சனி, 19 மே, 2018

மதிமுக -நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்: திருச்சி விமான நிலையத்தில் ..


tamil.thehindu.com: திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர்.< வரவேற்க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு சேரன் ஆகியோர் தலைமையில் மதிமுகவினரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் விமான நிலைய வாசலில் தங்களது கட்சி கொடிகளுடன் காத்திருந்தனர்.
வைகோ, சீமான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விமானத்திலிருந்து இறங்கி டெர்மினலுக்குள் வந்தனர். அப்போது மதிமுக பொதுச் செயலர் வைகோ முதலில் அங்கிருந்து வெளியேறி, வாசல் பகுதிக்கு வந்தார். அவருக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி மதிமுகவினர் வரவேற்றனர்.

கர்நாடக கவர்னரை சந்தித்தார் குமாரசாமி - 21-ம் தேதி பதவியேற்பு விழா

மாலைமலர் :எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க
உரிமை கோரி இன்றிரவு கவர்னரை சந்தித்த குமாரசாமி வரும் 21-ம் தேதி கர்நாடக முதல் மந்திரியாக பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக கவர்னரை சந்தித்தார் குமாரசாமி - 21-ம் தேதி பதவியேற்பு விழா பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

ஸ்டாலினிடம் கனிமொழி புகார்!


டிஜிட்டல் திண்ணை:  ஸ்டாலினிடம் கனிமொழி புகார்!. மின்னம்பலம்: திமுக செயல் தலைவரான ஸ்டாலின் இன்று புதுவை மாநில நிர்வாகிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக திமுகவின் சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, கழக இலக்கிய அணி, தொண்டர் அணி என எல்லோரையும் சந்தித்தார். இந்த அணி நிர்வாகிகள் எல்லோருமே ஸ்டாலினிடம் புலம்பித் தீர்த்துவிட்டார்களாம். தொண்டர் அணிக்கு மாநிலச் செயலாளராக இருப்பவர் மாசிலாமணி. அவர் ஸ்டாலினிடம் நேரடியாகவே சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.
‘தொண்டர் அணியில் இருக்கும் யாரும் உற்சாகமாகவே இல்லை. உங்கள் பயணத்தில் முன்பெல்லாம் தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள்தான் பாதுகாப்புக்கு வருவோம். இப்போது யார் யாரோ புதுப் புது ஆட்கள் வருகிறார்கள். நமக்கு நாமே பயணமாகட்டும், இப்போது காவிரிக்காக நீங்கள் நடந்த நடை பயணமாகட்டும், எங்களைச் சேர்க்கவே இல்லை. புது ஆட்களுக்கு கிட்டதட்ட 400 பேருக்கு நீங்க நடைபயணத்தின்போது டிரஸ் வாங்கிக் கொடுத்திருக்கீங்க. அந்த ஆளுங்க எல்லாம் இப்போ எங்கே இருக்காங்கன்னு கேட்டால் யாருக்கும் தெரியாது.

குமாரசாமி பதவியேற்பு: குவியும் தலைவர்கள்!

குமாரசாமி பதவியேற்பு: குவியும் தலைவர்கள்!
மின்னம்பலம் : கர்நாடக முதல்வராக பதவியேற்ற பாஜக தலைவர் எடியூரப்பா 56 மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்துவிட்ட நிலையில்... காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள அரசு கர்நாடகத்தில் வெகு விரைவில் அமைய இருக்கிறது.
வரும் திங்கள் கிழமை மே 21 ஆம் தேதி குமாரசாமி புதிய தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். இந்தத் தகவலை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி செய்திருக்கிறார். இதுபற்றி இன்று ட்விட்டரில் அவர் பதிவிடுகையில், “கர்நாடகத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்த்துகளைத் தெரிவிக்க குமாரசாமியைத் தொடர்புகொண்டேன். நன்றி சொன்ன அவர், வரும் திங்கள் கிழமை பெங்களுருவில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கர்நாடகத்தின் புதிய முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான குமாரசாமி வரும் திங்கள் கிழமையன்று பதவியேற்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

குமாரசாமி ..21- ஆம் தேதி பதவியேற்க ஆளுநர் அழைப்பார் என்று தெரிகிறது

tamiloneindia :பெங்களூர்: குமாரசாமியை ஆட்சி அமைக்க கர்நாடகா ஆளுவர் வஜுபாய் வாலா. அழைப்பு விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குமாரசாமி வரும் 21-ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
கர்நாடகத்தில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜகவினர் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டால் பாஜகவுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனமும், அவப்பெயரும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டசபை கூடியது.
அப்போது எடியூரப்பா தனது உருக்கமான உரையை ஆற்றினார். இந்த சபை கூடுவதற்கு முன்னரே எடியூரப்பாவை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

காங்கிரஸ் ஜனதா தொண்டர்கள் கொண்டாட்டம் congress celebrations after winning floor test

dinakaran :பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.வெளிவரும் இரகசிய குதிரை பேரங்கள்... பாஜகவின் 6 எம் எல் ஏக்கள் தங்களுக்கு தலா நூறு கோடி தரவேண்டும் என்றும் அப்படி தராவிட்டால் தாங்கள் காங்கிரசோடு சேர்ந்து விடுவதாக பாஜக தலைமை பீடத்தை மிரட்ட தொடங்கினார்கள் என்று தெரியவருகிறது .

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எடியூரப்பா.. Chief Minister resigned and withdrew his motion for a trust vote.

The two-day Chief Minister resigned right after he gave a speech on the floor of the Assembly and withdrew his motion for a trust vote.
BBC : ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் எடியூரப்பா
டியூரப்பாவின் ராஜிநாமா ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இதன்மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வராக நான் எனது மகிச்சியை தெரிவித்து கொள்கிறேன்" என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் என்று ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
"பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் அத்துமீறல்களுக்கு ஓர் எல்லை உள்ளது என்பதை நாங்கள் இப்போது விளக்கியுள்ளோம். அவர்கள் இதன்மூலம் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்," என்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி தெரிவித்தார்.
"காங்கிரஸ் மற்றும் ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்க பிரதமரே எப்படி நேரடியாக அனுமதி அளித்தார்? ஊழலுக்கு எதிராக போராடுவதாக அவர் கூறுவது எல்லாம் பொய்."
"சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட தொலைபேசி உரையாடல்களே டெல்லியின் அனுமதியுடன்தான் நடந்தது." என்றும் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

