சனி, 16 ஏப்ரல், 2022

இந்தி நிறவெறி சினிமா உலகை ஏறி மிதித்து எகிறி அடிக்கும் தென்னிந்திய சினிமா ..

May be an image of 2 people and outdoors

Kathir RS  :  ஹிந்தி சினிமா உலகம்...இனி என்ன செய்யப் போகிறது?
80 90 களில் ஆதிக்கம் செலுத்திய ஹீரோக்களும் ஹீரோயின்களும் மெல்ல பழஞ்சரக்காகி காணாமல் போய்..இன்று புதியவர்களில் ஒரு சிலரே தேறுவார்கள் என்ற நிலையில்..
சுனாமியாய் பேரெழுச்சியாய் 1000 கோடி 2000 கோடி வசூலைக் குவிக்கும் படங்களை தென்னிந்தியா தயாரித்து உலகின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் நிலையில்...
இந்தி சினிமா உலகம் இனி என்ன செய்யப் போகிறது?
இந்தியாவின் பெரியண்ணனாக தன்னை கருதிக் கொண்டு இங்கிருந்து சென்ற அத்தனை டெக்னீசியன்களையும் நடிகர்களையும்...துணை நடிகர்களையும்.. ஓ..தட் டார்க் கை னா என அலச்சியமாக ஏறிட்ட இந்தி சினிமா உலகம் இனி என்ன செய்யப் போகிறது?
இந்தி நஹி ஆத்தீஹே?
சர் நேம் நஹிஹே?
என்று கிண்டல் செய்தும்...
என்ன ராஸ்கலா....

இலங்கையில் ஏப்ரல் 18 முதல் பங்குச்சந்தையை தற்காலிகமாக மூட உத்தரவு!

 நக்கீரன் செய்திப்பிரிவு :    இலங்கையில் வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்குப் பங்குச்சந்தைகளை மூட, பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நிலவிவரும் மோசமான பொருளாதார சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அரசைக் கண்டித்துப் போராட்டம் நடைபெறும் இடங்களின் முன்பாக காவல்துறை வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இதில் முக்கியமாக தலைநகர் கொழும்பில் அதிபர் மாளிகை அருகே கலிமுகத் திடலில் மக்கள் நடத்தி வரும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு, கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் அல்லாத மக்கள் ஒன்றிணைத்து நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடம் பெயரும் இந்தி பேசும் மக்கள் .. எதற்காக இந்தி இணைப்பு மொழி?

 மகாராஷ்டிராவில் இந்தியை விருப்ப மொழியாக எடுத்தவர்கள் 52.1 சதவீதம பேர்,
ஒடிஸாவில் 18.8 சதவீதம் பேர்,
கர்நாடகாவில் 12.3 சதவீதம் பேர்
கேரளாவில் 9.1 சதவீதம் பேர்,
ஆந்திராவில் 12.6 சதவீதம் பேர்,
தமிழ்நாட்டில் 2.1 சதவீதம் பேர் .

 Vishnupriya R -   Oneindia Tamil :   டெல்லி: இந்தி பேசும் மாநிலத்தினர் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலையில் இந்தி மொழியை ஏன் இணைப்பு மொழியாக கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து ஒரு புள்ளிவிவரமும் விளக்குகிறது.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
தென்னிந்தியாவில் இந்தி திணிப்பு என்பது மீண்டும் துளிர்விட தொடங்கிவிட்டது. ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி மொழி என அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையில் இதற்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவிலேயே இந்தியை தாய் மொழியாக கொண்ட மக்கள் குறைவாக உள்ள நிலையில் எதற்காக இந்தியை இணைப்பு மொழி என்ற கேள்வி எழுகிறது.

திமுக அணியை நோக்கி தேமுதிக

 மின்னம்பலம் : கட்சி ஆரம்பித்ததிலிருந்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் இயக்கமான தேமுதிக, சமீப நாட்களாக திமுகவின் மீதான திமுக அரசின் மீதான விமர்சனங்களை ஒரு பக்கம் செய்தாலும் பாராட்டுக்களையும் வரவேற்புகளையும் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறது.
இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நேற்று ஏப்ரல் 15ஆம் தேதி தேமுதிக விடுத்த கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி வருவதாக திமுக அரசுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்.

