வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அமெரிக்காவில் உள்ள இந்து ஆலயத்தில் பொன்சேகாவின் புதல்விகள் தேங்காய் அடித்து வழிபாடு


தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர்.இவர்கள் தந்தையாராகிய சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டியும், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைபெற வேண்டியும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில்  உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதில் கலிபோர்னியாவில் உள்ள சிங்களவர்களும் கலந்துக்கொண்டனர்.
சரத் பொன்சேகாவின் புதல்விகள் இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: