சனி, 20 பிப்ரவரி, 2010

சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்!

1993 ஆம் ஆண்டு. திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆர்.முருகேசன் என்பவர் உயிரிழக்கிறார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வரட்டாறைத் தாண்டி செல்ல முற்படுகிறார்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் முருகேசனின் இறந்த உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை சுமந்து சென்று கொண்டிருந்தவர்களே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருந்தது.

தங்கள் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு வேறு பாதை இல்லாததால் சாலை வசதி அமைத்துத் தாருங்கள் என்ற அருந்ததியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றபப்படவில்லை. இதர சாதியினருக்கு அந்தக் கிராமத்தில் மயானம் உள்ளது. தனி மயானம் உள்ள தலித்துகளோ அதற்குப் போகும் பாதை இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். பாலம் அமைத்துத் தருகிறோம் என்று நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி, உறுதிமொழியாக மட்டுமே இருக்கிறது.

பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 700 குடும்பங்கள் உள்ளன. அதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 250 குடும்பங்கள். இந்தப்பிரச்சனை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த எம்.வேலுசாமி. மேலும் கூறிய அவர், இதற்கு முன்பாக பட்டாநிலமொன்றில் அருகிலிருந்த சாலையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலத்திற்குச் சொந்தமானவரோ, சாலையின் நடுவில் சாமிசிலைஒன்றை வைத்துள்ளார். பிணங்கள் அந்த வழியாகப் போக முடியாது என்றும் கூறிவிட்டார். அப்போதிருந்து ஆற்றில் இறங்கிதான் செல்கிறோம் என்றார்.

2003 ஆம் ஆண்டில் வருவாய் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பல முறை பிணங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக மயானத்திற்கே செல்லாமல் பல பிணங்கள் ஆற்றின் கரையிலேயே எரிக்கப்பட்டன.
மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. வழக்கம் போலவே மாவட்ட நிர்வாகம், இந்தப் பிரச்சனை பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி - http://www.dalitnet.net/

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

மும்பைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் : கண்ணீர் புகார்

பிப்ரவரி 18,2010,00:00 IST

சென்னை : ""என்னை போன்று ஏராளமான குழந்தைகளை மும்பைக்கு கடத்தி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் திருநங்கை ஒருவர் கண்ணீர்மல்க புகார்
சென்னை பொழிச்சலூரை சேர்ந்தவர் ஜோதிகா (எ) ராஜசேகரன் (25);அரவாணி. இவர், புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: குருசாமி - ஆவுடைதங்கம் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தேன். எனக்கு புனிதா என்ற அக்காவும், சரவணக்குமரன் என்ற அண்ணனும் உள்ளனர். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக, நான்கு முதல் எட்டாவது வகுப்பு வரை திருவேற்காட்டில் உள்ள மலேசியன் சோசியல் சர்வீஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆண்கள் விடுதியில் தங்கி, வேலப்பன் சாவடியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். 14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, எனது உடலில் பருவமாற்றத்தை உணர்ந்தேன். நடை, உடை பாவனைகள் பெண் தன்மையுடன் மாற ஆரம்பித்த
இந்த சமயத்தில் எங்கள் பகுதிக்கு பிச்சையெடுக்க வரும் திருநங்கைகள் பிரியா, பூஜா, ஆயிஷா, வேல்விழி, மோனல், ரேஷ்மா மற்றும் நிரோஷா ஆகியோர் என்னை அணுகினர். இவர்கள் நுங்கம்பாக்கத்தில் வசிக்கின்றனர். இவர்கள், நான் பெண் போன்று இருப்பதாகவும், அழகாக இருப்பதாகவும் ஆசையோடு பேசினர். கடந்த 1999ம் ஆண்டு அவர்கள் வசிக்கும் நுங்கம்பாக்கத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு எனக்கு பெண் உடை அணிவித்து, அழகுப்பார்த்தனர். மூன்று வாரங்கள் அங்கேயே தங்க வைத்து, பிச்சை எடுக்க அவர்களுடன் அழைத்து சென்றனர். பின், புனேவிற்கு அழைத்து சென்ற அவர்கள், அங்கு வைத்து என்னை வடமாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளுக்கு விற்றனர். அவர்கள் என்னை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினர். என்னுடைய சம்மதம் இல்லாமல் 2001ம் ஆண்டு கடப்பாவுக்கு அழைத்து சென்று, நாகண்ணா என்ற மருத்துவரிடம் ஆண் உறுப்பை அகற்றினர்.
புனேவில் 40 நாட்கள் சடங்கு முடிந்ததும், பாலியல் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தனர். ஒத்துழைக்க மறுத்தால் அடி, உதை மற்றும் சூடு போட்டனர். கடந்த 2005ம் ஆண்டு, ஒரு வாடிக்கையாளர் மூலமாக தப்பித்து சென்னை வந்து, தோழியர் வசிக்கும் நடராஜபுரம் மாமண்டூரில் தஞ்சமடைந்தேன். இதையறிந்த அக்கும்பல் நான் பிச்சையெடுக்கும்போது மீண்டும் புனேவுக்கு கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தினர். கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தப்பித்து தமிழகம் வந்தேன். என் தந்தை வீட்டிற்கு சென்றேன். அவர்களும் என்னை ஏற்க மறுத்துவிட்டனர். இதையறிந்த திருநங்கை கும்பல் என்னை மீண்டும் கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறது. இதனால், ஆறு மாதங்களாக பதுங்கி, ஓவ்வொரு இடமாக அலைந்து வருகிறேன்.