கர்நாடகாவில் பாஜகவின் கடத்தல் ஆரம்பம் ... இரண்டு எம் எல் ஏக்கள் கடத்தப்பட்டனர்

எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்: கர்நாடக அதிர்ச்சி! மின்னம்பலம்: கர்நாடகாவில் பாஜகவை ஆதரிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரை பாஜக கடத்திவைத்திருக்கிறது என்று மஜத தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
கர்நாடக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற எடியூரப்பா, தனது பெரும்பான்மையை இன்று மாலை 4 மணிக்கு நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சட்டப் பேரவையில் நடைபெற்று வருகின்றன.
பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவிடம் 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். எனவே, பாஜக மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஜனார்த்தன ரெட்டி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எம்.எல்.ஏக்கள் வேட்டை: தயாராகும் ஜனார்த்தன ரெட்டி என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கர்நாடகாவில் 2000 கோடி ரூபாய்களோடு களம் இறங்கிய பாஜக

நக்கீரன் - ஜீவாதங்கவேல் : கர்நாடகாவின் சபாநாயகர் நியமிப்பு வழக்கில் நாளை காலை அவசர விசாரணை - உச்சநீதிமன்றம் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் பக்கம் 104 எம்.எல்.ஏக்களே உள்ளன நிலையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதன் அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நாளை மாலை நான்கு மணிக்கு பெருபான்மையை பாஜக நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் திட்டத்தில் பாஜக முன்னேறிவருகிறது. முதலில் ஒரு எம்.எல்.ஏவிற்கு 100 கோடி என்ற நிலை மாறி தற்போது 150 கோடி என விலை உயர்த்தப்பட்டு பேரம்பேச முயல்வதாக கூறப்படுகிறது . இதன்படி குறைந்தபட்சம் 10 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது என்பதுதான் பாஜகவின் பலே திட்டத்தின் நோக்கமாகவும் கூறப்படுகிறது. இதற்காக பாஜக அரசியல் பிரமுகர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் கர்நாடாவில் இறங்கியுள்ளதாகவும். அவர்களின் திட்டப்படி 10 முதல் 15 எம்.எல்.ஏக்களை வாங்கினாலும் குறைந்தபட்சம் சுமார் 2000 கோடி தேவைப்படும் என்பதாலேயே பாஜகவிற்கு நெருங்கிய தொடர்புடைய தொழிலதிபர்கள் ரொக்க பணத்துடன் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது .

நம்பிக்கை வாக்கெடுப்பு அந்த 20 லிங்காயத்து எம்எல்ஏக்கள்? .. பாஜகவிற்கு ஆதரவா?

Shyamsundar - Oneindia Tamil . பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியில் உள்ள 20 லிங்காயத்து எம்எல்ஏக்கள்தான் இன்று கர்நாடக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றத்தை உண்டு பண்ண கூடியவர்கள். இவர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற வாய்ப்புள்ளது. 
இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. 
இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. 
 இன்று நடக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நிர்ணயிக்க போகும் சக்தி லிங்காயத்து எம்எல்ஏக்களிடம் மட்டுமே இருக்கிறது. கர்நாடக முழுக்க நடந்த தேர்தலில், முடிவுகளை அதிக அளவில் மாற்றியது லிங்காயத்துகள்தான். பாஜக கட்சி லிங்காயத்துகள் இருக்கும் இடத்தில்தான் அதிகம் வெற்றிபெற்றது.

வெள்ளி, 18 மே, 2018

Audio Leaks ரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி.... பாஜகவின் பேரம்...


Tamil.oneindia.com/authors/aravamudhan : பெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவியைத் தருவதாக பாஜக பேரம் பேசியுள்ள ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 
thenewsminute.com :Hours to go for the crucial trust vote in the Karnataka assembly and the Congress has released an explosive audio clip to prove their allegation of horse-trading by the BJP. The party in a press meeting in Bengaluru on Friday evening released a 2 minute 41 second audio clip, and alleged that it had the voice of mining baron and former BJP minister Janardhana Reddy can be heard speaking to Congress Raichur Rural MLA-elect Basavanagouda Daddal. The Congress has alleged that Janardhana Reddy has sanction from top BJP leadership, as he mention 'National President' in the conversaation.
The audio clip begins with a male voice asking the listener, which is MLA Basavangouda Daddal, whether he was free to speak to ‘Janardhan sir’.
Then the voice purportedly of Janardhana Reddy comes on the line and this is the transcript of their conversation.
Basavangouda (BG): Yes, tell me
Janardhana Reddy (JR): Are you free?
BG: Yes, I am free
 கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

புலிகளால் திமுக இழந்தது ஏராளம் ... புலிகளால் முழுக்க முழுக்க பயன் அடைந்தது அதிமுக

Vallialagappan Alagappan : 1965 காலத்து மாணவர்கள் எல்லாம் ஹிந்தி எதிர்ப்புக்காக போராடியதைப்போல, 1985 காலத்து மாணவர்கள் எல்லாம் ஒரு நாளாவது இலங்கை தமிழனுக்காக போராடியவர்களாகத்தான் இருப்பார்கள். இரண்டிலும் திமுகவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
45 வயதைக்கடந்த எஞ்சோட்டு திமுக அபிமானிகள் எல்லாம் தங்களின் இளமைக்காலத்தில் கண்டிப்பாக பிரபாகரன் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தான். வரலாற்றில் யார் யாரையோ, மன்னன், மாவீரன் என படித்திருந்தாலும் கூட , கண்கூடாக, சமகாலத்தில் நாங்கள் கண்ட மன்னன், மாவீரன் எல்லாம் பிரபாகரன் என்ற அந்த அண்ணனைத்தான். அப்படி கொண்டாடினோம் அவரை. ராஜீவ் இறந்தபோது திமுக பொறுப்பாளர்கள் யாரும் வீட்டில் தங்க முடியாத பாதுகாப்பற்ற நிலை தான் இருந்தது என்ற ஒன்று சொல்லும், திமுக - பிரபாகரன் இடையே இருந்த உறவை.
எம்ஜிஆருக்கு பயந்துகொண்டு, கலைஞரின் பிறந்தநாள் வசூல் 50 ஆயிரத்தை வாங்க மறுத்தபோது எங்கள் மனதில் பிரபாகரன் பற்றிய உறுத்தல் வந்தது. கலைஞரின் வேண்டுகோளை உதாசீனப்படுத்தி சபாவை கொன்றபோது கொஞ்சம் பொருமல் வந்தது. கலைஞர் ஆட்சிக்கு கெட்ட பெயர் வருவது பற்றி எல்லாம் கவலைப்படாமல் பத்மநாபா கொலை நடந்து, ஆட்சி இழந்து திமுக நின்றபோது சலிப்பு வந்தது. ராஜீவையும் 18 அப்பாவி தமிழர்களையும் நம் மண்ணிலேயே கொன்று முடித்தபோது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெறுப்பு வந்து , நம்மிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு போனார் பிரபாகரன். ராஜீவ் கொலையின் சந்தேக நிழல் திமுக மீது படர்ந்தபோதும் கூட , பிரபாகரனை வெளிப்படையாக குற்றம் சொல்லாமல் மவுன சாட்சியாக நின்றுவிட்டது திமுக.