நடிகை பலாத்கார வழக்கு.. 11,161 வீடியோக்கள் மீட்பு.. திகைத்துப் போன அதிகாரிகள்.. சிக்கலில் நடிகர்!

 Mari S  -  ://tamil.filmibeat.com/ : திருவனந்தபுரம்: கேரள நடிகை பாலியல் வழக்கில் திடுக்கிடும் பல திருப்பங்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் தீலிப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் இணைந்து திட்டமிட்டு நடிகையை பழிவாங்க நடத்திய பாலியல் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
2017ம் ஆண்டு நடந்த அந்த கொடூர சம்பவத்திற்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில்,
நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் லட்சக் கணக்கான போட்டோக்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
 நடிகையை பழிவாங்க நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியின் தோழியான பிரபல தென்னிந்திய நடிகையை கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தி நடத்தப்பட்ட பாலியல் பலாத்கார விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

உக்கிரேனின் ஏவுகணை தாக்குதலில் ரஷியா போர்க்கப்பல் மூழ்கியது

 மாலைமலர் : ரஷ்ய போர்க்கப்பல் மீது வெற்றிகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

ப. சிதம்பரம் எச்சரிக்கை : இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கும் வரலாம்.

  Shyamsundar -  Oneindia Tamil :  சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பி ப. சிதம்பரம் கலந்து கொண்டார். மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் குறித்து ஆராயும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படலாம். மத்திய அரசு தொடர்ந்து தவறான பொருளாதார கொள்கைகளை கொண்டு இருந்தால் இந்தியாவும் பொருளாதார நெருக்கடி சந்திக்கும் அபாயம் உள்ளது.

இளையராஜா : அந்த காலத்து மோடிதான் அம்பேத்கர் இந்த காலத்து அம்பேத்கர் தான் மோடி!

May be an image of 2 people and text that says '神ன அம்பேத்கருக்கு நிகர் என மோடியை புகழ்ந்துள்ள இளையராஜா 'குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டம் மற்றும் முத்தலா முறைக்கு எதிரான சட்டம் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே பெருமைகொள்வார். இருவரும் இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள். செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இளையராஜா, "மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் க்கையும் என்ற புத்தகத்திலிருந்து 09-02-2022 www.aransei.com'
Raja Rajpriya : புயலுக்கு எதிராக சங்கிகளுக்காக களம்மிறங்கியுள்ள ஞானி.  
இளையராஜா இசைஞானியாக இருக்கலாம், அவர் அங்கீகாரத்துக்காகவே சங்கியாக மாறியவர். இந்திய அரசாங்கத்தின் அதாவது இந்தியாவை மறைமுகமாக இயக்கும் அவாக்களின் அங்கீகாரம் வேண்டும் என விரும்பி சங்கி அவதாரம் எடுத்தவர், பின்பு ஆன்மீகவாதியாகிப்போனார். உலக அழகிகள் நிகழ்வுக்காக இசை அமைத்த இதே இளையராஜாதான், நாத்திகவாதி குறித்த படத்துக்கு இசையமைக்கமாட்டேன் எனச்சொல்லி தந்தைபெரியார் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு இசையமைக்க மறுத்தார்.
ஒரு கலைஞன் தான் செய்யும் தொழிலில் சாதி, மதம் பார்க்கமாட்டான். திரைப்படத்துறை என்பது கூட்டு முயற்சியே. இளையராஜா, பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்ததற்கு காரணம், பெரியார் வெறுப்பாளர்களான, அந்த பெயரை கேட்டாலே உடல் முழுக்க எரியும் பார்ப்பனர்களுக்கு, பார்ப்பீனியத்துக்கு பிடிக்காது என்பதற்காகவே இசையமைக்க மறுத்தார்.

அமெரிக்காவில் மனித உரிமை மீறல் பற்றி பேசுவோம்: ஜெய்சங்கர் பதிலடி

 தினமலர் : வாஷிங்டன்: இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்காவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அது பற்றி கருத்து தெரிவிப்போம். நேற்று கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் லாயிட் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பருத்தி இறக்குமதிக்கு சுங்க வரி முழுமையாக ரத்து!

