75 சதவீதமாக உள்ளன. 15 முதல், 20 சதவீதம் வாடிக்கையாளரின் தங்கம், நகையாக வங்கியில் உள்ளதால், அரசு வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.இழப்பு: வெளிமார்க்கெட் தங்கத்தின் விலையில், 95 சதவீதம் கடனாக வழங்கிய, தமிழக, கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகளுக்கு, 5 முதல், 7 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை, சவரனுக்கு, 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் சரியக்கூடும் என்பதால், நிதி நெருக்கடியில் மூழ்குவதில் இருந்து தப்பிக்க, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தங்கத்தை திரும்ப பெறும்படியும், இழப்பீட்டு தொகையை செலுத்தும் படியும், நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இழப்பீட்டு தொகை செலுத்தாவிட்டால், நகை உடனடியாக ஏலத்துக்கு கொண்டு வரப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள், இந்த தனியார் நிறுவனங்கள் வராததால், நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

காரில் தப்பித்து பறந்த பர்வேஸ் முஷாரப்!

கைது செய்ய பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு! காரில் தப்பித்து பறந்த பர்வேஸ்
முஷாரப பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்ய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத முஷாரப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம், அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளத அவரது தனியார் பாதுகாப்பு வீரர்களின் உதவியோடு, அவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து வெளியே சென்றுவிட்டார். இதனால், அவரை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதபெனாசிர் புட்டோ கொலை வழக்கில் ஜாமினை நீட்டிக்க கோரிய முஷாரப் மனு தள்ளுபடியானது. ஜாமீன் நீட்டிப்பு மனுவை தள்ளுபடி செய்து முஷாரப்பை கைது செய்ய உத்தரவிட்டது.

பஞ்சாபில் கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்த 4 ஆண்கள்!!

பஞ்சாபில் பட்டப்பகலில் பலபேர் கண் முன்பு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை இரும்பு கம்பிகளால் தாக்கிய கொடூரம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பட்டப்பகலில் 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பலர் பார்க்க இரும்புக் கம்பியால் அடித்துள்ளனர். இதை வேடிக்கைப் பார்த்தவர்கள் யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக சத்தமின்றி நடப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.
அப்பெண்ணை தாக்கிய 4 பேரில் ஒருவர் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த 4 பேரில் ஒருவரான மனோஜ் என்பவருக்கு தான் கடனாக கொடுத்த ரூ.20,000 ரொக்கத்தை அப்பெண் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் மேலும் 3 பேருடன் சேர்ந்து அப்பெண்ணை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாபில் புகார் கொடுக்க வந்த பெண் மற்றும் அவரது தந்தையை போலீசார் அடித்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்க  ilakkiyainfo.com

முலாயம் சிங்: மூன்றாவது அணி மட்டுமே நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வரும்

லக்னோவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் 17.04.2013 நடைபெற்ற
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முலாயம் சிங், மூன்றாவது அணி குறித்து பேசியதாவது:-மூன்றாவது அணி டெல்லியில் ஆட்சியில் அமரும்பொழுது மட்டுமே நாட்டு மக்களுக்கு நலன் கிட்டும். காங்கிரசோ அல்லது பாரதீய ஜனதாவோ ஆட்சி அமைக்காது. அதற்கு பதில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும். இனி அந்த இரு கட்சிகளும் பெரும்பான்மையை பெறப்போவதில்லை.டெல்லி, குற்றச்செயல்கள் அரங்கேறும் மையமாக விளங்குகிறது. ஆனால், அவர்கள் உத்திரப்பிரதேசத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