ஜனநாயகத்தின் கழுத்தில் இறுகும் மற்றும் ஒரு சுருக்கு கயிறுதான் ரஜினி !

நவீன வாழ்க்கையானது ஏற்கெனவே அவரவர் குடும்பங்களைத் தாண்டி சிந்திக்க முடியாத சுயநலச் சிறையிலேயே சமூகத்தின் பெரும்பான்மையினரை அடைத்துவைத்திருக்கிறது. அரசியல்மயப்படுத்தலில் மிக அடிப்படையான பணி மனிதனை இப்படியான சுயநலச் சிறையிலிருந்து விடுவிப்பதும், சமூகத்தை நோக்கி அவனுடைய அக்கறைகளைத் திருப்புவதும்தான். வீட்டிலிருந்து வீதியில் இறங்கும் ஒருவனை மீண்டும் மீண்டும் ‘வீட்டைக் கவனி’ என்று திருப்புவதில் என்ன பொது நலன் இருக்கிறது? யாவும் அரசியலற்றதன்மையின் வெளிப்பாடுகள். எதேச்சாதிகாரத்துக்கான தீர்க்கமான அறைக்கூவல்கள். ஏற்கெனவே தேர்தலுக்கு மட்டுமானதாகச் சுருங்கி, மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்தின் கழுத்தில் மேலும் ஒரு விரலாகவே ரஜினியின் கை பதியும் என்று தோன்றுகிறது!
samas - tamlthehindu :ஏன் அரசியல்வாதிகளை ஒதுக்குகிறார்கள்? ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளின் வழியாகவே அரசியல் மாற்றங்கள் நடந்தேற வேண்டும் என்றாலும், வெளியே அதற்கான உத்வேகம் குடிமைச் சமூகத்திலிருந்தும் வர வேண்டும். குடிமைச் சமூகம் குரல் எழுப்பு வதற்கான துணிச்சலை அரசியல் கட்சிகளின் செயல் பாடுகள் தர வேண்டும்.

முள்ளிவாய்க்கால் யாழ் மாணவர்கள் பேரணி.. குளிர்பானங்கள் சிற்றுண்டி வழங்கிய இராணுவத்தினர்

iranuvamm மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் iranuvamm1
முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் மாணவர்கள் பேரணி!image_9bd71afa23 மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் image 9bd71afa231வீரகேசரி: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து  கொட்டும் மழையிலும்   குளிர்பானம் வழங்கியுள்ளனர்.
மின்னம்பலம்: முள்ளிவாய்க்கால்  தினமான இன்றைய (மே 18) தினத்தின் நூற்றுக்கும் மேற்ப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருசக்கர வாகனங்களிலும் ஒலிபெருக்கி வாகனங்களுடனும் முள்ளிவாய்க்காலை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவுகூரும் வகையில் இன்றைய தினத்தை துக்க நாளாகவும், தமிழினப்படுகொலை நாளாகவும் வடமாகாண சபை அறிவித்துள்ளது .

கர்நாடகா: எடியூரப்பா நாளை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் ஆணை

BBC : கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள எடியூரப்பா, நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு நம்பிக்கை வாக்கெடுப்புதான் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷன் மற்றும் அர்விந்த் பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்ததை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. மேலும், எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார்.
பெரும்பான்மையை தங்களால் நிரூபிக்க முடியும் என்றும், சில காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களின் ஆதரவும் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் முதல்வர் எடியூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.

திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின்

DMK and othe 9 parties will not participate in the Kamals all party meeting: Stalin tamiloneinida -Kalai Mathi :சென்னை: திமுக உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பங்கேற்கும் அனைத்துக்கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என அறிவித்திருந்தார்.< ஆனால் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க நல்லக்கண்ணு ஒப்புக்கொள்ளவில்லை என முத்தரசன் கூறியிருந்தார். மேலும் நல்லக்கண்ணும் இந்த கூட்டத்தில் பங்கேற்போவதில்லை என்றார்.
இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், நாளை கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

குஷ்பூ : நடிகை என்பதால் விமர்சிப்பதா' திருநாவுக்கரசருக்கு பதிலடி

தினமலர் :சென்னை, ''நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா,'' என
காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இருவரும் வசை மாரி பொழிந்து கொள்கின்றனர்.தமிழக காங்., தலைவர் விரைவில் மாறப் போகிறார் என சில நாட்களுக்கு முன் குஷ்பு கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக, ''நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீது முட்டை ,செருப்பு வீசி,விரட்டி அடித்தனர். அங்கு சும்மா இருக்காமல், வீண் வம்பு செய்த தாலேயே இதெல்லாம் நடந்தது காங்கிரசிலும் அதே நிலையை மேற்கொண்டிருக்கிறார்.
இங்கும் அவருக்கு அதே நிலை விரைவில் ஏற்படும். அவர் சினிமாவில் நடிக்கட்டும், அரசியலில் நடிக்கத் தேவையில்லை,'' என திருநாவுக்கரசர் சாடி இருந்தார்.இதையடுத்து, லண்டனில் இருந்த நடிகை குஷ்பு தொலைபேசி மூலம் அளித்த பேட்டி: நான், தமிழக காங்கிரசுக்குள் நடப்பதைத் தான் வெளிப்படையாகதெரிவித்தேன்.

தென்னகத்தைப் பழிவாங்குமா பாஜக?

