சனி, 3 நவம்பர், 2012

இந்து, கிறிஸ்தவர்களுக்காக வாதாடும் பாகிஸ்தான் சமூக சேவகி மீது சரமாரி துப்பாக்கிச் சூடு

 Marvi Sirmed

Unidentified gunmen on Thursday attacked prominent rights activist Marvi Sirmed, who has received threats from extremist groups several times in the past, in the Pakistani capital though she escaped unharmed.
The gunmen, who were in a black car, fired at Sirmed's vehicle at Murree Road near Bani Gala on the outskirts of Islamabad while she was returning home from work this evening.
"They tried to target us twice and fired several shots at my car which missed. Luckily, my driver sped away and we escaped," Sirmed told PTI.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரபல சமூக சேவகி மீது மர்ம ஆசாமிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் புறநகரில் வசிப்பவர் மார்வி சிர்ம்ட். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்துக்கா கவும் வாதாடி வருகிறார். குறிப்பாக ஷியா முஸ்லிம் பிரிவினர், இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு முழு உரிமை கேட்டு போராடி வருகிறார். மேலும், இந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதை கடுமையாக எதிர்த்து வருகிறார் மார்வி.
இதனால், இந்தியாவுக்கு ஆதரவானவர் என்று கூறி தீவிரவாதிகள் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஏற்கனவே பல முறை மார்வியை கொல்ல முயற்சி செய்தனர். இந்நிலையில், இஸ்லாமாபாத் புறநகர் பனிகலா பகுதியில் முர்ரி சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது நேற்று மர்ம ஆசாமிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

காந்தி-நேருவின் லட்சியங்களை பரப்பவே அசோசியேட்டட் ஜர்னலுக்கு கடன்: காங்கிரஸ் விளக்கம்


நடிகை லிசி தந்தை செலவுக்கு பணம் தர மறுப்பு

திருவனந்தபுரம் : கடந்த 1980ம் ஆண்டுகளில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் லிசி. இவர் மோகன்லால், மம்முட்டி உட்பட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது தந்தை வர்க்கி. 15 ஆண்டுகளுக்கு முன் பிரபல டைரக்டர் பிரியதர்ஷனை லிசி காதலித்து மணந்தார்.

திருமணத்துக்கு பிறகு கணவருடன் சென்னைக்கு லிசி குடி பெயர்ந்தார். அதன் பிறகு, அவர் தந்தையை கவனிக்கவில்லை. செலவுக்கு பணமும் தரவில்லை. இதனால், 2 ஆண்டுகளுக்கு முன் மூவாற்றுபுழா நீதிமன்றத்தில் லிசி மீது வர்க்கி வழக்கு தொடர்ந்தார். இதில், வர்க்கியின் செலவுக்கு மாதம்  5,500 கொடுக்கும்படி லிசிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், லிசி பணம் கொடுக்கவில்லை. மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து  கேரள உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், மூவாற்றுபுழா நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

நான் அதன் ரசிகை ...இது இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு

[படங்கள்;நன்றி,http://yazhsuthahar.blogspot.in/]
மயில்வாகனன்
நினைவு மலரத் தொடங்கிய குழந்தைப்பருவ நாட்களில் இலங்கையோடு எனக்கு ஏற்பட்ட முதல் பிணைப்பு இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பால் நேர்ந்தது. குடும்பத்தில் ஒற்றைக் குழந்தையாகத் தனிமையில் வளர்ந்த எனக்கு உற்ற துணையும் தோழியும் அதுவாக மட்டுமே இருந்த காலம்...’50களின் பிற்பகுதியும்,’60களும்... !
இலங்கை வானொலியின்  கூட்டுத்தாபன சேவையெல்லாம் தொடங்குவதற்கு முன் அது வெறும் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பாக இருந்த நாளிலிருந்தே நான் அதன் ரசிகையாக இருந்திருக்கிறேன். இன்றும் கூட, இனிமையான பழைய திரைப்பாடல்கள் காதுகளை வருடும்போது முதன்முதலாக இலங்கை வானொலி வழி அவை எனக்கு அறிமுகமான அந்த நாள் நினைவுகளே நெஞ்சில் அலையடிக்கின்றன.பாடல்களை வறட்டுத்தனமாக ஒலிபரப்பாமல் ரசனையோடும் அவை பற்றிய பின்னணியோடும் உற்சாகமான தொனியில் விவரிக்கும் மூத்த அறிவிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்களின் தமிழும்,குரல்வளமும் இன்னமும் கூட என்னுள் ஒலிப்பதை என்னால் உணர முடிகிறது. தொடர்ந்து பிற அறிவிப்பாளர்களான திருமதி ராஜேஸ்வரி..., அட்டகாசமான ஆக்கத்திறன் கொண்ட கே.எஸ். ராஜா,முன்னோடிகளின் பாதையில் பயணப்பட்டாலும் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்து கொண்ட அப்துல்ஹமீத்,மயில்வாகனன் சர்வானந்தா எனப்பலரையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை நான் தொடர்ந்து வந்திருக்கிறேன்.
இலங்கை வானொலி, திரைப்பாடல்ரசனையை மட்டும் எனக்கு அளிக்கவில்லை...’இசையும் கதையும்’ போன்ற நிகழ்ச்சிகளின் வழி என்னுள் இருந்த கதைசொல்லியை வளர்த்தெடுத்ததிலும் அதற்குப்பங்குண்டு.[பள்ளி நாட்களில்..’இசையும் கதையும்’ மீது பெரும் மோகம் கொண்டிருந்த நான்..ஒரு கதையை எழுதி அதற்கேற்ற பாடல்களைப் பொருத்தமாக இயைத்து அந்நிகழ்ச்சிக்கும் கூட அனுப்பி வைத்திருக்கிறேன்.]