இரண்டு வாரங்களுக்கு முன் தி.நகருக்கு சென்றுவிட்டு, பரங்கிமலைக்கு ரயிலில் திரும்பினேன். அப்போது, என்னை வழிமறித்த திருநங்கை கும்பல், மொபைல்போன் மற்றும் மூன்று சவரன் செயினை அடித்து பிடுங்கி, ஆட்டோவில் கடத்த முயன்றது. ஆகவே, அக்கும்பலால் மீண்டும் கடத்தப்படும் அபாயமும், என் உயிருக்கும் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையும் உள்ளது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், என்னை போன்று ஏராளமான குழந்தைகளை மும்பைக்கு கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதையும் தடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்கும்படி கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.


அவர்களுக்கு அவர்களே எதிரி: ஒரு காலத்தில் திருநங்கைகள் என்றால் சமுதாயம் எள்ளி நகையாடியது. குடும்பத்தினர் கூட அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பாலியலுக்கு மட்டுமே அவர்கள் பயன்படுவார்கள் என்று கருதப்பட்டது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது. திருநங்கைகளின் உரிமைகள் பெற்றுத் தருவதில் தன்னார்வ அமைப்புகள் பல ஈடுபட்டுள்ளன. இவை, திருநங்கைகள் பிச்சை எடுப்பதை தடுக்க சுயதொழில்கள் துவக்கி, உதவுகின்றன. பெற்றோரால் நிராகரிக்கப்படும் திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதோடு, பாலியல் கொடுமையிலிருந்து தடுக்க பல்வேறு முயற்சிகளிலும் இறங்கியுள்ளன. இந்த வாய்ப்பை பல திருநங்கைகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சிலர் தங்களின் பழக்க, வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து, பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் கொண்டுள்ளனர். திருநங்கைகளே, தவிக்கும் திருநங்கைகளுக்கு ஆதரவு தருவதுபோல் அவர்களை ஏமாற்றி, கடத்தி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Dinamalar - No :1 Tamil News Paper. Designed and Hosted by Web Division,Dinamalar.
Contact us

வியாழன், 18 பிப்ரவரி, 2010

எந்தவொரு சமூகத்தையும் அழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் விரும்பியிருந்தால் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை யுத்த வலயத்திலிருந்து நாங்கள் ஏன் காப்பாற்றியிருக்க வேண்டுமென்று கேள்வி எழுப்பியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னால் பாரிய சவாலொன்று இருப்பதாகவும் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழ்ச் சகோதர, சகோதரிகள்,புதல்வர்கள்,புதல்விகளுக்கு கடந்த காலத்தில் அவர்கள் இருந்ததிலும் பார்க்க சிறப்பாக இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கான சவாலாக அது காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்திய பத்திரிகையாளரும் ஜிபைல்ஸின் பிரதம ஆசிரியருமான இந்தர்ஜித் பத்வாருக்கு ஜனாதிபதி அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.இப்பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துகள் இங்கு தரப்பட்டுள்ளது.

இலங்கையும் இந்தியாவும் உண்மையிலேயே ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக ஒன்றித்துள்ளன. எமது மக்கள், எமது கலாசாரங்கள்,எமது மொழிகள்,எமது ஆன்மீக விழுமியங்கள் என்பன புராதன இந்தியாவிலிருந்தே வந்துள்ளன.நவீன இந்தியாவானது எப்போதும் எனக்கு உந்து சக்தியாக உள்ளது.எமக்கு மட்டுமல்ல முழு உலகமே இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு அதிகமுள்ளது.இந்தியாவின் பொருளாதாரத்தை இந்தியா நிர்வகிக்கும் வழிமுறையிலிருந்து நாம் யாவரும் அனுகூலத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கெதிராக யுத்தத்தின் போது சீனா,பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவிகளை பெற்றன தொடர்பாக இந்தியா மற்றும் மேற்குலகிடமிருந்து எழுந்த அழுத்தங்கள் தொடர்பாமை கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,இந்தியாவிடமிருந்து ஒருபோதும் அழுத்தம் வரவில்லை.அதிகளவு புரிந்துணர்விற்கான நிர்ப்பந்தமே வெளிப்படுத்தப்பட்டது.அழுத்தங்கள் ஏதாவது எனக்கு ஏற்பட்டிருந்தால் அது மேற்குலகிடமிருந்துதான் வந்தது.ஆனால், பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிவதற்கும் அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுப்பதற்கும் மக்கள் என்னை தெரிவு செய்திருக்கவில்லை.இந்தியாவின் உணர்வுகளையிட்டு நான் கவனத்தில் கொண்டிருந்தேன்.இந்தியா எனது மூத்த சகோதரர்.இதனை நான் மேற்குலகிற்கு வெளிப்படையாக கூறியிருந்தேன்.நான் அவர்களை நண்பர்களென அழைக்க வேண்டுமென்றால் நான் எவரினதும் அடிவருடியாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என்பதை சகல நாடுகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.நான் ஒரு இலங்கை தேசியவாதி.நான் பொறுப்பில் இருக்கும் வரை இலங்கையை எந்தவொரு நாடும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான களமாக ஏற்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கெதிரான வெற்றியின் பின்னர் உலகில் குறிப்பாக ஐரோப்பாவில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள், துயரங்கள் தொடர்பாக கரிசனையுடன் இருக்கமாட்டீர்கள் என்ற கவலை அதிகரித்திருப்பது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட போது,பதிலளித்த ஜனாதிபதி,இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக வெளியாரின் சொற்பொழிவுகளைக் கேட்கவேண்டிய தேவை எனக்கில்லை. அவர்கள் எனது மக்கள்.எனது நாடு.அவர்களையிட்டு பெருமை கொள்கிறது.அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.எந்தவொரு இலங்கையருக்கும் அநீதி இழைக்கப்படுவதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.எனது குடும்பம் தமிழர்களுடன் திருமணம் செய்துள்ளது. எனது அமைச்சரவையில் தமிழர்கள் உள்ளனர்.தெற்கிலும் மேற்கிலும் 70வீதமான தமிழர்கள் எப்போதும் சமாதானமாக வாழ்ந்து வருகிறார்கள்.இவை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திராத பகுதிகளாகும்.உங்களிடம் கேள்வியொன்றை நான் கேட்கிறேன். புலிகள் தோற்கடிக்கப்படும் தருணத்தில் இருந்த போது யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த இந்த மேற்கு நாடுகள் புலிகளின் சகல உறுப்பினர்களுக்கும் தமது நாடுகளில் புகலிடம் கொடுக்க விரும்பியிருந்தார்களா என்று கேட்க விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.