அழகாக இருந்த ஒரே காரணத்திற்காக டிபோட் செய்யப்பட்ட முன்று ஆண்கள்

 According to Emirates 24/7, Saudi Arabia recently deported three United Arab Emirates men over concerns their dashing good looks may prove irresistible to Saudi women.
The Emirati men had been attending the Jenadriyah Heritage and Cultural Festival in Riyadh, the Saudi capital, reports the Telegraph, when an officer spotted the dapper delegates and gave them the boot.
A statement in Arabic-language newspaper Elaph, translated by The Telegraph, added, "A festival official said the three Emiratis were taken out on the grounds they are too handsome and that the Commission [for the Promotion of Virtue and Prevention of Vices] members feared female visitors could fall for them."
"Urgent measures" were reportedly taken to escort the men to Abu Dhabi, according to the International Business Times 
  ரியாத்தில் நடந்த கலாச்சார திருவிழாவின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர்.சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் வருடாந்திர கலாச்சார திருவிழா நடந்தது. அப்போது பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு பிரதிநிதிகள் நிறுத்தப்பட்டனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் ஐக்கிய அரபு அமீரக கூடாரத்திற்கு வந்து செய்த செயல் சவூதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அழகாக இருப்பது ஒரு குற்றமா? ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் வந்து அங்கு நின்று கொண்டிருந்த அமீரக பிரதிநிதிகளில் 3 பேரை அங்கிருந்து வெளியேற்றினர். அவர்கள் 3 பேரும் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் பெண்கள் அவர்கள் அழகில் மயங்கக்கூடும் என்று அஞ்சி இவ்வாறு செய்தார்களாம்.
3 பேரை அபுதாபிக்கு அனுப்ப ஏற்பாடு அமீரக பிரதிநிதிகள் 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களைப் பார்த்து பெண்கள் மயங்கக்கூடும் என்று கமிஷன் உறுப்பினர்கள் அஞ்சினார்கள். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று விழா ஏற்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த 3 பேரையும் அபுதாபிக்கு அனுப்பி வைக்க விழா நிர்வாகம் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

புதன், 17 ஏப்ரல், 2013

நீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை!

self-immolation-2மிழ்நாட்டில ஜனநாயகமே இல்லை. சாதாரண மக்களுக்கு எந்த நாதியும் இல்லை. இந்த லோக்கல் கட்சிகளை எல்லாம் ஒழிச்சாத்தான் நமக்கு விமோச்சனம். காங்கிரஸ் ஊழலின் உருவம். தேசியக் கட்சியான, தேச பக்த கட்சியான பாரதீய ஜனதா கட்சியை, குஜராத்தில் முன்னுதாரண ஆட்சி நடத்திக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியில அமர்த்தினாத்தான் நாடு உருப்படும்.” இது நரேந்திர மோடி ரசிகர்களின் அங்கலாய்ப்பு.
குஜராத்தில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.
35 ஆண்டுகளாக ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்த இடத்தை பிடுங்குவதற்காக மேட்டுக்குடி வர்க்கத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அராஜகங்களை பின் வரும் கட்டுரை விவரிக்கிறது.
காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பா.ஜ.க. ஆண்டாலும் சரி, மாநிலத்தில் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி  ஏழை, எளிய மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க வழியில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
35 ஆண்டு காலமாக வாழ்ந்த இருப்பிடம் அநியாயமாக பிடுங்கப்பட்ட அநீதியை எதிர்த்து ஒரு குடும்பமே கூட்டாக தற்கொலை செய்து கொண்டுள்ளது. மனதை நொறுக்கும் இந்த தற்கொலை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட்டில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது.

அஜித்! மவனே பிறந்தநாள் போஸ்டர் அடிச்சே ? அப்புறம் பாரு ?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரை விரும்பும் ரசிகர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் ரசிகர்களாக இல்லை. அஜித்தின் இளகிய குணத்திற்கும் ரசிகர்களாக இருக்கின்றனர். தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலக ஹீரோக்களுக்கும் மிகப்பெரும் வலிமையாக இருப்பது ரசிகர் மன்றம். அத்தகைய ரசிகர் மன்றத்தையே கலைத்த அஜித், தனது பிறந்தநாள் வருவதால் பேனர் அடிக்கும் பணிகளில் தீவிரமாக இருக்கும் ரசிகர்களுக்கு பேனர் அடித்து பணத்தை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கும், ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் கொடுத்து உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார ஒரு பேட்டியில் பேசிய அஜித் “பேனர்கள் அடித்து பணத்தை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். மேலும் உணவு, படிப்பு இல்லாமல் பல குழந்தைகள் வாடுகிறார்கள். தயவுசெய்து அவர்களுக்கு பணத்தை செலவு செய்து உதவுமாறு என் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 
அஜித்தின் கோரிக்கைகளை அவரது ரசிகர்கள் நிறைவேற்றுகிறார்களா! என்பது மே 1-ஆம் தேதி தெரியும்