கனடாவில் தமிழ் மாணவி காணாமற் போயுள்ளார்

கனடாவில் தமிழ் மாணவி ஒருவர் காணாமற் போயுள்ளார். ஸ்காபரோ நகரில் வசிக்கும் 16 வயதான காயத்திரி வைத்திலிங்கம் என்ற மாணவியே நேற்று முன்தினம் காணாமற் போயுள்ளார். இது குறித்து டொரொண்டோ பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமக்கு தகவல் தந்து உதவுமாறு டொரொண்டோ பொலிஸார்  கோரியுள்ளனர்.
41 Division
416-808-4100
The Toronto Police Service is requesting the public’s assistance locating a missing girl.
Kayathiri Vaithilingam, 16, was last seen on Thursday, November 1, 2012, at 3 p.m., in the Neilson Road/Ellesmere Road area
She is described as brown, 5’5”, 150 lbs., with brown eyes and long, black wavy hair.
Police are concerned for her safety.
Anyone with information is asked to contact police at 416-808-4100, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com, text TOR and your message to CRIMES (274637), or Leave A Tip on Facebook. Download the free Crime Stoppers Mobile App on iTunes, Google Play or Blackberry App World.
http://www.torontopolice.on.ca/newsreleases/24911

Diana டயானா பயன்படுத்திய கார் விற்பனைக்கு வருகிறது


பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் 2 லட்சம் அமெரிக்க டொலர் வரை ஏலம் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மறைந்த இளவரசி டயானாவும், பிரிட்டன் இளவரசர் சார்லஸசும் 1985ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன் அவரது மனைவி நான்சி ஆகியோரைச் சந்தித்தனர்.
அப்போது இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தால் 1979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது. பின்னர், நிபுணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.1.07 கோடி செலவிடப்பட்டுள்ளது.

நித்தி மிரட்டியதால் போலீஸில் புகார் அளிக்கவில்லை நிலமோசடி வழக்கு

சேலம் மாவட்டம், சீரகாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கி.குணசேகரன். இவர் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னீஸிடம் அளித்த மனு விவரம்:
2005-ஆம் ஆண்டில் சென்னகிருஷ்ணன், சக்தி, செல்வம் ஆகியோர் மூலம் நித்யானந்தாவிடம் அறிமுகமானேன். அவரது செயலர் சதானந்தா உள்ளிட்டோர் சீரகாப்பாடி பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் அமைக்க விரும்புவதாகவும், எனவே, கடத்தூர் முக்கோணம்பாளையம் பகுதியில் உள்ள எனது நிலத்தை தானமாக கொடுக்குமாறு கேட்டனர். மேலும், நித்யானந்தரும் இதுகுறித்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து, 50 சென்ட் நிலத்தைத் தானமாகக் கொடுக்க ஒப்புக் கொண்டேன்.2006-ஆம் ஆண்டு பத்திரப் பதிவு அலுலகத்துக்கு சென்ற என்னிடமும், எனது மனைவி, சகோதரி ஆகியோரிடமும் அவர்கள் ஆங்கிலத்தில் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். ஆனால், நிலத்துக்கான பணம் குறித்து அவர்கள் பேசவில்லை.

கப்பலில் இருந்து 5-வது ஊழியர் உடல் கரை ஒதுங்கியது

 நாம் தமிழர்கள் பண்பை பற்றி மனிதாபிமானத்தை பற்றி எல்லாம்  உலகிற்கே பாடம் எடுத்தவர்கள் ஆனால் நமது வீட்டில் அல்லது நாட்டில் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டோம் சினிமா ஷூட்டிங் முக்கியமா இது முக்கியமா விபரம் இல்லாம பேசப்படாது 
சென்னை: நிலம் புயலின் போது சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய சரக்குக் கப்பலில் இருந்து குதித்தவர்களில் 5-வது ஊழியரின் உடலும் கரை ஒதுங்கியது.
தரை தட்டிய கப்பல்
மத்திய அமைச்சர் சரத்பவார் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்துக்கு சொந்தமானது பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல். இக்கப்பல் சென்னையில் சரக்கை இறக்கிவிட்டு மும்பை செல்ல முடியாமல் சென்னை கடற்பரப்பில் நின்று கொண்டிருந்தது. தங்களுக்கான எரிபொருள் மற்றும் உணவு வழங்க கப்பலில் இருந்த 37 பணியாளர்கள் பலமுறை துறைமுக, காவல்துறையினருக்கு கோரிக்கைவிடுத்தும் யாரும் கேட்பாரில்லை. ஏஜெண்டும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் வங்கக் கடலை வலம்வந்த நிலம் புயல் இந்த சரக்குக் கப்பலையும் பதம் பார்த்தது.

தா.பாண்டியன்: நாங்கள் உங்களுக்காக நல்ல கலையை ரசிக்கும்

புயல் நிவாரணம்... முதல்வர் மனம் நோகாமல் அறிக்கை வெளியிடும் . தா.பாண்டியன்

சென்னை: புயல் மழை வந்தால் உரிய நிவாரணம் கோரி அறிக்கை வெளியிடுவது அரசியல் கட்சிகளின் வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்றுதான்! ஆனால் இத்தகைய அறிக்கையிலும் கூட தமிழக முதல்வரின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் அப்படி ஒரு 'அக்கறை' காட்டியிருக்கிறார்.
சென்னையில் தா. பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், நிலம் புயல் காற்றாலும், அதற்கு முன்னதாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி இல்லாத நிலையில் ஒரு போக சாகுபடி செய்திட நேரடி விதைப்பின் மூலமும் நடவு செய்தும் பயிரிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாய நிலை உள்ளது. இப்பாதிப்பை சரியாக கணக்கிட்டு உரிய நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.  எப்படி எப்படியெல்லாம் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை துதி பாடலாம் என்று அதிமுக இவரிடம் பாலபாடம் எடுக்கவேண்டும் . நாங்கள் உங்களுக்காக நல்ல கலையை ரசிக்கும் அம்மாவுக்காக 

1600 கோடி மோசடி- காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய கோருகிறார் சு.சுவாமி

Posted by:  Subramanian Swamy Move Ec Seeking
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் பொது நிறுவன சொத்துகளை அபகரிக்க கடன் கொடுத்த காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்
சோனியா-ராகுல் மீதான புகார் என்ன?
சோனியாவும் ராகுல் காந்தியும் 76% பங்குகளை வைத்திருக்கும் யங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் பொது நிறுவனமான அசோசியேட் ஜேர்னல் லிமிடெட்டின் ரூ1600 கோடி சொத்துகளை அபகரித்திருக்கிறது. யங் இந்தியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் கொடுத்திருக்கிறது என்பதுதான் சுப்பிரமணிய சுவாமி கூறும் புகார்.

