வெப்துனியா: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை
பெற்று சிறையில் உள்ள சசிகலா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அனுப்பிய தூதை நிராகரித்து விட்டார் என செய்திகள் வெளி வந்துள்ளது. பாஜகவின் அழுத்தம் காரணமாகவும், ஆட்சியை
தக்க வைத்துக் கொள்வதற்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்
ஓபிஎஸ் இணைந்த கூட்டணி அணி தினகரனை ஒதுக்கி வைத்துள்ளது. ஆனால், தினகரனோ
எடப்பாடி அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.
அவரின் பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பி.க்கள் உள்ளனர். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்கும் போதும், மக்கள் முன்பு பேசும் போதும் தொடர்ந்து எடப்பாடி அரசுக்கு எதிராக பேசுகிறார்.
இதனால், எடப்பாடி அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி தனக்கு சாதகமாக அமையும் என கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.
















