Chennai :குடிபோதையில் மகளை எரித்துக்கொன்ற தந்தை

மீஞ்சூர் அருகே உள்ள கேசவபுரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 48). . இவருடைய மனைவி மேரி (39). இவர் சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் நித்யா (19).
ஜெய்சங்கருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் மது குடித்து வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யும்படி கூறியதால் அடிக்கடி வீடு மாறி குடியிருந்து வந்தனர்.
பொன்னேரி பாலாஜி நகரில் இருந்து கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் இங்கு வந்து குடியேறினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நித்யாவை பெண் பார்க்க மாப்பிளை வீட்டினர் வந்தனர். அவர்கள் சென்றபிறகு மது குடித்து விட்டு வந்து ஜெய்சங்கர் மகளிடம் தகராறு செய்தார்.
அப்போது திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து நித்யா உடலில் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் நித்யா வேதனையில் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, என் மீது தந்தை ஜெய்சங்கர் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நித்யாவின் தாய் மேரி மீஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரிலும், நித்யாவின் வாக்குமூலம் அடிப்படையிலும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

நடிகை அம்பிகா, ராதா குடுபத்தினருக்கு இது 17வது ஹோட்டல் ஆகும்.


செங்கோட்டை: புளியரையில் நடிகை அம்பிகா அவரது தங்கை ராதாவுக்கு சொந்தமான ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது.தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை-கொல்லம் மெயின் ரோடு புளியரையில் திரைப்பட நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கு சொந்தமான அடுக்குமாடி ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சித்தலங்கரை தவசித்தர் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.அதன் பிறகு அம்பிகாவும் குத்துவிளக்கேற்றினார். நடிகை அம்பிகா, ராதா குடுபத்தினருக்கு இது 17வது ஹோட்டல் ஆகும். ஏராளமான திரைப்படங்கள் நெல்லை மாவட்டத்தில் படமாக்கப்படுகிறது. குற்றாலத்தில் தங்கும் திரைப்பட துறையினரை தங்கள் ஹோட்டலில் தங்க வைத்திட இது கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்

கரு.முத்து
பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் தற்போது அரசுடைமையாக்கப்பட்டிருக்கிறது.முதுபெரும் அறிஞர்களையும், தமிழ்ப் புலவர்களையும் உருவாக்கிய இந்த பல்கலைகழகத்தில்தான் திராவிட இயக்கத்தலைவர்களில் பெரும்பாலோனோர் உருவானார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெரும் தீயாய் கிளம்பியபோது இங்கு படித்த மாணவர்கள் காட்டிய கடுமையான இந்தி எதிர்ப்பு ராஜேந்திரன் என்ற மாணவரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கியது. வரலாறு, இசை, பொறியியல், சமூகம், பொருளாதாரம்,வேளாண்மை,மருத்துவம்,கலை,விளையாட்டு என்று எல்லா துறைகளும் இயங்குகின்றன. தற்போதைய நிலையில் 12,600 ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.முப்பத்தைந்தாயிரம் மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். இங்கு இயங்கும் தொலைதூர கல்வி நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.இவ்வளவு பெருமைக்குரிய எம்.ஏ.எம் ராமசாமிக்கு சொந்தமான இந்த பல்கலைகழகம் தற்போது அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. அது ஏன்? அரசுடைமையாக்கப்பட்டதன் காரணம் என்ன?