சென்னை தரைதட்டிய கப்பல் சரத் பவாருக்கு சொந்தமானது

 grounded ship cannot be moved of chennai கப்பலில் பசிக்கொடுமையால் எலிக்கறி தின்ன வைத்த சரத்பவார் குடும்பம்!

சென்னை: சென்னை  பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் தரைதட்டிய கப்பல் சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் சரத் பவார் குடும்பத்தினருக்கு சொந்தமான இக்கப்பல் 80 நாட்களாக சென்னை கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் உரிமையாளரும் ஏஜெண்ட்டும் கைவிட்டுவிட்டடதால் பசிக் கொடுமைக்குள்ளாகி கப்பலில் இருந்த எலிகளைப் பிடித்து சாப்பிட வேண்டிய நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. http://tamil.oneindia.in/
Sharad Pawar with daughter Supriya Sule
His Record As Minister Of Agriculture...
  • Food inflation at its highest in two decades—16-20%
  • Draft of Food Security Act problematic, not yet passed
  • He aggressively pursued the introduction of controversial GM food in the country
...And His Family’s Business Interests
  • Sugar, grapes, horticulture
  • Cooperatives—sugar and other mills and factories; marketing federations; credit institutions
  • Partnerships in distilleries
  • Stakes in holding companies of some construction and infrastructure majors
  •  http://www.outlookindia.com/article.aspx?265791

சுவாமியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்

சுப்ரமணியம் சுவாமி சொல்வது உண்மை என்றால், அது பெரிய விஷயம்!” -பா.ஜ.க.< “சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது சுப்ரமணியம் சுவாமி சுமத்திய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்கி உள்ளதாக சுவாமி குற்றம் சாட்டியது தொடர்பாகவே பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி, அவ்வாறு தெரிவித்துள்ளார். சிம்லாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, “சுவாமியின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சி விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும். அதைவிடுத்து, இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, உண்மைக்குப் புறம்பானது என மேலோட்டமாகக் கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது.

பீட்சா திறமைசாலிகளுக்கு குளுகோஸ் கொடுத்திருக்கிறது.

பீட்சா திரைப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் உள்ள திறமைசாலிகளுக்கு குளுகோஸ் கொடுத்திருக்கிறது. புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா ரசிகர்களிடையே பெற்றுள்ள பெரும் வரவேற்பு ஆரோக்கியமானது. சமீபகாலத்தில் இதுபோன்ற துல்லியமான திரைக்கதையுடன் எந்தவொரு தமிழ் படமும் வந்ததாக ஞாபகமில்லை.
படத்தில் உள்ள அட்டகாசமான ட்விஸ்ட்டுகள், காட்சிகளுக்கு தேவையான பயமுறுத்தும் இசை, துல்லியமான கேமரா கோணங்கள், என அனைத்து டாப்பிங்குகளும் போட்ட டபுள் சீஸ் பீட்சாவை டெலிவரி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் வெளியான போது 100 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டார்கள். வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இது 180 திரையரங்குகளாக அதிகரித்தது.
இப்போது அதைவிட மகிழ்ச்சியாக பீட்சா கேங் சொல்லும் விஷயம், இந்தப் படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பதுதான்.
 தமிழ் சினிமாவின் ‘ட்ரென்ட் செட்டர்கள்’ என்று கூறப்படும் மெகா டைரக்டர்களின் எந்தப் படத்தையும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடியாது. காரணம், அவை ஏற்கனவே மற்றொரு வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்டதுதானே!

திக்விஜய்சிங்? நரேந்திர மோடிக்கு மனைவி (யசோதா) இருக்காங்க தெரியுமா?

 Digvijaya Singh Asks Narendra Modi நரேந்திர மோடிக்கு மனைவி இருக்காங்க தெரியுமா?: திக்விஜய்சிங் பரபரப்புப் பேச்சு Digvijay Singh said: "Why is Modi is silent about his wife's name? If you can visit You Tube and search Narendra Modi's wife, you will find the name Yashoda Ben as his wife."



சிம்லா: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியை கிண்டலடித்து சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கும் நரேந்திர மோடியின் பேச்சு இப்பொழுது அவருக்கே பூமராங்காக திரும்பியிருக்கிறது.
மோடியின் கிண்டல்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையில் மீண்டும் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு "ரூ. 50 கோடி காதலி" இருக்கிறார். இவ்வளவு வேல்யூவான காதலி உண்டா? எனக் கேள்வி எழுப்பினார்.
ஐ.பி.எல். விவகாரத்தில் சசிதரூரின் காதலியாக இருந்த சுனந்தாவை மனதில் வைத்துக் கொண்டுதான் மோடி இப்படிப் பேசியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சசி தரூரோ, என் மனைவி விலை மதிப்பற்றவர் எனப் பதிலடி கொடுத்திருந்தார்.
இப்போது மோடியை இதே மனைவி விவகாரத்தை வைத்து மடக்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங்.

விஜயகாந்தை கேட்டது போல் ஜெயலலிதாவை கேட்டால்???//

முட்டைக்கு மொட்டை அடிப்பதுபத்திரிகையாளர்கள் என்று ஒரு இனம் தமிழ்நாட்டில் இருக்கிறதா
சென்னை விமானநிலையத்தில் விஜயகாந்த் நடந்துகொண்ட முறை அநாகரிகமானது. பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்றால் எதுவும் பேசாமல் ஒதுங்கிச் சென்றிருக்கலாம். மாறாக தன்னுடைய கட்சிக்காரர்களை நடத்துவதைப் போல பத்திரிகையாளர்களை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதே நேரம், புரட்சித்தலைவியை இதேபோல விமானநிலையத்தில் மடக்கி, குறுக்கிட்டு, இதே பத்திரிகையாளர்கள் பேச ‘தில்’ இருக்கிறதா என்று பொதுமக்கள் ஊருக்குள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ கணக்காக, கொஞ்சம் கிராமத்து மனிதர் மாதிரியாக வெள்ளந்தியாக பழகுகிறார் என்பதற்காக மனைவியோடு கைபிடித்துச் சென்றுக் கொண்டிருந்தவரை குறுக்கிட்டு எகனைமொகனையாய் பேசியதை என்னவென்று சொல்ல?

