

“இனம் அழிந்தபோது காங்கிரசை வீழ்த்த, அந்த காலகட்டத்தில் ஈழம் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்த ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்கிற முடிவினை நீங்கள் தானே எடுத்தீர்கள்..?? இந்த நொடி வரை அண்ணன் சீமான் மீது ஒரு விமர்சனமாக வைக்கப்படுகிற அந்த முக்கிய முடிவினை எடுத்தது நீங்கள் தானே..??”< 2009 நாடாளுமன்றத் தேர்தலில், பெரியார் திராவிடர் கழகம், காங்சிரசுக் கூட்டணியை எதிர்த்துத் தேர்தலைச் சந்தித்தது உண்மை. தேர்தல் குறித்து முடிவெடுக்க, 29.03.2009 அன்று சேலத்தில் பெ.தி.க.வின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் கூடியது. நானும் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். அக்கூட்டம் நடைபெறும் போது, தலைவர் கொளத்தூர் மணி சிறையில் இருந்தார். தோழர் சீமானும் கூட அப்போது சிறையில் தான் இருந்தார்.