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஈரானில் நிலநடுக்கம் 7.8 ரிக்டர் சென்னையிலும் உணரப்பட்டது

ஈரான் பாகிஸ்தான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ஈரானை தாக்கிய நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் கருவில் 7.8ஆக பதிவாகி உள்ளது. ஈரான் நிலநடுக்கத்தின் அதிர்வு மத்திய கிழக்கு நாடுகளிலும் உணரப்பட்டது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு வடக்கு, மேற்கு இந்தியாவில் உணரப்பட்டது.
 டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 16.04.2013 செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி, வீதிக்கு வந்தனர். இதேபோல் டெல்லி புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர், ஜெய்பூர் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர்.
பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
முன்னதாக காலையில் அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரு குழந்தை இறந்தது. 2 குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

அஞ்சலி ஒரு சிறையிலிருந்து மீண்டதும் மற்றொரு ???

நடிகை அஞ்சலிக்கு தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் வெங்கடேஷ்
‘ஆதரவு’ உள்ளது என்ற விஷயம், ரகசியம் அல்ல. இருப்பினும் அஞ்சலி விவகாரத்தில் வெங்கடேஷ் வெளிப்படையாக என்ட்ரி கொடுக்கவில்லை. காரணம், வெங்கடேஷின் அப்பா பிரபல தயாரிப்பாளர் ராமா நாயுடு என்கிறார்கள்.
அஞ்சலிக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் அப்பாவுக்கு தெரிந்தால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று பயந்தாராம் வெங்கடேஷ்.
ஆனால், அதற்காக சும்மாவும் இருந்துவிடவில்லை வெங்கடேஷ். ஙைதராபாத்தில் இருந்தபடியே, சென்னையில் இருந்த அஞ்சலியின் சித்தி பாரதி தேவிக்கு தனது சினிமா உலக நண்பர்கள் மூலம் பிரஷர் கொடுத்தாராம்.
வழமையான தெலுங்குப் பட வில்லன் ஸ்டைலில் மீசையை முறுக்கி கண்களை உருட்டி, ‘மைல்ட் மிரட்டல்’ ஒன்றை விடுத்துவிட்டு சென்றாராம், சென்னையில் வசிக்கும் பிரபல விநியோகஸ்தர் ‘காரு’ ஒருவர். ‘காரு’ பற்றி யாருக்கு தெரியுமோ இல்லையோ, சித்தி பாரதி தேவிக்கு நன்றாகவே தெரியும்.
உடனே அவர் அடித்தார் ஒரு யு-டர்ன். “இனிமேல் எனக்கும் அஞ்சலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவளது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்ற சரண்டர் அறிக்கை வந்தது.
அதென்ன திடீரென இப்படி மாறுகிறது என ஆச்சரியப்பட்ட டைரக்டர் களஞ்சியம் விசாரித்தபோதுதான், ‘காரு’ மேட்டர் அவருக்கு தெரிய வந்தது. “தமிழகத்தில் வந்து, தெலுங்குக்காரர் மிரட்டுவதா” என்று அவர் எகிறியதால்தான், ‘தமிழ் உணர்வு இயக்கம்’ காட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.
அஞ்சலிக்கு ஆதரவாக தெலுங்கு சினிமா உலகம் வருவது போல் தனக்கு ஆதரவாக தமிழ் சினிமா உலகம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார் களஞ்சியம். இதற்காக சில நகர்வுகளையும் செய்தார். ஆனால், ‘தமிழ் உணர்வாளர்கள்’ என அறியப்பட்ட சினிமா புள்ளிகள் இருவர் இடம்-வலமாக தலையாட்டி விட்டனராம்!
“இதற்குள், இயக்கத்தை கொண்டுவந்து அசிங்கப்படுத்த வேண்டாம்” என்று இந்த இருவரும் இலவச அட்வைஸ் வேறு கொடுத்ததில், கடுப்பில் உள்ளார் களஞ்சியம்!
ஆமா.. அவர்களுக்கு தெரியாத சமாச்சாரமா இதெல்லாம்?