ஞாநி: விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள் சின்மயி

“ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் ‘நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தை, என்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா? 
அன்புள்ள சின்மயிக்கு
வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.

பிரதமர்: சமூக, பொருளாதார சாதனைகள் படைத்திருக்கிறோம்

நாம் மிகுந்த மன வலிமையுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்றுகிறபோது, இந்த நாடு அடைய வேண்டிய இலக்குகளை அடைய முடியும். என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கடந்த 28 ஆம் தேதி பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.  இந்த மாற்றத்துக்கு பின்னர் முதன்முதலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியபோது கூறியதாவது:

விஜயகாந்துக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்

நிருபரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்துக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், மதுரைக்கு செல்வதற்காக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி கேட்டதாகவும், அவர்களை விஜயகாந்த் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாள பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர் நீதி விசாரணை தேவையில்லை

மதுரை : கூடங்குளம் தடியடிக்கு நீதி விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. போராட்டகாரர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். கூடங்குளத்தில் செப்டம்பர் 10ம் நடந்த தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய  மனுக்கள் நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கூடங்குளத்தில் பொது மக்களுக்கு பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. அங்கு 144 தடை உத்தரவு இருந்த போதும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடியடியில் எத்தனை பொது மக்கள் காயமடைந்தனர், எத்தனை வீடுகள் சேதமடைந்தது என்பது தொடர்பான எந்த ஆதாரத்தையும் மனுதாரர் அளிக்கவில்லை.

7,100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தது திமுக ஆட்சிதான்

சென்னை : தமிழகத்திற்கு 7,100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க திமுக ஆட்சியில்தான் வழி வகை செய்யப்பட்டது என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தற்போதுள்ள மோசமான மின்வெட்டுக்குக் காரணமே முந்தைய திமுக அரசுதான் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவையில் சொல்லியிருக்கிறார். திமுக ஆட்சி நடத்தியபோது தற்போது உள்ளதைப் போல 15 மணி நேரம் மின் வெட்டா இருந்ததா என்று கேட்டால் இல்லை, இல்லவே இல்லை.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறைக்கு, ஏற்கனவே இருந்த திமுக அரசுதான் காரணம் என்கிறாரே முதலமைச்சர், அப்படியென்றால் 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 1,302 மெகாவாட் மின் நிறுவு திறனும், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 2,518 மெகாவாட் மின் நிறுவு திறனும் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே, இதற்கு மட்டும் அவருடைய அந்த ஆட்சிக் காலத்திற்கு முன்பு நடைபெற்ற திமுக ஆட்சி காரணம் இல்லையா?

தமிழ் மக்களுக்கு எது கிடைத்தாலும் குழப்பியேதான் தீருவோம், TNA

தீர்வை மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு எது கிடைத்தாலும் தமிழ் மக்களுக்காக யாரென்ன செய்தாலும் அதைக் குழப்பியேதான் தீருவோம் என்று வெளிப்படையாகவே செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். “இனி தமிழ்மக்களுக் கான தீர்வுக்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்தியாவையும் சர்வதேசத்தையுமே சார்ந்ததாகும்” என்று அண்மையில் தங்களது கையாலாகாத்தனத்தை அறிவித்து விட்டு, இங்கு எது நடந்தாலும் அதைக் குழப்புவதன் மூலம் தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கலாம் என்று முடிவெடுத்துவிட் டார்கள் என்று தெரிகிறது.

ஆசிரியர்களின் பிரம்புக்கு தடை அடித்தால் "ஜெயில்'

மதுரை:மாணவர்களை அச்சுறுத்தும்விதம், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் அனுப்பிய உத்தரவு:
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது. உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள், சாட்டைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அடித்தாலோ, தகாத வார்த்தையால் திட்டினாலோ சட்டப்படி குற்றம். தவறு செய்தவர்களை அழைத்து "கவுன்சிலிங்' கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும். இதை மீறும் ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்தால் அந்த ஆசிரியருக்கு சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 2 நவம்பர், 2012

இலை உடையில் அனுஷ்கா! செல்வராகவனின் முயற்சி!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ’இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கபழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையை அப்படியே திரையில் கொண்டுவரும் முயற்சியில் ஆர்யாவையும் அனுஷ்காவையும் இலைகளை மட்டுமே உடையாக அணிந்து நடிக்க வைத்திருக்கிறாராம் செல்வராகவன். ஒரு பெண்ணாக இருந்தும் இலைகளை மட்டும் உடுத்திக் கொண்டு நடித்த  அனுஷ்காவின் தைரியத்தையும், அனுசரிப்பையும் படக்குழுவினர் பாராட்டினார்களாம். 
மலைப் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையை 
ளாக நடித்துள்ளனர்

சந்தேகத்தில் மகளைக் கொன்ற பெற்றோர்!



Parents kill teenage daughter in acid attack in Kashmir

Parents kill daughter by pouring acid on her face after being caught talking to a boy

பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லைக்குட்பட்ட பகுதியில் சொந்த மகளை திராவகம் ஊற்றிக் கொலை செய்த தாய், தந்தையரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கொட்லி மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் உயிழந்த சிறுமியின் வயது வெறும் 15 ஆகும்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த சிறுமியின் வீட்டின் அருகில் இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
அவர்களை அச்சிறுமி பார்த்துக்கொண்டிருந்துள்ளமையை பெற்றோர் கண்டுள்ளனர்.
எனவே அச்சிறுமி குறித்த இளைஞர்களில் ஒருவருடன் காதல் தொடர்பில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்த பெற்றோர் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர் மீது திராவகத்தையும் ஊற்றியுள்ளனர். சிறுமி வலியால் துடிப்பதை கண்டும் அவரது பெற்றோர் அக்கறையின்றி இருந்துள்ளதுடன் அடுத்த நாளே சிறுமியை வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு தொடர்வேன்- ராகுல் எ‌ச்ச‌ரி‌க்கை

அரசு நிலங்களை தவறாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருவதாக கூ‌றிய ஜனதா தள‌ம் க‌ட்‌சி‌த் தலைவரசுப்பிரமணிசுவாமி மீதஅவதூறவழக்கதொடர இரு‌ப்பதாக ராகு‌ல் கா‌ந்‌தி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மக‌‌‌ன் ராகுலும் ரூ.1600 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை தவறாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருவதாக ஜனதா தள‌ம் க‌ட்‌சி தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர்.

