நீதிபதியொருவர் கொழும்பிலுள்ள தனது வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய நுவரெலியாவைச் சேர்ந்த யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் திணைக்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இப்புகார் குறித்து விசாரணை செய்யப்படாத நிலையில் குறித்த வீட்டிலிருந்து அந்த யுவதி தப்பிச் சென்றுள்ளார்.
மேற்படி யுவதியை பரிசோதித்த சட்டவைத்திய அதிகாரி, அந்த யுவதி உடல் மற்றும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இத்துஷ்பிரயோகம் குறித்து யுவதியின் சகோதரரினால் நுவரெலியா பொலிஸ் நிலையத்திலும் புகாரிடப்பட்டுள்ளது.
(-லங்காதீப இணையத்தளம்)
சனி, 17 ஜூலை, 2010
ராகுல், தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள்
தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து ராகுல் பேசியுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நிலையில், தமிழகத்தின் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ள ராகுல், மாநிலத்தில் அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி சாதக, பாதகங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்துள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், தி.மு.க., தலைமை நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. இருப்பினும், சோனியாவின் மகனும் அக்கட்சியின் எதிர்காலத் தலைவராக முன்னிறுத்தப்படுபவருமான ராகுல், தமிழகத்துக்கு எப்போது வந்தாலும் தி.மு.க., தலைவரை சந்திக்காமல் சென்று விடுவது முக்கியமாக பேசப் பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருசிலர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கே அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தியுள்ளார். நம்பர் 12, துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களும் இந்த சந்திப்பு நடந்தது. ராகுலை சந்தித்தவர்களில் விடியல் சேகர், அருள் அன்பரசு, காயத்ரிதேவி, ராஜ்குமார், ராம்பிரபு, விஷ்ணுபிரசாத் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் முக்கியமானவர்கள். இதுதவிர கார்த்தி சிதம்பரமும் சந்தித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காஞ்சிபுரம் புரு÷ஷாத்தமன், தூத்துக்குடி பெருமாள் உள்ளிட்ட மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுலை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராகுலை தனித்தனியே சந்தித்தனர். ஒவ்வொருவருக்கும் தலா 15 நிமிடங்கள் வரை ஒதுக்கப்பட்டது.
ராகுலை சந்திப்பதற்கு முன்பாக ஒவ்வொருக்கும் ஒரு விண்ணப்பம் தரப்பட் டது. அந்த விண்ணப் பத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. "நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள், கட்சியில் உங்களது பணி எந்த அளவில் பேசப்படுகிறது, சமூகதளத்தில் உங்களது பங்களிப்பு என்ன, நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காணப்பட்ட நிறை குறைகள் என்ன, உங்களுக்கு மீண்டும் தேர்தலில் சீட் தந்தால் ஜெயிப்பீர்களா, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள், உங்கள் தொகுதி எஸ்.பி., - கலெக்டர் ஆகியோர் பெயர் என்ன?' என்பன போன்ற கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகே, ராகுலை சந்தித்துள்ளனர். ராகுலுடன் நடந்த சந்திப்பின்போது, ஜிதின் பிரசாதா மற்றும் கனிஷ்கா ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் வேறு வேறுவிதமான விஷயங்களை ராகுல் பேசியதாக தெரிகிறது. ஒருசிலரிடம் தமிழக அரசியல் நிலவரமும், இன்னும் சிலரிடம் கட்சி நடவடிக்கைகள் குறித்தும், மேலும் சிலரிடம் கூட்டணி மற்றும் மக்களின் மனநிலை ஆகியவை குறித்த கருத்துக் களை ராகுல் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தவிர, மாநில காங்கிரஸ் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றியும் ராகுல் விசாரித்து அறிந்துள்ளார். மற்ற மாநிலங்கள் போல் அல்லாது தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்தாக வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைத்தால் தமிழகத்தில் அது எந்த அளவில் எடுபடும் என்றும் முக்கியமாக பேசப்பட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகும் வேளையான தற்போது, ராகுல் திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், தி.மு.க., தலைமை நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. இருப்பினும், சோனியாவின் மகனும் அக்கட்சியின் எதிர்காலத் தலைவராக முன்னிறுத்தப்படுபவருமான ராகுல், தமிழகத்துக்கு எப்போது வந்தாலும் தி.மு.க., தலைவரை சந்திக்காமல் சென்று விடுவது முக்கியமாக பேசப் பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருசிலர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கே அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தியுள்ளார். நம்பர் 12, துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களும் இந்த சந்திப்பு நடந்தது. ராகுலை சந்தித்தவர்களில் விடியல் சேகர், அருள் அன்பரசு, காயத்ரிதேவி, ராஜ்குமார், ராம்பிரபு, விஷ்ணுபிரசாத் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் முக்கியமானவர்கள். இதுதவிர கார்த்தி சிதம்பரமும் சந்தித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காஞ்சிபுரம் புரு÷ஷாத்தமன், தூத்துக்குடி பெருமாள் உள்ளிட்ட மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுலை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராகுலை தனித்தனியே சந்தித்தனர். ஒவ்வொருவருக்கும் தலா 15 நிமிடங்கள் வரை ஒதுக்கப்பட்டது.
ராகுலை சந்திப்பதற்கு முன்பாக ஒவ்வொருக்கும் ஒரு விண்ணப்பம் தரப்பட் டது. அந்த விண்ணப் பத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. "நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள், கட்சியில் உங்களது பணி எந்த அளவில் பேசப்படுகிறது, சமூகதளத்தில் உங்களது பங்களிப்பு என்ன, நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காணப்பட்ட நிறை குறைகள் என்ன, உங்களுக்கு மீண்டும் தேர்தலில் சீட் தந்தால் ஜெயிப்பீர்களா, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள், உங்கள் தொகுதி எஸ்.பி., - கலெக்டர் ஆகியோர் பெயர் என்ன?' என்பன போன்ற கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகே, ராகுலை சந்தித்துள்ளனர். ராகுலுடன் நடந்த சந்திப்பின்போது, ஜிதின் பிரசாதா மற்றும் கனிஷ்கா ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் வேறு வேறுவிதமான விஷயங்களை ராகுல் பேசியதாக தெரிகிறது. ஒருசிலரிடம் தமிழக அரசியல் நிலவரமும், இன்னும் சிலரிடம் கட்சி நடவடிக்கைகள் குறித்தும், மேலும் சிலரிடம் கூட்டணி மற்றும் மக்களின் மனநிலை ஆகியவை குறித்த கருத்துக் களை ராகுல் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தவிர, மாநில காங்கிரஸ் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றியும் ராகுல் விசாரித்து அறிந்துள்ளார். மற்ற மாநிலங்கள் போல் அல்லாது தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்தாக வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைத்தால் தமிழகத்தில் அது எந்த அளவில் எடுபடும் என்றும் முக்கியமாக பேசப்பட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகும் வேளையான தற்போது, ராகுல் திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
மதுரை முத்து - madurai,இந்தியா
2010-07-17 18:28:31 IST
தமிழ் நாட்டுக்கு என்று எந்த தொலைநோக்கும் இல்லாமல் 40 வருடத்தை தொலைத்து விட்டார்கள். தற்போதும் கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் தன்னை நிலை நிருதிக்கொள்ளவே போராடுகிறார்கள். கட்சி என்ற கூட்டு முயற்சி அங்கு இல்லை. அப்படியே இவர்கள் கூடி எதாவது சொன்னாலும் அதை தலைமை ஒன்றும் காதில் போட்டுக்கொள்வதில்லை. உண்மையிலேயே தமிழகம் இவர்களுக்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் இவர்கள் மத்தியில் இருந்து கொண்டு எத்தனை திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம்? ஆனால் காங்கிரஸ் எதயுமே செய்யவில்லை. மாறாக எதிரான போக்கிலேயே செயல்படுகிறார்கள். சேது சமுத்திரத்திட்டம் இவர்களாலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுமைக்குமான குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு அகன்ற இருவழித்தட ரயில் போக்குவரத்து என்பது எட்டாக்கனி அதற்க்கு இவர்களிடம் எந்தவிதமான முயற்சியும் இல்லை. நதிகள் இணைப்பு மூலம் நம்முடைய விவசாயிகளின் குறைகள் தீராவிட்டலும் பரவாயில்லை தேசத்தின் ஒற்றுமையாவது பராமரிக்கலாம். அதற்கும் கூட புல்லறிவு படைத்ததாகவே காங்கிரஸ் உள்ளது. அரைகுறை அறிவோடு ராகுல் எதோ சொல்கிறார். மூத்த தலைவர்கள் ஜால்ரா போடுகிறார்கள். மொத்தத்தில் காங்கிரஸ் ஒரு சாபக்கேடு....
raaki - Chennai,இந்தியா
2010-07-17 18:04:28 IST
அப்பனை போல பிள்ளை. அரகுறை. நிதானம் இல்லை, முப்பதெட்டு வயது ஆகியும் முதிச்சி வரவில்லை. தண்ணீருக்கு மக்கள் படும் கஷ்டம் புரியாமல் நதிகளை இணைப்பது தவறு என்று பெரிய விஞ்ஞானி போல் அளப்பறை. எடுப்பார் கைபிள்ளை. நம் தலை எழுத்து இன்னும் மாறவில்லை. வருங்கால பிரதமரே வருக, வந்து மன் மோகன் சிங்க் ஆட்சியில் கொஞ்சம் நல்லா போய்கிட்டு இருக்கும் நம் நாட்டை குதறி போடுங்க....