ஜெயலலிதா CNN IBN மீதான மானம் போன வழக்கு youtube



Political satirist on television, Cyrus Broacha, is in trouble over his remarks on Tamil Nadu Chief Minister Jayalalithaa regarding her letter to the Prime Minister asking Manmohan Singh not to allow Sri Lankan players in the Indian Premier League (IPL). The State government has slapped a criminal defamation case against him and his team members, scriptwriter Asis Shakya and show director Kunal Vijaykar. City Public Prosecutor M.L. Jegan filed the defamation case on behalf of Ms. Jayalalithaa. After taking the complaint on file, the court may soon issue summons to them to appear before it and face trial. The case pertains to the edition of The Week That Wasn’t hosted by Mr. Broacha and telecast on CNN-IBN channel on April 2.

நடிகை ரக்‌ஷிதா ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்

நடிகை ரக்சிதா பி.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்தார். அவர் சாம்ராஜ்நகர்
தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. அவர் வீடுவீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் கூட செய்தாரஇந்த நிலையில் திடீரென்று அந்த கட்சி தலைவர்கள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதனால் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்வதில் இருந்து விலகி இருந்தார். அவர் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் மவுனம் காத்து வந்தார்.;அவர் நேற்று தனது மவுனத்தை கலைத்து தேவேகவுடா முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் எங்கள் கட்சியில் இணைந்து உள்ளார் என்று தேவே கவுடா கூறினார
இந்த செய்திக்கு ஏன்  முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேள்வி கேட்டு விடாதீர்கள்? இவரை சேர்த்துக்கொண்ட தேவகௌடா ஒரு முன்னாள் இந்திய பிரதமர் என்பது ஞாபகம் இருக்கட்டும் , ரக்ஷிதாவே மேலுங்கோ

டெல்லியில் மீண்டும் ஒரு பேருந்துக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்

டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை
செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி சுல்தான்புரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.இந்த பஸ்சுக்குள் சிறுவர், சிறுமியர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பஸ் டிரைவர் ராகேஷ், மற்ற குழந்தைகளை அடித்து விரட்டி விட்டு, 11 வயது சிறுமியை மட்டும் இருக்க சொன்னார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். மருத்துவ பரிசோதனை செய்ததில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பஸ் டிரைவர் ராகேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

UP: ஏழைகளின் நலன் கருதி 25 ரூபாய்க்கு மலிவு விலை மது!

உத்தரபிரதேசத்தில் கடந்த 1–ந்தேதி மதுபானங்களின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து குவார்ட்டர் மது, ரூ.50 ஆக உயர்ந்தது. ஆனால், அண்டை மாநிலமான அரியானாவில் 30–க்கு குவார்ட்டர் கிடைக்கிறது.இதனால் உத்தரபிரதேச ‘குடிமகன்’கள், அரியானாவுக்கு படையெடுத்து சென்று மது வாங்க தொடங்கினர். சிலர் அரியானாவில் இருந்து மதுவை கடத்தி வந்து உ.பி.யில் விற்க தொடங்கினர். சிலர் கலப்படம் செய்தும் விற்க தொடங்கினர். அது, குடிமகன்களின் உடல்நலனுக்கு தீங்கானது என்று கருதிய உத்தரபிரதேச மாநில அரசு, ஏழைகள் நலனுக்காக நேற்று மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. வார்ட்டர் மது பாட்டில், ரூ.25 என்ற குறைந்த விலைக்கு இந்த மது கிடைக்கிறது. அரியானா மாநில எல்லை யோரத்தில், குறிப்பிட்ட மதுக்கடைகளில் மட்டும் இந்த மது கிடைக்கும். இதன்மூலம், மது கடத்தல் குறையும் என்று ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வீதிவிபத்து தாயையும் மகளையும் இழந்தவரை யாருமே திரும்பியும் பார்க்காத கொடுமை ! மலிவாகிப் போன மனித உயிர்.