இதன் அர்த்தம் நீங்கள் வடக்கிலுள்ள தமிழ் சிறுபான்மையினருடன் அதிகளவு அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதில் ஈடுபாடு காட்டுகின்றீர்கள் என்பதாக அமையுமா?என்று கேட்கப்பட்ட போது, நான் எப்போதும் அடிமட்டத்திலிருந்து நிர்வாகத்தை மேற்கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். தமிழ்மொழியை நான் மதிக்கின்றேன்.மக்கள் தமது தாய்மொழியில் எத்தகைய உணர்வை கொண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்.'தமிழில் ஒருவர் நிந்தனை செய்தால் கடவுள் கூட அவரை மன்னித்து விடுவார்'என்று ஒரு பழமொழியுண்டு.அரசியல் தீர்வானது என்னால் தாமதமடையவில்லை.அரசியல் தீர்வை நாடும் சகலரையும் புலிகள் பணயக் கைதிகளாக துப்பாக்கி முனையில் வைத்திருந்தார்கள்.அல்லது படுகொலை செய்தார்கள்.13ஆவது திருத்தமானது ஆரம்ப கட்ட விடயமென்று நான் வெளிப்படையாக கூறியிருந்தேன்.இது இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்று.இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகுமென்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழ்க் குழுக்கள் இனப்படுகொலைகள் தொடர்பாக குற்றம் சாட்டியுள்ளன.பொதுமக்கள் கொல்லப்பட்டமை மனித உரிமை மீறல்கள் என்பனவற்றிருக்கு எதிராக ஐ.நா.வின் தடைகளை உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வர பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் முயற்சித்தன என்பது பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்த ஜனாதிபதி கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிபவர்கள் பரிசுத்தவான்களாக செயற்படுகின்றனர்.ஏனென்றால் மேற்குலகின் ஊடக தன்மைக்கு நான் பொருத்தமானவனாக இருக்கவில்லை.அவர்களுடைய எதிர்வு கூறல்களுக்கு நான் பணிந்து செயற்படவில்லை. அவர்களுடைய பொம்மைகளாக நான் இருக்கவும் இல்லை.

இனப்படுகொலையானது சமூகமொன்று மற்றொரு சமூகத்தால் படிமுறையாக அழிக்கப்படுவதாகும்.எனது நாட்டில் எந்தவொரு சமூகமும் படிப்படியாக அழிக்கப்படவில்லை. அத்தகைய ஒரு கொடூரத்தன்மையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.நாங்கள் பொல்பொட்,இடிஅமீன் ஆட்சியை நடத்தவில்லை.எமது தாய்நாட்டிற்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள பொதுமக்கள் இலக்குகள் மீது நாங்கள் குண்டு வீச்சை நடத்தவில்லை. எனது அரசாங்கம் ஏதாவது ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமென விரும்பியிருந்தால் புலிகளின் துப்பாக்கி முனையில் யுத்த வலயத்திலிருந்த 3இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் ஏன் மீட்க வேண்டும்.

இன அழித்தொழிப்பை மேற்கொள்பவர்கள் அழிந்து கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற மாட்டார்கள்.எமது மக்கள் சமாதானத்தை விரும்பும் சாந்தமான உணர்வைக் கொண்டவர்கள்.நான் தெற்கிலிருந்து வந்தவன்.கிராமிய பின்னணியைக் கொண்டவன். நான் புத்த தர்மத்தை நம்புகிறேன். புத்த தர்மத்தின் நடுவழியை பின்பற்றுகின்றவன்.அந்த நடுவழியானது பலவந்தமாக என்னை நெருங்கிய போது நான் அந்த இடத்தைப் பெற்றுக் கொள்ளப் போராடுவது அவசியமென்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ங்களை சர்வாதிகாரியென உங்களை விமர்சிப்போர் கூறும் போது அது தொடர்பான உங்கள் பிரதிபலிப்பென்ன என்று கேட்கப்பட்ட போதுஇ விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்ட போது கடுமையான சட்டத்தை கொண்டுவருவதற்கான இலகுவான வழியை ஏற்படுத்தியிருக்க முடியும். படுகொலைகள் குண்டுவீச்சுக்களை அவர்கள் மேற்கொண்ட பின்னரும் நோர்வேயின் அனுசரணையுடனான யுத்த நிறுத்தத்தின் பின்னரும் அதனை நான் கொண்டுவந்திருக்க முடியும்.