ஜெ.ஜெயரஞ்சன்<: br="">   சிறப்புக் கட்டுரை: தென்னகத்தைப் பழிவாங்குமா பாஜக?மின்னம்பலம்:  <: br="">கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது பாஜகவின் டெல்லி தலைமையகத்தில் நடந்த விழாவில் உரையாற்றிய தலைமையமைச்சர், “பிரித்தாளும் அரசியலுக்குக் கிடைத்த சம்மட்டி அடிதான் பாஜகவின் கர்நாடக வெற்றி” எனக் கூறியுள்ளார். மோடி ‘பிரித்தாளும்’ அரசியல் எது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக, வடக்கு - தெற்கு என்ற பகுப்பாய்வு பிரிவினை எனக் கருதுகிறார் மோடி. இரண்டாவதாக, இந்தி மொழி. இவை இரண்டுமே ஒரு பிரச்சினையாக கர்நாடக மக்களால் கருதப்படாததால்தான் பாஜக இந்த வெற்றியைப் பெற்றதாகவும், வடக்கு - தெற்கு என்று பிரச்சினையைக் கிளப்பிய காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 40 - 45 டிகிரி தகிக்கும் வெயிலில் தன்னைத் தனக்குத் தெரிந்த மொழியில் பேசுமாறு மக்கள் பணித்ததாகவும் தங்கள் பேராதரவைத் தனக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளார் மோடி.
வடக்கு - தெற்கு என்ற விவாதம் தற்போது பேசுபொருளானதற்குக் காரணமே மோடி தலைமையிலான அரசு 15ஆவது நிதிக் குழுவுக்கு அளித்த பணி வரன்முறைதானே? அதில்தானே 1971 மக்கள்தொகைக்குப் பதிலாக 2011 மக்கள்தொகையைக் கணக்கில் கொள்ளுமாறு கூறப்பட்டது? இந்த அடிப்படை மாற்றத்தால் சந்திக்கப்போகும் இழப்புகளைக் கணக்கில்கொண்டு வெகுகாலமாகவே மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுத்துவரும் திமுக, அதன் செயல் தலைவர் வாயிலாக இந்தியாவின் 10 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் அனுப்பியது. அதுதான் மோடியின் முடிவுக்கு எதிராக எழுந்த முதல் குரல்....  

எம் எல் ஏக்களை விரட்டி பிடிக்க முழுமூச்சில் பாஜக ... ஜனார்த்தன் ரெட்டி களத்தில்

எம்.எல்.ஏக்கள் வேட்டை: தயாராகும் ஜனார்த்தன ரெட்டிமின்னம்பலம: கர்நாடக முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) 37 இடங்களிலும் வென்றுள்ளன. 15 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சியை பாஜக தொடங்கியுள்ளது. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஜனார்த்தன ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
பாஜகவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. எடியூரப்பாவின் முந்தைய ஆட்சியின்போது அமைச்சராகவும் ஜனார்த்தன ரெட்டி இருந்துள்ளார். பின்னர், பல ஆயிரம் கோடி அளவுக்குக் கனிம வளங்களைச் சுரண்டியதாக வழக்குகள் பதியப்பட்டதையடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். மூன்றாண்டுகள் சிறையிலும் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஜனார்த்தன ரெட்டியைக் கட்சியில் ஓரங்கட்டி வைத்திருந்தார்.

கர்நாடகா: எம்.எல்.ஏக்கள் கொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

கர்நாடகா: எம்.எல்.ஏக்கள் விலை போகாமல் தடுக்க கொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்தினத்தந்தி :கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்.எல்.ஏ.க்கள், பேருந்து மூலம் கொச்சி மற்றும் ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பெங்களூரு, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாரதீய ஜனதாவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜூக்கு ஒரு இடமும் கிடைத்தன. 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். தேர்தலுக்கு பிறகு காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்தன. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவுக்கு, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார்.சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் 15 நாட்கள் அவகாசம் வழங்கி ‘கெடு’ விதித்து இருக்கிறார்.

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்ட மாபா பாண்டியராஜன் மேடைக்கு ஸ்டாலினும் .. ? அமெரிக்க தமிழர் சாதிக்கூட்டமைப்பே "பெட்னா"...?

மாபா பாண்டியராஜன் கௌரவிக்கப்படும் அதே பெட்னா விழாவில், ஸ்டாலின் கலந்து கொண்டால் முழம் ஏறி சாண் சறுக்கும் அவரின் அரசியல் வாழ்வில் மற்றொரு சின்ன சறுக்கலாக இருக்கும். அதற்காக நாங்கள் ஸ்டாலினை ஒதுக்கப்போவதில்லை. ஸ்டாலினை போகாதீர்கள் என்றும் சொல்ல முடியாது. ஏழு கடல் ஏழு மலை தாண்டி நான் போய் சொன்னாலும் கேட்பாரா என்று தெரியவில்லை?. ஸ்டாலின் ஒருவேளை உங்கள் விழாவிற்கு வந்தால் அந்த புகைப்படங்களை வைத்து சமூகநீதி எதிராளிகளுடன் ஸ்டாலின் கூட்டு என்று மே 17 இயக்கத்தவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்காரர்களும் நாம் தமிழர்களும் பரப்புவார்கள். அதற்கு இன்று பெட்னாவிற்கு எதிராக சண்டை போடும் திமுக காரர்கள் / திராவிட அனுதாபிகளே முட்டுக்கொடுத்தாக வேண்டும்.
Selvakumar Ramachandran : அன்புடன் - அமெரிக்கத் தமிழர் பேரவை பெட்னா-
இயக்குநர் நாஞ்சில் பீட்டர் அவர்களுக்கு,
வணக்கம். திராவிடக்கூத்தாடினாலும் காசு, காரியத்தில் கவனமில்லாமல் இருந்தால், நான் வளர உதவிய சமூகநீதிக்கு மரியாதை ஆகாதே, அதனால் பகல் முழுவதும் உழைப்பிற்கு கொடுத்த நேரத்தினால் உங்களுக்கு பதில் கொடுக்க தாமதமாகிவிட்டது. உங்கள் கமெண்டுகளை அதிகாலையில் என் பதிவில் கண்டேன். கிளிமூக்கு அரக்கன் லிமிடட் நடத்தும் பக்கத்தில் நீங்கள் போட்டிருந்த கமெண்டுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் அறியப்பெற்றேன். என்னுடன் பேச, நீங்கள் கொடுத்திருந்த எண்ணையும் கண்டேன். நீங்கள் என்னுடன் பேச விருப்பப்படுவதற்கு நன்றி. ஆனால் எனக்கு பேச விருப்பமில்லை. அதனால் என் தொலைப்பேசி எண்ணை கொடுக்க இயலாது. காரணங்களை தொடர்ந்து படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
என்னை சார்ந்த சான்றோர் அரக்கர்களுக்கு நான் சொல்லிக்கொடுக்கும் வாழ்வியல் முன்னுரிமை இதுதான்.
1. சமூகநீதி - குறிப்பாக கல்விக்கான சமூக நீதி

ஆளுநருக்கு எதிராக ராம்ஜெத் மலானி வழக்கு! கர்நாடகத்தில் ஜனநாயகத்தை

மின்னம்பலம்: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடகத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சார்ந்த குமாரசாமி மற்றும் பாஜகவைச் சார்ந்த எடியூரப்பா இருவரும் ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆனால் நேற்று இரவு ஆளுநர் வஜுபாய் வாலா எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் "ஆளுநருக்கு எதிராக ராம்ஜெத் மலானி வழக்கு! இதனை யடுத்து  நேற்று இரவே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். பாஜக மெஜாரிட்டி இல்லாத நிலையில் எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா பதவியேற்பதற்கு தடைவிதிக்க முடியாது என்றும் இந்த மனுவை பின்னர் விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டனர்.<br /> <br /> அதனைத் தொடர்ந்து, பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 17) மனு தாக்கல் செய்துள்ளார்.