ஜெய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில், இருவர் இறந்தனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை காப்பாற்ற, ஒருவரும் முன்வராத, மனிதநேயமற்ற, நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம், ஆக்ராவையும், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரையும் இணைக்கும், தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில், 2 கிலோ மீட்டர் நீளமுள்ள, "காட் கி குனி' என்ற சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. இதில், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.இந்நிலையில், நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒருவர், தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் இந்தச் சுரங்க சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், பைக்கில் சென்றவரின் மனைவியும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.படுகாயத்தடன் தப்பிய, அந்த நபர், தன் மகனை கையில் பிடித்தபடி, உயிருக்கு போராடியவாறு, அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி, உதவி செய்யும்படி கெஞ்சினார். ஆனாலும், அவர் மன்றாடுவதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், வாகனங்கள், அசுர வேகத்தில் பறந்து சென்றன. இதனால், அந்த நபர், தலையில் கைவைத்தபடி, சாலையிலேயே அமர்ந்து பதறியது பரிதாபமாக இருந்தது.பின் எப்படியோ போலீசாருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் வந்து இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

திங்கள், 15 ஏப்ரல், 2013

லண்டனில் இந்தியப்பெண் 2 மகள்களுடன் மர்ம மரணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டனில் இந்திய வம்சாவளி பெண், தனது 2 மகள்களுடன் மர்ம மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இங்கிலாந்தின் மேற்கு லண்டன் பகுதியில் உள்ளது ருயிஸ்லிப். இந்நகரின் மிட்கிராப் என்ற பகுதியில் வசித்தவர் ஹீனா சோலங்கி (34). இவருடைய கணவர் கல்பேஷ் (42). இவர்களுடைய மகள்கள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4). கல்பேஷின் பெற்றோரும் விடுமுறைக்காக வந்திருந்தனர். அவர்களும் வீட்டில் தங்கியிருந்தனர். ருயிஸ்லிப் பகுதியில் உள்ள பள்ளியில், ஆய்வக டெக்னீஷியனாக பணியாற்றினார் ஹீனா.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஹீனா வீட்டில் இருந்து கேஸ் வாசனை வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார், தீயணைப்புத் துறையினர், மருத்துவ குழுவினர் விரைந்து சென்றனர். வீட்டுக்குள் சென்ற போது ரசாயன வாசனை வீசியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு சென்று கதவு, ஜன்னல்களை மூடிக் கொள்ளும்படி போலீசார் உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.வீட்டில் சோதனை செய்த போது, ஹீனா சோலங்கி மற்றும் இவருடைய மகள்கள் ஜேஸ்மின், பிரிஷ் ஆகியோர் இறந்து கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எப்படி இறந்தனர் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரிய வரும். அதுவரை காரணம் கூற இயலாது என்று போலீசார் கூறினர்.

அகிலாவுக்கு ஆதரவாக சன் டி.வி-யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சன் டி.வி. நிர்வாகமே!

  • சன் நியூஸில் வேலை பார்க்கும் பெண்களிடம்
    பாலியல் தொந்தரவு செய்த தலைமை அதிகாரி ராஜாவையும்,
    மாமா வேலை பார்த்த வெற்றிவேந்தனையும் பணிநீக்கம் செய்!
  • பாலியல் புகார் கொடுத்த அகிலாவை பழிவாங்குவதற்காக
    செய்யப்பட்ட பணி இடைநீக்க உத்தரவைத் திரும்பப் பெறு!

ஆர்ப்பாட்டம்

நாள்: ஏப்ரல் 17,
நேரம் : மாலை 4.30 மணி
இடம் :
சன் டிவி அலுவலகம் முன்பு,
ராஜா அண்ணாமலைபுரம்
மனித உரிமை ஆர்வலர்களே, பொது மக்களே!
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக துணிச்சலாகப்
போராடும் அகிலாவுக்கு தோள் கொடுப்போம்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
சென்னை கிளை
, 9842812062

அப்பாவி அஞ்சலிகளும் அயோக்கிய களஞ்சியங்களும் !