 மின்னம்பலம் :  : தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 சதவிகித அடிப்படை சுங்க வரியும், 5 சதவிகித வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பருத்தி இறக்குமதிக்கு சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் மசோதா தாமதம்: ஆளுனர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்

மின்னம்பலம் : பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் பதவி காலத்தை குறைக்கும் சட்டமசோதா உள்ளிட்ட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இன்று ஏப்ரல் 14 வரை ஒப்புதல் தரவில்லை.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர்.

கர்நாடகா அமைச்சர், ஈஸ்வரப்பா ராஜினாமா : கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கில் சிக்கிய அமைச்சர்

 தினமலர் : கர்நாடக மாநில, கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா,
அரசு கான்ட்ராக்ட் பணிகளுக்கு 4-0 சதவீத கமிஷன் கேட்டதாக, பிரதமர் மோடியிடம் புகார் செய்த கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல், 35, லாட்ஜ் ஒன்றில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
'என் மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம்' என உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிய 'வாட்ஸ் ஆப்' தகவலில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

வியாழன், 14 ஏப்ரல், 2022

அம்பேத்கர் பிறந்தநாள்: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!

 மின்னம்பலம் : அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கர் படத்துக்கு இன்று (ஏப்ரல் 14) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்துக்குச் சென்றார்.
அப்போது வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவச் சிலையை விசிக எம்பி திருமாவளவன் முதல்வரிடம் வழங்கினார்.

இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு

 மாலைமலர் : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை தீர்க்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை. இதையடுத்து இந்தியாவிடம் கடன் உதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. அதன்படி இலங்கைக்கு 40 டன் டீசல் கப்பலில் அனுப்பப்பட்டது. மேலும் அரிசிகளையும் இந்தியா அனுப்பி வைத்தது.
நேற்று முன்தினம் இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா வழங்கியது. சிங்கள புத்தாண்டையொட்டி கப்பலில் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

புதன், 13 ஏப்ரல், 2022

பாலிடெக்னிக் மாணவர்கள் அண்ணா பல்கலையில் சேரலாம்: பொன்முடி

 மின்னம்பலம் : நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாலிடெக்னிக் முடித்தவர்கள் இரண்டாம் ஆண்டில் சேரலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர், மரகதம் குமரவேல், "விவசாயிகள் அதிகம் வசிக்கக்கூடிய மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி மாணவர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேர முடியவில்லை. எனவே இவர்கள் அரசு கல்லூரியில் தொழில்நுட்ப படிப்புகளில் சேர வேண்டுமானால் 60 கிலோமீட்டர் தொலைவு பயணித்து செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலை உருவாகிறது.

கொரோனா நோயாளிகளே இல்லாத சென்னை அரசு மருத்துவமனைகள்..தமிழ்நாடு சாதனை

கொரோனா நோயாளிகளே இல்லாத சென்னை அரசு மருத்துவமனைகள்.. மு.க.ஸ்டாலினின் மக்களுக்கான ஆட்சிக்கு இதுவே சான்று!
கலைஞர் செய்திகளை - ஜனனி  : இதுவரை, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1.4 லட்சம் புறநோயாளிகளுக்கும், 54 ஆயிரம் உள்நோயாளிகளுக்கும் இந்த பிரத்யேக மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மைனா பேசும் வீடியோ.. குழம்பிப்போன நெட்டிசன்கள்..!

tamil.behindwoods.com :  மைனா ஒன்று மனிதர்களை போலவே பேசும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படும் மைனா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இந்த இனம் அதிகமாக காணப்படுகிறது.
காட்டு உயிரியாக கருதப்படும் இந்த பறவை இனத்தை சிலர் தங்களது செல்லப் பிராணியாகவும் வளர்த்து வருகின்றனர்.
அப்படி வளர்க்கப்பட்ட ஒரு மைனா பேசும் வீடியோ ஒன்று தான் இப்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
பேசும் மைனா
தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் பெண்மணி ஒருவரின் அருகில் நிற்கும் மைனா சகஜமாக அங்கும் இங்கும் தவ்வி குதிக்கிறது.