திராவிடம் ! உங்கப்பாவுக்கு கிடைக்காதது உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது ? என்னக்கிவாது யோசிச்சு பார்த்தியா? வாட்சைப் அறிவாளிகளுக்கு செருப்படி ..

Bilal aliyar.  துபாயில் என்னுடைய அறைக்கு தமிழகத்தில் இருந்து திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து BE படித்து விட்டு சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து அவர்களின் புதிய ப்ராஜக்ட்காக துபாய் அனுப்பப்பட்ட ஒரு 28 வயது இளைஞர் புதிதாக வந்திருந்தார். தம்பி அரசியல் விசயங்களின் வாட்ஸ் அப் தகவல்களை சில நேரம் என்னிடம் காட்டுவார், மேலும் சீமானின் அரசியலை பற்றி என்னிடம் சிலாகிப்பார். நானும் புதிதாக வந்த தம்பி தானே எங்கே சென்று விடுவார் என்று ஒரு புன்னகையுடன் கேட்டு கொள்வேன். ஒரு முறை திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து நம்மை பிச்சைகாரர்களாக ஆக்கி விட்டது என்று கோபம் கொப்பளிக்க தன் செல்பேசியை பார்த்து கொண்டே சொன்னார். நான் வழக்கம் போல ஒரு புன்னகையை உதிர்த்தேன். தம்பி டென்சனாகி, என்னண்ணே உங்கள மாதிரி ஆட்கள் எதையுமே உள்வாங்காமத் தான் தமிழ் நாடு இந்தளவிற்கு மோசமாகி விட்டது என்றவுடன், தம்பியுடன் நடந்த ஒரு 15 நிமிட உரையாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
நான்: சரி தம்பி, தமிழ்நாடு இந்தளவிற்கு மோசமாக போயடுச்சுன்னு சொல்ற, எந்த விதத்தில் மோசமாக போயிடுச்சு, யாருடன் ஒப்பிட்டு இந்த முடிவை நீ சொல்கிறாய்? ஏன்னா ஒப்பீடு என்று வரும் போது ஏதாவது ஒன்றுடன் தான் மற்றொன்றை அளவிட்டு முடிவு சொய்வோம். இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்துடன் ஒப்பிட்டு தமிழகத்தின் நிலையை முடிவு செய்தாய்?
தம்பி: என்னண்ணே இப்படி கேக்குறீங்க, கல்வியை எடுத்து பாருங்க
நான்: கல்வியில் நாம் மோசமாக இருக்கிறோம் என்பதற்கான தரவுகள் உன்னிடம் இருக்கிறதா?

பெண் வணிகர்களை தெருவுக்கு துரத்திய பணமதிப்பழிப்பு!

பெண் வணிகர்களைப் பாதித்த பணமதிப்பழிப்பு!மின்னம்பலம்: பெண் வணிகர்களில் 70 விழுக்காட்டினரின் பொருட்களுக்கான தேவையில் எந்த மாற்றமும் ஏற்படாத போதிலும், அவர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்திய சுய தொழில் மகளிர் அகாடமி நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு பெண் வணிகர்களின் வருவாய் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு பெண் வணிகர்கள் தங்களது சரக்குகளை விற்பனை செய்யக் கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உழைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பணமதிப்பழிப்புக்குப் பின்னர் தங்களது வருவாய் சரிந்துள்ளதாக இந்த ஆய்வில் பங்கேற்ற 68 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது 50 விழுக்காட்டினரிடம் மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை நடத்திய குழுவைச் சார்ந்த ஜெய்ஸ்ரீ பன்சால் ’டிஎன்ஏ இந்தியா’ ஊடகத்திடம் பேசுகையில், “குறைவான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளிலேயே பெரும்பாலான பெண்கள் வருவாய் ஈட்டி வந்தனர். நீண்டகாலமாகப் பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு காய்கறி வணிகர்கள் போன்றவர்கள் கடனுக்குப் பொருட்களை வழங்குகின்றனர். தேவையில் எந்த மாற்றமும் இல்லாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்” என்று கூறினார்.

கண்ணீர் விட்ட சித்தராமையா

கண்ணீர் விட்ட சித்தராமையாமின்னம்பலம் :காங்கிரஸ் கட்சி கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒட்டி நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கண்ணீர் வடித்துள்ளார்.
கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் மே 15 ஆம் தேதி வெளியான நிலையில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்து பாஜகவை அடுத்த இரண்டாவது கட்சியாக வந்தது.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 73 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வும் கலந்துகொண்டனர். மீதியுள்ளவர்கள் தலைமையிடம் போனில் பேசி உடனடியாக வரமுடியாததைத் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன.
கூட்டத்தில் பேசிய பல சீனியர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் தோல்விக்கு சித்தராமையாவே காரணம் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டிப் பேசினார்கள்.