நான் அவ்வாறு செய்யவில்லை.நான் உள்ளூராட்சி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினேன். யுத்தத்தின் மத்தியில் சர்வாதிகாரிகள் தேர்தல்களை நடத்துவார்களா?எமது பத்திரிகைகளிலேயே சர்வாதிகாரத்தனம் தொடர்பான விமர்சனங்கள் வந்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனது அரசாங்கத்தை சுட்டிக்காட்டும் இலங்கை பத்திரிகையாளர் ஒருவரின் கட்டுரை அவரின் மறைவின் பின் இலங்கைப் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.சர்வாதிகாரி ஒருவர் இதனை அனுமதித்திருப்பாரா?இந்த மாதிரியான கேள்விகளுக்கு உங்களின் பேட்டியின் போது சர்வாதிகாரியொருவர் பதிலளித்திருப்பாரா?யுத்த காலத்தில் சில கட்டுப்பாடுகள் இருந்தன.அவை சகல நாடுகளிலும் அமுல்படுத்தப்பட்டிருந்தமையாகும்.ஈராக்கில் அமெரிக்கா போக்கிலாண்ட் யுத்தத்தின் போது மார்க்கிரட் தட்சரின் காலத்தில் இவை அமுல்படுத்தப்பட்டிருந்தன என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த கால இலங்கைத் தலைவர்களிலும் பார்க்க புலிகளை கையாள்வதில் எந்தவிதத்தில் நீங்கள் வேறுபட்டிருந்தீர்கள்?எப்போதுமே நீங்கள் இராணுவத் தீர்வை நாடியிருந்தீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,முன்னர் குழப்பகரமான அணுகுமுறையே மேற்கொள்ளப்பட்டது.அது பிரபாகரனுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அனுகூலமாக இருந்தது. இருவழி அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தைக்கு கதவைத் திறந்து வைக்கும் அதேசமயம், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நான் தெரிவு செய்யப்பட்ட முதல் இரண்டு வருடங்களிலும் அந்த வழிமுறையையே நானும் பின்பற்றினேன். தேடப்பட்ட பயங்கரவாதியானாலும் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்பியிருந்தேன். அவர் இலங்கையரென நான் கூறியிருந்தேன். ஒன்றுபட்ட இலங்கை என்பதில் அவர் நம்பிக்கை கொண்டு பிரகடனப்படுத்த வேண்டுமென நான் ஒரேயொரு நிபந்தனையை விதித்திருந்தேன் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.திடீரென மாற்றமேற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்ட போது அதிகளவு பயங்கரவாதம்,குண்டு வீச்சுக்கள்,புலிகளின் ஆயுதப்பலத்தைக் கட்டியெழுப்புதல் என்பனவற்றால் எனக்கு கதவுகள் மூடப்பட்டன.மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து அவர் முழு அளவிலான போரை விரும்புவதாக நான் தீர்மானித்தேன்.நாங்கள் அந்த இலக்கை நிறைவேற்றியுள்ளோம்.இப்போது இரண்டாவது இலக்கை நிறைவேற்ற வேண்டியுள்ளது. வட கிழக்கில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.அங்கு சமாதானம்,சுபீட்சம்,ஜனநாயகம் என்பனவற்றை ஏற்படுத்துவதே இரண்டாவது இலக்கு என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்
february 13, 2010 Comments Off
—-சபேசன்—-
புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைசியாக தனது வெளிநாட்டுப் பொறுப்பாளர் கே. புத்மநாதனுடன் பேசிய வார்த்தைகளில் ஒன்று “அம்மா சத்யமா சொல்லு அமெரிக்கா வராதோ? ” என்பதுதான். இந்த வசனம் உண்மையானதா இல்லையா என்ற விவாதம், அல்லது ஊகிப்புக்கள் நடாத்துவது அவசியமற்றது. ஆனால் இந்த வசனத்தை சொல்லப்பட்டிருக்கக்கூடிய அறிவியல் தளத்திலும் அரசியல் தளத்திலும்தான் பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் இருந்தார்கள் என்பது நிஜம்.

புலிகளின் அரசியல் அறிக்கைகளில் எந்த ஒரு இடததிலாவது அமெரிக்கா அல்லது ஏகாதிபதர்தியம் போன்ற சொற்பதங்கள் பாவிக்கப்படவில்லை. மேலும் உலகெங்கும் லத்தீன் அமெரிக்கா மற்றும் பின்தங்கிய நாடுகளில் எல்லாம் வர்க்க விடுதலைகளை மட்டுமல்ல தேசிய விடுதலைகளை கூட ஒட்டு மொத்தமாக நசுக்கிய அமெரிக்காவையும் ஜரோப்பாவையும் தங்களுக்கு நியாயம் சொல்ல கூப்பிடுகிறார்கள் என்ன பரிதாபம். இதற்காக புலம் பெயர்ந்த அப்பாவி இளைஞர் யுவதிகளை தெருவெங்கும் இறக்கிய கொடுமை யாராலும் மன்னிக்க முடியாதது.

நாங்கள் வாழும் ரொறண்டோ பல சர்வதேச இனங்கள் வாழும் நகரம் அத்தோடு அந்த ஒவ்வொரு சமூகமும் தங்களின் நாடுகளில் நடக்கும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னிறுத்தி பல போராட்டங்களை ஊர்வலங்களை நடத்தியிருந்தன. அவற்றில் ஒன்றில் கூட புலிக்கொடியை காணமுடியவில்லை. தமது அழிவிற்கு மாத்திரம் சர்வதேசம் துரோகம் செய்ததாக ஓலம் போட்டார்கள்.

உலக அரசில் போராட்ட வரலாற்றில் இந்த நுற்றாண்டிற்கோ அல்லது இதற்கு முந்திய நூற்றாண்டுக்கும் பொதுவாக ஒரு பிழையான பிற்போக்கான தேசிய விடுதலைப் போராட்டம் தனது இயக்கத்திற்கும் தான் சார்ந்திருந்த மக்களுக்கும் அழிவையே தேடிக் கொடுக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் விடுதலைப் புலிகளின் முடிவுதான்.

இந்த உதாரணத்திலிருந்து கூட எமது அழிவிற்கான காரணங்களை கண்டறிய தேவையில்லை என்று அடம்பிடிக்கும் எமது சமூகம் மிகவும் பரிதாபத்திற்குரியது.