ஆனாலஇந்குற்றச்சா‌ற்றை மறு‌த்து சு‌ப்‌பிரம‌ணியசுவா‌மி‌க்கு ராகு‌ல் கா‌ந்‌தி எழு‌தியு‌ள்ள கடி‌த‌த்‌தி‌ல், தங்களகுற்றச்சா‌ற்று முற்றிலுமபொய்யானது, அடிப்படஆதாரமற்றது.

உள்நோக்கமகொண்டபத்திரிக்கையாளர்களுக்கசெய்தி அளித்தவருமஉங்களஆதாரமற்குற்ற‌ச்சா‌ற்றை எதிர்த்தசட்டப்பூர்நடவடிக்கைகளஎடுக்ி‌ர்‌ப்ப‌ந்‌திக்கபட்டுள்ளது.

எழுத்துரிமமற்றுமபேச்சுரிமையதனிநபர்களபயன்படுத்தி அவதூறசெய்வததடுக்இந்நடவடிக்கையமேற்கொள்வதாகடிதத்திலதெரிவித்துள்ளார்  http://tamil.webdunia.com/newsworld/news/national/1211/02/1121102018_1.htm

அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!

வினவு"
காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று."அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!"ன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் காங்கிரசு கூட்டணி அரசின் நிர்வாகத்தை உறுதிப் படுத்த அமைச்சரவை மாற்றங்களை செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது பெட்ரோலிய அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியை ‘முக்கியத்துவம் இல்லை’ என்று சொல்லப்படும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மாற்றியிருப்பது. ‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியாக’ பெட்ரோலிய அமைச்சர் பொறுப்பு வகித்த கார்ப்பரேட் தரகர் முரளி தியோராவிடமிருந்து 2011 ஜனவரியில் பெட்ரோலிய அமைச்சகத்தின் பொறுப்பைப் பெற்றார் ஜெய்பால் ரெட்டி. அதற்கு முன்பு பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணி சங்கர் அய்யர் ‘ஈரானிலிருந்து குழாய் அமைத்து வாயு கொண்டு வரும் திட்டத்தை முடுக்கி விட்டதால்’ 2006ம் ஆண்டு முரளி தியோரா அமைச்சராக்கப்பட்டார்.

இனி சத்துணவில் பிரியாணி, புலவு, முட்டை மசாலா வழங்க முதல்வர் உத்தரவு

 Tn School Children Get Briyani Pulao
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் இனி விதவிதமான உணவு வகைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து காலத்திற்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், உணவு முறையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன். புதிய வகை உணவு முறையினை அறிமுகப்படுத்துவது குறித்து புகழ் பெற்ற சமையற் கலைஞர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னையில் விமானம் மீது பாய்ந்த லேசர்.. விமானத்தை தரையிறக்க முடியாமல் தவித்த பைலட்டுகள்!

சென்னை: விமானத்தின் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சி பைலட்டின் கண்களை சில நொடிகள் இருள வைத்து விமானத்தையே விபத்துக்குள்ளாக்கும் சதி சென்னையில் நடந்துள்ளது.
துபாயில் இருந்து நேற்றிரவு 8.40 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் (எண்-EK 546) சென்னைக்கு வந்தது. இதில் 242 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். கத்திப்பாரா- பரங்கிமலை பகுதி வழியே வந்து விமானத்தை விமானி தரை இறக்க முயன்றார்.
அப்போது ஓடுபாதை அருகே உள்ள பகுதியிலிருந்து விமானத்தின் காக்பிட் விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி மீது பச்சை நிற மர்ம லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால் விமானிகளின் கண்கள் கூசின.

தமிழ் பட கதைகள் பிடிக்கவில்லை : மதுஷாலினி தடாலடி

சென்னை: தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் மது ஷாலினி. ‘அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி. இப்படத்துக்கு பிறகு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் டிபார்ட்மென்ட் இந்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘பூத் ரிட்டர்ன்ஸ்Õ படத்தில் நடித்தார். படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்து தொடர்ந்து திகில் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். இதுபற்றி மது ஷாலினி கூறியதாவது: பூத் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தபிறகு தொடர்ந்து திகில் படங்களில் நடிக்கவே வாய்ப்பு வருகிறது. பாலிவுட்டில் புதிய பட குழுவினர் தொடங்கும் மற்றொரு திகில் படத்தில் நடிக்கிறேன்.

புஷ்பவனம் குப்புசாமி ஏன் அழுதார்? யார் நோகடித்தார்?

புஷ்பவனம் குப்புசாமி ஆரம்ப நாட்களில் சாஸ்தரீய சங்கீதம் கற்றுக்கொள்ள கர்நடக சங்கீத வித்வானிடம் சென்ற போது, உனக்கெல்லாம் சங்கீதம் வராது அல்லது சொல்லித்தர முடியாது (இது போன்ற அர்த்தத்தில்) கூறிவிட்டார் என்று, அவர் கொடுத்திருந்த பத்திரிகை செய்தி/பேட்டியைப் படித்திருப்போருக்கு, இன்றைய விஜய் டிவி நிகழ்ச்சியில் பூவே செம்பூவே பாடலின் இசைக்கோர்வை பற்றி சிலாகித்துவிட்டு அதை ஸ்ரீராம் பாடுகையில் அவர் நெகிழ்ந்து அழுததோ அப்புறம் அந்த மேடையிலேயே இளையராஜாவுக்கு மானசீகமாக சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ததோ மெலோடிராமாவாகப் படாது. 
ஆனால் அவரது நெகிழ்ச்சி சிலரால் கிண்டலடிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க வருத்தமாக இருந்தது. வருத்தம் புஷ்பவனத்தை எண்ணியல்ல  - கிண்டல் செய்தவர்களை நினைத்து. 
மேற்குறிப்பிட்ட நேர்காணலில் இசையைக் கற்றுத்தர மறுத்த சம்பவத்தைக் குறிப்பிட்டவர், கர்நாடக சங்கீத வித்வானின் பெயரைக் குறிப்பிடாது தவிர்த்திருந்தார்.