ஞ்சலிக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. சினிமா கால்ஷீட் உள்ளிட்ட அவர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் அவரது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டேன். வழக்குகளை வாபஸ் வாங்குவது குறித்து நான், எனது அக்கா, அஞ்சலி எல்லோரும் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்’’ - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி. ‘’நான் யார் மீதும் குறைகூற விரும்பவில்லை. இனி, என்னைப் பற்றிய விஷயங்களை நானே கவனித்துக் கொள்வேன். இனி, என்னை மையப்படுத்தி எது நடந்தாலும் அது என்னைச் சேர்ந்தது” - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலி.
கடந்த வாரத்தில் இரண்டு தரப்பிலும் இருந்த கோபமும் கொந்தளிப்பும் இப் போது இல்லை. ’குடும்பப் பிரச்னையை வீதிக்கு கொண்டு வராதீர்கள்” என்று இரண்டு தரப்பையுமே யாரோ பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த மாற்றம். கத்தாரில் இருக்கும் அஞ்சலியின் அம்மா பார்வதி தேவி, மிக விரைவில் சென்னைக்கு வருகிறார். இதையடுத்து, அஞ்சலிக்கும் அவரது சித்திக்குமான உரசல் முடிவுக்கு வருவதற்கான முகாந்திரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ’’இனி, மீடியாக்கள் மத்தியில் தோன்றினாலும், பெரிதாக யார் மீதும் பழிபோட்டு பேசமாட்டார் அஞ்சலி. ‘அனைத்தையும் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டேன்” என்று மட்டும் அவர் சொல்லக் கூடும்” என்கிறார்கள் விவரமறிந்த சினிமா புள்ளிகள்.
இனி அஞ்சலியின் மறுபக்கம்...
தன்னை ஸ்டாராக்கிய சித்திக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருந்த அஞ்சலி, பொங்கி வெடித்தது யாருடைய தைரியத்தில்?

லஞ்சம்: புள்ளத்தாச்சியை ரோட்டில் வீசிய அரசு மருத்துவமனை! பிரசவம் பார்த்த பொது மக்கள்!

ஆதரவு தரவேண்டிய அரசு மருத்துவமனை இலஞ்சமெனும் பேய் பிடித்து புறக்கணிக்க, வீதியில் விழுந்த ஏழை  பெண்ணுக்கு அன்போடு பிரசவம் பார்த்து பரவசமூட்டியுள்ளனர் அன்னாடம் காச்சிகளான பாமர சனங்கள்.
சாமுவேல் என்பவரை திருமணம் செய்து ஆந்திராவில் இருந்து பஞ்சம் பிழைக்க தமிழகம் வந்தவர் 27 வயது லட்சுமி. பெயரில் மட்டுமே லட்சுமி இருக்க வாழ்க்கையோ ஏழ்மையில் வாடியது...வறுமை எனும் கோர பசிக்கு வயிற்றை தருவதை தவிர வேறொன்றும் இல்லாத எளியவர்கள்.கிடைக்கும் கூலி வேலை செய்து வரும் இவர்களின் இருப்பிடம் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட் பார்ம் தான். அருகேயே உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் அன்னதானத்தில்தான் மதிய உணவு. ஐந்து வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகனும் இருக்க தற்போது வயிற்றில் ஒரு குழந்தையும் இருக்க திடீரென வயிற்று வலியில் துடிக்கிறார். அதன் பின் நடந்ததை விவரிக்கிறார் அக்கம் பக்கத்தில் இருந்த பண்ணாரி என்ற பெண்மணி,