முக்கியமாக இந்த பேரழிவிற்கான காரணங்கள் தோல்விக்கான காரணங்கள் விடுதலைப் புலிகள் செய்த பிரதானமான தவறுகளை வழக்கமாக நாங்கள் அல்லது மாற்றுக்கருத்தாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பட்டியலிடுவோம.

ராஜுவ் காந்தியின் கொலை

முஸ்லிம் மக்களின் படுகொலையும் அவர்களை இடம் பெயர்த்ததும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளும்.

மற்றைய இயக்கங்களை தடை செய்ததும் கொன்றொழித்ததும்

அப்பாவி சிங்கள மக்களை கொன்றது

புத்தி ஜிவிகள் அரசியல் தலவைர்களை கொன்றது

தனித்தலமைத்தும்

இவை போல இன்னமும் தொடர்ந்து கொண்டு போகலாம் இங்கே கேள்வி என்னவென்றால் இந்த தவறுகளை விடுதலைப் புலிகள் தவிர்த்திருந்தால் அல்லது செய்யாமல் விட்டிருந்தால் தமிழ் தேசியத்திற்கு விடுதலை கிடைத்திருக்குமா? அல்லது தமிழ் ஈழம் கிடைத்திருக்குமா?

அல்லது விடுதலைப்புலிகளிலும் பார்க்க முற்போக்கான இயக்கம் ஒன்று இந்த தவறுகளை தவிர்த்திருக்க கூடிய ஒரு அமைப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தால் தமிழ் தேசியத்திற்கு விடுதலை அல்லது தமிழ் ஈழம் கிடைத்திருக்குமா?

ஒரு பகுதியினர் நினைக்கலாம் தமிழ் ஈழம் கிடைத்திருக்காவிட்டாலும் ஒரு தீர்வு கிடைத்திருக்கும் என்று.

தமிழ் ஈழம் தவிர்ந்த அனைத்து தீர்வுகளையும் குழப்பியதற்கு பெரும் பொறுப்பை விடுதலைப் புலிகள்தான் பொறுப்பெடுக்க வேண்டும்.. இதில் எந்த கேள்வியும் இல்லை.

இவைகளிற்கும் அப்பால் சில விடயம்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இந்த வாசிப்பின் நோக்கம் புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு . . .என்ற எம் ஜி ஆர் ஆ ,அல்லது சிவாஜியா என்ற பாணியிலான வாதங்களை தவிர்த்து ஒட்டுமொத்தமான சமூகஅக்கறையுடன் பார்க்கவே ஆசைப்படுகிறேன்.

இதில் முக்கியமாக நான்கு விடயங்கள்.

இந்தியா – அதன் பிராந்திய நலன்கள்

சர்வதேசத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்லரசுகளின் நலன்கள்

தொழில் நுட்ப வளர்ச்சியும் அது மனிதகுல வரலாற்றில் ஏற்படுத்திய பாதிப்புகளும்.

முக்கியமாக எங்களுடைய தேசியவாதம் பற்றிய கருத்துருவாக்கம் பற்றியது.

தேசிய வாதம் பழங்கால கிரேக்க கடவுள் சிலையை போன்றது என்று பரா குமாரசாமி அடிக்கடி சொல்லுவார். அது இரண்டு முகங்களைக் கொண்டது என்று சொல்வார்கள். சூழ்நிலை, காலகட்டம், அதை முன்னெடுப்பவர்கள் போன்ற விடயங்கள் சார்ந்து இது முற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறதா இல்லை பிற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறதா என்பதை தீர்மானக்கிறது. வரலாற்று இயங்கியல் போக்கில் பார்ப்போமாகில் உதாரணமாக எந்த விடயமும் ஒடுக்குமுறைக்கு எதிராக இருந்தால் மட்டுமே அது முற்போக்கானது ஆனால் அதுவே ஒடுக்குமறை செய்யும் அளவிற்கு வளர்ந்த பின்னர் அடுத்து வரும் ஒடுக்கு முறைக்கு எதிரான சக்தியை ஒடுக்க நினைக்கிறது. இங்கே அதே முற்போக்கு பாத்திரம் வகித்த சக்தி பின்னர் ஒரு காலகட்டத்தில் அது பிற்போக்கு பாத்திரத்தை வகிக்கிறது.

ஆனால் எங்கள் தமிழ் ஈழ தேசிய வாதம் ஒரு போதும் முற்போக்கான பாத்த்திரத்தை வகித்ததில்லை. தமிழ்க் காங்கிறஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தொடர்ந்து இதே பாரம்பரியத்தில் வழிவந்தவர்களான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் கடைசியாக ஆயுதம் ஏந்தினர்.

நான் குறிபிடுவது இன்று புலிகளின் தோல்வி இல்லை புலிகளின் தவறுகள் போன்றவற்ரை நேர்முகமாக பார்ப்பதும் விமர்சிப்பதும் என்று பார்த்தால் ஒரு மூர்க்கமான தற்திறுத்தியாகத்தான் அமையும். இன்னமும் முக்கியமானது மேற்குறிப்பிட்ட பாரம்பரியம்தான். அதாவது யாழ்மையவாதமான இந்தப் பாரம்பரியம் தமிழ்க் கொங்கிரஸில் ஆரம்பித்து புலிகளின் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததாக யாரும் சந்தோசப்பட முடியாது. தொடர்ந்தும் வணங்காமண், வட்டுக்கோட்டை, நாடுகடந்ந்த தமிஈழம் என்று கோவணம் கூடத் தேவையில்லை என்று நிர்வாணமாக தனது அசிங்கத்தை வெளிப்படுத்துகிறது எங்கள் பிற்போக்கு தமிழ் தேசியம்.