நொய்டா பார்முலா 1 கார் பந்தயம் 1.15 லட்சம் பீர் பாட்டில் காலி

நொய்டா: பார்முலா 1 கார் பந்தயத்தை பார்க்க வந்த ரசிகர்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் பீர் பாட்டில்களை வாங்கி குடித்துள்ளனர் என்ற தகவலை கலால் வரித்துறை தெரிவித்துள்ளது.நொய்டாவில், உலக பிரசித்தி பெற்ற சர்வதேச அளவிலான பார்முலா 1 கார் பந்தயம் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ரேஸ் கிளப் உரிமையாளர்கள் மற்றும் உலக அளவில் பிரபலமான வீரர்கள் பங்கேற்றனர். போட்டி நடைபெற்ற இடத்தில் மதுபானங்கள் விற்க குறிப்பிட்ட சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை குகைக்குள் வெடிக்கவிருந்த "டைம்பாம்' செயலிழப்பு

மதுரை திருப்பரங்குன்றம் மலை குகைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சக்தி வாய்ந்த "டைம்பாம்' உட்பட வெடிகுண்டு புதையலை நேற்றிரவு போலீசார் கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தர்கா பின்புறம், 250 அடி தூரம், அடிவாரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து மலையின், 100 அடி தூரத்திற்கு இடையே, குகைக்குள் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு தகவல் கிடைத்தது.

கார் விபத்தில் தெலுங்கு தேசம் முன்னணி தலைவர் எர்ரன் நாயுடு பலி!

 Tdp Leader Yerran Naidu Killed Road Accident
ஹைதராபாத்: ஸ்ரீகாகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் தெலுங்கு தேசம் தலைவர்களுள் ஒருவரான எர்ரன் நாயுடு எம்பி பலியானார். அவருக்கு வயது 55.
அவர் பயணம் செய்த கார், ஒரு டேங்கர் லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்த எர்ரன் நாயுடு, ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஸ்ரீகாகுளம் தொகுதியின் இப்போதைய எம்பியாகவும் இருந்தார். முன்னாள் மத்திய அமைச்சரும் கூட.
ஒரு திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, இன்று அதிகாலை 2 மணிக்கு விசாகப்பட்டணத்திலிருந்து ஸ்ரீகாகுளத்துக்கு சென்று கொண்டி்ருந்தார் எர்ரன் நாயுடு. அப்போது ரணஸ்தலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, இந்த கோர விபத்து நடந்தது.

வியாழன், 1 நவம்பர், 2012

பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு. இவர் நடித்த 'தேனி கைனா ரெடி' (எதற்கும் தயார்) என்ற சினிமா கடந்த திங்கட்கிழமை ரிலீஸ் ஆனது. விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். மோகன்பாபுவின் சொந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிராமனர்களை இழிவுப்படுத்தும் காட்சி இடம் பெற்று இருப்பதாக படம் ரிலீசாகி 5 நாட்களுக்கு பிறகு பிராமனர்கள் சங்கம் குற்றம்சாட்டி நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணி அளவில் 50 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஐதராபாத்தில் உள்ள நடிகர் மோகன்பாபு வீட்டுக்கு வந்தனர். திடீரென அவர்கள் கற்களை வீசி ஜன்னல் கதவுகளை உடைத்தனர். மேலும் கதவையும் உடைக்க முயன்றனர்.

9 வருடமாக இழுத்து வந்த ஆபாசப் பட வழக்கிலிருந்து ஷகீலா ஒரு வழியாக விடுதலை

Shakeela Gets Freedom After 9 Years
நெல்லை: ஆபாசப் படத்தில் நடித்ததாக நெல்லை மாவட்ட கோர்ட்டில் கடந்த 9 வருடமாக இழுபறியாக இருந்து வந்த வழக்கிலிருந்து கவர்ச்சி நடிகை ஷகீலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போலீஸார் ரெய்டு போனார்கள். அங்கு அப்போது ஒரு மலையாளப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சோதனையின்போது சென்சார் போர்டின் அனுமதி பெறாத ஆபாசக் காட்சிகள் அடங்கிய படச்சுருளை போலீஸார் கைப்பற்றினர். அதில் ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

துப்பாக்கிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி: கஜோலுக்காக பணம் போட்டார் விஜய்!


Viruvirupu
தீபாவளி ரிலீஸூக்காக வேகமாக தயாராகிவரும் துப்பாக்கியின் ‘திரைமறைவு தயாரிப்பாளர்’ விஜய்தான் என்பதாக ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் பரவலாக அடிபடுகிறது. துப்பாக்கியின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு என்று தெரிந்த நிலையிலும், இந்த பேச்சு ஓயவில்லை.
காரணம், கலைப்புலி தாணுவே, “இந்த ப்ராஜெக்ட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், கை கொடுத்தவர் விஜய்” என்று கூறியதுதான். தாம் கொடுத்த பணத்தை, தயாரிப்பில் பங்கு என்ற வகையில் கொடுத்தார் என்கிறார்கள், கோடம்பாக்கம் பைனான்ஸ் புள்ளிகள் சிலர்.

Jayalalitha: சாதிக் கலவரம் பரவுகிறது என்ற வாசகத்தை அன்பு கூர்ந்து பயன்படுத்த வேண்டாம்

 Normalcy Returns Ramnad District Says Cm
சென்னை: தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் பரவிக் கொண்டு இருக்கிறது போன்ற வாசகங்களை அன்பு கூர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கூறியதாவது:
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை 28.10.2012 அன்று காலை பசும்பொன்னில் துவக்கப்பட்டு நடந்து வந்தன. 28.10.2012 மற்றும் 29.10.2012 ஆகிய நாட்களில், தேவர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்தன.