இலங்கை பகுத்தறிவு இயக்கம் 1959 வரலாற்று பதிவு

ராதா மனோகர் :  7 - 5 - 1959 -  எஸ் டி சிவநாயகம் - சுதந்திரன்:
கலப்பு திருமணம்  செய்வோருக்கு நிதி உதவி
பகுத்தறிவு இயக்கம் மேற்கொண்டுள்ள முடிவு
சாதி ஒழிப்புக்கு கலப்பு திருமணம் எவ்வளவு உபயோகமானது என்பதை பொதுமக்களுக்கு எடுத்து விளக்குவது என்றும் கலப்புத்திருமணம் செய்ய முன்வரும் ஆண் பெண் இருபாலாருக்கும் ஊக்கம் அளிப்பதோடு வேண்டிய உதவி புரிவதென்றும் அகில இலங்கை பகுத்தறிவு இயக்கம் தீர்மானித்துள்ளது.
மேற்படி இயக்கம் வெளியிட்டுள்ள நிர்வாக அறிக்கையில் பிரஸ்தாப தீர்மானம் இடம் பெற்றிருக்கிறது
அறிவுப்பணி புரிவதை இலக்காக கொண்டு மட்டக்களப்பில் அரும்பிய பகுத்தறிவு இயக்கம் 1956 இல் பல ஊர்களிலும் வேரூன்றி தழைத்த வரலாறும்,
அடுத்த வருடத்தில் எல்லாவற்றுகுமாக தலைமை கழகம் ஒன்று உருப்பெற்ற விபரமும்.

அன்று சிலரோடு இருந்த இயக்கம் இன்று மொத்தம் 2190 உறுப்பினர்களை கொண்டு பெரும் சக்தியாக திகழும் தகவலும் நிர்வாக அறிக்கையில் தரப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

மலையக கவிஞர் எஸ்தர் : வெயிலோ மழையோ குளிரோ பாராது ...இதோ இன்று

May be an image of 7 people, people sitting and people standing
May be an image of 1 person and indoor

Esther Nathaniel :   இப்புகைப்படத்தை பார்த்தபோது அழுகை வந்துவிட்டது சிங்கள தமிழ் அரசியல்வாதிகளால் வெறும் காகிதத்தாலே ஆன வாக்குக்கும் பணத்துக்கும் இவ் அழகிய திருமொழி தேசத்தை எத்தனையோ காலம்அங்கே ஆடுபுலி ஆட்டத்தில் பாகடையாக்கினார்கள் பிரித்தாண்டார்கள் .
சிங்களவன் கெட்டவன் தமிழன் கொலைக்காரன் கொட்டீயா(புலி) முஸ்லிம்அய்யோ அவன் தொப்பிப்பிரட்டீ கடும் தீவிரவாதி குண்டு வைப்பவன் இதைத்தானடா உள்ளத்திலௌ கசப்பின் வேர்களை நாட்டினீர்கள்
இலங்கையின் முப்பது வருடகால கடூர யுத்தம் மகிந்த ராஜபக்சவினால் முடிவுக்கு வந்ததும் அவரை சிங்கள மக்கள் தெய்வமாக்கினார்கள்.
 தெருதெருவெங்கும் கட் வுட் பால்ச்சோறு தேநீர் தந்து தேசம் கொண்டாடித் தீர்த்தது .
எதுவரைக்கும் தன் வீட்டில் உள்ள வயதுப்போன தாய்க்கும் பாலகனுக்கும் பால்ச்சோறு அரிசி வாங்க சதொச வாசலில் கால்கடுக்க வரிசையில் நிற்கும் நிலை வரை.
கொழும்பு கொழும்பென்று கூலிக்காக வாழச் சென்ற சனம் அடுப்பெரிக்க முடியாது ஒரு சிகேஸ் வாங்க மாதக்கணக்காக காத்திருக்கும் வரை தேசம் சொல்லொண்ணா பஞ்சத்தில் நாடு விழுந்தது.

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி.. ஈரோட்டில் பயங்கரம் சி சி தி வி காட்சிகள்..!