'நானும் இங்க பிளாட்பார்ம்வாசி தான். காலையில நாலு மணி இருக்கும் கண்ணு, புள்ளை வலியில துடிக்க என்னடா ஆச்சுன்னு பார்த்தா பிரசவ வலி. என்ன பன்றதுனே தெரியலை சரி பக்கத்துல எட்டுன தூரத்துல தான் அரசாங்க ஆஸ்பத்திரி இருக்குன்னு அங்க கூட்டி போனேன் பாவம் புள்ளையால நடக்க முடியல ஆனா என்ன பண்றது எங்ககிட்ட காசில்லை அதனால கால் மைல் தூரத்தையே ரெண்டு மணி நேரமா நடந்தோம். அங்க போனா அதவிட கொடுமை... பொண்ண உள்ள சேத்திகிட்ட நர்சம்மா கொஞ்ச நேரத்துல 1000 ரூபா பணம் கொடுங்கன்னு சொன்னாங்க வெள்ளை தொப்பி போட்டு ரெண்டு நர்சம்மாக்கள்... அவ்ளோ காசுக்கு எங்கம்மா போறதுன்னேன் காசில்லைனா பிரசவம் பார்க்க மாட்டோம்னாங்க என்ன பன்றதுனே தெரியாம லட்சுமிய கூட்டிகிட்டு திரும்ப இங்க பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகதுக்கிட்டயே வந்தோம்... அந்த மாரியாயி தான் ஏதாவது வழி காட்டுவான்னு இருந்தப்போ தான் மறுபடியும் புள்ளைக்கு வலி வந்தது ரொம்ப முடியலைன்னு கத்துனா... என்ன செய்ரதுனெ தெரியல கடசியா கடவுள் மேல பாரத்த போட்டுக்கிட்டு நானே பிரசவம் பார்த்தேன் விஷயம் தெரிஞ்சு பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பொம்பளைங்களும் ஒத்தாசை பண்ண கொஞ்ச நேரத்துல அழகா செவ செவன்னு ஆம்பளை புள்ளை பொறந்தான்' என்றார் உருகி...அப்புறம் பக்கத்துலையே பொது கக்கூஸ் இருக்கு அங்க போயி ஒரு ப்ளேடு வாங்கிட்டு வந்து தொப்புள் கொடி அறுத்தோம்... ஆஸ்பத்திரிகாரங்க மனசாட்சியே இல்லாம இருக்காங்களே' என்றார் வேதனையோடு... >பின் பத்திரிக்கையாளர்கள் விஷயமறிந்து அங்கு சென்று பின் 108க்கு கால் செய்ய 200 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு வெகு விரைவாக  அரை மணி நேரத்தில் வந்தனர்... அதற்குள் லட்சுமிக்கு ரத்த போக்கு கடுமையானது... பின் அவரை பத்திரிக்கையாளர்கள் முயற்சியில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட மேல் சிகிச்சை ஆரம்பித்தனர் மருத்துவர்கள்...'லட்சுமி என்ற இந்த பொண்ணு இங்க வரவேயில்லை' என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகம்... ஆனால் இப்பெண் காலையில் இங்கு வந்ததை அங்கே பிரசவ வார்டில் இருந்த மற்ற பெண்கள் உறுதி செய்தனர்...

தமிழ் திரையுலகினர்மீது ஈழத்தமிழர்கள் கடும் குற்றச்சாட்டு

mahaveli.com இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஒரு நயா பைசாவைக் கூட கொடுத்து உதவாத சினிமாக்காரர்கள் இன்று திடீர் ஞானோதயம் பெற்று போஸ் கொடுக்கிறார்கள் . இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழகத்தின் .நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள், திரை உலகுடன் தொடர்புடைய அனைவரும் கடந்த வாரத்தில் இலங்கைத் தமிழர்களையும், தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றக்கூடிய வகையில் தத்ரூபமாக சோகம் தோய்ந்த முகத்துடன் உண்ணாவிரப் போராட்டத்தில் பசிப்பட்டினியுடன் ஈடுபடுபவர்களைப் போன்று சொந்த வாழ்க்கையிலும் நடித்தார்கள்
தமிழ்நாட்டின் இந்த கூத்தாடிகளை நேரில்வந்து பார்ப்பதற்கு விருப்பம் கொண்ட பொதுமக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வந்தார்களே ஒழிய இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையென்று இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார்.அன்று மு.ப. 11.00 மணிக்கு நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூரியா, தனுஷ், பிரசாந்த், சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, அருண்விஜய், கே. பாக்கியராஜ், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், டெல்லி கணேஸ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார், மன்சூரலிகான், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், கலைப்புலி தானு, வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.