காவிரி: வாரியமல்ல ஆணையம்... மீண்டும் வேதாளம்

காவிரி: வாரியமல்ல ஆணையம்மின்னம்பலம் :காவிரி நதிநீர் பங்கீட்டை மேற்கொள்ளும் அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க நேற்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையில், இன்று(மே 17) தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் என்றே குறிப்பிட்டுள்ளது.
காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரி வரைவுத் திட்டத்தை மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று(மே 16) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது திட்டத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைக்க வேண்டும், மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் அமைக்க வேண்டும், நதி நீர் பங்கீட்டில் வாரியம் மட்டுமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

பெண்களின் மார்புக்கு வரி வாங்கிய பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம்.. Krishnavel T S :


மீசைக்கும்,தாடிக்கும்,தோளில் போடும் துண்டுக்கும், அதை விட கொடுமை பெண்களின் மார்பு அளவுக்கு ஏற்ற வரியும் வசூலித்த வெட்கங்கெட்ட பார்ப்பன சமூகம்...
 தோழர் கிருஷ்ணவேல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். தொழில் நிமித்தம் காரணமாக சென்னையில் குடியேறிய இவர், ராஜ் டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் வர்த்தகப் பிரிவில் பணிபுரிந்த அனுபவடையுவர். தற்போது, சொந்தமாக வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திராவிட மரபையும் பெரியார், அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்கி அதன் மூலம் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அதில், பார்ப்பனர்கள் திரித்துவைத்துள்ள வரலாற்று பகுதிகளின் உண்மைகளை ஆய்வுக்குட்படுத்தி ஆதாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் முதல் படைப்பு “தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” இந்த நூலில் இந்து ராஜ்ஜியம், கேரள நம்பூதிரிகளின் அட்டூழியங்கள், திருப்பதியின் உண்மை வரலாறு, இராவணனின் நேர்மை, சிவாஜி உண்மையில் வீரனா ?, யேசு உயிர்த்தெழுந்தது அறிவியல்ரீதியாக உண்மையா ? களப்பிரர்களின் ஆட்சிகாலம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டுள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாங்க விரும்புவர்கள், www.tamilnool.club வலைதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வியாழன், 17 மே, 2018

டி கே எஸ் இளங்கோவன் :குஷ்பு மீது திமுக முட்டை வீசவில்லை.. அது பொய் செய்தி

Shyamsundar - Oneindia Tamil: குஷ்பு யார் என்று எனக்கு தெரியும்.. என்னிடம் வேண்டாம்.. திருநாவுக்கரசர் '
 சென்னை: குஷ்பு மீது திமுக கட்சியினர் முட்டை வீசியதாக திருநாவுக்கரசர் கூறினார் என்ற வந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகே எஸ் இளங்கோவன் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். 
காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில்  திருநாவுக்கரசர் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியில் தற்போது தேசிய செய்தி தொடர்பாளராக  இருக்கும் குஷ்பு குறித்தும், அவர் முன்பு திமுகவில் இருந்தது குறித்தும் பேசியுள்ளார். 
அதில் அவர் குஷ்புவை கண்டித்து அதிகம் பேசி இருந்தார். குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பேசுவதால், அவருக்கு எதிராக திருநா கோபமாக நிறைய கருத்துக்களை வீசி இருந்தார். இது காங்கிரஸ் கட்சி இடையில் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. 
இந்த நிலையில் இன்று வந்த நாளிதழ் ஒன்றில், ''குஷ்பு திமுகவில் மரியாதையாக நடத்தப்படவில்லை, அவர் திமுகவில் இருந்த போது சில பிரச்சனைகள் வந்தது, இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், அவர் மீது முட்டை வீசி, செருப்பால் அடித்து கட்சியில் இருந்து நீக்கினார்கள் என்று திருநாவுக்கரசர் பேசியதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இது காங்கிரஸ், திமுக, குஷ்பு உள்ளிட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு தமிழகம் பாதுகாப்பு தருவதாக கூறியது.. சிவக்குமார் பரபரப்பு

TN extended their support to give protection for Congress and JDS MLAs says, Sivakumar /tamil.oneindia.com - shyamsundar : சென்னை: காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு தமிழகம் பாதுகாப்பு தருவதாக கூறியுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

வடமராச்சியில் 1987ல் ராஜீவ் பிரபாகரனின் உயிர் காத்தார் ! ..பிரபாகரன் 2009ல் காக்கபட்டிருந்தாலும் .. பின் காத்தவரை என்ன செய்திருப்பார்?

Vallialagappan Alagappan : எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம்,
அதை எல்லாம் பற்றி நீ பேசகூடாது
சரி அது ஏன் மே 17?
அன்றுதான் எம் இனம் அழிந்தது, தடுப்பார் யாருமில்லை
1974 யாழ்பாண கலவரத்தில் யார் செத்தார்?
ஈழதமிழர்
1983 ஜூலை கலவரத்தில் 10,000 பேர் செத்தது என்ன?
அதுவும் தமிழர்
1986 வடமராட்சி கணக்கென்ன?
தெரியாது
அப்பொழுதெல்லாம் இந்தியா களமிறங்கி காத்தது
ம்ம் ஆமாம் , காத்தது
அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் மே 17?
ம்ம் அன்றைக்கும் செத்தார்கள் , கருணாநிதி தடுக்கவில்லை
சென்னை முதல் வடமாரச்சி வரை எத்தனைமுறை பிரபாகரனை காத்தது இந்தியா? என்ன நன்றிகடன் இருந்தது
அதெல்லாம் பழைய கதை, கடைசியில் கலைஞர் காக்கவில்லை
ஏன் 1991ல் ஒரு சீட்டில் திமுகவினை அமர வைத்தார்களே மறக்க முடியுமா?
அதெல்லாம் போராட்டத்தில் சகஜம்
ஒஹோ, உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும் அந்த யுத்தம் நின்றிருக்க வேண்டும்
ஆம் நிச்சயமாக, அந்த வீரபோராட்டம் தொடர்ந்திருக்க வேண்டும்
எத்தனை முறை பிரபாகரனை காப்பாற்றியது இந்தியா?
பலமுறை ..ம்ம் அப்படித்தான் காப்பற்றவேண்டும், அது கடமை
அது இருக்கட்டும் காப்பாற்றபட்டு என்ன முடிவுக்கு வந்தார்
வரமாட்டார், நாடு அடையாமல் ஓய்ந்திருக்கமாட்டார்
மண்ணாங்கட்டி 1980 முதல் கிட்டதட்ட 28 ஆண்டுகாலம் அடையாத நாட்டை அதன் பின் அடைந்திருப்பாரா?
அதெல்லாம் தெரியாது, யுத்தம் நின்றிருக்க வேண்டும் பிரபாகரன் உயிர்தப்பி இருக்க வேண்டும்

நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடக்கம்: பெண்கள் மட்டுமே போட்டி

THE HINDU TAMIL: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஊழலுக்கு எதிரான செயலியக்கக் கட்சி(ஆன்ட்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி) எனப் பெயரிட்டுள்ளார்.
வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த கர்ணன் மூத்த நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். இந்தக் குற்றச்சாட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்த கர்ணன், கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனைப் பெற்று, கடந்த 5 மாதங்களுக்கு முன் விடுதலையானார்.
இந்நிலையில், “ஆன்ட்டி கரப்ஷன் டைனமிக் பார்டி” (‘Anti-Corruption Dynamic Party) அதாவது ஊழலுக்கு எதிரான செயலியக்கக் கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகக் கர்ணன் தெரிவித்துள்ளார். இந்தக் கட்சியின் அங்கீகாரத்துக்காகத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துக் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையின் குடியால் தற்கொலை செய்த மாணவன் தினேஷ் 1024 மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி P