College student who fell from a moving bus in Erode
College student who fell from a moving bus in Erode

tamil.asianetnews.com - vinoth kumar  : ஈரோடு நாடார்மேடு எழில் விதியை சேர்ந்தவர் ஹர்சினி. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். தனியார் பொறியியல் கல்லுரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்லூரியை நோக்கி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
ஈரோட்டில் தனியார் கல்லூரி பேருந்தின் கதவு சரியாக மூடப்படாத நிலையில் பேருந்து வேகமாக வளைவு ஒன்றில் திரும்பும்போது கதவு திறந்துகொண்டு படிக்கட்டு அருகே நின்றிருந்த மாணவி சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு- 5 பேர் உயிரிழப்பு

 மாலைமலர் : புரூக்ளின்  . அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆடைகளில் ரத்தம் படிந்த நிலையில் கீழே விழுந்து கிடக்கும் பயணிகள் குறித்த புகைப்படங்களும் அவர்களுக்கு மற்றவர்கள் உதவுவதை காட்டும் புகைப்படங்களும் சமூக வளைதலங்களில் பகிரப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் 17 வயது சிறுமியை ஒரு வருடமாக சீரழித்த 6 பேர் கைது!

கேரளாவில் ஒரு வருடமாக 17 வயது சிறுமியை சீரழித்த கயவர்கள்: வேலை தருவதாகக்கூறி வன்கொடுமை செய்த 6 பேர் கைது!

கலைஞர் செய்திகள் : ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு கேரள போலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை கேரளாவின் தொடுபுழா போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
அண்மையில் தீவிர வயிற்று வலி காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் 17 வயதுடைய சிறுமி.
அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

அரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறு மகிந்த ராஜபக்ச வேண்டுகோள்

 நக்கீரன் செய்திப்பிரிவு    :  இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, பெட்ரோல். டீசல், சமையல் எரிவாயு, விலைவாசி, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,
பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.
விடிய விடிய நடைபெற்று வரும் போராட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன.
தலைநகர் கொழும்புவில் அதிபர் செயலகம் முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயாகவும் எம்ஜியாரும்

நமது குடும்பம்  :  வருடம் 1965 - தீபாவளி.
மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் இலங்கை வந்திருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது.
கொழும்பு நகரில் இன, மத பேதமில்லாது மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுக் கொண்ட மக்கள் திலகம், தனது பிறப்பிடமான கண்டி செல்கிறார். தான் பிறந்த மண்ணை விழுந்து வணங்கி, கண்கள் கலங்க முத்தமிடுகிறார். கைக்குழந்தையாக தாய், அண்ணன் இவர்களோடு இந்தியா சென்றவர் மறுபடியும் இலங்கை வந்தது இப்போதுதான் என்பது சிறப்பு.
மறுநாள் மலையகத்தின் நுவரெலியா நகரில் குதிரைப்பந்தயத் திடலில் மக்கள் திலகம் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம். இந்திய வம்சாவழித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் அழகிய மலைநகரம்.

திங்கள், 11 ஏப்ரல், 2022

பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் தேவையா?” “பெண்கள் செக்ஸ் பத்தி ஓப்பனா பேசலாமா?.. லூலு தேவ ஜம்லா!

 Lulu Deva Jamla G  : “பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் தேவையா?”
“பெண்கள் செக்ஸ் பத்தி ஓப்பனா பேசலாமா?”
“மதங்களை விட்டு பெண்கள் ஏன் வெளிய வரணும்?”
“பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படணுமா?”
“போர்னோகிராஃபி பத்தி...?”
- இப்டி நிறைய சிக்கலான கேள்விகளை எழுப்பி காரச்சாரமாக அலசும் லண்டனின் Fazil Freeman Ali Vs ஆஸ்திரேலியாவின் லூலு தேவ ஜம்லா...
முழு காணொளியை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...
பிகு:- லுலுவை கண்டமேனிக்கு கழுவிக்கழுவி ஊத்த வாய்ப்பு தேடிட்டு இருக்கிற எதிராளிகளுக்கு இது லட்டு ஜிலேபி ஜாங்கிரி treatஆ அமையும் கண்டிப்பா... ஸோ கமான் இஸ்டார்ட் மியூஜிக்

ராமநவமி வடஇந்தியா முழுவதும் வன்முறை .. பாஜக குண்டர்கள் ...

 Rishvin Ismath : 'ராம் நவமி' எனப்படுகின்ற ராமன் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் யாத்திரைகளைத் தொடர்ந்து இந்தியாவின் நான்கு மாநிலங்களில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.
பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன, பொலிசாரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், காயமடைந்த போலீசார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாத ஒருவர் கொல்லப் பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்கள், வீடுகள், வாகனங்கள் தீயிடப் பட்டுள்ளன.
அத்துடன் மாமிச உணவை சாப்பிட்ட டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் .. நீதிமன்றம் தீர்ப்பு

 நக்கீரன் செய்திப்பிரிவு :  சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், இபிஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று (11/4/2022) ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தற்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.
அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர்.