கோவை: 2 சிறுவர்கள் கொலை வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை

 Death Sentence Manoharan Coimbatore கோயம்புத்தூர்: கோவை பள்ளிக் குழந்தைகள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
வழக்கு என்ன?
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோரை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவன் கடத்தி படுகொலை செய்தான். இக்கொலை வழக்கில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் போலீசிடம் சிக்கிய மோகன்ராஜ் தப்பியோட முயன்றதால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். அவனது கூட்டாளி  போலீசிடம் பிடிபட்டான்.
குற்றவாளி என தீர்ப்பு

சோனியா, ராகுல் மீது சு.சுவாமி பரபரப்பு மோசடி புகார்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருமகன் வத்ரா மீது கெஜ்ரிவால் சுமத்திய புகாரின் பேரலைகள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை! அதற்குள் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது அதிர்வலைகளைக் கிளப்பும் புகார்களை சுமத்தியிருக்கிறார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி!
சுப்பிரமணிய சுவாமி சொல்லும் அதிரடிப் புகார் தான் என்ன?
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குதாரர்களாக இருப்பவர்கள் சோனியாவும் ராகுல் காந்தியும். இது ஒரு தனியார் நிறுவனம். ஏஜேஎல் என்ற அசோசியேட் ஜேர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பொதுத் துறை நிறுவனம். ஏஜே எல் நிறுவனத்தின் சொத்துகளை சோனியாவும் ராகுல் காந்தியும் உரிமையாளர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம் முறைகேடாக கபளீகரம் செய்தது என்பதுதான் சுப்பிரமணியசுவாமியின் புகார்
அப்படியென்ன முறைகேடு செய்தார்கள்?
ஏஜேல் நிறுவனத்துக்கு டெல்லியில் ரூ1,600 கோடி மதிப்பிலான ஹெரால்ட் ஹெளஸ் இருக்கிறது. இந்த இடத்தை நிர்வகிப்பது சோனியா- ராகுலின் நிறுவனமான யங் இந்தியாதான்!
சரி இந்த ஏஜேஎல் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் யார் தெரியுமா? காங்கிரஸ் கட்சிப் பொருளாளர் மோதிலால் வோராதான்! ஏஜேஎல் நிறுவனத் பங்குதாரர்களாக் இருப்பவர்கள் யாரெல்லாம் தெரியுமா? மறைந்து போன ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, பெரோஸ் காந்தி, பிர்லா இவர்கள்தான். இப்படி இறந்துபோனவர்களெல்லாம் கூடித்தான் சோனியா நிறுவனத்துக்கு ஹெரால்ட் ஹெளஸை கொடுக்கச் சொன்னார்களாம்!

பாடகி சின்மயி விவகாரத்தில் உண்மையில் நடந்தது?

நாம் எல்லோருமே தினத்தந்தி செய்தி படித்துவிட்டு தீர்ப்பு எழுதும் காமன்மேன்கள்தான். நாம் இலக்கியவாதிகளோ அறிவுஜீவியோ கிடையாது. சாதாரண பொதுஜனம். செய்தியின் பின்புலத்தையும் அதன் அரசியலையும் ஒருநாளும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர விசாரிக்க நமக்கெல்லாம் துப்புகிடையாது. ஸ்டிரைட்டா ஹீரோதான். என்னது செக்ஸ் டார்ச்சரா.. கற்பழிப்பு வழக்கை போட்டு அவனை புடிச்சி தூக்கில போடுங்க சார் என அறைகூவல் விடுத்துவிட்டு நம்முடைய வேலைகளில் மூழ்கிவிடுவோம்.
ஆனால் எதையும் பகுத்தறிந்து ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லுகிற முற்போக்காளர்களாக அறியப்படும் சில எழுத்தாளர்கள் கூட அதே பாணியில் தீர்ப்பு எழுதுவதையும், இதுதான் சாக்கு என நானும் உத்தமன்தான்.. பெண்களை தாயாக மதிக்கிறேன்.. என நிருவ முயல்வதையும் ‘’ பிரபல பாடகி சின்மயி - ஆபாச ட்விட்’’ விவகாரத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. என்னதான் அறிவுஜீவிகள் சொன்னாலும் உண்மை வேறு மாதிரி இருந்தது.

Ambaniகாகவே அமைச்சர்கள் மாற்றப்படுகின்றனர்? கெஜ்ரிவால் கேள்வி

நாட்டை வழிநடத்துவது பிரதமரா? முகேஷ் அம்பானியா?: கெஜ்ரிவால் கேள்வி




டெல்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆதாயம் அடைவதற்காகவே நாட்டின் மத்திய அமைச்சர்கள் மாற்றப்படுகின்றனர் என்றும் நாட்டை வழிநடத்துவது பிரதமர் அல்ல... முகேஷ் அம்பானி தான் என்றும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பெட்ரோலியத் துறை அமைச்சகப் பொறுப்பு பறிக்கப்பட்டு அவர் முக்கியத்துவமில்லாத அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டார். இது கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
கிருஷ்ணா- கோதாவரி படுகையில் அரசுக்கு பல்லாயிரம் கோடி நட்டம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுவுக்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்பதாலே ஜெய்பால் ரெட்டியின் அமைச்சகப் பொறுப்பு மாற்றப்பட்டது என்று அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்தனர்.

DMK MLA க்கள் வெளியேற்றம்- சேது' குறித்துப் பேச தடை


சென்னை: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர முயன்ற திமுக உறுப்பினர்களுக்கு சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களை அவைக் காவலர்களை வைத்து சபாநாயகர் தனபால் வெளியேற்ற உத்தரவிட்டார்.
சட்டசபையில் இன்று சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினர் திமுக எம்.எல்.ஏக்கள். ஆனால் அதற்கு அனுமதி தர சபாநாயகர் தனபால் மறுத்தார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து அனைவரையும் வெளியேற்றினர். இதைக் கண்டித்து அவைக்கு வெளியே திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாளைய கூட்டத்தில் பங்கேற்கத் தடை

ரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசு

திருவாரூர் தங்கராசு திராவிடகழகத்தின் தூணாக பெரியார் காலத்தில்
இருந்தவர். ரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்.  
Rattha Kanneer 1954

M. R. Radha, M. N. Rajam, Sriranjani Jr, S. S. Rajendran, J. P. Chandrababu, ‘Appa’ Duraiswami, S. R. Janaki, K. S. Angamuthu, Kusalakumari - Sai-Subbulakshmi (dances)
பெரியார் இறந்தபோது தி.க உடைந்தது.
அய்யா இறந்து பிணம்  எடுக்குமுன்னரே  இரு கோஷ்டிகளும் தனித்தனியாக உட்கார்ந்துவிட்டனர் என்பதே உண்மை. மணியம்மையை முன்னிறுத்தி வீரமணிகோஷ்டி.திருவாரூர் தங்கராசு கோஷ்டி. இரு தி.க வாக உடைந்ததற்கு கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் தான் காரணம். தி.கவிலும் தி.மு.க.,அ.தி.மு.க அரசியல்.
திமுக மணியம்மைக்கு ஆதரவு. அதிமுக திருவாரூர் தங்கராசுவுக்கு ஆதரவு.
அந்த துக்க நிகழ்வில் ஒரு அதிசயம். எம்.ஆர்.ராதாவும் திருவாரூர் தங்கராசுவின் அபிமானியாதலால் எம்.ஜி.ஆரும் ராதாவும் ஒரே பகுதியில் அமர்ந்தனர்!