தமிழ் - 194 ஆங்கிலம் - 148 இயற்பியல் - 186 வேதியியல் - 173 உயிரியல் - 129 கணிதம் - 194 மொத்தம் - 1024
sucide
பெரிதாக்க கிளிக் செய்யவும்
கலைமோகன் -நக்கீரன் : தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ்டூ மாணவர் தினேஷ் இன்று வெளியான தேர்வு முடிவில் 1200க்கு 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 
கடந்த சில தினங்களுக்கு முன் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அதிகாலையில் ஓரு மாணவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. அந்த மாணவரின் உடலை கீழே இறக்கிய போலீசார் அவரது தோளில் கிடந்த பையை சோதனையிட்டதில் ஒரு கடிதமும், ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் துணிகளும் இருந்தன. அவர் எழுதியிருந்த கடிதத்தில், “அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே. மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்.
குடிக்காதே அப்பா இனிமேலாவது. அப்பதான் நான் சாந்தி அடைவேன். இனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் டாஸ்மாக் கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்” என உருக்கமாக எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

மே வங்கம் ..உள்ளாட்சி தேர்தல் முடிவு : மம்தா முன்னணி!

உள்ளாட்சி தேர்தல் முடிவு : மம்தா முன்னணி!மின்னம்பலம்: மேற்குவங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த 14ஆம் தேதியன்று மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று அடுக்குகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.5 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலின்போது நடந்த வன்முறையினால் 24 தெற்கு மற்றும் வடக்கு பர்கனாஸ், நாதியா, மூர்ஷிதாபாத், தெற்கு தினஜ்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இந்த வன்முறையில் சிக்கி 13 பேர் வரை பலியானதாகத் தகவல் வெளியானது.
இந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று (மே 17) காலை மேற்கு வங்கத்தில் தொடங்கியது. தற்போது, சில இடங்களின் நிலவரம் மட்டுமே தெரிய வந்துள்ளது. மாவட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்பான 825 ஜில்லா பரிஷத்களில் 221ல் திருணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாயத்து சமிதிகளைப் பொறுத்தவரை, 330 இடங்களில் 110ல் திருணமூல் முன்னிலை வகித்து வருகிறது. இந்த இரண்டு உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

கோவை கடும் வரட்சி .. 1700 அடிக்கும் கீழ் ஆழ்துளைக் கிணறுகள்

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?மின்னம்பலம்: கோவை. வளமாக இருந்த இந்த மாவட்டம், இராமநாதபுரத்திற்கு அடுத்து அதிக வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கருவேல மரங்களால இராமநாதபுரம் சீரழிந்ததைப் போலத் தென்னை மரங்களால் சீரழிந்துவரும் மாவட்டம் கோவை. தென்னை மரங்களுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். அதுவும் வெள்ளிமடை போன்ற பகுதிகளில் 1700 அடிக்கும் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சிவருகின்றனர்.
கோவை மாவட்டத்திற்கு உடனடித் தேவை நீர் மேலாண்மை திட்டங்கள். அதுவும் என்ன செய்ய வேண்டும் என்பதை அந்தந்த பகுதி மக்களே மனுக்களாக எழுதி அரசாங்க அதிகாரிகளிடம் கொடுத்துவருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் சில..
1) மேற்குத் தொடர்ச்சி மலையின் நீராதாரமாக உள்ள சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலப்பரப்பை மீட்டு, மீண்டும் சோலைக் காடு உருவாக்க வேண்டும்
2) மலையில் இருந்து வரும் இயற்கையான நீர் ஊற்றுகள், ஓடைகள் கால்வாய்களில் திருப்பிவிடப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. எனவே, இயற்கையாக மலைகளிலிருந்து வரும் ஊற்றுகள், ஓடைகளை அதன் போக்கிலே விட வேண்டும்.

காங்கரஸ் ம ஜ தளம் தொடர் போராட்டம் 117 எம் எல் ஏக்களும் களத்தில்

மின்னம்பல்ம்: கர்நாடக முதல்வராக இன்று காலை எடியூரப்பா பதவி ஏற்ற நிலையில், இதனைக் கண்டித்து காங்கிரஸ், மஜத கட்சியினர் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பா நேற்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மாலையில் மஜத தலைவர் குமாரசாமி காங்கிரஸ், மஜதவின் 117 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ்-மஜத தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக நேற்றிரவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் எடியூரப்பாவின் பதவியேற்புக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

குமாரசாமி : எம் எல் ஏக்களை அமாலாக்கல் துறை மூலம் பிடிக்கும் முயற்சி நடக்கிறது

எம்எல்ஏக்களைப் பாதுகாப்போம்: குமாரசாமிமின்னம்பலம்: பாஜகவினர் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள குமாரசாமி, எம்எல்ஏக்களைப் பாதுகாப்பதே எங்கள் திட்டம் என்று தெரிவித்துள்ளார்.
பலத்த எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே கர்நாடக முதல்வராக பாஜகவின் எடியூரப்பா இன்று (மே 17) பதவியேற்றுக்கொண்டார்.
எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (மே 17) காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவினர் மற்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களிடமிருந்து எம்எல்ஏக்களைப் பாதுகாப்பதே எங்களின் திட்டம். மத்திய அரசின் நடத்தை குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாதபோது ஆளுநர் எப்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்? தனது அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

கர்நாடகா ஆளுநர் முடிவு எதிரொலி- பீகாரில் ஆட்சி அமைக்க அழைக்க ஆர்ஜேடி வலியுறுத்தல்!

Mathi - Oneindia Tamil  கர்நாடகா ஆளுநர் முடிவால் கோவா பாஜக அரசுக்கு நெருக்கடி- ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்.
 பாட்னா: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததைத் தொடர்ந்து பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) போர்க்கொடி தூக்கியுள்ளது.
 கர்நாடகாவில் தேர்தலுக்குப் பின் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.  இக்கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்றிருக்கிறது. 
ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததால் பெரும் அரசியல் சாசன நெருக்கடி உருவாகி உள்ளது. கோவாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் இப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கலகக் குரல் எழுப்பியுள்ளது. 
கோவாவைத் தொடர்ந்து பீகாரில் ஆர்ஜேடி போர்க்கொடி தூக்கியுள்ளது. 
2015-ம் ஆண்டு பீகார் தேர்தலில் ஆர்ஜேடி 80; ஜேடியூ 70; பாஜக 53 இடங்களைப் பெற்றன. 

சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா.. தொடர் போராட்டம் என்று அறிவிப்பு

Kalai Mathi  Oneindia Tamil  பெங்களூரு: சட்டசபை வளாகத்திலுள்ள காந்தி சிலை
எதிரே சித்தராமையா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். எடியூரப்பா முதல்வராக ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளார்.எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதால் காங்கிரஸ், மஜத கோபமடைந்துள்ளது. கர்நாடக சட்டசபையை முற்றுகையிட்டு போராட காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களும் முடிவு செய்துள்ளனர். எனவே, ரிசார்ட்டில் இருந்து வாகனங்களில் புறப்பட்டனர் எம்எல்ஏக்கள்.. தர்ணாவில் குலாம் நபி ஆசாத், கர்நாடக காங். தலைவர் பரமேஷ்வரும் பங்கேற்பு

ராகுல் : பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்:

தினத்தந்தி :நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. அதேவேளையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதாக கூறி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று உரிமை கோரியது.
சட்ட ஆலோசனைகளை நடடத்திய ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ்  முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை  எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

எடியுரப்பா.கர்நாடகாவின் 23 வது முதலமைச்சரானார் .. ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

ராஜ்பவனை முற்றுகை இட காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் திட்டம் !
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆக  ஆளுநர் மாளிகையில்  பதவியேற்றார். 
 அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை
 முதல்வர் பதவியேற்பு விழா நிறைவடைந்தது .
எடியூரப்பாவுக்கு ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்,
கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் பதவி பிரமாணம் செய்தார் எடியூரப்பா  பச்சை சால்வை அணிந்து விழா மேடைக்கு வந்தார் எடியூரப்பா . தேசிய கீதத்துடன் துவங்கியது பதவியேற்பு விழா.

நிர்மலா தேவி... சிபிஐ விசாரணை தேவையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

tamilthehindu : மாணவிகளிடம் தவறாகப் பேசியதாக கைதான பேராசிரியை நிர்மலா தேவி
விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
மாணவிகளிடம் தவறாக பாலியல் ரீதியாக பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் அமைத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவும் தனது விசாரணையை முடித்து அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை, நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ நிர்மலா தேவி மீது ஆள்கடத்தல் பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிக்கிய முக்கிய நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.

எடீயூரப்பா பதவியேற்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... .15 நாள் கெடுவிலும் மாற்றமில்லை.

எடீயூரப்பா பதவியேற்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.....15 நாள் கெடுவிலும் மாற்றமில்லை. அடிமைகள் உள்ளவரை பாஜக. அட்டூழியம் தொடரும்...
விகடன் :மலையரசு---  எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க
முடியாது எனக் கூறி காங்கிரஸ் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ம.ஜ.த-வின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதேபோல் பாஜக சார்பில் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கிடையே ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்கத் கோரி ஆளுநர் விடுத்ததுடன் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆளுநரின் அழைப்பை அடுத்து நாளைக்  காலை 9.30 மணிக்கு எடியூரப்பா மட்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.

ஜெமினியின் மறுபக்கத்தை கிளறிவிட்ட .... நடிகையர் திலகம் என்ற மகாநதி

விகடன் -ஆ.சாந்தி கணேஷ் :
சாவித்திரி அம்மாவின் பயோபிக் `நடிகையர்
திலகம்’ படம் பார்த்து விட்டீர்களா டாக்டர்?’ நடிகையர் திலகம் பார்த்துவிட்டு வந்த உணர்ச்சிப் பெருக்கில் இப்படிக் கேட்டுத்தான் ஜெமினி கணேசனின் மகளும் புகழ்பெற்ற மருத்துவருமான கமலா செல்வராஜுக்கு போன் செய்தேன்.
“என் அம்மாவை எப்படி காண்பிச்சிருக்காங்க” என்கிற கேள்வியைத்தான் முதலில் கேட்டார். பிறகு “நான் இப்ப வெக்கேஷன்ல இருக்கேன். போற வழியில மதுரையில படம் பார்த்துட்டு ஈவ்னிங் போல கூப்பிடுறேன்” என்றார். அவர் சொன்ன நேரத்தில் நானே கூப்பிட்டேன். காரில் சென்றுகொண்டே என்னிடம் பேசினார்.

தன் உடன்பிறந்தவர்களுடன் கமலா செல்வராஜ்“சாவித்திரியைக் கொண்டாடி ஒரு படம் எடுத்திருக்காங்க. அவங்களோட நடிப்புக்கு மக்கள்கிட்ட நல்ல மரியாதை இருந்தது. அதை படத்துல அப்படியே காட்டியிருக்காங்க. அவங்க ரோலுக்கு கீர்த்தி சுரேஷ் கன கச்சிதமா பொருந்திப் போயிருக்காங்க. இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே இது ஒரு ஃபிக்‌ஷன்னுதான் போடுறாங்க. அதனால இந்தப் படத்துல வந்ததெல்லாம் எந்தளவுக்கு உண்மை, உண்மையில்லைன்னு படம் பார்க்கிற யாருக்கும் தெரியப் போறதில்லை” என்றவரின் குரல் ஏகத்துக்கும் அதிர்ச்சி, வருத்தம் எனப் பல கலவைகளால் நிரம்பியிருந்தது.

மருத்துவத்தில் ஒரு புரட்சி- குறைந்த கட்டணங்கள்! 500 கோடி சாம்ராஜ்யம்

 Aarthi scans gives medical service for the patients who are from poor
 Aarthi scans gives medical service for the patients who are from poorமருத்துவத்தில் ஒரு புரட்சி- குறைந்த கட்டணங்கள்! அசத்தும் 500 கோடி சாம்ராஜ்யம்- ஆர்த்தி ஸ்கேன்ஸ்!!
tamiloneindia =Lakshmi Priya ">நமது நாட்டில் ஓர் புரட்சி மிக அமைதியாக பலருக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. இது தற்பொழுது  மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த புரட்சிக்கு சொந்தக்காரர் ஓர் தமிழர். ">]எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கேன் குழுமமாக திகழும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜன் அவர்களே அந்த தமிழர்.
தென்தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யனேரி எனும் கிராமத்தில் பிறந்தார்.