நடிகை ரோஜா அமைச்சராக பதவி ஏற்பு .. ஆந்திரா

 மாலைமலர் : அமராவதி , ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு மந்திரி பதவி உறுதி செய்யப்பட்டது. புதியதாக பதவி ஏற்க போகும் மந்திரிசபை விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்த மந்திரிகளில் அனுபவம் வாய்ந்த 10 பேரோடு புதிதாக 15 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர அமைச்சரவையில் இருந்த 11 பேரைத் தவிர மற்றவர்கள் ராஜிநாமா செய்த நிலையில், நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா உள்பட 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு

மாலைமலர் : இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமர் போட்டியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதருமான  ஷபாஸ் ஷெரீப் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன.
இந்த போட்டியில் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி(பி.டி.ஐ.) சார்பில் ஷா மஹ்மூத் குரேஷி மனுத்தாக்கல் செய்திருந்தார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு பாராளுமன்றம் கூடியது. புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதை தனது கட்சி புறக்கணிப்பதாக  ஷா மஹ்மூத் குரேஷி  அறிவித்தார்.

நவீன முறையில் உருவாக்கப்பட்ட விறகு அடுப்பு... அசத்தும் இளைஞர்!

Modernly made wood stove ... Awesome youth!
Modernly made wood stove ... Awesome youth!

நக்கீரன்-காளிதாஸ்  : இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எளிய விலையில் நவீனமான முறையில் ஒரு கிலோ விறகில் அதிகபுகை இல்லாமல் ஐந்து நபர்களுக்குள் இருக்கும் குடும்பத்திற்கு மூன்று வேளை உணவையும் சமைக்கும் வகையில் விறகு அடுப்பை உருவாக்கியிருக்கிறது மக்களை ஆச்சர்யமடையச் செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நரத்தில் சிலம்பநாதன் தெருவைச் சேர்ந்த இளைஞர் வேல்முருகன். இவர் 12- ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். இவர் கவரிங் தொழில் மற்றும் விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்.

தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி” அமித்ஷாவின் இந்திவெறிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி

Noorul Ahamed Jahaber Ali  -      Oneindia Tamil  :  சென்னை: ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் தலைமையேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியின் அவசியம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்.
அதில், "அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர த்ஷா
மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும்.

மனிதா மனிதா .. இளையராஜா வைரமுத்து யேசுதாஸ் ..

ராதா மனோகர் : மனிதா மனிதா இனி உன் விழிகள் ..
இளையராஜா வைரமுத்து யேசுதாஸ் ஆகியோருக்கு நிரந்தர புகழை சேர்க்கும் பாடல் .
இந்த பாடல் மீது கொண்ட காதலால் பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஒரு தடவை இளையராஜா அவர்கள் நவீன ஒலிப்பதிவு கருவிகள் மூலம் பதிவுசெய்தார்   கருவிகள் என்னவோ நவீனமாக இருந்தது  ஆனால் யேசுதாஸின் குரலோ கொஞ்சம் தளர்ந்து போயிருந்தது .இதன் ஒரிஜினல் பதிவில் வந்த உணர்ச்சியோ துல்லியமோ  வரவில்லை .
அது மட்டுமல்ல இதை   பலரும் பயந்து பயந்து மேடைகளில் பாடி இருக்கிறார்கள்  ஆனாலும் ஒரு திருப்தியை அவை தரவே இல்லை என்றுதான் எண்ணுகிறேன்  
அந்த அளவுக்கு இதன் மூலப்பதிவு அற்புதமாக அமைந்துள்ளது.
இதன் இசையில் சர்வசாதாரணமாக மேற்கு நாட்டு சாஸ்திரீக மேதைகளின் சங்கீத ஓசைகள் புகுந்து புகுந்து வருவதை கேட்கலாம்  

இலங்கை அருந்ததியர் சங்கமும் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் .. வரலாறு 9 - 11 - 1957