ஒடுக்குமுறைக்கு எதிரான நோக்கம்தான் எங்கள் தேசிய எழுச்சி என்றால் உண்மையாக மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது தோன்றியிருக்க வேண்டும். அப்போது தோன்றவில்லை. காரணம் எங்களுக்குள் ஒன்றான பிரச்சனையாக அது பார்க்கப்படவில்லை.

மலையக மக்களின் தொழிற்சங்க வலிமை என்பது அன்று வாக்குரிமை வடிவத்தில் இடதுசாரிகளின் பலமாக சிங்கள வலதுசாரிகளின் வீழ்ச்சியை நிர்ணயிக்கும் வகையில் அமைந்த காரணத்தாலேயே அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்து. வர்க்க அடிப்படையில் தமிழ் வலதுசாரிகளும் சிங்கள வலதுசாரிகளுக்கு ஒத்துழைத்து மலைய மக்களுக்கு வரலாற்றுத் துரோகம் செய்தார்கள்.

இதற்கும் அப்பால் வரலாற்றியல் அடிப்படையில் பார்பபோமாகில் தேசியத்தை ஓரளவுக்கு மதத்துடன் ஒப்பிடலாம். ஊதாரணமாக “மதம்” ஒருகாலகட்டத்தில் முற்போக்கான பாத்திரத்தை வகித்திருக்கிறது. அதே போல குடியாட்சி அல்லது ஜனநாயகம் முதலாளித்துவ ஜனநாயகம் என்பனவும் ஒரு காலகட்டத்தில் முற்போக்கான பாத்திரத்தை வகித்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் . . . ….. அதாவது நிலப்பிரபுத்துவத்தை உடைத்து சமுதாயத்தை முன்னோக்கி நகரச்செய்திருக்கிறது. ஆனால் அதே ஜனநாயகம் வளர்ச்சியடைந்து முதலாளித்துவத்தின் இன்றைய உச்சநிலையில் ஜனநாயகத்தை முதலாளிகளின் கையில் ஒப்படைத்து விட்டு சமுகவியலில் பிற்போக்கு பாத்திரம் வகிக்கிறது. இதே வகையில் பின்தங்கிய நாடுகளில் அதாவது அரைநிலப்பிரபுத்துவத்தின் கொடுமைகளில் இருந்து மீளாமலே இருக்கின்ற அதாவது சாதியம், பெண்ணியம் என்ற விடயங்களில் மிகவும் மோசமான கலாச்சாரத்துடன் வாழும் பின்தங்கிய நாடுகளின் தேசிய எழுச்சி என்பது மிகவும் கேள்விக்குரியது.

இன்று அடிஒட்டுமொத்தமான தொழில் நுட்டப வளர்ர்சியடைந்த உச்சநிலை முதலாளித்தவ கட்டமைப்பை அடைந்து விட்ட ஒரு நிலையில் முக்கியமாக முழு உலகத்தையும் தன் கையில் ஒரு சிறு பந்தாக கொண்டு திரிகின்ற இந்தக்காலத்தில் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு பாத்திரம் வகிக்கும் எமது தேசியம் என்பது மிகப்பெரிய கேள்விகுறிதான்.

இந்த நான்கு அம்சங்களையும் அவதானிக்காமல் அல்லது படிப்பினைகளை புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்தில் எந்நவிதமான நகர்வையும் செய்வது உண்மையில் ஒரு வரலாற்றுக் குற்றம்.

காலிஸ்த்தான்; – இந்தியா!

புல வருடங்ஙகளுக்கு முன்னர் இந்தியாவின் செய்திகளில் முக்கிய இடத்தை வகித்தது பிந்தரன்வாலே என்ற பெயர். நீளமான தாடியுடனும் உயரமான தோற்றத்துடனும் கூரிய பார்வையுடனும் இந்திய அரசாங்கத்தை ஆட்டிப்படைத்த பஞ்சாப்பின் தீவிவாதி. இறுதியாக அமிர்தசரசில் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான காலிஸ்த்தான் தீவிரவாதிகளில் ஒருவனாக இறந்து கிடந்தான்.

காங்ரஸ் ஆட்சிக்காலங்களில் பஞ்சாப்பில் காலிஸ்த்தான் தேசியவாதம் லோங்கோவால் போன்ற மிதவாதிகாளால் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவின் சனத்தொகையில் இரண்டு சதவீதமே கொண்ட சீக்கிய இனத்தில் தனித்துவமான பல குணாம்சங்களும் இந்த காலிஸ்த்தான் தேசியஎழுச்சியில் பங்கு வகித்தன. இஸ்லாமிய மதத்திலிருந்தும் இந்து மதத்திலிந்தும் பலஅ ம்சங்களை இணைத்து தேன்றிய இம்மதம் ஒப்பீட்டளவில் மற்றைய மதங்களின் வரலாறறைப் பார்த்தால் மிகவும் புதிய மதமாகும். இந்தியாவில் மொகலாயர்களின் படையெடுப்பின் தொடர்ச்சியாக தொடந்து இந்து முஸ்லிம் போர்களிலும் மதச்சணடைகளிலும் குறிப்பாக இஸ்லாமிய ஆக்கிரமிப்பு காலங்களில் மிகவும் உக்கிரமான போராட்டங்களை நடத்தியவர்கள் இந்த பஞ்சாபியர்கள். பல இந்து முஸ்லிம் அரசியல் சதுரங்கங்களில் வெறுப்படைந்து தமக்கென தனியான மதத்தை தோற்றுவித்தனர்.