மனைவி டெலிவரியைப் பார்த்து செக்ஸே வெறுத்துப் போச்சு... ஒரு கணவரின் அனுபவ ரிப்போர்ட்!

லண்டன்: என் மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த பின்னர் எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மார்ட்டின் டப்னி என்பவர்.
மனைவி கர்ப்பமாக இருக்கும்போது 'சைடு சானல்' பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த மார்ட்டின், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு செக்ஸ் குறித்தே நினைக்கவில்லையாம். மாறாக மனைவியுடனேயே இருந்து அவரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நானும் சரி எனது மனைவியும் சரி பத்து வருடமாக அழகான வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் ரீதியான எந்த செயல்பாடுகளும் இல்லை, பேச்சுக்களும் இல்லை. இருவருக்குமே செக்ஸில் விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் செக்ஸ் இடம் பெறவில்லை.

சென்னையில் தரை தட்டிய கப்பல் :பொறியாளர் பலி

சென்னையில் இருந்து குஜராத் புறப்பட்ட கப்பல் நீலம் புயலால் தரை தட்டியது. இதையடுத்து படகு மூலம் 17  பேர் தப்பிக்க முயன்றனர்.  இதனால் விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தினால்17 பேரும் மருத்துவமனையில் 17 பேரில் ஆனந்த் என்ற பொறியாளர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான ஆனந்த், விழுப்புரம் மாவட்டதைத்சேர்ந்தவர்எஞ்சிய 16 பேர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டுள்ளனர்

Super Singer பிரகதிக்கு ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பு

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிய பிரகதிக்கு ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பு

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் வரும் கடைசி பாடலை வித்தியாசமாகவும் புதிய குரலிலும் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி.பிரகாஷ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் வித்தியாசமான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்த பிரகதியை தேர்ந்தெடுத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது.

ஜாமீனில் வெளியில் வந்த பொன்முடி மீண்டும் கைது

திருச்சி: செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக திருச்சி சிறையில் அடைக்கபட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி ஜாமீனில் வெளியில் வந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டார்
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம் உள்ளிட்ட 5 பேர் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Toronto இளையாராஜா இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டள்ளது


தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடுமையான புயலினால் இளையாராஜாவின் ரொறான்ரோ இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டள்ளது: http://www.trinityeventsonline.com/
எதிர்பாராத விதமாக சென்னையில் வீசிய கடும் புயலின் விளைவால் நவம்பர் 3 ஆம் திகதி ரொறான்ரோவில் நடைபெற இருந்த “எங்கேயும் எப்போதும் ராஜா” இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டள்ளது என்பதை டிரினிட்டி ஈவண்ட்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. சென்னையைத் தாக்கிய நீலம் புயலால் விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது. இந்த எதிர்பாராத நிகழ்வுகளினால் கனடா நிகழ்ச்சியில் பங்கு பெற இருந்த கலைஞர்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு விட்டது.
ரசிகர்களிடமும், எங்களது வாடிக்கையாளர்களிடமும் இந்த மாற்றத்தினால் ஏற்படும் சங்கடங்களுக்காக மனப்பூர்வமான வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மறு திகதியை விரைவில் அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது வாங்கப்பட்ட நுழைவுச் சீட்டுக்கள் புதிய திகதியில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பற்றிய மேலதிக தகவல்கள் விரைவி

பாடும் போது கதறி அழுதார் சின்மயி

கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’.நந்தனம் படத்திற்கு இசையமைக்க மலையாள இசையமைப்பாளாரான கோபி சந்தர் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் ஷியாமளன். சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர் தான் இசையமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களுக்காகவே ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந்தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின்மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக பாடல் பாடும் போது அழுதுகொண்டே பாடினாராம்.இது என்ன வலியோ’ என்ற பாடல் வரிகளை கோபி சந்தரின் இசையுடன் சேர்த்து பாடும் போது உண்டான தாக்கத்தால் கதறி அழுதாராம் சின்மயி.

சூப்பர் குடும்பத்தில் கோபம் கொண்ட கங்கை அமரன்! டிஆர்பிக்கான நாடகமா?

Gangai Amaran Drama On Sun Tv Super Kudumbam சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் கங்கை அமரன் மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கோபத்தோடு வெளியேறினார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
சன் டிவி சீரியலில் நடிப்பவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிதான் சூப்பர் குடும்பம். சனிக்கிழமைதோறும் இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மருதாணி, முத்தாரம், அழகி வரை 18 சீரியலைச் சேர்ந்த நடிகர், நடிகையர்கள் உள்ளிட்ட அத்திப்பூக்கள் குடும்பத்தில் இருந்து வந்த கற்பகம் பாட்டு என்ற பெயரில் பாடினார். இதனால் டென்சனான நடுவர் கங்கை அமரன், கற்பகம் பாடியதை பாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கமெண்ட் செய்தார்.

சென்னையில் கரை தட்டிய கப்பலில் இருந்து ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சென்னை பட்டினபாக்கத்தில் கரை தட்டிய கப்பலில் இருந்து, ஊழியர்கள் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். அதிகாலையிலிருந்து 15 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். நிலம் புயலால் சரக்கு கப்பலான பிரதிபா காவேரி, பட்டினபாக்கம் கடற்கரையில் கரை தட்டியது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்