சுதந்திரன்  :  யாழ் நகரில் இலங்கை திராவிட முன்னேற்ற கழக மாநாட்டில் அகில இலங்கை அருந்ததியர் சங்கம் கலந்து கொள்கிறது
அகில இலங்கை அருந்ததியர் சங்க கமிட்டி கூட்டம் சென்ற 9 - 11 - 1957 ல் கொழும்பு கிரீன்ஸ் லேனில் உள்ள சங்க காரியாலயத்தில் திரு . மா மு. இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது
அவ்வமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 . திரு நல்லையா செனட்டராக நியமிக்க பட்டதற்கு இச்சங்கம் தனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறது
2 . தமிழ் சமூகமெங்கு புரையோடி போயிருக்கும் தீண்டாமை தொழு நோயை வேரறுக்க யாழ் நகரில் இலங்கை

திராவிட முன்னேற்ற கழகம் டிசம்பர் 28 - 29 ஆகிய நாட்களில் நடத்தும் சமூக சீர்திருத்த மாநாட்டை இச்சங்கம் வரவேற்பதோடு பொதுச்செயலாளர் ஏ சுந்தரராசனின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவொன்றையும் அனுப்புவதென தீர்மானிக்கிறது  

3 -  கொழும்பு முழுவதற்கும் வட்டார கமிட்டி உறுப்பினர்கள் தெரிவு செய்து  அருந்ததிய மக்களை சங்க அங்கத்தவர்களாக்குவதற்கும் சங்கத்தின் சார்பில் பத்திரிகை வெளியிடுவதற்கும்   திருவாளர்களான பெ கி .சண்முகம் ,  மா செ .அருள் . சே சேதுபதி , சே. சங்கர் ஆகியோரை கொண்ட கமிட்டி ஒன்றும் நிறுவப்பட்டது

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

ஒரு மொழி அழிந்தால் கூடவே செல்பவை.. திரைப்படங்கள் .. பாடல்கள் நூல்கள் .. இன்னும் இன்னும்

May be an image of text

கால்களின் சிலம்பு = சிலப்பதிகாரம்.
இடையில் மேகலை = மணிமேகலை
கைகளில் வளை = வளையாபதி
மூக்குத்தி & சுருள்முடி = குண்டலகேசி
மணிமாலை = சீவகசிந்தாமணி

ராதா மனோகர் : மொழியாபிமானம் என்பது வெறும் அலங்கார பெறுமதி மட்டுமே உள்ள ஒரு விடயம் அல்ல.
ஒரு மொழி என்பது வரலாற்று சான்றுகள் நிரம்பிய ஒரு அகழாய்வுக்கு உரிய நிலம் போன்றது
மொழி உணர்வை புறந்தள்ளியதால் இந்திய உப கண்டத்தில் எத்தனை மொழிகள் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன என்பது வெறுமனே உசுப்பேத்தும் மேடை பேச்சு விவகாரமல்ல.
அது ஒரு பொருளாதார வாழ்வியல் வீழ்ச்சியும் கூட என்பது பற்றி பலருக்கும் போதிய புரிதல் இல்லையென்றே கருதுகிறேன்
இந்திய திரையுலகம் உட்பட இதற்கான வலுவான சான்றுகள் புள்ளிவிபரங்கள் உள்ளன.

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நகரும் IT நிறுவனங்கள்- மத தீவிரவாதம் ..அதிர்ச்சியில் பாஜக!

“மத பிரச்னையால் பதற்றம்”: கூடாரத்தை காலிசெய்து தமிழ்நாட்டுக்கு நகரும் IT நிறுவனங்கள்- அதிர்ச்சியில் பாஜக!

கலைஞர் செய்திகளை : கர்நாடகாவில் வகுப்புவாதம் காரணமாக அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் சமீபகாலமாக மத ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஹிஜாப் பிரச்சினை கடுமையாக வெடித்து இன்னும் ஓயாத நிலையில் இந்து கோவில்களுக்கு அருகே இஸ்லாமியர்கள் கடை நடத்த தடை விதிக்கப்பட்டது.