சனத்தொகையில் இந்தியாவில் இரண்டு சதவீதமாக இருந்தபோதிலும் இந்திய இராணுவத்தில் மிகக் கூடிய அளவில் பங்குவகித்தனர். மற்றைய இனங்களிலும் பார்க்க அதிகமான சதவீதத்தினர் வெளிநாடுகளிற்கு சென்றனர். கடின உழைப்பாளிகள், போர்க்குணாம்சம் கொண்டவர்கள், இந்தியாவிற்கு தேவையான தானியங்களில் பெரும்பகுதி பஞ்சாப்பில்தான் விளைகின்றது.

பஞ்சாப்பின் இப்படியான சில விசேட அம்சங்கள் லேங்கோவால் போன்றவர்களால் காலிஸ்த்தான் தேசியவாதமாக பஞ்சாப் விவசாயிகளிடமும் இளைஞர்களிடமும் ஊட்டி வளர்க்கப்பட்டது. அனாலும் பஞ்சாப் மாநிலத்திற்கென உரிமைப் போராட்டத்திற்கான நியாயமான தேவைகளும் இருந்தன.

இங்கு ஒப்பிடப்பட வேண்டிய விடயம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமும் காலிஸ்த்தான் தேசிய விடுதலைப் போராட்முமே.. முக்கிமான விடயம் இரண்டு போராட்டங்களையும் இந்திய அரசு வளர்ப்பதிலும் அழிப்பதிலும் கையாண்ட விதமும் சமாந்தரமானது. ஈழத் தேசியப் பிரச்சனையை இந்தியா தன்னுடைய இன்னுமொரு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனையாகவே கையாள்கின்றது.

எங்களின் தமிழ்த் தேசியத்தின் சில குணாம்சங்கள் அதாவது தமிழன் அதிலும் யாழ்ப்பாணத்தான் படித்தவன், அறிவுகூடியவன், ஆளப்பிறந்தவன், ஆண்டபரம்பரை போன்ற பூர்சுவா மனப்பான்மை கடந்தகால மிதவாதத் தலைவர்களான அமிர்தலிங்கம் பொன்றவர்களால் எப்படி அதீத தமிழ்த் தேசியமாக உருவேற்றுவதற்கு உதவியதோ அதேபோன்று அன்று காலிஸ்தான் தேசியவாதமும் வளர்ந்திருந்தது.

இதன் மறுபக்கம் இலங்கையில் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மை இனங்களுக்கோ இருக்கின்ற எல்லைப்புற குடியேற்றங்கள், பாதுகாப்பு போன்ற நியாயமான பிச்சனைகளை மறுக்கமுடியாது.

இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கும், பஞ்சாப் சீக்கியர்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதில் மறுப்பில்லை. ஆனால் தென்னாபிரிக்காவின் கறுப்பு இனத்தவருக்கும், பாலஸ்த்தீன மக்களுக்கும் இருக்கின்ற மிக மோசமான ஒடுக்கு முறைகளுடன் ஒப்பிடமுடியாது.

அதிலும் உலகளாவிய அளவில் எத்தனையோ நிலப்பரப்புக்களில் சிறுபான்மையும் பெரும்பான்மையும் தங்களிடையே பொருமிக்கொள்ளும் முறையிலும் வேறுபாடுகள், அடக்குமுறைகள், போராட்டங்கள் என்று நடந்து கொண்டுதான் இருக்கின்றன..

சில விவாதங்களின் அடிப்படையில் பார்த்தால் உலகில நடக்கின்ற தேசிய விடுதலை போரட்டங்களை மிகவும் ஆழமாகவும் வேறுபடுத்தியும் அலசி ஆராய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்..

பாலஸ்த்தீன மக்களை பார்த்து தேசிய விடுதலைக்கு போராடவேண்டாம், வர்க்கவிடுதலை வரும்வரை பொறுத்திங்கள் என்று கூறுவதில் நியாயம் இல்லை. ஆனால் பஞ்சாப், ஈழம் போன்ற போராட்டங்களில் பிராந்திய பொலிஸ்காரனான இந்தியாவின் கையாளலைகூட அறியவில்லை என்றால் அதற்கு அடிப்படை காரணங்கள் யாவை? எங்களின் போராட்டங்களில் நியாயம் இல்லையா? அல்லது இருக்கின்ற நியாயங்களின் அளவுகளுடன் எங்களின் போராட்டம் பொருந்தவில்லையா? இங்கேதான் அதீத தேசியவாதம் அல்லது பாசிசம் தேசியவாதத்தை கையேற்கின்ற நிலமைகள் என்பன ஆராயப்பட வேண்டியவை!

மிதவாதியான லேங்கோவாலுக்கு எதிராக இந்திரா காங்கிரசால் வலுக்கட்டாயமாக வளர்த்து விடப்பட்ட பிந்தரன்வாலே இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமாகின்றான். அதே பிந்தரன்வாலேயும் சகாக்களும் இந்திரா காங்கிரஸ் அரசினால் அழிக்கப்படுகின்றார்கள்.

இலங்கை அரசை தனது ஆளுமைக்குள் வைப்பதற்கு தமிழீழ விடுதலை இயக்கங்களை குறிப்பாக புலிகளை வளர்க்கிறது இந்திய அரசு, ஆனால் ரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் தான் வளர்த்தவர்களே தன்னை மீறிப்போகின்றார்கள் என்ற நிலையில், பஞ்சாபில் செய்ததையே செய்யநினைக்கிறார்கள். அதுவும் இனவாத பிரேமதாச அரசுடன் தேனிலவு நடத்திய தந்திரோபாயத்தால் இந்தியாவை வென்ற அதே நடைமுறையை கையாண்டு ராஜபக்ஸவுடன் தேனிலவு கொண்ட இந்திரா கொங்கிரஸ் புலிகளை அழிக்கிறது.