சரவணன் - abudhabi,யூ.எஸ்.ஏ
2010-07-17 18:04:16 IST
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் திமுகவை மிரட்டி அதிகசீட் வாங்கும் டெக்னிக் இது.சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றாலோ, அல்ல து சமீபகாலமாக டெபாசிட் இழக்க ஆரம்பித்து இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலோ,பேரழிவு காங்கிரசுக்குத்தானேயொழிய திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. வுண்மை கருத்து...
vels - villupuram,இந்தியா
2010-07-17 17:51:03 IST
திமுக வோட கூட்டணி இருந்தா காங்கிரஸ் தேட வேண்டிய நிலைமை கண்டிப்பா வரும் ஒவ்வொரு தலைவரையும் விலை பேசி வாங்கிவிடுவார்கள் மதுரைக்கு அழகிரியும் மத்த இடங்களுக்கு ஸ்டாலினும் விலை வைத்து காங்கிரஸ் ய் சீக்கிரம் வேலை முடிப்பது நிச்சயம் ....
sundar - chennai,இந்தியா
2010-07-17 17:44:50 IST
இருக்கறதை விட்டு பரகரத்தை பிடிக்க ஆசை பட வேண்டாம் தூக்கு தூக்கியாக இருப்போம் ...
பாலா ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
2010-07-17 17:00:10 IST
யாரோட கூட்டணி வெச்சாலும் கணிசமான இடங்களை கேட்டு பெற்று ஆட்சியிலும் பங்கு கேட்க தவறிடாதீங்க, ராகுல்! இது ஒரு பொன்னான சந்தர்பம்; குட் லக்! ஆனால் அடுக்கு முன்னாடி நல்ல தலைவர் ஒருவரை உருவாக்குங்கள்....
மனித நேயன் - abudhabi,யூ.எஸ்.ஏ
2010-07-17 16:42:26 IST
ராகுல் இல்லை அவர் தாத்தா வந்தாலும் திராவிட கட்சிகளை விஞ்சி தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளரவே முடியாது....
ஷேயஹு - chennai,இந்தியா
2010-07-17 12:32:35 IST
ராகுல், தமிழ் நாட்டில் திமுக, அதிமுக இருக்கும் வரை உங்கள் பருப்பு வேகாது. உங்கள் அப்பா பறந்து பறந்து குட்டிக்கரணம் போட்டும் ஒன்றும் ஆகவில்லை. வெண்ணை திரளும் போது தாழியை உடைத்து விடாதீர்கள். இந்த தேர்தலை திமுக வோடு சந்தியுங்கள். அதிமுக இந்த தேர்தலோடு அழிந்து விடும். அத்தோடு திமுக தலைமையிலும் காலத்தின் கட்டாயத்தால் மாற்றம் வரும். அப்போது காங்கிரஸ் பிரதான கட்சியாகி விடும். மூச்சு திணறலில் இருக்கும் அதிமுகவுக்கு ஆக்சிஜன் கொடுத்து விடாதீர்கள்....
கே.கலைச்செல்வன் - udumalaipettai,இந்தியா
2010-07-17 12:32:11 IST
கருத்து தெரிவித்துள்ளவர்களில்,திரு அமானுல்லா,திரு மாதவன் இவர்களைத்தவிர மற்றவர்களெல்லாம் ஏதோ உள்நோக்கத்துடன் உண்மைக்கு மாறான விஷயங்களை தெரிவித்துள்ளனர்.1967 இல் தமிழகத்தில் மக்களால் தூக்கி எறியப் பட்ட காங்கிரஸ் அதோடு ஒழிந்து போனது.மக்களும் காங்கிரசை சுத்தமாக மறந்து விட்டனர்.காமராஜருக்குப் பிறகு மக்களுக்கு அறிமுகமான தலைவர்கள் யாரும் காங்கிரசில் உருவாகவே இல்லை. 1967 இல் தமிழகத்தில் மரணப் படுக்கையில் விழுந்த காங்கிரஸ் இதுவரை கூட்டணி பலத்தில்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கைத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் செயல்பட்ட விதத்தால் சென்ற நாடாளு மன்றத் தேர்தலில் திமுகவிற்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அதனால்தான் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்க ளில் மட்டும் அதிகபட்சமாக அதிமுக கூட்டணி ஜெயித்தது.இளங்கோவன் போட்டியிட்டதால்தான் மதிமுக வேட்பாளர் கூடஅதிசயமாக ஜெயித்தார். திமுக,அதிமுகவைப்போல் கிளை அமைப்புகள் ஏதுமில்லாத காங்கிரசோடு கூட்டணி வைத்தால் தேர்தல் நேரத்தில் கழுத்தில் ஏறிய கிழவனை தூக்கி சுமந்த சிந்துபாத்தைப்போல் கூட்டணிக்கட்சிகள் பாடுபட்டே யாகவேண்டும். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் திமுகவை மிரட்டி அதிகசீட் வாங்கும் டெக்னிக் இது.சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றாலோ, அல்ல து சமீபகாலமாக டெபாசிட் இழக்க ஆரம்பித்து இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலோ,பேரழிவு காங்கிரசுக்குத்தானேயொழிய திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. சின்னத்தம்பி ராகுல் காட்டும் அதீத கெட்டிக்காரத்தனத்தின் (TRYING TO ACTSMART) முடிவு அனேகமாக அழுத்தக்காரனுக்கு கிடைக்கும் புழுத்த கத்தரிக்காயாகக் கூட இருக்கலாம்!!!......
gknatarajan - chennai,இந்தியா
2010-07-17 12:31:36 IST
it is high time, congress make a start by asserting themselves in t.n., can take, vijayakanth in thier fold