கனடாவில் உத்தர பிரதேச மாணவர் சுட்டு கொலை .. டொரோன்டோ நகரில்

 நக்கீரன் : இந்திய மாணவர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் கனடா நாட்டின் டொரோண்டோவில் முதலாமாண்டு மேலாண்மை படிப்பை படித்து வந்துள்ளார்.
 கடந்த ஜனவரி மாதம் தான் இவர் கனடாவுக்கு படிக்க சென்றுள்ளார். அங்கு ஒரு உணவகத்தில் பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், சுரங்க ரயில் நிலைய பகுதியில் சென்றுகொண்டிருந்த இவரை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

இங்கிலாந்து அரசியை பின் தள்ளிய இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் பிரதமர் வாய்ப்பை இழக்கும் இவரின் கணவர்

பாலிமர் செய்தி :  இங்கிலாந்து அரசியை பின் தள்ளிய இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள்
இந்திய மனைவியின் வரி விவகாரம்: பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து அமைச்சர்
தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, அந்நாட்டு நிதி அமைச்சரின் மனைவியும், இந்தியப் பெண்ணுமான அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.
2021 சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3500 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் டொலர்) என கணக்கிடப்பட்டுள்ளது.

69 அடி நீளம் 500 டன் எடையுள்ள இரும்பு பாலத்தை வெட்டி கொண்டு சென்ற திருடர்கள்.. பிகாரில் சம்பவம் (பாஜக கூட்டணி ஆட்சி)

 மாலைமலர் : வீடு புகுந்து திருட்டு, கடைகளில் கொள்ளை, நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி என்று தான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் பாலத்தையே ஒருகும்பல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள ரோக்தாஸ் மாவட்டம் சாசரத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமியாவார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கால்வாயின் குறுக்கே 45 ஆண்டு கால பழமையான இரும்பு பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.
 69 அடி நீளம் கொண்ட இந்த பாலம் முற்றிலும் இரும்பினால் ஆனது. இதன் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.  புதிய பாலம் கட்டப்பட்டதால் இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அதனை பணமாக்க கொள்ளை கும்பல் திட்டமிட்டது. இதற்காக என்ன செய்யலாம் என அவர்கள் யோசனை செய்தனர். 

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது…! எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

தினத்தந்தி  :  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார்.
ஆனால், நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது எனவும் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

தல புராணங்கள் கட்டுக்கதைகளின் தலைநகரங்கள்

May be an image of 3 people, motorcycle and text that says 'கட்டுக்கதைகளின் பிறப்பிடம் தலபுராணங்கள் புண்ணிய தீர்த்தங்களிலெல்லாம் ஸ்நானஞ் செய்துந் தீராமல் பாவநாசத்தைச் சேர்ந்த பஞ்சக் குரோசத்து எல்லையைச் சேர்ந்ததும் சுந்தரனைப்பிடித்த இரண்டு பிரமகத்திதோஷமும் வெந்து சாம்பலாய் போயின. -முக்களாலிங்க முனிவர் அருளிய பாவநாசத் தலபுராணம் ሀበሆንባசம hoAGE கமல் வமாசன் sிதத இப் 180'

Dhinakaran Chelliah  :  தாமிரபரணி நதி மற்றும் பாவநாசத்தின் அருமை பெருமைகளை கண்டபடி கட்டுக் கதைகளாக அள்ளிவிடுகிறது முக்களாலிங்க முனிவர் அருளிய பாவநாசத் தலபுராணம். இத் தலபுராணத்தினை வசனச் சுருக்கத்தில் இயற்றியவர் சேற்றூர் சமஸ்தான வித்துவான் மு.ரா.அருணாசலக் கவிராயர் ஆவார்.  
பாவநாசத்தின் எல்லைப் பகுதியைத் தொட்டாலே பிரம்மஹத்தி முதலிய கொடிய பாவங்கள் அகலுமாம்.
தாமிரபரணி நதியில் நீராடினால் மீதமுள்ள பாவங்கள் கரையும்.பாவநாசத்திற்குப் போகிறவர்கள் கொடிய பாவங்களைச் செய்தவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது பாவநாசப் புராணம். இனி யாராவது பாவநாசத்திற்குப் போனேன்,போகிறேன் என்றால் அவர்களை ஏற இறங்கப் பார்க்கவும். ‘என்னென்ன கொடுமையான பாவம் செய்தார்களோ?’ என மனதுக்குள் எண்ணம் எழுந்தால், அதுதான் இப்பதிவின் வெற்றி.