இங்கே நாங்கள் பஞ்சாப்பையும் ஈழத்தையும் ஒரே சமாந்திர அரசியலில் பார்க்க முடியும்.

தொழில் நுட்ப வளர்சி கடந்த 300 வருடங்களில் மனிதகுலம் மிகவும் அபரிதமான வளர்ச்சியை சமுகவியல் அறிவியல் தொழில்நுட்பம் என்று எல்லாத்திசைகளிலும் பெற்றிருக்கிறது. இதை விட முக்கியமானது கடந்த 30 வருடங்களில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றம் 300 வருடங்களில் கிடைத்ததிலும் பார்க்கவும் அதிகமானவை. ஆனால் கடந்த 3 வருடங்களில் கிடைத்த வளர்ச்சி மாற்றம் என்பது உலகளாவிய அளவில் சமூகவியலை மட்டும் மறுத்து விட்டு மற்றைய எல்லா விடயங்களில் வளர்சியடைந்து விட்டது.

ஊதாரணமாக 83 ம் ஆண்டின் இலங்கை இனக்கலவரங்கள் சட்டடைல்டில் படம் பிடிக்கப்பட்டன. இது 25 வருடங்களுக்கு முந்திய கதை. கூகுல் மைப்பில் ஒவ்வொருத்தர் வீட்டு முற்றத்தில் முளைத்திருக்கும் புல்லைக்கூட தெளிவாக சாதாரண மக்கள் பார்க்கக்கூடிய வகையில் தொழில் நுட்பம் இந்தக்காலத்தில். இதிலிருந்து விளங்க வேண்டும் முள்ளிவாய்க்காலின் தெளிவான வியூகம்களை யார் யார் எப்படி பார்த்திருப்பார்கள்.

தொழில் நுட்ப வளர்ச்சியை பற்றிய ஒரு வகையான பார்வை இது. தொழில்நுட்பம் தனது அபரிதமான வளர்ச்சியில் பொருளாதார சந்தையின் மூலம் ஜரோப்பா மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தேசிய எல்லைகளை உடைத்துவிட்டது 100 வருடங்களுக்கு முன்னர். அதையும்தாண்டி இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகள் மேற்கத்தைய நாடுகளை பொருளாதார ரீதியில் மிரட்டவும் வைத்து விட்டது இன்று. இதற்கும் மேலாக மேற் குறிப்பிட்ட மேற்கத்தைய நாடுகளாகட்டும் அல்லது இந்த நாடுகளை மிரட்டும் இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகள் எல்லமே தங்கியிருப்பது இந்த நாடுகள் சாராத பெரு முதலாளிய நிறுவனங்களைத்தான். இந்த உண்மையும் பெரும் பெரும் தேசியங்களையே உடைக்கின்ற காலமும் இது.

கார்ல்மாக்சின் கணிப்பின் படி இனிவரும் காலங்கள்தான் சர்வதேசியத்திலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்களை ஒன்றிணைக்க தேடுகின்ற காலமாக அமையும். காரணம் நாடுகள் சாராத பெருமுதலாளிய நிறுவனங்கள் ஒன்றிணையும்போதுதான், நாடுகள் தேசியங்கள் சாராத உழைப்பாழிகள் ஒன்றிணையும் வாய்ப்பை தோற்றுவிக்கும்.

இதுதான் நியுட்டனின் மூன்றாம் விதி “எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் முரணுமான எதிர்த்தாக்கம் ஏற்படும்” என்பது.

இவைகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல் தேசியம் பற்றிய கேள்விகளுக்கு விடைகாணமுடியாது.

இறுதியாக . . இலங்கையில் சிறுபான்மயினரின் பிரச்சனைகளுக்கு அனைத்து சிறுபான்மை மக்கள் பிரிவுகளிற்கும் பொருந்தக்கூடிய பொதுவான அரசியல் தீர்வுதான் அமையவேண்டும். இது மலையகம், முஸ்லிம் மக்களின் பிரிவுகள், வடகிழக்கு என்ற வகையறாக்களுக்கு பொதுமையாக அமைய வேண்டும் வடகிழக்கா இல்லை வடக்கு – கிழக்கா என்பதும் கிழக்கு மக்களின் விருப்பத்தை பொறுத்தே அமைய முடியும்.

இதற்காக புலிகள் மற்றும் இலங்கை அரசு சார்ந்த பினாமிகள் தவிர்ந்த அனைத்து மாற்று தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து ஒரே கோரிககைகை முன்வைக்க வேண்டும். இது தற்போதைய அவசியம்.

முழுமையான சிறுபான்மை இனங்களின் விடுதலை அல்லது தேசிய விடுதலை அரசியல் விடுதலை என்பது முழு இலங்கயிலும உள்ள உழழைக்கும் மக்களின் பங்களிப்புடன் அனைத்து ஜனநாயக சக்திகள் முற்போக்காளர்கள், இடதுசாரிகள் எல்லோரது பங்கெடுப்புடன் நடத்தப்பட்டால் மாத்திரமே சாத்தியமாகும்.

இதனை பலர் சொல்லுவார்கள் “வடலி வளர்த்தா கள்ளு குடிப்பது” என்று. கள்ளு வேண்டுமென்றால் பனை இல்லாவிட்டால் வடலி வளர்க்கத்தான் வேண்டும். அவசரமாக தேவை என்று வாழை மரத்தை வளர்த்து கள்ளிறக்க முடியாது. இப்படி நினைத்தால் முள்ளிவாய்க்கால்தான் படிப்பினையாக அமையும்.

‘பன்முகவெளியில்’ சபேசன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை

கனடாவில் நடைபெற்ற ‘பன்முகவெளி’ நிகழ்வின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிடப்படும்
Categories: முகப்பு Comments are closed.

powerd by WordPress.
© copyright 2009 thuuu.net